Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

july_2007.jpg

ஆங்கிலேயக் காலனிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் நிறுவிய எத்தனையோ அடிமைச் சின்னங்களில் ஒன்றுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கிலாந்து நாட்டின் அரசி / அரசனைப் போன்ற ஒரு அலங்காரப் பதவிதான் இந்தியாவின் அரசுத் தலைவர். மத்திய, மாநில அரசு நிர்வாகங்களெல்லாம் முறையே அரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநரின் பெயரால்தான் நடைபெறுகின்றன;

 ஆனால், அரசு நிர்வாக இயந்திரத்துக்குத் தேவையானதெல்லாம் அப்பதவிகளில் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் மனிதர்கள் அல்ல; கோடிட்ட இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு கையொப்பங்கள் போடும் இயந்திரங்கள்தாம். மற்ற நேரங்களில் அரசு விழாக்கள் விருந்துகளில் அலங்காரச் சின்னங்களாக நிறுத்தப்படுவார்கள். ஆகவே, இந்திய அரசுத் தலைவர் பதவிக்குத் தேவையான தகுதி, தலையாட்டி வேலை செய்யும் கைப்பொம்மைதான்.

 

இத்தகைய அதிகாரமில்லாத பதவிக்கு பிரதிபா பட்டீல் என்பவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இந்த நாட்டின் பெண்ணினத்தையே கௌரவப்படுத்துவதாகும் என்ற கருத்து உருவாக்கப்படுகிறது. அறிவுகல்வி, நேர்மை, அனுபவம், சேவை, நடத்தை போன்றவற்றைக் கருதியோ, இத்தகைய பண்புகளைக் கொண்ட பெண்களை ஒப்பு நோக்கியோ, பிரதிபா பட்டீல் அரசு தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்படவில்லை. ஓய்வு பெறும் பிழைப்புவாதியும் "அரச'வைக் கோமாளியுமான அப்துல் கலாமைப் போலவே கூட்டணி அரசியல் நிர்பந்தங்களின் உந்துதல் காரணமாகவே பிரதிபா பட்டீல் தெரிவு செய்யப்பட்டார்.

 

ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் "இடது' கூட்டணி, தான் வலுவாக உள்ள மேற்கு வங்கத்தவரே அரசுத் தலைவராக வரவேண்டும் என்ற பிராந்திய உணர்வோடு ஆசைப்பட்டது. முதலில், பிரபல அரசியல் தரகரான சோமநாத் சாட்டர்ஜியையும், பிறகு பிரணவ முகர்ஜியையும் முன்மொழிந்தது. இவர்களை நிராகரித்து சோனியாவின் விசுவாசிகளான அர்ஜுன் சிங், சிவராஜ் பட்டீல், சுசில்குமார் ஷிண்டே, கரண்சிங் ஆகியோரை காங்கிரசு முன்மொழிந்தது. இருதரப்பும் ஒப்புக் கொள்ளாத நிலையில், சோமநாத் சட்டர்ஜிக்கு அரசுத் துணைத் தலைவர் பதவி என்ற நிபந்தனையின் பேரில் பிரதிபா பட்டீல் ஆளும் கூட்டணியின் வேட்பாளராக்கப்பட்டார். அதுவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவத்துக்குப் போட்டியாக இன்னொரு செகாவத் என்ற முறையில் பிரதிபா பட்டீல் தேவ்சிங் செகாவத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

 

சுயேட்சை வேட்பாளர் என்ற பெயரில் பைரோன்சிங் செகாவத்தை அரசுத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்பா.ஜ.க. அணி நிறுத்தியிருந்தபோதும், பிரதிபா பட்டீலை ஏற்பதில் இந்த அணிக்கு மறுப்பு ஏதும் இல்லை; உண்மையில் நடப்பது இரு பங்காளிகளுக்கிடையிலான நட்புப் போட்டிதான். எனவேதான், ""மரபுகளை மீறி'' தேர்தலுக்கு முன்பு இரண்டு செகாவத்துகளும் சந்தித்துக் குலாவுகின்றனர். இப்போதைய அரசியல் வாழ்க்கைப்படி, மாநில ஆளுங்கட்சி விரும்பி ஏற்பவரையே மாநில ஆளுநராக நியமிக்கிறார்கள்; அந்த வகையில் இந்துமதவெறி பாசிசத்தின் இன்னொரு சோதனைச் சாலையாகக் கருதப்படும் பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானின் ஆளுநராக ஆர்.எஸ்.எஸ். கும்பலால் தெரிவு செய்யப்பட்டவர்தான் பிரதிபா பட்டீல். அந்தத் தெரிவுக்கு விசுவாசமாக நடந்து வந்தவர்தான் பிரதிபா பட்டீல். அதனால்தான் ""மகாராணா பிரதாப் சிங்'' என்ற தனது சாதியின் ராஜபுத்திர அரசரின் பிறந்தநாளில், ""மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவே இந்துப் பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்'' என்று இசுலாமியர் எதிர்ப்பு இந்துவெறிக் கருத்தை வாந்தியெடுத்துள்ளார். ""வரலாற்றறிவு அறவே இல்லாதவர்'' என்று அரசுத் தலைவராவதற்கு முன்பே வரலாற்று அறிஞர்களால் "பாராட்டும்' பெற்றுவிட்டார்.

 

கே.ஆர். நாராயணனோ, ஜெகஜீவன் ராமோ அரசுத் தலைவர்களானதும், ஜாகீர் உசேனும், பக்ருதீன் அலி அகமதுவும் அரசுத் தலைவர்களானதும் எப்படி ""தலித்'' மற்றும் இசுலாமியர் ஏற்றத்துக்கு வழிவகுக்கவில்லையோ அதுபோலவே, இந்தியப் பெண்ணினத்தின் பிரதிநிதியாக பிரதிபா பட்டீல் அரசுத் தலைவராகவில்லை. இந்திரா, ஜெயலலிதா போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள் பதவிக்கு வருவது எப்படிப் பெருமை சேர்க்காதோ அதைப் போலவே, பிரதிபா பட்டீல் அரசுத் தலைவராவதும் இருக்கிறது. பார்ப்பனபனியசத்திரிய குடும்ப வாரிசுகளான பெண்களுக்கு உயர் பதவிகள் வழங்கும் காங்கிரசுஆர்.எஸ்.எஸ். வழக்கப்படிதான் பிரதிபா பட்டீலும் அரசுத் தலைவராக்கப்படுகிறார்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது