Language Selection

மா.நீனா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவராமை, முதல் தடவையாக, 85இன் நடுப்பகுதில் தீவகத்தில் கண்டதாக நினைப்பு. அப்போது புளாட்டின் அரசியல் பாசறையில், மார்க்சியம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

 

அதன் பிற்பாடு, அவரை 90களின் கடைசியில், ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் அரசியல், பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வாளராக இருந்த போது, என் பணியின் நிமித்தம் அவருடன் நேரடியாக  தொடர்பில் இருந்தேன். அத்தொடர்பை எற்படுத்தி தந்தவர்கள் முன்னாள் சரிநிகர் ஆசிரியர் குழுவினர்.

 
அந்தக் காலகட்டத்தில்; இலங்கையில் நடந்து கொண்டிருந்த மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான எனது செயற்பாடுபாடு.  இது பல தளங்களில் இருந்தது. சிவராமுக்கும் எனக்குமான உறவு இத்தளத்திலேயே இருந்தது. அவர் இலங்கையில் நடந்து கொண்டிருந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக் அனைத்து விடயங்கள் பற்றியும் ஆழமான அறிவையும், விபரங்களையும் அறிந்தவராக இருந்தார்.
 
பல ஐரோபிய நாடுகளின் மனிதஉரிமை அமைப்புகள், அரசுசார்பற்ற நிறுவனங்கள்;, இவரிடமிருந்து  மனிதஉரிமை மீறல்கள் பற்றிய விபரங்களைப் பெற்றன. இதன் மூலம், ஐரோபிய அரசுகள் இலங்கைக்கு அகதிகளை திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்தின. குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நோர்வே, டென்மார்க், கனடா போன்ற நாடுகளின் இதில் குறிப்பிடத்தக்கது. இலங்கை அகதிகள் சார்பான அரசியல் மாற்றங்களுக்கு, சிவராமின் தகவங்கள் பல தடவைகளில் நேரடியான காரணிகள் என்றால் மிகையாகாது. 

 

அது மட்டுமல்லாமல், இன்று புலம் பெயர்ந்த நாடுகளில், ஜனநாயகம், மார்க்சிசம், முற்போக்கு, பெண்விடுதலை கதைக்கும் சிலர், சிவராமின் உதவியால் பெற்ற தகவல்கள் மற்றும் சிபாரிசு கடிதங்கள் மூலமும், அவரின் சர்வதேச தொடர்புகளை பாவித்தன் மூலம் அகதி அந்தஸ்து பெற்றனர். ஏன் சிவராமின் படுகொலையை சாதகமாக வைத்து,  பலன் பெற்றோர், இன்றும் பலன் பெறுவோர் பலர்.  

 

இவர்களில் சிலர் தான் சிவராமின் இறப்புக்கு பின் அவர் பற்றிய காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள். அவர் உயிருடன் இருக்கு போது அவரின், களவாணித்தனங்கள், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அரசியல் படுகொலைகள் போன்ற அனைத்தும் இவர்களுக்கு தெரிந்தும் மூடிமறைத்தனர். ஆனால் அப்போது தமது தேவைக்காகவும், சந்தர்ப்பவாதமகவும், சிவராமை விமர்சிக்காமல் பச்சோந்தியாய் இருந்தார்கள்.
  
மேலும் இவர்களில் பலர் இன்று புலியின் அழிவுக்குப் பின், அதன் வாரிசென உருவெடுத்துள்ள மே18 இயக்கத்துடன் தொடர்புள்ளவர்களாக இருகின்றனர். இதே நபர்களே முன்பு தமிழ் ஈழ மக்கள் கட்சி என்ற அமைப்பை, தீப்பொறியின் எச்சத்தில் இருந்து உருவாக்கினர். இக்கட்சி பிற்காலத்தில் சீரழிந்து புலியின்; (முற்போக்கு-இடதுசாரிகளை) உளவு பார்க்கும் அமைப்பாக மாறியது.

 

இச்சீரழிவுக்கும், முற்போக்கு-இடதுசாரிகளை காட்டிக் கொடுக்கும் அமைப்பாக மாறவைத்தற்கும்  யார் காரணம்? சாட்சாத் சிவராமே தான்!

 

அன்று இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், சரிநிகர் பத்திரிகையை தளமாக கொண்டிருந்தனர். இவர்கள் அவ் அமைப்பின் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளாகவும் இருந்தனர். அமைப்பின் இன்னொரு பகுதியினர் புலம்பெயர் தேசங்களில் இருந்தனர்.  

 

இந்த உள்நாட்டு உறுப்பினர்கள் தேசிய பார்வையில் புலியை முற்போக்கு தேசிய சக்தியாக வரையறுத்ததுடன், புலிசார்பாகவும் பிரசாரம் செய்தனர். இன்னிலையில் இவர்களுக்கு புலியுடன் எந்த நேரடி தொடர்பும் இருக்கவில்லை.

 

சிவராம், சரிநிகர் பத்திரிகையில் எழுத தொடங்கிய போது, புலிகளுடனான உறவை    தமிழ் ஈழ மக்கள் கட்சியின்; சரிநிகர் பத்திரிகையை தளமாக கொண்டிருந்த உறுப்பினர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். இதேவேளை இவ் இணைப்பு சிவராமால் திட்டமிட்டு ஏற்படுப்பட்டதல்ல. கட்சியின் விருப்பின் அடிப்படையிலேயே, சிவராம் இணைப்பாளராக செயற்பட்டார். (இதேவேளை கனடிய, மற்றும் இங்கிலாந்து தொடர்புகளினுடாகவும் தமிழ்ஈழ மக்கள் கட்சியினர் புலியுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது).

 

இங்கு தனித்தனியாக சிவராம், சரிநிகர், தமிழ் ஈழ மக்கள் கட்சி தனித்தனியாக புலிக்கு வேலை செய்;தன. அதே நேரம் புலிக்கு வேலை செய்வதில் தமது தனித்துவத்தைக் கொண்டிருந்தனர். ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இருந்தனர்.  

      

இதன் பின் தமிழ் ஈழ கட்சியை சேர்ந்த நபர்களும், சரிநிகர் பத்திரிகையின் எழுத்தாளர்களும் ஆசிரியர் குழுவும், செய்தியாளர்கள் என்ற முகமூடியுடம் வன்னிக்கும், கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கும் காவடி எடுத்தனர். (இன்று இங்கிலாந்திலும், நோர்வே, பிரான்சிலும் இவர்கள் வாழ்கிறார்கள். இந்த நபர்கள். இவர்களிடமிருந்து சில காரியங்களை நிறைவேற்ற புலிகள் இவர்களுக்கு பெண்ணும் பொன்னும் வழங்கியதாக, இவர்களின் குழுவை சேர்ந்தவர்களே, உள்முரண்பாடு காரணமாக செய்திகளை கசிய விட்டனர்.)

 

இவ்வாறு சரிநிகர், தமிழ் ஈழ கட்சி அனைத்தையும் புலிகளிடம் அடகு வைத்து விட்டு, துரோகத்தனமாக தப்பித்த இந்த மே 18 பிரமுகர்கள், இப்போ தங்கள் வழிகாட்டியான குருவை அவர் இறப்புக்கு பின் விமர்சிக்கின்றனர். புலியின் ஜனநாயக மறுப்பையும், இலக்கியம், பெண்ணியம், "தலித்தியம்" போன்ற முகமூடிகளை அணிந்துகொண்டு; எப்படி ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளாட் சேர்ந்த முன்னாள் கொலைகாரர்கள் எப்படி தப்பித்து கொள்கிரார்களோ, அதேபோல  சிவராமும் பலருக்கு இன்று தம் ஈன முகத்தை மறைக்கும் முகமூடியாக பயன்படுகிறார். 

 

இப்போது மக்களுக்கு தெரியவேண்டியது புளாட்டில் சிவராம் செய்த திருவிளையாடல்கள் மட்டுமல்ல. அதெல்லாம் பழைய கதை. இதைவிட முக்கியமாக இன்று தெரிய வேண்டியது, தமிழீழகட்சியும், சரிநிகர் குழுவும், சிவராமுடன் சேர்ந்து விளையாடிய கண்ணாம்பூச்சி ஆட்டம் பற்றியதே. சிவராம் படுகொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இதை ஒரு தொடக்கமாக கொண்டு ஐரோப்பாவில் வாழும் முன்னாள் தமிழீழகட்சி உறுப்பினர்களும், சரிநிகர் குழுவும், மற்றும் இவர்களுடன் சம்பத்தப்பட்ட மே 18 இயக்க பிரமுகர்களும்; மக்களுக்கு தாங்கள் சிவராமுடனும், புலிகளுடனும் சேர்ந்து செய்த மக்கள் விரோத அரசியல் பற்றிய சுய விமர்சனத்தையே செய்ய முன்னவர வேண்டும்.

 

மா.நீனா

30.04.2010

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது