Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

puja_apri_07.jpg

கோவை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரிக்கால் நிறுவனம், கார், இரு சக்கர வாகனங்களுக்குத் தேவையான மீட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 6 தொழிற்கிளைகள், இந்தோனேஷியாவிலும், ஈரானிலும் தலா ஒரு தொழிற்கிளை என வளர்ந்துள்ள பிரிக்கால்

 நிறுவனம், ஆட்டோ மீட்டர் சந்தையில் 46 சதவீதத்தைக் கைப்பற்றி ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ""பிரிக்காலை ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என்கிறார் பிரிக்காலின் செயல் இயக்குநர் வனிதா மோகன். எனவே, இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ளும் வகையில் பிரிக்காலின் தொழிலாளர்கள், அதீத உற்பத்தி இலக்கு வைத்துக் கசக்கிப் பிழியப்படுவதோடு, எவ்விதத் தொழிற்சங்க உரிமைகளும் அற்றக் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டு வருகின்றனர்.

 

சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும் என்பதற்கு ஏற்ப, குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், கடந்த மார்ச் மாதம் ஆறு முன்னணித் தொழிலாளர் கோவையில் இருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிரடி இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, மார்ச் 9 அன்று நடத்திய 18 மணி நேர சாலை மறியல் போராட்டம், பிரிக்கால் நிறுவனத்தை மட்டுமல்ல, கோவையைச் சேர்ந்த பெரும் முதலாளிகள் அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டது. இச்சாலை மறியல் போரில் கலந்து கொண்ட 1,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலளர்கள் உள்ளிட்டு, 2,166 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

""உற்பத்திச் செலவு குறைவதற்குத் தகுந்தபடிதான் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும்'' என்ற கொடூரமான நிபந்தனையின் அடிப்படையில், பிரிக்கால் பிளாண்ட்1இல், 2004ஆம் ஆண்டு ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதே நிபந்தனையுடன் கூடிய ஊதிய ஒப்பந்தம், 2003இல் பிளாண்ட்3 இல் போடப்பட்டது. மூலப்பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்டவும், இலாபம் சரிந்து விடாமல் இருக்கவும் தொழிலாளர்களின் கூலியில் கை வைக்கும் நரித்தனம்தான் இந்த ஒப்பந்தம். தொழிலாளர்களின் அடிமடியிலேயே கை வைக்கும் இந்த ஒப்பந்தத்தில், ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்டு ஐந்து தொழிற்சங்கங்கள் கையெழுத்துப் போட்டு, பிரிக்கால் தொழிலாளர்களுக்குத் துரோகமிழைத்தன.

 

இதுவொருபுறமிருக்க, 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் 1,500 தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் தினக்கூலிகளாக வைத்திருப்பது; பெண் தொழிலாளர்களை மிரட்டி ""ஓவர்டைம்'' வேலை செய்ய வைப்பது; தொழிற்சாலைக்குள் நடக்கும் விபத்துக்களுக்கு, அவ்விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளிகளையே பொறுப்பாக்குவது என்பது தொடங்கி, உணவகத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்கக் கூடாது; சாப்பிட்ட பிறகு, தொழிலாளர்கள் டிஃபன் பாக்சைத் தண்ணீர் ஊற்றிக் கழுவக் கூடாது; ஒதுக்குப்புறமாகப் போய்க்கூட சிகரெட் பிடிக்கக் கூடாது என்பது வரை பல்வேறுவிதமான அடக்குமுறைகளும், கெடுபிடிகளும், ""கட்டுப்பாடு'', ""நாகரீகம்'' என்ற பெயரில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டன. நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுள் (சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி.) ஒன்று கூட, இந்த அடக்குமுறையைத் தட்டிக் கேட்காமல், நிர்வாகத்திற்கு ஒத்து ஊதி வந்தன.

 

பிரிக்கால் நிறுவனத்தின் இந்த அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்கவும்; தங்களின் தொழிற்சங்க உரிமைகளை மீட்டெடுக்கவும், இத்துரோகத் தொழிற்சங்கங்களை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ""கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் தொழிற்சங்கம்'' என்ற புதிய சங்கத்தைக் கட்டியமைத்ததோடு, பெருவாரியான தொழிலாளர்கள் அதில் தங்களை இணைத்தும் கொண்டனர். இப்புதிய தொழிற்சங்கத்துக்கு, இ.பொ.க. (மாலெ) விடுதலை குழுவின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் வழிகாட்டி வருகிறது.

 

இப்புதிய தொழிற்சங்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற தீய நோக்கத்தோடுதான், ஆறு முன்னணித் தொழிலாளர்களைத் தடாலடியாக வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்தது நிர்வாகம். இதன் மூலம், மற்ற தொழிலாளர்கள் பயந்து போய் ஒதுங்கி விடுவார்கள் என எதிர்பார்த்தது. ஆனால், பிரிக்கால் தொழிலாளர்களோ, ஆறு தொழிலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாளே உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்து, நிர்வாகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அடாவடித்தனமான இடமாற்றலை ரத்து செய்யக் கோரி, மார்ச் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர்.

 

புதிய தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்த மாட்டோம் என்ற நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை, தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டம் உடைத்தெறிந்துவிட்டது. புதிய தொழிற்சங்கத்தோடு மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டபோதும், தங்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காதவரை வேலைக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு பிரிக்கால் தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 

தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது பிரிக்கால் நிறுவனத்தில் மட்டுமே நடக்கும் ""அதிசயம்'' கிடையாது. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடே இருக்கக் கூடாது என்பது தொடங்கி தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்பது வரை தொழிற்சங்க உரிமைகள் அனைத்தையும் பறிக்கக் கோருகிறது, உலகமயம். இதற்கு ஏற்றாற்போலத்தான், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுகின்றன; தொழிற்சங்கமே அமைக்க முடியாதபடி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

 

தொழிலாளி வர்க்கமே ஒன்று திரண்டு போராடினால்தான், தொழிற்சங்க உரிமைகள் சட்ட பூர்வமாகவே பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும். போராடும் பிரிக்கால் தொழிலாளர்கள் இதை உணர்ந்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, புனே, குர்கான், உத்தராஞ்சல் ஆகிய இடங்களில் உள்ள பிரிக்கால் தொழிற்சாலைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

 

""கட்டுப்பாடு'' என்ற பெயரில் பிரிக்கால் நிர்வாகம் ஏவிவிடும் அடாவடித்தனங்களையும்; சுனாமி நிவாரண நிதி என்ற பெயரில் அந்நிர்வாகம் தொழிலாளர்களிடம் நடத்திய கொள்ளையையும்; வசூலித்த பணத்தைக் கொடுக்காமல் அரசை ஏமாற்றியதையும்; ""சிறு துளி'' என்ற அமைப்பு மூலம் பிரிக்காலின் செயல் இயக்குநர் வனிதா மோகன் அரசு பணத்தைச் சுருட்டுவதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, பிரிக்காலுக்கு எதிரான பொதுக் கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

 

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என மற்ற முதலாளிகள் விரும்புவதால், துணியாலை, பஞ்சாலை, இன்ஜினியரிங் தொழிலாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்தில் நிற்கும் வண்ணம் கோவை மாவட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

 

வேலை நிறுத்தப் போராட்டத்தை உறுதியோடு தொடர்வதோடு, உலகமயச் சூழலில் இப்படிப்பட்ட ஒற்றுமையையும், புதிய போராட்ட முறைகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த முடியும்.


· பு.ஜ.தொ.மு., கோவை.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது