Language Selection

பி.இரயாகரன் -2009

இன்று ஒரு அரசியல் இயக்கம் முதல் தனி மனிதன் வரை கொண்டுள்ள அரசியல்  நேர்மையானது என்பதை, நாம் எப்படி இனம் காண்பது?  கடந்த காலத்தை எப்படி அவர்கள் காட்டுகின்றனர் என்பதுடன் தொடர்புடையது. தாங்களும், மற்றவர்களும் அதில் என்ன அரசியல் பாத்திரத்தை வகித்தனர் என்பதுடன் தொடர்புடையது. அதை விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு எப்படி உள்ளாக்கினர் என்பதுடன் தொடர்புடையது.

பிரபாகரனுக்கு முந்தைய காலத்தின் அனைத்து மனித விரோத சமூக விரோத தவறுகளுக்கும், புலிகளே பொறுப்பு என்கின்றனர். இப்படி கூறுகின்ற அரசியல் பொதுத்தளத்தில், எதிர்ப்புரட்சி அரசியல் ஒரு அரசியல் கூறாக மீளவும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தான் இனியொருவும், அசோக்கும் கூட, தமக்குத்தாமே லாடமடித்து அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இதற்கமைய பொய், புரட்டு பித்தாலாட்டம், சூழ்ச்சிகள் இன்றி, இந்த வண்டியை ஓட்ட முடியாத வண்ணம் கடந்தகால அரசியல்.

இன்னும் இரண்டு வருடங்கள், தொடர்ந்தும் மக்களை ஓடுக்கி ஆளமுடியும்;. தனக்கு எதிரான ஒரு பிரதான பொது எதிரியை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவசரமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?

இறுதி யுத்தத்தில் பிரபாகரனும் அதன் தலைவர்களும் தாம் உயிர் தப்பிப் பிழைக்க மக்களை பணயம் வைத்தனர். அதற்கு உடன்பட மறுத்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றனர். இப்படிப்பட்ட கொலைகாரர்கள், இறுதியாக தாம் தப்பிப் பிழைக்க கோழைகளாக சரணடைந்தனர். மக்களுக்கு எதிராகவும், தம் அமைப்புக் கோட்பாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டனர்.

புலி அரசியலோ சமூகத்தை வெட்டியாக்கி விதைத்த விதைகள், புலியல்லாத தரப்பை அரசியலற்ற மக்கள் விரோத நக்கியுண்ணும் கும்பலாக்கியது. இப்படி மக்கள் விரோத அரசியலைக் காவித் திரிந்தவர்களின் ஒருபகுதி, இன்று இனியொரு இணையத்தில் கும்மியடிக்கின்றனர்.

வலதுசாரி தமிழ் அரசியல் என்பது, யார் அதிகாரத்தில் உள்ளனரோ, அவர்களின் பாதம் தொழுது மக்களின் முதுகில் குத்துவதுதான். அன்று புலிப் பாசிசத்தினை தவழ்ந்து நக்கியவர்கள், இன்று மகிந்தாவுக்கு ஆரத்தி எடுத்து நக்கத் தொடங்கியுள்ளனர். 

தமிழ் மக்களை "தேசியத்தின்" பெயரில் மொட்டை அடித்த கும்பல், மக்களின் காதுக்கு பூ வைத்து தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவ முனைகின்றது. பேரினவாதம் தன்னிடம் சரணடைந்த பிரபாகரனைக் கொன்று, அவனுக்கு கோமணத்தைக் கட்டி அவமானப்படுத்திக் காட்டியது. புலத்துப் புலிகள் தமிழ் மக்களிடம் எஞ்சிய கோமணத்தையும், அவன் அறியாமலே எப்படியும் உருவலாம் என்று எண்ணுகின்றது. 

 

 மகிந்த கும்பல், முன்னாள் கூட்டாளியான சரத் பொன்சேகாவுக்கு செய்யாத அவமானம் கிடையாது. தொடர்ந்தும் சகல விதமான நெருக்கடிகளையும், தனிமைப்படுத்தலையும் தீவிரமாக்கியிருக்கும் மகிந்த கும்பல், ஆளை போட்டுத்தள்ளுவதன் மூலம் தான்  தன் குடும்ப சர்வாதிகாரத்தை தக்க வைக்கமுடியும் என்ற அரசியல் நிலைக்குள் நகர்ந்து வருகின்றது. சரத் பொன்சேகாவை நாளை துரோகி என்று கூறும் வண்ணம், அண்மையில் மகிந்தாவின் உரை ஒன்று வெளிவந்துள்ளது. தன்னுடன் இல்லாத அனைவரும், துரோகிகள். இதுதான் மகிந்த சிந்தனையும், மகிந்த சித்தாந்தமுமாகும்.

   

இந்தத் தீர்மானத்தின் பெயரில் தான், தமிழினத்தையே அழித்தனர். தமிழினத்தை பல பத்தாகப் பிளந்தனர். இதுவே எம் கடந்தகால, நிகழ்கால வரலாறாகிக் கிடக்கின்றது.

தமிழீழத்தின் பெயரில் தமிழினத்தையே கடந்த காலத்தில் அழித்தவர்கள், இன்று அதன் பெயரில் உள்ள பினாமி சொத்துக்களுக்காக மோதுகின்றனர். இப்படி புலத்து புலிக்குள் நடக்கும் மோதல்கள், நோர்வேயில் குறைந்த பட்சம் மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்த மோதல்களின் பின்னணி, எந்த மக்கள் நலன் சார்ந்ததுமல்ல.

புலம்பெயர் தமிழ் மக்கள், கடந்தகால புலிகளின் பாசிச கட்டமைப்பில் இருந்து இன்னமும் விடுபட்டுவிடவில்லை. அப்படி விடுபட முடியாத வண்ணம், புலத்து புலிகள் பற்பல வேசங்களைப் போடுகின்றனர்.

தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களும் துயரங்களும், இன்று குறுகிய நலன்களுடன் அரசியல் ரீதியாக விலை பேசப்படுகின்றது. இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள் முதல் மகிந்த குடும்பத்தின் பாசிச ஆட்சியைத் தக்க வைக்கும் எல்லைகள் வரை, தமிழ் மக்களின் அவலம் அரசியலாக்கப்படுகின்றது.

இலங்கையின் ஜனநாயகம் இதுதான். இதற்குள் தான் சட்டம் நீதி, சமூக ஒழுங்கு என அனைத்தும் இயங்குகின்றது. நாட்டின் அதிகார வர்க்கம், தான் விரும்பியவர்களை எதுவும் செய்ய முடியும். மக்கள் முன் ஈவிரக்கமின்றியே அடித்துக் கொல்லுகின்றது. சூடு சுரணையற்ற சமூகம், அதை வேடிக்கையாகவே பார்த்து ரசிக்கின்றது.

புகலிடச் சிந்தனை மையத்தின் இணையம், www.psminaiyam.com  கடந்தகால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றி அமைக்க முன்முனைப்புடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. சிங்களம் முதல் பல மொழிகளில் தன்னை ஒருங்கிணைத்து, மக்கள் மத்தியில் செயல்பட அது உறுதி பூண்டுள்ளது. சமகால நிகழ்வுகளை ஓட்டி, ஒரு பொது விவாத அரங்கையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் அங்கத்தவராக பதிவு செய்து கொள்ளும், யாரும் இங்கு சுதந்திரமாக விவாதிக்க முடியும்.

 

அரசியல் கோமாளிகள், இயல்பில் அலுகோசுகளாகவும் பவனிவருவர். அண்மையில் சுவிஸ் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், கோமாளி சுகன் தான் ஒரு அலுக்கோசு என்பதை இங்கு மீண்டும் வெளிப்படுத்தினான்.

இது பெண்ணியமாகவும் வேஷம் போடுகின்றது. தலித்திய வேஷமும் போடுகின்றது. ஜனநாயக வேஷமும் போடுகின்றது. இப்படி எல்லா வேஷத்தையும் போட்டு, மகிந்த குடும்ப சர்வாதிகாரம் இலங்கையில் நடத்திய, நடத்துகின்ற படுகொலை பாசிச ஆட்சியை பாதுகாத்து அதைப் போற்றுகின்றனர். இதை செத்துப் போன புலியின் பெயரில் நியாயப்படுத்துகின்றனர். அதாவது புலிகளின் பெயரில்தான், மக்களுக்கு எதிராக தாங்கள் சோரம் போகும் அரசியலுக்குரிய நியாயத்தைக் கற்பிக்கின்றனர். இவர்களின் அரசியல் அளவுகோல், புலியெதிர்ப்புத்தான்.

அரசு செய்கின்ற புதிய நுட்பமான ஒரு போர்க் குற்றம். இதுவோ மூலதனத்தின் கபட நாடகம். சுரண்டும் வர்க்க நலன்களே, இங்கு இந்த நிலையை உருவாக்கி வருகின்றது. 

 

பேரினவாதம் உருவாக்கி வைத்துள்ள திறந்தவெளி சிறை இதன் அடிப்படையிலானது. மக்களை அடைத்து வைத்திருப்பது இதற்காகத்தான்.

ஆனால்,

மண்ணில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின், அரசுக்கு எதிரான பொது அரசியல் என்பது படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றது. தனித்துவமான சுதந்திரமான அரசியல், அரச பாசிசத்தின் முன் சிதைந்து போகின்றது. இன்று இலங்கையில் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது, பயங்கரவாதமாகிவிட்டது. இந்த அரச பாசிசத்தைப் பற்றி பேசுவது, கைதுக்கும் படுகொலைக்குமுரிய ஒரு அரசியல் செயலாகிவிட்டது.

அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

"இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின்  எதிர்காலமும்"  என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய உரையாற்றினார்.