Language Selection

சமையல்கலை

 


பாஸ்ட பூட் உணவு வகைகளை அநேகம் விரும்பி உண்ணும் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் நாங்களே இலகுவாக வீடுகளில் தயாரித்துக் கொள்ளலாம்.


ஈவினிங் டிபனுக்கு ஏற்றது. குழந்தைகளின் டிபன் பொக்ஸ்க்கும் கொடுத்து விடக் கூடியது. இரவிலே மாவைத் தயாரித்து வைத்துக் கொண்டால் காலையிலே செய்து கொள்ளலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போதும் செய்து எடுத்துச் செல்லலாம்.


கறி ரொட்டி


தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு


1. மைதா மா – 2 கப்

2. ஈஸ்ட் - 1 ரீ ஸ்பூன்

3. உப்பு சிறிதளவு

4. மார்ஜரீன் - 1 டேபிள் ஸ்பூன்



கறி தயாரிக்க


1. மீன் துண்டுகள் - 1 கப்

2. வெங்காயம் - 1

3. பூண்டு - 2

4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன்

5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்

6. மிளகாய்த் தூள் - ரீ ஸ்பூன்

7. மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்

8. கறிவேற்பிலை சிறிதளவு

9. உப்பு, புளி தேவையான அளவு

10. ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்






செய்முறை


1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள்.


2. எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், உள்ளி லேசாக வதக்கி கறிவேற்பிலை சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள், சீரகத் தூள் சேர்த்து கரைத்த புளிக் கரைசல் விட்டு மீன் துண்டங்களைப் போட்டு அவித்து எடுத்து, ஆற முள்ளை நீக்கி சற்று மசித்து எடுங்கள்.


3. மாவை சிறு பந்து போல எடுத்து, போர்ட்டில் வைத்து ரோலரால் மெல்லியதாக உருட்டி, கறியை வைத்து பார்சல் போல மடித்து வையுங்கள். அதை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.


4. தோசைக் கல்லிலும் செய்து கொள்ளலாம். தோசைக் கல்லில் செய்வதாக இருந்தால் பூரி போன்று வட்டமாக உருட்டி கறியை வைத்து இன்னொரு பூரியால் மூடி மேலே சற்று உருட்டிவிட்டால் அமர்ந்து வரும். இதை மெல்லிய தீயில் இரு புறமும் விரும்பிய எண்ணையை விட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.


5. அவசரத்திற்கு செய்வதாயின் மாவை எடுத்து கிண்ணம் போல செய்து, அதற்குள் கறியை வைத்து மூடி கையால் தட்டியும் செய்து கொள்ளலாம்.


6. சதுரம், முக்கோணி, அரை வட்டம் என நாளுக்கு ஒவ்வொன்றாக விரும்பிய வௌ;வேறு கறிவகைகளில் செய்து அசத்துங்கள்.


:- மாதேவி -:
http://www.tamilveli.com/showurl.php?url=http://sinnutasty.blogspot.com/2008/11/blog-post_17.html&type=P&itemid=74579


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5 அல்லது 6
தயிர் - 1 பெரிய கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

நெல்லிக்காயை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளுடன், தேங்காய்த் துருவல். பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து அதில் அரைத்த விழுதையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பச்சடியில் கொட்டிக் கலக்கவும்.
http://adupankarai.kamalascorner.com/2008/11/blog-post_4682.html


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை = 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக பிசறி விடவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியைத்தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

http://adupankarai.kamalascorner.com/2008/11/blog-post_09.html



தேவையானப்பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 1 கப்
சோளம் அல்லது அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

வெங்காயத்தைத் தோலுரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதில் சிறிது உப்பைத்தூவி, விரல்களால் மெதுவாக பிரட்டி விட்டு, வெங்காயத்துண்டுகளைத் தனித்தனியாக பிரிக்கவும். அதை அப்படியே பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை ஒரு கையில் எடுத்து, நன்றாகப் பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் சோளம் அல்லது அரிசி மாவைத் தூவி பிரட்டி விடவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டுத் துண்டுகள், சோம்புத் தூள், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறவும். அதன் பின் கடலை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிரட்டி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெங்காயதிலுள்ள நீரிலேயே மாவு ஒட்டிக் கொள்ளும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், அடுப்பை தணித்துக் கொள்ளவும். ஒரு கை மாவை எடுத்து இலேசாக விரல்களால் எண்ணையில் உதிர்த்து விடவும். பகோடா வெந்து சிவந்தவுடன், அரித்தெடுத்து வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது சூடான சாம்பார் சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

குறிப்பு: பூண்டு வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம்.
http://adupankarai.kamalascorner.com/2008/11/blog-post.html

அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

புளி,சீனி இரண்டையும் தண்ணீரில் கலந்து  கைகளில் தேய்த்துவிட்டு

 பின்பு எவ்வளவு மிளகாய் நறுக்கினாலும் கையில் எரிச்சல் எற்படாது.

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2365&Itemid=104#akocomment4026

 
தேவையான பொருட்கள்
Image

 

மைதாமாவு-3 கப்
சர்க்கரை பவுடர்- 2கப்
ஏலம் எஸ்ஸன்ஸ்-3 சொட்டு

Image
வெண்ணெய்-11/2கப்
முட்டை- 1

Image
பேக்கிங் பவுடர்-1தேக்கரண்டி
உப்புத்தூள்-1 சிட்டிகை

Image
ஸ்டாபெர்ரி ஜாம்-தேவையான அளவு
  Image

வெண்ணெயுடன் ஓர் பாத்திரத்தில்  போட்டு நன்கு கட்டியில்லாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.
Image

மைதாமாவில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்

Image
அதில் சர்க்கரை பவுடரை சிறிது சிறிதாக தூவவும்

Image

அப்படியே சேர்த்து  நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

Image
தண்ணீர் சேர்க்க வேண்டாம்,தேவையிருந்தால் சிறிது வெண்ணையை சேர்க்கவும்

Image
அதனுடன் வெண்னையும் சேர்த்து  பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவேண்டும்

.இதை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து கையால் அழுத்தி வட்ட வடிவமாக்கி வைக்கவும்

அல்லது உங்களுக்கு பிடித்தமான வடிவில் கூட வைக்கலாம், அதர்க்கு நடுவில் ஒர் பென்சிலில் பின்புறம் வைத்து அழுத்தி எடுக்கவும்
Image

இந்த பிஸ்கட்களை நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில்325"யில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும். 

இப்போது பிஸ்கட் ரெடி,

பாதி ஆறியவுடன் பென்சிலில் வைத்த அச்சியில் நடுவில் ஜாம் வைத்து ஆறவிடவும்
Image

இப்போது ஸ்டாபெர்ரி ஜாம் குக்கீஸ் ரெடி

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2361&Itemid=1

தேவையானவை
 
 Image
பொட்டுகடலை        -   1 கப்
சர்க்கரை              -   1 கப்
நெய்                 -   4 தே.க

Image
ஏல தூள்             -   1/2 டீஸ்பூன்
முந்திரி               -  5

Image

முதலில் பொட்டுகடலையை பொடிக்கவும்
சர்க்கரையும், ஏலக்காயும் போட்டு பொடித்து கொள்ளவும்
Image

ஒரு தவாவில் அல்லது கனமான பாத்திரத்தில் நெய்விட்டு சூடாக்கவும்
அதில் ஒடித்த முந்திரி போடவும் அது வறுபட்டவுடன் அடுப்பை
அணத்துவிடவும்,

Image

அந்த சூடிலேயே இந்த மாவு, சர்க்கரையும் பொட்டு
மீதியுள்ள நெய்ய் விட்டு நன்றாக கலந்து

Image

கை பொறுக்கும் சூட்டில் விரும்பிய அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.

Image

சுவையான மாலாடு ரெடி

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2338&Itemid=1

தேவையான பொருட்கள்

 

Image
பேரீச்சை பழம்-50 கிராம்
அத்திப்பழம் - 100கிராம்

Image

பால் - 1லிட்டர்
சீனி - 275 கிராம்

Image
நெய் - 200கிராம்
முந்திரி பருப்பு-50கிராம்
ஏலம்-10

Image
பிஸ்தா-50கிராம்
எஸ்சென்ஸ்-1/2 மூடி
பாதம் - 50 கிராம்

பாதம்,பிஸ்தாவை சிறிது நேரம் ஊறவைத்து தோல் எடுத்து நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
முந்திரியையும் நீளமாக நறுக்கிக்கொள்ளவும்

Image

பாலை தண்ணீர் இல்லாமல் நன்றாக காய்ச்சவும்

Image
பாதி பாலில் நறுக்கிய பேரீச்சை பழம் அத்திப்பழத்தை சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்

Image

அதனை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
Image
பாலில் அத்திப்பழத்தை சேர்த்து நன்கு காய்ச்சவும் தீயை மிதமாக வைக்கவும்,பேஸ்ட் பக்குவம் வந்தவுடன்
Image

சீனியயும் சேர்க்கவும்  நன்கு கிளரவும்
Image

கலர் மாறி வரும் வரை நன்கு கிளரவும்

Image

பின் நெய்யை ஊற்றி கிளரவும்

Image

பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன்

Image

 நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறவும் எஸ்ஸென்ஸ் ஊற்றி இறக்கவும்

Image

சுவையான சூப்பர் அல்வா ரெடி
 

அத்திப்பழம் உடம்புக்கு மிகவும் நல்லது, ஆனால் குழந்தைகள் அவ்வளவாக விரும்புவது இல்லை ,இதனை போல் செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2332&Itemid=1

 
Image
 
தேவையானவை
-----------------------------
வ்றுத்த ராகி மாவு  - 1 கப்
சர்க்கரை           - 11/2 கப் (பொடியாக்கியது)
நெய்               - 1/4 கப்
ஏல பொடி          - 1/4 டீ ஸ்பூன்
முந்திரி             - தேவையான அளவு
 
Image

 

ஒரு பாத்திரத்தில்  ராகி மாவை போட்டு நன்றாக வறுக்கவும்,
அது ஆறிய பிறகு வேறு ஒரு பாத்திரத்தில்  நெய்யை விட்டு நன்றாக சூடாக்கவும்.
Image

அதில் இந்த மாவு, ஏலபொடி, சர்க்கரை முந்திரி எல்லாவற்றையும்
ஒன்றாக  கலக்கவும்

Image

அதில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக
பிடிக்கவும்..
Image

சுவையான ராகிலட்டு ரெடி

இது உடம்பிற்க்கு ரொம்ப நல்லது.
  http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2254&Itemid=1

 

 

 

தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 50கிராம்
தக்காளி-2
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
கத்திரிக்காய் - 2
மாங்காய் - 1
Image

இஞ்சிபூண்டு - 1 தேக்கரண்டி
தயிர்- 1 தேக்கரண்டி
பட்டை,ஏலம்,லவங்கம் -தாளிக்க
சாம்பார் வெங்காயம் -5
பச்சைமிளகாய் - 2
மாசித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை ஊறுகாய் - 1/4
மஞ்சள்தூள் - சிறிது 
 
Image

முதலில்  பருப்பை வறுத்து கொள்ளவும்
Image

காய்களை நீளமாக நறுக்கவும்
Image

பருப்பை குக்கரில் போட்டு அதில் வெங்காயம்,மிளகாய்.கத்திரிக்காய்,மாங்காய்,மஞ்சள்தூள் போட்டு

Image

மிளகாய் தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
Image

நன்கு வெந்ததும் இறக்கி நன்கு மசிக்கவும்


வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை போட்டு தாளித்து பின் இஞ்சி,பூண்டு தயிர் போட்டு வதங்கியதும், பருப்புக்கலவையை ஊற்றி கொதித்ததும்
Image

நன்கு ஆறியதும் மாசித்தூள்ஊறுக்காயை நன்கு பிசைந்து அதில் போடவும்,அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
 Image

சுவையான பருப்பு மாங்காய் ரெடி

குறிப்பு

ஊருகாய் இல்லையெனில் சிறிது புளி சேர்க்கவும்,

விருப்பம் இருந்தால் மாசிதூள் சேர்க்கவும்

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2277&Itemid=1

 
Image

 

சாலியல்-1/4 கிலோ 

Image

சதகுப்பை-1கிலோ

பட்டை கருவா-100 கிராம்

கொத்த மல்லி-50கிராம்

Image

மஞ்சள்-50 கிராம்

கசகசா-100கிராம்

சீரகம்-100கிராம்

Image

இவை அணைத்தும் நன்கு சுத்தம் செய்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

இதனை டப்பாக்களில் அடைத்து வைக்கவும்,,இந்த பொடியை ஆம்லேட்டில் தூவி சாப்பிடலாம்

மாதவிடாய் பிரச்சணைக்கு மிக நல்லது குழந்தை பெற்றவர்களுக்கு மிக நல்லது

சாதம் போல் சமைத்தும் சாப்பிடலாம்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=172&Itemid=129

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2318&Itemid=1

 
தேவையான பொருட்கள்

 

Image

அரிசி மாவு - 4 கப்
உளுந்து மாவு - 1 கப்
நெய் - 1/4 கப்
எள் - 2 மேசைகரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

Image

செய்முறை

நெய் மற்றும் தண்ணீரை லேசாக சூடாக்கிக் கொள்ளவும்.
Image

பின் எல்லாவற்றையும் ஒரு சட்டியில் போட்டு

Image

தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்துக் கொள்ளவும்

Image

மாவை முறுக்கு அச்சில் போட்டு பிளேட்டில் முறுக்கு பிழியவும் இது முறுக்கு உடையாமல் இருக்கும்

Image

பின் முறுக்கு அச்சில் போட்டு முறுக்கு பிழிந்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்

Image

அதைப்போல் எல்லாவற்றையும் பொறித்து எடுக்கவும்

Image

சுவையான முறுக்கு ரெடி

 

note
பாத்திமாநூர்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=263&Itemid=1

 
 
தேவையான பொருட்கள்
*************************************
வருத்த மாவு - 200 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்

Image

மாவில் விறவி கொள்ள
**********************************

வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி  தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு  - அரை தேக்கரண்டி

கறி தாளிக்க
*****************

எண்ணை  - கால் கப்
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய்  - ஒன்று
கொத்து மல்லி -  சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி

Image

மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)
கடைசியில் கரைத்து ஊற்ற
****************************************
வருத்த மாவு -  இரண்டு மேசை கரண்டி

செய்முறை
***************

1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லி யை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.

Image
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

Image
4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

Image
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.
Image

6.மட்டன் &எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
7.ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
Image

8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி  கொதிக்க விட வேண்டும்.

Image
9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)

Image
10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)

Image
11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.

Image

12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.
ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.

Image
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால்  கறி கரைந்து விடும்.

Image
15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

Image
16.. லேசகாக கிளறி விட வேண்டும்.

Image
17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து  பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவேண்டும்.

Image
18 . சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி)

குறிப்பு
************
மாவு தயாரிக்கும் முறை
***********************************
பச்சரிசி (அ) சிகப்பரிசியை களைந்து வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவேண்டும். திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு வருக்கனும். வருத்ததை ரவை ஜலிக்கும் ஜல்லடையில் ஜலித்து கொள்ளவேன்டும்.
இல்லை வீட்டிலேயே அரிசியை ஊறவத்து மிக்சியில் கட்டியா அரைட்த்து அதனுடன் சிறிது ரெடி மேட் அரிந்து மாவு சேர்த்தும் கொழுக்கட்டை பிடிக்கலாம்.
இத ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வருத்து கொள்ள வேண்டும்.
கறி நல்ல எலும்புடன் போட்டால் தான் சுவை அதிகம்.
ஜலீலா

.

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2371&Itemid=99 


பிரட் காய்ந்து போய்விட்டாலோ, அல்லது பிரட், பட்டர், ஜாம் என்று சாப்பிட்டு அலுத்து போய்விட்டாலோ, சுலபமான இந்த உப்புமாவை செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
தேவையானப்பொருட்கள்:
ரொட்டித்துண்டுகள் - 8
பெரிய தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ரொட்டித்துண்டுகளின் ஓரத்திலுள்ள பிரவுன் பகுதியை நீக்கிவிட்டு, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியப்பின், தக்காளித்துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். அத்துடன் ரொட்டித்துண்டுகளைச் சேர்த்து இலேசாகக் கிளறி விடவும். பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்து, ஒரு கை தண்ணீரைத் தெளித்து எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விடவும். மூடி போட்டு, சிறு தீயில் வைத்து அவ்வப்பொழுது கிளறி விட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, கீழே இறக்கி வைத்து, எலுமிச்சம் பழச்சாறைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


சென்னைவாசிகளும், சென்னைக்கு வருகை புரிந்தவர்களும் மெரினா கடற்கரையைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. மெரினா எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு பிரசித்தம் இங்கு விற்கப்படும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். மாலை வேளையில், கடற்கரை மணலில் அமர்ந்துக் கொண்டு, சுண்டல் சாப்பிடும் சுகமே அலாதிதான். கடற்கரையைப் பிரிந்து வாழும் அன்பர்கள், சுண்டலையாவது சுவைத்து மகிழுங்கள்.
தேவையானப்பொருட்கள்:
காய்ந்த வெள்ளைப் பட்டாணி - 1 கப்
அரைக்க:
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அலங்கரிக்க:
பச்சை மாங்காய் - துருவியது அல்லது பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - பொடியாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பட்டாணியைக் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் போட்டு, பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் சிறிது உப்பையும் போட்டு, 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் சற்று ஆறியவுடன், திறந்து, பட்டாணியை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் (மிளகாயைக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் வெந்தப் பட்டாணியைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே இறக்கி வைக்கவும். (அடுப்பில் அதிக நேரம் வைக்கக் கூடாது. அதிக நேரம் வைத்துக் கிளறினால், பட்டாணி அழுத்தமாகி விடும்).
பின்னர் அதன் மேல் தேங்காய், மாங்காய் துண்டுகளைத் தூவி விடவும்.
குறிப்பு: இதில் சில துளி எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கலாம். சிலர் தாளிக்கும் பொழுது, சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்ப்பார்கள். விருப்பமானால் வெங்காயத்தையும் சேர்க்கலாம். 
தேங்காய் அதிகம் விரும்பாதவர்கள், தேங்காயை அரைத்து சேர்ப்பதை தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக, வெந்தப் பட்டாணியில் சிறிது எடுத்து நன்றாக மசித்து விட்டு அதைச் சுண்டலில் சேர்த்துக் கிளறினால், சுண்டல் சேர்ந்தால் போல் இருக்கும். இஞ்சி, பச்சை மிளகாயை மட்டும் நசுக்கி அல்லது அரைத்து தாளிப்பில் சேர்க்கலாம்.


Active Image

தேவையான பொருட்கள்

மட்டன் -11/2 கிலோ

பிரியாணி அரிசி-1 கிலோ

எலுமிச்சம் பழம் - 1,

வெங்காயம்1/2 கிலோ

Image

பிரியாணி மசலாப்பொடி-1 மேஜைக்கரண்டி 

மிளகாய்ப்பொடி - 2மேஜைக்கரண்டி 

மல்லி பொடி--1 தேக்கரண்டி

3 கலர் கேசரி பவுடர்- 1 சிட்டிகை 

தக்காளி-1/2 கிலோ

மிளகாய்-4

கொத்தமல்லி தழை- 1/2 கப் 

புதினா-1/2 கப் 

மஞ்சள்-1 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை- 3 முந்திரி-10

தயிர்-400ml

 Image

நெய்-100ml

ஆயில்-150ml

இஞ்சி-100கிராம்

பூண்டு -75கிராம்-

உப்பு -தேவையான அளவு 

பட்டை-கிராம்புஏலம்-

Image

பாதி வெங்காயத்தை நெய்யில் பொரித்து வைக்கவும

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பூண்டு,இஞ்சியை அரைத்து வைக்கவும்.வெங்கயம்,தக்காளி,பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி

 வைக்கவும்.

Image

கறியை சுத்தம் செய்துபாதி தயிர்.இஞ்சி,பூண்டு,,பச்சை மிளகாய்,மிளகாய்தூள்,உப்பு,சிறிது 

கொ.மல்லிபுதினாபோட்டு 30 நிமிடம் கலக்கி வைக்கவும்.

Image

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் எண்னைய்  ஊற்றி பட்டை-கிராம்புஏலம்-இஞ்சிபூண்டு 

தாளித்து தயிர் போட்டு நன்கு கிளரவும்,

Image

அதில் வெங்காயம் போட்டு பாதி வதங்கியவுடன்

Image

 கறி போட்டு அந்த எண்ணையில் வேகவிடவும் பாதி வெந்தவுடன் அதில் தக்காளியை சேர்க்கவும்

Image

தண்ணீர் சேர்க்காமல் அப்படியே கிளரவும் முக்கியமாக அடிபிடிக்காமல் பார்க்கவும்

{தேவையிருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்}

Image

உகிழங்கை சேர்த்து கிளரவும் இப்போது கறி மசால் ரெடி

Image

மற்றொறு  பாத்திரத்தில் பட்டை-கிராம்புஏலம்-இலை,உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி

கொதிக்க விடவும்

Image

தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை போட்டு மூடி வைக்கவும்

Image

அரிசி 3/4 பதம் வெந்தவுடன், வடிக்கட்டவும்.

Image

 வேகவைத்த அரிசியை  கறியில் போடவும்,{கறி கீழ் இருக்குமாறு பார்க்கவும், கிளர வேண்டாம்}

Image

ஓர் கரண்டியை கொண்டு சமமாக தேய்க்கவும் அதில் எலுமிச்சம் பழம்  பிழியவும்

Image

சட்டியின் மேல் காட்டன் துணீயை விரித்து மூடியை வைத்து மூடவும்

Image

கேஸ்அடுப்பில்சமைப்பவர்கள்தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி 

பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து மூடி  தம்மில் போடவும்

விறகு அடுப்பில் சமைப்பவர்கள் கீழ் உள்ள தீகங்குகளை சட்டியின் மூடியில் போடவும்

Image.

அப்படியே 45 நிமிடம் வைக்கவும்{அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்}

Image

வாணலியில் எண்ணெய்யை விட்டு,காய்ந்த திராசை,முந்திரியையும் பொன்னிறமாகவறுக்கவும்

Image

அதனை பிரியாணியில் போடவும், 3 கலரையும் தணித்தனியாக தண்ணீரில் கலக்கவும்

Image

படத்தில் பார்ப்பது போல் ஊற்றவும்

Image

அதன் மேல் செர்ரி பொரித்த வெங்காயம் போடவும்

Image


Active Image

 

தேவையான பொருட்கள்

 

Image

கத்தரிகாய பெரியது   - 1
மிளகாய் தூள்        - 1/2 தே.க
அரிசிமாவு           - 1/4 தே.க

Image
கார்ன் மாவு          - 1/4 தே.க
உப்பு                -  தேவைகேற்ப்ப
சோம்பு              -  1/4 தே.க
பூண்டு               - 1  
எண்ணெய்           - 1/2 தே.க
பேசில் பௌடர்     - 1/4 தே.க
Image

ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும், எண்னெய் தவிர மற்ற எல்லாவற்றைய்ம் கல்ந்து வைத்து கொள்ளவும்.

Image

முதலில் கத்தரிகாயை நன்றாக கழுவி துடைத்து நல்ல 1/4 இன்ஞ் அளவில் வட்ட வடிவ துண்டுகளாக்கவும் அதனை கலந்த மாவில்  கத்தரிகாயகளை போட்டு பிசிறி வைக்கவும்

Image

இதை ஒவன் க்ரில்லில் ஆயில் ஸ்பேரெ செய்து(ஆயில் தடவி) வைக்கவும். 
Image

ஒவன் டெம்ப்ரேச்சர் 400 டிகிரி  25 நிமிடம் ( ஒவனின் அளவை பொறுத்து கூட்டியோ குறைத்தோ) வைக்கவும்.பத்து நிமிடம் கழிந்து மறுபுறம் திருப்பி வைக்கவும்.

Image
இப்போது நன்றாக நல்ல் கிரிஸ்ப்பி கத்தரிகாய் ரெடி.
இது எல்லாவகை கலந்த சாததுக்கும்  ரொம்ப நல்ல சைட் டிஷ்.
ஒவனில் வைக்கவேண்டாம் என்றால் எண்னெயில் பொறித்தும் 

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2149&Itemid=1

Active Image

 

தேவையான பொருட்கள்

 

Image

சிக்கன் - 3துண்டு

இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி

சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு 

தயிர்- 1 தேக்கரண்டி

எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

 Image

தோசை மாவுகப் 

வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 3

கொத்தமல்லி தழை-2 கொத்து

எண்ணை தேவைக்கேற்ப்ப

வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்

அதனை மிளகுதூள் உடன் கலக்கி வைக்கவும்

Image

ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு ,தயிர்,சில்லிசிக்கன் பொடிபோட்டு நன்கு கலக்கி எலுமிச்சை ஜீஸ் போட்டு 5 மணிநேரம் ஊறவைத்து கிரில் அல்லது தோசைகல்லில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

அதனை பொடியாக நறுக்கிவைக்கவும்

Image

,பின்பு தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசையாக தேய்க்கவும்

Image

உடனே அதன் மேல் சிக்கனை மேலே தூவவும்

Image.

அதர்க்கு மேல் வெங்காய கலவையை போடவும்[இந்த தோசை என் குழந்தைக்கு சுட்டதால்வெங்காயம் சேர்க்கவில்லை]

Image

நன்கு அமுக்கி விடவும்

Image 

தோசை சுற்றிலும் சிறிது எண்ணை விடவும்

Image

தோசை கிரிஸ்பாக வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும்

Image

சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்

தேவையான பொருட்கள் :-

கேழ்வரகு மாவு:-

உப்பு: 3 சிட்டிகை

சர்க்கரை :- தேவையான அளவு

தேங்காய் துருவல் :- தேவையான அளவு

 

செய்முறை:- இது கொஞ்சம் சிரமம் நேரம் பிடிக்கும். கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். இட்லி தட்டில் துணிப்போட்டு, பின் சல்லடையை அதன்மேல் பிடித்து இந்த மாவை அதில் வைத்து தேய்க்கவேண்டும். மாவு கட்டி கட்டியாக ஆகாமல் மெல்லியதாக விழும். அதை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், சர்க்கரை போட்டு கலக்கி பரிமாறவும். 

 

இதில் சலிப்பது கொஞ்சம் நேரம் பிடிக்கும், அப்படி செய்யாமல் நேராக தண்ணீர் விட்டு பிசைந்து வேகவைத்தல் கட்டி கட்டியாக புட்டு நன்றாக வராது. 

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/10/blog-post_03.html

கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் கேழ்வரகு அடை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் முருங்கைகீரையை அதில் சேர்ப்பார்கள். இப்போதும் எல்லோரும் வீடுகளில் இந்த அடையை செய்கிறார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள் very very delicious healthy food!! 

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு வாங்கி தண்ணீரில் ஊறவைத்து, நன்கு 10-15 முறையாவது கழுவவேண்டும், பின்பு சில காசுகளை (1 ரூ, 50 பைசா நாணயங்கள்) போட்டு அரிக்கவேண்டும். இந்த காசுகள் கேழ்வரகில் கலந்து இருக்கும் கற்கலை தனியாக எளிதில் பிரிக்க உதவும். நன்கு தண்ணீரை வடிக்கட்டி வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து வெண்ணெய் போன்று அரைத்து க்கொள்ளவேண்டும்
கேழ்வரகு அடை:- 
தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப
செய்முறை:- வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போடு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.
வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும். 
சூடான சூப்பர் கேப்பம் அடை ரெடி..!!