Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 செப்டம்பர் 29, 2008 அன்று நடந்த மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாக்கூர், புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரமேஷ் உபாத்யாய், இராணுவப் பணியிலிருக்கும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித் மற்றும் தீவிர இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

 ஈழப்போர் தீவிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில், ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தையும் அழித்தொழிக்கும் பயங்கரவாதப் போரை நடத்தி வருகிறது, சிங்கள பாசிச அரசு. சிங்கள அரசின் பாசிச இனவெறிக்கும், அந்த அரசு பயங்கரவாதப் போரைத் தீவிரப்படுத்தி வருவதற்கும் முக்கிய காரணம்,

கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல், தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள சாதிதீண்டாமையின் கோரத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சட்டக் கல்லூரியில் சாதிவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பதிலடி கொடுத்துள்ளதன் வாயிலாக, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

 இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் இதுவரை கண்டிராத மிகக் கொடியதும் மிகப் பெரியதுமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே பீதியில் உறைந்து போயுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தொடங்கி, மும்பை நகரின் முக்கிய மையங்கள்,

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும்,

பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்!

இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி?

கடந்த 08-11-08 அன்று சென்னை சேத்துப்பட்டு பகுதிச் சுவர்களில் விநோதமாய்ப் படர்ந்திருந்தது ஒரு விதக் காளான். "இந்து மதவெறிக் கொலைகாரன்" அத்வானிக்கு 82-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்தான் அவை!

 மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த கயர்லாஞ்சியில் ஏழை தலித் பூட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு சாதி இந்துக்களால் கொடூரமாக வேட்டையாடப்பட்ட  கதையை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. 

 

 உழைக்கும் மக்களின் போராட்ட வரலாற்றில் ம.க.இ.க.வின் பெயரைப் பலமுறை பதிவு செய்திருக்கிறது, சென்னைசேத்துப்பட்டு. கடந்த 23.10.08 அன்று மீண்டும் ஒருமுறை கம்பீரமாகப் பதிவு செய்தது. "சேத்துப்பட்டு ஸ்கூல் ரோடு டாஸ்மாக் சாராயக் கடையை இழுத்து மூடு! குடிகாரர்களின் அலம்பல்கள்  அட்டாகசங்களிலிருந்து உழைக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு கொடு!'' என்ற முழக்கங்களுடன் பகுதிவாழ் மக்களை அணிதிரட்டி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்  மறியல் போராட்டத்தை நடத்தி முதற்கட்ட வெற்றியைச் சாதித்திருக்கிறது, ம.க.இ.க.

 குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில், சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து போனதை விசாரித்து வந்த நானாவதி கமிசன், இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் எந்தப் பொய்யைப் பிரச்சாரம் செய்து வருகிறார்களோ, அந்தப் பொய்யையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.

 

 ஆப்கானை ஆக்கிரமித்துப் பயங்கரவாத அட்டூழியங்களை நாளும் அரங்கேற்றி வரும் அமெரிக்கக் காட்டுமிராண்டிகள், இப்போது பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டனர்.

 மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சித்ரா எனும் இளம்பெண் காச நோயினால் இறந்து விட்டார். அப்பெண்ணின் பிணத்தைப் பார்த்து அழுதிடக் கூட அவரைப் பெற்ற தந்தை வரவில்லை. உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் வரவில்லை.  அவர்கள் மட்டுமல்ல,  பிணத்தைப் புதைக்கக் கூட அங்கு ஆண்களே வர முடியவில்லை.

 குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக, ஏற்கெனவே தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவுவது போதாதென்று, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்குக் கட்டுப்பாட்டு முறையைக் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 அரபிக் கடலின் மேற்கே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உச்சியிலுள்ள ஏடன் வளைகுடாவின் செங்கடலில் இதமாக அலைவீசிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 25ஆம் நாளன்று ஏடன் வளைகுடா வழியாக உக்ரேனிய நாட்டின் ""எம்.வி.ஃபைனா'' என்ற ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் செங்கடலில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென அதிநவீன ஆயுதங்களுடன் விசைப்படகுகளில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கப்பலை வழிமறித்து,

"நல்ல காலம் முடிந்தது''  இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.

 "வளர்ச்சியடைந்த நாடுகள் நேர்மையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்...''


 "தற்போதைய சூழலில் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஐ.எம்.எஃப். ஆகியன சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம். வளரும் நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கியில் எடுபடும் அளவுக்கு சீரமைப்புகள் இருக்க வேண்டும்...''

 ஓசூர் சிப்காட்ஐஐ தொழிற்பேட்டையிலுள்ள "வி.பி. மெடிகேர் லிமிடெட்'' எனும் நிறுவனம், மருத்துவ இரசாயனத் தொழிற்சாலையாகும். இது, சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு உள்ளிட்டு மூட்டுவலி மருந்து தயாரிப்பு  ஆராய்ச்சிக்கூடம் கொண்ட ஆலையாகும். இவ்வாலையில் 160 பேர் ஆராய்ச்சிக்கூட ஊழியர்கள்  கண்காணிப்பாளர்களாகவும், 75 பேர் தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாகவும், 130 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

 நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.

 "இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.''
—   ஜார்ஜ்  டபிள்யூ. புஷ்.

 மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.