Language Selection

மருத்துவம்

உடம்பில் சேர்ந்து விட்ட அளவுக்கு அதிகமான கொழுப்பை நெருப்பில் வாட்டி குறைக்கும் ஒரு புதுமையான சிகிச்சை முறை ஹாங்காங்கில் செய்யப்படுகிறது. வெப்பத்தின் மூலம் குணப்படுத்துவது என்பது சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் சுமார் 2000-3000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலை நாடுகளில் கூட, உடம்பை ஒல்லியாக்குவதற்காக, சூடான களி மண் அல்லது சாக்லேட்டை உடம்பில் பூசி கட்டிவைக்கிறார்கள்.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் எந்பார்கள். தில்லியில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஜப்பானியப் பூங்காவில் காலையில் நடைபயிலச் செல்லும் போது மக்கள் ஆங்காங்கே குழுவாக பிரிந்து நின்று, அலை அலையாகச் சிரிப்பதை கண்டிருக்கிறேன். பெய்ச்சிங்கில் கூட, காலை நடைபயிலும் மக்கள் ஓ வென்று வாய்விட்டு கத்துவதையும் இது ஒரு அஞ்சல் ஓட்டம் போல ஒவ்வொரு பகுதியில் இருந்து எழுவதையும் கண்டிருக்கிறேன்.

ஏப்பமிடுதலும், வாயுவெளியேறுதலும் இயற்கையாக நடைபெறும் சாதாரண விடயங்களே. இவை ஒரே நாளில் பலதடவைகள் கூட நடைபெறலாம். ஆனால் மிதமிஞ்சிய ஏப்பமிடுதல், வயிற்று ஊதல் மற்றும் வாயுத்தொல்லை (belching, bloating or gas) ஆகியன அசௌகரியத்தையும், மற்றவர்களுடன் உள்ள வேளைகளில் தடுமாற்றத்தையும் உண்டாக்கக்கூடியவை. இவை ஏற்பட காரணங்கள் எவையென்பதையும், இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் பார்ப்போம்.

 

ஏப்பமிடுதல் (Belching) என்பது என்ன?

 

ஏப்பமிடுதல் என்பது நமது வயிற்றிலுள்ள மேலதிகமான காற்றை வெளியேற்றுவதற்கு எமது உடல் மேற்கொள்கின்ற ஒரு செய்கையாகும். நீங்கள் மிகவிரைவாக உணவை அல்லது நீரை உட்கொண்டாலோ அல்லது பேசிக்கொண்டே சாப்பிட்டாலோ மேலதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுகிறீர்கள். காபனேற்றப்பட்ட பானங்களை (Carbonated beverages) எடுப்பதாலும் இது நிகழலாம்.

 

இரைப்பையிலிருந்து அமிலம் மேல் வருவது (Acid reflux) அல்லது இரைப்பையிலிருந்து உணவுக்குழாய்க்குள் உணவு மீண்டும் மேல்வருவது போன்ற கோளாறுகள் உள்ளவர்களுக்கும் (Gastroesophageal reflux disease) இதேவிதமான பிரச்சினைகள் ஏற்படலாம். இரைப்பையிலுள்ள அமிலம் மேல் நோக்கி உணவுக்குழாய்க்குள் வரும்போது அதை இல்லாமல் செய்வதற்காக மீண்டும் மீண்டும் விழுங்க வேண்டியேற்படுகிறது. இதனால் கூடுதலான காற்றும் உள்ளே விழுங்கப்படுகிறது. இது மேலும் மேலும் ஏப்பமிடுதல் நிகழக்காரணமாகிறது.

 

ஒரு சிலர் வெறுமனே காற்றை விழுங்குவதை ஒரு அசாதாரண பழக்கமாக பழகிவிடுகின்றனர். - உணவோ, பானங்களோ, எடுக்காத வேளைகளில் கூட. வேறு சிலரில் இரைப்பையின் உட்பக்கத்தில் ஏற்படுகின்ற அழற்சி (Gastritis) நீடித்த ஏப்பமிடுதலை உண்டாக்குகிறது.

 

ஏப்பமிடுதலைக் குறைத்துக்கொள்வதற்கு பின்வரும் விடையங்களை கடைப்பிடிப்பது பொருத்தமாயிருக்கும்.

 

• மெதுவாக உண்ணுதல், பருகுதல் - போதிய நேரமெடுத்து ஆறுதலாக உண்பதால் நீங்கள் காற்றை உள்ளெடுப்பதை மிகவும் குறைத்துக் கொள்ளமுடியும்.


• காபனேற்றப்பட்ட பானங்களையும், பியரையும் தவிர்க்கவும் - இவை காபனீரொட்சைட் வாயுவை வெளிவிடுகின்றன.


• புகைத்தலை தவிருங்கள் - புகையை உள்ளிழுக்கும் வேளையில் நீங்கள் காற்றையும் விழுங்குகிறீர்கள்.


• நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து பாவியுங்கள் - எப்போதாவது உங்களுக்கு ஏற்படுகின்ற இலேசான நெஞ்சு எரிச்சலை சரிசெய்வதற்கு மருந்துக்கடைகளில் கேட்டுவாங்கக்கூடிய அமில நிவாரணிகள் (யுவெயஉனைள) அல்லது வேறுசில முறைகள் உதவியாகவிருக்கும்.

 

வயிற்றுப் பொருமல் (அல்லது வயிற்று ஊதல்) / (Bloating)என்பது என்ன?

 

இரைப்பையிலும் அதற்கு அப்பால் குடலிலும் வாயுக்கள் சேர்வதால் ஏற்படுவதே வயிற்றுப் பொருமல் ஆகும். அநேகமாக இது வயிற்று வலியுடன் சேர்ந்தே உண்டாகும் - இலேசான, மந்தமான வலியாகவோ அல்லது தீவிரமான, மிக வருத்துகின்ற வலியாகவோ இந்த வயிற்றுவலி இருக்கலாம். வாயு வெளியேறுவதாலோ அல்லது மலங்கழிப்பதாலோ இவ்வலி இல்லாமல் போகலாம். இக்குழறுபடிகள் ஏற்படுவதற்கு காரணமாயிருப்பதே அநேகமாக கொழுப்பு கூடிய உணவுகள்தான். கொழுப்புணவுகள் இரைப்பையை விட்டுச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் வயிறு நிரம்பியிருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

 

வயிற்றுப் பொருமல் பின்வருவனவற்றுடனும் தொடர்புடையது.

 

• மனச்சுமை அல்லது மனஉழைச்சல் (Stress or Anxiety)


• சமிபாட்டுத் தொகுதிகளில் தொற்று நோய் அல்லது அடைப்பு


• வயிற்று வலி மற்றும் குடலின் தொழிற்பாடுகளில் சில வழமையில்லாத மாற்றஙகளை காண்பிக்கின்ற ஒரு குடல் நோய் (Irritable bowel syndrome)


• உணவிலுள்ள சில பதார்த்தங்களை சமிபாடடையச் செய்யவும், அதை உடலுள்ளே எடுத்துக் கொள்ளவும் முடியாதபடி செய்யும் குடலோடு சம்பந்தப்பட்ட சில கோளாறுகள் (Coeliac disease or Lactose intolerance)


வயிற்றுப் பொருமலை குறைத்துக் கொள்வதற்கு கொழுப்புக்கூடிய உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் வாயுக்களை உற்பத்தியாக்குகின்ற பின்வரும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 

• புறோகோலி (Broccoli)

• வேகவைத்த அவரை விதைகள் (Backed beans)

• முட்டைக்கோவா (Cabbage)

• பூக்கோவா (Cauliflower)

• பச்சைக் காய்கறிகள் (Salads)

• காபனேற்றப்பட்ட பானங்கள் (Carbonated drinks)

 

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன?

 

சமிபாட்டுக்கு உட்படாத உணவின் பகுதிகள் பெருங்குடலில் நொதிப்படைவதனாலேயே குடற்பகுதிகளில் வாயு உண்டாகிறது – உதாரணமாக தாவர உணவுகளிலுள்ள நார்ப் பொருட்கள் இவ்வாறு நொதிப்படைகின்றன. அதேபோல பாற்பண்ணை உற்பத்திகளிலுள்ள சில வகை வெல்லங்கள், பழங்களிலுள்ள வேறு சில வெல்லங்கள் போன்றவற்றையும் எமது குடலில் சமிபாடடையக் கூடியவிதமாக மாற்றப்பட முடியாது என்பதால் அவைகளும் இறுதியில் வாயுக்களை உண்டுபண்ணுகின்றன.

 

வாயு உண்டாவதற்கான வேறும் சில காரணங்கள்-

 

• பெருங்குடலை வந்தடைகின்ற உணவின் எஞ்சியபகுதிகள் காரணமாகலாம்.


• விழுங்கும்போது உள்ளெடுக்கப்படும் காற்றின் ஒருபகுதி பெருங்குடலை வந்தடையலாம்.


• மலச்சிக்கல் (உணவின் பகுதிகள் எவ்வளவு கூடுதலான நேரம் குடலில் தங்கி நிற்கிறதோ அதேயளவுக்கு நொதிப்படைய இடமுண்டு).

 

சில சந்தர்ப்பங்களில் வாயுத்தொல்லையானது சமிபாட்டுத் தொகுதியில் ஒரு சில நோய்கள் இருப்பதன் அறிகுறியாயிருக்கலாம். (Irritable bowel syndrome or Coeliac disease)

 

வாயுத்தொல்லையை தவிர்த்துக்கொள்வதற்கு பின்வரும் குறிப்புகள் உதவக்கூடும்.

 உங்களுக்கு அதிகம் பிரச்சினை கொடுக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அவரை, பட்டாணி, பருப்புவகைகள், முட்டைக்கோவா, வெங்காயம், புறோகோலி, பூக்கோவா, வாழைப்பழம் (பனானா வகை), முந்திரிகைவற்றல், தீட்டப்படாத கோதுமை மாப்பாண், பச்சைக் காய்கறிகள், காபனேற்றப்பட்ட பானங்கள். (Beans, Peas, Lentils, Carbbage, Onions, Broccli, Cauliflower, Bananas, Raisins, Whole-wheat bread, Salads and Carbonated drinks) பாற்பண்ணை உற்பத்திகளை எடுப்பதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால் இலக்ரோஸ் குறைக்கப்பட்ட அல்லது இலக்ரோஸ் நீக்கப்பட்ட பாற்பண்ணைப் பொருட்களை பாவியுங்கள்.


 குறைந்தளவு கொழுப்புணவுகளை உட்கொள்ளுங்கள். – கொழுப்பு சமிபாட்டைத் தாமதப்படுத்துவதால் உணவு நொதிப்படைந்து வாயுக்களை உண்டாக்குவதற்கு அதிக நேர அவகாசம் கிடைக்கிறது.


 அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுப்பதை தற்காலிகமாக குறைத்துக்கொள்ளுங்கள். – நார்ச்சத்து சமிபாட்டிற்கு உதவுகிறது. அதேசமயம் அதிக நார்ச்சத்துள்ள உணவுவகைகள் ஏராளமான வாயுவை உண்டுபண்ணுபவைகளாகவும் உள்ளன. எனவே தற்காலிகமாக ஒரு இடைவெளிவிட்டு, பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். பீனோ (டீநயழெ) போன்ற தயாரிப்புகளை அதிக நார்ப்பொருள் கொண்டிருக்கும் உணவுவகைகளிற்கு சேர்த்துக் கொள்வதன் மூலம் அவற்றினால் உண்டாக்கப்படும் வாயுவைக் குறைத்துக் கொள்ளலாம்.


 மெதுவாக உண்ணுங்கள் - உணவு வேளையை ஒரு பரபரப்பில்லாத ஆறுதலான நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவசர அந்தரமாக சாப்பிடுவதும், நெருக்கடியான நேரங்களில் சாப்பிடுவதும் சமிபாட்டை பாதிக்கக்கூடியவை.


 நடவுங்கள் - உணவின் பின் சற்று நடப்பது நல்லது.

 

எப்போது நீங்கள் வைத்தியரை நாடவேண்டும்?

 

ஏப்பமிடுதல், வயிற்றுப் பொருமல், வாயு என்பன இடையிடையே அளவுக்கதிகமாக ஏற்படலாம். இவை அனேகமாக தாமாகவே இல்லாமல் போய்விடும். உங்களுடைய உணவு விடயங்களில் சிலவற்றை மாற்றியும் இந்த தொந்தரவுகள் குணமாகவில்லை என்றால் நீங்கள் உங்கள் வைத்தியரை பார்ப்பது நல்லது. அத்துடன் பின்வரும் ஏதாவது இருந்தாலும் வைத்தியரிடம் போவது நல்லது.

 

• வயிற்றோட்டம்
• மலச்சிக்கல்
• சத்தி (வாந்தி) அல்லது அப்படியான தன்மை
• நிறை குறைதல்
• வயிற்று வலி அல்லது மலவாயிலில் வலி
• இடைவிடாத நெஞ்சு எரிச்சல்

 

குடலிள்ள பிரச்சினைகளால் ஏற்படுகின்ற அறிகுறிகள் மற்றவர்களிற்கு மத்தியில் உள்ள போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆயினும் கூட அசௌகரியமாயிருக்குமே என்பதற்காக வேண்டிய உதவியை கேட்டு பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது. இவற்றுக்கு ஏற்ற வைத்திய சிகிச்சைகள் உள்ளன.

 

Belching, Bloating and Gas
(ஆக்கம்:- Dr S Sanmugathasan MBBS DFM, குடும்ப சுகாதார நிறுவனம் (IOFM) JAFFNA))

நமது உடலில் மின்சாரம் இருக்கிறது என்று சொன்னால் பலருக்கு சிரிப்பு வரும். உடலில் பாய்ந்தால் ஆளை தூக்கியெறியும் மின்சாரத்துக்கு குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று சொன்னால் இன்னும் பலமாக சிரிப்பார்கள். என்ன நேயர்களே, உண்மைதானே. ஆனால் இந்த இரண்டு விடயமும் உண்மையே. ஆம் நமது உடலில் மின்சாரம் இருப்பதும் உண்மை, மின்சாரத்துக்கு குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதும் உண்மை. நம் உடலில் உள்ள மின்சாரத்தை நாம் மிக அரிதான் சமயங்களில் உணரமுடியும். ஸ்டேட்டிக் எலக்ட்ரிசிட்டி நிலை மின்சாரம் என்று சொல்வார்கள். நம் உடலில் தக்க வைக்கப்பட்டுள்ள மின்சாரம் இந்த நிலை மின்சார வகைதான். பல நேரங்களில் அது மிகக்குறைந்த அளவாய் இருப்பதால் உணர இயலுவதில்லை. குறைந்த படசம் 500 ஓல்டுக்கு மேல் இந்த நிலைமின்சாரம் தேங்கியிருந்தால் அதைத் தெளிவாக உணர முடியும். ஐநூறு ஓல்ட்டா ஆச்சரியமோ பயமோ கொள்ளவேண்டாம். 20 ஆயிரம் வொல்ட்-க்கு அதிகமாகக்கூட நம் உடலில் நிலைமின்சாரம் தேங்குவது சாத்தியம் என்கிறார்கள். அவ்வளவு மின்சாரம் உடலில் தேங்கும்போது உடலிலிருந்து தீப்பொறி பறப்பதுக்கூட சாத்தியம் என்கிறார்கள். தரை விரிப்பில் காலணியுடன் நடந்து இரும்பு கதவை அல்லது கதவின் தாளை தொட்ட அனுபவம் உண்டா, மின்சாரம் தாக்கிய உணர்வு ஏற்படும். அது கதவில் உள்ள மின்சாரம் அல்ல, நமது உடலில் உள்ள மின்சாரம், நிலை மின்சாரத்தின் வெளிப்பாடு ஆகும்.

டி.என்.ஏ என்பது உயிரின் அடிப்படை மூலக்கூறாகும். மற்ற எந்த மூலகூறுகளுக்கும் இல்லாத சிறப்பாக, டி.என்.ஏ தன்னைத் தானே சுயநகலாக்கம் செய்துகொள்கிறது. உயிரின் அடிப்படை இதுவே என்கின்றனர் அறிவியலர்கள். டின். என். ஏவைப் பற்றிச் சொல்லும்போது அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது ஜீன்ஸ். ஜீன்ஸ் என்றவுடன், இளைஞர்கள் நவநாகரீகமாக அணியும் ஆடையும், ஜீன்ஸ் என்ற ஒரு தமிழ்த் திரைப்படம் என்பது மட்டும் நினைவில் வராது, மனிதர்களின் உடலில் உள்ள அதிசயங்களின் அடிப்படையான மரபணுவும் நினைவுக்கு வரும். பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்து பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம் என்ற ஜீன்ஸ் திரைப்பட பாடலில் அதிசயக்க வைக்கும் விடயங்களை கவிஞர் அழகாக பட்டியலிடுவார். அறிவியலர்களும் அத்தகைய ஒரு பட்டியலில் மனிதர்களின் மூளைக்கு சவால் விடும் பல அதிசயங்களை சேர்த்துள்ளனர். அவற்றில் ஒன்று இந்த ஜீன்ஸ் என்னும் மரபணு.

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா...பாடலைக் கேட்கும் போது நம்மில் பலருக்கு நாவில் நீரூரும். சூடான சோறும், ஒரு நாள் கழிந்த மீன் குழம்பும், நெய் மணக்கும் கத்தரிக்காயும் அடடா, அட்டகாசமான பொருத்தம் இல்லையா... ஆனால் ஒரு சிலர் நான் சொல்வதைக் கேட்கும்போதே, ஒரு வித சங்கடமான உணர்வு ஏற்பட்டு, என்ன சுவையோ, என்ன பொருத்தமோ..கத்தரிக்காயையும், மீனையும் எப்படி மக்கள் அவ்வளவு எளிதாக சாப்பிடுகிறார்களோ என்றும் யோசிக்கக்கூடும். ஒரு குறிப்பிட்ட உணவு வகையின் மீதான் ஆர்வம், விருப்பம் என்பது தவிர, ஒரு சில பொருட்கள் நமது உடலுக்கு தோதாக அமைவதில்லை, எல்லோரும் சாப்பிடும்போது தனது உடலுக்கு மட்டும் சில பொருட்கள் தீங்கு ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றன என்ற காரணங்களாலும் இந்த சங்கடமான உணர்வும், ஏன் வெறுப்பும் கூட ஏற்படுகின்றது. நாம் குறிப்பிட்ட இந்த சிக்கல், ஒவ்வாமை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் அலர்ஜி.

 

ஒவ்வொரு குடும்பத்தினரும் அடிக்கடி பயன்படும் மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது வழக்கம். தடுமன் போன்ற பொது நோய்களால் பீடிக்கப்படும் போது மருத்துவ மனைக்குச் செல்லாமல் மருந்து உட்கொண்டால் சரியாகிவிடும். ஆனால் சிலர் மருந்துகளை சரியாக பயன்படுத்தாத காரணத்தால் நோயைக் குணப்படுத்துவதற்கு பதிலாக மருந்துகளால் ஏற்படும் சில பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவார்கள். சில சமயம் அது உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும். அப்படியிருக்க வீட்டில் எத்தகைய மருந்துகளை வைத்திருக்க வேண்டும்?இந்த மருந்துகளை எவ்வாறு வைத்திருப்பது?மருந்துகளின் பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவு என்ன?என்பன பற்றி இப்போது கூறுகிறோம். அறிவிப்பாளர்.

மழை நேரம், தெருவிளக்குகள் எரியவில்லை , மின் தடையால் வீதியே இருள் சூழ்ந்திருக்கிறது, குடையும் கையில் இல்லை, கால்சட்டையை மடித்துவிட்டு கையில் உள்ள பையோடு குத்து மதிப்பாக அடியெடுத்து வீடு நோக்கிச் செல்கிறீர்கள், சாலையில் உரு குழியிருக்க, அதில் நீங்கள் தவறி விழ, லேசான காயமும், அதிக கோபமும், எரிச்சலுமாக வீட்டை அடைகிறீர்கள். நடந்ததைக் கேட்டு, உங்கள் துணைவியார், ஏங்க கொஞ்சம் பார்த்து நடக்கக் கூடாதா? என்று கேட்டால்...ஆமாம் எனக்கு வலிப்பு, அதான் நானே நேரா குழியில் காலைவிட்டு அடிபட்டு வந்திருக்கேன் என்று நீங்கள் எரிச்சலோடு சொல்லக்கூடும்.மழையை ஒருபக்கம் திட்டி, சாலையை சரிவர போடாத மாநகராட்சிக்காரர்களையும் திட்டி, அடிபட்ட வலியை விட "நாமே நொந்து வெறுத்து போயிருக்கோம், இதுல பார்த்து வந்திருக்ககூடாதுன்னு ஒரு கேள்வி வேற" என்று மனைவி அக்கறையோடு கேட்ட கேள்விக்கா அவரை நொந்துகொள்ளும் பலரில் நீங்களும் நானும் நிச்சயம் இருக்கலாம்.

காலம் செல்லச்செல்ல புதிய கண்டுபிடிப்புகள் பெருகி கொண்டிருக்கின்றன. புதிய தொழிற்நுட்பங்கள் அதிகமாக பயன்பாட்டிலுள்ளன. அதே வேகத்தில் புதிய நோய்களும் தோன்றிய வண்ணம்தான் உள்ளன. காய்ச்சல் என்று மட்டுமே தெரிந்திருந்த நமக்கு இன்று சாதாரண காய்ச்சல், எலி காய்ச்சல், சளி காய்ச்சல், மூளை காய்ச்சல், மலேரியா காய்ச்சல், வைரஸ் என்ற நச்சுயிரி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா என பல வகை காய்ச்சல்கள் தெரியும். பனாமா கால்வாய் வெட்டப்பட்டபோது அங்குள்ள கொசுக்களால் ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு பலர் இறந்த பின்னர் தான் மலேரியா கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆண்டுகள் குணப்படுத்த முடியாத நோயாகவே மலேரியா இருந்து வந்தது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் மனிதகுலம் நிம்மதி பெருமூச்சு விட்டது.

இயற்கைக்கு எதிராய் இன்றைய வாழ்கை. தூங்கும் நேரத்தில் வேலை, வேலை(பகல்) நேரத்தில் தூக்கம், அமர்ந்த இடத்திலேயே பணி, போக்குவரவிற்கு சொகுசு வாகனங்கள், பொழுது போக்கிற்கு தொலைகாட்சி, கணனி என்று உடற்பயிற்சி இன்மை,உண்ணும் உணவில் இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம், அதிக மாசுபாடுள்ள நகர வாழ்கை இவையணைத்தும் இன்றய தலைமுறையின் உடல்நிலயை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக கண்கள். பொதுவாக கம்யூட்டரில் பணி புரிவோர்களுக்கு கண் வலியுடன் தலைவலியும் நாளடைவில் வருகின்றது. குறிப்பாக மாலை நேரங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.இது நோய் அன்று மாறிவரும் தொழில் நுட்பத்தாலும் ஊன்றி மானிட்டரை பார்ப்பதாலும் ஏற்படும் கோளாறு. அதே போன்று இரு சக்கர வாகனங்களில் கண்ணாடியின்றி பயணம் செய்தால் கண்களில் தூசுகள் படிந்து கண் வலி ஏற்படும். இதனை ஒரு எளிய குவளை(கோவை பகுதியில் பிரபலம்) கொண்டு சரி செய்து கொள்ளலாம்.

பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கு தகுந்த அளவு இடமளிக்காதும் மார்புக் கச்சுக்களை (bra) அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.

பெண்களை ஓரளவு பாதிக்கும். ஆண்களுக்குத்தான் பாதிப்பின் அளவு அதிகரிக்கும். காரணம், உறுப்பு விரைப்பின்மை போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

நீரிழிவுள்ள பெண்கள் தாராளமாக கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் கர்ப்பம் தரிக்கவேண்டும். குறிப்பாக இன்சுலினை உபயோகிக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். காரணம், அதிக அளவு இன்சுலின் கருவையும் பாதிக்கக்கூடும். நாட்பட்ட நீரிழிவுக்காக பொதுவாக மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்கள் வேண்டுமானால் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்கள் கர்ப்பத்தைத் தவிர்ப்பது நல்லது.
 

மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது நார்மல் என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்றும், 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்றும் பொருள்.

இதற்கான காரணங்கள்:

இந்திரனின் வாகனமான அய்ராவதம் என்ற வெள்ளை யானை, பூசை செய்ய, தாமரைப் பூவை, கொய்து எடுத்துவர, தடாகத்தில் இறங்கியதாம். அங்கிருந்த முதலை ஒன்று யானையின் காலைக் கவ்வி இருக்க, தப்பிக்க வழியறியாது ஆதிமூலமே என்று பிளிறி, பின் திருமால் வந்து சக்ராயுதத்தை வீசி முதலையைக் கொன்றதாகப் புராணப் புளுகைக் கேட்டிருக்கிறோம். சில வீடுகளில் படங்களாகப் பார்த்தும் இருப்போம்.

இன்னும் சிலரோ ரிஷிமூலம், நதிமூலம் கேட்கக்கூடாது என்பார்கள். இன்னும் சிலரோ மூல நட்சத்திரம் என்று பிறந்த குழந்தைக்கு சாதகம் கணித்து, ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று ஆதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தை நிறுவவும் பாடுபடுவர். அய்வராதம் யானை ஆதிமூலமே என அழைத்தது அப்பட்டமான கட்டுக்கதை என்றாலும், மருத்துவத் துறையில், ஒரு நோய் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது என்றால், அது மூல நோய் (Haemorrhoids) தான். அதனால் உண்மையான ஆதிமூலம் மூல நோய்தான். அதைப்பற்றிக் காண்போம். மூல நோய், மேல் மலக்குடல் சிரையில் (Superior Rectal Vein) ஏற்படும் மாறுபாடுகளால் உண்டாகும் ஒரு நோயாகும்.

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள்.

உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.

வெள்ளை நிறத்தில் இருக்கும் காய், கனிகளை தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆயுவுகள் சொல்கின்றன.

வெங்காயத்திலிருந்து கிடைக்கும் allicin என்ற வேதிப்பொருள் கொலஸ்ட்ராலையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது. காலிஃபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.

- எஸ். அன்வர் -

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.

உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.

கண்களுக்குக் கீழே கரு வளையமா?

எப்போதும் உங்கள் முகம் பொலிவே இன்றி டல்லடிக்கிறதா?

நிறைய சாப்பிட்டும், மேக்கப் போட்டும் கூட உங்கள் முகம் சோர்வாகவே இருக்கிறதா?

இப்படி உங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பைசா செலவில்லாமல் ஒரு தீர்வு உண்டு என்றால், ஏற்றுக் கொள்வீர்கள்தானே?

தூக்கம் தான் அந்தத் தீர்வு. ராத்திரியானால் எல்லாரும்தான் தூங்குகிறோம். அப்படியானால் எல்லாருக்கும் அழகான சருமமும், தோற்றமும் இருக்க வேண்டுமே எனக் கேட்கிறீர்களா?

அதான் இல்லை. எப்படித் தூங்குகிறோம், எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் எனப் பல விஷயங்களைப் பொறுத்தது அது.

தூக்கத்தில் நடக்கிற விந்தைகள் பற்றி நமக்கெல்லாம் அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அதாவது தூங்கும்போது நம் உடலில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹார்மோன், சரும ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியத் தேவைகளான கொலாஜன் மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும், சரும செல்கள் புதுப்பிக்கப் படவும் கூட தூக்கம் அவசியம்.

தூக்கம் சரியாக இல்லாதவர்களுக்கு சருமப் பிரச்சினைகள் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள்.

உதாரணத்துக்கு பருக்கள், சரும வறட்சி மாதிரியான பிரச்சினைகள் அதிகம் வருகின்றனவாம்.

நாள் முழுக்க உழைத்த உடலுக்கு சில மணி நேரக் கட்டாய ஓய்வு அவசியம். ஓய்வைக் கொடுக்காமல், அதற்கு எதிராகப் போராடும்போது, அது உடல்நலத்தையும் பாதித்து, அழகையும் பாதிக்கிறது. உதாரணத்துக்கு ஓய்வுக்கு எதிராகப் போராடும்போது, இரத்த ஓட்டமானது உடலின் பெரிய பகுதிகளுக்குத் திருப்பப் படுகிறது. தூக்கமில்லாததால் முகம் வெளிறிப் போவதும், கண்களுக்கடியில் கருவளையம் வருவதும் கூட இதனால்தான்.

எது நல்ல தூக்கம்?

எது நல்ல தூக்கம், எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. சிலருக்கு ஆறு மணி நேரம் தூங்கும் பழக்கமிருக்கும். சிலர் எட்டு மணி நேரம் தூங்குவார்கள். சிலருக்கு பத்து மணி நேரம் வரை கூடத் தூக்கம் கலையாது. அது அவரவர் வசதியையும், வேலை நேரம் மற்றும் பிற விஷயங்களைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால், பகல் வேளையில் தூக்க உணர்வு உண்டானால், அந்த நபருக்கு இரவில் போதிய அளவு தூக்கம் இல்லை என்று அர்த்தம்.

நல்ல தூக்கத்துக்கு என்ன வழி?

படுத்தவுடன் தூங்கிப் போவது உண்மையிலேயே ஒரு வரம் மாதிரி. அது இயல்பாக அப்படியே பழக்கப் படுத்தப்படவேண்டும். தூக்கம் வராமல் தவித்து, அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்வது என்பது மிக மோசமான பழக்கம்.

நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாதித் தூக்கத்தில் திடீரென விழித்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். உடனே மறுபடி தூங்க ஆரம்பித்து விடுங்கள். மறுநாள் காலையில் வழக்கம் போல தானாக விழிப்பு வரும். குறிப்பிட்ட சில மணி நேரம் நன்றாகத் தூங்குவது, அந்த நாள் முழுவதற்குமான புத்துணர்வையும், சுறுசுறுப்பையும் தரும்.

நீங்கள் தூங்கப் போகிற நேரத்தையும், விழிக்கிற நேரத்தையும் முறைப் படுத்திக் கொள்ளுங்கள். தினம் ஒரே நேரத்தில் தூங்குவதையும், விழித்துக் கொள்வதையும் வழக்கப் படுத்த்திக் கொள்ளுங்கள்.

பகல் தூக்கம் வேண்டவே வேண்டாம். ரொம்பவும் அசதியாக உணர்கிறீர்களா? கண்களை மூடியபடி சிறிது நேரம் தியானம் செய்யலாம். குட்டித் தூக்கம் போட்டதற்கு இணையான புத்துணர்வைத் தரும் டெக்னிக் இது.

தூக்கம் வரவில்லையே என்கிற கவலையை விடுங்கள். டென்ஷன், கோபம், கவலை இல்லாத மனது நல்ல தூக்கத்துக்கு அடிப்படை. உடல்நலத்தில் ஏதேனும் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் எல்லாருக்கும் போதிய அளவு தூக்கம் நிச்சயம் வரும்.

உடற்பயிற்சிக்கும், தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தினசரி சில மணி நேரம் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சினையே வராது. குறிப்பாக நடைப்பயிற்சி.

மனச்சோர்வுக்குக் காரணமான ஹார்மோன்கள்தான் ஒருவரைத் தூக்கமில்லாமல் புரண்டு, புரண்டு தவிக்க வைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், இது கட்டுப்படுத்தப் படுவதால், நல்ல தூக்கம் நிச்சயம். மாலை நேரத்தில் ரொம்பவும் வேகமாக, வியர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

நீங்கள் படுக்கும் அறை ரம்மியமாக, போதிய அளவு காற்றோட்டதுடன் கூடியதாக இருக்க வேண்டியது முக்கியம்.

தூங்கச் செல்வதற்கு முன் காபி, கோலா மாதிரியான பானங்களைத் தவிருங்கள். மதியம் 2 மணி அளவில் குடித்த காபியே, இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரம் கொண்டதாம். கோலா, சாக்லேட், டீ போன்றவையும் தவிர்க்கப் படவேண்டும்.

நீங்கள் தூங்கும் திசையும் நல்ல தூக்கத்துடன் தொடர்பு கொண்டது. வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்தால் நல்ல உறக்கம் வருமாம்.

தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசையை ரசித்தபடி படுத்திருப்பது போன்றவையும் தூக்கம் வரவழைக்கும்.

அரோமாதெரபியில் தூக்கமின்மைக்கான பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. லேவண்டர் மாதிரியான குறிப்பிட்ட அரோமா ஆயில்களுக்கு தூக்கத்தைத் தூண்டும் குணம் உண்டு. நல்ல அரோமாஃபேஷியல் பல நாட்களாகத் தூக்கமின்றித் தவிப்போரது பிரச்சினையை ஒரே இரவில் மாற்றும். அரோமாஃபேஷியல் செய்து கொள்கிறபோது, அரோமாதெரபியில் கை தேர்ந்த நிபுணர்களிடம் செய்து கொள்வது நல்லது. அழுத்தப் புள்ளிகளைப் பார்த்துச் செய்ய வேண்டிய ஃபேஷியல் என்பதால் கவனம் தேவை.

- வசுந்தரா -
Quelle - kumtham health -15.6.2006

http://maruththuvam.blogspot.com/2006/07/blog-post.html

- எஸ். அன்வர் -

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.

உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.

கோடைகாலம் முடிந்து பருவமழை ஆரம்பமாகப் போகிறது. இந்தச் சமயத்தில்தான் சளி, காய்ச்சல் என்று மாறிமாறி வந்து தொல்லைப்படுத்தும். குறிப்பாக, பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பும் தாய்மார்களுக்கு, இந்தக் கவலை அதிகம். முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாரசிட்டமால்களை வாங்கி அடுக்கிவைக்கத் தொடங்கிவிடுவார்கள்.