Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

july_2007.jpg

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் டார்ஜலிங் தேயிலை, அலாதியான மணத்தாலும் சுவையாலும் உலகப்புகழ் பெற்றது. மே.வங்கத்தின் வடக்கே டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பிகார் மாவட்டங்களில் உள்ள இச்சிறப்பு மிக்க தேயிலைத் தோட்டங்களிலிருந்து வீசும் காற்றில் இப்போது தேயிலை மணம் வீசுவதில்லை. பிணவாடை வீசிக்கொண்டிருக்கிறது.

 

ஒருவரல்ல; இருவரல்ல. கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி என்ற விகிதத்தில் கொத்துக்கொத்தாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போயுள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினருமாக சேர்த்து ஏறத்தாழ 3000 பேருக்கு மேல் மாண்டு போயிருக்கலாம் என்று பத்திரிகைகள் மதிப்பிடுகின்றன. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் 496 பேர் இவ்வட்டாரத்தில் பட்டினியாலும் சத்துணவின்றி நோய்கள் தாக்கியும் மாண்டு போயுள்ளனர். இவர்கள் மூப்படைந்த முதியவர்கள் அல்ல; அனைவருமே 50 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை மட்டும் 112 பேராகும்.
தாராளமயமாக்கலின் பின்னே தேயிலை இறக்குமதியால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக, 1998இலிருந்தே அடுத்தடுத்து பல தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட் டன. 2002 ஆம் ஆண்டில் இது இன்னும் தீவிரமாகி, இவ்வட்டாரத்தில் 18 தேயிலை எஸ்டேட்டுகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதன் விளைவாக, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரையும் சேர்த்து ஏறத்தாழ 17000 பேர் வேலையிழந்து வாழ்விழந்து பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

""30 ஆண்டுகளாக பாட்டாளிகளின் பொற்கால ஆட்சி நடக்கும் மாநிலம்; தொழிலாளர்கள் உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட மாநிலம்; பொது விநியோகமுறை (ரேஷன்) எவ்விதக் குறையுமின்றி செயல்படுத்தப்படும் மாநிலம். பட்டினியோ, பட்டினிச் சாவுகளோ இல்லாத மாநிலம்'' என்றெல்லாம் பீற்றிக் கொள்ளப்படும் போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 26 தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போயுள்ளனர். ""இவை பட்டினிச் சாவுகள் அல்ல; காசநோய், மாரடைப்பு, மஞ்சள் காமாலை, புற்றுநோய் முதலான தீராத கொடிய நோய்களாலேயே இச்சாவுகள் நிகழ்ந்துள்ளன'' என்கிறார், ஜல்பைகுரி மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி.

 

ஆனால்,""பட்டினியும் சத்துணவின்மையும்தான் இந்நோய்களுக்குக் காரணம். பட்டினியால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, அதுவே பல நோய்கள் தாக்குவதற்குக் காரணமாகி விடுகிறது. பட்டினி தீவிரமாகியதும் நோய்களும் தீவிரமாகி மரணத்தை விரைவுபடுத்துகிறது'' என்கிறார்கள் இப்பகுதியிலுள்ள மருத்துவர்களும் சுகாதார ஆய்வாளர்களும்.

 

""எனது தந்தை பல நாட்கள் உண்ண உணவின்றி பட்டினியால் பரிதவித்தார். காசநோய் தாக்கி படுக்கையில் வீழ்ந்தார். சுட்ட பலாக்கொட்டையும் செவ்வெறும்பு சூப்பும் பச்சைத் தேநீரும் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. நோய் வாய்ப்பட்ட அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்கவும் எங்களுக்கு வசதியில்லை. மரணத்தோடு போராடிய அவரை மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்காததால், கட்டிலில் வைத்துத் தூக்கிச் சென்றோம். வழியிலேயே அவர் இறந்து விட்டார்'' என்று விம்முகிறார்,சுபாஷ் மகடோ. ஆனாலும் இது பட்டினிச்சாவு அல்ல என்கின்றனர், போலி கம்யூனிஸ்டு ஆட்சியாளர்கள்.

 

தனியார் தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு, வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்கள் இத்தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்துமாறு கோரி போராடினார்கள். ஆனால், தாராளமயத்தை எதிர்ப்பதாகச் சவடால் அடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கி, சேமநல நிதி, போனசு, காப்பீடு நிதி மற்றும் பிறவற்றைக் கொடுக்கச் சொல்லி அரசிடம் முறையிட்டார்கள். தொழிலாளர்களின் தோழனாகப் பீற்றிக் கொள்ளும் இடது முன்னணி அரசோ, ""விலை வீழ்ச்சியால் நட்டப்பட்டு முதலாளிகளே தேயிலைத் தோட்டங்களை மூடிவிட்ட நிலையில், அவர்களிடமிருந்து எப்படி பாக்கியை வசூலிக்க முடியும்?'' என்று எதிர்வாதம் செய்து தொழிலாளர்களை எவ்வித நிவாரணமுமின்றி வீதியில் வீசியெறிந்தது.

 

""மூடப்பட்டுள்ள ஒவ்வொரு தேயிலைத்தோட்ட முதலாளியும் தொழிலாளிகளுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியும் இதர பாக்கியும் சேர்த்து ஏறத்தாழ 56 கோடி ரூபாய்க்கும் மேலிருக்கும். ஜல்பைகுரி, டார்ஜிலிங் மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு அவற்றின் முதலாளிகள் பல நூறு கோடிகளைச் சுருட்டி விட்டனர். இத்தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் அரசாங்க நிலத்தில் குத்தகைக்கு நடத்தப்படுகின்றன. இடதுசாரி அரசாங்கமோ இம்முதலாளிகளிடமிருந்து குத்தகை பாக்கியைக் கூட வசூலிக்காமல், அவர்களைத் தப்பவிட்டு தனது வர்க்கப் பாசத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது'' என்கின்றனர், இப்பகுதியிலுள்ள வேலையிழந்த தொழிலாளர்கள்.

 

வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டதால், கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் குடும்பப் பெண்கள்; காசநோய் தாக்கி எலும்பும் தோலுமாக படுக்கையில் வீழ்த்தப்பட்ட தொழிலாளர்கள்; சத்துணவின்றி நோஞ்சான்களாக உழலும் குழந்தைகள்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் தொழிலாளர் குடியிருப்புகள் — என ஜல்பைகுரி, டார்ஜிலிங், கூச்பிகார் மாவட்டங்களை வறுமையும் நோயும் பட்டினியும் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது.

 

வாழ்விழந்த தோட்டத் தொழிலாளர்களில் சிலர், குடும்பத்தோடு சிக்கிம்பூடõனுக்குச் சென்று கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். ""கல்குவாரிகளில் நிகழும் விபத்துகளில் படுகாயமடைந்தால் அங்கு சிகிச்சை பெறக்கூட முதலாளிகள் உதவுவதில்லை'' என்கிறார் ஒரு தொழிலாளி. வறுமை காரணமாக சிக்கிம்பூடானில் வீட்டு வேலைக்காகச் செல்லும் இளஞ்சிறுமிகள் கொடும் சித்திரவதைக்குள்ளாகின்றனர். வீட்டு வேலைக்காக இளஞ்சிறுமிகள் புரோக்கர்களால் கடத்தப்படுவதும், பாலியல் வன்முறைக்கு ஆளாவதும் இவ்வட்டாரமெங்கும் அதிகரித்து வருகிறது. சிலிகுரியைச் சேர்ந்த மீனா தேவி என்ற இளம்பெண், தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை வறுமை காரணமாக தலா ரூ. 3000க்கு விற்க முயன்று, அப்பகுதியிலுள்ள மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவருக்கு அடைக்கலம் அளித்த செய்தி வங்க நாளேடுகளில் வெளிவந்து போலி கம்யூனிச ஆட்சியின் யோக்கியதை நாடெங்கும் நாறியது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வட மாவட்டங்கள் மட்டுமின்றி,தெற்கே ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களை ஒட்டியுள்ள புருலியா, மித்னாபூர் மாவட்டங்களின் பழங்குடி மக்களும் பட்டினியால் மாண்டு போயுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.


தேசிய குற்றவியல் பதிவுத்துறையானது.""கடந்த 200506 ஆண்டில் மகாராஷ்டிர மாநில பருத்தி விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை விஞ்சும் வண்ணம், மே. வங்கத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன'' என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த தற்கொலைச் சாவுகளில் 98.4% சாவுகள் கிராமப்புறங்களில் நடந்துள்ளன என்றும், இவர்களில் பெரும்பாலோர் விவசாயக் கூலிகள் என்றும், கிராமப்புற பெண்களே அதிகமாக தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர் என்றும் இத்துறை குறிப்பிடுகிறது. ""அனைத்திந்திய அளவில் தற்கொலைச் சாவுகளில் முதலிடம் வகிக்குமளவுக்கு இடதுசாரிகள் ஆளும் மே.வங்க மாநிலம் முன்னேறிக் கொண்டிருக்கிறது; காலனிய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பஞ்சத்தின்போது நடந்த பட்டினிச் சாவுகளை விஞ்சிவிடும் அளவுக்கு, இப்போது அடுத்தடுத்து தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் பெருகிவிட்டன'' என்று வங்க நாளேடுகளே குற்றம் சாட்டுகின்றன.

 

போலி கம்யூனிச ஆட்சியின் மெத்தனத்தைக் கண்டித்து சில பத்திரிகையாளர்களும் மனித உரிமை அமைப்பினரும் ஆளுநரிடம் முறையிட்ட பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் மே.வங்க ஆளுநரான கோபால கிருஷ்ண காந்தி டார்ஜிலிங், ஜல்பைகுரி மாவட்டங்களில் பட்டினியால் மக்கள் பரிதவிக்கும் பகுதிகளைப் பார்வையிட்டு, உடனடியாக உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளனர். 10 கிலோ அரிசியும் 10 கிலோ கோதுமையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக வழங்கப்பட்ட போதிலும், ரேஷன் கடையிலிருந்து வெளியே வரும் எந்தப் பையிலும் 10 கிலோ எடைக்கு அரிசியோ கோதுமையோ இருப்பதில்லை. பெரும்பாலான மக்களால் இந்த நிவாரணத்தைக் கூட வாங்க முடியவில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே தமது ரேஷன் அட்டைகளை அடகு வைத்துவிட்டனர். இப்படி ரேஷன் அட்டைகளை அடகு பிடித்துள்ளவர்கள் இப்பகுதியின் சி.பி.எம். பிரமுகர்களான கந்து வட்டிக்காரர்கள்தான் என்பதை பத்திரிகைகள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்துகின்றன.

 

இவ்வளவுக்குப் பிறகும் மே.வங்க இடது,வலது போலி கம்யூனிச அமைச்சர்களோ, கட்சித்தலைவர்களோ பட்டினியால் பரிதவிக்கும் இப்பகுதி மக்களை இன்றுவரை ஏறிட்டும் பார்க்கவில்லை. மே.வங்க பாசிச முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மகிந்திரா நிறுவனம் மே.வங்கத்தில் ஆலையை தொடங்குவதற்காக பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய பம்பரமாகச் சுழல்கிறார். டி.எல்.எப். எனும் வீட்டுமனைக் கட்டுமானக் கழகத்துக்கு 5000 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் போடுவதற்காக நில அமைச்சர் அப்துர்ரஜாக் மொல்லா இரவு பகலாக அலைந்து கொண்டிருக்கிறார். அன்னிய முதலீடுகளைக் கவர்ந்திழுக்க தொழிலமைச்சர் வெளிநாடுகளுக்குப் பறக்கிறார். மற்ற அமைச்சர்களோ நந்திகிராமத்தில் தொடரும் மக்கள் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்பதற்காக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கே நேரம் போதவில்லை. இப்படி மாநிலத்தைத் தொழில்மயமாக்கி "வளர்ச்சி'யை சாதிக்க உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக சேவை செய்யவே அவர்களுக்கு நேரமில்லாத போது, பட்டினியால் தவிக்கும் உழைக்கும் மக்களைப் பார்க்க அவர்களுக்கு நேரமேது?

 

கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியானது, உழைக்கும் மக்களின் நலனுக்கான ஆட்சி என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால் அதுவும் மூட நம்பிக்கைதான்!

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது