Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


புரட்சிகரச் சக்திகளைக் கண்டு இந்திய முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அஞ்சியது போலவே தனது மொத்த அழிவைக் கண்டு ஏகாதிபத்தியமும் பயந்தது. இந்திய நிலைமைகளை பலாத்காரத்தைக் கொண்டு இனி கட்டுப்படுத்த முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டது. யுத்தத்தால் சின்னாபின்னப்படுத்தப்பட்டு நிதிப்பற்றாக்குறையின் காரணமாக தடுமாறிய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இராணுவ பலத்தை அதிகரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.


"நமது நாட்டின் தொழில் தேவைகளைவிட அதிகமானதாக நமது இராணுவக் கடமை இருந்ததையும் போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதிலும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும்.'' (நினைவிருக்கும் வரை, பக். 518)


இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான ஒரு காரணமென அன்றைய கிழக்கிந்தியப் பிராந்தியத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் சர். பிரான்ஸ்டகர் என்பவன்தான் மேற்கண்டவாறு கூறினான். மற்றொரு காரணத்தை மவுண்ட்பேட்டனின் இந்தியப் படைத்தளபதி லார்டு இஸ்மாய் இப்படிக் கூறுகிறான்:
"1947 மார்ச்சில் இந்தியா இருந்த நிலைமை வெடி குண்டுகளால் நிறைக்கப்பட்டு நடுக்கடலில் நற்கும் ஒரு கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது போல இருந்தது. நெருப்பு, குண்டுகளை நெருங்கு முன் அதை அணைக்க வேண்டிய பிரச்சினை முன்னே நின்றது. எனவே நாங்கள் செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை.''


எனவே சமரசத்திற்கான அவசியம், இந்தியாவில் தனது அரசியல் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்தது. தனது நிதி, தொழில், வணிக, அந்தஸ்துகளை நிலைநிறுத்திக் கொள்கிற வகையில், தனது சுரண்டல் நீடிக்கும் வகையில் சமரசம் காண வேண்டியிருந்தது. இதனினும் முக்கியமாக நாடு "காலிகளின்'' கைக்குப் போய்விடாமல் "காப்பாற்றும்' அவசியமும் முன்னெழுந்தது. தங்களது நம்பிக்கைக்குரிய ஏஜெண்டுகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு திரைமறைவில் இருந்து ஆட்டி வைக்கும் வேலையைச் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.


"ஏனெனில் முதலாளிகளுக்கு அக்கறையுள்ள விசயம் பொருளாதார ஆதிக்கத்தைப் பெறுவதே. அரசியல் ஆதிக்கத்துக்கான வடிவம் பற்றிய விசயம் அவ்வளவு முக்கியமானதல்ல.''


லெனின் கூறிய இவ்வார்த்தைகள் இந்தியாவின் அன்றைய நிலைமைகளுக்கு மிகப் பொருத்தமானது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் ஒரு அங்கமே "இந்தியச் சுதந்திரம்'! இந்தியாவில் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரசுத் தலைமைக்கு ஆட்சியதிகாரம் கைமாற்றப்பட்டது; கத்தியின்றி ரத்தமின்றி வெட்கமின்றி சமாதானமாக ஆட்சி கைமாறியது; யூனியன்ஜாக் கொடி இறக்கப்பட்டது; ­வர்ணக் கொடி ஏற்றப்பட்டது; "சுதந்திரம்' ஆகஸ்ட் 15 நள்ளிரவில் பிரகடனப்படுத்தப்பட்டது.


இறுதியாக மணப்பெண் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டாள்; ஆனால் அவள் ஏற்கெனவே ஒரு விபச்சாரியாக ஆக்கப்பட்டு விட்டாள்!


"அரசியல் ரீதியில் சுதந்திரம்' அடையப் பெற்றதென்று கூறப்பட்ட "1947 சுதந்திரமும்', 1950ல் ஏற்பட்ட "குடியரசும்' ஏகாதிபத்தியங்கள் தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் சுதந்திரமான சுரண்டலுக்காக ஏற்படுத்தப்பட்ட, அவர்களுக்கு மட்டுமே ஜனநாயகம் கொண்ட ஒரு நாடு தான் இந்தியா!


ஆகஸ்டில் வாங்கப்பட்ட இந்தச் "சுதந்திரம்' இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் இறுதி வெற்றி அடைந்ததைக் குறிக்கிறதா? இல்லை. பிரிட்டிஷாரின் தொழிலும் ­மூலதனமும் நட்டஈடின்றிப் பறிமுதல் செய்யப்பட்டதா? இல்லவே இல்லை. மாறாக அப்படியே அரவணைக்கப்பட்டு நீடித்து விரிவடைய வகை செய்யப்பட்டது.


1948 ஏப்ரல் 6ந் தேதி பொருளாதாரக் கொள்கை பற்றிய "சோசலிச' நேரு அரசாங்கத்தின் தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் "அன்னிய மூ­லதனத்திற்கும் தொழில் நிறுவனத்திற்கும் முழுச் சுதந்திரத்தை இத்தீர்மானம் அளிக்கிறது'' என மிகத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷாரின் ­மூலதனம் மட்டுமா தொடர்ந்து நீடித்தது? இல்லை. ஆங்கிலேயப் பேரரசின் அதே கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் "சுதந்திர' இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நீடித்தான். சீதனமாகப் பெறப்பட்ட பிரிட்டிஷ் இந்திய இராணுவக் கூலிப்படை அதே பிரிட்டிஷ் ஜெனரல் பௌச்சர் என்பவனின் கீழ் மேலும் இரு ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மட்டுமின்றி நீதி, நிர்வாகம், சட்டம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஆங்கிலேயரின் வழிமுறைகளிலேயே நீடித்து வருகிறது. 1911ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் இந்தியாவுக்கு வந்தபோது, "தேசியக் கவிஞன்' என வர்ணிக்கப்படுகின்ற வங்கத்தின் ரவீந்திரநாத் தாகூர் "மாட்சிமை பொருந்திய' மன்னனை வரவேற்று வாழ்த்துப் பாடிய "ஜனகனமண' என்ற பாடல் வெட்கமின்றி இந்தியாவின் தேசிய கீதமாக இசைக்கப்பட்டு வருகிறது. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இன்னமும் தொடர்ந்து ஒரு உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது