Language Selection

பி.இரயாகரன் -2009

இன்று, இந்த மணி, இந்த நிமிடம், இந்தக் கணம், ஒரு பாரிய மனித அவலத்தின் மேல், ஒரு அழிப்பு யுத்தம் நடக்கின்றது. இது ஒரு இனத்தின் மேலாக நடக்கின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களை பலியிடுதல் இன்றி, இந்த அழித்தொழிப்பு நடக்கவில்லை. மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதாகக் கூறும் ஒரு பொய்ப்  பிரச்சாரம் மூலம் இந்த இனவழிப்பு உச்சத்தில் அரங்கேறுகின்றது.

புலிகளை அழிக்கவும், இதன் தலைமையை கைது செய்யவும் என்ற பெயரில், ஒரு இனவழிப்பே அரங்கேறியுள்ளது. வெடிகுண்டுகள் மாரியென பொழிய, அதற்குள் மக்கள் சிக்கி மரணிக்கின்றனர்.    

புலித்தலைமை முதல் புலிப்பினாமிய வலதுசாரி கும்பல் வரை, இதற்கான அரசியல் காரணத்தை தெரிந்து கொள்ள மறுக்கின்றது. தாமல்ல, பல காரணங்களைக் கற்பிக்க முனைகின்றது. தாங்கள் சரியாகவே இருந்ததாகவும், இருப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றது. இப்படி அவர்கள் தாங்கள் கற்பிக்கும் காரணங்கள் ஊடாக, தமது தவறான வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து நகர்த்த முனைகின்றனர். தாமல்லாத காரணம் தான், இந்த தோல்விக்கான காரணம் என்ற சொல்ல முனைகின்றனர். 

புலி அரசியல் செத்துப் போகவில்லை. தமிழனை ஏமாற்றிப் பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது. புலித் தலைமைக்கு என்ன நடந்தது என்பது, எந்த நேரமும் ஒரு அரச செய்தியாக வெளிவரலாம். அது கைது அல்லது மரணம் அல்லது அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பது, இதில் நிச்சயமான ஒன்று.

காலக்கெடு பல விதிக்கப்பட்டது. நாட்கள் பல குறிக்கப்பட்டது. சில மணி நேரங்கள் கூட அறிவிக்கப்பட்டது. இருந்தும் பேரினவாத இனவழிப்பு யுத்தம், இன்னமும் முடிவுக்கு வரவில்லை. காரணம் என்ன!? 

பாசிசம் தன்னை பாதுகாக்க உண்மைகளை சார்ந்திருப்பதில்லை. மாறாக இல்லாத ஒன்றை தனக்கு சார்பாக புனைகின்றது. தமிழ் மக்களை பேரினவாதம் வகைதொகையின்றி கொல்லுகின்றது. புலி கொல்லக் கொடுக்கின்றது. இதை வைத்து புலிப் பாசிசம் தாம் தப்பிப் பிழைக்க பிரச்சாரம் செய்கின்றது.

புலிகள் தமிழ் மக்களை பணயம் வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களை குறிவைத்துக் கொல்லுகின்றது இந்த அரச 'ஜனநாயகம்". இந்த ஜனநாயகத்தின் மகிமையோ, இன்று தாம் குண்டு போட்டு காயப்படுத்திய மக்களை மருத்துவமனையில் வைத்து கொல்லுகின்றது. மருத்துவ மனைகளையே, குண்டு வீசி அழிக்கின்றது.

 

புலிகளின் அழிவு, புலிக்குள் இருந்த பலரை புலிக்கு எதிரான அரங்கிற்கு கொண்டு வருகின்றது. புதிதாக கருத்துத்தளத்தில் இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கத்தில் அரசு சார்பானவர்கள் அம்பலமாவதால், இதற்கு வெளியில் பலர் தெளிவடைகின்றனர். இது இன்றைய புதிய அரசியல் நிகழ்ச்சிப் போக்காக உள்ளது.

பேரினவாத பாசிட்டுகள் நடத்தும் இனவழிப்பு யுத்தத்தை, அப்பாவி பொதுமக்கள் மேல் தான் நடத்துகின்றனர். இந்த அரசியல் உண்மையைத்தான் புலிப் பாசிசம் தனக்கு சார்பாக கொண்டு, மக்களை தனது யுத்த கருவிகளாவே தன் பின்னால் குவித்து வைத்துள்ளது. இப்படி இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வியை, யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மக்களை கொல்லும் தம் வடிவத்தின் மூலம் கட்டமைக்கின்றனர்.

 

பெண் உடல், பாலியல் உறுப்புகள் கூட, யுத்தத்தில் ஒரு கருவியாகின்றது. பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் பாரியது. எல்லையற்றது. ஆணாதிக்க சமூக அமைப்பில் யுத்தம், விதவைகளை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் உடல், பால் சார்ந்த உறுப்புகளை யுத்தம் மேய்கின்றது.

வெளிவராத, கண்டுகொள்ளாத, மற்றொரு மனித அவலம். ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களின் மரணம், மூடிமறைக்கப்படுகின்றது. சிங்கள் சமூகத்துக்கு இனவெறியூட்டி, அதை சிங்கள தேசியமாக புணர்ந்து காட்டி, ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை வெறும் கூலி இராணுவமாக்கி, அதையே தன் பாசிச அரச இயந்திரத்தின் அச்சாக கொண்டுள்ளது

அரசும் புலியும் எம்மைச் சுற்றி கட்டமைத்த பாசிச அரசியல் சூழலின், நாம் என்றும் வெறும்  பார்வையாளராகவோ, கருத்தற்றவர்களாகவோ இருந்ததில்லை. நாம் எம் சூழலின் எல்லைக்குள் போராடியிருக்கின்றோம், சிந்தித்து இருக்கின்றோம், செயல்பட முனைந்திருக்கின்றோம்.

இன்று கிழக்கில் எது நடக்கின்றதோ, அதுதான் நாளை வடக்கிற்கும். இதையே சிங்கள மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் 'மாண்புமிகு" பேரினவாதியான ஜனாதிபதியும் கூறுகின்றார்.

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், நாம் முன் செல்ல வேண்டும். அரசு மற்றும் புலியுடன் இருக்க கூடிய அனைத்து விதமான அரசியல் உறவுகளுக்கும், அதை பிரதிநிதித்துவம் செய்யும் நபர்களுடனான அரசியல் உறவுகளுக்கும் முதலில் முடிவு கட்டவேண்டும்.

இந்தியாவானது பேரினவாத இனவொடுக்குமுறையை பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது. இதுவே தமிழினத்துக்கு எதிரான, கடந்த 30 வருட வரலாறாகும். இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய நலனுக்கு ஏற்ற கூலிக் குழுக்களாக உருவாக்கியது.

பிரபாகரனின் தமிழீழம் இன்று பாப்பாத்தி ஜெயலலிதாவின் தமிழீழமாக மலர்கின்றது. அப்படி நம்புகின்ற, நம்ப வைக்கின்ற ஈழத் தமிழ் முட்டாள்கள். பெரும்பான்மை தமிழன் அரோகரா என்று கூறியபடி, அதற்கு பின்னால் எங்கே ஒடுகின்றோம் என்று தெரியாது ஓடுகின்றனர்.  பலதரம் தடுக்கி வீழ்ந்த இவர்கள், மீண்டும் மீண்டும் குருட்டு நம்பிக்கையுடன் எழுந்து ஒடுகின்றனர்.

மீண்டும் மீண்டும் தொடரும் கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள். கிழக்கின் 'உதயம்" பெற்றெடுத்த 'விடிவெள்ளிகள்" மற்றொரு குழந்தை தினுஷிகாவின் படுகொலையாக அதை அரங்கேற்றி காட்டியுள்ளது.

வவுனியா வதைமுகாமில் அப்பாவித் தமிழ்மக்களை அடைத்து வைத்து இனச்சுத்திகரிப்பு செய்யும் அதேநேரம், தமிழினத்தையே நலமடிக்கின்றனர். அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துரோகக் குழுக்களின் கண்காணிப்பின் கீழ், இவற்றை பேரினவாத அரசு அரங்கேற்றுகின்றது.

புலிகள் தாமல்லாத அனைத்தையும் பாசிச முறையில் மறுத்த போது உருவான முரண்பாடு என்பது, வெறும் புலியெதிர்ப்பு அரசியல் வரை மாறியது. இப்படி சென்றவர்களின் பெரும்பகுதி, புலியை ஒழிக்க பேரினவாதத்தையும் இந்தியப் பேய் அரசையும் ஆதரித்தனர்.

நீ ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களை கொல்லலாம் என்றால், நான் ஏன் என் மக்களை கொல்;லக் கூடாது. நீ அதைக் கேட்கக் கூடாது. அதைக் கேட்கும் உரிமை உனக்கு இல்லை என்கின்றான், மாண்புமிகு கொலைகார ஜனாதிபதி. கொல்வது என்பது, ஜனாதிபதியின் உரிமை. இந்தக் கொல்லும் உரிமையை எப்படி செய்வது என்பதில், 'எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்" என்கின்றான்.