Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

may_2007.jpg

மே.வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்களும் போலீசும் இணைந்து நடத்திய கொலைவெறியாட்டத்தை மூடி மறைத்து, கூசாமல் அவதூறு பொய் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது சி.பி.எம். கட்சி.

இக்கோயபல்சு புளுகுணிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியும், சி.பி.எம். கட்சியின் பாசிச கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டியும், மே.வங்க போலி கம்யூனிச அரசை மண்டியிட வைத்த நந்திகிராம மக்களின் உறுதிமிக்க போராட்டத்தை விளக்கியும், மறுகாலனியாக்கத்தை வீழ்த்த நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.

 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பாக, மே.வங்க சி.பி.எம். அரசின் படுகொலைகளைக் கண்டித்து 26.3.07 அன்று நடந்த ஆர்ப்பாட்டமும், பரமக்குடியில் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் 5.4.07 அன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டமும், புத்ததேவின் அண்டப்புளுகையும், விவசாயிகளை நரபலி கொடுத்து பன்னாட்டு முதலாளிகளுக்கு விசுவாச சேவை செய்யும் சி.பி.எம். அரசின் கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்தி முன்னணித் தோழர்கள் ஆற்றிய கண்டன உரையும் உழைக்கும் மக்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தன. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் வீச்சையும் அது உழைக்கும் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் கண்டு பீதியடைந்து, வாராந்திர நன்கொடை வசூலுக்காக வரும் சி.பி.எம். கட்சியினர், அந்த வாரத்தில் திருவாடனை சந்தை பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

 

சென்னை அருகே, ஆலைத் தொழிலாளர்களும் அமைப்புசாரா தொழிலாளர்களும் நிறைந்த கும்மிடிப்பூண்டியில் மார்ச் 28ஆம் தேதியன்று பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றிய தெருமுனைக் கூட்டமும், நெய்வேலியில் ஏப்ரல் 9,10,11 தேதிகளில் டவுன்ஷிப், அனல் மின்நிலைய வாயில், மந்தார குப்பம் ஆகிய பகுதிகளில் பு.ஜ.தொ.மு. சார்பில் நடந்த தெருமுனைக் கூட்டங்களும், தொழிலாளர்களிடம் சி.பி.எம். மீதான பிரமைகளைத் தகர்த்து புரட்சிகர சங்கத்தில் அணிதிரண்டு போராட அறைகூவின.

 

கொலைகார முதல்வர் புத்ததேவின் கொடும்பாவியை எரித்து மார்ச் 17ஆம் நாளன்று போராட்டம் நடத்திய தஞ்சை ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு 8.4.07 அன்று தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் பொதுக்கூட்டத்தை நடத்தின. ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், கர்நாடக மாநில உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சி.பி.எம்.மின் ஏகாதிபத்திய சேவையையும், அதன் பொய்கள் சதிகள் கொலைகளையும் அங்குலம் அங்குலமாகத் திரைகிழித்துக் காட்டிய இப்பொதுக்கூட்டமும், நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள அறைகூவிய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

 

புதுச்சேரியில் தேங்காய்திட்டு, முருங்கம்பாக்கம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், திருபுவனை, திருவண்டார்கோயில் ஆகிய இடங்களில் பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. சார்பாக ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. துறைமுக விரிவாக்கம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக புதுவை மக்கள் போராடி வரும் சூழலில், கொலைகார சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்தியும் நந்திகிராம மக்களின் போராடப் படிப்பினைகளை உணர்த்தியும் நடந்த இக்கூட்டங்கள் புதுவை மக்களிடம் விழிப்புணர்வூட்டுவதாக அமைந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.

 

உசிலம்பட்டி வட்டாரத்தில், விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற கொலைகார சி.பி.எம். ஆட்சியாளர்களுக்கு எதிராக சாத்தங்குடி, செல்லம்பட்டி, கருமாத்தூர், முண்டுவேலம்பட்டி, ஆரியபட்டி ஆகிய ஊர்களில் தெருமுனைக் கூட்டங்களையும், உசிலம்பட்டி, செக்கானூரணி, திருமங்கலம் ஆகிய ஊர்களில் பொதுக் கூட்டங்களையும் வி.வி.மு. நடத்தியது. செங்கொடி ஏந்தி விவசாயிகளின் தோழனாக நாடகமாடிய பாசிச சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்திக் காட்டிய இப்பிரச்சார இயக்கம், இவ்வட்டாரமெங்கும் உழைக்கும் மக்களிடமும் இடதுவலது போலி கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகளிடமும் புதிய பார்வையையும் புதிய சிந்தனையையும் விதைத்தது.

 

நந்திகிராமப் படுகொலைகளுக்கு எதிராக இப்புரட்சிகர அமைப்புகள் ஒட்டிய சுவரொட்டிகளை பல ஊர்களில் அவசர அவசரமாகக் கிழித்தெறிந்த சி.பி.எம். குண்டர்கள், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக, உழைக்கும் மக்களிடம் உண்மைகளை மூடிமறைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், மறுகாலனியாக்கத்துக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து நடத்திவரும் பிரச்சாரமும் போராட்டங்களும், ஏகாதிபத்திய கைக்கூலிகளான இத்துரோகிகளை அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி முடமாக்கியே தீரும் என்பது உறுதி.


பு.ஜ. செய்தியாளர்கள்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது