தமிழ் ஊடகங்களில் கொழுந்து விட்டெரியும் இனவாதமும், தலைமறைவு பற்றிய கோட்பாடுகளும்
இலங்கையில் நடக்கும் ஓவ்வொரு நிகழ்வையும் தங்கள் சொந்த இனவாதம் ஊடாக அணுகுவது தான் அறிவாகி, அது பரப்புரையாகின்றது. இப்படி கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றவர்களின் அறியாமையும், மடமையும், எம் இனத்தையே குட்டிச் சுவராக்குகின்றது. அண்மையில் அமைச்சரின் காலில் விழ மறுத்த சிறுவனின் செயலை தமிழன் வீரச் செயலாகவும், ஜே.வி.பி இற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு தமிழனின் தலைமையில் என்று கூறின தமிழினவாத ஊடகங்கள். இப்படி தமிழ் மக்களுக்கு பட்டை நாமம் போட்டபடி, அவர்களை மொட்டை அடித்தனர். குறுகிய குருட்டுப் பார்வை கொண்ட தங்கள் ஊடகவியல் வக்கிரங்களை, தமிழ் என்ற அடையாளத்தை முன்னிறுத்திய இனவாதம் ஊடாகவே உலகை காட்டி நஞ்சை ஊட்டுகின்றன.