ஏகாதிபத்தியங்களும் புலிகளும்
புலிகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான அரசியல் பொருளாதார உறவு என்பது, இனவாத அரசு கையாளும் உறவுக்கு முரணானது அல்ல. உலகமயமாதல் நிகழ்ச்சியில் அக்கம்பக்கமாக, வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் ஒருவரையொருவர் தூக்கிவிடும் கொள்கையையே புலிகளும், இனவாதச் சிங்கள அரசும் கைக்கொள்கின்றன. இவர்களுக்கு இடையில் அடிப்படையில் என்ன முரண்பாடு உண்டு? தமிழனை அடக்கியாண்டு உலகமயமாக்கத்துக்கு மேலும் விசுவாசமாக யார் இருப்பது என்பதே. இந்த இடத்தில் ஏகாதிபத்தியம் தனக்கு விசுவசமான இந்த இரண்டு நாய்களையும் எப்படி சமாதானப்படுத்தி, ஒரேவீட்டில் காவல் காக்க வைக்கலாம் என்ற தனது நரித்தனத்தற்காக சமாதானம் அமைதி என்று கூறி ஒற்றுமைப்படுத்தும் களத்தில் இறங்கியுள்ளன. கடந்த இரண்டு வருடத்துக்கும் அதிகமாக நடக்கும் இழுபறியான நீடித்த நிகழ்ச்சி நிரலில், ஏகாதிபத்திய நலனைக் கடந்து வெளியில் எதுவும் நடக்கவில்லை.