Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

june_2007.jpg

ஓய்வு பெற்ற இராணுவ சுபேதார் திரு. நல்லகாமன் அவர்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும் மேலும் 3 போலீசு அதிகாரிகளுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து 3.4.07 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது குறித்த செய்தி சென்ற பு.ஜ. இதழில் வெளியாகியிருந்தது.

 மே 21ஆம் தேதியன்று பிரேம்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு அவரது வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டதாக காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

 

நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசு ஊழியர் யாராக இருந்தாலும், எவ்வித விளக்கமும் கோராமல், மறுகணமே அவரை அரசியல் சட்டப்பிரிவு 311(அ) வின் கீழ், அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி அரசு நிரந்தர வேலை நீக்கம் செய்யும். மற்றெல்லா அரசு ஊழியர்களின் விசயத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை இதுதான். ஆனால், குற்றவாளி பிரேம்குமாரைப் பணிநீக்கம் செய்வதற்கு மட்டும் அரசுக்கு சுமார் ஒன்றரை மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

 

இதனை வெற்றி என்று அழைக்கலாமெனில், இது திரு.நல்லகாமனின் தளராத உறுதிக்கும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியே அன்றி, நிச்சயமாக இது நீதிக்குக் கிடைத்த வெற்றி அல்ல. இந்தப் பணிநீக்கம் என்பதும்கூட வேறு வழியில்லாத நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைதான்.

 

3.4.07 அன்று தீர்ப்பு வெளியானவுடனே, பிரேம்குமாரும் அவருடன் தண்டிக்கப்பட்ட மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைக்கும் வேலையை தமிழக காவல்துறை செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. பிறகு மதுரை அமர்வு நீதிமன்றத்தின் மூலம் ம.உ.பா.மையத்தின் வழக்குரைஞர்கள் பிரேம்குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கச் செய்தனர். அதன் பிறகும் போலீசு அசையவில்லை. பிரேம்குமாரும் மற்ற மூவரும் தலைமறைவானார்கள்.


இன்று பணிநீக்க உத்தரவை பிரேம்குமார் வீட்டுக் கதவில் ஒட்டும் காவல்துறை, அன்றே பிரேம்குமாரின் படத்தைப் போட்டு "தலைமறைவுக் குற்றவாளி' என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். காசைக் கொடுத்து, கம்ப்ளெயிண்டையும் கொடுத்தால், உடனே ஆட்டோவில் வந்து இறங்கும் காக்கி உடை யோக்கியர்கள், பிரேம்குமாரின் பெண்டாட்டி, பிள்ளை, மாமன், மச்சான் அனைவரையும் அடித்து இழுத்து வந்து அண்டிராயரோடு ஸ்டேசனில் உட்கார வைத்து, "அய்யா எங்கே?' என்று விசாரித்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பிரேம்குமார் தப்பிப்பதற்குப் போதுமான அவகாசத்தைத்தான் தமிழக அரசு வழங்கியது.

 

அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேம்குமார், தான் தஞ்சை மாவட்ட போலீசு கண்காணிப்பாளராகப் பதவி வகிப்பதால் "போலீசிடம் சரணடைவதிலிருந்து விலக்கு தரவேண்டும்' என்று கோரி, உச்சநீதி மன்றத்தில் உத்தரவும் வாங்கி விட்டார். இப்படியொரு சலுகை எல்லா கிரிமினல்களுக்கும் வழங்கப்படுகிறதா அல்லது "போலீசு கிரிமினல்களுக்கு' மட்டுமே உச்சநீதி மன்றம் வழங்கும் சிறப்புச் சலுகையா என்று தெரியவில்லை. ஆனால், பொய் வாக்குமூலம் கொடுத்து உச்சநீதி மன்றத்தை ஏமாற்றிய பிரேம்குமாரின் இந்த மனுவைக் கூட தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் எதிர்க்கவில்லை.

 

தமிழக அரசின் இந்தக் கள்ள மவுனத்தை அம்பலப்படுத்தி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தின் வாயிலாக, இது எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது. பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்குமாரையும் மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என்று நல்லகாமன் மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மனுக் கொடுத்தார். அதன் பிறகும் தமிழக அரசு அசையவில்லை.

 

பிறகு 4.5.07 அன்று ""தண்டனை பெற்ற குற்றவாளி பிரேம்குமாரைக் கைது செய்!'' என்று கோரும் போராட்டத்தை வீதிக்குக் கொண்டு வந்தனர் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை வழக்குரைஞர்கள். ""அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வது சட்டவிரோதம்'' என்று வழக்குரைஞர்களை மிரட்டிப் பார்த்தது போலீசு. ""முதலில் பிரேம்குமாரைக் கைது செய்துவிட்டு அப்புறம் இங்கே வந்து சட்டத்தை நிலைநாட்டு'' என்று பதிலடி கொடுத்த வழக்குரைஞர்கள், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தச் செய்தியும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது. அதன் பிறகும் தமிழக அரசு பிரேம்குமாரை கைது செய்யவில்லை.

 

இதனைத் தொடர்ந்து ""தண்டனை பெற்ற குற்றவாளியான பிரேம்குமாரையும் மற்ற 3 அதிகாரிகளையும் கைது செய்யவும், பணி நீக்கம் செய்யவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் வழக்குரைஞர் ராஜு. பதிலில்லை.

 

பிறகு 7.5.07 அன்று மக்கள் தொலைக்காட்சியின் "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களான ராஜு, சகாதேவன் ஆகியோர், ""தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒரு போலீசு அதிகாரி என்பதால் தமிழக அரசு அவரைச் சட்ட விரோதமாகப் பாதுகாக்கிறது'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள். ""தன்னுடைய சாதியைச் சேர்ந்த அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு சட்டத்தை வளைக்கிறான் பிரேம்குமார்'' என்று அம்பலப்படுத்தினார் நல்லகாமன். இதற்கு அப்புறமும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.

 

இதற்கிடையில் உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பிரேம்குமார், சிறை செல்வதைத் தவிர்க்க பிணை மனுவையும் தாக்கல் செய்தார். ""பிரேம்குமாரின் பிணை மனுவையும், மேல் முறையீட்டு மனுவையும் நிராகரிக்க வேண்டுமென்றும், பொய்யான தகவல் கொடுத்து உச்சநீதி மன்றத்தை பிரேம்குமார் மோசடி செய்திருக்கிறார்'' என்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், பிரேம்குமாருக்கு பிணை வழங்கியது உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக பிரேம்குமார் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இப்போது உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

 

பிரேம்குமாருடன் ஒரு மாத தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கூட, அரசு இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை. உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத அரசுக்கு எதிராக மறுபடியும் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். மீண்டும் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம், வக்கீல், வாய்தா, அலைச்சல், பணம்...!

 

1982ஆம் பிப்ரவரி முதல் தேதியன்று, தன்னுடைய கட்டப் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட மறுத்த குற்றத்துக்காக நல்லகாமனையும், அவரது குடும்பத்தினரையும் கொலைவெறி கொண்டு தாக்கி, சங்கிலியால் பிணைத்து வாடிப்பட்டியின் தெருக்களில் இழுத்துச் சென்ற பிரேம்குமார் என்ற மிருகத்தின் வெறியாட்டம் அந்த ஒருநாளுடன் முடிந்து விட்டது. அந்தக் காக்கி உடைக் கிரிமினலைத் தண்டிக்கக் கோரி, சட்டபூர்வமாக முயற்சித்து வரும் அந்த முதியவரை 25 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வருகின்றது இந்த அரசமைப்பு. பிரேம்குமாரின் சித்திரவதை வாடிப்பட்டி வீதியுடன் முடிந்து விட்டது. தமிழக அரசும், நீதித்துறையும் அவரை வாடிப்பட்டியிலிருந்து டெல்லிக்கும் சென்னைக்கும் மதுரைக்கும் ஆயிரம் முறை இழுத்து அலைக்கழித்து வருகின்றன.

 

இந்தத் தண்டனையை அவர் அனுபவித்துக் கொண்டிருந்த அதே 25 ஆண்டுகளில்தான் வெறும் துணை ஆய்வாளராக இருந்த பிரேம்குமாரைப் படிப்படியாக உயர்த்தி, எஸ்.பி.யாகப் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது தமிழக அரசு. 1982இல் நடைபெற்ற ஆர்.டி.ஓ. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, வலது கையால் பிரேம்குமார் மீது கிரிமினல் வழக்கு தொடுத்துவிட்டு, இடது கையால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது தமிழக அரசு. கலைஞர் அரசு, ஜெயலலிதா அரசு, ஜானகி அரசு என எந்த அரசிலும் இந்தக் கிரிமினலின் கொடி மட்டும் இறங்கவேயில்லை.

 

ஏழு கடல், ஏழு மலை தாண்டி இலட்சக்கணக்கில் செலவு செய்து, ""ஒரு மாதச் சிறை'' என்ற இந்த "பயங்கரமான தண்டனையை' உயர்நீதி மன்றத்தின் வாயிலிருந்து வரவழைத்த பின்னர், அந்தத் தீர்ப்பை அமல்படுத்த வைப்பதற்கு, அதாவது ஒரு காக்கி உடைக் குற்றவாளியைக் கைது செய்ய வைப்பதற்கு, ஒரு குடிமகன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்த விவரங்களைத் தந்திருக்கிறோம். இவையெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள். இப்படி 300 மாதங்கள் 25 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, இந்த "நீதி'யை வாங்குவதற்கு!

 

""25 ஆண்டு காலம் போராடி இந்தத் தீர்ப்பை வாங்கியிருக்கிறீர்களே, நீங்கள் நடத்தியிருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் மக்கள் தொலைக்காட்சியின் நிருபர் நல்லகாமனிடம் கேட்டார். ""கோர்ட்டு கேசெல்லாம் வேலைக்கு உதவாது மாமா; நான் அவனை உலக்கையைக் கொண்டு அடிச்சிடறேன்னு என் மருமவன் அன்னைக்கே சொன்னான். வேண்டாம்பா; நாம முறையாத்தான் போகணும்''னு அன்னக்கி அவன்கிட்ட சொன்னேன். இப்ப யோசிச்சுப் பார்க்கும்போது அன்னைக்கே உலக்கையைக் கொண்டு அடிச்சிருக்கலாமேன்னு தோணுது'' என்று பதிலளித்தார் நல்லகாமன்.

 

25 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் மீதெல்லாம் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து "இந்திய ஜனநாயகம்' வரவழைத்திருக்கும் சொற்கள் இவை ""உலக்கையைக் கொண்டு அடிக்கணும்!''.

 

இந்த "உலக்கை அடி' பிரேம்குமாருக்கு அல்ல; சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றத்தின் மேலாண்மை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய இந்த அரசமைப்புக்கு. இந்த மக்கள் விரோத அரசமைப்பு நீடிக்கும் வரை நல்லகாமனைப் போன்ற சாதாரணக் குடிமக்களுக்கு நீதி கிடைக்காது என்பதுதான் நல்லகாமனின் நீண்ட நெடிய போராட்டம் கூறும் நீதி.


பு.ஜ. செய்தியாளர்கள்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது