புலி அரசியலை விமர்சிக்காது, புலியை விமர்சிக்கும் அரசியல் மோசடியானது
புலியையும், பிரபாகரனையும் குற்றஞ்சாட்டி விமர்சிக்கின்ற அரசியற்பின்புலத்தில் இந்த அரசியல் மோசடிகள் அரங்கேறுகின்றன. புலியின் நடத்தைகளை விமர்சிப்பதன் மூலம், புலி; கொண்டிருந்த அரசியலை பாதுகாத்தல் இதன் பின் அரங்கேறுகின்றது. இதன் மூலம் கடந்தகாலத்தில் அவர்கள் கொண்டிருந்த அரசியலையும், அதன் நீட்சியான இன்று தாங்கள் கொண்டுள்ள அரசியலையும் நியாயப்படுத்திப் பாதுகாத்தலும் கூடவே அரங்கேறுகின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் புலியின் அரசியல் தான், புலிகளின் நடத்தைகள் என்பதை அரசியல் ரீதியாக மறுக்கின்றது. இதன் பின்னாக பல புலி மற்றும் புலியெதிர்ப்புப் பிரமுகர்கள் முதல் இலக்கியம் பேசிய பிரமுகர்கள் வரை அடங்கும்.