Language Selection

சிறுவர் பாடல்கள்

கருங்குருவி வீட்டில்
ஒரு கலியாணம் நடந்ததாம்

காட்டில் உள்ள பறவையெல்லாம்
கலந்து வேலை செய்திற்றாம்

ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி
ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்

இரண்டுக் குயில் பறந்து வந்து
இனிமையாகப் பாடிற்றாம்

மூன்று மயில் நடந்து வந்து
முனைந்தழகாய் ஆடிற்றாம்

நான்கு அன்னம் நடந்து வந்து
நாட்டியங்கள் செய்திற்றாம்

ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை
அலங்கரிக்கச் சென்றதாம்

ஆறு புறா கூடிப்பிள்ளை
அழகுச்செய்ய போயிற்றாம்

ஏழு மைனா கூடிக்கொண்டு
விருந்தினரை அழைத்ததாம்

எட்டுக் காடை கூடிக்கொண்டு
கொட்டுமேளம் கொட்டிற்றாம்

ஒன்பது காக்கை கூடிக்கொண்டு
உறவினரை அழைத்தாம்

பத்து கொக்கு பறந்து வந்து
பந்தல் வேலை பார்ததாம்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/31.html

சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)

காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)

எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)

மஞ்சுளாசுந்தர்.
முத்தமிழ் மன்றம்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/32.html

சின்னச் சின்ன நாய்க்குட்டி
தூய வெள்ளை நாய்க்குட்டி

பஞ்சுப் பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி

சின்னச் சின்னக் குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி

உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளுமே!

துள்ளித் துள்ளி ஓடுவாய்
உன்னை அள்ளி அள்ளித் தூக்கலாம்

வாசலிலே மற்றவர் வந்து
நின்றால் போதுமே!
சிங்க கர்ஜனை செய்வாயே!

சிறுவர் விரும்பும் நாய்க்குட்டி
பாலும் ரொட்டியும் பாந்தமாய்
தந்து விட்டால் போதுமே!

வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/33.html

குட்டி குட்டி பாப்பா
குண்டு கன்னம் பாப்பா
தத்தி தத்தி நடந்திடும்
கட்டித் தங்க பாப்பா

கண்கள் உருட்டி மிரட்டுவாள்
வாய் பொத்தி சிரிக்கும் பாப்பா
சுட்டித்தனம் செய்திடும்
எங்கள் சக்தி பாப்பா

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/34.html

அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்

கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/35.html

“வட்ட நிலா சுற்றிச்சுற்றி
வானில் ஒடுது

வா வென்றே நானழைத்தால்
வர மறுக்குது!

எட்டி எட்டிப் பார்த்தாலுமே
எட்டப் போகுது

ஏனென்று கேட்டால் அது
சிரித்து மழுப்புது"

-- முத்தமிழ் மன்றம்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/36.html

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்ல சொல்லித்தா!

பறந்து திரியும் காக்கா வா
பகுதுண்ணும் பழக்கம் சொல்லித்தா!

பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா

தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா

கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!

தாவித் திரியும் அணிலே வா
சுவையான பழம் பறிக்கச் சொல்லித்தா!

குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழும் வழி சொல்லித்தா!

கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழிலில் பேச சொல்லித்தா!

வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்கும் கலையை சொல்லித்தா!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/37.html

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல

மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்

புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்

மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.

பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.

பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.

அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.

பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.

எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/38.html

மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க,

முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையுங்க,

சும்மா வரும் மாப்பிள்ளைக்கு
சூடு வையுங்க.

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/39.html

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கே துள்ளி குதிக்குது கன்னுக்குட்டி
அம்மா என்றழைக்குது கன்னுக்குட்டி
நாவால் நக்கி கொடுக்குது வெள்ளைப்பசு

 

பத்மா அர்விந்த்

பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்

பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்

மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/40.html

பூனைக்குட்டி பூனைக்குட்டி
கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன்
கூட வராதே

பாலைக் குடித்து ஆட்டம் போடு
கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு
கூட வராதே

கோபப் பார்வை பார்க்க வேண்டாம்
கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன்
கூட வராதே

பள்ளிக்கூடம் போகின்றேன்
கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார்
கூட வராதே!

***பாவண்ணன்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/41.html

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/42.html

எலியே எலியே கதை கேளாய்!
வீட்டெலியே கதை கேளாய்!!

பூனையொன்று சுத்துது!
பசியால் பதறிக் கத்துது!!

உன்னைக் கண்டால் கவ்வுமே!
கவ்விப் பிடித்துத் திண்ணுமே!!

ஓடி வலைக்குள் ஒளிந்து விடு!
பூனைக் கண்ணில் மறைந்துவிடு!!

வீட்டில் உணவைத் திண்ணாதே!
உனக்கு வைத்த விஷம்மதுதான்!!

எலிப் பொறிக்குள் போகாதே!
நீ சாகப்போகும் இடம்மதுதான்!!

கவனமாக இருந்து விடு!
பல்லாண்டு வாழ்ந்து விடு!!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/43.html

தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்

எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!

கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்

எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/44.html

மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது

கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது

இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது

மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே

கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்

ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே

ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே

நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/45.html

டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது

அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது

பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது

அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது

டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/46.html

பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு

கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!

குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு

பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!

எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு

இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!

கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு

கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!

பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது

சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!

பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்

சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/47.html












ஆனை ஆனை
அழகர் ஆனை

அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை

கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை

காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை

குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்

பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!

http://siruvarpaadal.blogspot.com/

 சின்ன சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே !

உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !

ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !

நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே !