சமையல்கலை
புதினா சாதம்
பாசிப்பயறு முளை சலட்
பயறு வகைளில் நிறைந்த புரொட்டின் இருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். பொதுவாகவே சமையலில் நாம் பயன்படுத்தி வரும் கடலை, பருப்பு வகைகள், செமிபாடடைவது சற்று சிரமமாக இருக்கும்.
அதைத் தடுக்க இவற்றை நாம் முளைக்க வைத்த பின் சமையலில் சேர்த்து செய்து கொண்டோமேயானால் விரைவில் அவை சமிபாடடையும். அத்துடன் கூடிய போஷணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1. முழுப் பாசிப்பயறு – 1 கப்
2. தக்காளி – 2
3. வெங்காயம் - 1
4. குடமிளகாய் - 1 (விரும்பிய வர்ணத்தில்)
முறை 1
ஓலிவ் ஓயில் 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் ¼ ரீ ஸ்பூன்
உப்பு, மிளகு தூள் தேவையான அளவு
தேசிக்காய் சிறிதளவு
முறை 2
சோயா சோஸ் 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள், உப்பு தேவையான அளவு
ஒயில் 1 ரீ ஸ்பூன்
விரும்பினால் தேசிச் சாறு சிறிதளவு.
செய்முறை
பாசிப்பருப்பை தண்ணீரில் 8-9 மணித்தியாலம் ஊற வைத்து எடுக்கவும்.
வெள்ளை நப்கின் துணியை நீரில் நனைத்து எடுத்து அதில் பயறை வைத்து சுற்றி ஒரு கோப்பையில் போட்டு மூடி வையுங்கள்.
மறுநாள் காலையில் திறந்து பார்த்தால் சிறிது முளை வந்திருக்கும்.
துணி உலர்ந்திருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் மடித்து வைத்து மூடிவிடுங்கள்.
மறுநாள் காலையில் எடுத்தால் நன்றாக முளை விட்டிருக்கும்.
எடுத்து உணவு தயாரித்துக் கொள்ளலாம்.
(இப்பொழுது சுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற்றுகளாக முளைத்த பயறு கிடைக்கிறது)
சலட் செய்யும் முறை 1
தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள். ஒரு போலில் போடுங்கள்.
முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.
ஒலிவ் ஓயில் அல்லது சலட் ஓயில் உடன் பூண்டு பேஸ்ட், உப்பு மிளகு, தூள் கலந்து எடுத்து, சில துளி எலுமிச்சம் சாறு விட்டு வெஜிட்டபிள் மேல் ஊற்றி கலந்து விடுங்கள்.
பச்சைப் பயறாக நேரடியாக சாப்பிடுவது சிறந்தது.
சலட் செய்யும் முறை 2
தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஓயில் விட்டு முளைப் பயறைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி உப்பு, சோயா சோஸ், மிளகு தூள், தூவி கலந்து இறக்கி விடுங்கள்.
நல்ல மிளகு வாசனையுடன் இருக்கும்.
அத்துடன் வெட்டி வைத்த மரக்கறிகளை எடுத்து அவற்றிலும் சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.
விரும்பினால் தேசிச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிளேட்டில் எடுத்து வைத்து விடுங்கள்.சத்துச் செறிவு மிக்க சலட் உங்களை அழகுடன் சாப்பிட அழைக்கும்.
:- மாதேவி -
வத்தக்கொழம்புப்பொடி...செய்யலாமா?
செய்வோமா? குழம்புப்பொடி!
தேவையானவை:
விதைக் கொத்தமல்லி----250 கிராம்
துவரம்பருப்பு---------- 75 கிராம்
அரிசி-------------------75 கிராம்
ஜீரகம்-------------------75 கிராம்
மிளகு-------------------75 கிராம
வெந்தயம்----------------50 கிராம்
கொத்தமல்லியை தனியாக வெறும் கடாயில் வறுத்துக்கொண்டு, பிறகு மற்றவற்றையும் அதேபோல்
வறுத்துக்கொள்ளவேண்டும். லேசாக வாசனை வரும் வரை.
காய்ந்த மிளகாய்---விருப்பத்துக்கேற்ப---150 அல்லது 200 கிராம்
கறிவேப்பிலை மிளகாய்க்கு சமமாக.
இவை இரண்டையும் கடாயில் தேவையான எண்ணையூற்றி மொறுமொறுவென்று வறுக்க வேண்டும். சிறிது ஆறியதும் மெஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த சூடு ஆறியதும் பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகிக்கலாம்.
இதுவே வத்தக்கொழம்புப்பொடி.
பெரியவர்களும் குழந்தைகளும்....சாரி..சாரி.. பழக்கதோஷம்.
வாய்க்கு வொணக்கையாக, காரமாக சாப்பிடும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எலுமிச்சையளவு புளி கரைத்துக்கொண்டு இந்தப்பொடி 4-5 கரண்டிகள் + மஞ்சள் பொடி 2 கரண்டிகள் + தேவையான உப்பு சேர்த்து கலக்கி அதோடு ஒன்றிரண்டாக அரைத்த சாம்பார் வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லியும் சேர்த்து பாத்திரத்தில் வெந்தயம் பொறித்து குழம்புக் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
இதற்கு பொறுத்தமான காய்கள்...பூண்டு, முருங்கக்காய்-கத்தரிக்காய், ஊறவைத்து வேகவைத்த
மொச்சை இன்னும் கைக்கு கிடைத்த காய்கள் எல்லாமும். குழம்பு விரும்பி ஏற்றுக்கொள்ளும்.
இதை நான் பூண்டு போட்டு கன்டென்ஸ்டாக செய்து வைத்துக்கொள்வேன்.
http://9-west.blogspot.com/search/label/புளிக்குழம்புப்%20பொடி.
பால்கோவா
தேவையானவைகள்
பால் - இரண்டு லிட்டர்
சர்க்கரை - அரைக் கிலோ
பாம்பே ரவை - 200 கிராம்
குங்குமப்பூ - 2 பிஞ்
நெய் - 50 கிராம்
பச்சைக் கற்பூரம்
கிண்டலாமா
பாலை ஏஎம்சி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும். மூடியிலுள்ள
மீட்டரில் சிவப்பு பாயிண்டுக்கு வந்ததும் மூடியை எடுத்துவிட்டு கொதிக்கவிடவும். இடையிடயே
கிண்டவும். இந்த பாத்திரத்தில் மற்ற பாத்திரங்களைப்போல் அடி பிடிக்காது. ஓரங்களில் பால் சேராமல் கிண்டிக்கொண்டேயிருக்கவும். பச்சைக் கற்பூரத்தை உள்ளங்கையில் வைத்து நசுக்கி உதிர்த்து பாலோடு சேர்க்கவும்.
பால் பாதி சுண்டியதும் குங்குமப்பூவையும் ரவையையும் போட்டு கட்டி விழாமல் கிளரவும்
ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து விடாமல் கிண்டவும்
பாலும் ரவையும் சேர்ந்து சுருள, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
தேவையான பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். ரவை பால்கோவா தயார்.
இனிப்புகளில் பச்சைக் கற்பூரம் சேர்ப்பது பற்றி சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
அப்பாவிடம் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரசனை போன்ற பொருட்கள்
ஸ்டாக் இருக்கும் எங்களுக்குத்தேவையான போது அப்பாவிடம் போய் வாங்கிக் கொள்வோம்.
குங்குமப்பூ அளந்து தருவதே ஓர் அழகு. சின்ன தராசில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தை
ஒரு பக்கமும் அந்த ஒரு ரூபாய் எடைக்கு குங்குமப்பூவும் நிறுத்து இன்ஜெக்ஷன் பாட்டிலில்
போட்டு தருவார்கள். கடையில் அதன் விலையும் தெரியாது. அப்பா காலத்துக்குப் பிறகுதான் குங்குமப்பூவின் விலையே தெரிந்தது. பச்சைக்கற்பூரமும் ஒரு சிறிய பாட்டிலில் தருவார்கள்.பச்சைக் கற்பூரத்தை சேர்க்கும் காரணமே தெரியாமல் அப்பா சொன்னதால் உபயோகித்துக்கொண்டிருந்தோம். காரணமும் கேட்கத் தெரியாது. அதிக இனிப்பு சாப்பிடுவதால்
ஏற்படும் சர்க்கரை நோயை மட்டுப்படுத்தவே இனிப்பில் பச்சைக் கற்பூரம் சேர்க்கிறோம்.
இந்த ரவை சேர்த்து பால்கோவா செய்யும் முறையை எனக்கு சொல்லித்தந்தவர் என் மதனியின்
சகோதரி திருமதி மணி. அவர் செய்து கொடுத்ததை ருசித்தவுடன் பக்குவம் கேட்டு தெரிந்து கொண்டேன். பால்கோவாவில் பால் தவிர என்ன சேர்ந்திருக்கிறது என்று கேட்ட போது
எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்!!!
http://9-west.blogspot.com/search/label/AMC%20%20பால்கோவா
அரைத்துவிட்ட சாம்பார் (புது விதம்)
முருங்கைக்காய் 2
சின்ன வெங்காயம் 10
துவரம்பருப்பு 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
எண்ணைய்,உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை சிறிதளவு.
அரைக்க:
மிளகாய்வற்றல் 3
கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தனியா 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது
தேங்காய் துருவல் அரை கப்
(எல்லாவற்றையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்து) அதனுடன்
சின்ன வெங்காயம் 4
தக்காளி 1
பட்டை ஒரு துண்டு
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
துவரம்பருப்பை குக்கரில் இரண்டு கப் தண்ணீர் வைத்து (நான்கு விசில்) வேகவைக்கவும்.
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
சாம்பார் செய்யும் பாத்திரத்தை எடுத்து அதில் சிறிது எண்ணய் விட்டு கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை
தாளித்து காய்கறிகளை வதக்கவும்.வதங்கியவுடன் வெந்த பருப்பு, அரைத்த விழுது,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
(தேவையானால் வெந்த பருப்பை mixie ல் ஒரு சுற்று அரைக்கவும் )
சிறிது கொதித்த வுடன் புளித்தண்ணீரை விடவும்.நன்கு கிளறிவிடவும்.எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன்
இற்க்கவும்.
இந்த சாம்பார் ஒரு வித்தியாசமான மணத்துடன் சுவையாக இருக்கும்
ஹோட்டல் சட்னி
தேவையானவை:
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 4
கொத்தமல்லி தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானவை
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
செய்முறை:
கொத்தமல்லித்தழையை வென்னீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து பிழிந்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் நன்கு வதக்கவும்.
ஆறினவுடன் கொத்தமல்லித்தழை,உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த சட்னி இட்லி,தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
ஓட்டலில் இட்லிக்கு கொடுக்கும் சட்னிகளில் இதுவும் ஒன்று
பிரைட் ரைஸ்
வேர்க்கடலை பகோடா
தேவையானப்பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வேர்க்கடலை - 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு ஒன்றாகக் கலக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணையை விட்டு, மீண்டுன் கலக்கவும். பின் அதில் சிறிது நீரைத் தெளித்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், மாவை எடுத்துக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பிஸி பேளா பாத்
மிக விரைவாகச சமைக்கவும் பச்சிலேஸ்சிற்கும் இலகுவானது என்பதால் அனைவரும் விரும்புவர்.
சாதத்துடன் பருப்பும் சேர்வதால் போஷாக்கைக் கொடுக்கும். பசியையும் தணிக்கும்.
டயபடிஸ், கொலஸ்டரோல் உள்ளோரும் நெய் தவிர்த்து செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1. அரிசி - 1 கப்
2. துவரம் பருப்பு – ½ கப்
3. தக்காளி – 5
4. சின்ன வெங்காயம் - 10, அல்லது பெரிய வெங்காயம்
5. பெருங்காயம்- சிறிதளவு
6. மஞ்சள் பொடி – சிறிதளவு
7. புளி - சிறிதளவு
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நெய் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைக்க
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ½ ரீ ஸ்பூன்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 4-5
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
வெங்காயத்தை நீளவாட்டில் வெட்டுங்கள்.
வதங்கியதும் உப்பு புளி விட்டு அரைத்த பொடி சேர்த்து கொதிக்க, ரைஸ் போட்டு கிளறி இறக்குங்கள்.
பரிமாறும் பிளேட்டில் போடுங்கள்.
விரும்பிய கறியுடன் பரிமாறுங்கள்.
பப்படம் சுவை கொடுக்கும்
:- மாதேவி -:
கறி ரொட்டி
ஈவினிங் டிபனுக்கு ஏற்றது. குழந்தைகளின் டிபன் பொக்ஸ்க்கும் கொடுத்து விடக் கூடியது. இரவிலே மாவைத் தயாரித்து வைத்துக் கொண்டால் காலையிலே செய்து கொள்ளலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போதும் செய்து எடுத்துச் செல்லலாம்.
கறி ரொட்டி
தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு
1. மைதா மா – 2 கப்
2. ஈஸ்ட் - 1 ரீ ஸ்பூன்
3. உப்பு சிறிதளவு
4. மார்ஜரீன் - 1 டேபிள் ஸ்பூன்
கறி தயாரிக்க
1. மீன் துண்டுகள் - 1 கப்
2. வெங்காயம் - 1
3. பூண்டு - 2
4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன்
5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்
6. மிளகாய்த் தூள் - ரீ ஸ்பூன்
7. மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்
8. கறிவேற்பிலை சிறிதளவு
9. உப்பு, புளி தேவையான அளவு
10. ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள்.
2. எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், உள்ளி லேசாக வதக்கி கறிவேற்பிலை சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள், சீரகத் தூள் சேர்த்து கரைத்த புளிக் கரைசல் விட்டு மீன் துண்டங்களைப் போட்டு அவித்து எடுத்து, ஆற முள்ளை நீக்கி சற்று மசித்து எடுங்கள்.
3. மாவை சிறு பந்து போல எடுத்து, போர்ட்டில் வைத்து ரோலரால் மெல்லியதாக உருட்டி, கறியை வைத்து பார்சல் போல மடித்து வையுங்கள். அதை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
4. தோசைக் கல்லிலும் செய்து கொள்ளலாம். தோசைக் கல்லில் செய்வதாக இருந்தால் பூரி போன்று வட்டமாக உருட்டி கறியை வைத்து இன்னொரு பூரியால் மூடி மேலே சற்று உருட்டிவிட்டால் அமர்ந்து வரும். இதை மெல்லிய தீயில் இரு புறமும் விரும்பிய எண்ணையை விட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
5. அவசரத்திற்கு செய்வதாயின் மாவை எடுத்து கிண்ணம் போல செய்து, அதற்குள் கறியை வைத்து மூடி கையால் தட்டியும் செய்து கொள்ளலாம்.
6. சதுரம், முக்கோணி, அரை வட்டம் என நாளுக்கு ஒவ்வொன்றாக விரும்பிய வௌ;வேறு கறிவகைகளில் செய்து அசத்துங்கள்.
:- மாதேவி -:
நெல்லிக்காய் தயிர் பச்சடி
தேவையானப்பொருட்கள்:
நெல்லிக்காய் - 5 அல்லது 6
தயிர் - 1 பெரிய கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
நெல்லிக்காயை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளுடன், தேங்காய்த் துருவல். பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தயிரை நன்றாகக் கடைந்து அதில் அரைத்த விழுதையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பச்சடியில் கொட்டிக் கலக்கவும்.
நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்
தேவையானப்பொருட்கள்:
நெல்லிக்காய் - 5
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை = 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.
சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.
நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக பிசறி விடவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியைத்தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
வெங்காயத் தூள் பகோடா
தேவையானப்பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 1 கப்
சோளம் அல்லது அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு
செய்முறை:
வெங்காயத்தைத் தோலுரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதில் சிறிது உப்பைத்தூவி, விரல்களால் மெதுவாக பிரட்டி விட்டு, வெங்காயத்துண்டுகளைத் தனித்தனியாக பிரிக்கவும். அதை அப்படியே பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.
இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை ஒரு கையில் எடுத்து, நன்றாகப் பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் சோளம் அல்லது அரிசி மாவைத் தூவி பிரட்டி விடவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டுத் துண்டுகள், சோம்புத் தூள், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறவும். அதன் பின் கடலை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிரட்டி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெங்காயதிலுள்ள நீரிலேயே மாவு ஒட்டிக் கொள்ளும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், அடுப்பை தணித்துக் கொள்ளவும். ஒரு கை மாவை எடுத்து இலேசாக விரல்களால் எண்ணையில் உதிர்த்து விடவும். பகோடா வெந்து சிவந்தவுடன், அரித்தெடுத்து வைக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது சூடான சாம்பார் சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
குறிப்பு: பூண்டு வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம்.
பச்சைமிளகாய் நறுக்கும் போது
புளி,சீனி இரண்டையும் தண்ணீரில் கலந்து கைகளில் தேய்த்துவிட்டு பின்பு எவ்வளவு மிளகாய் நறுக்கினாலும் கையில் எரிச்சல் எற்படாது. |
ஸ்டாபெர்ரி ஜாம் குக்கீஸ்
மைதாமாவு-3 கப்
சர்க்கரை பவுடர்- 2கப்
ஏலம் எஸ்ஸன்ஸ்-3 சொட்டு
வெண்ணெய்-11/2கப்
முட்டை- 1
பேக்கிங் பவுடர்-1தேக்கரண்டி
உப்புத்தூள்-1 சிட்டிகை
ஸ்டாபெர்ரி ஜாம்-தேவையான அளவு
வெண்ணெயுடன் ஓர் பாத்திரத்தில் போட்டு நன்கு கட்டியில்லாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.
மைதாமாவில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்
அதில் சர்க்கரை பவுடரை சிறிது சிறிதாக தூவவும்
அப்படியே சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்,தேவையிருந்தால் சிறிது வெண்ணையை சேர்க்கவும்
அதனுடன் வெண்னையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவேண்டும்
.இதை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து கையால் அழுத்தி வட்ட வடிவமாக்கி வைக்கவும்
அல்லது உங்களுக்கு பிடித்தமான வடிவில் கூட வைக்கலாம், அதர்க்கு நடுவில் ஒர் பென்சிலில் பின்புறம் வைத்து அழுத்தி எடுக்கவும்
இந்த பிஸ்கட்களை நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில்325"யில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இப்போது பிஸ்கட் ரெடி,
பாதி ஆறியவுடன் பென்சிலில் வைத்த அச்சியில் நடுவில் ஜாம் வைத்து ஆறவிடவும்
இப்போது ஸ்டாபெர்ரி ஜாம் குக்கீஸ் ரெடி
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2361&Itemid=1
மாலாடு{தீபாவளி ஸ்விட்}
தேவையானவை
பொட்டுகடலை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 4 தே.க
ஏல தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5
முதலில் பொட்டுகடலையை பொடிக்கவும்
சர்க்கரையும், ஏலக்காயும் போட்டு பொடித்து கொள்ளவும்
ஒரு தவாவில் அல்லது கனமான பாத்திரத்தில் நெய்விட்டு சூடாக்கவும்
அதில் ஒடித்த முந்திரி போடவும் அது வறுபட்டவுடன் அடுப்பை
அணத்துவிடவும்,
அந்த சூடிலேயே இந்த மாவு, சர்க்கரையும் பொட்டு
மீதியுள்ள நெய்ய் விட்டு நன்றாக கலந்து
கை பொறுக்கும் சூட்டில் விரும்பிய அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவையான மாலாடு ரெடி
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2338&Itemid=1
அத்திபழ அல்வா
பேரீச்சை பழம்-50 கிராம்
அத்திப்பழம் - 100கிராம்
பால் - 1லிட்டர்
சீனி - 275 கிராம்
நெய் - 200கிராம்
முந்திரி பருப்பு-50கிராம்
ஏலம்-10
பிஸ்தா-50கிராம்
எஸ்சென்ஸ்-1/2 மூடி
பாதம் - 50 கிராம்
பாதம்,பிஸ்தாவை சிறிது நேரம் ஊறவைத்து தோல் எடுத்து நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
முந்திரியையும் நீளமாக நறுக்கிக்கொள்ளவும்
பாலை தண்ணீர் இல்லாமல் நன்றாக காய்ச்சவும்
பாதி பாலில் நறுக்கிய பேரீச்சை பழம் அத்திப்பழத்தை சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்
அதனை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
பாலில் அத்திப்பழத்தை சேர்த்து நன்கு காய்ச்சவும் தீயை மிதமாக வைக்கவும்,பேஸ்ட் பக்குவம் வந்தவுடன்
சீனியயும் சேர்க்கவும் நன்கு கிளரவும்
கலர் மாறி வரும் வரை நன்கு கிளரவும்
பின் நெய்யை ஊற்றி கிளரவும்
பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன்
நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறவும் எஸ்ஸென்ஸ் ஊற்றி இறக்கவும்
சுவையான சூப்பர் அல்வா ரெடி
அத்திப்பழம் உடம்புக்கு மிகவும் நல்லது, ஆனால் குழந்தைகள் அவ்வளவாக விரும்புவது இல்லை ,இதனை போல் செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2332&Itemid=1
ராகி லட்டு
தேவையானவை
-----------------------------
வ்றுத்த ராகி மாவு - 1 கப்
சர்க்கரை - 11/2 கப் (பொடியாக்கியது)
நெய் - 1/4 கப்
ஏல பொடி - 1/4 டீ ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு நன்றாக வறுக்கவும்,
அது ஆறிய பிறகு வேறு ஒரு பாத்திரத்தில் நெய்யை விட்டு நன்றாக சூடாக்கவும்.
அதில் இந்த மாவு, ஏலபொடி, சர்க்கரை முந்திரி எல்லாவற்றையும்
ஒன்றாக கலக்கவும்
அதில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக
பிடிக்கவும்..
சுவையான ராகிலட்டு ரெடி
இது உடம்பிற்க்கு ரொம்ப நல்லது.
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2254&Itemid=1
மாங்காய் பருப்பு
தேவையான பொருட்கள் இஞ்சிபூண்டு - 1 தேக்கரண்டி முதலில் பருப்பை வறுத்து கொள்ளவும் காய்களை நீளமாக நறுக்கவும் பருப்பை குக்கரில் போட்டு அதில் வெங்காயம்,மிளகாய்.கத்திரிக்காய்,மாங்காய்,மஞ்சள்தூள் போட்டு மிளகாய் தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி நன்கு மசிக்கவும்
நன்கு ஆறியதும் மாசித்தூள்ஊறுக்காயை நன்கு பிசைந்து அதில் போடவும்,அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும் சுவையான பருப்பு மாங்காய் ரெடி குறிப்பு ஊருகாய் இல்லையெனில் சிறிது புளி சேர்க்கவும், விருப்பம் இருந்தால் மாசிதூள் சேர்க்கவும்
|