Language Selection

பி.இரயாகரன் 2001-2003

book _5.jpgஆணாதிக்கம் சமூகப் பொருளாதார ரீதியாகப் பலம்பெறும்போது, மொழியிலும் அதன் செல்வாக்கு ஆழமாக ஊடுருவுகின்றது. இனவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு, பால்வேறுபாடு வேறு பிரிந்த ரீதியில் இனம் கண்டு விளக்குவதற்கு அப்பால், ஆணாதிக்க அடிமைத்தனத்தில் இருந்து விளக்குவதாக மொழியுள்ளது. மொழி பாலியல் ரீதியாக வரையறைக்கு உட்பட்டும், வரையறைகளை மீறியும் பால்தன்மையை வெளிப்படுத்துகின்றது. மொழியின் பயன்பாடு, அதன் உள்ளடக்கம், வெளிப்பாடு தொடர்பாக ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

book _5.jpgஇந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.

book _5.jpgசாதி ஒடுக்குமுறை பற்றி இன்று பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், பாட்டாளிவர்க்கம் மட்டுமே இதைச் சரியாக இனம் காண்கின்றது. இதுபற்றி நாம் பிறிதொரு நூலில் ஆராய்வோம். ஆனால் சாதியை உருவாக்குவதில் குடும்பத்தின் பங்கு என்ன என்பது இப்புத்தகத்தின் குறிப்பான விடயமாகும். உயர்சாதி ஆண்களின் ஆணாதிக்கத்தை இந்துமதம் பாதுகாத்தபடிதான், சாதியமைப்பில் பாலியல் விளக்கத்தையும் கொடுத்தது.

book _5.jpgநாம் பெண்ணின் உரிமை, கடமை, மற்றும் ஆணாதிக்கம் தொடர்பாக ஆராய வௌ;வேறு வரலாற்று, இருகட்டங்களின் ஆதாரங்களில் இருந்து பார்ப்போம்.


மனுதர்மத்தைப் பெண்கள் மீது ஆணாதிக்கப் பார்ப்பனியம் திணிக்கும்முன் சமுதாயம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பது எம்முன் கேள்வியாக உள்ளது அல்லவா? ~அதர்வண வேதம்| பெண்கள் உபநயனம் செய்யவும், சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும், வேத மந்திரங்களைப் பயின்றதையும் உறுதி செய்கின்றது. பாணினியின் ~அஷ்டாத்யாயில்| பெண் குருகுலத்தில் பயின்றதை உறுதி செய்கின்றது. பதஞ்சலியின் ~மகாபாஷ்யத்தில்| பெண்கள் பயிற்றுவிக்கும் குருவாக இருந்ததை உறுதி செய்கின்றது. பெண்கள் தத்துவவியல், சமயம் போன்றவற்றில் ஆண்களுடன் விவாதம் செய்ததை வரலாறு நிறுவுகின்றது.

book _5.jpg2500 வருடம் பழமை வாய்ந்த புத்தமதம் பற்றிய மதம் சார்ந்த தமிழ் மூல நூல்கள் இன்மையால், கிடைத்த தரவுகளில் இருந்தே கூட புத்தமதம் ஓர் ஆணாதிக்க மதமாக இருப்பதைக் காணமுடியும். புத்தமதத்தை ஆணாதிக்கமற்ற மதமாகக் காட்ட முனையும் எல்லாப் போக்குகளின் பின்பும், பிழைப்புத்தனமே எஞ்சிக் கிடக்கின்றது.

book _5.jpgஆணாதிக்கத்தின் இன்னுமொரு வடிவமே முஸ்லிம் மதமாகும். வரலாற்று ஓட்டத்தில் கிறிஸ்தவத்துக்குப்பின் முஸ்லிம் மதம் உருவான போது, அக்காலத்துக்கே உரிய கிறிஸ்தவத்தை விட முற்போக்கான பாத்திரத்தை முஸ்லிம் மதம் ஆற்றியது. இது இருந்த சமூகத்தின் சில மூடப்பழக்க வழக்கங்கள் மீதான மாற்றத்துடன் சமுதாயத்தில் சில முன்னேறிய சீர்திருத்தத்தை முன்தள்ளியது. இது அக்காலத்துக்கே உரிய பல தீர்வுகளைச் சீர்திருத்தத்தினூடாக முன்வைத்தது. இந்த வகையில் பெண்கள் மீது மதத்தை நிலைநிறுத்தும் வடிவில் சில சீர்திருத்தத்தையும் முன்வைத்தது. கிறிஸ்தவம் தோன்றிய போது உந்தப்பட்ட சமூக ஆற்றலைப் பின்னால் அவை இறுகிய இயங்கியல் அற்ற இறுக்கமான ஒழுக்கமாக மாறிய போது, வளர்ச்சி இறுகி ஜடமானது.

book _5.jpgசமுதாயம் உற்பத்தி என்ற அடிக்கட்டுமானம் சார்ந்து ஆணாதிக்கமாக மாறிய போதே, பெண்ணின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் அதையொட்டி மாறின, மாறிச் செல்கின்றன. இதில் சிறுவழிபாடு முதல் பெரு வழிபாடு வரை ஏற்றத்தாழ்வான ஆணாதிக்க வடிவத்தைக் கொண்டு கடவுள்கள் புனர் உற்பத்தி செய்யப்பட்டன. பெண் தெய்வங்கள் மனிதச் சமுதாயம் போல், ஆண் தெய்வங்களின் மனைவிமாராக மாற்றப்பட்டனர் அல்லது உறவுமுறை ஏற்படுத்தப்பட்டு ஆண் - பெண் உறவு வழியில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.

book _5.jpgஎதார்த்தத்தில் இன்று நிலவிவரும் நிலப்பிரபுத்துவக் குடும்பம் மற்றும் ஏகாதிபத்தியக் குடும்பம் மற்றும் அவற்றின் சிதைவுகளையே வரலாற்றின் தொடர்ச்சியாகப் பார்த்தல், விளக்குதல் தொடர்கின்றது. சாதாரண மக்களிடம் இப்படிப்பட்ட விளக்கம் இருந்தால் அதைப் போராட்டத்தினூடாக மாற்ற முடியும். ஆனால் சமூக அக்கறையை வெளியிடுபவர்களும் இதன் பாதிப்பில் நீடிக்கின்றனர். புரட்சிக்காக இயங்கும் புரட்சிகரக் கட்சிகளில் கூட பின்தங்கிய மக்கள் கூட்டங்களுக்குள் வேலை செய்ய செல்கின்றபோது, அங்கு இன்னும் நிலவிவரும் குழுமணங்கள் போன்ற அல்லது அதன் எச்சச் சொச்சத்தை அநாகரிகமாகப் பார்ப்பதும், அதன் நல்ல பண்புகளை ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில் திருத்த முற்படுவது காணமுடிகின்றது.

book _5.jpgபெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும், முதல் வர்க்கச் சுரண்டலும் பெண்ணுக்கு எதிராக ஏற்பட்டது. அந்த நாள்முதலே பெண்ணின் போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்டது.


ஆரம்பத்தில் பெண் - ஆண் சார்ந்த சமுதாயப் போராட்டம் என்பது இயற்கைக்கும், மற்றைய உயிரினத்துடனும் உயிர் வாழ்வதற்கானதாகப் பெண்ணின் தலைமையிலான போராட்டமாக இருந்தது. இதன் பின்னால் குழந்தையின் உயிர் வாழ்தலின் பாதுகாப்பு கருதி, பெண்கள் தமது குழந்தைகளுடன் பாதுகாப்பு இடத்தில் தங்கி தற்காப்பில் நிற்க, பெண் மற்றும் குழந்தைகள் அற்ற ஆண்கள் வேட்டையாடவும் உணவு சேகரிக்கச் சென்ற வரலாற்றில், உணவின் உரிமையையும், உபரியையும் தனதாகக் கண்ட ஆண், அதைப் பெண்ணுக்கு நிபந்தனைக்கு உள்ளாக்கி கொடுக்கத் தொடங்கினான். அத்துடன் வேட்டைக்குச் சென்ற ஆண் தனது பொருளாதார ஆதிக்கத்தாலும், பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரத்தாலும், பெண்ணின் பணிகளை ஆண் வரையறுக்கத் தொடங்கினான்.

book _5.jpgமனித முரண்பாடுகள் இயற்கை தோற்றுவித்தவையல்ல. இயற்கையில் நீ சிறியவன் - நான் பெரியவன் என்றோ, ஏழை, பணக்காரன் என்றோ, ஆண் - பெண் என்றோ... பிளவுகள் அற்ற பரிணாமத்தின் தேர்வில்; மனிதன் இயற்கையைத் தனது உழைப்பைக் கொண்டு மாற்றத் தொடங்கியவுடன், உற்பத்தியின் வேறுபட்ட தன்மையுடன் கூடிய வேலைப் பிரிவினையும், பிளவும், மனித வளர்ச்சியை ஒட்டிய இயற்கைப் பிளவுகளும் வளர்ச்சி பெற்றது. இந்த இயற்கையின் மீதான உழைப்பினால் ஏற்பட்ட, உற்பத்தியின் வளர்ச்சியினால் ஏற்பட்ட பிளவுகள், இயற்கையையும் மனிதனையும் அடிமைப்படுத்த, சமுதாயத்தின் இயற்கைப் பிளவுகள் மனிதப் பிளவுகளாகி அடிமைத்தனத்துக்கும், சுரண்டலுக்கும் வித்தி;ட்டன.

book _5.jpgபெண் மீதான ஆணின் அடக்குமுறையே முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பதை முதலில் கூறியது ஏங்கெல்ஸ்சே! எல்லா மனித அடக்குமுறையின் முதல் மூலம் இந்த வர்க்க அடக்குமுறையில் தோற்றம் பெற்றது. இதை முதன் முதலில் கூறியதும், இதற்கு எதிராக முதலில் போராடியதும், மார்க்சியம் மட்டும்தான். தொடர்ந்து இதற்கு எதிராகப் போராடும் ஓர் அரசியல் பொருளாதார, பண்பாட்டு வடிவமாக உள்ளதும் மார்க்சியம் மட்டும்தான். பெண்ணின் உழைப்பு, வேலைப் பிரிவினையூடாக ஆண்களால் சூறையாடப்பட்ட நிலையில், அந்த வர்க்கப் பகையை உள்ளடக்கிய ஒரு வர்க்கப் போராட்டத்தை, ஆண் சார்ந்து சமூகமயமாகியுள்ள ஆணாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்படாமல் பெண் விடுதலையடைய முடியாது. ஆணாதிக்கத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டம் பெண்ணின் விடுதலைக்கான முன் நிபந்தனையாகும்.

book _5.jpgஆணாதிக்கத்துக்கு எதிராக மார்க்சியம் போராடவில்லை அல்லது கவனமெடுக்கவில்லை என்று கூறும் மார்க்சியம் அல்லாத பெண்ணியவாதிகளின் பெண்ணியத்தையும், மார்க்சியத்தின் போராட்ட வரலாற்றையும் இந்த நூல் ஆய்வு செய்கின்றது. மார்க்சியம் பெண்களின் பிரச்சனையை ஒட்டி கவனம் எடுக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்பதைத் தகர்ப்பதிலும், பெண்ணியத்தின் பின், அரங்கேறும் ஆணாதிக்கச் சலுகைகளையும் இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது. இதேபோல் தேசியம், மதம், நிறம், காலனித்துவம் போன்றவற்றிலும் அதாவது நேரடி வர்க்கப் போராட்டம் தவிர்ந்தவற்றில் மார்க்சியம் கவனம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எப்படி வெறும் அபத்தங்களோ, அதேபோலத்தான் பெண்ணியமும். வர்க்கப் போராட்டம் என்பது சமூக இயக்கத்தின் அனைத்துத் துறையிலும் உள்ளடங்கியது என்பதை மார்க்சியம் உட்கிரகித்தமையால்தான் அது வெல்ல முடியாத மக்களின் போராட்டத் தத்துவமாகவுள்ளது.

book _5.jpgபழந்தமிழ் இலக்கியங்கள் பெண் வழிபாட்டின் பல்வேறு தகவல்களை விட்டுச் சென்றுள்ளது. பெண்ணே உலகத்தைப் படைத்தவள் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. ''மோடு" என்பது வயிறு என்று பொருள். எல்லோரையும் பெற்ற வயிறு என்ற பொருளில் தாய்த் தெய்வம் மோடி என்றழைக்கப்பட்டாள்31 (பெரும்பாணாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை - 458), மேடடேந்தரிவை (இராவண காண்டம் - 106), பெருமோட்டுக்கிழதன் (தனிப்பாடல்), பெரு மோட்டாள் (தகடூர் யாத்திரை)22 என்ற பெண் தெய்வங்கள் ஆண் உறவின்றி கன்னியாகவே உலகத்தைப் படைத்தாள் என்ற கருத்து, பெண்தெய்வ வழிபாட்டின் மூலம், பெண்; தலைமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றது. இதையே தாயுமானவர்,