Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

02_2007_pj.jpg

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்க்கை அவலமான நிலையில் இருப்பதை, சென்னை பகுதி மீனவர்களிடம் நடந்துள்ள சிறுநீரகத் திருட்டு அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. பட்டினியில் இருந்தும், கடனில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே, தங்களின் சிறுநீரகங்களை விற்று விட்டதாக மீனவப் பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

 

மேகலா என்ற மீனவப் பெண்ணுக்கு உயர் இரத்த அழுத்த நோய் இருந்ததால், அவரின் சிறுநீரகத்தை விலைக்கு வாங்கத் தனியார் மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இதனால், அவர் தனது தலைமுடியை ரூ. 500க்கு விற்று, நிலைமையைச் சமாளித்திருக்கிறார். ""முடி வளர்ந்த பிறகு மீண்டும் விற்பேன்'' என்கிறார், அவர். மானத்தைத் தவிர, மற்ற எதையும் விற்று வாழ வேண்டிய கட்டாயத்தில் மீனவர்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.

 

சுனாமிக்குப் பிறகு, தமிழக அரசால் வட சென்னையில் உருவாக்கப்பட்ட சுனாமி நகரில்தான் சிறுநீரகக் கொள்ளை கொடி கட்டிப் பறந்து வருகிறது. எனினும், சுனாமிக்கும் சிறுநீரகக் கொள்ளைக்கும் தொடர்பில்லை என்று காட்டுவதற்காக, சிறுநீரகத்தை விற்றுள்ள 30 பெண்களுள் 4 பெண்கள்தான் சுனாமிக்குப் பிறகு சிறுநீரகத்தை விற்றிருப்பதாக, ஒரு சொத்தையான வாதத்தை தமிழக அரசு முன் வைத்துள்ளது.

 

தமிழகத்தை சுனாமி தாக்கியவுடனேயே, ஜெயா தலைமையில் இருந்த தமிழக அரசும்; தி.மு.க. அங்கம் வகிக்கும் மைய அரசும் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண உதவிகளை அறிவித்தன. இதோடு, அரசு சாரா நிறுவனங்களும் நிவாரணப் போட்டியில் குதித்தன. மேலும், மீனவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காகவும்; அவர்களின் சமூக மேம்பாட்டுக்காகவும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளிடம் கடன் வாங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, கூட்டிக் கழித்துப் பார்த்தால், மீனவர்களிடம் சிறுநீரகக் கொள்ளை நடந்திருப்பதும்; தற்காலிகக் குடியிருப்புகள் என்ற பெயரில் மாட்டுக் கொட்டகைகளைவிட கேவலமான இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும்தான் கண் முன் தெரிகிறது.

 

தமிழகத்தில் சுனாமியால் 66,400 வீடுகள் சேதமடைந்ததாக அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. சுனாமி தாக்கி இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிந்த பிறகும் கூட, வீடு வாசலை இழந்தவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினருக்குக் கூடத் தமிழக அரசால் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க முடியவில்லை. கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு குடியிருப்புகளில் கூட அடிப்படையான வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை.

 

""கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வசதியும், கழிவுநீர் வெளியேற்றும் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. புதிய குடியிருப்புகளில் பள்ளிக்கூட வசதிகள், மருத்துவ சுகாதார வசதிகள்; அக்குடியிருப்புகளை நகரத்தோடு இணைக்கும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை'' எனத் தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. (தி இந்து, 26.12.07, பக்.5)

 

சென்னை மெரீனா கடற்கரையையொட்டி வாழ்ந்து வந்த மீனவர்களை, கூலித் தொழிலாளர் குடும்பங்களை நகரில் இருந்து 2530 கி.மீ. தள்ளி துரைப்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிக ளில் குடியமர்த்தினார், ஜெயா. துரைப்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் போக்குவரத்து வசதி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொழுது, போலீசை ஏவிவிட்டு அவர்களின் மண்டையை உடைத்தார், ஜெயா. ஆட்சி மாறிய பிறகும், இந்த அவல நிலை மாறவில்லை.

 

செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்டவர்கள் நகருக்கு வர பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்றால், தங்களின் வீடுகளில் இருந்து 3 கி.மீ. தூரம் நடந்து வர வேண்டும். அடையாறு, திருவான்மியூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு அன்றாடம் கூலி வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள், காலை 9 மணிக்குள் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்காது. ""வேலைக்காக, பல நேரங்களில் பேருந்தை நம்பாமல், 50 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்துச் செல்வதாகக் கூறுகிறார்'' ராஜாமணி என்ற தச்சுத் தொழிலாளி.

 

வடசென்னையில் சுனாமி நகரில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்கள், தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் 5 கி.மீ தள்ளியுள்ள காசிமேடு கடற்கரைக்கு, அதிகாலை 23 மணிக்குள் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் போக்குவரத்து வசதி இருக்காது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது முப்பது ரூபாய் வேண்டும். இதன் காரணமாகவே, பல மீனவர்கள் தங்களின் பரம்பரைத் தொழிலையே கைகழுவி விட்டதாகக் கூறப்படுகிறது.

 

மீனவ சமுதாயத்தில், குடும்பத்தை நடத்துவதில், ஆணின் வருமானத்தைவிட, பெண்ணின் வருமானத்திற்கு முக்கியப் பங்குண்டு. ஆண், தனது வருமானத்தைக் குடியிலும், சீட்டாட்டத்திலும் தொலைத்துவிட்டால் கூட, மீனவப் பெண்கள், அன்றாடம் சந்தைக்கு மீனை எடுத்துக் கொண்டு போய் விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப வண்டியை ஓட்டி விடுவார்கள். ஆனால், சுனாமிக்கு பிறகு மீனவக் குடும்பங்கள் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் விசிறியெறியப்பட்டு விட்டதால், மீனவப் பெண்களின் வருமானம் நின்று போய்விட்டது. இதனால்தான், மீனவப் பெண்கள், வாங்கிய கடனை அடைக்கவோ, பட்டினியில்லாமல் குடும்பத்தை நடத்தவோ, தங்களின் சிறுநீரகங்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டனர்.

 

தென் சென்னைப் பகுதியில் புதிது, புதிதாக முளைத்துவரும் கால்சென்டர் நிறுவனங்களின் வசதிக்காக, பல கோடி ரூபாய் செலவில், பளபளப்பான அகன்ற தார்சாலைகளைப் போட்டுத் தரும் தமிழக அரசு, துரைப்பாக்கத்திலும், செம்மஞ்சேரியிலும், சுனாமி நகரிலும் குடியமர்த்தப்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் வேலைக்குப் போய் திரும்புவதற்கு ஒரு பேருந்தைக் கூட விட மறுக்கிறது. இதன் மூலம், அவர்களின் வேலை வாய்ப்பினைத் தட்டிப் பறித்துவிட்டு, இன்னொருபுறம் நிவாரணம், உதவி எனப் பேசுவதெல்லாம் மோசடித்தனமாகாதா? தமிழகத் தலைநகர மீனவர்களின் வாழ்க்கையே இவ்வளவு மோசமானதாக இருக்கும்பொழுது, பிற பகுதி மீனவர்களின் வாழ்க்கை வேறெப்படி இருந்து விட முடியும்?

 

தமிழகத்தில் நடந்துள்ள சுனாமி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்திருக்கும் இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியே, நிவாரணம் என்ற பெயரில் மோசடிகள் நடந்தியிருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 

· சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகள், பள்ளமான நீர் தேங்கும் பகுதிகளில் இருந்ததால், எவரும் அதில் குடியேறவில்லை. இதனால் பாழான தொகை இரண்டரை கோடி ரூபாய்.

 

· விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட 3,026 தற்காலிக வீடுகளில் ஒருவரும் குடியேறாததால், ஒன்றே முக்கால் கோடி ரூபாய் விரயமானது.

 

· சுனாமியால் இறந்து போனவர்களின் சடலங்களைப் புதைப்பது தொடங்கி, உணவுப் பொருட்கள் வழங்குவது வரையான ஒவ்வொரு நிவாரண நடவடிக்கையிலும் நடந்துள்ள மோசடிகள், குளறுபடிகளை அந்த அறிக்கை பட்டியல் இட்டுள்ளது.

 

சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, பிடிக்கப்படும் மீன்களின் அளவு அதிகரிக்காததால், மீனவ சமுதாயத்தின் பொருளாதார நிலைமை நசிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், படகு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட கடன் குட்டி போட்டதுதான் கண்ட பலன் என்கிறார்கள் மீனவர்கள்.

உலக வங்கி உத்தரவுப்படி மீனவர்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தவும்; மீனவ சமுதாயத்தில் அரசு சாரா நிறுவனங்கள் ஊடுருவி வேலை செய்யவும்; அதிகாரிகள் இலஞ்சம் ஊழல் மோசடிகளில் ஊறித் திளைக்கவும்தான் சுனாமி நிவாரணம் பயன்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை போன்ற தனியார் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள், மீனவர்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சிறுநீரகத் திருட்டு வியாபாரத்தை நடத்தி வருகின்றன. அரசு, தனது அலட்சியத்தை மூடி மறைக்க, இந்தத் தனியார் மருத்துவமனைகள் மீது பாயப் போவதாக ""பாவ்லா'' காட்டுகிறது. மீனவர்களோ, தங்கள் சிறுநீரகங்களை இதைவிட நல்ல விலைக்கு வாங்க யாராவது வருவார்களா எனக் காத்துக் கிடக்கிறார்கள்!

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது