Language Selection

புதிய ஜனநாயகம் 2006

11_2006.jpg

""முதலில் நான் ஒரு பிராமணன்; ஒரு இந்து. பிறகுதான் கம்யூனிஸ்ட்'' இப்படி பகிரங்கமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், மே.வங்க "இடது முன்னணி' அரசின் போக்குவரத்து விளையாட்டுத்துறை அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி. இவர் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். நீண்ட காலமாகக் கட்சிப் பணியாற்றிவரும் அனுபவமிக்க தோழர் என்று சி.பி.எம். கட்சியினரால் குறிப்பிடப்படும் முக்கிய புள்ளி.

12_2006.jpg

கடந்த 21.10.06 அன்று அதிகாலை கூடலூரைச் சேர்ந்த வி.வி.மு. தோழர் திருப்பதிராயர், திடீர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்.

 

தன்னுடைய கல்லூரிக் காலத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்று ஊக்கமுடன் செயல்பட்ட தோழர் திருப்பதிராயர், திராவிட கழகத்தின்

12_2006.jpg

இந்தியாவின் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அடுக்கடுக்கான பல சமூக நீதிச் சலுகைகளும், சமூக நலத் திட்டங்களும், மக்கள் உரிமைச் சட்டங்களும் கொண்டு வந்து நிறைவேற்றுவதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் எதனால் கொண்டு

12_2006.jpg

கோவை மாவட்டம் உடுமலை வட்டத்திலுள்ள புக்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் "சிக் குன் குனியா'' நோய் தாக்கி பலர் வேதனைப்பட்டு வருகின்றனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிப் பிரதிநிதிகளிடம்

12_2006.jpg

பன்னாட்டு ஏகபோக மீன்பிடி முதலாளிகளுக்கு நமது கடல்வளங்களைத் தாரை வார்க்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைப்படி, சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியிலிருந்து மீனவர்கள் விரட்டப்பட்டார்கள்; இப்போது

12_2006.jpg

பேரழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது உலகம். வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உருகத் தொடங்கி, கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. கடலுக்குள் விழும் பனியாறுகளின் பருமம் தொடர்ந்து அதிகரித்து, கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவின் தென்மேற்கே

12_2006.jpg

விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்து, நாட்டை மீண்டும் காலனியாக்க வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடிக்க ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

12_2006.jpg

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வரில், கீலானி, அஃப்ஸான் குரு ஆகிய இருவரின் விடுதலையை உறுதி செய்தும்; ஷெளகத் ஹூசைன் குருவிற்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தும்; முகம்மது அப்சலுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செய்தும்

12_2006.jpg

வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு தனது வட்டாரத்து மக்களையே அஞ்சி நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் ரவுடிகள், ஒவ்வொரு நொடியும் தனது உயிருக்கு யாராலும் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பர். அதைப் போல்தான், இன்றைக்கு உலகமெல்லாம் தனது மேலாதிக்கத்திற்கு அடி பணிய

12_2006.jpg

· அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களைப் பற்றி பத்து பக்கங்களுக்கு ஒரு விரிவான கட்டுரை எழுதுவதைவிட, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த அட்டைப்படக் கேலிச் சித்திரம் எடுப்பாக அமைந்துள்ளது.
சங்கரலிங்கம், நாமக்கல்.

 

· பார்ப்பன பக்தியுடன் ஏகாதிபத்திய சேவை செய்யும் சி.பி.எம். கட்சியினரை அம்பலப்படுத்திக் காட்டியது அருமை. இனி வரும் காலங்களில் சி.பி.எம். கட்சியினர் பக்தியோடு கோவில்களுக்குக் காவடி தூக்கிப் புரட்சி செய்யக் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இராணி, மாத்தூர்.

 

· மணிப்பூர் வீராங்கனை ஷர்மிளாவின் போர்க்குணமும் போராட்ட உறுதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தகைய உயர்ந்த பண்புகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
பகத், பென்னாகரம்.

 

· சுபாஷ் சக்ரவர்த்தி அடுத்த கட்டமாக தமிழ்நாடு பார்ப்பன சுஜாதா, மதனுடன் சேர்ந்து வேதத்திலும், உபநிடதத்திலும் மார்க்சிய கருத்துக்கள் உள்ளதாக உபதேசிப்பார். இதற்கு பிமன்போஸ் ஜால்ரா போடலாம். பூணூல் கம்யூனிஸ்டுகள் சந்தியாவந்தனம் செய்து இந்து தர்மத்தோடு புரட்சி செய்யலாம். பார்ப்பன கம்யூனிஸ்டுகள் எதையும் செய்வார்கள்; யார் கண்டது?
ம. கிருஃச்ணமூர்த்தி, புதுக்கோட்டை.

 

· ஜார்கண்டு மாநிலத்தில் 50 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட துயரச் செய்தியை, தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கண்ணீர் விடும் அற்பத்தனத்துடன் ஒப்பிட்டு வர்க்க உணர்வோடு எழுதியிருப்பது சிறப்பு.
ஜீவா, செயங்கொண்டம்.

 

· தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான் என்பதை அரசின் கணக்கு தணிக்கை அறிக்கையிலிருந்து நிரூபித்துக் காட்டியது அருமையாக உள்ளது. இப்போது அடிக்கட்டுமானத் துறையிலும் தனியார்மயம் புகுத்தப்பட்டு, சூறையாடல் நடப்பதை எளிமையாக விளக்கியிருப்பது பெரிதும் பயனளித்தது.
அ.ப., கொத்தமங்கலம்

 

· பு.ஜ. இதழின் அட்டைப்படத்தைப் பார்த்த பல வாசகர்கள் ஆச்சரியத்தோடு இதழை வாங்கிப் பாராட்டினார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் பார்ப்பன பக்தியை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், உண்மையான கம்யூனிச இயக்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக கட்டுரை அமைந்திருந்தது. விவசாயக் கடன் தள்ளுபடியின் பின்னுள்ள மோசடிகளைப் பற்றித் தமிழகம் தழுவிய விவரங்களைத் தொகுத்து எழுதினால் பெரிதும் பயனளிக்கும்.
வாசகர் வட்டம், தஞ்சை.

 

· மன்மோகன் சிங்கின் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை அட்டைப்படக் கேலிச்சித்திரம் எடுப்பாக உணர்த்தியது. தேசப் பாதுகாப்புக்காகவே இந்திய இராணுவம் உள்ளதாக இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, ""சந்தி சிரிக்கும் ஆயுத பேர ஊழல்'' எனும் கட்டுரை நல்ல சவுக்கடி. தனியார்மயத்தின் பகற்கொள்ளையையும், சட்டமும் நீதியும் இக்கொள்ளையை அங்கீகரிப்பதையும், தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து விளக்கிய கட்டுரை எளிமையாக உணர்த்தியது. வாசகர் வட்டக் கூட்டத்தின் இறுதியில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இன்னுமொரு காகிதச் சட்டம்தான் என்பதை விளக்கி, வழக்குரைஞர் தோழர் இராமலிங்கம் ஆற்றிய சிறப்புரை, வாசகர்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தது.
வாசகர்வட்டம், திருச்சி.

 

· இம்மாத இதழின் அட்டைப்படம் வாசகர்களிடையே விவாதத்தைத் தூண்டி, மன்மோகன் சிங் விசுவாசமான அமெரிக்க அடிமைதான் என்பதை வாசகர்களே விளக் குவதாக அமைந்தது.
வாசகர் வட்டம், ஓசூர்.

12_2006.jpg

கொலைகார "கோக்'கிற்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வும் போராட்டங்களும் தொடரும் சூழலில், கோக்கின் சரிந்துவிட்ட சந்தையை முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த நடிகை ராதிகா கிளம்பியிருக்கிறார். ""கோக்கில் எந்த நச்சுத் தன்மையும் இல்லை; கோக்கில் என்ன மிக்ஸ் பண்ணுகிறார்கள் என்பதிலிருந்து எல்லா

12_2006.jpg

தமது சொந்த நிலத்தைப் பறிக்க முயன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடிய தாழ்த்தப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த கோர முடிவு இது.

12_2006.jpg

எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக, சட்டவிரோதமாக 10 மணி 12 மணி நேர கட்டாய உழைப்பு; வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சாதனங்கள் எதுவும் தரப்பட மாட்டாது; தொழிற்சாலை சட்டங்கள் பின்பற்றப்பட மாட்டாது.

12_2006.jpg

அவர்கள் அனைவரும் சாலைப் பணியாளர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சொந்த மண்ணையும், வீடுவாசலையும் விட்டு பிழைப்புத் தேடி மராட்டியத்தின் மும்பைப் பெருநகருக்கு விரட்டப்பட்டவர்கள். மும்பை நகரின் செல்வச் சீமான்களின் சொகுசுக் கார்கள் வழுக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகள் அமைப்பதுதான் அவர்களின்

12_2006.jpg

காவிரி ஆற்று நீர் சிக்கலைப் போல முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் நிறைய வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லை. உண்மை விவரங்களே தமிழகத்தின் நியாய உரிமைகளையும் கேரள அரசின் அடாவடித்தனங்களையும் நிலைநாட்டுவதாக உள்ளன. இன்றைய கேரள மாநிலத்தின் ஒரு பகுதியான திருவி தாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான

12_2006.jpg

இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் உள்ளிட்ட அதிஉயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பார்ப்பனமேல் சாதிவெறியர்களின் கூடாரமாக இருப்பதை, இடஒதுக்கீடுக்கு எதிராக அக்கல்லூரிகளில் நடத்த

12_2006.jpg

மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்; ஒழிக்கவே கூடாது என்ற எதிரும் புதிருமான கருத்து மோதல்களை அப்சலின் வழக்கு, மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்துவிட்டது. அப்சல் மீதான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்படாததாலும்; இதுவொரு அரசியல்

12_2006.jpg

ஈராக்கில், நீதி விசாரணை நாடகமாடி சதாமுக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து விழுப்புரம்கடலூர் மாவட்ட வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., அமைப்புகள் இணைந்து 16.11.06 அன்று விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ""சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக்

10_2006.jpg

தேர்தல் முடிவுகளைக் கேட்ட மறுவினாடியே, தமது வாக்குறுதிகளை மறந்து விடுவதையும், மழுப்புவதையும் ஓட்டுக் கட்சிகளிடம் இதுவரை கண்டுவந்த அரசியல் நோக்கர்கள், இப்போது தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள், பேச்சுக்களைக் கண்டு மயக்கங் கொள்கிறார்கள். கருணாநிதி இப்போது நெஞ்சுயர்த்திச் சொல்கிறார், ""தேர்தல் அறிக்கையில் 177 வாக்குறுதிகள் தரப்பட்டன. அவற்றில் 62 வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில்

11_2006.jpg

அக்டோபர் இதழ் படித்தேன். அப்பப்பா! எவ்வளவு அருமையான விஷயங்கள். என்னுடைய நண்பர்களிடம் சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அட்டைப்படக் கட்டுரையையும் இன்றைய அரசியல் நிலைமையையும் பற்றி விளக்கி அவர்களிடம் 7 பிரதிகளை விற்பனை செய்தேன். புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்த மனநிறைவு எனக்கு ஏற்பட்டது. உழைக்கும் மக்களுக்கு அவசியமான உண்மைச் செய்திகளைத் தொடர்ந்து அளித்துவரும் பு.ஜ.வுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
எஸ்.சிவா, உசிலம்பட்டி.

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய கட்டுரையும் விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியும் மறுகாலனிய சுருக்கு இறுகி வருவதை உணர்த்துகிறது. நெருங்கிவிட்ட பேரபாயத்தை விளக்கிய அட்டைப்படக் கட்டுரை சிறப்பு.
ஜீவா, ஜெயங்கொண்டம்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றியும், இணையதள வர்த்தக சூதாட்டம் பற்றியும் வெளியான பு.ஜ. கட்டுரைகள் விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பிரச்சாரத்துக்குப் பெரிதும் உதவின. விவசாயிகளை அணிதிரட்டிப் போராடாமல், மறுகாலனியாக்கத்தை வீழ்த்த முடியாது என்பதை பு.ஜ. இதழ் எடுப்பாக உணர்த்தியுள்ளது.
வி.வி.மு., உசிலை வட்டம்.

நாங்கள் குடியிருக்கும் பகுதியில், 30 பேர் கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிகள் லஞ்சம் கொடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போடச் செய்தன. நுண்கடன் எனும் கந்துவட்டியால் அடிமையாகிப் போகும் இக்குழுக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையையும் இழந்து நிற்கிறார்கள். பு.ஜ.வில் வெளியான கட்டுரை தன்னார்வக் குழுக்களின் சதியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இராணி, ஓசூர்.

சுய உதவிக் குழுக்களின் மூலம் நடக்கும் கந்துவட்டிக் கொள்ளையை பு.ஜ. மூலம் அறிந்த வாசகர்கள், இப்படித்தான் தங்கள் பகுதியில் நடக்கிறது என்று தங்கள் அனுபவத்தை விளக்கினார்கள். ஒரு புதிய வாசகர், ""வீடு வீடாக வந்து நீங்கள் பு.ஜ. இதழை விற்பனை செய்தபோது வேண்டாம் என்று அலட்சியப்படுத்தினேன்; பின்னர், தற்செயலாக இதழைப் படித்தபோது நான் மிகப் பெரிய தவறு செய்து விட்டதை உணர முடிந்தது'' என்று மனந்திறந்து குறிப்பிட்டார். ஓசூர் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான ஆக்கிரமிப்புகள் நடந்துவரும் வேளையில், இதையொட்டி பு.ஜ.வில் வெளிவந்துள்ள கட்டுரை பிரச்சாரத்துக்கு உதவியாக அமைந்துள்ளது.
வாசகர் வட்டம், ஓசூர்.

மறுகாலனிய பயங்கரவாதத்தைத் தீவிரமாக்கும் நோக்கில், அரசு பயங்கரவாதத்தை நிரந்தரமாக்கும் ஏற்பாடுதான் ஆளும் கும்பலின், ""ஐயா! பயங்கரவாதம்'' என்ற பீதியூட்டும் ஒப்பாரி என்பதைத் தோலுரித்துக் காட்டியது சிறப்பு. புதிய பொருளாதாரக் கொள்கையால் தலைப்பாகைக்கு ஆபத்து என்றால், சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் தலைக்கே ஆபத்து என்பதை அட்டைப்படக் கட்டுரை மூலம் உணர முடிகிறது. பார்ப்பன பாசிசமும் ஏகாதிபத்திய øக்கூலித்தனமும்தான் இந்துவெறி எட்டப்பர்களின் தேசபக்தி என்பதற்கு வந்தேமாதரம் பஜனையே சான்று கூறப் போதுமானது.
இரா. மணிகண்டன், சூசுவாடி.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அபாயத்தை விளக்கும் வகையில் அட்டைப்படம் எடுப்பாக அமைந்துள்ளது. அட்டைப்படக் கட்டுரையை, நாட்டையும் மக்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலம் எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாக விளக்கும் வகையில் தொடர் கட்டுரையாக எழுதியிருக்கலாம். வந்தேமாதரம் பாடலின் வரலாற்றையும் எட்டப்பர்களின் தேசபக்த பஜனையையும் அம்பலப்படுத்திய கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. 14.10.06 அன்று நடந்த வாசகர் வட்டக் கூட்டத்தில், வழக்குரைஞர் இராமலிங்கம் அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி சிறப்புரையாற்றினார். இந்தச் சட்டம் இன்னுமொரு காகிதச் சட்டம்தான் என்பதையும், தகவல் தருவதும் மறுப்பதும் சம்பந்தப்பட்ட துறையின் விருப்பப்படிதான் இருக்கும் என்பதையும், இதற்கெதிராக எந்த நீதிமன்றத்திலும் முறையிட முடியாது என்பதையும் வாசகர்களுக்கு உணர்த்துவதாக அவரது விளக்கவுரை அமைந்தது.
வாசகர் வட்டம், தஞ்சை.

 

வந்தே மாதரம் பாடலின் பின்னே மறைந்துள்ள இந்துவெறியையும் கைக்கூலித்தனத்தையும் திரைகிழித்துக் காட்டியது, இளந்தலைமுறையினருக்குப் பெரிதும் பயனளிப்பதாக அமைந்தது. தன்னார்வக் குழுக்களின் கந்துவட்டிக் கொள்ளை பற்றி இதுவரை யாரும் வெளிக்கொணராத உண்மைகளை பு.ஜ. மட்டுமே காட்டியுள்ளது.
வாசகர்வட்டம், திருச்சி.

 

 

11_2006.jpg

இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு என்று கூறிக் கொள்வதற்கான ஆதõரமாகத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டப்படுவது, ""இந்த நாட்டுக் குடிமக்களின் எழுத்துரிமையும் பேச்சுரிமையும் அரசியல் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எழுத்துரிமையும் பேச்சுரிமையும் அடிப்படை உரிமைகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.''

11_2006.jpg

ஏறத்தாழ 4 இலட்சம் பேர் பொறுக்கித் தின்ன போட்டி போட்ட உள்ளாட்சித் தேர்தலையும், அதிகாரமில்லாத உள்ளாட்சி அமைப்புகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும், அதிகாரத்தில் மக்கள் பங்கேற்பதாகக் காட்டி ஏய்க்கும் மோசடிகளையும் அம்பலப்படுத்தி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ""பொறுக்கித் தின்ன

11_2006.jpg

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த செய்திகள் அனைத்திலும் அடிக்கட்டுமானத் துறை என்ற வார்த்தை அடிக்கடி தென்படுவதைக் காணலாம். ""அடிக்கட்டுமானத்துறை வளர்ச்சி அடையாமல், இந்தியப் பொருளாதாரம் துரித வளர்ச்சி காண்பது சாத்தியம் அல்ல'' என நாடாளுமன்றத்திலேயே நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார்.

11_2006.jpg

தியாகத் தோழர் பகத்சிங்கின் நூற்றாண்டு பிறந்தநாளில் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!

கால் நூற்றாண்டு காலமே வாழ்ந்த ஒரு இளைஞனின் நினைவு, நூறாண்டுகளுக்குப் பின்னரும் நாட்டு மக்களால் போற்றப்படுகிறது என்றால் அந்தப் புரட்சியாளர்தான் பகத்சிங்! ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கின் நூறாம் ஆண்டு பிறந்த

11_2006.jpg

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதில் ஊழலும், மோசடிகளும் புழுத்து நாறுவதை தலைமைக் கணக்கு அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்திக் காட்டி விட்டது.

11_2006.jpg

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, விவசாய கூட்டுறவுக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவு போட்டார் முதல்வர் கருணாநிதி. ஆனால், அது இன்னுமொரு வாய்ப்பந்தல் என்று அம்பலமாகிவிட்டது.

11_2006.jpg

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் முடிவுப்படி, சென்னை பெரம்பூர் வியாபாரிகள் நல சங்கத்தில் கடந்த 6.10.06 அன்று கோக்பெப்சி எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தின் முன்பாக, அன்று மாலை 6 மணியளவில் திரண்ட வணிகர்கள், ""கோக் பெப்சியை

11_2006.jpg

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து மணிப்பூர் மாநில மக்கள் நடத்தி வரும் போராட்டம், இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டி வருகிறது.

11_2006.jpg

திருச்சியிலுள்ள பி.எஸ்.என்.எல். (BSNL) முதன்மைப் பொதுமேலாளர் (PGM) அலுவலக வளாகத்தின் டிடேக்ஸ் (D-Tax) கட்டிடத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த 5 ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 25.8.06 முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தை விசாரித்தபோது, அதே கட்டிடத்தில் இருக்கும்

11_2006.jpg

தீவிரவாதம், தேசப் பாதுகாப்பு என்ற தேசபக்தி பஜனை, இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை மூடி மறைக்கும் திரையாகப் பயன்படுகிறது.

 

""கார்கில் போரையொட்டி இஸ்ரேல் நாட்டிடமிருந்து பாரக் ஏவுகணை வாங்கியதில் முறைகேடுகளும், ஊழலும் நடந்திருப்பதாக''க் குற்றஞ் சுமத்தியுள்ள மையப் புலனாய்வுத்

11_2006.jpg

நடந்து முடிந்த சென்னை மாநகராட்சிக்கான தேர்தல்க ளில் தி.மு.க.வும் அதன் முக்கியக் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும் பா.ம.க.வும் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் நடத்தியதாக, ஜனநாயகப் பாதுகாவலர்களாக வேடம் போடும் பார்ப்பனபாசிச ஜெயலலிதா ஆதரவு சக்திகள் ஓலமிடுகின்றன

11_2006.jpg

அக்டோபர் 9ஆம் நாள், ஹவதேரி என்ற இடத்தில் வடகொரியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. அச்செயல் கிழக்கு ஆசியாவின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பேராபத்தானது என்றும் கடும் கண்டனத்துக்குரிய இரகசியமான அணு ஆயுதப் பரவல் என்றும் முதன்முதலாகக் குரலெழுப்பிய நாடு இந்தியாதான். அதைத் தொடர்ந்து வடகொரியாவின் அண்டை

11_2006.jpg

ஓசூர் அருகே பாகலூர் ஊராட்சியைச் சேர்ந்த பௌத்தூரிலுள்ள ஏசியன் பேரிங் லிமிடெட் என்ற ஆலை கடந்த 10 மாதங்களாகச் சட்டவிரோதமாகக் கதவடைப்பு செய்யப்பட்டு, அங்கு வேலை செய்து வந்த 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

10_2006.jpg

""ஐயோ, பயங்கரவாதம்!'' தமிழகமே தீவி ரவாத பயங்கரவாதிகளின் பாசறையாக மாறிவிட்டதைப் போலவும் தமிழகத்துக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளதைப் போலவும் கடந்த இரு மாதங்களாக போலீசும் பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் தொடர்ந்து பீதியூட்டி வருகின்றன. ஆகஸ்ட் 15ஆம் நாளன்று

10_2006.jpg

கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு, கடந்த செப். 3ஆம் நாளன்று நெல்லையில் கோக் எதிர்ப்பு கருத்தரங்கை நடத்தியது.


""உயிரை உறிஞ்சும் கோக்பெப்சியைப் புறக்கணிப்போம்! தாமிரவருணியை உறிஞ்சும் கோக் ஆலையை விரட்டியடிப்போம்!'' என்ற தலைப்பில் நெல்லை எம்.எச். பிளாசாவில் நடந்த இக்கருத்தரங்கிற்கு கோக் எதிர்ப்புப்

10_2006.jpg

மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில் கடன்சுமை தாளாமல் பருத்தி விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து கொண்டு வரும் கொடுமை தொடரும் அதேவேளையில், அண்மைக்காலமாக ஆந்திராவிலும் இதேபோல கடன்சுமை தாளாமல் விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு

10_2006.jpg

போலீசு அதிகாரி பிரேம்குமாரின் அட்டூழியங்களை எதிர்த்து, 25 ஆண்டு காலமாகச் சட்டரீதியாக போராடி வரும் நல்லகாமனின் கதை நிரூரித்துக் காட்டும் உண்மை.

ங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரும், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருமான பிரேம்குமார்

10_2006.jpg

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளையொட்டி, சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கடந்த 12.9.06 அன்று திருச்சியில் அய்க்கஃப் அரங்கில் ஒரு கருத்தரங்கை நடத்தியது.

10_2006.jpg

அண்மைக் காலமாக உணவு தானியங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய மக்களின் கழுத்தை நெறித்து வருகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 வரை உயர்ந்துள்ளன. ரூ. 2830 ஆக இருந்த உளுத்தம் பருப்பின் விலை இன்று ரூ. 5055 ஆக உயர்ந்து விட்டது. இதர பருப்பு வகைகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.

10_2006.jpg

மகாராஷ்ரா மாநிலத்திலுள்ள மாலேகான் நகரில், செப்டம்பர் 8 அன்று அடுத்தடுத்து நடந்த நான்கு குண்டு வெடிப்புகளில் 31 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகை முடியும் நேரத்தில், குறிப்பாக, முசுலீம்கள்

10_2006.jpg

*விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, சில அறிவாளிகள் கருதிவரும் வேளையில், இந்த மூன்றாவது அரசியல் கழிசடையை அம்பலப்படுத்திக் காட்டியது சிறப்பு. "கோக்' ஆக்கிரமிப்பாளருக்கு விசுவாச சேவை செய்யும் நவீன எட்டப்பர்களான அன்புமணி புத்ததேவ் கருணாநிதி

10_2006.jpg

தோழர் பகத்சிங்கின் நூறாம் ஆண்டு பிறந்த தினம் செப்.28, 2006 அன்று தொடங்குகிறது. அவரது நூற்றாண்டு பிறந்ததினத்தை, காங்கிரசு, பா.ஜ.க. முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைத்து வண்ண ஓட்டுக் கட்சிகளும், "கோலாகலமாக'க் கொண்டாடுவார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுகூர்ந்து எட்டப்பன்

10_2006.jpg

சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.

10_2006.jpg

* தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆணையம்.
* மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆணையம்.
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடுவர் மன்றங்கள்.
* வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிறப்பு நீதிமன்றங்கள்.
* குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்.
* வேலை உத்திரவாத அடிப்படை உரிமைச் சட்டம்.
* குழந்தைகள் உழைப்புத் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை 1986 சட்டம் 2006ஆம் ஆண்டு தடை ஆணையம்.
* தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் பிற்பட்டோர் இடஒதுக்கீடு.
* தாழ்த்தப்பட்டோர் பழங்குடி மக்கள், மகளிர், சிறுபான்மையினர் நல ஆணையங்கள்.
* பழங்குடி மக்கள் வன உரிமைச் சட்டம்.

""அடேயப்பா'' — எத்தனை சமூக நீதி உரிமைகள் சட்டங்கள், சமூகநலத் திட்டங்கள்!

10_2006.jpg

இந்தியாவின் நுழைவாயில் என சித்தரிக்கப்படும் வர்த்தகப் பெருநகரான மும்பையின் தென்பகுதியில், 12,000 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மாண்டமான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க மைய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக நவி மும்பை, ராய்காட் பகுதிகளில் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக,

10_2006.jpg

ரலாறு படைக்கிறார் மே.வங்க போலி கம்யூனிச முதல்வர் புத்ததேவ் பாட்டாச்சார்யா. மே.வங்கத்தில் 22,500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி வரும் வரலாறு, வரலாறு கண்டிராத வகையில் மே.வங்கத்தின் அடிக்கட்டுமானத் துறையை மேம்படுத்த இந்தோனேஷிய சலீம் குழுமத்துடன் ரூ. 40,000 கோடி மதிப்பீட்டுக்கான ஒப்பந்தம் போட்டுள்ள வரலாறு,

10_2006.jpg

ஓசூருக்கு அருகிலுள்ள சானமாவு, பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளி, அஞ்செட்டிப்பள்ளி ஆகிய நான்கு ஊராட்சிகளில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட பகுதியில் 3600 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படவுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பே முந்தைய அ.தி.மு.க. அரசு இதற்கான

10_2006.jpg

"வாங்கண்ணா, வாங்க! அதிருஷ்டம் உங்களை அழைக்கிறது!'' இது, சிறிது காலத்திற்கு முன்பு தடைசெய்யப்படும்வரை எங்கெங்கும் ஒலித்த லாட்டரி சீட்டு வியாபாரிகளின் குரல் அல்ல. மைய அரசின் வர்த்தகத் துறை அமைச்சரான கமல் நாத், லாட்டரி சீட்டு வியாபாரிகளையே விஞ்சும் வகையில் இப்படி அறைகூவி அழைக்கிறார். உழைக்கும் மக்களாகிய நம்மை அவர் அழைக்கவில்லை.

10_2006.jpg

காசுமீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா நகருக்கு அருகில் இருக்கும் சாஹல்பதி கிராமத்தைச் சேர்ந்த குலாம் மொஹைதீன் என்பவரும், ருபினா என்ற 14 வயது சிறுமியும் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி அதிகாலையில், ""ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்'' என்ற துணை இராணுவப்படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று அதிகாலையில் விறகு பொறுக்குவதற்காகக் காட்டுக்குள் சென்றதுதான் அவர்கள் செய்த ""குற்றம்''; அதற்குத்தான் இந்த மரண தண்டனை!

9_2006.jpg

ஏகாதிபத்தியத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்க சோசலிசமே ஒரே தீர்வு என்ற சிந்தனைக்கு மக்கள் சென்றுவிடக்கூடாது என்று தடுப்பதற்காகவும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள கைக்கூலி அமைப்புதான் உலக சமூக மன்றம் (ஙிகுஊ). ஃபோர்டு பவுண்டேசன், ராக்பெல்லர் புவுண்டேசன் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகள்,

9_2006.jpg

கரூர் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களை மலத்தில் மொய்க்கும் ஈக்களைப் போல் கந்துவட்டிக் கொள்ளைக் கும்பல் மொய்த்து உறிஞ்சும் கொடுமை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏறக்குறைய எல்லாத் துப்புரவு தொழிலாளர்களுமே இந்தக் கும்பலிடம் சிக்கியுள்ளனர். அத்தகைய கும்பல்களில் ஒன்றுதான் கரூர்

9_2006.jpg

சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையின் எதிரே அமைந்துள்ள திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடுவதை தில்லைவாழ் தீட்சிதர்கள், சாதிவெறி கொண்டு தடுத்து வருவதையும்; அப்பார்ப்பனக் கும்பலின் விருப்பத்துக்கு ஏற்ப சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம், சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல

9_2006.jpg

ஏழை நாடுகளின் விவசாயத்திலும், தொழில்துறையிலும் தனியார்மயம் தாராளமயத்தை எவ்விதத் தடையுமின்றி, இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்காக உலக வர்த்தகக் கழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. ""தோஹா வளர்ச்சித் திட்டம்'' என்று அழைக்கப்படும் இப்பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டும் பொருட்டு கடந்த ஜூலை மாதம்

9_2006.jpg

திருச்சியில் கணினி மையங்களில் கல்லூரி மாணவிகளை ஆபாசப் படமெடுத்த காமவெறியன் லியாகத் அலியைத் தூக்கிலிடக் கோரி கடந்த ஜூன் மாதத்தில் பெண்கள் விடுதலை முன்னணி சுவரொட்டி பிரச்சார இயக்கத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 25ஆம் தேதி லியாகத் அலி சார்பில் அவனை பிணையில் விடக் கோரி நீதிமன்றத்தில் மனு

9_2006.jpg

இயற்கை வளமும் இலக்கியச் செழுமையும் கொண்ட, கனவுகளின் தேசமாகச் சித்தரிக்கப்பட்ட லெபனான் இன்று நொறுங்கிக் கிடக்கிறது. ""முறிந்த சிறகுகள்'' வழங்கிய உலகப் புகழ் பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரானின் லெபனான், இப்போது மீண்டும் சிறகுகள் முறிக்கப்பட்டு துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 13ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலிய பயங்கரவாதிகள் லெபனான் மீது தொடுத்த

9_2006.jpg

 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளைக்காரன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசிகளான காங்கிரசிடமும் முஸ்லிம் லீகிடமும் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். அந்தப் போலி சுதந்திரத்துக்கு வயது 60.

9_2006.jpg

ரேஹான் அகமது ஷேக், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் (என்.ஆர்.ஐ.). அவர், தனது மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தார். அவர் மும்பய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய மறுநிமிடமே, மைய அரசின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாலும்; மகாராஷ்டிர போலீசு அதிகாரிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டு, மும்பய் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்

9_2006.jpg

"பொதுவில் சொன்னால், குற்றவாளிகளில் பலர் சூழ்நிலைக்குப் பலியானவர்கள்தாம்'' இப்படிச் சொன்னவர் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையான இரண்டு பெண்களுக்கான மறுவாழ்வு ஆணைகளை வழங்கிய அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

9_2006.jpg

"எங்கள் குளிர்பானம்தான் நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பனது'' என்று தன்னிலை விளக்கமளிக்கும் விளம்பரங்களைப் பக்கம் பக்கமாக முன்னணி செய்தி ஏடுகளில் வெளியிடுகின்றன கோக்பெப்சி குளிர்பானக் கம்பெனிகள். ஒவ்வொரு நாளும் விளம்பரத்துக்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்து சந்தை ஆதிக்கத்தைப் பிடித்து வைத்திருக்கும் அக்கம்பெனிகள், அது மணல்கோட்டையைப் போல சரிந்து விழுவதைத் தடுக்க இப்படி விளம்பரம் செய்கின்றன.

9_2006.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை சிங்கள இனவெறி பாசிச அரசுக்கும் இடையிலான போர் நிறுத்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நான்காண்டுகளுக்குப் பிறகு எவ்வித சடங்கும் முன்னறிவிப்பும் இல்லாமல் முடிவுக்கு வந்துவிட்டது. எந்தத் தரப்பும் கிரமமாகப் பிரகடனம் செய்யாத உக்கிரமான போர் ஈழத்தில் நான்காவது

9_2006.jpg

டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ நிறுவனம், அமெரிக்க கோக்பெப்சி முதலான குளிர்பானங்களில் அளவுக்கதிகமாக நஞ்சு கலந்துள்ளதை ஆதாரங்களோடு மீண்டும் நிரூபித்துள்ளதையடுத்து, நாடெங்கும் கோக்பெப்சி எதிர்ப்புணர்வும் போராட்டங்களும் பெருகத் தொடங்கியுள்ளன. கேரள மாநில அரசு கோக் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதித்துள்ளது. குஜராத், கர்நாடக அரசுகள் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

08_2006.jpg

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க. அரசு சட்டம் இயற்றியுள்ள போதிலும், கண்டதேவியில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குத் தேர்வடம் பிடிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு, அவர்களது வழிபாட்டு உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று நடந்த தேரோட்டம், தேவர் சாதிவெறியர்களின் அதிகாரத் திமிரை நிலை நாட்டும் திருவிழாவாக புதிய பரிமாணத்தை இவ்வாண்டில் எட்டியுள்ளது.

08_2006.jpg

ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சொல்லும் பொருளாதார வளர்ச்சியானது, நாட்டின் மிக அற்பமான முதலாளித்துவப் பிரிவினரின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது என்பதை ""வல்லரசாகும் இந்தியா'' கட்டுரை செறிவாக விளக்கியுள்ளது. எனினும், உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தரம் அதலபாதாளத்திற்கு வீழ்ந்துள்ளதைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் தொகுத்தளித்து எழுதப்படாததால் இக்கட்டுரை முழுமையைத் தரவில்லை.

ஜீவா, சென்னை.

08_2006.jpg

பெண்கள் விடுதலை முன்னணி ஆவேசம் தனியார்மயமும் தாராளமயமும் பரப்பும் ஏகாதிபத்திய நுகர்வு வெறியானது, பெண்களையும் நுகர்பொருளாகப் பார்க்கும் வக்கிர வெறியாக மாறி, நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் ஆபாச வக்கிரவெறியாட்டங்களும் தீவிரமாகிவிட்டன. தமிழகத்தில் உள்ள பல கணினி ப்ரவுசிங் மையங்கள் நீலப்பட அரங்குகளாகிவிட்டன.

08_2006.jpg

ஆண்டிப்பட்டி வட்டார மக்களைத் துன்புறுத்தி வந்த பால்சாமி என்ற கிரிமினலின் கொலையோடு தொடர்புபடுத்தி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தோழர் செல்வராசு உள்ளிட்ட வி.வி.மு. தோழர்கள் பத்து பேரை 3.7.06 அன்று மதுரை உயர்நீதி மன்றம் விடுதலை செய்திருக்கிறது. சாட்சியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை வழக்குரைஞர்கள் நிரூபித்த போதிலும், அதனைக் கணக்கில் கொள்ளாமல் 27.2.03

08_2006.jpg

கடலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் செயற்பட்டு வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (ஏகீகஇ), ""மனித உரிமை காப்போம்! மக்கள் விடுதலைக்கு அணிவகுப்போம்!'' என்ற முழக்கத்துடன் தனது கோவை மாவட்டக் கிளை தொடக்க விழாவை கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று நடத்தியது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். ராஜு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மனித

08_2006.jpg

சிக்குன்குன்யா மனிதனை முடமாக்கிவிடும் கொடிய நோய். ""ஏடீஸ் அஜெப்டி'' எனப்படும் கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் நோய், கடந்த நான்கு மாதங்களாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோரைத் தாக்கி படுக்கையில் வீழ்த்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்நோய் பரவி, சத்திரப்பட்டி வட்டாரத்தில் மட்டும் 19 பேரின் உயிரைக்

08_2006.jpg

தூத்துக்குடி மாவட்டம், கே.வேலாயுதபுரம் கிராமத்தின் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் மீது ஒரு உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள். அந்த ஊரில் தலித் மக்களின் எண்ணிக்கை 200. சாதி இந்துக்களின் மக்கள் தொகையோ 2000.

08_2006.jpg

தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சிவபக்தன் நந்தன் வாழ்ந்த தமிழகத்திற்கும், தற்போதைய தமிழகத்துக்கும் எத்தனையோ வேறுபாடுகள். மாற்றங்கள் இருந்தாலும், தில்லைவாழ் தீட்சிதர் பரம்பரை மட்டும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மாறியதாகத் தெரியவில்லை. ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் நடராசர் கோவிலைத் தங்கள் பூணூலில் சுருட்டி வைத்திருக்கும் தீட்சிதர்களின் சாதிவெறியை எதிர்த்து,

08_2006.jpg

குர்கான்'' இந்தப் பெயரைத் தன்மானமிக்க தொழிலாளர்களால் ஒருக்காலும் மறந்துவிட முடியாது. இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களுக்கு ""ஹோண்டா'' நிறுவனத் தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலும்; அதை எதிர்த்து அத்தொழிலாளர்கள் நடத்திய வீரச்சமரும்தான் நினைவுக்கு வரும். ஹோண்டா தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஏதோ விதிவிலக்காக நடந்துவிட்ட போலீசின் அத்துமீறல் அல்ல.

08_2006.jpg

நிலப்பிரபுத்துவ எதிர்ப்புஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதுதான் நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியம்; என்றாலும், நேபாள மக்கள் ஜனநாயகப் புரட்சி தற்போது ஒரு புதிய இடைக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது

08_2006.jpg

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள விதர்பா பகுதிக்கு, கடந்த ஜூன் மாத இறுதியில் வந்து போன பிரதமர் மன்மோகன் சிங், ""அப்பகுதி விவசாயிகள் கடனில் மூழ்கி நொடித்துப் போயிருப்பதையும்; அப்பகுதி பருத்தி விவசாயம் நாசமாகி வருவதையும்'' ஒப்புக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ""பொருளாதாரப் புலி'' மன்மோகன் சிங், தன் கண்களால் பார்த்து இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு, ஏறத்தாழ 650 பருத்தி விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

08_2006.jpg

மும்பை ஜூலை 11, மாலை 6.24 மணி தொடங்கி 6.31 மணி வரை ஏழு நிமிடங்களில் ஏழு தொடர் வண்டிகளில் நடந்த ஏழு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் 200 முதல் வகுப்பு பயணிகளைப் பலிகொண்டு, 800 பேர்களைப் படுகாயமுறச் செய்த கோரங்களைச் செய்தி ஊடகங்கள் நிறையவே விவரமாகச் சித்தரித்துவிட்டன.

08_2006.jpg

இந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் "இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் உண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது.

07_2006.jpg

டந்த 58 ஆண்டுகளாக தமது சொந்த மண்ணை இழந்து கொடுந்துயரங்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்கள் இன்று பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். உண்ண உணவில்லை; குழந்தைகளுக்குப் பால் இல்லை; மருத்துவமனைகளில் மருந்து இல்லை; ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை; தாங்கள் உழுது

07_2006.jpg

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள பூதலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாரனேரி என்கிற கிராமத்தில் சுப்ரமணியன் என்ற சாதிவெறி பிடித்த மிருகம், தனது மகனையே கொன்று எரித்துள்ளது. இந்த மிருகம் ஆதிக்க சாதிகாரன் என்றோ, பெரும்பணக்காரன் அல்லது பண்ணையார் என்றோ கருதிவிட வேண்டாம். 20 ஆண்டுகளாக சி.பி.எம். கட்சியில் "தீவிரமாக' செயல்பட்டு வருபவர். தாழ்த்தப்பட்ட சாதியான

07_2006.jpg

தமிழகமெங்கும் எல்லா அரசுப் பள்ளிகளிலும் நன்கொடை என்ற பெயரில் பெற்றோர்ஆசிரியர் கழகம், கட்டாய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இச்சட்ட விரோதப் பகற்கொள்ளைக்கு எதிராக தருமபுரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம், தட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சான பிரச்சாரத்தை நடத்தி வந்தது.

07_2006.jpgஉழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுவது, பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் மறியல் நடத்துவது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது இப்படி இதுநாள் வரை அரசியல் சாசனத்தில் இருந்துவந்த சட்டபூர்வ ஜனநாயக உரிமைகளை அடுத்தடுத்து நீதிமன்றம் சட்டவிரோதனமானதாக அறிவித்து வருகிறது. இத்தீர்ப்புகள் ஒருபுறமிருக்க, இந்தியக் குற்றவியல் சட்டத் தொகுப்பையே ""பொடா''விற்கு இணையாகத் திருத்தி எழுதும் முயற்சியில் மைய அரசு

07_2006.jpg

மாங்கல்ய திட்டம்; இது ஆட்சியாளர்கள் அறிவித்துள்ள புதியதொரு திருமண உதவித் திட்டம் அல்ல; நகைக்கடைக்காரர்கள் விளம்பரப்படுத்தியுள்ள புதியதொரு நகை சேமிப்புத் திட்டமும் அல்ல. மோசடி சீட்டுக் கம்பெனிக்காரர்கள் ""வாழ்க வளமுடன்'' என்ற பெயரில் தொழில் நடத்துவதைப் போல, இளஞ் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்ட பஞ்சாலைநூற்பாலை முதலாளிகள் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர்தான் மாங்கல்ய திட்டம்.

07_2006.jpg

மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து மூலிகைகளில் குளித்துவரும் பவானி ஆறு இன்று சாக்கடைக் கழிவாக மாறிவிட்டது. திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகளால் நொய்யல் ஆறு நாசமாக்கப்பட்டதைப் போலவே, பவானி ஆறும் துணி ஆலை காகித ஆலை முதலாளிகளால் நச்சுக் கழிவுச் சாக்கடையாக மாறியுள்ளது.

07_2006.jpg

பெட்ரோல் டீசல் விலையேற்றத்தின் மூலம் மக்கள் மீது மிகப்பெரும் பொருளாதாரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள காங்கிரசு கூட்டணி அரசை எதிர்த்து, 17.6.06 அன்று மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு. பொருளாளர் தோழர்

07_2006.jpg

சட்டசபைத் தேர்தல்கள் முடியும்வரை காத்திருந்துவிட்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதன் மூலம், மக்களின் முதுகில் குத்தும் நம்பிக்கை துரோகிகள்தான் காங்கிரசு கும்பல் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கோதுமை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கும்பொழுது, எரிகிற நெருப்பில்

07_2006.jpg

போதை மருந்தை வாங்கி உட்கொண்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ராகுல் மகாஜனின் கதையை, முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ""செண்டிமென்ட்'' கலந்து கொடுத்தன. அந்த 31 வயது இளைஞனின் தந்தை பிரமோத் மகாஜன், தனது சொந்த தம்பியாலேயே சுடப்பட்டு இறந்து போன சோகம் மறைவதற்குள்ளாகவே, மகாஜன் குடும்பத்தைத் தாக்கிய இரண்டாவது பேரிடியாக, இந்த விவகாரத்தை முதலாளித்துவ பத்திரிகைகளும், ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளும் சித்தரித்து வருகின்றனர்.

07_2006.jpg

மாற்று இயக்கத்தினர் மீது இட்டுக்கட்டி அவதூறும் பொய்யும் புனைச் சுருட்டும் பரப்புவதாலேயே மட்டும் எந்தவொரு இயக்கமும் வளர்ந்துவிட முடியுமா? அப்படித்தான் நம்புகிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், இடஒதுக்கீடாகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், இந்தத் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை ""அப்படியே'' ஏற்காதவர்களை எதிரிகளோடு இணைவைத்து முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள். குறிப்பாக, புதிய ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தினரிடம் மட்டும் இந்தச் சிறப்பு அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்.

07_2006.jpg

குஜராத்தில் 2002இல் நடந்த பார்ப்பன பயங்கரவாத வெறியாட்டத்தின் போது, கீதாபென் என்ற இந்துப் பெண் பார்ப்பன பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டார். ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான் அவர் செய்த "குற்றம்'! இன்றும் அதேபோல் ஒரு காதல் விவகாரம்; அதே வெறியாட்டம். ஆனால், இந்து வெறியர்களின் இடத்தில் முசுலீம் மதவெறியர்கள். கீதாபென்னின்

07_2006.jpg

"இந்தியா ஒரு பொருளாதார மேல்நிலை வல்லரசாக உருவாகி வருகிறது'' என்ற செய்தி, ஊடகங்களில் நிரம்பி வழிகின்றது. குலுக்கித் திறக்கப்பட்ட ""பீர்'' பாட்டிலைப் போல இந்தியப் பொருளாதாரத்தின் ""வளர்ச்சி'' குறித்த மகிழ்ச்சியில் பத்திரிகைகள் புள்ளி விவரங்களால் பொங்கி வழிகின்றன.

07_2006.jpg

நாட்டை மீண்டும் காலனியாக்குவதில் போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது, ஐக்கிய முற்போக்கு ஏலக் கம்பெனி. சில்லறை வியாபாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்குத் தாராள அனுமதி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தம் விருப்பம் போல் சட்டங்கள் விதிகளை வகுத்துக் கொண்டு "கும்பினியாட்சி' நடத்தத் தாராள அனுமதி,

07_2006.jpg

ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹதிதா என்ற சிறு நகரம், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடும் சன்னி பிரிவு முசுலீம் போராளிகளின் செல்வாக்கு நிறைந்த பிராந்தியம். இதன் காரணமாகவே ஹதிதா, அமெரிக்க இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அதிகாலை நேரத்தில் இந்நகரைச் சேர்ந்த 23 ஈராக்கியர்கள் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இறந்து போனார்கள். அகால மரணமடைந்த இந்த 23 பேரில், மூன்று குழந்தைகள், ஏழு பெண்கள், மற்றும் நடக்கவே முடியாத முதியவர் ஒருவரும் அடங்குவார்கள்.

06_2006.jpg

""இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போரில் தமிழகமும் குதிக்கிறது; 25.5.06 அன்று சென்னை  வாலாஜா சாலை அருகே ஆர்ப்பாட்டம்; சமத்துவத்துக்காகக் குரல் கொடுக்க அணிதிரளுங்கள்'' என்று இரு நாட்களுக்கு முன்னதாகவே பார்ப்பனமேல்சாதி வெறிக் கும்பல், இணையதளம் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் செல்ஃபோன்களுக்கு குறுந்தகவல் அனுப்பியும் மேட்டுக்குடியினரை நூதனமுறையில் பிரச்சாரம் செய்து அணிதிரட்டியது. பெரியார் பிறந்த மண்ணில்

06_2006.jpg

இந்திய நாட்டைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, மே 22ஆம் தேதி வழக்கம் போலவே விடிந்து, வழக்கம் போலவே முடிந்துபோன சாதாரண நாள். ஆனால், பங்குச் சந்தை தரகர்களோ அந்த நாளை, ""கருப்பு திங்கட்கிழமை'' என அழைக்கிறார்கள். அன்றுதான், வீங்கிப் போய்க் கொண்டே இருந்த மும்பய் பங்குச் சந்தை, 1,100 புள்ளிகள் சரிந்து விழுந்தது. பங்குச் சந்தை சூதாட்டத்தின் தலைநகராக விளங்கும் அகமதாபாத்தில் திவாலான பங்குச் சந்தை வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத்

06_2006.jpg

மைய அரசின் உதவி பெறும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), இந்திய மேலாண்மைக் கழகம் (ஐ.ஐ.எம்), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மையம் (எ.ஐ.ஐ.எம்.எஸ்), ஜிப்மர் முதலான உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவிருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் அண்மையில்

06_2006.jpg

மே நாள்  அரசியல் ஆர்ப்பாட்ட நாள் என்பதை மறைத்து, கோலாகலத் திருவிழாவாக ஆண்டுதோறும் ஓட்டுப் பொறுக்கிகள் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு தேர்தல் திருவிழா காரணமாக அந்த மே நாள் கொண்டாட்டத்தைக் கூட புறக்கணித்து விட்டனர். இந்நிலையில் ""தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பாசிச கருப்புச் சட்டங்களை முறியடிப்போம்! தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்துவோம்! உலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க மேல்நிலை வல்லரசைத் தகர்த்தெறிவோம்!'' என்ற

06_2006.jpg

ஓட்டுப் பொறுக்கிகளின் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சிசெய்!'' என்ற முழக்கத்துடன் தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக கடந்த ஏப்ரல்  மே மாதங்களில் நடத்தின. ஓட்டுப் போடுவதும் ஓட்டுப் போடாமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால், தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்வதையே ஏதோ சட்டவிரோத  தேசவிரோத பயங்கரவாதச் செயலாகச் சித்தரித்து, போலீசு பல பகுதிகளில் தடைவிதித்ததோடு, முன்னணியாளர்கள் மீது பொய்வழக்கு சோடித்து கைது செய்து சிறையில் அடைத்தது.

06_2006.jpg

இந்தியாவின் அறிவிக்கப்படாத காலனியாக உள்ள காசுமீரில் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ள விபச்சார பூகம்பம், "தேசபக்தி'யின் பெயரால் நடக்கும் காமவெறி பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டிவிட்டது.

 

            கடந்த மார்ச் மாத மத்தியில் சிறீநகரின் கர்ஃபாலி மொஹல்லா பகுதியைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி யாஸ்மீனாவின் நீலப்பட சி.டி. இப்பகுதியில் புழங்குவதாகக் கூறி,

06_2006.jpg

ஆளரவமற்ற அடர்ந்த காடு. இருபுறமும் புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அம்மண்ணின் மைந்தரான மர்விந்தாவும் அவரது குடும்பமும் தமது கிராமத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தனர். தமது வீட்டையும் தோட்டத்தையும் பார்த்து விட்டு மாலைக்குள் திரும்பிவிட வேண்டுமென்ற அவசரத்தில் அவர்கள் வேகமாக நடந்தனர். இருளிபலாம் கிராமத்தை அடைந்த போது துக்கம் அவர்களது தொண்டையை அடைத்தது. அங்கே எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தமது குடிசையைக் கண்டதும் ""ஓ''வெனக் கதறி அழுதனர்.

06_2006.jpg

எந்தச் சாதியில் பிறந்தவராக இருப்பினும் தகுதியான நபர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகராக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற விருப்பதாக தி.மு.க. அமைச்சரவை அறிவித்துள்ளது. 1972இல் இதே சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தபோது, சங்கர மடம் மற்றும் ஆதீனங்கள் ஒன்றிணைந்து இதற்கெதிரான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் பெற்றன. ஆகம விதிகளின் அடிப்படையில் அமைந்த கோயில்களில் பார்ப்பனரல்லாத யாரும் அர்ச்சகராக முடியாது என்ற இந்தத் தீண்டாமைக் கோட்பாட்டை "இந்து மத உரிமை' என்ற பெயரில் அங்கீகரித்தது அன்றயை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு.

06_2006.jpg

மதம் மற்றும் மொழிச் சிறுபான்மை தகுதி கொண்ட தனியார் கல்லூரிகள் தவிர்த்து, பிற சுயநிதிக் கல்லூரிகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்திருத்தமொன்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில்

06_2006.jpg

கடந்த 25 ஆண்டுகளாகப் புரட்சிகர இயக்கத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் ஊக்கமுடன் செயல்பட்டு வந்த கோவை  கணபதியைச் சேர்ந்த தோழர் நா.இராமமூர்த்தி, கடந்த 9.5.06 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 47வது வயதில் மரணமடைந்து விட்டார்.

06_2006.jpg

வடநாட்டில் இப்போது கோதுமை அறுவடைக் காலம். விவசாயிகள் அறுவடைத் திருவிழாக்களைக் கொண்டாடும் நேரம். அத்திருவிழாக்களைத் தொடர்ந்து, பல விவசாயக் குடும்பங்களில் இளைஞர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும் காலம். ஆனால், ஆயிரமாயிரம் கனவுகளோடு அறுவடையை முடித்த விவசாயிகளின் நெஞ்சில் இடியென இறங்கியுள்ளது விலை வீழ்ச்சியும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையும்.

06_2006.jpg

அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவியும், தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அக்கட்சி கருதும் அம்மா(!) ஆட்சி அதிகாரத்தை இழந்த 15 நாட்களில் 75க்கும் மேலான அக்கட்சித் தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டோ, மாரடைப்பாலோ மரணமடைந்துள்ளார்கள்.

06_2006.jpg

அந்நிய ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் மறுகாலனியாதிக்கமே நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளைத் தீர்மானிப்பது என்றாகி விட்டது. அதன் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில் நாடாளுமன்ற  சட்டமன்ற ஜனநாயகமும் தேர்தல்களும், தனிநபர்வாதமாகவும் கலாச்சாரச் சீரழிவாகவும் மாறி வருவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, தமிழக அரசியல்.

06_2006.jpg

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பதவியேற்றவுடனேயே, தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 6,866 கோடி ரூபாய் பெறுமான கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இக்கடன் தள்ளுபடியைத் தனது தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. குறிப்பிட்டவுடனேயே, பல பொருளாதார வல்லுநர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க

06_2006.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வரையறுத்து, தடைசெய்யப்படும் அமைப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. அதோடு, சிறீலங்காவில் அமைதி முயற்சிகளை ஆதரித்து நிதியளிக்கும் அனைத்து நாடுகளின் கூட்டுத் தலைமை  அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நார்வே ஆகிய நான்கு நாடுகள் அடங்கியது 

06_2006.jpg

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட முகாசபரூர் என்ற கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்ததால் வாந்திபேதி

05_2006.jpg

தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கத்தை வீச்சாக நடத்தி வருகின்றன. துண்டுப் பிரசுரம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டம்கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும், தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார இயக்கத்தையொட்டி வெளியிடப்பட்ட ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!''

05_2006.jpg

மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் வழியே ஓடும் நர்மதை மற்றும் அதன் கிளை ஆறுகளில் 30 பெரிய, 135 நடுத்தர மற்றும் 3000 சிறு அணைக்கட்டுகள் கட்டி, ம.பி., குஜராத், மகாராஷ்டிரா, இராசஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் பாசன  குடிநீர் வசதிகள் உருவாக்கித் தரும் திட்டம் 1980களில் தீட்டப்பட்டது. இத்திட்டத்தில் சர்தார் சரோவர் மற்றும் நர்மதா சாகர் என்ற இரு அணைகள்தான் முக்கியமானவை.

05_2006.jpg

மும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், ஒரு பண்ணை வீடு உள்ளிட்ட ரூ. 45 கோடி மதிப்புடைய சொத்துக்கள்; விஷால் டிராவல்ஸ் என்ற பெயரில் சொகுசுப் பேருந்துகள்; மனைவி பெயரில் சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு; துபாயில் நடன விடுதி கொண்ட நட்சத்திர ஓட்டலின் பங்குதாரர்; மனைவி பெயரில் கோடிகளைப் பரிமாற்றம் செய்யும் சீட்டுக் கம்பெனி; 4 வங்கிக் கணக்குகள் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 கோடிக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுக்கும் பைனான்சியர்....

05_2006.jpg

"கல்லூரிக் கல்வியும் ஆங்கிலம் பேசும் ஆற்றலும் கொஞ்சம் கணினி அறிவும் இருந்தால் கால் சென்டர்களில் ஆயிரமாயிரமாய் சம்பாதிக்கலாம்; வேலை செய்து கொண்டே படித்து மேலும் மேலும் முன்னேறலாம்; அமெரிக்க வாழ்க்கையை இங்கேயே வாழலாம்; அதிருஷ்டமிருந்தால் அமெரிக்காவுக்கே போய்விடலாம்'' என்று பத்திரிகைகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. ""கால் சென்டர்கள்தான் நவீன இந்தியாவின் கோயில்கள்'' என்று மொத்தப்

05_2006.jpg

அபாயகரமான ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரெஞ்சு இராணுவக் கப்பல், இந்தியாவில் உடைக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சமீபத்தில் போராடின. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம், ""இது குறித்து யாரும் எந்தக் கருத்தும் கூறக் கூடாது'' என உத்தரவு போட்டது. நமது நாட்டில் கருத்துரிமை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.

05_2006.jpg

"தெருப் போராட்டங்களின் ஆட்சி நடைபெறுகிறது; அதிபர் சிராக்கே, பதவியை விட்டு விலகு!'', ""அதிபர் சிராக்கே, தெருப் போராட்டங்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதே!'' கடந்த மூன்று மாதங்களாக இப்படிபட்ட போராட்ட முழக்கங்கள் பிரான்சு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்து, பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆளுங் கும்பலின் வயிற்றைக் கலக்கி வந்தன.

05_2006.jpg

மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு சோர்வில்லாமல் பணியாற்றிய தோழர் மயிலாடுதுறை ஸ்டாலின், கடந்த 20.2.06 அன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறினால் மரணமடைந்தார். சாதிமதச் சடங்குகளின்றி நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தோழர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த9.4.06 ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் தோழர் ஸ்டாலினது படத்திறப்பும் சிவப்பஞ்சலிக் கூட்டமும் தஞ்சை ம.க.இ.க. தோழர்களால் நடத்தப் பெற்றன. ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, தோழர் ஸ்டாலினது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். மயிலாடுதுறை பெரியார் பகுத்தறிவு மையத் தலைவர் தோழர் நாக.இரகுபதி, கவிஞர் தோழர் துரை.சண்முகம், சீர்காழி வட்ட வி.வி.மு. தோழர் அம்பிகாபதி, தமிழர் உரிமை இயக்கத் தலைவர் திரு.முரளி, இரயில்வே அலுவலர் திரு.கிருட்டிணன் ஆகியோர் தோழர் ஸ்டாலின் அவர்களின் உயரிய பண்புகளை நினைவு கூர்ந்தனர்.

05_2006.jpg

வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சிக்கு வந்தபின் வஞ்சிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடிவதில்லை. தமது விருப்பத்தையும் விதியையும் நிறைவேற்றாத ஓட்டுக்கட்சிகளையும் ஆட்சியாளர்களையும் அடுத்தடுத்த போராட்டங்களில் மக்கள் தூக்கியெறிகிறார்கள். மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்தாத பழைய வகைப்பட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் மக்களின் நம்பிக்கையை இழந்து செல்லாக் காசாகி விட்டன.

05_2006.jpg

ஜனநாயகத்தின் பெயரால் ஓட்டுப் பொறுக்கிகள் எழுப்பும் இரைச்சலில் ஒரு ஜனநாயகப் படுகொலை குறித்த தீர்ப்பு சத்தமில்லாமல் புதைக்கப்பட்டிருக்கிறது. "மேலவளவுப் படுகொலை' என்று அறியப்படும் தலித்துகள் மீதான வன்கொடுமைப் படுகொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கள்ளர் சாதிவெறியர்கள் 17 பேரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து, அவர்களுடைய தண்டனையை உறுதி செய்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்.

05_2006.jpg

அழுகி நாற்றமெடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் என்ற சொற்றொடரின் முழுமையான பொருளை ஒரு இலக்கியம் போல உய்த்துணர்வதற்கு யாரேனும் விரும்பினால், அவர்கள் உடனே தமிழகத்திற்கு வரவேண்டும்.

            ""தோற்பது நானாக இருந்தாலும் வெல்வது பொறுக்கி அரசியலாக இருக்க வேண்டும். வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது சீரழிவாக இருக்க வேண்டும்'' என்ற கொள்கையுடன் ஓட்டுப் பொறுக்கி அரசியலை அடியாழம் காணமுடியாத அதல பாதாளத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார், புரட்சித்தலைவி.

05_2006.jpg

 "வெற்றி! மகத்தான வெற்றி! நேற்றுவரை மன்னரின் தயவில் மக்கள்; இன்று எங்கள் தயவில்தான் மன்னர்!'' என்று எக்காளமிட்டு நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலுள்ள நாராயணன்ஹிதி அரண்மனை வாயிலருகே தர்பார் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்ட வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினர். ""இனி இந்த அரண்மனை மன்னரது சொர்க்கபுரி அல்ல;

05_2006.jpg

"தாமிரவருணி எங்கள் ஆறு! அமெரிக்க "கோக்'கே வெளியேறு! தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!''  என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கங்கைகொண்டானில் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் இணைந்து நடத்திய போராட்டம், ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது.

05_2006.jpg

எப்படியாவது ஓட்டு வாங்கி, தேர்தல்களில் வெற்றி பெற்று பதவியைப் பிடிக்க வேண்டும்; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அரசியல் கட்சிக்காரர்கள். வாக்காளர்களின் கால்களைப் பிடித்தும் கெஞ்சுவார்கள்  அப்படியும் செய்திருக்கிறார்கள்! ஆனால், ஒன்றை மட்டும் செய்யவே மாட்டார்கள்!

05_2006.jpg

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்று ஒரு குரல், உறுதியான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒன்றில்லாவிட்டால், மற்றொரு கட்சிக்கோ, அணிக்கோ ஓட்டுப் போடுவதற்குப் பதில் ஒட்டு மொத்தமாகத் தேர்தல்களையே புறக்கணிக்கக் கோருகிறது. ஏன் இப்படி வித்தியாசமான குரல், தனித்த குரல்? அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை இழந்து, ஆத்திரம் பொங்கி, வெறும் விரக்தியால்? அரசியல் கட்சிகளும் அரசும் கூறுவதைப் போல வேலையற்றவர்களின் வெறும் தீவிரவாத முழக்கமா? இல்லை, ஓட்டுக் கேட்டு வரும் அரசியல் கட்சிக்காரர்களைப் போல, ஏதாவது ஆதாயம் தேட முன்வைக்கப்படும் முழக்கமா?  ""தவறாமல் ஓட்டுப் போடுங்கள்'' என்று அரசு பிரச்சாரம் செய்வதிலாவது ஒரு உள்நோக்கம் இருக்கிறது. ஒருமுறை ஓட்டுப் போட்டு விட்டால், உங்கள் சம்மதத்தோடுதான் இந்த அரசு செயல்படுகிறது என்று எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளலாம். ""எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்'' என்று அரசியல் கட்சிகள் கேட்பதிலாவது அவற்றுக்கு ஆதாயம் இருக்கிறது.

05_2006.jpg

மக்களுக்காகப் போராடும் ஒரே கட்சி, உழைக்கும் மக்களின் கட்சி என்றெல்லாம் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு, ""அரசியல சாக்கடை சாக்கடைன்னு சொல்லிகிட்டு இருந்தா, அப்புறம் யார்தான் அத அள்றது? நாமதான் தோழர்களே தூர் வாரணும்! எனவே கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களிக்க வாருங்கள்!'' என்று ""ஆனந்த விகடன்'' இதழில் அழைப்பு விடுத்திருந்தார்.

04_2006.gif

ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதி, சாதிமத அடையாளங்களை முற்றாக விலக்கிய மதச்சார்பின்மை, சோசலிசத்தின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும்  என தியாகத் தோழர் பகத்சிங் தோற்றுவித்த புரட்சிகர கம்யூனிச பாரம்பரியத்தை என்றென்றும் கட்டிக் காப்போம்; ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடி நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது இன்னுயிரை ஈந்த அளப்பரிய தியாகம்,

04_2006.gif

அனைத்துலக மகளிர் தினத்தன்று (மார்ச் 8), அதன் உண்மையான நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி எனும் புதிய அமைப்பு உதயமானது. தோழர் இந்துமதி தலைமையில் நடந்த இவ்வமைப்பின் தொடக்க விழாவில், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் சிறப்புரையாற்றி வர்க்கப் போராட்டத்தில் முன்னணியாகத் திகழ வாழ்த்தினார். வேலூர், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக அமைப்பு ரீதியாகப் பெண்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கி, வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் தேர்வைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் பெண்கள் விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதியேற்றனர். திரளாக வந்திருந்த உழைக்கும் வர்க்கப் பெண்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்த இத்தொடக்கவிழா, பெண்கள் அமைப்பு ரீதியாகத் திரள வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. பாதை விரிந்து கிடக்க, புரட்சிப் பயணத்தில் பெண்கள் விடுதலை முன்னணி தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.

04_2006.gif

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தூக்கு மேடையேறிய தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் எந்தக் காலனியாதிக்கத்தை முறியடிக்கவும் அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டவும் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தார்களோ, அந்தக் காலனியாதிக்கம் இன்றும் புதிய வடிவில் தொடர்கிறது. அன்றைய காலனியாதிக்கத்தைவிட தற்போதைய மறுகாலனியாதிக்கம்; கொடூரமானது. தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் என்ற பெயரில் வந்துள்ள ஏகாதிபத்தியக் கொள்ளையையும் மறுகாலனியாதிக்கத்தையும் வீழ்த்தவும் விடுதலைப் போருக்கு அணிதிரளவும் அறைகூவி மாவீரன் பகத்சிங்கின் 75வது நினைவுநாளில் (மார்ச் 23) கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்களை எரிக்கும் போராட்டத்தை ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் அறிவித்தன.

04_2006.gif

ஜார்ஜ் புஷ் கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்து சென்றபொழுது, எந்தவொரு அமெரிக்க அதிபரும் சந்தித்திராத எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

            நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி, புஷ் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்லும் வரை, புஷ் எதிர்ப்பு இயக்கத்தைத் தமிழகத்தின் பல்வேறு, கிராமப்புறங்களிலும் நடத்தின. ""உலக மேலாதிக்கப் போர் வெறியன் புஷ்ஷே திரும்பிப் போ! சர்வதேச பயங்கரவாதி  போர் குற்றவாளி புஷ்ஷைத் தூக்கில் போடுவோம்'' என்ற முழக்கங்களை முன் வைத்து சுவரொட்டிகள், பிரசுரங்கள், விளம்பரத் தட்டிகள், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பேருந்துப் பிரச்சாரம் எனப் பல்வேறு வடிவங்களில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்பட்டது.

04_2006.gif

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் அமைந்துள்ள "லேணா திருமண மண்டபம்' நகரில் மிகப்பெரும் ஆடம்பரமான  வசதி படைத்தவர்கள் நாடும் திருமண மண்டபமாகும். அந்த மண்டபம் அமைந்துள்ள மதுரை சாலையில் 16.3.06 அன்று காலை 11 மணியளவில் சென்று கொண்டிருக்கையில் ""வைகை மணி இல்லத் திருமண விழா'' என்று பல வண்ணங்களில் ராட்சத வரவேற்பு போர்டுகள் திருமண மண்டபத்தின் முகப்பு வாயிலில் நிறுவப்பட்டிருந்தன. அனைத்து வரவேற்பு போர்டுகளை விட நல்ல சிவப்பு நிறத்தில் அரிவாள் சுத்தியலை வெள்ளை நிறத்தில் கம்பீரமாய் போட்டு' மேலாளர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களே!''.... இன்னும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை எல்லாம் பொறித்து அனைவரையும் வருக! வருக! என "கம்பீரமாக' வரவேற்றது சி.பி.எம். கட்சியின் விளம்பர போர்டு!

04_2006.gif

"ஹெச் 5 என் 1 (5N1); கொடூரமான பறவைக் காய்ச்சல் நச்சுக் கிருமி இறக்கை கட்டி பரவுகிறது. நீர்ப்பறவைகள் தங்களின் குளிர்காலப் புகலிடமான இந்தியாவின நீர்தேக்கங்களில் வந்திறங்க ஆரம்பித்து விட்டன. அடுத்த 10 வாரங்களில் சீனாவிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தெற்கு ஆசியாவை நோக்கி இடம் பெயரும். இந்த அழகான பறவை கூட்டத்தின் ஊடாகவே அவற்றின் உடலில் 61 மனித உயிர்களை காவு கொண்ட ஹெச் 5 என் 1 நச்சுக் கிருமிகளும்

04_2006.gif

இந்த ஆண்டிற்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கையை, ""உண்மையான இந்தியாவிற்கான பட்ஜெட்'' எனக் குறிப்பிட்டுள்ளார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். தாராளமயத்தை மிகத் தீவிரமாக ஆதரித்து எழுதிவரும் ""இந்தியாடுடே'' வார இதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், ""நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் மேல்தட்டு நடுத்தர வர்க்கம் மட்டும் இந்தியா அல்ல... இந்த பட்ஜெட் விவசாயிகளின் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறது'' எனக் கூறியிருக்கிறார்.

04_2006.gif

நாங்கள் பு.ஜ. இதழை பேருந்துகளில் விற்பனை செய்து கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த இரு வெளிநாட்டு மாணவர்கள், ஆர்வத்தோடு எங்களிடம் விளக்கம் கேட்டனர். பு.ஜ. இதழின் அட்டைப் படத்தைக் காட்டி பயங்கரவாத புஷ் இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து செய்தி வெளியாகியிருப்பதையும், அபுகிரைப் சிறைக் கொடுமைகளைப் பற்றியும் அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கினோம். , தாங்களும் அமெரிக்காவில் இப்பயங்கரவாதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டு, எங்கள் பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்தனர். பு.ஜ. விற்பனை மூலம் புஷ் எதிர்ப்பாளர்களைச் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி, எங்களுக்குப் பேருற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.

04_2006.gif

"ஜார்ஜ் புஷ்ஷை அமெரிக்காவின் மகாராஜாவாகவே கருதி உபசரித்தது இந்தியா'' என்று புஷ்ஷின் இந்திய வருகையைப் பற்றி எழுதியது ""நியூயார்க் டைம்ஸ்'' நாளேடு. புஷ் மகாராஜா என்றால் குறுநில மன்னன் அல்லது பாளையக்காரன் யார்? அது மன்மோகன் சிங்தான் என்பதை விளக்கத் தேவையில்லை. முன்னாள் உலக வங்கி அதிகாரியான மன்மோகன் சிங், தன்னுடைய எசமானிடம் கூனிக் குறுகிக் குழைந்து கும்பிடு போட்டுப் பல்லிளித்த காட்சியை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. சும்மா ஒரு தோரணைக்காகக் கூட "தான் ஒரு நாட்டின் பிரதமர்' என்பதைக் காட்டிக் கொள்ளாமல்,

04_2006.gif

 கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டு பத்திரிகைகள்  தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிக்கும் "தீவிரவாதி'களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைப் போல, அடையாளம் தெரியாதபடி தமது முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு, போராடும் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேட்டியளிப்பதைக் கண்டு தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

04_2006.gif

"துரோகி விஜயன் ஒழிக! காட்டிக் கொடுக்கும் நவீன "யூதாஸ்' விஜயன் ஒழிக! "பூர்ஷ்வா' விஜயன் ஒழிக!''  என்று முழங்கிக் கொண்டே பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் கடந்த மார்ச் மூன்றாவது வாரத்தில் கேரள மாநிலத்தில் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பின. கேரள மாநில சி.பி.எம். செயலாளரான பினாரயி விஜயனின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.

04_2006.gif

அண்மையில் எனது சொந்த கிராமத்துக்குச் சென்ற போது, ""டவுன்ல பொன்னி அரிசியப் பொங்கித் திங்கிற உங்களுக்கு தங்கமணி, சீரகச்சம்பா, குதிரவாலி, கிச்சடி சம்பா அரிசியெல்லாம் தெரியுமா தம்பி?'' என்று கேட்டார் எங்கள் கிராமத்து முதிய விவசாயி.

04_2006.gif

ஓட்டுக் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும், செய்தி ஊடகங்கள் வதந்திக் காற்றால்  விசிறி விடுவதாலும் தமிழக மக்களுக்கு மண்டைக் காய்ச்சல் ஏற்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வதானால், கடந்த ஆண்டு மத்தியிலேயே வாக்காளர் பட்டியல் திருத்த வேலையின் போதே தேர்தல் பரபரப்புகள் தொடங்கி விட்டன. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான கடைசி நாளன்று இலட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கத்தை கத்தையாக கொடுக்கப்பட்டன.

04_2006.gif

இதை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?

 

            ""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'', ""எங்கள் சிறுநீரகம் விற்பனைக்குத் தயார்!''  என மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் பல கிராமங்களில் அறிவிப்புப் பதாகையுடன் விவசாயிகள் தமது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் புதுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமது உடல் உறுப்புகளையும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் பகிரங்கமாக விற்பனை செய்யத் துணிந்து விட்ட விவசாயிகளின் இச்செயல், வழக்கம் போலவே செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இப்போது மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது.

03_2006.jpgடேவிட் இர்விங் பிரிட்டனைச் சேர்ந்த நாஜி வரலாற்றாசிரியர். 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்பார்த்து ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நீதிமன்றத்தின் முன் இவர் நின்று கொண்டிருக்கிறார். ""இலட்சக்கணக்கான யூதர்களை பெருங்களப்பலிக்கு (ஏணிடூணிஞிச்தண்வ) ஆளாக்கியதாக இட்லர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. உண்மையில் யூதர்களின் முன்னேற்றத்திற்குத்தான் இட்லர் உதவியிருக்கிறார்'' என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார் இர்விங். நாஜிகளின் போர்

03_2006.jpgஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பை பங்குச் சந்தை புள்ளிகள் 10,000ஐத் தாண்டி புதிய உயரத்துக்கு முன்னேறியது. அது மேலும் உயர்ந்து மேலே போய்க் கொண்டிருக்கிறது. ""பாய்ச்சல்; இதுவரை கண்டிராத வகையில் முரட்டுக் காளையின் மாபெரும் பாய்ச்சல்; பிப்ரவரி 6ஆம் தேதி, மும்பை பங்குச் சந்தையின் அதிருஷ்டநாள்!'' என்று பெரு முதலாளிகளும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் தரகர்களும் செய்தி ஊடகங்களும் குதூகலத்துடன் கொண்டாடினர். கோலாகலம், விருந்துகள், வாழ்த்துச் செய்திகள், பொருளாதார

03_2006.jpgமும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், ஒரு பண்ணை வீடு உள்ளிட்ட ரூ. 45 கோடி மதிப்புடைய சொத்துக்கள்; விஷால் டிராவல்ஸ் என்ற பெயரில் சொகுசுப் பேருந்துகள்; மனைவி பெயரில் சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு; துபாயில் நடன விடுதி கொண்ட நட்சத்திர ஓட்டலின் பங்குதாரர்; மனைவி பெயரில் கோடிகளைப் பரிமாற்றம் செய்யும் சீட்டுக் கம்பெனி; 4 வங்கிக் கணக்குகள் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 கோடிக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுக்கும் பைனான்சியர்....

03_2006.jpgமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நெல்லைகங்கைகொண்டான் கொக்கோ கோலா ஆலைக்கு, இயங்குவதற்கான உரிமத்தை மானூர் ஊராட்சி ஒன்றியம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியன்று வழங்கியுள்ளது. இந்தத் துரோகம் எப்படி நிறைவேறியது என்பதை, மறுநாள் (11.2.06) வெளியான நாளிதழ்களின் செய்திகளிலிருந்தே தொகுத்துத் தருகிறோம்.

03_2006.jpgபாயகரமான ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரெஞ்சு இராணுவக் கப்பல், இந்தியாவில் உடைக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சமீபத்தில் போராடின. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம், ""இது குறித்து யாரும் எந்தக் கருத்தும் கூறக் கூடாது'' என உத்தரவு போட்டது. நமது நாட்டில் கருத்துரிமை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.

03_2006.jpg

திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகள் அமெரிக்க டாலரைச் சம்பாதிப்பதற்காக நொய்யல் ஆற்றையே சாக்கடையாக மாற்றி, நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயத்தை அழித்ததை நாம் அறிவோம். நொய்யல் ஆற்றைப் போலவே, பவானி நதியும் துணி ஆலை அதிபர்கள், காகித ஆலை முதலாளிகளின் இலாபத்திற்காகச் சூறையாடப்பட்டு வருகிறது.

03_2006.jpgநார்வே தூதரின் ஏற்பாட்டின்படி, சுவிஸ் நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தைகள் கடந்த பிப்ரவரி இறுதியில் நடந்துள்ளது. மூன்று ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றி முடங்கிக் கிடந்த நிலையில் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

03_2006.jpg

விருத்தாசலம் அருகில் உள்ள ஆலிச்சிக்குடி, க.இளமங்கலம் கிராமங்களின் விவசாயிகளுக்கு ஊருக்குத் தெற்கே, கருங்குழி காட்டோடைக்குத் தென்புறம் சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயிகள் இந்த நிலங்களில் நெல்லும் கரும்பும் பயிரிட்டிருந்தனர்.

03_2006.jpg

கோக்கின் தலைமையிடமான அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் கோக்கிற்கு கொடுத்த அடியும், நெல்லையில் கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் கோக்கின் அதிகாரத் திமிருக்கு விழுந்த செருப்படியும் அமெரிக்க எதிர்ப்புணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சுகின்றன. விவசாயிகளை மேலும் போண்டியாக்கி நடுத்தெருவுக்குத் தள்ளும் ஒப்பந்த விவசாயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையின் கோரத்தை பஞ்சாபின் படிப்பினை எடுப்பாக உணர்த்துகிறது.

புரட்சித்தூயன், தருமபுரி.

03_2006.jpg

காங்கிரசு அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொள்வார்களா? ""மன்மோகனுக்கு மார்க்சிஸ்டுகள் குடைச்சல்'', ""சிதம்பரத்துக்கு நமைச்சல்'', ""நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புவார்கள் இடதுசாரிகள்'' என்பன போன்ற தலைப்புச் செய்திகளைப் படித்தால், அப்படி ஏதோ நடக்கப் போவதைப் போன்ற பிரமை ஏற்படத்தான் செய்கிறது. பிரமைகளை விடுத்து நாம் உண்மைகளைப் பரிசீலிப்போம்.

03_2006.jpg

வமானம்! தமிழகம் மிகப்பெரும் அவமானத்தைச் சுமந்து நிற்கிறது. தனது""பணப்புழக்க'' ஆட்சியில், போராடிய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களையும் மிருகத்தனமாக ஒடுக்கி வந்த பாசிச ஜெயா, தேர்தல் நெருங்கிவிட்டதும் இப்போது சலுகைகளை வாரியிறைக்கிறார். கடன்சுமை தாளமுடியாமல் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, ""வைப்பாட்டி வைத்திருந்த விசயம் வெளியே தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக''

03_2006.jpg

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, இந்தியப் பொருளாதாரமும் எல்லா உற்பத்தி மற்றும் விநியோகத் துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கி வருவதை நாமறிவோம். இந்தப் பொருளாதார அடிமைத்தனத்தை விஞ்சும் அளவில் அரசியல் மற்றும் இராணுவ அடிமைத்தனத்திற்கான சங்கிலிகள் நம்மீது பூட்டப்படுகின்றன. தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில், பாரதிய ஜனதாவைப் போலன்றி தன்னை ஒரு அமெரிக்க எதிர்ப்பாளனாக சித்தரித்துக் கொண்டது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

03_2006.jpg

இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்கப் போவதாகவும் முன்னேற்றப் போவதாகவும் கூறிக் கொண்டு உலக மேலாதிக்கப் பயங்கரவாதியும் அமெரிக்க அதிபருமான புஷ் நம் நட்டிற்கு வருவதும், இந்தப் போர்க் கிரிமினலுக்கு தேசத்துரோக காங்கிரசு கூட்டணி அரசு தடபுடலான வரவேற்பு அளிப்பதும் நம் அனைவருக்கும் நேர்ந்துள்ள தேசிய அவமானம்.

03_2006.jpg

"அவர்கள் என் அங்கங்களைத்தான் சிதைத்து விட்டார்கள்; என் குரல் இன்னும் என்னிடம் உள்ளது; நான் இன்னமும் பாடுவேன்!''

 

போராட்டம் என்றாலே ஒதுங்கிப் போய்விடும் சமரச மனோபாவம் ஊட்டி வளர்க்கப்படும் இந்தக் காலத்தில், எப்படிபட்ட நிலையிலும் துவண்டு போய்விடாமல் நீதிக்காகப் போராடுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் மனிதர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். அப்படிபட்ட அபூர்வ மனிதர்தான், பாந்த் சிங்.

02_2006.jpgஜனவரி இதழின் அட்டைப்பட விளம்பரமே அரசியல் ஆர்வலர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் வகையில் அருமையாக வெளிவந்துள்ளது. இப்""புத்தாண்டு சிறப்புத் தள்ளுபடி'' விளம்பரத்தையும் அட்டைப்படக் கட்டுரையையும் விளக்கிப் பிரச்சாரம் செய்தபோது பேருந்துகளில் பு.ஜ. இதழ் பரபரப்பாக விற்பனையாகியது. ஜெகந்நாபாத் சிறைத் தகர்ப்பு பற்றிய சி.பி.எம். தலைவர் யெச்சூரியின் துரோகத்தனத்தையும் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டிய ""சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!'' எனும் கட்டுரை சிறப்பு.

வாசகர்கள், திருப்பூர்.

02_2006.jpgசில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை ஜனவரி 25ஆம் தேதியன்று காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளது. மதுபானம், பெட்ரோலிய கட்டுமானம், தானியக் கிட்டங்கிகள், பருத்திரப்பர் வணிகம், வைரம் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள், தொழில்துறைக்கான வெடி மருந்துகள், விமான நிலையங்கள், மின்சாரத்தை வாங்கி விற்கும் வணிகம் போன்றவற்றில் இனி 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதாகவும் இந்த அறிவிப்பு கூறுகிறது. பன்னாட்டு

மறுகாலனியத் தாக்குதல் மூர்க்கமாக அரங்கேறி வருகிறது. அரசுத்துறைகளைத் தாரை வார்ப்பதற்கு கூறப்பட்ட பொய்க் காரணங்கள் கூட இல்லாமல், இப்போது லாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களான விமான நிலைய ஆணையகத்தின் கீழுள்ள தில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இக்கொடுமைக்கெதிராகப் போராடும் விமானநிலைய ஊழியர்கள் மீது மும்பை போலீசு காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது. விமான நிலையங்கள் விமானப்படையைக் கொண்டு

02_2006.jpgகடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று, தமது நிலங்களில் டாடா உருக்கு ஆலைக்கான சுற்றுச்சுவர் கட்டப்படுவதை எதிர்த்து திரண்டமைக்காக, ஒரிசா மாநிலத்தின் ஜஜ்பூர் மாவட்டத்திலுள்ள கலிங்கா நகர் பகுதியின் பழங்குடியினர் 13 வயது சிறுவனும், மூன்று பெண்களும் உட்பட 12 பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ""இரண்டாவது ஜாலியன் வாலாபாக்'' எனத்தக்க வகையில், போராடிய மக்களை அரசு நிர்வாகமும், டாடா நிறுவனமும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளன. கொலைவெறியாட்டத்தின் உச்ச கட்டமாய், காயம்பட்ட ஆறு பேரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, அவர்களுடைய கரங்களை வெட்டிப் பிணங்களாக திருப்பி அளித்திருக்கிறது, போலீசு.

02_2006.jpg"கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனால், அங்கே ஏழு கொடுமை எதிரிலே வந்ததாம்!'' என்று ஒரு சொலவடை உண்டு. அந்தக் கதையாக, கடன் சுமையால் தத்தளிக்கும் விவசாயிகள் வேறுவழியின்றி ஒப்பந்த விவசாயம் செய்தால், அங்கேயும் வஞ்சிக்கப்பட்டு போண்டியாக்கப்பட்டு வருகிறார்கள்.

02_2006.jpgமக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போட வேண்டும் என்று மக்களுக்கு உபதேசிக்கும் ஆளும் கும்பல், எகாதிபத்திய நாடுகளின் கழிவுகளை அமெரிக்க டாலருக்காக இறக்குமதி செய்து, இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக்குகின்றது

 

02_2006.jpgஅக்டோபர் நவம்பர் மாதங்களில் பெய்த பேய் மழை புயலால், தமிழகமே வெள்ளக் காடாக மாறித் தத்தளித்தது. தமிழகத்திற்கு முன்பாக, ஒரே ஒருநாள் கொட்டித் தீர்த்த அடைமழையால், மும்பய் மாநகரமே மூழ்கிப் போனது. இந்த மழை வெள்ளம் பங்களாவாசிகளைக் கூட விட்டு வைக்காததால், அப்பெருமக்கள் அனைவரும் நாட்டின் அடிக்கட்டுமான வசதி பற்றி அங்கலாய்த்து வருகிறார்கள்.

02_2006.jpgதஞ்சை திருவையாற்றில் கடந்த 19.1.06 அன்று நடந்த தியாகராசர் ஆராதனை விழா நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்கச் சென்ற ""தினமணி'' நாளேட்டின் புகைப்படக்காரர் கதிரவனை, திருவையாறு போலீசு ஆய்வாளர் முருகவேல் மற்றும் சில போலீசாரும், திருவாரூரிலிருந்து வந்த சீருடையணியாதப் போலீசு முருகதாசும் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். புகைப்படக்காரர் கதிரவன் செய்த மிகப் பெரிய "குற்றம்' என்னவென்றால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மனைவியையும் அம்மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மனைவியையும் ஆராதனை நிகழ்ச்சியைப் பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு நின்று படம் எடுத்ததுதான்.

02_2006.jpg1980 இல் பாரதிய ஜனசங்கத்தின் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. மும்பையில் நடந்த வெள்ளிவிழா மாநாட்டில் உரையாற்றிய அத்வானி, ""கடந்த 25 ஆண்டுகால அனுபவம் மகிழ்ச்சியாகவும், கட்சி உறுப்பினர் அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலும் இருந்தது. ஆனால் கடந்த 25 வாரங்களில் இலஞ்சம், ஊழல், உட்கட்சி பிரச்சினைகள், மற்றும் தேர்தல் பின்னடைவுகளால் இப்போது துயர்மிகு

02_2006.jpgகொக்கோ கோலா நிறுவனத்தின் ஆணவத்திற்கு முதலடி விழுந்திருக்கிறது. ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் ""கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. 9 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6,500 வாக்காளர்களைக் கொண்டது இந்தக் கிராமசபை. எமது செப்.12 மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, அக்.2 காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெரும்பான்மை மக்கள் கோக் ஆலையை எதிர்த்ததால், தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அன்று கிராமசபை, மாவட்ட நிர்வாகத்தால்

02_2006.jpg"தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கங்கை கொண்டானில் நாங்கள் நடத்திய போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. இயற்கை வளமான தண்ணீரை, உயிரின் ஆதாரமான தண்ணீரை விற்பனைச் சரக்காகவும் பன்னாட்டு முதலாளிகளின் தனியுடைமையாகவும் மாற்றும் மறுகாலனியாக்கக் கொள்கையின் கொடிய முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வியக்கத்தின் குறியிலக்காக, கோக் என்னும் அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னத்தைத் தெரிவு செய்தோம்.

02_2006.jpgகுப்புறத் தள்ளிய குதிரை, குழியையும் பறித்த கதையாக, தனியார்மய தாராளமயத்தால் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ள காங்கிரசு ஆட்சியாளர்கள், இப்போது ரேஷனுக்காக ஒதுக்கப்படும் உணவு மானியத்தையும் குறைத்து நாட்டைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளிவிட்டுள்ளார்கள். கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம், ரேஷனுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தை மேலும் குறைத்து பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரூ.4524 கோடியை ஏழைகளிடமிருந்து வழிப்பறி செய்யக் கிளம்பியுள்ளது.

02_2006.jpgசூடு, சொரணை ஏதுமில்லாத அமெரிக்க அடிமைத்தனத்திற்கு இலக்கணம் படைத்து வருகிறது காங்கிரசு அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை வெகு விசுவாசமாகவும் வெறித்தனமாகவும் மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தி வருவதனால் மட்டும் நாம் இவ்வாறு கூறவில்லை. இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் அப்பட்டமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் சென்ற மாதத்தில் மட்டும்

02_2006.jpg"கொலைகார கோக்கைக் குடிக்காதே!'' இது கேரளத்தின் பிளாச்சிமடாவிலும் தமிழகத்தின் நெல்லையிலும் எதிரொலிக்கும் போராட்டக் குரல் அல்ல. ""கோக்''கின் தாயகமான அமெரிக்காவிலிருந்து இந்தப் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மாணவர்களால் தொடங்கப்பட்ட ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தின் விளைவாக, இப்போது 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

03_2006.jpgகோபாலன்; திருப்பூரைச் சேர்ந்த புற்றுநோயாளி; திருவனந்தபுரத்திலுள்ள வட்டார புற்றுநோய் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், ஒரு புதிய மருந்து வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாகக் கூறி மருத்துவர்கள் அம்மருந்தை அவருக்குச் செலுத்தினர்.

01_2006.jpgதனியார்மயம் தாராளமயத்தின் மூலம் இந்திய விவசாயமும், சிறுதொழிற்துறையும், வங்கி, காப்பீடு, கல்வி போன்ற சேவைத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவது, தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, இந்தியா போன்ற ஏழை நாடுகள் அனைத்திலும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த மாற்றங்கள்தான் திணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ஏழை நாடுகளின் இம்மூன்று துறைகளையும் ஒரே அடியில், முற்றிலுமாகத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, ஏகாதிபத்திய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்தின் மூலம் முயன்று வருகின்றன.

01_2006.jpgசாதிய ஆதிக்கத்தைத் தகர்ப்பதே தமது லட்சியம் என்று புறப்பட்ட திருமா, இன்று ஆதிக்கசாதி பிழைப்புவாத அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வலம் வருவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான துரோகமும் அரசியல் பித்தலாட்டமும் பிழைப்புவாதமுமாகும்.

ச. மதியழகன், ஊற்றங்கரை.

01_2006.jpgவீரப்பனைத் தேடுவது என்ற பெயரால் மலைவாழ் மக்களின் மீது அதிரடிப்படை ஏவிவிட்ட சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் சதாசிவம் கமிசனால் உறுதி செய்யப்பட்டுள்ளன

 

சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை வேட்டையாடுவதற்காக, தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படைகள், சத்தியமங்கலம், தாளவாடி, கொள்ளேகால் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் மீது நடத்திய மனித

01_2006.jpgபெங்களூர் நகரில், பிரதிபா மூர்த்தி என்ற ""கால் சென்டர்'' நிறுவன பெண் ஊழியர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதை, அனுதாபம், கண்ணீர் அஞ்சலி என்ற வழக்கமான சடங்குகளுக்குள் முடித்துவிடத் துடிக்கிறார்கள், அத்தொழில் ஜாம்பவான்கள். இந்தச் சம்பவத்தை அதற்கு மேல் நீட்டித்துக் கொண்டே போனால், இந்த நவீனத் தொழிலில் வேலை பார்க்கும் ஊழியர்களின் பரிதாபகரமான நிலை வெட்ட வெளிச்சமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள், ""கால் சென்டர்'' தொழில் அதிபர்கள்.

01_2006.jpgகடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளத்தால் இருக்கின்ற வாழ்வும் சிக்கலாகி உழைக்கும் மக்கள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகயை இயற்கைப் பேரிடர் பேரழிவு மக்களைத் தாக்கும் போது, நிவாரணம் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது ஒரு அரசியல் இயக்கத்தின் கடமை மட்டுமல்ல் ஒவ்வொரு மனிதனின் தார்மீகப் பொறுப்பாகவும் இருக்கிறது.

01_2006.jpg"சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற 42 பேர் பலியான சம்பவம், விபத்து அல்ல, படுகொலை! இதற்குக் காரணமான குற்றவாளிகளான போலீசுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்; அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்'' ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தும் நிவாரணம் பெறவந்த மக்களைப் பலியிட்ட அரசின் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் 22.12.05 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

01_2006.jpgதெருக்கள்தோறும் சடலங்கள், திரும்பிய பக்கமெல்லாம் அழுகுரல்கள், கதறித் துடிக்கும் உறவுகள் என்று டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னை எம்.ஜி.ஆர். நகர் எங்கும் துயரமும் சோகமும் கவ்வியது. நிவாரணம் வாங்கச் சென்ற 42 பேர் நெரிசலில் சிக்கி மாண்டு போன செய்தியை அறிந்து தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போனது. கட்டிடத் தொழிலாளிகள், ஓட்டல் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள்... என கொல்லப்பட்டோ

01_2006.jpg"ஜெகந்நாபாத் சிறைச்சாலையின் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி நடத்திய அடாவடித்தனமான, துடுக்குத்தனமான தாக்குதலானது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக் குறைபாடுகள் குறித்த பல பாரிய கேள்விகளை எழுப்புகின்றது. தேர்தல் ஆணையத்தின் கட்டளையின்படி சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக பாதுகாப்புப் படைகள் ஈடுபடுமாறு திருப்பி விட்டிருந்தது கூட, இந்தச் "சிறைத் தகர்ப்பு நடவடிக்கை'க்கு

01_2006.jpgபெருமழை வெள்ளத்தால் துயரத்தில் தத்தளிக்கிறது தமிழகம். தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் அழிந்து, விவசாயிகள் மீளாக் கடனில் மூழ்கியிருக்கிறார்கள். சென்னை நகரில் வெள்ளம் மக்களுடைய உடைமைகளைப் பறித்தது என்றால், ஜெ. அரசின் வெள்ள நிவாரணம் ஏழை மக்களின் உயிரைப் பறித்திருக்கிறது.

01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

01_2006.jpgசென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறப் போனவர்களில் 42 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உற்றார்உறவினர் கதறி எழும் ஓலத்தை விட ஓங்கி ஒலிப்பது, அந்தக் கொடுமையை தூர நின்று வேடிக்கை பார்த்து, ""ச்ச்சு''க் கொட்டும் நடுத்தர, மேட்டுக்குடி அறிவாளிகளின் வேறு வகையான, வழக்கமான ஒப்பாரிதான்:

01_2006.jpgதுயரத்தை துடைப்பதற்கான நிவாரணமே துயரத்தை உருவாக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது, ஜெயலலிதா அரசு. டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 உயிர்களைக் காவு வாங்கியுள்ள சம்பவம் ஒரு விபத்தல்ல. படுகொலை!

 

வதந்தி, விஷமிகள் பரப்பிய புரளி, நெரிசல், மக்களின் பணத்தாசை, ஒழுங்கீனம், எதிர்பாராத விபத்து என்ற வார்த்தைகளால் மறைக்கப்படும் படுகொலை.