Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

jan_07.jpg

முற்றும் துறந்த துறவி வேடத்தில் ஹார்லிக்ஸ் ஷியாமளா, ஸ்ரீரங்கம் உஷா என்று பல பெண்களுடன் உல்லாச சல்லாபம் புரிந்து கொண்டு, பக்தர்களுக்கு ஆசீர்வாதமும், பல கருப்புப்பண முதலைகளின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிக் கொண்டிருந்த மோசடிப் பேர்வழிதான் காஞ்சி சங்கராச்சாரி. சங்கர மடத்தின் முன்னாள் விசுவாசியான சங்கரராமன் எனும் பார்ப்பனர்,

 சங்கராச்சாரியின் இந்தக் காமக் களிவெறியாட்டங்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சி, கூலிப்படையை ஏவி அவரைக் கொலை செய்த பயங்கரவாதிதான் இந்த சங்கராச்சாரி. அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் கம்பி எண்ணிவிட்டு, தற்போது பிணையில் உள்ள இந்த ஆசாமியைத் தமிழகத்தில் சீண்டக் கூட யாருமில்லை. எங்கே தங்கள் வீட்டுப் பெண்களிடமும் இந்தக் கிழட்டு காம கே()டி கைவைத்து விடுவானோ என்ற பீதியில், பார்ப்பனர்களே கூட காஞ்சி சங்கரமடத்துக்குச் செல்லத் தயங்குகிறார்கள். இப்பேர்பட்ட யோக்கிய சிகாமணிக்கு, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு விருந்தினர் என்ற சிறப்புத் தகுதியளிக்க உத்தரவிட்டு, அதனைச் செயல்படுத்தி இருக்கின்றார்.

 

இந்துவெறி பாசிஸ்டுகள் ஆளும் குஜராத்தின் முதல்வரோ அல்லது இராஜஸ்தான், ம.பி. மாநில முதல்வர்களோ இதனைச் செய்யவில்லை. இந்துவெறிக்கு எதிராகச் சவடால் அடித்துவரும் "இடதுசாரி' ஜனநாயகக் கூட்டணி ஆளும் கேரளத்தின் முதல்வர் அச்சுதானந்தன்தான் இப்படி உத்தரவிட்டுச் செயல்படுத்தியுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக, சிறீ உத்திராடம் திருநாள் மகாராஜாவுக்கு ஆசி வழங்க திருவனந்தபுரம் சென்ற இந்த "மட' சங்கராச்சாரிக்கு, கேரள அரசின் 15 துறைகளும் அரசு விருந்தினர் என்ற தகுதியளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று அவர் டிசம்பர் 12ஆம் நாளன்றே உத்தரவிட்டு பக்தியோடு செயல்படுத்தியுள்ளார்.

 

மார்க்சியத்தின் பெயரால் கட்சி நடத்திக் கொண்டு ஆட்சி செய்யும் சி.பி.எம்.இன் முதலமைச்சரான அச்சுதானந்தன், ஒரு மடாதிபதிக்கு மரியாதை செய்வதே மார்க்சியத்துக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். அதிலும் கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்சாட்சிகளை உருவாக்குதல், கொலை செய்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் மடாதிபதிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' முதல்வர். கூச்ச நாச்சமின்றி, ஒரு இந்துவெறி பயங்கரவாதிக்கு "இடதுசாரி' அரசே மரியாதை செலுத்திச் சிறப்பிக்கும் கீழ்த்தரமான செயலைக் கண்டிக்கக்கூட முன்வராமல், பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, "இடதுசாரி' கூட்டணியிலுள்ள இன்னுமொரு போலி கம்யூனிஸ்ட் கட்சியான வலது கம்யூனிஸ்ட் கட்சி.

 

ஆனால், முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளரான குஞ்ஞாலிக் குட்டி, "இடதுசாரி' அரசின் இச்செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். ""தமிழ்நாட்டில் கொலைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு அரசு மரியாதை அளிப்பது முறையல்ல; சங்கப் பரிவாரங்களின் விருப்பங்களுக்கேற்ப அரசின் கொள்கையை மாற்றக் கூடாது'' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள தலித் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இராமபத்ரன், ""இது இந்துத்துவ ஓட்டு வங்கியை அறுவடை செய்ய முயற்சிக்கும் கீழ்த்தரமான செயல்'' என்றும், ""மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் செயல்'' என்றும் "இடதுசாரி' அரசைச் சாடியுள்ளார். கொல்லத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான டாக்டர் எம்.எஸ். ஜெயபிரகாஷ், ""அனைத்து சட்டங்களுக்கும் மேலானவன் பிராமணன் என்று மனுதர்ம விதியை உயர்த்திப் பிடித்து, கொலைக் குற்றவாளியானாலும் பார்ப்பான் என்பதால் கேரள அரசு காஞ்சி மட சங்கராச்சாரிக்கு மரியாதை செலுத்துகிறது'' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

 

அக்ரஹார அம்பிகளின் கூடாரமான சென்னைத் தொலைக்காட்சியில், ஆண்டுதோறும் தீபாவளியன்று அதிகாலையில் ""கங்கா ஸ்நானம் ஆச்சோ!'' என்று தனது ஊத்தை வாயை இளித்து ஆசி வழங்கி வந்த இந்த ஓடுகாலி சங்கராச்சாரியை, சங்கரராமன் படுகொலைக்குப் பிறகு அத்தொலைக்காட்சி கூட அழைப்பதை நிறுத்திவிட்டது. தமிழக பார்ப்பன பத்திரிகைகளும் இந்தக் காமகே(õ)டியின் அருளாசியை படத்துடன் வெளியிடுவதை நிறுத்தி விட்டன. அவாள்களே புறக்கணித்துவிட்ட இப்பார்ப்பன பயங்கரவாதியிடம் அப்படி என்ன முற்போக்கைக் கண்டார்களோ இந்த போலி கம்யூனிஸ்டுகள்; அரசு மரியாதை அளித்து சிறப்பித்து ஆராதனை செய்திருக்கிறார்கள்!

 

இவர்கள் இவ்வாறு பார்ப்பனியத்துடன் கூடிக் குலாவுவதும் பார்ப்பனியத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்வதும் புதிய விவகாரமல்ல. வேத மந்திரங்களிலும் வேள்விச் சடங்குகளிலும் புராதனப் பொதுவுடைமைக் கூறுகள் உள்ளன என்று ஆய்வு செய்து, இந்த அபத்தத்தை ""பண்டைக்கால இந்தியா'' என்ற தனது நூல் மூலம் பறைசாற்றினார் போலி கம்யூனிஸ்டுகளின் அந்நாளையத் தலைவர் எஸ்.ஏ. டாங்கே.

 

நரகலில் நல்லரிசி பொறுக்கிய கதையாக, கம்பராமாயணத்தில் சோசலிசக் கூறுகளைக் கண்டுபிடித்த ப.ஜீவானந்தம், தமிழக கம்யூனிசத் தலைமையையே கம்பன் கழகமாக மாற்றினார். அவரின் சீடரான பெரியவர் நல்லக்கண்ணு கூட இன்னும் தனக்குப் பிடித்த இலக்கியம் என்று கம்பராமாயணத்தைத்தான் குறிப்பிடுகிறார்.

 

""வேதங்கள், உபநிடதங்கள் முதலான பாரதீய கலாச்சார பொக்கிஷங்களும் மார்க்சிய லெனினிய புரட் சிகர தத்துவமும் இணைந்ததுதான் நான் உயர்த்திப் பிடிக்கின்ற இந்திய மார்க்சியம்'' என்று அறிவித்து, இந்தியாவை ""வேதங்களின் நாடு'' என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார், "மார்க்சிஸ்டு'களின் ஞானகுருவாகிய ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.

 

அவரது விசுவாச சீடரும், மறைந்த முன்னாள் கேரள "மார்க்சிஸ்டு' முதல்வருமான ஈ.கே.நாயனார், கிறித்தவர்களின் "லோக குரு'வான போப் இரண்டாம் ஜான்பால். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவருக்கு பக்தியோடு பகவத்கீதை நூலைப் பரிசளித்தார்.

 

அடக்கருமமே! இராம.கோபாலன் செய்கிற வேலையையா இந்தச் செஞ்சட்டை தோழர் செய்தார் என்று நீங்கள் முகத்தைச் சுளிக்கும்போதே, தனது வீட்டைக் கட்டுகையில் செங்கல் பூசை நடத்திய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் புரட்சிகர போர்த்தந்திரத்தையும், தனது துணைவியார் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த மறுப்பேதும் சொல்லாத அவரது ஜனநாயக மாண்பையும், தனது பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திய நாடாளுமன்ற "மார்க்கிஸ்டு' அவைத் தலைவர் சோமநாத் சட்டர்ஜியின் முற்போக்கு சிந்தனையையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

 

குன்றக்குடி அடிகளாரை ""முற்போக்கானவர்'', ""ஆன்மீக கம்யூனிஸ்ட்'' என்றெல்லாம் பிதற்றித் திரிந்தவர்கள் முந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையினர் என்றால், ""நான் முதலில் பார்ப்பான்; அப்புறம் இந்து; அதன்பிறகுதான் கம்யூனிஸ்ட்'' என்று மே.வங்க "மார்க்சிஸ்டு' அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி வெளிப்படையாக அறிவிப்பதும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகட்டி நிற்பதும் இந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையின் மகிமைகள்!

 

தமது அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிரில் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம் முதலானவற்றுக்குச் சிறப்பு மலர் வெளியிடுவதோடு, தொழிற்சங்க அணிகளோடு சேர்ந்து ஆயுத பூசை விழா கொண்டாடி மகிழும் இப்போலி கம்யூனிஸ்டுகள், இனி வெட்கப்படாமல் பூணூலை மாட்டிக் கொண்டு காஞ்சி சங்கர மடத்தில் சங்கமிக்கலாம்; அடுத்து வரும் தேர்தல்களில் ""காஞ்சிப் பெரியவாளின் ஆசி பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்!'' என்று விளம்பரம் செய்யலாம்; கலை இரவுகள், தொழிற்சங்கக் கூட்டங்களுக்கு ஆசீர்வாதம் வழங்க "காம'ரேடு காமகே(õ)டியையே அழைக் கலாம்; போலி கம்யூனிஸ்டுகள் எதையும் செய்வார்கள்; யார் கண்டது!

 

இத்தனைக்கும் பிறகும், இந்துமதவெறி பாசிசத்தை சி.பி.எம். தலைமையில் அணிதிரண்டு வீழ்த்திவிட முடியும் என்று "மார்க்சிஸ்டு' கட்சியினர் யாராவது சொன்னால், சிந்திக்கத் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்!


· இரணியன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது