Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

02_2007_pj.jpg

அமெரிக்கா என்றால் நாகரிகம்; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்களின் பித்தைக் கூடத் தெளிய வைக்கும் வகையில், சதாமின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சதாம் அவமானப்படுத்தப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு, அமெரிக்காவின் வன்மமும், திமிரும்

 புரிந்திருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்த பிறகும், அமெரிக்காவின் வக்கிரமான கொலைவெறியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்குப் புரிய வைப்பதற்காக, ஜார்ஜ் புஷ், ""சதாமின் தூக்கு, ஈராக்கின் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தில் இன்னொரு மைல் கல்'' என்ற பொன்மொழியை உதிர்த்தார். ஈராக்கின் ஜனநாயகத்தை மதிப்பிட வேண்டும் என்றால், அங்கு அமெரிக்கா நடத்திவரும் படுகொலைகளைக் கணக்கிட வேண்டும் போலும்!

 

முசுலீம்களுக்கு உரிய புனிதமான நோன்பு நாளில் சதாமைத் தூக்கில் போட்டதன் மூலம், ஜார்ஜ் புஷ், தனது முசுலீம் எதிர்ப்பு கிறித்தவ மதவெறியை மீண்டும் பகரங்கமாக உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த மதச் சகிப்புத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக உலகெங்கிலும் கண்டனக் குரல்கள் எழுந்தது ஒருபுறமிருக்க, தூக்கு தண்டனையை சதாம் எதிர்கொண்ட விதமும்; தன்னை ஏளனம் செய்தவர்களை சதாம் மடக்கிய விதமும், பொதுமக்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பையும், அனுதாபத்தையும் உயர்த்திவிட்டது. சதாமின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்காகப் போராடிய ஈராக்கியர்கள் கூட, சதாமிற்கு அமெரிக்கா வழங்கிய தூக்கு தண்டனையை ஆதரிக்க மறுத்துள்ளனர். சதாமின் தூக்கு, தனது முகத்தில் இப்படிக் கரியைப் பூசிவிடும் என ஜார்ஜ் புஷ்ஷே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

 

""ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கும் பொழுது, ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் அதிபரை, ஆக்கிரமித்த நாடு விசாரிக்கக் கூடாது'' என போர் பற்றிய ஜெனிவா ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. ஜார்ஜ் புஷ் இந்தச் சர்வதேச ஒப்பந்தத்தை மயிரளவிற்குக் கூட மதிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, சதாமைத் தூக்கில் போட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, ஈராக் கிரிமினல் உச்சநீதி மன்றத்தையும் அதற்கான விதிகளையும் உருவாக்கினார்.

 

போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காகவே இந்தச் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ""ஜூலை 17, 1968க்கும், மே 1, 2003க்கும் இடைபட்ட காலங்களில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்களை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாக,'' இந்நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டது.

 

ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த இரண்டாவது வளைகுடா போர் மே 1, 2003 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக ஜார்ஜ் புஷ் அறிவித்தார். எனவே, அந்த தேதிக்குப் பிறகு, ஈராக்கை ஆக்கிரமித்துத் தங்கியிருக்கும் அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் போர்க் குற்றங்களை, படுகொலைகளை ஈராக்கின் எந்தவொரு நீதிமன்றமும் விசாரிப்பதைத் தடுப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம்.

 

சதாமின் ஆட்சியின்பொழுது, ஈரானுக்கு எதிராகவும், குர்து இன மக்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட போர்க் குற்றங்களின் பின்னே அமெரிக்காவின் கை இருந்தது என்பது உலகமே அறிந்த உண்மை. எனவே, சதாமின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் பொழுது, அக்குற்றங்களோடு தொடர்புடைய அமெரிக்கர்களை விசாரிப்பதைத் தடுப்பதற்காக, போர்க் குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஈராக்கில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே, நீதிமன்றம் விசாரிக்க முடியும் என்ற விதியும் உருவாக்கப்பட்டது.

 

அமெரிக்காவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில், ஈராக்கிலுள்ள துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முசுலீம்கள், சதாம் ஆட்சியின் பொழுது படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் சதாமும், அவரது அரசாங்கத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகளும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். ஷியா முசுலீம் நாடான ஈரானுக்கு எதிராக, அமெரிக்கா ஆதரவோடு சதாம் போர் நடத்தி வந்தபொழுதுதான் இப்படுகொலை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏறத்தாழ ஒரு ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். இந்நீதிபதிகளுக்கு இவ்வழக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து இங்கிலாந்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. எனினும், முதலாவதாக நியமிக்கப்பட்ட ""நீதிபதி'' ரிஸ்கர் முகம்மது அமின் வழக்கை விசாரிப்பதில் சற்று தாராளமாக நடந்து கொண்டதால், பதவியில் இருந்து விலகி விடுமாறு நிர்பந்திக்கப்பட்டார். இரண்டாவதாக நியமிக்கப்பட்ட ""நீதிபதி'', ""என்ன காரணத்தினாலோ'' பதவியை ஏற்றுக் கொள்ளவே மறுத்துவிட்டார். மூன்றாவதாக நியமிக்கப்பட்ட குர்து இனத்தைச் சேர்ந்த ""நீதிபதி'' ராஃப் அப்துல் ரஹ்மான் வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார். ஈராக்கின் அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து கொண்டு செயல்பட்டு வரும் ""கிரிமினல் குற்றங்கள் விசாரணை அலுவலகம்'' இவ்வழக்கு விசாரணையைக் கண்காணித்து வந்தது.

 

சதாம், தான் விருப்பப்படும் வழக்குரைஞர்களை நியமித்துக் கொள்ள கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதேவேளையில், சதாமுக்காக வாதாடிய வழக்குரைஞர்களுள் இரண்டு பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய சதாம் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதோடு, ""இந்த வழக்கு விசாரணையே கயவாளித்தனமானது'' எனப் புகழ் பெற்ற அமெரிக்க மனித உரிமை வழக்குரைஞர் ராம்ஸே கிளார்க் சாடியதால், (சதாமுக்காக வாதாடிய) அவர், விசாரணை நடந்து கொண்டிருந்தபொழுதே "நீதிமன்றத்தில்' இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டார்.

 

துஜைல் படுகொலையில் சதாமுக்கு நேரடி தொடர்புண்டு என அமெரிக்கா சுமத்தியிருந்த குற்றச்சாட்டு, போதிய சாட்சிகளோடும், ஆதாரங்களோடும் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை. எனினும், இப்படுகொலை தொடர்பாக அவருக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்காகவே, ""சதாம் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகத்தைப் பயன்படுத்தினார்'' என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வாதப்படி சதாமுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்றால், ஈராக்கில் 1,30,000 துருப்புகளை இறக்கிவிட்டு போர்க் குற்றங்களைப் புரிந்துவரும் ஜார்ஜ் புஷ்ஷûக்கும் மரண தண்டனை விதிக்கலாம்.

 

""உள்நோக்கத்தோடு திட்டம் போட்டு குடிமக்களைக் கொல்லவில்லை என்ற வாதத்தை முன்வைத்து சதாமின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்த முடியாது'' என சதாமை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. சதாமுக்கு இந்த வாதம் பொருந்தாது என்றால், ஈராக்கில் அமெரிக்கப்படை நடத்தி வரும் போர்க் குற்றங்களில் இருந்து தப்பிக்க, இதே வாதத்தை ஜார்ஜ் புஷ் கேடயமாகப் பயன்படுத்தி வருவதையும் அனுமதிக்க முடியாது.


···


சதாமுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஈராக்கின் ""பிரதமர்'' நௌரி அல்மாலிகி, ""அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி, தனது அரசால் ஒரு படையணியைக் கூட நகர்த்த முடியாது'' என்று கூறி, ஈராக்கின் இறையாண்மையை வெட்ட வெளிச்சமாக்கினார். இப்படிப்பட்ட ஒரு பொம்மை அரசு, அமெரிக்காவின் சம்மதமும், உத்தவும் இன்றி சதாமுக்கு மரண தண்டனை வழங்கியிருக்க முடியுமா?

 

சதாம் தூக்கு தண்டனை கூடத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்ட கடைசி நிமிடம் வரை அமெரிக்க இராணுவக் கைதியாகத்தான் வைக்கப்பட்டிருந்தார். சதாம் இறந்த பிறகு, அவரது சடலத்தைக் கூடத் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டது, அமெரிக்க இராணுவம். நீதிமன்ற விசாரணை தொடங்கி சதாமின் சடலம் மண்ணுக்குள் போடப்பட்டு மூடப்படும் வரை, அனைத்துமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்காணிப்பின் கீழ் நடந்திருக்கும் பொழுது, சதாம் தூக்கு மேடையில் ஷியா முசுலீம்களால் அவமதிக்கப்பட்டது மட்டும் அமெரிக்காவின் சம்மதம் இன்றி நடந்திருக்க முடியுமா?

 

""சதாம் தூக்கு மேடையில் கண்ணியமாக நடத்தப்பட்டிருக்கலாம்'' என முதலைக் கண்ணீர் வடிக்கிறார், ஜார்ஜ் புஷ். ஆனால், கண்ணியத்தையும், பண்பாட்டையும், மனித உரிமைகளையும் பற்றிப் பேச, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு என்ன தகுதி இருக்கிறது?

 

சதாம் அமெரிக்க இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பொழுது, பரிசோதனை என்ற பெயரில், அவர் தலையில் பேன் ஊறுகிறதா என்பது தொடங்கி, அவரை நிர்வாணப்படுத்தாதது மட்டும்தான் பாக்கி என்ற வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அவரை அவமானப்படுத்தியது.

 

சதாமின் ஆட்சியின்பொழுது, ஈராக் மீது அமெரிக்கா திணித்த பொருளாதாரத் தடையுத்தரவால் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கிய குழந்தைகள் இறந்து போயின. இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் சாவை, ""ஈராக் கொடுக்கத்தக்க விலைதான்'' என்று கூறி வக்கிரமாக நியாயப்படுத்தியது, கிளிண்டன் ஆட்சி.

 

அமெரிக்க இராணுவம் அபுகிரைப் சிறைச்சாலையில் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள், ஃபலுஜா, ஹதிதா நகரங்களில் நடத்திய பச்சைப் படுகொலைகள் இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பினாலும், அது தூண்டிவிட்டு நடத்தி வரும் இனக் கலவரத்தாலும் ஏறத்தாழ ஆறரை இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கியர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். 18 இலட்சம் ஈராக்கியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி, அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 16 இலட்சம் ஈராக்கியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைகின்றனர்.

 

அறிவுத்துறையினர் என்ற வர்க்கமே ஈராக்கில் இருக்கக்கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் என அறிவுத்துறையின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த 592 அறிஞர்கள், அமெரிக்க இராணுவத்தாலும், அதன் கூலிப் படைகளாலும் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். ""ஈராக்கியர்களைக் கொன்று குவிப்பதில் சதாமைச் சுண்டைக்காயாக்கி விட்டார், ஜார்ஜ் புஷ்'' என்கிறார் ஹாய்தா ஜங்கானா என்ற நாவலாசிரியர்.

 

ஈராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்காகவே ""பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள்'' என்ற பொய்யை, அமெரிக்க கோயபல்சுகள் கட்டியமைத்தனர். அந்தப் புளுகு அம்பலமான பிறகு, ஆக்கிரமிப்பை தொடர்வதற்காக, ""சதாம் அல்காய்தாவின் தோழனாகவும், உலக அமைதியின் வில்லனாகவும்'' அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டார். சதாமின் கதையும் முடிந்த பிறகு, ""மேற்காசியா முழுவதுமே அமெரிக்காவைத் தாக்குவதற்கான உந்துவிசைப் பலகையாக மாறி வருவதால், அமெரிக்கப் படைகளை உடனடியாக விலக்கிக் கொள்வது சாத்தியம் இல்லை'' என ஆக்கிரமிப்பு தொடர்வதை நியாயப்படுத்துகிறார், ஜார்ஜ் புஷ்.

 

ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை ஆளப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியதைப் போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் ஷியாசன்னி முசுலீம்களிடையே இனமோதலைத் தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. இந்த இனமோதலை மேலும் ஊதிவிடும் நோக்கத்தோடுதான், சதாம் ஷியா முசுலீம்களால் தூக்கில் போடப்படுவதையும்; தூக்கு மேடையில் அவர் ஷியா முசுலீம்களால் அவமானப்படுத்தப்பட்டதையும் அனுமதித்ததோடு, அக்காட்சியை ஒளிபரப்பவும் செய்தது, அமெரிக்கா. ஈராக்கின் எண்ணெய் வயல்களை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் தனிச் சொத்தாக மாற்றுவதற்காகவே, ஈராக் நாட்டை, ஷியாசன்னி குர்து பகுதிகளாகக் கூறுபோடவும் சதி செய்து வருகிறது.

 

ஈராக் மட்டுமின்றி லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராகப் போராட, அந்நாட்டின் அரசுக்கும், ஹிஸ்புல்லா எதிர்ப்புக் குழுக்களுக்கும் சி.ஐ.ஏ., மூலம் பணத்தைக் கொடுத்துக் கொம்பு சீவிவிடுகிறது; பாலஸ்தீனத்தில் ஹமாஸ் குழுவினருக்கு எதிராக ஃபதா குழுவினருக்கு ஆதரவும் ஆயுதமும் வழங்கி வருகிறது. இதன் மூலம், மேற்காசியாவில் நடந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சகோதர யுத்தங்களாக மாற்றிவிடச் சதி செய்து வருகிறது, அமெரிக்கா.

 

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, ஜார்ஜ் புஷ் தனது ஈராக் கொள்கையை மாற்றிக் கொண்டு விடுவார் என முதலாளித்துவப் பத்திரிகைகள் அனைத்தும் ஆருடம் கூறி வந்தன. ஆனால், ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு மேலும் 20,000 துருப்புகளை அனுப்ப உத்தரவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க ஜனநாயகத்தின் மாயையை உடைத்தெறிந்து விட்டார். மேலும் சோமாலியாவைத் தாக்கியதன் மூலம் "தீவிரவாதத்துக்கு எதிரான போரை' ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் ஏற்றுமதி செய்துள்ளார்.

 

அமெரிக்க மக்களின் ஈராக் போர் எதிர்ப்பை ஓட்டுக்களாக அறுவடை செய்து கொண்ட ஜனநாயகக் கட்சியோ, இந்த ஆக்கிரமிப்பு போருக்கு ஒரு மனித முகமூடியை மாட்டிவிடும் நரித்தனத்தில் இறங்கியிருக்கிறது. ஈராக் எண்ணெய் வயல்களை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏக போகமாக்கிக் கொள்ளும் வண்ணம், அந்நாட்டின் எண்ணெய் வயல்களை அரசிடமிருந்து பிடுங்கித் தனியார்மயமாக்கிவிட்டு, அதன் பிறகு மெல்ல மெல்ல அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எதிர்த்தரப்பின் திட்டம்.

 

அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது முன்னாள் கூட்டாளியான சதாமை, ""கண்ணியமற்ற முறையில்'' தூக்கில் போட்டதன் மூலம், தனது ""நட்பு நாடுகளுக்கு'' மறைமுகமாக எச்சரிக்கை விட்டிருக்கிறது. அதனால்தான், இந்தியா உள்ளிட்ட அதன் அடிவருடி நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் அமெரிக்காவின் மேலாதிக்க திமிரைக் கண்டிப்பதில் அடக்கியே வாசிக்கின்றன.

 

எனவே, உலகெங்கிலும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் விரும்பும் உழைக்கும் மக்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி அமைப்புகள், கம்யூனிசப் புரட்சியாளர்கள் தலைமையில் அணிதிரண்டு, ஆயுதமேந்திப் போராடினால் மட்டுமே, அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறியை முறியடிக்க முடியும்; இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை; கொரியா ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி ஈராக் ஆக்கிரமிப்புப் போர் வரை, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நடத்தியிருக்கும் போர்க் குற்றங்களை விசாரித்து, அக்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் ""கண்ணியமான'' முறையில் தண்டிக்கவும் முடியும்!


· அழகு

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது