Language Selection

பி.இரயாகரன் -2009

முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

எம் இன உறவுகள் ஒரு கூட்டமாக எந்த நேரமும், கொடூரமாகவும் கோரமாகவும் கொல்லப்படுவார்கள் என்ற நிலை. யார் கொல்வார் என்பது தான், எமக்குத் தெரியாத புதிராகவுள்ளது. ஆனால் மக்களை கொல்லும் திட்டம் என்னவோ தயாராகவே உள்ளது.

சுத்திசுத்தி கடைசியில் புலியெதிர்ப்பு, தன் இலக்கு அரசை ஆதரிப்பதுதான் என்பதை வெளிப்படையாக சொல்லத்தொடங்கியுள்ளனர். புலிக்கு மட்டும் இன்று சேடமிழுக்கவில்லை, புலியெதிர்ப்புக்கும் வேறு போக்கிடம் எதுவும் கிடையாது. அரசின் பின்னால் அம்மணமாகவே பவனிவரத் தொடங்கியுள்ளனர்.

இந்த அரசியல் கேள்வி, எமக்கு புலி முத்திரை குத்தி விலகிச் செல்லும் அரசியலாக வெளிப்படுகின்றது. இது இயங்கியலை புரிந்துகொள்ள முடியாத, அற்பத்தனமான இருப்புக்கான அரசியலாக மாறுகின்றது. எமக்கு புலி முத்திரை குத்துவது, உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாக இதை திரித்து புரட்டி அனைத்தும், இதை அரசியல் காழ்ப்புடன் அணுகுவதாகும்.

அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.

புலிகளின் இறுதி யாத்திரை தொடங்கியுள்ளது. புலியெதிர்ப்பு கும்பலோ தன் துரோகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை பறைசாற்றி, கொட்டு மேளமடித்தபடி கூத்தாடிக் கொக்கரிக்கின்றது. 

1987ம் ஆண்டு பங்குனி மாதம் 28ம் திகதி மலை 6.30 மணியளவில் தான் தீபன் எனக்கு அறிமுகமானான். என் காதுக்குள் திடீரென துப்பாக்கியை வைத்தவன், என்னை ஒரு காருக்குள் திணித்து கடத்த உதவினான்.

அரசு-புலி என்று இரு தளத்திலும், இதுவே இன்று அரசியல். இதில் ஒன்றைச் சார்ந்துதான்,  புலி-புலியெதிர்ப்புக் கருத்துகள். இப்படி தேசிய வெறியர்களும், தேசிய எதிர்ப்பு வெறியர்களும் மக்கள் விரோத உணர்வுடன் நடத்தும், பாசிச நாடகம். மக்களிள் விருப்பத்துக்கு மாறாக, பலாத்காரமான முடிவுகளை திணிக்கின்றனர். தம் அற்பத்தனமான சுரண்டும் வர்க்க விருப்பையே, மக்களின் பிணத்தின் மேலாக அடைய முனைகின்றனர்.  

 

புலியல்லாத அரசியல் தளம் இப்படித்தான் உள்ளது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசும் அனைவரும் பேரினவாத அரசின் வேலைத்திட்டத்தைக் கொண்டு தம் 'ஜனநாயகத்தை" நக்குகின்றனர்.

புலம்பெயர் புல்லுருவிகள் 28-29.03.2009 அன்று பேரினவாதத்துடன் கூடிக் குலாவிய போது, தாம் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டுமென்ற வேண்டுகோள் விட்டார்களாம். அரசாங்கமும் அதற்கு ஓத்துக்கொண்டதாம். இப்படியெல்லாம் பிபிசிக்கு தமிழ் சேவைக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.

தமிழ் தேசியம் இந்தளவுக்கு முன்னேறியுள்ளது. உயிர்வாழ முனைந்தால் தண்டனை. பேரினவாத குண்டடியில் நீயாக தப்ப முனைந்தால், நீ தேசத் துரோகி. இந்த குண்டடியில் இருந்து தப்பிப் பிழைக்கும் 10, 12 வயது குழந்தைகளைக் கூட, யுத்தம் செய்யவென்று தம் யுத்தமுனைக்கு கடந்திச் செல்லுகின்றனர் தேசிய மீட்பாளர்கள்.

எம்மினத்தை கொன்று குவித்து வரும் சிங்கள இராணுவம். கடந்த 30 வருடத்தில் பல பத்தாயிரம் உயிர்களின் இரத்தத்தைக் குடித்த இராணுவம்.  இது உனக்கு தெரிந்தும், இந்த இராணுவத்திடம் திட்டமிட்ட வகையில் மக்களையே கூட்டம் கூட்டமாக பலியிட்டு கொல்கின்றாயே, ஏன்? இந்த கொலைவெறிக்கு உடந்தையாக நிற்கும் மாபியா அரசியலை ஆதரிக்கிறாயே, ஏன்? நீ எல்லாம் ஆறறிவுள்ள மனிதனா!? இதை வைத்து பிரச்சாரம் செய்யும் அரசியல், நாசமாகப் போகட்டும்.

புலிகளின் துணையுடன் தான், இன்றும் ஏன் நாளையும் கூட வன்னியில் மக்கள் இறப்பார்கள். இன்று தமிழ் மக்களின் எமன் புலி. புலியிருக்கும் வரை தமிழ் மக்களின் இறப்பு மட்டும்தான், புலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாக புலியிடம் எஞ்சியுள்ளது.

அதிரடியாக ஏற்படும் சமகால யதார்த்தம் மீதான புரிதல்கள், இலக்கற்ற பயணங்களும், எம்மை நோக்கிய கேள்விகளும், எம்மை பின்தொடருகின்றது. இந்த வகையில் எழுப்பப்பட்டுள்ள விவாதங்கள் மீது, அரசியல் ரீதியான தொடர் அணுகுமுறை அவசியமாகின்றது. இது பல தெளிவுகளை உருவாக்கும்.

எதையும் நாம் இன்று மூடி மறைக்க முடியாது. எல்லா மக்கள் விரோத எதிர்ப்புரட்சி கும்பலையும், நாம் அம்பலப்படுத்த வேண்டும். இந்த வகையில் நாம் அம்பலம் செய்த 'இரகசிய ஆவணம் : சிங்கப்பூரில் புலம்பெயர் 'ஜனநாயகத்" துரோகிகளும்இ பேரினவாத அரசும் நடத்தும் இரகசிய சதிக்கூட்ட ஆவணம்" மீது எனக்கு நன்கு தெரிந்த புலியெதிர்ப்பு அரச சார்பு 'ஜனநாயகவாதி" தன் நெற்றிக் கண்ணையே திறந்துள்ளது. இந்த வகையில் அரசுக்கு ஆதரவாக புலியெதிர்ப்பு 'ஜனநாயக" பேசும் அணியைச் சேர்ந்த பாலசூரியன் எமக்கு அனுப்பிய மின்னஞ்சலும், அதற்கான எமது பகிரங்கப் பதிலும்.  

ஒருபுறம் தமிழ்மக்கள் கூட்டம் கூட்டமாக பேரினவாதத்தால் ஏன் எதற்கு என்று கேள்வியின்றி கொல்லப்படுகின்றனர். மறுபக்கத்தில் புலிகளால் மக்கள் பணயம் வைக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து தப்பி வரும் மக்களையே புலி சுட்டுக் கொல்லுகின்றது. இப்படி இரு பாசிசங்கள், மக்களுக்கு எதிராக கையாளும் பயங்கரவாதங்கள் எம் மண்ணில் கோலோச்சி நிற்கின்றது.

 

எதிரியின் இன அழிப்பு அரசியல், எம்மிடம் இன அழிவு அரசியலாகியது. இப்படி எம்மினத்தை நாமும் சேர்ந்து அழித்த பெருமையே, எம் வீர வரலாறாகும். ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் இளம் இரத்தத்தைக் கொண்டு, தமிழினத்தை சுடுகாட்டில் நிறுத்திய பெருமை எம்மைச் சேரும். எம் விடிவையே, மறுத்தவர்கள் நாம்.

எம்மினத்தின் பெயரில் உருவான 'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியல் என்ன? அதன் நடைமுறைகள்தான் என்ன? இதுதான் சிறுமி வர்ஷாவின் படுகொலையை வழிகாட்டுகின்றது. இது தொடக்கமுமல்ல முடிவுமல்ல, மாறாகத் தொடரும்.

மகிந்தாவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதே புலிதான். அமைதியும் சமாதானமும் வந்து தம்மை கருவறுத்துவிடும் என்று அஞ்சிய புலிகள், யுத்தத்தை விரும்பியதால் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். தமிழ்மக்கள் விரும்பியதோ, சமாதானத்தையும் அமைதியையும். புலிகள் விரும்பியதோ யுத்தத்தை.