Language Selection

பாலியல்

"எல்லாம் இன்ப மயம்" 

 

ஆசை மனையாளைக் கைப்பிடித்து, 

அவளோடு இயல்பாய் இல்லறம் நடத்தி,

அன்பாய்ப் பிள்ளைகள் பெற்று,

அருமையாய் அதை வளர்த்து,

 

நல்லன யாவும் சொல்லிக் கொடுத்து,

அல்லனவற்றை அகற்ற புத்தி சொல்லி,

இன்பகணங்களும், துன்ப உணர்வுகளும்,

மாறி மாறி இருவரும் அனுபவித்து,

 

அன்புப் பிள்ளை அதன் வழியே வளர்வதை

அணுஅணுவாய் ரசித்து வந்து

துள்ளி வரும் போது கட்டியணைத்து,

பாதை தவறும் போது பாதுகாத்து,

 

துளித்துளியாய் வளர்ந்த பிள்ளை

களித்திருக்கும் வண்ணமாக அதற்கு

நல்லதொரு துணையினை தேடித்தந்து

இல்லறத்தில் இணைத்த பின்னர்,

 

உங்க கடமை முடிஞ்சுதுன்னு ஓயலாமா நீங்க?

இல்லை, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கான்னு கேக்கறது காதுல விழுது!

 

இருக்குங்க!

இன்னும் கொஞ்சம் இருக்கு!

இவ்வளவு தூரம் தம் கட்டி வந்திட்டீங்க!

இதையும் கேட்டுட்டு போங்க!

 

உங்களோட செல்லப் பிள்ளையா இது நாள் வரைக்கும் வாழ்ந்த பிள்ளை வேற!

இனிமே இருக்கப்போற, அவங்க வாழப்போற வாழ்க்கையில நிறைய வித்தியாசம் இருக்கப் போவுது.

அதை அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியது உங்க பொறுப்பு!

 

கல்யாணம்னா என்ன, இல்லறம்னா என்ன, 

பொண்டாட்டியை, புருஷனை சந்தோஷமா வெச்சுக்க என்ன செய்யணும், இதுல என்னெல்லாம் பிரச்சினை வரும், வரலாம்,

அதை எப்படி சமாளிக்கறது,

 

இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களோட முக்கிய கடமை!

 

உடலுறவுன்னா என்ன, அது என்ன மாதிரி அனுபவம் இதெல்லாம் துளிக்கூட தெரியாமக் கூட கைப்பிடிக்கிற மகனும், மகளும் இன்னும் இந்த உலகத்துல இருக்காங்க, தெரிஞ்சுக்கங்க!

 

அந்த பெற்றோருக்கு இந்த அடுத்த வரிகள்!!

 

இதுவரை தொடாத இடங்கள் தொடப்படும், புரியாத சுகங்கள் புலப்படும், என்பது இவர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும்.

 

இது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லை.

உலகத்தின் தத்துவமே இதுதான், வம்ச வளர்ச்சிதான் ஒரு ஆணும், பெண்ணும் படைக்கப்பட்டதன் பொருள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளணும். 

 

இதெல்லாம் முடிஞ்சதும், இதை எப்படி அனுபவிச்சாங்க என்பதையும் புரிந்து கொண்டு, அதில் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை சரி செய்யும்

வழி கூட உங்களுக்கு இன்னும் இருக்கு.

 

அவ்வளவுதாங்க!

 

இதுக்கு அப்புறம் அவங்க முதல் பதிவு படிக்கவும் சொல்லிக் கொடுத்துருங்க!

 

அவங்களும் இந்த பிரபஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கப் போறாங்க இல்லியா!

அவங்க குழந்தையும், தொடக்கத்துல இருந்தே ஒரு தெளிவோட வளர இதுவும் உதவும்.

 

அன்பு, கடமை, கட்டுப்பாடு, கண்டிப்பு, இதெல்லாம் கலந்த ஒரு உணர்வோடு,

ஒரு நண்பனாக இருந்து இவர்களை வளர்த்து ஆளாக்க உங்களை வாழ்த்துகிறேன்.

 

எல்லாம் இன்பமயமே!!

 

இதுவரை தொடர்ந்து படித்து, பின்னூட்டமிட்டு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

 

இப்பதிவை எழுத எனக்கு தூண்டுகோலாய் இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லி, இது ஒரு இனிமையான அனுபவமாக இருக்க எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்து,

 

மீண்டும் ஒரு மருத்துவத் தொடர் வழியே உங்களை மீண்டும் சந்திக்க வருவேன் எனச் சொல்லி விடை பெறுகிறேன்.

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"

 

" நீ செஞ்ச காரியத்தோட தீவிரம் என்னான்னு தெரியுதா ஒனக்கு?

 

ஒன்வயசுல ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு இப்ப நீ வந்து நிக்கற!

 

ஒன்னோட அவசரத்துல, நாளையப்பத்தி நெனைக்காததுனால, அவளை கெர்ப்பமாக்கிட்டு, ஒனக்கென்ன போச்சுன்னு ஹாய்யா வந்துட்ட.

 

நீ செஞ்ச காரியம் எப்படிப் பட்டதுன்னு ஒரு உதாரணம் சொல்றேன் கேளு.

 

சின்ன வயசுலேந்து ஒன்னை எம்மடியில ஒக்கார வெச்சுகிட்டு ஸ்டியரிங்கைப் பிடிச்சு ஒன்னைக் காரோட்ட வெச்சேன்.

 

ஆனா, இன்னி வரைக்கும் ஒனக்கு லைஸென்ஸ் எடுக்கலை.

 

ஏன்? 

 

ஒனக்கு அதுக்கான வயசு இன்னும் வரலை.

 

ஒனக்கு கார் ஓட்டத் தெரியும்.

 

ஆனா, ஒரு ஆக்ஸிடெண்ட் ஆச்சுன்னா என்ன பண்ணணும்னு தெரியாது.

 

யாரைக் கூப்புடணும்; எங்கே கூட்டிக்கிட்டு போவணும்னு தெரியாது.

 

அது மட்டுமில்லை.

 

இதுக்கப்புறம் நீ கார் ஓட்டவே முடியாது..... இன்னும் கொஞ்ச நாளைக்கு.

 

அது மாதிரிதான் வாழ்க்கையும்!

 

வயசுக் கோளறுல, ஒரு ஆர்வத்துல நீ செஞ்சுட்டேன்னு எனக்கு புரியுது.

 

ஆனா,ஊர் ஒலகத்த்துக்கு இது புரியுமா?

 

புரியாது.

 

அந்த பொண்ணுக்கு நீ வாழ்வு கொடுக்கணும்.

 

இப்படி சொல்றதே எனக்கு அவமானமா இருக்கு.

 

ஆனா, இதுதான் இப்ப நம்ம ஒலகம்.

 

இதுக்கான முழுப் பொறுப்பும் நீதான் சொமக்கணும்.

 

அதான் முறையுங்கூட.

 

இத நீ செய்வேன்னு எதிர் பாக்கறேன்."

 

இதுதான் முறையான பிள்ளையைப் பார்த்து சொல்லக் கூடியது.

 

இந்த கார் உதாரணம் ஒரு பெண்ணுக்கும் பொருந்துவதே!

 

பெண் பறவை கர்ப்பமானால், ஆண் பறவை கூடு கட்டும்.

 

தன் துணை இறந்தால், வயிற்றில் கல் சுமந்து ஆண் பறவை கீழே விழுந்து உயிர் மாய்க்குமாம்!

 

இவற்றை விடவா கேவலமானவர்கள் நாம்!

 

பறவைகளைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்!

 

இதுவரை நாம் பார்த்தது, ஒரு மாதிரி நம் கட்டுப்பாட்டில் இருந்த நம் பிள்ளைகளைப் பற்றி!

 

இத்தோடு நம் பொறுப்பு முடிந்தததா?

 

மணமாகி, மணம் முடித்து, அவர்களை அனுப்பியபின், நமக்கு ஏதாவது பொறுப்பு உண்டா?

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

"சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு இரு சிறகு முளைத்தது !"

 

சென்ற பதிவின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டு முடித்திருந்தேன்!

 

உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் ஆன ஒரு இளம் பெண்ணை, உங்கள் குழந்தையை எப்படி எதிர் கொள்வது என்று.

 

இது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் குறைவே என்றாலும், விவரமறியா பெண்களிடம் இது இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

இது பற்றி, சுவாரசியமாக சொல்ல வேண்டுமென்றால், பல கதைகள் இருக்கிறது, பதிவை நிரப்ப!

 

ஆனால், இது ஒரு சங்கடமான நிகழ்வு என்பதால், கிளு, கிளு கதைகளைத் தவிர்க்க விரும்புகிறேன், ஒரு சிலர் முகம் சுளித்தாலும்!!

 

நேரடியாக இதைப் பற்றிச் சொல்லி மேலே செல்லலாம்.

 

இன்னும் ஓரிரு பதிவுகள் மட்டுமே இருக்கின்றன!

 

பெண்கள் வாலிப வயதில், திருமணத்திற்கு முன் கர்ப்பமடைய காரணங்கள் பல உண்டு.

 

இதில் பாதிக்கு மேல், பெற்றோரின் கவனமின்மையால் நிகழ்கிறது.

 

பாலியல் பற்றி ஒரு உணர்வை, விழிப்புணர்வை தம் மக்களிடம் ஏற்படுத்தாமல் போவது.

 

அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து இவர்களை வளர்த்து விடுவது.

கண்டிக்க வேன்டிய நேரத்தில் கண்டிக்காமல், சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாமல் மெத்தனமாய், அறியாமையாய் இருந்து விடுவது.

 

கருத்தடை சாதனங்களைப் பற்றி பேச அச்சப்பட்டு, நம்பிக்கையின்றி,... எங்கே இது மேலும் தவறுகளுக்கு வழி வகுத்து விடுமோ, என்று மறைத்து விடுவது,

குடும்ப மான அவமானங்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருப்பது,

 

தான் ஒரு தவறான முன்னுதாரணமாய் இருப்பது,

 

[வீட்டிலேயே அனைவர் எதிரிலும் குடிப்பது, ஆபாச ஜோக்குகளை விகல்பமின்றிப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறி வைப்பது, தன் வாலிப கால விளையாட்டுகளை தம்பட்டம் அடித்துக் கொள்வது, எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஒரு கணவன் மனைவி சண்டையில், ஒருவரைப் பற்றி ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் எதிரிலேயே ஏசி சண்டை போடுவது, அல்லது தாயோ , தந்தையோ, அடுத்தவரைப் பற்றி குழந்தைகளிடம் சொல்லி அங்கலாய்ப்பது என பல இதில் அடங்கும்].

 

ஏற்கெனெவே சொல்லியது போல, இவ்வயதுப் பெண்களுக்கு ஒரு அசாதாரண துணிச்சல் வருவது நிஜம்.

 

அதன் ஆட்டத்தில், சற்று எல்லை மீறப்படுவதும் நிஜம்.

 

வரம்பு மீறி அடுத்த கட்டத்தை ஆபத்தின்றி அடைய முடியுமோ என்ற அசட்டுத் துணிச்சலில், கவனமின்றி தன்னைப் பறி கொடுத்து பின் விழிப்பது,

சேராத இடந்தனிலே சேர்ந்து கெட்டுப் போவது,

பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாவது,

கருத்தடை சாதனங்களை நம்பி, ஏமாந்து போவது.

 

இவையெல்லாம் இவர்களே தேடிக் கொண்டு நம்மை சோகத்தில் ஆழ்த்துபவை.

 

இப்படி மேலே கூறிய ஏதோ ஒன்றினால் கர்ப்பம் ஆன பின்பு நாம் செய்யக் கூடியது என்ன?

 

வழக்கமாக நாம் பார்ப்பது, அடி, உதை, திட்டு, கருக்கலைப்பு, அல்லது தற்கொலை இவையே!

 

இவற்றால் என்ன பயன்?

யாருக்கு லாபம்?

நேரடியாக இதை அணுக வேண்டிய முறை என்ன?

 

இது சம்பிரதாய ரீதியிலோ, சமூக ரீதியிலோ அனைவராலும் ஒப்புக் கொள்ள முடியாத சில எண்ணங்கள்.

 

அவரவர் நிலைமைக்கேற்ப ஏற்றுக்கொள்வதோ, ஒதுக்குவதோ உங்கள் உரிமை.

 

இதற்கான வழிமுறைகள் என்னென்ன?

 

1. கருக்கலைப்பு, [abortion], பொதுவாக நிகழ்வது.

 

காதும் காதும் வைத்த மாதிரி நடத்திட முடியும் என்பதால் அதிகமாக செய்யப்படுவது இதுவே.

உடற்கூறாக ஒரு சில தகாத விளைவுகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தக் கூடும்.

ஆனால், ஒரு தேர்ந்த மருத்துவரின் கையில் இது மிக எளிமையாக, சிரமமின்றி முடியும்.

மனோ ரீதியான, தார்மீக ரீதியான காரணங்கள் இதற்குத் தடையாகப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

 

ஆனால் குடும்ப மானம் என்ற ஒன்றைக் காட்டியோ அல்லது இது கற்பழிப்பு என்னும் அநாகரீகமான செயலின் மூலம் விளைந்தாலோ இதைச் செய்வதில் தவறில்லை.

 

2. இரண்டாவது, குழந்தை பெற்று தாமே வளர்ப்பது.[Parenting]

 

இதற்கு மிகுந்த மனத்திடமும், நம்பிக்கையும், அன்பும் வேண்டும்.

இது நியாயமான முடிவு பெரும்பாலான நிகழ்வுகளில் என்றாலும், பெண்ணின் வயது, சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் சம்பந்தப் பட்டவரின் முழு ஒப்புதல் இதற்குத் தேவை என்பதால் அதிகமாகப் பரிசீலனைக்கு உட்படாத ஒன்றாகவே இது போய் விடுகிறது.

எந்த ஒரு நிகழ்வுக்கும் தாம் பொறுப்பேற்க நினைப்பவர் செய்ய வேண்டியது இது தான் என்பது என் கருத்து.

 

ஆனால், இதுவும் கற்பழிப்பு மூலம் நிகழ்ந்திருந்தால் அல்லது ஒரு சில நோய்கள் வர வாய்ப்பிருந்தால் கருச்சிதைவே இதை விட நல்ல வழி.

 

3. இன்னும் சில நேரங்களில், குழந்தை பெற்று அதை ஒரு காப்பகத்தில் விடுவதும் [adoption] ஒரு வழியாக இருக்கிறது.

 

இது நம்மை உளவியல் ரீதியாக சமாதானம் செய்துகொள்ளும் ஒரு நிகழ்வு.

குழந்தையையும் சாகடிக்க வில்லை!

தானும் வளர்க்கவில்லை !

இதுவும் சிறந்த வழியே.

 

இதை எல்லாம் எடுத்துச் சொல்வதில்தான் உங்கள் பங்கு வருகிறது.

 

ஏற்கெனேவே, அவமானத்தாலும், குற்ற உணர்வாலும் குன்றியிருக்கும் அந்தப் பெண்ணைத் திட்ட முற்படாமல், இதைப் பற்றி விவரமாக, தெளிவாக, நிதானமாகப் பேச வேண்டும்.

 

அவர்களுக்கு உங்கள் கண்டிப்பு இப்போது தேவையில்லை.

அதற்காக இதை அப்படியே மன்னித்து ஒதுக்கிடவும் வேண்டாம்.

 

வீட்டில் சில கடுமையான கட்டுப்பாடுகள் வந்தே ஆக வேன்டும், இவருக்கும், மற்றவர்க்கும்.

 

முறையான பாலியல் அறிவுடன், இதுவரை சொல்லியபடி, ஆரம்ப முதலே வளர்த்து வந்தால் முக்கால் வாசி பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

 

இவர்களது எதிர்காலக் கனவுகளும், திறமையும் இந்த ஒரு நிகழ்வினால் பாதிக்காத வண்ணம் செயல் படுதல் முக்கியமான ஒன்று.

 

'சொல்லுதல் யார்க்கும் எளிதாம்' என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இங்கே நான் சொன்னது ஒரு பொதுப் படையான கருத்தே அன்றி, இப்படித்தான் என வலியுறுத்தும் ஒன்றல்ல.

 

பதிவு நீண்டு விட்டதால்,....

 

அன்புடனும், அறிவுடனும், பொறுமையாக இதை அணுகி நல்ல முடிவு எடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

அடுத்து இதே நிலையில் இருக்கும் ஆண் பிள்ளையை எதிர் கொள்வது எப்படி என்பதையும், மணமுடித்த பிள்ளைகளின் வாழ்வில் உங்கள் பங்கு என்ன என்பதையும் பார்ப்போம்.

 

"என் வீட்டு பச்சைக்கிளி, நான் வளர்த்த அன்னக்கிளி"

 

இந்தப் பதிவிற்குப் பொருத்தமாக என்ன நிகழ்வைச் சொல்லலாம் என எண்ணியபடியே இன்றைய வெள்ளிக்கிழமைப் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

இந்த நாட்டில் வெள்ளிக்கிழமை சினிமாப் பிரியர்களுக்குக் கொண்டாட்டமான ஒரு நாள்! 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதுப்படங்கள் வெளியாகும். 

பத்திரிக்கைகளுக்கும் இதன் விமரிசனத்தை எழுத ஒரு 4, 5, பக்கங்களுக்குத் தீனி கிடைத்துவிடும்.

 

ஆம்! இங்கு படம் வந்த அன்றே அத்தனைக்கும் விமரிசனம் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வெளியாகிவிடும். 

பார்க்க விரும்பவர்களுக்கு வசதியாக! 

அப்படி என் கண்ணில் பட்ட படக்கதைதான் இப்போது நான் சொல்லப் போவது! 

 

படத்தின் பெயர் 'ஃப்லிக்கா'.[FLICKA].

கதையின் மையக் கருத்து சுருக்கமாகச் சில வரிகளில்!

 

" கேட்[Kate] என்னும் பருவத்தால் குழப்பமடைந்த [ஹரிஹரன் சொல்லாக்கப்படி, "ஹார்மோன்களின் தாக்கத்தால் சுருதி குலைந்த ஹார்மோனியம்"!!] ஒரு பருவப்பெண், பெற்றோர்கள் சொல்படி நடப்பதா, இல்லை தன் எண்ணக்கனவுகளின் படி நடப்பதா என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார். 

தற்செயலாக ஒரு காட்டுக் குதிரை [Wild horse] பக்கத்துக் காடுகளில் இருந்து இவருக்குக் கிடைக்கிறது.

அதை தங்களது பண்ணைக்குக்[Ranch] கொண்டு வந்து, கண்டிப்புக்குப் பெயர் போன தன் தந்தையின் எதிப்புக்கிடையே ஒரு பழகிய குதிரையாக்க[Trained horse] முடிவு செய்கிறார். 

 

தந்தையோ ஒரு ஊர் பேர் தெரியாத, ஜாதிக்குதிரையில்லாத, காட்டுக் குதிரை ஒன்று தன் கொட்டடியில் உயர் சாதிக் குதிரைகளுக்கிடையே வளர்ந்து அவற்றோடு கலந்து விடுமே என அஞ்சி, தீர்மானமாக மறுக்கிறார்!!

மேலும், காட்டுக் குதிரைகளைப் பழக்குவதும் கடினமான வேலை. 

 

இதை விட நிகழ்கால நமது நிகழ்வுகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் கொடுக்க முடியாது!

 

ஆனால் கேட்டோ,[Kate] இந்தக் குதிரையிடம் மனதைப் பறிகொடுத்து விடுகிறார்!

[கேட்ட, அடிக்கடி பார்த்த கதை மாதிரி இல்லை?] 

 

படிப்பு சரியாக வராத கேட்[Kate]டுக்கு அப்பாவிற்குப் பிறகு தானே இந்தப் பண்ணையை பராமரிக்க வேண்டும் என்ற ஆசை.

'நல்ல படிப்பு படித்துப் பெரிய ஆளாகணும், இதையெல்லாம் விட்டு' என்ற வேறு கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது அண்ணனும் இதற்கு உடன்படுகிறார்............ 

இப்படிப் போகிறது கதை. 

குடும்பத்துடன் அனைவரும் சென்று காண வேன்டிய படம் என்று விமரிசகர் சிபாரிசு செய்கிறார்.

 

இதன் மையக் கருத்துதான் நமக்கு இங்கு வேண்டியது.

 

ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர் என்று எத்தனை எத்தனை வகைகளிலோ இந்த வயதில் ஒரு ஆர்வம் இவர்களுக்குள் பிறக்கும். 

 

சிறு வயது முதலே ஒரு புரிதலுடன் வளர்க்கப் பட்ட குழந்தைகளும், பெற்றோர்களும் இதைச் சற்று இயல்பாகக் கையாளுவார்கள்.

ஒன்று,.... இது போன்ற நிகழ்வுகள் நடக்கவே வாய்ப்பில்லை; பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தால், 

அல்லது, 

அதையும் மீறி இப்படி நடந்தாலும் இது அனேகமாக ஒப்புக் கொள்ளப் பட்டுவிடும். 

அதிக பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. 

 

நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது இப்படி இல்லாத வீடுகளைப் பற்றித்தான்!

 

இது பற்றி சில தகவல்களைப் போன பதிவில் பார்த்தோம். 

 

எவ்வளவோ கட்டுப்பாடு, கோபதாபம், கண்காணிப்பு, இவையெல்லாவற்றையும் மீறி, இவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது!

 

என்ன செய்ய வேண்டும் பெற்றோர்கள்? 

 

உடனே எரிந்து விழுந்து, கோப வசபட்டு, வாக்குவாதம் முற்றிச் சண்டையில் இறங்கி, அசிங்கப்பட்டுப் போவதே வழக்கமாக நம் காண்பது.

 

அதை விடுத்து, இப்படிச் செய்ய முற்பட்டால், சில நன்மைகள் விளையலாம்.

 

" நீ இது போன்று உன் உடலை மதிக்காமல், உணர்ச்சிக்கு அடிமைப் பட்டு, இப்படி ஒரு செயலில் இறங்கியது எங்களுக்கு மிகவும் வருத்தமா இருக்கு. உன் வயதுக்கோ, அல்லது இப்போதிருக்கும் உடல் வாகுக்கோ இது சரியென்று எனக்குப் படவில்லை. 

ஆனால், முடிவெடுக்கும் உரிமை உன்னுடையது மட்டுமே. 

இதனால் விளையப் போகும் எந்த ஒரு விளைவுக்கும் நீயே பொறுப்பேத்துக்கணும் என்பதையும் மனசுல வெச்சுக்க. 

அதைத் தெளிவாத் தெரிஞ்சிகிட்டு மேற்கொண்டு நீ எந்த முடிவை வேணும்னாலும் எடு. 

18 - 19 வயசெல்லாம் இதற்கான வயசே இல்லை என்பதை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கணும் நீ. 

இதுலேர்ந்து வெளியே வர்றதுக்கு என்ன வித உதவின்னாலும் நாங்க செய்யக் காத்துகிட்டு இருக்கோம். 

 

அதையும் மீறி, நீ இதுல தொடரப் போறேன்னா, கர்ப்பத்தடை சாதனங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்க நம்ம லேடி டாக்டரைப் பாக்கறதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன். 

 

ஆனா, அப்படி ஒரு முடிவு நீ எடுக்கப் போற பட்சத்துல, இங்கே வீட்டில உனக்கு சில சலுகைகள் கடுமையாக்கப் படும், குறைக்கப்படும் அப்படீங்கறதையும் நீ புரிஞ்சுக்கணும். 

டயத்துக்கு வீட்டுக்கு வர்றது, இன்னின்னாரோடதான் பழகணும், ஆம்பளைப் பசங்க வீட்டுக்கு வரக் கூடாது, அப்படீங்கற சில விஷயங்களை நீ ஏத்துக்கணும்."

 

என்பதைத் தீர்மானமாகச் சொல்லுதல் மிகவும் முக்கியம்.

 

இதையே ஒரு சில மாற்றங்களுடன் ஒரு ஆண் பிள்ளைக்கும் சொல்லணும்.

 

நம்ம ஊருல, ஆம்பளைன்னா எது வேணும்னாலும் செய்யலாம்னு ஒரு மனப்பான்மை இருக்கு. 

அது உங்க வீட்டுல வேண்டாமே! 

பெண்ணுக்கு என்ன நீதியோ, அதையே தயங்காமல் ஒரு ஆணுக்கும் செய்ய முற்படுங்கள்.

 

இதைப் பார்த்து ஆணுக்கு உங்களிடம் ஒரு பயம் வரும்.

அவன் தங்கைகளுக்கு ஒரு மரியாதை உங்கள் மேல் பிறக்கும்.

 

முறையற்ற உடலுறவினால், பலவித நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது என்பதை ஒரு மருத்துவர் மூலமாக இவர்களுக்குத் தெரியப் படுத்தல் மிக அவசியம்.

ஹெர்பிஸ்,[Herpes] கொனோரியா,[gonorrhea] பால் வினை நோய்,[Venereal Disease] HIV/AIDS போன்ற நோய்களுக்கு இதுவே[Sexual intercourse] அடிப்படை நுழைவாயில் [Gateway] என்பது, ஒரு விழிப்புணர்வை இவர்களிடம் ஏற்படுத்தும்.

 

இதைச் செய்வது உங்கள் கடமையும் கூட.

 

இத்துடன், சம்பந்தப்பட்ட பையன் அல்லது பெண்ணின் வீட்டாரோடு ஒரு தகவல் தொடர்பு, நேராகவோ அல்லது மிகவும் நம்பிக்கையான ஒரு நண்பர்/உறவினர் மூலமாகவோ ஏற்படுத்தி, இரு தரப்பையும் விழிப்புடன் இருக்கச் செய்வதும் ஒரு விதத்தில் நல்லதே!

 

ஆனால், இதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன.

 

ஏதாவது ஒரு இடம் சற்று மோசமானவர்களாகவோ, அல்லது இந்த சமாதானத் தூதுவரே நாளை வில்லனாக மாறும் அபாயமோ இருக்கிறது!

 

நிலைமைக்கு, சூழ்நிலைக்குத் தக்கவாறு அனுசரித்து நடந்து கொள்ளவும்.

எல்லா இடங்களிலும் இது சரியாக வரும் என்று சொல்லிட முடியாது.

 

மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் இது.

 

பதிவுக்குப் பதிவு சொல்லி வருவது போல, 

ஒரு நண்பனாய், 

தோழியாய், 

அக்கறை உள்ள ஆசானாய், 

அன்புள்ளம் கொண்ட தாய் - தந்தையாய் 

இருக்க வேண்டியது உங்கள் தலையாய பொறுப்பு.... நாளைய உலகில் இவர்கள் தலை நிமிர்ந்து வாழ.

 

 

சரி, உடலுறவு கர்ப்பத்தில் கொண்டு வந்து விட்டது!

 

இதை எப்படி எதிர் கொள்ளுவது ?? 

 

தீபாவளி எல்லாம் நல்லபடி முடித்து பட்டாஸெல்லாம் வெடித்துவிட்டு வாருங்கள் !

 

இந்தப் பட்டாஸை அப்புறம் கொளுத்தலாம்!

 

[அப்படியே இன்னொரு முக்கியமான விஷயம்! 

இது போல அனைவரும் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கும் நேரம் கூட, வாய்ப்பிருந்தால், உங்கள் வயதுக்கு வந்த பெண்ணோடு தனித்துப் பேச ஒரு சந்தர்ப்பம் உள்ள நேரம்தான்! 

முடிந்தால் கொஞ்சம் பேசிப் பாருங்களேன், ப்ளீஸ்!]

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ?"

 

"பார்த்தீங்களா அவளை? அவ வர்றதும், டக்குன்னு மாடிக்கு போறதும், மணிக்கணக்கா செல் ஃபோன்ல பேசறதும், கண்ட கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதும், .... எனக்கு ஒண்ணும் சரியாப் படலீங்க! கொஞ்சம் கண்டிச்சு வையுங்க அவளை, ஆமாம்!"

 

"ஏண்டி எங்கிட்ட வந்து இத்தெல்லாம் சொல்றே? ஒம் பொண்ணுதானே அவ? நீ பேச வேன்டியதுதானே? அவளைத் தப்பு சொல்றதே ஒனக்கு வழக்கமாப் போச்சு!"

 

"எனக்கென்ன வந்ததுன்னு இருக்க முடியாதுங்க! நீங்க செல்லம் குடுத்துதான் அவ இப்பல்லாம் என்னை மதிக்கறதே இல்லை. ஒங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க! என் புத்தியை செருப்பாலதான் அடிசுக்கணும். எப்படியோ போங்க!"

 

"சரி, இப்ப என்ன ஆச்சுன்னு இந்தக் குதி குதிக்கறே நீ? அவ வரட்டும். நான் பேசறேன்."

 

"இதோ வந்தாச்சு. ரொம்பத் திட்டாதீங்க அவளை. பக்குவமா கேளுங்க!!"

 

"சாந்தி, இங்கே வாம்மா! அப்பா ஒங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்."

 

"என்னப்பா? சொல்லுங்க. எனக்கு நாளைக்கு ஒரு பேப்பர் சப்மிட்[Paper submit] பண்ணனும். நிறைய நோட்ஸ்[notes] எடுக்கணும். சீக்கிரமா சொல்லுங்க."

 

"அது யாரு அந்த ராஜேஷ்? அவனோட அடிக்கடி சுத்தறேன்னு சொல்றாங்களே ."

 

"என்னப்பா இது? அவன் என்னோட பெஸ்டு ஃப்ரெண்டு. [Best Friend]அவந்தான் இந்த ப்ராஜெக்டுல[project] எனக்கு ஹெல்ப்[help] பண்றான். ரொம்ப நல்லவன்பா அவன். இப்படி கேக்கறீங்களே? சொல்றவன் ஆயிரம் சொல்வாம்ப்பா. நீங்க எதையும் நம்ப வேணாம். வேணும்னா அவன் செல்ஃபோன் நம்பர்[cell phone number] தரேன். நீங்களே அவன் கூட பேசுங்க.".............

 

இது போன்ற காட்சிகள் பலவித மாறுதல்களுடன் அன்றாடம் பல வீடுகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

 

சில சமயம் புரிதல், சில சமயம் வீம்பு, கோபம், தாபம், சந்தேகம், ஆத்திரம், சண்டை, எதிர்த்துப் பேசுதல், என்று மாறுபட்டு இவை நிகழலாம்.

 

ஆனால் அடிப்படைக் கருத்து ஒன்றுதான்.

 

இதுவரை நாம் பார்த்து, நம் பேசக் கேட்டு, நாம் சொல்லி வளர்ந்த பெண்ணோ, பையனோ, இப்போது நம்மிடமிருந்து விலகி, நம்மை அந்நியமாகப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை நம்மிடம் ஏற்படுத்தி, நம் வாழ்க்கையே திசை திரும்பி விட்டது போன்ற ஒரு தோற்றம், பயம் நமக்குள் நிகழ்கிறது .

 

இது எதனால்?

 

நம் பார்வை மாறியதா?

இல்லை அவர்கள் மாறி விட்டார்களா?

 

இரண்டும் இல்லை.

 

அவர்கள் வளர்ந்ததை, வளரத் தொடங்கி விட்டதை, நம்மால் ஒப்புக் கொள்ள முடிய வில்லை என்பதே நிஜம்.

 

பாலியல் ரீதியாக மட்டும் இப்போது பார்ப்போம்.

 

வெட்கம், நாணம், திமிர், சுதந்திரப் போக்கு இவையெல்லாம் ஏற்படுகின்ற இக்காலகட்டத்தில், அவர்கள் ஒரு வித துணிந்து செயல் படும்[experimentation] நிலையில் இருக்கிறார்கள்.

 

இதுவரையிலும் அப்படித்தான் இருந்தோம் என்றாலும், திடீரென ஒரு அதிகப்படியான காக்கும் உணர்வு[Protective nature] நமக்குள் வருகிறது.

 

அவர்களுடன் நேரடியாக, நேர்மையாக, அமைதியாக, அவர் உணர்வு புரிந்து நடக்க வேண்டிய இந்த முக்கியமான சமயத்தில், நாம் 

பொறுமை இழப்பதும், 

ஆத்திரப் படுவதும், 

தனித்து இயங்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதும், 

எது பேசணுமோ அதை விட்டு மற்ற விஷயங்களைப் போட்டுக் குழப்பி பிரச்சினையை மோசமாக்குவதும், 

அவர்களைச் சரியாக நடத்தாதுமான நிகழ்வுகள்தான் நாம் செய்கிறோம்.

 

உதாரணத்துக்கு இந்த உடலுறவு விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

 

நம் பெண் கெட்டுப் போய்விடக் கூடாதே, நம் பையன் தப்பா நடக்கக் கூடாதே என்னும் ஆதங்கத்தில், நாம் எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறோம்?

 

அவையெல்லாம் தவறு என்று சொல்ல வரவில்லை நான்.

 

உடலுறவு என்றால் என்ன, 

எப்போது அது நிகழ வேண்டும், 

பருவம் மாறி நிகழ்வதால் ஏற்படக் கூடிய மாற்று விளைவுகள் என்னென்ன, ஏன் அவசரப் படக் கூடாது, 

அது செய்யாமலேயே அன்பை வெளிக்காட்டுவது எப்படி 

என்பதை அவர்கள் உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுவது நல்லதா அல்லது வேறு யார் மூலமாவதா?

 

இது பற்றிப் பேசுவது சற்று சங்கடமான விஷ்யம்தான் என்றாலும், நீங்கள் பேசுவதுதான் நல்லது.

 

இதை நன்றாகப் புரிந்து கொண்ட வீடுகளில் பிரச்சினைகள் அதிகம் வராது.

 

ஒரு புரிதல் நிகழ வேண்டும் இருவருக்குள்ளும்.

 

"இங்க பாருப்பா, ஒருத்தரோட அன்பா இருக்கறதுல தப்பே இல்லை. 

இப்ப செய்யலைன்னா வேற எப்போ செய்ய முடியும்?

ஆனா, அந்த அன்பை வெளிக்காட்டறதுக்கு, உடலுறவுதான் வழி, அப்போதான் அடுத்தவருக்கு நம்ம மேல ஆசைன்னு தப்புக் கணக்கு போட்டுறக் கூடாது. 

இது அதுக்கான வயசு இல்லை. 

உடலுறவு மூலமா, குழந்தை பிறக்கலாம். 

இல்லை நாங்க தடுப்பு சாதனங்களை உபயோகப் படுத்திப்போம்னு சொன்னா, அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும் நீ. 

இதுதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணியாச்சுன்னா, அதை சமாளிக்க வேண்டிய வழி வசதிகள் இருக்கான்னு தீவிரமா யோசிக்கணும்.

நம்ம காலுல நிக்கக் கூடிய சக்தி நமக்கு இருக்கான்னு முதல்ல தீர்மானம் பண்னிக்கணும். 

அது எல்லாத்தையும் விட மிக முக்கியமானது, நீ ஒரு பெரிய இழப்பை இந்த சுகத்துக்காக சம்பாரிச்சுக்கறேங்கறதைப் புரிஞ்சுக்கனும். 

அன்பை வெளிக்காட்டணும்னா, 

நெருங்கிப் பேசறது, 

ரெண்டு பேரும் சேர்ந்து கை கோத்தபடி நடந்துட்டு வர்றது,

பாட்டு, டான்ஸுன்னு போறது, 

ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சுக்கறது, 

இது போல இன்னும் எத்தனையோ இருக்கு. 

இது மூலமா நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும். 

அப்புறமா, இருக்கவே இருக்கு, கல்யாணம். 

அதுக்கப்புறம் நீங்க என்ன செஞ்சாலும் யார் கேக்கப் போறாங்க? "

 

இது போல வெளிப்படையாகப் பேசினால், அடுத்த முறை அவனோ அல்லது அவளோ மீண்டும் இதற்கு [sexual intercourse] நெருக்கும் போது, தானாக உங்களிடம் ஆலோசனைக்கு வருவார்கள். 

 

இது நிகழ்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

 

அதையும் மீறி, உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார், உங்கள் மகன் அல்லது மகள் எனத் தெரிய வருகிறது.

 

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

"சட்டி சுட்டதடா! கை விட்டதடா!!"

 

சென்ற பதிவில் சொல்ல விட்டுப் போன ஒரு முக்கியமான நிகழ்வைப் பற்றி சொல்லியபின் மேலே செல்லலாம்.

 

9, 10 பதிவுகளில் "பாலியல் வன்புணர்வுக் கொடுமை"யைப் பற்றி எழுதியிருந்தேன். 

அதற்கு மிகவும் பலியாகுபவர்கள் இந்த 13 முதல் 17 வயது பிள்ளைகளே!

 

ஹார்மோன்களின் சுருதி இன்னும் சரியாக சேராத, உடல் என்னும் ஹார்மோனியத்தில் எழுகின்ற அபஸ்வரங்களால் உந்தப்பட்டோ,[ஹரிஹரனுக்கு நன்றி!] செய்வதின் தீவிரம் புரியாமலோ, அல்லது, அதிகாரம், ஆளுமைக்கு உட்படுத்தப் பட்டோ, இவ்வயதுப் பிள்ளைகள் இந்த வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்த்ப் படுகிறார்கள். 

எனவே, பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. அவர்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வந்து, அந்த பதிவுகளில் சொல்லிய சில ஆலோசனைகளை மனதில் கொள்ளவும்.

 

மற்றொரு விஷயம்!

 

நண்பர் மா.சிவக்குமார் தனது இன்றையப் பதிவில் நான் பாலியல் பற்றி விவரித்துச் சொல்லாமல் "மிக அடக்கியே வாசிக்கிறேன்" என்ற ஒரு கருத்தினை வைத்திருக்கிறார்.

இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வையும், ஆலோசனைகளையும் சொல்லும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட ஒன்று.

சொல்வதென்றால் ஒரு நூறு கதைகள் இருக்கின்றன.

இது போன்ற கதைகள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.

சராசரி தகப்பன் தாய் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களைப் பற்றி சொல்லவே எண்ணம்.

 

விழிப்புணர்வைத் தருகிறேன் என்று தொலைக்காட்சி தொடர்கள் போல அடுத்தவரை எப்படியெல்லாம் கெடுக்கலாம் என்பதை புதுப்புது வழிகளால் சொல்லித் தந்து இது பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை, எண்ணத்தை விதைக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

முன்னரே சொல்லியவண்ணம், பதிவின் இறுதியில் ஒரு சில உபயோகமான சுட்டிகள் தர நினைத்திருக்கிறேன்.

உங்கள் கருத்தை எனக்குத் தெரியப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

 

போதும் முன்னுரை! பதிவைத் தொடர்வோம்! [நன்றி கோவி.கண்ணன் மற்றும் சிறில்]

 

ஒவ்வொரு நாட்களும் குழந்தை வளர்ப்பில் ஒரு சவால்தான்!

புதுப்புது வண்ணங்களில் அவை நம்மை எதிர் கொள்ளும்!

 

அப்பாடா! இந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம், இனிக் கவலையில்லை என ஓய்வெடுக்க முடியாத, ஆனால் ஒவ்வொரு கணமும் இன்பமும், துன்பமும் கலந்து வரும் ஒரு உணர்வுதான் குழந்தை வளர்ப்பென்பது!

 

இதுவரை நாம் பார்த்த 17 வயதுப் பிள்ளைகளை சமாளித்தது ஒரு வகையில் என்றால், இனி வருவதுதான் மிகவும் கடினமான ஒன்று.

ஏன் சொல்லுகிறேன் என்றால், 

இதுவரை அது உங்கள் பிள்ளை. 

ஒவ்வொரு வகுப்பாய் நீங்கள்{!!} வெற்றியடைந்து வந்த போது இருந்த மகிழ்வு, இப்போது வராது.

 

பாஸோ, ஃபெயிலோ, இத்துடன் அது உங்களை விட்டு விலகப் போகிறது.

தானும் இந்த பூவுலகில் ஒரு அங்கம், தனக்கென ஒரு நிலை இனி எனப் பிரியும் நேரம்!

 

இதற்குத்தான் இவ்வளவு பாடுபட்டோம்?, வளர்த்து ஒரு ஆளாக வேண்டும் நம் பிள்ளையும் என்று நீங்கள் உழைத்த உழைப்பெல்லாம் ,

"இதற்கா இவ்வளவு உழைத்தோம்? நம்மை விட்டுப் போவதற்கா?" என நீங்களே எண்ணப் போகும் நேரம்!

அந்த அளவிற்கு உங்களை தள்ளுவார்கள் [push] அவர்கள்!

 

இது பலவேறு முனைகளில் உங்களைத் தாக்குமென்றாலும்,

பாலியல் வழியாக நீங்கள் என்னவெல்லாம் சந்திக்க நேரிடும்; 

அதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் தயாராக இருக்க முயலலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

 

இதற்குள், உங்கள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமோ, வகுப்பறையிலோ பாலியல் பற்றி இதற்குள் அவர்கள் அறிந்திருப்பார்கள். 

ஆனால், எல்லாமும் முழுதுமாகத் தெரிந்து கொண்டிருக்க மட்டார்கள்.

வடிகட்டிய,அல்லது பொறுக்கிய அறிவு [filtered or selective knowledge] என்ற வகையில் தேவைக்கு குறைவாகவோ, அல்லது, மீறியோ பல தகவல்கள் அவர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் இப்போது!

 

அதனை எல்லாம் சரிபடுத்தி, வகைப்படுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது!

 

உடலுறவு ஒண்ணும் தப்பில்லடீ!

 

'கை அடிச்சா' 60 சொட்டு ரத்தம் வீணாகும்.

 

அப்பா அம்மால்லாம் பாய் ஃப்ரென்ட்ஸ் வெச்சுக்க எதிரிகள்.

 

காதல்னா நான் கேட்டதெல்லாம் அவ குடுக்கணும் எனக்கு. அப்பத்தான் அது உண்மையான காதல்.

 

இந்த வயசுல அந்த சுகம் அனுபவிச்சுப் பாக்கறதுல ஒண்ணும் தவறில்லை.

 

இது போல பல.

 

சரி, இதையெல்லாம் எப்படி நிவர்த்திப்பது நீங்கள்?

 

ஒரு நல்ல தருணம் வரட்டும்; அப்போது பேசிக்கலாம் என ஒத்திப் போட்டால்.... அந்தத் தருணம் வராமலேயே போயிடும்.

இதை ரொம்ப இயல்பா, நடைமுறை நிகழ்வுகள் மூலமாவே அவங்களுக்கு சொல்ல நாம முற்படணும்.

ஒரு விவாதத்திற்குரிய திரைப்படம்,[ உயிர், காதல், எம்[டன்] மகன் போன்ற திரைப்படங்கள்] ஒரு நல்ல ஆரம்பமாயிருக்கும். [அடிக்க வராதீங்க!]வரிசையா இது மாதிரிப் படங்களாவே பாருங்கன்னு சொல்ல வரலை.

ஆனால், இந்த விஷயம் பத்திப் பேச இது உதவும்னு சொல்றேன்.

இது எல்லாத்துலேயும் ஒரு கருத்து இருக்கு.

 

இதைப் பத்தி இதுக்குள்ளே கல்லூரியில் பேசியிருப்பாங்க இவங்க!

ஒரு சில ஆசீர்வதிக்கப்பட்ட வீடுகளில்,[Blessed homes] இது ஒரு இயல்பாக நிகழும்.

அப்படி நடந்துதான் நம்ம 'மதுரா' இப்படி ஒரு துணிச்சலான, வெளிப்படையான பொண்ணா வெளில வராங்கன்னு நினைக்கிறேன்! [நன்றி மதுரா!]

ஒரு திறந்த மனத்துடன் அணுக வேண்டிய நிகழ்வு [matter] இது.

 

இப்படி இல்லாத வீட்டில்.....,

இதைப்பத்தி பேசறதை கொஞ்சம் 'அடக்கியே வாசிங்க!' [மா. சிவகுமாருக்கு நன்றி!:)

வலிய இதைப் பத்தி பேச ஆரம்பிக்காதீங்க.

 

ஏதாவது ஒரு கேள்வி, ஒரு [கமெண்ட்]கருத்து, வந்ததுன்னா மட்டும் பேசுங்க.

இல்லை, ஒரு பொதுவான கருத்தைச் சொல்லி, அதற்கு ஏதாவது பாதிப்பு அல்லது எதிர்வினை [Reaction] இருக்கான்னு பாருங்க.

 

அப்படி ஏதாவது வந்தா, தனியா அது கிட்ட இதைப் பத்தி பேச்லாம்.

முதலில், அவர்கள் கருத்து என்னவெனப் புரிந்து கொண்டு, அதை ஒட்டி மட்டும் பேசுங்கள்.

 

காரில் போகும் போதோ, இரவில் சமையல் அறையைச் சுத்தம் செய்ய உதவ வரும் போதோ, இல்லை வாசப்படில ரெண்டு பேரும் தனியா உக்காந்து பேசும் போதோ, இது தொடங்கப் படலாம்.

 

அப்படிப் பேசறது ஒரு விவாதமா மாறிடாமப் பாத்துக்கோங்க!

அவங்க இதுல தீவிரமா உங்களை உசுப்பேத்துவாங்க!

நீங்கதான் நிதானமா இருக்கணும்!

"பருவமே புதிய பாடல் பாடு" [தொடர்ச்சி]

 

[பத்து கட்டளைகள்]

 

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். 

 

மருத்துவன் என்ற முறையில், பல குடும்பங்களுக்கு ஒரு நண்பன், வேண்டியவன் என்று மதிக்கப் பட்டதால்,அவர்கள் குடும்ப நிகழ்வுகளில் நான் விரும்பியோ, விரும்பாமலோ ஈடுபட வேண்டிய அவசியம் பல முறை நிகழ்ந்திருக்கிறது.

 

மாமியார் கொடுமை முதல், குழந்தையின் காதுகுத்து வரை, சம்பந்தமே இல்லாமல், முக்கிய மனிதனாகக் கருதப்பட்டு, ஆலோசனைகளும், பஞ்சாயத்து செய்வதும் சற்றே பழகிப்போன விஷய்ங்கள்!

 

அந்த முறையில் என்னிடம் வந்த ஒரு நிகழ்வு இது.

 

சற்று வசதியான குடும்பம்.

பெண்ணை கான்வென்டில் சேர்த்துப் படிக்க வைத்திருந்தார்கள்.

ஒரு 13 - 14 வயது இருக்கும்.

சென்ற வருடம்தான் வயதுக்கு வந்த சிறுமி.

 

என் க்ளினிக்கிற்கு வந்த ஒரு மூன்றாம் நபர் என்னிடம் ஒரு தகவல் சொன்னார்.

அந்தப் பெண்ணும், இன்னொரு இளவயசுப் பையனும் அடிக்கடி சேர்ந்து சுற்றுவதாக.சொன்னவரிடம் யார் அந்தப் பையன் என்று விசாரித்து,உறுதி செய்து கொண்டு, அவருக்கு நன்றி சொல்லி விட்டு, இரவு வீட்டிற்குச் செல்லுகையில், அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.

 

பழகியவன் என்பதால், எப்போதும் போல் சாதாரணமாக வந்திருப்பதாய் நினைத்து வரவேற்று, ஒரு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்துவிட்டு[அது வாடிக்கை அந்த வீட்டில் எனக்கு!]ஊர்க்கதை பேச ஆரம்பித்தார் அந்தத் தந்தை.அவரிடம், நான் உங்களிடம் ஒரு செய்தி சொல்லணும். இது போல, விஷயம் என மெதுவாகச் சொன்னேன்.

 

முகம் சிவந்து, பல்லை நற நறவெனக் கடித்து, மனைவியை நோக்கி உறும ஆரம்பித்தார் அவர். 

 

"எல்லாம் இவளால வந்த வினை டாக்டர். எனக்கும் கூட நேற்றுத்தான் இந்த விஷயம் தெரிய வந்தது. இவ கொடுக்கற செல்லத்துல தான் அவ இப்படி ஆடறா" எனப் பொரிந்து தள்ளினார்.

 

இது நான் ஓரளவு எதிர்பார்த்த வினைதான் என்றாலும், இந்த நேரத்திற்கு இது ஆகற கதை இல்லை என்பதால், அவரை மரித்து," இது நேரம் இல்லை பழியை யார் மேல போடறதுங்கறதுக்கு. இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க என்று தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்தது" என்றேன்.

 

"என்ன செய்யணும்ஙறீங்க? ஸ்கூலை மாத்த வேண்டியதுதான். அவ பின்னாடி கூடமாட போக வேண்டியதுதான் இனிமேல. வேர என்ன பண்னணும்னு சொல்லுங்க" என்றதும் எனக்கு வருத்தமாய் போய் விட்டது.

 

அடுத்தவர் மீது பழி போடலும், மகளைத் தண்டித்தலும் இரண்டுமே எனக்கு சரியாகப் படவில்லை.

 

அவரைப் பார்த்து,

"இது சரியானதாகத் தோன்றவில்லை. உங்க குடும்பத்துல ஒருத்தன் மாதிரி என்னை நடத்துவதால் நான் சொல்றதை நீங்க கேக்கணும். கோபப்படாம நிங்க உங்க பெண்ணொட பேசணும். என்னன்னு விசாரிக்கணும். அவங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸாக் [Just friends]கூட இருக்கலாம். அப்படித்தான் அது சொல்லும். அதை நீங்க நம்பணும். அட் லீஸ்ட் [at least] நம்பற மாதிரியாவது நடிக்கணும். பிறகு, பொறுமையா, ஆத்திரப்படாம, அவ கிட்ட, இது எப்படியெல்லாம் அவளையும், நம்ம குடும்பத்தையும் பாதிக்கும், இதுல என்னவெல்லாம் கவனமா இருக்க வேண்டிய விஷயம் இருக்குங்கறதை தெளிவா புரியும்படி சொல்லணும். பருவ காலத்துல இது மாதிரியான சில விஷயங்கள் நடக்கரது சகஜம்தான். இதைப் பெரிசு படுத்தி, அது அவமானப் படற மாதிரியோ, இல்லை மனசு பாதிக்கற மாதிரியோ நடந்துகிட்டீங்கன்னா, அப்புறம் உங்க பொண்ணு எப்பவும் உங்களை மன்னிக்காது. எனக்கும் அந்தப் பையனோட வீட்டைத் தெரியும். நான் அவங்க கிட்ட பக்குவமா இதைப் பத்தி சொல்லி அங்கேயும் பேசச் சொல்றேன். ஆனா, நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம் இதுல" என்றேன்.

 

அது போலவே நடந்து எல்லாம் சரியானது தனிக்கதை. 

இங்கு வேண்டாம்.

 

இதுதாங்க விஷயம்.

பருவம் ஆரம்பிக்கற நேரத்துல, ஒரு சில மாற்றங்கள் உடல் ரீதியாகவும், உணர்ச்சிகள் ரீதியாகவும் நடக்குது.

 

இதுல பெற்றோர்களின் பங்கு என்ன, எப்படி நடந்துக்கணும் அவங்க என்பதைப் பார்ப்போம்.

 

ரொம்ப பெருசா பதிவு இருந்தா, நிறையப் பேரு படிக்க மாட்டாங்கன்னு எனக்கு ஒரு சக பதிவர் எச்சரித்ததால் கொஞ்சம் சுருக்கமா சொல்றேன்.

 

பத்து கட்டளைகள்

 

1. இந்தப் பதிவைப் படிக்கறவங்களுக்கு பல்வேறு வயதுகளில் குழந்தைகள் இருக்கலாம்.அதனால, சில பேர் இப்பத்தான் இதைப் பத்தி தெரிஞ்சுக்கற நிலையிலும் இருக்கலாம்.அவங்க எல்லாருக்கும் ஒரு வார்த்தை.இதுதான் கடைசி நிலை.இப்ப விட்டீங்கன்னா, அவங்களை நீங்க பிடிக்கவே முடியாது. என் பெண், பையன் தப்பு பண்ண மாட்டான் என்கிற மனோபாவத்தைத் தூக்கி எறியுங்க. 

 

2. உடல் உறவு சம்பந்தமா உங்க குடும்ப வழக்கங்களைத் தெளிவாக பையன் பிள்ளைகளுக்கு, இதுவரை சொன்னது இல்லைன்னா, இப்பவாவது சொல்லியே ஆகணும். உடல் உறவு என்பது ஒரு இனிமையான அனுபவம்தான் என்றாலும், சற்று மன முதிர்ச்சி அடைந்த பின்னர் இதில் ஈடுபடுவதுதான் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது என்பதை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும்.

 

3. நெருங்கிப் பழகவும், அன்பைக் காட்டவும், உடல் உறவைத் தவிர பல வழிகள் உண்டென்பதைச் சொல்லிக் கொடுக்கணும்.

 

4. வயது, இருவரின் உடன்பாடு,[consensus] தடுப்பு முறைகள்,[contraception] அன்பு, [love], காதல்,[love for a particular person], நெருக்கம் [intimcy] அதனால் ஏற்படும் விளைவுகள் இவை பற்றி எல்லாம் ஒரு தெளிவான புரிதலை அவர்களுக்குக் கொடுப்பது மிகவும் தேவையான ஒன்று.

 

5. 'வேண்டாம்'[NO] 'கூடாது' [DON'T] என்ற சொற்களின் முக்கியத்துவத்தை ஆழமாக்ப் பதிய வைக்க வேண்டும்.

 

6. இது உன் உடல், உள்ளம். உன் சம்மதமின்றி எவருக்கும் இதில் ஆளுகை புரிய அதிகாரமில்லை. இதற்கான முடிவெடுக்கும் திறமையும், அதிகாரமும், உனக்கு மட்டுமே உள்ளது என்பதையும் அந்த உறுதி வளரும் வரை, பெற்றவர் துணையை நாடி இருப்பதின் அவசியத்தையும் வேரூன்றச் செய்ய வேண்டும்.

 

7. எதையும் அடுத்தவரிடம் சொல்லுதற்குப் பதிலாக, பெற்றவரிடம் வந்து சொல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் பதிப்பதில் உங்களுக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. குடும்பச் சூழலை அப்படி அமைத்துக் கொள்வதில், அப்பா, அம்மா இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. குழந்தைகள் உங்களைப் பார்த்து பயப்படும்படி செய்வதில் இனிமேல் ஒரு பெருமையும் இல்லை. மாறாகக் கேடுகளே விளயும். ஒரு நண்பனாக, தோழியாக உங்களைக் கருதுமாறு, அதே சமயம் உங்கள் மரியாதை குறையா வண்னம் நடந்து கொள்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.

 

8. தவறுதலாகவோ, தெரியமலோ அப்படி ஏதாவது அசம்பாவிதமாக நடந்து விட்டாலும், அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதில், உங்கள் குடும்ப மரபின் படி தீர்மானமாக இருப்பது நன்மை பயக்கும். கருத்தடையோ,[contraceptives], சிதைவோ[abortion], வளர்ப்போ,[parenting] தத்து கொடுத்தலோ,[adoption] இவையெல்லாம் கூட சற்று முன்கூட்டியே இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு செய்து வைத்துக் கொண்டால் கூட தவறில்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால், இதில் ஒரு தெளிவு இல்லையெனில், பிரச்சினை என்று வரும் பொது, இதன் மூலம் பலவித சங்கடமான விளைவுகள் வரலாம். இது நிகழும், நிகழ வேண்டும் என்ரு சொல்லவில்லை. ஆனால் ஒரு நிலைப்பாடு இருப்பது நல்லதல்லவா?

 

9. எப்படியெல்லம் ஒரு சிலரால் உடலுக்கும், மனதுக்கும் கேடு[abuse] விளவிக்க முடியும், அதற்கு எப்படி நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை TV பார்க்கும் போதோ, அல்லது இது போன்ற நிகழ்வு ஒன்று அக்கம்பக்கத்தில் நடந்தாலோ, அந்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான விவாதம் நடப்பது இவர்களுக்குப் பெரிதும் உதவும் .

 

10. பருவம் என்றதுமே, உடனே அது உடல் உறவு, திருமணம் பிள்ளை பெற்றுக் கொள்ளல், குடும்பம் நடத்துதல் என்றுதான் இல்லாமல், இது தவிர ஒரு சிலர், தனித்தும் இருக்க , இதிலெல்லாம் ஆர்வம் இல்லாமல் இருக்கவும் கூட வாய்ப்புண்டு என்பதையும் சொல்லித் தர வேண்டும். இல்லையென்றால், நாம் ஏதோ சமூகத்தில் சேராத பிறவி என்ற தாழ்வு மனப்பான்மை வராமல் தடுக்க இது பயன்படும்.

 

அன்பும்,[love], பாசமும், [affection], குடும்ப நிலைகளும் [family values] காட்டி, பொறுமையுடனும், நிதானமாகவும் செய்தால் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும், ஒரு அளவு வரை..... அவர்கள் தாங்கள் யார், தனக்கு என்ன வேண்டும், தன்னால் என்ன முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குள் வரும் வரை.

 

அதன் பிறகு.....?

 

அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

 

கவலைப் படாதீர்கள்.

உங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் நிலை அடுத்தது!

 

பெற்றவர்கள் அஞ்சும் அந்தப் பதினெட்டு!

"பருவமே! புதிய பாடல் பாடு"

 

இதுவரை சிறு குழந்தையில் இருந்து 12 வயது வரையான குழந்தைகளின் நிலைகளில் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்று பார்த்தோம்.

 

இதிலேயே மலைத்துப் போய் பாதிப்பேர் காணாமல் போய்விட்டார்கள்!

 

எடுத்த காரியத்தை முடிக்காமல் விடக் கூடாது என்பதால் மிகுதியையும் சொல்லாமல் போகப்போவதில்லை நான்!

 

 

இதுவரை படித்ததே அதிகம் என நீங்கள் நினைத்தால்...... இனிமேல்தான் முக்கியமான சவாலே வருகிறது என்பதை உணர்ந்தால் என்ன செய்வீர்களோ?

 

ஆம்!

 

இதுவரை நம் பேச்சைக் கேட்டு, நமக்கு ஆசையான குழந்தையாய், நம் கனவுகளின் அஸ்திவாரமாய் இருந்த உங்கள் குழந்தை இப்போது தான் யார், தன்னால் என்ன செய்ய முடியும் என்று தானே உணரும் அந்த இனிய நிகழ்வு நடைபெறப்போகும் நல்ல நேரம் வருவதை உணரும், ஒரு மானுடமாய் மாறப்போகும் அதிசயத் தருணம் இப்போது நடக்கப் போகிறது!

 

மனித வளர்ச்சி என்பது படிப்படியாய் நிகழ்வதல்ல.அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு.

 

ஆனால், அதிலும் ஒரு மூன்று நிலைகளை பொதுவாகப் பிரிக்கலாம்.

 

குழந்தை, 

வளர் சிதைப் பருவம், 

வயது வந்தவர் என.

 

இதுவரை நாம் முதல் இரண்டு நிலைகளைப் பார்த்தோம்.

 

இப்போதுதான் அந்த முக்கியமான தருணம், ........ நம் வாழ்வை நிர்ணயிக்கப் போகும், நமக்கு ஏற்படப்போகிற அத்துணை மாற்றங்களுக்கும் அடித்தளமாய் அமையப் போகிற அந்த 'பருவம் அடைதல்' என்னும் மாற்றம் இக்குழந்தைகளுக்கு நிகழ்கிறது.

 

இந்நிலைக்குப் பிறகு இவர்களுக்கு இரண்டே இரண்டு வழிகள்தான் இனிமேல்.

 

தன்னை உணர்ந்து, தன் நிலை அறிந்து, தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மதித்து தரணியில் ஒரு நல்ல இடத்தை அடைவது ஒன்று.

 

தனக்கு நேர்ந்த இம்மாற்றத்தை தவறாகப் புரிந்து கொண்டு, தறுதலையாகி, தான், தன் சுகம் என தனக்கு ஒரு வழியமைத்து, அதற்கென தன்னையே பறிகொடுத்து, தறி கெட்டுப் போவது இன்னொன்று.

 

அதனால்தான் நம் முன்னோர்கள் மிக அழகாக, இதை'வயதுக்கு வருதல்' என்று சொல்லி வைத்தனர்.

 

இதுவரை வாழ்ந்த வருடங்கள் ஒரு வயதல்ல. 

இனிமேல் வாழப்போகும் வருடங்களும் ஒரு வயதல்ல.

இன்று, இது நிகழ்வதுதான் ஒரு திருப்புமுனை எனத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

 

இப்போது என்ன நிகழ்கிறது?

 

உடல் ரீதியாகவும், பழகுமுறை ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன இப்பருவத்தில்.

 

இவையெல்லாம் விரித்துக் கூறுதல் இப்பதிவின் நோக்கமில்லையெனினும், பாலியல் வழியில் இவை ஒவ்வொன்றும் எப்படி இவர்களை பாதிக்கின்றது அதற்கு பெற்றோர்கள் எந்த வகையில் தயாராக இருக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன். 

 

இதுவரை பார்த்த உங்கள் மகனோ அல்லது மகளோ வேறு, இனிமேல் பார்க்கப்போகும் பிள்ளை வேறு என்பதை உணர முடியாத பெற்றோர்களே அதிக அள்வில் இந்நேரம் தொடங்கி அவதிப்படுகிறார்கள்.

 

"நான் பாத்து வளந்த புள்ளை; எனக்குத் தெரியாதா அதை பத்தி?" என்னும் மனோநிலையையே பெரும்பாலான பெற்றோர்கள் கைக்கொள்ளுகின்றனர்..... நடப்பதை அறியாமல்.

 

அப்படி என்னதான் ஆகிறது இந்தக் குழந்தைகளுக்கு?

 

உடல் ரீதியாக,

குழந்தைப் பருவம் கழிந்து மனித நிலையை அடைவதும்,

இதுவரை காணாத உடல் வளர்ச்சியைக் காணுவதும்,

 

வளர்ச்சி ரீதியாக,

தனித்து முடிவெடுக்கும், நல்லது, கெட்டது எனத் தானே ஒரு முடிவு எடுக்கும் திறமை தனக்கு வந்து விட்டதாக நினைக்கும் மன நிலையும்,

இதற்கு உதவி புரிய இதுவரை நம்பியிருந்த பெற்றோரைப் புறந்தள்ளி, நண்பரை நாடும் மன நிலையும்,

இதுகாறும் பெற்றோரை எதிர்பார்த்து செய்து வந்த சில செயல்களை, [உணவில் தொடங்கி உடை அலங்காரம் வரை,] தானே செய்து கொள்ள முடியும் என்ற மனத்திடமும்,

தன்னிச்சைப் போக்கும், நாட்டமும்,

 

உணர்வு பூர்வமாக,

நீடித்து நிற்கக்கூடிய நட்பு, உறவு இவைகளை தானே அமைத்துக் கொள்ளும் திறனும்,

தன் உணர்வை எந்த வகையிலேனும் தனித்து காட்டக் கூடிய மன உறுதியும்,

எப்படி தன்னை யார் எனக் காட்டிக் கொள்ள முடியும் என்ற வீராப்பும்,

 

ஒரு சில ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிப்பதன் மூலம் தன்னை அறியாமலேயே இவர்களை வந்தடைகின்றன!

 

இவை அனைத்தும் வெளிப்படும் ஒரே நிலை பாலியல் மூலம் என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்; 

ஆனால் இதுதான் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திச் சொல்லுகின்றனர்!

 

தனது அத்தனை மாற்றங்களையும் பாலியல் வழியாகவே நிலை நிறுத்தி, தன் தனித்துவத்தை பறை சாற்றிக் கொள்ளுகின்றனர் இவர்கள்.

 

இது புரிந்த பெற்றோர்கள் குறைவு!புரியாமல் குழம்பி, தன்னையும் வருத்தி, பிள்ளையையும் வருத்தி சங்கடப்படுபவர்களே மிக அதிகம்!

 

"அப்படி என்னதான் பாலியல் மூலம் வெளிப்படுத்துகிறார்கள், கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போம்" என நீங்கள் சவால் விடுவது எனக்குக் கேட்கிறது.

 

மனதை திடப் படுத்திக் கொண்டு படியுங்கள். 

நான் சொல்லுவது அனைத்தும் உண்மை; உண்மையைத்தவிர வேறில்லை எனச் சொல்லி தொடங்குகிறேன்!

அடைப்புக் குறிகளில் பெரும்பாலான, [இதுவரை குழந்தைகளை சரியாக வளர்க்காத] பெற்றோர்களின் மன நிலையைச் சொல்லியிருக்கிறேன். 

இது பொதுவான ஒரு கருத்து தான்!

என் பிள்ளை அப்படி இல்லை என்பவர்களுக்கு என் வந்தனம்!

 

இவர்களுக்கு தன்னுடைய பாலியல் மாற்றத்தால், பருவ மறுதலால் தன்னுள் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பது நன்றாகத் தெரியும்!

 

[அது சின்னப் புள்ளைங்க! அதுக்கு ஒண்ணும் தெரியாது. பச்சைப் புள்ளைங்க அது!]

 

உடல் உறவு தவிர்த்து என்னென்ன வகையில் தன் பாலியல் மாற்றத்தை வெளிப்படுத்த முடியும் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

 

[வெகுளியா சிரிச்சுத்தாங்க அது பேசும். விகல்பம் இல்லாம எல்லோரோடேயும் சகஜமாப் பழகும்]

 

நல்ல உறவு எது, தீய உறவு எது என்பது தெரியும். 

தனக்குப் பிடித்த அம்சங்கள் இருப்பின் எந்த உறவும் அசைக்க முடியாத நல்ல உறவே!

 

[ஒண்ணும் தெரியாத புள்ளைங்க அது! வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிடும்.]

 

கர்ப்பம் அடைய தன்னால் முடியும் எனத் தெரியும். அதைத் தடுக்க வழிகள் உண்டெனவும் தெரியும்.

 

[கள்ளம் கபடு இல்லாத பொண்ணுங்க அது. இப்படியெல்லாம் நடக்குமின்னு அதுக்கு தெரியாதுங்க. எந்த பாவி மகனோ கெடுத்துட்டான்]

 

[என் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். அவன் உண்டு அவன் படிப்பு உண்டுன்னு தான் இருப்பான். அவன் இப்ப்டி பண்ணினதுக்கு எந்த சிறுக்கி மகளோதான் காரணம். வலை விரிச்சு வசியம் பண்ணிட்டா!]

 

தனது பாலியல் கவர்ச்சியை எப்படி வெளிக்காட்டுவது எனத் தெரியும்.

 

[அந்த மேனாமினுக்கி அசைஞ்சு, ஒடிஞ்சு நடந்து வரும் போதே தெரியும். இப்படி ஏதாவது எம் புள்ளை மேல அபாண்டமா பழி போடுவான்னு!]

 

[கண்ணாடி முன்னாடி என்னடி அவ்வளவு நேரமா நின்னுண்டு இருக்கே! எவனுக்காக இந்த சிங்காரம்?]

 

"அவ/அவன் இல்லேன்னா நான் உயிரோட இருப்பேன்னு கனவு கூட காணாதே" என்று வீர வசனம் பேசத் தெரியும்.

 

[ஐயோ, ஐயோ எவளோ எம் புள்ளைக்கு மை வெச்சுட்டாளே! நான் என்ன பண்ணுவேன்!]

 

[ஏண்டி! நீ இப்படில்லாம் பேசறவ இல்லையேடி. யார்றீ சொல்லிக் கொடுத்தா இதெல்லாம்?]

 

என்ன? நினைவுலதான் இருக்கீங்கல்ல! இல்லை மயங்கி விழுந்துட்டீங்களா? 

 

நான் சொன்னது எதுலியாவது தப்பு இருந்தா சொல்லுங்க.

 

சரி, இது நிகழாமல் இருக்கணும்னா பெற்றோர்களாகிய நாம் என்ன பண்ணனும்?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

“உறவுமுறைப் பாலியல் கொடுமை" --[தொடர்ச்சி]
சென்ற பதிவில் “உறவுமுறைப் பாலியல் கொடுமை" என்ற ஒரு அவலத்தைப் பார்த்தோம். 
பலருக்கு இதை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கமோ தெரியவில்லை, பின்னுட்டங்கள் பொதுவாக இதனைத் தவிர்ப்பதிலேயே,...... இது பற்றிப் பேசுதலைத் தவிர்ப்பதிலேயே நோக்கமாய்க் கொண்டிருந்தன.
இது இல்லை, இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் யோசிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.
இது பரவலாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுதான், எல்லா நாடுகளிலும்.
தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
“என்னடீ குட்டிப்பொண்ணே” என்றபடி சிறு பெண்களின் தொடையையும், இடுப்பையும் கிள்ளும் வயதானவர்களும் , 
சத்தமின்றி முத்தமிட்டு, முத்தம் கொடுக்க வற்புறுத்தும் பெரியவர்களும் 
இந்த வகையைச் சேர்ந்தவர்களே!
பெரும்பாலும், சிறுமிகள்தான் இதில் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் என்பது உண்மையென்றாலும், சிறுவர்களும் இதிலிருந்து தப்புவதில்லை.
அதே நேரத்தில் இன்னொன்று சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆண்கள்தான் இதில் அனேகமாக குற்றவாளிகள் என்பதும், ஆனால், அதே நேரம், பெண்களும் இந்தக் கொடுமையை நிகழ்த்துகிறார்கள் பாலரிடம் என்பதும் ஆராயப்பட்டுக் கண்டு கொண்ட உண்மைகள்.
பாலுணர்வு என்பது இருபாலருக்கும் பொதுவான ஒன்றுதான் என்றபொழுதில், இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை தானெனினும், இது சிலரால் இன்னமும் நம்பப்படாத ஒன்றுதான்.
இதன் மூலம் வாழ்க்கையைத் தொலைத்த பெண்டிரை நான் மருத்துமுறையில் சந்தித்திருக்கிறேன்.
இதைச் சொல்வது எதற்கென்றால், இப்படி இருக்காது என எதையும், யாரையும் ஒதுக்கிட வேண்டாம் என்பதற்கே.
என்ன செய்யலாம் பெற்றோர்கள்; என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் சற்று பேசலாம்.
சாதாரணமாக, இது பற்றி குழந்தைகள் புகார் செய்வதில்லை.
பயம், நாணம், வெட்கம், அவமானம், வயது காரணமாகவோ அல்லது இதனைப் பற்றி அதிகம் தெரியாததாலோ இந்த நிலைமையின் தீவிரம் புரியாமை, அச்சுறுத்தலுக்கு அடி பணிதல், 
நம்மை யார் நம்புவார்கள் என்ற சந்தேகம், 
நம்மைத்தானே குறைவாகப் பேசுவார்கள் என்ற கழிவிரக்கம்,
நாம் ஏன் இதை அப்போதே சொல்லவில்லை; சொல்லியிருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாமே என்ற குற்ற உணர்வு, 
போன்ற பல்வேறு காரணங்களால் சிறுவர், சிறுமியர் இது பற்றி பேசாமல் போகலாம்.
ஆனால், சற்று உஷாரான பெற்றோர்கள் இக்குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்படுகின்ற ஒருசில மாற்றங்களை விரைவில் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது உங்கள் சொத்து; உடைமை, உரிமை; பெருமை.
இது சீரழிய நீங்கள் விடக்கூடாது.
சகஜமாகப் பேசிப், பாடி, ஓடி ஆடிக்கொண்டிருந்த குழந்தையின் நடவடிக்கைகளில் ஒரு சோர்வு தென்படும். 
ஒரு சிலரை…... குற்றம் இழைக்கும் அந்த ஒரு சிலரை….. தனி இடங்களில் தவிர்க்க முற்படுதல், 
பொது இடங்களில் கண்டு பயப்படுதல் அல்லது வெறுத்து ஒதுக்குதல், பாடங்களில் கவனம் குறைதல், 
சாப்பாடு சரியாகச் சாப்பிடாதிருத்தல் 
போன்ற நிகழ்வுகள் ஒரு தாய் அல்லது தந்தையிடம் ஒரு கவனிப்பை உண்டு பண்ண வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாய், ............
இது ஒருவித பிடிப்பை உண்டு பண்ணுவதால், 
மேலே சொன்னவற்றிற்கு நேர்மாறான போக்குகளும் கூட இக்குழந்தைகளிடம் தென்படலாம். 
அதுவும் ஆபத்தான அறிகுறிகளே.
திடீரென "அந்த ஒரு" உறவுக்காரரிடம் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ளுதல், 
அவரை/அவளைச் சீண்டுதல், 
காரணமின்றி சில பரிசுப்பொருள்களோ அல்லது அதிக சலுகைகளோ கிடைத்தல்/ எதிர்பார்த்தல் 
போன்ற நிகழ்வுகளைப் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
புரியும் என நம்புகிறேன்.
குறிப்பிட்ட சிலரைப் பற்றி ஏற்கெனவே உறவுமுறைகள் மூலமாக ஒரு சில செய்திகள் நமக்குக் கிட்டியிருக்கும்.
அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.
குழந்தையின் நடவடிக்கைகளை முதலில் சாடைமாடையாகப் பார்த்து வந்து, சந்தேகம் தோன்றும்படி ஏதேனும் தெரிய வந்தால், உடனே ஆவன செய்யத் தயங்க வேண்டாம்.
என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் , பலர் இங்கு தவறி விடுகிறோம்.
இதனை, வெறித்தனமாக எதிர்கொண்டால், வெகு விரைவில் உங்கள் குழந்தையை நீங்கள் இழக்க நேரிடும்….... இரு வகைகளில்!
ஒன்று, துடுக்குத்தனம் மிகுந்த, உங்களிடமிருந்து விலகிச் செல்லும் ஒரு குழந்தையோ, 
அல்லது, 
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையோ தான் உங்களுக்கு மிஞ்சும்.
தெரிந்து செய்கின்றனரா, இல்லை அறியாமல் செய்கின்றனரா எனக் கண்டுகொள்ளல் மிக, மிக முக்கியமான ஒன்று.
முதல் வகைக் குழந்தைகளை, 
பிரச்சினையின் தீவிரத்தைப் பற்றியும், இதனால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, ஒரு தகுந்த மனநிலை மருத்துவரிடம் கூட்டிச் சென்று, மாற்று ஏற்பாடுகள் செய்து புரிய வைக்க வேண்டும்.
முடிந்தவரை, அன்பாகவும், ஒரு நண்பனாகவும் நடத்தி இதனைச் செய்வது பலன் தரும்.
அதே நேரம், இதில் நீங்கள் உறுதியாய் இருக்கிறீர்கள், ஒரு சிலவற்றை இழக்கவும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை சற்று ஆழமாக இவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.
குற்றவாளியை இவர்கள் எதிரில் எதிர் கொள்ள வேண்டாம்.
தானும் அதில் உடந்தை என்பதால், ஒரு வித இரக்கம் தோன்ற வாய்ப்பிருக்கிறது.
இது என்னவெனத் தெரியாமல், இதற்கு ஆட்படுத்தப்பட்ட இரண்டாம் வகையினரைத் திருத்துதல் சற்று சுலபம்.
இதில் என்ன தவறு நிகழ்ந்திருக்கிறது, இதனால் என்னவெல்லாம் ஆகக் கூடும், ஆகியிருக்கலாம் என்பதைச் சொன்னாலே பெரும்பாலான குழந்தைகளை வழிக்குக் கொண்டுவந்து விடலாம்.
அன்பும், கண்டிப்பும், பரிவும் கலந்த ஒரு வழியில் இவர்களை எதிர் கொள்ள வேண்டும்.
குற்றவாளிகள் கண்டிக்க, தண்டிக்கப் படுவது இவர்களுக்குத் தெரிவது ஒருவித தன்னம்பிக்கையை இவர்களுக்குக் கொடுக்கும்.
இறுதியாக ஒரு எச்சரிக்கை!
எக்காரணம் கொண்டும், குற்றவாளிகள் தப்பிச் செல்ல விடாதீர்கள்.இவர்கள் சமூக விரோதிகள்.நம் குழந்தையைக் காப்பாற்றிய வரை கவலை விட்டது என விட்டுவிடாதீர்கள்.
சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, எடுக்க முடியுமோ, அத்தனையும் செய்து விட வேண்டும் இவர்களுக்கு.
அடுத்த குழந்தை கிடைக்க அதிக நேரம் ஆகாது இவர்களுக்கு.
ஐயோ பாவம் என்றோ, அல்லது நமக்குத்தானே அவமானம் என்றோ மட்டும் விட்டுவிட வேண்டாம்.
ஒரு மிகப் பெரிய சமூகப் பொறுப்பிலிருந்து தவறி விடுகிறோம், இப்படிச் செய்யாததால்.
தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் குழந்தைகள் திருந்தி வரும்போது, தவறிழைத்தவனும் தண்டிக்கப்பட்டான் என்பது மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் .
பல விஷயங்களை, பதிவின் கண்ணியம் கருதி, பொதுவாகவும், மேலோட்டமாகவும் சொல்லியிருக்கிறேன்.
இது பற்றி அதிக விவரம், எவருக்காவது தேவைப் பட்டால், தனி மடல் இடவும் அல்லது தகுந்த மருத்துவரை நாடவும்.
பருவம் அடைந்த பாலரின் பெற்றோர் அறிய வேண்டிவற்றை இனிப் பார்க்கலாம். 

 

"என்ன கொடுமை இது சரவணன்!"

 

இதுவரை 3 வயது முதல் 12 - 14 வயதுப் பிள்ளைகளைப் பற்றிய, பாலியலைப் பற்றிய, பெற்றோரின் கருத்து, செயல், ஆக்கம் எவ்வண்ணம் இருக்க வேண்டும் எனப் பார்த்தோம்.

 

இனி அடுத்தது, ஒரு முக்கியமான பருவம்!

ஆம்! பருவம் அடையும் பருவம்!

 

இதுவரை நீங்கள் சந்தித்த, பழகிய, புரிந்த, பிள்ளைகள் வேறு!

இனி நீங்கள் பார்க்கப் போகும் பிள்ளைகள் வேறு!

 

அந்த நிலைக்குப் போகும் முன்.......

 

இது வரை நாம் சந்தித்த இந்த 12- 14 வரையிலான குழந்தைகள் சந்திக்கும், சந்திக்கக் கூடிய ஒரு நிகழ்வைச் சொல்லாமல், அடுத்த பருவத்திற்குச் செல்ல என் மனம் துணியவில்லை!

 

இந்த வயதில், பெற்றோர்கள் இருவரும் கொஞ்சம் தனித்தனியே விலகி, குழந்தைகளோடு கூட, ஒருவரை ஒருவரும், மற்றவரையும் எடை போட வேண்டிய ஒரு அவலத்தைப் பற்றி, கொடுமையைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப் போகிறேன்.

 

இதை இங்கு சொல்லாமல் நான் மேலே செல்ல முடியாது!

 

பீடிகை எல்லாம் பலமாய் இருக்கிறதே என அஞ்ச வேண்டாம்!

 

இது ஒரு விவாதத்திற்குரிய பதிவு.

சர்ச்சைக்கு அல்ல!

 

இதைக் கண்டு சிலர் துணுக்குறக் கூடும்;

 

முகம் சுளிக்கக் கூடும், இது தேவையா என!

 

மனம் நோகக் கூடும், இது போலும் நிகழ்கிறதா என!

 

..................... திருந்தக் கூடும் சிலர்!

 

அவர்களுக்காக இது!

 

நேரடியாக நிகழ்வுக்கு வருகிறேன்!

 

ஒரு நான்கு "உண்மை" நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கப் போகிறேன்!

 

அதற்கு முன், ஒரு வேண்டுகோள்!

 

தயவு செய்து, தயவு செய்து, இதைக் கொச்சைப் படுத்தி யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்!

 

அப்படி வருமாயின், நிச்சயம் அது உங்கள் பார்வைக்கு வராது எனினும், என்னை அது வருத்தும் என்பதால்!

 

1. கண்ணிலிருந்து தாரை தாரையாய் நீர் வழிய, அந்தத் தாய் என்னிடம் வந்தார் ஒரு நாள்! 

 

"டாக்டர்! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை! அப்படியே செத்துப் போயிடலாமான்னு இருக்கு!"

 

அவரை ஆசுவாசப்படுத்தி, உட்கார வைத்த பின் என்னவெனக் கேட்டேன்.

 

"என்னன்னு சொல்றதுங்க! 

இந்தப் படுபாவி எம் பொண்ணை அதட்டி, உருட்டீ, மிரட்டி, அவளை பலாத்காரம் பண்ணிப்புட்டான்!"

 

"யார்? என்ன பண்ணினான்னு கொஞ்சம் விவரமா சொன்னீங்கன்னா தேவலை!" என்றேன் நான்.

 

"வேற யாரு! எம் புருசந்தான்! 

ராத்திரில குடிச்சுட்டு வரும் நெதம்! 

சரி, நம்ம தலைவிதி அம்புட்டுத்தான்னு, மனசைத் தேத்திக்கிட்டு, அவனுக்கு சோத்தைப் போட்டு, நான் தூங்கிட்டேன் சாமி! 

திடீர்னெ முளிச்சுப் பாத்தா, இவன் என் மூத்த பொண்ணு மேல மேஞ்சுக்கிட்டு இருக்கான்!

இதுவோ, வெலவெலத்துக் கிடக்கு!

என்ன பண்றதுன்னு தெரியாம, கைக்கு அகப்பட்ட ஒரு வெளக்குமாத்த எடுத்து அவனை நாலு சாத்து சாத்தி வெளிய தள்ளி கதவைச் சாத்திட்டு, ஏண்டி, மவளே, என் சக்காளத்தின்னு அவளையும் நாலு சாத்தினேன்!

 

அது கதறிக்கிட்டே, எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா!

என்னை இப்படித்தான் அப்பன் வாராவாரம் பல தடவை பண்ணுது! 

திமிறினா அடிக்குது! 

எனக்கு ஒண்ணும் புரியலம்மா. 

பேசாம படுத்திருவேன்"அப்படீன்னு அவ சொன்னதும், 

 

எனக்கு பத்திகிட்டு வந்திருச்சி! 

 

'ஏண்டி, எங்கிட்ட சொல்லலை?'ன் னா, 

அம்மாகிட்ட எதனாச்சும் சொன்னேயின்னா, ஒங்க ரெண்டு பேரயும் போட்டுத்தள்ளிட்டு நா செயிலுக்குப் போயிருவேன்னு மெரட்டிச்சும்மா! அதுக்காவத்தான் ஒங்கிட்ட சொல்லலை" அப்பிடீன்னு சொல்லுது!

இத்தக் கொஞ்சம் டெஸ்டு பண்ணுங்க டாக்டர்! எதுனாச்சும் ஆயிருச்சான்னு" என அந்த மாதரசி கலங்கியது, எனக்கு வலித்தது.

 

2. " இவளை நான் சின்னப் பொண்ணுன்னு நெனச்சேன், டாக்டர்! 

இவ என்ன காரியம் பண்ணிண்டு வந்து நிக்காறா தெரியுமா" என வந்தவுடனே ஆரம்பித்தார் அந்தத் தாய்!

 

கூடவே மலங்க மலங்கப் பார்த்தபடி ஒரு 13 வயதுப் பெண்!!

 

என்னம்மா, என்னன்னு சொல்லுங்க என்றேன்.

 

அதற்கு அவர், " படு பாவி! படுபாவி, ஊமை மாரி இருந்துண்டு, என்ன அழுத்தம் பாருங்கோ, டாக்டர்! 

லீவுக்கு என் நாத்தனார் அவா குடும்பத்தோட ஒரு 10 நாள் இங்க வந்திருந்தா! 

அங்க இங்க அவாளைக் கூட்டிண்டு போறதுக்கே நேரம் சரியா இருந்தது. நாத்தனாரைக் கூட்டிண்டு நான் ரங்கனாதன் தெருவுக்கு ஷாப்பிங் போனேன்.

ஆம்பளைங்க ரெண்டு பேரும் ஏதோ கச்சேரிக்கு போறோம்னு கிளம்பிப் போயிட்டா!

ஸ்ரீதர் [ நாத்தனார் பையன்] சைக்கிளை எடுத்துண்டு எங்கியோ சுத்தப் போயிருந்தான்.

எம்பொண்ணுகிட்ட, "ஆத்தை பத்திரம பாத்துக்கோடி, நாங்க சீக்கிரமா வந்துர்றோம்"னு சொல்லிட்டு கெளம்பிப் போயிட்டோம்!

ஷாப்பிங்லாம் முடிச்சுட்டு திரும்பி வந்தா, 

.....இந்தக் கடங்காரியும், அந்தக் கட்டைல போறவனும், "ஒண்ணுமில்லாம" ! அவ பெட்ல படுத்துண்டுருக்கா! 

நாங்க வந்ததக் கூடக் கவனிக்காம!

அவன் இவளை தடவிண்டு இருக்கான்.

இவளும் சும்மா இருந்துண்டு இருக்கா!

எனக்கு வந்த ஆத்திரத்துல, ரெண்டு பேரையும் நாலு சாத்து சாத்தினேன்.

மறுநாளே அவாள்ளாம் கிளம்பிப் போயிட்டா!

நா நேரா உங்க கிட்ட தான் ஓடி வர்றேன்!

எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல!

இந்தக் காலத்துல எல்லாரும் சீக்கிறமே வளந்துர்றா!"என்றவரிடம், 

 

"அப்படியில்லை மாமி, எல்லாக் காலத்திலும், எல்லாப் பெத்தவங்களும் சொல்ற வார்த்தை தான் இது. மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம், சரியா! " என்றேன்.

 

3. " இவளுக்கு என்னமோ பேய் புடிச்சிடுத்தோ, இல்லை புத்தி கித்திதான் சுவாதீனம் இல்லாம போய்விட்டதான்னு தெரியலை டாக்டர்" என்றவாறு, ஒரு தாய்!

என்னவென விசாரித்தேன்.

" இத்தன நாளா கல கலன்னுதான் சிரிச்சிண்டுதான் இருக்கும் இது! 

இப்ப ஒரு ஆறு மாசமா, எத்தையோ பறி கொடுத்தவா கணக்கா இருக்கா!! கொஞ்சம் டெஸ்ட் பண்ணுங்க டாக்ட!" என்றார்".

நீங்க கொஞ்ச நேரம் வெளில இருங்க" என்று அவரை அனுப்பிவிட்டு, அப்பெண்ணிடம்[ [12 வயது] விசாரித்தேன்.

 

முதலில் 'அதெல்லாம் ஒண்ணுமில்லை' யென மறுத்தாலும், கடைசியில் சொல்லியது அந்தக் குழந்தை. 

அவர்களின் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர், 

பல வகையிலும் அக்குடும்பத்திற்கு வேண்டியதை எல்லாம் செய்யும் ஒருவர், 

சின்ன வயது முதலே குடும்பத்தில் ஒருவர் போல பழகிய ஒருவர், 

சில மாதங்களாய் இவளை இழுத்துத் அணைப்பது, கண்ட இடங்களிலும் தொடுவது என்று படிப்படியாக அவரது, இவளது பிறப்பு உறுப்புகளை, தொடுவது, சுவைப்பது வரை போயிருக்கிறான் அந்த காமுகன்.

 

ஒவ்வொரு தடவையும், வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்து, சரிக்கட்டி, இதுல ஒண்ணும் தப்பில்லை என அவளை நம்ப வைத்திருக்கிறான்.

 

சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அச்சிறுமி தத்தளித்து, வேண்டா வெறுப்பாய் அவையெல்லாம் செய்ததில், 

படிப்பில் நாட்டம் போனது, 

பெற்றவரிடம் சொல்ல அச்சப் பட்டுக்கொண்டு, தனக்குள் தானே மருகி, கடைசியில் மனோநிலை பாதிக்கும் அளவிற்குப் போய் விட்டது.

 

4. கிட்டத்தட்ட இதே கதை ஒரு ஆண்பையனிடம் நடந்து, அவனை புணர்ச்சி செய்து, அவன் படிப்பு, விளையாடும் திறன் உற்சாகம், எல்லாவற்றையும் தொலைத்த கதையும் உண்டு. 

விவரிக்க மனம் வரவில்லை.... பதிவின் நாகரீகம் நோக்கம் கருதி.

 

5. இன்னொரு பையனுக்கு மன நிலை குன்றிய காரணம், அவன் தன் தாயை, அப்பா அல்லாத வேறொருவருடன், தனியே படுக்கையறையில் அவர்களுக்குத் தெரியாமல் பார்த்ததனால் வந்தது!

 

இதெல்லாம் என்ன?

 

இதற்கு என்ன பெயர்?

 

ஆங்கிலத்தில் இது போன்ற நிகழ்வினை INCEST என்பார்கள். 

 

தமிழில், "உறவுமுறைப் பாலியல் கொடுமை" என்னலாம்.

 

பெரும்பாலும் பருவமடையா, பருவத்திற்கு சமீபமான குழந்தைகளே, அதிக விழுக்காடு இதற்கு ஆளாகின்றனராம்.

 

தெரிந்தவர், பழகியவர், உறவுக்காரர், பெற்றவர் என ஒரு நெருங்கிய வட்டத்துக்குள் இருக்கும் ஒரு சில பெரியவர்களால் இந்த வயதுக் குழந்தைகளுக்கு நிகழ்வதே இதுகாறும் நான் மேற்கோள் காட்டிச் சொன்னது எல்லாம்!

 

கொஞ்சம் விழிப்புணர்ச்சி வேண்டும் பெற்றோருக்கு!

 

குழந்தை வளர்ப்போடு நின்று விடாமல், அதன் நலனையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

 

அதற்காக, யாரையும் சந்தேகப் பட வேண்டாம்!

 

இதுவரை முந்தைய பதிவுகளில் சொன்ன வண்ணம் நீங்கள் நடந்திருந்தால், இந்நிலை வராது, அனேகமாய்!

 

தான் யார், தன் மதிப்பு என்ன; தன் தனித்துவம் என்ன, எப்போதும் என் பெற்றோரை அணுகலாம் என்பவைகள் இதுவரை விதைக்கப் பட்டிருந்தால், 90% இதைத் தவிர்க்க முடியும்.

 

மீதி அந்த 10% ஆட்கள் என்ன செய்யணும்?

 

தவறு செய்தவரை மன்னிக்க முற்படாதீர்கள்; 

அது கணவனே, மனைவியே, உறவினர், தெரிந்தவர், வேண்டியவரே ஆனாலும் சரி!

 

உரிய நடவடிக்கை எடுக்த் தயங்காதீர்கள்!

 

'கூறாமல் சந்நியாசம்" கொள்ள வேண்டாம்.

 

"கூரை மீதேறிக் கூவி, " இவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்த வேண்டும், உங்கள் பிள்ளைகள் நலன் கருதி.

 

குற்றமிழைத்த உங்கள் துணையை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்கள் என்பது இப்பதிவின் நோக்கமல்ல என்பதால், இங்கு அதனைச் சொல்லாமல் தவிர்க்கிறேன்.

 

அது போலவே அவர்களுக்கு நான் என்ன மாதிரியான பதில் சொன்னேன் என்பதனையும் தவிர்க்கிறேன்.

 

இந்த மாதிரியான கயவர்களைக் கண்டு கொள்ள வேண்டும்!

 

பெற்றவர்கள்.குழந்தைகளுக்கு [இதுவரை சொலாதிருந்தால்],

அவசியமின்றி யாரும் எவரும் தன்னை ஏதும் செய்ய இணங்கக் கூடாது என்பதை இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்;

 

தங்களிடம் எப்போதும், எதையும் சொல்லலாம், காலம் தாழ்த்தாமல், என்பதை அவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

 

"கூடாது, எனக்கு சம்மதமில்லை. மீறிச் செய்தால், நான் புகார் செய்வேன்" {NO! I am not for it! I will complain!] என்று சொல்ல, கற்றுக் கொடுத்தல் மிகவும் அவசியம்.

 

செய்வீர்களா?

இந்த 12- 14 வயசு பிள்ளைங்களுக்கு என்னெல்லாம் தெரியும், தெரிஞ்சுக்க ஆசைன்னு இதுவரை பார்த்தோம்.

 

மேலும் சில அதிகத் தகவல்களை நம்ம மங்கையம்மா பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

அதையும் பார்க்கவும்.

 

பாலியலைப் பத்தி தனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், கேள்வி கேக்கறது கேவலம்னும் ஒரு நினைப்பு இருக்கும் இவங்க மனசுல.

 

அதனால கேக்கவே மாட்டாங்களான்னு கேக்காதீங்க!!

 

கேட்பாங்க!

 

உங்க கிட்ட இல்லை!

 

அவங்க நண்பர்கள்கிட்ட!

 

இப்ப நாமளே ஊக்குவிக்கறோமே, அந்த இணையதளத்துகிட்ட!

 

பெரும்பாலும் தவறான, அல்லது வயதுக்கு மீறிய தகவல்களே இதனால் கிடைக்கும்.

 

இதுல பெற்றோரின் பங்கு என்ன?

 

எப்படி அவர்களுக்கு இதைப் புரியவைப்பது?

 

இது ஒரு பெரிய சாலேஞ்சுன்னுதான்[Challenge]] சொல்லணும்.

 

போன பதிவில் என்னிடம் வந்த அந்த தாய்க்கு நான் சொன்ன பதில் இதுதான்.[அந்தப் பையனை வெளியில் உட்காரச் சொல்லிவிட்டு!],

 

[இதைப் பற்றி யாராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்!:(]

 

"நீங்க சொல்றீங்கன்னு நான் இப்ப அவன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன். இங்கே அவனைக் கூப்பிட்டுக்கொண்டு நீங்க வந்ததே தப்பு! எவ்வளவு பெரிய தாழ்வு மனப்பன்மையை அவனிடம் உண்டுபண்ணி இருக்கீங்கன்னு ஒங்களுக்கு தெரியலை! இப்ப அவனைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போங்க! நாளைக்கு நீங்க மட்டும் அவன் ஸ்கூலுக்கு போனதுக்கு அப்புறம் வாங்க! நான் உங்ககிட்ட சிலது சொல்லணும்."

 

மறுநாள் அந்த தாய் வந்தார்.

 

"அடுத்தவங்க பார்வையில இது தப்புதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனா, கொஞ்சம் அவன் நிலைமையில் இருந்து இதைக் கொஞ்சம் யோசியுங்கள். அவன்கிட்ட சில பருவ மாற்றங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. அதை அவனால புரிஞ்சுக்கவும் முடியல. இல்லேன்னு தள்ளவும் முடியலை. அவன் உடம்புல சில ஹார்மோன்கள் இப்ப சுரக்க ஆரம்பிக்குது. அதுதான் இவனை அப்படியெல்லாம் செய்யத் தூண்டுது. இதோ, இந்த பாம்ஃப்லெட்டை[pamphlet] எடுத்துகிட்டு போங்க. மொதல்ல, நீங்களும், மோகனும்[அவர் கணவர்] படியுங்க. அப்பறமா, ராஜுவை கூப்பிட்டு, அவ்ன்கிட்ட இதப்பத்தி பேசுங்க.

 

ஆம்பளைக்கு இந்த இந்த உறுப்புகள், பொம்பளைங்களுக்கு இதுன்னு தெளிவா சொல்லுங்க. இதுவரைக்கும் நீங்க சொல்லாததே, அவனோட இதைப் பத்தி பேசாததுதான் இதுக்கெல்லாம் காரணம்.

 

தன்மையா வளர்த்தேன்னு சொன்னா மட்டும் போறாது. சொல்ல வேண்டியதை சொல்லவும் வேணும். உங்களை விட்டா வேற யாரு இருக்கா அவனுக்கு? வேற யார்கிட்ட போயி அவன் இதை கேக்க முடியும்? ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தான்னா, அது அவன் ஃப்ரெண்ட்ஸுங்க கிட்டதான் இருக்க முடியும். அவங்களுக்கும் இது தெரியாது. "போடா! போய் பக்கத்து வீட்டு மாமி குளிக்கும்போது பாரு; அப்ப தெரியும் ஒனக்கு!"ன்னு சொல்லியிருப்பாங்க! அந்த சின்னப்பசங்க அப்படி சொன்னதிலியும் தப்பு இல்லை!அதான், அடுத்த வீட்டு மாமி குளிக்கும் போது பார்த்திருக்கான்"

 

என்று சொன்னவுடன்,

 

அந்த அம்மா, நிஜமாவே கண்கலங்கி, "இதெல்லாம் சொல்லணும்னு எங்களுக்கு தெரியவே இல்லை டாக்டர்!" என்று கண் கலங்கினார்.

 

ஸோ,[So] இப்ப நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன?

 

சிறில் துடிக்கிறது எனக்குப் புரியுது!

வாய்யா! விஷயத்துக்கு வாய்யா! எனத் திட்டுவது கேட்கிறது!

எனவே, அதிக பீடிகை இல்லாமல், செய்திக்கு வரலாம்!

 

பருவகாலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை, நன்கு அறிந்த நீங்கள் சொல்லாமல் வேறு யார் சொல்வது?

 

"இன்னும் கொஞ்ச நாள்ல நீ பெரிய மனுஷி ஆகப் போறே! அப்படீன்னா, இதுவரைக்கும் சின்னப் புள்ளையா இருந்த நீ, சில மாற்றங்களை பார்ப்பே, உன் உடம்பில! உன் மார்பு என்னுது மாதிரி பெருசாகப் போவுது. தீட்டுன்னு நான் ஒரு 3 நாளு சொல்லுவேனே, அது உனக்கும் வரப் போகுது. இதுவரைக்கும் முளைக்காத இடத்துல எல்லாம் முடி வளரும்.

திடீர்னு ஒரு நாளைக்கு ஒனக்கு கீழேர்ந்து ரத்தப்போக்கு வரலாம். அப்ப நீ உடனே செய்ய வேண்டியது, என்கிட்டயோ, இல்லாட்டி, டீச்சர்கிட்டயோ போய், சொல்லணும். இது ரொம்ப முக்கியம்.

 

இதே ஒரு ஆண் பையனிடம்,.....

 

"இந்த வயசுல உனக்கு விதவிதமா ஆசை வரும். தப்பில்லை. அது சகஜம்தான். எல்லாருக்கும் இந்த வயசுல வர்றதுதான். ஆனா, நீ அதுக்காக, முறை தவறி நடந்துக்கக் கூடாது. உன் ஆசை உனக்கு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி அடுத்தவங்களொட ப்ரைவசியும்[Privacy] அவங்களுக்கு முக்கியம்! உனக்கு எதுனாச்சும் சந்தேகம்னா எங்களை நீ தாராளமாக் கேக்கலாம். தப்பாவே நினைச்சுக்க மாட்டோம்.

இதுக்காக, நீ கண்ட கண்ட புஸ்தகமோ, இல்லை, வேற எதையோ தேட வேண்டாம். ராத்திரியில, உனக்கு உன்னோட விந்து வெளியாகும். அல்லது நீயே வெளியாக்கணும்னு உனக்கு ஒரு பரபரப்பு வரலாம். அதுல ஒண்ணும் தப்பே இல்லை. இது இந்த வயசுல எல்லாருக்கும் நடக்கறதுதான். அதிகமா பண்ணாதே. கண்ட்ரோல்[Control] பண்ணக் கத்துக்கோ!"

 

எதுவானாலும் அம்மா அப்பாகிட்ட பேசலாம்னு ஒரு தைரியத்தை பசங்க மனசுல வளர்க்கறது ரொம்ப முக்கியம் இந்த வயசுல.

 

இப்ப விட்டீங்கன்னா, அப்புறம், நீங்க அவங்களை எப்பவுமே பிடிக்க முடியாது!

 

'சேகர் மாதிரி நான் வளரலியே?',' லதா ஏன் இன்னும் என்னை மாதிரி ஆகல?, அவளுக்கும் என் வயசுதானே?', இது போன்ற கேள்விகள் எழும்.

 

ஒவ்வொருவர் வளர்ச்சியும் தனித்தனியானது, ஒருவர் போல் இன்னொருவர் வளர்ச்சி இருக்காது என்பதும் புரியவைக்க வேண்டும் நீங்கள்.

 

"இன்னும் கொஞ்ச நாள்ல, நீ பெரிய மனுஷி ஆகப் போறே! உன்னாலேயும் ஒரு குழந்தை பெத்துக்க முடியும் அப்போ. ஆனா, உனக்கு இன்னும் அதுக்கான முழு வளர்ச்சியோ, பக்குவமோ, பொருளாதார வசதியோ, வரவில்லை, இப்ப வராது, இது ஒரு வழக்கமான மாற்றம்தான், இதைப் பெருசு படுத்த வேண்டாம் என்பதை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைப்பது உங்கள் தலையாய பொறுப்பு!"

 

 

உணர்வு வேறு, பாலியல் உணர்வு வேறு, இரண்டும் தனித்தனியானது என்பதுதான் இவர்களுக்கு நீங்கள் இப்போது சொல்லி, புரிய வைக்க வேண்டிய ஒன்று!

 

[விளக்கம் வேண்டுமெனில், பின்னூட்டத்தில் கேட்கவும். விவரமாகச் சொல்கிறேன்.]

 

கர்ப்பத்தடை சாதனங்களைப் பற்றி அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டிய நேரமும் இதுவே!

 

.

மொத்தத்தில், இந்த நேரத்தில்தான் நாம் அவர்களுக்கு "ஒரு நண்பன்", நம்மிடம் வெளிப்படையாகப் பேசலாம் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் நாம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

 

திருமதி. மங்கை சொன்ன இந்தக் கருத்து பதிவுக்கு வலு சேர்ப்பதால், அவர்கள் அனுமதியுடன் இதனையும் சேர்க்கிறேன்! நன்றி.

 

"உங்க அனுமதியுடன் இரண்டொரு வார்த்தை சேர்துக்கலாமா?.

 

.உடம்புல ஏற்படுகிற மாற்றங்கள போல உடம்பின் உள்ளிலும் ஏற்பட்ற மாற்றங்கள் பத்தி பெறோர்கள் தெரிஞ்சிட்டாங்கன்னா, குழந்தைகளின் இந்த வயசில அவங்க நினைவில கொள்ளவேண்டிய முக்கியமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில உணவு வகைகளை குடுப்பது மட்டும் இல்லாம, சில மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்களையும் மாற்ற அவங்க முற்படுவாங்க. 

பிறப்பு உறுப்புகளின் வளர்ச்சிக்கு சத்தான உணவுகளை உட்கொள்ளுவது, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய விளிப்புணர்வையும் சேர்ந்து குடுத்தா, நம்ம நோக்கம் முழுசா முடிவடையும்னு நினைக்கிறேன்.. 

இந்த விஷயங்கள் நாங்க நேரடியா குழந்தைகளிடம் சொன்னாலும், பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வு இருந்தா,குழந்தைகளின் ஆரோக்கியம் எல்லாவிதத்திலேயும் பாதுகாக்கப்படும்."

 

-----------------------------------------------------

 

ரொம்ப பயமுறுத்திட்டேனா!

 

இதுக்கே இப்படீன்னா, அடுத்த பதிவை என்னன்னு சொல்லுவீங்க!


 

"பருவமே..... புதிய பாடல் பாடு!"

 

 

“வர வர உன் போக்கே சரியில்லை! வீட்டில யாரோடையும் பேச மாட்டேங்கற! ஸ்கூல் விட்டு வந்ததும் போட்ட டிஃபனை சாப்பிட்டுட்டு, ஒரு புக்கை எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போயிடற!ஏதனாச்சும் கேட்டா, பட்டுன்னு கதவை சாத்திட்டு, என்னை கொஞ்சம் படிக்க விடறியான்னு எரிஞ்சு விழற!

எப்பப்பாரு, அந்த ஃபோன்ல மணிக்கணக்கா ஃப்ரெண்ட்ஸுங்களோட அரட்டை அடிக்க மட்டும் நல்லா தெரியுது! என்னமோ போ! இதெல்லாம் நல்லத்துக்கில்லை, சொல்லிட்டேன். வந்தோமா, கூடமாட அம்மாவுக்கு ஏதாவது ஒத்தாசை பண்னினோமா, நாலு பேரோட கலகலப்பா பேசினோமான்னு இல்லாம இது என்னடிம்மா அதிசயமா இருக்கு”

 

இதுவே ஆண்பையனாக இருந்தால் அப்பா இப்படி பேசுவார்!

 

“நானும் கெவனிச்சுகிட்டுதான் இருக்கேன்! நீ பாட்டுக்கு வர்றதும், அந்த உதவாக்கரை மூஞ்சியை சோப்பு போட்டு, போட்டு அப்படி கழுவறதும், வாரு, வாருன்னு அந்த தலையை எப்ப பாரு ஒரு சீப்பை வெச்சு வாரிக்கிட்டே இருக்கறதும், பெரிய தொரைன்னு நெனப்பு மனசுல!

இன்னும் மீசை கூட முளைக்கலை! அதுக்குள்ளே எல்லாரையும் எதுத்துப் பேசறது, இல்லேனா, ஃப்ரெண்ட்ஸுங்களோட தெருக்கோடில நின்னுகிட்டு அரட்டை அடிக்கறது, இதே வழக்கமாப் போச்சு ஒனக்கு!

என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கே நீன்னு தெரியலை.ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வர்ற வழியைப் பாக்காம, கண்ட கண்ட காலிப் பசங்களோட சகவாசம்!செருப்பு பிஞ்சிரும், சொல்லிட்டேன்!”

 

ஏன்ன! பழகின, எங்கேயோ கேட்ட டயலாக் மாதிரி இருக்குல்ல!

 

அனேகமாக நாம் ஒவ்வொருவரும், கேட்ட அல்லது சொல்லிய வசனங்கள்தான் இவை!

 

மனிதர்களுக்கு கிடைத்திருக்கிற பெரிய வரம் – மறதி!

 

வெகு வசதியாக, நாம் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு, ஏதோ இப்போதுதான் முதன்முதலாய்ப் பார்ப்பது போல எல்லா பெற்றோரும், தன் பிள்ளைகளிடம் மட்டுமே இது நிகழ்வது போல கரித்துக் கொட்டும் வழக்கமான பல்லவிதான் இது!

 

பருவம் அடைவதற்கு முன்னர், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால், நம் பிள்ளைகளிடம் ஏற்படுகின்ற இந்த நிகழ்வுகளை நாம் பெரும்பாலும் புரிந்து கொள்ளத் தவறுகிறோம் என்பதே உண்மை. 

 

அப்படி என்னதான் ஆகிறது இந்த 12 முதல் 14 வயதுக்குள்?

 

பலவிதமான மாற்றங்கள் இந்த காலத்தில் ஏற்பட்டாலும், பாலியல் சம்பந்தமானவைகளைப் பற்றி மட்டுமே இங்கு பார்க்கலாம்.

 

திடீரென வளர்ச்சி அதிகமாகிறது.

முகத்தில் எண்ணைப்பசை அதிகமாகி, பருக்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.

மறைவிடங்களில் [அக்குள், பிறப்பு உறுப்பு பகுதிகள்] பெண்களுக்கும், இவை தவிர, முகம், மார்பு ஆகிய இடங்களிலும், முடி அரும்ப ஆரம்பிக்கிறது.

குரல் மாறி, சற்று கரகரப்பாகிறது.

பெண்களுக்கு மார்பகங்களும், ஆண்களுக்கு பிறப்பு உறுப்பும் பெரிதாகத் தொடங்கும்.

 

இதையெல்லாம் நீங்களே கவனித்தால்தான் உண்டு. உங்களிடம் வந்து அவர்கள் சொல்ல மாட்டார்கள் இப்போது!

 

தானே உணரும் இந்த மாற்றங்களினால், சற்று குழம்பிப் போய், வீட்டில் கேட்பதற்கு வெட்கப்பட்டு, நண்பர்களை நாடுவார்காள், இதைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள!

 

இதனால என்னா நடக்கும் வீட்டில!

 

பெற்றோரிடமிருந்து சற்று விலக ஆரம்பித்து, சுதந்திரமாக இருக்க, தன் தேவைகளை தானே செய்து கொள்ள தொடங்குவார்கள்.

 

தனக்கு பொறுப்பு வந்த மாதிரி காட்டிக் கொள்ள, தன்னையும் பெரியவங்க கூட்டத்துல சேத்துக்க ஆசைப்படுவாங்க!

 

முந்திரிக்கொட்டை மாதிரி, எல்லா விஷயத்திலியும், தன் கருத்தை சொல்றதுக்கு ஆசைப்பட்டு, சமயத்துல திட்டு வாங்கறதும் சகஜமா நடக்கும்!

 

“போயி ஒன் வேலையைப் பாரு! வந்துட்டான் பெரிய மனுஷனாட்டம். வயசுக்கு தகுந்த பேச்சா பேசற நீ” போன்ற திட்டெல்லம் சர்வ சாதாரணமா விழும் இப்போ!

 

பக்கத்து வீட்டு இளம் தம்பதிகள், எதுத்த வீட்டு அக்கா, கோடிவீட்டு ஃப்ரெண்டு, நேத்து வரைக்கும் ஒண்ணா ஓடிப்பிடிச்சு விளையாடின, கல்பனா, இவங்க எல்லாரும் இப்போ ஒரு புதுவிதமாத் தெரிய ஆரம்பிப்பாங்க!

 

அவங்க எப்பவும் போலவே இவன்கிட்ட காட்டற அன்பும், ஆசையும் இப்போ இவனுக்கு அல்லது இவளுக்கு புதுமாதிரியா அர்த்தமாகும்.

 

“இவனைக் கொஞ்சம் என்னான்னு கேளுங்க டாக்டர்! பக்கத்து வீட்டு அம்மா குளிக்கும் போது, இவன் எட்டிப் பாத்தான்னு வந்து புகார் பண்றங்க! எனக்கு ஒரே அவமானமாக இருக்கு. இவன் இது மாதிரியெல்லாம் பண்றவன் இல்லே. நாங்க ரொம்ப தன்மையாத்தான் வளத்தோம் இவனை” என்று என்னிடம் வந்தவர்கள் உண்டு!

 

‘றாஜு என்னையே ஏன் பாத்துக்கிட்டு இருக்கான்?’ 

‘ஸுஜாகிட்ட எப்படியாவது இன்னிக்கு பேசிறணும்!’ 

 

இது போன்ற ஆசைகள் காரணமில்லாமல் வரத் துவங்கும்.

 

இன்னும் கொஞ்சம் முக்கியமானதும் இருக்கு!

 

தான் யாரு, தன்னோட தனித்துவம்லாம்[speciality] என்ன எப்படி அதை வளக்கறது போன்ற விஷயங்களைப் பத்தி ரொம்பவே ஆராய்ச்சி பண்ண ஆரம்பிப்பாங்க.

 

பாலியல்[sex] ஜோக்குல்லாம் இப்ப நல்லாவே புரிய ஆரம்பிச்சு, அதை நண்பர்களோட பகிர்ந்துக்க தொடங்குவாங்க.

 

இது மாதிரி ஜோக்கோ, இல்லை படமோ பாக்கும் போது, தங்களோட பிறப்பு உறுப்பிலும் [இதோட பேரு அவங்களுக்கு நல்லாவே தெரியும் இப்ப,.... நான் தான் இங்கு சொல்லவில்லை!] உடம்பிலும் சில விரைப்புகள் ஏற்படறதை உணருவாங்க.

 

‘சுய இன்பம்’ அப்படீன்னா என்ன என்பது யாரும் சொல்லிக் கொடுக்காமலே தெரியவரும்.

 

சில சமயம் ராத்திரியில படுக்கை ஈரமாகும். எதனாலன்னு சீக்கிரமே புரியும்.

 

அந்த உணர்வு கொடுக்கற ஆனந்தத்தை மறுபடியும் அனுபவிக்க கை பரபரக்கும்.

 

உடனே ஒரு குற்ற உணர்வும், செய்யறது தப்போன்னு ஒரு தாழ்வு மனப்பான்மையும் வரும். 

 

இதைத் தவிர்க்க, தனிமையை நாடுவாங்க .

 

சும்மா இல்லாம நம்மளை விட இன்னும் நல்லா தெரிஞ்ச மாதிரி காட்டி பீலா விடற நண்பன் சொல்றதெல்லாம் உண்மையோன்னு மனசு கிடந்து தவிக்கும்.

 

“டேய், ஒவ்வொரு தடவையும் விந்து வெளியேறும் போது ஒன் ஒடம்புலேர்ந்து 60 சொட்டு ரத்தம் வீணாப் போகுது, தெரியுமாடா?”

“மெதுவா அப்பப்ப கையால கொஞ்சம் பிசைஞ்சு விட்டுக்கிட்டு இருந்தீன்னா, ஒன் மார்பு பெருசா, நல்லா வளரும்னு ஒரு புக்குல படிச்சேன்டீ!”

 

இது போன்ற இலவச ஆலோசனைகள் ஆயிரம் கிடைக்கும்.

 

நம்ம கிட்டயும் பேச மாட்டாங்க!

 

நாமளும் இதெல்லாம் பருவ மாற்றங்கள்தான்னு புரிஞ்சுக்காம குடும்ப மானம், அது இதுன்னு போட்டு அடிச்சிப்போம்.

 

இந்த வயதுக் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியது , தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

 

அடுத்த பதிவில் பார்ப்போம்!

“நீயா இப்படி பண்ணினே?” 

 

‘ராஜுவோட டீச்சர் உங்க கிட்ட இதக் குடுக்கச் சொன்னாங்களாம்!’ 

ஒரு பேப்பரை நீட்டுகிறார் உங்கள் மனைவி அலுவலில் இருந்து வந்த உங்களுக்கு,... ஒரு காஃபியும் போட்டு எடுத்துக்கொண்டு. 

 

‘என்னவாம்?’ என்று அலுத்துக் கொண்டே பிரிக்கிறீர்கள்.

முகம் சிவக்கிறது!

உதடு துடிக்க நாக்கை மடித்து, ‘எங்கே அந்த ராஸ்கல்?’ எனக் கோபமாகக் கூவுகிறீர்கள்! 

 

அப்ப்டி என்னதான் அந்த லெட்டரில்? 

 

“உங்கள் மகன் இன்று வகுப்பறையில், இன்னும் சில மாணவர்களுடன் சேர்ந்து பெண்கள் “படம்” போட்ட ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இது பற்றிப் பேச நாளைக் காலை 9 மணி அளவில் பள்ளிக்கு வந்து என்னை சந்திக்கவும்!” 

 

உங்கள் மனதில் இப்போது ஓடும் எண்ணங்கள் !!

 

அவமானம்: நம்ம பையன் இப்படி தலை குனிய வெச்சுட்டானே! நாளைக்கு எப்படி நான் போய் டீச்சரைப் பார்ப்பது? 

கோபம்: தொலைச்சுடறேன் அவனை. கட்டி வெச்சு நாலு சாத்து சாத்தினாத்தான் வழிக்கு வருவான். 

ஆத்திரம்: எல்லாம் உன்னால வர்றது தான்! நீதான் அவனை செல்லம் குடுத்து குட்டிச்சுவர் ஆக்கிட்டே! 

வருத்தம்: என்னவெல்லாம் கதை சொல்லி, எப்படி எல்லாம் கனவு கண்டேன். இப்படி பண்ணிட்டானே ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சதும்! 

 

இந்த மனநிலையோடா ராஜுவை எதிர் கொள்ளப் போறீங்க?

நிச்சயமா டிஸாஸ்டர்[Disaster] தான்! 

 

நீங்க கத்த, அம்மா, தடுக்க, அவன் அழ இதைப் பார்த்து சின்னக் குழந்த வீல் வீல்னு கத்த, அந்த இடமே ரணகளமாகப் போவுது, இன்னும் கொஞ்ச நேரத்துல.!! 

 

நீங்கள் என்ன செய்யலாம்? 

 

இப்போ உங்களுக்கு உடனடித் தேவை, இதுலேர்ந்து விடுபட்டு, தனியா ஒரு அரை மணி என்ன ஆச்சு, என்ன பண்ணனும், எப்படி பண்ணலாம், ஏன் பண்ணினான் என்பதை பற்றி சிந்திக்க.

 

“ சரி, இன்னிக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் இதைப் பத்தி பேசலாம்” – இப்படிச் சொல்ல வேண்டும். 

 

முடியுமா உங்களால்? 

 

உங்களுக்குள் எழும் அத்தனை உணர்வுகளும் சாதாரணமாக எல்லா பெற்றோருக்கும் வருவதுதான். 

என்னென்ன உணர்வுகள் வந்தது என்பது புரிந்தவுடன்,.... இனி ஒரு நொடி ‘ராஜுவுக்கு எப்படி இந்த ஆர்வம் வந்திருக்கக் கூடும்’ என யோசியுங்கள்.

 

அவனைக்கேட்டால் என்னவென்று தீர்ந்து விடப் போகிறது!ஆனால், அதற்கு முன் உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். 

 

“இதைப் பார்த்ததும், என்னதான் இருக்கு இதுக்குள்ளே என தெரிஞ்சுக்கற ஆர்வம்..?”[Curiosity]

“ஒருவேளை அவன் நண்பர்களின் நடுவில் தன்னை ஒரு நல்ல பையன் மாதிரி காட்டிக் கொண்டு போகவேண்டாமே என்ற தூண்டுதல்..?”[PeerPressure]

“வேணாம்னு சொல்றதை செய்யணும்கிற துடுக்குத்தனம்..?” [diffidence] 

 

இந்தவயதில், மேற்சொன்ன எதோ ஒரு காரணத்தால், குழந்தைகள் இது போன்ற புத்தகங்களைப் பார்க்க, படிக்க ஆசைப்படுவது இயல்பு! 

 

கொஞ்சம் நிதானமா யோசிச்சீங்கனா, நீங்க பண்ணாத ஒண்ணு இல்லை இதுன்னு புரியும். 

 

இருந்தாலும் இப்ப, நீங்க ஒரு கௌரவமான ‘தந்தை’ ஆயிற்றே!

 

நான் கூட செய்யலாம்; என் பையன் செய்யலாமா? என்கிறமனோபாவம்தான் பெற்றோர்களுக்கு வருகிறது. 

 

கோவத்துல போட்டு, அவனை அடிச்சி, திட்டி, வேற தண்டனை எல்லாம் கொடுத்து, என் பையனை நான் கண்டிச்சு வளக்கிறவன்’னு நீங்க பெருமைப் பட்டுக்கலாம்.

 

ஆனா, இது மூலமா, நீங்க செய்தியைக் கேட்டு அனுபவிச்ச உணர்வுகளை அப்படியே அவனுக்குள்ளெ அனுப்பற பெரிய தவறைச் செய்றீங்கன்னு நினைவு வெச்சுக்கணும். 

 

அப்பத்தான், ‘சரி, இனிமே வீட்டில கேக்கக் கூடாது இதைப் பத்தி’ அப்படீன்னு பையன் ஒரு தெளிவாயிடறான்! 

 

மனித உடல் அமைப்பைப் பற்றிய ஆர்வம் அதிகம் வளரும் நேரம் இது!

 

"எனக்குஇருக்கற மாதிரி ஏன் அவங்களுக்கு மார்ல இல்லை?"

"எனக்குஏன் இன்னும் மீசை வளரலை?"

 

இதுபோல பல கேள்விகள் மனதில்! 

 

எனவே, ராஜு அப்படி ஒரு புத்தகத்தை பார்த்ததை தப்பா நினைக்காதீங்க!

 

இதுக்குன்னே சில நல்ல கல்விப் புத்தகங்கள் கிடைக்கின்றன.

அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி ராஜுவுடன் பேச வேண்டிய நேரம் இது! 

 

பல்வேறு வளர்ச்சிக் காலங்களில், மனித உடல் எப்படி எல்லாம் மாறுபடுகிறது, வளர்கிறது என்பதைப் பற்றி விளக்கணும் இப்ப!

ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உடல் ரீதியான வேறுபாடுகள், அவை செயல்படும் விதம், பருவ மாற்றம் என்றால் என்ன இதெல்லாம் தெரிய வைக்கணும்.

 

அப்போதுதான், இன்னும் சில ஆண்டுகளில் தன்னிடமோ. அல்லது தன் வயதொத்த சிறுமியரிடமோ ஏற்படும் மாறுதல்களை அவனால் புரிந்து கொள்ளமுடியும்.

 

இதை நீங்க செய்யாலேன்னா, வேற யாரு?

 

அதை விட்டு, இது மாதிரி பேச்சு வந்தாலே, கோவமா பார்க்கிறது, ஏதோ வேண்டத்தகாத ஒண்ணைப் பத்தி பேசற மாதிரி முகத்தை வெச்சுக்கிறது, இதெல்லாம் அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையையோ , இல்லை, எதிர்ப்பு உணர்வையோதான் வளர்க்கும்.

 

அதுக்காக எதையும் போட்டுத் திணிக்க வேண்டாம்.

 

அப்புறம் நம்ம சிபியார் சொன்ன மாதிரி, அப்ளிகேஷன்ல போடறதுக்காக, ‘ஸெக்ஸுன்னா’ என்னம்மான்னு கேட்ட பையன்டபோய், விலாவாரியா சொல்லி சூடுபட்ட அம்மா கதை ஆயிடும்!

[முழுக்கதை வேண்டுவோர், போன பதிவின் பின்னூட்டம் பார்க்க!!:)] 

 

இந்த வயதுக் குழந்தைகள் கேட்கக்கூடிய கேள்விகளும் அதற்கான பதில்களும்! 

 

"எனக்கு எத்தனை வயசு ஆகணும், நான் குழந்தை பெத்துக்க?" 

 

"தீட்டு அல்லது மாதவிடாய் உனக்கு வர ஆரம்பிச்சதும் நீ குழந்தை பெத்துக்க ரெடி ஆகறே! சாதாரணமா, ஒரு 11 வயசுக்கு மேல இது வரும்.ஆனா, பெத்துக்க முடியுமே அப்படீங்கறதுக்காக நீ அம்மா ஆயிடக் கூடாது. ஏன்னா, அதுல இன்னும் நிறைய பொறுப்பெல்லாம் இருக்கு."

 

"அப்போ பசங்களுக்கு? அவங்க எப்போ அப்பா ஆக முடியும்?"

 

"பொண்ணுங்களுக்கு மாதவிடாய் மாதிரி ஆண்களுக்கு விந்துன்னு ஒண்ணு 13/14 வயசுல சுரக்கும். அப்போ அவங்க அப்பா ஆக முடியும். அவங்களுக்கும் உனக்கு சொன்னதெ தான். படிச்சு முடிச்சு, ஒரு வேலை பார்த்து, ஒரு குடும்பத்தை தானே காப்பாத்த முடியும்ஙற நேரம் வரைக்கும் இதை தள்ளிப் போடணும் , சரியா?"

 

"என் மாரு எப்போ வளரும் இன்னும் நல்லா..உன்னை மாதிரி? "

 

"அதுக்கு இன்னும் கொஞ்சம் நாளு போகணும். ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நேரத்துல வளரும். பருவம் வந்ததுக்கு அப்புறம்தான் இது பெருசா வளர ஆரம்பிக்கும். இப்ப நீ சின்னப் பொண்னுதான். இன்னும் கொஞ்சம் வருஷம் போவட்டும்"

 

[இது போன்றே பதில் ஆண்பிள்ளைகளின் கேள்விக்கும் மாற்றிச் சொல்லலாம்] 

 

“பக்கத்து வீட்டு அக்காவுக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே! எப்படி அவங்களுக்கு குழந்தை பொறக்கப் போவுதுன்னு சொல்றாங்க?” 

 

"கல்யாணம் ஆனாலும், ஆவாட்டியும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடல் ரீதியா ஒண்ணா சேர்ந்துபடுத்தாங்கன்னா, குழந்தை பொறக்க வாய்ப்பு இருக்கு. ஆனா, நான் வந்து கல்யாணம் கட்டிக்கிட்டதுக்கு அப்புறம்தான் குழந்தை பெத்துக்கிட்டேன். அதான் நல்லது! ஆனா, மத்தவங்க வேற விதமா நினைக்கலாம் இல்லியா?"

 

"சில வார்த்தையெல்லாம் [சொல்லிக்காட்டி] கெட்ட வார்த்தைன்னு சொல்றாங்களே! ஏம்மா?"

 

"மனுஷங்க உறவை பழிக்கிற மாதிரி சொல்றது கெட்ட வார்த்தை தானே! அதனால இதெல்லாம் சொல்லாம இருக்கறது நல்லது! கோபத்துலதான் சாதாரணமா வரும்! ஆனா, அப்பக்கூட சொல்ல வேணாமே! என்ன?!"

 

திரும்பத் திரும்ப சொல்கிறேன் என கோவியார் அலுத்துக்கலாம்! ஆனாலும் சொல்லிவிடுகிறேன். 

 

இந்தகேள்விகளை எல்லாம் நீங்கள் ஒதுக்கினாலும், குழந்தைகள் எப்படியும் தெரிந்து கொள்ளவே முயற்சிக்கும்! 

சொல்லிப்புட்டேன்! 

சொல்லிப்புட்டேன்! 

பார்த்து நடந்துக்கோங்க! 

 

 

அடுத்து, "பருவம் வருவதற்கு சற்று முன்னால் என்ன தெரியணும்?" என்பது பற்றிப் பார்க்கலாம்!!

http://kasadara.blogspot.com/2006_09_01_archive.html

இதுவரை வீட்டில் பொத்திப் பொத்தி வளர்த்த உங்கள் அருமை மகன்/ள் ஒரு சில மணி நேரம் உங்களை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அந்த நேரம் வந்து விட்டது!

ஆம்! பள்ளிக்கு அனுப்ப வேண்டும்!
இதுவரை ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லி, அல்லது, தன் கருத்துகளைப் புகட்டி, பாங்குற வளர்த்த காலம் இதோடு முடிவடைகிறது!
இனி, வெளியுலக நன்மை, தீமைகளை எதிர் கொள்ளப் போகும் நேரம் அவர்களுக்கு!
இப்போதுதான் கொஞ்சம் தீவிரமாகவே, நீங்கள் பாலியல் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தருணம்!
சரி, பாலியல், பாலியல் என்கிறீர்களே, பாலியல் கல்வி என்றால் என்ன நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தகவல்களைத் தெரிந்து கொண்டு,[Information] பாலியல் பற்றியதான ஒரு வரைமுறைகளையும்,[attitudes] நம்பிக்கைகளையும்,[beliefs] பாலியல் அறிமுகத்தையும்[Sexual identity], உறவுகளின் மேம்பாட்டையும்,[relationships] நெருக்கத்தையும்[intimacy] "நீங்கள்" தெரிந்து கொள்ள வேண்டிய நேரம்!
என்னடா இவன்! இதெல்லாம் எனக்குத் தெரியமலா பிள்ளைகளைப் பெற்றிருக்கிறேன் எனக் கோவியார் [ஏன்? நீங்களும்தான்!] கேட்பது காதில் விழுகிறது!
நீங்கள் அறிந்து பழகியது வேறு! 
இப்போது நீங்கள் எதிர் கொள்ளப் போவது வேறு!
பட்டும் படாமலோ, அல்லது முயலாமலோ, நம் பெரியவர்கள் செய்யாததை, செய்ய வேண்டாம் என விட்டதை, செய்யத் தவறியதை, நாம் செய்ய வேண்டிய நேரம்!
மாறிக் கொண்டே இருக்கும் உலக நியதியின் கட்டாயம்!
சம்மதத்துடன்[Informed Choices] செய்து கொள்ள வேண்டிய சில முடிவுகளை அவர்கள் தெரிந்து கொள்ள , தனது நம்பிக்கையையும்,[Self confidence] சுய மரியாதையையும்[Self-respet] காப்பற்றிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும், 
இதன் மூலமே அவர்கள் தவறான தூண்டுதல்களை[abuse] , துஷ்பிரயோகம் செய்தலைத் தவிர்த்தலை,[exploitation] விரும்பத்தகாத உறவுகளை[Unintended practices] ஒடுக்க, நாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம்.
தருணமிதைத் தவற விடுவாயோ?
5 முதல் 7 வயது வரைக் குழந்தைகள் தனது பாலியல்[] பற்றி தெரிந்து கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுவர்கள் தன் வயதொத்த சிறுவர்களுடனும்,... 
சிறுமியரும் அதே போலவும்,...
நட்பு பழக முற்படுவார்கள்.
"சீ போ! நீ பொம்பளை! எங்கிட்ட வராதே!
" போடா! உங்கூட யார் வந்தா? வெக்கமில்லை ஒனக்கு!" 
என்ற வசனங்களை இப்போது அதிகம் பார்க்கலாம்.
குழந்தைகள் எப்படி வருகின்றன என்ற முந்தையக் கேள்வி இப்போது அதிகம் வலுப் பெற்று, சற்றுத் தீவிரமாகவே கேட்கப்படும்!!
இப்போது அதை எப்படிக் கையாள்வது எனப் பார்ப்போம்!
" நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே வந்தேன்"
" எப்படி வந்திருப்பேன்னு நீ நினைக்கிறே?"
இப்படிக் கேட்பதின் மூலம், அது என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
அப்படிக் கேட்காமல், அதி புத்திசாலித்தனமாக ஏதோ சொல்லப் போய் ஏடாகூடமாக வாய்ப்பிருக்கிறது!
மேலும், என்ன, எவ்வளவு சொல்லலாம் என்று உங்களை நிதானித்துக் கொள்ள ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது!
அதற்கு எவ்வளவு தெரியும் இதுவரை என அறியவும் முடியும்!
ஒரு கோழிமுட்டையை எடுத்துக் காட்டி, 
"இதுலேர்ந்துதான் ஒரு கோழி வருதுன்னு தெரியுமில்லை உனக்கு! அது மாதிரி நீ என் வயத்துக்குள்ளே ஒரு சின்ன முட்டையா இருந்தே! அப்படியே பெருசாகி அப்புறம் நீ பொறந்தே!" 
எனச் சொன்னால் அதுவே அக்குழந்தைக்கு சமாதானமாகிவிடும்!
தனக்குத் தெரிந்த ஒன்றைக் காட்டியே அம்மா சொன்னாள் என்று தன் புத்திசாலித்தனத்தை மெச்சியபடி, 'பெருந்தன்மையாய்' உங்களை 'மன்னித்து' விட்டுவிடும்!
'தன்னால் எதுவும் செய்ய முடியும்' என்ற உணர்வை சொல்லிக் கொடுப்பதே இவ்வயதுக் குழந்தைகளுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்!
இப்படிச் சொல்கிறேன் எனத் திகைக்க வேண்டாம்.
தன் அளவு தெரிந்த எந்தக் குழந்தையும் அதைத் தாண்டிச் செல்லாது.
இதுதான் உண்மை!
அளவு[Limitations] தெரியாத குழந்தைகள் தான் ஆழம் தெரியாமல் காலை விடுகின்றன.
ஆண் என்றால் இது, பெண் என்றால் இத்தனை என அளவுகோள்களை நிர்ணயிக்காமல், உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது; அதை வளர்க்க, செயல்படுத்த, நான் உறுதுணையாய் இருப்பேன் என்னும் உணர்வை இவ்வயதில் விளைப்பது அவர்களது தன்னம்பிக்கையையும், உங்கள் மேல் உள்ள பாசத்தையும், மதிப்பையும் மேம்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இந்த வயதில்தான் தனது பிறப்பு உறுப்புகளைப் பற்றிய கவனம் தெரிய வருகிறது.
சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள்!!
[இது போல 'நான்' கேட்கவில்லையே என மறுக்காதீர்கள்! காலம் மாறிவிட்டது! இதற்குள், உங்கள் குழந்தை, நீங்கள் அதன் வயதில் இருந்த போது பார்த்திராத பல காட்சிகளை டெலிவிஷன் மூலமோ, அல்லது இன்ன பிற வகையிலோ அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!!]
"எனக்கு ஏன் ராஜுக்கு இருக்கற மாதிரி ஒண்ணுக்கு போற இடம் இல்லை?"
"நான் எங்கேர்ந்து வந்தேன்னு நீ காட்டுறியா?"
"ராஜு ஏன் நின்னுகிட்டே ஒண்ணுக்கு போறான்? நான் ஏன் ஒக்காந்துகிட்டு போவணும்?"
"என்னாலேயும் கொழந்தை பெத்துக்க முடியுமா?"[ஆண் குழந்தை கேட்பது]
இதற்கு நம் பதில் என்னவாக இருக்கலாம்?
1. உனக்கு எப்பவுமே அது இல்லை. ஏன்னா நீ ஒரு பொண்ணு. பொண் குழந்தைகளுக்கு ஆம்பளைப் பசங்க மாதிரி நீட்டா கிடையாது. சரியா? அதான் ஒன்னோட ஸ்பெஷாலிடி![Speciality]
"2. நீ என்னோட ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்கற ஒரு இடத்து வழியா வந்தே! அதை உனக்கு நான் காட்ட முடியாது! ஏன்னா, அது என்னோட தனிப்பட்ட, மறைக்கப்பட்ட[private] இடம்! இப்ப நான் உனக்கு ஒரு புக்[Book] காட்டறேன், அதுல இது மாதிரி இருக்கும், அப்போ உனக்குப் புரியும், சரியா?
"3. ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் இயற்கையிலேயே தனித்தனியா இடம் இருக்கு ஒண்ணுக்கு.-- அது பேர் சிறுநீர்-- போறதுக்கு. இப்ப இந்த ஹோஸ் பைப் வழியா தண்ணி எப்படி சொய்ய்ங்ன்னு விழுது! அது மாதிரி ஆம்பளைங்களுக்கு இருக்கு. அதனால், அவங்களால நின்னுக்கிட்டு போக முடியுது. உன்னால முடியாது. ஏன்னா உனக்கு அப்படி இல்லை.
"4. பொம்பளைங்கதான் குழந்தை பெத்துக்க முடியும். ஏன்னா, அவங்களுக்குத்தான் யுடிரஸ்,[Uterus] கர்ப்பப்பைன்னு ஒண்ணு இருக்கு. ஆம்பளைங்களுக்குக் கிடையாது. ஆனா, உன் அப்பாதான் குழந்தை வர்றதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணினாரு! நீயும் பெரியவனான உடனே,.. வேணுமின்னா அப்பாவாகலாம்!"
இதெல்லாம் ஒரு சில உதாரணங்களே! 
நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும், உங்கள் கருத்திற்கேற்ப மாற்றி வடிவமைத்துச் சொல்லலாம்.
....இன்னும் இந்த முக்கியமான வயதைப் பற்றிச் சொல்ல வேண்டியிருப்பதால்......

"3 - வய்துக் குழந்தையின் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் கல்வி!"

உங்கள் 3 வயதுக் குழந்தை ஷீலாவும், அடுத்த வீட்டுப் பையன்[3 வயதுதான்!] ராஜாவும் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
திடீரென, சத்தம் நின்றுவிடுகிறது!
உங்களுக்கு சந்தேகம்!
மாடி ஏறிச் சென்று, மூடியிருக்கும் குழந்தையின் அறைக்கதவைத் தட்டி [நீங்கள்தான் அவரவரின் தனித்துவம் சொல்லி வளர்த்திருக்கிறீர்களே!] 'வரலாமா' எனக் கேட்டு நுழைகிறீர்கள்!
அங்கே......பிறந்த மேனிக்கு ராஜாவும், ஷீலாவும்!
பார்த்தவுடன் புரிகிறது அவர்கள் இருவரும் இந்த வயதுக் குழந்தைகள் இயல்பாக ஆடும் 'டாக்டர் விளையாட்டு' ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என!
இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!
ஒன்று இப்படி..!
குரலை உயர்த்தி, "என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?
சீக்கிரமா ட்ரெஸ்ஸைப் போடுங்க!
ஏ ராஜா! கெளம்பு நீ ஒங்க வீட்டுக்கு!
வரேன்! வந்து ஒங்க அப்பாகிட்ட சொல்றேன்!
இன்னொரு தரம் ஒங்க ரெண்டு பேரையும் இப்படி பாத்தேனோ... அப்ப தெரியும் சேதி!"
இதன் மூலம் நீங்கள் சொல்வது அவர்களுக்கு....?
இருவர் செய்ததும் தவறு.
அவர்கள் கெட்டவர்கள்.
ஆடை களைதல் என்பது ஒரு குற்றம்.
இதன் முழுத் தீவிரமும் புரியாத அவர்களுக்கு இது குழப்பத்தையும், அவமானத்தையும், வருத்தத்தையும் உண்டு பண்ணும்.
ஒரு சாதாரண ஆர்வத் தேடலுக்கா[Curiosity] இவ்வளவு? என குறுகிப் போகும் அவை இரண்டும்!
மாறாக இப்படி....!
"நீங்க ரெண்டு பேரும் ஏதோ விளையாட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க போல! சரி, எங்கே, ரெண்டு பேரும் சமர்த்தா, அவங்கவங்க ட்ரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு கீழே வாங்க!
நான் உங்களுக்கு ஒண்ணு காட்டறேன்!"
எனச் சொல்லி அவர்கள் வந்ததும் ஒரு படப்புத்த்கத்தை விரித்து, அவர்களுக்கு, அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு ஆண்-பெண் பற்றி விளக்குவது!
இதன் மூலம், ...
'அடுத்தவர் உடல்கூறு பற்றிய ஆர்வம் தவறல்ல.
ஆனால் அதைத் தெரிந்து கொள்ள ஆடை களைய வேண்டிய அவசியம் இல்லை!
உங்களுக்கு உதவ உங்கள் பெற்றோரை எப்போதும் நாடலாம்'
எனப் புரிய வைக்கிறோம்!
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று,
நீங்கள் ராஜாவின் பெற்றோரிடமும் இது பற்றி தெரிவித்து ஒப்புதல் பெறுதல்! 
வீண் மனத்தாங்கல்களை தவிர்க்க இது உதவும்!
இல்லையெனில் அவனை அனுப்பிவிட்டு ஷீலாவுக்கு மட்டும் இதைச் சொல்லலாம்.
இங்கு அவ்வாறு சொல்லாமல் மறுத்தல், தனிமையைத் தேட வைக்கும் குழந்தைகளை!
ஒரு கண் அவர்கள் மேல் வைத்து இருப்பது அவசியம்தான்!
குறுக்கீடு கூடாது!
இதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்!
மேலும், இன்னொரு முக்கியமான விஷயம்!
மேலே சொன்னது வெறும் ஒத்த வயதுக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வரையிலும் தான்!
மற்றவர்கள், ...அவர்கள் பெரியவர்களோ, அல்லது, சற்று வயது வித்தியாசம் உள்ளவர்களோ, இந்தப் பிஞ்சு வயதினரோடு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்தால், உடனே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயங்க வேண்டாம்!
நான் சொன்னது புரியவில்லை எனின், பின்னூட்டத்தில் கேளுங்கள், சொல்கிறேன் !
இந்த வயதில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் என்ன?
"நீ தனித்துவமானவன்/ள்! [Special]! எனவே உன்னை நேசிக்கக் கற்றுக்கொள்!" 
"அதே போல, மற்றவர்களும் அப்படியே! அவர்களை மதி! அன்பு செலுத்து!"
"உனது இந்த தனித்தன்மையை [Individuality] பாதிக்கும், எந்த ஒரு நிகழ்வுக்கும் உன்னை ஆட்படுத்த "எவருக்கும்" உரிமை இல்லை!"
"ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு !"
"உன் உடலில் மறைக்கப்பட்ட உறுப்புகள்[hidden parts] மற்றவர்களுக்குக் காட்ட இல்லை!"
"உன் தாய் தந்தையிடம் எதையும் நீ கேட்க முடியும்!"
"அவர்கள் என் மீது அன்பு செலுத்த வந்திருப்பவர்கள்!"
போதனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! இதை எப்படி செயல்முறையில் காட்டுவது என, கோவியார்முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது!
"உவ்வாவைத் தொடாதே!" எனச் சொல்ல வேண்டாம்!
"நீர்[ஒண்ணுக்கு] போகும் இடம்" எனச் சொல்லிக் கொடுங்கள்!
பின்னால் அதன் பெயர் உங்களால்/பள்ளியில் அவனுக்கு/அவளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் வரை!
குளிக்கும் போது, ஆர்வமிகுதியில் அதன் கை உங்கள் உறுப்புகளின் மீது பட்டால், பட்டென அடிக்க வேண்டாம்!
இது வெகு இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சி தான்!
"நான் சொல்லியிருக்கேன்ல! இது என்னோடது! அதனால நீ தொடக் கூடாது! இது மாதிரி மத்தவங்களுதைத் தொட்டா அவங்க தப்பா நினைச்சுப்பாங்க!" என அன்புடன் சொல்லுங்கள்!
அடுத்த முறை அது நிகழாது!
ஒரு நேசமும், மரியாதையும் வளர்வதைப் பார்ப்பீர்கள்!
இது போன்ற தருணங்களை உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி, இது தொடர்பாக மேலும் சொல்லத் துவங்குங்கள்!"
தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்கும் இயல்பு குழந்தைகளுக்கு கிடைத்த வரம்!
'போப்பா! போரடிக்குது!' என்றோ,
ஒண்ணூம் புரியாம மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டோ,
தனக்கு அதில் தொடர விருப்பமில்லாததை சட்டென்று காட்டிவிடும்!
இதில் தாய், தந்தை இருவருக்கும் சம பொறுப்பு உண்டு!
"போதும், போதும்! கண்டத்தையும் சொல்லி குழந்தையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிறீங்க! "என அடுத்தவரைக் குறை கூற வேண்டாம்!
இருவரும் ஒருவருக்கொருவர் இந்த விஷங்களில், ஒரு பொதுவான நிலைப்பாடு கொள்ளல் மிகவும் தேவையான ஒன்று!
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்!
எது சொல்லலாம், எது இப்போது வேண்டாம் என்பதை!
அடுத்து, ...குழந்தைகள் திடீரென ஒரு கேள்வியை உங்கள் மீது வீசும் போது, தயாராக இருப்பதற்கும், இந்த முன் - கலந்துரையாடல் உதவும்!
ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து முழிக்கிறதோ, இல்லைன்னோ குழந்தையைக் கடிந்து கொள்வதோ தவிர்க்கபடும் இதனால்!
"இப்ப நீ ஒண்ணும் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு கிழிக்க வேணாம்",
"வாயை மூடு! அதிகப்பிரசங்கி!" போன்ற பதில்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து அந்நியமாக்கும் என்பதை மனதில் கொண்டு,
ஒரு எசகுபிசகான நேரத்தில் கேட்டால் கூட,
"இப்ப வேணாம் கண்ணு! ராத்திரி, சாப்டவொடனே ஒனக்கு கதை சொல்லுவேன் பாரு! அப்ப சொல்லுவேன், சரியா!" எனச் சொல்லி,... சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள்!
எளிமையான, நேர்மையான பதில்களையே கூறுங்கள்! அது பின்னால் ஒரு தேடலை உங்களிடம் வளர்க்கும்!
"ஏய்! அன்னிக்கு கேட்டியே! நீ எப்படி பொறந்தேன்னு? இப்ப அம்மா உன்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போவேனாம்! அங்க உன் உஷாசித்திக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கொழந்தை பொறக்கப் போவுது! நீயும் வா!" எனக் கூட்டிப் போங்கள்!
அதை பார்த்துவிட்டு வந்ததும் இருக்கிறது உங்களுக்கு ஒரு ஆயிரம் கேள்விகள்!
பெரிய பெண் தாவணி போடும் நேரம்,
அண்ணன் அரை டிரௌசரில் இருந்து பேண்ட் போடும் காலம்,
அவனுக்கு மீசை அரும்பும் காலம்
இவையெல்லம் கூட உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு பாலியலின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் காட்டக் கூடிய நேரங்கள்தான்!
எவ்வளவு அதிகம் இந்த சிறுவயதில் சொல்கிறோம் [Too much too soon] என்பது முக்கியமில்லை!
ஐயோ! அப்பவே சொல்லாமப் போனோமே [Too little too late] என பின்னால் வருந்துவதற்கு இது எவ்வளவோ மேல்!
இது அறிவியாளர் கருத்து!
மேலும், இதன் மூலம், தன் தாய்-தந்தையரை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற முக்கியமான, தேவையான பண்பை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!
இதோ, அடுத்த ஆண்டு, அதன் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்களே போய், ஒரு பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள்!
அது பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறீர்கள் ...நீங்கள்தான்!
எனவே, கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பைத் தவற விடாமல், நான் மேலே கூறிய கருத்துகளை கவனத்தில் கொண்டு, செயல்படுங்கள்!
அடுத்தது.... "பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுடைய பெற்றோரின் கடமை, தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?" என்பதைப் பார்ப்போம்! "!

 

கோவி கண்ணன் 'கோவி'ப்பதால், இனி நேரடியாக 'கல்வி' புகட்ட ஆரம்பிப்போம்!சரியா!

என்ன, எல்லாரும் சிலேட்டு, பலப்பம்லாம் எடுத்துகிட்டு வந்துட்டீங்கதானே!

 

'அடுத்தது, 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் அறிய வேண்டியது' எனப் போட்டவுடன் கோவியார் சிங்கையிலிருந்து தொலை பேசினார்!

"விட்டா எதை எழுதறதுன்னு ஒண்ணும் கிடையாதா?

மூணு வயசுக் குழந்தைக்கு என்னங்க தெரியும்?

அப்ப ஏங்க நாம கவலைப்படணும்?

அப்பவே போய் எதுனாச்சும் சொன்னோம்னா, தப்பா போயிறாதா?" என்று!

 

இது போன்ற 3 வயதுக் குழந்தையின் தாய் ஒருவர், ஒருமுறை என்னிடம் வந்து கேட்டார்கள், "டாக்டர்! என் பையன் என்னை விட்டு நகர மாட்டேன் என்கிறான்.

தனி ரூம், பெட் எல்லாம் போட்டு அவனைத் தூங்கச் செய்துவிட்டு வந்தாலும், ஒரு அரை மணி நேரத்தில் அங்கிருந்து எழுந்து என்னிடம் ஓடி வந்து கட்டிபிடித்துத் தூங்கினால்தான் அவனுக்கு நிம்மதி!

அதுக்கப்புறம் போகவே மாட்டான்!

எங்க பெட்லதான் மீதி ராத்திரி முழுவதும்!

இதனால், எனக்கும் என் கணவருக்குமிடையே பிரச்சினை வருகிறது!

நீ சரியாக வளர்ப்பதில்லை எனத் திட்டுகிறார். என்ன செய்வது?" என்று.

 

குழந்தைகள் வளரும் காலத்தில் பல நிகழ்வுகள்!

அவற்றை அப்படியே தேக்கி வைத்து மூளையின் ஒரு பகுதியில் போட்டு வைத்து சமயம் வரும் போது உபயோகப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.

இன்று நாம் காட்டும் ஆசை, பாசம், அன்பு, கோபம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற பல்வேறு குணங்கள் ஏதோ திடீரென வருவதில்லை.

சிறுவயது முதலே, பார்த்து, உணர்ந்து, பழகிய நிகழ்வுகளின் விளைவே இவையெல்லாம்!

 

பிறக்கும் போதே அத்தனை மொட்டுக்களையும் வைத்துத்தான் பிறப்பிக்கிறோம்!

அந்தந்த நேரங்களில் அவை மலர்கின்றன!

[நம்ம பொன்ஸ் சொன்ன மாதிரி!]

 

சரி, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்?

 

அன்பின் அரவணைப்பு எப்படி இருக்கும் எனத் தெரியும்!

பால் குடித்த இடத்தின் சுவை தெரியும்!

பெண்ணென்றால் ரோஸ் நிறம்[pink]. ஆணென்றால், நீல நிறம்[blue] எனத் தெரியும்!

பொம்மை வைத்து விளையாடுவதா, இல்லை கார், ட்ரக் போன்ற விளையாட்டுப் பொருளா எனத் தெரியும்!

சொப்பு, டீ கோப்பைகளும், சமையலறை சாதனங்களும் வைத்து விளையாட பெண் குழந்தைகளுக்குத் தெரியும்!

கூடைப்பந்து, கிரிக்கட் போன்ற விளையாட்டுகள் ஆண் குழந்தைகளுக்குத் தெரியும்!

கூட இருக்கும் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, தமக்கையோ ஒரே தொட்டியில் அமர்ந்து, குளித்து, நீரிறைத்து விளையாடும் போது ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் உறுப்பு வேறுபாடுகள் தெரியும்.

தாய், வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லையென்பதால், குழந்தையை முன்னே விட்டு, தான் குளிக்கும் போது,.... பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இடையே உள்ள உருவ வேறுபாடுகள் தெரியும்!படுக்கையறையில் சில பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, ஒன்றும் புரியாமல், ஆனால் அதே நேரம் அதை நினைவின் ஒரு மூலையில் போட்டு வைக்கத் தெரியும்!

 

ஆச்சரியமாக இருக்கிறதா?

இதுதான் உண்மை!மருத்துவ வல்லுநர்கள், உளநிலை வித்தகர்கள் கண்டறிந்து சொல்லும் உண்மைகள்!

 

நான் சொன்னது பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே!

இன்னும், அப்பா அம்மா சண்டை போடுவது, அடுத்த குழந்தை பிறந்தவுடன், தன்னை விட்டு, அதை கொஞ்சுவதைக் கவனிப்பது போன்ற நிகழ்வுகளைச் சொல்லப் போனால், பதிவின் நீளம் அதிகமாகி, நோக்கம் சுருங்கி விடும் அபாயம் இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்!

 

மேற்சொன்னவைகளை வைத்து தவறாக எண்ண வேண்டாம்!

இவற்றின் தீவிரமும், பொருளும் புரியாத வயதுதான் இது!

ஆனால், மனதில் நிறுத்திக் கொள்ளப்படுபவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!

 

இந்த வயதுக் குழந்தைகள் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான் நான் பதிவின் தலைப்பாய்ச் சொன்னது!

 

"அம்மா! நான் எங்கேருந்து வந்தேன்?"

 

எப்போது இது வரும் என எதிர்பாராததால், எதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் இப்படித்தான் இருக்கும்!

 

"அதுவா கண்ணு! நீ சாமிகிட்டேர்ந்து வந்தே!"

"இதெல்லாம் உனக்கெதுக்கு இப்போ?"

"ஒரு பூதம் கொண்டு வந்து ஒரு நாளு உன்னைய இங்க போட்டுது!"

"ஏய்! குழந்தை கேக்குது! என்னா சொல்லப் போற?, நான் சொல்லட்டுமா?"போன்ற பொறுப்பற்ற பதில்களே!

 

மாறாக என்ன சொல்லலாம்?

 

" நீ என் வயித்துக்குள்ளே ஒரு ஸ்பெஷல் இடத்துல வளர்ந்தே! இதோ பாரு, அதோட வரிகள்!"

"நானும் அப்பாவும் நீ வேணுமின்னு சொல்லி உன்னிய இங்கு கொண்டாந்தோம்"

 

இது போன்ற தெளிவான, எளிமையான பதில்களால் குழந்தை அந்த வயதில் மேற்கொண்டு கேளாமல் திருப்தியடைந்துவிடும்!

உங்கள் மேல் இன்னும் பாசம் கொள்ளும்!

அது வளர, வளர, மேற்கொண்டு சொல்லிக்கலாம்!

 

பதிவு நீள்கிறது!

இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்!

அடுத்த பதிவில் தொடர்வோம், ........

 

அவர்கள் பாலியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன இந்த வயதில்

 

http://kasadara.blogspot.com/2006_08_01_archive.html

முன்னுரையைத் தொடர்ந்து இன்னும் கொஞ்சம், பெற்றோர்களைப் பற்றி சொல்லிவிட்டு மேலே போகலாம் எனக் கருதுகிறேன்.

ஆசையின் தேக்கமெல்லாம் அள்ளிக் கொணர்ந்து தமக்கென ஒரு பிள்ளையைப் பெறுகின்ற பெற்றோர்கள் தாம் பெற்றது இன்னவென பெரும்பாலும் அறிவதில்லை.
தன் வாரிசு என ஒருவனை, ஒருத்தியைக் காட்டிக் கொள்வதிலும், தன் சந்ததி மேலும் வளர்கிறது எனும் அளவிலேயே தன் குழந்தையைப் பார்க்கிறார்கள்.
தான் கற்ற, கற்க மறந்த சில பாடங்களின் அளவுகோலையே கொண்டு தம் அளவிலேயே அக்குழந்தையை சீராட்டி, பாராட்டி வளர்க்க முற்படுகின்றனர்.
தன்னை மீறியும் இவ்வுலகம் வளர்கிறது; அதில்தான் இப்பிள்ளை வளரந்து ஒரு பேர் சொல்லப் போகிறது என்பதனை அறிந்தோ, அறியாமலோ, தன் மரபு அளவுகோள்களை [hereditory values] அதன் மீது திணித்து, அதற்கு ஒரு தாழ்வு மனப்பானமையையோ, அல்லது ஒரு மெத்தனத்தையோதான் பெற்றோர்கள் "பெரும்பாலும்" கொடுத்து வளர்க்கிறார்கள்!
இல்லையென மறுத்தாலும், இதுதான் நாம் காணும் உண்மை நிகழ்வு!
அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன்.
நிறைய வசதிகளைக் கொடுப்பதின் மூலம், ஒரு நல்ல பரம்பரையை உருவாக்கிடலாம் எனவே பெருமளவில் தாய்-தந்தையர் கணக்கு போடுகின்றனர்.
"வழக்கத்தை மாற்றுவானேன்?"[Why change the tradition?] என்ற மனப்பான்மையே இங்கு அதிகம் காண்கிறோம்!
ஆங்கிலத்தில் மூன்று 'I'களைப் பற்றி ஒரு சொல்லாடல் உண்டு.
தகவல், [Information], பரிமாறல், [Interaction], செயலாக்கம், [Implementation] என்று.
இவை மூன்றும் ஒன்று அல்ல!
தகவலைச் சொல்ல வேண்டும்.பரிமாறும் போது விருப்பு வெறுப்பில்லாமல், இருதரப்புக் கருத்துகளையும் கேட்க வேண்டும்.செயலாக்கும்போது யார் இதனைச் செய்ய வேண்டுமென நாம் நினைக்கிறோமோ, அவர்களைச் செய்ய விட வேண்டும்.
ஆனால், நடைமுறையில் வரும்போது இம்மூன்றையும் கலந்தடித்து குழப்பி விடுகிறோம்.
தகவலைச் சொல்லி, பரிமாறலைத் தவிர்த்து, நம் கருத்தை மட்டுமே வலியுறுத்தி, இப்படித்தான் செய்ய வேன்டும் என நிர்பந்தித்து வளர விடாமல் செய்து விடுகிறோம்.
நாம் எது சரியென நினைக்கிறோமோ, அதைத் தாண்டி அவர்களை வளர விடுவது இல்லை என்பதே இங்கு நிஜமாகிப் போன நிதரிசனம்.
எவ்வளவுக்கெவ்வளவு வசதிகளைக் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் வளர்ச்சியில் நாம் குறுக்கிடுகிறோம் என்பதுதான் உண்மை.
நாம் புனிதமாகக் கருதும் இதிகாசங்கள் இதனைத்தான் நமக்கு உணர்த்துகின்றன!
அவை நிஜமோ, இல்லை வெறும் கதையோ, அதைப் பற்றி இங்கு பேச வேண்டாம்.
இராமாயணம் என்ன சொல்லுகிறது?
எனக்குத் தெரிந்ததெல்லாம் இது மட்டுமே!
"கடவுளே உனக்கு மகனாகப் பிறந்தாலும், உனக்கு நிம்மதி வராது;அவனே உன் சாவுக்கும் காரணமாயிருக்கக் கூடும்!"
இராமன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்தான்.
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தான்.
அதற்கு முன்னர், சுகபோகத்தில் திளைத்தான்.
வனவாசத்திலும், 13 ஆண்டுகள் மனைவி, தம்பியுடன் வாழ்ந்தான்.
அடுத்த ஆறு மாதங்கள் அவளைத் தேடி அலைந்தான்.
கடைசி ஆறு மாத காலம்தான் உண்மையிலேயே இராமாயணம்.
அதை விடுத்துப் பார்த்தால், மற்ற நிகழ்வுகளெல்லாம், வெறும் இடத்தை நிரப்பும் காட்சிகளே!
சரி, கண்ணன் கதைக்கு வருவோம்!
அதில் முக்கால்வாசி அவனது பாலபருவத்தின் கதைகளே!
பிறந்தவுடனேயே இட்ம் மாறினான்.
ஒரு சேரியில் வளர்ந்தான்.
அவன் செய்த விஷமங்கள்!
அவன் நடத்திய லீலைகள்!
அவன் காட்டிய தீரச் செயல்கள்!
அதனைக் கண்டும் காணாமலும், பாராட்டியும், அனைத்திலும் கூடவே இருந்த யசோதையும், நந்த கோபனும்!
அதை விட்டால், நேரே, கீதை உபதேசம்தான்!
இதிலிருந்து என்ன தெரிகிறது!
குழந்தைகளை அவர் போக்கில் விட்டால் அவர்கள் பேராற்றல் கொண்டு விளங்குவர் என்றே!
இதனால் மட்டுமே நான் அவ்விரு கதைகளையும் போற்றுகிறேன்!
சொலவதைச் சொல்லி, நல்லவிதமாய்ப் பகிர்ந்து கொண்டு, அவர்களை அவர் போக்கில் விட, பெற்றோர்கள் முன் வர வேண்டும்.
நம் செல்வம் என்று எதனையும் அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென எனத் துடிப்பதை விட்டு, அவர்கள் நாளைய உலகின் நல்ல குடி மக்களாக வளர நாம் - பெற்றோராகிய நாம் - உறுதுணையாய் இருக்க வேண்டும்.
இதில் மற்ற எவரையும் விட, நான் முன்னர் சொல்லிய, ஆசிரியர், மற்றவர், நண்பர் இவர் எல்லாரையும் விட பெற்றவர்களே பெரும் பங்கு வகிக்க வேண்டும்.
இனி, பெற்றோராகிய நாம் அவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும், என்ன வகையில் அவர்களின் இப் பாலியல் அறிவில் உதவி புரிய வேண்டும் எனப் பார்ப்போம்!
அடுத்து.... நிச்சயமாக [!!] 3 வயதுக் குழந்தையின் கேள்வி!!

அதான் பெற்றாகிவிட்டதே! எங்களுக்கு எதுக்கு என்று கேட்காதீர்கள்! நான் சொன்னது குழந்தை பெற்றோருக்கு!

கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் பல்வேறு பூக்கள் பாலியல் பற்றிய இதழ்களை விரித்திருந்தன! கை காட்டுதலும், அடுத்தவரைக் குறை சொல்லலாமோ என்ற எண்ணங்களும் அதில் மணம் வீசுவதைக் கண்டேன். நண்பர் கோவி. கண்ணனிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சில இதுபற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து இது குறித்து எழுதலாமோ என்றிருக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். ஆர்வ மிகுதியாலும், என் மேலுள்ள அன்பின் காரணத்தாலும் அவர் தன் பதிவில் இது பற்றிய அறிவிப்பை உடனே வெளியிட்டு விட்டார்! இப்போது உங்களுக்கு தப்பிக்க வேறு வழி இல்லை!
"பாலியல்" [Sexology] பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்னும் மனப்பான்மையே நம்மில் அதிகம் நிலவுகிறது என்ற உண்மையினை நாம் இங்கு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இது பற்றிப் பேச, கேட்க, பகிர்ந்து கொள்ள வெட்கமோ, அச்சமோ, அல்லது 'நம்மைத் தவறாக எண்ணி விடுவார்களோ?' என்னும் குற்ற உணர்வோ நம்மில் பலருக்கு ஏற்படுகிறது! அதனால், 'முயற்சித்துத் தவறுதல்' [Trial&Error], அல்லது 'தவறான இடத்தில் அறிவுரை கேட்டல்' [Seeking wrong advice] போன்ற வழிமுறைகளை நாடுகின்ற சோகம் நிகழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதைத் தவிர்ப்பதில் பெரும் பங்கு, பெற்றோர், ஆசிரியர், குடும்ப மருத்துவர், நண்பர்களுக்கு உண்டு. ஆனால், இந்த வரிசையில் அது நிகழ்வதில்லை! தலைகீழாகத்தான் நடக்கிறது! விளைவுகளும் தலைகீழாகத்தான் போகிறது!
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஒருமுறை என்னிடம் அவர்கள் 14 வயதுப் பையனை அவசரமாகக் கூட்டி வந்தனர். பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தப் போக்கு ஏற்படுவதாகத் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்கும் போது, முன் தோலின் அடிப்பாகம் [Frenum] அறுந்து ரத்தம் வருவதை உணர்ந்து சிகிச்சை அளித்தபின், என்னவென்று அந்தப் பையனிடம் கேட்டேன். தயங்கித் தயங்கி சொன்னான், 'இல்லை டாக்டர்! முன் தோல் [Foreskin] இருந்தால் கல்யாணம் ஆனபின் இன்பம் அனுபவிக்கக் கஷ்டமாயிருக்கும்' என என் நண்பன் ஒருவன் சொன்னான்; அதான்...கொஞ்சம் வேகமா ஆட்டிப் பாத்தேன்!' என்றான். இதை சொல்வதற்குள் அவனை வெட்கமும், அவமானமும் பிடுங்கித் தின்றது!
இதில் கவனிக்க வேண்டிய நிகழ்வு என்னவென்றால், தவறான ஆலோசனை வழங்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல! காதல், கல்யாணம் போன்ற நிகழ்வுகளை அவன் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான், அதைப் பற்றி வீட்டிற்கு வெளியே பகிர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் கூட!
இந்த எண்ணம் தவறா, சரியா என்பதற்கு பின்னர் வருவோம். அதற்கு முன், பாலியல் கல்வி [Sex Education] பற்றிய தேவையான அறிவு, புரிதல், நமக்கு இன்னும் வரவில்லை என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
நான் எழுத எண்ணியிருக்கும் இந்தத் தொடர், முக்கியமாகப் பெற்றோர்களைக் குறித்தே! அவர்கள் பங்கே இதில் பெரும்பான்மையானது! இது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடும்! 'அது எப்படீங்க? நான் போய் என் மகன்கிட்ட , மகள்கிட்ட இதையெல்லாம் பற்றிப் பேச முடியும்? வாத்தியார் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கணும் இதையெல்லாம்! இல்லைன்னா, அரசப்பொரசலா தெரிஞ்சுக்க வேண்டியது தான்! நாங்கள்லாம் என்ன சொல்லிக்குடுத்தா வளந்தோம்? வந்துட்டாரு என்னமோ பெருசா! எதுக்கும் ஒரு முறை வேண்டாம்?' என்று பலர் சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன்.
'இணைய வசதிகளும், தேடல்களும் நிறைந்திருக்கும் இந்நாட்களில், இதற்கென்ன அவசியம்? வேணுமின்னா அங்கன போயித் தேடிக்கலாமே!' என்றும் சிலர் சொல்லக்கூடும்! ஒப்புக்கொள்கிறேன்! ஆனால், இணையத்தைப் போன்ற நண்பனும் இல்லை; அதைப் போன்ற விரோதியும் இல்லை என்பதே என் கருத்து! வளர்கின்ற பருவத்தில், எதைக் கொள்வது? எதனை விடுவது? எனத் தெரியாத மனநிலையில், அதில் நல்ல தகவல்களையும், கெட்ட தகவல்களையும், ஒரு சேரப் பெற்று குழம்பும் சிலருக்காகவே இத்தொடர்!
ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, பெரும் பொறுப்பு வந்து விடுகிறது! எங்க அப்பா சொல்லுவார், 'மரம் வெச்சவன் தண்ணி வுடுவாண்டா' என்று. முதலில் சரி, சரி என்று கேட்டுவிட்டு, சற்று வளர்ந்த பின், கல்லூரி அப்ளிகேஷன் போடுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது, அவர் இதைச் சொன்ன போது கேட்டேன், 'உங்களை சொல்றீங்களாப்பா?' என்று. என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், 'இப்பவாவது புரிந்து கொண்டாயே' என்பது போல! நான் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அது! அது போல, குழந்தைகள் வளரும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இத்தொடர் அமையும். பெற்றவர்கள் தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தர முடியும், வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்.
இதனைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.... 
ஆரோக்கியமான முறையில். இதில் சில சமயம் வெளிப்படையான சில உண்மை நிகழ்ச்சிகளையும், கருத்துகளையும் சொல்ல வேண்டி வரும். அதன் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, அல்லது குற்றம் சாட்டுவதோ இல்லை என்னும் டிஸ்கியை இப்பவே போட்டுடறேன்! தொடரின் நோக்கம் திசை திரும்பினாலோ, திருப்பப்பட்டாலோ, உடனே நிறுத்தப்படும்! வாரம் இரு பதிவுகள் வரும்... வரணும்! பார்க்கலாம்... 
எப்படிப் போகுதுன்னு!
முருகனருள் முன்னிற்கும்!
இன்னிக்கு வெறும் முன்னுரை மட்டும்தான்!
அடுத்ததாக....."நான் எங்கேருந்தும்மா வந்தேன்?" -- 3 

Anonymous has left a new comment on your post ""பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3":

விஎஸ்கே ஐயா,
வலது பக்க testisஇல், சிறு கரும் புள்ளியாக ஆரம்பித்து, இரு நாட்களுக்குள் கொஞ்சம் பரவி விட்டது. இப்போது அது சிவப்பும் வெள்ளையும் நிறமாக மாறிவிட்டது. மருத்துவரிடம் கேட்டபோது இது ஹெர்பிஸ் என்றும், உடலுறவு கொள்வதால் பரவும் என்றும் சொன்னார்.(மருத்துவர் எந்தவித சோதனையும் செய்யவில்லை..மேலும் 2 மருத்துவர்களிடமும் கேட்டுவிட்டேன்.. அவர்களும் ஹெர்பிஸாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள், ஆனால் எந்த சோதனையும் செய்யவில்லை)

ஆனால், நான் இதுவரை எந்தவிதத்திலும் யாருடனும் உடலுறவு கொண்டதில்லை..வேறு வகையில் வர வாய்ப்பு இருக்கிறதா?

இதை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?
நான் இன்னும் 2 வருடங்களுக்குத் திருமணம் செய்யப்போவதில்லை. அதற்குப் பின் திருமணம் செய்துகொள்ளலாமா?

இதனால் கொஞ்சம் மனஉளைச்சல் அதிகமாக இருக்கிறது.. இது மிகவும் கவலைப்படவேண்டிய விசயமா?
முடிந்தவரை விரைவில் பதிலளிக்கவும்...
நன்றி...

கேள்விக்கு நன்றி.

அன்புள்ள அனானியாரே!,

இன்னும் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தால், பதிலளிக்க வசதியாய் இருந்திருக்கும். 

1.எப்போது இது வந்தது?
2.எத்தனை நாட்களாக இருக்கிறது?
3.சிகிச்சை ஏதும் தரப்பட்டதா?
4. நீங்கள் பார்த்த மருத்துவர்களில் யாராவது தோல் சம்பந்தப்பட்ட துறை நிபுணரா?
5. உங்களுக்கு இப்போது என்ன வயது?
6. அந்த இடத்தில் அரிப்பு ஏதாவது இருக்கிறதா?

என்றெல்லாமும் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் நீங்கள் சொல்லியிருக்கும் தகவலை வைத்துப் பார்த்தால்,....

உடலுறவு கொள்ளவில்லை என நிச்சயமாகச் சொல்லுவதால், இது ஹெர்பிஸ் வகையைச் சேர்ந்தது இல்லை என நினைக்கிறேன். பெரும்பாலும் [99%] ஜெனிடல் ஹெர்பிஸ் [Genital Herpes] என்பது உடலுறவால் மட்டுமே பரவுவது.

மேலும், இது தென்பட்ட இடம் "Testis" எனச் சொல்லுவதிலிருந்து, விரைப்பையின் மேல்தோலின் மீது [Scrotal sac] எனக் கொள்கிறேன். ஹெர்பிஸ் நோய் அநேகமாக குறியின் [Penis]மீதோ, அதன் தண்டின் [shaft] மீதோதான் பெரும்பாலும் வரும்.

முதலில் கரும்புள்ளிகளாக வந்து, பின் நிறம் மாறியதாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இது "Scrotal Angioma" எனப்படும் ஒரு ரத்தக்குழாய் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன். விரைப்பைத் தோல் மீது, சிறு சிறு ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இவைகள் புடைப்பினால் சிறிய அளவில் ரத்தம் கசிந்து இது போல நிகழக்கூடும். இவை நீங்கள் சொன்னது போலவே நிறமும் மாறும். நடுத்தர வயதுக்காரர்களுக்கு [25 - 35] இது அதிகமாக நிகழும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சருமநோய் மருத்துவரிடம் [Skin Specialist, Dermatologist] இதைக் காட்டி, உறுதிப்படுத்திக் கொண்டு, ஒரு சில களிம்புகளின் [Cream] மூலம் இதைச் சரிப்படுத்த முடியும்.

உடலுறவு கொள்ளவில்லை என்றால் அதிகம் பயப்படத் தேவையில்லை.

வேந்தன் அரசு :

 

கேள்வி: ஐயா கசடு அற,

 

குழாயை துண்டித்து விட்டால் விதையில் பிறக்கும் தலைபிரட்டைகளின கதி என்ன?

 

கசடற: இவை மீண்டும் ரத்தத்தில்[நேரடியாக அல்ல!] கலக்கின்றன. செயலிழந்த நிலையில்.

 

நன்றி... கேள்விக்கு!

 

கேள்வி: வேந்தன் அரசு

நன்றி

 

அறுபடாத குழாய் உள்ளவர்கள் பல நாள் வடிக்காமல் இருந்தால் இதே விளைவு உண்டா?

 

கசடற: இது குறித்து இன்னும் சில விளக்கங்கள்.

 

நம் உடலில் சுரக்கும் உமிழ்நீர், சிறுநீர் போல எப்போதுமே இந்த விந்து சுரப்பதில்லை.

 

இந்தச் சுரப்பியை உணர்வு பெற்று எழச் செய்யும் போது மட்டுமே, இந்த நாளங்கள் உந்தப்பட்டு, மற்ற சில கலவைகளோடு, விந்தணுவும் சேர்ந்து விந்து வெளிப்படுகிறது.

 

உடலுறவின் இறுதியிலோ, அல்லது சுய இன்பம் போன்ற செயல்பாடுகளாலோ, இந்த விந்து வெளிப்படுகிறது.

 

இந்த அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, விந்தணு சுரப்பதில் ஒரு தடையும் இருப்பதில்லை.

 

விந்தோடு கலக்க உதவும், குழாய் துண்டிக்கப்படுவதால், இதன் கலப்பு தடுக்கப்பட்டு, விந்தணு இல்லாத விந்து வெளியேறுகிறது.

 

வெளியேற முடியாத விந்தணு ரத்தத்தோடு கலக்கிறது. 

---------------------------

 

கேள்வி: ஆண்களுக்கு வரும் பால்வினை நோய் எதனால் வருகிறது என்று விளக்கமுடியுமா? அப்படியே அதை எப்படித் தவிர்க்கலாம் என்றும் விளக்குங்களேன்.

 

கசடற: ஆண்களுக்கு, பெண்களுக்கு எனப் பொதுவாக இல்லை எனினும், முக்கிய நோய்கள் அனைத்துமே இருபாலருக்கும் வரக்கூடும் என்றாலும், இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு ஒரு சில முக்கியமான பால்வினை நோய்களை விளக்க முற்படுகிறேன்.

 

ஒரு டஃஜனும் மேற்பட்ட பால்வினை நோய்கள் இருக்கின்றன. இதில், குறிப்பாக ஒரு ஆறு நோய்கள் ஆண்களை வருத்தும். அவைகள் என்னவென்று பார்ப்போம்.

 

ஸிஃபிலிஸ் என்னும் மேகநோய்:

எய்ட்ஸ்/ ஹெச்.ஐ.வி

கொனோரியா என்னும் வெட்டைநோய்

க்ளமிடியா

ஹ்யூமன் பபில்லோ வைரஸ்

ஜெனிடல் ஹெர்பிஸ்

 

இதில் இந்த எய்ட்ஸ்/ ஹெச்.ஐ.வி பற்றி விவரமான பதிவு ஏற்கெனவே போட்டிருக்கிறேன்.

 

மற்ற நோய்களைப் பற்றி ஒரு சுருக்கமான வரைவு.

 

கொனோரியா என்னும் வெட்டைநோய்:

 

சிறுநீர் வழியே ஒரு வெள்ளை நிற திரவம் வடிவது, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலும் இந்நோயின் அறிகுறிகள்.

இது ஆண்மை இழப்புக்கும் வழி வகுக்கும்... சரியான சிகிச்சை எடுக்காவிட்டால்.

இந்நோய் இருப்பவருடன் உடலுறவு கொள்வதால் இது வருகிறது.

 

உடலின் பல பாகங்களை இது பாதிக்கும்.

எலும்பு நோய்[], கண்பார்வை பாதிப்பு போல பல மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பதால் இந்த நோயின் அறிகுறி கண்டவுடனேயே சிகிச்சை எடுப்பது நல்லது.

ஒரு சில எளிய மருந்துகள் மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். கவனம்!

 

"க்ளமைடியா"

 

இந்த நோய் வந்ததின் அறிகுறிகளே தெரியாமல் இருப்பதுதான் இதன் சிறப்பு !

தனக்கு இது வந்ததே தெரியாமல் மற்றவருக்கும் பரப்பப்படும் நோய் இது.

எரிச்சல், விரை வீங்குதல் போன்ற அறிகுறிகள் இதற்கு.

 

ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ்[2]:

 

ஆணுறுப்பில் சில புண்களை உண்டாக்கும் இந்த நோய் கிட்டத்தட்ட ஸிஃபிலிஸ் என்னும் மேகநோய் பொன்ற தோற்றத்தை அளிக்கும்.

மருந்துகள் மூலம் குணமாக்கலாம் இதனை.

 

ஹ்யூமன் பாபில்லோ வைரஸ்:

 

ஆணுறுப்பு, ஆசன வாய், இன்னும் சில இடங்களில் ஒரு சில தழும்புகளை இது ஏற்படுத்தும். ஆண், பெண் இருவருக்கும் இது ஒருவர் மூலம் ஒருவருக்குத் தொற்றும்.

11 முதல் 12 வயதுக்குள் போட்டுக்கொள்ளும் ஊசியினால் இதைத் தவிர்க்க முடியும்.

 

ஸிஃபிலிஸ்:

 

தவிர்க்க முடியாது என்றாலும் குணப்படுத்த்க் கூடிய நோய்தான் இந்தக் கொடிய நோய். இது வந்தவருடன் கலப்பதால் இது வருகிறது.

ஆனால், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், இது ஆளையே இறுதிவரை துன்பப் படுத்தும் என்பதை மனதில் கொண்டு முறைய்யன சிகிச்சை மேஷ்ற்கொள்ள வேண்டும்.

ஆணுறுப்பில் ஒரே ஒரு புண் மட்டும் வந்து சில நாட்களில் மறைந்துவிடும்.

ஆனால், இந்தக் கிருமி உள்ளேயே இருந்துகொண்டு, பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதை மனதில் கொள்ளுங்கள்.

உரிய காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

அசட்டையாய் இருந்து விடாதீர்கள்.

 

கேள்வி: இதை எப்படி தவிர்ப்பது?

 

கசடற: 1. கட்டியவருக்கு உண்மையாய் இருங்கள்! 2. உங்கள் உறவைத் தவிர, மற்றவருடான உடலுறவைத் தவிருங்கள். 3. ஆணுறை உபயோகிங்கள்.

இந்த மூன்று செய்திகளை ஒரு மந்திரமாகப் பயன்படுத்துங்கள்!

உங்கள் வாழ்வு சிறக்கட்டும்.

வாழ்த்துகள்! 

http://kasadara.blogspot.com/ 

 

"நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து. டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும் வெள்ளையாக திர‌வ‌ம் போன்ற ஒன்று வ‌டிகிற‌து வாடையுடன் கடந்த 3 நாட்களாக‌. இதுவ‌ரை உட‌லுற‌வு கொண்ட‌தில்லை. அந்த இட‌த்தில் சிறு புள்ளியாய் கிள்ளியெடுத்த‌து போன்று இரு இட‌ங்க‌ளில் இருக்கிற‌து. என்னவெண்று தெரிய‌வில்லை. வ‌லி ஏதும் இல்லை ஆனால் அரிப்பு உள்ள‌து. இத‌ற்கு தீர்வு என்ன‌? ஆலோச‌‌னைக‌ள் சொல்வீர்க‌ளா? ம‌ருந்துக‌ள் ஏதேனும்??

இத‌னால் மிகுந்த ம‌ன‌ வ‌ருத்த‌த்தில் உள்ளேன். வேலையிலும் ஈடுபாடின்றி இருக்கிறேன். கூடிய விரைவில் த‌ங்க‌ளிட‌மிருந்து இத‌ற்கான ப‌திலை ப‌திவின் மூல‌ம் எதிர்நோக்கியுள்ளேன். நன்றிகள் பல‌"


அன்பு சகோதரி!

நீங்கள் கூறியுள்ள குறைந்த பட்சத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, இது ஒன்றும் பயப்படத்தக்க விஷயம் இல்லை எனவே கருதுகிறேன்.

உடலுறவு ஏதும் இல்லை எனச் சொல்வதால், இது ஒரு பால்வினை நோயாக இருக்க வாய்ப்பில்லை.

அரிப்பு, வாடை கலந்த வெள்ளை நிறத் திரவம் என்கையில் இது ஒரு நோய்தான் எனத் தெரிகிறது!

சாதாரணமாக, பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஒரு வெள்ளை நிறத் திரவம் வரும்

ஆனால், அதில் வாடை இருக்காது.

பாக்டீரியல் வஜைனோஸிஸ் [Bacterial vaginosis], அல்லது க்ளாமைடியா[Chlamydia] கிருமிகளின் தொந்தரவால் பால்வினை[sexullay transmitted diseases] அல்லாத இது போன்ற விளைவுகள் வரலாம்.

அப்போது வாடையுடன் கலந்த வெள்ளை [அ] பழுப்பு நிறத் திரவம் வரலாம்.

அரிப்பும் இருக்கக் கூடும்.

இதற்கு ஃப்லாஜைல்[Flagyl] என்கிற மெட்ரோநிடஸால்[Metronidazole] மாத்திரை மிகுந்த பயனளிக்கும்.

இது க்ரீம் [flagyl cream] வடிவிலும் கிடைக்கும் என்றாலும், ரத்தத்தில் கலந்த கிருமிகளை[bacteria] அழிக்க, மாத்திரை உட்கொள்வதே சிறந்தது.

500 [அ] 750 மில்லிகிராம் மாத்திரைகளை தினம் ஒன்றாக 7 நாட்களுக்கு எடுக்கவும்.

பலனளிக்கும் என நம்புகிறேன்.... நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் உண்மையெனில்!


உபயோகித்தபின் தெரிவியுங்கள்!

Labels: , , 

 

Friday, August 29, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 4

 

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 4

Anonymous has left a new comment on your post ""பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3":

விஎஸ்கே ஐயா,
வலது பக்க testisஇல், சிறு கரும் புள்ளியாக ஆரம்பித்து, இரு நாட்களுக்குள் கொஞ்சம் பரவி விட்டது. இப்போது அது சிவப்பும் வெள்ளையும் நிறமாக மாறிவிட்டது. மருத்துவரிடம் கேட்டபோது இது ஹெர்பிஸ் என்றும், உடலுறவு கொள்வதால் பரவும் என்றும் சொன்னார்.(மருத்துவர் எந்தவித சோதனையும் செய்யவில்லை..மேலும் 2 மருத்துவர்களிடமும் கேட்டுவிட்டேன்.. அவர்களும் ஹெர்பிஸாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள், ஆனால் எந்த சோதனையும் செய்யவில்லை)

ஆனால், நான் இதுவரை எந்தவிதத்திலும் யாருடனும் உடலுறவு கொண்டதில்லை..வேறு வகையில் வர வாய்ப்பு இருக்கிறதா?

இதை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?
நான் இன்னும் 2 வருடங்களுக்குத் திருமணம் செய்யப்போவதில்லை. அதற்குப் பின் திருமணம் செய்துகொள்ளலாமா?

இதனால் கொஞ்சம் மனஉளைச்சல் அதிகமாக இருக்கிறது.. இது மிகவும் கவலைப்படவேண்டிய விசயமா?
முடிந்தவரை விரைவில் பதிலளிக்கவும்...
நன்றி...

கேள்விக்கு நன்றி.

அன்புள்ள அனானியாரே!,

இன்னும் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தால், பதிலளிக்க வசதியாய் இருந்திருக்கும். 

1.எப்போது இது வந்தது?
2.எத்தனை நாட்களாக இருக்கிறது?
3.சிகிச்சை ஏதும் தரப்பட்டதா?
4. நீங்கள் பார்த்த மருத்துவர்களில் யாராவது தோல் சம்பந்தப்பட்ட துறை நிபுணரா?
5. உங்களுக்கு இப்போது என்ன வயது?
6. அந்த இடத்தில் அரிப்பு ஏதாவது இருக்கிறதா?

என்றெல்லாமும் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் நீங்கள் சொல்லியிருக்கும் தகவலை வைத்துப் பார்த்தால்,....

உடலுறவு கொள்ளவில்லை என நிச்சயமாகச் சொல்லுவதால், இது ஹெர்பிஸ் வகையைச் சேர்ந்தது இல்லை என நினைக்கிறேன். பெரும்பாலும் [99%] ஜெனிடல் ஹெர்பிஸ் [Genital Herpes] என்பது உடலுறவால் மட்டுமே பரவுவது.

மேலும், இது தென்பட்ட இடம் "Testis" எனச் சொல்லுவதிலிருந்து, விரைப்பையின் மேல்தோலின் மீது [Scrotal sac] எனக் கொள்கிறேன். ஹெர்பிஸ் நோய் அநேகமாக குறியின் [Penis]மீதோ, அதன் தண்டின் [shaft] மீதோதான் பெரும்பாலும் வரும்.

முதலில் கரும்புள்ளிகளாக வந்து, பின் நிறம் மாறியதாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இது "Scrotal Angioma" எனப்படும் ஒரு ரத்தக்குழாய் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன். விரைப்பைத் தோல் மீது, சிறு சிறு ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இவைகள் புடைப்பினால் சிறிய அளவில் ரத்தம் கசிந்து இது போல நிகழக்கூடும். இவை நீங்கள் சொன்னது போலவே நிறமும் மாறும். நடுத்தர வயதுக்காரர்களுக்கு [25 - 35] இது அதிகமாக நிகழும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சருமநோய் மருத்துவரிடம் [Skin Specialist, Dermatologist] இதைக் காட்டி, உறுதிப்படுத்திக் கொண்டு, ஒரு சில களிம்புகளின் [Cream] மூலம் இதைச் சரிப்படுத்த முடியும்.

உடலுறவு கொள்ளவில்லை என்றால் அதிகம் பயப்படத் தேவையில்லை.
http://kasadara.blogspot.com/

"குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை" [Vasectomy]

சென்ற பதிவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

இதோ அதன் விரிவு.

இதுவும் கேள்வி-பதில் வடிவிலேயே!

கேள்வி: 'வாஸெக்டமி' என்றால் என்ன? இது எப்படி செய்யப்படுகிறது?

கசடற: பொதுவாக 'குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன்' என வழங்கப்படும் இதன் நேரடி மொழிபெயர்ப்பு 'குழாய் அறுப்பு' என்பதே!

விதைப்பைக்குள்[scrotum] இருக்கும் விதைகளில்[testicle] இருந்து சுரக்கும் விந்தணு[sperm] ஒரு குழாய்[vas deferans] மூலமாக.... ஒவ்வொரு விதை[விரை][testicle]யிலிருந்தும் ஒரு குழாய்... இதை எடுத்துச் செல்ல உதவும் விந்துவுடன் கலந்து உடலுறவின் இறுதியில் பெண்ணின் உறுப்புக்குள் பாய்கிறது.

இந்தக் குழாய்கள் துண்டிக்கப்படும் அறுவைச் சிகிச்சையே இந்த 'வாஸெக்டமி'.

இதன் மூலம் ஒரு ஆண் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை மட்டும் இழக்கிறான்...... தன் ஆண்மையை அல்ல!

இது ஒரு எளிய அதிகம் செலவில்லாத சிகிச்சை.

இனிமேல் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யமுடியாது என்ற ஒன்றைத் தவிர, ஒரு ஆணின் செயல்பாட்டில் வேறு எந்தக் குறைபாடும் வருவதில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவில் எந்தவொரு சிரமமும் இல்லாமல் செயல்பட முடியும்... விந்துவும் வெளியேறும்... பெண் கர்ப்பமாவதில்லை... அவ்வளவுதான்!

இது பற்றிய சரியான, முறையான அறிவு இல்லாமல், பெண்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி அவர்களைக் கஷ்டப்படுத்தும் கொடுமை அதிகமாவதை நாமெல்லாம் தவிர்க்கலாமே.

இது ஒரு 30- 45 நிமிஷ வேலை!


விரைப்பையின் ஒரு பக்கத்தில் முதலில் மரத்துப்போகும் ஊசி போடப்பட்டு, ஒரு சிறிய துளை மூலம், இந்தக் குழாய் துண்டிக்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட இருமுனைகளும் தைக்கப்பட்டு, விரைப்பையின் துளையும் தைக்கப்படுகிறது.

இதேபோல், இப்போது, அடுத்த பக்கத்திலும் இது செய்யப்படுகிறது.

இதை கத்தியில்லாமல் செய்யும் முறைகளும் இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.

இதைச் செய்யும்போது ஒரு வலியும் இருக்காது. அடுத்து சில நாட்களுக்கு அந்த இடத்தில் சற்று லேஸான வலி இருக்கலாம்.

கேள்வி: இதனால், எந்தத் தொந்தரவுமே இருக்காதா?

கசடற: இல்லை எனச் சொல்ல முடியாது! எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் வரக்கூடிய கோளாறுகள்[infection] இதிலும் வரலாம்..... கவனமில்லாமல் இருந்தால். சீழ் பிடித்தல், ஜுரம், ரத்தப்போக்கு போன்றவை ஒருசிலருக்கு வரலாம். ஆனால், இதன் சாத்தியக்கூறு இப்போதெல்லாம் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

கேள்வி: இதைச் செய்த எத்தனை நாள் கழித்து ஒருவர் உடலுறவில் ஈடுபடலாம்?

கசடற: 4 வாரங்களுக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடமுடியும் என்றாலும், 8 முதல் 10 வாரம் அல்லது 15 முதல் 20 முறை விந்து வெளிப்படும் வரை, விந்தணு விந்துவில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறு இருப்பதால், மருத்துவ சோதனைகள் மூலம் இது இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே இதன் பயனை உணரமுடியும். அதுவரையில் "தன் செயலாகவோ" [masturbation]அல்லது ஆணுறை[condom] உபயோகித்தோ இதில் ஈடுபடுவது நல்லது.

கேள்வி: எனது செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருக்குமா?

கசடற: குறி விறைப்பு, [erection]செயல்பாடு, [performance]விந்து வெளியேற்றம்[ejaculation] இந்த எதிலும் ஒரு மாற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஏதாவது வந்தால், நண்பர் சுல்தான் சொன்னது போல, செய்துகொண்டவரின் [அறியாமையால் வரும்] மனநிலை மாறுபாடு மட்டுமே இதற்குக் காரணம்.
பொதுவாக, இனி கரு உண்டாகாது என்னும் உணர்வு, ஒரு புதுவித உற்சாகத்தைக் கொடுத்து, பயமில்லாமல், உடலுறவில் ஈடுபட வழி வகுக்கிறது என்றே ஆய்வுகள் சொல்லுகின்றன.

விந்தணு இல்லாமல் செய்கிறது இந்த சிகிச்சை! ஆண்மை இழக்கச் செய்வதில்லை!

ஆண்மைத்தன்மையைக் காட்டுகின்ற தாடி மீசை போன்றவற்றுக்குக் காரணமான சுரப்பிகளும் இந்த விதை[ரை]யில்தான் சுரக்கின்றன. அவற்றுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. விந்துவின் அளவிலும் இதனால் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை... விந்தணுக்களின் சதவிகிதம் 2 முதல் 5 வரையே, மொத்த விந்துவில்!


கேள்வி: இப்படிச் செய்துகொண்டபின் இதை திரும்பவும் பழையபடி மாற்றமுடியுமா?

கசடற: முடியும்! இப்போது இது அதிக அளவிலேயே செய்யமுடிகிறது! ஆனால், இதைச் செய்துகொள்வதால் விந்தணு மீண்டும் வரத் துவங்கும் என்ற உத்திரவாதம் இல்லை! மேலும், இதைச் செய்ய அதிகப் பணம் செலவாகும். கவனம்! கவனம்!


என் இனிய நண்பர் கோவி. கண்ணன் பாலியல் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று, என்னால் முடிந்த அளவில் இங்கு பதிலிறுக்க முயற்சிக்கிறேன். அவருக்கு எனது நன்றி.

இங்கு சொல்லப்படுபவை எல்லாமும், மருத்துவக் குறிப்புகளும், ஆய்வுகளும் சொல்வதை வைத்தே நான் இடுகிறேன் என்பதையும், உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது மிகவும் முக்கியம் என்பதையும் மனதில் கொள்ளவும். இவையெல்லாம் ஒரு தகவலுக்கு மட்டுமே! முடிந்தவரையில், உண்மைக்கு மாறாக எதையும் சொல்லவில்லை என்பதையும் வலியுறுத்துகிறேன்.



கேள்வி -1

டிபிசிடி கேட்ட, விஎஸ்கே ஐயாவிற்கு கேள்வி :

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்தப் பிறகு தேவைப்பட்டால் பின்னாளில் மீள்பெற வழியுண்டா..(இருபாலர்க்கும்)...?

கசடற: இது ஒரு சிக்கலான கேள்வி!
ஏனென்றால் ஆண்களுக்கு செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கும், பெண்களுக்கு செய்யப்படுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

ஆண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை,[vasectomy] விந்தணு [sperm] வரும் குழாயை மட்டும் துண்டிப்பதால் நிகழ்கிறது. இதை அநேகமாக திருத்தி அமைக்க முடியும். ஏனென்றல், இது விரைப்பைக்குள்[scrotum] இருப்பதாலும், இந்தாக் குழாய் நீளம் அதிகம் இல்லாமல் இருப்பதாலும். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு இதை வெற்றிகரமாக திருத்தக் கூடிய முறைகள் இருக்கின்றன.

பெண்கள் விஷயத்தில் இது சற்று சிக்கலானது. கருமுட்டை[ovum] சினையிலையில்[ovaries] உருவாகி, ஒரு குழாய்[fallopian tubes] மூலம் சினைப்பைக்கு[uterus] வருகிறது. இந்தக் குழாய் இருபுறமிருந்தும் [வலது, இடது] வருகிறது. இவை சற்று நீளமான குழாய்கள் என்பதால், அறுவை சிகிச்சை முடிந்தபின், இவை சுருங்கி விடுவதால், மீண்டும் சேர்ப்பது கடினமாகிப் போகிறது. இங்கு 100க்கு 40 சதவிகிதமே பலனளிக்கிறது. அதுவும் உடனே செய்யப்படுபவர்க்கே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
அறுத்துக் கொள்வதைவிட, மீண்டும் இணைப்பதற்கு அதிகச் செலவாகும்..... இரு முறைகளிலும்!





கேள்வி-2
குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் உடலுறவில் ஏதேனும் வித்தியாசம் வர வாய்புள்ளதா..?

கசடற: இங்கு ஆண்களைப் பற்றியே கேட்பதாக நினைக்கிறேன்.
இருந்தாலும், இருபாலர்க்கும் பொதுவாகவே சொல்லுகிறேன்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால், எந்த விதத்திலும்...... ஆமாம்..... எந்த விதத்திலும் உடலுறவு கொள்வதில் வேறுபாடே இருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், இதைச் செய்து கொண்டவரின் மனநிலையைப் பொறுத்து இதில் சில வேறுபாடுகள் நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. 




இனி தன்னால், ஒரு பெண்ணைக் கருவாக்க முடியாது என்பதால், சிலரது மனநிலை தளர்ந்துபோய், குறி விரைப்பிலிருந்து [erection], முழு உறவு கொள்வது வரைக்கும், பல ஆண்கள் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி, உடலுறவில் ஒரு உற்சாகமின்மையைக் கொள்ளுகிறார்களாம்!

பெண்கள் இந்த விஷயத்தில் இன்னமும் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் என ஆய்வு சொல்லுகிறது!



தன்னிடமிருந்து ஒரு பெரிய துருப்புச் சீட்டு.... கருத்தரிப்பு என்ற ஒன்று.... பறிபோனதாகக் குமைந்து அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி, உடலுறவில் ஈடுபாடில்லாமல் போகிறார்கள் என்பது மிகவும் வருந்தத் தக்கது.

இருபாலரும் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனிக் கருத்தரிக்க உதவமுடியாது என்ற ஒன்றைத் தவிர, வேறு எந்த விதத்திலும் இதனால் குறையே இல்லை.

விரும்பிச் செய்து கொண்ட பின்னர், இப்படி மன வருத்தம் கொள்ளாமல், உடலுறவை மகிழ்வோடு, பயமில்லாமல் அனுபவிக்க இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்!

கேள்வி - 3

கிரி :

கோவி.கண்ணன் கூறியபடி பார்த்தால், அவரருடைய நண்பர் விலைமாதிடம் சென்றதால் தான் ஆண்மை குறைவு ஏற்பட்டதா?


கசடற: முழுக்க முழுக்க தவறான கருத்து இது! விலைமாதிடம் செல்வதால், ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பாலியல்நோய் வரவே நிறைய வாய்ப்பிருக்கிறது!



கேள்வி -4
ஆமாம் என்றால். விலைமாதிடம் போவதற்கும் அவருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டதிற்கும் என்ன சம்பந்தம்?

கசடற: ஒரு சம்பந்தமும் இல்லை!



கேள்வி -5
இல்லை அவருக்கு முன்பே ஆண்மை குறைவு இருந்ததா?


கசடற: எனக்குத் தெரியாது! அப்படி இருந்திருந்தால், எப்படி அடிக்கடி அவரால் அங்கு செல்ல முடிந்தது?!!

கேள்வி -6

அனானி : மருத்துவர் வீஎஸ்கே ஐயா,

கோவி.கண்ணன் பதிவில், யரோ ஒரு நண்பர் 'ஆண்கள் குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு பின் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு காற்றுதான் வரும் என்று சொன்னதாகவும், அதைக் கேட்டு சிரித்ததாகவும் சொல்லி இருக்கிறார். அதற்கு பதிலை அவர் சொல்லவில்லை. தாங்கள் ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பற்றி விளக்க முடியுமா ?

கசடற: சுருக்கமாகச் சொல்லுகிறேன் இங்கு. ஏனென்றால், இதைப் பற்றி விரிவாக எனது அடுத்த பதிவு வரும்.

ஆண்களுக்குச் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மூலம், கருத்தரிக்கச் செய்யும் விந்தணுக்கள்[sperms] உற்பத்தி ஆகும் குழாய்[vas deferans].... இது விரைப்பைக்குள் இருக்கும் விரைவிதைகளில்[testicles in the scrotum] இருந்து துவங்குகிகிறது....... மட்டும் துண்டிக்கப்பட்டு, உடலுறவின் இறுதியில் வெளியாகும் விந்துவுடன் கலக்காமல் இருக்கச் செய்யப் படுகிறது.

இதன் மூலம், விந்தணு கலக்காத விந்து நீர்[semen] மட்டுமே இறுதியில் பாய்கிறது.
எனவே, காற்று மட்டுமே வரும் என்பதெல்லாம் யாரோ விட்ட புருடா! நம்பாதீங்க!

ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எப்படி செய்யப் படுகிறது என்பதை விரிவாக விளக்கி பதிவிடுகிறேன்.


http://kasadara.blogspot.com/

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?


இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.

உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.

ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.

இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.

காரணம் என்ன?

1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.

a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.

b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.

c.புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.

d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.

e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.

2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.

3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.

மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.

உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?

பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?

உளம் சார்ந்ததின் அறிகுறிகள்

a.திடீரெனத் தோன்றுவது,

b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,

c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.

d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.

e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே

உடல் சார்ந்ததின் அறிகுறிகள்

a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.

b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.

c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.

d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.

e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.


மருத்துவ ஆலோசனை

மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.

குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.

சிகிச்சை

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.

புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.

உளவளத் துணை பலருக்கு உதவி செய்யும்.

மருந்துகளைப் பொறுத்த வரையில் phospho diesterase type 5 inhibitors (PDE5 inhibitors) என்ற வகை மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
70சதவிகிதமானவர்களுக்கு இவை நல்ல பலனைக் கொடுக்கின்றன.

ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.

நெஞ்சு வலிக்கு ரைனைற்றேட் (Trinitrate) உபயோகிப்பவர்கள் அதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடாது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்.

இவற்றில் மூன்று வகையான மாத்திரைகள் இப்பொழுது கிடைக்கின்றன.

அவையாவன
1.Sildenafil

2.Vardenafil

3.Tadalafil

இவை பொதுவாக உடலுறவிற்கு சற்று நேரம் முன்பாக எடுக்க வேண்டிய மாத்திரைகளாகும். வேறுபட்ட நேரத்திற்கு பயன் தரும்.
சில்டெனபில் என்பது வயக்ரா என்ற பெயரில் முதல் முதலாக அறிமுகமாகி மிகவும் பெயர் பெற்றதாகும்.
ஏனையவை அதற்கு பிந்திய மருந்துகள்.

சில்டெனபில்

உடலுறவிற்கு 60 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.

வார்டெனபில்

இது உடலுறவிற்கு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.

ரடலபில்

இது உடலுறவிற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 12 மணிநேரம் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.

பக்க விளைவுகள்

இம் மருந்துகள் சிலருக்கு நெஞ்செரிப்பு, வயிற்றுப் பிரட்டு, வாந்தி, தலையிடி, தலைப்பாரம், தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.

ஏனைய சிகிச்சைகள்

டெஸ்டஸ்ரரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை மாத்திரைகளாகவோ, ஊசியாகவோ கொடுப்பதுண்டு.
வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.
இவை எதனையும் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி 07.12.2008
http://hainallama.blogspot.com/2008/12/blog-post.html

64 கலைகளைப் பொறுத்தவரையில் பாலியல் உணர்ச்சிகளை, உறங்கிக் கிடக்கும் செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு கோவில் சிலைகளில் பாலியல் உறவு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் கற்பனைக்கும் மீறிய ஒரு ஆபாசம் இருக்கும். இப்படியெல்லாம் பண்பாட்டில் மீறிய உறவு உண்டா என்றுகூட நமக்கு தோன்றும். 

ஒரு புதுமண தம்பதிகள் காமசூத்ரா சிலைகளை பார்க்கும்போது அவர்களையும் மீறி அவர்களது உடலில் மின்சாரம் போன்ற ஷாக் அல்லது அதிர்வு. அதுதான் பாலியல் உறவில் தயக்கம் என்ற திரை விலகி படுக்கை அறை உறவுக்கு கைட். ஐ திங்க்.... பிராக்டிகல் லைப்புல செக்ஸ் போட்டோலேஷன்ஷிப் வெச்சுக்கிறதில் எத்தனையோ டென்ஷன்ஸ். அதையும் அவாய்ட் பண்ணிட்டு உறவில் ஈடுபடும்போது இருவரது மனதும் ஹேப்பியாக இருக்கும் தம்பதிகள் மிகக் குறைவு. 64 கலைகள் பிராக்டிகளைப் பற்றி பின்னால் விரிவாக சொல்கிறேன். 
ஃபோர்ஸ் செக்ஸ் ஆக்ஷன்

பொதுவாக ஆண் வர்க்கம் பெண்ணின் உணர்ச்சிகளை மனநிலையை மதிக்காமல், போட்டோந்துக் கொள்ளாமல் ஒரு செல்ஃபிஷ் செக்ஸ் உறவில் ஈடுபடுவதுதான் பெண் இனத்தின் குமுறல்கள். அதற்காக எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டவில்லை. அது அவர்களது குற்றமா? இயற்கையின் படைப்பில் நிகழந்ததாக இருந்தாலும், ஆண்களுக்கு போட்டோய வைப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். பெரும்பாலும் முதலிரவில் தான் ஃபோர்ஸ் செக்ஸில் பெண்கள் வாழ்க்கையே வெறுத்து விடுகிறார்கள். மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளம்பெண்கள் அன்றைய தின முதலிரவில் இதயம் படபடக்க.... பயம் கலந்த வெட்கம், கூச்சம் இத்தனையும் சுமந்து கொண்டு எக்ஸாமினேஷனுக்கு போகும் ஸ்டூடண்ட் போல் நுழைவார்கள். அங்கே மணமகனோ பாய்ந்து கடித்து ஒருவழி பண்ணியாக வேண்டுமென்ற துடிப்போடு காத்திருப்பான். மண வாழ்க்கையின் முதல் தாம்பத்ய உறவு என்பது பலருக்கு வேதனை, சிலருக்கு இன்பம். ஒரு பழமொழியை ஆண்கள் சொல்வார்கள். பர்ஸ்ட் கிஸ் ஆஃப் தி லேடி. லாஸ்ட் சிப் ஆஃப் தி சிகரெட் என்று ஒரு குஷியோடு சொல்வாங்க. அதே மாதிரி முதல் முத்தத்தையும், முதல் காதலையும் மறக்க முடியாது மகளே என்று ஒரு சினி சாங் கூட உண்டு. ஸோ ஒரு பெண்-ஆண் வாழ்க்கையில் முதல் இரவு வாழ்க்கையில் ஏற்படும் உறவு தான் மணவாழ்க்கையின் முதல் முடிச்சு. 

 

நமக்கு பசி எடுத்துவிட்டால், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட சூடானஉணவை மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது போல தான் செக்ஸ் அப்ரோச்சும். பெண் என்பவள் மலருக்கு சமம். தேனை குடிக்க வரும் வண்டு மலரை காயப்படுத்தாமல் அமர்ந்து தான் தேனை உறிஞ்சிவிட்டு பறக்கும். முன்பின் தெரியாத ஆணும், பெண்ணும் தனித்துவிடப்பட்ட அறையில் சூடேறிய உணர்ச்சிகளுடன் விடப்படும் போது இறுக்கம் அதாவது பெண்ணின் டென்ஷனை போக்க மனம்விட்டு பேச வேண்டும். அதற்காக மூட் அவுட் ஆகக்கூடிய பிளாஷ் பேக் லவ் அல்லது பேமிலி பிராப்ளத்தை பற்றி பேசிவிட்டு ஒரு பக்கம் மணப்பெண் கண்ணை கசக்க மறுபக்கம் அவர் தம் அடிக்கும் நிலையை அவாய்ட் பண்ணனும். மென்மையான பேச்சு, டச்சிங் மூலம் உணர்ச்சிகளை தூண்டி அன்பு, பாசத்துக்கு பேசிக் டச் கொடுத்துவிட்டு பின்பு அப்ரோச் பண்ணினால் அந்த பெண்மையானது ஆணின் தாகத்தையும் தீர்த்துவிட்டு, தனக்குள் ஒரு சந்தோஷத்தை ஈர்த்துக் கொள்ளும். இந்த பேசிக் பிரின்சிப்பிளில் இருந்து ரூட் மாறினால்.......அதுதான் இதைப்படிக்கும் பலபேருக்கு அவர்களது எக்ஸ்பீரியன்ஸ் ஒரு லெசன் கொடுத்திருக்குமே! ஃபோர்ஸ் செக்ஸ் சம்பவத்தை சொல்கிறேன். ஃபோர்ஸ் செக்ஸ§ல காயப்பட்ட 23 வயது கோகிலாவுக்கு ஏற்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் கொஞ்சம் வித்தியாசம். பி.எஸ்.சி. முடிச்சவுடனே அவருக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணினாங்க. பேங்க்ல வொர்க் பண்ணும் மனோகர் நல்ல ஸ்மார்ட். மனோகரின் பர்சனாலிட்டி கோகிலாவுக்கு பிடித்தது. அப்புறம் மேரேஜ் ஆனது.

 

அன்றைக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிந்தது. மறுநாள் கோகிலா முகத்தல ஒரே நகம்பட்ட கீறல், உதட்டில் ரத்தம். ஓவென்று அழ ஆரம்பிச்சிட்டா..... எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம். என்னை விட்டுடுங்க.... அவர் இம்பொடன்ட். என் உடம்பு முழுவதும் கடிச்சு குதறிட்டார்ன்னு கத்திக் கொண்டே அழுதாள். உடனே கோகிலாவின் அப்பா மாப்பிள்ளை மனோகரை அடிக்கவே போயிட்டார். உன்னை டாக்டர்கிட்ட செக்கப் பண்ணனும், வாடா.... என்று ரொம்பவே பேசிட்டார். புதுமாப்பிள்ளை மனோகரனுக்கு ரொம்ப அவமானமா போச்சு. அவர் கோபித்துக் கொண்டு போய் விட்டார்.

 

கோகிலாவிடம் நடந்த உண்மையை கேட்ட பின்புதான் மனோகரனின் வீக்னெஸ் போட்டோஞ்சுது. ஒவ்வொரு ஆண் மனதில் கற்பனை கலந்த செக்ஸ் இருக்கும். அதுமாதிரி, கோகிலா அறைக்குள் நுழைந்ததுமே, அவளை பேச விடவில்லை. உதட்டை கடித்து காயப்படுத்தி, கோகிலாவை துடிதுடிக்க வைத்து உடம்பு முழுவதும் அல்சேஷன் டாக் போல ஏகப்பட்ட கடிகள். ஆனால், செக்ஸ் உறவுக்கு மனோகர் அப்ரோச் பண்ணவில்லை. அதுதான் கோகிலாவுக்கு சந்தேத்தை எற்படுத்தியது.

 

கோகிலாவுக்கு மூன்று மாதங்கள் டிரீட்மென்ட் கொடுத்து மனோகரின் கடி காயங்ளை ஆற வைத்தனர். அப்புறம் மனோகரனை அழைத்து கவுன்சிலிங்குல ஒரு பெரிய லெசன் கொடுத்தோம். அவருடைய சிறு வயதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு. அதாவது அவங்க பேரண்ட்ஸ் சண்டை போடுவதை பார்த்து பார்த்து ஒரு டேஞ்ஜரான இன்ஸ்பிரேஷன் அவர் மனசுல பதிந்திருந்தது. அது செக்ஸ் ஆக்ஷன்ல போட்டோஃப்லெக்ட் ஆகிவிட்டது. உங்க வொய்ஃப்பை சாப்டாக அப்ரோச் பண்ணனும். செக்ஸ் ஆக்ஷன்ல உங்க லைப் பார்ட்னரோட உணர்ச்சியை போட்டோந்து கொள்ளனும்னு அட்வைஸ் சொன்ன பின்பு மனோகர் போட்டோலாக்ஸ் ஆனார். இப்போ அவங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு. 

 

செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட போட்டோசல்ட். தலைமுறை இடைவெளியில் செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு அவெயர்நெஸ் ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்ற ஆக்ஷனில் இறங்கியிருப்பது வெல்கம். முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மகன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிடம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின்பே வெளியே வருவான். அதுவும் ஒரு இயந்திரத்தனமான செக்ஸ் போட்டோலேஷன்தான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி உறவு இருந்தது. 

 

எனக்கு தெரிந்த ஒரு வயதான அம்மாவுக்கு எண்பது வயசு இருக்கும். அவங்களோட முந்தைய தலைமுறை உறவுகளை பற்றி கேட்டவுடன், அவங்களுக்கு கோபம் வந்திடுச்சு. என்னாடீ..... இதையெல்லாம் வெளியே பேசுவதே அபத்தம்டி. தெய்வ குத்தம்னு சொன்னங்க. அந்தளவுக்கு செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்பை கலாச்சார பண்பாட்டு கட்டடுப்பாட்டுக்குள் வெச்சிருக்காங்க.

 
அப்புறம், ஒரு ஆராய்ச்சிக்காக கேட்கிறேன் என்று சொன்னதும் தான் ஒப்பனா சொன்னாங்க. முந்தைய தலைமுறையில் பகலில் செக்ஸ் உறவுக்கு தடை. இரவில் விளக்கு வெளிச்சம் துளி கூட இல்லாமல் செக்ஸ் அப்ரோச். அதில்

 

பெண்ணின் உணர்ச்சிகளை ஓப்பனாக காட்டினால் குற்றம். 

 

எங்க சுகத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவங்க ஆசைய மட்டும் தீர்த்துட்டு போயிடுவாங்க. இப்போ, டி.வி. சினிமாவுல இப்படி காட்டுறாளே அந்த மாதிரி தடவல், தழுவல்களை பண்ணமாட்டாங்க. எப்படியோ ஆறு குழந்தைகளையும் படிக்க வெச்சு இப்போ பேரன் பேத்தி எடுத்தாச்சுன்னு சொன்னாங்க. முந்தைய தலைமுறையில பரஸ்பர செக்ஸ். அதாவது செக்ஸ் ஆக்ஷன் அப்ரோச்சுல சம போட்டோமை என்பது கிடையாது. இன்றைய ஜெனரேஷனில் சம போட்டோமை இருந்தாலும் ராங் அப்ரோச் ரொம்பவே அதிகமாகிவிட்டது. 

 

ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரேயடியாக குறை சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்தங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்கலாம் அல்லவா? 

 

ச்சீ..... வெட்கமாக இருக்குப்பா....... என்று சொல்வது நாணம். என்ன.... விளையாடுறீங்களா? நீங்க சொல்றபடி என்னால ஒத்துப் போக முடியாது என்று ஆண்களை விரட்டினால் என்ன ஆகும்? 

 

பாலியல் சுகம் தரும் விலை மாதரை தேடி போவான். அப்புறம்..... எய்ட்ஸ்.....எய்ட்ஸ்...

 

டாக்டர். ஷர்மிளா

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.

 

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

 

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

 

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.

 

இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

 

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

 

முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

 

பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

 

http://sirippu.wordpress.com/2008/05/12/sexy_dress_impotent/

முன்பெல்லாம் நீரிழிவு (சருக்கரை) நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை இள வயதினரையும் இந்த நோய்க்குள் அமிழ்த்தியிருக்கிறது.

 

உலகெங்கும் இன்று பல கோடிக்கணக்கான இளைஞர்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் அவஸ்தைகளில் இப்போது குழந்தையின்மை அச்சமும் புகுந்து கொண்டிருக்கிறது.

 

நீரிழிவு நோயாளிகளின் உயிரணுக்கள் வீரியம் இழந்ததாக இருக்கின்றன எனவும் இதனால் இவர்கள் குழந்தையில்லா நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

இந்த அதிர்ச்சியூட்டும் தகவலின் வீரியத்தை அதிகரிக்கும் விதமாக கருத்தரித்தாலும் மனைவியருக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என அவர்கள் அச்சமூட்டுகின்றனர்.

 

வாழ்க்கைச் சூழல் இளைஞர்களை ஆரோக்கியமற்ற உணவுகளுக்கும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கும் தள்ளி விட்டது. எனவே இளைஞர்கள் போதிய உடற்பயிற்சி இல்லாமலும், ஆரோக்கியமான பழக்கங்கள் இல்லாமலும் அதிக எடை உட்பட பல்வேறு உடல் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இவையெல்லாம் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு முக்கியமான காரணிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் என்னும் தவறான சிந்தனைகளை இந்த ஆராய்ச்சி அழித்திருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் வர ஆண்களை எச்சரித்திருக்கிறது.

 

http://sirippu.wordpress.com/2008/07/11/for_guys/

கேள்வி : “பாலியல் கல்வி தேவையா?”
பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை”

இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது.

 

பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது.

 

பாலியல் கல்வி என்பது வாத்சாயனாரின் காமசாஸ்திரத்தை விலாவரியாகக் கற்றுக் கொடுக்கும் விஷயம் போலிருக்கிறது என்றே தான் பெரும்பாலானவர்கள் கருதிக் கொள்கின்றனர்.

 

இதற்குக் காரணம் பாலியல் என்பதே உடலுறவு என்பது மட்டும் தான் என்னும் சிந்தனை நமக்குள் நுழைக்கப்பட்டது தான்.

 

பாலியல் கல்வியை பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிப்பதை விட தொலைக்காட்சி வழியாகக் கற்றுக் கொடுக்கலாம். அப்போது தான் பெற்றோரும் கூடவே இருந்து குழந்தை சரியாக கற்றுக் கொள்கிறதா, தேவையானவை மட்டும் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்பதை கவனிக்க முடியும்.

 

மேற்குறிப்பிட்ட தத்துவத்தை உதிர்த்தது நானல்ல, ஒரு பிரபல வார இதழின் “தலையங்கம்” ! பள்ளிக்கூடத்தில் குழந்தை பாடமாகக் கற்பதை விட வீட்டில் அமர்ந்து படிப்பதே சிறந்ததாம்.

 

அப்படியெனில் ஒவ்வொரு குழந்தையின் வயது வாரியாக, வகுப்பு வாரியாக பாடங்கள் எடுப்பது எப்படி என்பதும், கற்றுக் கொள்ளவேண்டிய மாணவர்களை விட்டு விட்டு குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

 

மட்டுமன்றி “தேவையானது” என்பதை ஒவ்வொரு பெற்றோரும் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 

ஆசிரியர்களிடம் சங்கோஜப்படும் குழந்தைகள், பெற்றோர் முன்னிலையில் சகஜமாக கற்றுக் கொள்ளும் என்பதையும் ஏற்றுக் கொள்வதற்கில்லை.

 

இந்தியாவில் நிகழும் பாலியல் கொடுமைகளை தினம் தோறும் பத்திரிகைகளில் வாசித்தும், எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் கொண்ட நாடு எனும் பட்டியலில் இடம்பெற்றும், 80 விழுக்காடு குழந்தைகள் குடும்ப உறவினர்களால் ஏதோ ஒருவகையான பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள் என்னும் புள்ளி விவரங்களைத் தெரிந்திருந்தும் பாலியல் கல்வியை மக்கள் எதிர்ப்பது வியப்புக்குரியதாய் இருக்கிறது.

 

பாலியல் கல்வி என்ன என்பதையும் பாலியல் கல்வியில் இடம்பெறப்போகும் பாட திட்டங்கள் என்ன என்பதையும் முடிவு செய்து அரசு பெற்றோருக்குத் தெரியப்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள முடியும்.

 

இரண்டாவதாக, மேலை நாட்டு பாலியல் கல்வி முறையிலிருந்து வேறுபட்டு நமது பாலியல் கல்வி முறை இருத்தல் நலம். மேலை நாடுகளில் சொல்லப்படும் “திருமணத்திற்கு முன்பான பாதுகாப்பான உடலுறவு” போன்றவற்றையும், கருவுறாமல் இருக்க செய்ய வேண்டியவை பற்றியும், உடலுறவு வகைகள் பற்றியும் சொல்லாமல் இருக்கலாம்.

 

அதற்குப் பதிலலக திருமணத்திற்கு முன்பான உடலுறவு தீமையானது என்பதையும், நமது கலாச்சாரம் குறித்தும், குடும்ப உறவுகளின் தேவை குறித்தும் விளக்கலாம்.

 

பால்வினை நோய்கள், அதுகுறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருத்தல் மிக மிக அவசியம். மேலும் வாழ்க்கை முறை பாலியல் வளர்ச்சியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை விளக்குதல் அவசியம். இதன் மூலம் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை மாணவர்கள் விலக்கும் வாய்ப்பு உண்டு.

 

மிக மிக முக்கியமாக பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவான வரையறையும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.

 

அமெரிக்காவிலேயே பாலியல் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் நிறைய பாடங்களை சொல்லாமல் விட்டு விடுவதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கு அதில் போதிய பயிற்சி இல்லாமல் இருப்பதும், சொல்வதற்கு தயங்குவதுமே காரணம் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

 

பாலியல் கல்வி தேவையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் சரியான அணுகுமுறையுடனும், தெளிவான பார்வையுடனும், உறுதியான வரைமுறையுடனும் அதை அரசு செயலாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

 

http://sirippu.wordpress.com/2008/02/12/sexeducation/