Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

july_2007.jpg

உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு எனக் கூறப்படும் இந்தியாவை, உணவுப் பொருளுக்குக் கையேந்தும் நாடாக மாற்றும் சதி மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது. உணவுப் பொருள் இறக்குமதி; அரசாங்கம் நேரடியாக உணவுப் பொருளைக் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, அந்தப் பொறுப்பைத் தனியாரிடம்

 ஒப்படைப்பது; பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பப்படி இந்திய உணவுக் கழகத்தை மறுசீரமைப்பது; ரேசன் அட்டைகளுக்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பதைப் போல உணவு வில்லைகளை வழங்குவது என இந்தச் சதிக்குப் பல முகங்கள் உள்ளன.

 

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், மக்களின் தேவையைக் கருதி கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக மைய அரசு அறிவித்திருக்கிறது. கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்ததைக் காரணமாகக் காட்டி, கடந்த ஆண்டு 55 இலட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டோ கோதுமை விளைச்சல் அமோகமாக இருந்தும், ""எதிர்பார்த்த அளவிற்கு அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்ய முடியவில்லை'' என்ற பச்சைப் பொய்யைச் சொல்லி, 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள மைய அரசு திட்டம் போட்டுள்ளது.

 

இந்த ஆண்டு கோதுமை விளச்சல் 7.35 கோடி டன்னை எட்டிப் பிடித்திருக்கிறது. இது, கடந்த ஆண்டு விளைச்சலை ஒப்பிடும் பொழுது 40 இலட்சம் டன் அதிகமாகும். ""இப்படி விளைச்சல் அமோகமாக இருக்கும் நேரத்தில், அரசு அதிகபட்சமாக 2.2 கோடி டன் அளவிற்குக் கொள்முதல் செய்து, அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் வீழ்ந்தால் கூட, உணவுப் பொருள் விநியோகத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலையை உருவாக்கி இருக்கலாம். மாறாக, மைய அரசோ, தானே நிர்ணயித்துக் கொண்ட குறைந்தபட்ச அளவை (1.51 கோடி டன்) ஈடு செய்யும் வகையில் கூட கொள்முதலை நடத்தவில்லை'' என முதலாளித்துவப் பத்திரிகைகளே குற்றம் சுமத்துகின்றன. இப்படி நிர்ணயித்துக் கொண்ட அளவை விடக் குறைவாகக் கொள்முதல் செய்வதற்குத் தகுந்த வஞ்சகமான சூழலை, அரசாங்கமே உருவாக்கியது என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

 

கோதுமைக்குக் கொடுக்கும் கொள்முதல் விலையை உயர்த்தித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக் கொண்டிருக்கும் பொழுது, மைய அரசோ, ஒரு குவிண்டாலுக்கு ரூ.850/க்கு மேல் ஒரு நயாபைசா கூட உயர்த்தித் தர முடியாது என அறிவித்தது. அதேசமயம், உணவுப் பொருள் கொள்முதலில் இறங்கியுள்ள ரிலையன்ஸ், ஐ.டி.சி. போன்ற தனியார் நிறுவனங்கள் அரசு தரும் ஆதார விலைக்குக் கூடுதலாகக் கொடுத்து, கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

 

இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 900/ முதல் ரூ. 1,000/ வரை தரத் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்தன. மேலும், விவசாயிகள் அரசிடம் கோதுமையை விற்பனை செய்வதைத் தாமதப்படுத்துவதற்காக, ""இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து, அரசு கோதுமை கொள்முதல் விலையைக் கூட்டித் தர உத்தேசித்துள்ளது'' என்ற வதந்தியையும் முதலாளித்துவப் பத்திரிகைகள் மூலம் பரப்பின. கொள்முதல் விலை உயரும் என விவசாயிகள் காத்திருந்தபொழுது மைய அரசு வதந்தியை மறுத்து, கொள்முதல் விலையைக் கூட்டித் தரும் திட்டம் இல்லை என அறிவித்தது.

 

அரசாங்கமும், தனியாரும் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்திற்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தது. கோதுமையைச் சேமித்து வைக்க முடியாத விவசாயிகள் அனைவரும், அரசைவிட அதிக விலைதரும் தனியார் நிறுவனங்களிடம் விற்றனர். இதனால், அரசாங்கத்தின் கொள்முதல் குறைந்து போனது. இப்பொழுது, இந்தக் குறைவைக் காரணமாகக் காட்டி, ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்து 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சேர தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டுள்ளது, காங்கிரசு கூட்டணி ஆட்சி.

 

கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் கோதுமை ரூ. 1,000/க்கு இறக்குமதி செய்யப்பட்டது. சர்வதேச அளவில் கோதுமை விளைச்சல் வீழ்ச்சி அடைந்திருப்பதால், இந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ. 1,000/ஐ விடக் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோதுமை கொள்முதல் விலையை உள்நாட்டு விவசாயிகளுக்குக் கூட்டிக் கொடுத்தால், உணவு மானியம் எகிறி விடும்; பட்ஜெட்டில் துண்டு விழும் என சாக்கு போக்கு சொல்லும் மைய அரசு, கார்கில், ஆஸ்திரேலிய கோதுமைக் கழகம் போன்ற "பகாசூர விவசாயிகளுக்காக'' அரசு கஜானாவையே திறந்து வைக்கத் தயக்கம் காட்டவில்லை.

 

···

 

கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, இந்த கோதுமை இறக்குமதியை ஏதோ சந்தர்ப்பவசத்தால் நேர்ந்துவிட்ட விபத்து போலக் காட்டிவிட முயன்று வருகிறது, மைய அரசு. ஆனால், இந்திய விவசாயத்தை மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் சதியின் ஓர் அங்கம்தான் கோதுமை இறக்குமதி என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

 

கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் ""குறைவாக'' இருந்தாலும் கூட, மைய அரசு தேவையான அளவிற்கு (1.9 கோடி டன்) கோதுமையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திருக்க முடியும். ஆனால், கொள்முதல் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, உ.பி. மாநிலத்தில் கோதுமை கொள்முதல் ஏனோதானோவென்று நடத்தப்பட்டது. வழக்கமாக, குறைந்தபட்சம் 25 இலட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்படும் அம்மாநிலத்தில், கடந்த ஆண்டு வெறும் 40,000 டன் கோதுமைதான் கொள்முதல் செய்யப்பட்டது. பஞ்சாபிலும், அரியானாவிலும் கொள்முதலைக் குறைத்தால் விவசாயிகளின் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால், விவசாயிகள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத உ.பி. மாநிலம் குறி வைக்கப்பட்டது.

 

இந்திய உணவுக் கழகத்திடம் விற்பனைக்கு வந்த கோதுமையில், 60 சதவீதத்தை மட்டுமே கொள்முதல் செய்த மைய அரசு, 1 கோடி டன் கோதுமை பற்றாக்குறையாக இருப்பதாக அறிவித்தது. பிறகு, இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ கொடுத்து 5,500 கோடி ரூபாய் செலவில், 55 இலட்சம் டன் கோதுமையை கடந்த ஆண்டு இறக்குமதி செய்தது. அந்த ஆண்டு, (2006) இந்திய விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் கோதுமையை ரூ. 750க்குத்தான் மைய அரசு வாங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

5 இலட்சம் டன் கோதுமை மட்டும் இறக்குமதி செய்யப் போவதாக பிப்.2006இல் மைய அரசு அறிவித்தவுடனேயே, ""இதைவிட அதிகமாகக் கொள்முதல் செய்ய வேண்டும்'' என நிர்ப்பந்தம் கொடுத்தது, அமெரிக்கா. எங்கள் நாட்டின் கொள்கைகளை அமெரிக்காவின் உணவுக் கழகங்கள் தீர்மானிக்க முடியாது'' என வீராப்பு பேசிய மைய அரசு, அடுத்த நான்காவது மாதங்களுக்குள்ளாகவே, 47 இலட்சம் டன் கோதுமையை அமெரிக்காவில் இருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ள சம்மதித்தது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர், மைய அரசின் அமைச்சரவைச் செயலரை ஏப்.2006இல் சந்தித்த பிறகு, இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கான தரம் குறித்த விதிகள் தளர்த்தப்பட்டு, பூச்சிகளும், காளான்களும் நிறைந்த கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.

 

இந்த ஆண்டு இந்தியாவில் கோதுமை விளைச்சல் அமோகமாக இருக்கிறது என்று தெரிந்த நிலையிலும், அமெரிக்க கோதுமைக் கழகம், ""இந்தியா 30 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்'' என அறிவித்தது. இந்த அன்புக் கட்டளையை ஈடு செய்யும் வண்ணம், மைய அரசு 50 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

 

···

 

இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உணவுப் பொருள் கொள்முதலில் நேரடியாக ஈடுபடுவதற்கும், அவற்றைச் சேமித்து வைப்பதற்கும் ஏற்ப அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் ஏற்கெனவே பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், இந்திய உணவுக் கழகத்தையும், ரேசன் கடைகளையும் இழுத்து மூடி விடவேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். உலக வங்கியோ, ""இந்தியா, உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைவிட அந்நியச் செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து, மக்களின் தேவைகளை ஈடுகட்டலாம்; உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்'' என அறிவுரை வழங்கியிருக்கிறது.

 

இந்திய உணவுக் கழகத்தைச் சீரமைப்பது தொடர்பாக, ""அடுத்த இரண்டு ஆண்டுகளில், அந்நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் 2,300/ கோடி ரூபாயைக் குறைக்க வேண்டும்; கொள்முதல், விநியோகம் போன்ற முக்கியப் பணிகளைத் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விட்டுவிட வேண்டும்; 8,000 முதல் 10,000 தொழிலாளர்களை, விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்பி விடவேண்டும்'' என மெக்கன்ஸி என்ற அமெரிக்க நிறுவனம் மைய அரசிற்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

 

இதன்படி, இந்திய உணவுக் கழகத்தைச் சேர்ந்த 9,000 தொழிலாளர்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டு விட்டனர். விவசாயிகள் தங்களின் சுய தேவைக்கு எடுத்து வைத்துக் கொண்டது போக, சந்தைக்குக் கொண்டு வரும் கோதுமையில், 29.6 சதவீதத்தைக் கொள்முதல் செய்துவந்த மைய அரசு, 200506இல் 13.3 சதவீதம்தான் கொள்முதல் செய்திருக்கிறது.

 

200405இல் 2.47 கோடி டன் அரிசியைக் கொள்முதல் செய்த மைய அரசு, 200506இல் 2.3 கோடி டன்னாக அரிசி கொள்முதலைக் குறைத்துவிட்டது. தமிழகத்தில், மாநில அரசு அரிசி கொள்முதல் செய்வதை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் பாலாகாட் பகுதியிலும், ஒரிசாவின் அரிசி விளையும் ஐந்து மாவட்டங்களிலும் அரிசி கொள்முதல் செய்வது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

தி.மு.க. அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 2 ரூபாய் அரிசித் திட்டத்தைக் கூட, இத்தனியார்மயத்திற்கு எதிரானதாகப் பார்க்க முடியாது. இக்கவர்ச்சித் திட்டம், ஏகாதிபத்தியங்கள் புகுத்தும் மறுகாலனியாதிக்க கொள்கைக்கு ஒரு மனித முகமூடி மாட்டிவிடும் தந்திரமே தவிர வேறல்ல. இதுபோன்ற கவர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே உலகவங்கி 7,211 கோடி ரூபாயைத் தமிழகத்திற்கு ஒதுக்கியிருக்கிறது. (பார்க்க: பு.ஜ. அக். 2006)

 

உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் இருந்தும்; அதனைச் சேமித்து ரேசன் கடைகளின் மூலம் விநியோகிப்பதில் இருந்தும் அரசு இன்னும் முற்றிலும் விலகிக் கொள்ளாமல் இருப்பதால்தான், தனியார் முதலாளிகள், அரசின் கொள்முதல் விலையைவிடக் கூடுதலாகக் கொடுத்துக் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ளுமானால், உணவுப் பொருட்களின் கொள்முதல் விலையை மட்டுமல்ல, அதன் விற்பனை விலையையும் தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள். இந்தத் தனியார்மயம் விவசாயிகளுக்கு மட்டும் எதிரானதல்ல; பெரும்பாலான இந்திய மக்களின் வயிற்றில் அடிப்பதாகவும் அமையும்!


· ரஹீம்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது