Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

july_2007.jpg

குஜராத் மாநிலத்தைப் பற்றிக் கேட்டவுடனே, அங்கு நடைபெறும் இந்து மதவெறிப் பாசிச ஆட்சியும், அங்கு சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பீதியுடன் அன்றாடம் வாழ்வதும் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ""துக்ளக்''இல் இருந்து ""இந்தியா டுடே'' போன்ற பத்திரிக்கைகள் வரை, ""குஜராத் முதல்வர் மோடி அம்மாநிலத்தை அதிநவீனமாக்கி, சந்திரபாபு நாயுடுவை விடவும் முனைப்போடு அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினிமயமாக்கி, அந்நிய முதலீட்டைப் பெறுவதில் முன்னோடி மாநிலமாக்கி இருக்கிறார்'

' எனப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ""ஊக்கமிகு குஜராத்'' எனப் பெயர் சூட்டி, அதன் நவீனமயத்தைப் புகழ்வது இருக்கட்டும். இந்தியாவிலேயே பருத்தி விளைச்சலுக்குப் பெயர் போன குஜராத்தில் விவசாயிகளின் நிலைமை என்ன?

 

பருத்தி விவசாயம் பொய்த்துப் போனதால் கடனாளிகளாகி தற்கொலை செய்து கொண்ட மராட்டிய , ஆந்திர விவசாயிகளின் நிலைமைதான் குஜராத்திலும் இன்று நிலவுகிறது. இத்தனைக்கும் குஜராத்தில் தான் உயர்ரகப் பருத்தி அதிகமாக விளைகிறது. அம்மாநிலத்தின் மொத்த விளைநிலப்பரப்பில் 44% நிலங்களில் நீர்ப்பாசன வசதியுடன் பருத்தி விவசாயம் நடைபெறுகிறது. அம்மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் பூபேந்திர சிங், ""குஜராத் விவசாயிகளில் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை'' என்கிறார். ஆனால் அரசாங்கமே, 2006 இல் மட்டும் 148 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. முதல்வர் மோடியோ, பொதுக் கூட்டங்களில் பேசும் போது, ""எங்கள் மாநில விவசாயிகள், கஷ்டமான வாழ்க்கை நடத்தவில்லை. அவர்களில் பலரிடம் மாருதி கார்கள் கூட உள்ளன''என்கிறார். இவற்றுள் எது உண்மை?

 

ராஜ்காட் அருகிலுள்ள சரப்தார் கிராமத்தைச் சேர்ந்த பிரபா பென்னின் கணவர் ரமேஷ் விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்டார். ரமேஷûம் அவரின் சகோதரர்களும் இணைந்து 20 ஏக்கரில் சீரகமும், பருத்தியும் பயிர் செய்து வந்தõர்கள். தொடர்ந்து இரண்டாண்டுகளாய் விளைச்சல் இல்லாததால், ரமேஷ் வெறுப்புற்றுத் தூக்கு மாட்டிக் கொண்டார்.

 

ரமேஷின் தற்கொலையைப் பதிவு செய்த போலீசு, தற்கொலைக்குக் காரணமாய் விவசாயம் பொய்த்ததை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது. பின்னர் அதனைத் திருத்திய போலீசு, சாவுக்குக் காரணமாக குடும்பப் பிரச்சினையைச் சொன்னது. ""உண்மையான காரணத்தை எழுதிவிட்டால் அரசின் இழப்பீடு கிடைத்து விடும். இதையே முன்னுதாரணமாக்கிக் கொண்டு பணத்துக்காகப் பலரும் சாகத் துணிவர்'' என வக்கிரமாய்ப் பேசுகிறது போலீசு.

 

வாட்லி கிராமத்தில் நம்பிய விவசாயம் மோசம் செய்ததால் 50,000 ரூபாய்க்குக் கடனாளியாகி, கடனைத் திருப்ப முடியாத நிலையில் கடந்த ஜூலையில் பஹூபாய் எனும் 35 வயது விவசாயி உயிரை மாய்த்துக் கொண்டார். அவரின் விதவை மனைவி வஜூபென், இச்சாவைப் பற்றி போலீசில் புகார் கொடுக்கவும் முடியவில்லை. ""புகாரைப் பதிவு செய்யக்கூடப் பணம் கேட்கும் போலீசுக்குத் தர என்னிடம் பணம் இல்லை'' எனும் வஜூபென்னால் சாதி வழக்கப்படி (தர்பார் சாதிராஜ்புத்) தண்ணீர் எடுக்கக்கூட வீட்டை விட்டு வெளியே வர இயலாது அவர் விதவை என்பதால்;வயிற்றுப் பாட்டுக்கு? தனது உறவினர்கள் செய்யும் சிறு உதவிகளாலும், தனது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதாலும் ஏதோ வாழ்க்கை ஓடுகிறது.

 

அதே ஊரில் தர்பார் சாதியைச் சேர்ந்த அனக்காய் தக்கடா (வயது 32) விவசாயத்தில் நட்டமடைந்து 2007 ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் விதவையோ கூட்டுக் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டு வயிற்றுப் பாட்டைச் சமாளிக்கிறார்.

 

பெண்களின் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கடன் வாங்கிச் செலவழிக்கும் விவசாயிகள், கடனை அறுவடைக்குப் பின் அடைத்து விடலாம் என எண்ணினால், விவசாய இடுபொருளின் செலவைக் கூட விளைச்சல் ஈடுகட்டுவதில்லை. வாங்கிய கடனும், அதன் வட்டியும் வளர்ந்து அவர்களின் உயிரைப் பறித்து விடுகிறது.

 

பனியா தேவ் கிராமத்தை சேர்ந்த 80 வயது முதியவர் வல்லப்பும் அவர் மனைவி, மகன்,மருமகள் ஆகியோரும் கடந்த நவம்பரில் சோமநாதபுரம் அருகே கடலில் குதித்து ஒட்டுமொத்தமாய் உயிரை மாய்த்துக் கொண்டனர். மின்சாரக் கட்டணப் பாக்கி கட்ட வேண்டி 5 வட்டிக்கு லேவாதேவிக்காரர்களிடமிருந்து ஒண்ணரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். விவசாயம் அவர்களை ஏய்த்து விட்டது. வட்டிக்கு மேல் வட்டி வளர்ந்து 12 லட்சமாய் ஆனபிறகு, தனது நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுப் பார்த்தார், வல்லப். கடன்காரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. "எந்நேரம் கடன்காரன் வீட்டில் வந்து உட்காரப் போகிறானோ' எனும் திகிலிலேயே அவர்களால் சாப்பிடக்கூட முடியவில்லை. அந்த அவமானமே அவர்களைக் கடல் நோக்கித் தள்ளிவிட்டது.

 

மலாக்நெஸ் கிராமத்தில் 5000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத தலித் விவசாயியின் வீட்டையே எடுத்துக் கொண்டுள்ளனர், கந்துவட்டிக்காரர்கள். ""அவர்களை எதிர்த்து எதுவும் பேசமுடியாது. சிறு விவசாயிகளில் ஒருத்தர் கூட நல்லா இல்லை. வாழ்வதற்கே பெரும் போராட்டமாய் இருக்கிறது'' என்கிறார் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் கானுபாய் கன்னியா.

 

விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு ஓடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் பூச்சிக்கொல்லி, விதை ஆகியவற்றின் விலை ஏறிக் கொண்டு வருகிறது. பாசனத்துக்கு தேவைப்படும் தண்ணீரின் கட்டணத்தை ஆண்டுக்காண்டு ஏற்றி வருகின்றனர். மோடி அரசோ மின்கட்டணத்தை இருமடங்கு ஏற்றி விட்டது. ஆந்திர, மராட்டிய மாநில விவசாயிகளை ஏமாற்றிய பி.டி.பருத்தி விதையின் விலை அதிகமாகி விட்டதால், அதே விதையின் போலி குஜராத் சந்தையில் மலிவாய் விற்கப்படுகிறது. அதை வாங்கி விதைத்துக் காய்ப் புழுக்களால் நாசமாகியுள்ளனர் விவசாயிகள்.

 

பெருகிக் கொண்டிருக்கும் குஜராத் தற்கொலைகளை மூடி மறைக்கும் மோடி அரசை எதிர்த்து, அவரது பா.ஜ.க. கட்சியின் துணை அமைப்பான ""பாரதீய கிசான் சங்கம்'' போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் தலைவர் பிரபுல் சஞ்சேலியா, ""தற்கொலை மொத்தம் 148 மட்டுமே எனப் புளுகுகிறது மோடி அரசு... எங்களுக்குத் தெரிந்தவரை இது 300க்கு மேல்'' என்கிறார்.

 

"தற்கொலைக்கான உண்மைக் காரணத்தை போலீசு முதல் தகவலறிக்கையில் எழுதி விட்டால், குஜராத்தில் கொந்தளிப்பு உருவாகிவிடும் என்பதால் பொய்யை எழுதி நிரப்புகிறார்கள்'' என அவர் சாடுகிறார்.

 

குஜராத் அரசின் விவசாய விரோதக் கொள்கையை அந்த அமைப்பே, ""அரசு விவசாயிக்கு ஒன்றுமே செய்வதில்லை. அதன் நோக்கமெல்லாம் விவசாய நிலத்தைக் கைப்பற்றி, அதைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வசம் ஒப்படைப்பதுதான்'' என அம்பலப்படுத்துகிறது.

 

மோடி, தனது மாநில விவசாயிகள் கார் வைத்திருப்பதாகச் சொன்னதைக் கேள்விப்பட்டு கொதித்துப் போன மலாக்நெஸ் கிராம விவசாயிகள், தங்கள் தேய்ந்து பிய்ந்து போன செருப்புகளைப் பத்திரிக்கையாளர்களிடம் காட்டி, ""நல்ல செருப்பு வாங்கவே வக்கற்ற நிலையில் இருக்கும் நாங்கள் காருக்கு எங்கே போவது? முடிந்தால் இந்தச் செருப்புகளை மோடிக்கு அனுப்புங்கள். அவரிடமே கார் வைத்திருக்கும் விவசாயியைக் காட்டச் சொல்லுங்கள்'' என்கிறார்கள்.

 

இந்துக்களின் ராஜ்ஜியம் என மோடியின் அரசைப் பாராட்டி மகிழ்கிறார்கள் இந்து வெறியர்கள். ஆனால், மோடியின் விவசாய விரோத கொள்கைகளால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் "இந்துக்கள்'தான் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

 

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, முஸ்லிம், கிறிஸ்துவ விரோத அரசு மட்டுமல்ல. அது ஏழை "இந்து' விவசாயிகளுக்கும் எதிரான அரசுதான். ஆனால், முதலாளித்துவ பத்திரிக்கைகள் அனைத்தும், அம்மாநில அரசு போலி என்கவுண்டர் (போலி மோதல்)களை மூடி மறைப்பதைப் போலவே, கணினிமயமாக்கிய "ஹைடெக்' முதல்வர் எனும் முகமூடியை மோடிக்கு அணிவித்து, நாட்டு மக்களை ஏய்த்து வருகின்றன.


·கவி

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது