மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)
"எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை", அதனால் "எப்படியாவது" என்று கூறி, அனைத்தையும் சொந்த மக்கள் மேல் திணித்தவர்கள் தான் இந்தச் தீபச்செல்வன்கள். அதைத்தான் இங்கு தீபச்செல்வன் மறுபடியும் நியாயப்படுத்துகின்றார். இப்படி இவர்கள் வேறு "வழிதெரியவில்லை" "எப்படியாவது" என்று கூறி ஏற்படுத்திய சமூக விளைவை, கவிதை இலக்கியம் என்று எந்தக் கூச்சமுமின்றி அதை அரசியலாக்குகின்றனர். இதைத்தான் காலாகாலமாக புலிகள் செய்து வந்தனர்.