Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

puja_apri_07.jpg

மறுகாலனியாதிக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் வாழ்விழந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதும், தொழிலாளர்கள் வேலையிழந்து கொத்தடிமைகளாக உழல்வதும், வறுமையும் பட்டினியும் பெருகுவதும் தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், இந்தியாவில் பணக்காரர்களும் பெருகிக் கொண்டே போகிறார்கள். உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியப் பெருமுதலாளிகளும் இடம் பெற்றுள்ளதாகப் பூரித்துப் போகின்றனர் ஆட்சியாளர்கள்.

 கோடீசுவரர்கள் பெருகப் பெருக அவர்களின் பணக் கொழுப்பு வக்கிரமாக வழிந்தோடுகிறது. நாடே அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த வக்கிரம் கேள்விமுறையின்றி பகிரங்கக் கூத்தாக நடக்கத் தொடங்கி விட்டது.

 

எலிசபத் ஹர்லீ. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் "மாடல் அழகி'. 41 வயதைக் கடந்துவிட்ட ஹர்லீ, பெருந்தொழில் அதிபரும் இந்திய வம்சாவளியினருமான அருண் நய்யார் என்ற 42 வயதுக்காரரை கடந்த மார்ச் மாதத்தில் பிரிட்டனிலுள்ள சட்லே கோட்டையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கெனவே மணவிலக்கு பெற்று மறுமணம் புரிந்து கொண்டுள்ள இத்தம்பதிகளின் திருமணத்துக்கு எடுத்த பட்டுச்சேலையின் மதிப்பு ரூ. 3.5 லட்சத்துக்கும் மேலானது. இந்தி சினிமாப் பாடல்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்த இத்திருமணத்தையும் விருந்துகளியாட்டங்களையும் இத்தம்பதிகள், தனியொரு சினிமாப் படமாகவும் எடுத்துள்ளனர்.

 

ஆடம்பரமாக நடந்த இத்திருமணக் கூத்து இத்துடன் முடியவில்லை. மணமகளது நாட்டில் நடந்தது போல், மணமகனது பூர்வீக நாடான இந்தியாவிலும் இத்தம்பதிகள் பார்ப்பன இந்து முறைப்படி இன்னுமொரு திருமணச் சடங்கை நடத்தினர். தமது 4 வயது மகனுடன் வந்த ஹர்லீநய்யார் தம்பதியினர் மும்பையிலிருந்து தனிவிமானத்தில் ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் கோட்டைக்குப் பறந்தனர். யானைகள், ஒட்டகங்களுடன் அலங்கார அணிவகுப்பு ஊர்வலம், விருந்தினர்களை அழைத்துவர ஏழு தனிவிமானங்கள், ஜோத்பூர் அரண்மனையில் விடிய விடிய சீமை சாராயத்துடன் களிவெறியாட்டம், அறுசுவை விருந்து என அமர்க்களப்படுத்தினர் இத்தம்பதிகள். இந்திய நாட்டில் இப்படியொரு ஆடம்பரத் திருமணம் இதுவரை நடந்ததேயில்லை என்று அதிசயித்து பரபரப்புடன் செய்திகளை வெளியிட்டன பத்திரிகைகள்.

 

பல கோடிகளை விழுங்கிய இந்த ஆடம்பர வக்கிரக் கூத்து நடந்த ஜோத்பூர் அரண்மனையருகே உள்ள நகர்ப்புறச் சேரிப்பகுதியில் வசிக்கும் உழைக்கும் மக்களின் மாத வருவாயோ ரூ. 2000க்கும் குறைவு. இதர மாநிலங்களைவிட ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கியுள்ள ராஜஸ்தான் மாநில கூலிஏழை விவசாயிகளின் வருமானமோ அதைவிடக் குறைவு. வறுமையும், பட்டினியும் கவ்வியுள்ள அம்மாநிலத்தில்தான் இந்த வக்கிரமான திருமண விழா நடந்துள்ளது. பணக்கொழுப்பை விகாரமாகக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவோ கட்டுப்பாடு விதிக்கவோ கூட அம்மாநில அரசு முன்வரவில்லை. மாறாக, மாநிலத்தின் பெருமையை உலகறியச் செய்ததாகக் கூறி, இந்த வக்கிர விழாவுக்கு எல்லா உதவிகளையும் அம்மாநில அரசு செய்துள்ளது.

 

இந்த வக்கிர திருமண விழாவையே விஞ்சும் வகையில் கடந்த 2004ஆம் ஆண்டில் நடந்த பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீசுவர வைர வியாபாரி மிட்டல் குடும்பத்தின் திருமண விழாவும், கடந்த டிசம்பரில் நடந்த பெருந்தொழிலதிபர் லோகியா குடும்பத்தின் திருமண விழாவும் பல்லாயிரம் கோடிகளை விழுங்கியது. ராஜஸ்தான் உதய்பூர் கோட்டையில் விழா, ஐந்து நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு, ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை, வெளிநாட்டிலிருந்து வந்த சிறப்பு உணவுகள் என பணத்திமிரில் கொட்டமடித்தன, கொழுப்பேறிய பன்றிகள்.

 

1947 போலி சுதந்திரத்துக்கு முன்னர், ஆங்கிலேயனின் காலை நக்கி வாழ்ந்த திவான் பகதூர், ஜமீன்தார், சமஸ்தான மகாராஜா போன்ற சரிகைக் குல்லாப் பேர்வழிகள்தான் இத்தகைய ஆடம்பர வக்கிர திருமண விழாக்களை நடத்தி வந்தனர். வெள்ளைக்காரன் ஆட்சியில் பஞ்சம் தலைவிரித்தாடி மக்கள் கொத்துக் கொத்தாக பட்டினியால் மாண்டபோது, ஜுனாகத் சமஸ்தானத்தின் நவாபு, தான் வளர்த்த செல்லமான நாய்க்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தினான். இத்திருமண விழாவையொட்டி மாபெரும் விருந்தும் கச்சேரியும் நடத்தியதோடு, நாய்த்தம்பதியினர் முதலிரவைக் கொண்டாட தனிமாளிகை அமைத்து, அதற்கென ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தான்.

 

இத்தகைய வக்கிமான குரூரமான விழாக்கள் காலனிய காலத்தோடு முடிந்துவிடவில்லை. போலி சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. மத்திய அமைச்சரான சரத்பவார், முன்பு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தபோது, கோடிகளை வாரியிறைத்து கோவில் திருவிழா போன்றதொரு ஆடம்பரமான திருமணத்தைத் தனது மகளுக்கு நடத்தினர். ஊரை அடித்து உலையில் போட்ட பாசிச ஜெயா நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் ரூ. 80 கோடிகளைத் தாண்டி நாடெங்கும் நாறியது. இத்திருமண விழாவில் நகைக்கடையாய் நடந்து வந்த உடன்பிறவா சகோதரிகளின் படத்தைப் போட்டு ஓட்டுப் பொறுக்கியது, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.க. அக்கட்சித் தலைமையின் மூத்த வாரிசான மு.க.அழகிரி, தன்னுடைய 56வது பிறந்த நாளுக்கு தனது முகத்தையே மதுரை தமுக்கம் மைதானம் முழுக்க பிரம்மாண்டமான வண்ணக் கோலமாகப் போட்டு வக்கிரமாக ரசித்தார். அந்த வண்ணக் கோலத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க தனி ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. இளைய வாரிசு மு.க.ஸ்டானினோ தன்னுடைய பிறந்தநாளுக்கு, தனக்கு யானைகள் வந்து மாலைபோடச் சொல்லி ரசித்தார்.

 

இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டில் உல்லாசமாகச் சுற்றி வருவதற்காகவே, ரயில் பெட்டியொன்றை விலைக்கு வாங்கி, தனது வக்கிர கொண்டாட்டத்தைத் தொடங்கவுள்ளார். பொழுதுபோக்கிற்காக பல கோடிகளை வாரியிறைக்கும் மனநோயாளிகளின் கீழ்த்தரமான இச்செயலைக் கூட சிலாகித்து எழுதுகின்றன, கிசுகிசு பத்திரிகைகள்.

 

500 ரூபாய் நோட்டைச் சுருட்டிப் பற்ற வைத்து ஹெராயின் எனும் போதை மருந்தைப் புகைத்த பா.ஜ.க.வைச் சேர்ந்த மறைந்த பிரமோத் மகஜனின் மகன் ராகுல் மகஜன் பற்றிய செய்தி வெளியானபோது நாட்டு மக்கள் அதிர்ச்சியில் விக்கித்து நின்றார்கள். ஆனால் பணக்கொழுப்பெடுத்த இத்தகைய வக்கிரங்களே இப்போது அன்றாடச் செய்தியாகிவிட்டது. உலகமயத்தின் விளைவாக நுகர்வுவெறி ஆடம்பர மோகம் பணத்திமிரைப் பறைசாற்றும் பிரம்மாண்ட விழாக்கள் என பணக்கொழுப்பேறிய பன்றிகள் நடத்தும் வக்கிரங்கள் சகிக்க முடியாதபடி பெருகிவிட்டன.


"நாகரிக' உலகைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடான பிரான்சில், வேலையிழந்து வாழ்விழந்த உழைக்கும் மக்கள் ஆடம்பர உணவு விடுதிகளைச் சூறையாடி, ஆடம்பரக் கார்களை அடித்து நொறுக்கி இப்பணக் கொழுப்பெடுத்த பன்றிகளுக்கு எதிராகத் தமது வெறுப்பை வெளிப்படுத்திப் போராடுகிறார்கள். ஏழை நாடான இந்தியாவின் உழைக்கும் மக்கள் மறுகாலனியத் தாக்குதலால் மரணப் படுகுழியில் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், கோடீசுவரக் கும்பலின் கொழுப்பேறிய வக்கிரங்களை இனியும் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது பிரான்சு நாட்டு உழைக்கும் மக்களின் வழியில் போராடப் போகிறோமா?


· கவி

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது