Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

put_oct-2007.jpg கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ""தனியார்மயத்தை அனுமதியோம்; அரசுத்துறையைப் பாதுகாப்போம்!'' என்று சவடால் அடித்து அடையாள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது கேரளத்தில் இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனத்தை முடக்கி, வெளிப்படையாகவே தனியார்மயத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கக் கிளம்பிவிட்டது.

 

கேரளத்தின் கொல்லம் மாவட்டம், சாவரா எனுமிடத்திலுள்ளது, கேரள தாதுப் பொருள் மற்றும் உலோக நிறுவனம் (KMML). டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் இந்த அரசுத்துறை நிறுவனம், மாநிலத்தின் இலாபமீட்டும் இரண்டாவது பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். கடற்கரை மணலை அகழ்வு செய்தல், தாதுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், டைட்டானியம் டை ஆக்சைடு இயற்கை நிறமிக் கூறுகளை உற்பத்திச் செய்தல் என அனைத்தையும் கொண்ட ஒருங்கிணைந்த இந்த நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

முந்தைய "இடதுசாரி' ஆட்சியில் சுசீலா கோபாலன் தொழிற்துறை அமைச்சராக இருந்தபோது, ரூ.782 கோடி செலவில் இந்த அரசுத்துறை நிறுவனத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு சட்டமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அக்குழுக்களும் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்குப் பரிந்துரைந்துள்ளன. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசும் தொழில்நுட்பக் கூட்டுக்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டு ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

 

இப்போது கேரளத்தில் மீண்டும் "இடதுசாரி' கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த அரசுத்துறை நிறுவனம் விரிவடைந்து வளர்ச்சி பெறும் என்று கேரள மக்கள் எதிர்பார்த்தார்கள். அதிலும், டைட்டானியம் டை ஆக்சைடுக்கு கிராக்கி அதிகரித்துள்ள நிலையில், இந்த அரசுத்துறை நிறுவனத்தை முன்னுதாரணமிக்கதாக வளர்த்தெடுப்பார்கள் என்று பெரிதும் நம்பினார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐகுகீO) இந்த அரசுத்துறை நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 10,000 டன் டைட்டானியம் உலோகக் கட்டிகளை (ஸ்பான்ஞ்)த் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததால், இடதுசாரி ஆட்சியாளர்கள் தமது கொள்கைப்படி இந்த அரசுத்துறை நிறுவனத்தைக் கட்டிக் காத்து வளர்க்க வாய்ப்புகளும் சாதகமாகவே அமைந்திருந்தது.

 

ஆனால் இந்த எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துவிட்டு, சி.பி.எம். கட்சிப் பிரமுகரும் தொழில்துறை அமைச்சருமான லெமாரம் கரீம், அந்நியதனியார் முதலாளிகள் கேரளாவின் தாதுவளத்தைச் சூறையாட தாராள அனுமதி கொடுத்துள்ளார். கடந்த மே 17ஆம் தேதியன்று ரஷ்யாவின் ""ரோசோபாரன்'' என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தனியார்மயக் கொள்ளைக்கு கால்கோள் விழா நடத்தியுள்ளார். இந்த ஒப்பந்தபடி, கேரள தாதுப்பொருள் மற்றும் உலோக நிறுவனத்தின் வளாகத்துக்குள்ளேயே, ரஷ்ய நிறுவனம் டைட்டானியம் உலோக கட்டிகளைத் தயாரிக்கும் ஆலையை ஏறத்தாழ ரூ. 1400 கோடி செலவில் நிறுவும். அரசுத் துறை நிறுவனத்திடமிருந்து இந்த ரஷ்ய நிறுவனம் பகுதியளவுக்குக் கச்சாப் பொருளைப் பெற்றுக் கொள்ளும். மீதியை கேரள கடற்கரையிலுள்ள தாது மணலை அகழ்வு செய்து அள்ளிக் கொள்ளும்.

 

இதுவும் போதாதென ஏராளமான சலுகைகளுடன் டாடா நிறுவனத்தை அழைத்து வந்து, ஆலப்புழை மாவட்டத்திலுள்ள பள்ளிபுரத்தில் øட்டானியம் ஆலையைத் தொடங்கவைத்து, கேரளத்தின் தாதுவளத்தை டாடா நிறுவனம் சூறையாட சி.பி.எம். ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கடைசியில், டாடா, ரோசோபாரன் ஆகிய இரு தனியார் அந்நிய நிறுவனங்களுக்கு கச்சாப் பொருளையும் தொழில்நுட்பத்தையும் அளிக்கும் கறவை மாடாக கேரள அரசுத்துறை நிறுவனம் மாற்றப்பட்டு விட்டது.

 

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாக "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டு அதனடிப்படையில் இந்த ரஷ்ய நிறுவனம் தேர்வு செய்யப்படவுமில்லை. கேரள அரசுத்துறை நிறுவனமே டைட்டானியம் உலோக கட்டிகளை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள போது, அதைப் புறக்கணித்துவிட்டு ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது ஏன் என்ற கேள்விக்கு சி.பி.எம். தலைவர்கள் இன்றுவரை வாய்திறக்கவில்லை.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, ரோசோபாரன் நிறுவனமானது, ரஷ்ய கிரிமினல் மாஃபியா கும்பலின் ஆயுதபேர நிறுவனமாகும். உலகின் 30% டைட்டானிய பேரத்தைக் கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் மிகப் பெரிய ஏகபோக நிறுவனமான ""அவிஸ்மா'' சார்பாக இந்த ரோசோபாரன் நிறுவனம் கேரள அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யாமல், ஏகபோக ""அவிஸ்மா'' நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டால், எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி குடைச்சல் தரும் என்பதாலேயே, சி.பி.எம். ஆட்சியாளர்கள் தந்திரமாக ரோசோபாரன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக, இந்த மோசடித்தனம் அம்பலமாகி சந்திசிரிக்கத் தொடங்கி விட்டது.

 

இத்தனைக்கும் பிறகும் ""கேரள தாதுப் பொருள் மற்றும் உலோக நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது அந்த அரசுத்துறை நிறுவனத்தைப் பாதிக்கும். மாறாக, கேரள அரசுதான் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளது. ஒருபுறம் அரசுதுறை நிறுவனமும், மறுபுறம் இரு தனியார் நிறுவனங்களும் ஒரே துறையில் இயங்கும். இதனால் அரசுத்துறை நிறுவனம் பாதிப்படையாது'' என்று நாக்கைச் சுழற்றி விளக்கமளிக்கிறார் கேரள தொழிற்துறை அமைச்சர். இவர் கேரள சி.பி.எம். கட்சியின் விஜயன் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய புள்ளி. பதவிக்கவும் அதிகாரத்துக்காகவும் விஜயன் கோஷ்டியுடன் நாய்ச்சண்டை போடும் அச்சுதானந்தன் கோஷ்டியோ, இத்தனியார்மயமாக்கலுக்கு எதிராக வாய் திறக்காமல் பம்மிப் பதுங்குகிறது.

 

இலாபத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனம் ஈடுபட்டுள்ள தொழிலில் அந்நிய தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது ஏன்? இந்த அரசுத்துறை நிறுவனத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த மறுப்பது ஏன்? தமிழகத்தின் டைட்டானியம் ஆலை குறித்து ஒரு நிலைப்பாடும், கேரளத்தில் வேறொரு நிலைப்பாடும் சி.பி.எம் கட்சி எடுப்பது ஏன்? இப்படிப் பல நூறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். அவற்றுக்கு சி.பி.எம். துரோகிகளிடமிருந்து பதில் கிடைக்கப் போவதில்லை. மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மே.வங்க வழியில் தனியார்அந்நிய முதலாளிகளின் அடியாளாகச் செயல்படக் கிளம்பிவிட்ட இப்பித்தலாட்டப் பேர்வழிகளிடமிருந்து அதை எதிர்பார்ப்பதில் நியாயமுமில்லை.


· தனபால்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது