பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?
சில முக்கியமான விடையங்கள் பற்றிய அடிப்படையான குறிப்புகள் அவசிமாகிவிடுகின்றது. கருணாகுழு பிரிந்து சென்றதை வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக பிரபாகுழு கூறி, பிரச்சனையின் அடிப்படைச் சாரத்தையே மறுக்கின்றனர். மறுபுறத்தில் ஆதாரமற்ற வதந்திகளையே சமூக கருத்தாக்குகின்றனர். எந்தவிதமான அடிப்படையுமற்ற வகையில் பரப்பும் வக்கிரங்கள், தனிப்பட்ட நபர்களின் கற்பனைத் திறனுடன் இசைந்து செல்லுகின்றது. தமிழ் மீடியாக்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள், கட்டுரைகள் என்று பலவற்றை வண்ணவண்ணமாக வெளியிடுகின்றனர். புலியின் பாசிசக் கோட்பாட்டுக்கு இசைவான பினாமியத்தை அடிப்படையாகக் கொண்ட வானொலிகள், கற்பனைகளை விதைத்து, விவாதம் என்ற பெயரில் வக்கரிக்கின்றது. உண்மையில் பாசிசக் கட்டமைப்பில், தமிழ் மீடியாவும் வக்கரித்து நிற்கின்றது அவ்வளவே.