Language Selection

புதிய ஜனநாயகம் 2010

.............................................................................................
தீட்சிதர்களைப் பார்ப்பனர் என்று சொல்வதையே எதிர்க்கும்மார்க்சிஸ்டுகள்; சொல்லில் தவிர, செயலில் பார்ப்பன எதிர்ப்பைக் காட்டத் துணியாத கருணாநிதி-இருவருக்கும் இடையில் நடப்பது வெறும் நிழற்சண்டைதான்.
...............................................................................................

................................................................................................
ஆப்பிரிக்காவின் கனிம வளங்களைச் சூறையாடிய பன்னாட்டு முதலாளிகள்,
அக்கண்டத்தின் வளமிக்க நிலங்களையும் அபகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
.................................................................................................

நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சோத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போ, தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச் சான்றிதழ் கொடுத்துப் பதவிக்கு வந்துவிட்டாரெனக் கூறி, அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.

...........................................................................................................................
5,6 ஆண்டுகளில் 60,000 கோடி ரூபாய் மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்களைக் கடத்திக் கொள்ளையடித்திருக்கிறார்கள் ரெட்டி சகோதரர்கள்.
............................................................................................................................

மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஆசாத் மற்றும் உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹேம் சந்திர பாண்டே ஆகியோரைச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றுவிட்டு, துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகக் கதையளந்திருக்கிறது ஆந்திர போலீசு. மாவோயிஸ்டு அமைப்பின் முக்கியமான தலைவர் ஒருவரைக் கொன்றுவிட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது காங்கிரசு அரசு.

..............................................................................................................................
-தி.மு.க., அரசு நோக்கியாவுக்கு கொடுத்துள்ள சலுகைகள் யாவும், தமிழகத் தொழிலாளர்களை ஒடுக்கவும், ஒட்டச்சுரண்டவுமே பயன்படுகின்றன.
................................................................................................................................

மகாராஷ்டிரா மாநிலம் - கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 11 பேரில் 6 பேருக்கு மரண தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் மூன்று பேரை விடுதலை செய்தும் பந்தாரா மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பளித்திருந்தது.

சாராய உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் விவசாயிகளின் வறுமையை ஒழிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. பயிரிடப்பட்டுள்ள சோளம், கம்பு, கேழ்வரகு, காட்டுப் பருப்பு முதலானவை திடீர் மழைகளால் அழுகி விவசாயிகள் பாதிக்கப்படுவதால், சேதமடைந்த அந்த தானியங்களைக் கொள்முதல் செய்து, அதிலிருந்து சாராயம் தயாரிக்கப் போவதாவும், இத்திட்டத்தின் மூலம் வறுமையிலுள்ள சிறு விவசாயிகள் பெரிதும் பலனடைவார்கள் என்றும், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு பெருமையுடன் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக - அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

உலகத்திலேயே கொடிய வறுமைத் தாண்டவமாடும் நாடுகளெல்லாம் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் உள்ளன என்று அனைவரும் இதுவரை எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், ஆப்பிரிக்காவை விட ஏழைகள் மிக அதிக அளவில் இருப்பது இந்தியாவில்தான் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை இப்போது வெளிவந்துள்ளது.


ஐ.நா ஆதரவு பெற்ற ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சி (OPHI) என்ற அமைப்பு உலகளவில் மேற்கொண்ட ஆவில், ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமான ஏழைகள் இந்தியாவின் 8 மாநிலங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 41 கோடி பேர் கொடிய வறுமையில் வாடுகின்றனர். இந்தியாவிலோ பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் வறுமையின் கோரப் பிடியில் உள்ளோர் 42 கோடியே 10 லட்சம் பேர்களாவர்.


வறுமையை அளவிடுவதற்கான பழைய முறைக்குப் பதிலாக, கல்வி, சுகாதாரம், தூமையான குடிநீர், உணவு, உடை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கொண்டு வறுமையை அளவீடு செய்யும் பல்பரிமாண வறுமைக் குறியீட்டு எண் (Multidimensional Poverty Index) என்ற புதிய முறையை பயன்படுத்தி இந்த ஆவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. மனிதவள மேம்பாட்டு ஆண்டு அறிக்கைக்கு இனி இந்த புதிய அளவீடைத்தான் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளனர். உலகிலேயே தெற்காசியாவில்தான் ஆப்பிரிக்காவைவிட இரு மடங்கு வறியவர்கள் உள்ளனர் என்ற உண்மையை உலகுக்கு அறிவித்துள்ளது, இந்தக் குறியீட்டு முறை.


சீனாவுடன் வல்லரசுப் போட்டியில் இருக்கும் இந்தியா, வறுமையை ஒழிக்கும் திட்டத்திலோ, களிமண் ரொட்டி தின்று உயிர்வாழும் நிலையில் தம் மக்களை வைத்துள்ள ஹெதி நாட்டோடு போட்டி போடும் நிலையில்தான் உள்ளது. ஏழு கோடி மக்களைக் கொண்டிருக்கும் மத்திய பிரதேசமோ, இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு காங்கோ நாடாக மாறி வருகிறது. பீகாரின் வறுமை-வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக மோசமான அளவில் உள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஒரிசாவின் கிராமப்புறங்களில் 43% பேரும், பீகார் கிராமப்புறங்களில் 41% பேரும் வறுமையில் உள்ளனர்.


ஏகாதிபத்தியங்களின் சூறையாடலும் கடன் கொள்ளையும் உள்நாட்டுப் போரும் வறட்சியும் ஆப்பிரிக்காவின் வறுமைக்குக் காரணமென்றால், விவசாயத்தைச் சீரழித்து வரும் உலகமயப் பொருளாதாரம் இந்தியாவின் வறுமைக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விவசாயத்தின் சீரழிவால் வாழவழியின்றி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். "கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்று, ஒரு வருடத்தில் சராசரியாக உட்கொள்ளும் உணவு தானியத்தின் அளவு 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, இன்று 100 கிலோ குறைவாக உள்ளது" என்று இந்திய கிராமங்களின் வறுமையைப் பற்றி உட்சா பட்நாயக் என்ற பொருளாதார நிபுணர் கூறுகிறார். நாட்டுக்கே உணவு தந்த விவசாயிகள் இன்று சோற்றுக்கே அல்லாடுகிறார்கள். விவசாயத்தின் தோல்வியால் கோடிக்கணக்கானவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அத்துக் கூலிகளாகத் துரத்தப்படுகின்றனர். இதனால், இந்தியாவின் நகர்ப்புறச் சேரிகளில் மக்கள்தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளதை மத்திய அரசின் அறிக்கை ஒன்று உறுதி செய்கிறது.


நம் நாட்டில் வறுமையில் இருந்து மீள முடியாமல் உழல்வோரைத் தீர்மானிப்பதில் சாதி முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர்தான், வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்கின்றனர். வறுமை நிலையில் வாழும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களில் 66% பேர் உச்சக்கட்ட வறுமையில் உள்ளனர். இது, பிற்படுத்தப்பட்ட சாதியினரில் 58%மாக உள்ளது. இது தவிர, மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரில் 81% பேர் வறுமையில் உள்ளனர். இவர்களது வறுமை நிலையானது, தொடர்ந்து 16 ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டு மக்களின் வறுமை நிலையைவிட மோசமானதாக உள்ளது.


உலக மனிதவள மேம்பாட்டு தரப் பட்டியலிலும் இந்தியா, மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய உடல் வளர்ச்சியின்மை காரணமாக பிரசவத்தின் போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. நோஞ்சான் மக்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடும் இந்தியாதான். இந்தியாவின் கிராமப்புறத்தில் வாழும் சரி பாதிக் குழந்தைகள் எலும்பும் தோலுமாகவும் உடல் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 43% பேர் ஊட்டச் சத்தின்மையால் உடல் வளர்ச்சி குன்றிப் போ, ஆப்பிரிக்காவின் தெற்கு சஹாரா பாலைவனப் பிரதேசங்களை விட மோசமான நிலையில் உள்ளனர். நாட்டின் எதிர்காலம் எனப்படும் குழந்தைகளில் பாதிப்பேருக்கு நிகழ்காலமே கேள்விக்குறியாய் உள்ளது. இதனை மொத்தமாக தொகுத்து, உலக வங்கி இப்படிச் சான்றிதழ் அளிக்கிறது: "உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49%பேரும், உடல் வளர்ச்சி தடைபட்ட குழந்தைகளில் 34% பேரும், நோவாப்பட்ட குழந்தைகளில் 46% பேரும் வாழும் இடம் இந்தியா". மொத்தத்தில் உலகிலேயே குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாகத்தான் இந்தியா உள்ளது.

தனது குழந்தைகளின் நலனைக் கூடக் காக்க இயலாத இந்தியாதான் உலகின் மூன்றாவது பெரிய ராணுவத்தையும், நான்காவது வலிமையான கப்பல் படையையும் கொண்டுள்ளது. சோந்த நாட்டில் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைக் கூட உத்திரவாதப்படுத்த வக்கில்லாதவர்கள், விஞ்ஞானத்தை வளர்த்து ராக்கெட் விட்டு சந்திரனைப் பிடிக்கப் போகிறார்களாம்!


இந்திய அரசு வறுமையை அளவிடக் கையாளும் முறையோ வக்கிரமானது. நகரத்தில் ஒருவர் மாதம் 538 ரூபா சம்பாதித்தாலே, அதாவது மூன்று வேளை ஒருவரால் தேநீர் மட்டும் குடிக்க முடிந்தாலே அவர் வறுமைக் கோட்டை கடந்துவிட்டார் என்று வரையறுத்துள்ளது. இந்த அளவை பல வருடங்களாக மாற்றாமலேயே வைத்திருந்துவிட்டு, வறுமை குறைந்துவிட்டது என்று இதுவரை கதையளந்து வந்துள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தத் தெரிந்தவர்களுக்கு மக்களின் வாழ்நிலையை உயர்த்தும் வழிதெரியவில்லை.


கழுதை தேந்து தேந்து கட்டெறும்பான கதையாக, வறுமையில் ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையை இந்தியா இன்று அடைந்துள்ளது. அதேநேரத்தில் உலகப் பெருமுதலாளிகளின் வரிசையில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் அணிவகுத்து நிற்கும் அளவுக்கு அவர்களது சோத்துக்களும் பூதாகரமாக வளர்ந்துள்ளன. இதுதான் நாட்டின் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தனியார்மய-தாராளமய-உலகமயமாக்கத்தின் மகிமை!


-கதிர்.

இந்தியா ஒரு பெரிய நாடு உலகம் இதைவிடப் பன்மடங்கு பெரியது. போபால் நச்சுப் படுகொலைகள் ஏற்படுத்திய கோரம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊடகத் தலைப்புச் செய்திகளாக வந்து, ஒரு சில நாட்களே நீடித்திருந்தன. அதற்குள்ளாகவே காஷ்மீரில் அரசப் படைகளின் படுகொலைகள் ஒரிசாவில் பழங்குடி மக்கள் மீது போலீசின் தாக்குதல் வடகிழக்கு இந்தியாவில் நாகா மாணவர்கள் நடத்தும் நீண்ட முற்றுகைப் போராட்டம், மத்திய இந்தியாவில் நடக்கும் காட்டுவேட்டை மற்றும் போலி மோதல் கொலைகள் என்று பலவும் முன்னணிக்கு வந்து விடுகின்றன. இல்லையானாலும் , உலகக் கால்பந்துப் போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினாவின் அதிர்ச்சித் தோல்வி, தோனியின் திடீர் திருமணம், ராவணன் திரைப்படம் வெளியீடு என்று முதலாளித்துவ செய்தி ஊடகம் முன்தள்ளும் செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்ன்றன.

* 22,146 - போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் உண்மையான எண்ணிக்கை.

* 5,295 - அரசு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதற்காக அங்கீகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி இறந்து போனவர்களின் எண்ணிக்கை.

* 5,50,095 - நிரந்தரமாக மற்றும் பகுதியளவில் முடமாகிப் போனவர்கள், புற்று நோய், சீறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரின் மொத்த எண்ணிக்கை.


* 36,913 - அரசு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதற்காக அங்கீகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி முடமாகிப் போனோர், பிற வகைகளில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை.

* ரூ.1,500 கோடி - அரசு அறிவித்துள்ள கூடுதல் நிவாரணத் தொகை.

* ரூ.1,000 கோடி - யூனியன் கார்பைடு நிறுவனம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடாக அளித்த 47 கோடி அமெரிக்க டாலரை வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்ததன் மூலம் இந்திய அரசுக்குக் கிடைத்த வட்டிப் பணம், அதாவது இலாபம்.

- அந்த 1,500 கோடி ரூபாய்க்குள் இந்த 1,000 கோடி ரூபாயும் அடங்குமென்றால், பாதிக்கப்பட்டோரில் வெறும் 15 சதவீதப் பேருக்கு மட்டுமே உதவி கிடைக்குமென்றால்,

இதற்குப் பெயர் நிவாரணமா?

இந்திய நாடு மறுகாலனியாவது என்ற போக்கு போபால் படுகொலைகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்தவில்லையென்றால் நாடும் மக்களும் போபாலைவிடக் கொடிய கார்ப்போரேட் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்.

அமெரிக்காவில் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் தரவேண்டிய இழப்பீடு 50,000 கோடி ரூபாய். இந்தியாவில் 2,300 கோடி ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது இம்மசோதா. போபால் படுகொலையில் ஆண்டர்சன் வகுத்த விதியைச் சட்டமாக்குகிறார் மன்மோகன் சிங்.

ரத்தக் கவிச்சி வீசும் யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் யார்? வியத்நாமில் வீசப்பட்ட நாபாம் குண்டுகள், இட்லரின் விசவாயு, சதாமின் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் இந்த அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.

மீண்மும் இப்படிப்பட்ட கொடுமை நிகழக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட போபால் மக்கள். எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது.

மெக்சிகோ வளைகுடாவை மாசுபடுத்திய பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை "குரல்வளையில் மிதிப்பேன்'' என்று சீறினார், ஒபாமா. ஆண்டர்சன் பாதுகாப்பாக இருக்கிறார் - -நியூயார்க்கில்.

மருத்துவக் கழிவுகள், அணுக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், வெடிமருந்துக் கழிவுகள், நஞ்சு கக்கும் ஆலைகள் ... அனைத்தும் பாரதத் தாயின் வயிற்றில் ... வந்தே மாதரம்!

போபால் படுகொலை தீர்ப்பைக் காட்டி காங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.

வாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அவரது கூட்டணி அரசு இந்தியத் தலைமை வழக்குரைஞராக இருந்த சோலி சோரப்ஜியிடம், "இந்திய-அமெரிக்கக் குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வாரன் ஆண்டர்சனை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசைக் கேட்க முடியுமா?" என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரியது. இதற்கு சோலி சோரப்ஜி, "யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றி பெற வாய்ப்பில்லை; எனவே, இந்த நடவடிக்கைகள் தொடருவதைக் கைகழுவி விடலாம்" எனக் கருத்துத் தெரிவித்தார்.

"ஆலைக் கழிவுகளை அகற்ற முடியாது'' என்கிறது டௌ கெமிக்கல்ஸ்.
"நாங்களே செய்கிறோம்'' என்கிறது அமைச்சர் குழு.

"ஆஸ்பத்திரிக்கு செலவு செய்ய முடியாது'' என்கிறது டௌ.
"அரசே ஏற்று நடத்தும்'' என்கிறது அமைச்சர் குழு.

"கூடுதல் நிவாரணம் தர முடியாது'' என்கிறது டௌ.
"அதையும் நாங்களே தருகிறோம்'' என்கிறது அமைச்சர் குழு.