Language Selection

பி.இரயாகரன் -2010

"எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை", அதனால் "எப்படியாவது" என்று கூறி, அனைத்தையும் சொந்த மக்கள் மேல் திணித்தவர்கள் தான் இந்தச் தீபச்செல்வன்கள். அதைத்தான் இங்கு தீபச்செல்வன் மறுபடியும் நியாயப்படுத்துகின்றார். இப்படி இவர்கள் வேறு "வழிதெரியவில்லை" "எப்படியாவது" என்று கூறி ஏற்படுத்திய சமூக விளைவை, கவிதை இலக்கியம் என்று எந்தக் கூச்சமுமின்றி அதை அரசியலாக்குகின்றனர். இதைத்தான்  காலாகாலமாக புலிகள் செய்து வந்தனர்.

நடந்ததை மூடிமறைக்கும் வரை, சமூகம் இருட்டில் தத்தளிக்கும். பொய்யர்களும், புரட்டுப் பேர் வழிகளும், மக்கள் மேல் சவாரி செய்வார்கள். சமூகம் தனக்காக போராடும் என்பதை, கனவிலும்; நினைத்து பார்க்க முடியாது. இந்த பாதையில் தான் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்ந்து புளுத்து சமூகத்துக்கு நஞ்சிடுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்றால் புலிகள் விமர்சிக்கப்படவேண்டும். இதை அரசியல் ரீதியாக செய்வதை விரும்பததால், எம்மை எங்கும் இருட்டடிப்பு செய்கின்றனர்.    

தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிரான மனிதவுரிமைச் சட்டங்கள் அனைத்தும், குப்பையில் போட வேண்டும். நீதி, சட்டம், ஒழுங்கு எவையும், மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு கிடையாது. இதை கடைப்பிடிக்கும்படி  யாரும் கோர முடியாது. அதை அரசுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. அதை நாம் அனுமதிப்பதில்லை. அதை மீறினால் கொல்லப்படுவார்கள். இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களாகிய நாங்கள் நடைமுறைப்படுத்தும், ஜனநாயகம் இதுதான். தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக மனிதவுரிமை சட்டத்தை எம் நாட்டில் அமுல்படுத்திட முடியாது என்று ஆட்டம் போடும் பாசிட்டுகள், அதை உலக அரங்கில் எழுப்பியதுடன் அதை உலகம் தளுவியதாக அமுல்படுத்தக் கோருகின்றனர். மகிந்த ஐ.நாவில் ஆற்றிய உரையில் "போர்கள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்த சர்வதேசச் சட்டங்களில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக" கூறுகின்றார். சர்வதேச சட்டத்தில் இருக்கக் கூடிய மனிதவுரிமைகளை கூட, இல்லாதாக்க கோருகின்றார். மக்களைக் கொன்று குவித்து ஆட்டம் போட்ட எங்களைப் போன்ற  பாசிட்டுகளை, மனிதவுரிமைச் சட்டத்தின் முன் நிறுத்தக் கூடாது என்று சொல்லுகின்றனர். ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதத்தை" ஒழித்துக் கட்டியவர்கள். அதற்காக "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்."  

எதையும் மறுபரிசீலனை செய்யும் அறிவு,  முடக்கப்பட்டு இருக்கின்றது. நடந்த போராட்டம் மீதான விமர்சனம், சுயவிமர்சனத்தை செய்வது, அரசியல் ரீதியாக தொடர்ந்து மறுக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இடதுசாரியம் வரையான பொது அரசியலாக உள்ளது. புலியை விமர்சனம் செய்யாத அரசியல் மூலம், இலங்கை தமிழர்கள் மற்றொரு மாற்று அரசியலை ஒருநாளும் முன்னெடுக்க முடியாது. இந்த வகையில் இலங்கை, தமிழகம் புலம் என்று எங்கும் புலித்தேசிய அரசியல் முதல் அதன் தோல்விகள் வரை, விமர்சனம் செய்வது என்பது அரசியல் ரீதியாக தவறாக காட்டப்பட்டு அவை இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. இதை நாம் மட்டும் கோருவதால், எமது விமர்சனங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலித்தேசிய அரசியல் பார்வையே, தொடர்ந்தும் எங்கு ஆதிக்கம் பெற்ற ஒன்றாக நீடிக்கின்றது. இந்த அனைத்து தளுவிய உண்மை, அரசியல் ரீதியாக தொடர்ந்து புதைக்கப்படுகின்றது.        

இதற்கான காரணத்தை எப்படி, அதை எந்த நோக்கில் இருந்து பார்க்கின்றார்கள் என்பது, அரசியல் ரீதியான அவர்களின் நேர்மைக்கு மற்றொரு எடுத்துக் காட்டாக மாறிவிடுகின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றது ஏன் என்றும், புலிகள் அழிக்கப்பட்டது ஏன் என்ற சுய விசாரணையை செய்ய முடிந்திருக்கின்றதா? சொல்லுங்கள். முதலில் நாங்கள் தான் தோற்கடிக்க காரணமாக இருந்திருக்கின்றோம், மற்றவர்கள் அல்ல. மற்றவர்கள் இதை தமக்கு சாதகமாக கொண்டு வென்றவர்கள்.

எமது சமூகம், ஏன் இந்த அவலமான அரசியல் நிலையை அடைந்தது? அதை வெறும் பேரினவாதமாக மட்டும் கூறுவது, இந்தநிலை ஏற்பட காரணமாக இருந்த தமது தரப்பு தவறுகளை மூடிமறைப்பதாகும். இதைத்தான் இங்கு தீபச்செல்வன் செய்கின்றார். தனது இனம் சார்ந்தும், தனது வர்க்கம் சார்ந்தும், எதார்த்தத்தின் ஒருபக்கத்தைச் சார்ந்து நின்று எதார்த்தத்தின் முழுமையை மறுக்கின்றார். இதைத்தான் புலிகள் கடந்தகாலத்தில் செய்து வந்தனர்.

மற்றொரு புலி சரணடைவு பற்றிய உண்மையையும், அவர்கள் எங்கே என்ற கேள்வியையும் மகிந்த பேரினவாத அரசின் முன் எழுப்பியுள்ளது. "இங்கு ஒரு சின்ன ஈ அசைந்தால் கூட அது அவருக்குத் (ஜனாதிபதிக்கு) தெரிந்திருக்கும்" என்று, தன் கணவன் எங்கே என்று கொலைகார மாண்பு மிகு ஜனாதிபதியிடம் ஆனந்தி சசிகரன் கேட்டிருக்கின்றார்.

மகிந்த அரசு தங்கள் போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும் சர்வதேசத்தை ஏய்க்கவும், ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. தாங்கள் சரணடைந்தவர்களைக் கொல்லவில்லை என்பதும், அவர்கள் யாரும் இந்த நாட்டில் காணாமல் போய் விடவில்லை என்று சொல்கின்ற புரட்டை நிலைநிறுத்தும் நாடகங்கள் தான் விசாரணைகள் முதல் ஆணையங்கள் வரையான கூத்துக்கள்.

அரசியல் ரீதியாக நீர்த்து போகச் செய்ய பல தில்லுமுல்லுகள். திசை திருப்பல்கள். மக்களின் அவலத்தை பார் என்கின்றனர். குகநாதன் பற்றிக் கதை சொல்லுகின்றனர். முதலில் இதில் இரயாகரன் பற்றி சொன்னவர்கள் தான், இப்போது இப்படிக் கூறுகின்றனர். 

இதன் மூலம் புதிதாகச் சொல்லும் அரசியல் உள்ளடக்கம் என்ன? அருள் சகோதரர்கள் செய்தது சரி என்பதே. இதனால் நாவலன்-அசோக் ஈடுபட்டதும் சரியாகிவிடுகின்றது. இதை மூடிமறைக்க, முடிவற்ற திசைதிருப்பல்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் முதல் அரசியல் பச்சோந்திகள் வரை இந்த விடையத்தை அமுக்கிவிட முனைகின்றனர்.

தீபச்செல்வனுக்கு முற்போக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தது எது?

1.அவரின் பின் வெளிப்படாது இருந்த புலிசார்பு அரசியல் நிலைப்பாடா!? அல்லது

2.அவர் பொதுமக்களின் அவலங்கள் சார்ந்த, அவரின் கவிதை மொழியா!? அல்லது

3.புலிகள் பற்றிய அவரின் கவிதையில் மறைமுகமாக வெளிபட்ட எதிர்மiறான மெல்லிய ஒரு சில விமர்சனங்களா!?

இரயாகரன் அனைவருக்கும் எதிராக "அவதூறு" எழுதுகின்றார், இரயாகரன் "தனிநபர்" தாக்குதல் நடத்துகின்றார், இரயாகரன் - நாவலன் "இடையேயான" விவகாரம் இது, இரயாகரன் என்.எல்.எவ்.ரியின் கற்றன் நாசனல் வங்கிப் பணத்தை "மோசடி" செய்தவர், இரயாகரன் ஒரு "மனநோயாளி", இரயாகரன் எழுத்தை நாம் "படிப்பதில்லை" என்று எத்தனையோ திசை திருப்பும் அரசியல் தகிடுதத்தங்கள், அரசியல் வக்கிரங்கள். முதலில் இதுவே ஒரு அரசியல். உண்மைகளை குழி தோண்டிப் புதைக்கும், சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாத அரசியல். இதன் மூலம் என்னதான் இவர்கள் சொல்ல வருகின்றனர். தங்கள் அரசியல் நடத்தைகள் சரியானவை என்பது தான். இதன் மூலம் உண்மைகளை மூடிமறைத்து, மக்களை ஏய்க்கும் அரசியலை தொடர்ந்து நடத்த முனைகின்றனர்.

இனியொரு நாவலன் வழக்கு போடப் போவதாக சலசலப்புக் காட்டி மிரட்டுகின்றார். நாமே குறுக்கு விசாரணையை நடத்தி, வழக்கை நடத்திவிட வேண்டியதுதான். அந்தக் குறுக்கு விசாரணையை எழுதிக்கொண்டிருந்த போது இனியொரு ஆசிரியரும், அருள் செழியனின்  தம்பியுமான அருள் எழிலன் "நடந்தது என்ன" என்ற ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை எழுதி முடிந்த நிலையில் குகநாதன் பேட்டி தேசம் நெற்றில் வெளியாகியது. இதையடுத்து நாவலன் "ஜெயபாலன் – ரயா – குகநாதன்"  கூட்டுபற்றி வேறு பேசியிருக்கின்றார். குகநாதன் சமன் மகிந்த ராஜபக்சா என்று சொல்லி, இதுதான் ரயா என்று சொல்லும் எல்லையில் நாவலன் அரசியல் விரைவில் தஞ்சமடையும். நாம் முதலில் அருள் செழியன் - அருள் எழிலன் விடையத்தை சுருக்கமாக பார்த்துவிட்டு குறுக்கு விசாரணைக்கு செல்வோம்.

இனவொடுக்குமுறையினால் தொடரும் பொது அவலம், சுயநிர்ணயம் என்ற அரசியலற்ற பொதுக் கோசம், அரசுக்கு எதிராக முன்னிறுத்திய அடையாளங்கள் மூலம், அரசியல் இன்று தொடர்ந்து சாக்கடையாகின்றது. இதற்குள் வேறுபாடியில்லை என்று காட்டுவது தான், குறுந்தேசிய அரசியல் உள்ளடக்கமாகும்;. இங்கு வலது இடது வேறுபாடு இன்றி, அனைத்தும் சூக்குமமாக மக்களுக்கு எதிராகவே பயணிக்கின்றது. இதுதான் வலதுசாரிகளின் மைய அரசியல் அடிப்படையாகும். புலிகள் இருந்தவரை அனைத்தும் இதுவாக இருந்தது. இன்று அனைத்தும் பொது அவலம் மேல் ஏறி, மிக சூக்குமாக பயணிக்கின்றது. மக்களிடையேயான முரண்பாடுகளை இன முரண்பாட்டின் மூலம் பாதுகாத்தபடி, மக்கள் விரோத அரசியலை முன்தள்ளுகின்றனர். கடந்தகாலத்தில் இதைப் பாதுகாக்கவே, புலிகள் மக்கள் மேல் வன்முறையை எவி பாசிசத்தை நிறுவினர்.  

ஆம் வர்க்கம் கடந்தது என்கின்றது வலதுசாரியம். இடதுசாரியமோ இதில் நீந்த முற்படுகின்றது. இது தான் இன்று தமிழ் தேசியம் தொடர்பான பொது அரசியல் உள்ளடக்கமாகும். தமிழ் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க சக்திகள், இன்று சந்திக்கின்ற இடதுசாரிய அரசியல் திரிபுகள், அழுத்தங்கள் இது சார்ந்து தான் உருவாகின்றது. இன்று இலங்கையில் ஒரு வர்க்கக் கட்சி கிடையாது. கட்சி கருத்தைக் கூட பாதுகாக்கும் போராட்டம் என்பது, கடுமையான அரசியல் அழுத்தத்துக்கு உள்ளாகின்றது. இந்த நிலையில் மக்களின் வாழ்வு சார்ந்த எழுகின்ற அவலம் தொடர்ந்து முன்தள்ளும் கருத்துகள், அரசியலைக் கைவிடக் கோருகின்றது. குறுக்கு அரசியல் வழியை நடக் கோருகின்றது. 

ஆயுதத்தை எடுக்க செல்ல முன், ஒரு சாரத்தை தந்தனர். சிறிது நேரத்தில் எனது கண் கட்டப்பட்டது. கை கட்டப்பட்ட நிலையில் வானில் ஏற்றினர். பின் காலைக் கட்டி, வாயைக் கட்டினர். என்னை வானின் பின்புறத் தரையில் படுக்கவிட்டனர். நான் படுத்த இடத்தில் பொலீத்தின் காணப்பட்டது. எனக்கு புதிய கேள்வியாக, ஏன் இந்த பொலீத்தின் என்ற சந்தேகம் எழுந்தது. நான் காட்டும் பொருளை எடுத்த பின்பு, என்னைச் சுட்டு உடலைக் கொண்டுவந்து புதைக்க இந்த பொலீத்தின் தேவைப்படுகின்றதோ என்று எண்ணினேன். எனது அசைவின் தொடு உணர்ச்சி மூலம், வானில் மண்வெட்டி மற்றும் பிக்கான் கூட இருப்பதை தெரிந்து கொண்டேன்.

தமிழ் மக்களின் பிணம் தான் புலி அரசியலாகியது. தமழ்மக்களின் அவலம் தான் தீபச் செல்வனின் கவிதையாகியது. இது தான் இவர்களின் அரசியல் சமன்பாடு. இதற்கு வெளியில் மக்கள் அரசியல் என எதுவும் கிடையாது. புலிகள் இருந்தவரை தீபச்செல்வன் புலியிசத்தைக் கவிதையாக்கியவர், அந்த  தவறான போராட்டத்தில் ஏற்பட்ட பொது மனித அவலத்தை, மீளவும் தன் கவிதையாக்கினார். இந்த பொது மனித அவலம் எல்லாம் பேரினவாதத்தின் செயலாக காட்டும் அதேநேரம் அதை விதி என்கின்றார். இது தங்களால் ஏற்பட்டதல்ல என்ற, புலியிசத்தை முன்தள்ளுகின்றார். பேரினவாதம் சார்ந்த பொது மனித அவலம் சார்ந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டு, தங்கள் வலதுசாரிய மனிதவிரோத அரசியல் நடத்தைகளை மூடிமறைக்கின்றார். இதை மிக நுட்பமாக தீபச்செல்வன், தன் கவிதைகள் மூலம் செய்கின்றார். நாம் உட்பட இந்த மூடிமறைத்த அரசியல் பித்தலாட்டத்தை, இனம் காண முடியாது போனது என்னவோ உண்மைதான். புலிகள் பிணத்தை உற்பத்தி செய்து அரசியல் நடத்திய போது, அந்த பிணத்தை வைத்து  நடத்திய அரசியலில் யார் போலிகள் யார் போலியல்ல என்பது தெரியாத ஒரு மயக்கத்தை எங்கும் உருவாக்கியது. இது போல் மனித அவலம் மீது இன்று கேபி, தீபச்செல்வன் முதல் யார் யாரோ எல்லாம் அரசியல் செய்கின்றனர்.

இலங்கையின் இன்றைய பிரச்சனைகள் தான் என்ன? அவை பற்றி நாட்டை ஆளும் கும்பல் அக்கறைப்படுகின்றதா? இல்லை. தேசிய இனப்பிரச்சனைக்கு அற்ப சலுகையைக் கூட அது கொடுக்க மறுக்கின்றது. இப்படி இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கின்ற பேரினவாதிகள், தொடர்ந்து இலங்கையில் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக முன்தள்ளிய வண்ணம் உள்ளனர்.  

இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

என் மீதான தொடர்ச்சியான விசாரணையில், எனது தயக்கமற்ற பதில், முன் கூட்டியே அவர்களுக்கு விடைதெரிந்த கேள்விகள் முடிவுக்கு வந்தது. விடைதெரிய வேண்டிய கேள்விகள் பல. ஆனால் அதை மீள மீளக் கேட்டனர். கேட்கும் போது கண்மூடித்தனமாகத் தாக்கி அடித்தனர். ஏற்பட்டிந்த காயங்களை மீளவும் இரத்தம் வரும் வண்ணம் மீளமீள சிதைத்தனர். 

புலிகள் தாம் தெரிந்து கொண்ட மார்க்சியத்தை, தங்கள் எதிர்ப்புரட்சிக்கு ஏற்ப பயன்படுத்தத் தொடங்கினர். மாத்தையா தொடர்ச்சியான கேள்விகளை, ஜனநாயக மத்தியத்துவத்தை அரசியல் ரீதியாக எடுத்துக்காட்டி தரவுகளைக் கோரினான். நான் அதீத ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு வேகமாக சந்தேகப்படாத வகையில் பதிலளித்தேன். கற்பனைப் பெயர்களைக் கொண்டும், அவர்கள் நன்கு அறிந்த அவர்கள் தேடுகின்ற நபர்களைக் கொண்டும் பதிலளித்தேன். இதன் மூலம் எனக்குத் தெரியாது என அனைத்தையும் மறுத்தேன்;. நான் பகிரங்கமாக, மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர் என்றேன். அப்படித்தான் அன்று மக்கள் மத்தியில் மிகப் பகிரங்கமாக வேலைசெய்தேன். புலிகள் அறிய விரும்பிய, கைப்பற்ற விரும்பிய பணம், இராணுவ உபகரணங்கள் என் பொறுப்பில், என் கண்காணிப்;பில் தான் இருந்தது. நான் இராணுவக் குழு உள்ளிட்ட தளத்தின் நிதி மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு கூட பொறுப்பாக இருந்தேன். 

தேர்தல் "ஜனநாயகம்" எவ்வளவு கேலிக்குரியது என்பதை, இலங்கை சர்வாதிகார ஆட்சியாளர்கள் நிறுவி வருகின்றனர். மக்கள் வாக்களிப்பது என்பது, எவ்வளவு முட்டாள் தனம் என்பதையும், அரசியல்வாதிகளின் நடத்தைகள் எடுத்துக் காட்டுகின்றது. மகிந்த தொடர்ந்து தான்தான் அடுத்த ஆட்சியாளன் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்துக் கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றுகின்றான். இங்கு மக்கள், மக்களின் வாக்கு என்பதெல்லாம் வெறும் தூசு. பாராளுமன்ற ஜனநாயகத்தில், இது விபச்சாரம் செய்யத்தான் லாயக்கு.