Language Selection

சமையல்கலை

 

தேவையானப் பொருட்கள்.

அரிசி மாவு - 1 கப்
ரவா - 1/2 கப்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவைக்கேற்றவாறு

 

செய்முறை.

தக்காளியை பெரிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு, ரவா, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காயவைத்து, ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக பரப்பவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையை சுற்றி ஊற்றி நன்றாக வேகவிடவும். ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு மறு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.

 

குறிப்பு.

சாதாரண தோசை மாவிலும் இதை செய்யலாம். ஒரு கப் மாவிற்கு ஒரு தக்காளியை அரைத்து, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள் சேர்த்து செய்யவும்.

 

 http://kadakam.wordpress.com/

 

தேவையானப் பொருட்கள்.

அரிசி - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 2 கப்
நெய் - 1/4 கப்
முந்திரிப்பருப்பு - 5
காய்ந்த திராட்சை - 5
ஏலக்காய் - 4

 

செய்முறை.

 

அரிசியை நன்றாகக் கழுவி அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு, மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

 

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் கீழே இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

 

குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அதில் வெல்லப் பாகை விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெய்யை சேர்த்து மீண்டும் கிளறவும். சாதமும் பாகும் நன்றாகக் கலந்தபின், முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.

http://kadakam.wordpress.com/

 

தேவையானப் பொருட்கள்.

உருளைக்கிழங்கு -‍ 3
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -‍ 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய் ‍- 3 அல்லது 4
இஞ்சி ‍- ஒரு சிறு துண்டு
பூண்டு ‍- 4 அல்லது 5 பல்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -‍ 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப‌

 

செய்முறை.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடான பின் அதில் சீரகத்தைப் போடவும். சீரகம் பொரிந்தவுடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் உருளைக்கிழ‌ங்கு துண்டங்களைப் போட்டு, அத்துடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறி, மூடி வைத்து சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வேகவிடவும்.

 

இது அதிக காரமில்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது.

மேலும், இதை Baby potato என்று அழைக்கப்படும் சிறிய உருளைக்கிழங்கை வேகவைத்து, முழுதாக அப்படியே சேர்த்து செய்தால், பார்க்க அழகாகவும் இருக்கும்.

http://kadakam.wordpress.com/

 


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி மாவை, வெறும் வாணலியில் போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

2 கப் தண்ணீரில் உப்பைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.

வறுத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, அதில் கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டிக்காம்பால் கிளறி விடவும். மாவு சிறிது ஆறியதும், கைகளால் நன்றாகப் பிசைந்து, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி, சற்று அழுத்தி விடவும். எல்லா மாவையும் இப்படியே செய்து முடிக்கவும். இதை, எண்ணை தடிவிய இட்லித் தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து, ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: புட்டு மாவில் இந்தக் கொழுக்கட்டையை, சுலபமாகச் செய்யலாம். புட்டு மாவில் உப்பைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீரைத் தெளித்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் போட்டுக் கலந்துக் கிளறி, கொழுக்கட்டைப் பிடித்து வேகவைக்கலாம்.

நான் சிவப்பரிசி புட்டு மாவில் கொழுக்கட்டைச் செய்துள்ளேன். சுவையும், சத்தும் இதில் சற்று அதிகம்தான்.

 

http://adupankarai.kamalascorner.com/2008/09/blog-post_13.html

 


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
வெல்லம் பொடி செய்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசி மாவை, வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், கீழே இறக்கி, அதை வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் கொதிக்க விடவும். வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கிளறவும். பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதை கீழே இறக்கி வைத்து ஆறவிடவும். மாவு சற்று ஆறியவுடன், கைகளில் சிறிது நெய்யைத்தடவிக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி சற்று விரல்களால் அழுத்தி, கொழுக்கட்டைப் பிடிக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லித் தட்டில் அடுக்கி, இட்லிப்பானையில் வைத்து, ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

 

http://adupankarai.kamalascorner.com/2008/09/blog-post_2599.html

முதல் தடவையா வீட்டுக்கு வரவங்களுக்கு இனிப்பு கொடுக்கனும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க. அதனால முதல்ல அவல் பாயசம்.



முதல்ல தேவையானதெல்லாம் எடுத்துக்கனும்





அவல் - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

பால் - 1 கப்

நெய்

முந்திரி

திராட்சை





அரைக்க : தேங்காய் , ஏலக்காய்






     

  • முந்திரி & திராட்சையை நெய் விட்டு நல்லா வறுத்து எடுத்து தனியா வைக்கனும்
  • இன்னும் கொஞ்சம் நெய் விட்டு அவலை சிவக்க வறுக்கனும்.
  • பிறகு பால் சேர்த்து வேக வைக்கனும்.( தண்ணீர் வேண்டுமானால் சேர்க்கலாம்.
  • நன்றாக வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன், அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வறுத்த முந்திரி & திராட்சை சேர்க்க வேண்டும்.

 

 

 

பாயசம் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பால் சேர்க்கலாம்.

 

http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post.html

வேக வைக்க
துவரம் பருப்பு - 1 கப்

வறுத்து அரைக்க
வர மிளகாய் - 8
மல்லி - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மேசைக்கரண்டி(optional)
நன்கு வறுத்து சிறிது நீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

மற்றவை :
காய் : முருங்கை, வெள்ளைப்பூசணி, கேரட் (அல்லது விருப்பம்போல்)
ஒரே அளவாக நறுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயம் - 1 அல்லது சிறிய வெங்காயம் - 15

தக்காளி - 1 நறுக்கி வைக்கவும்


புளிக்கரைசல் , வெல்லம்

 

தாளிக்க :

கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, நெய் (optional)

 

  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் , உப்பு மற்றும் அரைத்த மசாலாவில் பாதி சேர்த்து வேக விடவும்.
  • காய் நன்கு வெந்ததும், வேக வைத்த பருப்பு, புளிக்கரைசல், மீதி உள்ள மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
  • தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து சாம்பார் உடன் சேர்க்கவும்.

கொத்தமல்லி இலை சேர்க்கவும்.


 


இட்லி, தோசை மற்றும் பொங்கல் உடன் சேர்த்து சாப்பிடலாம்

 

http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_08.html

தேவையானவை:






தயிர் - 1 கப்

கேரட் 1/2 கப்

அரைக்க :
தேங்காய் - 1/2 கப்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

தாளிக்க :

எண்ணெய்

கடுகு

கறிவேப்பிலை

செய்முறை:

 



  • கேரட்டை துறுவி வைக்கவும்

  • அரைக்க வேண்டியவற்றை விழுதாக அரைக்கவும்

  • அரைத்த விழுது, தயிர், கேரட் மற்றும் உப்பு கலந்து வைக்கவும்

  • தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கலந்து வைத்த குழம்பில் கலக்கவும்.

 


ஈசி் தயிர் குழம்பு ரெடி.

சாதம், பருப்பு உடன் கலந்து சாப்பிடலாம்.

 

கேரட் தவிர பீட்ரூட் அல்லது வேகவைத்த பூசணி சேர்க்கலாம்.




http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_18.html

தேவையானவை

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு



செய்முறை

  • கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்
  • வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

 



இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளு குழம்பு.



 



http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_20.html

தேவையானவை

பாசிப்பயறு(முழுப்பயறு) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
பூண்டு - 2 பல் நறுக்கியது
கொத்தமல்லி - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய்


செய்முறை


  • பாசிப்பயறை நன்றாக வேகவைக்கவும் (குக்கரை விட சட்டியில் வைத்து வேகவைத்தால் நல்லா இருக்கும்)

  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொத்தமல்லி, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேகவைத்த பயறையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  • பிறகு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
  • கடைசியில் மல்லி இலை சேர்க்கவும்.

 

இதுவும் கொங்கு நாடு ஸ்பெசல்.

சாதத்துடன் சாப்பிடலாம்.

 

http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_27.html

தேவையானவை
பாஸ்மதி அரிசி - 3 கப்


மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு
இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்
தக்காளி paste - 2 டேபிள்ஸ்பூன்
(தக்காளியும் உபயோகிக்கலாம், pasteல் கலர் நல்லா இருக்கும் )
வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
மல்லி இலை
புதினா இலை
சோயா உருண்டைகள் - 30 ( சுடு நீரில் போட்டு பிழிந்து எடுக்கவும்)

பொடிக்க
பட்டை - 5 (1 இன்ச் அளவு)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
(மிக்ஸியில் போட்டு பொடி பண்ணவும்)

தாளிக்க

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்(optional )

கடுகு

பிரியாணி இலை

கடல் பாசி

மராட்டி மொக்கு





செய்முறை

நான் பாத்திரத்தில் செய்து ovenல் வைப்பேன். வேண்டுமானால் குக்கரில் வைக்கலாம்.

குக்கரில் வைப்பதாக இருந்தால் அதிலேயே தாளித்து விடலாம். ovenல் வைப்பதாக இருந்தால் oven safe பாத்திரத்தில் தாளித்து விடலாம்.


  • அரிசியை ஊற வைக்கவும். ovenஐ 350F ல் செட் செய்யவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய்+நெய் விட்டு கடுகு,பிரியாணி இலை, கடல் பாசி, மராட்டி மொக்கு, பொடி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
  • பிறகு சோயா உருண்டைகள், தக்காளி பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அதில் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • ஒரள்வு அரிசி வெந்தவுடன், மல்லி இலை, புதினா இலை சேர்த்து கிளறி, பாத்திரத்தை எடுத்து ovenல் வைத்து 20-30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும்.
இதில் சோயா உருண்டைகள் சேர்க்காமலும் செய்யலாம். என் பையனுக்கும், பொண்ணுக்கும் சோயா உருண்டைகள் பிடிக்கும். அதனால் எல்லா மசாலா சமையலிலும் சேர்த்து விடுவேன்.

மல்லி, புதினா கடைசியில் சேர்ப்பதால் நல்ல மணம் இருக்கும்.


 

http://suganthiskitchen.blogspot.com/2008/07/or.html

தேவையானவை:

கத்திரிக்காய் - 15 ( சிறியது)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


நிலக்கடலை - 1/4 கப் ( வறுத்து பொடித்தது)
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மாசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு

செய்முறை
  • ஒவனை 300 டிகிரி சூடு படுத்தவும்.
  • கத்திரிக்காயை ஸ்டஃப் பண்ண வசதியாக நறுக்கவும் . (காம்பு பகுதியை விட்டு மத்த பகுதியை பாதி வரை நறுக்கவும்)
  • பொடிகளை ஒன்றாக கலந்து முடிந்தவரை கத்திரிக்காயில் திணிக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணய் விட்டு கத்திரிக்காய் சேர்த்து உடைந்து விடாமல் மெதுவாக திருப்பவும்.(காயின் எல்லா பக்கமும் எண்ணெய் படுமாறு திருப்ப வேண்டும்)
  • பிறகு ஒவனில் வைத்து விடவும்.
  • 20-30 நிமிடங்களில் கத்திரிக்காய் வெந்து விடும்.

ஒவனில் வைக்கும் போது அலுமினியம் ஃபாயிலில் மூடி வைத்தால் வறண்டு விடாமல் இருக்கும்.

இந்த முறையில் செய்தால் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

நிலக்கடலையை நன்றாக பொடிக்க கூடாது.


 

 

தேவையானவை

பாசிப்பருப்பு - 3/4 கப்
வெல்லம் - 1/2 கப்
முந்திரி - 10
திராட்க்ஷை - 10
நெய் - 1 டேபிள் ஸ்பூன்




அரைக்க
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 4






செய்முறை
  • பாசிப்பருப்பை மலர வேகவைக்க வேண்டும்.
  • அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்
  • பிறகு வெல்லம் சேர்த்து, அது கரைந்தவுடன் இறக்கவும்.
  • நெய்யில் முந்திரி, திராட்க்ஷை வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும்.

 


தேவையானவை

பாஸ்மதி அரிசி - 3 கப்
பட்டாணி - 1 கப்

அரைக்க
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 6
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 4 சிறிய துண்டு
ஏலக்காய் - 1


தாளிக்க
பிரியாணி இலை
கடல் பாசி
மராட்டி மொக்கு
சோம்பு
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
வெங்காயம் - 1 பெரியது ( நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
எண்ணெய்
நெய்


முந்திரி

செய்முறை


  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பிரியாணி இலை, கடல் பாசி, மராட்டி மொக்கு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, பிறகு வெங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • இவற்றுடன் பாஸ்மதி அரிசி, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து rice cookerல் வைக்கவும்.
  • கடைசியாக முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
குருமாவுடன் சாப்பிடலாம்.
வேண்டுமானால் தேங்காய்ப்பால் 1 கப் சேர்க்கலாம்.
http://suganthiskitchen.blogspot.com/2008/08/blog-post_06.html

தேவையானவை

எண்ணெய்
ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி(Sheets)
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்

For Stuffing
பெரிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
முளைப்பயிறு(பாசிப்பயிறு) - 1/4 கப் (நறுக்கியது)
கோஸ், 1/4 கப் (நறுக்கியது)
கேப்சிகம்(பச்சை & சிவப்பு) - 1/4 கப்(நறுக்கியது)
பூண்டு - 1 பல் (பொடியாக நறுக்கியது)
சில்லி சோய் சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு


செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வெங்காயம், முளைப்பயிறு மற்றும் காய்கள் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
  • கடைசியாக சில்லி சோய் சாஸ், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  • மைதா மாவை தண்ணீரில் பேஸ்ட் மாதிரி கலந்து வைக்கவும்.
  • காய்கறிகலவை நன்கு ஆற விடவும்.
  • பிறகு பேஸ்ட்ரி ஷீடில் ஒரு டேபிள் ஸ்பூன் காய் கலவையை வைத்து ஸ்பிரிங் ரோல் மாதிரி சுற்றி அதன் முனையை மைதா பேஸ்டில் ஒட்டவும்.


  • காய்கறி கலவை முடியும் வரை செய்யவும். 10 அல்லது 12 ஸ்பிரிங் ரோல் செய்யலாம்.
  • பிறகு கடாயில் எண்ணெய் வைத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுக்கவும்.


http://suganthiskitchen.blogspot.com/2008/08/blog-post_21.html

தேவையானவை

தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
உப்பு
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை



வறுக்க
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகு - 4
வரமிளகாய் - 3





செய்முறை
  • வறுக்க வேண்டியதை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்
  • மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும்.
  • இவை அனைத்தையும் சேர்த்து உப்பும் சேர்த்து அரைக்கவும்.
  • பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.



 




இட்லி, தோசை, பணியாரம் அனைத்திற்கும் நல்ல combination இந்த சட்னி.

 

http://suganthiskitchen.blogspot.com/2008/08/blog-post_18.html





எங்க ஊர்ப்பக்கம் இதை சந்தகைன்னுதான் சொல்லுவாங்க. ஆனா மத்த பக்கம் இடியாப்பம் அல்லது சேவைன்னும் சொல்லறாங்க. அதே மாதிரி செய்முறையும் மாறும். சந்தகை செய்யறதுக்கு நிறைய வேலை செய்யனும்கிறதால, இப்ப frozen இடியாப்பம் வாங்கிக்கறது.

தேவையானவை
frozen இடியாப்பம் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 8
தக்காளி - 1 (நறுக்கியது)
தக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்(அல்லது இன்னும் 1 தக்காளி)
கறிவேப்பிலை
கடுகு
எண்ணெய்
இஞ்சி பூண்டு அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்

பொடிக்க
சோம்பு - 2 டீஸ்பூன்
பட்டை - 5 (1 இன்ச் அளவு)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்

செய்முறை

  • இடியாப்பத்தை microwave ல் சூடு பண்ணிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பொடி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி, தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பிறகு இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

 



தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

 

http://suganthiskitchen.blogspot.com/2008/08/blog-post_24.html

தேவையானவை:

வேர்க்கடலை 2 கப் (வறுத்த வேர்க்கடலை)
வெண்ணைய் கால் கப்
பால் பவுடர் 1 கப்
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 கப்
vennila essence 1 drop
தண்ணீர் 1 கப்

செய்முறை:

வேர்க்கடலை தோலை உரித்துவிட்டு பொடியாக அரைக்கவும்.
பால் பவுடரை தண்ணீரில் கலந்து அதனுடன் பொடியாக்கிய வேர்க்கடலை
சர்க்கரை,வெண்ணைய் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்து விடாமல் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் திக்காக வந்தவுடன் ஏலப்பொடி,வெனிலா எஸன்ஸ் சேர்த்து
கிளறவும்.
ஒரு பெரிய தட்டை எடுத்து அதில் நெய் தடவி வேர்க்கடலை கலவையை ஊற்றி
ஆறினவுடன் வில்லை போடவும்

http://annaimira.blogspot.com/2008/08/blog-post_23.html

நண்பர்களே! இன்னிக்கு நாம செய்யப் போறது வெண்டைக்காய் பொரியல்.

உயிரோட இருக்கும் போது



கொலை பண்ணினதுக்கப்புறம்



தேவையானவை :
வெண்டைக்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - பெரியது 1 / சிறியது 5,6
சிவப்பு மிளகாய் வத்தல் - 6,7
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. வெண்டைக்காயை சிறியதாக வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலையை முதலில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

3. பின் வெட்டிய வெண்டைக்காய், வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

4. பத்து நிமிடங்கள் நன்கு வதங்கியதும் அதில் உப்பையும் சேர்த்துக் கிளறவும்.

அவ்வளவுதான் சுடச்சுட வெண்டைக்காய் பொரியல் தயார்.

முன்யோசனைக் குறிப்புகள் :
1. வெண்டைக்காயை ஒரு மணி நேரம் முன்பே வெட்டி வெயில் சிறிது நேரம் வைத்து எடுத்த பின் வதக்கினால் பிசுபிசுவென்று ஒட்டாமல் வரும்.

2. காய் நறுக்கும் போது இரண்டு, மூன்று வெண்டைக்காய்களாக சேர்த்து வெட்டினால் நேரம் மிச்சமாகும்.

3. சமைப்பதற்கு முன் வெண்டைக்காய் நிறைய இருக்கும். ஆனால் வதக்கியபின் கொஞ்சமாக சுருங்கிவிடும். எனவே காய் வாங்கும் போதே இதை மனசில் வைத்துக் கொண்டு தேவையெனில் கொஞ்சம் சேர்த்தே வாங்கவும். :)

 

http://samaiyalsamaiyal.blogspot.com/2008/08/blog-post.html

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.


ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

எந்த நோய் வராது?

* ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

* கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

* கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

* இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்?
மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.


நன்றி தினமலர்

--------------------

மோகன் காந்தி