Language Selection

பி.இரயாகரன் -2012

புலியையும், பிரபாகரனையும் குற்றஞ்சாட்டி விமர்சிக்கின்ற அரசியற்பின்புலத்தில் இந்த அரசியல் மோசடிகள் அரங்கேறுகின்றன. புலியின் நடத்தைகளை விமர்சிப்பதன் மூலம், புலி; கொண்டிருந்த அரசியலை பாதுகாத்தல் இதன் பின் அரங்கேறுகின்றது. இதன் மூலம் கடந்தகாலத்தில் அவர்கள் கொண்டிருந்த அரசியலையும், அதன் நீட்சியான இன்று தாங்கள் கொண்டுள்ள அரசியலையும் நியாயப்படுத்திப் பாதுகாத்தலும் கூடவே அரங்கேறுகின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் புலியின் அரசியல் தான், புலிகளின் நடத்தைகள் என்பதை அரசியல் ரீதியாக மறுக்கின்றது. இதன் பின்னாக பல புலி மற்றும் புலியெதிர்ப்புப் பிரமுகர்கள் முதல் இலக்கியம் பேசிய பிரமுகர்கள் வரை அடங்கும்.

வாழ்வுதான் உணர்வைத் தீர்மானிக்கின்றது. உணர்வுகள் வாழ்வைத் தீர்மானிப்பதில்லை. உழைத்து வாழாத அரசியல் பின்புலத்தில், எம்மக்களை ஏமாற்றுவது தொடருகின்றது.

இந்த வகையில் எமது போராட்டம் பல ரகமான அரசியல் பிழைப்புவாதிகளின் பின்புலத்தில் சுரண்டப்பட்டது. உழைப்பை நேரடியாக சுரண்டுவது வெளிப்படையானது. தங்கள் அறிவு மூலம் சுரண்டுவது சதிப்பாணியிலானது. உழைக்க வலு இருந்தும், தன் சொந்த வாழ்வுக்காக உழைத்து வாழ விரும்பாதவன் முன்வைக்கும் பிரமுகர்தன அரசியல், உழைத்து வாழும் மக்களின் வாழ்வியல் போராட்டத்துக்கே முரணானது. இதை ஊக்குவிப்பவர்கள், வழிகாட்டுபவர்கள், உழைப்பை வெறுக்கும் பொறுக்கியாக லும்பன்களாக வாழ்கின்றனர். மேற்கின் சமூக நல உதவியை பெறுவதற்காக உழைப்பைப் பயன்படுத்துவது, மருத்துவ விடுப்பைப் பயன்படுத்துவது தொடங்கி உழையாது சமூக நிதியாதாரத்தை தங்கள் அறிவால் சுரண்டி வாழும் பிரமுகர்தன அரசியல், உழைத்து வாழும் மக்களின் நடைமுறை வாழ்வுக்கும் உணர்வுக்கும் எதிரானது.

எந்தளவுக்கு மதம், இனம் .. என்று பிரிந்து நிற்கின்றோமோ, அந்தளவுக்கு எம் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கும். அரசு என்பது மக்களைப் பிரித்து ஒடுக்குவது தான். அதே பிரிவினையையும், பிளவையும் நாங்களும் வரிந்துகொள்வது, எம்மீதான ஒடுக்குமுறையை வரைமுறையற்றதாக்குவது தான். அரசு மட்டும் ஒடுக்குவதல்ல, ஒடுக்கப்பட்ட மக்களும் தமக்குள் தாம் மோதிக்கொள்கின்ற நிலையை உருவாக்குகின்றது. அரச பாசிசம் இன்று இதைச் சார்ந்து மேலும் தூண்டி விடுகின்றது.

முஸ்லீம் மக்கள் மதம் இனமாக பிரிந்து நிற்பதன் மூலமோ, இன்றைய முஸ்லீம் தலைமையை நம்புவதன் மூலமோ, தங்கள் மீது பேரினவாத மத இனத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது. இன்று பேரினவாத அரசு, மத இனம் சார்ந்த அரசியல் மூலம், தன் பாசிசமயமாக்கலைக் கூர்மையாக்கி வருகின்றது. சிறுபான்மை இனங்கள் மீதும், சிறுபான்மை மதங்களின் மீதானதுமான, அதன் எதிர்ப்பு அரசியல் மூலம் தான், சிங்கள மக்களை தன் பின் அணிதிரட்டுகின்றது. இதைத் தவிர மகிந்தவின் பாசிச அரசியலுக்கு, வேறு மாற்று அரசியல் கிடையாது.

புலியை ஒரு பாசிச இயக்கமாக சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாது, பயங்கரவாத இயக்கமாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்த அரசியல் மகிந்த பாசிசத்தை புரிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. சிங்கள மக்கள் புலியைப் புரிந்து கொண்ட விதம், அரசு கூறிய உள்ளடக்கதில் இருந்து தான். இதனால் புலி பற்றி மட்டுமல்ல இனப்பிரச்சனையை புரிந்து கொண்ட விதமும் கூட, அரசு சொன்னதை தாண்டியல்ல. இதற்கு மாறாக புலியை சார்ந்து நின்று சொன்ன, சிறியளவு புரிதலும் காணப்படுகின்றது.

இன்று மகிந்த தலைமையில் அரச பாசிசம் கோர முகமெடுத்து கொடுமையாகவே தன்னை வெளிப்படுத்தி வருகின்றது. புலிப் பாசிசத்தை புரிந்துகொள்ளாத சிங்கள மக்கள், இந்தச் சூழலைக் கண்டு அதிர்ந்து போகின்றனர். ஆனால் அரச பாசிசமோ, புலிகளின் பாசிசத்தின் மற்றொரு வெட்டுமுகம். இது ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதல்ல. ஒன்றுக்குள் ஒன்று இயங்கிய பின்னணியில், ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று இல்லாது தனித்து வெளிப்படுகின்றது. இன்று பாசிசம் குறித்து அறிந்து கொள்ளல், புரிந்து கொள்ளல் மீதான சிங்கள மக்களின் அக்கறை, நாட்டின் மற்றொரு பகுதியில் நிலவிய பாசிசத்தை தெரிந்து கொள்ளவும், தெரிய வைக்கவும் கோருகின்றது.

முதலில் முன்னேறிய சக்திகள் யார் என்பதை அரசியல் ரீதியாக பரஸ்பரம் இனம் காண்பதில் இருந்து இது தொடங்குகின்றது. ஆம் கடந்த வரலாற்றில் இருந்தும், சொந்த சுயவிமர்சனத்தில் இருந்தும் இதற்கான அரசியலை நாம் இனம் காணவேண்டும். வரலாற்று வெற்றிடத்திலோ, திடுதிப்பான திடீர் புரட்சி வேஷத்தின் பின்போ, புரட்சிகர அரசியலை நாம் இனம் காணவோ, வந்தடையவோ, முன்னெடுக்கவோ முடியாது.

பெரும்பான்மை இன மத மக்களை, அரச பாசிசம் தன் பின் அணிதிரட்ட முனைகின்றது. அவர்களைக் கொண்டு சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான பொதுத் தாக்குதலை நடத்துவதன் மூலம் தன்னை விரிவாக்கி வருகின்றது. மக்களை இன மதங்கள் ஊடாகப் பிளந்து அவர்களைப் பாசிசமயமாக்கி, அவர்கள் மூலம் வன்முறையை நடத்தத் தொடங்கியிருக்கின்றது. 1930 களில் ஜெர்மனியில் நாசிக் கட்சி நடத்திய அதேயொத்த அரசியல் நடைமுறை, இன்று இலங்கை அரசின் பொதுக் கொள்கையாகிவிட்டது. இலங்கையில் சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான ஒடுக்குமுறையும் வன்முறையும், இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வண்ணம் இனிவரும் காலத்தில் மேலும் கூர்மையாகி வெளிப்படும்.

இனங்களுக்கிடையிலான இனவாதத்தை முறியடிக்காமல், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை உருவாக்க முடியாது. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியாது. இதற்கான இன்றைய தடைகள் என்ன? வர்க்க சக்திகள் முன்னுள்ள கடமைகள் என்ன?

காலனி காலம் முதல் ஆளும் வர்க்கங்கள்; இனமுரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் மக்களை சுரண்டுகின்றது. இது இனவொடுக்குமுறையாக, இனவழிப்பாக வளர்ச்சி பெற்ற போது, இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகியது. இது ஒடுக்கப்பட்ட மக்களை இரண்டாகப் பிளக்கின்றது. இலங்கையின் அடிப்படை முரண்பாடு வர்க்க முரண்பாடாக இருக்கின்றது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு வழிகாட்டுகின்றது. பிரதான முரண்பாடு இனங்களைப் பிளக்க, அடிப்படை முரண்பாடு ஐக்கியத்தைக் கோருகின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு தடையாக, பிரதான முரண்பாடான இனமுரண்பாடு இருக்கின்றது.

ஆரியச் சடங்கை அடிப்படையாக கொண்டு உருவானதுதான் தீண்டாமைச் சாதியம். இந்த வகையில் உருவான வரலாறு, எப்படி எந்தக் காரணத்தினால் உருவானது.

இலங்கை தூதரகத்துக்கு முன் நடந்த போராட்டத்தின் பின்புலத்தில், தமிழ் சிங்கள உறவுக்கு ஆப்பு வைக்கும் சதியும் கூடவே அரங்கேறியது. இந்தப் பின்புலத்தில் புலிகள் உள்ளிட்ட போலி இடதுசாரியம் பேசும் பிரிவினைவாத இனவாதிகளின் கூட்டுச் சதியுடன் தான் இது நடந்தேறியது.

1. அரசு புலி முத்திரை குத்தி முன்னிலை சோசலிசக் கட்சியை ஒடுக்க முனைகின்ற அரசின் திட்டமிட்ட சதிப் பின்னணியில், புலத்தில் சிலர் அதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் கூட்டாகச் செயல்பட்டனர். நாடு கடந்த புலி மாபியாக்களுடன் சேர்ந்து இந்தப் போராட்டம் நடத்துவதான அறிவித்தல் திடீரென வெளியானது. அதுவும் இலங்கை அரசு சார்பான ஊடகத்தில் வெளியானது. அதேநேரம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து பிபிசி தமிழ் சேவைக்கு தேசம்நெற்றைச் சேர்ந்தவர்தான் பேட்டியை வழங்குகின்றார்.

குறிப்பு : பாசையூரில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி கேட்டேன். அதற்கு தண்டனை வழங்கியதாகச் சொன்னார்.

விளக்கம் : பாசையூர் சம்பவம் என்ன? புலிகளின் மக்கள்விரோத பாசிச நடத்தைகளை கேள்வி கேட்டு பாசையூர் பொதுமகன் ஒருவனை, புலிகள் வழமை போல் பழி-பலிவாங்க விரும்பினர். அவனை வேட்டையாட புலிகள் முயன்ற போது, அந்த அப்பாவி மனிதன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் புகுந்து ஒரு குருவிடம் சரண் அடைந்தான். அங்கு புகுந்த புலிகள் குருவைத் தாக்கிவிட்டு விசாரணையின் பெயரில், அந்த நேர்மையான அப்பாவி மனினை கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். அதில் ஒரு பக்கமாக அந்த மனிதனை உயிருடன் வைத்து முதுகை ஸ்திரிப்பெட்டியால் (அயன்பொக்ஸ்சால்) அயன் பண்ணினர். பாசிசம் கொழுப்பேற அயன் பண்ணியே, அந்த மனிதனைக் கொன்றனர். பாசையூர் மக்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் அடக்குமுறை அவர்களுக்கு பரிசாக கிடைத்தது. அடி உதை சித்திரவதை கைது மூலம் தேசியத்தின் பெயரில் புலிகள் அவர்களை ஒடுக்கினர். இந்த மக்கள் நெஞ்சில் பாசிசத்துக்கு எதிரான போர்க் குணாம்சம், தணலாக புகைந்து கொண்டிருந்தது.

பிரேம்குமார் குணரட்ணத்தை வழமைபோல் தூக்கில் போடத்தான் கடத்தியவர்கள். துரதிஸ்டம் என்னவென்னால் அதே தூக்குக்கயிறு தனக்காகிவிடும் என்று கண்டவுடன், மக்களைக் கண்டு அஞ்சும் கோழைகள் தடுமாறி உளறுகின்றனர். பிரேம்குமார் குணரட்ணம் தானாக பொலிசில் வந்து சரணடைந்ததாக, கோத்தபாய பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனமான வக்கிரத்துடன் உலகறிய உளறி இருக்கின்றான். இப்படி சட்டவிரோதமாகக் கடத்தி அவர்களை கொலைகள் செய்கின்ற கூட்டத்தின் தலைவனுக்கு, மேற்கு தயார் செய்த தூக்குக்கயிறை கண்டவுடன் கலங்கி உளறிய போது, பிரேம்குமார் குணரட்ணம் பற்றிய தகவல்கள் கோத்தபாய மூலம் வெளியாகி இருக்கின்றது. இதன் மறுதளத்தில் இதை "மக்கள் குரலின் வெற்றி" என்று கூறுகின்ற இடதுசாரி அரசியல் வங்குரோத்துத்தனத்தைக் காண்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் தூக்குக்கயிற்றுக்கு முன் மண்டியிட்ட கோத்தபாய, மக்களின் குரலைக் கண்டு அஞ்சி மண்டியிடவில்லை. மக்களைக் கண்டு பாசிசம் பின்வாங்கிவிடவில்லை. பாசிட்டுக்கே உரிய வகையில், புதுக்கதை புனைந்து, பிரேம்குமார் குணரட்ணத்தை நாடு கடத்தியுள்ளது.

இலங்கையின் பயங்கரமான அரசியல் எதார்த்தம் இதுதான். மக்களுக்காக சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். சட்டபூர்வமான அரசு சட்டவிரோதமாக இவற்றைச் செய்கின்றது. சட்டம், நீதி, நியாயம் எதுவும் இந்த நாட்டில் கிடையாது.

கடந்த சில ஆண்டுகளில் சில ஆயிரம் பேர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் அல்லது கொல்லப்பட்டனர். இதைப் பற்றி எந்த நீதிவிசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த குற்றங்களைச் செய்தவர்கள் நாட்டை ஆளுகின்றனர் என்ற எதார்த்தம் மீண்டும் எமது முகத்தில் அறைகின்றது.

அரசியல் சூதாட்டமே அரசியலாகிப் போன நிலையில் அரசியல். எங்கும், எவரும், காய் நகர்த்தும் இந்த அரசியல் தான் பண்பாகிவிட்டது. மக்களை இராணுவரீதியாக ஒடுக்கியாள, அரசுக்கு ஒரு எதிரியைக் காட்டுவது அவசியமாகின்றது. இந்த வகையில் அரசுக்கு புலி தேவைப்படுகின்றது. மறுபக்கத்தில் மீண்டும் குண்டு வைத்து அரசியல் செய்யலாம் என்ற கனவுகளுடன், தேசியம் பேசும் வலது - இடது உதிரிக் கூட்டங்கள் தங்கள் காய்நகர்த்தும் சொந்த சதிகளுடன் அங்குமிங்குமாக ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர்.

அரசு தன் புலனாய்வை மேற்கோள் காட்டி மீண்டும் புலிகள் என்றும், இந்தியாவில் மூன்று பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும், மன்னார் கடற்கரையில் புலிகளின் அதி வேக இரு வள்ளத்தைக் கைப்பற்றியதாகவும் செய்திகளை கசியவிட்டு இருக்கின்றது.

வலதுசாரிய புலியின் நடத்தைக்கு அரசியல் ரீதியாக நியாயம் கற்பிக்கவும், புலிக்கு அரசியல் வெளிச்சம் போட்டுக காட்டவும், ஐயரின் நூல் மூலம் முனைகின்றனர். புலியின் நடத்தைகள் வலதுசாரிய அரசியல் அல்ல, குறித்த சூழலின் விளைவாக காட்ட முனைகின்றனர். இந்த அரசியல் பின்னணியில் இடதுசாரிய விமர்சனங்களை மறுக்கின்ற, வலதுசாரிய அரசியல் பின்புலத்தில் இவை சோடிக்கப்படுகின்றது.

வரலாற்று ரீதியான திரிபு எப்போதும் அரசியல் ரீதியானது. இந்த அரசியல் பின்னணியில் வரலாற்றை பொதுமைப்படு;த்துகின்றது. வரலாற்றை திரிக்கின்றது. வரலாற்றை இருட டடிப்பு செய்கின்றது. புரட்சிகரமான வர்க்கக் கூறுகளை அரசியல் நீக்கம் செய்கின்றனர். தேசியத்தை புனிதமான ஒன்றாகவும், வர்க்கமற்ற ஒன்றாகவும், காட்டவும் கட்டமைக்கவும் முனைகின்றனர்.

வலதுசாரிய சுரண்டும் வர்க்கம் முன்வைத்த தேசியம், மக்களுக்கு எதிரான கொள்கைகள் கோட்பாடுகளுடன் தான் செயல்படத் தொடங்கியது. இந்த வர்க்கப் பின்னணியில் மக்களை ஒடுக்கியபோது, அதற்கு எதிரான போராட்டமும் தொடங்கியது. இடதுசாரிய அமைப்புக்களாகவும், வலதுசாரிய அமைப்புக்குள்ளும் போராட்டம் தொடங்கியது. இப்படித்தான் வலதுசாரியத்துக்கும், வலதுசாரிய பாசிசத்துக்கும் எதிராக நடந்த போராட்டத்தின் வரலாறு. மக்களுக்கான இந்தப் போராட்டத்தில் பலர் மரணித்தனர். இந்தப் போராட்டமோ எந்த அரசியல் இடைவெளியும் இன்றி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. இதை அங்கீகரிக்காத, ஏற்றுக் கொள்ளாத வரலாற்றுப் பார்வைக்கு பின்னுள்ள அரசியல் வலதுசாரியம் தான். எந்த வலதுசாரியம் மக்களுக்காக போராடியவர்களை கொன்று குவித்ததோ, அதை மூடிமறைப்பதன் மூலம் அதையே இன்று செய்ய முனைகின்றனர்.

ஜனநாயக மறுப்பு வர்க்கம் கடந்ததல்ல. ஜனநாயக மறுப்பு சுரண்டும் வர்க்கத்தின் பண்பு மாற்றம். பாசிசமயமாக்கல் இதனடிப்படையிலானது. இங்கு ஜனநாயகம் சுரண்டும் வர்க்கக் கோட்பாடு தான். இது சுரண்டப்படும் வர்க்கத்துக்கு வழங்கும் உரிமையை அளவீடாகக் கொண்டது தான், ஜனநாயகம் பற்றிய கோட்பாடுகள். பாட்டாளிவர்க்கம் ஜனநாயகத்தைக் கோரும் போது, முரணற்ற ஜனநாயகத்தைத்தான் கோருகின்றது.

இங்கு புலிகள் பிரச்சனையை வெறும் "ஜனநாயக" பிரச்சனையாகத் திரித்துக்காட்ட முனைகின்றனர். அத்துடன் "ஜனநாயகம்" பற்றிய தவறான உள்ளடக்கத்தை முன்வைக்க முனைகின்றனர்.

இடதுசாரிகள் "இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர் முதலில், இன்று அவர்கள் எதார்த்தத்தில் என்ன செய்கின்றார்கள்? இன்றைய சமூக முரண்பாடுகள் மீதான அவரின் அரசியல் நடைமுறை செயற்பாடு என்ன என்பதில் இருந்து தான், அன்றைய காலகட்டங்கள் மீதான இவர்களின் விமர்சனத்தின் நோக்கத்தை இனம் காணமுடியும்;. இந்த வகையில் சசீவனின் இன்றைய அரசியல் மற்றும் நடைமுறையை எடுத்தால், இவை

1.இருப்பு சார்ந்த பிரமுகர் தனத்தையும்

2.மார்க்சிய எதிர்ப்பு அரசியல் அடித்தளத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

முரணற்ற வகையில் அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்து ஒரு புள்ளியில் இணையாத அரசியல், முரணுள்ளதாகவும் தனக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டுள்ளதாகவும் காணப்படும். உயிரியல் அடிப்படையில் கூட மனிதர்கள் தமக்குள்ளான வேறுபாடுகளை நீக்கி தம்மை ஒன்றிணைக்காது பிரிந்து நிற்கும் போக்கு, மனிதவிரோத உயிரியல் கண்ணோட்டமாகும்.

இந்த வகையில் தான் சசீவனின் மார்க்சிய விரோதக் கண்ணோட்டம் வெளிப்படுகின்றது. "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன" என்று சசீவன் கூறுகின்றார். "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள்" வலதுசாரிய அரசியலல்ல என்கின்றார். இதன் மூலம் அவர் "தேசியம், தேசியவாதக் கருத்துக்க"ளை வர்க்கம் கடந்த ஒன்றாக இட்டுக்கட்டிக் காட்டமுனைகின்றார்.

"ஒடுக்குபவர்" அடையாள அரசியலை முன்தள்ளும் போது, அந்தப் பிளவுவாதத்தை "ஒடுக்கப்படுபவர்" அரசியல்ரீதியாக எதிர்க்க வேண்டும். மாறாக பிளவுவாத "அடையாள அரசியலை" முன்னெடுத்தால், "ஒடுக்குபவரின்" வர்க்க அரசியல் நோக்கத்தின் அரசியல் பிரதியாகி விடுகின்றது.

இங்கு "ஒடுக்கப்படுபவர்" என்று "தரவரிசைப்படுத்துவது" அல்லது சமாந்தரப்படுத்துவது என்பது சாராம்சத்தில் பல "ஒடுக்குபவரை" உள்ளடக்கி அதையும் சமாந்தரப்படுத்தக் கோருவதுதான். இதன்படி ஒன்றுக்கு மேற்பட்ட "ஒடுக்குபவரை"யும், "ஒடுக்கப்படுபவரை"யும் அங்குமிங்குமாக சமாந்தரமாக முன்னிறுத்துவது, இதற்குள் அங்குமிங்குமாக "ஐக்கிய முன்னணியை" கட்டுவது எதிர்ப்பதும், இந்த சமூக அமைப்பின் அரசாலான மூடிமறைத்த மற்றொரு பிரதிதான்.

வர்க்கக் கண்ணோட்டமற்ற அரசியல் மக்களுக்காக என்றும் எங்கும் போராடுவதில்லை. மாறாக அதைக் குழிபறிப்பதையே, அரசியல் அடிப்படையாகக் கொண்டது. சமாந்தரம், நடுநிலை என்று முன்தள்ளும் தத்துவ மோசடி எங்கிலும் இதை நாம் இனம் காணமுடியும். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களாக மக்கள் பிளவுபட்டு இருக்கும் போது, "ஒடுக்கப்படுபவர்" என்று வர்க்கம் கடந்து அதை வகைப்படுத்தும் அரசியல், மோசடியிலானது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் என்பதற்கு பதில் "ஒடுக்கப்படுபவர்" என்பது, குறித்த ஒடுக்குமுறையல்லாத அனைத்தையும் தனக்குள் ஒடுக்குவதை அங்கீகரித்தல் தான். இங்கு இதை சமாந்தாரக் கோட்பாடாக கோருகின்றது.