Language Selection

பி.இரயாகரன் -2006

போக்கிரிகள் வேஷம் போடுவதில் தலை சிறந்தவர்கள். சமூக அக்கறையாளனாக தன்னை காட்டிக் கொண்டு நடிப்பதில் கூட, மிக மோசமான அற்பர்களாகவே உள்ளனர். சமூகத்தில் மோசமானதை தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்பார்கள்,

இது எம்மிடம் எமது இணையத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்வி. அதில் ஒரு ஈமெயில் தந்த போது, அவர்களுக்கான பதில் திரும்பிவிட்டது. இதே கேள்வியை சத்தியக்கடாதாசியிலும் பதிவிடப்பட்டுள்ளது. முழுமையான கேள்வி

யாழ்ப்பாணியம் என்பதாலோ, அதிகாரவாதிகள் என்பதாலோ, தலித்தியம் என்பதாலோ எதிர்புரட்சி அரசியல் புரட்சிகரமாகிவிடாது. புலி ஆதரவு போல், புலியெதிர்ப்பின் எதிர்புரட்சிகர செயற்பாடுகளும், உலகெங்கும் அம்மணமாகி வருகின்றது. இவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாகவே மக்களின் எதிரிகள் தான் என்பதையும்,

18.05.2006 அன்று நான் எழுதிய 'சுத்திகரிப்பும் தூய்மையாக்கலும்" கட்டுரையில் இன்றைய படுகொலைக்குரிய அரசியல் நிலைமையை எடுத்துக் காட்டினோம்;. 'இந்த நிலையில் புலிகள் புதிய அரசியல் நெருக்கடியில் சிக்கிவருகின்றனர். மீள வழியற்ற சூறாவளிக்குள் சுழலுகின்றனர். வழமையாக அமைதி நிலவும் காலங்களில்

இதை ஒப்புக் கொண்டபடி தான் கொலையை பற்றி புலம்புகின்றனர். ஆயுதம் ஏந்தியுள்ள நாங்கள் செய்யவில்லை என்று சொல்லும் தகுதி, இன்று யாருக்கும் கிடையாது. மற்றவன் செய்தான் என்ற குற்றச்சாட்டுகள், கொலையை நிறுத்துவதற்காக அல்ல.

08.6.2006 அன்று புலியெதிர்ப்பு அரசியல் விவாதம் நடந்த கொண்டிருந்த நேரத்தில், ரி.பி.சி மீது மிகவும் திட்டமிட்ட வகையில் தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தினர். நிகழ்ச்சிகள் அடிக்கடி தடைப்பட்ட நின்ற நிலையிலும், இது தொழில் நுட்பக் கோளாறல்ல,

சிறிரங்கனை அடிபணிய வைக்கவும், புலிகளின் ஏக பிரநிதித்துவத்தை பாதுகாக்கவும், விடப்படும் மிரட்டலின் ஒரு வடிவம் தான் இது. இது ஒன்று ஆச்சரியமானதல்ல. புலியின் தேசிய மொழியே, அவர்களின் பண்பாடே இது தான்.

(மயூரன் எழுதிய இணைய கட்டுரை மற்றும் செய்திகளின் எதிர்வினையில் இருந்து இது எழுதப்பட்டது.)

 

உங்கள் அச்சம் நேர்மையானது. புலிகளின் பதிலளித்த முறைமை எல்லாம் மேலும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. நேற்று பி.பி.சி தமிழ் சேவை நேரடியாக புலிகள் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒரு கருத்து பரிமாற்றத்திலும் இதுவே பிரதிபலிக்கின்றது.

கொலைகார ரசிகர்களுக்கு என்று ஒரு இனம் உண்டு என்றால், அது தமிழ் இனம் தான். கொலைகள் ரசிக்கப்படுகின்றது. விதவிதமாக வக்கிரமாக கொல்லப்படுகின்றனர். அதையும் விதவிதமாகவே ரசிக்கின்றனர். கார்ல் மார்க்ஸ் இந்தியா பற்றிய தனது கட்டுரையில்

இது ஏகாதிபத்தியத்தால் தனது சொந்த பொருளாதார நலன் கருதி உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர் என்ற பொது அடையாளம், அங்கு வாழும் மக்களை, இஸ்லாமிய மதத்தில் பிறந்தவர்களை எல்லாம் உள்ளடக்கிவிடாது. மக்களை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்துவது மிகப் பெரியளவிலான அடிப்படைத் தவறாகும்.

எமது தேசிய வரலாறு என்பது இனத் தூய்மையாக்கலும், புலி சுத்திகரிப்பும் என்ற எல்லைக்குள்ளான கொலைகளால் ஆனாவை. அன்றாட அரசியல் என்பதே கொலைகளின் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. பேரினவாதிகளும் புலிகளும் கூட்டாகவே நடத்தும் இந்த கொலை வெறியாட்டத்தில், ஒரு இனத்தின் இருப்பே அழிகின்றது. இதன் முடிவு தான் என்ன? முடிவின்றி தொடரும் இந்த எதிர்நிலைப் படுகொலைகள்,

மக்கள் பற்றி பேசமறுக்கும் கூட்டுச் சதி. தத்தம் நோக்கில் அரசியல் ரீதியாக இழிந்து போன தமது சமூக இருப்பில் இருந்து கொண்டு, புலம்புவதும் அலம்புவதும் நிகழ்கின்றது. மக்களின் நலன் பற்றி, அவர்களின் சமூக பொருளாதார அரசியல் உறவு பற்றி எந்த அக்கறையுமற்ற வாதங்களும், நியாயங்களும்.

மனிதவினம் தன்னைத்தான் கற்றுக் கொள்ளவும், தனக்காக போராடவும், அதை எப்படி போராடுவது என்பதையும், நேபாள மாவோயிஸ்டடுகள் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட்டுகள்) நடைமுறையில் உலகிற்கே நடைமுறைப்படுத்தி காட்டுகின்றனர். உலகமே அதிரும் வண்ணமும், ஏகாதிபத்தியங்களை பதைபதைக்க வைத்தும்,

நாம் 'மாமனிதன்" என்று பட்டம் கொடுத்தமைக்காக மன்னிக்க வேண்டும். பட்டம் பதவிக்காகவே அன்றாடம் குலைத்து வாழும் அவரை, இதற்காக நாம் அவரை பெருமைப்பட சிறப்பிப்பது தவறானதல்ல. அவர் ஆசைப்பட்டு கடந்தகாலம் ழுழுக்க கட்டிப் பாதுகாத்து வந்த இந்த அரசியல் இலட்சியக் கனவை,

இது ஒன்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒய்வு நாள் அல்ல. இது பொழுது போக்கும் களியாட்ட நாள் அல்ல. இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உருவான நாளும் அல்ல. மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வாக்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள். இந்த நாளில் உலக தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள்.

தேசியத்தை எப்போதோ அழித்துவிட்ட புலிகள் இன்று செய்வது என்ன? தமது சொந்த இனத்தை அழிக்கின்றனர். ஒரு விடுதலை இயக்கமே அதை செய்து முடிக்கின்றது. இது ஒன்றும் கற்பனையான எனது தனிப்பட்ட முடிவல்ல. நடந்து கொண்டிருப்பதை அடிப்படையாக கொண்ட, ஒரு எதார்த்தமான சமூக உண்மை இது.

அண்மையில் மரணமடைந்த புஸ்பராஜா பற்றி, பலரும் எதிர்பார்த்தது போல் நான் எதையும் எழுதாமல் இருந்தேன். அவரின் 35 வருட அரசியல் சார்ந்த பொதுவாழ்வும், சில காலம் கடுமையான சித்திரவதையுடன் கூடிய சிறைவாழ்வும் என எதையும், அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முற்படாத ஒரு நிலையில் மரண நிகழ்வு நடந்தது.

(இக்கட்டுரை எழுதி முடித்து வெளியிட இருந்த அன்று, பிரஞ்சு அரசு தான் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தை மீளப் பெற்று இருந்தது. இதனால் இதன் ஒரு பகுதி நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு திருத்தப்பட்டுள்ளது.)

 

'டிமைகளுக்கான ஒப்பந்தம்" ( Contrat Pour Esclaves) என்று மாணவர்களால் சரியாகவே வருணிக்கப்பட்டு, இதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பிரஞ்சு சமூகத்தையே விழிப்புற வைத்தது.

மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு (HUMAN RIGHTS WATCH) கனடா மற்றும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மீதான புலிகளின் நிதி அறிவீடு பற்றிய ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.

எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

பிரான்சில் மாணவர் போராட்டம் மூலதனத்துக்கும் அதன் எடுபிடியாகவுள்ள அரசுக்கும், மீண்டும் தனது அரசியல் பாடத்தை புகட்டத் தொடங்கியுள்ளது. தன்னியல்பான இப் போராட்டம் இயல்பில் அனைத்துவிதமான அரசியல் துரோகங்களையும் அம்பலப்படுத்தி

தமிழ் மக்களின் பெயரில் "ஜனநாயக" கூத்து நடத்தப்படுகின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில், ஜனநாயக மறுப்பு அரங்கேறுகின்றது. மாற்றுக் கருத்து என்ற பெயரில் பாசிசம் சித்தாந்தமாகின்றது. இதுவே புலியின் மாற்று என்று கூறிக்கொள்ளும் புலியெதிர்ப்புக் கும்பலின் நடைமுறை சார்ந்த அரசியலாகிவிட்டது.

அண்ணைமார்கள் எழுதுவதை நிறுத்தக் கோருகின்றனர். இதைத் தான் எனக்கு பிரஞ்சு ஏகாதிபத்தியம் உத்தியோகபூர்வமற்ற வகையில் கூறுகின்றது. அவர்கள் கூறியதற்கு பின்னால் எதிர்வினையின்றி, நிலைமை அமைதியாகவே உள்ளது.

சிலர் எமது விமர்சன மொழி பற்றியும், விமர்சனப் பண்பாடு பற்றியும், விமர்சன நாகரிகம் பற்றியும் கூட எம்முடன் முரண்படுகின்றனர். நாம் ஒருமையிலும் அஃறிணையிலும் (சிலரைக் குறித்து) விவாதிப்பதையும், மிருகங்களுடன் ஒப்பிட்டு எழுதுவது

இது தான் அண்மையில் சுவிஸ்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாரம். இப்படிக் குறிப்பிடுவதை இட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவ்வளவுதானா பேச்சுவார்த்தை? இவ்வளவு தான். 2001 இல் நடந்த பேச்சுவார்த்தையும், அதைத் தொடர்ந்த நடந்த நிகழ்வு இதைத்தான் எமக்கு கற்றுத் தந்துள்ளது. கருணா விவகாரத்துக்கு முன்னம் நடந்த தொடர் கொலைகள் அனைத்தும், யார் எதற்காக ஏன் செய்தார்கள்? இந்த தொடர் கொலைகள் மூலம் தமிழ் சமூகத்தையே அச்சுறுத்தி சாதித்தது என்ன?

எமது விமர்சனத்தின் தன்மையையொட்டி புலியெதிர்ப்பு அணியினர் எம்மீது ஆத்திரம் கொள்கின்றனர். தமது மோசடி அம்பலமாவதால், கண்ணை மூடி ஆதரித்த தமது அணிகள் விழிப்புற்று கேள்வி கேட்பதால் இது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது.

ஜனநாயகம் சார்புத் தன்மையானது என்பதை நிறுவும் முயற்சியில், புலியெதிர்ப்பு அணியின் முயற்சிகள் சந்தியில் தலை விரிகோலமாகி வருகின்றது. புலிகளிடம் ஜனநாயகத்தை கோரும் புலியெதிர்ப்பு அணி, தமக்கு அது பொருந்தாது என்பதையே ராம்ராஜ் விடையத்தில் மீண்டும் நிறுவிக் காட்டமுனைகின்றனர்.

பாசிசம் தனக்கு அரசியல் முலாம் ப+சக்கூடிய ஒருவர் மூலம் களத்தில் இறங்கியுள்ளது. எதிராளிக்கு எதிரான தமது பாசிச நடத்தையை, முதல் முதலாக ஜனநாயகத்தின் ஒரு கூறாகத் காட்டத் தொடங்கியுள்ளது. இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது திணறுவதும் புலம்புவதும் நிகழ்கின்றது. ஜெயதேவனுக்கு எதிராக ஈழம் வெப் இணையத்தில் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு எதிராக தேனீ இணையத்தளத்திலும், ரி.பி.சியிலும் விவாதிக்கப்பட்டது. சபேசன் என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவரின் சொந்தப் பெயரில் சொந்த இணையத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒருபுறம் சபேசன் புலிப்பினாமியாக நாய் வேசம் போட்டுக் குலைக்க, ஜெயதேவன் கும்பல் பனங்காட்டு நரி வேஷம் போட்டு ஊளையிடுவதுமே விவாதமாகியது.

முட்டாள்கள் முட்டாளாகவே நீடிப்பார்கள். ஒரு தலைமையே முட்டாளாகிவிட்டால், முட்டாள்தனமே சமூகத்தை குரூரமாக்குகிறது. இதுவே போராட்ட அமைப்பில் ஏற்பட்டுவிட்டால், எங்கும் வேதனையும், துன்பமும், தீமையும் சமூகத்தின் தலைவிதியாகி விடுகின்றது. சமூகம் எதையும் சுயமாக ஆற்றும் சமூக ஆற்றலை இயல்பாகவே இழந்து விடுகின்றது. சமூகம் சுய உணர்வை இழந்து, சுதந்திரத்தையே இழந்து விடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு மூச்சுக்கள் எந்தவிதமான இரைச்சலுமின்றி போகின்றது. வாய்விட்டு அழவும் முடியாத, பீதி கலந்த அச்சவுணர்வே சமூக உறவாகிவிடுகின்றது.

தமிழ் சமூகம் சமூக சீரழிவுக்குள்ளாகி வரும் ஒரு வரலாற்று காலகட்டத்தில் நாம் எம்மை அறியாது பயணித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ்மக்களின் படித்த சுயநலம் கொண்ட முட்டாள்தனத்தையே பயன்படுத்தி உருவான புலிப் பாசிச பயங்கரவாதம், மக்களிள் வாழ்வை உறுஞ்சிக் குடிப்போருக்கு இசைவானதாகவே உள்ளது. சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களையே எதிரியாக்கி ஒடுக்கி நிற்க, புலிகள் சிங்கள அரசை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தமிழ்மக்களையே அரையடிமைகளாக்கியுள்ளர். இதன் மூலம் ஒரு கும்பல் உழைப்பின்றி உழைப்பை சூறையாடி வாழ்வதே தேசியமாகிவிட்டது. மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகள் சொந்த உழைப்பின்றி, இவர்கள் கருதும் தேசியத்தையே உறிஞ்சி வாழ்வது எதார்த்தமாகிவிட்டது.

மனித நேயத்தை, மனிதத்துவத்தை விரும்பும் ஒருவனுக்கு இவை நிகழ்வது உண்டு. அற்பர்கள்  முதுகுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு எறியும் அவதூறுகள், வரலாற்றின் குப்பையில் தான் வீழ்கின்றன. சிறிரங்கன் பற்றிய பதிவொன்று, மிகவும் கேடுகெட்ட வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. திண்ணையில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை

பாரிசில் ஒரு பெண்ணை இணங்க வைக்கும் பாலியல் வன்முறை முயற்சி ஒன்று சந்திக்கு வந்துள்ளது. அதுவும் ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்ணியம் பேசிய ஒருவரால், தலித்தியம் பேசிய ஒருவரால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதுவும் புலம்பெயர் இலக்கிய வட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது.

பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து

நாம் ஏன் இவர்களை காடையர்கள் என்கின்றோம்? மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன், எந்த சமூக உறவுமற்றவர்கள் நடத்துவது காடைத்தனம் தான். இதை யாரும் தேசியம் என்று கூறமுடியாது. தமது அரசியல் என்ன, தமது நோக்கமென்ன என எதுவும் கூறத் தெரியாதவர்கள், மக்களின் பெயரில் நடத்தும் அனைத்தும் சமூகவிரோதத் தன்மை கொண்டவையே. இவை காடைத்தனமாகவே எப்போதும் சமூக உள்ளரங்கில் அரங்கேற்றப்படுகின்றது.