தீப்பொறியின் பிளவுக்கு முன்பே புளட்டின் மாணவ அமைப்பான ரெசோ, புளட்டின் வலதுசாரிய அரசியலை ஆட்டி அசைத்தது. புளட்டின் வலதுசாரிய அரசியலை வெளிப்படையாகவே எதிர்த்தது. உதாரணமாக சுழிபுரத்தில் புலி ஆதரவாளர்கள் ஆறு பேரை படுகொலை செய்ததை புளட்டின் போலி இடதுசாரிய அணி மறுத்து அறிக்கை விட்ட போது, புளட்டே கொலை செய்தது என்று புளட்டில் தமிழ் இடதுசாரியக் கூறுகள் வெளிப்படையாக கூறத்தொடங்கின. முரண்பாடுகளும், ஒதுங்குவதும் கூர்மையாகி, அவர்கள் சமூகத்தில் விதையாகினர்.
பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04
மேலும் படிக்க: பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04