“ஆயிரமாய் கவிதை சொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெற்றவளே உன் பெருமை
ஒத்தை வரி சொல்லவில்லையே”
பம்பைமடு இராணுவ தடுப்புமுகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போராளி சுவரில் வரைந்த வரிகள் இவை. தமிழின விடுதலைக்காக தன் தாய், தந்தையை, உடன்பிறப்புக்களை விட்டு வெளியே வந்து போராடிய ஒருபெண் முள்ளிவாய்க்கால் முடிவின் பின் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும், பாலியல் கொடுமைகளையும் அனுபவித்த போது தன் தாயை நினைத்து, பெற்ற மடி தேடி மூடிய சிறைச்சுவர்களில் இரத்தத்தால் எழுதிய வரிகள் இவை.