Language Selection

பி.இரயாகரன் -2008

பாசிசப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரியை வைத்து, தமது துரோகத்தையும் நியாயப்படுத்த முனைகின்றது புலியெதிர்ப்பு "ஜனநாயகம்". புலியெதிர்ப்பையே தனது அரசியலாக செய்பவர்களில் ஒருவரான ராகவன், 'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" என்று கேட்டு, எழுதுகின்றார். இதன் மூலம் தமது துரோகத்துக்கு, நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.

பொறுக்கிகளுக்கேயுரிய வகையில் எல்லா புலியெதிர்ப்பு கோஸ்ட்டிகளும் மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களை நம்பி, அவர்களைச் சார்ந்து எந்த அரசியலும் இவர்கள் செய்வது கிடையாது. மாறாக ஆயுதம் ஏந்திய குண்டர்களையும், ரவுடிகளையும், கூலிப்படைகளையும் சார்ந்து நின்று தான், இவர்கள் தமக்கேற்ற ஒரு 'ஜனநாயகத்தைப்" பேசுகின்றனர்.

பிள்ளையான் வாரான்! ரவுடி பின்ளையான் வாரான்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!

 

மக்கள் தாமாக தெரிவு செய்த தேர்தலாம்! இதில் வென்ற பிள்னையான் கதை பிள்ளையார் கதை போன்றது. அதிகப்படியான விருப்பு வாக்கால் மக்கள் கிழக்கு 'விடிவெள்ளி"யை தெரிவு செய்துள்ளனராம்! வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான, ஏன் வடக்குக்கு எதிரான கிழக்கு மக்களின் வாக்குகளாம்! இதுதானாம் தேர்தல் சொல்லும் செய்தியாம்!

பாரிசில் 04.05.2008 'ஜனநாயகத்தின்" பெயரில் தேர்ந்தெடுத்த சில சமூகவிரோதிகள் கூடினர். இந்த கூட்டத்துக்கான அழைப்பு முதல் அவர்கள் பேசிக்கொண்ட விடையங்கள், இந்த 'ஜனநாயகத்தை" தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. யாரெல்லாம் இலங்கை - இந்திய அரசை 'ஜனநாயகத்தின்" பெயரில் நக்குகின்றனரோ, யாரெல்லாம் 'ஜனநாயகத்தின்" பெயரில் ஏகாதிபத்தியத்துக்கு வாலை ஆட்டுகின்றனரோ, அவர்கள் தான் 'ஜனநாயகத்தின்" பெயரில் கூடினர். இப்படி அப்பட்டமாக இலங்கை - இந்திய கைக்கூலிகள் எல்லாம் ஒன்றாக கூடினர்.

புலித்தேசியமோ தனது சொந்த புதைகுழியை தானே வெட்டிவைத்துக் கொண்டு, தானே வலிந்து தேர்ந்தெடுத்த ஒரு பாதையில் மடிகின்றது. இந்த புலியை உறிஞ்சிக் கொண்டு வாழ்ந்த பிழைப்புவாத உண்ணிக் கூட்டமோ, புலி பிணமாக முன்னமே மெதுவாக களன்று தப்பித்தோடுகின்றது. மறுபக்கத்திலோ புதியரக உண்ணிகள், பழைய உண்ணிகள் விட்டுச்செல்லும் வெற்றிடத்தில் மொய்க்கத் தொடங்கியுள்ளது.

மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.

தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

 

புரியாத புதிருடன் புலம்பும் பிழைப்புவாத வழிபாடு. இது பகுத்தறிவற்றது. நேபாள மாவோயிஸ்ட்டுக்களின் இன்றைய சர்வதேச நிலையை வைத்து, பாசிசப் புலிகள் தம்மை நியாயப்படுத்த முனையும் வாதங்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே இந்திய போலி கம்யூனிஸ்ட்டுக்கள், தம்மை தாம் நியாயப்படுத்த வைக்கும் வாதங்கள். அனைத்தும் யாருக்கு எதிராக என்றால், உண்மையான புரட்சியாளர்களுக்கு எதிராகத்தான். மக்களின் அடிப்படைப் பிரச்சனையை பேசாதே என்கின்ற உள்ளடக்கத்துடன், இவ்வாறு அவதூறு பொழிகின்றனர்.

மயான அமைதி. யுத்தம் நடப்பதே தெரியாத ஒரு அரசியல் சூனியம். ஆனால் இலங்கையில் என்றுமில்லாத அளவில், மிகக் கடுமையான, கோரமான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று நாள் தோறும் நடைபெறுகின்றது. ஆனால் அவை அமைதியாக, சலசலப்பின்றி அரங்கேறுகின்றது. மனித உயிhகள் அன்றாடம் பலியிடப்படுகின்றது.

அமைதி சமாதான வழிகளில், எதிரியின் சொந்தக் கோட்டைக்குள்ளேயே ஒரு புரட்சி நடந்துள்ளது. எதிரி வர்க்கமோ, தனது அதிகாரம் சொத்துடமை பண்பாட்டு மூலம் புரட்சியைச் சுற்றி வளைத்து நிற்கின்றது. ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்பு வாதிகளும், பார்ப்பனிய சாதிய இந்துத்துவமும் இந்தப் புரட்சிக்கு எதிராக, தமது சதிகளையும், எதிர்த்தாக்குதலையும் தொடங்கியுள்ளது

மார்க்சியம், புரட்சி பற்றிப் பேசிய ஒரு இனவாதக் கட்சியில் ஒரு பிளவு. இந்தப் பிளவுக்கான அரசியல் பின்னணி என்ன?

 

இந்த பிளவோ புரட்சி, மார்க்சியம், ஜனநாயக் கோரிக்கையை முன்னெடுப்பது

இதை சொல்ல முனையும் ஒரு நூலுக்கூடாக, அவர்களின் சொந்தக் கலந்துரையாடல். பெற்றோர் முதல் நூல் ஆசிரியர் வரை, வாழ்வின் வெற்றி தோல்விகளாக எதைத்தான் கருதுகின்றனர்? இதை நுணுகி உடைத்துப் பார்த்தால், பெற்றோரின் குறுகிய சுயநலத்தைத் தான் பெற்றோரியம் என்கின்றனர்.

சொல்வதும், சொல்லத் தவறுவதும் என்ற இரு அடிப்படையான சமூகப் பரிணாமங்களில், ஒன்றை முன்னிறுத்தியே கனகசபாபதியின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளது. அது நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றது. நோயின் மூலத்தை கண்டறிந்து, அதற்கு மருந்து கொடுப்பதைத் தவிர்க்கின்றது.

சுதந்திரமாக இலங்கையில் இயங்குவது என்பது, கைதுக்கும் சித்திரவதைக்கும், ஏன் மரணத்துக்கும் கூட ஒப்பானது.

 

அண்மையில் யசிகரன் கைதும், அவரின் துணைவியாரான வளர்மதியின் கைதும், இதை மறுபடியும் நிறுவியுள்ளது.

பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.

தமிழச்சியின் முன்வைக்கும் அரசியல் கோட்பாட்டை ஆராய்வதன் மூலம், அந்தக் கருத்தினை விமர்சிப்பது அவசியமாகின்றது. தமிழச்சிக்கு எதிராக நடத்திய படுபிற்போக்கான வலதுசாரிய செயற்தளம் மீது, நாம் கடந்த காலத்தில் எதிர்வினையாற்றி இருக்கின்றோம்.

கொசோவோவின் பிரகடனத்தை பொதுவாக புலிகள் தரப்பு ஆதரிப்பவர்களாகவும், பேரினவாதிகள் எதிர்ப்பவர்களாகவும் உள்ளனர். நாம் இதை எப்படி பார்ப்பது?, புரிந்து கொள்வது?

தலித்துகளின் எதிரி யார்? என்பதை அடையாளப்படுத்தாது, தலித்தியம் பற்றி பேசும் நுட்பம் தான் இவர்கள் அரசியல். கடந்தகால இயக்கங்கள் முதல் இன்றுவரை அரசியல் பேசுவோர் வரலாறு இது.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு தான் நாம் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்கு எதிராக அரசியலில் சித்துவிளையாட்டு காட்டுகின்றவர்கள் முதன்மையான உடனடியான எதிரிகள்.

ஆபாசமும்! கவர்ச்சியுமா! மனித கலாச்சாரம்? இதுவல்ல என்று பலமாக நம்பும் நாம், இப்படித் தான், இதற்குள் தான், நாம் எம்மையறிமால் இதை நியாயப்படுத்தியும் வாழ்கின்றோம். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எம்மிடம் எஞ்சியிருந்த மனித கலாச்சாரங்களை எல்லாம் நாம் இழந்து வருகின்றோம்.

இதற்குள் தான் இந்த மாநாடு, சுற்றிச்சுற்றி வலம்வருகின்றது. இப்படி இது, தலித் மக்கள் பற்றிய மாநாடு அல்ல. தலித்தின் எதிரிகள் யார் என்று பட்டியலிடவும், அதைப் பிரகடனம் செய்வதற்காகவுமல்ல, இந்த மாநாடு. மாநாட்டு ஏற்பட்டாளர்களில் பெரும்பான்மையானோர் தீவிர வலதுசாரிகள்.

மனித இழிவுகளையே அது அடிப்படையாக கொண்டது. மனிதன் மேல் கொடூரமான, இழிவான, வக்கிரமான ஒடுக்குமுறைகளைச் செய்யும் கோட்பாட்டாலானது. இந்த சமூக அமைப்பில், இப்படிப்பட்ட ஒன்று தான் பார்ப்பனியமும். இதன் பிரதிநிதிகள் தான், இந்த பார்ப்பனமணிகள்.

அரசும் சரி, புலியும் சரி, யார் அதிக மக்களைக் கொல்வது என்பதிலும் கூட போட்டிபோடுகின்றனர். மனித அறங்களை எல்லாம் கடந்து, நிர்வாணமாகவே நிற்கின்றனர். பழிக்குபழி, இரத்தத்துக்கு இரத்தம், கொலைக்கு கொலை என்று, அரச பயங்கரவாதமும் புலிப் பயங்கரவாதமும் போட்டி போடுகின்றது.

பார்ப்பனியம் என்பது அறிவால் நிலைநாட்டப்பட்டதல்ல. சூழ்ச்சியால், சதியால், வன்முறை கொண்ட அதிகாரத்தால் தான், சமூகத்தை அடிமைப்படுத்தினர். இப்படிப்பட்ட பார்ப்பனியம் தான், தமிழ்மணத்தில் பல வேடங்களில், பல பார்ப்பனிய இடுகைகளைப் போட்டனர்.

இதையெல்லாம் யார் கூறுகின்றனர். இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக உள்ளவர்கள் இதைக் கூறுகின்றனர். இதுதானாம் மக்களின் விடுதலைக்கான ஒரு பாதை என்கின்றனர். மக்களுக்கு எதிரான தமது துரோகத்தை பறைசாற்றும் இவர்கள், 'யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு" இந்த 'எலும்புத்துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியு"ம் என்கின்றனர்,

என்னை யார் என்று தெரிந்து கொண்டு, அதன் ஊடாக என் மீது தனிநபர் தாக்குதலை நடத்துகின்றனர். இதை மூடிமறைக்கவே, நான் தனிமனித தாக்குதல் நடத்துவதாக கோயபல்ஸ் பாணியல் கூறுவதே, புலியல்லாதவர்களின் அரசியல் எதிர்வினையாகின்றது.

கிரிமினல் ஊடகவியல் என்பது, நிலவும் அரசியல் சூழலையும், அதன் எதார்த்தத்தையும் மறுப்பதாகும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?

சமூகத்தை முற்றுமுழுதாக அரசியல் கிரிமினல்கள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் கிரிமினல்கள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.

இப்படி ஏதோ தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாக நினைப்பு. இதை பொறுக்கித்தின்னும் ஒரு கூட்டம் வாலாட்டிக் கொண்டு நக்க அலைகின்றது. பேரினவாதமோ கொழுப்பெடுத்து நிற்கின்றது. பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறி, நெட்டிமுறித்து திமிரெடுக்கின்றது.

தனக்கென்று ஒரு மக்கள் அரசியல் நிலையை எடுக்காத அனைவரும், நிலவும் கிரிமினல் அரசியலை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவர்கள் தான். புலிகளின் அரசியல், புலியெதிர்ப்புக் கூலிக் குழுக்களின் அரசியலும் இதே வகைப்பட்டவை தான். இவற்றைத் தாண்டி "தேசத்"திடமும் அவற்றை விட எந்த மாற்று அரசியலும் கிடையாது. இதை கொண்டு பரஸ்பரம் தூற்றுகின்ற,

இப்படி தமது அரசியல் என்னவென்று சொல்லாது வித்தை காட்டுபவர்கள் தேசம். புலி, புலியெதிர்ப்பு அரசியலில் மிதப்பவர்கள். அரசியல் ரீதியாக எதையும் தெளிவாக முன் வைக்காதவர்கள். மற்றவன் தனிநபர் தாக்குதல் செய்வதாக கூறியபடி, எந்த அரசியலுமின்றி தனிநபர் தாக்குதலை நடாத்துபவர்கள்.

மக்களின் விடுதலையா? தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு மாற்று அரசியல் வழியையா? இல்லை. மாறாக அவற்றின் கருக்களைக் கூட அழிப்பதை கடமையாக ஏற்று, அதைக் கட்டமைக்க விரும்புகின்றனர். இலங்கை அரசியலின் ஆதிக்கம் வகிக்கும் அரசியல் இதுதான். இதை படுகொலைகள் மூலம் தொடருகின்ற அரசியலின் தான்,

சமகால அரசியல் தளத்தில் என்ன செய்யவேண்டும் என்பது, சமூக அக்கறையுள்ள அனைவரின் முன்பும் தெளிவானது. மக்களின் சொந்த செயலுக்குரிய அரசியலை உயர்த்துவதும், அதையொட்டிய செயற்பாடுகளை பாதுகாப்பதும் தான், எம்முன்னுள்ள உடனடி அரசியல் பணி. இதை மறுத்து ஒரு காலில் புலியையும், மறு காலில் புலியெதிர்ப்பையும் மாட்டிக்கொண்டு, லாவணி அரசியல் செய்கின்றது தேசம்.

எங்கே ஓடுகின்றோம் என்று தெரியாது, ஓடுகின்றது தேசம். சுற்றிச் சுற்றி தமிழ் மக்களை இதற்குள், இந்த அரசியலுக்குள் வாழ் என்கின்றது தேசம். தமிழ் மக்கள், தமது சொந்த அரசியலுக்குள் இட்டுச் செல்லும் எதையும், கருவறுப்பதே தேசத்தின் மைய அரசியல்.

அது எங்கும் எதிலும் ஊடுருவி நஞ்சிடுவதன் மூலம், சமூகத்தை சொந்த செயலுக்குரிய அனைத்தையும் அழிக்கின்றது. இப்படிப்பட்ட அரசியல் சதிகளுக்கு, எந்த சொந்த முகமும் கிடையாது. தன்னைத் தான் மூடிமறைக்கப்பட்ட ஒரு நிலையில், எந்த கோட்பாட்டு உருவத்தையும் தான் கொண்டிருப்பதில்லை. கலவைக் கோட்பாட்டில்,

பரா தனக்கு சரியென்றுபட்ட கருத்தை தனது வாழ்வின் இறுதிவரை முன் வைத்தவர். போராடுவதில் தனது முதுமையை எட்டி உதைத்தவர். பொது அரசியல் சூழல் அவரை அங்குமிங்குமாக அரசியலில் ஆட வைத்தது. ஆனால் பொதுவான அரசியல் சீரழிவுக்குள் மூழ்காது, தன்னையும் தனது கருத்தையும் காப்பாற்றியவர்.

அமெரிக்கா கூறுவது போல், நிச்சயமாக அது புலிகள் அல்ல. அது அமெரிக்காவே தான். ஆனால் அமெரிக்காவோ புலிகள் என்கின்றான். புலியெதிர்ப்புக் கும்பலோ, மகிழ்ச்சியுடன் அதற்கு அரோகரா போடுகின்றது. புலியொழிப்பதையே அரசியல் வேலைத்திட்டமாக கொண்ட இந்த புலியொழிப்புக் கூத்தாடிகள், பிசாசுடன் சேர்ந்து இப்படித்தான் தமது மலட்டு அரசியலைச் செய்கின்றனர்.

இதை சொல்வதற்கு, கேட்பதற்கு உங்களுக்கு வெட்கமாகவில்லை. இப்படி மோடிக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று கூறுவதே நகைப்புக்குரியது. ஒரு பார்ப்பனிய இந்துத்துவ பாசிட்டுக்கு எதிரான போராட்டம் என்பது, அவர்கள் முற்றாக அடக்கி ஒடுக்கப்படும் வரை நடத்தப்பட வேண்டும்.

அரசியலில் இழிந்து போனவர்களும், மக்கள் விரோத அரசியலையே செய்பவர்களும், ஒன்றாக கூடி மரணங்களைக் கூட வியாபாரம் செய்கின்றனர். மரணித்தவரை விமர்சனமற்ற புனிதராக காட்டுவதன் மூலம், தமக்குத்தாமே புனித பட்டங்களைக் கட்டிக்கொள்ள முனைகின்றனர்.

சந்ததியாரின் கண்ணையே தோண்டி பின் அவரைக் கொன்றவர்கள், அவரின் உடலை சாக்கில் கட்டி கூவம் நதியில் போட்ட கொலைகாரர்கள் ஜெர்மனியில் கூடுகின்றனர். இப்படி புளாட் என்ற கொலைகார சதிக் கும்பல், தமது கொலைகளை தொடர்வதற்கு பெயர் சர்வதேச மாநாடு. இந்த மாதம் நடுப்பகுதியில்,

எப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள்

அப்படித்தான் நிலைமை காணப்படுகின்றது. அதைத்தான் மகேஸ்வரன் படுகொலை சொல்லுகின்றது. இந்த ஆண்டு இலங்கையில் என்றுமில்லாத மனித அவலங்கள் ஏற்படவுள்ளது. கடந்து வந்த தொடர்ச்சியான மனித துயரங்களை எல்லாம், இது மிஞ்சும்.