தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தல் பற்றி
தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டத்தை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதை கண்டு, இனியொரு அரசியலோ குமுறிப் பொங்கி எழுகின்றது. இதை "அரச ஆதரவு லும்பன்தனம்" என்கின்றது. சரி புலியாதரவு தமிழ்தேசியக் கூட்டத்தால், தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்று கேட்டால், முத்திரை குத்தி புலம்புகின்றனர். புலியாதரவு தமிழ்தேசியமோ தமிழ்மக்களுக்கு அழிவு அரசியலைத்தான் செய்தது. இதுதான் கடந்தகால வரலாறு என்றால், நிகழ்கால வரலாறும் அது தான். கடந்தகாலத்தைப் போல் தான் இன்றும்.
எம்மக்களுக்கு இந்தக் கும்பல் செய்த செய்கின்ற அழிவு அரசியலின் பின்னால் தான் இனியொரு கூடிக் கூத்தாடத் தொடங்கியது. இதை எதிர்ப்பதை, அரசு சார்பானதாக காட்டுகின்றனர். பழைய புலி அரசியல் தான், ஆனால் இடதுசாரிய மார்க்சிய சொல்லாடல்கள் மூலம் பூசி மெழுகுகின்றனர்.