Language Selection

சிறி

புளட் இயக்கம் பல்கலைக்கழகத்தில் நுழைந்தது விஞ்ஞானபீடத்தின் வாயிலாகத்தான். ஆனால் புளட்டிடம் அப்போது தனியான மாணவர் அமைப்பு இருக்கவில்லை. விஞ்ஞானபீடத்திலிருந்து உள்வாங்கப்பட்ட மாணவர்களும் இடம்பெயர்ந்த மாணவர்களும் புளட்டின் மக்கள் அமைப்பில் தங்களை இயங்குசக்தியாக்கிக் கொண்டார்கள். இவர்களுக்கு பலசுற்றுப் பாசறை வகுப்புகள் நடாத்தப்பட்டு அவர்கள் கிராமங்களில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கும் அரசியல்பணியில் பிரச்சாரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக தரப்படுத்தல் உருவானது என கொதித்தெழுந்து ஆயுதம் ஏந்திய தமிழ் இனவாத அரசியல் தமிழ் பிரதேச பல்கலைக்கழகத்துக்கு அத்திவாரமிட்டு அதனை உருவாக்கித்தந்த பேராசிரியர் கைலாசபதிக்கு குண்டெறிந்தது பற்றி தேசம்நெற் ஜெயபாலன் வரலாறு ஏன் பதியவில்லை?

ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...06   என்ற தனது கட்டுரையினூடாக ரூபன் இந்த வரலாற்றை பின்வரும் குறிப்புகளில் தமிழரங்கத்தில் பதிந்திருப்பதை இங்கு மீளவும் தருகின்றேன்.

சனி 06 ஒக்டோபர் - 74 காலை நேரம் பலாலி - யாழ் வீதி இரு மருங்கிலும் மக்களும் பாடசாலை மாணவர்களும் அணிவகுத்து நின்றனர். அன்று மழை இலேசாகத் தூறிக்கொண்டிருந்தது. தார்வீதியில் சிறிமாவின் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெண்கட்டியால் எழுதப்பட்ட வாசகங்கள் நனைந்து கொண்டிருந்தது. கறுப்புக் கொடிகளும் குடைகளும் மக்களின் கைகளில் காணப்பட்டது. ஆங்காங்கே சில மேடைகளில் சிலர் எதிப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிமாவின் வாகனம் இராணுவ அணிவகுப்புடன் பலாலி விமானநிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. மழை பெய்துகொண்டிருந்ததாலும் பாதுகாப்புக்காரணத்தினாலும் வேகமாகவே அவ்வாகனம் சென்றது.

உங்களைச் சுட்டி
விரலை நீட்டினால்
கல்விமான் என்ற
கவசம் காக்கும்.
ஆங்கிலம் எமக்கோ
அன்னிய மொழி தான்
அன்னை ஊட்டிய பாலொடு
பருகிய தமிழும் கூட
வேசி மொழியாமே
 

நோர்வேயில் நாடுகடந்த தமிழீழத்துக்கான வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிடும் திருவாளர் பெர்னாண்டோ அவர்கள் தனது பிரச்சார உத்திகளுக்கு தான் கடந்தகாலங்களில் ஆற்றியிருக்கும் சேவைகள் பற்றியும் தான் கலாநிதி? கணபதிப்பிள்ளை சிவராசாவுடன் இணைந்து தொரம்சோவில் செய்த சேவைகள் பற்றியும் தந்த தகவல்கள் பற்றி சிறிது வரலாற்றை புரட்டிப்பார்ப்போம்.

சீலன் எழுப்பிய கேள்வி மிகச் சரியானது. இப்படி எழுப்பப்படும் போதுதான், நாம் எப்படி தோற்றோம் என்பதும், தோற்கடிக்கப்பட்டோம் என்பதும் அனைவருக்கும் தெரியவரும்.  அரிவாள் என்ன, என்னை மட்டும் வெட்டக் கூடாதோ? சரியாகத்தான் அரிவாள் விழுகிறது. எத்தனையோ போராளிகளின் உயிரைப்பறித்தெடுத்த கொலைகாரர்கள் இயக்கத்தில் அராஜகம் தாண்டவடமாடிய போது, நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது மிகச் சரியான கேள்வியே.

நாடுகடந்த தமிழீழக்காரர்கள் எங்கும் ஒருமித்த குரலில் இப்போது வாயைப் பொத்திக் கொண்டிருங்கள் என தங்களை நோக்கி கேள்வியெழுப்புவர்களை மிரட்டுகிறார்கள்.

{play}http://www.tamilcircle.org/audio/Kavithaikal/Kallar.mp3{/play}

கள்ளர் கூட்டம்
ஊரை அடிச்சு
உலையில போடுவார்
என்ர பிள்ளையள்
கொட்டின ரத்தத்த
விட்ட அரும் உயிர
சொல்லி அழுதல்லோ
ஊரெல்லாம்
உலகமெல்லாம்
சொத்துச் சேத்தாங்கள் 

 

{play}http://www.tamilcircle.net/audio/Kavithaikal/tsunami.mp3{/play}

பசியில பஞ்சத்தில வாடிற வயித்துக்கு
கஞ்சியாகிலும் ஊத்திட,
காத்து மழயில கடும்கும்மிருட்டில,
கடலில மோதி விரட்டிற அலையில
தோணித்துரும்பில
வாழ்வை வெல்லும் எங்கட சாதி ஊர்மனை பக்கமா
அட ராசா நீ உன் காலில மணல் பட
நடந்தாயா?

வாழிய வாழியவே
பல்லாண்டு தேர்தல்கள் வாழியவே

வாக்குச் சீட்டினில் கப்பல்கள் கட்டி
வானத்தில் பட்டமேற்றி
நீளமாய் ராக்கெட் விட்டு
கோழிகள் நாய்கள் மலத்தை
அள்ளிவீசுவோம் வாக்குச்சீட்டால்
- வாழிய வாழியவே
பல்லாண்டு தேர்தல்கள் வாழியவே

மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் ஒரு பரந்தளவான சந்திப்பை யாழ்ப்பாணத்தில் ஒழுங்குபடுத்துகிறார்கள். மகளிர் அமைப்பின் முன்னணிப் பிரதிநிதிகள் சிலர் ஆவலோடு சந்திக்க காத்திருக்கிறார்கள்.

 

இந்தப் பின்தள விஜயம் குறித்த மாணவர் அமைப்பின் விசேட சந்திப்பில் மத்தியகுழு அங்கத்தவர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இன்னும் வெட்டவும் புரளவும் தலைகள் இருக்கின்றன.
புதைப்பதற்கு சவுக்கந் தோப்புக்களும்
எலும்பும் கிடைக்காமல் எரிப்பதற்கு சுடலைகளும்
எங்கள் கண்காணிப்பில் தான்
வினவு என்பது வீண் வார்த்தை
 

சுழிபுரம் படுகொலை நிகழ்த்தப்பட்டது 25 ம் திகதி கார்த்திகை மாதம் 1984 ம் ஆண்டு.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை. ஆனால் அதனை மறுத்து துண்டுப்பிரசுரம் வெளிவருகின்றது.

தீப்பொறி தன்னுடைய உட்கட்சிப் போராட்டத்தின் இறுதியில் கொலைக்கரங்களிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு முன்னமேயே,  தளத்தில் மத்திய குழுவிலிருந்த அசோக் குமரன் போன்றோர்களை நோக்கி தள அமைப்புக்களின் நிலைப்பாடுகள் கோபக்கனலாகியிருந்தது. தள அமைப்புக்களானது தளத்தில் தங்கள் முன்னால் நடமாடிய மத்தியகுழுவின் தளப் பிரதிநிதிகளை எல்லாவிதமான புளட்டின் அராஜகங்களுக்கும் பதில் தர வேண்டிய நிலையில் நிறுத்தி போராடிக் கொண்டிருந்தது.

Vi har nå levd under den lange skyggen av geværet i mer enn et og et halvt tiår og har holdt håpet oppe om overlevelse for våre barn som blir behersket av vold fra alle kanter uten hensikt eller mening. Men, på den annen side, så legger vi også merke til de forstenede ansiktene til mennesker som godtar det hele med en følelse av resignasjon. Under disse omstendighetene synes det å være objektiv eller analytisk å være en kraftanstrengelse, som å forsøke å utføre noe fysisk midt under en svekkende sykdom. Hver gang vi skriver, blir vi forfulgt av denne virkeligheten og frykter for å miste forstanden, og for at samfunnet uten motstand skal synke ned i denne gjørma av skrekk og vold......

Dette innlegget skrives for å be Tamilene i Norge om å være oppmerksomme på og ta avstand fra et valg som arrangeres av udemokratiske krefter, nemlig de kreftene som har representert, arbeidet for og samlet penger til Tigrenes (LTTE) agenda i det skjulte.(ஆங்கில மொழியில் கட்டுரையை காண இறுதிப்பகுதிக்குச் செல்க)

வினவு தளத்தில் ரதி என்பவர் தொடராய் எழுதும் ”ஈழத்தின் நினைவுகள்”  கட்டுரையின் அங்கம் ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !  இக் கட்டுரையில் வெளியானவற்றுக்கும் அங்கு விவாதமாய் வரும் கருத்துக்களுக்கும் பதில் தரும் வகையில் நானும் சில நினைவுகளை பதியும் முயற்சியாய் அவர்களது கூற்றுக்களுக்கு பதில் தரும் வகையில் அமைந்த இச்சிறு கட்டுரையின் ஊடாக எனது கருத்துக்களையும் பதிவு செய்து கொள்ளுகின்றேன்.

இளைய தலைமுறையே  இதோ வாங்கிக்கொள்
உன் வாழ்வுக்கான வாளும் கவசமும்.


வாழ்வின் மீதான நம்பிக்கைதானே
மானுடம் கொள்ளும் உயிர் மூச்சாகும்.

நாளைய காலம் நமக்கெனவாக
உன்னுள் எழுமதை உயிரினிலேற்று !
மனிதத்தை அழிப்பார் மடியினில் தீயிடு.

 

போரே இல்லாப் பொழுது வரும்வரை
 இறப்பு என்பது இல்லாதொழிந்திட  
அமைதியே மனித நியதியாகிட
நல்ல போர் தொடு நீயே பொருதிடு
பொல்லாப் போரிடும் மனித எதிரிகள் ஒழியவே.
இப் போரினில் மடியினும் பொசுக்கிடு தீமையை.

 

குறைவிலா வளங்கள் குவிந்ததிப்பூமி
சூரியன் தரும் ஒளி சுழன்றாடும் காற்று
உலகத்தின் பசி மடிய பூமித்தாய் தரும் உணவு
இவை எல்லாம் தனித்தெவரதும் சொத்தாமெனில்
தகர்த்திடு அந்நீசரை.
அனைத்தும் நம் பொதுவுடமை.

 

போரில் செந்நீரும் பசியின் கண்ணீரும்
பூமியை நனைத்திடின் அது மக்களுக்கெதிரான
மாக்களின் சூழ்ச்சி.

 
பொதுச்சொத்தினைக் கொள்ளை கொள் பொல்லாதார் வல்லமை.
மனிதம் வாழ மாய்த்திடு இக்கொடுமையை.

 

தனித்துரிமை கொள்வோர் சாம்ராஜ்யம் சாய்ந்தழியும் வரை
நீதிக்கான போரே நியதியன்றோ.
உன்னுயிரிலும் உடலிலும் வலிமையை உருவாயேற்றி
சாவினைச் சாக வைக்கும் இச்சமரினில்  வெற்றி கொள்வோம்.


வென்றதன் பொழுதில் ஆயுதம் என்பதோர்  வெறும் அகராதிச் சொல்.
அமைதி எங்கள்  ஆயுள் உரிமையாகும்.
மானுடம் என்பதன் மகத்துவம் மலர்ந்து மணம் கமழும்.

 

ஒவ்வோரு சகோதரனுக்கும் இது பிரமாணமாகட்டும்.
அழகினைக் காவல் காப்போம் . மனிதநேசத்தில் சுவாசம் கொள்வோம்.

 
நோர்வேஜிய மொழிக் கவிதை ஒன்றின் தழுவல்.

ஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம்.

ஒபாமா அமெரிக்காவின் ஆரம்பம் களைகட்டத் தொடங்கியுள்ளது காசாவில்.  கசாப்புக்கடையாய் விரிகிறது காசா நகரம். குழந்தைகள், கர்ப்பிணிகள் வெற்றுடலாய் வீழ தெருவெங்கும் மரண ஓலம்.  இஸ்ரேலின் காசா மீதான ஆக்கிரமிப்புக்கு பின்னாலும் இத்தனை கொடுமையான படுகொலைகளுக்குப் பின்னாலும் அமெரிக்க ஆசீர்வாதம் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு கொடுக்கு கட்டி விடுகிறது.

கோணேஸ்வரி ஈழத்தில் தமிழ் பெண்ணாய் இருந்ததால் சிங்கள இனவெறி இராணுவத்தால் குதறப்பட்ட ஒரு தாய். இதே அரச இயந்திரத்தின் இராணுவம் மன்னெம்பரியை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக ஊர்வலம் கொண்டு சென்று பல வெறியர்களால் பாலியல் வதைக்குட்படுத்தி கொலை செய்த சரித்திரம் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் உச்சமான அக்கிரமம். சிங்கள இராணுவம் தனது சொந்த இனத்தைச் சேர்ந்த கதிர்காம பேரழகி எனப்பட்ட ஒரு பெண் போராளி ”மன்னம்பெரிக்கு ” வழங்கிய அக்கிரமமான கொடிய தண்டனை இதுவாகும்.

 

An eye witness recounts the Kataragama Beauty Queen Murder

அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் ஈராக் பெண்களை குதறியெறிவது எவ்வாறு என்பதை நீங்கள் கீழே நிதரிசனமாகக் கண்டு கொள்ளலாம்.

















காஷ்மீர் பெண்களின் கதியை இத்தொடுப்பில் காணுங்கள்

 

தேசப் பாதுகாப்பின் பெயரால் காமவெறி பயங்கரவாதம்

 

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தில் பெண்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 

இன்னும் மேலே போனால் தழிழர் ”விடுதலை" இயக்கங்களுக்குள் புதையுண்டு போன பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் இருண்ட சம்பவங்களாகவே இன்னும் இருக்கின்றன. புதைகுழிகள் பேசுவது எப்போது?

 

மொத்தத்தில் அதிகார வர்க்க ஆக்கிரமிப்பு அடக்குமுறை இராணுவ வெறிநாய்கள் எப்போதுமே இழிவாய் பெண்கள் மேல் பாய்ந்து குதறுவது இனம் மொழி நாடு வயது நிற பேதம் எதுவும் கடந்த ஒரு அக்கிரமம்.

 

எல்லாக் கோணேஸ்வரிகளுக்குமாய் இரத்தம் கொதிக்கட்டும்.

 

இந்த வதை கொடுமைகளோ இனம் மொழி நாடு வயது நிறம் எல்லாம் தாண்டி நியாயம் கேட்கின்றது.


சிறி

12.03.2008