Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

jan_07.jpg

சில்லறை வியாபாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைந்திருப்பது; அமெரிக்காவின் சில்லறை வியாபார நிறுவனமான வால்மார்ட்டும், இந்தியாவின் பாரதி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவெடுத்திருப்பது; இங்கிலாந்தின் டெஸ்கோ மற்றும் கேரிஃபோர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து சில்லறை வியாபாரத்தில் இறங்கப் பேச்சு வார்த்தைகள்

 நடத்தி வருவது — இவற்றையெல்லாம் காட்டி இந்தியாவின் சில்லறை வியாபாரத் துறையில் ஓர் அமைதி புரட்சி நடந்து வருவதாகத் தாராளமயத்தின் ஆதரவாளர்கள் பீற்றி வருகின்றனர்.

 

உணவுப் பொருட்கள் உள்ளிட்டு, பல்வேறு விதமான மளிகைச் சாமான்கள், நுகர்பொருட்களை விற்கும் சில்லறை வியாபாரத்தில் அந்நிய நிறுவனங்கள் நேரடியாக மூலதனமிட இன்னும் அனுமதிக்கப்படவில்லைதான். எனினும், ஒரே நிறுவனத் தயாரிப்புகளை விற்கும் பேரங்காடிகளைத் திறந்து நடத்தவும்; மொத்த வியாபாரத்திலும்; பொருட்களை வாங்கிச் சேமித்து வைக்கும் பண்டகசாலைகள் நடத்துவதிலும் 51 சதவீதம் வரை முதலீடு போட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொல்லைப்புற வழியைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய நிறுவனங்கள் மளிகைக் கடை நடத்துவதிலும் இறங்கிவிட முயலுகின்றன.

 

சில்லறை வியாபாரத்தில் வால்மார்ட்டுக்கும், பாரதி நிறுவனத்துக்கும் இடையே உருவாகியுள்ள ஒப்பந்தம் இப்படிபட்டதுதான். பாரதி நிறுவனம் நேரடியாக கடைகளைத் திறந்து நடத்தும்; வால்மார்ட் கொள்முதல் செய்து கொடுக்கும் என்று கூறப்படுகிறது. சில்லறை வியாபாரத்தில் 450 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ள வால்மார்ட் பாரதி கூட்டின் முதல் கடை 2007ஆம் ஆண்டு இந்திய "சுதந்திர' நாளன்று திறக்கப்படுமாம்.

 

இந்தியா முழுவதிலும் 2011ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 3,000 கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ், இத்துறையில் 25,000 கோடி ரூபாய் மூலதனமிடப் போவதாக அறிவித்திருக்கிறது. டெல்லி, மும்பய், சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, ஆண்டிப்பட்டி போன்ற சிறு சந்தை நகரங்களில் கூட பேரங்காடிகளைத் (சூப்பர் மார்க்கெட்டுகள்) திறக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். முதலாளித்துவ நிறுவனங்களால் திறக்கப்படவுள்ள பேரங்காடிகளில் ஏறத்தாழ 35 சதவீதக் கடைகள் சிறு நகரங்களைக் குறி வைத்திருப்பதாக ""பிஸினஸ் வேர்ல்டு'' என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம், தமிழகத்தில் மட்டும், 75 நகரங்களில், 380 பேரங்காடிகளையும், 85 மீ அங்காடிகளையும் (ஹைப்பர் மார்க்கெட்) திறக்கத் திட்டமிட்டுள்ளது.

 

இந்தியாவில் 1,000 பேருக்கு 11 சில்லறை வியாபாரக் கடைகள் நடத்தப்படுகின்றன. வால்மார்ட் பிறந்த அமெரிக்காவிலோ இந்த எண்ணிக்கை 4 தான். சில்லறை வியாபாரத்தில் இந்தியா அமெரிக்காவைப் போல ஆக வேண்டுமென்றால், 11ஐ 4ஆகக் குறைக்க வேண்டும். சில்லறை வியாபாரத்தில் நடந்துவரும் அமைதி புரட்சியின் பின்னுள்ள பேராபத்து இதுதான்.

 

எங்களின் கடைகளின் மூலம் 5 இலட்சம் பேருக்கு நேரடி வாய்ப்புகள் வழங்குவோம் என்கிறது ரிலையன்ஸ். ஆனால், எத்தனை இலட்சம் பேரின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது இதோடு தொடர்புடைய இன்னொரு கேள்வி. தற்பொழுது சில்லறை வியாபாரத்தில் 6 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ள சூப்பர்மார்க்கெட்டுகளின் பங்கு 20 சதவீதமாக வளரும்பொழுது, இந்தியாவெங்கும் 80 இலட்சம் கடைச் சிப்பந்திகளின் வேலை வாய்ப்பு பறிபோகும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே எச்சரிக்கிறார்கள்.

 

சிறிய கடைகளைவிட, சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும் எனக் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்படுகிறது. சுபிக்ஷா, த்ரிநேத்ரா, ஃபுட் வேர்ல்டு போன்ற நிறுவனங்கள், 50 பைசா, ஒரு ரூபாய் எனத் தள்ளுபடி செய்து நுகர் பொருட்களை விற்று வருவது, சிறு வியாபாரிகளை ஒழித்துக் கட்டும் வியாபாரத் தந்திரம்தானே தவிர வேறில்லை.

 

இது ஒருபுறமிருக்க, கடந்த மூன்று, நான்கு மாதங்களாக மிளகாய் வத்தல், புளி, பருப்பு, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதற்கு, சில்லறை வியாபாரத்தில் நுழைந்துள்ள இந்நிறுவனங்கள் இந்தப் பொருட்களை வாங்கிப் பதுக்கி வைத்திருப்பதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

 

ரிலையன்ஸும், பாரதியும் இன்னும் ஒருபடி மேல் போய் அரிசி, கோதுமை, மிளகாய், பழங்கள் உள்ளிட்டு விவசாய விளைபொருட்கள் அனைத்தையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் புதிய கமிசன் மண்டி வியாபாரிகளாக அவதாரமெடுக்கப் போகின்றன.

 

ரிலையன்ஸ் நிறுவனம், விவசாய விளைபொருட்களின் கொள்முதலுக்காக, தமிழ்நாட்டில் மட்டும் 40 கிராமப்புற வர்த்தக மையங்களையும், 160 துணை நிலையங்களையும் ஏற்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. வால்மார்ட்டுடன் இணைந்துள்ள பாரதி, பஞ்சாப் மாநிலத்தில் 5000 ஏக்கர் பரப்பளவில் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது.

 

இந்நிறுவனங்கள் வியாபாரத்தின் இரு முனைகளிலும் கொள்முதலிலும், விற்பனையிலும் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் பொழுது, அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை தங்கள் வசதிக்கேற்ப இந்நிறுவனங்கள்தான் தீர்மானிக்கும் நிலை உருவாகி விடும்; இதன் மூலம், விவசாயிகளையும் நுகர்வோரையும் மட்டுமல்ல, இந்நிறுவனங்களோடு போட்டி போடும் மற்ற சில்லறை வணிகர்களையும் கட்டுப்படுத்தக் கூடிய சக்திகளாக இந்நிறுவனங்கள் மாறிவிடும். அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தை நீக்க வேண்டும் என இந்நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

 

···


சமீபத்தில், தில்லி நகரில் உள்ள 2,250 தெருக்களில் பல ஆண்டுகளாக நடந்து வந்த ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர கடைகளைப் பூட்டி ""சீல்'' வைத்துவிட்டது, தில்லி அரசு. இந்தக் கடைகள் அனைத்தும் குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்தவை என உச்சநீதி மன்றம் ""குற்றம்'' கண்டுபிடித்து, அவற்றை நிரந்தரமாக மூடிவிட உத்தரவிட்டது.

 

பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கருப்புப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் முதலாளிகளுக்குக் கூடப் பொது மன்னிப்பு வழங்கியிருக்கும் மைய அரசு, ""சட்ட விரோதமாகக் கடைகள் நடத்தி வந்த குற்றத்தை'' மட்டும் ஏன் மன்னிக்க மறுக்கிறது? அந்த வியாபாரிகளுள் யாரும் கஞ்சா, அபின் போன்ற சட்ட விரோதப் பொருட்களை விற்கவில்லையே?

 

சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு வசதியாக, "சுதந்திரத்திற்கு'ப் பின் போடப்பட்ட சட்டங்களையெல்லாம் மாற்றும் அரசு, "இச்சட்ட விரோதக் கடைகளை' அங்கீகரிக்க சட்டத்திருத்தம் செய்ய மறுப்பது ஏன்?

 

தில்லியின் 2,250 தெருக்களில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்தச் சில்லறை வியாபாரக்கடைகள் இழுத்து மூடப்படவில்லை. அரசின் இந்த நடவடிக்கையின் பின்னே சூப்பர் மார்க்கெட்டுகளின் நலன் ஒளிந்திருக்கிறது என்பதே உண்மை.

 

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல, சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதியளிக்கும் முன்பாகவே, சிறிய வணிகர்களுக்கு எதிரான வரி விதிப்பை — ""வாட்'' வரியைக் கொண்டு வந்துவிட்டது, மைய அரசு.

 

ஏகாதிபத்தியங்களின் நலனுக்காகத் திணிக்கப்படும் இந்த ""வாட்'' வரி விதிப்பை எதிர்த்து சிறு வணிர்கள் இந்தியாவெங்கிலும் போராடி வருகிறார்கள். ""வாட்'' வரி விதிப்பை எதிர்க்கும் இவர்களைப் பொதுமக்களின் மத்தியில் வில்லனாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே, ""இவ்வரி விதிப்பு முறையில் வரி ஏய்ப்பு செய்ய முடியாது; பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி குறைந்து, பொருட்கள் விலை மலிவாகக் கிடைக்கும்'' என்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வருகிறது, ஆளும் கும்பல்.

 

பொருளின் அடக்கவிலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே போவதைத் தடுக்க வக்கற்ற அரசு, அவற்றின் மீது விதிக்கப்படும் வரியைக் குறைப்பதாகக் கூறுவது, அழும் குழந்தையை ஏமாற்ற மிட்டாயைக் கொடுப்பது போன்றதுதான்.


இந்த வரி அமலில் உள்ள பிரிட்டனில், ஜூன் 2005லிருந்து ஜூன் 2006 வரை உள்ள ஓராண்டில் மட்டும் 7,18,200 கோடி ரூபாய்க்கும், ஸ்பெயினில் 14,820 கோடி ரூபாய்க்கும்; இத்தாலியில் 13,110 கோடி ரூபாய்க்கும்; ஜெர்மனியில் 10,830 கோடி ரூபாய்க்கும்; பிரான்சில் 8,550 கோடி ரூபாய்க்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக பெல்ஜியத்தைச் சேர்ந்த வரி ஏய்ப்புத் தடுப்புப் படை அம்பலப்படுத்தியிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்ய ஓட்டைகளே இல்லையென்றால், அதிகார வர்க்கமும் தரகு முதலாளிகளுமே இந்த ""வாட்'' வரி விதிப்புக்கு எதிராக நின்றிருப்பார்கள்.

 

""வாட்'' வரி எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னோடியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் சனவரி 1, 2007 முதல் ""வாட்'' வரியை அமல்படுத்தியே தீர வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கும் தி.மு.க. அரசு, இவ்வரி விதிப்பை எதிர்த்துப் போராடுவதைச் சட்டவிரோதமாக அறிவித்துவிட்டது.

 

ஜெயா ஆட்சியில் கூட ""வாட்''டை எதிர்த்துப் போராடிய சிறு வணிகர்களுக்கு எதிராக இப்படியொரு பாசிச அச்சுறுத்தல், அரசு விளம்பரமாக வெளியிடப்படவில்லை. அந்த வகையில் கருணாநிதியின் ஆட்சி, பாசிச ஜெயாவுக்கே முன்னோடியாகவும்; சிறு வணிகர்களுக்கு எதிரானதாகவும் அமைந்துவிட்டது.


· செல்வம்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது