Language Selection

பி.இரயாகரன் -2013

இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.

அரச பாசிசப் பயங்கரவாதம் வெலிவேரியவில் நடத்திய துப்பாக்கிச் சூடும் படுகொலையும், அரசு பற்றிய மாயையை அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில்

1.இன்று இலங்கையில் இருப்பது பௌத்த சிங்கள அரசும் இராணுவமும் என்ற புனித விம்பங்களையும், அதன் அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலையும் முழுமையாக அம்பலமாக்கி இருக்கின்றது.

2.மூலதனத்தின் சுரண்டல் செயற்பாட்டை நாட்டின் அபிவிருத்தியாகவும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மக்களுக்கான அரசின் அர்ப்பணிப்பு என்ற போலியான மாயையும் கலைத்திருக்கின்றது.

3.சுற்றுச்சூழலில் நச்சுக் கழிவை கலப்பது தேசபக்த செயலா அல்லது இதற்கு எதிரான மக்களின் செயற்பாடு தேசபக்த செயற்பாடா என்ற கேள்வியை எழுப்பி, அரசை அம்பலமாக்கி இருக்கின்றது. அரசின் நிலை இதில் என்ன என்பதையும், அது யாருடன் நிற்கின்றது என்ற உண்மையையும் போட்டுடைத்து இருக்கின்றது.

4.மக்களை மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் ... எதிரியாகவும், நண்பனாகவும் சித்தரிக்கின்ற இலங்கையின் அனைத்து அரசியல் பித்தலாட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த  எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இனவாத சமூக அமைப்பில், உளவியல் அவலங்களுடன் மனிதன் நடைப்பிணமாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்னமும் இன மத மோதல்கள் அரசால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இதனால் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் இன ரீதியாக சிந்திப்பதும், செயற்படுவதும் தொடருகின்றது. சிந்தனை செயல் தொடங்கி, வாக்குப் போடுவது வரை, அரசின் இன மத வாதத்திற்கு எதிரான அரசியலாகவே இருக்கின்றது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்;. புலம்பெயர் சமூகமே, புலிகளின் கனவுலகில் வாழ்ந்தபடி முடிவுகளை இலங்கையில் வாழும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றது.

பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது.

சாதி வெறியார்களின் பயங்கரவாதம் இளவரசனைக் கொன்று இருக்கிறது. திவியா நடைப்பிணமாகப்பட்டு இருக்கின்றாள.; தன் தந்தை போல், தன் காதலன் போல், நாளை அவளும் கூடக் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை சாதியம் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிக்க முடியாதவாறும், மரணித்து போகுமாறு சாதிய வக்கிரமும், சாதியப் பயங்கரவாதமும் கோரியிருக்கின்றது.

இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணங்களும், அதன் சமூக விளைவுகளும் பாரியது. மின் பாவனையாளர்களின் அன்றாட பயன்பாட்டை மட்டுமல்ல, இலங்கையில் தேசிய உற்பத்தியை இது தகர்த்து விடுகின்றது. உள்ளுர் உற்பத்தி சார்ந்த தேசிய பொருளாதாரத்தின் மீது பொது நெருக்கட்டியை உருவாக்கி அதை அழிக்கவும், உலக பொருளாதாரம் தன் பொது நெருக்கடியில் இருந்து மீளவும் திணிக்கப்பட்டது தான் இந்த மின்கட்டண அதிகரிப்பு. உலகம் முழுக்க கடன் கொடுக்கும் வங்கிகளும், நாடுகளும், இதைத்தான் தங்கள் கொள்கையாகக் கொண்டு உலகெங்கும் செயற்படுகின்றன.

அன்றாட மின்சாரத்தின் பாவனையில் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு நேரடியானது. மறைமுக பாதிப்பு தான் மிக மிக அதிகமானது. அன்றாட உள்ளுர் உற்பத்தி சார்ந்த பொருள் பயன்பாடுகள் அனைத்தும், பெரும்பாலும் மின்சாரத்துடன் தொடர்புடையது. பொருள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கூட மின்சாரத்துடன் தொடர்புடையது. இதனால் மின்கட்டண அதிகாரிப்பு, உள்ளுர் உற்பத்திக்கான செலவை அபரிதமாக அதிகரிக்க வைத்துள்ளது.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டுவிடக் கூடாது என்பது தான் அரசின் பொதுக் கொள்கை. அரசு மக்களை வர்க்கரீதியாக மட்டும் பிரிக்கவில்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையான இனம் மதம் சார்ந்து நின்று மக்களை ஒடுக்குவதன் மூலமும் பிரிக்கின்றது. இதேபோல் எண்ணிக்கையில் சிறுபான்மையான மதத்திலும் இனத்திலும் உள்ள, உள்முரண்பாடுகளைத் தூண்டி மக்களைப் பிரிக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் அணிதிரண்டு விடாத வண்ணம் இனம், மதம், சாதி, பிரதேசம், பால், பண்பாடு ரீதியான வேறுபாடுகளை தூண்டி மக்களை  மோதவைக்கின்றனர். இப்படி இலங்கை மக்களைக் கூறுபோட்டு மோதவைக்கின்றது. இதுதான் அரசின் இன்றைய பொதுக்கொள்கை.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி 09

அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ்

ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் “எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான். ”அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் நிராகரித்தான். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து கம்யூனிச அடிப்படைகளை கழுவில் எற்றிய நிகழ்வை வரவேற்ற அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி, “உலகம் முழுவதையும் கம்யூனிச மயப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு தன்னுடைய தேசிய நலன்களை மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கும், சமாதான சூழ்நிலைமைகளில் கீழ் தன் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தருவதை மட்டுமே அது கவனிக்க வேண்டியிருக்கும்” என்றார்.

இனவாதத்தை பேரினவாதிகள் மட்டும் கொண்டிருக்கவில்லை, பேரினவாதத்துக்கு எதிரானவர்களுக்குள்ளும் இனவாதமே தொடருகின்றது. இனவாதம் எங்கும் எப்போதும் மக்களுக்கு எதிரானது. முள்ளிவாய்க்கால், யூலைப் படுகொலை .. என அனைத்தையும் இனவாதம் ஊடாக அணுகி குறுக்கி விடுகின்ற இனவழிவுவாதமே, இன்று இலங்கையின் மைய அரசியலாகத் தொடருகின்றது.

கடந்த காலத்தில் எந்த இனவாதம் மக்களை முள்ளிவாய்க்காலில் பலியிட்டதோ, அந்த இனவாதம் அப்படியே மீண்டும் ஒரு புதிய பலிக்களத்தை தயாரிக்க முனைகின்றது. இந்த இனவாதத்தால் கொல்லப்பபட்டவர்கள் மக்கள். அவர்களுக்கு இன (மத, சாதி ..) அடையாளம் போட்டுக் காட்டுவதன் மூலம், மற்றைய இன (மத, சாதி ..) மக்களை எதிரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் எதிரியுடன் சேர வைக்கின்ற இன வக்கிரங்கள் தான், குறுகிய இனவாத அரசியலின் உள்ளடக்கமாக இருக்கின்றது.

பாட்டாளி வர்க்க சக்திகள் அரசியற் செயல்தளத்தில் தீர்மானகரமாகத் தலையிடுகின்ற காலத்தில், சுயநிர்ணயம் தொடர்பான இன்றைய பொதுப்புரிதல் அபத்தமாகிவிடுகின்றது. தேசிய இனம் என்ற சொல் பலவித அர்த்தம் கொண்டதாக, முரணாக, முரண்பாட்டை தோற்றுவிப்பதாக இருப்பதால், இது பற்றிய அரசியற் தெளிவு இன்று அவசியமானது. மார்க்சிய லெனினிய மூல நூல்கள் தேசிய இனம் என்ற பதத்தை, தேசங்கள் - தேசிய இனங்கள் - தேசிய சமுகங்கள் - இனக்குழுக்களை குறிக்கவும், இதனடிப்படையில் தனிநபர்களின் தோற்றுவாயை வரையறுப்பதற்கும், தேசிய உறவுகளை விளக்கவும், சிறிய தேசிய பிரிவுகள், சிறுபான்மை தேசிய பிரிவுகள் முதல் மக்களுக்கு இடையிலான உறவுகளை குறிக்கவும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. தேசிய இனம் என்ற சொல், ஒரே அர்த்தத்தைக் கொண்டு பயன்படுத்தப்படவில்லை. பல அர்த்தங்கள் கொடுக்கக் கூடியது. ஒரே அர்த்தம் கொண்டு அணுகினால், ஒன்றையொன்று முரண்படுத்தி விடும். இனங்காட்டக் கூடிய சிறப்பான இயல்புகள் மற்றும் சிறப்பு அம்சங்களுக்குரியதே தேசிய இனம் என்ற சொல்.

உலகமயமாதல் சூழலில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் புரட்சிகர வடிவம் என்ன? இது கடந்தகால கட்சிரீதியான வடிங்களையும், போராட்டங்களையும் மறுத்துவிடவில்லை. அதேநேரம் ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரத்தை ஜனநாயகப்படுத்தி மையப்படுத்தக் கோருகின்றது. எளிமைப்படுத்திய வடிவில் இடது முன்னணியாக அனைத்துப் புரட்சிகர சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஸ்தாபன வடிவமும், அதற்கான முதன்மையான அரசியல் பாத்திரமும் அவசியமானது. தனித்தனிக் கட்சிகளின், அமைப்புகளின் செயற்பாடுகள் இதை மையப்படுத்தி, இதற்கூடாக செயற்படுவது அவசியம். முரண்பாடுகள் என்பது முரண்பாடுகளைக் களையும் நோக்கில், நடைமுறைப் போராட்டத்தை முன்நகர்த்துவதாக இருக்க வேண்டும். பல்வேறு முரண்பட்ட சக்திகளையும், முரண்பாடுகளையும் ஒன்றிணைக்கும் புள்ளி தான் ஐக்கியம். புரட்சிகர சக்திகளும், போராடும் மக்களும் பிரிந்து நிற்காத வண்ணம், பாட்டாளி வர்க்க அரசியல் செயல்தந்திரம் இருக்க வேண்டும்;. முரண்பாடுகளை களைவதற்கான புள்ளி, நடைமுறையில் ஒன்றிணைந்து போராடுவது தான். ஆகவே முரண்பாட்டுடன் இணைந்து போராடும் புள்ளியும், அதற்கான வடிவமும் அதற்கான முதன்மையான இடமும் இன்று அவசியமானது. இதற்கான ஒரு பொது அரசியல்வெளியை உருவாக்கி அரசியல்ரீதியாக முன்னெடுப்பது தான், ஐக்கியத்துக்கான அரசியல் செயல்தந்திரமாக இருக்க முடியும்.

மக்கள் சுயமாக சிந்திக்கவும், செயற்படவும் கூடாது. இதுவே தேர்தல் நடக்கவுள்ள வடக்கில், அரசு கட்டமைத்துள்ள இராணுவப் பாசிசத்தின் வெட்டுமுகமாகும். இந்த நிலையில் வடக்கு தேர்தலில் தமிழ் மக்களை தோற்கடித்தல் மூலம், இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லையென்று உலகுக்கு அரசு காட்ட முற்படுகின்றனர். வடக்கில் தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து இருப்பது என்பதன் அர்த்தம், தமிழ் மக்களைக் கண்டு அஞ்சுவதும், தேர்தல் ஜனநாயகத்தையே கண்டு அஞ்சுவதும் தான். இந்த அரசின் பரிதாபகரமான இன்றைய அரசியலாகும்.

இந்த நிலையில் தேர்தலை வெல்வது என்ற அரசின் முடிவே, தேர்தல் ஜனநாயகத்தை மறுப்பதாகிவிட்டது. தேர்தல் மோசடியில் தொடங்கி மக்களை பிளப்பது வரையான, எல்லா மக்கள் விரோத செயற்பாட்டையும் கொண்டு தமிழ் மக்களை தேர்தலிலும் தோற்கடித்தல் என்பதே அரசின் செயல்தந்திரமாகும். யுத்தத்தில் வென்றவர்கள் தேர்தலில் வெல்வது பற்றிப் பேசுகின்றனர்.

இலங்கையில் பாசிசம் அனைத்தையும் சேரிக்கின்றது. சுயாதீனமான செயல்கள் மீது வன்முறையை ஏவுகின்றது. இலங்கை அரசியலில் எங்கும் இதைக் காணமுடியும். இலங்கையில் உழைக்கும் மக்களில் தீண்டத்தகாதவராகவே மலையக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றனர். இலங்கையின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தைக் கூட மலையக மக்களுக்கு நடைமுறைப்படுத்த மறுக்கின்ற ஜனநாயக விரோத அரசு தான், இலங்கையில் “ஜனநாயகமாக” இன்னமும் தொடருகின்றது. அரசு பாசிச வடிவம் பெறுகின்ற போது, மலையக தோட்டத்தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும் வடிவமும் வன்முறை கொண்டதாகவும், திணிப்பாகவும் மாறுகின்றது. அவர்கள் தமக்காக போராட முடியாத வண்ணம், சுரண்டல் வன்முறை வடிவம் பெற்றுவருகின்றது.

புகைத்தலையும் மதுபானம் அருந்துவதையும் குறைப்பதன் மூலம், மின்கட்டண உயர்வை மக்கள் ஈடுசெய்ய முடியும் என்று மேன்மைமிகு இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். பாசிட்டுகள் இப்படித்தான் வக்கிரமாக மக்களைப் பார்த்து கூறமுடியும். குடும்ப ஆட்சியை நிறுவிக் கொண்டு, குடும்பச்சொத்தை பல பத்தாயிரம கோடியாக குவித்துக்கொண்டு, அதை பாதுகாக்க படைகளையும் அதற்கான செலவுகளையும் பல மடங்காக அதிகரிக்கும் நாட்டின் ஐனாதிபதியிடம், இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இதை மூடிமறைக்க குறைந்த மின் பாவனையாளர்களைப் பாதிக்காத அதிகரிப்பையே செய்துள்ளதாக கூறுவதன் மூலம், மக்களை முட்டாளாக்க முனைகின்றனர். மக்கள் மேலான புதிய வாழ்க்கைச் சுமையை திரித்தும், ஏய்த்தும் அதை மூடிமறைக்க முனைகின்றனர்.

இன்று இலங்கையில் சர்வதேசக் கடன் மூலதனமும், போர்க்குற்ற மூலதனமும், ஓரே திசையில் ஒரு புள்ளியில் பயணிக்கின்றது. இந்த வகையில் தனிவுடைமையிலான இன்றைய இலங்கையில் சொத்துடமையை, மீளப் பங்கிடக் கோருகின்றது. இது வைத்திருக்கும் மையக் கோசம் தான் "அபிவிருத்தி". இன்று இலங்கை அரசியலின் மையமானதும், பிரதானதுமான கோசமாக "அபிவிருத்தி" அரசியல் மாறியிருக்கின்றது. தங்கள் நிதி மூலதனத்தையும் முதலிட முனைகின்ற திசையில் தான், யுத்தத்திற்கு பிந்திய சூழலாகும்;. இது மக்களின் சிறுவுடமைக்கு எதிரான, நீதி மூலதனத்தின் யுத்தமாகவுள்ளது.

யுத்தம் நடந்த பிரதேசத்தில் நடந்தேறும் மீள்கட்டுமானம் என்பது, வெறும் இனவாதம் மதவாதம் சார்ந்த கூறாக மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக நிதி மூலதனத்தின் நலன்களே மையப்படுத்தப்பட்டு, அவை முதன்மைப்படுத்தப்பட்டு முன்தள்ளப்படுகின்றது. இதற்கு இனவாதம், மதவாதம் மூலம் கவசமிடப்படுகின்றது. யுத்தம் நடக்காத பிரதேசத்தில் கூட "அபிவிருத்தி" எனும் பெயரில் நடந்தேறுகின்ற அதே நேரம், முஸ்லிம் மதவாதம் பயன்படுத்தப்படுகின்றது.

பொதுபல சேனா வெறுமனே இனவாத மதவாத அமைப்பல்ல. இப்படி அது தன்னைக் காட்டிக் கொள்வதும், அதை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதும் குறுகிய அரசியலாகும். அதாவது பொதுபல சேனா அமைப்பின் வெளிப்படையான நடவடிக்கைகளைக் கொண்டு அணுகும் போக்கு, இதை தோற்றுவித்தவர்களின் நோக்குக்கு சமாந்தரமானது. சிறுபான்மை இனத்தையும் மதத்தையும் பெரும்பான்மையின் எதிரியாகக்காட்டி ஒடுக்குவதன் மூலம் பிரித்தாளுவது மட்டும் இதன் அரசியல் நோக்கமல்ல. யுத்தத்தின் பின்னான பொருளாதார நலன்கள் தான், இதன் குறிப்பான இதன் குவிவான செயற்பாட்டுக்கு அடிப்படையாக இருக்கின்றது. இந்த வகையில் போர்க்குற்றவாளிகளின் கையில் குவிந்துள்ள சொத்துடமை சார்ந்த பொருளாதார நலன்கள், பொதுபல சேனாவின் அரசியல் அடிப்படையாக இருக்கின்றது.

இந்த வகையில் இறுதி யுத்தமும், யுத்தத்திற்கு பிந்தைய பாரிய படுகொலை மூலமும் புதிய சொத்துடமை கொண்ட ஒரு ஆளும் வர்க்கம்; உருவாகி இருக்கின்றது. இந்த வர்க்கம் தன்னுடைய புதிய சொத்துடமையைக் கொண்டு சுரண்டவே பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்குகின்றது. இந்த வகையில் புதிய ஆளும் வர்க்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது.

யுத்தத்தின் பின்னான சூழல், யுத்தம் மூலம் கைப்பற்றிய மூலதனத்தை முதலீடுவதற்காக உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றுவதற்கான போராட்டமாகும்.  உள்நாட்டுச் சந்தையை மீள மறுபங்கீடு செய்யக் கோருகின்றது. இதுவே ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடாக, இன மத சிறுபான்மையியினது மூலதனத்துக்கு எதிரானதாக மாறிவருகின்றது. அரசு முன்தள்ளும் அபிவிருத்தி அரசியலின் உள்ளடக்கம் இதுதான். இந்த வகையில் யுத்த மூலதனமும், சர்வதேச நிதி மூலதனமும் இணைந்து பயணிக்கின்றது. அது ஏற்கனவே இருந்த சொத்துடமை ஒழுங்கையும், சுரண்டல் வடிவத்தையும், நிலவும் ஜனநாயக வடிவம் மூலம் பூர்த்தி செய்யமுடியாது. இதனால் பாசிசம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இந்தப் பாசிசம் வெறுமனே ஜனநாயக மேற்கட்டமைப்பை மட்டுமல்ல, பொருளாதாரக் கட்டமைப்பை தனக்கு ஏற்ப மறுபங்கீடு செய்து வருகின்றது.

இந்த அடிப்படையில் அரச பாசிசத்தை சமூகமயமாக்க முனைகின்றனர். அரசும், அதற்கு யுத்த மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தலைமைதாங்கும் குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து பாதுகாக்கவும், மூலதனத்தை விரிவாக்கவும் பாசிசத்தை தவிர வேறு வடிவம் அதனிடம் கிடையாது. புதிய யுத்த மூலதனத்தால் ஆளும் வர்க்கத்துக்குள்ளான முரண்பாடுகளும், வர்க்கரீதியாக சுரண்டும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடும், இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. இதில் இருந்து தப்பிப்பிழைக்க பாசிசத்தை தேர்தெடுக்கும் அதேநேரம், இதை நிலவும் ஜனநாயக வடிவங்கள் ஊடாக ஜனநாயகப் போர்வையில் திணித்துவிட முனைகின்றது. இராணுவ ஆட்சியைக் கூட இயல்பான ஜனநாயகக் கட்டமைப்பாக்க முனைகின்றது.

வர்க்க நடைமுறையற்ற சூழலில் "சுயநிர்ணயக்" கோரிக்கை என்பது தேசியவாதத்துக்கு உதவுவதே. மார்க்சியம் பேசிக்கொண்டு, வர்க்க நடைமுறையைக் கைக்கொள்ளாதவர்களின் அரசியல் இதைத்தான் செய்கின்றது. இதே அடிப்படையில் தான் மார்க்சியவாதிகள் அல்லாதவர்களும் "சுயநிர்ணயத்தைக்" கோருகின்றனர். மூடிமறைத்த தேசியவாத பிரிவினை அரசியலும், மார்க்சியத்துக்கு எதிரான அரசியலும், மூடிமறைத்த "சுயநிர்ணய" கோசத்துடன் அரங்கில் வருகின்றது. இதன் மூலம், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான நடைமுறைப் போராட்டத்தை எதிர்க்கின்றனர். மார்க்சியவாதிகள் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று, மார்க்சியவாதிகள் அல்லாதவர்கள் முன்வைக்கும் கோரிக்கை படுபிற்போக்கானது. மார்க்சியத்தை வர்க்க நடைமுறையுடன் ஏற்றுக்கொண்டவர்கள், சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ள கோருவதில் இருந்து, இது முற்றிலும் வேறுபட்டது, நேரெதிரானது.

இலங்கையில் சுயநிர்ணயம் பற்றிய அரசியற் புரிதல் என்பது எதிர்மறையானது. பாட்டாளி வர்க்க விரோதத்தன்மை கொண்ட எதிர்மறையான முதலாளித்துவ அரசியல் கூறாகத்தான் இன்று விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. சுயநிர்ணயத்தைப் பிரிவினையாகத்தான் ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்கள் சார்ந்து விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த வகையிலேயே தான் தான் சுயநிர்ணயத்தைக் கோருவதும், நிராகரிப்பதும் கூட பொதுவாகக் காணப்படுகின்றது.

கடந்தகாலத்தில் பாட்டாளி வர்க்கம் இன முரண்பாட்டின் மீது வர்க்கக் கண்ணோட்டத்தில் செயற்படாமை தான், இதற்கான முக்கிய காரணம். தேசிய இன முரண்பாட்டை பூர்சுவா வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலாகக் குறுக்கி, அதில் தான் ஆற்றவேண்டிய வர்க்க கடமையை மறுதளித்தது. ஒரு முரண்பாட்டில் உள்ள முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையையும், அதற்காக போராட வேண்டிய வர்க்கக் கடமையையும் நிராகரித்து வந்தது கடந்தகால வரலாறு. எமக்கு வெளியில் இன்றுவரை சுயநிர்ணயத்தை மார்க்சிய உள்ளடக்கத்தில் முழுமையாக கொள்கையளவில் கூட எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சரியான உள்ளடக்கத்துக்கு அப்பால் "சுயநிர்ணயத்தை" இடது சார்ந்து ஏற்றுக் கொள்பவர்களை எடுத்தால்

காலங்காலமாக அரசியல் பிழைப்புவாதிகளை நம்பி வாக்குப் போட்டதன் விளைவுகள் தான், இலங்கையின் தொடரும் இன்றைய நிகழ்வுகள். இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் மக்கள் இல்லை. இதற்கு மாற்றும் இல்லை. தமிழ் மக்கள் விட்ட அதே அரசியல் தவறு. இன்று இனரீதியாக பிரிந்து கிடக்கும் மக்களின் நிலை இதுதான்.

முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயல்களை முஸ்லீம் மக்கள் இன்று அனுபவிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இலங்கையில் பேரினவாதத்துக்கு செங்கம்பளம் விரித்தவர்களில், முஸ்லீம் அரசியல்வாதிகளின் பங்கு தனித்துவமானது. பேரினவாதத்தைக் காட்டி முஸ்லீம் மக்களை இனரீதியாக மதரீதியாக பிரித்து வாக்குப் பெற்றவர்கள், இனவாதிகளுடன் சேர்ந்து அரசியல் நடத்துவது எப்படி சாத்தியமானது? இதன் மூலம் தங்கள் தனிப்பட்ட சொத்துகளை பெருக்குவதையே அரசியல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதும், செயல்படுவதும் மட்டும் தான் உண்மை. இதை வாக்குப்போடுவதன் மூலம் மாற்றிவிட முடியாது.

இலங்கையில் பேரினவாதம் புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இதற்கு தமிழகத்தில் நடந்தேறும் இனவாத போராட்டங்கள் மேலும் உதவுகின்றது. தமிழகத்தில் நடந்தேறும் வன்முறைகள் மட்டுமல்ல, தமிழக மாணவர்களின் இனவாதமும் இதைத் தான் இன்று செய்கின்றது. இந்தவகையில் தமிழக அரசும், அதே அரசியல் அடிப்படையிலான மாணவர்களின் இனவாதப் போராட்டங்கள் வரை, மீண்டும் இலங்கையில் இனவழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.

இன்று இவ்விரண்டு இனவாதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி செயற்படுகின்றது. இலங்கை வாழ் மக்களுக்கும், அங்கு ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானதாக இந்த இனவாதம் செயற்படுகின்றது. தமிழகத்தில் மீண்டும் கட்டமைக்கும் இனவாதத்தை, இலங்கை வாழ் மக்களின் போராட்டமாக காட்டுகின்றனர். இதன் மூலம் மக்களை அவர்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து அகற்றுகின்ற அரசியல் செயற்பாடு இந்தியாவில் நடந்தேறுகின்றது. 1983 இல் நடந்த அதே இனவாத அரசியல் செயற்பாடுகள். அன்று இந்த இனவாதப் போராட்டங்கள் மக்கள் போராட்டத்தை அழிக்கவும், ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. இன்று அதே அரசியல் பின்னணியில், மீண்டும் வேறு வடிவில் இன்று அரங்கேறுகின்றது.

பெரும்பான்மை சார்ந்த பௌத்தமத அடிப்படைவாதத்தையும், இன அடிப்படைவாதத்தையும், நாம் வெறும் மதம் இனம் சார்ந்த ஒன்றாகக் குறுக்கி புரிந்து கொள்ளக்கூடாது. இது ஏன், எந்தக் காரணங்களில் இருந்து தோற்றம் பெறுகின்றது என்ற தெளிவும் புரிதலும் இன்றி, இதை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாது. இதை வெறும் மதம் இன சார்ந்த ஒன்றாகக் குறுக்கி புரிந்து கொள்வது, சிறுபான்மை சார்ந்த அதே அடிப்படைவாதம் தான்.

ஜெர்மனியில் நாசிகளையும், அது முன்தள்ளிய பாசிசத்தையும், வெறும் கிட்லரின் தனிப்பட்ட செயலாக, சர்வாதிகாரத்தின் ஆசையின் வெளிப்பாடாக புரிந்து கொள்கின்ற எல்லைக்குள் தான், மனித அறிவை முடமாக்கும் வண்ணம் கல்வி முதல் ஊடகங்கள் வரை செயலாற்றுகின்றன. இந்த அடிப்படையில் தான் இலங்கையில் மத மற்றும் இன அடிப்படைவாதங்களின் பின்னுள்ள, அதன் அரசியலை மூடிமறைக்கின்றனர். அதை மகிந்த மற்றும் கோத்தபாயவின் தனிப்பட்ட செயலாகக் குறுக்கி விடுகின்றனர். இதன் மூலம் இதன் பின்னுள்ள அரசியலை நீக்கி விடுகின்றனர்.

வர்க்கப் போராட்டத்தைக் கோரும் மார்க்சியவாதிகள், சுயநிர்ணயம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டம் என்ன என்பதை விளக்கி, அதை அரசியல்ரீதியாக முதலில் முன்னிறுத்த வேண்டும். இதன்பின் இன்றைய சமூக அமைப்;பில் சுயநிர்ணயம் இலங்கைக்கும், உலகுக்கும் பொருந்தாது காலாவதியாகிவிட்டது என்றால், அதை அரசியல்ரீதியாக நிறுவி நிராகரிக்க வேண்டும். இதன் மூலம் தான் "சுயநிர்ணயம்" பற்றிய இன்றைய விவாதங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் சரியாக அணுக முடியும்.

இலங்கையில் இனமுரண்பாட்டை கடந்து செல்லும் வர்க்கப் போரட்டத்துக்கான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயல்தந்திரம் என்ன? செயல்தந்திரமாக சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இலங்கை முதலாளித்துவ பூர்சுவா ஜனநாயகப் புரட்சியே இன்னமும் அரசியல் கூறாக இருக்கவேண்டும். முதலாளித்துவ பூர்சுவா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை இலங்கை கடந்து விட்டதா இல்லையா என்பது தான், சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது. அதேநேரம் இலங்கையில் உள்ள நவகாலனிய தரகுமுதலாளித்துவமும், தேசங்கடந்த பன்நாட்டு முதலாளித்துவமும், இலங்கையில் பூர்சுவா ஜனநாயக புரட்சியை நிறைவுசெய்து அதை இல்லாதாக்கிவிட்டதா என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை சுயநிர்ணயம் மூலமான வர்க்கப் போராட்டம் மூலம் கடக்க முடியுமா? அல்லது கடக்க முடியாதா? இன்று இதுதான் பாட்டாளி வர்க்க சக்திகளின் முன்னுள்ள கேள்வி. எந்த அரசியல் வழியில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை, நாம் நிறுவியாக வேண்டும். இந்த வகையில்

1.மார்க்சியம் முன்வைக்கும் முரணற்ற ஜனநாயகமே, சுயநிர்ணய உரிமை. இதை அரசியல் ரீதியாக முரணற்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயம் முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானது என்பதையும், அது எந்த அடிப்படையில் அப்படி இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்வதன் மூலமே, வர்க்கப் போராட்டத்தை நடத்த சுயநிர்ணயத்தைக் கையாள முடியும். இதை விளக்கியாக வேண்டும்.

2.தேசிய முதலாளித்துவ சமூகக்கட்டமைப்பை இலங்கை கடந்துவிடவில்லை என்பதை நிறுவியாக வேண்டும். இதை நிறுவுவதன் மூலம், சுயநிர்ணயம் மூலம் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை தெளிவுபடுத்த முடியும்.

அமெரிக்காவையும், அதன் தலைமையிலான ஐ.நாவையும் மீண்டும் நம்ப வைப்பதன் மூலம், மக்களின் கழுத்தை மீண்டும் ஒருமுறை அறுக்க முனைகின்றனர். மகிந்த நடத்திய இனவழிப்பு வெறியாட்டம் போல், ஐ.நா சார்ந்த நம்பிக்கை என்பது இனவழிப்புக்கு உடந்தையாக இருக்கும் அரசியல் செயலாகும். அன்று தமிழ் மக்களை இலங்கை அரசு பலியெடுக்க, தேசியத்தின் பெயரில் பலி கொடுத்த அதே அரசியல். அதே நபர்கள், அதே அரசியல் வேஷங்களுடன், அன்று போல் இன்று, மீண்டும் அமெரிக்கா ஐ.நா என்று மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்களை தமிழ் மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழிப்பதற்கான தீர்மானமும், அதற்கான போராட்டமும் தான் அமெரிக்கா தலைமையில் இன்று நடக்கின்றது. 1983 களில் தமிழ் மக்களுக்கான போராட்டத்தின் பெயரில் இந்தியா வழங்கிய அரசியல் வழிகாட்டல்கள், இராணுவப் பயிற்சிகள், ஆயுதங்கள் முதல் பணமும் தான் தமிழ் மக்களின் போராட்டத்தையே அழித்தது. இந்தியாவின் இந்தச் செயலைச் சுற்றிய ஆதரவு தான், சொந்த மக்களின் போராட்டத்தை இல்லாமலாக்கியது. இறுதியில் இனத்தையே அழித்தது. இங்கு மகிந்த அரசு ஒரு கருவி. மக்களை அவர்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து அன்னியமாக்குகின்ற, மக்கள் தமக்காக தாம் போராட வேண்டும் என்ற மனித உணர்வைச் சிதைக்கின்ற அரசியலுக்கு, 1983 இல் இந்தியா தலைமை தாங்கியது. அதேபோல் 2013 இல் அமெரிக்கா தலைமை தாங்குகின்றது. ஒரே வேலையைத் தான், இந்தியாவின் ஆசியுடன் இன்று அமெரிக்கா செய்கின்றது.

இது ருசியாவுக்குரியதும், லெனினிய காலத்துக்குரியதுமா சுயநிர்ணயம்? சுயநிர்ணயத்தை மறுப்பவர்கள் மத்தியில், இப்படியான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வாதம் சரியானதா?

லெனின் தேசிய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அடிப்படையை "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" என்ற நூலில் எடுத்துக் காட்டுகின்றார். "உலகமுழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றிகொள்ளும் காலகட்டம் தேசீய இயக்கத்துடன் இணைந்துள்ளது" என்றார். மேலும் அவர் உலகம் முழுவதும், அதாவது "பூர்ஷ்வா ஐனநாயகம்" உருவாகாத நாடுகளுக்கு பொருந்தும் என்று கூறினார். இந்த வகையில் "எல்லாத் தேசீய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது - ஏனென்றால் பூர்ஷ்வா ஐனநாயகச் சீரமைப்பு இன்னும் முற்றப்பெறவில்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகமானது முரண்பாடற்ற முறையில், தீவிரமாக, மனப்பூர்வமாக தேசீய இனங்களுக்கு சம உரிமைக்காக போராடுகின்றது." என்றார். இந்த வகையில் "ருசியாவில் தேசீய இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல." என்றார். இந்த அடிப்படையில் இன்று நாம் ஆராய வேண்டும். லெனினிய காலத்துக்குரியது அல்ல சுயநிர்ணயம். முதலாளித்துவ (பூர்ஷ்சுவா) ஐனநாயகம் எங்கெல்லாம் இன்னும் முற்றுப்பெறவில்லையோ, அங்கெல்லாம் சுயநிர்ணயம் பொருந்தும். சுயநிர்ணயம் காலவதியாவதற்கு

நிலவும் இன முரண்பாட்டைப் பயன்படுத்தாது, அதற்கான தீர்வை முன்வைக்கும் சுயநிர்ணயத்தையே ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் என்ற வாதம், மார்க்சிய வர்க்க அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து விலகிச் செல்வதாகும். இதன் அரசியல் அர்த்தம் இனமுரண்பாட்டை நியாயப்படுத்தும் கோட்பாடாக சுயநிர்ணயத்தைக் காட்டி, இறுதியில் அதை நிராகரித்து விடுவதாகும்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் எழும் தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கை அல்ல, மாறாக முதலாளித்துவக் கோரிக்கையாகும். அதேநேரம் தேசியம் ஜனநாயகக் கோரிக்கையே ஒழிய, ஏகாதிபத்தியக் (நலன் சார்ந்த) கோரிக்கை அல்ல. இந்த வகையில் இது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அரசியல் கோரிக்கை. இதை நாம் அரசியல்ரீதியாக, முரணற்ற வகையில் புரிந்து கொள்ளவேண்டும். இதில் பாட்டாளி வர்க்கத்துக்கு எந்தவிதமான அரசியல்ரீதியான குழப்பம் இருக்கக் கூடாது.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதில் தடையாக, தொடர்ந்து இனமுரண்பாடும் காணப்படுகின்றது. இனங்களுக்கு இடையில் இனமுரண்பாட்டை தூண்டுவதன் மூலம் தான், ஆளும் வர்க்கங்கள் மக்களை பிரித்தாளுகின்றது. இந்த வகையில் இனங்களுக்கு இடையில் இனவொற்றுமையை ஏற்படுத்துவதை, தன் சொந்த வர்க்கநலனில் இருந்து ஆளும் வர்க்கங்கள் செய்யப் போவதில்லை. இனவொற்றுமையை தடுத்து நிறுத்தும். இது தான் இன்றைய அரசியல் எதார்த்தம்.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த இன ஐக்கியம் அவசியமானது. இந்த ஐக்கியம் என்பது கூட, முன்கூட்டியே ஐக்கியமும் அதன் பின் வர்க்கப்போராட்டமும் என்பதல்ல. மாறாக இரண்டும் பிரிக்க முடியாததும், ஒருங்கிணைந்ததுமான அரசியல் கூறாகும். ஒருங்கிணைந்தபடி முன்னெடுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடு தான் சுயநிர்ணயம். இதற்கு வேறு அரசியல் விளக்கம் கிடையாது. பாட்டாளி வர்க்கமல்லாத (ஆளும்) வர்க்கங்கள் இந்தக் கோட்பாடு தொடர்பாக கொண்டுள்ள எந்த முரணான நிலைப்பாட்டுக்கும், அதன் திரிபுக்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயத்தை சரியாக முன்னிறுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறன்றி வேறுவழியில் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. இனவொடுக்குமுறைக்கு எதிரான இன ஐக்கியம் என்பது, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போராட்டம். சுயநிர்ணயம் அதற்கு வழிகாட்டுகின்றது.

இன்று எதிர்க்கருத்துகளும், கோட்பாடுகளும், முரண்பாடுகளை மறுக்கும் தூய்மைவாதம் சார்ந்த வரட்டுவாதமாக முன்தள்ளப்படுகின்றது. இதேபோல் அவதூறுகள் என்பது இட்டுக்கட்டப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒழுக்கம் சார்ந்த தூய்மைவாதமாகவும் திணிக்கப்படுகின்றது. இன்று பலமுனையில் பரவலாக இவை இரண்டும் சோடி சேர்ந்து, மக்கள் போராட்டங்களை மறுக்கும் பொது அரசியலாக பயணிக்க முனைகின்றது.

தமிழ் - சிங்கள - முஸ்லிம் - மலையக மக்கள் இணைந்து போராடுவது என்பது சாத்தியமற்றதா!? சாத்தியமற்றதாக்க இவர்கள் முனைகின்றனர். இனவொற்றுமையை கீழ் இருந்து கட்டியமைப்பதற்கான செயல்தந்திரம் என்பது, இனவொடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவது மூலம் தான் சாத்தியம். வெறும் கோட்பாடுகள், தத்துவங்கள் மூலம் இது சாத்தியமில்லை. கீழ் இருந்து கட்டியமைக்கக் கூடிய மக்கள் போராட்டத்தை, தங்கள் கோட்பாட்டு முரண்பாடுகள் கொண்டு எதிர்ப்பதும், எதிராக முன்னிறுத்துவதும் மக்கள்விரோத அரசியலாகும். கோட்பாடுகள், தத்துவங்கள் மக்கள் மீதான ஒடுக்குமுறையிலான போராட்டத்தை எதிர்ப்பதற்காக அல்ல, அதை வழிநடத்துவற்காகத் தான். அதேநேரம் கோட்பாடுகள் தத்துவங்கள் உருவாக்கும் செயல்தந்திர முரண்பாடுகள், போராட்டங்களை எதிர்ப்பதற்கு பதில் குறைந்தபட்ச ஐக்கியத்தை செயல்பூர்வமான மக்கள் போராட்டங்கள் மேல் கோருகின்றது. இதில் ஊன்றி நின்று கொண்டுதான், கோட்பாடு சார்ந்து முரண்பாடுகளை நடைமுறை மூலம் தீர்க்க முனைய வேண்டும். இதுதான் மக்கள் அரசியல். இன்று இலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராக, நடைமுறையில் போராடுவது தான் முதன்மையான மையமான அரசியல்.

கட்சித் திட்டத்தில் இருக்ககூடிய சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி, இனவொடுக்குமுறைக்கு எதிரான வெகுஞன அமைப்பின் குறைந்தபட்சத் திட்டத்தை மறுப்பது மக்கள் நலன் சார்ந்த அரசியலல்ல. ஒரு கட்சியிடம் சுயநிர்ணயத்தை முன்வைக்குமாறு கோருவதற்கு உள்ள உரிமை, அக்கட்சி இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை மறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ இருக்கக் கூடாது. இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராடியபடி, சுயநிர்ணயத்தை கட்சித் திட்டத்தில் முன்வைக்குமாறு கோரவேண்டும். இதுதான் மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனையிலான வழிமுறை.

இன்று இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான சமவுரிமைக்கான குறைந்தபட்சத் திட்டத்தை மறுக்க, சுயநிர்ணயத்தை முன்னிறுத்துவது சரியானதா!? சுயநிர்ணயத்தை முன்வைக்காதவர்கள், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மூலம் "ஏமாற்றி" விடுவார்கள் என்ற தர்க்கம் சரியானதா? சரி சுயநிர்ணயத்தை முன்வைத்தால், இந்த "ஏமாற்றம்" எப்படி இல்லாது போகும்!?

ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சிகள், இந்திய ஆதரவு போன்றவை மக்கள் சார்ந்த சில கூறுகளைச் சார்ந்திருப்பதால் அவை மக்கள் சார்ந்ததாகிவிடுமா? இவை இலங்கை அரசுக்கு முரண்பாடாக இருப்பதால், இது முழுமையான உண்மையாகிவிடுமா?

மக்களைப் பார்வையாளராக்கிய கடந்தகால அரசியல், அன்னிய சக்திகளால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வழிகாட்டிய எமது கடந்தகாலப் போக்கு, சமூகத்தை மந்தையாக்கி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சி, இந்திய ஆதரவு மீது குருட்டுத்தனமாக அவற்றை நம்பிப் பின்பற்றுகின்ற, அதை அரசியல் வழிகாட்டுகின்ற பின்புலத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உண்மைகள் புதைக்கப்படுகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. தங்கள் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப இவைகள் உண்மையைப் புதைப்பதில் இருந்து தான் தொடங்குகின்றது. அது என்ன என்பதையும், எதற்காக இவை என்பதையும், தெரிந்து கொள்வதன் மூலம், இந்தச் சதியை, சூழ்ச்சியை நாம் இனம் காணமுடியும்.

சுயநிர்ணயம் என்றால் என்ன? சுயநிர்ணயம் ஏன் முன்வைக்கப்படுகின்றது? சுயநிர்ணய கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவு என்ன? இது பற்றிய அரசியல் தெளிவின்மை, முடிவுகளை தவறாக எடுக்க வைக்கின்றது. இன்று இனவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் அரசியல் வடிவம் பெற்று அரசியல்ரீதியாக சமவுரிமை இயக்கம் மேலெழுந்து வரும் போது அரசியல் தவறுகள் ஆழமாக பிரதிபலிக்கின்றது. அதேநேரம் ஒவ்வொரு வர்க்கமும், சுயநிர்ணயத்தை தத்தம் வர்க்கநலனில் இருந்து புரிந்துகொள்வதும் முரண்படுவதும் கூட அரசியல் போக்காக மாறிவருகின்றது. சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசியவாதம் கூட தன்னை மூடிமறைத்துக் கொண்டு முன்னிறுத்த முனைகின்றது.

இனவாதிகள் தங்கள் "காயடிப்பு" அரசியலை பாதுகாக்கும் போராட்டத்தை, சமவுரிமை இயக்கத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கின்றனர். சமவுரிமைக்கான பிரச்சாரமும், போராட்டமும் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக, வலதுசாரிய புலி ஆதரவு தளத்தில் இருந்தும் எதிர்வினைகள் வரத்தொடங்கி இருக்கின்றது. இந்த வகையில் "சிங்கள தேசத்தின் பேரினவாத ஆயுதத்துடன் புலம்பெயர் களத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி!" என்று தலைப்பிட்ட கட்டுரை, தொடர்ச்சியாக பல வலதுசாரிய தமிழ்தேசிய இணையங்களில் வெளியாகியுள்ளது. இதில் "சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு"வதாக கூறியிருக்கின்றது. சமவுரிமை இயக்கம் "பேரினவாத ஆயுதத்துடன்" செயற்படுவதாகக் கூறி எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். முதலில் சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கிய இடதுசாரிய தமிழ்தேசியவாதிகளின் எதிர்வினை "சுயநிர்ணயத்தை" மையப்படுத்தியதாக தொடங்கிய போதும், இறுதியில் அது இந்த அமைப்பில் இருக்கக்கூடிய தனிநபர்கள் மீது இட்டுக்கட்டிய அவதூறாக பரிணமித்து இருக்கின்றது. இதே பாணியில் வலதுசாரியம் சற்று வித்தியாசமாக "இந்தப் பாட்டாளி மக்களது கட்சி? புலம்பெயர் நாடுகள் எங்கும் கூட்டங்கள் போடவும், கொடி பிடிக்கவும், கும்பல் சேர்க்கவும், பயணங்கள் செய்யவும், அலுவலகம் அமைக்கவும் குறைவின்றிக் கிடைக்கும் நிதிக்கான நிதி மூலங்களும் ஆச்சரியமானதே" என்று இட்டுகட்டிய அவதூறுகளை செய்ய முனைந்திருக்கின்றது. பேரினவாதத்துக்கு எதிராக போராட, பேரினவாதமே பணம் தருவதாக மறைமுகமாக கூற முற்படுகின்றது. கடந்தகாலத்தில் மற்றவன் உழைப்பை சுரண்டி போராட்டம் நடத்திய கூட்டம், சொந்த உழைப்பு சார்ந்து போராடுவதை காணமுடியாது. அது அனைத்தையும் தன்னைப்போலவும், தன் சொந்த நடத்தையைப் போலவும் காணவும் காட்டவும் முற்படுகின்றது

மேற்கு ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சியுடன் முரண்படும் இலங்கைக்கு எதிரான, ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் அரசியல் எடுபிடிகளாக தமிழ்த்தேசியமும், தமிழ் ஊடகங்களும் இயங்குகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக இன்று பல முனையில் முன்னெடுக்கும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள், தமிழ் மக்களின் மீட்புக்கான ஒன்றாக காட்டுகின்ற அரசியலுக்குள், வலதுசாரி தேசியம் முதல் இடதுசாரிய தேசியம் வரை புரளுகின்றனர். இதைத் தாண்டி மக்களைச் சார்ந்த எதையும் முன்வைப்பதில்லை. மக்களைச் சார்ந்து போராடும் அரசியலை எதிர்க்கும் இவர்கள், மாற்றாக மக்கள் அரசியல் எதையும் நடைமுறையுடன் முன்வைப்பதுமில்லை. இந்த அரசியல் பின்புலத்தில் தான், கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனின் படங்களை புதிதாக வெளியிட்டு செய்திகளையும், போர்க்குற்றங்கள் பற்றியும் பேசுகின்றனர்.

இனவாதம் மூலம் மக்களைப் பிரித்தாண்ட அரசு, புலிக்கு பின் மக்களை மதரீதியாகப் பிளக்க உருவாக்கப்பட்டது தான் "ஹலால்" ஒழிப்பு. இன்று மத மோதலை திட்டமிட்டு தூண்டி வருகின்றது. மதம் சார்ந்த "ஹலால்" குறியீடு, வர்த்தகம் சார்ந்த குறியீடாக சந்தைப் பொருளாக மாறி இருக்கின்ற சூழலைக் கொண்டு மோதலை உருவாக்குகின்றது. இதன் மூலம் அரசு மக்களை பிளக்கத் தொடங்கி இருக்கின்றது. மக்களை ஒற்றுமையுடன் வாழ்வதை தகர்ப்பதன் மூலம் தான், மக்கள்விரோத அரசாக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற உண்மையை இலங்கையில் "ஹலால்" ஒழிபபு கோசத்தின் பின் காணமுடிகின்றது

இலங்கை பற்றி மேற்கு ஏகாதிபத்திய அக்கறையும், அது சார்ந்து இன்று வெளிப்படும் மக்கள் விரோத அரசியல், தன்னை மாற்று அரசியலாக முன்னிறுத்தி வருகின்றது. இன்று இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் திரள் போராட்ட அமைப்பை உருவாக்குவதற்குப் பதில், ஏகாதிபத்திய நலன் சார்ந்த அதன் அரசியலை முன்தள்ளுகின்றனர். இன்று அன்றாட செய்திகள் முதல் கட்டுரைகள் வரை ஏகாதிபத்தியம் நலன் சார்ந்த விடையங்களை தங்கள் மையச் செய்தியாக்குவதுடன், அதன் நோக்கம் மக்களுக்கானதாக காட்டுகின்றனர். அதன் மக்கள் விரோதத்தைக் கண்டுகொள்ளாத கள்ள மௌனம் மூலம், இதை நம்பும்படி மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

இதற்கமைவாக இலங்கை ஆளும் தரப்பு தொடர்ந்து செய்த செய்து கொண்டு இருக்கின்ற மனிதவிரோத குற்றங்களில் இருந்து, தன்னை தற்காத்துக்கொள்ள நாட்டை ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் மேலும் மேலும் அடகுவைத்து வருகின்றனர். ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கொண்டும், பிராந்திய நாடுகளின் முரண்பாட்டைக் கொண்டும், நாட்டை அன்னியருக்கு அடிமைப்படுத்தி வருகின்றனர். இதனால் உள்நாட்டு விவகாரங்கள், இன்று சர்வதேச விவகாரங்களாக மாறி வருகின்றது.

பாராளுமன்றவாதிகளை நம்புவதா? முஸ்லிம் அடிப்படைவாதத்தை நம்புவதா? தனிநபர் பயங்கரவாதத்தை நம்புவதா? இன்று இப்படி குறைந்தது இதில் ஒன்றையாவது நம்புகின்ற எல்லைக்குள் மூழ்குவதும், அதில் அதிருப்த்தியும் அவநம்பிக்கையும் கொண்டு வெளிப்படுவதுமாக முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது. இதுவே மக்களில் இருந்து அன்னியமான, மக்கள் விரோதமான வன்முறைக் குழுக்களை தோற்றுவிக்கும் அரசியல் அடிப்படையாக இருக்கின்றது. இதற்கு அமைவாக சர்வதேசரீதியாக இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் காணப்படுகின்றது. இந்த அபாயத்தில் இந்து முஸ்லீம் மக்களை தம்மை தற்காத்துக் கொள்ள, அரசியல் விழிப்புணர்வு அவசியமானது. பௌத்த அடிப்படைவாதத்துக்கு எதிரான மக்கள்திரளினை அடிப்படையாகக் கொண்ட மாற்றுப்பாதை அவசியமானது. இல்லாது போனால் பௌத்த அடிப்படைவாதத்தை நிறுத்திவிட முடியாது. இது இஸ்லாமிய அடிப்படைவாதமாக மாறும். இதனால் பௌத்த அடிப்படைவாதம் மேலும் மேலும் தீவிரமாகும்.

முஸ்லீம் சமூகம் மதவழிபாட்டு உரிமையை மத அடிப்படைவாதமாகிவிடாது தடுத்து நிறுத்தி, பௌத்த அடிப்படைவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? இதுதான் இன்று முஸ்லிம் சமூகம் முன்னுள்ள கேள்வி. இதை பேரினவாதத்தை எதிர்கொண்டு தோற்ற அதன் அரசியல் எதிர்மறையில் இருந்து கற்றுக்கொள்ள முடியும்;. தமிழ் இளைஞர்கள் எதிர்கொண்ட தவறான முன்னுதாரணங்களில் இருந்து இதைத் தெரிந்து கொள்ள முனைவோம்.

"சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை" மார்க்ஸ்சின் இந்தக் கூற்று இன்று சமூகம் செயலைக் கோரும் எங்கும் எதிலும் பிரதிபலிக்கின்றது. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதை மறுத்து, பேஸ்புக்கில் கொசிப்பும், நடைமுறையில் பயந்தாங்கொள்ளிகளையும் உருவாக்குகின்றது. செயற்படாமல் இருக்க, கோட்பாட்டுத் தூய்மை பற்றி பேசப்படுகின்றது. நம்பிக்கையீனங்கள், அவநம்பிக்கைகள், கோழைத்தனம், பயந்தாங்கொள்ளித்தனம் … என்பன அவரவர் நடைமுறைக்குரிய ஒன்றாக தற்காப்பு அரசியலாக மாறுகின்றது. மக்களுக்காக போராடுவது பற்றி மார்க்ஸ் "இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள், எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்" என்றார். செயலுக்குத் தடையாக இருப்பதை, அதை சிதைப்பது சுயநலம். இந்தச் சுயநலம் தான் அவநம்பிக்கையாக வெளிப்படுகின்றது.

2009 ஆண்டு வரை போராடுவதற்கு புலிகள் தான் தடை என்றவர்கள், அதன் பின்பும் மக்களுடன் இணைந்து செயற்படவேயில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலுக்கான தெளிவான குறைந்தபட்சத் திட்டத்தை வைத்தவுடன், செயலை மறுப்பதற்கான அரசியல் எதிர்வினைகள் அரசியல் அரங்கில் வருகின்றது.

சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாமையால் முன்னிலை சோசலிசக் கட்சியை, இனவாதிகளாக, திரிபுவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டுகின்ற அரசியல் கேலிக்கூத்தைக் காண்கின்றோம். இப்படி இட்டுக்காட்டி கூறுவது திரிபுவாதமாக, இனவாதமாக இருக்கின்றது. இப்படி திரிக்க தேசிய சுயநிர்ணயம் தொடர்பாக ரோசா லக்சம்பேர்க்குடனான லெனினின் விவாதத்தை எடுத்துக் காட்டுகின்றனர். லெனின் சுயநிர்ணயம் ஏற்க மறுத்த ரோசா லக்சம்பேர்க்கை இனவாதியாகவோ, திரிபுவாதியாகவோ முத்திரை குத்திக் காட்டி விவாதிக்கவில்லை. அவரை எதிரியாகக் காட்டவில்லை, எதிரியாக்கவில்லை. மாறாக அவரை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தி, அரசியல் விவாதத்தை முன்னெடுத்தார். தமிழ்தேசியம் மட்டும் தான் தன்னுடன் அல்லாத அனைத்தையும் எதிரியாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.

இந்த அரசியல் தமிழ் தேசியமே ஒழிய சர்வதேசியம் அல்ல. வர்க்க அரசியலை முன்னிறுத்துகின்றபோது, அது கோட்பாடு மற்றும் செயல்தந்திரம் மீதான அரசியல் விமர்சனமாக வெளிப்படும். தேசியத்தை உயர்த்தும் போது அது தமிழினம் சார்ந்த சந்தேகமாக அவநம்பிக்கையாக வெளிப்படும்.

மார்க்சிய சொற்தொடர்கள் மூலம் தம்மை மூடிமறைத்த தமிழ்தேசியவாதிகளை இனம் காட்டுவது, பாட்டாளி வர்க்கக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சியுடனான அதன் பொது அணுகுமுறை தான். முன்னிலை சோசலிச கட்சி வர்க்கக் கட்சியாக இருப்பதால், அதன் பொது வேலைத்திட்டத்தின் ஊடாகவே இனப்பிரச்சனை பற்றிய அதன் அணுகுமுறையை பாட்டாளி வர்க்க சக்திகள் இனம்காண முற்படும்போது, தேசியவாதிகள் இனப்பிரச்சனை ஊடாகவே அக் கட்சியை அணுக முற்படுகின்றனர். இந்த வகையில் சர்வதேசியம், தேசியம் இரு வேறு அணுகுமுறைகளை கொண்டு தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

40 க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக் கூட்டம், இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வண்ணம் உணர்வூட்டக் கூடியதாக அமைந்து இருந்தது. பெரும்பான்மையானவர்கள் இதன் அவசியத்தை உணர்ந்ததுடன், தங்களாலான பங்களிப்பை வழங்கவும் உறுதியேற்றனர். கேள்வி பதில்களும், கூட்டத்தை அடுத்து தனிப்பட்ட உரையாடல்கள் இதை வளர்த்தெடுக்கும் வண்ணம் ஆரோக்கியமானதாக இருந்தது. யாராலும் மறுக்க முடியாத, யாராலும் நிராகரிக்க முடியாத, சமவுரிமைக்கான அவசியத்தை முன்னோக்காகக் கொண்டு நடக்க கூட்டம் வழிகாட்டியது.

இந்த வகையில் சமவுரிமை இயக்கம் பற்றி முன்வைக்கப்பட்டவற்றில் முக்கியமானது

கருத்துகளை உற்பத்தி செய்வதன் மூலம், அதை மக்களிடம் கொண்டு செல்லும் சரியான உத்திகள் மூலம், புரட்சி செய்ய முடியும் என்று நம்புகின்ற அரசியல் போக்கு தவறானது. மக்களுக்கு புரியும் மொழியில் பிரச்சாரத்தை செய்யாமை தான், புரட்சி நடைபெறாமைக்கான காரணம் என்று அரசியலைப் புரிந்துகொள்வது தவறானது. இதற்கான மொழியும், உத்தியும், பிரச்சாரமும் தான் குறைபாடு என்று கருதும் அரசியல் போக்குத் தவறானது.

மார்க்ஸ் அறிவியல்பூர்வமான தத்துவஞானத்தையும், அமைப்பையும் மறுத்து வில்ஹெம் வியட்லிங் செயற்பட்ட போது கூறியது இங்கு பொருந்தும். "இந்த போதனை ஒரு கற்பனைத் தீர்க்கதரிசியையும் - வாய் பிளந்து நிற்கும் கழுதைகளையுமே உருவாக்குகிறது" என்றார். இது புரட்சியை உருவாக்காது.

சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து, வாக்குப் போட்டு இதைச் சட்டமாக்கும் கும்பலே குற்றக் கும்பல்;. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்குவிப்புத் தொடங்கி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள். இவர்களில் பலர் மாபியாக்களாக செயற்படுவது தொடங்கி பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். இதற்கு பற்பல முகங்கள் உண்டு. இவர்கள் தான் சட்டத்தை உருவாக்குகின்றனர். இந்த சட்டத்தை கையில் எடுத்து, அதை அமுல்படுத்தும் பொலிஸ் நிலையங்களை கண்டு அஞ்சுமளவுக்கு அவையோ வதைமுகாம்களாக இருக்கின்றது. இது இலங்கை மக்கள் அனைவருக்கும் அனுபவரீதியாக தெரிந்த ஒரு பொது உண்மையும் கூட.

மக்கள் விரோத மாலிய இராணுவ ஆட்சியின் துணையுடன், ஒரு தலைப்பட்சமான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியம் இறங்கியிருக்கின்றது. தன் நவகாலனியை தக்க வைக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தான் பிராஞ்சு ஏகாதிபத்தியம் வலிந்து ஈடுபடுகின்றது. ஒருபுறம் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, நவகாலனிகளை தக்கவைக்கும் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆக்கரமிப்பு யுத்தங்களாக மாறி இருக்கின்றது. லிபியா, சிரியா,… தொடங்கி மாலி வரை நடப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தம்தான்.

பொருத்தமான மிகச் சரியான தீர்ப்பு. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நீதியை பறைசாற்றிய நீதிமன்றங்களின் போலித்தனத்தை துகிலுரிந்து, இறுதியில் அதைத் தூக்கில் ஏற்றி இருக்கின்றனர். இனி நாங்கள் மட்டும் தான், இடையில் நீதிமன்றம் போன்ற இடைத் தரகுக்கு இடமில்லை என்று பாசிட்டுகள் எந்தப் பாசங்குமின்றி சொந்தப் பிரகடனத்தை பாராளுமன்றம் மூலம் செய்து இருக்கின்றனர். யாராவது இதை எதிர்த்து மக்களை அணிதிரட்டினால் போட்டுத்தள்ளுவோம், எங்களோடு இருப்பவர்கள் இதை எதிர்த்தால் தலை உருளும். இது தான் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டமும், தீர்ப்பும். நீதிமன்றங்கள் இதற்கு கொள்கை விளக்கம் வழங்குவதைத் தவிர, இதை மீறி விளக்கம் கொடுக்கக் கூடாது.

ரிசானாவை ஷரியா சட்டம் மூலம் கொன்றதால் அதைப் போற்றும் மதக் காட்டுமிராண்டிகள். சட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று கூறி, கொன்றதை நியாயப்படுத்தும் அரச பயங்கரவாத பாசிட்டுகள். ரிசானா கொல்லப்பட மத அடிப்படை வாதமும், அரச பாசிசமும் ஒன்றுக்கு ஒன்று துணையாக தூணாக இருந்தது. ஒரு ஏழை, ஒரு தொழிலாளி, ஒரு அபலைப் பெண், ஒரு குழந்தை, அன்னிய நாட்டு கூலி உழைப்பாளி … என்று சமூகத்தில் அடிநிலையில் எந்த சமூக ஆதாரமுமற்றவர்களைக் குற்றவாளியாக்கி கொன்றிருக்கின்றது ஷரியா சட்டமும், அரச பாசிசமும்

இது சொந்த இன ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்கும் இனவாதமாகும். இப்படி தன்னை மூடிமறைத்த சுயநிர்ணயம், நேரடியான இனவாதத்தை விட ஆபத்தானதும், அபாயாகரமானதுமாகும். தனக்கான நேரம் வரும் வரை அது தன்னை வெளிப்படுத்துவதில்லை. தன்னை ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டு, அதிகம் நாசம் செய்கின்ற இனவாதமாகும். இதை அரசியல்ரீதியாக, கோட்பாட்டுரீதியாக இனம் கண்டு கொள்வது இன்று அவசியமாகின்றது. சுயநிர்ணயத்தின் பின் ஒளித்துப் பிடித்து விளையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது.

இராணுவத்துக்குத் தாம் இணைக்கப்படுகின்றோம் என்று தெரியாது எப்படி அந்தப் பெண்கள் இணைக்கப்பட்டனரோ, அதேபோல் தமிழினவாதிகள் பாலியல்ரீதியாக அந்தப் பெண்களுக்கு தெரியாமலே அவர்களை ஊடகம் மூலம் வன்புணர்ந்துவிட்டனர். இந்தப் பெண்கள் அவர்களுக்கு தெரியாமலே இராணுவத்தில் இணைக்கப்பட்டனர் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இராணுவம் எப்படித் தயாரில்லையோ, அப்படி தமிழினவாதிகளும் தாங்கள் இந்தப் பெண்களை பாலியல்ரீதியாக ஊடகம் மூலம் வன்முறைக்கு உள்ளாக்கியதை ஒத்துக்கொள்ளத் தயாரில்லை. இந்த உண்மையை மூடிமறைக்க மனநல மருத்துவரைப் பற்றிய விவகாரமாக, அவரின் நடத்தை பற்றிய ஒன்றாக இதை மாற்றிவிட முனைகின்றனர். இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்கு" உள்ளானதாக கூறி முன்னெடுத்த இனவாத அவதூறுப் பிரச்சாரத்தை, மனநல மருத்துவருக்கு முன்னமே முதலில் நாம் அம்பலப்படுத்தினோம். நாம் இதை முதலில் அம்பலப்படுத்திய பின்னர் தான், மனநல மருத்துவரின் இதை ஒத்த கருத்துகள் வெளியாகியது.

இலங்கை முழு மக்களையும் அடக்கியாள, அரசு தொடர்ந்தும் இனவாதத்தையே முன்தள்ளுகின்றது. சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதன் மூலம், பெரும்பான்மை மக்களை தங்களுடன் இணைந்து இனவாதியாக இருக்குமாறு கோருகின்றது. இலங்கை மக்களை அடக்கியாள, அரசு கையாளும் இனவாதக் கொள்கை இதுதான்.

மக்களுக்காக வேறு எந்த தேசிய சமூக பொருளாதாரக் கொள்கையும் அரசிடம் கிடையாது. இன்று இலங்கையில் அபிவிருத்தி என்ற பெயரில் நடந்தேறுவது, இலங்கையில் தங்கள் மூலதனத்தை பெருக்க வரும் வெளிநாட்டு மூலதனம் தான். அது உற்பத்தி மூலதனமாக, தரகுவர்த்தகமாக, கடன் சார்ந்த நிதிமூலதனமாக வருவதும், அது தன்னை பெருக்கிக் கொள்ள முனைவதைக் காட்டி, அதையே தான் நாட்டின் அபிவிருத்தி என்கின்றது அரசு. இதுவே அரசின் கொள்கையாகிவிட்டது. இதற்கு வெளியில் வேறு கொள்கை எதுவும் அரசுக்குக் கிடையாது. நாட்டையும், நாட்டு மக்களின் உழைப்பையும் அன்னிய மூலதனம் திருடிச் செல்வது தான் அபிவிருத்தி என்று அரசு காட்டுகின்றது. இதை மூடிமறைத்துப் பாதுகாக்க, இனவாதத்தை தூண்டிவிடுவதை அரசு தன் கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்றது.