கல்வி என்பது
கண்களைத் திறப்பது!
கல்லாதிருப்பது
கண்களைத் துறப்பது!
செல்வம் அனைத்திலும்
சிறப்பிடம் வகிப்பது!
இல்லார்க் கெடுத்ததை
இறைப்பினும் மிகுப்பது!
எல்லா இடத்திலும்
ஏற்றம் அளிப்பது!
பொல்லா மடமையைப்
பூண்டோ டொழிப்பது!
அல்லும் பகலும்
அணையா விளக்கது!
கல்லில் பதியும்
கலையா எழுத்தது!
சொல்லில் கனிவு
சுவையைக் குழைப்பது!
வெல்லும் துணிவு
விவேகம் விளைப்பது!
-
தளவை: இளங்குமரன் செங்கற்பட்டு.
கல்வி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode