Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

jan_07.jpg

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாகவும், இந்த விலைக் குறைப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த நவம்பரில் அறிவித்தார். நாட்டை மீண்டும் காலனியாக்கி மக்களை மரணக்

 குழியில் தள்ளி வரும் காங்கிரசுக் கூட்டணி ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் திடீரென அக்கறை வந்துவிட்டதோ என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த விலைக் குறைப்பு என்பது மோசடித்தனமானது என்றும் பன்னாட்டுஉள்நாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டும் நடவடிக்கைதான் என்பதும் வெகு விரைவிலேயே அம்பலமாகி விட்டது.

 

விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள 886 வகையான மருந்துகளும் 11 பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் தயாரிக்கும் விலை அதிகமுள்ள மருந்துகளாகும். பெரும்பாலான மருத்துவர்கள் உள்நாட்டு மருந்துகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். அத்தகைய மருந்துகளின் விலைகளைக் குறைக்க மைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உபயோகத்தில் இல்லாத, பரவலாகக் கடைகளில் கிடைக்காத, விலை அதிகமாக உள்ள மருந்துகளின் விலையை மட்டுமே — அதுவும் 5 முதல் 10 சதவீத அளவுக்கு மட்டுமே அரசு குறைத்துள்ளது. அதிகம் பயன்பாட்டில் உள்ள மருந்துகளின் விலைகள் மிகமிக அற்பமான அளவுக்கே குறைக்கப்பட்டுள்ளன.

 

உதாரணமாக, இமிடேல் என்ற ஊசி மருந்து ஏற்கெனவே ரூ. 4.99க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டு ரூ. 4.98 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரான்கோல்ட் பிளஸ் 10 மாத்திரைகளின் விலை

ரூ. 18.11க்கு விற்பனையாகி வந்தது. இதன் விலை தற்போது ரூ. 17.51ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மாத்திரைகளின் விலையில் 60 பைசா குறைந்துள்ளது. சாமானிய மக்கள் கடையில் ஒன்றிரண்டு மாத்திரைதான் வாங்குகின்றனர். ஒரு பைசா, இரண்டு பைசா சில்லறையுடன் போய் இரண்டு மாத்திரை வாங்கினால் மட்டுமே அமைச்சர் கூறியபடி இந்த விலைக் குறைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல், இந்த விலைக் குறைப்பினால் சாமானிய மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. இதுதான் விலைக் குறைப்பின் பின்னேயுள்ள மோசடி.

 

உண்மைகள் மருந்தைப் போலவே கசப்பாகவே இருக்கின்றன. உலகின் பெரும் கோடீசுவரர்கள் வரிசையில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் இடம் பெறும் அளவுக்கு, இந்தியா "பணக்கார வல்லரசு' நாடாக வளர்ந்து வருவதாக ஆட்சியாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால், இந்நாட்டில்தான் ஏறத்தாழ 65 கோடி மக்கள் அத்தியாவசிய மருந்துகளைக் கூட வாங்குவதற்கான வாய்ப்பு வசதி இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும் மருந்து உற்பத்தி ஆலைகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ள போதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைப்பதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (WTO) தனது 2004ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடுகிறது.

 

இந்த அவல நிலைக்குக் காரணம், தனியார்மயம். உலகின் தனியார்மயமாக்கப்பட்ட மருத்துவ சுகாதாரத் துறையில், ஏழை நாடான இந்தியா முன்னணியில் உள்ளது. மணற்கொள்ளை, நிலக் கொள்ளை, கடற்கொள்ளை முதலானவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் இந்தியாவில் மருந்துக் கொள்ளை கேள்விமுறையின்றித் தொடர்கிறது. இந்தியாவில் ஓராண்டுக்கு ஏறத்தாழ 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மருந்து மாத்திரை வியாபாரம் நடக்கிறது. இதில் பன்னாட்டு உள்நாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் ஏறத்தாழ 25 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் செய்கின்றன. இக்கம்பெனிகள் தயாரிக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகமாக உள்ளது. உதாரணமாக, அவந்திஸ் நிறுவனத்தின் லெவோப்ளாசசின் என்னும் ஆன்டிபயோட்டிக் மாத்திரையின் விலை ரூ.95. அதே மாத்திரையை, அதே தரத்துடன் உள்நாட்டு சில்பா மருந்து நிறுவனம் ரூ.6.80க்கு விற்கிறது. இந்திய அரசோ இப்படி அநியாய விலை விற்கும் அன்னிய நிறுவன மருந்துக்குத் தடையோ கட்டுப்பாடோ விதிப்பதில்லை.

 

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையைப் பின்பற்றி வந்த அரசு, தனியார்மய தாராளமயமாக்கலைத் தொடர்ந்து படிப்படியாக இக்கொள்கையை நீர்த்துப் போகச் செய்து விட்டது. 1977ஆம் ஆண்டில் 347 அத்தியாவசிய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. 1995இல் இது வெறும் 74 மருந்துகள் என்று சுருங்கிப் போனது. அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளாக புதிதாக எந்த மருந்தும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை. மருந்துக் கம்பெனிகள் தாறுமாறாக விலையேற்றி கேள்விமுறையின்றி கொள்ளையடித்தன.

 

முந்தைய பா.ஜ.க. அரசு 2002ஆம் ஆண்டில் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த இந்த 74 அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை 30ஆகக் குறைக்கக் கிளம்பியது. கர்நாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி, இதை நடைமுறைப்படுத்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தீர்ப்பின்படி, அரசு உருவாக்கிய மருத்துவ நிபுணர்கள் குழு, தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை 2003ஆம் ஆண்டில் தயாரித்துக் கொடுத்தது. இதில் 354 வகையான மருந்துகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இருப்பினும், இப்பட்டியலின்படி விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை பா.ஜ.க. அரசு அறிவிக்கவோ, செயல்படுத்தவோ முன்வராமல் கிடப்பில் போட்டது.

 

பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசு, ஈராண்டு காலமாக இழுத்தடித்து விட்டு, கடந்த ஜூலையில் வழக்கத்துக்கு மாறாக தவணை முறையில் நகல் மருந்துக் கொள்கையை வெளியிட்டது. மைய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், இக்கொள்கைப்படி விலைக் கட்டுப்பாடு பட்டியலில் 354 அத்தியாவசிய மருந்துகளைக் குறிப்பிட்டு அமைச்சரவையில் சமர்ப்பித்தார். ஆனால், அவரது அமைச்சரவையே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விலைக் கட்டுப்பாட்டிலுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலைப் பெருமளவுக்குக் குறைக்கக் கோரியது. இதனைப் பரிசீலித்து விலைக் கட்டுப்பாடு பட்டியலைத் தயாரிக்க 14 பேர் கொண்ட கூட்டுக் கமிட்டியை மைய அரசு நிறுவியது. இந்தக் கமிட்டியிலுள்ள 14 பேரில் 11 பேர் ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள். மீதி 3 பேர் மட்டுமே அரசாங்கத்தின் பிரதிநிதிகள். ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள இந்தக் கமிட்டி மக்கள் நலனை முன்வைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை கொண்டுவரும் என்று முட்டாள்கள்கூட நம்ப மாட்டார்கள்.

 

மைய அரசு ஜூலையில் வெளியிட்ட நகல் மருந்துக் கொள்கை அறிக்கையானது, மருந்துக் கம்பெனிகள் உற்பத்தி செலவுக்கு மேல் 200% வரை இலாபம் வைத்து விற்கலாம் என்று விலை நிர்ணய முறைக்கு ஆலோசனை கூறுகிறது. இதுவே மிக அநியாயமான பகற்கொள்ளைதான். ஆனால், ஏகபோக மருந்துக் கம்பெனிகள் இந்த விலை நிர்ணய முறையைக்கூட ஏற்க மறுத்துவிட்டன. இப்படிச் செய்தால் இலாபம் குறைந்து ஆலையை மூட நேரிடும்; ஏற்றுமதி வாய்ப்புகள் குறையும்; புதிய மருந்துக்கான ஆராய்ச்சியும் வளர்ச்சியும் குறைந்துவிடும்; நாட்டுக்கு மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. இருப்பினும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளை சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல், பொதுவில் 5 முதல் 10 சதவீதம் வரை விலையைக் குறைப்பதாக இம்மருந்துக் கம்பெனிகள் அறிவித்தன. இதன்படியே 886 வகையான மருந்துகளின் விலையைக் குறைத்துவிட்டதாகவும், மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மைய அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

விலைக் கட்டுப்பாட்டுக்குள் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததாலும், மருந்துகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதாலும் சாதாரண நோய்களுக்கே கூட சாமானிய மக்கள் நூற்றுக்கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டியுள்ளது. விலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய அத்தியாவசிய மருந்துகள் என அரசு முன்வைத்துள்ள நகல் கொள்கை அறிக்கையில் கூட, காசநோய், மலேரியா, ரத்தசோகை, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு முதலான நோய்களுக்கான மருந்துகளே இல்லை. வாந்தி பேதியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அவசியமான உப்பு சர்க்கரை கரைசல் பொடி கூட விலைக் கட்டுப்பாடு பட்டியலில் இல்லை. இதுதவிர இன்னும் ஏராளமான உயிர் காக்கும் மருந்துகள் இந்தப் பட்டியலுக்குள் கொண்டு வரப்படவில்லை. இதனால் அநியாய விலை விற்கும் மருந்துகளை வாங்க முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகிறார்கள். அல்லது மருந்துக்காக பெருமளவில் செலவிட்டு கடனாளியாகி நிற்கிறார்கள். சாதாரண நோய்க்காக, ஒவ்வொரு புறநோயாளியும் தனது மொத்த மருத்துவ செலவில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை மருந்துமாத்திரைகளுக்காகச் செலவிடுவதாக, இந்திய அரசின் 55வது சுற்று தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கையே குறிப்பிடுகிறது. 1995இல் இரத்த சோகைக்கான மருந்தின் விலை 177 சதவீதம் உயர்ந்தது; காசநோய் தடுப்புக்கான மருந்தின் விலை 90 சதவீதம் உயர்ந்தது. இம்மருந்துகளும் இன்னும் பலவும் மேலும் விலை உயர்ந்துள்ளனவே தவிர, இன்றுவரை குறையவில்லை. உதாரணமாக சிட்ரிஜைன், நிமிசூலைடு, ஓமெப்ராஜோல் ஆகிய பரவலாக விற்கப்படும் மருந்துகளின் மூலம் 1000 சதவீதம் அளவுக்கு இலாபமீட்டி மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடித்துள்ளதாக இரசாயனத் துறை அமைச்சகமே கூறுகிறது.

 

இந்தப் பகற்கொள்ளை போதாதென்று, ""பொதுவான'' மருந்துகளை விலைக் கட்டுப்பாடு பட்டியலிலிருந்து விலக்கி விடுமாறு பன்னாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் இந்திய அரசை நிர்பந்தித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க அதிபர் புஷ் இந்தியாவுக்கு வந்தபோது, பிரதமரிடம் இதுபற்றி வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தை (ஈஇஅ)த் திருத்தியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இச்சட்டப்படி, ஒரு புதிய மருந்து சந்தைக்கு வருமுன் அதன் பாதுகாப்புத் தன்மை, நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், தரம் ஆகியவற்றுக்காக இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையரிடம் (ஈஇஎஐ) அனுமதியும் சான்றிதழும் பெறவேண்டும். இந்த விதியை நீக்கி விடுமாறு பன்னாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் நிர்பந்திக்கின்றன.

 

மேலும், ""பொதுவான'' மருந்துகள் என்ற வகையின் கீழ் ஒரு புதிய மருந்து தயாரித்தால், அப்பொது மருந்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு புதிய மருந்தைத் தயாரித்துள்ள நிறுவனம் கப்பம் கட்ட வேண்டும் என்று புதிய விதியை உருவாக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. உதாரணமாக, ""பாரசிட்டமால்'' என்ற காய்ச்சலுக்கான பொதுவான மாத்திரையை, ஒரு உள்நாட்டு மருந்து நிறுவனம் புதிய கலவையுடன் புதிய பெயரில் விற்க முனைந்தால், அந்த நிறுவனம், பொது மருந்தைக் கண்டுபிடித்த ஏகாதிபத்திய நிறுவனத்துக்குக் கப்பம் கட்டவேண்டும் என்கின்றன. இதற்கேற்ப மருந்துப் பொருட்கள் சட்டம் திருத்தப்பட்டால், மருந்து விலைகள் தாறுமாறாக உயரும்; பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கமும் கொள்ளையும் கேள்விமுறையின்றித் தொடரும்; உள்நாட்டு மருந்துக் கம்பெனிகள் மலிவான விலையில் ""பொதுவான'' மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாமல் முடங்கிப் போகும். சாமானிய மக்கள் சாதாரண தலைவலி காய்ச்சலுக்கான ""பொதுவான'' மருந்துகளைக் கூட வாங்க முடியாதபடி அவற்றின் விலைகள் எட்டாத உயரத்தில் இருக்கும்.

 

ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்ளைக்கு ஏற்ப இந்திய ஆட்சியாளர்கள் ஏற்கெனவே கம்பெனிகள் சட்டம், ஏகபோக தடுப்புச் சட்டம், அந்நியச் செலாவணி முறைப்படுத்தல் சட்டம், விதைச் சட்டம் எனப் பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்து விட்டனர். எஞ்சியிருக்கும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தையும் மாற்றியமைக்க இப்போது முயற்சித்து வருகின்றனர். ஏற்கெனவே மருந்துகளின் விலையேற்றக் கொள்ளையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது, மிகக் கொடிய மறுகாலனியத் தாக்குதலை ஏவி விடுவதற்கான ஏற்பாடுகளை வேகவேகமாக காங்கிரசு ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், பன்னாட்டு ஏகபோக மருந்துக் கொள்ளையர்களின் ராஜ்ஜியத்தை நாம் அனுமதிப்பதா? அல்லது இக்கொள்ளைக் கூட்டத்துக்கு கதவை அகலத் திறந்துவிடும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுவதா? நாட்டுப்பற்றும் சமூக உணர்வும் கொண்ட ஒவ்வொரு வரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

 

· குமார்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது