Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

may_2007.jpg

அடங்க மறு; அத்து மீறு!'' இது சுவரெங்கும் விடுதலை சிறுத்தைகள் எழுதி வைக்கும் முழக்கம். இதை வாசித்துவிட்டுப் பொங்கி எழும் தலித் இளைஞர்கள் அத்துமீறினால் அவர்களுக்கு ஆதரவுக் குரல் தராமல், அந்த இளைஞர்களையே ஆதிக்க சாதியிடம் ""அடங்கிப் போ'' என எந்தத் தலைவராவது வற்புறுத்துவாரானால்,

 அவரை நாம் நிச்சயமாக தலித் துரோகி எனச் சொல்லி விடலாம். ஆனால், அவ்வாறு அடங்கிப் போகச் சொல்வதே விடுதலைச் சிறுத்தைகளின் தலைமைதான் எனும்போது, அச்செயலை அம்பலப்படத்தி விமர்சிக்காமல் தலைமையை வியந்தோதி ""சேரிப்புயல்'' என்றோ, ""வாழும் அம்பேத்கர்'' என்றோ நாணயமுள்ளவர்கள் துதிபாடிக் கொண்டிருக்க முடியுமா?

 

புதுக்கூரைப்பேட்டை, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள சிறு கிராமம். இக்கிராமத்தின் தலித் காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசனும், அதே ஊரின் ஊராட்சித் தலைவர் துரைசாமியின் மகள் கண்ணகியும் 8.7.2003 அன்று நஞ்சு ஊற்றிக் கொல்லப்பட்டு உடனடியாக எரிக்கப்பட்டனர். பொறியியல் பட்டம் படித்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனை, வன்னியப் பெண்ணான கண்ணகி காதலித்ததாலேயே, அப்பெண்ணின் வீட்டார்உறவினர்களால் இருவரும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, ஊருக்கு வெளியேயுள்ள முந்திரிக் காடொன்றில் கட்டி வைத்து உதைக்கப்பட்டனர். கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிதான் முருகேசனின் வாயில் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றிக் கொன்றார். முருகேசனின் தந்தையும், சித்தப்பா அய்யாசாமியும் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் இக்கொடுஞ்செயலைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அன்றைக்கு அவர்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.

 

தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்துத் தன் சுயசாதிக் கவுரவத்தைச் சிதைத்துவிட்ட தங்கையின் வாயில் விசம் ஊற்றினார் அண்ணன் மருதுபாண்டி. வாயைத் திறக்க தங்கை மறுத்திடவே, அவரின் மூக்கிலும், காதுகளிலும் விசத்தை இறக்கிச் சாகடித்தனர். சிறிது நேரத்திலேயே பிணமாகிப் போன இருவரையும் தனித்தனியே எரித்துத் தடயத்தையும் அழித்து விட்டனர்.

 

நெஞ்சை உறைய வைக்கும் இப்படுகொலைகள் நடந்தவுடன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொலைபேசியில் சாமிக்கண்ணுவைத் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார். போலீசு கண்டிப்பாய் நடவடிக்கை எடுக்கும் என்றார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, இந்தப் பயங்கரத்தை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினார்.

 

இந்தச் சம்பவத்தில் ஆதிக்க வன்னிய சாதிக்கு ஆதரவாய் செயல்பட்டு வந்த போலீசு, இந்த வன்னிய சாதிவெறி பயங்கரவாதம் அம்பலமானவுடனேயே முருகேசனை தலித்களும், கண்ணகியை வன்னியர்களும் கொன்றதாக வழக்கு சோடித்து இரண்டு தரப்பிலும் சிலரைக் கைது செய்தது. தன் கண் முன்னரே தன் பிள்ளை சாவதைப் பார்க்க நேரிட்ட சாமிக்கண்ணுவையும் கொலையாளி ஆக்கிய போலீசின் இக்கொடுமையைக் கேள்வியுற்ற சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ரத்தினம், தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ""சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்'' என வழக்குத் தொடர்ந்தார். வழக்குரைஞர் ரத்தினம்தான் மேலவளவு கொலையாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்தவர்.

 

இந்த வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்கத் தொடங்கிய அதே சமயம், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே மீண்டும் உறவு மலர்ந்தது. இதன்பின் சாமிக்கண்ணுவின் உறவினரான ஊத்தாங்கால் சண்முகம் என்பவர் மூலம் திருமாவளவன் இவ்வழக்கு விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்றார்.

 

""கேஸ் அது இதுன்னு விசயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்'' என திருமாவளவன் சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமியிடம் தொலைபேசி மூலம் பேசி சமரசமாகப் போகச் சொன்னதும், அய்யாசாமி திகைத்துப் போய்விடடார். ""என்ன இப்படி சொல்றீங்க?'' எனக் கேட்ட அய்யாசாமியிடம் திருமா, ""அன்புமணி மூலமா பிரசர் வருது. நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கணும்'' என நைச்சியமாகப் பேசவே அய்யாசாமி ""வக்கீலிடம் கேட்டு சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

 

கடுப்பான திருமாவோ ""வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கீலுக்கு என்ன வேலை நடுவுல? நீங்க முடிவெடுங்க. ஒத்துக்கிட்டா பணம் கூட கணிசமா தருவதா சொல்றாங்க'' என்று பேரத்துக்கு நேரடியாக இறங்கியதும், ""காசு வரும். எம் புள்ள வருமா?'' என்று பொட்டில் அடித்த மாதிரிக் கேட்டு விட்டு, செல்போன் மூலம் நடந்த இந்த உரையாடலை நிறுத்தினார்.

 

கட்டப் பஞ்சாயத்து செய்ய வந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஊத்தங்கால் சண்முகத்தை முருகேசனின் குடும்பம் ""இந்த மாதிரி வேலை செய்யுற நினைப்பிருந்தா சொந்தக்காரன்னு கூடப் பார்க்க மாட்டோம்'' எனத் திட்டித் தீர்த்தது.

 

"சி.பி.ஐ. ஆரம்பத்துல ஒழுங்காத்தான் விசாரணை நடத்துச்சு. தலித்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதால விடுதலை சிறுத்தை பிரச்சனை பண்ணும்னு பயப்பட வேண்டியதில்லை, அதை படையாச்சிங்க சரிக்கட்டிட்டாங்கன்னு தெரிஞ்சோ அல்லது வேறு என்ன காரணமோ திடீர்னு குற்றப்பத்திரிகையில முருகேசனோட சித்தப்பா அய்யாசாமியை நாலாவது குற்றவாளியா சேர்த்தது சி.பி.ஐ.'' என்று கூறுகிறார், வழக்கறிஞர் ரத்தினம்.

 

பொறியியல் பட்டம் பெற்று தன் குடும்பத்தையே உயர்த்துவான் முருகேசன் — எனப் பல நூறு கனவுகள் கொண்டிருந்த அந்தக் குடும்பம், இன்று வழக்காடி எப்படியும் வன்னிய சாதி வெறிக் கும்பலுக்குத் தண்டனை பெற்றத் தருவது என்பதில் உறுதியாய் உள்ளது.

 

ஆனால், சமாதானத் தூது முயற்சியில் தோல்வி கண்ட விடுதலைச் சிறுத்தைகள் தன் தளரா முயற்சியோடு தனது விவசாய அணிச் செயலாளர் திருச்சி கிட்டுவை, வாய்தா நாளன்று நீதிமன்ற வளாகத்துக்கே அனுப்பி பேரம் பேச முயன்றது. அடுத்து, நெய்வேலி சிந்தனைச் செல்வன் எனும் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகரை அனுப்பி வைத்துத் தனது "சமுதாயப் பணி'யைத் தொடர்ந்து செய்து வருகிறது.

 

ஓட்டுப் பொறுக்கி அரசியலை விமர்சித்து "தின்பது வாழைப்பழமாக இருந்தாலும் கழிவது மலம்தான்' எனக் கண்டுபிடித்த திருமா, வாக்குச்சீட்டு அரசியலுக்கு வந்ததும் முதல் வேலையாக பண்ணை ஆதிக்க சாதிவெறி மூப்பனாரைக் கரம் பிடித்தார். தமிழ்நாட்டின் அரசியல் கேவலம் வைகோவையே விஞ்சிடும் வண்ணம், அடுத்தடுத்து அணிதாவினார். தற்போது, ஒடுக்கப்படும் தன் சுயசாதி மக்கள் பக்கம் நின்று போராடாமல் கட்டப் பஞ்சாயத்துப் புரட்சி செய்கிறார். இன்னமும் இத்தகைய தலைவர்கள் தங்களது விடுதலையைப் பெற்றுத் தருவார்கள் எனத் தலித் மக்கள் நம்பிக் கிடப்பது, மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயல்வது போன்றதுதான்.

 

குறிப்பு: ""புதுவிசை'' என்ற கலாச்சார பத்திரிகையின் ஏப்ரல் ஜூன் 2007 இதழில் வெளிவந்த ""சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்'' என்ற கட்டுரையில் காணப்படும் முருகேசனின் உறவினர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


· இருட்டு

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது