Language Selection

சமையல்கலை

 
Image

 

சாலியல்-1/4 கிலோ 

Image

சதகுப்பை-1கிலோ

பட்டை கருவா-100 கிராம்

கொத்த மல்லி-50கிராம்

Image

மஞ்சள்-50 கிராம்

கசகசா-100கிராம்

சீரகம்-100கிராம்

Image

இவை அணைத்தும் நன்கு சுத்தம் செய்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

இதனை டப்பாக்களில் அடைத்து வைக்கவும்,,இந்த பொடியை ஆம்லேட்டில் தூவி சாப்பிடலாம்

மாதவிடாய் பிரச்சணைக்கு மிக நல்லது குழந்தை பெற்றவர்களுக்கு மிக நல்லது

சாதம் போல் சமைத்தும் சாப்பிடலாம்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=172&Itemid=129

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2318&Itemid=1

 
தேவையான பொருட்கள்

 

Image

அரிசி மாவு - 4 கப்
உளுந்து மாவு - 1 கப்
நெய் - 1/4 கப்
எள் - 2 மேசைகரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

Image

செய்முறை

நெய் மற்றும் தண்ணீரை லேசாக சூடாக்கிக் கொள்ளவும்.
Image

பின் எல்லாவற்றையும் ஒரு சட்டியில் போட்டு

Image

தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்துக் கொள்ளவும்

Image

மாவை முறுக்கு அச்சில் போட்டு பிளேட்டில் முறுக்கு பிழியவும் இது முறுக்கு உடையாமல் இருக்கும்

Image

பின் முறுக்கு அச்சில் போட்டு முறுக்கு பிழிந்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்

Image

அதைப்போல் எல்லாவற்றையும் பொறித்து எடுக்கவும்

Image

சுவையான முறுக்கு ரெடி

 

note
பாத்திமாநூர்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=263&Itemid=1

 
 
தேவையான பொருட்கள்
*************************************
வருத்த மாவு - 200 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்

Image

மாவில் விறவி கொள்ள
**********************************

வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி  தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு  - அரை தேக்கரண்டி

கறி தாளிக்க
*****************

எண்ணை  - கால் கப்
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய்  - ஒன்று
கொத்து மல்லி -  சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி

Image

மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)
கடைசியில் கரைத்து ஊற்ற
****************************************
வருத்த மாவு -  இரண்டு மேசை கரண்டி

செய்முறை
***************

1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லி யை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.

Image
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

Image
4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

Image
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.
Image

6.மட்டன் &எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
7.ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
Image

8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி  கொதிக்க விட வேண்டும்.

Image
9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)

Image
10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)

Image
11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.

Image

12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.
ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.

Image
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால்  கறி கரைந்து விடும்.

Image
15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

Image
16.. லேசகாக கிளறி விட வேண்டும்.

Image
17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து  பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவேண்டும்.

Image
18 . சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி)

குறிப்பு
************
மாவு தயாரிக்கும் முறை
***********************************
பச்சரிசி (அ) சிகப்பரிசியை களைந்து வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவேண்டும். திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு வருக்கனும். வருத்ததை ரவை ஜலிக்கும் ஜல்லடையில் ஜலித்து கொள்ளவேன்டும்.
இல்லை வீட்டிலேயே அரிசியை ஊறவத்து மிக்சியில் கட்டியா அரைட்த்து அதனுடன் சிறிது ரெடி மேட் அரிந்து மாவு சேர்த்தும் கொழுக்கட்டை பிடிக்கலாம்.
இத ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வருத்து கொள்ள வேண்டும்.
கறி நல்ல எலும்புடன் போட்டால் தான் சுவை அதிகம்.
ஜலீலா

.

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2371&Itemid=99 


பிரட் காய்ந்து போய்விட்டாலோ, அல்லது பிரட், பட்டர், ஜாம் என்று சாப்பிட்டு அலுத்து போய்விட்டாலோ, சுலபமான இந்த உப்புமாவை செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
தேவையானப்பொருட்கள்:
ரொட்டித்துண்டுகள் - 8
பெரிய தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ரொட்டித்துண்டுகளின் ஓரத்திலுள்ள பிரவுன் பகுதியை நீக்கிவிட்டு, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியப்பின், தக்காளித்துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். அத்துடன் ரொட்டித்துண்டுகளைச் சேர்த்து இலேசாகக் கிளறி விடவும். பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்து, ஒரு கை தண்ணீரைத் தெளித்து எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விடவும். மூடி போட்டு, சிறு தீயில் வைத்து அவ்வப்பொழுது கிளறி விட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, கீழே இறக்கி வைத்து, எலுமிச்சம் பழச்சாறைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


சென்னைவாசிகளும், சென்னைக்கு வருகை புரிந்தவர்களும் மெரினா கடற்கரையைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. மெரினா எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு பிரசித்தம் இங்கு விற்கப்படும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். மாலை வேளையில், கடற்கரை மணலில் அமர்ந்துக் கொண்டு, சுண்டல் சாப்பிடும் சுகமே அலாதிதான். கடற்கரையைப் பிரிந்து வாழும் அன்பர்கள், சுண்டலையாவது சுவைத்து மகிழுங்கள்.
தேவையானப்பொருட்கள்:
காய்ந்த வெள்ளைப் பட்டாணி - 1 கப்
அரைக்க:
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அலங்கரிக்க:
பச்சை மாங்காய் - துருவியது அல்லது பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - பொடியாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பட்டாணியைக் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் போட்டு, பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் சிறிது உப்பையும் போட்டு, 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் சற்று ஆறியவுடன், திறந்து, பட்டாணியை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் (மிளகாயைக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் வெந்தப் பட்டாணியைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே இறக்கி வைக்கவும். (அடுப்பில் அதிக நேரம் வைக்கக் கூடாது. அதிக நேரம் வைத்துக் கிளறினால், பட்டாணி அழுத்தமாகி விடும்).
பின்னர் அதன் மேல் தேங்காய், மாங்காய் துண்டுகளைத் தூவி விடவும்.
குறிப்பு: இதில் சில துளி எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கலாம். சிலர் தாளிக்கும் பொழுது, சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்ப்பார்கள். விருப்பமானால் வெங்காயத்தையும் சேர்க்கலாம். 
தேங்காய் அதிகம் விரும்பாதவர்கள், தேங்காயை அரைத்து சேர்ப்பதை தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக, வெந்தப் பட்டாணியில் சிறிது எடுத்து நன்றாக மசித்து விட்டு அதைச் சுண்டலில் சேர்த்துக் கிளறினால், சுண்டல் சேர்ந்தால் போல் இருக்கும். இஞ்சி, பச்சை மிளகாயை மட்டும் நசுக்கி அல்லது அரைத்து தாளிப்பில் சேர்க்கலாம்.


Active Image

தேவையான பொருட்கள்

மட்டன் -11/2 கிலோ

பிரியாணி அரிசி-1 கிலோ

எலுமிச்சம் பழம் - 1,

வெங்காயம்1/2 கிலோ

Image

பிரியாணி மசலாப்பொடி-1 மேஜைக்கரண்டி 

மிளகாய்ப்பொடி - 2மேஜைக்கரண்டி 

மல்லி பொடி--1 தேக்கரண்டி

3 கலர் கேசரி பவுடர்- 1 சிட்டிகை 

தக்காளி-1/2 கிலோ

மிளகாய்-4

கொத்தமல்லி தழை- 1/2 கப் 

புதினா-1/2 கப் 

மஞ்சள்-1 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை- 3 முந்திரி-10

தயிர்-400ml

 Image

நெய்-100ml

ஆயில்-150ml

இஞ்சி-100கிராம்

பூண்டு -75கிராம்-

உப்பு -தேவையான அளவு 

பட்டை-கிராம்புஏலம்-

Image

பாதி வெங்காயத்தை நெய்யில் பொரித்து வைக்கவும

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூண்டு,இஞ்சியை அரைத்து வைக்கவும்.வெங்கயம்,தக்காளி,பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி

 வைக்கவும்.

Image

கறியை சுத்தம் செய்துபாதி தயிர்.இஞ்சி,பூண்டு,,பச்சை மிளகாய்,மிளகாய்தூள்,உப்பு,சிறிது 

கொ.மல்லிபுதினாபோட்டு 30 நிமிடம் கலக்கி வைக்கவும்.

Image

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் எண்னைய்  ஊற்றி பட்டை-கிராம்புஏலம்-இஞ்சிபூண்டு 

தாளித்து தயிர் போட்டு நன்கு கிளரவும்,

Image

அதில் வெங்காயம் போட்டு பாதி வதங்கியவுடன்

Image

 கறி போட்டு அந்த எண்ணையில் வேகவிடவும் பாதி வெந்தவுடன் அதில் தக்காளியை சேர்க்கவும்

Image

தண்ணீர் சேர்க்காமல் அப்படியே கிளரவும் முக்கியமாக அடிபிடிக்காமல் பார்க்கவும்

{தேவையிருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்}

Image

உகிழங்கை சேர்த்து கிளரவும் இப்போது கறி மசால் ரெடி

Image

மற்றொறு  பாத்திரத்தில் பட்டை-கிராம்புஏலம்-இலை,உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி

கொதிக்க விடவும்

Image

தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை போட்டு மூடி வைக்கவும்

Image

அரிசி 3/4 பதம் வெந்தவுடன், வடிக்கட்டவும்.

Image

 வேகவைத்த அரிசியை  கறியில் போடவும்,{கறி கீழ் இருக்குமாறு பார்க்கவும், கிளர வேண்டாம்}

Image

ஓர் கரண்டியை கொண்டு சமமாக தேய்க்கவும் அதில் எலுமிச்சம் பழம்  பிழியவும்

Image

சட்டியின் மேல் காட்டன் துணீயை விரித்து மூடியை வைத்து மூடவும்

Image

கேஸ்அடுப்பில்சமைப்பவர்கள்தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி 

பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து மூடி  தம்மில் போடவும்

விறகு அடுப்பில் சமைப்பவர்கள் கீழ் உள்ள தீகங்குகளை சட்டியின் மூடியில் போடவும்

Image.

அப்படியே 45 நிமிடம் வைக்கவும்{அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்}

Image

வாணலியில் எண்ணெய்யை விட்டு,காய்ந்த திராசை,முந்திரியையும் பொன்னிறமாகவறுக்கவும்

Image

அதனை பிரியாணியில் போடவும், 3 கலரையும் தணித்தனியாக தண்ணீரில் கலக்கவும்

Image

படத்தில் பார்ப்பது போல் ஊற்றவும்

Image

அதன் மேல் செர்ரி பொரித்த வெங்காயம் போடவும்

Image


Active Image

 

தேவையான பொருட்கள்

 

Image

கத்தரிகாய பெரியது   - 1
மிளகாய் தூள்        - 1/2 தே.க
அரிசிமாவு           - 1/4 தே.க

Image
கார்ன் மாவு          - 1/4 தே.க
உப்பு                -  தேவைகேற்ப்ப
சோம்பு              -  1/4 தே.க
பூண்டு               - 1  
எண்ணெய்           - 1/2 தே.க
பேசில் பௌடர்     - 1/4 தே.க
Image

ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும், எண்னெய் தவிர மற்ற எல்லாவற்றைய்ம் கல்ந்து வைத்து கொள்ளவும்.

Image

முதலில் கத்தரிகாயை நன்றாக கழுவி துடைத்து நல்ல 1/4 இன்ஞ் அளவில் வட்ட வடிவ துண்டுகளாக்கவும் அதனை கலந்த மாவில்  கத்தரிகாயகளை போட்டு பிசிறி வைக்கவும்

Image

இதை ஒவன் க்ரில்லில் ஆயில் ஸ்பேரெ செய்து(ஆயில் தடவி) வைக்கவும். 
Image

ஒவன் டெம்ப்ரேச்சர் 400 டிகிரி  25 நிமிடம் ( ஒவனின் அளவை பொறுத்து கூட்டியோ குறைத்தோ) வைக்கவும்.பத்து நிமிடம் கழிந்து மறுபுறம் திருப்பி வைக்கவும்.

Image
இப்போது நன்றாக நல்ல் கிரிஸ்ப்பி கத்தரிகாய் ரெடி.
இது எல்லாவகை கலந்த சாததுக்கும்  ரொம்ப நல்ல சைட் டிஷ்.
ஒவனில் வைக்கவேண்டாம் என்றால் எண்னெயில் பொறித்தும் 

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2149&Itemid=1

Active Image

 

தேவையான பொருட்கள்

 

Image

சிக்கன் - 3துண்டு

இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி

சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு 

தயிர்- 1 தேக்கரண்டி

எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

 Image

தோசை மாவுகப் 

வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 3

கொத்தமல்லி தழை-2 கொத்து

எண்ணை தேவைக்கேற்ப்ப

வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்

அதனை மிளகுதூள் உடன் கலக்கி வைக்கவும்

Image

ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு ,தயிர்,சில்லிசிக்கன் பொடிபோட்டு நன்கு கலக்கி எலுமிச்சை ஜீஸ் போட்டு 5 மணிநேரம் ஊறவைத்து கிரில் அல்லது தோசைகல்லில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

அதனை பொடியாக நறுக்கிவைக்கவும்

Image

,பின்பு தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசையாக தேய்க்கவும்

Image

உடனே அதன் மேல் சிக்கனை மேலே தூவவும்

Image.

அதர்க்கு மேல் வெங்காய கலவையை போடவும்[இந்த தோசை என் குழந்தைக்கு சுட்டதால்வெங்காயம் சேர்க்கவில்லை]

Image

நன்கு அமுக்கி விடவும்

Image 

தோசை சுற்றிலும் சிறிது எண்ணை விடவும்

Image

தோசை கிரிஸ்பாக வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும்

Image

சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்

தேவையான பொருட்கள் :-

கேழ்வரகு மாவு:-

உப்பு: 3 சிட்டிகை

சர்க்கரை :- தேவையான அளவு

தேங்காய் துருவல் :- தேவையான அளவு

 

செய்முறை:- இது கொஞ்சம் சிரமம் நேரம் பிடிக்கும். கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். இட்லி தட்டில் துணிப்போட்டு, பின் சல்லடையை அதன்மேல் பிடித்து இந்த மாவை அதில் வைத்து தேய்க்கவேண்டும். மாவு கட்டி கட்டியாக ஆகாமல் மெல்லியதாக விழும். அதை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், சர்க்கரை போட்டு கலக்கி பரிமாறவும். 

 

இதில் சலிப்பது கொஞ்சம் நேரம் பிடிக்கும், அப்படி செய்யாமல் நேராக தண்ணீர் விட்டு பிசைந்து வேகவைத்தல் கட்டி கட்டியாக புட்டு நன்றாக வராது. 

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/10/blog-post_03.html

கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் கேழ்வரகு அடை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் முருங்கைகீரையை அதில் சேர்ப்பார்கள். இப்போதும் எல்லோரும் வீடுகளில் இந்த அடையை செய்கிறார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள் very very delicious healthy food!! 

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு வாங்கி தண்ணீரில் ஊறவைத்து, நன்கு 10-15 முறையாவது கழுவவேண்டும், பின்பு சில காசுகளை (1 ரூ, 50 பைசா நாணயங்கள்) போட்டு அரிக்கவேண்டும். இந்த காசுகள் கேழ்வரகில் கலந்து இருக்கும் கற்கலை தனியாக எளிதில் பிரிக்க உதவும். நன்கு தண்ணீரை வடிக்கட்டி வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து வெண்ணெய் போன்று அரைத்து க்கொள்ளவேண்டும்
கேழ்வரகு அடை:- 
தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப
செய்முறை:- வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போடு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.
வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும். 
சூடான சூப்பர் கேப்பம் அடை ரெடி..!! 

 

தேவையானப் பொருட்கள்.

அரிசி மாவு - 1 கப்
ரவா - 1/2 கப்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவைக்கேற்றவாறு

 

செய்முறை.

தக்காளியை பெரிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு, ரவா, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காயவைத்து, ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக பரப்பவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையை சுற்றி ஊற்றி நன்றாக வேகவிடவும். ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு மறு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.

 

குறிப்பு.

சாதாரண தோசை மாவிலும் இதை செய்யலாம். ஒரு கப் மாவிற்கு ஒரு தக்காளியை அரைத்து, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள் சேர்த்து செய்யவும்.

 

 http://kadakam.wordpress.com/

 

தேவையானப் பொருட்கள்.

அரிசி - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 2 கப்
நெய் - 1/4 கப்
முந்திரிப்பருப்பு - 5
காய்ந்த திராட்சை - 5
ஏலக்காய் - 4

 

செய்முறை.

 

அரிசியை நன்றாகக் கழுவி அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு, மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

 

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் கீழே இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

 

குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அதில் வெல்லப் பாகை விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெய்யை சேர்த்து மீண்டும் கிளறவும். சாதமும் பாகும் நன்றாகக் கலந்தபின், முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.

http://kadakam.wordpress.com/

 

தேவையானப் பொருட்கள்.

உருளைக்கிழங்கு -‍ 3
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -‍ 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய் ‍- 3 அல்லது 4
இஞ்சி ‍- ஒரு சிறு துண்டு
பூண்டு ‍- 4 அல்லது 5 பல்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -‍ 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப‌

 

செய்முறை.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடான பின் அதில் சீரகத்தைப் போடவும். சீரகம் பொரிந்தவுடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் உருளைக்கிழ‌ங்கு துண்டங்களைப் போட்டு, அத்துடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறி, மூடி வைத்து சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வேகவிடவும்.

 

இது அதிக காரமில்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது.

மேலும், இதை Baby potato என்று அழைக்கப்படும் சிறிய உருளைக்கிழங்கை வேகவைத்து, முழுதாக அப்படியே சேர்த்து செய்தால், பார்க்க அழகாகவும் இருக்கும்.

http://kadakam.wordpress.com/

 


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி மாவை, வெறும் வாணலியில் போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

2 கப் தண்ணீரில் உப்பைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.

வறுத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, அதில் கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டிக்காம்பால் கிளறி விடவும். மாவு சிறிது ஆறியதும், கைகளால் நன்றாகப் பிசைந்து, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி, சற்று அழுத்தி விடவும். எல்லா மாவையும் இப்படியே செய்து முடிக்கவும். இதை, எண்ணை தடிவிய இட்லித் தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து, ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: புட்டு மாவில் இந்தக் கொழுக்கட்டையை, சுலபமாகச் செய்யலாம். புட்டு மாவில் உப்பைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீரைத் தெளித்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் போட்டுக் கலந்துக் கிளறி, கொழுக்கட்டைப் பிடித்து வேகவைக்கலாம்.

நான் சிவப்பரிசி புட்டு மாவில் கொழுக்கட்டைச் செய்துள்ளேன். சுவையும், சத்தும் இதில் சற்று அதிகம்தான்.

 

http://adupankarai.kamalascorner.com/2008/09/blog-post_13.html

 


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
வெல்லம் பொடி செய்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசி மாவை, வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், கீழே இறக்கி, அதை வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் கொதிக்க விடவும். வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கிளறவும். பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதை கீழே இறக்கி வைத்து ஆறவிடவும். மாவு சற்று ஆறியவுடன், கைகளில் சிறிது நெய்யைத்தடவிக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி சற்று விரல்களால் அழுத்தி, கொழுக்கட்டைப் பிடிக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லித் தட்டில் அடுக்கி, இட்லிப்பானையில் வைத்து, ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

 

http://adupankarai.kamalascorner.com/2008/09/blog-post_2599.html

முதல் தடவையா வீட்டுக்கு வரவங்களுக்கு இனிப்பு கொடுக்கனும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க. அதனால முதல்ல அவல் பாயசம்.



முதல்ல தேவையானதெல்லாம் எடுத்துக்கனும்





அவல் - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

பால் - 1 கப்

நெய்

முந்திரி

திராட்சை





அரைக்க : தேங்காய் , ஏலக்காய்






     

  • முந்திரி & திராட்சையை நெய் விட்டு நல்லா வறுத்து எடுத்து தனியா வைக்கனும்
  • இன்னும் கொஞ்சம் நெய் விட்டு அவலை சிவக்க வறுக்கனும்.
  • பிறகு பால் சேர்த்து வேக வைக்கனும்.( தண்ணீர் வேண்டுமானால் சேர்க்கலாம்.
  • நன்றாக வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன், அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வறுத்த முந்திரி & திராட்சை சேர்க்க வேண்டும்.

 

 

 

பாயசம் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பால் சேர்க்கலாம்.

 

http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post.html

வேக வைக்க
துவரம் பருப்பு - 1 கப்

வறுத்து அரைக்க
வர மிளகாய் - 8
மல்லி - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மேசைக்கரண்டி(optional)
நன்கு வறுத்து சிறிது நீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

மற்றவை :
காய் : முருங்கை, வெள்ளைப்பூசணி, கேரட் (அல்லது விருப்பம்போல்)
ஒரே அளவாக நறுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயம் - 1 அல்லது சிறிய வெங்காயம் - 15

தக்காளி - 1 நறுக்கி வைக்கவும்


புளிக்கரைசல் , வெல்லம்

 

தாளிக்க :

கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, நெய் (optional)

 

  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் , உப்பு மற்றும் அரைத்த மசாலாவில் பாதி சேர்த்து வேக விடவும்.
  • காய் நன்கு வெந்ததும், வேக வைத்த பருப்பு, புளிக்கரைசல், மீதி உள்ள மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
  • தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து சாம்பார் உடன் சேர்க்கவும்.

கொத்தமல்லி இலை சேர்க்கவும்.


 


இட்லி, தோசை மற்றும் பொங்கல் உடன் சேர்த்து சாப்பிடலாம்

 

http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_08.html

தேவையானவை:






தயிர் - 1 கப்

கேரட் 1/2 கப்

அரைக்க :
தேங்காய் - 1/2 கப்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

தாளிக்க :

எண்ணெய்

கடுகு

கறிவேப்பிலை

செய்முறை:

 



  • கேரட்டை துறுவி வைக்கவும்

  • அரைக்க வேண்டியவற்றை விழுதாக அரைக்கவும்

  • அரைத்த விழுது, தயிர், கேரட் மற்றும் உப்பு கலந்து வைக்கவும்

  • தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கலந்து வைத்த குழம்பில் கலக்கவும்.

 


ஈசி் தயிர் குழம்பு ரெடி.

சாதம், பருப்பு உடன் கலந்து சாப்பிடலாம்.

 

கேரட் தவிர பீட்ரூட் அல்லது வேகவைத்த பூசணி சேர்க்கலாம்.




http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_18.html

தேவையானவை

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு



செய்முறை

  • கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்
  • வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

 



இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளு குழம்பு.



 



http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_20.html

தேவையானவை

பாசிப்பயறு(முழுப்பயறு) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
பூண்டு - 2 பல் நறுக்கியது
கொத்தமல்லி - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய்


செய்முறை


  • பாசிப்பயறை நன்றாக வேகவைக்கவும் (குக்கரை விட சட்டியில் வைத்து வேகவைத்தால் நல்லா இருக்கும்)

  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொத்தமல்லி, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேகவைத்த பயறையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  • பிறகு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
  • கடைசியில் மல்லி இலை சேர்க்கவும்.

 

இதுவும் கொங்கு நாடு ஸ்பெசல்.

சாதத்துடன் சாப்பிடலாம்.

 

http://suganthiskitchen.blogspot.com/2008/07/blog-post_27.html