Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

puja_apri_07.jpg

பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டசபைத் தேர்தல்களில் வாங்கிய அடி, காங்கிரசு கட்சியை விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. அதனால், சாமான்ய மக்களின் நலனை மனதில் கொண்டு, 2007/08 ஆண்டுக்கான மைய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கூறி வருகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5%ஐத் தாண்டி வளர்ந்து "சாதனை' படைத்து விட்டாலும், விவசாய வளர்ச்சி பின்தங்கி விட்டது. விவசாய உற்பத்தித் தேங்கிப் போனதால், உணவுப் பொருள் விலையெல்லாம் உயர்ந்து விட்டது. எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும்; விவசாயத்தையும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் போடப்பட்டுள்ளதாகக் காங்கிரசுக் கட்சிப் பீற்றிக் கொள்கிறது.

 

விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கும் கடன் 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது; கடந்த ஆண்டைவிட மேலும் 50 இலட்சம் விவசாயிகளுக்குக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு 16,979 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்டு விவசாய வளர்ச்சிக்கு 18 அம்சத் திட்டமொன்றை ப.சிதம்பரம் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் விவசாய உற்பத்திப் பெருகி விலைவாசி குறையும்; விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நின்றுவிடும் என ஆரூடம் கூறுகிறார்.

 

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட, பொதுத்துறை வங்கிகள் மூலம் 1,90,000 கோடி ரூபாய் விவசாயக் கடனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த பட்ஜெட்டுக்கும், இந்த பட்ஜெட்டுக்கும் இடைபட்ட இந்த ஓராண்டில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனதை இந்த வங்கிக் கடன் தடுத்து நிறுத்திவிடவில்லை.

 

விதை, உரம், பூச்சி மருந்து ஆகிய இடுபொருட்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தாறுமாறாக உயர்ந்துகொண்டே போவதால், உற்பத்திச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. எவ்வளவுதான் நன்றாக விளைந்தாலும், இந்த உற்பத்திச் செலவை ஈடுகட்டும் விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. விவசாயிகள் விவசாயக் கூட்டுறவு வங்கியில் வாங்கும் கடனைக் கூட அடைக்க முடியாமல் முழி பிதுங்கி நிற்பதற்கு, இதுதான் அடிப்படை. எனவே, விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தாமல், விவசாயக் கடனை அதிகரிப்பது வங்கிக் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பதெல்லாம் புண்ணுக்குப் புணுகு தடவுவதாகத்தான் முடியும்.

 

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக, ""விவசாயிகள் தேசிய கமிசன்'' என்ற அதிகாரவர்க்க கமிட்டியை கடந்த ஆண்டே மைய அரசு அமைத்தது. ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதையாக, இந்த கமிட்டியின் தலைவராக அமெரிக்கக் கைக்கூலி (வேளாண் விஞ்ஞானி) எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கந்துவட்டிக் கடன் தொல்லை, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி ஆகிய பிரச்சினைகளை மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்து கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் இக்கமிசன் முன் வைத்தனர்.

 

விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட அக்கமிசன், ""விவசாயத்திற்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும்; சந்தை ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்பன உள்ளிட்டு சில சில்லறை பரிந்துரைகளை மைய அரசிடம் அளித்தது.

 

விவசாயிகளின் நலனுக்காக பட்ஜெட் போட்டதாகப் பீற்றிக் கொள்ளும் ப.சிதம்பரம், விவசாயிகள் கோரியபடி வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கும் தடை போடவில்லை. தேசிய கமிசனின் அற்பமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, விவசாயிகளின் பிரச்சினையை ஆராய ராதாகிருஷ்ணன் கமிட்டியை அமைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்து, விவசாயிகளின் பிரச்சினையை மீண்டும் ஊறுகாய் பானைக்குள் போட்டுவிட்டார்.

 

16,979 கோடி ரூபாய் செலவில் நீராதாரங்களை மேம்படுத்தப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டத்திற்காகத் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 100 கோடி ரூபாய்தான். இப்புள்ளிவிவர மோசடித்தனம் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு மாநிலமும், தங்களின் நீர் ஆதாரங்களை மேம்படுத்த, மைய அரசின் முன்அனுமதியின்றியே, உலக வங்கியிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையை வாரி வழங்கியிருக்கிறார், ப.சிதம்பரம். இதன் அடிப்படையில், தமிழகம், காவிரி இறுதித் தீர்ப்பு வந்த சூட்டோடு, உலக வங்கியிடமிருந்து 2,182 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் போட்டுள்ளது. ""குடிநீர், பாசன விநியோகத்தைத் தனியார்மயப்படுத்த வேண்டும். குடிநீர் மற்றும் பாசனக் கட்டணங்களை உயர்த்த வேண்டும்'' என்ற நிபந்தனைகள் இன்றி இந்தக் கடன் ஒப்பந்தம் முடிவாகி இருக்காது. இந்தக் கடன் மூலம் தமிழகத்திலுள்ள ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் ஆதாரங்கள் மேம்படுகிறதோ இல்லையோ, அவை கூடிய விரைவில் தனியார்மயமாகி விடும் என நிச்சயமாகச் சொல்லலாம்.

 

பட்ஜெட்டின் பெருமையைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 200லிருந்து 330 ஆக உயர்த்தியிருப்பதையும்; அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 11,300 கோடி ரூபாயிலிருந்து

 

ரூ. 12,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், இத்திட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இத்திட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்துக்கு தலா 100 கோடி ரூபாய் தேவைப்படும். இதன்படி 33,000 கோடி ரூபாய் இல்லாமல் இத்திட்டத்தை 330 மாவட்டங்களில் முழுமையாகச் செயல்படுத்த முடியாது; விலைவாசி உயர்வோடும், பணவீக்கத்தோடும் ஒப்பிட்டால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை யானைப் பசிக்குச் சோளப் பொரிதான் என விமர்சித்துள்ளன.

 

இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் வயதிலுள்ள குழந்தைகளுள் ஏறத்தாழ 1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படுவதேயில்லை. பெற்றோர்களின் வறுமை மட்டும் இதற்குக் காரணம் இல்லை. இந்தியாவெங்கும் 31,478 கிராமங்களில் பள்ளிக் கூடங்களே கிடையாது. 6,647 பள்ளிக் கூடங்களில் கட்டிடங்கள்தான் இருக்கிறதேயொழிய, பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 75,884 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் தான் இருக்கிறார்.


இப்படி அவலமான நிலையில் இருக்கும் ஆரம்பக் கல்விக்கும், மதிய உணவுத் திட்டத்திற்கும் சேர்த்து 23,142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 6,000 கோடி ரூபாய் அதிகம் என பட்ஜெட்டின் துதிபாடிகள் மெச்சிக் கொள்வது உண்மைதான். ஆனாலும், இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடின் பின்னே, ஒரு பொறியையும் மறைத்து வைத்துள்ளார், ப.சிதம்பரம். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி திட்டத்திற்கு மைய அரசு 75 சதவீத நிதியையும், மாநில அரசுகள் 25 சதவீத நிதியையும் ஒதுக்கி வந்தன. இனி, மைய அரசு 50 சதவீத நிதியைத்தான் ஒதுக்கும் எனக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார், ப.சிதம்பரம்.

 

2 இலட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்; 5 இலட்சம் வகுப்பறைகள் புதிதாகக் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டங்களுக்காக ஒரு பைசாகூட நிதியாக ஒதுக்கப்படவில்லை.

 

ஆரம்பப் பள்ளியில் சேரும் மாணவர்களுள், 35 சதவீத மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடித்த பிறகும்; 53 சதவீதமாணவர்கள் எட்டாம் வகுப்பு முடித்த பிறகும்; 63 சதவீத மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்த பிறகும் மேலே படிக்க முடியாமல், இடையிலேயே நின்று விடுவதாக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இப்படி இலட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிடும்பொழுது, அவர்களுள் ""திறமை'' வாய்ந்த ஒரு இலட்சம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000/ கல்வி உதவித் தொகை அளிக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாணவர்கள், தங்களுக்குத் ""திறமை''யும் இல்லை, ""அதிருஷ்டமும்'' இல்லை என மனதைத் தேற்றிக் கொண்டு, குழந்தைத் தொழிலாளியாகப் போக வேண்டியதுதான்.

 

பட்ஜெட்டைக் கூறு போட்டால், சமூக நலத் திட்டங்கள் பற்றிய டாம்பீக அறிவிப்புகளுக்கும், உண்மை நிலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பதைப் பச்சையாகக் காண முடியும். இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவீதத்தைத் தாண்டி ""வளர்ந்து'' செல்லும் நிலையிலும் கூட, சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய ஏன் மறுக்கிறார்கள்?

 

பட்ஜெட்டில் பற்றாக்குறை குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பது உலக வங்கியின் கட்டளை. இப்பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும் என்றால், தரகு முதலாளிகள் மீது, பன்னாட்டு நிறுவனங்கள் மீது கூடுதலாக வரி விதிக்க வேண்டும்; இல்லையென்றால், மக்களின் குரல்வ ளையை இறுக்க வேண்டும். முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளை பறித்தாலோ, அவர்கள் மீது கூடுதல் வரி விதித்தாலோ தாராளமய ஆதாரவாளர்கள் கொதித்துப் போய் விடுவார்கள். அதனால்தான் மக்களின் தேவைகளை இறுக்கிப் பிடித்து, உலகவங்கி நிர்ணயித்துள்ள பற்றாக்குறை வரம்பைத் தாண்டாமல் பட்ஜெட்டைப் போட்டிருக்கிறார், ப.சிதம்பரம்.

 

""பொருளாதார வளர்ச்சி'' பாதிக்கப்படக்கூடாது எனக் கூறி, இந்த பட்ஜெட்டில் தரகு முதலாளிகள் மீதோ, பன்னாட்டு நிறுவனங்கள் மீதோ அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 1,50,000 கோடி ரூபாய் வரிச் சலுகையிலும் ப.சிதம்பரம் கைவைக்கவில்லை. முதலாளிகளுக்கு வரிச் சலுகை அளித்தால் விலைவாசி குறைந்துவிடும் எனக் கூறி, பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியைக் குறைத்து, சலுகைகளை மேலும் வாரி வழங்கியிருக்கிறார்.

 

ஆனால், இந்தச் சலுகை அறிவிப்பானது, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது. சிமெண்ட் ஆலை முதலாளிகள், பட்ஜெட் வெளியான மறுநாளே, பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, சிமெண்ட் விலையை உயர்த்தி, மக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கி விட்டனர்.

 

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகாவைச் சேர்ந்த கடலை விவசாயிகள், கடலையின் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராடியபொழுது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால் ஜேப்படி திருடர்கள் போன்று கொள்ளையடிக்கும் சிமெண்ட் முதலாளிகள் விசயத்திலோ துப்பாக்கிகள் மௌனம் காக்கின்றன. விலையைக் குறைக்கும்படி அவர்களின் காலில் விழுந்து மன்றாடுகிறார், ப.சிதம்பரம். சிமெண்ட் முதலாளிகளோ அடுத்த ஆண்டுவரை விலையை உயர்த்த மாட்டோம் எனத் திமிராகப் பதில் அளிக்கிறார்கள். சாமானிய மக்களுக்காகப் போடப்பட்டதாகக் கூறப்பட்ட பட்ஜெட், மையின் ஈரம் உலரும் முன்பே, சாயம் வெளுத்து நிற்கிறது!


· செல்வம் 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது