பகுதி 1
1
இன்று மே -17. 2021. நான் வாழும் நோர்வே நாட்டின் தேசிய தினம்.என்னைப் பொறுத்த மட்டில் , 2009 இல் இருந்து , தமிழ் மக்கள் மீதான இலங்கை பவுத்த-சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமொன்று அஸ்தமித்த நாள். (மே -18 இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக போராட்டம் தோற்றுப்போனதை அறிவித்த நாள்.) அழிக்கப்பட்ட, அஸ்தமிக்கப்பட்ட போராட இயக்கம் பற்றிய பல நூறாயிரம் விமர்சங்கள் உண்டு. அதேவேளை அவ் இயக்கத்தின் சரி-பிழைகளுக்கப்பால் ஏதோ ஒரு விதத்தில் அது ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியதென்பதும் உண்மை. 2009- மே மாதம் இலங்கையில் தமிழ்மக்கள் மீதான வரலாறு காணாத படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட அதே நேரத்தில், இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்கள் மீது பத்தாயிரத்துக்கும் மேலான விமான மூலமான தாக்குதல்களை நிகழ்த்தியது. பலஸ்தீனத்திலும் இரத்த ஆறு ஓடியது. இன்று மே 17.2021. காலை 11 மணி. 48 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.
