Language Selection

மருத்துவம்

உலக அளவில் முதல் முறையாக பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தண்டுகலங்கள் எனப்படும் ஸ்டெம் செல்களிலிருந்து மனித இதயத்தின் ஒரு பகுதியை வளர்த்து உருவாக்கியுள்ளார்கள்.

இந்த முன்னேற்றத்தின் காரணமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுவது குறித்த சிக்கல்கள் குறையக்கூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சோதனை விலங்குகளில் பரிசோதிக்கப்பட்டு, வெற்றி பெறுமேயாயின், இன்னமும் மூன்று வருடங்களில் செயற்கையாக வளர்க்கபட்ட மனித இதயத்தின் திசுக்கள், செயற்கை உறுப்புகள் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுத்தபடக் கூடும் என இந்த ஆராய்ச்சியின் தலைவர் மக்டி யாகூப் பிரிட்டனின் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக செயற்கையாக ஒரு மனித இதயத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பழுதடைந்த ஒரு திசுவை தண்டுக்கலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட திசுக்களின் மூலம், மரபு ரீதியாக சேர்க்கப்படும் போது அதை உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

எனவே இனி வரும் காலங்களில் தானங்கள் மூலம் செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்க வேண்டிய நிலையால் ஏற்படும் பிரச்சினைகள் தடுக்கப்படக் கூடும்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1175538420&archive=&start_from=&ucat=2&

lankasri.com இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1190754829&archive=&start_from=&ucat=2&

உலகிலேயே முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரது இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பர்மிங்ஹாமிலுள்ள ஹவ்டன் என்பவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் ஒக்ஸ்போட்டிலுள்ள ஜோன் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு டொக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இதயம் இவருக்கு முதன்முறையாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

அச்செயற்கை இதயத்துடன் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஹவ்டன்.

மேலும், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஹவ்டனால் தொடர்ந்து ஒரு மைல் தூரத்திற்கு அதிகமாக நடக்க முடிந்ததுடன் தனது அறக்கட்டளை நிறுவனத்தில் சுறுசுறுப்பாகப் பணியாற்றவும் முடிந்தது.

அறக்கட்டளை சார்பில் 90 மைல் நடைப் பயணத்தில் பங்கேற்றதுடன் ஆல்ப்ஸ் மலையிலும் ஏறினார். இதய ஆராய்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இரு புத்தகங்களையும் எழுதியதுடன் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியும் திரட்டினார்.

செயற்கை இதயத்துக்கான மின்கலம் அதன் சேமிப்பு சக்தி குறையும் போதெல்லாம் மாற்றவேண்டி நேரிடும் அதன்போது மருத்துவமனையில் அவரிற்கு மாற்று மின்கலம் பொருத்தப்படும்.

கடந்த ஆண்டில் ஹவ்டனின் இதயம் 30 வீதம் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டதால் மின்கலம் மாற்றும் போதெல்லாம் அவர் இயல்பாகவே தனது வழமையான இதயத்துடிப்புடன் இருந்துள்ளார்.

செயற்கை இதயத்துடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த ஹவ்டனின் 68 ஆவது வயதில் அவரது உடல் உறுப்புகள் பல செயலிழக்கவே மரணமடைந்துவிட்டார். ஆனாலும் அவரது செயற்கை இதயம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றபடியால் மின்கலத்தை மருத்துவர்கள் நிறுத்தினால்தான் அவர் இறந்ததாக அறிவிக்க முடியும்.

ஹவ்டனின் மனைவி டியானோ, இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால் 11 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1197640050&archive=&start_from=&ucat=2&

lankasri.com"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுக்கூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வின்றியே இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான-அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.

மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிதுசிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான்.

அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது. "பிளாக் டீ' யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உள்பட்டே அருந்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1204789206&archive=&start_from=&ucat=2&

lankasri.comகுருட்டுத் தன்மை ஏற்படக் காரணமான இரு பிரச்சினைகளை சீர் செய்யும் மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேற்படி மருந்தானது, பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் கண்ணிலான இரத்தக் குழாய் சிதைவைத் தடுக்கக் கூடிய புரதத்தை செயலூக்கம் பெறச்செய்வதாக உதாஹ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப கட்டமாக இம்மருந்தை எலிகளில் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்களிலுள்ள இரத்தக் குழாய்களிலுள்ள தசைகள் பலவீனமடைதல் மற்றும் நீரிழிவின் தாக்கம் என்பனவற்றால் குருதிக் குழாய்கள் சிதைவடைவது வயதானவர்களில் காணப்படும் பொதுவான பிரச்சினையாகவுள்ளது என கூறும் இவ்விஞ்ஞானிகள், இதன் காரணமாக கண்ணுக்குள் இரத்தம் கசிவடையவும் வழமைக்கு மாறான புதிய இரத்தக் குழாய்கள் உருவாகவும் வழியேற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி விஞ்ஞானிகளால் அடையாளங் காணப்பட்டுள்ள "ரொபோ 4' புரதமானது இரத்தக் குழாய்களை உறுதியடையச் செய்வதிலும் அதன் செயற்பாட்டை சீர்ப்படுத்துவதிலும் முக்கிய வகிபாகம் வகிப்பதாக கூறப்படுகிறது.

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1205777589&archive=&start_from=&ucat=2&

lankasri.comபொதுவாக மக்களிடத்தில் கொலஸ்ரோல் என்றால் இதயப் பாதிப்பை வர வைக்கும் ஒரு கெட்டது என்ற கண்ணோட்டம் இருக்கிறது.ஆனால் கொலஸ்ரோலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நல்ல கொலஸ்ரோல் (HDL) மற்றது கெட்ட கொலஸ்ரோல்.

இந்த நல்ல கொலஸ்ரோலின் அளவைக் குருதியில் அதிகரிப்பதில் பங்கெடுக்கக் கூடியது என்று கருதப்படும் சில வகை CETP மரபணுக்கள் உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 33% பேரிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபணுக்களைக் காவுபவர்களில் நல்ல கொலஸ்ரோலின் அளவு குருதியில் அதிகரிக்க செய்யப்படுவதால் அவர்களில் இதயப் பாதிப்பு மற்றவர்களை விட ஏறக்குறைய 5% தால் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குருதியில் உள்ள கெட்ட கொலஸ்ரோலின் அளவை குறைத்துக் அதன் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதயப் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்பதை விஞ்ஞானிகள் ஏலவே நன்கு அறிந்திருந்த போதும் இந்த புதிய கண்டுபிடிப்பானது அவர்களிடத்தில் கெட்ட கொலஸ்ரோல் சார்ந்து ஏற்படும் இதய நோய்க்கு எதிராகப் போராடுவதில் CETP மரபணுக்கள் மீது செய்யப்படும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பதில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழமையாக நல்ல கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்க CETP மரபணுவின் செயற்பாட்டைத் தடுக்கக் கூடிய மருந்துகளை பரீட்சார்த்தமாக வழங்குவது நடைமுறையில் இருக்கும் நிலையில், சில வகை CETP மரபணுக்கள் நல்ல கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்க உதவக் கூடியது என்ற இப்புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் மத்தியில் குறித்த மரபணு மீது செல்வாக்குச் செய்யும் மருந்துகளின் தன்மையை மாற்றி அமைக்க வேண்டிய நிலை குறித்து சிந்திக்கத் தூண்டியுள்ளது.

எனினும் இறுதி முடிவுகள் எட்ட முதல் இந்த மரபணுக்களின் செயற்பாட்டில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் நல்ல கொலஸ்ரோலின் செயற்பாடுகளுக்கும் இதயப் பாதிப்புக்களைக் அவை குறைக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக மனித உயிரியல் விஞ்ஞானிகள் கூற்கின்றனர்.

"குருவிகள்"


20 Jun 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1213947102&archive=&start_from=&ucat=2&

lankasri.comகொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கும் ஆபத்து குறைவு என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பால் குடிப்பவர்கள் மற்றும் பால் குடிக்காதவர்கள் என ஐந்தாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

45 வயது முதல் 85 வயதுக்குள்பட்டவர்களிடம் குறிப்பிட்ட காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் ஒரு டம்ளர் அளவு கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தி வந்தவர்களின் இதய செயல்பாடு மற்றும் சிறுநீரக செயல்பாடு சீராக இருந்ததாம். இதே போல் தானிய வகைகள், காய்கனிகள், பழங்கள் ஆகியவையும் ஆரோக்கியமான இதயத்துக்கு 20 சதவீதம் உதவுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தினமும் பாலும், பழமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் அண்டாது என்று அடித்து கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1214633316&archive=&start_from=&ucat=2&

lankasri.comசமையலுக்கு ஒலிவ் எண்ணெய்யைப் பாவிப்பதால் சுமார் 9% புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று கிறீஸ் மற்றும் ஸ்பெயின் வாழ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் கிறீஸ் மக்களிடம் புற்றுநோய் மற்றும் இதய நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது.

அதிகம் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளையும், ஒலிவ் எண்ணொய், மீன் உணவுகளையும், சிவப்பற்ற இறைச்சிகளையும், சீரியல் வகைகளையும் மற்றைய உணவுகளை விட உண்பது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைக் குறைக்க உதவும் என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிவ் எண்ணொய் அதிக அளவு நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிறிதொரு ஆய்வில் புறோக்கோலி (Broccoli) மற்றும் cruciferous வகை மரக்கறிகளை நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்களில் புறஸ்ரேற் (prostate) புற்றுநோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். புறோக்கோலியில் உள்ள இயற்கையான இரசாயனங்கள் ஆண்களில் புறஸ்ரேற் சுரப்பியில் உள்ள மரபணுக்களில் குறிப்பாக GSTM1 எனும் மரபணு மீது செல்வாக்குச் செய்து இந்த நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

03 Jul 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1215113246&archive=&start_from=&ucat=2&

lankasri.comமீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா - 3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம்.

40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள். இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன. அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா - 3 எண்ணெய் ஒரே அளவில்தான் இருந்தது.

எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா - 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

29 Jul 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1217393341&archive=&start_from=&ucat=2&

lankasri.comஉயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர். இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1217666723&archive=&start_from=&ucat=2&

lankasri.comநீங்கள் சர்க்கரை நோயாளியா? இனி கவலை வேண்டாம். தினமும் "பிஞ்சு' முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாக இருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும். அதனால் மாரடைப்பு ஏற்படும். அதேபோல் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.

இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

"பிஞ்சு' முட்டைக்கோûஸ தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர்நல்லே தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக்கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

பிஞ்சு முட்டைக்கோஸில் உள்ள ‘நன்ப்ச்ர்ழ்ஹல்ட்ஹய்ங்’ எனும் புரதச் சத்து, உடலில் செரிமானம் செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் பாதுகாக்கப்படுவதுடன், உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்க செய்கிறது.

ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரியவந்தது.

06 Aug 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1218084050&archive=&start_from=&ucat=2&

தலைவலி! இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும். இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

இதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
அமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.

தலைவலிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.

இதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
எளிய முறையில்...

பொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

தலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும். அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.


இப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=6921

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" ஆலங்குச்சி, வேலங்குச்சி, பேப்பங்குச்சி என பற்பசையும், பல்துலக்கும் தூரிகையும் இணைந்த இயற்கை நமக்களித்த அன்பளிப்புகளை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவநாகரீக பாணியில் பற்பசைகளும் பல் துலக்கும் தூரிகைகளும் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.



மாநகரத்து மகாதேவன் பயன்படுத்துவதையே மாந்தோப்பு கிராமத்து மாடசாமியும் பயன்படுத்துகிறார் என்ற சமநிலை, சமத்துவத்தை பற்றி கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். ஆனால், மகாதேவதுக்குத்தான் நவநாகரீக வாழ்க்கை மோகம், தகுநிலை நிர்ப்பந்தம், நம்ம மாடசாமிக்கு அதெல்லாம் இல்லையே, இயற்கை அளித்த அருங்கொடைகளை அவர் ஏன் ஒதுக்குகிறார் என்ற கரிசனையே அதிகம் மேலிடுகிறது.

அப்படியென்றால், மாநகரத்துவாசிகள் பளீரிடும் பற்கள் தெரிய சிரிப்பதும், கிராமத்து மக்கள் கரையேறிய பற்களுடன் தெரிவதும்தான் எனக்கு பிடிக்குமா? என்ற கேள்வி எழும்.

நியாயமான கேள்விதான். இன்றைக்குள்ள பன்னாட்டு நிறுவனங்களின், பல விதமான நுகர்வுப்பொருட்கள், இயற்கையில் இருந்து நாம் நேரடியாக பயன்படுத்திய, பதப்படுத்து பயன்படுத்திய பொருட்களைவிட சில அம்சங்களில் மேம்பாடு கொண்டவை என்பதும் உண்மைதான். அதனால்தான் ஆலங்குச்சி, வேலங்குச்சி, வேப்பங்குச்சி, கரித்தூள் என பல்துலக்க் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தலைக்கு குளிக்க சீயக்காய்த்தூளும் இன்றைக்கு பயன்படுத்தப்படாத நிலை.

எல்லாமே வேகமாகிப்போன உலகில் , அவசரமாகிப்போன நமது வாழ்க்கையில் யார் இயற்கையோடு மெனக்கெடுவது. எல்லாமே ரெடிமேட், நேரடியாக பயன்படுத்த ஆயத்த நிலையில் கிடைக்கும்போது, எதற்கு குச்சியை வைத்து பற்களை துலக்கவேண்டும். மேலும் பற்பசைகளும் இன்னபிற பற்களை மினுமினுக்கச்செய்யும் பொருட்களும்தான் சந்தையில் கிடைக்கின்றனவே, அவற்றை வாங்கி பயன்படுத்தி பளீரிடும் புன்னகைக்கு சொந்தக்காரர்களாகலாமே.

அப்படி போடு அருவாள என்று நினைப்பவர்களுக்கு, ஐயா சாமி, ஆபத்து சாமி என்கின்றனர் வல்லுனர்கள். இன்றைக்கு சந்தையில் உள்ள, பற்களை தூய்மைப்படுத்தும், வெண்மைப்படுத்தும் பொருட்களில் 90 விழுக்காட்டு பொருட்களில் அளவுக்கு மீறிய ப்ளீச் எனப்படும் தூய்மை செய்யும் வேதியல் பொருள் இருப்பதாக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இருந்தால் சீக்கிரம் நம் பற்கள் வெண்மையாகிவிடுமே என்றெல்லாம் இங்கே பக்கவாத்தியம் வாசிக்க முடியாது.



இந்த வேதியல் பொருள் தலைமுடியை தங்க நிற்மாக மாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இது நமது பற்களில் பயன்படுத்தப்படும்போது, வாயில் புண்கள் ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் உண்மை. சிகையலங்காரத்துறையில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருள், பற்களை வெண்மையாக்கும் திரவங்கள் என்று விளம்மபர்ப்படுத்தப்பட்டு சந்தையில் விற்பனையாகும் பொருட்களிலும் உள்ளதாம்.

இன்றைக்கு திரைப்படங்களில், தொலைக்காட்சியில் நம் உள்ளம் கவர்ந்த நட்சத்திரங்கள் பளீரிடும் வெண்மையான பற்கள் தெரிய சிரிப்பதை பார்த்து நாமும், அதேபோல் வெண்மையான பற்கள் வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த நட்சத்திரங்கள் பணம் அதிகம் செலவழித்து, பல மருத்துவரிடம் சென்று முறைப்படி பற்களை வெண்மையாக்கக்கியிருக்க, நமக்கு சந்தையில் நாமே பயன்படுத்தி வெண்மையாக்கக்கூடிய பொருட்கள் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிடவா போகிறோம்.

அண்மையில் வர்த்தகத்தர நிறுவனம் என்ற நிறுவனத்தின் ஆண்டு மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாம் இதுவரை கேட்ட தகவல்கள் தவிர, ஒரு சில பொருட்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 230 மடங்கு அதிகமான ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த வல்லுனர்கள் சொல்வது என்னவென்றால், பற்களை வெண்மையாக்கி, பளீரென வைத்துக்கொள்ள விரும்புவது தவறல்ல, ஆனால், அதை ஒரு நல்ல பல் மருத்துவரின் ஆலோசனையின் படியும், அவரது வழிநடத்தலின் படியும் செய்யுங்கள் என்பதுதான். கடந்த சில ஆண்டுகளில் முக அழகு தொடர்பான துறையில், பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ள பல் மருத்துவரை நாடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த வேதியல் பொருட்கள் பற்களை வெண்மையாக்கும் அதேவேளை வாயில் புண் ஏற்படுத்துவது மட்டுமல்லாது, ஈருகளை பாதிக்கும், பற் கூசுதலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பற்களை வெண்மைபடுத்தும் பொருட்களை சோதித்ததே த்வைர, இன்னும் பற்பசைகலை ஆய்வு செய்யவில்லை. அதையும் பரிச்சொதித்தால் அதில் என்னென்ன தீங்கேற்படுத்தும் வேதியல் பொருட்கள் இருக்குமோ.

இப்படி பற்களை வெண்மையாக்கும் முயற்சியில் பல் மருத்துவரை நாடாமல் நாமே சொந்தமாக இறங்கிவிட்டால் முதலில் நாம் பயன்படுத்தும் வெண்மையாக்கும் பொருட்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருளின் இருப்பு 0.1 விழுக்காடு மட்டுமே இருக்கவேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.

சுகாதாரக் கட்டுபாடுகள் மிகக்கடுமையானதாக இல்லாத நாடுகளின் சந்தைக்கென இப்படியான பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பற்களை வெண்மையாக்க கிளம்பி, அந்த பற்களையே இழக்க கூடாதல்லவா.

தங்கப்பல்லைக் கட்டினாலும், தந்த்தாதல் ஆன பற்களை பொருத்தினாலும், சொந்தப்பல் போல வருமா.

பல்லு போனா சொல்லு போச்சி.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=7845



உலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.

இதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே "சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்".

மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.

வைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நமிக்கை. ஆரன்ச்ஜுபழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞு வழம் சாப்பிட்டால் சளி அதிகரிக்கும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி சளிக்கு நல்லது என்று மறுசாரார் நம்புகின்றனர். சளித்தொல்லையை சமாளிக்க விட்டமின் "சி"யை மாத்திரைகளாக உட்கொள்ளுபவர்கள் உலகில் அதிகம். ஊட்டச்சத்து மாத்திரைகளாக கருதப்படும் மல்ட்டிவிட்டமின்கள் அதாவது பல விட்டமின்களின் கலவை மாத்திரைகள் குட இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் வேடிக்கை என்ன்வென்றால், சளித்தொல்லைக்கு விட்டமின் சியை மாத்திரையாக் ஔட்கொண்டாலும் சரி, ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதம் மூலம் விட்டமின் சியை பெற்றாலும் சரி, எல்லாம் வீண், கால விரயெமே என்று அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இந்த விட்டமின் சியை மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்றேல் சளியை வராமல் தடுக்க அல்லது சளி வந்தாலும், அதன் அறிகுறிகளின் தீவிரத்தை தணிவுபடுத்த.



ஆனால் இத்தகைய மாத்திரைகள், சளியைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அதன் தீவிரத்தை தணிவுபடுத்துவதுமில்லை என்று அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாரத்தான் எனப்படும் நெடுந்தூர ஓட்டத்தில் பங்கேற்போர், ஸ்கீயிங் என்பபடும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்போர், மிகத்தீவிரமான சளியால் துன்புறுவோர், மன அழுத்தத்தால் அவதியுறுவோர், இவர்களுக்கு மட்டும்தான் இந்த விட்டமின் சி மாத்திரைகள் கொஞ்சம் பயன் தருகின்றன. மற்றவர்கள் சளி வந்தால், இந்த விட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட மெனக்கெட வேண்டாம் என்று கூறுகின்றனர்.

ஈந்த ஆய்வாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் 11 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், 365 நாட்களும் விட்டமின் சியை சாப்பிடுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்பதுதான்.

கோக்ரேன் லெபாரட்டரி என்ற மருத்துவ ஏட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொதுவாக விட்டமின் சியை வழமையாக அன்றாடம் உட்கொள்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சளி ஏற்பட குறைவான வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்தது. மேலும் அன்றாடம் விட்டமின் சியை உட்கொள்பவர்களுக்கு சளி பிடித்தால் அதன் தீவிரம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. பொதுவாக கடைகளில் கிடைக்கும் விட்டமின் சி மாத்திரைகளில் இருப்பதைப்போல் 4 மடங்கு அதாவது 2 கிராம் விட்டமின் சியை ஆய்வுக்குட்படுத்தப்பட்டோர் உட்கொண்டனர்.

ஆய்வின் முடிவில், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தான தரவுகளின்படி, விட்டமின் சி மாத்திரைகள் மிகக் குறைவான பயனையே தந்தனவாம். அன்றாடம் விட்டமின் சியை உட்கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 2 விழுக்காடு மட்டுமே குறைவாக சளிபிடிக்கும் ஆபத்தில்லாதிருந்தனர். சளியின் தீவிரமும் மிகச் சிறிய அளவே குறைந்தது. பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்களின் கருத்தில், இந்த் ஆய்வை சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் ஆண்டில் 12 நாட்கள் சளியால் அவதியுற்றால், அன்ராடம் விட்டமின் சி சாப்பிடுபோர் ஆண்டில் 11 நாட்கள் அவதியுறுவர்.

ஆண்டுக்கு 3 அலது 4 முறை நமக்கு சளி பிடிக்கிறது. சளி பிடித்தால், தலைவலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், இருமல், முக்கொழுகுதல் என அதன் சகாக்களும் சேர்ந்து நம்மை உண்டு இல்லையென ஆக்கிவிடுகின்றன.

கிண்டலாக இதையும் சொல்லக் கேட்டிருப்போம், நமக்கெல்லாம் சளிபிடித்தால் எப்படி அவதியுறுகிறோம், பத்து தலை ராவணன் எப்படி சமாளித்திருப்பார் என்று. கேலியும், கிண்டலும் ஒருபுறம் இருக்கட்டும். நம்மில் அனைவருமே அறிந்தது, அனுபவத்தால் உணர்ந்தது, இந்த சளித்தொல்லை. நாம் பலரும் நம்பிய விட்டமின் சியும் இபோது பயனற்றதாக அறிவியலர்கள் கூறியதால் கவலை ஏற்படுகிறது அல்லவா. கவலையை விடுங்கள், கொஞ்சம் ஆறுதலான தகவலும் உண்டு.



விட்டமின் சி பொதுவாக அனைவருக்குமே பலன் தராது என்றாலும், இச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அது பலன் தரும் என்பதை பிரித்தானிய வல்லுனர்கள், கண்டறிந்துள்ளனர்.

அபெர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நுண் உயிரியலாளர் ஹியூக் பென்னிங்க்டன் என்பவர், சளிக்கு விட்டமின் சி மாத்திரைகளும், ஆரன்ச்ஜு வழச்சாறும் பெரிதாக ஒன்றும் பயன் தரவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் அவற்றை உட்கொள்வதால் கேடொன்றுமில்லை, தீங்கொன்றுமில்லை என்கிறார். மட்டுமல்ல, இவற்றை சாப்பிடுவதால் குணமாகும், சளி குறையும் என்ற நம்பிக்கையே சளியால் அவதியுறுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், அவர்கள் ஓரளவு தெம்பைப் பெறுவார்கள் என்கிறார் பென்னிங்க்டன்.

மறுபுறத்தில் எக்கினாசியா என்ற ஒரு தாவரத்தின் மூலமான மருந்து சளிக்கு நல்ல பயனுள்ள நிவாரணமளிப்பதாக அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியகாந்தி பூவைப்போல காட்சியளிக்கும் இந்த எக்கினாசியா பூக்களின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கிட்டத்தட்ட சலிபிடிக்கும் வாய்ப்பை பாதியளவு குறைக்கிறதாம்.

என்ன் எக்கினாசியா எங்கே கிடைக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி....??

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=8131

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்!





http://maruththuvam.blogspot.com

காபி குடித்தால் ஈரல் புற்றுநோயை தடுக்கலாம்
மிலான் நகரின் மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் காபி குடிப்பவர்கள் மற்றும் காபி குடிக்காதவர்களிடம் ஆய்வு நடத்தினார்கள். கிரீஸ், இத்தாலி, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தினம் ஒரு கப் அல்லது 2 கப் காபி சாப்பிடுகிறவர்களுக்கு ஈரல் புற்று நோய் வரும் ஆபத்து மிகக்குறைவு என்று தெரிய வந்துள்ளது. காபி பிரியர்களுக்கு ஈரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட 41 சதவீதம் குறைவு என்று டாக்டர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

அரை டீஸ்பூன் மிளகுடன் அரை கப் பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வையுங்கள். பிறகு இந்த கலவையை ஆறவிட்டு, மிதமான சூட்டில் தலையில் தேய்த்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து, சீயக்காய் போட்டு தலையை அலசுங்கள். இப்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று தலைக்கு குளித்துவந்தால், இரண்டு வாரங்களிலேயே தலை அரிப்பு சுத்தமாகப் போய்விடும்.

சிலருக்கு எப்போதும் தலைமுடி கசகசவென பிசுபிசுத்து கிடக்கும். வியர்வை நாற்றமும் அடித்து சங்கடப்படுத்தும். இதற்கும் ஒரு எளிய சிகிச்சை இருக்கிறது.

மிளகு, ஓமம், சீரகம்.... மூன்றையும் சம அளவு எடுத்து தண்*ரில் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த நீரில் சீயக்காயைக் கரைத்து, தலைக்கு போட்டு குளியுங்கள்.

வாரம் இரு முறை இப்படி குளித்து வந்தால், தலையில் வியர்வை நாற்றம் நீங்கி, முடி பொலிவுடன் ஜொலிக்கும். தலை அரிப்பையும் இது கட்டுப்படுத்தும்.

தலைக்குக் குளித்தவுடனே சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அவதிப்படுவார்கள். அதற்கும் கை கொடுக்கிறது இந்தக் கலவை...

அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் ஓமம்.... மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி மிதமான சூட்டில் உச்சந்தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். இப்படி செய்துவந்தால், தலையில் கோர்த்த நீர் வடியும். உஷ்ணம் நீங்கி கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

 

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=11182

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அழையா விருந்தாளியாக வந்துவிடுகிறது 'ஜலதோஷம்'.

இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.

வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், அதை மஞ்சள் தூளுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் என்ற விருந்தாளி மூன்று நாட்களுக்குள் சென்று விடுவார்.

இல்லையேல் பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால்கூட ஜலதோஷம் நீங்கிவிடும்.

 

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=11101

உலகில், மனிதனின் உயிரைப் பறிப்பதில், இதய நோய்க்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு. சீனாவில் மட்டும், இப்போது, ஆண்டுக்கு 26 இலட்சம் பேரை அது பலி வாங்குகிறது. ஒவ்வொரு 12 விநாடியில், ஒருவர் இதயநோயினால் மரணமடைகிறார் என்று, மூத்த சீன மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார். இதய நோயின் பலி வாங்கும் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆண்களை பொறுத்த அளவில் 2.3 விழுக்காடாகவும் மகளிரைப் பொறுத்தமட்டில் 1.6 விழுக்காடாகவும் அது இருப்பதாக, பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவ மனையின் இதய நோய்த் துறை இயக்குநர் ஹூ தாயி தெரிவிக்கிறார். இவர், 30 ஆண்டுகளாக இதய நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

 

சீனாவில், 1960 களில் இதய நோய் மிக அதிகமாக நேரிட்டதற்கு, உயர் அமுக்கமே காரணம், 1990 களில், தொலஸ்ட்ரால் அதிகரிப்பே காரணம் என்கிறார் அவர். "அனைத்து கொலஸ்ட்ராலும் மோசமானவை அல்ல" என்று மருத்துவர்கள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர். சீனாவில், 1990 களில், கொலஸ்ட்ரால் மிக கூடுதலாக இருப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆண்களில் 33 விழுக்காட்டாகவும் பெண்களில் 32 விழுக்காடாகவும் இது காணப்படுகிறது என்று ஆய்வாளர் தெரிவிக்கின்றனர்.
இதய நோய் தடுப்பு பணியில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், தீவிரமான சிக்கலை சீனா எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஹு தாயி கருத்து தெரிவிக்கின்றார். உலகில், ஆண்டுதோறும், ஒரு கோடியே 70 இலட்சம் இதய நோயினால் மரணம் அடைவதாக, உலக நலவாழ்வு அமைப்பு தெரிவிக்கிறது.
இதய நோய் தலைவிரித்தடுவதற்கு என்ன காரணம்? மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றமும் காரணம் என்கிறார் ஹூ தாயி. கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், கலோரி ஆகியவை அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது ஒரு காரணம். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அலுவலகத்தில் காணப்படும் அமுக்கம் இந்த இரண்டும் முக்கிய காரணங்களாகின்றன. ஊணச் சதை, நீரிழிவு நோய், இவையும் இதய நோய் அதிகரிப்புக்கு காரணமாகின்றவாம். புகை பிடிப்பது, இதய நோய்க்குக் சாதகமாக அமையலாம். சீனாவில், இயல்பான உடல் எடைக்கு அதிகமாக எடை கொண்டோரின் எண்ணிக்கை 27 கோடியாகும். இத்தகைய பிச்சினைகளைத் தீர்ப்பதில், சீன அரசு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

கணவன்-மனைவி சண்டை மனதுக்கு மட்டுமல்ல, உடம்புக்கும் நல்லத்தல்ல. மனைவி அடித்துவிடுவாளோ என்ற பயத்தினால் சொல்லவில்லை. இது அறிவியல் உண்மை. காதலுக்கு காயத்தை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.