Language Selection

சீலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1984 ஆரம்பப் பகுதியில் பின்தளம் செல்ல விரும்பினேன். ஆனால் முடியவில்லை. அப்போதுதான் என்னுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திற்கு சென்றனர். நானும் அவர்களுடன் செல்ல முற்பட்ட போது, என்னை நிற்கும்படியும் தாம் சென்ற பின்னர் வரும்படியும் கூறிச் சென்றனர்.

 பின்னர் 19.04.1984 அன்று எனக்குப் பின்தளத்திற்கு செல்ல வாய்புக் கிட்டியது. என்றும் இல்லாதவாறு அன்று என் மனதில் பல சந்தோசக் கனவுகள், படங்களாக வந்து போயின. என்ன! ஒரு மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு தளத்திற்கு, அதாவது சொந்த மண்ணுக்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணங்களுடன் எனது ஆயுதப் பயிற்சிக்கான பயணம் ஆரம்பித்தது.

 

அன்று என்னை சுகந்தன் என்பவர் எனது ஊரில் இருந்து மானிப்பாய்க்கு கூட்டிச்சென்றார் அங்கு எமக்காக காத்திருந்த நேசனிடம் எம்மை ஒப்படைத்தார். அவர் என்னையும் என்னுடன் வந்த முரளி ஆழகன் என்பவரையும் இளவாலைக்கு அழத்துச்சென்றார். என்னைப் போலவே வேறு சில தோழர்களும் இளவாலைக்கு வந்திருந்திருந்தார்கள். எங்களை படகில் ஏற்றினார்கள். நாங்கள் தமிழ் நாட்டுக்கு பயணிக்கின்றோம். எங்களுக்கு ஓட்டியாக வந்தவர் தோழர் பாண்டி. அன்று நாம் பயணித்தபோது கடலில் பலத்த கொந்தளிப்பு. அதனால் குறித்த நேரத்திற்கு கோடியாக் கரையை (கோடிக்கரை) எங்களால் அடைய முடியவில்லை. இரவு முழுவதும் படகை கடலிலேயே தரித்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. படகு அலையின் கொந்தழிப்பால் அங்குமிங்குமாக அலைந்து ஆட்டங்காட்டியது. நாம் கடலுக்குள் மூழ்கப் போகிறோமென என் மனதில் எண்ணங்கள் அலை பாய்ந்தது. எமது வாழ்க்கை முழுமையாக முடிந்துவிட்டதெனத் தெரிந்தது. என்ன செய்வதென்று புரியாமல் அந்தப் படகின் ஓர் ஓரத்தில் முடங்கினேன். அழுகை தானாக வந்தது. கடல் அவ்வப்போது எங்களை நனைத்துக்கொண்டது. கண்களும் கரித்தது. அது கடல் நீரா, கண்ணீரா என்பதைப் புரியாத நிலையில் ஏதேதோ நாவிலும் உவர்த்தது. அந்தக் கடல் அலையின் எழுற்சியும், உப்புக் காற்றும், படகின் பயங்கர ஆட்டமும் கலந்து ஏற்படுத்திய மனக் குழப்பத்தால் எனக்கு வயிற்றைக் குமட்டியது. தொடர்ந்து வாந்தியும், சத்தியும் பெருந்தொல்லை தந்தது. அந்த அசதி காரணமாக இருக்கலாம், நான் என்னையும் அறியாமல் ஆழ்ந்து உறங்கிவிட்டேன்.

 

மறுநாள் காலை, தோழர் பாண்டி எங்களை ஒரு கடற்கரையில் இறக்கினார். அந்தக் கரையோர மக்கள் எங்களைக் கண்டதும், ஆமா… நீங்க விடுதலைப்புலிங்களா! என விசாரிக்க ஆரம்பித்தனர். நாம் ஒன்றுமே பேசாது நின்றோம். தோழர் பண்டியே அவர்களுடன் கதைத்தார். அந்தக் கதைகளெல்லாம் என் காதில் விழுந்தது. இங்கு எல்லோரையுமே விடுதலைப்புலிகள் என்றுதான் அழைக்கிறார்கள் என்பதனை அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஆனால் அதில் ஒருவரிடம் பாண்டி கூறினார், நாம் "முகுந்தன் பாட்டி"..., இவ்வாறு சம்பாசனைகள் நடைபெற்றது. அப்படியே அந்தக் கரையில் நேரம் கழிந்தது. மதியம்போல் எம்மை அழைத்துச் செல்ல ஒரு வண்டி வந்;தது. அதில் எல்லோரையும் ஏறும்படி கூறினார்கள். நாமும் ஏறினோம். இரண்டு அல்லது மூன்று மணிநேர ஓட்டத்தின் பின்னர், ஒரு சிறிய ஊரை அடைந்தோம். அங்கிருந்து பஸ்வண்டி மூலம் எம்மை படுக்கோட்டை என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு நகரம். அங்கிருந்து மீண்டும் தஞ்சாவூர் நோக்கிச் செல்லும் பஸ்வண்டியில் ஏற்றினார்கள். அந்தப் பயணத்தின் இடையில் நாம் இறக்கப்பட்டோம். அங்கிருந்து சிறு தூரம் நடந்து ஒரு வீட்டை அடைந்தோம். அது இவர்களின் ஒபீஸ் (காரியாலயம்) என்றார்கள். அங்கு பலர் இருந்தனர்.

 

உள்ளே சென்றதும் எம்மை தனிமைப்படுத்தினர். அப்போது அங்கு வந்த ஒருவர், உங்கள் சொந்தப் பெயர்களை இனி நீங்கள் பாவிக்க முடியாது, புனை பெயர்களைத்தான் பாவிக்கவேணும் என்றார். அப்போது ஒவ்வொருவரும் தங்களின் உறவினர், காதலி, நண்பன் என அவர்களின் பெயர்களை தமது புனைபெயராக வைத்தனர். எனக்கோ எந்தவித அபிராயமும் இல்லாததால், நான் காந்தன் என்று வைக்க உத்தேசித்தேன். சிறிது நேரம் கழித்து, தனித்தனியாக எம்மை ஒரு அறைக்குள் வரச்சொன்னார்கள். அதன்படி ஒவ்வொருவராக உள்ளே சென்று வந்தனர். நானும் உள்ளே சென்றேன். அங்கே எனது சொந்தப் பெயர், ஊர், வீட்டுவிலாசம் என்பவற்றைப் பதிந்தார்கள். எனக்கு சுட்டிலக்கமும் தரப்பட்டது. எனது இலக்கம் 1825 என்றும், எனது புனைபெயர் காந்தன் என்றும், இனி இந்தப் பெயர்தான் பாவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அன்று இரவு அங்கேயே தங்கினோம். மறுநாள் காலை எழுந்ததும், ஒருவர் எம்மை அழைத்தார். இன்று பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் எனக் கூறினார். மதியமளவில் ஒவ்வொருவருக்கும் ஒரு அலுமினியக் குவளை தட்டும், காற்சட்டை, பெனியன், போர்வையுடன், படுப்பதற்காக இருவருக்கு ஒரு பாய் எனச்சொல்லி தந்தார்கள்.

 

பிற்பகல் ஒரு லொறியில் எம்மை ஏறச்சொன்னார்கள். நாம் அதில் ஏறும்போது எமது உடமைகளுடனேயே ஏறினோம். அந்த வண்டியில் சமையலுக்கான பொருட்கள் இருந்தன. அவற்றை கண்டதும் என் மனதில் முதல் குழப்பம் ஏற்பட்டது. வண்டி புறப்பட்டு அரை மணிநேர ஓட்டத்தின் பின்பு, ஒரு சவுக்கு மரக் காட்டை நோக்கி திரும்பியது. அப்படியே சற்று நேரம் ஓட திடீரென ஒரு இடத்தில் வண்டியை நிறுத்து, கையை உயர்த்து (ளுவுழுPஇ ர்யனௌ ரி) என்றதும் எனக்கு பயம்பிடித்தது. சற்று நேரத்தில், வாகனச் செலுத்துனரும், நிறுத்தக் கூறியவரும் தமிழில் உரையாடத் தொடங்கியதும் எனது பயம் தணிந்தது. அவர்கள் எமது வண்டியை அனுமதிக்க, வண்டி முகாமிற்குள் நுழைந்தது. நாம் சென்றது இரவு என்பதால் எனக்கு எங்கிருந்து எங்கு வந்துள்ளோம்! என்பது சரியாக தெரியாத நிலையில் எனக்கு எல்லாமே ஒரு விசித்திரமாகவும், பயமாகவும் மனதிற்பட்டது.

 

அங்கு எம்மை வரவேற்க முகாமின் பொறுப்பாளரும், உதவிப் பொறுப்பாளரும் வந்தனர். நாம் வண்டியால் இறக்கப்பட்டதும் ஓர் இடத்தில் அமரும்படி கூறினார்கள். வண்டியில் இருந்த பொருட்களை இறக்கிய பின்னர் வண்டி புறப்பட்டது. அதன் பின்பு முகாமின் பொறுப்பாளர் தன்னை அறிமுகம் செய்தார். தனது பெயர் மதன் என்றும், மற்றவரைக்காட்டி இவர் தோழர் பாண்டி என்றும் கூறினார். அதன் பின்பு இரவுப் படுக்கைக்கான வசதிகளையும் செய்து தந்தனர். எல்லோருக்கும் போலவே எனக்கும் தளத்தில் இருந்து வந்த பிரயாணக் களைப்பு இருந்தது. அன்றிரவு நான் நன்றாகவே உறங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்து பார்த்தேன். முகாமில் அதிகமானோரைக் காணவில்லை. முகாம் பொறுப்பாளர் எம்மை நோக்கி வந்தார். நீங்கள் காலைக் கடனை முடித்துவிட்டு வாருங்கள் எனக் கூறினார். எமக்கு உதவிக்காக ஒரு தோழரையும் அனுப்பினார். அவர் சவுக்கம் காட்டைக் காட்டி, அங்கு மலம் கழித்துவிட்டு வாருங்கள் என்றார். எனக்கோ என்ன செய்வதென்று தெரியாது திகைத்தேன். என்னை போல் அனைவரும் திகைத்து நின்றார்கள். சற்று நேரத்தின் பின், சிறிது தூரம் நடந்தபின், ஒரு குளாய் கிணற்றைக் காட்டி.., அங்கே முகம் கழுவிவிட்டு வாருங்கள் என்றார். அவ்வாறே செய்து முகாம் நோக்கி திரும்பினோம்.

 

அவ்வேளையில் காலைப் பயிற்சி முடித்துத் திரும்பிய தோழர்கள், முகாமின் முற்றத்தில் வரிசையாக நின்றார்கள். அப்போது அங்கு முகாமின் மையப்பகுதியில் நின்ற கொடிக் கம்பத்தில், கழகக் கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்பு சற்று நேரம் உரையாடினார்கள். திடீரென விசில் அடித்தது. எல்லோரும் கலைந்து சென்றார்கள். மீண்டும் ஒரு விசில் கேட்டது. கோப்பை, கப்புடன் எல்லோரும் ஓடிச்சென்று சமையல் பகுதிக்கு முன்னாக வரிசையில் நின்றனர். நாமும் கோப்பையுடன் சென்றோம். முகாமின் பொறுப்பாளர் அங்கு வந்து, எமக்கே இன்று முதலிடம், உணவை எமக்கு முதல் பரிமாறும் படி கூறினார். அவித்த கடலையும் தேனீரும் தந்தனர்.


தொடரும்

 

2.1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)

 

JA ACM Module

உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.

***

பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.

முதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

மேலும் படிக்க …ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

பாலியல் வல்லுறவுத் தலைநகரான டெல்லியில், துணை மருத்துவ மாணவி மீதான கும்பல் பாலியல் வல்லுறவுக் கொடூரத்தைத் தொடர்ந்து, உழைக்கும் மக்களும் பெண்களும் இளைஞர்களும் ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க வீதிகளில் திரண்டு போராடினார்கள். இப்போராட்டங்களாலும், பொதுக்கருத்தும் பொதுமக்களின் நிர்ப்பந்தங்களும் பெருகியதாலும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், டெல்லியில் பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் பெண்கள் இதுபற்றி புகார் கொடுக்க 181 என்ற தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க …பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !

மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம்.

மேலும் படிக்க …மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், நேபாள ஜனநாயகக் குடியரக்கான புதிய நகல் அரசியல் சட்டமியற்றும் பணி, தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவாகிய மே 27ஆம் தேதிக்குள் நிறைவுறாமல் போனது. அதனால், அச்சபை கலைக்கப்படுவதாகவும் புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும் என்றும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான பாபுராம் பட்டாராய் அறிவித்துள்ளார். நேபாள மக்கள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் கடந்த 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் நேபாள காங்கிர, போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய மாலெ கட்சி மற்றும் பிற கட்சிகள் நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதில், இச்சபையில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பெரிய கட்சியான மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து முரண்பட்டதால், அரசியல் சட்டத்தை இயற்றும் பணி கடந்த நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த சபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தும் நிலைக்கு நேபாளம் பின்னோக்கிச் சென்றுள்ளது.

மேலும் படிக்க …நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் பார்மாடெக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம். பல்வேறு சங்கங்களில் திரண்டு நீண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை  பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர்.

மேலும் படிக்க …குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !!

முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால், ‘முதலில் வருபவர்க்கு முதலில்’ என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள், தன்னிச்சையாகவும் நேர்மையற்ற முறையிலும் பொதுநலனுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்டிருப்பதால், அவற்றை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த உரிமங்களைக் காட்டித் தமது நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பல நூறு கோடி ரூபாய் ஆதாயமடைந்த எடிசாலட் டிபி, டெலினார், டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

மேலும் படிக்க …ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?

ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்த போது கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர், ஜெயலலிதா பார்ப்பனர் என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை ஆட்சேபித்தார்களாம். “மாட்டுக்கறி சாப்பிடுகிற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க?”என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பதிலளித்தாராம். இப்படி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தனக்கு நெருங்கியவர்களிடம் சமீபத்தில் ஜெ. பேசிக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது.

மேலும் படிக்க …மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!

வேரோடு சரிந்து கிடக்கும் மரங்கள், கற்குவியலாகச் சிதிலமடைந்து கிடக்கும் வீடுகள், நொறுங்கிக் கிடக்கும் படகுகள், பெயர்ந்து கிடக்கும் சாலைகள், உப்புநீரில் பாழ்பட்டுக் கிடக்கும் விளைநிலங்கள், விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் எனப் போர் நடந்த பூமியைப் போல் காட்சியளிக்கின்றன தமிழகத்தின் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள். கடந்த டிசம்பர் இறுதியில் 136 கி.மீ. வேகத்தில் தாக்கிய “தானே” புயலால் உணவு, உடை, குடிநீர், சாலை வசதி, மின்சாரம், படகுகள், மரங்கள்,  விளைநிலங்கள் என எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, எதற்கும் வழியின்றி ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பரிதவிக்கின்றனர். உயிருக்கு மோசமான பாதிப்பை சுனாமி ஏற்படுத்தியது என்றால், வாழ்வைப் பல தலைமுறைகளுக்குப் பின்னுக்குத் தள்ளி, அதைவிட மோசமான பேரழிவை தானே புயல் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க …தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!

“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.

மேலும் படிக்க …கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-’மேல்’சாதிக் கும்பல்!

இந்தோனேஷிய போலீசின் ஆணவத்திற்கும், நீதித்துறையின் திமிருக்கும் எதிராகத்  தேய்ந்துபோன ரப்பர் செருப்புகளை ஆயுதமாக உயர்த்தியிருக்கிறார்கள், அந்நாட்டு மக்கள். குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டிய தேய்ந்துபோன ரப்பர் செருப்புகள், போலீசு  நீதிமன்றங்களின் மீதான ஏழை மக்களின் வெறுப்பைக் காட்டும் சின்னமாக இந்தோனேஷியாவில் மாறிப் போயிருப்பதன் பின்னே, ஒரு பதினைந்து வயது சிறுவனின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது.

மேலும் படிக்க …இந்தோனேசியா: அறுந்த செருப்புக்காக ஐந்து ஆண்டு சிறை தண்டனை!

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது உடன்பிறவா சகோதரியும் அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் அதிகாரிகளைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

மேலும் படிக்க …ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அனைத்துலக நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒத்தூதிவிட்டு, வெற்று ஆரவாரத்துடன் முடிந்துள்ளது.

அதிகரித்துவரும் புவியின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் விளையும் இயற்கைச் சேதங்களைத் தடுக்க வளி மண்டத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் 1992ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா.மன்றத்தின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன் பிறகு,  ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில்  நடந்த மாநாட்டுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கியோட்டோ ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.

மேலும் படிக்க …டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்!

2007ஆம் ஆண்டில் சப்பிரைம் அடமானக் கடன் நெருக்கடியாக முதலில் அமெரிக்காவில் தொடங்கிய நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத் தாக்கிய பெரும் பின்னடைவாக வளர்ந்தது. பின்னர் இதுவே உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்து, முதலாளித்துவ கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாகத் தீவிரமடைந்துள்ளது.

2011, ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட “கார்டியன்” இதழில், அவ்விதழின் பொருளாதார ஆசிரியரான லேரி எலியட் எழுதிய கட்டுரை, கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி வந்துள்ளதைப் பற்றிய சித்திரத்தைத் தொகுப்பாக வழங்குகிறது. இக்கட்டுரையின் மொழியாக்கம், நெருக்கடியின் பரிமாணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்.

மேலும் படிக்க …உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.

மேலும் படிக்க …இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். "இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்த பொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர்.  அப்பொழுது நடந்த மோதலில் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக' குஜராத் மாநில அரசு அறிவித்தது. அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலி மோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க …குஜராத்: மோடியின் கொலைக்களம்!

புதுவை மாநிலம் வடமங்கலத்தில் இயங்கிவரும் பன்னாட்டு ஏகபோக நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு. தலைமையின் கீழ் கடந்த 2008 முதல் இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் இயங்கிவருகிறது. இச்சங்கத்தை அங்கீகரிக்காமல் இருந்த நிர்வாகம், தொடர் போராட்டங்களாலும் பெருமளவில் தொழிலாளர்கள் இச்சங்கத்தில் இணைந்துள்ளதாலும் வேறுவழியின்றி இச்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மற்றொரு சங்கமான இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனுடன் இணைத்து, கடந்த 30.7.2011இல் 2011ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நிர்வாகம் தொடங்கியது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தொழிலாளர்களில் 4 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்ததோடு, ஒர்க்கர்ஸ் யூனியனின் முன்னணியாளர்கள் 5 பேரையும், இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் சங்கத்தின் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்தது. தொழிலாளர் சட்டம் 12(3)இன் படி, ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சங்க முன்னணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஆனால் இந்நிறுவனமோ சட்டத்தை மயிரளவுக்கும் மதிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தால், அதைச் சாக்கிட்டு பழிவாங்கலை நியாயப்படுத்தி துரோக ஒப்பந்தத்தைத் திணிக்கலாம் என்று நிர்வாகம் எத்தணித்தது.

இச்சதியை முன்னரே உணர்ந்திருந்த பு.ஜ.தொ.மு; இப்பழிவாங்கலை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி நியாயம் கேட்கும் வகையில், செஞ்சட்டையுடன் செங்கொடிகள் எங்கும் மிளிர 23.12.2011 அன்று தொழிலாளர்துறை ஆணையரிடம் மனு கொடுத்து, விண்ணதிரும் முழக்கங்களுடன் தோழர் அய்யனார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கங்கள் உள்ள கோத்ரெஜ்,மெடிமிக்ஸ், பவர்சோப், லியோ முதலான நிறுவனங்களின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, யுகால், எல்அண்டுடி, எம்.ஆர்.எப், சுஸ்லான் ஆகியவற்றின் தொழிலாளர்களுமாக ஏறத்தாழ 600 பேருக்கு மேல் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றிய இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனின் முன்னணியாளர்களும் பு.ஜ.தொ.மு. முன்னணியாளர்களும் சிறப்புரையாற்றினர். ஒரு நிறுவனத்தின் பழிவாங்கலை எதிர்த்து பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு போராடியிருப்பது புதுவையில் இதுவரை கண்டிராததாகும். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்ட அனுபவத்தைக் கற்றுணர்ந்துள்ள புதுவை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையுடன் அடுத்த கட்டப்போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

பு.ஜ. செய்தியாளர், புதுவை

புழுத்த அரிசி, அழுகிய காய்கறிகள், வேகாத சோறு, நீர்மோர், பருப்பே இல்லாத சாம்பார், துர்நாற்றமடிக்கும் உணவுக்கூடம் இவைதான் தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகளின் அவலம். தமிழகத்தில் உள்ள 1238 விடுதிகளில் தங்கிப் பயிலும் 74,302 மாணவர்கள் சுகாதாரமற்ற  தரமற்ற இந்த உணவைத்தான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் மாணவர்கள் அடிக்கடி வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

திருச்சி  அண்ணா விளையாட்டு அரங்கத்தின் அருகிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வரும் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரமற்ற உணவும் சுகாதாரமற்ற விடுதியும் பற்றி பலமுறை விடுதிக் காப்பாளரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குமுறிக் கொண்டிருந்த மாணவர்கள், கடந்த 13.12.2011 அன்று  ஜெகதீசன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பு.மா.இ.மு.தோழர்களின் தலைமையில், விடுதியின் அருகேயுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் சாப்பாடு தட்டு மற்றும் பாத்திரங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி, மாவட்ட உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் போலீசாரும் ஓடோடிவந்து பேச்சு வார்த்தை நடத்தினர். விடுதிக் காப்பாளர் தொடங்கி மேலதிகாரிகள் வரை ஊழலில் ஊறித்திளைப்பதை பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரவர்க்கத்திடம் தலைமையேற்ற தோழர்கள் சாடினர். அரண்டுபோன அதிகாரிகள் இந்நிலைமைகளை சீரமைப்பதாகவும், மாணவர்களின் 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.

விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்ட  தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவ மாணவியருக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை ரூ.750ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள பாசிச ஜெயா அரசின் அறிவிப்பு வெறும் பித்தலாட்டம் என்பதையும், அரசின் சலுகைகள் அதிகரிப்பதற்கேற்ப அதிகார வர்க்கத்தின் ஊழலும் கொள்ளையும் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதையும் இப்போராட்டம் அம்பலப்படுத்திக் காட்டியது.  தமிழகமெங்கும் மாணவர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் இந்நியாயமான போராட்டத்துக்கு ஆதரவைத் திரட்டிவரும் பு.மா.இ.மு., அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.

பு.ஜ.செய்தியாளர், திருச்சி.

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் ஃபார்மாடெக் எனும் ஊசி மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழில் பழகுனர், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி நியாயமான ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம்.

நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் இதுநாள்வரை பல்வேறு சங்கங்களாகப் பிரிந்திருந்த தொழிலாளர்கள், அண்மையில் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் ஓரணியில் ஒரே சங்கமாகத் திரண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இதைக் கண்டு அரண்டுபோன நிர்வாகம் ஆலை நட்டத்தில் இயங்குவதால் மூடப்போவதாக பீதியூட்டிக் கொண்டே, ஏற்கெனவே தொழிலாளர்களுக்குக் கொடுத்துவந்த தேநீரை நிறுத்தியது. தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கவோ, கழிவறை சென்று வரவோ தடைவிதித்துக் கெடுபிடி செய்தது. மேலும், சங்கத்தின் முன்னணியாளர்களான 36 தொழிலாளிகளுக்கு எச்சரிக்கைக் கடிதம், 8 தொழிலாளிக்கு விசாரணை அறிவிப்பு, சங்கச் செயலர் தோழர் சீதாராமன் தற்காலிகப் பணிநீக்கம்  எனப் பழிவாங்கியுள்ளது.

பு.ஜ.தொ.மு. என்பது நக்சல்பாரி தீவிரவாத இயக்கம் என்று பீதியூட்டி நிர்வாகத்தின் துணை பொது மேலாளரான ஏகாம்பரம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு,  இத்தீவிரவாத இயக்கத்தில் இணைந்தால் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பும் வெளியிட்டு எச்சரித்துள்ளார்.

இப்பழிவாங்கலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்தும் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் 9.12.2011 அன்று ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் பு.ஜ.தொ.மு.வில் இணைந்துள்ள குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் "பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம்! தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!' என்ற முழக்கத்துடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் தோழர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் சீதாராமன், பெண் தொழிலாளி தோழர் கலா ஆகியோர் சட்டவிரோததொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ள குளோபல் ஃபார்மாடெக் நிர்வாகத்தின் துணைப் பொது மேலாளரான பயங்கரவாதி ஏகாம்பரத்தைக் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டிய அவசியத்தை விளக்கிக் கண்டன உரையாற்றினர். வர்க்க உணர்வோடும் சங்க ஒற்றுமையோடும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சுவதாக அமைந்தது.

 

பு.ஜ.செய்தியாளர், ஓசூர்.

 

லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது  என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம்  கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க …விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம்

உலகமயமாக்கலின் கீழ் தொழிலாளி வர்க்கம் எவ்வாறு எந்தத் திசையில் போராட வேண்டுமென்பதை உணர்த்தும் வகையில், "மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டமும் வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டமும் கற்றுத்தரும் பாடம்: புரட்சிகர அரசியலே தீர்வு!' என்ற தலைப்பில் திருச்சி பு.ஜ.தொ.மு. அரங்கக் கூட்டத்தை 18.12.2011 அன்று நடத்தியது.

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கம், அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புசங்கம் ஆகிய பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த அரங்கக் கூட்டத்தை அ.த.வி.பா.சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் சேகர் தலைமையேற்று நடத்தினார். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டத்திலிருந்து கற்றறிய வேண்டிய படிப்பினைகளை விளக்கியும், முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிரான வால் ஸ்டிரீட் போராட்டம் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியாமல் தேங்கிவிட்ட நிலையில், பாட்டாளி வர்க்க அரசியல் தலைமையை நிறுவ வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு. மாநிலப் பொதுச் செயலர் தோழர் சுப. தங்கராசு, முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்க கம்யூனிசக் கொடியின் கீழ் உலக மக்கள் ஒன்றிணைந்து போராட அறைகூவினார். வர்க்கப் போராட்ட உணர்வூட்டிய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் நிறைவடைந்த இந்த அரங்கக் கூட்டம், தொழிலாளர்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

25.12.2011 அன்று ஓசூர் ஆந்திரசமிதி அரங்கில் "மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்!  அனுபவம் கற்போம்! முதலாளித்துவத்துக்குச் சவக்குழி வெட்டுவோம்!' என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு. கருத்தரங்கத்தை நடத்தியது. தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்க முன்னோடிகளும் உரையாற்ற,  மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டக் காட்சிகள் திரையிடப்பட்ட பின்னர், பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். இரண்டாவது அமர்வில் வால்ஸ்டிரீட் முற்றுகைப் போராட்டக் காட்சிகள் திரையிடப்பட்ட பின்னர், முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கி "வால்ஸ்டிரீட் முற்றுகை: திணறும் முதலாளித்துவத் தலைமைப் பீடம்!' என்ற தலைப்பில் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். பார்வையாளர்களாக வந்திருந்த தொழிலாளர்களிடம் போராட்டப் பாதையை விளக்கி, புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

பு.ஜ.செய்தியாளர், திருச்சி.

 

ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 சதவீதமும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதிப்பது எனக் கடந்த மாதம் மைய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த முடிவை பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திருணாமுல் காங்கிரசும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவே ஓரடி பின்வாங்கியிருக்கிறது, ஐ.மு.கூ. அரசு.

மேலும் படிக்க …சில்லறை வர்த்தகத்தில் அந்திய முதலீடு:இந்து மதவெறிக் கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!

பொய்க்குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டிருந்த புரட்சிகரக் கலைஞரான தோழர் ஜிதேன் மராண்டி, மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க …கருத்துரிமைக்குக் கல்லறை!

2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க …ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

புதிய தாராளவாதக் கொள்கைகளைத் திணித்துவரும் ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் சர்வதேச நிதிநிறுவனங்களாலும் முன்தள்ளப்படும் "ஊழல் ஒழிப்பு', "சிறந்த அரசாளுமை' போன்ற முழக்கங்களை வைத்துக் கொண்டு ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிதான் அன்னா ஹசாரே. பல இலட்சம் கோடிகளாக  ஊழல் பெருத்துப் போனதற்கு தனியார்மயக் கொள்கைதான் காரணம் என்ற உண்மையை மறைத்து, பெருமுதலாளிகளின் நன்கொடையில் ஊழல் எதிர்ப்பு சவடால் அடிக்கும் அயோக்கிய சிகாமணிதான் அன்னா. இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனக் கைக்கூலியான இவர், டெல்லியில் நடத்தப் போகும் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்தார்.

மேலும் படிக்க …“கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையைக் கிழித்தெறிவோம்!”

சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு? 25 இலட்சம் கோடி ரூபாசூ முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.

மேலும் படிக்க …கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ள மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு இருளர் பழங்குடியினப் பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவிய கிரிமினல் போலீசாரைக் கைது செய்து தண்டிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5.12.2011 அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கடலூர்  திருவண்ணாமலை மாவட்டக் கிளைகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின. திருவண்ணாமலை மாவட்ட ம.உ.பா.மையத்தின் செயலரான வழக்குரைஞர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விசாரணை என்ற பெயரில் இரு நாட்கள் இழுத்தடித்ததை அம்பலப்படுத்தியும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தி தண்டிக்காமல், தற்காலிகப் பணிநீக்கம் மட்டும் செய்துள்ளதை எதிர்த்தும் ம.உ.பா. மையத்தின் முன்னணியாளர்களும், ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர் செல்வகுமார், வி.வி.மு. தோழர் தங்கராசு ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

மேலும் படிக்க …“காமவெறி பயங்கரவாத போலீசைத் தண்டிப்போம்!”புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!!

தற்பொழுது நடைபெற்றுவரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்பொழுது, இரண்டு முக்கியமான துறைகளை அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட எத்தணித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.  அதிலொன்று, நாடெங்கும் பரவலான எதிர்ப்பைச் சந்தித்த சில்லறை வணிகத் துறை; மற்றொன்று, அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது.  காங்கிரசு கூட்டணி அரசு தனது இந்த இரண்டு முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவதைச் சற்று தள்ளி வைத்திருக்கிறது.  இவை போன்ற சீர்திருத்தங்களைக்  கால தாமதமின்றி நடைமுறைப் படுத்துவதற்கு இந்திய ஜனநாயகம் தடையாக இருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறார். தனியார்மயம் பெயரளவிலான ஜனநாயகத்தைக்கூடச் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாக பிரணாப் முகர்ஜியின் புலம்பலை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க …புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!

சிங்கள இனவெறி பிடித்த இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஸ்டாலின் என்ற வழக்குரைஞர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், "தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பரப்பிலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்குக் கடலோரக் காவல் படையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.  அதை இந்தியக் கடற்படை கண்காணிக்க வேண்டும்.  இந்த உத்தரவைப் பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.' என அந்நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது.  இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் மீது 13  தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.  இதனால், நீதிமன்றத் தீர்ப்பின் படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கடலோரக் காவல்படை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க …தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறான் சிங்களன்!முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!

இந்திய தேசியம் என்ற பொய்மைத் தோற்றம் உருப்பெறத் தொடங்கிய காலத்தில்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டது. பலவீனமடைந்துவிட்டதாகவும், உடையப்போகிறதென்றும் பொய்ப்பிரச்சாரமும் பீதியும் கிளப்பப்பட்ட போதிலும் அணை அசையாமல் நிற்கிறது; இந்திய தேசியமோ ஆடிக் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைத் தகர்ப்பதற்கு முன்நிற்கிறார்கள் இந்திய தேசியவாதிகள்.

மேலும் படிக்க …முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியன்று தனது நெருங்கிய தோழியும் அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ள தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான ஜெயலலிதா, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றியுள்ளார். மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்பட்ட சசிகலா கும்பலின் விசுவாச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல்: பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி!

முல்லைப் பெரியாறு நீரின் நியாயவுரிமைக்காக தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிவரும் நிலையில், இப்போராட்டங்களுக்கு வலுசேர்த்து புரட்சிகர அரசியல் திசை வழியைக் காட்டி, தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு, ம.உ.பா.மையம்ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து, "முல்லைப் பெரியாறு அணையை இடித்து, சட்டவிரோதமாக புதிய அணையைக் கட்டத் துடிக்கும்கேரள அரசின் சதியை முறியடிப்போம்! உழைக்கும் மக்களே, கேரள அரசின் அடாவடித்தனத்துக்குத் துணை நிற்கும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவோம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் நியா யவுரிமையை நிலைநாட்ட ஓர ணியில் திரள்வோம்!' என்ற முழக்கத்துடன் விரிவான பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …இரட்டை வேடம் போடும் ‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!” தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் மறியல் போராட்டங்கள்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரம சிங்கபுரத்தைச் சேர்ந்த பு.ஜ.தொ.மு.வின் மூத்த தோழரும், மதுரா கோட்ஸ் ஆலையின் முன்னாள் தொழிலாளியும், புதிய ஜனநாயகம் இதழின் நீண்டகால முகவருமான தோழர் ஏ.எஸ். முத்து, திடீர் உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று மரணமடைந்துவிட்டார்.

தோழர் ஏ.எஸ். முத்துவின் தந்தையாரான திரு. ஆண்டி அவர்கள், சி.பி.எம். கட்சியின் முன்னணி ஊழியராகச் செயல்பட்டவர். தந்தையின் வழியில் தோழர் முத்துவும் சி.பி.எம். கட்சியில் ஊக்கமாகச் செயல்பட்டு வந்தார். பின்னர் 1985இல் நக்சல்பாரி புரட்சிகர அரசியலால் ஈர்க்கப்பட்டு சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறிய அவர், புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உற்சாகமாகச் செயல்பட்டார். அவரது தந்தையார் சி.பி.எம். கட்சிக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்தபோது, தோழர் முத்து தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக நடத்தினார். இதனால்முரண்பாடு முற்றி, அவரது தந்தையார் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிய போதிலும், பல்வேறு இழப்புகளும் இடர்ப்பாடுகளும் ஏற்பட்ட போதிலும், இரத்தப் பாசத்தை விட மார்க்சியலெனினிய புரட்சிகர இலட்சியத்தின் மீதான பற்றும் பாசமும்தான் உயர்வானது என்று தனது இறுதிக்காலம்வரை புரட்சிகர இயக்கத்தில் உணர்வோடும் பற்றுறுதியோடும் அவர் செயல்பட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாக புதிய ஜனநாயகம் இதழின் முன்னுதாரணமிக்க முகவராகச் செயல்பட்ட தோழரது மரணம் புதிய ஜனநாயகம் இதழுக்கும் புரட்சிகர அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும்.

தோழர் முத்துவின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவரது இலட்சியக் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்!

பு.ஜ. ஆசிரியர் குழு

இந்தியாவின் புதுப் பணக்கார கும்பல் உ.பி.யின் நொய்டாவில் நடந்த எஃப்  1 கார் பந்தயப் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், முதலாளித்துவப் பத்திரிக்கைகள் அப்பந்தயத்தை இந்தியாவின் பொருளாதார வல்லமையின் அறிகுறியாகப் பறைசாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் சிறுவர்களும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.  இந்த மழைக்காலம் முடிவதற்குள் கிழக்கு உ.பி. பகுதியில் வாழ்ந்துவரும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும்   இந்த வாழ்வா, சாவா போராட்டத்தைச் சந்தித்துத்தான் தீர வேண்டும்.

மேலும் படிக்க …மூளைக் காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள்: பட்டினி போட்டது அரசு! கொன்று போட்டது தொற்றுநோய்!!

இந்தியாவில் ஏற்கெனவே இயங்கிவரும் மற்றும் புதிதாக நிறுவப்படும் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணிக்கவும் உறுதி செய்யவும் புதிய சட்டத்தையும், அச்சட்டத்தின் கீழ் செயல்படத்தக்க புதிய ஆணையம் ஒன்றையும் உருவாக்கும் நோக்கத்தோடு அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதாவைத் தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைத்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இது நாள்வரை இந்தியாவிலுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணித்துவந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தைவிட, புதிதாக உருவாக்கப்படும் ஆணையம் எந்தவொரு அமைச்சகத்துக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகச் செயல்படும் என்றும்; அணுஉலைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவும், கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும்; அணு உலைகள் எந்த அளவிற்கு கதிர்வீச்சை வெளியிடலாம் எனத் தீர்மானிக்கவும்; அணு உலைகளை ஆய்வு செய்யவும், அணு உலைகளை இயக்கும் நிர்வாகத்திற்கு வழிகாட்டவும் உள்ளிட்டு இவ்வாணையத்திற்குப் பலவிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மைய அரசு தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க …அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: நுனி முதல் அடி வரை மோசடி!

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது மற்றும் 13,500 மக்கள் நலப் பணியாளர்களைத் தடாலடியாக வேலை நீக்கம் செய்தது என்ற அ.தி.மு.க. அரசின் சமீபத்திய இரண்டு முடிவுகளும் ஜெயாவின் பார்ப்பன பாசிச வக்கிரபுத்தியை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளன.  "அவர் திருந்திவிட்டார்; அவரிடம் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன' எனப் பார்ப்பன பத்திரிக்கைகளும் அவரின் துதிபாடிகளும் கூறி வந்ததெல்லாம், தமிழக மக்களை ஏய்ப்பதற்காகச் செய்யப்பட்ட மோசடிப் பிரச்சாரம் என்பதையும் இவ்விரு நடவடிக்கைகளும் அம்பலப்படுத்திவிட்டன.

மேலும் படிக்க …பார்ப்பன ஊடகங்கள்: ரத்தத்தின் ரத்தங்களை விஞ்சிய விசுவாசிகள்!

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளையின்  எட்டா ம்  ஆண்டு தெ hடக்  க வி ழ hவை முன்னிட்டு, 4.11.2011 அன்று மதுரையில் "செயலுக்கான கருத்தரங்கம்' நடைபெற்றது. கிளைச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மதுரைக்கிளை துணைச்செயலரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான வாஞ்சிநாதன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மையறியும் குழுவின் அறிக்கையை நூல்வடிவில் வெளியிட்டு, இந்நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது போலீசு தாக்கியதில் படுகாயமடைந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான திரு.வெள்ளைச்சாமியின் நேருரை, நேரில் பார்த்த  பரமக்குடி வழக்குரைஞர் திரு.பசுமலை அளித்த சாட்சியம் ஆகியன ம.உ.பா.மையத்தின் உண்மையறியும் குழுவின் அறிக்கையை மெய்ப்பிப்பதாக இருந்தது. "பரமக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகள்: பார்ப்பனிய சாதிவெறி அரசு பயங்கரவாத கூட்டுச் சதி' என்ற தலைப்பில் ம.உ.பா .மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  வழக்குரைஞர் ராஜு, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய போலீசு அதிகாரிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும்  வரை ம.உ.பா.மையத்தின் போராட்டம் ஓயாது என்று சூளுரைத்தார்.

"முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் அப்சல் குரு ஆகியோரின் தூக்கு தண்டனை: அரசியல் அநீதி' என்ற தலைப்பில் உரையாற்றிய பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்

தோழர் பாலன், இவ்வழக்கின் சட்டப் பின்னணியை விரிவாக விளக்கியதோடு, அரசியல் சார்ந்த பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் நிரபராதிகளான இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினார்.

இக்கருத்தரங்க நிகழ்ச்சிக்குச் சுவரொட்டி அச்சிடக்கூடாது என்று அச்சகங்களை மிரட்டிய போலீசு, விளம்பரப்படுத்தி கட்டப்பட்டிருந்த பேனரையும் கழட்டிச் சென்றது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்த எழுச்சிகரமான இக்கருத்தரங்கில், பரமக்குடி துப்பாக்கிச் சூடு கொடூரத்தை நேரடியாகப் பதிவு செய்துள்ள வீடியோ பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் பெருகிவரும் இன்றைய சூழ லில்,   மனித உரிமை  ஆர்வலர்களையும் உழைக்கும் மக்களையும் செயலுக்கு  அறைகூவியழைப்பதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், மதுரை

லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக்கவிழ்ப்பானது,  ஆப்பிரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியவாதிகள் புதிய உத்தியுடன் தமது காலனியாதிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்வதை நிரூபித்துக் காட்டுகிறது. 2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும்  2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.

மேலும் படிக்க …லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச்சாலை!

பெர்னி எக்லீஸ்டோன்  கடந்த மாதம் வட இந்திய ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர்  இதுதான். "பார்முலா1' கார் பந்தைய நிறுவனத்தின் தலைவர் என்ற காரணத்திற்காக,  இங்கிலாந்து நாட்டுத் தொழிலதிபரான எக்லீஸ்டோனை இந்திய ஊடகங்கள் தலையில் வைத்துக்  கொண்டாடின. இவரைத் தாஜா செய்து இந்தியாவில் பார்முலா1 பந்தையங்களை நடத்தியதன் மூலம், அனைத்துலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்ந் தோங்கிவிட்டதாக அவை கூறுகின்றன.

மேலும் படிக்க …எஃப்-1 கார் பந்தயம்: புதுப் பணக்காரக் கும்பலின் களிவெறியாட்டம்!

தமிழ்நாட்டில் 1970களிலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்த நகரமயமாக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகம் பிடித்தது. குறிப்பாக தலைநகர் சென்னைக்கு பிழைப்பு தேடி தினமும் வந்து குவியும் மக்களின் தொகையும், புதிதாக முளைக்கும் குடியிருப்புகளும், இதைச் சார்ந்து எழுப்பப்படும் உயரமான வணிக வளாகங்களும் சேர்ந்து சென்னையைத் திணறடித்து வருகின்றன.

மேலும் படிக்க …தி.நகர் ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு….?

தமிழகத்தில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்ட அனுபவத்தை தமிழகத் தொழிலாளர்களிடையே பதியவைத்து, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கெதிராக அவர்களைப் போராட அறைகூவித் தமிழகமெங்கும் பிரசசார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, "மாருதி சுசுகி கார்

மேலும் படிக்க …மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம்: அனுபவமும் படிப்பினையும்!

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)இன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி என்றழைக்கப்படும் தோழர் மலோஜுலா கோடேஸ்வர ராவ், மத்திய ரிசர்வ் போலீசு படையினரால், 24.11.2011 வியாழனன்று படுகொலை செய்யப்பட்டு தியாகியானார். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரிசோல் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசு தெரிவித்தது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படும் இடம்,  ஜம்போனி போலீசு நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், அரசு விவசாயப் பண்ணையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆள் நடமாட்டமும் போலீசு நடமாட்டமும் அதிகமுள்ள இடமென்பதால், அங்கே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறுவதே சந்தேகத்திற்குரியது என்று கூறியிருக்கின்றன, சில பத்திரிகைகள்.

மேலும் படிக்க …தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!

கூடங்குளம் போராட்டத்துக்கு எதிரான அவதூறுகள், டக்குமுறைகளை அரசு முடுக்கி விட்டிருக்கும் சூழலில் "பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்!' என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கன்னியாகுமரி மாவட்ட  கிளை சார்பாக 26.11.11 அன்று நாகர்கோயில் ஜெபமாலை திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு முன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும் தோழமை அமைப்புகளின் செயல்வீரர்களும் கடற்கரை கிராமங்களிலும் நாகர்கோயில் நகரிலும் அணுசக்திக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். நாகர்கோயில் நகரத்திலும், சுற்றுவட்டார நகரங்களிலும், மீனவ கிராமங்களிலும் சுமார் ஒரு வாரகாலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க …“கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்

 

கூடங்குளம் அணு உலை தொடர்பான விவாதம், "அணுசக்தி பாதுகாப்பானதா, இல்லையா?' என்ற சட்டகத்துக்குள்ளேதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. கூடங்குளம் அணு உலையை நிறுவுவதாக இருக்கட்டும், அணு மின்சாரம்தான் ஒரே மாற்று என்று மன்மோகன் சிங்  தற்போது எழுப்பும் கூக்குரலாக இருக்கட்டும், இவை மறுகாலனியாக்க கொள்கைக்கும், பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கும் ஏற்ப நமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட முடிவுகள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, தேசத்தின் மீதும் அறிவியலின் மீதும் உள்ள மாளாக் காதலின் காரணமாகத்தான் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதைப் போல அரசும் அதிகார வர்க்கமும் நடிக்கின்றன. இதனை அம்பலப்படுத்துவதுதான் இப்பிரச்சினையில் கேந்திரமானது.

"ஏன் கூடாது கூடங்குளம் அணுஉலை' என்ற தலைப்பில் சுவராத் ராஜு, எம்.வி.ரமணா என்ற இரு இயற்பியலாளர்கள் இந்து நாளேட்டில் (12, நவ.) ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்குப் பின், அறிவியல் தெரியாத பாமர மக்களின் சார்பில் இறுதியாக அவர்கள் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி முக்கியமானது.  "கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால், "கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்' என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?' என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க …அணுஉலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

ரவுடிகளின் அராஜகத்தை எதிர்த்துப் போராடி, கடந்த அக்டோபர் 26ஆம் தேதியன்று ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட பு.ஜ.தொ.மு. தோழர் செந்திலின் தியாகத்தைப் போற்றியும்; அவரது உயரிய இலட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்றும் நவம்பர் 6ஆம் தேதியன்று மதுரை  ஒத்தக்கடையில் ம.க.இ.க் பு.ஜ.தொ.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நினைவேந்தல் கூட்டத்தை நடத்தின.

ம.க.இ.க. மையக்கலைக்குழுவின் தோழர் கோவன், தியாகத் தோழர் செந்திலின் உருவப்படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய இக்கூட்டத்தில், நாம் தமிழர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, ம.தி.மு.க் இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சி, ஆனைமலை பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், ம.உ.பா.மையத்தின் மதுரைக்கிளை இணைச் செயலரான வழக்குரைஞர் வாஞ்சிநாதன், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோரும் சிறப்புரையாற்றினர். தனியார்மய  தாராளமயத்தால் ரவுடியிசம் வளர்ந்து வருவதை விளக்கியும், பெருகிவரும் இந்த அபாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராட அறைகூவியும், தோழர் செந்திலின் தியாகத்தைப் போற்றியும் நடந்த இந்தக் கூட்டம் தோழர் செந்திலின் நினைவை மக்கள் மனங்களில் ஆழமாக விதைப்பதாகவும், ரவுடியிசத்துக்கு எதிராகப் போராட மக்களை  அறைகூவுவதாகவும் அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், மதுரை

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் மக்கள் போராட்டத்தை ஆதரித்தும், பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்காக நாட்டு மக்களைப் பலியிடத் துடிக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்தும், தமிழகமெங்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, "3 சதவீத அணு மின்சாரத்திற்காக எதிர்காலச் சந்ததியினரைப் பலியிடாதே! பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்காக இந்தியக் கடற்கரை முழுவதும் 36 அணு உலைகளை நிறுவத் துடிக்கும் மன்மோகன் சிங் கும்பல் ஒழிக! வல்லரசுக் கனவுக்கு நாட்டு மக்களைப் பணயம் வைக்காதே! இந்திய அரசு, இந்துவெறி பா.ஜ.க., காங்கிரசு கும்பலின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்போம்! கூடங்குளம்  இடிந்தகரை மக்கள் போராட்டத்தில் ஒன்றிணைவோம்!' என முழக்கங்கள் எதிரொலிக்க  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குணசேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் புஷ்பதேவன், செல்வகுமார், கதிர்வேல் பாலாஜி, செந்தாமரைக் கந்தன் ஆகியோரும் ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜுவும் சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலையில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட ம.உ.பா.மையம், அதன் தொடர்ச்சியாக 23.11.2011 அன்று மாலை காந்தி சிலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வழக்குரைஞர் கண்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர் தோழர் பொன்.சுப்பிரமணியன், வழக்குரைஞர் சேகர், புவியன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள், அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஏகாதிபத்தியங்களின் அடியாட்களாக பொய்ப்பிரச்சாரம் நடத்திவருவதைத் திரைகிழித்துக் காட்டி உழைக்கும் மக்களைப் போராட அறைகூவியழைப்பதாக அமைந்தது.

. பு.ஜ. செய்தியாளர்கள்

பகற்கொள்ளையடிக்கும் பாசிச ஜெயாவின் பேயாட்சிக்கு எதிராகத் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் உழைக்கும் மக்களிடம் விரிவாகப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களையும்   மறியல் போராட்டங்களையும்  நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …“இப்படிப் போராடு!” – தமிழக அரசின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து உழைக்கும் மக்கள் தத்தளிக்கும் நிலையில், பால் விலை மற்றும் அரசுப் பேருந்து, மின்சாரக் கட்டணங்களைக் கிடுகிடுவென உயர்த்தி தமிழகத்தின் ஏழைஎளிய, நடுத்தர வர்க்க மக்கள் மீது பொருளாதார ரீதியிலான அதிரடி பயங்கரவாதத் தாக்குதலை பாசிச ஜெயலலிதா அரசு ஏவிவிட்டுள்ளது. இதுவரை கண்டிராதபடி, ஒரே நேரத்தில் சாதாரணப் பேருந்துக் கட்டணம் கி.மீ.க்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 6.25 ஆகவும் உயர்த்தியுள்ள ஜெயா கும்பல், மின் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.  இந்தியாவில் எந்தவொரு முதலமைச்சரோ, மாநிலமோ செய்திராத இக்கொடிய தாக்குதலால் சாமானிய மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் வாட் வரி மூலம் ரூ.4000 கோடிக்கு மேலாக வரி விதித்த பாசிச ஜெயலலிதா அரசு, இப்போது விலையேற்றம்  கட்டண உயர்வின் மூலம் ரூ. 11,000 கோடிக்கு மக்கள் மீது பெருஞ் சுமையை ஏற்றியுள்ளது.

மேலும் படிக்க …பால் விலை – பேருந்துக் கட்டண உயர்வு: பாசிச ஜெயாவின் வழிப்பறிக் கொள்ளை!

ஒரே வணிக முத்திரை கொண்ட பொருளை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பதெனவும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வியாபாரத்தில் 51 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது எனவும் மைய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.  இம்முடிவின் மூலம், இந்தியாவெங்கிலும் சில்லறை வர்த்தகத்தை நம்பி வாழ்ந்துவரும் பல இலட்சக்கணக்கான குடும்பங்களை அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது, மையஅரசு.

மேலும் படிக்க …சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: கருநாகத்தின் படையெடுப்பு!

முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து, பஞ்சைப் பராரிகளான பாட்டாளிகளின் முதல் சோசலிச அரசு உதித்த நாள் நவம்பர் 7,1917. கண்ணெக்கெட்டிய தூரம்வரை தீர்வுக்கான சாத்தியமே இல்லாத ஒரு கட்டமைப்பு நெருக்கடிக்குள், அதாவது மீளமுடியாத சமுதாயப் பொருளாதார  நெருக்கடியில் ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்பு இன்று விழுந்து கிடக்கிறது. அதற்கு நிரந்தரமான அமைதியை வழங்க வல்லது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிதான்; உலக மக்களைக் காக்க வல்லது கம்யூனிசம் மட்டும்தான் என்பதை உணர்த்தி,  உலகின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி மலர்ந்த 95ஆம் ஆண்டு சோசலிசப் புரட்சி நாளை தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் எழுச்சியோடு கொண்டாடின. இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்தும் அந்நாளில் விழாக்கோலம் பூண்டிருந்தன. நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கேயும் ஒரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியைச் சாதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தன.

மேலும் படிக்க …முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்! – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை!!

அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப் பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னாஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, "கிரிமினல்' என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.

மேலும் படிக்க …மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்

"வரலாறு  சொல்லித்தர வாரியாரு வருவாரு'  இது, இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் இருந்தால் கல்வித்துறையில் என்ன நடக்கும் என்பதை நையாண்டி செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல் வரி. இந்த நையாண்டி வெறும் கற்பனையல்ல, உண்மை என்பதை அண்மையில் டெல்லியிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகமான டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

மேலும் படிக்க …சங்கபரிவாரம் வழங்கும் ” இதுதாண்டா ராமாயணம்!”

இந்தியாவின் வடமேற்கே பாகிஸ்தானை அடுத்துள்ள நாடான ஆப்கானிஸ்தானின் அதிபர் கர்சாயும் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த அக்டோபர் 5ஆம் தேதியன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவின் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக ஆப்கான் திகழும் என்று அந்த ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014இல் ஆப்கானிலிருந்து நேட்டோ படைகள் முற்றாக விலகிய பிறகு, ஆப்கானின் பாதுகாப்புக்கு உற்ற துணையாக இந்தியா நிற்கும் என்றும், ஆப்கான் படைகளுக்கு இந்திய இராணுவம் முறைப்படி 2014லிருந்து பயிற்சி அளிக்கும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கான் படைகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு ஈடாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடத்தைப் பெற அந்நாடு வாக்களிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க …ஆப்கான் – இந்தியா – பாக்கிஸ்தான்: அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா!

நான்கு ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம், வெள்ளையனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற விவசாயி, தன் குடும்பத் தேவைக்காக இரண்டரை ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை எட்டு லட்ச ரூபாய்க்கு விற்றார். மகள்களின் திருமணச் செலவும் மகனின் படிப்புச் செலவும் போக கையில் சுமார் 2 லட்ச ரூபாய் இருந்தது. இந்தத் தொகையைக் கொண்டு அரை ஏக்கர் நிலத்தில் ஏதேனும்  தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

மேலும் படிக்க …ஈமு கோழி வளர்ப்பு: கவர்ச்சிகரமான மோசடி!

பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து மைய அரசின் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்நிறுவனத்தைத் திட்டமிட்டு படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்டுள்ள சதித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.  மைய அரசும், ஏர்இந்தியா நிர்வாகமும் அமெரிக்காவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும், ஐரோப்பாவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனத்திற்கும் மற்றும் விமான சேவைகளை நடத்திவரும் எமிரேட்ஸ், கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கும் சாதகமாக எடுத்த முடிவுகளால், ஏர்  இந்தியா இன்று மீள முடியாத நட்டத்திலும் கடனிலும் சிக்கிக் கொண்டுவிட்டதாகத் தனது அறிக்கையில் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, தணிக்கைத் துறை.

மேலும் படிக்க …ஏர்- இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்!

"பொறுக்கித் தின்னப் போட்டிபோடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்! உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவதல்ல! ஊழலைப் பரவலாக்குவதே! கிராம மக்களுக்கு உண்மையான அதிகாரம் என்பது உழுபவருக்கு நிலம் வேண்டும்; விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் வேண்டும்; தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். இந்த உரிமைகளை மக்களுக்கு அளிக்காத இப்போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்களே நேரடியாக அதிகாரம் செலுத்தக்கூடிய மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்கப் போராடுவோம்!' என்ற முழக்கத்துடன் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரித் தமிழகமெங்கும் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு, ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள், தட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.

மேலும் படிக்க …பொறுக்கித் தின்னப் போட்டிபோடும் உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிப்போம்!” – புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்!

கடந்த 1.10.2011 அன்று மாலை  6 மணி முதல் 2.10.2011 காலை 6 மணி வரை மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில்,  மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பில் "தூங்கா நகரில் தூங்காநிலை போராட்டம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் துண்டறிக்கை விநியோகித்து நன்கொடையும் திரட்டியவர், வழக்குரைஞர் வல்லரசு.

மேலும் படிக்க …மனித உரிமை வேடதாரி மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் கும்பலின் ரவுடித்தனம்!

அரியானா மாநிலம்  குர்கான் நகருக்கு அருகேயுள்ள மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாருதி கார் தொழிற்சாலையில், அதன் நிர்வாகம் கடந்த அக்டோபர் 7 அன்று திணித்த சட்டவிரோத கதவடைப்பு, தொழிலாளர்களின் 14 நாள் போராட்டத்தின் பின் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  மாருதி நிர்வாகத்தின் இச்சட்ட விரோத கடையடைப்புப் போராட்டத்தை எதிர்த்து, அவ்வாலையின் நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் மட்டுமின்றி, மாருதியின் டீசல் கார்களுக்கான இஞ்சின்களைத் தயாரித்து வழங்கும் பவர் டிரெய்ன் ஆலைத் தொழிலாளர்களும் மற்றும் மாருதி காஸ்டிங் ஆலையைச்   சேர்ந்த தொழிலாளர்களும் இணைந்து போராடி, குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளனர்.

மேலும் படிக்க …மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

 

அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, "கிரிமினல்' என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.

 

மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று

கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ்பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமா கத் தொடங்கியிருக்கின்றன.

 

ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப் படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். "இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்' என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார்.

 

தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். "சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரிகளையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது' என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 

"பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை' என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது  கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு.

 

"சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்கு மூலம் வாங்கிவிட்டதாக' அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ்பட்டைச் சிறை வைத்தார், மோடி. இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.

 

சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட்சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக் பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும்  விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.

"சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரை மறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவது நேரடி சாட்சி சஞ்சீவ் பட்' என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.

மேலும் படிக்க …மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!

இந்திய விவசாயம் பெரும்பாலும் இரசாயன உரங்களையே நம்பியுள்ளது. போதிய அளவு மழை பெய்திருந்தாலும், தற்போது உரத் தட்டுப்பாடு விலையேற்றத்தால்  இந்திய விவசாயிகள் தத்தளிக்கின்றனர். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சம்பா நெல் சாகுபடி கடுமையான உரத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. பயிருக்கு மணிச்சத்தும் தழைச்சத்தும் கிடைக்க சம்பா நெல்நடவுப் பணியின் போது டி.ஏ.பி. உரம் அடியுரமாக இடப்படும். ஆனால் டி.ஏ.பி. உரம் கிடைக்காமலும், உரத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பெரும் அவதிக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு 50 கிலோ   எடை கொண்ட டி.ஏ.பி. உரம் ரூ.585க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.825 வரை விற்கப்படுகிறது. மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. டி.ஏ.பி. உரத்தில் ஏற்கெனவே 18:46 என்ற அளவில் இருந்த மணிச்சத்து, தழைச்சத்து விகிதம் தற்போது 16:44 என்ற அளவில் உரக் கம்பெனிகளால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே 100 கிலோ பயன்படுத்தப்பட்ட இடத்தில்,  தற்போது 110 கிலோ உரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

மேலும் படிக்க …உரவிலையேற்றம்: விவசாயத்தைச்சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

"அவரின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் தற்காலிகமாக இடம் மாற்றப்படுகிறது. அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவருடைய பாதுகாப்புக்காக 1,500 முதல் 3,000 போலீசார் வரை குவிக்கப்படுகின்றனர்; சாலையில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதோடு, 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றது.'  இவையெல்லாம் பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கேள்விகள் கேட்பதற்காகச் செய்யப்பட்டிருந்த தடபுடல் ஏற்பாடுகள்.  ஜெயா தமிழகத்தின் முதல்வர், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர் என்றெல்லாம் கூறி, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை நியாயப்படுத்தினாலும், தார்மீகரீதியில் பார்த்தால், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்துச்  சொத்து சேர்த்துக் கொண்ட குற்றவாளிக்கு இத்துணை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதைக் கேட்கும்பொழுது குமட்டல்தான் வருகிறது.

மேலும் படிக்க …சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி!

கடந்த 2008ஆம் ஆண்டில் விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம், விருத்தாசலம் நகரிலுள்ள ஆலடிரோடு, எம்.ஆர்.கே.நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சி வியாபாரம் செய்ய முயற்சித்தது. இதனால் ஆலடி ரோடு பகுதியில் உள்ள எம்.ஆர்.கே.நகர், முல்லைநகர், வீ.என்.ஆர்.நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகள் பாலைவனமாகும் அபாயத்தை உணர்ந்த இப்பகுதிவாழ் மக்கள் இத்தண்ணீர்க் கொள்ளையை எதிர்த்து ஊர் வலம்,  ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து போராடியதையடுத்து இந்நிறுவனம் மூடப்பட்டது. இருப்பினும், இரவில் இரகசியமாகத் தண்ணீரை உறிஞ்சிப் பகலில் குடுவைகளில் தண்ணீரை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்யும் இத்தண்ணீர்க் கொள்ளை அவ்வப்போது நடந்துவந்தது.

மேலும் படிக்க …தண்ணீர்க் கொள்ளையருக்கு எதிராக…..

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக சென்னை  விருகம்பாக்கம் போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட முத்து என்பவர் போலீசாரால் மிருகத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொட்டடிக் கொலை தொடர்பாக மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளபொழுதிலும், "முத்து நெஞ்சு வலியால்தான் இறந்து போனதாக' உயர் போலீசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க …மாதம் இரண்டு லாக்-அப் கொலை: ‘ பச்சை’யான போலீசு ஆட்சி!

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும் புதியஜனநாயகத் தொழிலாளர்  முன்னணியின் செயல்வீரருமான 27 வயதான தோழர் செந்தில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதியன்று ரவுடிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க …ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

தமக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வழக்குரைஞர் மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டுமென்றும் வாதாடினார். இது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் "தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும்' என்று ஒரு தீர்மானத்தை ஆகஸ்டு 30ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முன் மொழிந்த ஜெயலலிவின் அரசு, தற்போது அதற்கு நேர் எதிராகப் பேசியிருக்கிறது. "கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றிவிடவில்லை' என்று கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் கருணை மனுவை நிராகரிப்பதற்கு ஆளுநர் கூறிய வார்த்தைகளை அப்படியே வழிமொழிந்திருக்கிறது. எந்தத் தமிழ் மக்களின் பெயரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்  பட்டதோ, "அந்த மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை' என்று அலட்சியமாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசின் மனு.

மேலும் படிக்க …மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணை முகம்!

கடும் குளிரையும் பனிப் பொழிவையும் மீறித் தொடர்ந்து கொண்டிருக்கிறது வால் ஸ்டிரீட் போராட்டம். வால் ஸ்டிரீட் போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்கும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் திரளின் கோபத்தில் ரோம் தீப்பிடித்தது. சம்பளவெட்டு, ஆட்குறைப்பு, ஓய்வூதிய வெட்டு, மக்கள் நலத்திட்டங்கள் ரத்து, பொதுத்துறை   விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் நடத்திய போராட்டத்தில் கிரீஸ் பற்றி எரிந்தது. எகிப்தின் மக்கள் முபாரக்கின் இராணுவ டாங்குகள், போர் விமானங்களுக்கு  அஞ்சவில்லை.  முபாரக்கின் கூலிப்படைகள் முதல் குதிரைப்படைகள் வரை அனைத்தையும் எதிர்த்து நின்றார்கள். அன்றைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தின் தலைநகரம், இளைஞர்களின் கலகத்தால் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தது.

மேலும் படிக்க …வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி!

வன உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது, மன்மோகன் சிங் சோனியா காந்தி கும்பல்.  சோனியா காந்தியின் தலைமையில் செயல்பட்டு வரும் தேசிய ஆலோசனை கவுன்சில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவாதங்களை நடத்தி, உணவுப் பாதுகாப்பு மசோதாவைத் தயாரித்து, அரசிடம் அளித்தது. அதனை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, ஆய்வு செய்து, சேர்க்க வேண்டியதைச் சேர்த்து, கழிக்க வேண்டியதைக் கழித்துத் தள்ளிவிட்டு, மைய அரசிடம் அளித்தது.  அதனை மைய அமைச்சரவை ஆய்வு செய்து தனது ஒப்புதலை அளித்து, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.

மேலும் படிக்க …ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

அலைக்கற்றை ஊழல் வழக்கில் இரண்டுகைகளிலும் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கும் மாட்சிமை தாங்கிய உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் சாணியை வழித்து அடித்தது போன்றதொரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் தொடுத்திருக்கும் அறிவுச் சொத்துடைமை தொடர்பான வழக்கினை விசாரிக்கும் நீதிபதி தல்வீர்

மேலும் படிக்க …நோவார்ட்டிஸ் வழக்கு: மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகளின் காப்புரிமை!

ரெடிமேட் என அழைக்கப்படும் ஆயத்த ஆடைகளைத்தான் இன்று உலகம் முழுவதும் விரும்பி அணிகின்றனர். பல்வேறு வடிவமைப்புகளில் பல பெயர்களில் இவை விற்கப்பட்டாலும், இவற்றைச் சந்தைப்படுத்துவது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பன்னாட்டு ஏக போக நிறுவனங்களே. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சில்லரை விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் வால்மார்ட், மெட்ரோ, டெஸ்கோ போன்ற மிகப் பெரிய சங்கிலித் தொடர் நிறுவனங்கள் ஆயத்த ஆடை வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆயத்த ஆடைகளின் மீது ஒட்டப்பட்டிருக்கும் பெயர்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் அவற்றைத் தயாரித்துத்தரும் உழைப்பு முழுவதும் ஏழை நாடுகளின் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது.

மேலும் படிக்க …வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர், ஏகாதிபத்திய எண்ணெய் முதலாளிகளின் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்ட போர் என்பதையும், ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்பதையும் போருக்கு முன்பாக நடந்துள்ள நிகழ்ச்சிகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

மேலும் படிக்க …லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கி வரும் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் கமாஸ் வெக்ட்ரா லிமிடெட் எனும் நிறுவனத்தில் 13 ஆண்டுகளாக வேலை செய்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 2010 முதலாக பு.ஜ.தொ.மு. சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு கூலி உயர்வு, போனஸ் முதலான உரிமைகளைப் போராடிப் பெற்றனர். கடந்த ஜூன் மாதத்தில் விக்டர் பிரசாத் என்ற மனிதவள அதிகாரி, முந்தைய ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு, புதிய ஒப்பந்ததாரரைக் கொண்டு ஆகஸ்டு 2011 முதலாக 5 ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு வேலையில்லை என்று அறிவித்தான். இந்த திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து 10.8.2011 அன்று பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. வேலை நீக்கத்துக்குப் பதிலாக, சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிலாளியும் 4 நாட்கள் வேலை இழப்பை ஏற்பது, இழப்பை அனைத்து தொழிலாளிகளும் பகிர்ந்து கொள்வதென பேச்சுவார்த்தையில் முடிவாகி, வர்க்க ஒற்றுமையின் மூலம் பு.ஜ.தொ.மு. இச்சதியை முறியடித்தது.  இதனால் அரண்டுபோன மனிதவள அதிகாரி விக்டர் பிரசாத், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க முன்னணியாளர்கள் 4 பேரை கட்டாயமாக வேலையைவிட்டு நீக்குவதாக கடந்த செப்டம்பர் 12 அன்று ஒப்பந்ததாரரைக் கொண்டு அறிவித்தான். இந்த அநீதிக்கு எதிராகக் கொதித்தெழுந்த நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் ஆலையினுள் உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.

மேலும் படிக்க …ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்: வர்க்க ஒற்றுமையால் விளைந்த வெற்றி!

குஜராத் மாநிலத்தில் 2002  ஆம் ஆண்டு இந்து மதவெறிக் கும்பல் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின் பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், இவ்வினப்படுகொலைகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பும் இணைந்து, "இவ்வினப்படுகொலை தொடர்பான வழக்கில் மோடியையும் மற்றும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும்; இவ்வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் படிக்க …மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

ஒரு நாளைக்குத் தேவையான உணவு, மருத்துவம், கல்விச் செலவுகளைச் சமாளிக்க, நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.32ஃ ஆகவும், கிராமப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.25ஃ ஆகவும் இருந்தால் போதும் எனத் திட்ட கமிசன் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது.  திட்ட கமிசனின் இந்தத் தெளிவான வரையறைக்கும் அன்றாட நடப்புக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மேலும் படிக்க …வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா?

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடைபெற்ற மக்கள் போராட்டத்தை  அலட்சியப்படுத்திப் பணிய வைத்துவிடவே அரசு முயன்றது. ஆளும் வர்க்க ஊடகங்களும் அதற்கு ஒத்துழைத்தன. அண்ணா ஹசாரே என்ற ஒரு கோமாளி நடத்திய சர்க்கஸ் வித்தையையும், அதை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் நேரலை ஒளிபரப்பில் காட்டி, ஊருக்கு ஊர் நாலு ஊழல் ஒழிப்புக் கோமாளிகளை உருவாக்கிய ஊடகங்கள், கூடங்குளம் போராட்டத்தைப் புறக்கணிக்கவே செய்தன என்பதை  விளக்கத் தேவையில்லை. கூடங்குளம் போராட்டத்தை நாடறியச் செய்தால் அது, நாடு முழு வதும் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றவைக்கும்  அத்தகைய சூழ்நிலையை தங்களது எசமானர்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் ஊடகங்கள் அறியும்.

மேலும் படிக்க …கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

உள்ளூராட்சி முறையும் தேர்தல்களும், அவற்றுக்குத் தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடுகளும் ஜனநாயகத்தைப் பரவலாக்குவதாகவும் ஆழமாக்குவதாகவும், ஒரு பம்மாத்து தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் படிக்க …உள்ளாட்சித் தேர்தல்கள்: உள்ளூரைக் கொள்ளையடிக்க ஒரு ஏற்பாடு!

பன்னாட்டு ஏகபோக ஹீண்டாய் நிறுவனத்துக்கு உதிரிப்பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கும் பல நிறுவனங்களில் ஒன்றான ஹனில் டியூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நிலவும் கொத்தடிமைத்தனம், அடக்குமுறை  அச்சுறுத்தலுக்கு எதிராக நிரந்தரத் தொழிலாளர்களும் தற்காலிகத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து,   பு.ஜ.தொ.மு. தலைமையிலான கிளைச் சங்கத்தைக் கட்டியமைத்ததுள்ளனர்.  இத்தொழிற்சங்கத்தை முடக்கி அழிக்கத் துடித்த நிர்வாகம், கூலிப்படைத் தலைவனான விஜயபிரசாத் என்ற மனிதவள மேம்பாட்டு அதிகாரியை வேலைக்கு அமர்த்தியது. இவனும் அய்யாரப்பன் என்ற அதிகாரியும் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டுவது, தொழிலாளர் குடும்பத்தினரை அச்சுறுத்துவது, சங்கத்திலிருந்து விலகுவதாக எழுதித் தருமாறு நிர்பந்திப்பது, மறுத்தால் அத்தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது என அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். ஆனால் இந்த அடக்குமுறைகளால் தொழிற் சங்கத்தையோ தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையோ இந்த கும்பலால் வீழ்த்த முடியவில்லை. அடுத்த கட்டமாக, சங்கத்தின் கிளைத் தலைவர் தோழர் ஞானவேலுவை கூலிப்படையினரை ஏவி  அடையாளம் தெரியாத வகையில் லாரியை ஏற்றிக் கொல்ல இந்த அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இந்தவிபத்து குறித்து விஜயபிரசாத் காட்டிய அக்கறையும் துடிதுடிப்பும் அவனது ஏற்பாடாகவே இந்த "விபத்து' நடந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

முதலாளித்துவ பயங்கரத்தால் ஹனில் டியூப் நிறுவனத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்கொண்டுள்ள இந்த அபாயம், தனிப்பட்ட பிரச்சினை அல்ல்  கோடானுகோடி தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை என்பதை விளக்கியும், இவ்வட்டாரமெங்கும் தொழிலாளர்கள் இத்தகைய முதலாளித்துவப் பயங்கரத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை விளக்கியும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மனிதவள அதிகாரி விஜயபிரசாத்தைக் கைது செய்யக் கோரியும், நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்தும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்ட போராட அறை கூவியும் பூந்தமல்லி முதலாக சுங்குவார் சத்திரம் வரை பரவலாக சுவரொட்டிப் பிரச்சாரம்  ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பு.ஜ.தொ.மு அதன் தொடர்ச்சியாக 23.9.2011 அன்று மாலை திருப்பெரும்புதூரில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமையில்  இணைப்பு சங்கங்கள்  கிளைச் சங்கங்களின் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு முழக்கமிட்ட  இந்த ஆர்ப்பாட்டம், கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பு.ஜ. செய்தியாளர்கள், சென்னை.

பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது கொலைவெறியாட்டம் போட்ட போலீசை எதிர்த்தும், பாசிச ஜெயா அரசின் அதிகாரபூர்வ ஆதிக்க சாதிவெறியாட்டத்தை எதிர்த்தும், இப்போலீசு ராஜ்ஜியத்தை முளையிலேயே கிள்ளி எறிய தமிழக மக்களைப் போராட அறைகூவியும் தமிழகமெங்கும் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. மதுரை, தஞ்சை, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. ம.உ.பா.மையத்தின்  உண்மையறியும் குழுபரமக்குடி, மதுரை பகுதிகளில் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இது தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை வெறியாட்டம் என்பதை ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. விருத்தாசலத்தில் இவ்வமைப்பினர் எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க …பரமக்குடி தலித் படுகொலைக்கு எதராக…

உழைக்கும் மக்களின் இரத்தத்தைக் குடிக்கும், ஆதிக்க சாதிவெறிபிடித்த, அதிகாரத் திமிரெடுத்த  காட்டேரிதான் தமிழக போலீசு என்பதை பரமக்குடியில் நடந்துள்ள கொலைவெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஓர் அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் போலீசு ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிவிப்புதான் பரமக்குடியில் நடந்துள்ள கொலைவெறியாட்டம்.

மேலும் படிக்க …பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பார்ப்பன ஜெயா அரசின் வன்கொடுமை வெறியாட்டம்!

வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும்  கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீசு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும்.  அதிகார போதையும் காமவெறியும் தலைக்கேற காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, பெற்ற தாய்மார்கள் கண்முன்பாகவே 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள்.  ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் போலீசு ரௌடிகள் நாசப்படுத்தினர். இக்கோரச் சம்பவம் பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரியவந்தது.

மேலும் படிக்க …வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்

கடந்த ஆகஸ்டு மாதம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாவல் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மீது மிகவும் கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி, ஒரு பெண் உள்ளிட்டு மூன்று விவசாயிகளைத் துடிதுடிக்கப் படுகொலை செய்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. அரசின் நில அபகரிப்புக்கு எதிராக நடந்த விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டில், 18 விவசாயிகளும் படுகாயமடைந்தனர்.

மேலும் படிக்க …காக்கை குருவிகளா விவசாயிகள்?

கிராமப்புறங்களில் வசிக்கும் கூலி  ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடுமாடு வழங்கும் திட்டத்தைத் "தாயுள்ளம் கொண்ட அம்மா' அரசு அறிவித்துள்ளது. அண்ணா பிறந்த நாளான பெப். 15 அன்று முதற்கட்டமாக 1,600 கலப்பின ஜெர்சி கறவை மாடுகளையும் அதே எண்ணிக்கையிலான ஆடுகளையும் வழங்கப் போவதாகவும், இத்திட்டத்தின் 30 சதப் பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பர் என்றும் ஜெயா அரசு அறிவித்துள்ளது. 1,157 கோடி ரூபாய் செலவில் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 191 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியைக் கொண்டுவரும் திட்டம் என்றும், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை தரும் திட்டம் என்றும் இதனைப் பார்ப்பன ஊடகங்கள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றன.

மேலும் படிக்க …"புரட்சித் தலைவி"யின் புரட்டுத் திட்டம்!

ஏழைகளின் கோவணத்தைப் பிடுங்காத குறையாக வரிவிதிப்பைத் தீவிரப்படுத்துவது, தமிழனைப் போதையில் தள்ளி சாராயத்தின் மூலம் கிடைக்கும் கொழுத்த வருவாயிலிருந்து எலும்புத்துண்டு போல கவர்ச்சித் திட்டங்களுக்கு வாரியிறைப்பது என்ற உத்தியுடன் கிளம்பியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. தமிழச்சிகளின் தாலியறுத்து இலவச கலர் டிவிக்களை கருணாநிதி கொடுத்தார் என்றால், அதே சாராய உத்தியோடு கலர் டிவிக்களுக்குப் பதிலாக மிக்சி, கிரைண்டரைக் கொடுக்கக் கிளம்பியிருக்கிறார், ஜெயலலிதா. மதுபானங்கள் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 6,246 கோடி கிடைத்த விற்பனை வரி, இந்த ஆண்டு ரூ. 7,755 கோடியாக அதிகரிக்கும் என்றும், கடந்த ஆண்டைவிட கலால் வரி மூலம் ரூ. 2,076 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என்றும் ஜெயா அரசின் 2011-12ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்டில்) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முந்தைய கருணாநிதி ஆட்சியைப் போலவே தமிழக மக்களைக் குடிபோதையில் ஆழ்த்தி, சாராய விற்பனை மூலம் கூடுதலாகக் கொள்ளையடிக்க ஜெயா அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க …தமிழக பட்ஜெட்- வருமானத்திற்கு வரி, சாராயம் கவர்ச்சிக்கு இலவசத் திட்டங்கள்

வெடிமருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 6 அன்று இலண்டனின் புறநகர்ப் பகுதியான டாட்டன்ஹாம்  என்ற  இடத் தில் தொடங்கிய இக்கலகம், காட்டுத் தீ போல அந்நகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், மேட்டுக்குடி கனதனவான்கள் வசிக்கும் மேற்குப் பகுதிகளுக்கும்; பிர்மிங் ஹாம், மான்செஸ்டர், லிவர்பூல், பிரிஸ்டால் எனப் பிற நகரங்களுக்கும் பரவியது.

மேலும் படிக்க …இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்

தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் "தேசபக்த' இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் "அடையாளம் தெரியாதவர்கள்' என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க …காஷ்மீர் : அம்பாலமானது இந்திய அரசின் இனப்படுகொலை

தமிழகம் முழுவதும் 411 வாகனங்களைப் பல ஊர்களில் நிறுத்தி வைத்து, எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், மாரடைப்பு, தீக்காயங்கள் மற்றும் நோய்களுக்கு அவசர உதவிகளைச் செய்து, பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று காப்பாற்றும் பணியைச் செய்து வருகிறது, 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆனால், இதில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படும் கொடுமையும், இச்சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. (அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கழகம்  என்ற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் பலரும் அறியாதது.

நாளொன்றுக்கு 12 மணிநேரம் வீதம் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரியும் இதன் ஊழியர்கள், வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஓய்வறையோ, கழிவறையோ,குடிநீர் வசதிகூட இல்லாமல் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு சுரண்டப்படுகின்றனர். இதற்கு வட்டார, மாவட்ட மருத்துவத்துறை அரசு அதிகாரிகள் உடந்தையாக நின்று ஆதாயமடைகின்றனர்.  குறிப்பாக சிவகங்கை,  இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் அதிகாரியான (டி.எம்.) பால் ராபின் சன், தொழிலாளர்களைக் கேவலமாக வசைபாடுவதோடு, சட்டவிரோதமாக வேலை வாங்குவதும் மிரட்டுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

இக்கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வைத் தொடர்பு கொண்ட பிறகு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை விளக்கியும் தனியார்மயக் கொத்தடிமைத்தனத்தை அம்பலப்படுத்தியும் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள் வாயிலாகப் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, 18.8.2011 அன்று மாலை இராமநாதபுரம் அரண்மனை வாயிலருகே சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் நாகராசன் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று 108இன் நிர்வாகம் மிரட்டியபோதிலும் அதனைத் துச்சமாக மதித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழகமெங்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அமைப்பாக்கிப் போராடஉந்துவிசையாக அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், சிவகங்கை.

உலகின் மிக அமைதியான பகுதி என அறியப்படும் ஸ்கேன்டிநேவியாவில் உள்ளதொரு ஐரோப்பிய நாடு, நார்வே. ஈழம் உள்ளிட்டு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், ஏகாதிபத்திய உத்தியின்படி சமரசக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் இந்நாடு பிரபலமானது. அகதிகளாகக் குடியேறுபவர்களுக்கு இந்நாட்டில் வழங்கப்படும் சலுகைகள் காரணமாக, "அகதிகளின் சொர்க்கம்' என இது அழைக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, நிம்மதியாக வாழத் தகுந்த நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், இது முதலிடத்தில் உள்ளது. இதனால், நார்வேயில் 1995  க்குப் பின்னர் புதிதாகக் குடியேறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நார்வேயில் மட்டும் நான்கரை லட்சம் பேர், புலம்பெயர்ந்தோர் ஆவர். அவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் இருந்தும் மேற்காசிய நாடுகளிலிருந்தும் வருபவர்கள். ஈழத் தமிழர்களும் 15 ஆயிரம் பேருக்கும் மேலாகஉள்ளனர். நார்வேயின் மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் புதிதாகக் குடியேறியோரும், அவர்களின் வாரிசுகளுமே.

மேலும் படிக்க …நார்வே படுகொலைகள்- நவீன நாஜிசத்தின் கோரத் தாண்டவம்.

கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, விழுப்புரத்திலுள்ள இ.சாமிக்கண்ணு என்ற கல்வி வியாபாபாரியின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஏழுமலை பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு ஆட்டோமொபைல் படித்து வந்த மாணவரான பிரபாகரன், அந்நிறுவனத்தின் ஆசிரியரான குணசேகரன் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்த பு.மா.இ.மு. தோழர்கள் அப்பாலிடெக்னிக் மாணவர்களை ஒருங்கிணைத்து "கொலைகார குணசேகரனுக்குப்பிணை வழங்காதே! உரிய விசாரணை நடத்தி கொல்லப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கு!' எனும் கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்திய போலீசு, பு.மா.இ.மு.வினர் 8 பேர் மீது ய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

கொல்லப்பட்ட மாணவர் பிரபாகரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பு.மா.இ.மு.வினர், தொடரும் இப்படுகொலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து இ.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களைத் திரட்டினர். அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதிக்கு விண்ணப்பித்த போது, கல்வி வியாபாரிக்கு ஆதரவாக நின்ற விழுப்புரம் போலீசு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்தது. தடையை மீறி நாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று பு.மா.இ.மு.வினர் எச்சரித்த பின்னர், இறுதியில் போலீசு அனுமதி வழங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு. மற்றும் தோழமை அமைப்பினர் பெருந்திரளாகப் பங்கேற்ற போதிலும், இ.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது என்று அந்நிறுவனமும் போலீசும் மிரட்டியதால், அந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்களின் பகற்கொள்ளையையும் கொலைகளையும் தோலுரித்துக் காட்டி, இ.எஸ். கல்வி நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி விண்ணதிரும் முழக்கங்களுடனும், பு.மா.இ.மு. மாநில அமைப்பாளர் தோழர் கணேசனின் சிறப்புரையுடனும் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் பகுதி வாழ் உழைக்கும் மக்களிடம் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராகப் போராட அறைகூவுவதாக அமைந்தது.

தகவல்:

புரட்சிகர மாணவர்  இளைஞர் முன்னணி,

விழுப்புரம்.

"உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு' என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொரு முறை கலைத்துப் போட்டுவிட்டது. உலகிலேயே மிகப் பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டு மின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் இந்தக் கடன் நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க …அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் எல்.பி. ரோட்டையும் அதில் அண்ணாவின் தமிழக ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் கட்டிடத்தையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. முகப்பிலேயே, "குழந்தைக்குத் தேவை தாய்ப்பால். மக்களுக்குத் தேவை ஜன் லோக்பால்' என்கிற அரசியல் முழக்கத்தை ப்ளக்ஸ் பேனரில் பிரம்மாண்டமாகக் கட்டி வைத்துப் பீதியூட்டியிருந்தனர். சாலையோர ப்ளக்ஸ்பேனர் களில் அண்ணா ஹசாரே, "இந்தியனே எழுந்து வா' என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க …ராம்லீலா மைதானத்தில் சென்னை அவதாரம்

"நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை.  எங்கள் சானல் வழியா கத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம் கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன.

மேலும் படிக்க …அண்ணா ஹசாரே- கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே தனியார் பேருந்துகளும் லாரிகளும் ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ.3,000 செலுத்தி வந்த டோல் கேட் கட்டணம், இப்போது ரூ.38,000 முதல் ரூ.65,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகற் கொள்ளையை எதிர்த்தும், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்,டோல்கேட் அமைந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு 50 சதவீத வரியை வசூலிக்க வேண்டும், காலியான வாகனங்களுக்கு 25 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தனியார் பேருந்து, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகள் ஓடாததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதோடு, காய்கறிகள்தானியங்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகினர். கிருஷ்ணகிரி வட்டத்தின் அரசு போக்குவரத்துக் கழகம் மாதம் ரூ. 8 லட்சம் அளவுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்தி தொடர்ந்து நட்டப்பட்டு வருகிறது. இதைக் காரணம் காட்டி தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

டோல்கேட் பகற்கொள்ளை என்பது பேருந்து  லாரி உரிமையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை என்பதை விளக்கி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே 19.8.2011 அன்று மாலை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.ஜ.தொ.மு. மாவட்டச் செயலர் தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தொழிலாளி தோழர் செல்வராஜ், பு.ஜ.தொ.மு. பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், பு.ஜ.தொ.மு. மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். உள்ளூர் பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் உழைக்கும் மக்களுடன் இணைந்து தனியார்மயக் கொள்ளைக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

பு.ஜ.செய்தியாளர், கிருஷ்ணகிரி.

கோவை மாவட்டம், உடுமலை வட்டாரத்திலுள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்துக்கும் குடிநீருக்கும் உயிராதாரமாக உள்ள அமராவதி ஆற்றின் பிரதான கிளை வாய்க்காலான ஐயர் வாய்க்காலின் அருகே, அமராவதி அணையை ஒட்டி காக்டஸ் என்ற தனியார் நிறுவனம், உரிய அனுமதியின்றி அரசு அதிகாரிகளின் துணையோடு கடந்த ஆறு மாத காலமாக நாளொன்றுக்குப் பத்து இலட்சம் லிட்டர் அளவுக்குத் தண்ணீரை உறிஞ்சிப் புட்டிகளில் அடைத்து வியாபாரம் செய்து வருகிறது.

மேலும் படிக்க …தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….

கடந்த ஆறு மாதங்களாக லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக நடத்தி வந்த போரில், ஏகாதிபத்திய விசுவாச கலகப்படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், அப்படையினரது இடைக்கட்ட அரசின் வெற்றியையும் கடாஃபி ஆட்சியின் வீழ்ச்சியையும் அமெரிக்காவும் நேடோ கூட்டணி நாடுகளும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஜனநாயகம், மனித உரிமை, போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாப்பது என்றெல்லாம் கூப்பாடு போடும் அமெரிக்காவின் கபடத்தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, லிபியா மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்.

மேலும் படிக்க …லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பாசிச பார்ப்பன ஜெயா கும்பலின் ஆணவத்துக்கு ஆப்பு வைத்து தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்களின் வாதத் திறமையால் மட்டுமின்றி, புரட்சிகர அமைப்புகளின் தலைமையிலான  மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்ட அலையின் காரணமாகவே உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க …சமச்சீர் கல்வி- போராட்டத்தால் விளைந்த வெற்றி!

ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் சிறுவர்கள் முன்னணியில் நிற்பதை ஒரிசா மாநில அரசு மட்டுமின்றி, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவுஜீவிகளும் கண்டித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் மதிய உணவுத்  திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள நவீன் பட்நாயக் அரசு, போராடும் சிறுவர்களின் படிப்பு பாழாவதாகப் புலம்புவது நகைப்புக்குரிய முரண்.

மேலும் படிக்க …போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

ஓசூர் சிப்காட்2இல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில், அற்பக் கூலியையும் காமவெறி பிடித்த உற்பத்திப் பிரிவு மேலாளர் பெரியசாமியின் இழி சொற்களையும் சகித்துக் கொண்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களில் ஒருவர்தான், தேவி. பணிநிரந்தர ஆணை தரப்படாமல், மேலும் பயிற்சிக்காலம் நீட்டிக்கப்பட்டதால், கடந்த 572011 அன்று அதை ஏற்க மறுத்து தேவி வாதிட்டபோது, அவரையும் அவரது கணவரையும் இழிவாகவும் ஆபாசமாகவும் பேசி அவமானப்படுத்தியுள்ளான், பெரியசாமி. தனக்குரிய சேமநலநிதி முதலானவற்றை ஒப்படைத்துவிடுமாறும் வேலையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்து, மறுநாள் ஆலைக்குச் சென்ற தேவியிடம் மேலும் ஆபாசமாக அவன் பேசத் தொடங்கியதும், பெரியசாமியின் வாயிலும் மூக்கிலும் மிளகாய்ப் பொடியை வீசிய தேவி, செருப்பைக் கழற்றி விளாசித் தள்ளினார். பின்னர், தனக்கு நேர்ந்த அநீதியை விளக்கி பெரியசாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு புகார் கடிதம் கொடுத்தார். ஆனால் போலீசோ தேவியைக் கைது செய்ததோடு, அவரது புகாரை வாங்க மறுத்தது.

இத்தகவல் அறிந்ததும், இப்பகுதியில் இயங்கும் பு.ஜ.தொ.மு.வினர் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைத் திரட்டி, தோழர் பரசுராமன் தலைமையில் ஓசூர் வட்டத் தொழிலாளர் அலுவலகம் முன்பு, "காமவெறியனுக்கு செருப்படி கொடுத்த வீரப் பெண்மணி தேவி வாழ்க! முதலாளித்துவ பயங்கரவாதம் ஒழிக! வீரப்பெண்மணி தேவியை விடுதலை செய்! காமவெறியன் பெரியசாமியைக் கைது செய்!' என்று விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தோழர் பரசுராமன் மற்றும் 20 பேர் அனுமதியின்றி சாலையை மறித்ததாகப் பொய் வழக்கு பதிவு செய்த போலீசு, தோழர் பரசுராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. "ஆனந்த் எலக்ட்ரானிக் பெண் தொழிலாளி மீது பாலியல் துன்புறுத்தல்! காமவெறிபிடித்த அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி கொடுத்தார் பெண் தொழிலாளி!' என்ற முழக்கங்களுடன் ஓசூர் நகரெங்கும் ஒட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டிகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. தோழர் பரசுராமன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், வீராங்கனை தேவியை விடுதலை செய்யவும் காமவெறியன் பெரியசாமியைத் தண்டிக்கவும் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஓசூர் தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர்.

தகவல்: பு.ஜ.தொ.மு; ஓசூர்.

தேனி மாவட்டம், போடியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மூத்த தோழர்களில் ஒருவரும், கடந்த 20 ஆண்டுகளாக வி.வி.மு.வின் அடையாளமாகத் திகழ்ந்தவரும், புதிய ஜனநாயம் இதழின் தொடக்க கால முகவருமான தோழர் மாசானம், இதய நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 27.7.2011 அன்று  தனது  51வது வயதில் மரண மடைந்து விட்டார்.

மேலும் படிக்க …வீரவணக்கம், தோழர் மாசானம்!

அமெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழுகிறது, மத்திய கினியா.

மேலும் படிக்க …மத்திய கினியா: சர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம்

அரியானா மாநிலத்தில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க உரிமைகள் கிடையாது. அத்தொழிற்சாலைகளில் அற்ப அளவுக்கு நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதுதான் நடக்கின்றது; தொழிற்சங்கம் என்பதைப் பற்றிப் பேசுவதே குற்றமாகக் கருதப்படுகிறது. தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக நிர்வாகமே வேலை கமிட்டிகள் எனும் எடுபிடி சங்கங்களை உருவாக்கி நடத்தி வருகின்றன. இந்நிலையில் அரியானாவில் அமைந்துள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் தொழிற்சங்க உரிமைக்காக அண்மையில் நடந்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம், தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும், முதலாளிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க …வர்க்க ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி! – மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம்

சேலத்தில் காந்தி விளையாட்டரங்கம் அருகிலுள்ள நீச்சல்குளத்தில், பயிற்சிக்கு வரும் பள்ளி மாணவிகளிடம் நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனால் இரண்டு மாணவிகள் கர்ப்பமடைந்துவிட்டதாகவும் கோவை மேற்கு மண்டல மேலாளர் மோகன்,சேலம் மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பயிற்சியாளர் ஞானசேகரன் மீதான தனிப்பட்ட விரோதத்தால் அவதூறு பரப்பி, பெண் குழந்தைகளை அவமானப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க …பாலியல் அவதூறு – வக்கிரத்துக்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம்

"குஜராத்தைப் பார்! மோடி ஆட்சியின் சாதனையைப் பார்!' என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, இந்தியா டுடே. "இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்' என்கின்றன, செய்தி ஊடகங்கள். உணவு விவசாயக் கழகத்தின் துணை நிறுவனமான பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் குஜராத்தைப் பின்பற்றுமாறு இந்தியாவின் இதர மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச ஜெயா கும்பலோ, குஜராத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தின் விவசாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு நிபுணர் குழுவை குஜராத்துக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க …குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!

"சிறப்புப் போலீசு அதிகாரிகள் (ளுPழு)' என்று சட்டிஸ்கர் மாநில அரசாங்கத்தால் அழைக்கப்படும் சல்வா ஜூடும் அமைப்பை கலைத்து விடும்படியும் நிராயுதபாணியாக்கிவிடும்படியும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது  அரிதிலும் அரிதான வழக்கு என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் மனித உரிமை மற்றும் ஜனநாயகப் போராளிகளால் போற்றப்படுகிறது.

மேலும் படிக்க …சல்வாஜூடும் கலைப்பு: உச்சநீதிமன்றத்தின் கோணல் பார்வை!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, பயறு வகைகளைப் பயிரிட்டு வந்த போதிலும், முறையான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இல்லாததால், அரகண்ட நல்லூருக்கும் விழுப்புரத்துக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் டிராக்டரில் உற்பத்திப் பொருட்களை எடுத்துக் கொண்டு அலைவது, அல்லது தரகர்களிடம் சிக்கி அற்ப விலைக்கு விற்பது என்கிற அவலம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. திருவெண்ணெய் நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்ற பெயரில் ஒரு மாட்டுத் தொழுவத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகள் ஒப்பேத்துகின்றனர். 30 கிராம விவசாயிகள் இப்பகுதியில் முறையான கொள்முதல் நிலையம் வேண்டுமென கோரிய போதிலும், அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

மேலும் படிக்க …“டாஸ்மாக் கடைக்கு இடமுண்டு; ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கபு இடம் கிடையாது!” – தமிழக அரசின் மோசடியை அம்பலப்படுத்தி வி.வி.மு.-வின் ஆர்ப்பாட்டம்

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடியின மக்களும் போராடிவரும் வேளையில், 1894ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்வதோடு,  நிலத்தை இழக்கும் விவசாயிகளை மீளக் குடியமர்த்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டத்தையும் இம்மழைக்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாகவும் மைய அரசு கூறியிருக்கிறது.

மேலும் படிக்க …நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!

மான ஈனமற்ற அமெரிக்க அடிமைத்தனத்திற்குப் புதிய இலக்கணம் படைத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகவும் வெறியோடும் நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் இந்தியாவை இறுகப் பிணைக்கும் நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபட்டு, இந்தியாவை அமெரிக்காவின் விசுவாச அடியாளாக வளர்த்தெடுப்பதிலும் புதிய "சாதனை'யைப் படைத்து வருகிறது.

மேலும் படிக்க …இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

அலைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல் இது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மேலும் படிக்க …2-ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணை: குற்றவாளி ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 110 டாலர் விலை இருந்தபோது, அதையொட்டியே விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறிய மைய அரசு, தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 93 டாலராகக் குறைந்துள்ள போது விலையைக் குறைக்காமல், ஏற்றிய விலையிலேயே விற்றுக் கொள்ளையடிப்பதை எதிர்த்து கடந்த ஜூன் 29 அன்று தஞ்சை ரயிலடியில் ம.க.இ.க் பு.மா.இ.மு; வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

மேலும் படிக்க …பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்தை முடக்கும் பாசிச ஜெயா அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போதே, சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையின் அரசியல் பின்புலத்தை மாணவர் களுக்கும் பெற்றோ ர் களுக்கும் விளக்கிப் புரிய வைக்கும் பிரச்சாரத்தையும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க …“வணிகமயமாகும் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! -பு.மா.இ.மு, ம.க.இ.க கருத்தரங்கம்

இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மூத்த நக்சல்பாரித் தோழர் கணபதி, கடந்தஜூலை 22ஆம் தேதியன்று தனது 75வது வயதில் மரணமடைந்துவிட்டார்.

மேலும் படிக்க …தோழர் கணபதியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

"ஜெயாவின் ஆட்சி என்றாலே நிர்வாகத் திறமைமிக்க ஆட்சி; சட்டம்ஒழுங்கைக் கண்டிப்புடன் பேணக்கூடிய ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சியோ இதற்கு நேர்மாறானது' என்றொரு கருத்தைப் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டே நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன.

மேலும் படிக்க …இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி!

தென்னிந்தியாவில் முதன்முறையாக கர்நாடகத்தில் அமைந்த பா.ஜ.க. ஆட்சி, பல்லாயிரம் கோடி சுரங்க ஊழல்  கொள்ளையில் சிக்கி நாடெங்கும் சந்தி சிரிக்கிறது. கட்டுப்பாடுமிக்க கட்சியாகவும் யோக்கிய சிகாமணிகளாகவும் ஊழல் எதிர்ப்பு சவடால் அடித்துவரும் பா.ஜ.க.வின் காவிகோவணமும் கிழிந்து அம்மணமாகி நிற்கிறது. ஊழல் கொள்ளையில் சிக்கிய முதல்வர் எடியூரப்பாவைப் பதவியிலிருந்து விலகச் சொல்லி பா.ஜ.க. தலைமை நிர்ப்பந்திக்க, அவர் ஏற்க மறுத்து கலகம் செய்த பிறகு, ஜெயலலிதாவுக்கு வாய்த்த பன்னீர்செல்வத்தைப் போல, எடியூரப்பாவின் விசுவாசியாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்க ஒப்புக் கொண்ட பிறகு, எடியூரப்பாவின் பதவி விலகல் நாடகம் நடந்துள்ளது.

மேலும் படிக்க …பா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு: ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் கடந்த மே மாத இறுதியிலிருந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க, வி.வி.மு, பு.ம.இ.மு;, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து தொடர் பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் தமிழகமெங்கும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்த இவ்வமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதத்தில் துண்டுப்பிரசுரங்களுடன் வீடுகளிலும் பள்ளிகளிலும் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பெற்றோர்கள்  மாணவர்களைத் திரட்டி உண்ணாநிலை போராட்டங்கள், சாலைமறியல்கள்,பாசிச ஜெயாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பெற்றோரைத் திரட்டிப் போராட்டம் என போர்க்குணத்தோடு தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஜூலை 4ஆம் தேதியன்று காரைக்குடியிலும், 11ஆம் தேதியன்று போடியிலும், 12ஆம் தேதியன்று கரூரிலும், 13 ஆம் தேதியன்று மானாமதுரையிலும், 21ஆம் தேதியன்று சிவகங்கையிலும் ஆர்ப்பாட்டங்களை இவ்வமைப்புகள் நடத்தின.

மேலும் படிக்க …“சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து! பாடநூல்களை உடனே வழங்கு!” – கல்வி தனியார்மயத்துக்கு எதிராகத் தமிழகமெங்கும் பரவும் போராட்டம்

திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவதில்லை.  இதனால், அம்மாவட்டங்களைச்  சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்குஅரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக் கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும்.  சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும்.  இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.

மேலும் படிக்க …விவசாயிகள் மீது தடியடி: பேயாட்சி!

"நலத்திட்டங்கள்' என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாலும் தொடர்ந்து இந்நாள் முதன்மந்திரி ஜெயலலிதாவாலும் அழைக்கப்படும் திட்டங்கள், "இலவசங்கள்' என்று மேட்டுக்குடி, ஆதிக்க சாதி அறிவுஜீவிகளாலும் முதலாளிய ஊடகங்களாலும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க …இலவச – கவர்ச்சித் திட்டங்கள்: திராவிட கட்சிகளைச் சாடும் அதிமேதாவிகளின் அவதூறுகள்

இந்திய அரசின் தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஜூன் 11 அன்று இலங்கைக்குச் சென்று, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவையும் மற்ற பிற முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துவிட்டுத் திரும்பியது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கான முன்தயாரிப்புகளைச் செய்வதற்கும், இலங்கை  இந்திய இராணுவ அதிகாரிகளிடையே நடந்துவரும் வருடாந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்பான தயாரிப்புகளைச் செய்வதற்கும்தான் இக்குழு இலங்கைக்குச் சென்று திரும்பியிருக்கிறது. இலங்கை சென்றுவிட்டுத் திரும்பிய சிவசங்கர் மேனன் பத்திரிகையாளர்களிடம் நடத்திய உரையாடலே, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தோ, ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு, அதிகாரப் பகிரவு குறித்தோ இக்குழு எவ்வித முக்கிய ஆலோசனையும் நடத்தவில்லை என்பதற்கான சான்றாக உள்ளது.

மேலும் படிக்க …இலங்கைக்கு இந்தியக் குழுக்கள்: ஒரு நாடகம் நடக்குது!

மத்திய அரசின் திட்டங்கள், ஒப்பந்தங்கள், வருவாய், செலவினம் போன்றவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதுதான் இந்திய பொதுத் தணிக்கை அதிகாரியின் பணியாகும். இந்தத் தணிக்கைகளில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் அம்பலமானது. இந்த வரிசையில், இவ்வாண்டின் அறிக்கை வெளிக்கொண்டு வந்திருப்பதோ தில்லி விமான நிலைய ஊழல்.

மேலும் படிக்க …தில்லி விமான நிலைய ஊழல் – கொள்ளை: தனியார் – பொதுத்துறை கூட்டு, பல்லாயிரம் கோடி வேட்டு!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம் தேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது ஜூன் 3ஆம் தேதியன்று, பீகாரின் ஆராரியா மாவட்டத்தின் பர்பஸ்கன்ஜ் வட்டத்திலுள்ள ராம்பூர் மற்றும் பஜன்பூர் ஆகிய கிராமங்களில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளிட்டு 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராம்தேவையும் அவரது பரிவாரங்களையும் போலீசு விரட்டியடித்ததை மிகக் கொடிய வன்முறைத் தாக்குதலாகச் சித்தரித்த முதலாளித்துவ ஊடகங்கள், ஏழை முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு கொலைவெறியாட்டத்தைப் பற்றி எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை.

மேலும் படிக்க …சாலை கேட்டால் கொலை: இதுதான் நிதிஷ்குமாரின் சிறந்த ‘அரசாளுமை’!

மும்பையிலிருந்து வெளிவரும் மாலை நாளேடான "மிட்டே' வின் மூத்த புலனாய்வு செய்தியாளரான ஜோதிர்மாய் டே, கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை, இரகசிய உலக குற்றக் கும்பல்கள் நடுவீதியில் சரமாரியாகச் சுட்டுக் கொன்ற இக்கொடுஞ் செயல், நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க …மும்பை பத்திரிகையாளர் டே படுகொலை: போலீசு – தாதாக்களின் கூட்டுச் சதி

மனித உரிமை ஆர்வலரும், போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.

மேலும் படிக்க …வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்

2ஜி அலைக்கற்றை ஏல விற்பனையில் நடந்துள்ள கார்ப்பரேட் பகற்கொள்ளையைப் போல, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வயல்களை ஏல விற்பனை செய்திருப்பதிலும் கார்ப்பரேட் பகற்கொள்ளை நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. இலைமறை காயாக அதிகாரத் தாழ்வாரங்களில் கிசுகிசுக்கப் பட்டுவந்த இந்த ஊழலைப் பற்றிய இந்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையைப் பத்திரிகைகள் வெளியிட்டதன் மூலம் இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளை அம்பலத்திற்கு வந்துவிட்டது.

மேலும் படிக்க …கிருஷ்ணா – கோதாவரி எண்ணெய் வயல் கொள்ளை: உமி கொண்டு வந்தான், அவல் தின்றான்

கடந்த 2006ஆம் ஆண்டில் சென்னைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்த போது, கடலூர் மாவட்டத்திலுள்ள சிறுநெசலூர் கிராமத்தில், சாலையின் கீழ்ப்புறம் கிராமமும் மேற்புறம் தொடக்கப் பள்ளியுமாகத் துண்டாடப்பட்டது. அதிவிரைவாக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலையைக் கடந்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலாத நிலையில், தமது குடியிருப்புப் பகுதியிலேயே பள்ளிக்கூடத்தைக் கட்டித்தருமாறு தாழ்த்தப்பட்டோரான இக்கிராம மக்கள் பலமுறை கோரியபோதிலும், அதிகார வர்க்கம் தொடர்ந்து அலட்சியப்படுத்தியது. கடந்த ஆண்டில் அய்யனார் கோயில் தரிசு நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டித்தரக் கோரி, அதற்கான ஏற்பாடுகளை இக்கிராம மக்கள் செய்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் மூலம் முயற்சித்த போதிலும், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நின்று இந்நிலத்தை சந்தை மதிப்புக்குத்தான் தர இயலும் என மறுத்துவிட்டனர்.

மேலும் படிக்க …அரசின் அலட்சியத்துக்கு எதிராக கிராம மக்களின் போர்க்கோலம்

பாபா ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்ட நிலையில், ஹரித்துவாரில் நிகமானந்தா சரஸ்வதி என்ற சாமியார் நடத்திய உண்ணாவிரதம் பேசப்படவில்லை. தனது நீதியான போராட்டத்துக்காக அவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த போதிலும், அவரது தியாகம் போற்றப்படவில்லை.

மேலும் படிக்க …நிகமானந்தா: பா.ஜ.கவின் முகத்திரையைக் கிழித்த தியாகச் சாமியார்

எண்டோசல்பான் என்ற பூச்சிக் கொல்லி மருந்துக்கு எதிராக கேரளாவில் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, இக்கொலைகார பூச்சி மருந்துக்கு எதிராக அண்மைக்காலமாக நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலாளர்களின் போராட்டங்களும் பெருகி வருகின்றன. அதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமையிலான குழுவின் முடிவுக்குப் பின்னரே முழுமையான தடை விதிக்கப்படும் என்று அறிவித்து, எட்டு வாரங்களுக்கு தற்காலிகத் தடை எனும் கண்துடைப்பு நாடகமாடியது, உச்ச நீதிமன்றம்.

மேலும் படிக்க … “எண்டோசல்பானை விரட்டியடிப்போம்! விவசாய்த்தில் தரகுப் பெருமுதலாளிகள் – பன்னாட்டுக் கம்பெனிகள் ஆதிக்கத்தை முறியடிப்போம்!” – தமிழகமெங்கும் வி.வி.முவின் பிரச்சார இயக்கம்.

தென்கொரியாவைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 4,000 ஏக்கர் பரப்பளவில், 55,000 கோடி ரூபாய் மூலதனத்தில், இரும்பு உருக்காலை  துறைமுகம்  மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றையும் ஒருசேர அமைப்பதற்கு, மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் தனது இறுதிக்கட்ட அனுமதியை வழங்கிவிட்டது.  போஸ்கோவின் திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதி முற்றிலும் அழிந்து போகும், அவ்வனத்தை நம்பி வாழ்ந்துவரும் 20,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின், இதர விவசாயிகளின் வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, வன உரிமைச் சட்டவிதிகளை வளைத்தும், மீறியும் தான் இந்தச் சுற்றுப்புறச்சூழல் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம்: திணறிப் போனது ஆளும் கும்பல்!

நாளுக்கு ஒரு ஊழல் அம்பலமாகி நாறிக்கொண்டிருக்கின்ற "நல்லவர்' மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழலை நாட்டை விட்டே விரட்டுவதற்கு லோக்பால் மசோதா தயாரித்துக் கொண்டிருக்கிறது. திருடன் கையில் சாவியை ஒப்படைப்பது என்று கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், திருட்டைத் தண்டிப்பதற்கான சட்டங்களை இயற்றும் பொறுப்பை திருடர்கள் தாமே முன்வந்து ஏற்றிருக்கும் கேலிக்கூத்தை இப்போது பார்க்கிறோம்.

மேலும் படிக்க …லோக்பால்: ஊழல் சாக்கடைக்கு ஞானஸ்நானம்

போலி கம்யூனிஸ்டுகளின் உறுதியான ஆதரவு இல்லாமல் பாசிஸ்டுகள் அதிகாரத்துக்கு வர இயலாது என்று உணர்த்தினார், பாசிச எதிர்ப்புப் போராளியும் அனைத்துலக கம்யூனிசத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ். அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறார்கள், தமிழகப் போலி கம்யூனிஸ்டுகள்.

மேலும் படிக்க …சமச்சீர் கல்வி: ‘மார்க்சிசிஸ்டு’களின் இரட்டை நாக்கு

கடந்த ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயஇ, மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2ரூபாய்  என விலையேற்றத்தை அறிவித்து நாட்டு மக்களின் மீது மீண்டும் பொருளாதாரச் சுமையைத் திணித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை விலைக்குக் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பதால் ஏற்படும் நட்டம், சமையல் எரிவாயு முதலான வற்றுக்கு அரசு அளிக்கும் மானியத்தால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை  என்ற வழக்கமான பொய்களைக் கூறி விலையேற்றத்தை நியாயப்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க …டீசல்-எரிவாயு உருளை விலையேற்றம்: தாராளமயத்தின் கோரவிளைவு!

பார்ப்பன  பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒரேயடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும் நோக்கில், அத்திட்டத்தை அமலாக்குவதைக் காலவரையற்று ஒத்திவைக்கும் மசோதாவை கடந்த ஜூன் 7 அன்று சட்டசபையில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றம் இம்மசோதாவிற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் அமலாக்கப்பட்ட பொது பாடத்திட்டம் தொடர வேண்டும் என்றும், சமச்சீர் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டபடி, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் முதல் பத்தாம் வகுப்புகளுக்குப் பொது பாடத்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமலாக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேசமயம் அத்தீர்ப்பிலேயே, "சமச்சீர் கல்வியையும் அதற்கான பாடப்புத்தகங்களை ஆய்வு செய்வதற்குத் தமிழக அரசிற்கு இத்தீர்ப்பு தடையாக இருக்காது; சமச்சீர் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி, தனிநபர் புகழ் போன்ற சிலவற்றை நீக்கவோ, திருத்தவோ, மாற்றவோ அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது' என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.

மேலும் படிக்க …சமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே! ஜே!!

கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்குச் சென்று கொண்டிருந்த கே.பி.என். சொகுசுப் பேருந்து, காவேரிப்பாக்கம் அருகில் சரக்கு வாகனத்தை மின்னல் வேகத்தில் முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து தீப்பிடித்ததில், 22 பயணிகள் தீயில் கருகிப் பரிதாபமாக மாண்டுபோனார்கள்.

மேலும் படிக்க …கே.பி.என். பேருந்துப் பயணிகள் தீயில் கருகிப் பலி: தனியார்மயத்தின் கொடூரம்!

ஈராண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரின் கொடூரங்களை ஆவணப் படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல்4 தொலைக்காட்சி. கல்மனம் கொண்டோரையும் கதறச் செய்யும் இக்கொடூரக் காட்சிகளைக் கண்டு வேதனையும் துயரமும் கொள்ளாதோர் இருக்கவே முடியாது. இலங்கை அரசின் இரக்கமற்ற இந்தப் போரை இந்திய அரசுதான் உற்ற துணைவனாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இயக்கியது.

மேலும் படிக்க …சட்டமன்றத் தீர்மானம்: ஜெயாவின் கபட நாடகம், புலி ரசிகர்களின் விசில்!

கல்விக் கொள்ளையர்களுக்கு தமிழகத்தை மொத்தமாகத் திறந்துவிட ஏதுவாக சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ள பாசிச ஜெயா கும்பலுக்கு எதிராகவும், தனியார்மயத்தினால் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் தமிழகமெங்கும்   மனித உரிமை பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியும்  தோழமை அமைப்புகளுடன் இணைந்து பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் போர்க்குணத்தோடு நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்து! தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!

நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்துவரும் "வளர்ச்சி' பற்றி பார்ப்பன  பாசிஸ்டுகள் மட்டுமல்ல, "மதச்சார்பற்ற' முதலாளித்துவ பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி வருகின்றன.  இந்த "வளர்ச்சி' தொழிலாளி வர்க்கத்துக்குத் தந்துள்ள பரிசு என்ன தெரியுமா? அகால மரணம்!

மேலும் படிக்க …குஜராத்தின் வளர்ச்சிக்கு பலியாகும் பழங்குடியின மக்கள்!

"கார்ப்பரேட் தொழிற்கழகங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்குகள்'' என்ற தலைப்பில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து, கோவாவில் உள்ள பஞ்ஜிம் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் கருத்தரங்கமொன்றை நடத்தின. கார்ப்பரேட் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவது ஒருபுறமிருக்க, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களின் மனப்பாங்கும் மாறிப் போய்விட்டிருப்பது குறித்தும் இக்கருத்தரங்கில் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும் படிக்க …இந்திய நீதிமன்றங்கள்: கார்ப்பரேட் பயங்கரவாதிகளின் அடியார்கள்!

கடந்த மார்ச் மாதம் 25  ஆம் தேதி 72 பேர் கொண்ட அகதிகள் குழு லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து "பூலோக சொர்க்கமாம்' ஐரோப்பாவை அடையும் நோக்கத்துடன் தமது கடல் பயணத்தைத் தொடங்கியது. 47 எத்தியோப்பியர்கள், 7 நைஜீரியர்கள், 7 எரிட்ரீயர்கள், 5 ‹டானியர்கள் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த 6 பேர் அடங்கிய இக்குழு மத்தியத்தரைக் கடலைக் கடந்து இத்தாலியைச் சேர்ந்த லம் பேடுஸா தீவை அடைந்து ஐரோப்பாவில் காலடி எடுத்துவைக்கத் திட்டமிட்டிருந்தது. எனினும், திரிபோலியை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திலேயே நடுக்கடலில் மாட்டிக் கொண்ட இக்குழுவினர், உடனடியாக செய்மதி தொலைபேசி மூலம் (சேட்டிலைட் போன் மூலம்) இத்தாலி கடற்படையினரிடம் உதவி கேட்டு தொடர்பு கொண்டுள்ளனர். கடலில் தத்தளித்த 16 நாட்களில் ஒருமுறை நேடோ போர்க் கப்பலுடனும், ராணுவ ஹெலிகாப்டருடனும் இவர்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டு கூக்குரலிட்டுள்ளனர். ஆயினும், எந்த உதவியுமின்றி தாகத்திலும், பசியிலுமாக சிறுகச் சிறுக ஒவ்வொருவராக  பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும் கொண்ட இக்குழுவினரில் 63 பேர் பரிதவித்துச் சாகவிடப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …“மதிப்பில்லாத சரக்குகள்!” – வட ஆப்பரிக்காவின் துயரம்!

வறுமையும், வேலையின்மையும், விலைவாசி உயர்வும் ஏழை நாட்டு மக்களைப் பிடித்தாட்டும் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில், அரசியல் மாற்றம் கோரும் மக்கள் போராட்டங்கள் பல நாடுகளில் வெடிக்கத் தொடங்கியுள்ளன. ஊழல் கறைபடிந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், சர்வாதிகாரக் கொடுங்கோலர்களுக்கு எதிராகவும் சாமானிய மக்களின் எழுச்சியானது துனிசியா, எகிப்து என வட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து, தற்போது மேற்காசிய நாடான சிரியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க …சிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு  அதாவது, 1995 டிசம்பர் 17ஆம் நாளன்று மே.வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விமானத்தின் வழியே பாராசூட் மூலம் ஒரு மர்ம கும்பலால் பெட்டி பெட்டியாக நள்ளிரவில் ஆயுதங்கள் போடப்பட்டன. ஏகே47, ஏகே56 ரக அதிநவீன துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ஏவுகணைத் தாங்கிகள், டாங்கி எதிர்ப்புக்குண்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் பிற போர்க்கருவிகள் கிராமங்களில் விழுந்து நாடெங்கும் இச்சம்பவம் பரபரப்பானதால், மையப் புலனாய்வுத் துறைமூலம் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. பாக். உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் சதி என்றும், மே.வங்கத்தில் இயங்கிய ஆனந்தமார்கி பயங்கரவாத கும்பலுக்கு வந்த இரகசிய ஆயுதங்கள் என்றும் பலவாறாக கூச்சல் போட்டது, அன்றைய நரசிம்மராவ்அரசு.

மேலும் படிக்க …புருலியா ஆயுதக் கடத்தல்: “ரா”வின் சதிச்செயல் அம்பலமாகியது

போபால் விஷவாயு கொலை வழக்கில் தொடர்புடைய கே{ப் மஹிந்திரா உள்ளிட்ட எட்டு இந்தியக் குற்றவாளிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த, பத்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றவழக்கை, வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டிக்கக்கூடிய குற்றமுறு கவனக்குறைவான வழக்காக மாற்றி, உச்ச நீதிமன்றம் 1996இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எந்தவிதத்திலும் மீறாமல் போபால் விஷவாயு கொலை வழக்கை விசாரித்துவந்த போபால் பெருநகர நீதிமன்றம், கே{ப் மஹிந்திரா உள்ளிட்ட ஏழு இந்தியக் குற்றவாளிகளுக்கு (விசாரணையின் பொழுது ஒரு குற்றவாளி இறந்துபோனார்) இரண்டு ஆண்டுகள் தண்டனை அளித்த கையோடு, அவர்களுக்குப் பிணையும் வழங்கி கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க …போபால் விஷவாயுப் படுகொலை: மீண்டும் அநீதி!

"சமூகநீதி காத்த வீராங்கனை'யும், "சமத்துவப் பெரியாரும்' மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் "அமைதிப் பூங்கா'வாகிய தமிழகத்தில், சாதிய அடக்குமுறை பேயாட்டம் போடுவதை அண்மையில் நடந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. படித்து முன்னேறிச் சொந்தக் காலில் நிற்க முயன்றால், தாழ்த்தப்பட்டோரை விட்டுவைக்க மாட்டோம் எனக் கருவிக் கொண்டிருக்கின்றனர், ஆதிக்க சாதிவெறியர்கள்.

மேலும் படிக்க …தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகம்: தேவை புதிய பாதை!

அரபு நாடுகளில் ஜனநாயகத்திற்காக நடைபெற்று வரும் போராட்டங்கள், அல்காய்தா போன்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகள் அம்மக்களிடம் செல்வாக்கு செலுத்தவில்லை என நிரூபித்து வரும் வேளையில், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுட்டுக் கொன்றுள்ளது. போர்க் குற்றமாகக் கருதத்தக்க இப்படுகொலையை, ஏதோ வரலாற்றுச் சாதனையைப் போலப் பீற்றி வருகிறது, அமெரிக்கா. மேலும்,  அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றதன் மூலம், அமெரிக்காவில் செப்.11,2001 அன்று நடந்த தாக்குதல்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாகக் கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா.  பின்லேடன் நிராயுதபாணியாக இருந்த நிலையில், அவரை அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சட்டவிரோதமாகச் சுட்டுக் கொன்றதைப் பற்றியோ, இத்தாக்குதலின் பொழுது பாகிஸ்தானின் இறையாண்மை மீறப்பட்டிருப்பது பற்றியோ கேள்வி எழுப்பாத முதலாளித்துவப் பத்திரிகைகள், அமெரிக்க ஆளும் கும்பலைப் போலவே இப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றன.

மேலும் படிக்க …ஒசாமா பின்லாடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்!

தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் "கூட்டுச் சதியாளர்' எனத் துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, கனிமொழியின் பிணை மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, அவர் விசாரணைக் கைதியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க …கனிமொழி கைது: காங் – சி.பி.ஐ கூட்டணியின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது

"மே.வங்கத்தைப் பார்!', "வங்கம் வழிகாட்டுகிறது!' என்று 80களில் சிபிஎம் கட்சியினர் பெருமையுடன் பிரச்சாரம் செய்த முழக்கம், இன்று எதிர்கட்சிகள் சி.பி.எம். கட்சியினரைப் பார்த்து கேலி செய்வதற்கானதாகிவிட்டது. 34 ஆண்டுகாலமாக மே.வங்கத்தில் ஆட்சி செய்த போலி கம்யூனிஸ்டு "இடதுசாரி கூட்டணி' நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத படுதோல்வியடைந்துள்ளதோடு, சி.பி.எம். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்டு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இத்தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளனர். மே.வங்கத்தில் 2006ஆம் ஆண்டில் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் 235 இடங்களை வென்ற "இடதுசாரி' கூட்டணி, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 226ஐ திருணாமுல் காங்கிரசுகைப்பற்றி "இடதுசாரி' கூட்டணியை செல்லாக்காசாக்கியுள்ளது. மே.வங்கம் மட்டுமின்றி, கேரளாவிலும் ஆட்சியை இழந்து, மிகச்சிறிய மாநிலமான திரிபுராவில் மட்டுமே சி.பி.எம். கூட்டணி ஆட்சி நீடிக்கிறது.

மேலும் படிக்க …மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள்: ‘மார்க்சிஸ்’டுகள் மண்ணைக் கவ்வியது ஏன்?

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பனபாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார், ஜெயலலிதா.

மேலும் படிக்க …சமச்சீர் கல்வி ரத்து: சமூக அநீதி!

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ள மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்துடன் இணைந்து கடந்த 24.5.2011 அன்று விருத்தாசலத்தில் "இலவசக் கல்வி உரிமை மாநாடு' நடத்தியது.

மேலும் படிக்க …கொலைவாளினை எடு! கொடியோர் செயல் அறு!! – தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு எதிரான போர்!

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்கவும், அரசு சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை வீழ்த்தவும், கார்ப்பரேட் கொள்ளையர்களையும் ஊழல் அரசியல் வாதிகள் அதிகாரிகளைத் தண்டித்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணிதிரள அறைகூவி ம.க.இ.க் வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக மே நாளைக் கடைபிடித்தன.

மேலும் படிக்க …மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்! கார்ப்பரேட் கொள்ளையர்களைத் தண்டிப்போம்!! – நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் மே தின அறைகூவல்

தமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல்களில், கருணாநிதியின் தி.மு.க.வைத் தோற்கடித்து நிராகரிப்பதற்கு எந்த அளவு தகுதியான காரணங்கள் இருந்தனவோ, அதுபோல ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பதற்கும் காரணங்கள் இருந்தன.

மேலும் படிக்க …ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயாபல்சுகள்

ஈராண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதிக்கட்ட ஈழப் போரில், 2009, மே 18ஆம் நாளில்  பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கொன்றொழித்ததோடு, இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இன்னமும் முட்கம்பியிடப்பட்ட  தடுப் பு  முக õம்களில் அடைத்து வதைத்து வரும் இன அழிப்புப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்குமாறும், இனப்படுகொலைப் போரை வழிகாட்டி இயக்கிய இந்திய மேலாதிக்க அரசையும் சோனியா  மன்மோகன் கும்பலையும் திரைகிழித்தும், ஈழ மக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாளில் தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

மேலும் படிக்க …“போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தூக்கிலிடு!” – தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்

ஜார்கண்ட் மாநிலம்  ஹஸாரிபாக் மாவட்டத்தில் தற்பொழுது வசித்து வரும் ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.  10 ஒ 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் செல்லும் சுரங்கத்திற்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுத்து வரும் குழந்தைத் தொழிலாளி ஜாவிர் குமார். எலி வளையைப் போலப் பூமிக்குள் செல்லும் இச்சுரங்கத்தை மரணக் குழி என்றுதான் சொல்ல முடியும்.  அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து வருவது உடலை வருத்தக்கூடியது மட்டுமல்ல, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும்.  சுரங்கத்திற்குள் பரவிக் கிடக்கும் இருளை விரட்டுவதற்கு ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கு ஒரு இரும்புக் கம்பியையும், வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதற்கு ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர்குமார், தனது வேலையை முடித்துக்கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியே வரும்பொழுது, பொழுது சாய்ந்து இருட்டிவிடும்.  ஒருஇரும்புக் கம்பி, ஒரு கூடை, ஒரு விளக்கு ஆகியவற்றைத் தவிர, வேறெந்த பாதுகாப்புச் சாதனமும் இன்றிச் சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், "சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டால், உயிரோடு புதைந்து இறந்து போவோம்' எனத் தெரிந்தேதான் இந்த வேலையைச் செய்து வருகிறான்.

மேலும் படிக்க …‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!

நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைத்தான் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் குப்பையில் வீசிவிட்டு, பெற்றோர்களையும் மாணவர்களையும் மனரீதியாக வதைத்து மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள பூதங்குடி எஸ்.டி.எஸ். மெட்ரிக் பள்ளி நிர்வாகம். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து இப்பகுதிவாழ் மக்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தி வட்டாட்சியர், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் முன்னிலையில் அத்தனியார் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எழுதிக் கொடுக்கப்பட்ட பின்னரும், பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதாகக் கூறி ரூ. 2,500ஃவீதம் ஒவ்வொரு மாணவரிடமும் கட்டாயக் கூடுதல் கட்டணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

மேலும் படிக்க … எஸ்.டி.எஸ். மெட்ரிக் பள்ளியின் மிரட்டல், வசூல் வேட்டை: கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக…

தாராளமயத்தால் இந்தியா ஒளிர்வதாக ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சித்தரித்துவரும் அதேவேளையில், அத்தாராளமயமாக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் அமைதியாக நரவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட "இந்தியர்'களின் எண்ணிக்கையை விட, சந்தை பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

மேலும் படிக்க … பஞ்சாப்: பிணக்காடாகும் கோதுமைக் களஞ்சியம்

எகிப்து, துனிசியா, பஹ்ரைன், ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள் பற்றி வெளிவரும் பெரும்பாலான செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் அந்நாடுகளில் நடந்துவரும் சர்வாதிகார ஆட்சி, போலீசு ஒடுக்குமுறை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதற்கு அப்பால் செல்லுவதில்லை. குறிப்பாக, இப்போராட்டங்களுக்கும் அந்நாடுகளில் நிலவிவரும் பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் இடையேயுள்ள உறவு பற்றியோ, அந்நாடுகளில் நிலவிவரும் சர்வாதிகார அல்லது மன்னராட்சிக்கும் தனியார்மயம்  தாராளமயத்திற்கும் இடையேயான உறவு பற்றியேர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் இச்சர்வாதிகார அல்லது மன்னராட்சியைப் பயன்படுத்திக் கொண்டு அந்நாடுகளின் விவசாயம், தொழில் மற்றும் நிதித் துறைகளையும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் கைப்பற்றிக்கொண்டு கொழுத்த ஆதாயம் அடைந்துவருவது பற்றியேர் அமெரிக்கா இச்சர்வாதிகார அல்லது மன்னராட்சியைப் பாதுகாப்பதற்காகவே எகிப்திற்கும், துனிசியாவிற்கும், ஜோர்டானுக்கும் பொருளாதார, இராணுவ நிதியுதவிகளை அளித்துவருவது பற்றியோ முதலாளித்துவ அரசியல் விமர்சகர்கள் முழுமையாக எழுதுவதில்லை.

மேலும் படிக்க … அரபு சர்வாதிகாரிகளைத்தாங்கும் அமெரிக்க ஜனநாயகம்

ஜப்பானில் கடந்த மார்ச் 11 அன்று ஏற்பட்ட பூகம்பம்  சுனாமியால், ஃபுகுஷிமா டாய்ச்சி அணு மின்நிலைய அணு உலைகள் பகுதியளவிற்கு உருகிப் போனதையடுத்து, உலகெங்குமே அணு உலைகளின் பாதுகாப்பு குறித்தும், அவை ஏற்படுத்தும் கதிர்வீச்சு அபாயம் குறித்தும் அச்சங்கள் எழுப்பப்பட்டு வருவதையும், அணு மின் உலைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருவதையும் எள்ளளவும் பொருட்படுத்தாது, மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 6 அணு உலைகளுடன் கூடிய மிகப் பெரிய அணுமின்நிலைய வளாகத்தை அமைத்திட மையஅரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அணு மின் நிலையவளாகத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மாண்டுபோனார்.

மேலும் படிக்க … அணு மின் உற்பத்திக்குத் தொழிலாளர் பலிகிடா!

காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்; மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்ற சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக சேவகர்களையும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களையும்கூட அரசுப் படைகள் தாக்கி விரட்டியடித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து செயல்பட்டன.

மேலும் படிக்க … சட்டிஸ்கர்: இந்திய அரசின் போர்க்குற்றங்கள்

பத்திரிகைகளும், தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கு இணையாக முக்கியத்துவம் அளித்து விளம்பரப்படுத்திய நிகழ்ச்சி அண்ணா ஹஸாரே தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் நடத்திய உண்ணா விரதப் போராட்டமாகத்தான் இருக்கும். "ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டத்தை உருவாக்குவதற்கான கமிட்டியை அமைத்து, அதில் குடிமைச் சமூக அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்; அக்கமிட்டி அரசு உருவாக்கியிருக்கும் ஊழல் தடுப்பு ஆணைய வரைவுச் சட்டத்தை மட்டுமின்றி, இது தொடர்பாக ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவாக்கியிருக்கும் வரைவுச் சட்டத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' எனக் குடிமைச் சமூக அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை மைய அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, அண்ணா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

மேலும் படிக்க … ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டம்: புண்ணுக்குப் புனுகு!

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க இராணுவச் செய்திக் குறிப்புகள், அமெரிக்க இராணுவம் செய்து வரும் அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. இவற்றை விக்கிலீக்ஸ{க்குச் சேகரித்துக் கொடுத்த பிராட்லே மேனிங் என்ற அமெரிக்கர், அமெரிக்க அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுடன், கடந்த மார்ச் மாதம் புதிதாக 22 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது, அமெரிக்க இராணுவம். அவற்றில் ஒன்று, எதிரிக்கு உதவி செய்வது  என்ற பிரிவின் கீழ் வரும் குற்றச்சாட்டு. இதன்படி, அமெரிக்க இராணுவ இரகசியங்களை  தகவல்களை அமெரிக்காவின் எதிரிக்குக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் மேனிங். எதிரி யாரென்று குற்றச்சாட்டில் குறிப்பிடப்படவில்லை.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மேனிங்கிற்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதால், இத்தகைய குற்றச்சாட்டின் ஆபத்து குறித்து அமெரிக்க ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. மேனிங் தண்டனைக்குரியவர் எனில், விக்கிலீக்ஸ் எதிரி எனில், இவற்றை பிரசுரித்த அமெரிக்க ஊடகங்களும்கூட எதிரிகளாகி விடுவர். அரசின் அயோக்கியத்தனங்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தினால் மரணதண்டனை என்று சொல்வதன் மூலம், மக்கள் நலன் கருதி ஊடகங்களில் இவற்றை வெளியிடுவதும் மரண தண்டனைக்குரியவைதான் என்று அமெரிக்க இராணுவம் இதன் மூலம் மிரட்டுகிறது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை!

போபாலில், அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சு வாயுத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கதனோர் இன்றும் நடைபிணமாக வாழ்கிறார்கள். நீர், நிலம் அனைத்தும் நச்சுவாயுக் கழிவால் நஞ்சாக்கப்பட்டு பலரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று வருகிறது. 2001இல் யூனியன் கார்பைடை விலைக்கு வாங்கிய டௌகமிக்கல்ஸ் எனும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம், போபால் ஆலையில் 26 ஆண்டுகளாகக் குவிந்து கிடக்கும் நச்சு இரசாயனக்கழிவுகளை அகற்றுவதற்கும், நச்சு வாயுவால் நடைபிணமாகிவிட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் போபால் மருத்துவமனையை நடத்துவதற்கான செலவுகளுக்குப் பொறுப்பேற்பதற்கும் மறுத்து வருகிறது. நட்டஈடு கேட்டும், நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரியும் பல வழிகளில் போராடி வரும் போபால் மக்களை  போலீசின் லத்தி கம்புகளும், சிறைக் கொட்டடிகளுமே எதிர்கொள்கின்றன.

மேலும் படிக்க … டௌ கெமிக்கல்ஸுக்கு சி.பி.எம்.இன் ஆராதனை!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்கைகளால் சுதந்திரமான  நியாயமான தேர்தல் நடந்துள்ளதாகவும், அதனாலேயே தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு பெருமளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் பார்ப்பன ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சித்தரிக்கின்றன.

மேலும் படிக்க … உடுக்கையடிக்கும் பத்திரிகைகள் சாமியாடும் தேர்தல் ஆணையம்

 

நடந்து முடிந்த தமிழக மற்றும் புதுவை சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் போலி கம்யூனிசக் கட்சிகள்,   தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்கள் ஃ கட்சிகள், சாதிய - சமூக நீதிக் குழுக்கள் ஃ கட்சிகள், மற்றும் தலித் குழுக்கள் ஃ கட்சிகள் ஆகியவற்றின் ஓட்டாண்டித்தனத்தையும் பெதருத்தப்பாடின்மையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

 

இத்தேர்தல்களில் நேரடியாகப் பங்கேற்றவை மட்டுமல்ல் இவற்றில் பங்கேற்காத, ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு, தேர்தல்களைப் புறக்கணிக்கும்படி தள்ளப்பட்ட மேற்படி வகைக் குழுக்கள் ஃ கட்சிகள்கூடத் தமது சுயத்தையும் சுயமரியாதையையும் பறிகொடுத்து மக்கள் முன்பு அம்மணமாக நின்றதைக் கண்டோம்.

அரசியல் என்றாலே முதலாளிய ஓட்டுச்சீட்டு அரசியல் என்ற வரம்புக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுள்ள இந்தக் குழுக்கள் ஃ கட்சிகள் தங்கள் நீண்டகால அல்லது குறுகியகால அரசியல் நடைமுறையில் செக்குமாடுகளைப் போலகிவிட்டன. அதனதல், இவை சுயசிந்தனை, சுயபரிசீலனையற்றவைகளாகி, மாற்று அரசியல் பாதை பற்றிய எண்ணமே இல்லாத மலடுகளாகிப் போயுள்ளன.

மேலும் படிக்க … ஒட்டுண்ணிக் கட்சிகளின் கையறுநிலை

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எதிர்பாராதவிதமாகத் திடீர்க் கூட்டணியொன்று உருவானது. அன்று, ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவையின் முன் வைத்தது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மசோதா தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியார்மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

மேலும் படிக்க … ஓட்ட்டுப் பொறுக்குவதில் எதிரெதிர் அணி! கார்ப்பரேட் சேவையில் ஓரணி!

கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி, விருத்தாசலத்திலுள்ள தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கு துறையின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மூட்டைக்கு 8 கிலோ அளவுக்கு எடை கூடுதலாக வைத்து நெல் கொள்முதல் செய்த மோசடியை அறிந்து, அங்கே குவிந்திருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளை அணிதிரட்டி விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 19.1.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் உறுதியளித்தார். வாக்குறுதி அளித்த அந்தப் பெருச்சாளி தப்பியோடியதைத் தொடர்ந்து, அந்நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4000 நெல் மூட்டைகளையும் அதன் அலுவலக பதிவேடுகள், இரு எடைபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றையும் விவசாயிகளின் ஒப்புதலோடு பூட்டிவிட்டு,  அலுவலகத்தைத் தனது கட்டுப்பாட்டில்வி.வி.மு. எடுத்துக்கொண்டது.

மேலும் படிக்க … ஊழல் ஒழிப்பு: ஹசாரேவின் நாடகமும் நக்சல்பாரிகளின் போராட்டமும்

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது நடந்த படுகொலைகள், அத்துமீறல்கள் குறித்துப் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின்படி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க … ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் கொள்ளை வெளியானதிலிருந்து கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு எதிராக கடந்த ஜனவரியிலிருந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வந்த ம.க.இ.க் வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், "இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! இக் கொள்ளையர்களின் சொத்துக்களைப் பறித்தெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்! ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!' என்ற முழக்கத்துடன் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தைத் தமிழகமெங்கும் வீச்சாக நடத்தின. இதையொட்டிப் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தமிழகமெங்கும் அனுமதி மறுத்து போலீசு அடாவடித்தனம் செய்த நிலையில், துண்டுப்பிரசுரம்  தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சானபிரச்சாரத்தை இவ்வமைப்புகள் நடத்தின.

மேலும் படிக்க … “இது கார்ப்பரேட் முதலாளிகளிம் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! ஓட்டுப் போடாதே! புரட்சி செய்” -புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்.

விலை உயர்வு, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி, 2 ஜி, எஸ்@பண்ட், ஆதர்ஷ் உள்ளிட்ட பல ஊழல்கள், கறுப்புப் பணம், சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலப் பறிப்புக்கு எதிரான பழங்குடியின மக்கள்விவசாயிகளின் போராட்டம் எனப் பல்வேறு சமூகபொருளாதார பிரச்சினைகள், நெருக்கடிகள் நாட்டை உலுக்கி வருவதற்கு இடையே 2011 - 12 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வெளியாகியிருக்கிறது. இந்த நெருக்கடிகளைத் தீர்க்க பட்ஜெட்டில் புதிய திட்டங்களும், வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என அலசிப் பார்த்தால், தனியார்மயம்  தாராளமயம் என்ற பழைய செக்குமாட்டுப் பாதையில்தான் பட்ஜெட் பயணம் செய்கிறது. இந்த நெருக்கடிகள் தோன்றவும், முற்றவும் எந்தக் கொள்கைகள் காரணமாக அமைந்தனவோ, அதையே இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்த முனைகிறது, பட்ஜெட்.

மேலும் படிக்க … பட்ஜெட் 2011 12: அதே செக்குமாட்டுப் பாதையில்…

கடந்த பிப்ரவரி 23 அன்று சென்னை  பச்சையப்பன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த போலீசு கும்பல், அக்கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கல், செருப்பு, உடைந்த பாட்டில்களை மாணவர்கள் மீது வீசியெறிந்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. தடியடியில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற அக்கல்லூரி ஆசிரியர்களையும் தாக்கிய போலீசு கும்பல், கல்லூரியின் உடைமைகளையும் சேதப்படுத்தியது. இம்மிருகத்தனமான தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முயன்றதற்காக, பொலீசுப் பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் 300 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்: போலீசின் அவதூறு! ஊடகங்களின் பக்கமேளம்!!

சேலம் மாமாங்கத்திலுள்ள ஜி.டி.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக, கடந்த அக்டோபர் 2007இல் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 53 தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தியபோதிலும் ஆலை முதலாளி அசைந்து கொடுக்காததால், கடந்த ஜனவரியில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பு.ஜ.தொ.மு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர். (பார்க்க: புதிய ஜனநாயகம், பிப்.2011)

மேலும் படிக்க …இதுதான் போலீசு! ஜி.டி.பி. கிரானைட்ஸ் முதலாளிக்கு அடியாளாகச் செயல்படுகிறது சேலம் நகர போலீசு.

இயற்கையின் கொடையான தண்ணீர் அனை வருக்கும் பொதுவானது, அதனை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் உரிமை உள்ளது என்ற நியதிக்கு, முதலாளித்துவம் என்றுமே கட்டுப்பட்டதில்லை. மற்ற வளங்களைப் போலவே தண்ணீரையும் ஒரு விற்பனைப் பண்டமாக்கிவிடவே, அது துடித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் நீர் ஆதாரங்களைக் கைப்பற்ற உலக வங்கியின் துணையுடன் பல வழிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, "இந்தியாவின் வளர்ந்து வரும் தண்ணீர் வர்த்தகத் துறையின் 50 பில்லியன் டாலர் (2,50,000 கோடி ரூபாய்) மதிப்பிலான சந்தையைக் கைப்பற்றுவோம்'' என்ற முழக்கத்துடன் அமெரிக்க கார்பரேட் கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பெங்களூருவிற்கு வந்து சென்றுள்ளது.

மேலும் படிக்க …தண்ணீர்க் கொள்ளையர்களின் படையெடுப்பு!

கடந்த பிப்ரவரி 28 அன்று ஆந்திராவின் சிறீகாகுளம் மாவட்டம், சாந்த பொம்மலி வட்டத்திலுள்ள காகரப் பள்ளியில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எர்ரய்யா, கிரி ராஜேஸ்வர ராவ் எனுமிரு விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். படுகாயமடைந்த 5 பேர் மரணப் படுக்கையில் கிடக்க, 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலப்பறிப்புக்கு எதிராகவும் தமது வாழ்வுரிமைக்காகவும் போராடியதுதான் காகரப்பள்ளி மக்கள் செய்த குற்றம்!

மேலும் படிக்க …தேர்வாய் கண்டிகை – காகரப்பள்ளி: அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஆர்த்தெழுந்த உழைக்கும் மக்கள்!

ஆப்கான், ஈராக்கையடுத்து, அமெரிக்கா தனது ஆக்கிரமிப்புப் போரை லிபியா மீது தொடுத்திருக்கிறது. நேடோ கூட்டணியைச் சேர்ந்த பிரிட்டன், பிரான்சு, இத்தாலி ஆகிய மூன்று ஏகாதிபத்திய நாடுகளும் அமெரிக்காவுக்கு இணையான வெறியோடு இப்போரில் இறங்கியுள்ளன. லிபியாவின் இராணுவ பலத்தை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் நோக்கில், அதன் இராணுவ, கப்பற்படைத் தளங்கள், போர் விமானங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் அனைத்தும் குறிவைத்துத் தாக்கி அழிக்கப்படுகின்றன. இப்போரினூடேயே லிபியாவின் அதிபர் மும்மர் கடாஃபியைக் கொன்றுவிடும் நோக்கமும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கு இருப்பதை, அவரது மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டிக் கொடுத்துவிட்டது.

மேலும் படிக்க …லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் நீட்டிப்பு

"ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்மயமே இதன் ஆணிவேர்! இதனைத் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்று சேர்! கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களைப் பறித்தெடுத்து மக்களுக்குப் பங்கிடுவோம்!', "இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! ஓட்டுப்போடாதே! புரட்சி செய்!' என்ற முழக்கத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கடந்த ஜனவரியிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகச் சூறாவளிப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரி இறுதியிலிருந்து மார்ச் இறுதி வரையிலான ஒரு மாத காலத்தில் நாளொன்றுக்கு ஒரு பொதுக்கூட்டம் என்ற அளவில் தமிழகமெங்கும் 30க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் நடத்தியுள்ளன.

மேலும் படிக்க …“ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!“

புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.

மேலும் படிக்க …தமிழக சட்டமன்றத் தேர்தல்: கார்ப்பரேட் கொள்ளைக்கு ஜனநாயக மூடுதிரை

எவ்வாறு ஈராக்கை எண்ணெய்க்காக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்பு செய்தனவோ, அதேபோன்று தனது கைப்பாவை அரசை நிறுவி எண்ணெய் வளத்தைச் சூறையாடும் நோக்கத்தோடு லிபியாவில் ஏகாதிபத்திய வல்லரசுகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. லிபியாவில் கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவரும் சூழலில், கடாபியின் இராணுவத் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பது, மனித உரிமை  ஜனநாயகத்தைக் காப்பது என்ற பெயரில் ஐ.நா.பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் இத்தாக்குதல்களை நடத்தி வருவதன் மூலம், ஏகாதிபத்திய வல்லரசுகள் வெளிப்படையாகப் போர்க்குற்றங்களைச் செய்து வருகின்றன. ஆக்கிரமிப்புக்குத் துணைநிற்கும் ஐ.நா. மன்றம் ஏகாதிபத்திய வல்லரசுகளின் கைப்பாவை மன்றம் என்பதும், ஜனநாயக வேடம் போட்டுத் திரியும் அமெரிக்க அதிபர் ஒபாமா, மனிதக்கறி தின்னும் மிருகம் என்பதும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

மேலும் படிக்க …“அமெரிக்க ஏகாதிபத்திய நாயே> லிபியாவை விட்டு வெளியேறு!” புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்.

உலகம் முழுவதும் உள்ள அரசுகளின் திரைமறைவுச் சதிகளையும், இரகசியங்களையும் அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் என்னும் இணையதளம், ஈராக் மற்றும் ஆப்கான் போர்களில் அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை அமெரிக்கச் சிப்பாய்கள், தமது இராணுவத் தலைமைக்கு அனுப்பிய குறிப்புகளிலிருந்தே அம்பலப்படுத்தியது. அது மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கும் இடையிலான கள்ள உறவுகள் மற்றும் சதிகளையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

மேலும் படிக்க …விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் வெள்ளை மாளிகையின் விசுவாசி!

 

நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டணப்படி மட்டுமே மாணவர்களிடம் பள்ளிக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும், கட்டண விவரத்தைப் பள்ளிகளில் ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், பல தனியார் பள்ளிகளில் இன்னமும் கூடுதலாகக் கட்டணத்தை வசூலிப்பதும், எதிர்த்துக் கேட்டால் பள்ளியிலிருந்து மாணவரை விலக்கி, நகராட்சிப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஏழைப் பெற்றோரை மிரட்டுவதும் தமிழகமெங்கும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தில் தனியார் கல்விக் கொள்ளையர்களின் கொட்டம் தலைவிரித்தாடிய நிலையில், பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்ட பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் மாவட்டக் கல்வி அதிகாரிக்குப் புகார் மனு கொடுத்து நியாயம் கேட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நீதிபதி கோவிந்தராசன் கமிட்டியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு அனைத்து பள்ளிக்கூட வாயில்களில் விநியோகித்து, பெற்றோரைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி போராட முன்வருமாறு அறைகூவியது. அதன் தொடர்ச்சியாக, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நகரெங்கும் தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட கல்வி அலுவலகத்தை மார்ச் 1 அன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்து எச்சரிக்கை விடுத்தது.

மேலும் படிக்க …கல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்!

ஜப்பானில் நிகழ்ந்துள்ள பேரழிவைக் கண்டு மனித இனம் பேரதிர்ச்சி யில் மூழ்கிப் போயுள்ளது. நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் கோரத்தாண்டவமாடி அந்நாட்டையே நிலைகுலையச் செய்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, இலட்சக் கணக்கானோர் தங்கள் உற்றார் உறவினர், வீடுவாசலை இழந்து அனாதைகளாகிப் பரிதவிக்கின்றனர். இயற்கையின் சீற்றம் தணிந்துவிட்டாலும், இப்போது அணுஉலைகளின் சீற்றத்தால் அந்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அணு உலைகள் வெடித்துச் சிதறியதால், அணுஆயுதப் போரின் பேரழிவைச் சந்தித்த ஜப்பான் இன்று, அதைவிடக் கொடூரமான தாக்குதலால் அவலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …அணு உலை வெடிப்பு: பேரழிவில் ஜப்பான்! மரணவாயிலில் இந்தியா!

 

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, திருவண்ணாமலை அருணாச்லேஸ்வரர் கோயிலில் ஜவான், திருமஞ்னேம், நி@வத்தியம், ”யம்பாகி, ஓதுவார், யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்குப் பணியாளர்களை நியமிப்பதற்கான @வலைவாசூப்பு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டது.  அவவேலைவாசூப்பு அறிவிப்பில் திருமஞ்னேம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதிபடைத்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்தப் பணியிடங்கள் சாமி சிலைகளைத்திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும்.  பார்ப்பனர்கள் அல்லாத வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால், "புனிதம்' கெட்டுவிடும் என்ற பார்ப்பன சாதித் திமிரையும் இந்துக் கோயில்களில் நிலவிவரும் தீண்டாமையையும் உறுதி செய்வதுதான் இந்தக் குறிப்பின் நோக்கமாகும்.

 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.அரங்கநாதன், ""திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையைத் தூண்டுவதாகவும், ஆலயத் தீண்டாமையைக்கடைப்பிடிப்பதாகவும், அரசியல் சாசனச் சட்டத்தின் 14, 16 மற்றும் 17 ஆகிய பிரிவுகளுக்கு எதிராகவும் இருப்பதால், அந்தப் பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற அரசின் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார்.  இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு விசாரித்த உயர்நீதிமன்றம், "இத்தகைய பணிகளைப் பார்ப்பனர்கள்தான் செய்யவேண்டும் என்ற பழக்கவழக்கத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 13 அங்கீகரிக்கிறது. இதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்குத் தடை விதித்துள்ளது' என்ற காரணங்களைக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

மேலும் படிக்க …“பிரசாத லட்டு பிடிப்பதையும் அவாள்தான் செய்ய வேண்டும்!” ஆலயத் தீண்டாமையைப் பாதுகாக்கும் நீதித்துறை

இந்தியாவின் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியும் சட்டிஸ்கர் மக்களின் அன்புக்குரிய மருத்துவருமான டாக்டர் பிநாயக்சென்னுக்கு அம்மாநில கூடுதல் அமர்வு நீதிமன்றம் விதித்துள்ள ஆயுள் தண்டனையையும் பாசிச அடக்கு முறையையும் எதிர்த்துத் தமிழகமெங்கும் பிரச்சாரம், போராட்டங்களை மனிதஉரிமை பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

மேலும் படிக்க …“டாக்டர் பிநாயக் சென்னுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை உடனே ரத்து செய்து விடுதலை செய்!” மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம்.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின்பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது. மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்விசாரணை நடந்ததால், மோடி சட்டப்படியே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ "வரும், ஆனா வராது' என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அமைந்து விட்டது.

மேலும் படிக்க …குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை

இந்தியக் குடும்பத்தின் வருமானத்தில் மருத்துவச் செலவானது கணிசமான தொகையை விழுங்குகிறது. உழைக்கும் மக்களுக்கோ மருந்துக் கடைகள்தான் மருத்துவமனைகளாக இருக்கின்றன. விலைவாசி விண்ணைத் தொடும் இந்தக் காலத்தில், மக்களால் ஒரு வேளைச் சோற்றைக் தவிர்க்க முடிந்தாலும்கூட மருந்தைத் தவிர்க்க முடிவதில்லை. சமீபத்தில் "லேன்செஸ்ட்'' என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வில், இந்தியாவின் மொத்த மருத்துவச் செலவில் 78 சதவீதத்தை மக்கள் தங்களது சொந்தப் பணத்திலிருந்து செலவிடுகின்றனர் என நிறுவப்பட்டுள்ளது. இதுவே மாலத்தீவில் 14மூ, பூட்டானில் 29மூ, தாய்லாந்தில் 31மூஆக உள்ளதாக அவ்வாய்வு தெரிவிக்கிறது.

மேலும் படிக்க …மருந்தின் விலையும் இனி கசக்கும்!

தென்னை மரங்கள் அசைந்தாட, பாக்கு மரங்கள் தலையசைக்க, மாமரத் தோப்புகள் நிறைந்த கொங்கண் பிராந்தியத்திலுள்ள மதுபான் கிராம மக்களின் கண்களில் அச்சமும் கவலையும் ஆட்கொண்டுள்ளது. அக்கிராமத்தை அடுத்துள்ள கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அரபிக்கடலை வெறித்துப் பார்த்து விம்முகின்றனர். இந்த நிலமும் நீரும் கடலும் ஆறும் காய்களும் கனிகளும் வாழ்வும் வளமும் இனி அவர்களுக்குச் சொந்தமில்லை. இப்பகுதிவாழ் மக்களின் வாழ்வைப்பறிக்க இடியாய் இறங்கியுள்ளது ஜெய்தாபூர் அணு மின்திட்டம்.

மேலும் படிக்க …ஜெய்தாபூர் அணுமின் திட்டம்: ஏகாதிபத்திய சேவைக்கு மக்கள் பலிகிடா!

தென்கொரியாவைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ நிறுவனம், ஒரிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை மற்றும் அவ்வுருக்காலையோடு சேர்ந்து அமையவுள்ள மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகியவற்றுக்காக விவசாய, வன நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் விலக்கிக் கொண்டுவிட்டது. இதனையடுத்து, இக்கையகப்படுத்தலுக்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பழங்குடியின மக்களும், மீனவர்களும் நடத்தி வரும் போராட்டமும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசை போஸ்கோவின் கூலிப் படையெனச் சாடியுள்ள அம்மக்கள், "தங்கள் பிணங்களின் மீதேறிப் போய்தான் நிலங்களைக் கையகப்படுத்த முடியும்' எனச் சூளுரைத்துள்ளனர்.

மேலும் படிக்க …போஸ்கோவிற்கு அனுமதி: கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குப் பட்டுக்கம்பளம்

கடந்த ஜனவரியில், உலக நாடுகளின் மேற்பார்வையில் நடந்த கருத்துக் கணிப்புத் தேர்தலில் ஏறத்தாழ 99 சதவீத வாக்குகளைப் பெற்று, வடக்கு சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடாவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. வரும் ஜூலை 9ஆம் தேதியன்று ஜூபா நகரைத் தலைநகராகக் கொண்ட தெற்கு சூடான் அதிகாரபூர்வமாகத் தனி நாடாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடான தெற்கு சூடானைத் தமிழின வாதிகள் வாழ்த்தி வரவேற்கின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகப் பெரிய நாடான சூடானிலிருந்து தெற்கு சூடான் தனியாகப் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடந்துள்ளதையொட்டி, இது போலவே நாளை ஈழம் மலரும் என்று பல தமிழினவாதிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க …தெற்கு சூடான் விடுதலை: ஏகாதிபத்தியங்களின் பகடைக்காயானது

துனிசியாவிற்கு அடுத்து எகிப்திலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டங்களையடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்துவந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து விலகி, தலைநகர் கெய்ரோவிலிருந்து வெளியேறிவிட்டார். எகிப்தையடுத்து, சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் அதிபர்கள் - மன்னர்களைப் பதவி விலகக் கோரும் போராட்டம் இப்பொழுது அல்ஜீரியா, மொராக்கோ, வடக்கு சூடான், ஏமன், லிபியா, ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் பரவியிருக்கிறது.

மேலும் படிக்க …எகிப்து மக்கள் எழுச்சி: விழலுக்கு இறைத்த நீரானதேன்?

திருவாரூர் அருகிலுள்ள அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர், அரசு பள்ளிக் கல்வித்துறையின் விதிமுறைகளுக்கு மாறாக, மாணவர்களிடம் கூடுதல் கட்டணமும் கட்டாய நன்கொடையும் வசூலித்ததற்கு எதிராக அப்பள்ளி மாணவர்கள் 11.2.2011 அன்று ஆர்ப்பாட்டத்துடன் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க …அரசுப் பள்ளியின் கட்டணக் கொள்ளை: மாணவர் போராட்டத்தின் மீது அடக்குமுறை!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள சான்ஃபிரான்ஸிஸ்கோ நகருக்கு அருகே இயங்கி வந்த ட்ரைவேலி பல்கலைக்கழகம், அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டங்களை மீறியிருப்பதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, அத்தனியார் பல்கலைக்கழகத்தை இழுத்து மூடிவிட்டது.  அப்பல் கலைக்கழகத்தில் படித்துவந்த 1,000க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மீது அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பதாகக் குற்றஞ்சுமத்தி, அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் அவர்களை விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க …அமெரிக்க அநீதி!

தமிழ் விரோத  தமிழின விரோத பார்ப்பன  பாசிச ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் தேடித்தரும் திருப்பணியை மேற்கொண்டு, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி கிளம்பியிருக்கிறார்கள், சீமான் முதலான சில ஈழ ஆதரவாளர்கள். அ.தி.மு.க.வுக்கு இளைஞர் அணி, மகளிர் அணி இருப்பதைப்போல, ஈழ ஆதரவு அணியாக சீமானின் நாம் தமிழர் இயக்கம் மாறிவிட்டது. ஓட்டுக்கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இலட்சிய இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இத்தகையோரின் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் சந்தி சிரித்து, இப்போது ஒரு பிரிவு தமிழினவாதிகளாலேயே சீமான் விமர்சிக்கப்படுகிறார்.

மேலும் படிக்க …தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும்

மதுரை அவனியாபுரம் மண்டேலா நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியன்று கண்மாயில் தண்ணீர் குடித்த 100க்கும் மேற்பட்ட மாடுகள் வாயில்நுரை தள்ள துடிதுடித்து மாண்டு போயுள்ளன. கிடைபோட்ட இடத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவுக்கு மாடுகள் இறந்து கிடந்த கோரமான காட்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்பகுதியிலுள்ள லேன்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பெனார் ஸ்பெஷாலிட்டி புரொடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனுமிரு இரசாயனத் தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள் இக்கோரக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை நடத்திய கால்நடை மருத்துவர்கள் ஊகங்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க …மதுரை அருகே ஒரு போபால்: மாடுகளைப் பலி கொண்ட நச்சு ஆலை.

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இந்திய மேலாதிக்கம் மற்றும் இந்திய ஓட்டுப் பொறுக்கிகளை அம்பலப்படுத்தியும், மீனவர்களுக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை கோரியும், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் சுவரொட்டி, துண்டறிக்கை, ஆர்ப்பாட்டங்கள் போன்ற வடிவங்களில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. இந்திய அரசிடம் மீனவர்கள் பாதுகாப்புக் கோருவது பயனற்றது. சிங்களக் கடற்படையைத் தமிழக மீனவர்கள் திருப்பிச் சுட்டுக்கொல்லாதவரை நடந்துள்ள கொலைகளுக்கு நீதி கிடைக்காது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க …“இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு மீனவர்களைப் பலியிடாதே! மீனவர்களின் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தும் உரிமையைச் சட்டப்படி வழங்கு! கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டு!” பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொதுநல வழக்கு.

கடந்த ஜனவரியில் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஜெயக்குமார் சிங்களக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதற்கு முன், எல்லை தாண்டி வந்த சிங்களக் கடற்படை ஜெகதாப்பட்டினம் மீனவர் வீரபாண்டியனைச் சுட்டுக் கொன்றது. சிங்களக் கடற்படையால் இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுக்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. கொலை (இபிகோ 302), கொலை முயற்சி (இபிகோ 307) உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சிங்களக் கடற்படைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு வழக்கில்கூடத் தமிழக போலீசு இதுவரை மேல்விசாரணை நடத்தவில்லை.

மேலும் படிக்க …தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவதுதான் பிரச்சினையா?

ஆடையின்றி வெற்று உடம்போடு நிற்கும் சிறுவனின் மார்பிலே மூவர்ணக் கொடி குத்தியிருக்கும் காட்சி அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடக் கூடியதல்ல. அது சுதந்திரத்துக்கும் வறுமைக்கும் இடையே நிலவும் முரண்நிலையை மட்டும் சொல்லவில்லை. பெற்ற குழந்தைக்கு உணவளிக்கவும் இயலாமல் போன மக்கள் ஒருவேளை உணவுக்காக, அங்கன்வாடிகள் அல்லது சத்துணவுக் கூடங்களுக்கு அனுப்பினால் அங்கும் கூடத் தேசிய அடையாளங்கள் திணிக்கப்படுவதையும் குறிக்கிறது.   பால்குடி மறந்தவுடன்  நம் பிள்ளை களுக்குப் போதிக்கப்படும் கருத்து, தேசம், தேசபக்தி அல்லது தேசப்பற்று, தேசிய உணர்வு, தேசியப் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு  இவை போன்றவை.

மேலும் படிக்க …தேசத் துரோகிகளின் தேசபக்தி!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடாவும், அம்பானியும் அடித்த இமாலயக் கொள்ளை அம்பலமாகி, இன்னும் அதன் முதல்நிலை விசாரணைகூட முடியவில்லை, அதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலையே விஞ்சிடும் எஸ்பேண்ட் ஊழல் அம்பலமாகியிருக்கிறது.

மேலும் படிக்க …தனியார்மயம் தாராளமயம் ஊழல்மயம்

இந்தியத் தரகுமுதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியும், அமெரிக்காவின் வளர்ப்புப் பிராணியுமான திருவாளர் மன்மோகன் சிங், தான் ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்பதையும், கழுத்தை அறுத்தாலும் உண்மையைக் கசியவிடாத கல்லுளிமங்கன் என்பதையும் அண்மையில் தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்களுக்கு அளித்தபேட்டியின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். தனியார்மய  தாராளமயக் கொள்கையை ஆதரித்து நிற்கும் தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மொன்னையான கேள்விகளைக் கேட்க, "2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தனக்கு எவ்விதத் தொடர்புமில்லை 'என்று கூசாமல் புளுகியிருக்கிறார், மன்மோகன் சிங்.

மேலும் படிக்க …கல்லுளிமங்கன்!

"ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்மயமே இதன் ஆணிவேர், இதனைத் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களைப் பறித்தெடுத்து மக்களுக்குப் பங்கிடுவோம்!' என்ற முழக்கத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள்  கடந்த ஜனவரியிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகச் சூறாவளிப்பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …“”ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை: இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!” கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சார இயக்கம்.

சென்னையிலுள்ள அரசகல்லூரிகள், அரச உதவி பெறும் கல்லூரிகளில் படித்துவரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த டிசம்பர் 21 அன்று சென்னை அண்ணா சாலையில் நடத்திய சாலை மறியல் போராட்டம், அம்மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காகத் தமிழக அரசால் நடத்தப்படும் நல விடுதிகள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

மேலும் படிக்க …ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

பிரிட்டிஷ் அரசு உயர்கல்விக் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளதையும், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 40% அளவுக்குக் குறைத்துள்ளதையும், ஏறத்தாழ 70 சதவீத ஏழை மாணவர்கள் பயனடைந்து வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டதையும் எதிர்த்து கடந்த நவம்பர் மாத இறுதியில் பிரிட்டனில் மாணவர்கள் நடத்திய போராட்டம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ""முதலாளிகளின் நெருக்கடிகளுக்கு நாங்கள் பணம் செலுத்த மாட்டோம்'' என்ற முழக்கத்தோடு மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஆதரித்ததோடு, அவற்றை முறைப்படுத்தி நடத்தவும் வழிகாட்டினர். லண்டன் மட்டுமின்றி பிரிட்டனின் அனத்து பெருநகரங்களிலும் இப்போராட்டம் தீயாகப் பரவியது. பிரிட்டிஷ் மாணவர் போராட்டத்தை ஆதரித்து பிரெஞ்சு மாணவர்கள் பாரீஸ் நகரிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராடினர். கிரேக்க நாட்டின் மாணவர்கள் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐரோப்பிய கண்டத்தில், நாடுகளின் எல்லைகளைக் கடந்து முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிராக போராட்டம் பரவி வருகிறது.

 

 

செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2002ஆம் ஆண்டிலிருந்து 2004 வரையிலான காலத்தில் காஷ்மீரில் 177 முறை கைதிகள் முகாமுக்குச் சென்று 1491 கைதிகளைச் சந்தித்து, தனிப்பட்ட முறையில் 1296 பேரிடம் பேட்டியெடுத்துள்ளனர். இவற்றில் 852 பேர் தாங்கள் கடுமையாக வதைக்கப்படுவதாகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாகவும், மொத்தத்தில் 171 பேர் தங்கள் மீது ஒன்று முதல் ஆறு வடிவங்களிலான சித்திரவதைகள் ஏவப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மின் அதிர்ச்சி கொடுப்பது, உத்தரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு வதைப்பது, கைதிகளின் கால்களின் மீது பலகையை வைத்து அதன் மீது நாற்காலியைப் போட்டு, அதில் சிறை அதிகாரிகள் அமர்ந்துகொண்டு கால்களை நசுக்குவது, கால்களை 180 டிகிரிக்குத் திருப்பி ஒடிப்பது, தண்ணீர் சித்திரவதை, பாலியல் வன்முறை எனப் பல்வேறு கொடிய சித்திரவதைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க …உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியா, காஷ்மீரில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம் விக்கிலீக்ஸ் மூலம் கசியத் தொடங்கியுள்ளது.

பின்லாடன் போலவே, விக்கிலீக்ஸ் எனும் தகவல் ஊடக நிறுவனத்தின் நிறுவனரான ஜூலியன் அசாங்கேவும் அமெரிக்க வல்லரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்படவேண்டும், கொல்லப்பட வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் பிரமுகரான சாரா பாலின் கொக்கரிக்கிறார். அமெரிக்க உள்துறைச் செயலரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்கத் தேச நலனுக்கு எதிராக இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றத்தை இழைத்துள்ளதாகக் கூறி, அசாங்கேவுக்கு எதிராக அமெரிக்கத் தேசிய வெறியைக் கிளறிவிட முயற்சிக்கிறார்.

மேலும் படிக்க …விக்கிலீக்ஸ்: உண்மை சுடுகிறது! அமெரிக்கா அலறுகிறது!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் முத்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாளன்று தாழ்த்தப்பட்ட அருந்ததி பிரிவைச் சேர்ந்த இளம் பொறியாளர் சாமிதுரை மீது உள்ளூர் வேளாளக் கவுண்ட ஆதிக்க சாதிவெறியர்கள் சாதியைச் சொல்லி இழிவுபடுத்திக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலுக்கு மின்வாரிய அதிகாரிகள் ஆதரவாக நின்றுள்ளனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனின் தூண்டுதலால், போலீசார் சாமிதுரை மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் பொய்வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின்வாரியமும் சாமிதுரையைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது.

மேலும் படிக்க …காங்கேயம் – முத்தூர் மின்வாரிய அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா?

""பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் திரளும் இடங்களில் குண்டு வைப்பார்கள்; மக்கள் திரளுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக அவர்களைச் சுட்டுக் கொல்வார்கள்'' இவை பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு முதலாளித்துவ ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் எளிய இலக்கண வரையறை. இந்த வரையறையின்படி பார்த்தாலும், இன்று உலகின் மிகக் கொடிய பயங்கரவாதி அமெரிக்காவாகத்தான் இருக்கமுடியும்.

மேலும் படிக்க …ஆளில்லா விமானத் தாக்குதல்கள்: அமெரிக்கப் பயங்கரவாதிகளின் போர்க்குற்றங்கள்

""அரசின் உணவு தானியக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் ஒரு தானியத்தைக்கூட ஏழை மக்களுக்கு இலவசமாகத் தர மாட்டேன்'' என அடித்துப் பேசி வருகிறார், மன்மோகன் சிங். இன்னொருபுறமோ, உ.பி. மாநிலத்தில் ரேஷன் கடைகளின் மூலமும் சமூக நலத் திட்டங்களின் மூலமும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு விநியோகித்திருக்க வேண்டிய இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான உணவு தானியங்களைக் கடத்திக் கொண்டு போய், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்றுள்ள ஊழல் நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அலைக்கற்றை ஊழல் பிரபலமான அளவிற்கு, உ.பி. மாநிலத்தில் நடந்துள்ள இந்த உணவு ஊழல் ஊடகங்கள் மத்தியில்கூட விரிவாகப் பேசப்படவில்லை.

மேலும் படிக்க …உ.பி.உணவு ஊழல்: ஏழைகளின் பெயரால் நடந்த பகற்கொள்ளை!

""கார்கில் போரில் இறந்துபோன இராணுவச் சிப் பாய்களுக்காகக் கட்டப்பட்ட ஆதர்ஷ் கூட்டுறவு சங்க வீடுகளை, அரசியல்வாதிகளும், முன்னாள் இராணுவத் தளபதிகளும், உயர் அதிகாரிகளும் விதிமுறைகளை மீறியும் மாற்றியும் வளைத்துப் போட்டுக் கொண்டார்கள்; அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு சுற்றுப்புறச் சூழல் விதிகள், கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம், நகர்ப்புற வளர்ச்சி விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது'' என்பதைத் தாண்டி, ஆதர்ஷ் கூட்டுறவு சங்க ஊழல் பற்றி ஊடகங்கள் எழுதுவது கிடையாது. ஆனால், ஆதர்ஷ் ஊழல் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் முறைகேடுகள், ஊழலை மட்டும் குறிக்கவில்லை. அதையும் தாண்டி, மும்பய் மாநகரில் நிலவும் குடியிருப்புப் பிரச்சினைகள் பற்றிய உண்மைகளையும்; மும்பய் மாநகரின் பொது இடங்களை ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் உதவியோடு தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு வருவதையும் உணர்த்துகிறது.

மேலும் படிக்க …ஆதர்ஷ் ஊழல்: அம்பலமாகும் உண்மைகள்

குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களா, சுற்றுச்சூழல் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்று ஏழை நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஏகாதிபத்தியவாதிகள், ஏழை நாடுகளில் இத்தகைய விதிகளை மீறிப் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொடூரமாகச் சுரண்டுவதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அழகழகான லிவைஸ் ஜீன்ஸ்களாகட்டும், ஆயத்த ஆடைகளை அள்ளிச் செல்ல அழைக்கும் வால்மார்ட், டெஸ்கோ முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களாகட்டும், இவற்றின் அழகுக்கும், நேர்த்திக்கும் பின்னே உறைந்திருப்பது, ஏழை நாடான வங்கதேசத் தொழிலாளர்களின் ரத்தம்.

மேலும் படிக்க …வங்கதேசம்: பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைத் தேசமா?

""இரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனி பழைய முறையில் பணப் பட்டுவாடா செய்வதற்கு உதவ முடியாது '' என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் மாத இறுதியில் அறிவித்தது. ""இரானுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பது கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே, பணப் பட்டுவாடா செய்வதற்கு மாற்று வழியை உடனடியாக ஏற்பாடு செய்யாவிட்டால், அடுத்த ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்'' எனக் குறிப்பிட்டு, உள்நாட்டு முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்பொழுது, அமெரிக்கா, ""இது குறிப்பிடத்தக்க நடவடிக்கை'' எனக் கூறி, இந்தியாவைப் பாராட்டியிருக்கிறது.

மேலும் படிக்க …அமெரிக்கா கோலெடுத்தது இந்தியா ஆடியது

அடுக்கடுக்கான இலஞ்சஊழல் கதைகளாலும், விலைவாசி உயர்வின் தாக்குதலாலும் நடுத்தர வர்க்கம் பிரமைதட்டிப் போயிருக்கையில், அதன் அறிவுஜீவிப் பிரிவினரை உலுக்கி இருக்கிறது, பிரபல சமூக சேவை மருத்துவரும், மனித உரிமைகள் ஆர்வலருமான பிநாயக் சென் அவர்களுக்கு மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தி, வாழ்நாள் கடுங்காவல் தண்டனை விதித்து சட்டிஸ்கார் மாநில, ரெய்ப் பூர் நகர விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

மேலும் படிக்க …பிநாயக் சென் மீதான வழக்கும் தண்டனையும்: காட்டு வேட்டையின் நீட்டிப்பு!

அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கடந்த நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த முதுபெரும் மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான், நீரழிவு நோயினால் கடந்த டிசம்பர் 30 அன்று தனது 81வது வயதில் காலமாகிவிட்டார்.

மேலும் படிக்க …கே.ஜி.கண்ணபிரான் (1929-2010) மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க …ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு: நீதிமன்றமா? காவிமன்றமா?

சேலம் மாமாங்கத்திலுள்ள ஜி.டி.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக, கடந்த அக்டோபர் 2007இல் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 53 தொழிலாளர்கள் திடீர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சட்டவிரோத வேலை நீக்கத்துக்கு எதிராகவும், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிப்பதை உணர்த்தியும் மாவட்ட ஆட்சியரிடமும் தொழிலாளர் துறையிடமும் பலமுறை மனு கொடுத்தும் கூட, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி எனத் தொழிலாளர்கள், தமது குடும்பத்தோடு பல போராட்டங்களை நடத்திய போதிலும் ஆலை நிர்வாகமோ, அதிகார வர்க்கமோ அசைந்து கொடுக்கவில்லை.

மேலும் படிக்க …சேலம் ஜி.டி.பி. நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடிப் போராட்டம்!

கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று கோவை என்.டி.சி. மில் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்துள்ள கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் பெருவெற்றி பெற்றது (பார்க்க: பு.ஜ. ஜனவரி 2011 இதழ்). இம்மகத்தான வெற்றியைப் பறைசாற்றியும், தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் போராட்ட உணர்வையும் ஊட்டும் வகையிலும் கடந்த ஜனவரி 9ஆம் நாளன்று கோவை பீளமேடு புதூர் சந்தை மைதானத்தில் இத்தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க … செங்கொடி வரலாறு திரும்புகிறது! கோவை மீண்டும் சிவக்கிறது! – கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்க வெற்றிவிழா பொதுக்கூட்டம்

""மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெ டிப்பை மலேகானில் நடத்தினோம்... இதற்காக 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்... அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது... சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்...'' ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம். ···

மேலும் படிக்க … மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தப்பிப் பெய்த மழைதான் வெங்காய விலையேற்றத்துக்குக் காரணம் என மைய அரசு கூறி வருகிறது. ஆனால், அதனைவிட, மன்மோகன் சிங் அரசின் ஏற்றுமதிக் கொள்கைதான் வெங்காயத்தின் விலையேற்றத்திற்கு முக்கியமான காரணம் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாக அம்பலமாகிவிட்டது.

மேலும் படிக்க …விலைவாசி உயர்வு: மறுகாலனியாதிக்கக் கொள்கையின் விளைவு!

கடந்த ஜனவரியில் நடந்த துனிசிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி, அந்நாட்டின் சர்வாதிகார அதிபரான பென் அலி, குடும்பத்தோடு நாட்டை விட்டே தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அடக்குமுறையும் கைதுகளும் துப்பாக்கிகளும் கவச வண்டிகளும் மக்கள் சக்தியின் முன் மண்டியிடும் என்பதை இப்பேரெழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

மேலும் படிக்க …துனிசியா: சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி!

மின்சாரம்:

2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய மின்சாரச் சட்டத்தின்படி மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்த மின்சார வாரியங்கள் கலைக்கப்பட்டு, உற்பத்தி, பகிர்மாணம், விநியோகம் என மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டன. ஆகஸ்ட் 2003 இல் தில்லியின் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டு டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனங்கள், அரசிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ1.32 வீதம் மின்சாரத்தை வாங்கி அரசு நிறுவனமான குடிநீர் வாரியத்துக்கு

மேலும் படிக்க …கார்ப்பரேட் கொள்ளைக்கேற்ற அரசின் கொள்கைகள்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த, கால்நடை மருத்துவப் பட்டம் பெற்ற 26 வயதான இளம் தோழர் சதாசிவம், கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று எதிர்பாராத விபத்தில் சிக்கி அகால மரணமடைந்து விட்டார்.

 

கல்லூரிப் பருவத்தில் மார்க்சியலெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவாளராகச் செயல்பட்ட அவர், வேலை கிடைக்காமல் தவித்த போதிலும் புரட்சிகர உணர்வு குன்றாமல் ஊக்கமுடன் செயல்பட்டார்.

 

புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற அவரது புரட்சிகர உணர்வை நெஞ்சிலேந்தி, அவரது புரட்சிகர கனவை நனவாக்கத் தொடர்ந்து போராட உறுதியேற்போம். மனித உரிமை பாதுகாப்பு மையம், நாமக்கல்.

ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் விற்கப்பட்ட பொருள் என்ன, வாங்கப்பட்ட பொருள் என்ன என்பது குறித்துப் புரிந்து கொள்வது பெரும்பான்மை மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆயிரம் ரூபாய்க் காகிதத்தைக் கண்ணால் பார்த்திராத மக்களைக் கொண்ட நாட்டில், கோடிக்கு எத்தனை பூச்சியங்கள் என்பதைக்கூட நிச்சயமாகச் சொல்லத் தெரியாத மக்களைக் கொண்ட நாட்டில், கொள்ளையடிக்கப்படும் தொகை எத்தனை கோடியாக இருந்தால்தான் என்ன? ஒரு விதத்தில் பார்த்தால், கொள்ளையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதுவே திருடர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகி விடுகிறது.

மேலும் படிக்க …ஸ்பெக்ட்ரம்: கொள்ளையே கொள்கை!

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசியப் பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான 7 மில்களிலும் (கோவை5, கமுதி1, காளையார்கோவில்1) டிசம்பர் 18 ஆம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்தது) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க … கோவை என்.டி.சி. தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு. மாபெரும் வெற்றி!

தனியார்மயமும் தாராளமயமும் புகுத்தப்பட்டபோது,  இக்கொள்கைகள் ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போகின்றன என ஆளும் வர்க்க எடுபிடிகள் அனைவரும் தம்பட்டமடித்தனர். ஆனால்  அதற்கு மாறாக, கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள, பல்லாயிரம் கோடிகளை  விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.

மேலும் படிக்க … தனியார்மயம்: ஊழலை உற்பத்தி செய்யும் சாக்கடை

அலைக்கற்றை ஊழலின் தொகை கற்பனைக்கு எட்டாததாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருப்பதே, அந்த ஊழல் மக்கள் மத்தியில் பெரும் முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால், தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் போர்த்தந்திர ரீதியான முக்கியத்துவம்தான் ஏகாதிபத்தியங்கள் இதன் மீது தங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

மேலும் படிக்க …சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது”

என்று தனது கொள்கையான பாசிசத்துக்கு விளக்கம் அளித்தான் முசோலினி.

மேலும் படிக்க …ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!!

"இன்று எங்கும் எதிலும் இலஞ்சஊழல் நிரம்பியுள்ளது. அது அரசியல் அல்லது அதிகார வர்க்க வரம்போடு நின்று விடவில்லை. இலஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டதென்று ஒரே ஒரு நிறுவனத்தைக் கூட என்னால் சொல்ல முடியாது. சில சமீபகாலச் செய்திகளைப் பார்க்கும்போது செய்தி ஊடகமும் கூட இலஞ்சஊழல் சாக்கடையில் இருந்து விடுபட்டதாக இல்லை. எனக்கு எதிராக உட்கார்ந்திருக்கும் செய்தி ஊடகத் துறையைச் சேர்ந்த உங்களில் யாரும், முன்வினைப் பயன் காரணமாக, இலஞ்ச ஊழலை விசாரிக்கும் லோகாயுத அமைப்பின் விசாரணை வரம்புக்குள் வராததால் தப்பிவிட்டீர்கள்'' என்று செய்தி ஊடகத்தாரின் முகத்துக்கு நேராகக் காறி உமிழ்ந்தார், கர்நாடகா லோகயுதா தலைவர் சந்தோஷ் ஹெக்டே.

மேலும் படிக்க …கார்ப்பரேட் கொள்ளை – ஊழல் மறைந்துள்ள உண்மைகள்!

ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பதாகக் கூறப்படும் நான்கு தூண்களில் மூன்றை நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், பத்திரிகை ஆகியவற்றை அலைக்கற்றை ஊழலும், வெளியே கசியவிடப்பட்டுள்ள நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களும் சந்தி சிரிக்க வைத்துவிட்ட நிலையில், இப் போலி ஜனநாயகத்தை ஊழலில் இருந்து காத்து ரக்ஷிக்கும் கடவுளர்களாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகின்றனர். இவ்வூழலை விசாரிக்கும் சாக்கில் நீதிபதிகள் உதிர்த்து வரும் விமர்சனங்களைக் கொட்டை எழுத்துகளில் வெளியிட்டு, அதன் மூலம் நீதிமன்றம் பற்றிய பிரமையை மக்களின் மனதில் திணிக்கின்றன ஊடகங்கள்.

மேலும் படிக்க …உச்ச நீதிமன்றம்: ஆளும் வர்க்கம் அணைத்தும் போட்ட பீடி!

ஓசூர் அருகிலுள்ள பாகலூரில், அண்மைக்காலமாக விவசாய நிலங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து தொங்கி, மின்சாரம் தாக்கிப் பல விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். இது பற்றிப் பலமுறை முறையிட்டும் மின்சார வாரியம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதோடு, மீட்டர் பொருத்த இலஞ்சம் வாங்கி இழுத்தடிப்பது, டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் சீரமைக்காமல் புறக்கணிப்பது, மின்வாரிய ஊழியர்கள் அல்லாமல் புரோக்கர்களை வைத்துச் சீரமைப்பது முதலான முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

மேலும் படிக்க …காக்கை, குருவிகளா விவசாயிகள்?

அயோத்தி தீர்ப்பு வெளியானதும், அலகாபாத் நீதிமன்றத்தின் பார்ப்பனப் புரட்டைத் திரைகிழித்தும் இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராட அறைகூவியும் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்ட  ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், தாங்கள் செயல்படும் பகுதிகளில் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. கடந்த 4.12.10 அன்று சிவகங்கை பேருந்து நிலையம் அருகே ஆர்.எம்.ஆர். திருமண மண்டபத்தில் ""அயோத்தி தீர்ப்பு முதல் இராமன் பாலம் வரை'' என்ற தலைப்பில் பார்ப்பன சதிகளை அம்பலப்படுத்தி ம.க.இ.க. சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மேலும் படிக்க …அயோத்தி தீர்ப்புக்கு எதிராக… -புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம்.

இந்திய அரசு நடுநிலையானதாகவும், சுயேச்சையானதாகவும், சமூகத்திலுள்ள அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. மேலும், அரசு செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினரின் நலன்களைச் சார்ந்து இயங்குவதைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நீதிமன்றம் போன்றவை கொண்ட அமைப்பென்றும் கூறிக் கொள்கிறார்கள் இந்தப் போலி ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள். வெளித்தோற்றத்திற்கு உண்மையைப் போலத் தெரியும் இந்த மோசடியை, அலைக்கற்றை ஊழலும், அதையொட்டி கசியவிடப்பட்டுள்ள நீரா ராடியா ஒலிநாடாக்களும் பாமரன்கூடப் புரிந்துகொள்ளும்படி அம்பலப்படுத்திவிட்டன. இந்திய அரசு, ஆளும் வர்க்கமான தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக எப்படியெல்லாம் சேவை செய்கிறது என்பதை இவ்விவகாரம் காட்டிவிட்டது.

மேலும் படிக்க … ராடியா விவகாரம்: “லாபியிங்” சட்டபூர்வமாகிறது! ஊழல் ஒழிகிறது!!

உலக மக்களின் எதிரியான அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகையை எதிர்த்து நாடெங்கும் இடதுசாரி இயக்கங்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் கடையடைப்புப் போராட்டங்களையும் நடத்தின. அமெரிக்கக் கொலைகார யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சு வாயுவால் நடைபிணங்களாகி விட்டவர்கள் போபாலில் ஒபாமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அமெரிக்க மான்சாண்டோவின் பி.டி. பருத்தியால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போண்டியாகி தற்கொலைக்குத் தள்ளப்பட்டதை எதிர்த்து, கணவனை இழந்து விதவைகளாகிவிட்ட விவசாயத் தாய்மார்கள் ""கொலைகார அமெரிக்காவின் அதிபரே, திரும்பிப் போ!'' என்று விதர்பா பிராந்தியத்திலுள்ள ஹிவாரா கிராமத்தில் பேரணியும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.

 

உலக மேலாதிக்க பயங்கரவாத அமெரிக்க வல்லரசின் அதிபரான ஒபாமாவின் வருகையை எதிர்த்துத் தமிழகமெங்கும் ம.க.இ.க வி.வி.மு பு.மா.இ.மு பு.ஜ.தொ.மு பெ.வி.மு. ஆகிய அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு, இந்திய நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றிய நவம்பர் 8ஆம் தேதியன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தேரில் இந்தியாவைப் பிணைத்து விசுவாச அடியாளாக உறுதிப்படுத்துவதோடு, அமெரிக்க முதலீட்டுக்கு கதவை அகலத் திறக்குமாறு இந்தியாவை நிர்ப்பந்தித்து, நாட்டையும் மக்களையும் காவு கொள்ளும் ஒப்பந்தங்களை நிறைவேற்ற வந்துள்ள ஒபாமாவின் வருகையை எதிர்த்தும், அவருக்கு வரவேற்பு அளிப்பது நாட்டுக்கே அவமானம் என்பதை விளக்கியும், அமெரிக்க கைக்கூலி மன்மோகன் சிங்கின் சதிகளை அம்பலப்படுத்தியும், அமெரிக்காவின் தலைமையில் நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதை எதிர்த்தும் திருச்சி புத்தூர் நாலு ரோட்டிலும், தஞ்சை பனகல் கட்டிடம் அருகிலும், கடலூர் மஞ்சக்குப்பம் ஏ.எல்.சி. சர்ச் அருகிலும், சென்னை குரோம்பேட்டையிலும், உடுமலை மையப் பேருந்து நிலையம் அருகிலும், கோவை செஞ்சிலுவைச் சங்கம் அருகிலும் இவ்வமைப்புகள் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

புரட்சிகரப் பாடல்களோடும் விண்ணதிரும் முழக்கங்களோடும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், உழைக்கும் மக்களிடம் ஒபாமா பற்றிய மாயையைத் திரைகிழித்துக் காட்டிப் போராட அறைகூவுவதாக அமைந்தன. பு.ஜ. செய்தியாளர்கள்.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதலாக நாளொன்றுக்கு 900 கோடி ரூபாய் செலவில் மூன்றுநாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார், அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்திய ஆளும் வர்க்க ஊடகங்கள் ஏதோ தேவதூதர் பூமிக்கு எழுந்தருளியதைப் போல வானளாவப் புகழ்ந்து, அவரைத் துதிபாடின. சிறுவர்களுடன் சேர்ந்து அவர் ஆடிய டப்பாங்குத்து டான்சையும், அவரது மனைவி பாண்டி விளையாடியதையும் அவரது "எளிமை'யையும் வியந்தோதி, ஒபாமாவின் இந்திய வருகையால் அமெரிக்க முதலீடு அதிகரித்து நாட்டில் பாலாறும் தேனாறும் பாய்ந்தோடப் போவதைப் போல, ஒரு கீழ்த்தரமான சினிமாவை இந்திய ஊடகங்கள் விளம்பரப்படுத்தின.

 

இந்திய வருகைக்கு முன்னதாக ""நியூயார்க் டைம்ஸ்'' நாளேட்டில் ஒபாமா எழுதிய கட்டுரையில், ""நமது ஒவ்வொரு பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கும் அமெரிக்காவில் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்தியச் சந்தையில் தங்கு தடையின்றி நாம் நுழைவதற்கான சூழலை உருவாக்குவதே எனது பயணத்தின் நோக்கம். அமெரிக்காவில் வேலை வாய்ப்பைப் பெருக்குவதே உடனடி இலட்சியம்'' என்று குறிப்பிட்டுள்ளதிலிருந்து அவரது இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் நோக்கத்தை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.

 

தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு வளரும் நாடுகள் சந்தையை அகலத் திறந்து விட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ""உலக வர்த்தகக் கழக விதிகளின்படி, இந்த விசயத்தில் சம அளவிலான போட்டி இருக்க வேண்டும்; எனவே, உங்கள் நாட்டு விவசாய உற்பத்திக்கும் விளைபொருட்களுக்கும் நீங்கள் கொடுக்கும் மானியத்தைக் குறையுங்கள்'' என்கின்றன வளரும் நாடுகள். இது அமெரிக்காவுக்குச் சங்கடமாக இருக்கிறது. இதனால்தான் கொல்லைப்புறமாக இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுடன் பேரங்கள், ஒப்பந்தங்கள் மூலம் இச்சிக்கலிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது, அமெரிக்கா.

 

எனவேதான், ""அமெரிக்காவில் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுமிடையே கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் அடுத்த ஜந்தாண்டுகளில் இரட்டிப்பாகும்'' என்று அறிவித்த ஒபாமா, ""அமெரிக்காவின் 12வது வர்த்தகப் பங்குதாரராக உள்ள இந்தியா, முதன்மைப் பங்குதாரராக வருவதற்கு வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டும்'' என்று நிபந்தனை விதித்து இந்தியஅமெரிக்க வர்த்தகக் கவுன்சில் கூட்டத்தில் பேசினார். அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான கிராவ்லி, அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணம் எதிர்பார்த்த அனைத்தையும் சாதித்து விட்டது என்று ஊடகங்களுக்கு விளக்கியுள்ளார். மொத்தத்தில் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை இந்தியாவின் தலையில் பகுதியளவுக்கு ஏற்றிவிட்டு, அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அமெரிக்க முதலாளிகளின் ஆதாயத்திற்காகவுமே ஒபாமா இந்தியாவுக்கு வந்து ஒப்பந்தங்களைப் போட்டுள்ளார்.

 

இந்த ஒப்பந்தங்களின்படி, சில்லறை வணிகம், வங்கி காப்பீடுதுறை, விவசாயம், உயர்கல்வி முதலானவற்றில் அமெரிக்க முதலீட்டுக்குக் கதவை அகலத் திறந்து விடுவதன் மூலம் இந்திய நாடு முற்றாக அமெரிக்காவின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொள்ளும். அமெரிக்காவின் வால்மார்ட்டும், மான்சாண்டோவும், தீவட்டிக் கொள்ளை நிதி நிறுவனங்களும், டப்பா பல்கலைக்கழகங்களும் வரை முறையின்றி நாட்டைச் சூறையாடும். அமெரிக்காவின் அயல்பணி (அவுட்சோர் சிங்) களைச் செய்து வந்த இந்தியாவுக்கு இனி வரம்புகள் நீடிக்கும். இவை தவிர, இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து தனியார் பங்கேற்புடன் 1000 கோடி டாலர் தொகையுடன் நிதித் தொகுப்பு உருவாக்குவது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நீடித்த பசுமைப் புரட்சிக்கு ஒத்துழைப்பு என ஒபாமா வருகையையொட்டி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 

இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்களைவிட, இராணுவ மற்றும் அணுஉலை தொடர்பான ஒப்பந்தங்கள் முக்கியமானது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அணு உலைகளை அமைப்பதிலும் இந்திய அரசு அந்நிய முதலீடுகளை அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய நாடுகளில் கழித்துக் கட்டப்பட்ட அணு உலைகளை இந்தியாவில் நிறுவி அதில் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பிலிருந்து அந்நிய முதலாளிகளைக் கழற்றிவிடும் வகையில் புதிய சட்டத்தையும் அண்மையில் மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று ஒபாமாவும் மன்மோகன் சிங்கும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், விபத்து ஏற்பட்டால் அணுஉலையை வழங்கிய அமெரிக்க முதலாளிகள் மீது அணுஉலையை இயக்குபவர்கள் எந்த வகையிலும் இழப்பீடு கோர முடியாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்ட்ரிக் ஆகிய அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளைப் பெறத் தடையாகவுள்ள அணுவிபத்து இழப்பீடு சட்டத்திலுள்ள விதிகளை, வருமாண்டிற்குள் இந்தியா திருத்தியமைத்துக் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தெற்காசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டங்களுக்குத் துணை நிற்கும் நம்பகமான அடியாளாக இந்தியாவை நிலைநாட்டுவதே அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலாகும். ஒபாமாவின் ஒப்பந்தங்களின்படி, இந்திய விமானப்படைக்கு நீண்டதூரம் டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு செல்லக் கூடிய அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான சி17 ரக விமானங்கள் பத்து இந்தியாவின் தலையில் கட்டப்பட்டுள்ளன.

 

அமெரிக்காவின் காலனியாதிக்கக் கொடுங்கோன்மை தொடரும் ஆப்கானிஸ்தானில், அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் இந்தியாவுக்கு கூடுதல் இடமளிக்கப்படும் என்று ஒபாமா கூறியுள்ளார். ஆப்கானில் நேரடியாக நேட்டோ படைகளுடன் இணைந்து போர்த் தாக்குதல் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடாது என்றாலும், ஆப்கான் தேசியப் பாதுகாப்புப் படைக்குப் பயிற்சியளிக்கும் வேலையில் ஈடுபடும். தரகுப் பெருமுதலாளிகள் ஆப்கானில் கட்டுமான மறு சீரமைப்புப் பணிகள், இராணுவப் பயிற்சி முதலானவற்றின் மூலம் ஆதாயமடைய முடியும் என்பதால் இத்திட்டத்தைப் பேருற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.

 

இராணுவத் தளவாட உற்பத்தியில் நேரடி அந்நிய முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக இந்தியா உயர்த்தியிருப்பதும், வரும் மார்ச் மாதத்திற்குள் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் கோடிகள் மதிப்பில் இராணுவத் தளவாடங்களை ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் இணைத்துப் பார்த்தால், இந்தியா எவ்வாறு தெற்காசிய வட்டகையில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் பங்களா நாயாக வளர்க்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

இந்தியாவுக்கு வந்த ஒபாமா, பாகிஸ்தானை கண்டித்து அடக்கிவைப்பார், ஜ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர இடம்பெற உதவுவார் என்ற ஆளும் வர்க்கங்களின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய்விட்டது. ஜ.நா. மறுசீரமைப்பு செய்யப்படும்போது நிரந்தர இடத்தைப் பெற, இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்து எடுக்கும் நிலைப்பாடுகள்தான் உதவும் என்கிறார், ஒபாமா. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு அடங்க மறுக்கும் ஈரான், வடகொரியா, கியூபா முதலான நாடுகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை இந்தியா விசுவாசமாக ஆதரிக்க வேண்டும்; நாளை இன்னும் இதர நாடுகள் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளையும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

 

அமெரிக்க மேலாதிக்க வல்லரக்கும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகுக்கும் விசுவாச அடியாளாகச் செயல்படுவதன் மூலம் அந்நிய முதலீடுகளை ஈர்த்து, இந்தியப் பெருமுதலாளிகள் தெற்காசிய வட்டகையில் தமது சந்தையை விரிவுபடுத்தி, நாட்டை "வல்லரசாக்க' விழைகிறார்கள். அதற்காக நாட்டை விற்கவும் அவர்கள் தயங்குவதில்லை. ஒபாமாவின் வருகையும் போடப்பட்டுள்ளள ஒப்பந்தங்களும் இந்த உண்மையை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

 

• மனோகரன்

கடலூர்நகரமா, இல்லை நரகமா எனக் கேட்குமளவுக்கு, அந்நகரில் அரைகுறையாக இருந்துவந்த அடிக்கட்டுமான வசதிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுவிட்டன. பாதாளச் சாக்கடை அமைப்பது என்ற பெயரில் அந்நகரையே பாதாள உலகமாக மாற்றிவிட்டது, நகராட்சி நிர்வாகம். பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக நகரில் ஒரு இடம்கூடப் பாக்கியின்றி அனைத்துச் சாலைகளையும் தெருக்களையும் நகராட்சி குதறிப் போட்டிருப்பதால், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், கழிவு நீர் வரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நகரமெங்கும் சீர்கெட்டுக் கிடக்கின்றன.

 

மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில்கூட நகரவில்லை. 66 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், அதிகார வர்க்கத்திற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக மாறிவிட்டது.

 

இதுவொருபுறமிருக்க, ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் போன்ற வேலைகளுக்குச் செல்லும் அடித்தட்டு மக்கள் வாழ்ந்து வரும் தானம் நகர், நவநீதம் நகர், சங்கர நாடார் தெரு, கம்மியம்பேட்டை ரோடு ஆகிய பகுதிகள் நகராட்சி நிர்வாகத்தால் அடியோடு புறக்கணிக்கப்பட்டுவிட்டன. அப் பகுதிகளில் ஒழுங்கான சாலை கிடையாது, கழிப்பறை கிடையாது, மின்சாரம் கிடையாது. பன்றித் தொழுவங்களைவிடக் கேடுகெட்டுப் போன இடத்தில் உழைக்கும் மக்கள் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர்.

 

இந்த அவலத்தைக் கண்டித்தும், பாதான சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரியும் கடலூர் நகரில் செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் புதிய ஜனநாயகக் கட்டுமான தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.11.2010 அன்று, தானம் நகர் பெட்ரோல் பங்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இப்புரட்சிகர அமைப்புகளைச் Nர்ந்த தோழர்கள் மட்டு மின்றி, கடலூர் நகரப் பேச்ரிமைக் கழகத்தைச் சேர்ந்த திரு.செல்வம், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் செந்தில்குமார், ம.தி.மு.க.வின் 24 ஆவது வட்டப் பிரதிநிதி திரு.கே.துரை ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

 

இதே கோரிக்கையை முன்வைத்து கடலூர் அனைத்து மோட்டார் வாகனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 23.11.2010 அன்று கடலூர் நகரில் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திலும் இப்புரட்சிகர அமைப்புகள் பங்கு கொண்டன. முழுஅடைப்பு நாளன்று பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலுவையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மன்னாதனையும் பேரணி தொடங்குவதற்கு முன்பே போலீசார் கைது செய்து இழுத்துச் சென்றனர். அதன் பின், பேரணியைப் பாதிவழியிலேயே மறித்த போலீசார், 300க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். எனினும், பேரணியில் கலந்துகொண்ட பலர் போலீசாரிடமிருந்து தப்பித்து, ஜவான்ஸ் பவன் அருகே சாலை மறியலில் ஈடுபட்டு போலீசாரின் முகத்தில் கரியைப் பூசினர். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி சட்டபூர்வமான வழியில் போராடுவதைக்கூட தி.மு.க. அரசால் சகித்துக் கொள்ள முடிவதில்லை என்பதைத்தான் இந்த அடக்குமுறை எடுத்துக் காட்டுகிறது. பு.ஜ. செய்தியாளர், கடலூர்.

இந்தியா, இசுரேல், ரசியா, துருக்கி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அந்நாடுகளின் நிலவரம் பற்றி அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்த இரகசியக் கடிதங்களை, விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

 

இந்த இரகசிய ஆவணங்கள் அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்களையும், அதன் திமிரையும் வெட்டவெளிச்சமாக்கும் என்பதால், அமெரிக்க அரசு விக்கலீக்ஸ் நிர்வாகத்தை மிரட்டி இந்த ஆவணங்கள் வெளிவராமல் தடுக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துபோனது.

 

அமெரிக்கத் தூதரகங்கள் பல்வேறு நாடுகளில் உளவு அமைப்பைப் போலச் செயல்பட்டு வருவதும், ஜ.நா. மன்றத்தின் உயர் அதிகாரிகளைக்கூட அமெரிக்கா உளவு பார்த்துவருவதும் இப்பொழுது எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி அம்பலமாகிவிட்டது.

 

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வந்த அணுசக்தி ஒப்பந்தம், இராணுவக் கூட்டுறவு குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பியிருக்கும் கருத்துகள் இதன் மூலம் அம்பலத்துக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, இந்திய அரசின் அமெரிக்க அடிமைத்தனம் மேலும் அம்பலமாகக் கூடும் என்பதால் இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சுகளும் அதிகாரிகளும் அரண்டு போய்யுள்ளனர்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானிலும், ஈராக்கிலும் கடந்த பத்து வருடங்களாகப் பேரழிவுப் போர்களை நடத்திவருகிறது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான அல்கயிதா அமைப்பை ஒழிப்பதையும், அவர்களுக்கு ஆதரவு தரும் தலிபான்களை ஒடுக்குவதையும் காரணம் காட்டி முதலில் ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. பின்னர், பேரழிவு ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறது எனப் பச்சையாகப் பொய் சொல்லி, ஈராக் மீது போர் தொடுத்தது.

 

முடிவின்றி நீண்டுகொண்டே செல்லும் இந்தப் போர்களில் அமெரிக்கக் கூட்டணிப் படையினர் பல மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் செய்துள்ளனர். அபுகிரைப் சிறைச் சித்திரவதை துவங்கி, குவாண்டனாமோ சிறைச்சாலை வரை அமெரிக்காவின் பல போர்க்குற்றங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய குற்றச்சாட்டுகளை மறுப்பது, திசை திருப்புவது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு, அவற்றிலிருந்து தப்பி வந்திருக்கிறது அமெரிக்க அரசு. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய அளவில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை நிருபிக்கின்ற அந்நாட்டு இராணுவத்தின் இரகசிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

சர்வதேச அளவில், பல்வேறு நாட்டு அரகளின் இரகசிய ஆவணங்களை அம்பலமாக்கும் 'விக்கிலீக்ஸ்' எனப்படும் இணையதளம், கடந்த ஜூலை மாதம் 'ஆப்கான் போர்க் குறிப்புகள்' என்ற பெயரில், அமெரிக்க இராணுவத்தின் நாற்பதாயிரம் இரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதே இணையதளம் கடந்த அக்டோபர் இறுதியில், 'ஈராக் போர்க் குறிப்புகள்' என்ற பெயரில், 4 இலட்சம் ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

 

இந்த ஆவணங்கள் அனைத்தும் போர்க்களத்தில் அமெரிக்க இராணுவ வீரர்களால் பதிவு செய்யப்பட்டு, ஒன்றாகத் தொகுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இரகசியக் குறிப்புகள். 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும், அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இதில் பதிவாகியுள்ளன. மேலும் அமெரிக்கக் கூட்டணிப்படையினரின் நடவடிக்கைகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் குற்றங்கள் பலவும் இதில் பதிவாகியுள்ளன. தனது மேலாதிக்க நலன்களுக்காக அமெரிக்க அரசு எத்தகைய கொடிய இழிவான செயல்களிலும் ஈடுபடும் என்பதை இந்த ஆவணங்கள் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துகின்றன.

 

விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் கோப்புகள், ஆப்கானில் இருபதாயிரம் பொது மக்களும், ஈராக்கில் 66 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன. சர்வதேச பொதுமன்னிப்பு சபை உள்ளிட்ட அமைப்புகள் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை இலட்சங்களில் கூறுகின்றன. அவற்றைக் காட்டிலும் தற்போது விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்திருக்கும் அமெரிக்க இராணுவத்தின் கொலைக்கணக்கு மிகவும் குறைவுதான் என்றபோதிலும், தனது இராணுவத்தால் தொகுக்கப்பட்டிருக்கும் படுகொலைப் பட்டியலைக்கூட இருட்டடிப்பு செய்து, கொலைக்கணக்கை அமெரிக்க இராணுவம் மேலும் குறைத்துக் காட்டியிருப்பது விக்கி லீக்ஸ் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

 

இதுவரை உலகத்துக்குத் தெரிந்திராத பல படுகொலைகளையும் இந்த ஆவணங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானில், பிரான்ஸ் நாட்டு இராணுவத்தால் ஒரு பேருந்து நிறைய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இரண்டு மாதம் கழித்து அதே போன்றதொரு சம்பவத்தில் பலர் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.

 

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்சின் நிருபர்கள் இருவரை ஈராக்கில் அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தியதும், அந்த நிருபர்களுக்கு உதவ ஓடி வந்த ஒரு சிறுமி உட்பட அப்பாவி பொதுமக்கள் பலரையும் அமெரிக்கச் சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும் வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அதே ஹெலிகாப்டர் வீரர்கள், கையை உயர்த்திச் சரணடைய வந்த பொதுமக்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

 

ஆப்கானில் அமெரிக்காவிற்கு எதிராகப் போரிடும் தலிபான் தலைவர்களைக் குறிவைத்துக் கொல்வதற்கென பிரத்யேகமாக ஒரு இராணுவக் குழுவையே அமெரிக்கா அமைத்துள்ளது. ""அதிரடிப்படை 373'' எனப்படும் இந்தக் குழு, தலிபான் தலைவர்களைக் கொல்வது என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை கொன்றுவருவதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. தலிபான் தலைவர்கள் ஏதாவதொரு நகரத்தில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தால் உடனே அந்த நகரத்தை நோக்கி ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி ஜம்பதாயிரம் அடி உயரத்திலிருந்து குண்டுகளைக் கொட்டி மொத்தப் பகுதியையும் உருத்தெரியாமல் அழித்துவிடுவது என்பதை ஒரு வழிமுறையாகவே அமெரிக்க இராணுவம் கடைப்பிடித்து வருகிறது. இத்தகைய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கில் அப்பாவி ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு வெளிப்படையாக அப்பாவிகளைக் கொன்று குவித்தது மட்டுமல்லாமல், மக்களிடையே பிரிவினையைத் தூண்டி நிரந்தரமாக அவர்களை மோதவிடும் சதியையும் அமெரிக்கா செய்து வருகிறது. ஈராக்கில் சியா, சன்னி பிரிவினரிடையே பகைமையைத் தூண்டும் வகையில் சன்னி பிரிவினரின் மீது தாக்குதல்களைக் கட்டியமைத்துள்ளது. பாக்தாத் நகரின் சேரிகளிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட சியா பிரிவு குண்டர்களைக் கொண்டு ""ஓநாய் படை'' என்ற கொலைகாரப் படையை உருவாக்கி, சன்னி பிரிவினரின் மீது தாக்குதல் தொடுத்து, கலவரங்களைத் தூண்டி வருகிறது. இலத்தின் அமெரிக்க நாடுகளில் செய்ததைப் போன்று இப்படையினருக்கும் சித்திரவதை செய்வதற்குத் தனியாகப் பயிற்சி கொடுத்து வளர்க்கிறது.

 

"ஓநாய் படையினரின்'' கையில் சிக்குவதைவிடச் செத்துவிடலாம் என நினைக்கும் வகையில் அப்படையினரின் சித்திரவதைகள் கொடூரமாக இருக்கின்றன. கண்களைத் நோண்டுவது, கைகால்களில் ஓட்டை போடுவது. விரல்களை ஒவ்வொன்றாக வெட்டுவது, உயிருடன் தோலை உரிப்பது எனக் காட்டுமிராண்டித்தனமான சித்தரவதைகளை, அமெரிக்கா அப்படையின் மூலம் செய்து வருகிறது. ஓநாய்ப் படையினரின் அட்டகாசத்தின் காரணமாக சியா பிரிவு மக்களுக்கு எதிராக சன்னி பிரிவினர் தாக்குதல் தொடுத்ததும், இதன் விளைவாக இரத்த ஆறு ஓடியதும் இராணுவ ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

 

ஈராக்கின் ஓநாய்ப் படையைப் போன்றே ஆப்கானின் பாதுகாப்புப் படையையும் அமெரிக்கா பயிற்றுவித்துள்ளது. அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக் கொல்வது முதல் போதைமருந்து கடத்தல், கோஷ்டி மோதல் வரை அமெரிக்கப் படைகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கான் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய பல அட்டூழியங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

சித்திரவதை குறித்தும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் சர்வதேச அளவில் எழும் கண்டனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, இது போன்ற கூலிப்படையினரை அமெரிக்கா பயிற்றுவித்து வளர்க்கிறது என்ற உண்மையும் இந்த ஆவணங்கள் மூலம் ஆதாரபூர்வமாக அம்பலமாகியிருக்கிறது. மேலும், இவர்கள் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கு 20,000க்கும் அதிகமான புகார்கள் வந்தபோதும் அவற்றைப் பற்றி விசாரிக்காமல், சம்பந்தப்பட்ட படையினரிடமே அந்தப் புகார்களை அனுப்பிவிடும்படி அமெரிக்க அரசே இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

 

ஈராக் போரை நியாயப்படுத்த அமெரிக்கா கூறிய பொய்களில் ஒன்று, அல்கயிதாவிற்கு சதாம் உசேன் ஆதரவளித்தார் என்பதாகும். இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு அல்கயிதாவினர் ஈராக்கிலிருந்துதான் திட்டமிட்டனர் என்ற பொய்யை அமெரிக்கா பிரச்சாரம் செய்தது. ஆனால், உண்மையில் சதாம் ஆட்சி செய்தவரை ஈராக்கில் அல்கயிதா இயக்கமே இல்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின்னர் தான் அங்கே அல்கயிதா இயக்கமே தோன்றியது. 'மெசபடோமியா அல்கயிதா' என்ற பெயரில் இயங்கிவரும் அந்த அமைப்பு, அமெரிக்காவிற்கு உதவும் சியா பிரிவு மக்களைக் கொல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. சியா மற்றும் சன்னிப் பிரிவினர் தமக்குள் அடித்துக் கொண்டு சாவதை உத்திரவாதப்படுத்துவதற்காக அல்காய்தாவின் நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவம் மறைமுகமாக ஊக்குவித்திருக்கிறது என்பதையும் விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்துகிறது.

 

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஜ.எஸ்.ஜ., ஆப்கானில் உள்ள தலிபான்களின் ஒரு பிரிவைக் கட்டுப்படுத்துகிறது என்பது அப்பட்டமாகத் தெரிந்த நிலையிலும் அமெரிக்கா அதனை அனுமதித்து வருகிறது என்பதும் இந்த ஆவணங்களில் பதிவாகியுள்ளது. தீவிர வாதத்திற்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுக்கும் நிதி உதவிகளை, ஜ.எஸ்.ஜ., தலிபான்களுக்கு மடைமாற்றிவிடுகிறது என்பதும்; பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல் கயானி, தலிபான்களுக்கு உதவும் ஜ.எஸ்.ஜ. பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார் என்பதும் தெளிவாகத் தெரிந்திருந்தும், ஒபாமாவின் அரசு அவரது பதவியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க பாகிஸ்தானை நிர்பந்தப்படுத்தியது.

 

பாகிஸ்தானைப் பயன்படுத்தி, அமெரிக்க ஆதரவு "நல்ல தலிபான்களை' உருவாக்க அமெரிக்க எடுத்துவரும் முயற்சிகளும் ஆதாரபூர்வமாக அம்பலமாகியிருக்கின்றன. ஜப்பான் உள்ளிட்ட கூட்டணி நாடுகளின் உதவியோடு முப்பது கோடி டாலர் நிதியைத் திரட்டி, தலிபான்களின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வழிக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இம் முயற்சிக்குத் தடையாக இருக்கும் தலைவர்களைக் கொல்லவும், அமெரிக்காவை ஆதரிக்கும் இரண்டாம் மட்டத் தலைவர்களை மேலே கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. தான் கொடுக்கின்ற நிதியுதவி மற்றும் ஆயுதங்களின் மூலம் தலிபான்கள் அமெரிக்கச் சிப்பாய்களைக் கொல்கின்றனர் என்பது தெரிந்தேதான் இந்த அழுகுணி ஆட்டத்தை அமெரிக்க அரசு ஆடிவருகிறது.

 

இரண்டாம் உலகப்போருக்குப் பின் நாஜிப்படையின் போர்க்குற்றங்களை நூரம்பர்க் விசாரணை ஆதாரங்களுடன் நிரூபித்து, குற்றவாளிகளைத் தண்டித்தது. இன்றோ,மற்றவர்கள் யாரும் ஆதாரம் தந்து நிரூபிக்கும் தேவையே இல்லாமல், எல்லாப் போர்க் குற்றங்களுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றன விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க இராணுவ ஆவணங்கள். இருப்பினும், பிற ஏகாதிபத்தியங்கள் அமெரிக்காவுடன் கூட்டுக் களவாணித்தனத்தில் ஈடுபட்டிருப்பதாலும், தட்டிக் கேட்பாரில்லாத தனிப்பெரும் ரவுடியாக அமெரிக்கா உலகை மேலாதிக்கம் செய்து வருவதாலும், இந்த போர்க் குற்றங்களுக்காக அமெரிக்காவை விசாரணைக் கூண்டில் ஏற்ற முடியாத நிலைமை உள்ளது.

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜுனியர் புஷ், தனது பதவிக்கால நினைவுகளைத் தொகுத்து எழுதியுள்ள ""தீர்மானக் குறிப்புகள்'' என்ற நூலில், ""உலகளவில் தடை செய்யப்பட்டுள்ள சித்திரவதைகளை ஏவிவிட்டதன் மூலம்தான் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், இலண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பயங்கரவாதிகள் தாக்கத் திட்டமிட்டிருந்ததை அறிந்து கொள்ள முடிந்தது'' எனக் குறிப்பிட்டு, இத்தகைய போர்க் குற்றங்கள் அனைத்தையும் நியாயப்படுத்தியிருப்பதோடு, இதற்கு எதிராக எழும் கண்டனங்களை எள்ளி நகையாடியிருக்கிறார். தற்பொழுது அமெரிக்காவின் உள்துறை செயலராக இருக்கும் ஹிலாரி கிளிண்டன், ""இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்துவது அமெரிக்கத் தேச நலனுக்கு எதிரானது'' எனக் குறிப்பிட்டு, விக்கிலீக்ஸ{க்கு எதிராக அமெரிக்கத் தேசிய வெறியைத் தூண்டிவிட முயலுகிறார். கருப்பின அதிபர் ஒபாமாவோ இந்தப் போர்க் குற்றங்களைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், ஆப்கான் மீதும், பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகள் மீதும் நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னைவிடத் தீவிரப்படுத்தி வருகிறார்.

 

 

விக்கி லீக்ஸ் ஆவணங்களை அமெரிக்க அரசு பொய்யென்று மறுக்கவுமில்லை; அதற்காக வெட்கித் தலைகுனியவுமில்லை மாறாக, இவ்வாறு உண்மைகளை வெளியிடுவதைக் குற்றம் எனத் திமிருடன் கூறி, இதனை வெளியிட்ட விக்கி லீக்ஸ் நிறுவனர் அசங்கி மீது பாலியல் வன்புணர்ச்சி வழக்கொன்றைப் புனைந்திருக்கிறது. மேலும், அவரைத் தேடிப் பிடிக்க சர்வதேசப் பிடியாணையையும் பிறப்பித்திருக்கிறது. குற்றத்தை அம்பலப்படுத்தியவர் ஓடி ஒளிந்துகொண்டிருக்க, குற்றவாளி அமெரிக்காவோ அவரைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

 

• அழகு ..

திருச்சி திருவரங்கம் கோவிலில் முக்கிய திருவிழாக்களின் பொழுது, வேதவியாச பட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ""பிரம்மரத மரியாதை'' செய்யப்படும். இப்பட்டர்களுக்கு மாலைகள், சந்தனம் கொடுத்து, பல்லக்கில் அமர வைத்து, யானை முன்னே செல்ல குடை மற்றும் தீப்பந்தங்கள் பிடித்து, அப்பல்லக்கை மனிதர்களே தூக்கிச் சென்று அவர்களை வீட்டில் கொண்டுபோய் விடுவதுதான் பிரம்மரத மரியாதை.

 

தமிழகத்தில் கைரிக்ஷா இழுப்பது ஒழிக்கப்பட்ட பின்னும், மனிதர்களை மனிதர்களே தூக்கிச் செல்லும் இந்த இழிவை, மதச் சம்பிரதாயம், குருவுக்குச் சிஷ்யன் செலுத்தும் மரியாதை என்ற பெயரில் நியாயப்படுத்தி வருகிறது, பார்ப்பனக் கும்பல்.

 

இந்த இழிவைச் சகித்துக் கொள்ள முடியாத பல்லக்குச் சுமக்கும் கோவில் ஊழியர்கள் இனி பல்லக்குத் தூக்க முடியாது எனக் கலகத்தில் இறங்கினர். இதனையடுத்து திருவரங்கம் கோவிலின் இணை ஆணையர் ஜெயராமன், ""கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்குத் தூக்கமாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் தங்களின் சொந்த பல்லக்கில் அமர்ந்துகொண்டு, அதனைத் தூக்கிச் செல்ல தாங்களே வெளியாட்களை நியமித்துக் கொள்ளலாம்'' என ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து, லெட்சமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பட்டர்கள் இணை ஆணையர் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர்.

 

பார்ப்பனக் கும்பல் திணித்துவரும் இந்த இழிவுக்கு எதிரான கோவில் ஊழியர்களின் போராட்டத்தை அறிந்த திருச்சி நகரைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், சுயமரியாதைமிக்க சமூக ஆர்வலர்களும் கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாகத் திரண்டனர். குறிப்பாக, மனித உரிமை பாதுகாப்பு மையம், ""இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி'' மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்து, பார்ப்பனக் கும்பலுக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

 

வழக்கு நிலுவையில் இருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு, கடந்த 17.11.2010 கைசிக ஏகாதசி நாளன்று, ""கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் தங்களைப் பல்லக்கில் தூக்கிச் செல்ல பாதுகாப்பு தர வேண்டும்'' எனக் கோரி பட்டர்கள் போலீசிடம் மனு கொடுத்தனர். கோவில் பிரகாரத்தில் பல்லக்கில் செல்லத் தடை விதித்த போலீசு உதவி ஆணையர், வெளியில் தங்களின் சொந்தப் பொறுப்பில் பல்லக்கில் செல்ல பட்டர்களுக்கு அனுமதி வழங்கினார்.

 

"மனிதனை மனிதன் சுமப்பது கோவிலாக இருந்தாலும், வெளியிடமாக இருந்தாலும் சமூகக் குற்றம் தான்; உழைக்கும் மக்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் எனப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்வதை அனுமதிக்க முடியாது. இதையும் மீறி பட்டர்கள் பிரம்மரத மரியாதையை நடத்த முயன்றால், அதைத் தடுத்து நிறுத்துவோம்'' என திருச்சி நகரைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகமும் மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து அறிவித்தன.

 

இதன்படி, கைசிக ஏகாதசி நாளன்று ம.க.இ.க., மற்றும் ம.உ.பா.மையத்தைச் சேர்ந்த தோழர்கள் திருவரங்கக் கோவிலின் öரங்கா கோபுரம் முன்பாகத் திரண்டனர். சூத்திர ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசின் போலீசோ, பட்டர்கள் கோவிலுக்கு வெளியே பிரம்மரத மரியாதையை நடத்துவதற்கு வசதியாக நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்ததோடு, மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் போஜ குமார் மற்றும் ம.க.இ.க. தோழர்கள் உள்ளிட்ட ஏழு பேரைக் கைது செய்து போராட்டத்தைத் தடுத்துவிட முயன்றது.

 

கைசிக ஏகாதசி நாளன்று அதிகாலையிலேயே, கவுசிகப் புராணம் பாடிய பின், தனது சொந்தக் காசைப் போட்டுத் தயாரித்திருந்த பல்லக்கில் ஏறி, கோவில் முன்வாசல் வழியாகப் பவனி வருவதற்கான ஏற்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், தான் நக்சல்பாரி புரட்சியாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டு, தனது ஏற்பாடுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, கோவில் நிர்வாகம் அளித்த மாலை, சந்தனம், குடை போன்ற மரியாதைகளைக்கூட ஏற்றுக் கொள்ளும் தெம்பின்றி, பின் வாசல் வழியாக போலீசின் பாதுகாப்புடன் தப்பியோடிப் போனார்.

 

1993 இல் திருவரங்கம் கோவிலின் கருவறைக்குள் நுழைந்து, இந்துமதம் என்பது பார்ப்பன மதம் என்பதை இந்தியாவெங்கும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டிய நக்சல்பாரி புரட்சியாளர்கள், இன்று அக்கோவிலில் மதச் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்துவரும் இழிவை, பார்ப்பனத் திமிரைத் துடைத்தெறிந்துவிட்டனர்.

 

இந்த வெற்றியை திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், ""தமிழகத்தைப் பார்ப்பனியத்தின் கல்லறை யாக்குவோம்! பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலை நாட்டுவோம்!!'' என விண்ணதிர முழக்கமிட்டும் கொண்டாடினர்.

 

இணை ஆணையரின் உத்தரவை அமல்படுத்துவதற்கு திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்திருந்தபோதும், ம.க.இ.க. தோழர்கள்தான் களத்தில் இறங்கி, போலீசின் உதவியுடன் பட்டர்கள் நடத்தத் திட்டமிட்டிருந்த பிரம்மரத மரியாதையைத் தடுத்து முறியடித்தனர். ஆனால், தி.க. வீரமணி கும்பலோ, ஏதோ தங்களின் போராட்ட அறிவிப்பாலும், விடுதலை நாளிதழில் செய்தி வெளியிட்டதாலும்தான், பட்டர் பின்வாசல் வழியாக ஓடிவிட்டதாகத் தனது பத்திரிகையில் எழுதி, இந்த வெற்றியைச் சொந்தம் கொண்டாட முயலுகிறது. தான் கூவிதான் பொழுது விடிகிறது எனச் சேவல் எண்ணிக்கொள்வதைதான் வீரமணியின் தம்பட்டம் நினைவுபடுத்துகிறது. ம.க.இ.க., திருச்சி.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நாமக்கல் மாவட்டக் கிளைத் தலைவரான தோழர் சின்னசாமி, கடந்த நவம்பர் 2ஆம் நாள் மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டார். அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற 66 வயதான தோழர் பழனிச்சாமி, நாமக்கல் மாவட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கிளையைத் தொடங்க முன்முயற்சியுடன் செயல்பட்டதோடு, கிளையைக் கட்டியமைத்து அதன் தலைமைப் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களில் ஊக்கமுடன் பங்கேற்றார்.

 

மார்க்சிய லெனினிய வழியில் நின்று புரட்சியைச் சாதிப்பதுதான் மனித குலத்தை அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கும் என்பதை உணர்ந்து தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்து பாடுபட்டார். முதுமையிலும் துடிப்புடன் செயல்பட்ட அவரது போர்க்குணத்தையும் அர்ப்பணிப்பையும் நெஞ்சிலேந்தி, அடக்குமுறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகத் தொடர்ந்து போராட உறுதியேற்போம்! மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நாமக்கல். ……

எந்திரன் (ரோபோ) உலக அழகியைக் காதலிப்பது ஒரு அறிவியல் கற்பனைக் கதை. இதை உலகம் முழுவதும் செல்வதற்காக உலகத் தரத்துக்கு பிரம்மாண்டமாகவும் கோடிகோடியாகக் கொட்டிக் கவர்ச்சியான சினிமாவாகவும் உருவாக்கப்பட்டது.

 

இன்னொரு எந்திரன் (ரோபோ) சென்னை அருகே நோக்கியா கைபேசி ஆலையில் அம்பிகா என்ற ஒரு இளம் பெண் தொழிலாளியைக் கதறக்கதற கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தது. இந்த உண்மைச் சம்பவத்தை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கு ஆலை நிர்வாகம் மட்டுமல்ல, அரசும் செய்தி ஊடகமும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளன.

 

மனித இனத்தைச் சேர்ந்த, உயிருள்ள ஒரு பெண்ணைக் காதலித்த எந்திரன் மனித இன மறுஉற்பத்திக்குத் தகுதியற்றவன்; அவனுக்கு இடப்பட்ட கட்டளைகளையும், நெறிமுறைகளையும் மீறிய குற்றத்துக்குத் தண்டனையாக அவன் அங்கம் அங்கமாகப் பிய்த்து எறியப்படுகிறான், கற்பனைக் கதையில். ஆனால், உண்மை வாழ்க்கையில் நடந்ததோ வேறு விதமாக இருந்தது.

 

தம் கண் முன்னே இரத்தம் பீறிட சக தொழிலாளி கழுத்தறுபடுவதைக் கண்டு ஆத்திரமுற்று ரேபோவை (எந்திரனை) அடித்து நொறுக்கி அவளை மீட்க தொழிலாளர்கள் எத்தணித்தார்கள். அந்த இளம் பெண் தொழிலாளியின் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்த எந்திரனுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக "செக்யூரிட்டிகள்'' என்ற சீருடை அடியாள்படை நிறுத்தப்பட்டது. சக பெண் தொழிலாளர்கள் மயங்கி விழ, ஆண் தொழிலாளர்கள் ஆத்திரத்தோடு குமுறிக் கொந்தளிக்க அவர்கள் கண் முன்பாகவே குரூரமானதொரு கொலையை நீண்ட நேரம் சாவகாசமாக செய்வதற்கு எந்திரன் அனுமதிக்கப்பட்டான்.

 

•••

 

இந்தியா, சீனா இரண்டு நாடுகளில் இருக்கும் எல்லா நோக்கியா ஆலைகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் செல்போன்கள் என்ற இலக்கை அடைவதற்கு, தொழிலாளிகள் இரக்கமின்றி ஒரு எந்திரம் போல வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு அங்காடித்தெரு திரைப்படத்தில் வரும் கொடூரமான சூபர்வைசர் அண்ணாச்சியை விடக் கொடூரமான மேலாள நிர்வாகிகள் வேலை செய்கிறார்கள்.

 

அக்டோபர் 31 அன்று இரவு பி ஷிப்ட்டில் தொழிலாளி அம்பிகா வேலை செய்தார். அவரது யூனிட்டின் பெயர் ""இன்ஜின் ஆபரேஷன் ஃபைனல் அசம்பிளி''. இங்கு ""ரவுட்டர் கட்டிங் மிஷின்'' எனும் இயந்திரம் வரிசையாக வரும் செல்போன்களுக்குரிய ""மதர்போர்டு'' களைத் தனித்தனித் துண்டுகளாக அறுத்துப் போடும் வேலையின் போது, சில பீஸ் போர்டுகள் எந்திரத்தில் விழுந்தால் தொழிலாளிகள் அதை கைவிட்டு எடுப்பார்கள். அவர்கள் கை நுழைந்த உடனேயே அந்த எந்திரத்தில் உள்ள ஆட்டோமேடிக் சென்சர் இயந்திரம் இயங்கி அறுப்பதை நிறுத்திவிடும்.

 

ஆனால், இந்த ஆட்டோமேடிக் சென்சர் இயந்திரம் வேலை செய்தால் சிலசமயம் வேலை தடைப்பட்டு, அதனால் பத்து பதினைந்து நிமிடம் உற்பத்தி தாமதமாகிவிடும் என்பதால் இதை மூடியே வைத்திருந்தார்கள். அதாவது தொழிலாளி தன் உயிரைப் பணயம் வைத்து சில விநாடிகளுக்குள் விழுந்துவிட்ட போர்டுகளை எடுக்க வேண்டும். இது பச்சையான படுகொலை இல்லையா? எந்திரத்தில் சில போர்டுகள் விழுந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. ஏனெனில், அறுக்கப்படும் எல்லா போர்டுகளுக்கும் தொழிலாளிகள் சரியான கணக்கு கொடுக்க வேண்டும்.

 

இந்நிலையில் 30.10.2010 மாலை சுமார் ஏழு மணிக்கு அப்படி விழுந்துவிட்ட போர்டை எடுப்பதற்கு அம்பிகா முயன்றிருக்கிறார். எந்திரத்தின் சென்சர் இயங்காததால் அம்பிகா குனிந்து கீழே விழுந்த போர்டை எடுக்க முயல்வது அதற்குத் தெரியவில்லை. எனவே அதற்கு இடப்பட்ட கட்டளைப்படி, அடுத்த போர்டை அறுப்பதற்கு எந்திரத்தின் அறுவை பகுதி கீழே இறங்கி, அம்பிகா கழுத்தைப் பின்புறமாக அறுக்கத் தொடங்கியிருக்கிறது. கழுத்து அறுபட அறுபட இரத்தம் ஏராளமாக வழிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கம்பி கழுத்தில் ஆழமாக சென்ன்றுவிட்டதால் இரத்தம் உடலுக்குள்ளேயே ஏராளமாக கசிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு நான்கைந்து முறை மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால், வெளியே யாருக்கும் இது தெரியவில்லை. சில பெண் தொழிலாளிகள் இதைப் பார்த்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். சில ஆண் தொழிலாளிகள் உடனே எந்திரத்தை உடைத்து அம்பிகாவைக் காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்.

 

ஆனால், அங்கிருந்த சூபர்வைசர் மேலிடத்தில் பேசி விட்டு மிஷனை உடைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதைப் பொறுமையாக ""டூல்ஜ்'' கொண்டு படிப்படியாகக் கழட்டலாம் என்றார். எந்திரத்தை உடைக்காமல் இருப்பதற்குப் பாதுகாப்பாக செக்யூரிட்டிகளை நிறுத்தியிருக்கிறார். டூல்சை கொண்டு கழட்டலாம் என்றால், அங்கே டூல்ஸ் பாக்சும் இல்லை. இதற்குள் 10 நிமிடங்கள் கழிந்துவிட்டன. ஏராளமான இரத்தம் வழிந்துவிட்டது. கழுத்தை அறுத்த அந்த எந்திரத்தில் இருந்து அம்பிகா மீட்கப்படவில்லை. இறுதியில் வேறுவழியின்றி தொழிலாளிகள் நிர்வாகத்துடன் சண்டை போட்டு எந்திரத்தின் கட்டரை உடைத்து அம்பிகாவை மீட்கின்றனர். அதற்குள் மொத்தம் 20 அல்லது 25 நிமிடங்கள் முடிந்துவிட்டன.

 

ஆலையிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கும் பின்னர் சென்னை கே.எம்.சி., அப்பல்லோ எனப் பிற மருத்துவ மனைகளுக்கும், அதற்குள் இறந்திருந்த அம்பிகாவின் உடலைக் கொண்டு சென்றார்கள்.

 

ஆலைக்குள் தொழிலாளிகள் செல்பேசிகளை எடுத்துச் செல்ல தடையுள்ளது. எனவே, அம்பிகாவின் மரணம் அவர்களுக்கு உடனேயே தெரியவில்லை. ""அசம்பிள் டூ ஆர்டர் செக்சன்'' எனும் பிரிவின் சூபர்வைசர் அம்பிகாவின் மரணத்தைத் மறைத்து தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்றப் பணித்திருக்கிறான்.

 

பின்னர் மருத்துவமனையின் நர்ஸ் மூலம் செய்தி தொழிலாளிகளுக்கு கிடைத்து, அதன்பின் இரவு 12 மணிக்குத்தான் உற்பத்தியை நிறுத்தினார்கள். அதுவும் கூட தொழிலாளிகளின் கோபத்தால் நடந்ததே அன்றி, நிர்வாகத்தால் அல்ல. ஆனால், எப்படியும் உற்பத்தியை நிறுத்தக்கூடாது என்பதுதான் நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது.

 

எந்திரத்தை உடனே உடைத்திருந்தால், அம்பிகாவைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், இரண்டு கோடி நட்டமாயிருக்குமே! கட்டிங் இயந்திரத்தின் சென்சர் போர்டை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்தால் அம்பிகா இறந்திருக்க மாட்டார். ஆனால் நிறுத்தப்படும் ஒவ்வொருமுறையும் உற்பத்தி தடங்கலுக்குள்ளாயிருக்குமே! எனவே, 10 கோடி கைபேசி என்ற இலக்கை அடைவதற்காக, இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில்தான் நோக்கியா தொழிலாளிகள் வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்ததனால்தான் இன்று அம்பிகா கொல்லப்பட்டிருக்கிறார்.

 

சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு ""6 எஸ்'' (6கு) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டதாம்! அந்த பாதுகாப்பு இலட்சணத்திற்கு ரத்த சாட்சியம்தான் அம்பிகா!

 

போராட தொழிற்சங்க தலைமை இல்லாத காரணத்தால் தொழிலாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கையில், தி.மு.க. பிரமுகர்கள் அம்பிகா கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு முயன்றார்கள். அம்பிகாவின் பெற்றோரோடு நைச்சியமாகச் சமரசம் பேசியது, நிர்வாகம். நிவாரணம், குடும்பத்தினருக்கு வேலை என்ற வழமையான சடங்கு சம்பிரதாயங்கள் பேசப்பட்டன. ஆனால், அம்பிகாவின் மரணத்திற்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இருக்கட்டும், யார் மீதும் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

 

பழுதடைந்த அந்த எந்திரத்தை அப்புறப்படுத்திவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் புதிய எந்திரத்தை அங்கே வைத்தார்கள். அம்பிகா கொல்லப்பட்ட நோக்கியாவின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நேர்ந்த விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்து, நடந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. இடத்தைக் கழுவி சுத்தம் செய்த பிறகு, தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை வைத்து ஒரு விசாரணையை நடத்தி முடித்து விட்டார்கள்.

 

சன் டி.வி.யிலும் சில பத்திரிக்கைளிலும் ஒரு ஒற்றை வரிச் செய்தியோடு இந்தப் படுகொலை முடிந்து விட்டது. நோக்கியா ஆலைக்குச் சென்றபோது ""வினவு'' இணையதள செய்தியாளர்களைத் தவிர அங்கு எந்த ஊடக நபர்களும் இல்லை. அதில் ஆச்சரியம் ஏதுமில்லை, எல்லா ஊடகங்களும் நோக்கியா விளம்பரம் மூலம் கல்லா கட்டுகின்றன. நோக்கியாவின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் எல்லா பத்திரிகைகளையும் தொடர்பு கொண்டு தாங்கள் அளித்த, அளிக்க போகின்ற விளம்பரங்களை நினைவுபடுத்தி, இந்த கொலையை மறைக்க வேலை செய்கிறார்கள். அதன் விளைவையும் ஊடகங்களில் பார்க்கிறோம்.

 

நோக்கியா தொழிற்சாலை முழுவதும் சி.சி.டி.வி காமராக்கள் இருக்கின்றன. தொழிலாளிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதில் பதிவாகின்றன. இந்தக் கண்காணிப்பை வைத்துத் தொழிலாளிகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அருகாமை தொழிலாளியிடம் பேசினால் கூட இங்கு குற்றம் என்பது சட்டம். எனில், அம்பிகா கொலை செய்யப்பட்ட காட்சி கூட அந்த காமராக்களில் பதிவாகியிருக்கும். இது சாதாரண விபத்து என்று ஊடகங்களின் உதவியுடன் ஊளையிடும் நோக்கியா நிர்வாகம் அந்த படப்பதிவை வெளியிடட்டுமே? உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா?

 

காஞ்சிபுரம் கலவைக்கு அருகே உள்ள கிராமத்தில் அம்பிகாவின் இறுதி ஊர்வலம் நடந்தது. சில நூறு தொழிலாளர்களைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. அப்போதுகூட நோக்கியாவில் உற்பத்தி நடந்தது. விடுமுறை இல்லை. தொழிலாளிகள் அதைப் புறக்கணித்துவிட்டு அம்பிகாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருக்கிறார்கள். நெடுந்தொலைவு காரணமாக நிறைய பெண் தொழிலாளிகள் வரவில்லை. தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச்சாராயத்தைப் பருகியவாறு தமது வெற்றியைச் சிலாகிப்பார்கள்.

 

அவர்கள் பருகுவது சாராயமல்ல, அம்பிகாவைப் போன்ற தொழிலாளிகளின் இரத்தம் என்பதை நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். பழி தீர்ப்போம்!

 

•••

 

தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் ஆதிக்கம் வகிக்கும் இன்றைய சூழலில், குறிப்பாக, பன்னாட்டு முதலாளியம் நடத்தும் நோக்கியா, ஹ_ண்டாய் முதலான ஆலைகளில் அம்பிகா போன்ற தொழிலாளர் படுகொலை விதிவிலக்கல்ல. முழுக்க முழுக்க ரோபோ மயமாக்கப்பட்டு, கண்காணிப்பு காமிராக்கள் மூலம், சிறிதுகூட கவனப் பிசகு இல்லாமல் முடுக்கிவிடப்படும் தொழிலாளர்கள் இயந்திரங்களோடு போட்டி போட்டு, உயிரைப் பணயம் வைத்து வேலை செய்ய வேண்டியுள்ளது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோ, ஆபத்துக்குத் தேவையான மருத்துவ வசதிகளோ கிடையாது.

 

பலரும் எண்ணுவதுபோல இத்தகைய நிறுவனங்களில் மிகையான ஊதியம் தரப்படுவதில்லை. கூடுதல் ஊதியம் பெறும் பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக, குறை ஊதியம் பெறும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள்தாம் கூடுதலாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால், உற்பத்தி இலக்கு மட்டும் பன்மடங்கு எகிறிக் கொண்டே போகிறது.

 

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள ஹ_ண்டாய் ஆலையில் 1999ஆம் ஆண்டு, 1750 நிரந்தரத் தொழிலாளர்களும், 7,500 தற்காலிகத் தொழிலாளர்களும் வருடத்துக்கு 78,000 கார்கள் உற்பத்தி செய்தனர். ஆனால், அவர்களே 2008இல் வருடத்துக்கு 8 இலட்சம் கார்கள் உற்பத்தி செய்தனர். அந்த அளவு @ரோபா மயமாக்கப்பட்டு, தொழிலாளர்களும் இயந்திரமயமாகி உழைக்கிறார்கள். 2002ஆம் ஆண்டு ஆலையிலேயே ஒரு தொழிலாளி மாரடைப்பால் மாண்டார். அதைத் தொடர்ந்து, ஆலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 2008ஆம் ஆண்டு ரோபோ இயந்திரத்தின் இயக்கத்தால், இரும்புக் கம்பி ஒரு தொழிலாளி தலையின் ஒரு பக்கம் நுழைந்து மறுபுறம் வெளிவந்தது. அப்படியே கால் மணி நேரம் தொங்கிய அத்தொழிலாளி, மூன்று நாள் நினைவின்றி மருத்துவமனையில் கிடந்து மாண்டு போனார்.

 

ஜந்து கருங்காலிகளைக் கொண்ட தொழிலாளர் நலக்கமிட்டியை வைத்துக் கொண்டு தொழிற்சங்கம் வைக்கும் உரிமை அடியோடு மறுக்கப்பட்டு வருகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது 15 பேர் வேலை நீக்கமும் 89 பேர் தற்காலிக வேலை நீக்கமும் செய்யப்பட்டனர். போலீசை ஏவி முன்னணித் தொழிலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறை, தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்து, அவ்வாலைத் தொழிலாளர்கள் காஞ்சிபுரத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

 

பெண் தொழிலாளி அம்பிகாவைப் படுகொலை செய்த நோக்கியா நிறுவனத்தின் துணைநிறுவனம் ஃபாக்ஸ்கான். கடந்த ஆகஸ்ட் மாதம் ஃபாக்ஸ்கான் ஆலையில் நச்சு வாயு கசிந்து, 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் பலர் பெண் தொழிலாளர்கள். முதல் ""ஷிப்ட்'' வேலையில் 127 தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து விழுந்தபோதும், அவர்கள் ""ஆடி மாதம் விரதம் இருந்ததால் நேர்ந்தது'' என்று கேலி பேசி, இரண்டாவது ""ஷிப்ட்'' வேலை வைத்து மேலும் 145 தொழிலாளர்களை இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழச் செய்தது, நிர்வாகம். தொழிலாளருக்கு நேர்ந்த ஆபத்தை மூடி மறைப்பதற்காக புறநோயாளிகளாக வைத்து முதலுதவி மட்டுமே அளித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை விரட்டிவிட்டார்கள். அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ""கப்பம்'' கட்டி நடந்த சம்பவத்தை ஒன்றுமில்லாததாக அமுக்கி விட்டது, நிர்வாகம்.

 

ஃபாக்ஸ்கான், ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம் என்று பல துணை நிறுவனம் வைத்து நடத்தும் நோக்கியா கைபேசி நிறுவனம் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமையை மறுத்து, போராடும் தொழிலாளர்கள் மீது போலீசை ஏவிக் கைது செய்து சிறையில் அடைக்கிறது. நோக்கியா, ஹ_ண்டாசூ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் அனைத்திலும் நிரந்தரத் தொழிலாளர்களை விடத் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள்தாம் பல மடங்கு உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களோடு நிரந்தரத் தொழிலாளர்களும், இயந்திரக் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

 

ஆனால், கொல்லைப் புறவழியே பதவிக்கு வந்த தமிழகத் தலைமைப் போலீசு இயக்குநர் லாத்திகா சரண், முதலாளிகளின் சங்கக் கூட்டத்தில் பேசுகிறார், ""தொழிற்சாலைகள், அலுவலகங்களின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள், அலுவலர்களுக்கு அடையாள அட்டை, கைரேகைப் பதிவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். நிறுவன உயர் அதிகாரி, உரிமையாளரை எதிர்க்கும் தொழிலாளர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஏனென்றால், வெளியாட்கள் இவர்களைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தை சீர்குலைக்கலாம்...'' வரம்பற்ற வேலைநேரம், விபத்து படுகொலை என்று தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கித் தொழிலாளர்களை நரபலி கொடுக்கும் முதலாளியப் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் குறித்து ஒருபோதும் பேசாத போலீசு அதிகாரிகள், முதலாளிகள் சங்கத்தின் கருத்தரங்கத்துக்கு போய் அவர்களுக்கு தொழிலாளர்களால் ஆபத்து விளையும் என்று அக்கறையுடன் பேசுகிறார்கள்.

 

மறுபுறம், இம்மாதிரி அதிகாரிகளைத் தேடிப்பிடித்து பதவி உயர்வுதரும் கருணாநிதி, தான் தொழிலாளர்களின் நண்பன் என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அதேசமயம் நோக்கியா, ஹ_ண்டாசூ, சம்சங் என்று பலப் பல பன்னாட்டுக் கம்பெனிகளைக் கொண்டு வந்து தமிழகத்தில் முதலீடுகளையும் தொழில்வளர்ச்சியையும் செய்து வருவதாக அப்பனும் மகனும் பேரனும் பெருமை பேசிக் கொள்கிறார்கள். இதனால் பல ஆயிரம் பேருக்கு நேரடி மறைமுக வேலை கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். பல ஆயிரம் கோடி வரிச்சலுகைகளோடு, நீர், நிலம், மின்சாரம் முதலானவற்றை இலவசமாக வழங்குவதோடு, சட்டத்தை மதியாது கொத்தடிமைகளாகத் தொழிலாளர்களை காலில் போட்டு மிதிப்பதற்குத் துணை நிற்கிறார்கள். இதைக் காண்பதற்கு இன்னும் வேறுபல ஆதாரங்களைத் தேடிப் போக வேண்டியதில்லை. நோக்கியா, ஹ_ண்டாய் ஆலைகளின் நடப்புகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

 

• மாணிக்கவாசகம்.

இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவ தையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது. ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவரை மருத்துவமனையில் அடைத்துவைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேய்ரா பாய்பி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும். அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாய்ப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகியைப் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக் "குடியரசு' ஜரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!

கடந்த நவம்பர் 4ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள். மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன் கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை.

முதலாளித்துவத்தின் முதுகெ லும்பை முறித்து, பஞ்சைப்பராரிகளான பாட்டாளிகளின் முதல் சோசலிச அரசு உதித்த நாள் நவம்பர் 7, 1917. அன்றைய சோவியத் ஒன்றியத்தில் உலகின் ஜந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி மலர்ந்த 93ஆம் ஆண்டு சோசலிசப் புரட்சி நாளை தமிழகமெங்கும் ம.க.இ.க. வி.வி.மு. பு.மா.இ.மு. பு.ஜ.தொ.மு பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் எழுச்சியோடு கொண்டாடின. மறுகாலனியாக்கத்துக்கும் இந்துவெறி பாசிசத்துக்கும் எதிராகவும், புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்கச் சூளுரைத்தும் கொட்டும் மழையிலும் பேருற்சாகத்தோடும் வர்க்க உணர்வோடும் இந்த விழாக்கள் நடைபெற்றன.

திருச்சியில்...

தில்லைநகர் ஜந்தாவது கிராஸ் காந்திபுரத்தில் ம.க.இ.க பெ.வி.மு பு.மா.இ.மு பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நவம்பர் புரட்சி நாளை எழுச்சியூட்டும் விழாவாக காலை முதல் இரவுவிரவாக நடத்தின. காந்திபுரம், மூவேந்தர் நகர் உழைக்கும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் பெருந்திரளாகக் கலந்து கொண்ட இந்த விழாவில் பானை உடைத்தல், பானையில் நீர் நிரப்புதல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, மாறுவேடப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சார்லி சாப்ளின், கட்டபொம்மன், ஜான்சி ராணி, பகத்சிங், அம்பேத்கர், காஷ்மீர் பெண்போராளி ஆகியோர் வேடம் தறித்து மாறுவேடப் போட்டியில் குழந்தைகள் மேடையில் தோன்றி உரையாற்றிய விதம், பார்வையாளர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அளித்தனர். ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் ராஜா தலையில் நடந்த இந்த விழாவில், இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்குப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியே ஒரே தீர்வு என்பதை உணர்த்தி பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் கிளர்ச்சியாளன், வழக்குரைஞர் இராமலிங்கம், ஜீவா உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர கலை நிகழ்ச்சி போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. நிகழ்ச்சியின் இறுதியில் இவ்விழாவில் கலந்து கொண்ட 700க்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களுக்கு மாட்டு கறி விருந்து அளிக்கப்பட்டது.

ஓசூரில்...

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் விவசாயிகள் விடுதலை முன்னணியும் இணைந்து பாகலூரில் நவம்பர் புரட்சிநாள் விழாவை எழுச்சியோடு நடத்தின. பெருந்திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்புடன் விண்ணதிரும் முழக்கங்களுடன் கொடியேற்றி, இனிப்பு வழங்கி, சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பு.ஜ.தொ.மு. மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் பரிசுகளை வழங்கினார். பின்னர் நடந்த அரங்கக் கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. முன்னணியாளர்களும் கமாஸ் வெக்ட்ரா ஆலை யின் தொழிற்சங்க முன்னணியாளர்களும் சிறப்புரையாற்றினர். தொழிலாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்ற இந்த விழா வர்க்க உணர்வை பறைசாற்றுவதாக அமைந்தது.

தஞ்சையில்...

ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் புரட்சிநாள் விழாவை உணர்வோடு நடத்தின. மானோஜிப் பட்டி உப்பிலி மண்டபம் அருகில் பட்டாசுமதுரவாயல் பகுதியில் காலையில் செங்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பு.மா.இ.மு. தலைமையில் தோழர்கள் உறுதியேற்றனர்.மாலை 4 மணியளவில் எஸ்.வி. மகாலில் பு.மா.இ.மு; ம.க.இ.க் பெ.வி.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் தோழர்கள் தங்கள் குடும்பத்தோடு திμண்டு நவம்பர் புμட்சிநாள் விழாவை எழுச்சியோடு நடத்தினர். குறிப்பாக, பு.மா.இ.மு.வைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் பெருந்திμளாக தமது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இளம் தோழர்கள் நிகழ்த்திய பாடல் நிகழ்ச்சி, பு.மா.இ.மு. மாணவியரின் நடன நிகழ்ச்சி, இளைஞர் களின் பறைமுழக்கம், பெ.வி.மு. தோழர்கள் நடத்திய பெண் விடுதலைக்கான விவாதம், அயோத்தி தீர்ப்பைத் தோலுரித்து இந்துவெறி பயங்கரவாதத்துக்கு எதராகப் போராட அறைகூவல் விடுத்த இசைச் சித்திரம் முதலான நிகழ்ச்சிகள் 700 பேருக்குமேல் திரண்டு வந்த பார்வையாளர்களிடம் போராட்ட உணர்


சென்னையில்...


வெடித்து, தோழர் லெனின் படம் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டையுடன் இனிப்புகள் வழங்கி செங்கொடியேற்றும் நிகழ்ச்சி யைத் தொடர்ந்து, இரு சக்கμ வாகனங்களில் முழக்கமிட்ட படியே முக்கிய வீதிகள் வழியாக வந்து தியாகத் தோழர் பீட்டர்இல்லத்திலும், பர்மா காலனி, கீழவாசல் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது. மாலையில் வடக்கு வாசல் சமுதாயக்கூடத்தில் முன்னணியாளர்கள் சிறப்புøμயாற்றினர். இசைச் சித்திμம், மாவீμன் பகத்சிங் நாடகம் ஆகியவற்றோடு, பொதுவுடமை இயக்கத்தின் மூத்ததோழரும் லாவணி இசைக் கலைஞருமானதோழர் காதர் பாடிய பாடல்கள் நிகழ்ச்சிக்குஎழுச்சியூட்டின.

வூட்டி உற்சாகமான வμவேற்பைப் பெற்றன. இறுதியாக, தியாகத்துக்கு அஞ்சாமல் வர்க்க உணர்வோடு ஒவ்வொருவரும் போல்விக்குகளாக மாற வேண்டிய அவசியத்தை விளக்கி தோழர் துரை.சண்முகம் எழுச்சியுரையாற்றினார்.

 

கோவையில்...

ம.க.இ.க் பு.ஜ.தொ.மு. சார்பாக கோவை கே.என்.ஜி.புதூரிலுள்ள எஸ்.ஆர்.ஐ. பு.ஜ.தொ.மு. சங்க அலுவலகக் கட்டிடத்தில் செங்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நவம்பர் புμட்சிநாள் விழா தொடங்கியது. ம.க.இ.க. தோழர்கள் புμட்சிகμ பாடல்களை இசைக்க, தோழர் பூவண்ணன் தலைமையில் தொழி லாளர்கள் பெருந்திரளாகக் குடும்பத்தோடு கலந்து கொண்ட இந்த விழாவில், பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கரசு சிறப்புரையாற்றினார். இவை தவிர சேலம், புதுச்சேரி, கடலூர், கிருணகிரிமாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள நாட்றாம் பாளையம், ஆம்பூர், உடுமலை வட்டத்திலுள்ள ஆண்டியூர், துறையூர் வட்டத்திலுள்ள காளிப்பட்டி, பென்னாகμம் வட்டத்திலுள்ள வி.வி.மு. கிளைகள்  எனப் பல்வேறு பகுதிகளிலும் இப்புμட்சிகμ அமைப்புகள் பட்டா கள் வெடித்து செங்கொடியேற்றி நவம்பர் புμட்சிநாளை எழுச்சியோடு நடத்தின. இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்தும் அந்நாளில் விழாக்கோலம் பூண்டிருந்தன. திμளான உழைக்கும் மக்கள்பங்கேற்ற இந்த விழாக்களில் சிலம்பாட்டம், சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள், விவாத அμங்கம், முன்னணியாளர்களின் சிறப்புரை, புரட்சிகரப் பாடல்கள், விளையாட்டுப் போட்டிகள்  எனத் தொடர்ந்த பல்வேறுநிகழ்ச்சிகள், இங்கேயும் ஒரு நவம்பர் புμட்சி யைச் சாதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின.

 

போலி கம்யூனிஸ்டுகள் தீபாவளிக்கு வசூல் வேட்டை நடத்தி வாழ்த்து தெரிவித்துவிட்டு, சோசலிசப் புரட்சி நாளை திவசம் போல நடத்திவரும் நிலையில், இப்புμட்சிகμத் திருநாளை வர்க்க உணர்வூட்டும் மக்கள் திருவிழாவாகவும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு விழாவாகவும் இப்புரட்சிகர அமைப்புகள் எழுச்சியோடு நடத்தி, சோசலிசப் புரட்சியைச் சாதித்தபோல்ஷ்விக்குகளின் உண்மையான வாரிகள் தாங்கள்தான் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளன.

பு.ஜ.செய்தியாளர்கள்.

முத்துக்குமாரின் உடல் தமிழகத்தைத் தட்டியெழுப்பியதைப் போல, தன் உடலும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று  தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன் படட்ம்   என்ற நம்பிக்கையுடன் கடிதம் எழுதி வைத்து விட்டு, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் இயங்கிவந்த 21 வயதான பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் தோழரான செங்கொடி, கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஞாயிறன்று தனது உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு தியாகியாகியுள்ளார்.

அரசியலற்ற அமைதியிலும் விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைத் தனது தீக்குளிப் பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டியெழுப்பினார், முத்துக்குமார். இன்றும் அதே நிலைமைதான் தொடர்கிறது. இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும், கருணையை எதிர்பார்த்து நிற்கும் அவலமுமே அந்த இளம் பெண்ணின் உள்ளத்தை எரித்திருக்கிறது. மூவர் தூக்கை நிறுத்துமளவுக்கு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும் அரசியல் முழக்கங்களும் தமிழகத்தைப் பற்றியிருந்தால், செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது.

சென்றுவாருங்கள், தோழர் செங்கொடி! உணர்ச்சி வேகத்தில் நீங்கள் தீக்குளித்திருந்தாலும், சரியான திசையில் போராடாத தமிழகத்தை நீங்கள் சாடியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள தோழர்கள், நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை நிறைவேற்றப் போராடுவார்கள். உங்களின் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தை நெருப்பாய் பற்ற வைக்கும். மூவர் தூக்கிற்குக் காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான போராட்டத் தீயின் அனலால் தமிழகமே கொதிக்கும்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ், வைகை ஆகிய வழக்குரைஞர்கள் கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் நேர்ந்துள்ள 11 ஆண்டு காலத் தாமதத்தின் விளைவாக கைதிகள் மூவரும் அனுபவித்துவரும் துன்பம் மரண தண்டனையை விடக் கொடியது என்ற வாதத்தை முதன்மைப் படுத்தி, இம்மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். மனுவை ஏற்றுக்கொண்ட  உயர் நீதிமன்ற பெஞ்சு, 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசைக் கோரியுள்ளதுடன், செப்டம்பர் 9 ஆம் தேதியன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை அதுவரை  நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க …ராஜீவ் கொலை வழக்கு- தூக்கு மேடையில் நிற்கிறது அரசியல் நியாயம்.

கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது. அரிதினும் அரிதாக, இப்படுகொலை நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கொலைகார போலீசு அதிகாரிக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பது, இந்தியாவிலேயே முதன்முறையாகும்.

மேலும் படிக்க …தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…

தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்பு உருக்காலைக்கு எதிராக கடந்த ஐந்தாண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது.  ஒரிசா மாநில அரசு பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிட்ட பின்னும், அப்போராட்டம் பின்னடைவுக்கு உள்ளாகவில்லை.  போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையாய் நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங்.  இப்படிபட்ட நிலையில் இப்பிரச்சினையில் மைய அரசு திடீர் உத்தமர் வேடம் போடக் கிளம்பியிருக்கிறது.

மேலும் படிக்க …போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்

பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள  ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.

மேலும் படிக்க …ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!

விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம் விருத்தாச்சலம் நகரிலுள்ள ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்கும் வியாபாரத்தை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.

மேலும் படிக்க …தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

நச்சுப் பொருட்களின் கிடங்கு உப்புக் கழிவு:

2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட் டிருக்கின்றன.

மேலும் படிக்க …டாடா குழுமத்தின் கோர முகம் -2

மக்கள் தொடர்பு அதிகாரி, லயசன் ஆபீசர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் அதிகாரத் தரகர்கள்,  அரசாங்கத்தில் எந்தக் காரியமானாலும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்; அதிகாரத் தரகர்கள் மூலமாகப் போனால்தான் அரசாங்கத்தின் நெடிய கதவுகள் திறக்கும். பெருமுதலாளிகள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவோ, போட்டியாளர்களைக் கழுத்தறுக்கவோ, விதிமுறைகளை மீறி ஒரு புதிய தொழில் உரிமம் பெறவோ, தங்களுக்குச் சாதகமாக அரசின் கொள்கைகளை மாற்றவோ அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். அதிகாரத் தரகு வேலைக்கான செலவுகளை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் “அபிவிருத்தி வேலைகளுக்கான செலவுகள்” என்று குறிப்பிடுகின்றன. முதலாளித்துவ அரசியலமைப்பு முறையின் பிரிக்க முடியாத அங்கம்தான் இந்த அதிகாரத் தரகர்கள். இத்தகைய அதிகாரத் தரகர்களில் ஒருவர்தான் நீரா ராடியா. குறிப்பாக ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி நிறுவனங்களுக்கு உரிமங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை அதிகார வர்க்கத்துடன் பேசி முடித்துத் தரும் வேலைகளை இவர் செய்துள்ளார். இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவகாரமாகியுள்ளது.

மேலும் படிக்க …அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!

நாட்டையே அதிரவைத்து எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது, இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் இதுவே மிகப் பெரியது என்று சித்தரிக்கப்படும் அலைக்கற்றை ஊழல். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.

மேலும் படிக்க …வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி என்ற அமைப்பு காஷ்மீர் பிரச்சினை குறித்து, “விடுதலை: ஒரே வழி” என்ற கருத்தரங்கை கடந்த அக்டோபர் 21 அன்று டெல்லியில் நடத்தியது.  இக்கருத்தரங்கில் காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வரவர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க …காஷ்மீர்: காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு!

சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்.13ஆம் தேதியன்று ஆசிரியர் ஒருவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனைத் தரக்குறைவாகப் பேசி அடித்ததும், இப்பள்ளியில் பு.மா.இ.மு. அமைப்பில் இணைந்துள்ள மாணவர்கள் இது பற்றி அந்த ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் மீண்டும் திமிராகப் பேசவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்டு இனி இதுபோல் நடவாதிருக்க உறுதி தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளியின் அனைத்து மாணவர்களும் தலைமையாசிரியரை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து தலைமையாசிரியர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்புக் கேட்டு பிரச்சினை முடிவடையும் நேரத்தில், திடீரென அங்கு தனது அடியாட்களுடன் வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவரும் இப்பகுதியின் ரவுடியுமான டி.பி.ஜோசுவா, மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி விரட்டத் தொடங்கினான்; தடுக்க வந்த ஆசிரியர்களுக்கும் அடி விழுந்தது.

 

மேலும் படிக்க …ரவுடியின் கொட்டத்தை ஒடுக்கிய பள்ளி மாணவர்களின் போராட்டம்

கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் பள்ளி மாணவர் பாரத் ஐப் படுகொலை செய்தவர்களைக் கைது செய்து தண்டிக்கக் கோரி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று பெண்ணாடத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்ட ம் நடத்தியது. (புதிய ஜனநாயம் அக்.2010 இதழ்) அதன் பின்னரும் பெண்ணாடம் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைச் சந்தித்து முறையிடுவதெனத் தீர்மானித்து, பெண்ணாடத்திலிருந்து மாவட்டத் தலைநகரான கடலூருக்கு அக். 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக வி.வி.மு. அறிவித்தது. இதனால் போலீசின் முகத்திரை மக்கள் மத்தியில் கிழிந்து கந்தலாகிவிடும் என்று அஞ்சிய கடலூர் மாவட்ட போலீசு, இந்நடைபயணத்திற்குத் தடைவிதித்தும், மீறி வந்தால் கைது செய்வோம் என்று எச்சரித்தும், பெண்ணாடத்தில் ஏராளமான போலீசைக் குவித்துப் பீதியூட்டியது.

 

மேலும் படிக்க …பள்ளி மாணவன் பாரத் கொலை: நீதி கேட்பது போலீசுக்கு அநீதியாம்!

எமது அக்டோபர் இதழ், பக்கம் 17இல், மணமேல் குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தைப் பற்றி வெளியிட்டிருந்த பெட்டிச்செய்தியில், மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் துணைத் தலைவரின் மகள் எனக் குறிப்பிட்டிருந்தோம். அவ்விதழ் வெளிவந்தவுடனேயே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் சிலர் எம்மைக் கைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநிலத் துணைத் தலைவரின் மகள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பிழையானது எனச் சுட்டிக் காட்டினர்.

 

மேலும் படிக்க …மணமேல்குடியில் நடந்த சீர்திருத்த திருமணம்: விளக்கமும் சுயவிமர்சனமும்

பிளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியை மிரட்டி கடந்த நான்காண்டுகளாகப் பாலியல் வன்முறையை ஏவி வந்த,  திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வராகவும் பாதிரியாராகவும் உள்ள ராஜரத்தினத்தின் பாலியல் அட்டூழியம் அண்மையில் வெளிவந்து தமிழகமெங்கும் நாறத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க …செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம் !!

மகத்தான மக்கள் மருத்துவர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ் நூற்றாண்டு விழா !

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த போராளி டாக்டர் கோட்னிஸ் புகழ் நீடுழி வாழ்க !!

மருத்துவ வரலாறு எத்தனையோ தலைசிறந்த மருத்துவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே தங்களையும் தங்கள் மருத்துவ அறிவையும் அர்ப்பணித்த மருத்துவர்கள் அரிதினும் அரிதே. அத்தகைய அரிய மருத்துவர்களில் ஒருவர்தான் டாக்டர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ்.

மேலும் படிக்க …மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா

போதிய அளவுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காச்சல், பன்றிக் காச்சல், சிக்குன்குனியா மற்றும் இன்னும் பெயர் தெரியாத பல புதிய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பல அரசு மருத்துவமனைகளில் மருந்துகளும் இல்லை; குடிநீர், மின்சாரம், இரத்த வங்கி, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., அவசர சிகிச்சைப் பிரிவு, ஆம்புலன்ஸ் முதலான வசதிகள் இல்லாமலும், அறுவை சிகிச்சை, தண்ணீர் சிகிச்சை, இதயநோய் சிகிச்சை, தோல்நோய் சிகிச்சை, குழந்தை நலம், எலும்பு முறிவு முதலானவற்றுக்கு மருத்துவர் இல்லாமலும், தண்ணீர் இல்லை, போதிய இடவசதி இல்லை என்று பல்வேறு காரணங்களைக் கூறியும் நோயாளிகளை விரட்டும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தொடர்ந்து பல ஏழைகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனையா - மரண வாசலா

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழியில்லாமல், தங்களது சிறு உடமைகளை விற்றும் கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றைக் கண்டித்து பலமுறை மனு கொடுத்தும் மருத்துவமனை நிர்வாகமோ, அரசோ அசைந்து கொடுப்பதில்லை. மறுபுறம், கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் கொழுப்பதற்காகப் பலநூறு கோடிகளை அரசு ஒதுக்குகிறது.

அரசின் அலட்சியத்தை எதிர்த்தும், அரசு மருத்துவமனையைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தி மக்களின் உயிரைக் காக்கக் கோரியும் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், 11.10.2010 அன்று வாகனப் பேரணியையும், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கோத்தகிரி டானிங்டன் பகுதியிலிருந்து காமராஜர் சதுக்கம் வழியாக மார்க்கெட் திடலை இப்பேரணி வந்தடைந்ததும், அங்கு சங்கத்தின் தலைவர் தோழர் செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை சீர்கேட்டை அம்பலப்படுத்தியும், அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்துத் தனியார் மருத்துவமனைகளை ஊட்டிவளர்க்கும் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்த்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, கடந்த 2009-ஆம் ஆண்டின் இறுதியில் மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தலைமை மருத்துவமனை என்ற பெயர்ப்பலகை மட்டும்தான் இங்கு இருக்கிறதே தவிர, இங்கு போதிய மருத்துவர்களோ மருந்துகளோ இல்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை அறவே புறக்கணித்துவரும் அரசை எதிர்த்தும், மருத்துவம் பெறுவது நமது அடிப்படை உரிமை, அதைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை என்பதை உணர்த்தியும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பென்னாகரம் வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, அதன் தொடர்ச்சியாக 11.10.2010 அன்று பென்னாகரம் அரசு மருத்துவமனை முன்பாக தோழர் சிவா தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் தமிழக அரசை எதிர்த்தும், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையை எதிர்த்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், போராடாமல் அடிப்படை உரிமைகளை நாம் பெறமுடியாது என்பதை உழைக்கும் மக்களுக்கு உணர்த்து வதாக அமைந்தன.


மாவோயிஸ்டுகள் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள காங்கேர் மாவட்டத்தில் ஆகஸ்டு 29, 2010 அன்று நடத்திய திடீர்த் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களும் இரண்டு போலீசாரும் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதல் நடந்து ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து, இத்தாக்குதலை நடத்திய 17 மாவோயிஸ்டுகளைப் பிடித்துவிட்டதாக காங்கேர் மாவட்ட போலீசார் அறிவித்தனர்.  காங்கேர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியபொழுது, இம்மாவோயிஸ்டுகளைக் கைது செய்ததாகவும் போலீசார் அறிவித்தனர்.

மேலும் படிக்க …பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கைந்து மாதங்களுக்குள் 108 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகு, நூற்றுக்கும் மேற்பட்டோரை – இவர்களுள் மாணவர்களும் சிறுவர்களும் அடக்கம் – பொது அமைதிச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்குள் தள்ளிய பிறகு, தனது ஜனநாயக முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எட்டு அம்சங்கள் அடங்கிய சலுகைத் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மைய அரசு.

மேலும் படிக்க …காஷ்மீர் சலுகைத் திட்டம் : மீண்டுமொரு மோசடி நாடகம்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க …ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !

மத்திய அமெரிக்காவின் வறுமைமிக்க ஹெய்தி நாட்டில், கடந்த ஜனவரியில் தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெதி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில், கொலைகார மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க …அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்

வறண்ட பூமியாக உள்ள ராஜஸ்தான் மாநிலம் விரைவில் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சும் பாசனத்தைச் செயல்படுத்திப் பேரழிவை விதைக்கக் கிளம்பியுள்ளது, அம்மாநில அரசு .

பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ விதை நிறுவனத்துடன் ராஜஸ்தான் மாநில அரசு கடந்த ஜூலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகின் ஏகபோக விதை நிறுவனமான மான்சாண்டோவுடன் கூட்டுச் சேர்ந்து, இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் வீரியரக சோளம், பருத்தி, மிளகு, தக்காளி, முட்டைக்கோசு, வெள்ளரி, காலிபிளவர், தர்ப்பூசணி முதலானவற்றுக்கான விதைச் சந்தையை விரிவுபடுத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. அரசின் விவசாயத்துறை, தோட்டக் கலைத் துறை, சுவாமி கேசவானந்த் விவசாயப் பல்கலைக்கழகம், மகாராணா பிரதாப் விவசாயத் தொழில்நுட்பக் கழகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பாக அம்மாநில அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இரகசியமாகப் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விவரம் கேட்டதன் வாயிலாக இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.

பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ நிறுவனத்தினால் ராஜஸ்தான் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது

இந்த ஒப்பந்தப்படி, மான்சாண்டோ நிறுவனம் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிட்டு நடத்தும். இதன் தொடர்ச்சியாக வீரியரக விதைகளைக் கொண்டு விவசாயம் செய்து, அவற்றைப் பெருக்கிப் பரவலாக்கவும் செய்யும். உதாரணமாக பருத்தியை எடுத்துக் கொண்டால், பருத்தி பயிரிடுவது, உரமிடுவது, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது, அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்துவது, விதைகளைச் சேகரிப்பது முதலான அனைத்தும் மான்சாண்டோவின் மேற்பார்வையில்தான் நடக்கும்.

மான்சாண்டோவின் வீரியரக விதைகள் கொடிய இரசாயனங்களால் பாடம் செய்யப்பட்டவை; பயன்படுத்துவதற்கே அபாயகரமானவை. அதிக மகசூல் தரும் வழக்கமான விதைகளை விட, மான்சாண்டோவின் வீரியரக விதைகள் ஒன்றரை மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சக்கூடியவை. மேலும், இந்த விதைகள் கூடுதலாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டையும் அதிகரிக்கக்கூடியவை. இதனால் மண்வளமும் நீர்வளமும் குறைந்து ராஜஸ்தான் மாநிலம் விரைவில் மனித இனம் வாழ முடியாத நச்சுப் பாலைவனமாகிப் போகும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தப்படி, மாநில அரசின் விவசாய மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை மட்டுமின்றி, மரபணு ஆராய்ச்சி செய்து கொள்ளவும் மான்சாண்டோ நிறுவனத்துக்குத் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு மாநில அரசுதான் ஊதியம் கொடுக்கப் போகிறது. இத்தகைய அடிக்கட்டுமான வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மான்சாண்டோ தனது லாபத்தைப் பெருக்கிக் கொள்ளப் போகிறது. மொத்தத்தில், ராஜஸ்தானின் விவசாய ஆராய்ச்சி முழுவதையுமே மான்சாண்டோ கட்டுப்படுத்துவதாகவும் விவசாயப் பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோவுக்கு அடிபணிந்து வேலை செய்வதாகவும் மாற்றப்பட்டுள்ளன.

பிரபல அறிவியலாளரான பி.எம்.பார்கவா உள்ளிட்டுப் பல்வேறு அறிவியலாளர்களும் சுற்றுச்சூழலாளர்களும் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய பல்கலைக்கழகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் இப்படியொரு ஏகாதிபத்திய நிறுவனத்துக்குச் சேவை செய்யுமாறு மாற்றுவது எந்த வகையில் நியாயமாகும் என்று கேட்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களையும் விதைகளையும் சட்ட விரோதமான முறையில் அங்கீகரித்து, இந்திய அரசின் பல்வேறு துறைகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சேவை செய்கின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றர்.

ராஜஸ்தான் மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஒரிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்று சோளம், பருத்தி மற்றும் காய்கறிகளுக்கு வீரிய ரக விதைகளை மான்சாண்டோ அளிக்கப் போகிறது. 2012-13-க்குள் மரபீணி மாற்றப்பட்ட சோளம் மற்றும் பருத்தியைப் பயிரிடவும், களப்பரிசோதனைகள் செய்யவும், நாடு முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், இந்திய அரசின் 450 விஞ்ஞானிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விதைகளையும் விவசாயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவதாக மாண்சாண்டோ மாறிவிடும். இனி இந்தியா என்பதற்குப் பதிலாக, மாண்சாண்டோலாந்து என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
_____________________________

டாடா குழுமம், ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தேசங்கடந்த தொழிற்கழகம். 2005-ஆம் ஆண்டு கணக்குப்படி 76,500 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டது. நாட்டில் அக்குழுமத்துக்கு அநியாயத்துக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத – சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.

மேலும் படிக்க …டாடா குழுமத்தின் கோரமுகம் -1

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் ஏறத்தாழ 5,000 பேர் கொண்ட குறவன் சாதியினர் 15 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். மிகவும் தாழ்த்தப்பட்டவர்களான, அனைத்துச் சாதியினராலும் ஒடுக்கப்பட்டவர்களுமான, கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகமிகப் பின்தங்கியவர்களுமான இவர்கள் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், இடைத்தரகர்களை வைத்து ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இலஞ்சம் வாங்கிக் கொண்டு, “இந்து குறவன் ” (SC)என்று வருவாத்துறை அதிகாரிகள் சாதிச் சான்றிதழ் தருகின்றனர். ஏழைகளான குறவன் சாதியினர் பணம் கொடுக்க முடியாவிட்டால் “குறவர் ” (DNC) என்று சாதிச் சான்றிதழ் தருகின்றனர். அரசின் சாதிப்பட்டியலில் குறவன் சாதியை தாழ்த்தப்பட்ட சாதி என்று குறிப்பிடும்போது, இங்கு மட்டும் அவ்வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். சீர்மரபினர் (De notified Caste) என்று புதிய சாதியைக் குறிப்பிடுகின்றனர்.

வட்டாச்சியல் அலுவலகமா ஆதிக்க சாதிவெறி கூடாறமா

குறவன் சாதிச் சான்றிதழ் தர 50 ஆண்டுகால ஆதாரம் கேட்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முதல் மகனுக்கு “இந்து குறவன்‘”என்றும், இரண்டாவது மகனுக்கு “குறவர்” என்றும் இருவேறு சாதிகளைக் குறிப்பிட்டுச் சான்றிதழ்களைக் கொடுத்துத் தொல்லைப்படுத்துகின்றனர். ஆவணங்கள்-விண்ணப்பங்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, சாதிச் சான்றிதழ் தராமல் இழுத்தடித்து விண்ணப்பதாரர்களை கடும் மன உலைச்சலுக்கு ஆளாக்கி இழிவுபடுத்துகின்றனர். இந்த சீர்மரபினர் சான்றிதழை வைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பட்டியலில் மத்திய-மாநில அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் குறவன் இன இளைஞர்கள் பரிதவிக்கின்றனர்.

வட்டாட்சியரான ஜோதி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி இதற்கு முன்பு குறவன் (SC) சான்றிதழ் வழங்கி வந்தார். ஆனால், வருவாய் ஆய்வாளர்களும் கிராம நிர்வாக அலுவலர்களும் சாதி வெறியர்களுக்குத் துணைபோவதால், இப்போது இந்துக் குறவன் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. வட்டாட்சியர் மீது பொய்ப்புகார் சுமத்தியும், குறவன் எனச் சாதிச் சான்றிதழ் தரக்கூடாது என்றும் சாதிவெறியர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டு எச்சரித்துள்ளனர். அந்த நேர்மையான அதிகாரி மீது இப்போது விசாரணை நடந்து வருகிறது.

குறவன் சாதி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்த அநீதியை எதிர்த்தும், சாதி வெறியர்களை அம்பலப்படுத்தியும் “அரசியல் சாசனத்தை மீறும் வருவாய் ஆய்வாளர் நாகலிங்கம், கிருஷ்ணவேணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களையும் பணிநீக்கம் செய்! இந்து குறவன் சாதிக்கு அரசுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு சாதிச் சான்றிதழ் கொடு!” என்ற முழக்கங்களுடன் திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி 11.10.2010 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் பொன்னுசாமி தலைமையில், திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் சிறப்புரையாற்ற, வி.வி.மு., மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு குறவன் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
______________________________

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க …சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி : ஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை !!

“ஆதார்” எனப்படும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம், கடந்த செப்டம்பர் 29 அன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் நந்தன் நிலகேணி ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது.  இந்த தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம், திட்டக் கமிசனால் உருவாக்கப்பட்டு, நந்தன் நிலகேணி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க …தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. நீதிமன்றங்களில் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. வெட்டவெளிச்சமாக நடக்கும் மணல் கொள்ளை பற்றி சட்டமன்றத்தில்கூட எதிர்க்கட்சியினர் முறையிட்டுள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த பல அரசு ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் உயிரையே இழந்துள்ளனர். இவ்வளவுக்குப் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இப்போது தாமிரபரணி மற்றும் பாலாற்றில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு மட்டும் தடைவிதிக்கிறது, தமிழக அரசு.

மேலும் படிக்க …மணற்கொள்ளை: பேரழிவுக்குள் தள்ளப்படும் தமிழகம்!

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்குப் பரிந்துரை செய்திருந்த கல்விக் கட்டணத்தின் மீது உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் நீதிபதி விதித்திருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்ற ஆயம் தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி பார்த்தால், தமிழகத்திலுள்ள 10,000- க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் தற்போதைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்திற்கு மேல் ஒரு பைசாகூடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என அவ்வாயம் நேர்மறையான தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றமோ பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக்கூடாது என்ற உத்திப்படித் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது.

மேலும் படிக்க …கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

“பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் காவி பயங்கரவாதம் நமது நாட்டில் புதிதாகத் தலை தூக்கியுள்ளது” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார். இந்து பயங்கரவாத அமைப்பினர் உடனே துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். நாடாளுமன்ற மேலவையை ஒருநாள் இயங்கவிடாமல் முடக்கினர்.

மேலும் படிக்க …காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!

ஒரு உரிமையியல் மூல வழக்கில் முஸ்லிம்களின் ஆவணச் சான்றுகளையும் அனுபோக உரிமையையும் புறக்கணித்துவிட்டு, ராமன்பிறந்த இடம் இதுதான் என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம் பார்ப்பனப் புராணப் புரட்டுகளுக்கும் இந்துவெறி பாசிச சதிகளுக்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது, அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992-இல் நடந்த பாபர் மசூதி இடிப்பை அங்கீகரித்து, இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளைக்  கௌரவித்திருக்கிறது, இந்த அநீதி மன்றம். இந்துவெறி பயங்கரவாதிகள் இத்தனை காலமும் என்ன சொல்லி வந்தார்களோ, அதையே அயோத்தி வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்கள், மூன்று பேர் கொண்ட அலகாபாத் உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள்.

மேலும் படிக்க …அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!

ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 1992-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசு இத்தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இத்தடை நீட்டிப்பு உத்தரவு, நடுவர் மன்றத்தில் ஆறு மாதங்களுக்குள் உறுதி செய்யப்பட வேண்டும். இச்சடங்கின்படி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் படிக்க …விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம் !

பெண்ணாடம் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள அரசினர் ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் பத்தாம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவன் 2.9.2010 அன்று நண்பகல் 12 மணியளவில் அவ்விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்டுப் பதறித் துடித்து வந்த அம் மாணவனின் பெற்றோரிடம் அவ்விடுதியில் சமையல் வேலை செய்யும் ராமச்சந்திரனும் செல்வராம் மேலே பிணம் கிடப்பதாக அலட்சியமாகப் பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இறந்துபோன மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் இம்மர்மச் சாவு பற்றி போலீசிடம் புகார் அளிக்கச் சென்றபொழுது, போலீசு நிலையத்தில் விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜன் போலீசாரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

மேலும் படிக்க …அநீதியைத் தட்டிக் கேட்ட மாணவன் படுகொலை! குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது போலீசு

""நாபாம்'' தீக்குண்டு, ""ஏஜெண்ட் ஆரஞ்ச்'' போன்ற இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் உலக முன்னணி நிறுவனம் ""டௌ கெமிக்கல்ஸ்''. அதன் நாசகார ஆயுத உற்பத்திக்கு எதிராக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராடுகிறார்கள். குறிப்பாக, வியத்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்ததும் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் தான்.

 

மேலும் படிக்க …போபால் கொலைகார 'டௌ' - வே வெளியேறு

""அமெரிக்கப் படைகள் இராக்கில் நடத்தி வந்த போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31, 2010 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக'' அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி இராக்கிலிருந்து வெளியேறியது. இந்த நடவடிக்கைகள் மூலம், ""இராக் தற்பொழுது சுதந்திரமான சுயாதிபத்தியமுள்ள நாடாக ஆகிவிட்டதாகவும், இராக்கிற்கு விடுதலை பெற்றுத்தரும் தனது நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாகவும்'' உலக நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

 

மேலும் படிக்க …இராக் அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்

சென்னை, சேத்துப்பட்டு பள்ளிக்கூடச் சாலை "டோபி கானா' எதிரில் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் 1997 முதல் சாராயக் கடை (ஒயின்ஸ் கடை) ஒன்று இயங்கி வந்தது. அதை அகற்றும்படி கோரி பொதுமக்கள் ம.க.இ.க. தலைமையில் பல ஆண்டு களாகப் போராடி வருகின்றனர். தனியார் முதலாளியிடம் இருந்தபோது இப்பகுதியின் ரவுடி தங்கைய்யாவையும் போலீசையும் வைத்து தோழர்களை மிரட்டியும் விலைக்கு வாங்கவும் முயன்று தோற்றுப் போனார்கள். மாவட்ட ஆட்சியாளர் ஆய்வுக் குழு அனுப்பினார். அதைச் சந்தித்து முறையிடப் போன மக்கள் ஊர்வலத்தை வழிமறித்த போலீசு சாராய வியாபாரிக்குத் துணை நின்றது.

 

மேலும் படிக்க …சாராயக் கடைக்கு மூடுவிழா! மக்களுக்குத் திருவிழா !

திருவாரூர் தனி மாவட்டம் ஆன பின், மாவட்ட நிர்வாகக் கட்டிடங்களைக் கட்டுவதற்காக திருவாரூரின் அருகே அமைந்துள்ள விளமல், சிங்களாஞ்சேரி, தண்டலை, மே.மங்கலம் ஆகிய கிராமங்களின் விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனால் வேலை இழந்த விவசாயிகளுக்கு எவ்வித மாற்று வேலையும் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் அரசு உயர் அதிகாரிகள், அரசு ஒப்பந்தக்காரர்களின் வீடுகளில் துப்புரவு பணியாளர்களாகவும், எடுபிடிகளாகவும் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

மேலும் படிக்க …விளை நிலங்கள் வீட்டு மனைகள் ஆக்கப்படுவதைத் தடைசெய்

புதுவை வடமங்கலத்திலுள்ள இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் தொடர்ந்து நிலவிவரும் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர் அய்யனார் 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் குறைகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு வழங்கப்பட்ட 10 நாட்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் 15.09.2010 அன்று ஆலைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் எழில் தலைமை உரையாற்றினார். தோழர் முத்துக்கிருஷ்ணன், தோழர் லோகநாதன் கண்டன உரையாற்றினர். பு.மா.இ.மு. புதுவை மாநில அமைப்பாளர் தோழர் கலை மற்றும் பு.ஜ.தொ.மு. புதுவை மாநிலப் பொருளாளர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வருவதையும் நமது வரிப்பணத்தில் கொழுத்து வருவதையும் அதற்கு துணைநிற்கும் ஓட்டுக்கட்சித் துரோகிகளையும் அம்பலப்படுத்திப் பேசினார்கள்.

மாற்றுத் தொழிற்சங்கத்தை அம்பலப்படுத்தியும், சாதிரீதியாக தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி வைத்திருப்பதை உணர்த்தும் வகையில் தோழர்கள் பேசியதும், தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கமாய் அணிதிரண்டு நக்சல்பாரிப் பாதையில் போராட வேண்டும் என்று அறைகூவி அழைத்ததும் தொழிலாளர் மத்தியில் புதுத்தெம்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பு.ஜ.தொ.மு., புதுவை.

""விலைவாசி உயர்வு, பன்னாட்டுத் தொழில் கழகங்களின் ஆலைகளில் தொழிற்சங்கங்கள் நிறுவும் உரிமை, 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு போன்ற உரிமைகள், ஒப்பந்த வேலைமுறை ஒழிப்பு, ஊக வாணிபத்துக்குத் தடை, தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலைக் கைவிடுதல்'' முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு.; எச்.எம்.எஸ்., உள்ளிட்ட எட்டு மையத் தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 7ந் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

 

மேலும் படிக்க …மறு காலனியாதிக்கத்தைத் தகர்ப்போம்

அயோத்தியில் இந்துவெறியர்களால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இத்தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது, சமரசத் தீர்வு காண்பதற்கு இன்னும் ஒரு வாய்ப்பளிக்கலாம் என்று கூறி, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட ஒரு வாரம் தடைவிதித்து உத்தரவிட்டு மீண்டும் இழுத்தடித்தது, உச்ச நீதிமன்றம்.

 

மேலும் படிக்க …அயோத்தி: தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு அருகதை உண்டா?

விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத்தொழிலாக மேற்கொண்டு வந்த தமிழக விவசாயிகள், கடந்த இரு மாத காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலுள்ள கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள், இறந்த கோழிகளை சுகுணா நிறுவனத்தின் முன்பாகப் போட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தமது 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் இப்போராட்டம் தற்போது ஓய்ந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

மேலும் படிக்க …கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!

ஈராண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்தும் சதிகளுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் நாடே குலுங்குகிறது. பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஏறத்தாழ 20 லட்சம் பேர் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். பள்ளி-கல்லூரிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து துறைகளும் அன்று செயலிழந்து முடமாகிப் போயின. தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அரசு ஊழியர்களும் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு நாடெங்கும்  220-க்கும் மேற்பட்ட இடங்களில்  ஆர்ப்பாட்டங்களை  நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க …மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

1984 நச்சு வாயுப் படுகொலைகள் வழக்கில் போபால் வழக்குமன்றத் தீர்ப்பு வந்தவுடன் நாடே கொந்தளித்துப் போனது. அக்கோரச் சம்பவம் நடந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. அன்று போபாலில் என்ன நடந்தது; எப்படி நடந்தது; எவ்வளவு பேரழிவும் துயரமும் நிகழ்ந்தது என்று இன்று கேள்விப்படும் புதிய தலைமுறையினரின் நெஞ்சிலே எழும் முதற்கேள்விகள் இவைதாம்: இத்தனைக்கும் காரணமான குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?

மேலும் படிக்க …ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப்   போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க …மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?

இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்களில் ஒன்றான ‘இந்தியத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry) ‘2025-இல் தமிழகம்’ -(Tamilnadu Vision 2025) என்றொரு அறிக்கையை 2008-இல் வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (Price Water Coopers) என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.

மேலும் படிக்க …நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் – 2

தன்னுடைய சாதனைகளையும் தகுதியையும் இந்த தேசம் நியாயமாக மதிப்பிட்டுப் பார்த்திருக்கும் பட்சத்தில், காந்தி – நேரு வரிசையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவராகத் தான் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்து. இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக அவர் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க …ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க …இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் 10.7.2010 அன்று திருமணம் நடந்தது.  இதிலென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.  மணமகன் அலாவுதீன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.  மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் உள்ளூர் கிளை செயலாளரின் மகள்.  பு.மா.இ.மு. அமைப்புத் தோழர்களின் தலைமையில் முசுலீம் மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடந்த திருமணம் இது என்பதுதான் இதன் சிறப்பு.

மேலும் படிக்க …மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!

நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன் ஒன்றையே தனது நலனாகக் கருதுகின்ற, ஏகாதிபத்தியத்தின் கையாள்தான் நாம் அறிந்த காங்கிரசு.

மேலும் படிக்க …ராகுல் காந்தி : பழங்குடி அவதார்!

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள்  முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

மேலும் படிக்க …அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

இந்தியாவின் முக்கியமான தொழில்துறையும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதுமான ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பருத்தி நூலிழையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதே இந்த நெருக்கடிக்குக் காரணம். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கேண்டி (350 கிலோ) 23,000 ரூபாயாக இருந்த பஞ்சின்  (சங்கர் 6 என்ற பருத்தி ரகம்)சந்தை விலை, இன்று 40,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

மேலும் படிக்க …ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?

உ.பி. மாநிலத்தின் காசியாபாத் மாவட்டக் கருவூல அதிகாரிகளும் நீதிபதிகளும் கூட்டுச் சேர்ந்து,  கடைநிலை அரசு ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து  ரூ.34.56 கோடியைச் சட்டவிரோதமாக மோசடி செய்து சுருட்டி ஏப்பம் விட்டனர். கருவூல அதிகாரியான அஷுடோஷ் அஸ்தானா என்பவனுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து,  நீதிபதிகளும் கருவூல அதிகாரிகளும் இம்மோசடிக்கு உடந்தையாக இருந்து பணத்தைப் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர். 2001-இலிருந்து 2008-வரை நடந்துள்ள இந்த மோசடி மெதுவாகக் கசிந்து ஏப்ரல் 2008-இல் அஸ்தானா கைது செய்யப்பட்டான். அவனுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க …நீதிபதிகள்: ஊழல் பெருச்சாளிகள்!

இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி பயங்கரவாத ராஜபக்சே கும்பல், இப்போது ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவ முகாம்களை நிறுவி சிங்களக் குடியேற்றத்தை நடத்தி வருகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்படவில்லை. சிறையிடப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் ஊடகவியலாளர்களும் இன்னமும் விடுவிக்கப்படவுமில்லை.


மேலும் படிக்க …இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக....தமிழகத்திலும் இலண்டனிலும் ஆர்ப்பாட்டங்கள்

ஐ.நா. அவையின் அறிக்கையின்படி, பசியால் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65- ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 37 கோடி நபர்களுக்குக் கழிப்பிட வசதி இல்லை. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 40 சதவீதத்தினர் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சான்களாக உள்ளனர். இவை இந்திய மக்களின் ஏழ்மையையும், அவல நிலையையும் காட்டும் புள்ளி விவரங்கள்.


மேலும் படிக்க …செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது! -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு!

தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் - அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.


மேலும் படிக்க …தொடரும் அரசியல் கூத்துக்கள்

முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த போலீசு எஸ்.பி பிரேம்குமாரை, 2.8.2010 அன்று, மாரக்கண்டேய கட்ஜு, சி.பி.தாகுர் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விடுதலை செய்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நீதிபதிகளுக்குக் கும்பிடு போட்டார், பிரேம்குமார்.


மேலும் படிக்க …நல்லகாமன் வழக்கு: தோல்வி நிலையென நினைத்தால்...

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!", "இப்பொழுதே வேண்டும் விடுதலை!" என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. "இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது" என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.


மேலும் படிக்க …காஷ்மீர் இந்திய இராணுவமே வெளியேறு!

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்துக் குற்றவாளிகளை ஒருநாள்கூடச் சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது, போபால் நீதிமன்றம். 23,000 இந்திய மக்களைப் படுகொலை செய்து, 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் பயங்கரவாதியான  யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது, அமெரிக்க  அரசு.


மேலும் படிக்க …போபால்: கொலைகார 'டௌ'-வே வெளியேறு! புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை

இதைவிட கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க …இதைவிட வக்கிரம் இருக்க முடியுமா?

இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.

மேலும் படிக்க …பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.

மேலும் படிக்க …அயோத்தி : ராம ஜென்ம பூமியா? கிரிமனல் சாமியார்களின் கூடாராமா?

பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?

அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.

மேலும் படிக்க …அயோத்தி ராமனா? அய்யோ பாவ ராமனா?

நிலத்தடியில் நீர் இல்லாத பூமி. நினைத்த நேரத்தில் கண்ணாமூச்சி காட்டும் மின்சாரம். இவற்றுக்கிடையில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு கருணாநிதி அறிவித்திருக்கும் சுதந்திர தினப் பரிசு – இலவச மின்சார மோட்டர் பம்புசெட்டுகள்!

மேலும் படிக்க …நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!

ஐந்தாண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் ஷேக் என்ற முசுலீம் ‘தீவிரவாதியின் ஆவி’, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை மீண்டும் துரத்தத் தொடங்கியிருக்கிறது. மிரட்டிப் பணம்பறிப்பது, ஆயுதங்களைக் கடத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களைச் செய்துவந்து உள்ளூர் தாதாவான சோராபுதின் ஷேக் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.  குஜராத் போலீசாரால் சோராபுதினோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ ‘காணாமல்’ போனார்.

மேலும் படிக்க …சோராபுதின் போலி மோதல் கொலை: முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!

 

 

‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

மேலும் படிக்க …காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!

அணு விபத்துக் கடப்பாடு மசோதாவை, பா.ஜ.க.-வின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்தாகி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் ஒப்புதலைச் சதித்தனமான முறையில் பெற்றுவிட்ட அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் (123 ஒப்பந்தம்) இளைய பங்காளிதான் இந்த அணு விபத்துக் கடப்பாடு சட்டம்.

மேலும் படிக்க …அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!

தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் – அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.

மேலும் படிக்க …தேர்தல்: தமிழக அரசியல் கூத்துக்கள் !!

பல தலைமுறைகளாக ஊழலிலே ஊறித்திளைத்த காங்கிரஸ் கொள்ளைக் கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து கீழ்த்தரமாகப் பொறுக்கித் தின்றிருப்பது இப்போது சந்தி சிரிக்கிறது.

மேலும் படிக்க …காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

அண்டை நாடான நேபாளத்தில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான நேபாள  மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த  ராம் குமார் சர்மாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. தலைநகர் காத்மண்டு-வில்  இந்தியத் தூதரகம் நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலிருந்து அவரது மகள் நீக்கப்படுவார் என்றும், நாங்கள் குறிப்பிடுவது போல் பிரதமர் தேர்தலில் செயல்படாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் தொலைபேசி வழியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டினர்.

மேலும் படிக்க …நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா!!

......................................................................................
ஈழத்துரோகிகளையும் எடுபிடிகளையும் கொண்டு, தமிழின அடையாளத்தையே அழித்து ஆதிக்கம் செய்ய முயற்சிக்கிறது ராஜபக்சே கும்பல்
........................................................................................

மேலும் படிக்க …இந்தியாவின் ஆசியுடன் ராஜபக்சவின் ஆதிக்கம்

தூத்துக்குடியையே நஞ்சாக்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான "ஸ்டெர்லைட் தாமிரா" உருக்காலை நிறுவனம், வரிஏப்பு மூலம் ரூ.750 கோடியைச் சுருட்டியுள்ள விவகாரம் அண்மையில் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க …ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகியைச் சிறையிலடைத்த வழக்குரைஞர்களின் போராட்டம்!

.................................................................................................
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைச் சந்தைச் சூதாட்டம் தீர்மானிப்பதற்கு இருந்து வந்த பெயரளவிலான தடையும் நீக்கப்பட்டு விட்டது.
....................................................................................................

காங்கிரசு கூட்டணி ஆட்சி கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்றாம் முறையாக பெட்ரோல்-டீசலின் விலையை உயர்த்தியிருக்கிறது. அதே சமயம், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விலையேற்றத்தை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொண்டுவிட முடியாது.

மேலும் படிக்க …பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம்: தடையற்ற கொள்ளைக்கு அனுமதி!

..................................................................................................
சௌதி அரேபியாவில் வேலை பார்த்துவரும் ஆசிய நாட்டுத் தொழிலாளர்களின் துயரம் பற்றிய உண்மைச் சித்திரம்.
....................................................................................................

சௌதி அரேபியா-மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. அதன் பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும், மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சோற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு, எண்ணெ வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலைகீழா மாற்றமடைந்தது.

மேலும் படிக்க …திரவியம் தேடிப் போனவர்களின் துயரக்கதை

.............................................................................................
தீட்சிதர்களைப் பார்ப்பனர் என்று சொல்வதையே எதிர்க்கும்மார்க்சிஸ்டுகள்; சொல்லில் தவிர, செயலில் பார்ப்பன எதிர்ப்பைக் காட்டத் துணியாத கருணாநிதி-இருவருக்கும் இடையில் நடப்பது வெறும் நிழற்சண்டைதான்.
...............................................................................................

மேலும் படிக்க …தில்லைக்கோயில் தீண்டாமைச் சுவர்: ‘மார்க்சிஸ்டு’-கலைஞர் நிழற்சண்டை!

................................................................................................
ஆப்பிரிக்காவின் கனிம வளங்களைச் சூறையாடிய பன்னாட்டு முதலாளிகள்,
அக்கண்டத்தின் வளமிக்க நிலங்களையும் அபகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
.................................................................................................

மேலும் படிக்க …ஆப்பிரிக்கா: பன்னாட்டு முதலாளிகள் நடத்தும் நிலப்பறிப்பு

நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சோத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போ, தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச் சான்றிதழ் கொடுத்துப் பதவிக்கு வந்துவிட்டாரெனக் கூறி, அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.

மேலும் படிக்க …உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!

...........................................................................................................................
5,6 ஆண்டுகளில் 60,000 கோடி ரூபாய் மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்களைக் கடத்திக் கொள்ளையடித்திருக்கிறார்கள் ரெட்டி சகோதரர்கள்.
............................................................................................................................

மேலும் படிக்க …பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்

மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஆசாத் மற்றும் உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹேம் சந்திர பாண்டே ஆகியோரைச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றுவிட்டு, துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகக் கதையளந்திருக்கிறது ஆந்திர போலீசு. மாவோயிஸ்டு அமைப்பின் முக்கியமான தலைவர் ஒருவரைக் கொன்றுவிட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது காங்கிரசு அரசு.

மேலும் படிக்க …வீர வணக்கம், தோழர் ஆசாத்!

..............................................................................................................................
-தி.மு.க., அரசு நோக்கியாவுக்கு கொடுத்துள்ள சலுகைகள் யாவும், தமிழகத் தொழிலாளர்களை ஒடுக்கவும், ஒட்டச்சுரண்டவுமே பயன்படுகின்றன.
................................................................................................................................

மேலும் படிக்க …நோக்கியா:பன்னாட்டு வர்த்தக கழக ஆட்சி!

மகாராஷ்டிரா மாநிலம் - கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 11 பேரில் 6 பேருக்கு மரண தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் மூன்று பேரை விடுதலை செய்தும் பந்தாரா மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பளித்திருந்தது.

மேலும் படிக்க …கயர்லாஞ்சி-மேலவளவு தீர்ப்புகள்:நீதிமன்றங்களின் வன்கொடுமை

சாராய உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் விவசாயிகளின் வறுமையை ஒழிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. பயிரிடப்பட்டுள்ள சோளம், கம்பு, கேழ்வரகு, காட்டுப் பருப்பு முதலானவை திடீர் மழைகளால் அழுகி விவசாயிகள் பாதிக்கப்படுவதால், சேதமடைந்த அந்த தானியங்களைக் கொள்முதல் செய்து, அதிலிருந்து சாராயம் தயாரிக்கப் போவதாவும், இத்திட்டத்தின் மூலம் வறுமையிலுள்ள சிறு விவசாயிகள் பெரிதும் பலனடைவார்கள் என்றும், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு பெருமையுடன் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க …உணவு தானியத்திலிருந்து சாராயம்: ஏழைகள் மீது ஏவிவிடப்படும் இன்னுமொரு போர்!

மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக - அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

மேலும் படிக்க …குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்

உலகத்திலேயே கொடிய வறுமைத் தாண்டவமாடும் நாடுகளெல்லாம் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் உள்ளன என்று அனைவரும் இதுவரை எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், ஆப்பிரிக்காவை விட ஏழைகள் மிக அதிக அளவில் இருப்பது இந்தியாவில்தான் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை இப்போது வெளிவந்துள்ளது.


ஐ.நா ஆதரவு பெற்ற ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சி (OPHI) என்ற அமைப்பு உலகளவில் மேற்கொண்ட ஆவில், ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமான ஏழைகள் இந்தியாவின் 8 மாநிலங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 41 கோடி பேர் கொடிய வறுமையில் வாடுகின்றனர். இந்தியாவிலோ பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் வறுமையின் கோரப் பிடியில் உள்ளோர் 42 கோடியே 10 லட்சம் பேர்களாவர்.


வறுமையை அளவிடுவதற்கான பழைய முறைக்குப் பதிலாக, கல்வி, சுகாதாரம், தூமையான குடிநீர், உணவு, உடை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கொண்டு வறுமையை அளவீடு செய்யும் பல்பரிமாண வறுமைக் குறியீட்டு எண் (Multidimensional Poverty Index) என்ற புதிய முறையை பயன்படுத்தி இந்த ஆவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. மனிதவள மேம்பாட்டு ஆண்டு அறிக்கைக்கு இனி இந்த புதிய அளவீடைத்தான் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளனர். உலகிலேயே தெற்காசியாவில்தான் ஆப்பிரிக்காவைவிட இரு மடங்கு வறியவர்கள் உள்ளனர் என்ற உண்மையை உலகுக்கு அறிவித்துள்ளது, இந்தக் குறியீட்டு முறை.


சீனாவுடன் வல்லரசுப் போட்டியில் இருக்கும் இந்தியா, வறுமையை ஒழிக்கும் திட்டத்திலோ, களிமண் ரொட்டி தின்று உயிர்வாழும் நிலையில் தம் மக்களை வைத்துள்ள ஹெதி நாட்டோடு போட்டி போடும் நிலையில்தான் உள்ளது. ஏழு கோடி மக்களைக் கொண்டிருக்கும் மத்திய பிரதேசமோ, இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு காங்கோ நாடாக மாறி வருகிறது. பீகாரின் வறுமை-வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிக மோசமான அளவில் உள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஒரிசாவின் கிராமப்புறங்களில் 43% பேரும், பீகார் கிராமப்புறங்களில் 41% பேரும் வறுமையில் உள்ளனர்.


ஏகாதிபத்தியங்களின் சூறையாடலும் கடன் கொள்ளையும் உள்நாட்டுப் போரும் வறட்சியும் ஆப்பிரிக்காவின் வறுமைக்குக் காரணமென்றால், விவசாயத்தைச் சீரழித்து வரும் உலகமயப் பொருளாதாரம் இந்தியாவின் வறுமைக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விவசாயத்தின் சீரழிவால் வாழவழியின்றி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். "கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்று, ஒரு வருடத்தில் சராசரியாக உட்கொள்ளும் உணவு தானியத்தின் அளவு 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, இன்று 100 கிலோ குறைவாக உள்ளது" என்று இந்திய கிராமங்களின் வறுமையைப் பற்றி உட்சா பட்நாயக் என்ற பொருளாதார நிபுணர் கூறுகிறார். நாட்டுக்கே உணவு தந்த விவசாயிகள் இன்று சோற்றுக்கே அல்லாடுகிறார்கள். விவசாயத்தின் தோல்வியால் கோடிக்கணக்கானவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அத்துக் கூலிகளாகத் துரத்தப்படுகின்றனர். இதனால், இந்தியாவின் நகர்ப்புறச் சேரிகளில் மக்கள்தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளதை மத்திய அரசின் அறிக்கை ஒன்று உறுதி செய்கிறது.


நம் நாட்டில் வறுமையில் இருந்து மீள முடியாமல் உழல்வோரைத் தீர்மானிப்பதில் சாதி முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர்தான், வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்கின்றனர். வறுமை நிலையில் வாழும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களில் 66% பேர் உச்சக்கட்ட வறுமையில் உள்ளனர். இது, பிற்படுத்தப்பட்ட சாதியினரில் 58%மாக உள்ளது. இது தவிர, மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரில் 81% பேர் வறுமையில் உள்ளனர். இவர்களது வறுமை நிலையானது, தொடர்ந்து 16 ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டு மக்களின் வறுமை நிலையைவிட மோசமானதாக உள்ளது.


உலக மனிதவள மேம்பாட்டு தரப் பட்டியலிலும் இந்தியா, மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய உடல் வளர்ச்சியின்மை காரணமாக பிரசவத்தின் போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. நோஞ்சான் மக்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடும் இந்தியாதான். இந்தியாவின் கிராமப்புறத்தில் வாழும் சரி பாதிக் குழந்தைகள் எலும்பும் தோலுமாகவும் உடல் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 43% பேர் ஊட்டச் சத்தின்மையால் உடல் வளர்ச்சி குன்றிப் போ, ஆப்பிரிக்காவின் தெற்கு சஹாரா பாலைவனப் பிரதேசங்களை விட மோசமான நிலையில் உள்ளனர். நாட்டின் எதிர்காலம் எனப்படும் குழந்தைகளில் பாதிப்பேருக்கு நிகழ்காலமே கேள்விக்குறியாய் உள்ளது. இதனை மொத்தமாக தொகுத்து, உலக வங்கி இப்படிச் சான்றிதழ் அளிக்கிறது: "உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49%பேரும், உடல் வளர்ச்சி தடைபட்ட குழந்தைகளில் 34% பேரும், நோவாப்பட்ட குழந்தைகளில் 46% பேரும் வாழும் இடம் இந்தியா". மொத்தத்தில் உலகிலேயே குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாகத்தான் இந்தியா உள்ளது.

தனது குழந்தைகளின் நலனைக் கூடக் காக்க இயலாத இந்தியாதான் உலகின் மூன்றாவது பெரிய ராணுவத்தையும், நான்காவது வலிமையான கப்பல் படையையும் கொண்டுள்ளது. சோந்த நாட்டில் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைக் கூட உத்திரவாதப்படுத்த வக்கில்லாதவர்கள், விஞ்ஞானத்தை வளர்த்து ராக்கெட் விட்டு சந்திரனைப் பிடிக்கப் போகிறார்களாம்!


இந்திய அரசு வறுமையை அளவிடக் கையாளும் முறையோ வக்கிரமானது. நகரத்தில் ஒருவர் மாதம் 538 ரூபா சம்பாதித்தாலே, அதாவது மூன்று வேளை ஒருவரால் தேநீர் மட்டும் குடிக்க முடிந்தாலே அவர் வறுமைக் கோட்டை கடந்துவிட்டார் என்று வரையறுத்துள்ளது. இந்த அளவை பல வருடங்களாக மாற்றாமலேயே வைத்திருந்துவிட்டு, வறுமை குறைந்துவிட்டது என்று இதுவரை கதையளந்து வந்துள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தத் தெரிந்தவர்களுக்கு மக்களின் வாழ்நிலையை உயர்த்தும் வழிதெரியவில்லை.


கழுதை தேந்து தேந்து கட்டெறும்பான கதையாக, வறுமையில் ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையை இந்தியா இன்று அடைந்துள்ளது. அதேநேரத்தில் உலகப் பெருமுதலாளிகளின் வரிசையில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் அணிவகுத்து நிற்கும் அளவுக்கு அவர்களது சோத்துக்களும் பூதாகரமாக வளர்ந்துள்ளன. இதுதான் நாட்டின் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தனியார்மய-தாராளமய-உலகமயமாக்கத்தின் மகிமை!


-கதிர்.

இந்தியா ஒரு பெரிய நாடு உலகம் இதைவிடப் பன்மடங்கு பெரியது. போபால் நச்சுப் படுகொலைகள் ஏற்படுத்திய கோரம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊடகத் தலைப்புச் செய்திகளாக வந்து, ஒரு சில நாட்களே நீடித்திருந்தன. அதற்குள்ளாகவே காஷ்மீரில் அரசப் படைகளின் படுகொலைகள் ஒரிசாவில் பழங்குடி மக்கள் மீது போலீசின் தாக்குதல் வடகிழக்கு இந்தியாவில் நாகா மாணவர்கள் நடத்தும் நீண்ட முற்றுகைப் போராட்டம், மத்திய இந்தியாவில் நடக்கும் காட்டுவேட்டை மற்றும் போலி மோதல் கொலைகள் என்று பலவும் முன்னணிக்கு வந்து விடுகின்றன. இல்லையானாலும் , உலகக் கால்பந்துப் போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினாவின் அதிர்ச்சித் தோல்வி, தோனியின் திடீர் திருமணம், ராவணன் திரைப்படம் வெளியீடு என்று முதலாளித்துவ செய்தி ஊடகம் முன்தள்ளும் செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்ன்றன.

மேலும் படிக்க …போபால்: நீதியின் பிணம்

* 22,146 - போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் உண்மையான எண்ணிக்கை.

* 5,295 - அரசு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதற்காக அங்கீகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி இறந்து போனவர்களின் எண்ணிக்கை.

* 5,50,095 - நிரந்தரமாக மற்றும் பகுதியளவில் முடமாகிப் போனவர்கள், புற்று நோய், சீறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரின் மொத்த எண்ணிக்கை.


* 36,913 - அரசு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதற்காக அங்கீகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி முடமாகிப் போனோர், பிற வகைகளில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை.

* ரூ.1,500 கோடி - அரசு அறிவித்துள்ள கூடுதல் நிவாரணத் தொகை.

* ரூ.1,000 கோடி - யூனியன் கார்பைடு நிறுவனம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடாக அளித்த 47 கோடி அமெரிக்க டாலரை வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்ததன் மூலம் இந்திய அரசுக்குக் கிடைத்த வட்டிப் பணம், அதாவது இலாபம்.

- அந்த 1,500 கோடி ரூபாய்க்குள் இந்த 1,000 கோடி ரூபாயும் அடங்குமென்றால், பாதிக்கப்பட்டோரில் வெறும் 15 சதவீதப் பேருக்கு மட்டுமே உதவி கிடைக்குமென்றால்,

இதற்குப் பெயர் நிவாரணமா?

இந்திய நாடு மறுகாலனியாவது என்ற போக்கு போபால் படுகொலைகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்தவில்லையென்றால் நாடும் மக்களும் போபாலைவிடக் கொடிய கார்ப்போரேட் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும் படிக்க …அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது - செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?

அமெரிக்காவில் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் தரவேண்டிய இழப்பீடு 50,000 கோடி ரூபாய். இந்தியாவில் 2,300 கோடி ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது இம்மசோதா. போபால் படுகொலையில் ஆண்டர்சன் வகுத்த விதியைச் சட்டமாக்குகிறார் மன்மோகன் சிங்.

மேலும் படிக்க …ஆண்டர்சனின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாட்டு மசோதா

ரத்தக் கவிச்சி வீசும் யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் யார்? வியத்நாமில் வீசப்பட்ட நாபாம் குண்டுகள், இட்லரின் விசவாயு, சதாமின் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் இந்த அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.

மேலும் படிக்க … டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்

மீண்மும் இப்படிப்பட்ட கொடுமை நிகழக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட போபால் மக்கள். எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது.

மேலும் படிக்க …பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் - பி.சாய்நாத்

மெக்சிகோ வளைகுடாவை மாசுபடுத்திய பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை "குரல்வளையில் மிதிப்பேன்'' என்று சீறினார், ஒபாமா. ஆண்டர்சன் பாதுகாப்பாக இருக்கிறார் - -நியூயார்க்கில்.

மேலும் படிக்க …அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு - பேரரசின் நீதி

மருத்துவக் கழிவுகள், அணுக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், வெடிமருந்துக் கழிவுகள், நஞ்சு கக்கும் ஆலைகள் ... அனைத்தும் பாரதத் தாயின் வயிற்றில் ... வந்தே மாதரம்!

மேலும் படிக்க …இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?

போபால் படுகொலை தீர்ப்பைக் காட்டி காங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.

வாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அவரது கூட்டணி அரசு இந்தியத் தலைமை வழக்குரைஞராக இருந்த சோலி சோரப்ஜியிடம், "இந்திய-அமெரிக்கக் குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வாரன் ஆண்டர்சனை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசைக் கேட்க முடியுமா?" என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரியது. இதற்கு சோலி சோரப்ஜி, "யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றி பெற வாய்ப்பில்லை; எனவே, இந்த நடவடிக்கைகள் தொடருவதைக் கைகழுவி விடலாம்" எனக் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் படிக்க …யோக்கியன் வர்றான்...

"ஆலைக் கழிவுகளை அகற்ற முடியாது'' என்கிறது டௌ கெமிக்கல்ஸ்.
"நாங்களே செய்கிறோம்'' என்கிறது அமைச்சர் குழு.

"ஆஸ்பத்திரிக்கு செலவு செய்ய முடியாது'' என்கிறது டௌ.
"அரசே ஏற்று நடத்தும்'' என்கிறது அமைச்சர் குழு.

"கூடுதல் நிவாரணம் தர முடியாது'' என்கிறது டௌ.
"அதையும் நாங்களே தருகிறோம்'' என்கிறது அமைச்சர் குழு.

மேலும் படிக்க …அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?

"ஏதோ நடந்தது நடந்து போச்சு. யாரைக் குத்தம் சொல்ல முடியும்? ஏதோ பெரிய மனசு பண்ணி கொடுக்கிறாங்க. கொடுக்கிறத வாங்கிக்கிங்க. மத்ததை அரசாங்கம் பாத்து செய்யும்'' - இது நகைச்சுவையல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.

மேலும் படிக்க …ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்? உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து

யூனியன் கார்பைடைக் கொண்டுவந்தவர் இந்திரா காந்தி ஆண்டர்சனை வழியனுப்பி வைத்தவர் ராஜீவ் காந்தி டௌ கெமிக்கல்ஸுக்கு காவல் நிற்கிறார் சோனியா காந்தி ........................... தயாராகிறார் ராகுல் காந்தி

மேலும் படிக்க …ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!

பிள்ளைகளைப் பறிகொடுத்து, ஊனமுற்ற பேரப்பிள்ளகளைச் சுமந்தபடி, சோற்றுக்கும் மருந்துக்கும் காசில்லாமல், 26 ஆண்டுகளாக இந்த இரக்கமற்ற அரசை எதிர்த்து நிற்கும் பெண்கள் - யாருக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? தங்களுக்காகவா?

மேலும் படிக்க …அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை

அந்த நள்ளிரவில் கொல்லப்பட்டவர்களுக்கு அது மரண தண்டனை. ஓடி உயிர் தப்பியவர்களுக்கு உயிர் மட்டுமே மிச்சம். உடல் முழுவதும் ஊனம். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது சந்ததிகளுக்கும் இது ஆயுள் தண்டனை.

மேலும் படிக்க …உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்

"போபாலில் நடந்தது திட்டமிட்ட படுகொலை அல்ல, எதிர்பாராமல் நடந்த விபத்து'' என்றுதான் யூனியன் கார்பைடும் அரசும் நீதிமன்றமும் சாதிக்கின்றன. இல்லை, இது கொள்ளை இலாபத்திற்காக அமெரிக்க முதலாளி வர்க்கம் நடத்தியிருக்கும் படுகொலை.

மேலும் படிக்க …விபத்தா, படுகொலையா?

1984 போபால் படுகொலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம். மூச்சுக்காற்று முழுவதும் நச்சுக்காற்றாகவும், முழுநகரமும் சவக்கிடங்காகவும் மாறிய அந்த நள்ளிரவு .....
நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்.

மேலும் படிக்க …மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்...

டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3,828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண்பார்வை பறிபோனது. காற்றின் எதிர்த்திசையில் ஓடிய மக்கள் ஈக்களைப் போலச் சுருண்டு விழுந்து செத்தனர். முதல்வர் அர்ஜுன் சிங் நகரை விட்டுத் தப்பிச் சென்றார்.

டிசம்பர் 3, 1984: நகரெங்கும் பிணக்குவியல். எல்லாம் முடிந்த பிறகு, முதல்வரும் அதிகாரிகளும் திரும்பிவந்தனர். கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கில் 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு சேர்க்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் 20,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். 5,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க …போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்

ஆதிக்க சாதிவெறியர்களின் மனம் குளிரும்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது, உச்ச (அ) நீதிமன்றம். சுஷ்மா திவாரி என்ற இளம் பெண்ணின் கணவர், மாமனார் உள்ளிட்ட நான்கு பேர் பார்ப்பன சாதி கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அநீதியானது மட்டுமல்ல தீண்டாமைக்கும், ஆதிக்க சாதித் திமிருக்கும் வக்காலத்து வாங்கக் கூடியது. சமத்துவத்திற்கும், பெண்ணுரிமைக்கும் எதிரானது.

 

மேலும் படிக்க …சாதி கௌரவக் கொலைக்கு உச்சநீதி மன்றத்தின் வக்காலத்து

மேற்கு வங்கத்தில், லால்கார் வட்டாரத்தின் காடுகளையும் கனிம வளங்களையும் சூறையாடக் கிளம்பியுள்ள தரகுப் பெருமுதலாளித்துவ ஜிந்தால் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றுக்கு அடிக்கல் நாட்ட, கடந்த 2008 நவம்பரில் மத்திய அமைச்சர் பாஸ்வான், மே.வங்க முதல்வர் புத்ததேவ் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது, லால்கார் பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இத்தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், உடனடியாக மே.வங்க போலீசின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. லால்கார் வட்டாரத்தின் காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரைப் பிடித்து மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி, சித்திரவதை செய்யத் தொடங்கியது மே.வங்க போலீசு. போலீசு அடக்குமுறைக்கு எதிராக லால்கார் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடி, ‘இடதுசாரி’ அரசின் யோக்கியதையை நாடறியச் செய்தனர். இப்போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் தலையிட்டு, அதைப் போர்க்குணமிக்கப் போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர்.

மேலும் படிக்க …மாவோயிஸ்டு வேட்டையா? பழங்குடியின வேட்டையா?

அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை - நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு - தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்ற தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பொது உளவியலை, பளிச்சென்று காட்டுகிறது.

மேலும் படிக்க …நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

கர்நாடக மாநிலக் கடலோர மாவட்டப் பகுதியைச்சேர்ந்த வனிதா என்ற இளம் பெண்ணுக்கு ஒரு நல்லவேலை கிடைப்பதற்கு அவரது முசுலீம் தோழியின் குடும்பம் உதவி செய்தது. இந்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தனது தோழியின் வீட்டுக்குச் சென்ற வனிதாவை, பஜ்ரங் தள் என்ற சங்கப் பரிவார் அமைப்பைச் சேர்ந்த இந்து மதவெறிக் குண்டர்கள் வழிமறித்துத்தாக்கினர். இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத வனிதா தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனார். இச்சம்பவம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்ட போதிலும், வனிதாவைத் தாக்கிய, அவரைத் தற்கொலைக்குத்தூண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர்களுள் ஒருவர் மீதுகூட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க …காவி இருளில் சிக்கித் தவிக்கும் கடலோரக் கர்நாடகா!

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்குப் போதிய அதிகாரம் தனக்குத் தரப்படவில்லை என்று அங்கலாத்துக் கொண்டிருக்கிறார், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். மாவோயிஸ்டுகளை ஒடுக்காததற்கு மைய அரசுதான் பொறுப்பு என்று பாரதிய ஜனதாவும், சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால், சட்டிஸ்கர் மாநில பா.ஜ.க அரசுதான் பொறுப்பு என்று காங்கிரசும் லாவணி பாடிக்கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க …தரகு முதலாளிகள் தயாரித்து வழங்கும் "வளர்ச்சி வேட்டை! ''

இவர் பெயர் மாத்வி ஹுரே. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் சட்டிஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், சிங்கன் மடு கிராமத்தைச் சேர்ந்த இளம் விதவை. சட்டிஸ்கர் அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் ஒன்பதாவது மனுதாரராகக் கைநாட்டிட்டுள்ளார். "மாத்வி ஹுரே என்றொரு மனுசியே கிடையாது. அவள் வெறும் கற்பனை; ஒருபோதும் இருந்தவள் இல்லை. மனுதாரர் ஒன்பது என்பது இல்லாத ஒருத்தியாகும்" என்று ஏப்ரல் 19-ந் தேதி டெல்லி உச்சநீதி மன்றத்தின் முன்பு இந்தியத் தலைமை வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க …காட்டுவேட்டை : அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்!

இராசஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் அமைந்துள்ள மிகவும் புகழ் வாய்ந்ததும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழும் சுஃபி ஞானி குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் திருத்தல வளாகத்தினுள் உள்ள அஹத்-இ-நூர் தர்காவில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேலும் படிக்க …அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு : இந்து பயங்கரவாதத்துக்கு இன்னுமொரு சான்று

கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் உள்ள சேலம் மாவட்ட எல்லையையும் ஈரோடு மாவட்ட எல்லையையும் கொண்டதுதான் கொளத்தூர். கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதி இது.

மேலும் படிக்க …பா.ம.க. இராமதாசின் சமூகநீதி பாரீர்!

தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரரீதியில் முன்னேறுவதை ஆதிக்க சாதிகளால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலாது என்பதை விளக்க, "தீண்டப்படாதவர்கள்" எனும் நூலில், இராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாமர் சாதி மக்கள், தங்கள் வீட்டுத் திருமணத்தை சற்று விமரிசையாகக் கொண்டாடிய காரணத்திற்காக, ஜாட் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறார், அம்பேத்கர். இது நடந்து 85 வருடங்களுக்கு மேலாகியும், இன்றும் பொருளாதாரரீதியில் முன்னேறும் தாழ்த்தப்பட்டோர், ஆதிக்க சாதியினரால் தாக்கப்படுவது தொடர்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் அரியானாவிலுள்ள மிர்ச்பூரில் தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினரின் 20 வீடுகள், 400 ஜாட் சாதிவெறியர்களால் கொளுத்தப்பட்டன. போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, தப்பிக்க முடியாதபடி தீயில் மாட்டிக்கொண்ட உடல் ஊனமுற்ற 18 வயதான இளம்பெண் ஒருவரும், அவரைக் காப்பாற்ற சென்ற, நோய்வாய்ப்பட்ட அவரது தந்தையும் எரிந்து சாம்பலாயினர். இதனைத் தொடர்ந்து ஜாட் சாதிவெறியர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்குவதைத் தங்களது பிறப்புரிமையாகப் பார்க்கும் ஜாட் வெறியர்கள், இந்தக் கைது நடவடிக்கையினை எதிர்த்து, "காப்" எனப்படும் 45 கிராமங்களின் பஞ்சாயத்தைக் கூட்டிக் கைதானவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் உயரதிகாரி ஒருவர் கலந்து கொண்ட இந்த சாதிக் கட்டப் பஞ்சாயத்துக்குத் தலைமை ஏற்றவரோ, அரசு பள்ளி ஆசிரியர்.

தாழ்த்தப்பட்டவர் வளர்க்கும் நாய் ஒன்று ஜாட் சாதியைச் சேர்ந்த ஒருவரைப் பார்த்துக் குரைத்ததுதான் இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணமாம். ஆனால், உண்மையில் தாழ்த்தப்பட்ட வால்மீகி மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டும், அவர்கள் மீதான ஜாட் சாதியினரின் ஆதிக்கப் பிடி தளர்ந்து வருவது கண்டும் பொறுக்கமாட்டாது, அவர்களைத் தாக்கத் தருணம் பார்த்திருந்த சாதி வெறியர்களுக்கு நாய் குரைப்பு ஒரு முகாந்திரம் மட்டுமே.

ஜாட்டுகளின் சாதிவெறி தாக்குதல்கள் இந்தப் பகுதிக்குப் புதிதல்ல. கடந்த வருடம் இதே பகுதியில், ஜாட் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். 1997-இல் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள், கூலி உயர்வு கேட்டுப் போராடிய பொழுது சமூகப் புறக்கணிப்பு செய்து, வீடுகளைத் தாக்கி எரித்துள்ளனர். 2005-இல் சோனாபட் மாவட்டம் கோஹனா நகரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைச் சூறையாடி எரித்துள்ளனர்.

மிர்ச்பூர் கிராமத்தில் 300 தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள நிலங்கள் அனைத்தும் ஜாட்டுகளுக்கே சொந்தம். தாழ்த்தப்பட்டவர்கள் காலம் காலமாக ஜாட்டுகளின் நிலங்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். ஆயினும், அவர்களை ஜாட்டுகள் விருப்பம் போல ஆட்டிவைத்த நிலை இன்று இல்லை. ராம் அவதார் என்பவரது தலைமையில் விவசாயக் கூலிகள் அமைப்பாகியுள்ளனர். கொடுத்த கூலியைக் கைகட்டி வாய் பொத்தி வாங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர், இன்று சுயமரியாதையுடன் தமக்கான நியாயமான கூலியைக் கேட்டுச் சட்டரீதியாகப் போராடி வாங்குகின்றனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்கள் இன்று ஒப்பீட்டளவில் படிப்பறிவு பெற்றவர்களாக உயர்ந்துள்ளனர். குடும்பத்துக்கு ஒருவராவது உயர்நிலைப் பள்ளி வரை படித்திருக்கிறார்.

முன்பு தாங்கள் ஆதிக்க சாதியினரை அண்டியிருந்தபோது பட்ட அவமானங்கள் பற்றிப் பேசும் போது, ஓவு பெற்ற கல்லூரி முதல்வரான ராம் குமார், 1995-இல் நடந்த ஒரு சாதிக் கலவரத்திற்குப் பிறகு, அமைதி திரும்புவதற்காக ஜாட் சாதியினர் முன் தாழ்த்தப்பட்டவர்கள் தமது தலைப்பாகையைக் கழற்றிய சம்பவத்தை நினைவு கூறுகிறார். ஆனால், இன்றைய தலைமுறையோ இது போன்ற அவமரியாதைகளைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை என அவர் கூறுகிறார். இப்பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்டோர் பலர் ஆசிரியர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு உயரதிகாரிகளாகவும் உயர்ந்துள்ளனர். பலரும் கல்வியறிவு பெற்றிருந்தாலும், வேலைவாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காத காரணத்தால், ஜாட்டுகளின் நிலங்களில் இன்னமும் பலர் கூலிகளாகவே உள்ளனர்.

இவ்வாறு சுயமரியாதையோடு தாழ்த்தப்பட்டவர்கள் தமக்குச் சமமாக வாழ்வதைப் பொறுக்காத ஜாட்டுகள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களைத் தாக்கி வருகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களை இழிவான பெயர் சொல்லி அழைத்து வம்புக்கிழுப்பது, கட்டிலில் உட்காரக் கூடாது என மிரட்டுவது, விவசாயக் கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பது என்று தொடர்ந்து சீண்டி வருகின்றனர். இங்கு ஒவ்வொரு வருடமும் விவசாயக் கூலிகளுக்கு சரிவரக் கூலி கொடுக்காத வழக்குகள் மட்டும் 200 வரை பதிவாகின்றன.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சந்தர் சிங் என்பவர் ஆடு மேத்து சேர்த்த காசில், ஜாட்டுகள் மத்தியில் மாடி வீடு கட்டி, வீட்டிலேயே மளிகைக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்தக் ‘குற்றத்திற்கு’த் தண்டனையாக, ஜாட் சாதியினர் அணிதிரண்டு அவரது வீட்டையும் கடையையும் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.

மேலும் படிக்க …ஜாட் சாதிவெறித் தீயில் கருகிப்போன தாழ்த்தப்பட்டோர் வாழ்வு

கடந்த 2007-ஆம் ஆண்டில் அரியானாவைச் சேர்ந்த 23 வயதான மனோஜ் மற்றும் 19 வயதான பாப்லி ஆகியோர் தமது குடும்பத்தினரை எதிர்த்துக் காதல் திருமணம் செய்ததால், அவர்கள் பாப்லி குடும்பத்தினரால் கொல்லப்பட்டனர். அவர்கள் காதல் திருமணம் செய்ததற்காக மட்டுமல்ல, ஜாட் சாதியின் உட்பிரிவாகிய ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற சாதியக் கட்டுப்பாட்டை அவர்கள் மீறிவிட்டதற்காக - அதாவது, ஜாட் சாதிக் கௌரவத்தைக் கீழறத்துச் சிறுமைப்படுத்திவிட்ட ‘மாபெரும் குற்றத்திற்காக’ அவர்கள் கொல்லப்பட்டனர். பேருந்தில் அவர்கள் தப்பிச் சென்றபோது, அவர்களை வெளியே இழுத்துப் போட்டு பாப்லியின் குடும்பத்தினர் வெட்டிக் கொன்று, தமது ஜாட் சாதிக் கௌரவத்தைப் ‘பெருமையுடன்’ நிலைநாட்டினர்.

மேலும் படிக்க …சாதி கௌரவக் கொலைகள் : கேலிக்கூத்தானது இந்தியக் 'குடியரசு'

‘‘சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மெட்ரிக் கல்வி வாரியத்தைக் கலைக்க மாட்டோம்; ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தைக் கைவிட மாட்டோம்; தமிழகத்தில் மையக் கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ் (சி.பி.எஸ்.சி.) இயங்கும் பள்ளிகளில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகாது" - இப்படி பல சமரசங்களைச் செய்துகொண்டுதான் சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனாலும், மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வித் திட்டத்தால் கல்வியின் தரம் தாழ்ந்துபோகும் என ஒப்பாரி வைத்து, இத்திட்டத்தைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தார்கள். சென்னை உயர்நீதி மன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்யும் வண்ணம் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

மேலும் படிக்க …நீர்த்துப்போன சமச்சீர் கல்வித் திட்டம்

தமிழகத்திலுள்ள தனியார் "மெட்ரிக்" பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்குக் கடிவாளம் போடப் போவதாகக் கூறிக்கொண்டு, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு. இந்தக் கல்வியாண்டு முதலே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

மேலும் படிக்க …சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை

லாவாஸா கார்ப்பரேஷன் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே நகருக்கு அருகே "லாவாஸா" என்ற பெயரில் புதிய நகரமொன்றை வெகுவேகமாக அமைத்து வருகிறது. மும்பய்ப் பெருநகரம் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிதுங்கி வழிவதைப் பார்க்கும்பொழுது, இப்புதிய நகர நிர்மாணம் நல்ல விசயம்தானே என நம்முள் பலரும் கருதலாம். ஆனால், இந்தப் புதிய நகரம் யாருக்காக நிர்மாணிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. தனியார்மயம் பெத்துப்போடும் புதுப் பணக்காரக் கும்பலுக்காக உருவாக்கப்படும் நகரம்தான் இந்த "லாவாஸா’’.

மேலும் படிக்க …தனியார் நகரங்கள் : நவீன சமஸ்தானங்கள்!

பியாங்கா ஜாக்கர், மத்திய அமெரிக்காவின் நிகராகுவா நாட்டில் பிறந்தவர். உலகின் பிரபல ராக் இசைக் கலைஞர் மைக் ஜாக்கரின் மனைவி. கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் ஆர்வலர். ஐரோப்பிய நாடுகளுக்கான நட்புத் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் ஒரிசா மாநிலம் நியம்கிரி மலைப் பகுதியில் வாழும் கோந்த் பழங்குடி மக்களிடையே பயணம் போவிட்டு சமீபத்தில் திரும்பிய பியாங்காவை "டெகல்கா" பத்திரிக்கையின் செய்தியாளர் சோமா சௌதுரி பேட்டி கண்டுள்ளார். நியம்கிரி பழங்குடி மக்கள் அடியோடு அழிந்து போகுமாறு அங்கு சுரங்கங்கள் தோண்டி, கனிமங்களைக் கொள்ளையிடும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பியாங்கா தனது நேர்காணலில் விளக்குகிறார். அதன் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.

மேலும் படிக்க …"மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி, இயற்கை வளங்களைச் சூறையாடுவது உலகெங்கும் புரட்சியைப் பெற்றெடுக்கிறது! '' _நிகராகுவா நாட்டு மனித உரிமைப் போராளி பியாங்கா ஜாக்கருடன் ஒரு நேர்காணல்

காட்டுவேட்டை எனப்படும் உள்நாட்டுப் போரை நிறுத்தவும் அமைதி மற்றும் நீதிக்கான பேச்சுவார்த்தை நடத்தவும் கோரி பேரணி நடத்துவதற்காக கடந்த மே 5-ஆம் தேதியன்று, ராய்ப்பூரிலிருந்து தண்டேவாடாவுக்கு பிரபல காந்தியவாதியான நாராயண் தேசாய், விண்வெளி அறிவியலாளர் யஷ்பால், முன்னாள் யு.ஜி.சி தலைவர் ராம்ஜி சிங், சுவாமி அக்னிவேஷ் முதலானோர் வந்தனர். அமைதிப் பேரணி நடத்த முற்பட்ட அவர்கள் ஒரு பொறுக்கி கும்பலால் முற்றுகையிடப்பட்டனர்.

மேலும் படிக்க …"நீங்கள் எங்களோடு இல்லையென்றால்... '' அறிவுத்துறையினருக்கு எதிராக ப.சி.யின் பகிரங்க மிரட்டல்

வேலூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜீலானி தோல் தொழிற்சாலையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது நச்சுவாயு தாக்கி சரவணன், சூரியமூர்த்தி, ஏழுமலை, ராமு, சென்றாயன் என ஐந்து கூலித் தொழிலாளர்கள் மாண்டு போயுள்ளனர். இதில் ஏழுமலை, ராமு, சென்றாயன் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள். அவர்களின் குடும்பம் மட்டுமின்றி, சகோதரர்களான மூவர் கொல்லப்பட்ட துயரத்தால் அவர்கள் வாழ்ந்த செங்கல்வராயன் பட்டறை கிராமமே வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …நச்சுவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் பலி! முதலாளித்துவ பயங்கரவாதக் கொடூரம்!

ஒரிசாவின் கலிங்கா நகர் வட்டாரத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், போஸ்கோ மற்றும் டாடா நிறுவனங்களுக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் புதிய கலிங்கத்துப் பரணியை எழுதி வருகிறார்கள். பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம் பற்றிப் படர்ந்து வருகிறது.

மேலும் படிக்க …அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஒரிசா மக்களின் கலகம்

அண்மையில், உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சித்திரவதை தடுப்பு மசோதா (2008)-ஐ அறிமுகப்படுத்தினார். போலீசாரால் நடத்தப்படும் சித்திரவதைகளுக்குத் தண்டனை அளிக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக அமைச்சர் ஆரவாரமாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதியன்று சித்திரவதை தடுப்பு முன்வரைவு மசோதாவுக்கான பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதலும் அளித்துள்ளது.

மேலும் படிக்க …கொலைகார போலீசைப் பாதுகாக்கும் சித்திரவதைத் தடுப்பு மசோதா!

தேவனுடைய ராச்சியம் குழந்தைகளுடையது என்றும் குழந்தைகளைப் போல கள்ளம் கபடமற்றவர்களுக்கே சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் என்றும் இயேசு சொல்லி இருக்கிறாராம். ஆனால் தேவனின் ராச்சியத்தை அறிவிக்கக் கிளம்பிய பாதிரிகள் சிலர் குழந்தைகளிடம் அத்துமீறிய பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்டு அம்பலப்பட்டு நிற்கிறார்கள். இவர்களைத் தண்டிக்க வேண்டிய உயர்பீடங்களில் இருக்கும் பிஷப்புகளே இவர்களைத் தப்புவிக்க உடந்தையாக இருந்துள்ளதும் மேற்கத்திய ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.

மேலும் படிக்க …காமுகர்களின் கூடாரமாகக் கத்தோலிக்கத் திருச்சபை!

ஒரிசா கந்தமால் பகுதியில் 2007 டிசம்பரில் தொடங்கி 2008 இறுதி வரை கிருத்தவர்கள் மீது இந்துவெறியர்கள் நடத்திய பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிக் கிருத்துவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்; பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர்; வீடுகள் கிராமங்கள் சூறையாடப்பட்டன் ஆயிரக்கணக்கானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சடைந்தனர்.

மேலும் படிக்க …காவிக் கறை படிந்த தீர்ப்புகள்

குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி கடூன் என்ற தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.

மேலும் படிக்க …பாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் மின்கட்டண உயர்வு பற்றி பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை மதுரைஇ கோவைஇ திருச்சி ஆகிய தமிழகத்தின் 4 பெரிய நகரங்களில் நடைபெற்றது. திருச்சியில் 15.4.10 அன்று கூட்டம் நடைபெற்றபோது மின்திருட்டு மின் பற்றாக்குறை மின்சார சிக்கனம் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளும் நுகர்வோர் அமைப்புகளும் பொதுமக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர். ஆணையத்தின் தலைவர் கபிலன் இது அரசியல் கூட்டமல்ல என்றும் கூச்சல் குழப்பம் கலகம் செய்தால் போலீசார் அவர்களை வெளியேற்றுவார்கள் என்றும் எச்சரித்தார். அதற்கேற்ப அரங்கத்தினுள் எல்லா பக்கமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் 200 பேர் வீதம் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஒவ்வொருவரின் முகவரி பெற்று வீடியோ படம் எடுத்துப் பீதியூட்டினர். ஏற்கெனவே ஏற்பாடு செய்து அழைத்து வரப்பட்டவர்கள் பிரச்சினைகளைப் பேசாமல் திசைதிருப்பினர்.

மேலும் படிக்க …மின்கட்டண உயர்வைத் திணிக்க கருத்துக் கேட்பு நாடகமாடாதே!” -புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

இனி திரும்பி வரவே முடியாத தங்கள் மகள் சரிதாவை எண்ணி எண்ணி அழுது கொண்டிருக்கின்றனர் அவளின் பெற்றோரான நாகேஸ்வராவெங்கட்டம்மா தம்பதியினர். ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்திலுள்ள லெச்சுமி நகரம் மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்து வந்த அந்த 13 வயது சிறுமி கடந்த ஜனவரி 21 அன்று காலையில் அசைவற்ற நிலையில் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்ட அப்பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். செல்லும் வழியில் கடுமையான வலிப்பு ஏற்பட்டு சரிதா இறந்துவிட்டார்.

மேலும் படிக்க …பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா!

கடந்த எட்டாண்டுகளாக மதக் கலவரமின்றி அமைதியாக இருந்த ஆந்திர மாநிலத் தலைநகரான ஐதராபாத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் மீண்டும் மதவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 27ஆம் தேதி முதலாக நான்கு நாட்களுக்கு நடந்த இம்மதவெறித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்துமுஸ்லிம் மதவெறியர்கள் தமக்கிடையே கல்லெறிந்துநடத்திய கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். ஐந்து மசூதிகளும் ஒரு இந்துக் கோயிலும் சேதமடைந்தன. ஆண்களையும் வாகனங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்குவது பெண்களை அவமானப்படுத்துவது என்பதாக இரு தரப்பும் வெறியோடு தாக்குதலை நடத்தின. 8 போலீசு நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஊரடங்கும் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. 1800க்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகள் இப்பகுதியில் குவிக்கப்பட்டுஇ 272 பேர் கைது செய்யப்பட்டு இக்கலவரத் தீ மேலும் பரவாமல் தற்காலிகமாகத் தடுக்கப்பட்ட போதிலும் இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

மேலும் படிக்க …இருதலைக் கொள்ளி எறும்பாய் ஐதராபாத் நகரம்

ஓசூர் சிப்காட்டில் இயங்கிவரும் கமாஸ் வெக்ட்ரா எனும் ரசிய பன்னாட்டு நிறுவனம் தனது ஆலையில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்துவந்த 47 நிரந்தரத்தொழிலாளர்களைப் போலி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றம் செய்துள்ளதாகக் கூறி அனைவரையும் வீதியில் வீசியெறிந்தது. வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். உழைக்கும் வர்க்கத்தின் பேராதரவுடன் கடந்த ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதிவரை 69 நாட்கள் நடந்த இப்போராட்டம் ஓசூர் தொழிலாளர் இயக்க வரலாற்றில் முதன்முறையாக மகத்தான வெற்றியைச் சாதித்துள்ளது. தொழிலாளர்கள் இன்று வெற்றிப் பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். முதலாளித்துவப் பயங்கரவாதத் திமிரையும் கொட்டத்தையும் தமது உறுதியான ஒற்றுமையான போராட்டத்தால் முறியடித்த பெருமையில் அவர்களது நெஞ்சங்கள் விம்மித் தணிகின்றன.

மேலும் படிக்க …முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு விழுந்த முதல் அடி! ஓசூர் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் போராட்டம் வெற்றி!

கடந்த 9.4.10 அன்று முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலுவின் குண்டர் படையும் போலீசு கும்பலும்சேர்ந்து கொண்டு தஞ்சை மாவட்டம் வடசேரி வட்டார மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றின. காரணம் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க வரும் டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடியதுதான். பாலுவின் சாராய ஆலை ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சினால் நிலத்தடி நீரையே நம்பியுள்ள இப்பகுதியில் விவசாயமே நாசமாகிப் போகும் என்பதாலேயே இப்பகுதிவாழ் மக்கள் இந்த ஆலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இச்சாராய ஆலைக்கு ஊராட்சி மன்றம் அனுமதியளித்து பின்னர் மக்களின் எதிர்ப்பால் அதை இரத்து செய்தது. இருப்பினும் ஆலைக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் போலீசு அதிகாரிகள் மற்றும் பாலுவின் அடியாட்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு முப்பது பேர் மீது பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைத்துள்ளது.

மேலும் படிக்க …“டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிரான வடசேரி மக்களின் போராட்டம் ஓங்கட்டும்!” -அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி பல்வேறு நாடுகளின் வங்கிகள் காப்பீடு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு வருவதோடு மட்டுமின்றி தேசிய அரசுகளை மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கும் தள்ளிவருகிறது. துபாய் அரசு நான்கு மாதங்களுக்கு முன்பாக தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவணை கேட்டபொழுதுதான் இந்த அபாயம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. துபாயில் வேலை செய்துவந்த அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைப் பலியிட்டும் பக்கத்து அரபு நாடுகளிடமிருந்து "உதவி' பெற்றும் மஞ்சள் கடுதாசி கொடுப்பதில் இருந்து தப்பித்தது துபாய் அரசு.

மேலும் படிக்க …நிதிச் சூதாட்டத்தால் திவாலானது கிரீஸ்!

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 1960களில் தோழர் சீனிவாச ராவ் தலைமையில் தோழர்கள் வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு, பூழந்தாங்குடி பக்கிரி, ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், மனோன்மணியம்மை என்று சாதிய எல்லைகளைக் கடந்து கம்யூனிசப் போராளிகள் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடினர். அவர்களின் அளப்பரியத் தியாகத்தால் தஞ்சை மாவட்டம் சிவந்து, கூலி விவசாயிகளின் வாழ்வில் புதிய விடியலை உருவாக்கியது. சவுக்கடியும் சாணிப்பால் கொடுமையும் ஒழிந்தது.

மேலும் படிக்க …கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை?” -தியாகிகள் நினைவிட இடிப்புக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்.

தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்படும் காலமிது. பன்னாட்டு இந்நாட்டு (தரகு) முதலாளிகளின் இலாபவெறிக்காக மக்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து வருகிறது காங்கிரசு அரசு. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் மறுகாலனியாதிக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர் தினமான மே நாளில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக புதுச்சேரியில் பேரணி பொதுக்கூட்டம் நடத்த ம.க.இ.க. பு.மா.இ.மு. வி.வி.மு. பு.ஜ. தொ.மு. பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் திட்டமிடப்பட்டது.

மேலும் படிக்க …முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குலுங்கியது புதுச்சேரி!

நிதியமைச்சர் அண்மையில் சமர்ப்பித்த பட்ஜெட்டில் இந்திய இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.147344 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது இது 8.13 சதவீதம் அதிகம். ""பாதுகாப்பான எல்லைகள் பாதுகாப்பான வாழ்க்கை என்பதுதான் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். எனவேதான் இராணுவச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்று இப்பூதாகரச் செலவை நியாயப்படுத்துகிறார் நிதியமைச்சர்.

மேலும் படிக்க …இராணுவச் செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?

மாபெரும் நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியைக் களத்தில் நின்று தலைமையேற்று வழிநடத்தியவரும் கனு சன்யால் என்று பிரபலமாக அறியப்பட்டவரும் கனுபாபு என்று அன்புடனும் புரட்சிகர மரியாதையுடனும் அழைக்கப்பட்டவருமான கிருஷ்ணகுமார் சன்யால் கடந்த மார்ச் 23ஆம் நாள் நக்சல்பாரி என்று சிறு நகருக்கு அருகே உள்ள ஹட்டிகிசா கிராமத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி கேட்டு நெஞ்சில் வலியும் வேதனையும் அடையும் இலட்சக்கணக்கான நக்சல்பாரி புரட்சியாளர்களோடு நாமும் இணைந்து கனுபாபுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்.

மேலும் படிக்க …நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனுசன்யாலுக்கு வீரவணக்கம்!

காலனிய ஆட்சிக் காலத்தில் அன்று பிரிட்டனின் நூற்பாலைகளுக்குப் பருத்தி தேவைப்பட்டது. இத்தேவையை இந்தியாவின் மூலம் நிறைவு செய்வதற்காக அன்றைய சென்னை மாகாணத்தில் பருத்தி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியில் 800 ஏக்கரில் பருத்தி விவசாயத்தை சோதனை அடிப்படையில் காலனிய அரசு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டையில் 1868 இல் விவசாயக் கல்லூரியைத் தொடங்கியது. இது பிரிட்டனுக்குத் தேவையான பருத்தி மற்றும் விவசாயக் கச்சாப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வல்லுநர்களை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க …தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமா? ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனமா?

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் அமைந்துள்ள கோக் ஆலையை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திவரும் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் அப்போராட்டத்தில் தற்பொழுது முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க …கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!

அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கொல்லைப்புற வழியாக நீக்கிவிட முயலுகிறது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாளன்று ஈழப்பிரச்சினையையொட்டி பார்ப்பன சகுனி சுப்பிரமணியசாமியை எதிர்த்துப் போராடிய வழக்குரைஞர்களைப் போலீசார் நாள் முழுக்கக் கொடூரமாகத் தாக்கிய பயங்கரவாதத்தைத் தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இந்தக் காக்கிச் சட்டை பயங்கரவாதத்தில் இருந்து நீதிபதிகளும் தப்பவில்லை. நீதிமன்றத்தையே சூறையாடிய போலீசு பயங்கரவாதத்தை எதிர்த்து வழக்குரைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் எந்தப் போலீசு அதிகாரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா பானுமதி அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்ட போதிலும் கருணாநிதி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

மேலும் படிக்க …ரவுடி போலீசாருக்கு அரணாக நிற்கும் கருணாநிதிக்குக் கருப்புக் கொடி! வழக்குரைஞர்களின் கலகம்!

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துகொண்டே போவதைக் கட்டுப்படுத்துவதற்கு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போட விரும்பாத மன்மோகன் சிங் அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதற்காகத் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள நகல் சட்டத்தை ஆராந்த மைய அரசின் அமைச்சரவைக் குழு இந்த நகலில் சில திருத்தங்களைச் செய்யச் சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறது. மைய அரசின் இந்தக் கரிசனத்தைக் கேள்விப்படும்பொழுது ரொட்டி வாங்கமுடியாமல் திண்டாடிய பிரஞ்சு மக்களிடம் கேக் வாங்கிச் சாப்பிடச் சொல்லி பிரஞ்சு பேரரசி கிண்டலடித்த வரலாற்று வக்கிரம்தான் நினைவுக்கு வருகிறது.

மேலும் படிக்க …பசியைப் போக்குமா? பட்டினியில் தள்ளுமா?

""போர்ப் பிரகடனம் செய்!'' என வெறிக் கூச்சல் போடுகிறது இந்தியக் கூட்டுப் பங்குத் தொழில் கழகங்களின் (கார்ப்பரேட் நிறுவனங்களின்) ஊதுகுழலான ""இந்தியா டுடே'' ஏடு. ""மென்மையான அணுகுமுறைகள் தோற்றுப் போய்விட்டன என்று தண்டேவாடா படுகொலைகள் காட்டிவிட்டன. தோட்டாவுக்குத் தோட்டா நக்சல்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.'' ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)களை ஒழித்துக் கட்டுவதோடு மத்திய கிழக்கு இந்தியாவில் வாழும் ஆதிவாசிபழங்குடி மக்களுக்கு எதிரான போரை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கி ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டன. இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கழகங்களின் கூட்டமைப்பு (FICCI) கடந்த ஆண்டு மத்தியில் விடுத்த கோரிக்கையை ஏற்று மாவோயிஸ்டுகளுக்கு எதிரான காட்டுவேட்டையைத் (ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட்) தொடங்கி நவீன ஆயுதங்களுடன் 60000 ஆயுதப் படையினரை ஏவிவிட்டதன் மூலம் ஒரு உள்நாட்டுப் போரை அது நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க …சிதம்பரத்தின் காட்டுவேட்டைக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி

குஜராத் மாநிலத்தின் இந்துவெறிபயங்கரவாத முதல்வர் மோடியின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் படுகொலைகள் நடத்தப்பட்டு 8 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்திய வரலாற்றில் மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைகள் குறித்த விசாரணை மிகவும் கீழ்த்தரமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அவற்றை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீதான குற்றச்சாட்டுகளே நிரூபித்துக்காட்டுகின்றன.

மேலும் படிக்க …மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு

மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயியும், போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் தலைவருமான லால்மோகன் டுடூ, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று அவரது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள வயல்வெளியில் கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருடன், தம்பதிகளான யுவராஜ், சுசித்ராமுர்மூ ஆகிய இரு பழங்குடியினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …பழங்குடியினத் தலைவர் லால் மோகன் டுடூ படுகொலை: அரசு பயங்கரவாத அட்டூழியம்!

கோவை  தடாகம் சாலையிலுள்ள சிறீ ரெங்கனாதர் இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் ஏறத்தாழ ஈராண்டுகளாக பு.ஜ.தொ.மு. சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆலை முதலாளியின் பழிவாங்கலும் அடக்குமுறையும் தீவிரமாகத் தொடங்கியது. சாதி உணர்வு என்ற துருப்புச் சீட்டை ஏவியும், 15.2.10 இல் எவ்வித முன்னறிவிப்புமின்றி சட்டவிரோதக் கதவடைப்பு செய்தும் சங்கத்தை முடக்க முதலாளி வி.நாராயணசாமி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அதன் பிறகு, முதன்மை நுழைவாயிலைப் பூட்டிவிட்டு பின்வாயில் வழியாகத்தான் அனைத்து தொழிலாளர்களும் உணவருந்தச் செல்ல வேண்டும் என்று தன்னிச்சையாக அறிவித்து, இதனால் ஏற்படும் தாமதத்தை வைத்து தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கியது.தொழிலாளர்களை ஆபாசமாக ஏசுவது, கேவலமாக நடத்துவது, அற்ப விவகாரங்களை வைத்து பழிவாங்குவது என்று ஆலை முதலாளி கேள்விமுறையின்றி சட்டவிரோதமாக கொட்டமடித்து வருகிறார். அதற்குவிசுவாசமாகப் போலீசு வாலாட்டுகிறது.

மேலும் படிக்க …தொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி! போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு! கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!

தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 79வது நினைவு நாளில், அவர்களின் சோசலிசப் புரட்சிக்கனவையும் உழைக்கும் மக்களின் விடுதலை எனும் இலட்சியத்தையும் சாதிக்க உறுதியேற்று, இம்மாவீரர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 ஆம் தேதியன்று, தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் அத் தியாகத் தோழர்களின் நினைவை நெஞ்சிலேந்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தின.

மேலும் படிக்க …ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் – சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் உறுதியேற்பு!

பா.ம.க. நிறுவனரான ராமதாசு, ""சாராயக் கடைகளை ஏலம் விடுவதுபோல் இனி தொகுதிகளையும் ஏலம்விட்டு விடலாம். அந்த அளவுக்கு ஆளும் கட்சி இங்கே வாக்காளர்களை விலை பேசுகிறது'' என்று புலம்பும் அளவுக்கு ஓட்டுச் சீட்டு ஜனநாயகம் சந்தி சிரித்தது. சீமைச் சாராயம், வேட்டி, துண்டு, புடவை, வளையல், மூக்குத்தி, புத்தகப் பை, ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கோடிகளை வாரியிறைத்து வாக்காளர்களைக் குளிப்பாட்டின. பென்னாகரம் இடைத் தேர்தல் திருவிழாவை ஓட்டுப் பொறுக்கிகள் கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்த சூழலில், இப்போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களை அறைகூவி, இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது.

மேலும் படிக்க …ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! - வி.வி.முவின் இடைத்தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியத்தின் பெருந்தலைவர் பதவி, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற அரசியல் பிரதிநிதித்துவ அடிப்படையில் தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. பசுவந்தனை அருகிலுள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எ.பெருமாள் என்ற தலித் பெண் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பெருந்தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனத்தைப் பயன்படுத்துவது, தீர்மானங்கள் ஒப்பந்தங்களை தன்னிச்சையாக முடிவு செய்து நிறைவேற்றுவது என துணைப் பெருந்தலைவராக இருக்கும் ஆதிக்க சாதிவெறியரான மாணிக்கராஜா என்பவர் தான் உண்மையில் பெருந்தலைவராகச் செயல்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, கயத்தாறு ஒன்றியத்தில் நடைபெறும் அரசு விழா அழைப்பிதழ்கள், அரசு கல்வெட்டுகள், தனியார் விழா அழைப்பிதழ்கள் என அனைத்திலும் மாணிக்கராஜா பெயரே பெருந்தலைவராகப் போடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாரவளர்ச்சி அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளும் இச்சட்டவிரோதத் தீண்டாமைக்கு உடந்தையாக நிற்கின்றனர்.

மேலும் படிக்க …கொட்டமடிக்கும் ஆதிக்க சாதி வெறியன்! உடந்தையாக நிற்கும் அதிகார வர்க்கம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய ஜனநாயகத்தில் ஒரு மைல் கல்லாக முதலாளிய செய்தி ஊடகத்தால் சித்தரிக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகத்தை மேலும் வலுவுள்ளதாக்கும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிக முக்கியமானது என்று காட்டப்பட்டது. ""உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசாக அமைந்த பிறகு பல ஆண்டுகளாக இப்படி ஒருஉரிமை இல்லாதிருந்தது ஒரு பெரிய குறைதான். அந்தக்குறை இப்போது நீங்கி விட்டது'' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பீற்றிக் கொண்டார்கள்.

மேலும் படிக்க …தகவல் அறியும் உரிமைச் சட்டம்: சோளக் காட்டுப் பொம்மை

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று, திருச்சியில் செயல்பட்டுவரும் பெண்கள் விடுதலைமுன்னணி, ""விலைவாசி உலகத்தரம்! பட்டினியே இனி நிரந்தரம்!'' எனும் தலைப்பில் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் விண்ணதிரும் முழக்கங்களோடு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பெண் தொழிலாளர்களின் போராட்டத்தால் உருவான மகளிர் தினத்தை, உழைக்கும் பெண்களின் அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக நடத்துவதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்பதையும், நமது நாட்டில் பெண்கள் பாலியல் நுகர்பொருளாகவும் உரிமைகளற்ற அடிமைகளாகவும் இருப்பதை அம்பலப்படுத்தியும், இன்றைய மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகப் பெண்கள் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர். புரட்சிகரப் பாடல்களும், ம.க.இ.க. மையக்கலைக்குழுத் தோழர்களின் ""துயரம் பருப்பு'' எனும் நாடகமும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

மேலும் படிக்க …அனைத்துலக உழைக்கும் மகளிர் தினம்: கொண்டாட்டமா? போராட்டமா?

புதுச்சேரியில் ஏம்பலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள புதுக்குப்பம், செம்பியப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 21 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்துத் தராமல்  தார்ச்சாலை போட்டுத் தராமல் அதிகார வர்க்கமும் ஓட்டுப் பொறுக்கிகளும் இப்பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொள்ளையடித்து வந்தனர். இச்சட்டமன்றத் தொகுதியில் மாறிமாறிப் பதவிக்கு வந்த தி.மு.க காங்கிரசு, பா.ம.க ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களிடமும் அதிகாரிகளிடமும் இப்பகுதிவாழ் மக்கள் பலமுறை மனுக் கொடுத்து மன்றாடியும், அதை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தே வந்தனர்.

மேலும் படிக்க …சாலையா? மரணக் கிணறா? –ஓட்டுக் கட்சிகளின் மிரட்டலையும் மீறி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கடந்த 40ஆண்டு காலமாக இயங்கிவரும் லியோ பாஸ்ட்னர்ஸ் எனும் போல்ட்நட் தயாரிக்கும் நிறுவனத்தின் கொத்தடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக, பு.ஜ.தொ.மு. சங்கத்தின் தலைமையில் கடந்த ஈராண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என கடந்த இரு மாதங்களாகத் தொழிலாளர் போராட்டம் தீவிரமடைந்த போதிலும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த 22.2.10 முதலாக தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். முதலாளிகளின் எடுபிடிகளாகச் செயல்படும் போலீசு, போராடிய தொழிலாளர்களை போலீசு நிலையத்துக்குக் கொண்டு சென்று மிரட்டிப் பார்த்தது. மிரட்டலுக்கு அஞ்சாமல், போலீசு கொடுத்த உணவையும் புறக்கணித்து தொழிலாளர்கள் அங்கும் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்ததால், அன்றே அனைவரையும் விடுவித்தது.

மேலும் படிக்க …“லியோ பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – போராடும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாகக் கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு, மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பார்ப்பன அர்ச்சகர்கள், இந்த அரசு உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர். பார்ப்பனர்களின் நீதிமன்றத் தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு, நீதிமன்ற ஆணைக்குப் பங்கம் வராமல் நடந்து கொள்கிறது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாகப் பயிற்சி பெற்று, சைவ வைணவப் பெரியோர்களால் தீட்சை சான்றிதழும் பெற்ற 206 மாணவர்கள், பணிநியமனம் இல்லாமல் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்தப் பள்ளியில் புதியமாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

மேலும் படிக்க …“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!” – மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (HRPC) போராட்டம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைச் சோதனை முறையில் பயிரிடுவதையும், அதன் பின் அவற்றை வர்த்தகரீதியில் பயிரிட அனுமதிப்பதையும் எதிர்த்து வரும் விவசாயிகள், அறிவியலாளர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக சக்திகளை முடக்கும் வண்ணம் ஒரு புதிய கருப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயன்று வருகிறது, மைய அரசு. ""உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதா'' என அழைக்கப்படும் இம்மசோதா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமாக அங்கீகரிக்கப்படுமானால், அச்சட்டத்தின்படி தேசிய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். அமைச்சர்களோ, எம்.பி., எம்.எல்.ஏ.க்களோ, விவசாயிகளின பிரதிநிதிகளோ இன்றி, நான்கு நிபுணர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்படும் இந்த ஆணையம்தான், இனி, மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிர்களை உணவுப் பொருட்களை இந்திய மக்கள் மீதி திணிக்கும் விஷயத்தில் வானளாவிய அதிகாரம் கொண்டு செயல்படும்.

மேலும் படிக்க …பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் "இந்துக்களே' போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

மேலும் படிக்க …தரகு முதலாளித்துவ சேவையில் மோடியின் இந்துத்துவா ஆட்சி

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்று மரணத்தை விளைவிக்கும் முறைகேடுகள் நிறைந்த பல்கொலைக்கழகமாகச் சீரழிந்து நிற்கிறது.

மேலும் படிக்க …கொலைகார முதல்வர் போலீசாரைக் கைது செய்து தண்டனை கொடு

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

“இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது” என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க …பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை

.""இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்களுக்கு உரியது'' என 2010 11ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கைபற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க …பட்ஜெட்: வலுத்துவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை

போபால் யூனியன் கார்பைடு ஆலை ""விபத்தை'' இந்திய மக்களும், உக்ரைனின் செர்னோபில் அணுஉலை விபத்தை உலக மக்களும் மறந்துவிடக் கூடாதவை. ஒவ்வொன்றும் ஜந்தாயிரம் மக்களைக் கொன்றதோடு, பல ஆயிரம் பேரை ஊனமுற்றோராக்கி, பிறக்கும் குழந்தைகளையும் தலைமுறை தலைமுறையாக ஊனமுறச் செய்து விட்டன. செர்னோபில் விபத்துக்கு அப்போது அங்கு இல்லாத கம்யூனிச அரசைக் காரணமாக்கிய அமெரிக்க ஏகாதிபத்திய ஏகபோகங்கள், போபால் பேரழிவுக்கு நட்ட ஈடும் கிரிமினல் குற்றத்துக்குத் தண்டனையும் இல்லாமல், பாசிச காங்கிரசு இராஜீவ் கும்பலின் உடந்தையோடு நழுவிக்கொண்டன. இதிலிருந்து பாடங்கற்றுக் கொண்டு இந்த நாட்டு மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதில், முழுக்க முழுக்க இலாபவெறியோடு அலையும் அமெரிக்க அணுசக்தி கம்பெனிகளுக்கு ஊழியஞ் செய்யும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது.

மேலும் படிக்க …அணு உலை விபத்து இழப்பீடு மசோதா: அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா!

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

மேலும் படிக்க …முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி !!

சிவமுராத் திவேதி, தில்லியைச் சேர்ந்த பிரபலமான விபச்சாரத்தரகன். இணையதளத்தின் மூலம் விபச்சாரத் தொழில் செய்து கொடிகட்டிப் பறந்தவன். அவனது தொழிலுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பாக உதவியது காவியுடைதான். பகல் முழுவதும் யோகம், தியானம், ஆன்மீகச் சொற்பொழிவு என ""இச்சாதாரிபாபா''வாக வேடம் போட்ட இந்தக் காவியுடைச் சாமியார், இரவானால் விபச்சார "மாமா'வாகச் செயல்பட்டுள்ளான். இந்த இச்சாதாரி "மாமா' அம்பலமாகி வட இந்தியாவைக் கலக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், காற்று வரும் என நினைத்து கதவைத் திறந்து வைத்து கல்லாக் கட்டிக் கொண்டிருந்த கயவாளி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் கொஞ்சிக் குலாவிய படுக்கையறைக் காட்சிகள் வெளியாகி தமிழகத்தை அதிர வைத்தன.

மேலும் படிக்க …கருப்புப்பணம் - காமக் களியாட்டம் இது தான் காப்பரேட் ஆன்மீகம்

இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் தனிச்சிறப்பான முறையில் கட்டியமைக்கப்பட்டிருக்கும் இராணுவம், போலீசு, உளவுப்படை, ""வெள்ளைவேன்'' கொலைப்படை, பேரினவாதச் செய்தி ஊடகம் ஆகிய கட்டுமான அமைப்பு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற "பயங்கரவாதி'களை ஒழிப்பதற்கும், நாட்டின் ஒருமையைக் காப்பதற்கும் அவசியமானதுதான் என்று சிங்கள சமூகம் நம்பிக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க …ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை

இந்தியப் போலி கம்யூனிச இயக்கம் இன்னுமொரு தலைமைப் பூசாரியை இழந்துவிட்டது. "வங்கத்துசிங்கம்' என்று சி.பி.எம். கட்சியினரால் சித்தரிக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவரான திருவாளர் ஜோதிபாசு, கடந்த ஜனவரி 17ஆம் நாளன்று தனது 95வது வயதில் மறைந்து விட்டார்.

மேலும் படிக்க …கம்யூனிசத் துரோகி ஜோதிபாசு: டாட்டா – பிர்லாவின் கூட்டாளி! பாட்டாளிக்குப் பகையாளி!

விவசாயம் போண்டியாகி, பெரும்பாலான கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கும் வேளையில், கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காகப் புதிய திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மைய அரசு. இதன்படி, கிராமப்புறங்களில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவே ""கிராமப்புறநலவாழ்வு பட்டப் படிப்பு'' (Bachelor of Rural Heath) என்ற பெயரில் புதிய அலோபதி (ஆங்கில) மருத்துவக் கல்வித் திட்டத்தை நாடெங்கும் தொடங்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

 

மேலும் படிக்க …கிராமப்புற மருத்துவர்கள் பஞ்சுமிட்டாய்த் திட்டம்!

கொலை, பாலியல் வன்புணரச்சி போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் போலீசுக்காரனைத் தண்டிப்பதற்கு நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது இன்று  ருச்சிகா வழக்கு பிரபலமான பிறகு  மெத்தப் படித்த அறிவுஜீவிகளுக்கும் புரிந்திருக்கும். அப்படிப்பட்ட போலீசுக்காரனோ, இராணுவச்சிப்பாயோ தீவிரவாதிகளை எதிர்த்துப் "போராடும்' அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டால், அவனது கிரிமினல் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் கேள்விக்கு இடமில்லாதது ஆகிவிடும்.

 

மேலும் படிக்க …பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஜ

அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின்நாயகன்" , என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றபோதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின.

மேலும் படிக்க …ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது!

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேஷன் கிரீன்ஹண்ட்)என்பது, நாட்டு மக்கள் மீது மறுகாலனியாக்கத்தை துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிசப் போர். அதை அம்பலப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அரசு அவர்களைச் சகித்துக் கொள்ளாது. மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென்னும், காந்தியவாதி ஹிமான்ஷ குமாரும் மட்டுமல்ல் வேட்டை தீவிரமாவதைத் தொடர்ந்து இன்னும் பல முற்போக்கு  புரட்சிகர பத்திரிகையாளர்களும் மனித உரிமை இயக்கத்தினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வதைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க …அறிவுத்துறையினர் மீது பாயும் அரசு பயங்கரவாதச் சட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்டக்கிளை உறுப்பினராகச் செயல்பட்டு வந்த தோழர் கண்ணன், கடந்த 16.2.2010 அன்று காலை திடீர் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டார். படிப்பறிவு குறைந்தவராக இருந்தபோதிலும், வர்க்க உணர்வும் போர்க்குணமும் நிறைந்த தோழர் கண்ணன், தன்னைப் புரட்சிகர அரசியலின் பிரச்சாரகனாகக் கருதி உணர்வோடு செயல்பட்டவர். உதிரித் தொழிலாளியான அவர், நாள் முழுவதும் உடலுழைப்பில் ஈடுபட்டுவிட்டு, இரவு நேரங்களில் அமைப்பின் பிரச்சாரப் பணிகளில் சோர்வின்றிப் பணியாற்றினார். கொள்கையின் மீது பற்றுறுதியும், அது வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும் அவரது பேச்சிலும் செயலிலும் எப்போதும் வெளிப்படும். புரட்சிகர அமைப்பையும் தோழர்களையும் இழிவாக அவதூறு செய்த காலிகளை தன் பாதச் செருப்பால் பதம்பார்த்தவர்தான் இந்த உணர்வுமிக்கத் தோழர். எளிய வாழ்வும் கடினஉழைப்பும் புரட்சியின் மீது மாளாக்காதலும் கொண்ட 45 வயதான அத்தோழரின் திடீர் மரணம், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

 

தோழரின் மரணச் செய்தி அறிந்து திருச்சி மாவட்டம் முழுவதிலுமிருந்து திரண்ட அமைப்புத்தோழர்களும் நண்பர்களும் உறவினர்களும், ம.க.இ.க. அலுவலகத்தில் செங்கொடி போர்த்தப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அன்று மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, இடுகாட்டில் இரங்கல் கூட்டம் நடத்தினர். கண்ணீர் மல்க உரையாற்றிய அனைவரும் தோழரின் உயரிய கம்யூனிசப் பண்புகளை வழுவாமல் பின்பற்றவும், அவரது புரட்சிகர கனவை நிறைவேற்றப் பாடுபடவும் உறுதியேற்று அஞ்சலி செலுத்தினர்.

 

தோழர் கண்ணனின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம்,திருச்சி.
18 புதிய ஜனநாயகம் மார்ச் 2010

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் என்ற நிறுவனம் கால்நடைத் தீவனம் மற்றும் கறிக்கோழிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், தமிழகமெங்கும் கறிக் கோழிகளையும் தீவனங்களையும் உரிய காலத்திற்குள் கொண்டு சென்று இரவு பகலாகப் பாடுபட்டு வந்தபோதிலும், எவ்விதச் சட்டபூர்வ உரிமைகளுமின்றிக் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவந்தனர்.

மேலும் படிக்க …நெருப்பைப் பஞ்சால் அணைக்க முடியுமா?

மத்திய அமெரிக்காவில் கியூபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஹெய்தி தீவைச் சேர்ந்த சாதாரண குடிமகன் தொடங்கி அத்தீவின் முன்னாள் இராணுவஅமைச்சர் உள்ளிட்டுப் பலரும் இவ்வார்த்தைகளைத்தான் இப்பொழுது கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது என்ற போர்வையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவரும் அரசியல் சதிராட்டத்தைத் தோலுரித்துக் காட்டும் வார்த்தைகள் இவை.

மேலும் படிக்க …ஹெய்தி நிலநடுக்கம்: பிணந்தின்னி அமெரிக்கா! ""எங்களுக்கு இராணுவ வீரர்கள் தேவையில்லை!''

தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத்தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள ""மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா''முடக்கிப் போடப் போகின்றது.

மேலும் படிக்க …மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா:மீனவர் மீதான இந்திய அரசின் போர்!

""ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன், எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும், திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக மார்க்கெட்டிங்கில்'' என்கிறார், நிர்வாகம் மற்றும் விற்பனைத் துறைகளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்தும் எஸ்.எல்.வி.மூர்த்தி.

மேலும் படிக்க …மராத்திய இனசெறி சிவசேனா உருவாக்கும் வில்லன்கள்

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் சிங்கூரில் பாலாய் சாபுய், திவாகர் கோலே ஆகியோர் அண்டை வீட்டுக்காரர்கள். 1970களில் பீடி சுற்றும் தொழிலாளிகளாக இவர்கள் வறுமையில் வாடினர். பாலாய் சாபுய், சி.பி.எம். கட்சியில் சேர்ந்து ஹ_க்ளி மாவட்ட விவசாய சங்கத் தலைவராக உயர்ந்தார். அவர் அரசு போக்குவரத்துத் துறையின் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார். இம்மாவட்டத்தின் அனைத்து வாகனங்களுக்கும் உரிமம்  பர்மிட் வழங்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிங்கூரில் அரசின் நிலக் கையகப்படுத்தல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இன்று அவருக்கு சிங்கூரில் இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. போலேரோ ஜீப்பில் வலம்வரும் அவர் இன்று இப்பகுதியில் முக்கியத் தலைவராவார்.

மேலும் படிக்க …சி.பி.எம்மின் பரிதாப வளர்ச்சி முதலாளிகளே ஊழியர்களாக

மே.வங்கம், ஒரிசா, ஜார்கந்து, சட்டிஸ்கர், பீகார் மாநில முதல்வர்களுடன் சேர்ந்து காட்டுவேட்டை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றி கலந்தாலோசனை செய்ய, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று கொலைகார உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா வந்தபோது, ""வேதாந்தாவின் கொலைகார அடியாள் ப.சிதம்பரமே திரும்பிப்போ!, டாடாவின் எடுபிடி புத்ததேவ் பட்டாச்சார்யாவே வெளியேறு!'', ""காட்டுவேட்டை என்ற பெயரில் தொடரும் நாட்டு மக்கள் மீதான போரை முறியடிப்போம்!'' என்ற முழக்கங்கள் கொல்கத்தா நகரெங்கும் எதிரொலித்தன.

மேலும் படிக்க …கொலைகார சிதம்பரத்தின் கொடும்பாவி எரிப்பு மே.வங்கத்தை உலுக்கிய பேரணி- ஆர்ப்பாட்டம்

இந்திய ஆட்சியாளர்கள் பழங்குடி மக்கள் மீது நடத்திவரும் கொலைவெறியாட்டப் போரை திட்டமிட்டு மூடிமறைத்து, நக்சல்பாரி புரட்சியாளர்களைப் பயங்கரவாதிகளாகவும் கொலைகாரர்களாகவும் இழிவுபடுத்தி தமிழக செய்தி ஊடகங்கள் அவதூறு செய்துவரும் நிலையில், ஆளும் கும்பல் நடத்திவரும் நக்சல் வேட்டையின் உள்நோக்கத்தையும், மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கியும், ""பழங்குடியினர் மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான், அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!'' என்ற முழக்கத்துடன், பல்வேறு வடிவங்களில் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் கடந்த இரு மாதங்களாகத் தொடர்ந்து சூறாவளிப் பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன.

மேலும் படிக்க …நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணிவகுப்போம்!

இந்தியாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத் திட்டத்துக்கு எதிராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி.பி.எஸ்.எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிசாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஜந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

 

தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக், டெல்லியில் கடந்த ஜனவரி 26 அன்று நடந்த "குடியரசு' தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் வருகைக்கு முன்னதாக 3566 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய நிலங்களை விரைவில் கையகப்படுத்தி திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதாவது, 2006ஆம் ஆண்டில் கலிங்கா நகரில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14பேரைக் கொன்றதைப் போல, மிகக் கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடத் துடிக்கிறது.

 

ஏறத்தாழ 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போஸ்கோ திட்டத்தினால் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்விழக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரிசாவின் உயர்தரமான இரும்புக் கனிமத்தில் 60 கோடிடன் அளவுக்கு அள்ளிச் செல்வதோடு, ஆண்டுக்கு 12கோடி டன் எஃகு உற்பத்தி செய்யும் உருக்காலையும் மின்நிலையமும் தனியார் துறைமுகமும் கொண்ட இத்திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தால் 11 கிராமங்களிலுள்ள 5000 குடும்பங்கள்  ஏறத்தாழ 30,000 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இதுதவிர, ஜடாதாரி ஆற்றையும் அது கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியையும் போஸ்கோ நிறுவனம் ஆக்கிரமிக்கப் போவதால், 52,000 மீனவர்களின் எதிர்கால வாழ்வும் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

எஃகு உருக்காலை மற்றும் மின்நிலையத்துக்கு 4004ஏக்கர் நிலம் தேவை. இதில் 3566 ஏக்கர் புறம்போக்கு மற்றும் காட்டுப்பகுதிகள் அரசால் இந்நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காட்டு நிலங்களையும் காட்டின் விளைபொருட்களையும் பயன்படுத்தி வந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 438 ஏக்கர் நிலம் உள்ளூர் சிறு விவசாயிகளுடையது. இவற்றில் வெற்றிலை, முந்திரி சாகுபடியும் முக்கியமாக, நெல் சாகுபடியும் செய்து வருகின்றனர். இந்த நிலங்களைப் பறிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க 25 பிளாட்டூன் துணை இராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஒப்புதல் பெறுவதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகளும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் அரசோ, 15 நாட்களுக்குள் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், பின்னர் எவ்வித நிவாரணமும் தரப்பட மாட்டாது என்று கடந்த பிப்ரவரி முதல் நாளன்று அறிவித்து, நிலங்களைப் பறிக்கக் கிளம்பியுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான மறுகுடியமர்த்தல் மற்றும் நிவாரணத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ""இந்தியாவில் இதுதான் மிகச் சிறந்த நிவாரணத் திட்டம்'' என்கிறார் போஸ்கோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளரான மொகந்தி. ஆனாலும் இன்றுவரை எந்த விவசாயியும் நிவாரணத் தொகையை வாங்கவில்லை.

 

ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் பட்னா, கோவிந்த்புர், தின்கியா ஆகிய கிராமங்கள் போராட்டத்தின் முன்னணியில் நிற்கின்றன. விவசாயிகள் போஸ்கோ திட்டம் அமையவுள்ள 4004 ஏக்கர் நிலத்தைச் சுற்றிவளைத்து 17இடங்களில் மட்டும் நுழைவாயில்களை அமைத்துள்ளனர். அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த மூங்கில் தடுப்பரண்களைத் திறக்க முடியாது. அரசு அதிகாரிகளோ போஸ்கோ நிறுவனத்தினரோ இன்னமும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் மூங்கில் வேலி போடப்பட்டு அந்நியர்கள் எவரும் நுழைய முடியாதபடி தடுத்துக் கண்காணித்துவருகின்றனர்.

 

""ஏற்கெனவே பாரதீப் துறைமுகப் பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதேபோல விளைநிலங்களைப் பறித்துக் கொண்டு மறுவாழ்வு நிவாரணத் திட்டங்களை அறிவித்தது. அதை அன்று விவசாயிகள் நம்பினர். அந்த இடத்தை இன்று யார் வேண்டுமானாலும் நேரில் சென்று பார்க்கட்டும். வெறும் கான்கிரீட் தூண்கள்தான் நிற்கின்றன. அதற்குமேல் நிவாரணத் திட்டம் நகரவேயில்லை. அரசாங்கமே எங்களை வஞ்சித்துவிட்ட நிலையில், அந்நியத்தனியார் ஏகபோக நிறுவனமான போஸ்கோ, நிவாரணத்திட்டத்தை நிறைவேற்றும் என்று நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை'' என்கிறார், தின்கியா கிராமப்பஞ்சாயத்துத் தலைவரான சிசிரா மகாபத்ரா.

 

நருசிங்க பெஹரா மற்றும் தேவேந்திர சுவாசூன் ஆகியோர் ""போஸ்கோவுக்கு மக்களின் எதிர்ப்பு'' எனும் ஏழுநிமிடக் காணொளியைத் தயாரித்து, அதை நாட்டு மக்கள் அனைவரும் காணுமாறும், விவசாயிகளின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிக்குமாறும் கோரியுள்ளனர். ((http://www.youtube.com/watch?v=cizn7zJmyUc)

 

போஸ்கோவை எதிர்த்து வலது கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விவசாயிகளோடு இணைந்து போராடி வருகின்றன. தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது போஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குண்டர்படையினர் தாக்குதல் நடத்தியதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தவிர போலீசு பலமுறை தடியடித்தாக்குதல் நடத்தி இப்போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது. இத்துணை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப்போராட்டம் பற்றிப் படர்ந்து வருகிறது. ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதை மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகரஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை; நம் கடமை.


• குணசேகரன்

பழங்குடியினர் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தின் ஜாடுகுடா, யுரேனியவளம் மிக்க பகுதியாகும். இங்கு இந்திய யுரேனியக் கழகம் எனும் அரசுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமாகப் பல சுரங்கங்கள் உள்ளன. இந்நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்த்து, அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜாடுகுடா வட்டாரமே கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …வாழ்வுரிமைக்குப் போராடுவது தேச விரோதச் செயலா?

நுண்கடன் என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கும் நிதிநிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் வகை தொகையின்றிப் பெருக ஆரம்பித்துள்ளன. பொருளாதார மந்தம் உலகைப் பிடித்தாட்டும் இன்றைய சூழலில், முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க இவர்கள் வெளிநாடுகளில் செய்யும் விளம்பரங்களில்,""பத்தாயிரம் ரூபாய் உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் போகலாம்; ஆனால் அதனை நுண்கடனாகக் கொடுப்பதன் மூலம் நீங்கள் இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கரை சேர்க்கமுடியும். உங்கள் பணம், நிச்சயமாக உங்களிடமே திரும்ப வரும்  அதுவும், அதற்கு உண்டான வட்டியுடன்!'' என விளக்கி இந்தியாவின் வறுமையையே இவர்கள் மூலதனமாக மாற்றுகின்றனர்.

மேலும் படிக்க …நுண்கடன் மிகப்பெரும் கொள்ளை

அண்மையில் நாடெங்கிலும் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தகுதி நீக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 17 தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவற்றுள் ஒன்றுதான், தி.க. வீரமணியின் ""பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்''.

மேலும் படிக்க …நூதனக் கல்விக் கொள்ளை தி.க.வீரமணியின் ’சாதனை’

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இதோ இறுதித் தீர்ப்பு வந்துவிடும், அதுவும் தமிழகத்துக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற தோரணையில் விசாரணையை நடத்திக் கொண்டிருந்த உச்சநீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுப் பிரிவு, கடந்த மாதம் திடீர்த்திருப்பமாக கேரள அரசுக்குச் சாதகமாக அடி எடுத்து வைத்து விட்டது.

மேலும் படிக்க …முல்லைப் பெரியாறு கருணாநிதி மறைக்கும் உண்மை

அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குச் சந்தைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் விலைவாசியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தும் கொதித்துப் போயும் கிடக்கிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய இன்றியமையாப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக எகிறிக் கொண்டே போகிறது. சந்தையில் கிலோ 13 ரூபாயாக இருந்த அரிசி 28 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்குக்கு மேலாகி விட்டது. 8 ரூபாயாக இருந்த கோதுமை 15 ரூபாயாகி விட்டது. 17 ரூபாயாக இருந்த சர்க்கரை 47 ரூபாயாகிக் கசக்கிறது.

மேலும் படிக்க …விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!

எண்ணெய்க்காக ஈராக் மீது போர்தொடுத்து, ஆக்கிரமித்துள்ள அமெரிக்க பயங்கரவாதிகளின் வழியில், இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்காக நாட்டு மக்கள் மீதே காட்டு வேட்டைஎன்ற மிகக் கொடிய போரை நடத்தி வருகிறார், கொலைகார உள்துறை அமைச்ழுஉர் ப.சிதம்பரம்.

மேலும் படிக்க …காட்டு வேட்டை: மக்கள் மீது போர் நடத்தும் கொலைகார ப.சி.

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேசன் கிரீன் ஹன்ட்) என்பது, மக்கள் மீது மறுகாலனியாக்கத்தைத் துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிச போர். இதனைப் பத்திரிகையாளர்கள் உள்ளட்டுப் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். ஜன4,"டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளேட்டில் வெளிவந்துள்ள, பி.யு.சி.எல் அமைப்பைச் சார்ந்தவரும் சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான சுதா பரத்வாஜின் நேர்காணல் இதனை நிரூபிக்கிறது. அதன் சாரம் வருமாறு:

மேலும் படிக்க …இது வளர்ச்சியல்ல, இதுதான் எகாதிபத்தியம்!

சென்ற வருடம் அக்டோபர் மாதம் மத்திய அரசின் மரபணு பொறியியல் ஒப்புதல் குழு, பி.டி. கத்தரிக்காயை வணிக ரீதியில் விளைவிக்கலாம் என ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கு நாடெங்கிலும் அறிவுத்துறையினர், சூழலியவாதிகள், தன்னார்வக் குழுக்கள் முதலானோரிடத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் படிக்க …பி.டி கத்திரிக்காய்: மறுகாலனியாக்கத்தின் அடுத்த குண்டு!

ஈழப்போரில் பேரழிவும் பின்னடைவும் ஏற்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்துவரும் அறிக்கைகளும், அவர்கள் எடுத்துவரும் நிலைப்பாடுகளும் தமிழர்களைப் புல்லரிக்க வைக்கின்றன. ஏழு மாதங்களுக்குமுன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஜெயலலிதாவின் "நேர்மையான சந்தர்ப்பவாதமான' ஈழ ஆதரவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இரட்டை இலைக்கு தெருவெங்கும் வாக்கு சேகரித்தனர், பெரியார் தி.க.வினர்.

மேலும் படிக்க …தொடரும் புலி ஆதாரவாளர்களின் சந்தர்ப்பவாதம்

அதிகாலையிலேயே எழுந்து ஓட்டமும் நடையுமாக நடுத்தர மேட்டுக்குடிவர்க்கத்தினர் வீடுகளுக்குப் பாத்திரங்கள் விளக்கி, வீடுபெருக்கக் கிளம்பிச் செல்லும் கண்ணம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் கதை இது. எட்டுவயதில் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்த கண்ணம்மா (வயது 43)இப்போது சென்னை ராயப்பேட்டை பகுதியில் நான்கு வீடுகளில் தினமும் வேலை செய்கிறார்.

மேலும் படிக்க …வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை

போலீசுக்காரர்கள், குறிப்பாக உயர் போலீசு அதிகாரிகள் வக்கிரமான, கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், தண்டனை ஏதுமின்றித் தப்பித் திரிவதும் மட்டுமல்ல அவர்களால் பாதிக்கப்பட்டவர்களே துன்புறுத்தப்படுவதும், கிரிமினல் போலீசார் மேலும்மேலும் பதவி உயர்வும் விருதுகளும் பெறுவதும் கூட புதிதில்லை.

மேலும் படிக்க …கிரிமினல் போலீசுக்கு வரம்பற்ற அதிகாரம்: இது எந்த வகையில் நியாயம்?

கருப்புப் பட்டியலில் உள்ள தமிழகத்தின் 16 தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மைய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மீண்டும் குமுறி எழுந்து அடங்கியிருக்கிறது.

மேலும் படிக்க …“நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு!” – பு.மா.இ.முவின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்

"பழங்குடியினர் மீனவர்கள் விவசாயிகள்மீதான போர்தான், அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!" என்ற மைய முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், கொலைகார இந்தியஆட்சியாளர் நடத்தும் காட்டுவேட்டை போரின் உள்நோக்கத்தைத் திரைகிழிக்கும் வெளியீடு,

மேலும் படிக்க …“நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணிவகுப்போம்!” –தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சூறாவளிப் பிரச்சாரம்

அரசு பயங்கரவாதம் கொடியது. அதிலும் உலகப்பொது எதிரியான அமெரிக்க அரசு பயங்கரவாதம் மிகக்கொடியது. கியூபா எல்லையை ஒட்டியுள்ள குவாண்டனோமோ சிறை, ஈராக்கின் அபு கிரைப் சிறை, அமெரிக்கப் போர்க் கப்பல்கள் என்ற பெயரில் உள்ள 'மிதக்கும் சிறைச்சாலைகள்' முதலானவற்றில் தொடரும் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளும் இரத்தத்தை உறைய வைக்கும் கொடுமைகளும் அடுத்தடுத்து அம்பலமாகி அமெரிக்கப் பயங்கரவாதம் உலகெங்கும் காறி உமிழப்படுகிறது.

மேலும் படிக்க …பாக்ராம்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் புதிய கொலைகார முகம்

மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் "நான்காவதுதூணாக"ச் செயல்படுவதாகவும் செய்தி ஊடகங்களைப் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், இன்று அவற்றின் நிலைமையோ, அத்தகைய முதலாளித்துவ செய்தி ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களால் கூட சகிக்க முடியாத அளவிற்கு போய் விட்டது.

மேலும் படிக்க …பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கடந்த 40 ஆண்டுகளாக லியோ பாஸ்ட்னர்ஸ் எனும் போல்ட்நட் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கொருமுறை அரசின் சலுகைகள் மானியங்களைப் பெறுவதற்காக நிறுவனத்தின் பெயரை வௌவ்வேறு பெயர்களில் மாற்றிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை விழுங்கிவரும் இந்நிறுவனம்,

மேலும் படிக்க …தொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் குமுறி தொழலாளர் போராட்டம்

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா எனுமிடத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன. கோயிலுக்கு வரும்பக்தர்களையும் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் இக்குரங்குகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தன.

மேலும் படிக்க …செத்துப் போன குரங்குக்கு சிவப்பு துணி மரியாதை! கேரள போலி கம்ய+னிஸ்டுகளின் இந்துத்துவ பக்தி!

“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது.

மேலும் படிக்க …ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத்தன்மை’!

"ஆபரேசன் கிரீன் ஹண்ட்' (காட்டு வேட்டை) என்ற பெயரில் மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்தும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

மேலும் படிக்க …நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகரராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது,

மேலும் படிக்க …தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்!

அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. ""அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!'' என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.

 

மேலும் படிக்க …நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!

இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், முன்னெப்போதும் கண்டிராத ""இயற்கைப் பெரும் பேரழிவுகளை'' உலகம் கண்டது. கொதிக்கும் கோடைக்காலங்கள், அதிபயங்கர சூறாவளிகளும் புயல்களும், மிக மோசமான வறட்சிகளும் கொட்டித் தீர்த்த பேய்மழைகளும் வெள்ளப் பெருக்குகளும், பயபீதியும் நாசமும் விளைவித்த பெருங்கடற் சீற்றங்கள் கடல்மட்ட உயர்வுகள், இவற்றோடு பல நாடுகளின் விவசாயத்தின் தலைகுப்புற வீழ்ச்சிகள். இத்தகைய நிகழ்வுகள் உலகின் ஏதோ சில பகுதிகளில் மட்டும், எப்போதோ ஒரு சிலதடவைகள், தன்னியல்பாக வரக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் என்று இனியும் கருதிவிட முடியாது.

மேலும் படிக்க …கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் மும்பய் நகரில் நடந்த கூட்டமொன்றில், ""நமது கஷ்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டதாக'' அருள்வாக்கு செõன்னார். அவர் எந்த நேரத்தில் திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நாடெங்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து, பாமர மக்களை மயக்கம் போடவைத்தது.

மேலும் படிக்க …விலைவாசி உயர்வை ரசிக்கும் கோமாளிகளின் வக்கிர ஆட்சி!

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஆளும்வர்க்க விசுவாசத்தோடு கம்யூனிச எதிர்ப்புக்குக் கரசேவை செய்துவரும் ""தலித்முரசு'' இதழ், தனது நவம்பர் 2009 இதழில், ""அதிகாரம்+நக்சலைட்டுகள்= வர்ணாஸ்ரமம்'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, தனது வர்க்காஸ்ரம வெறியைக் காட்டியுள்ளது.

மேலும் படிக்க …தலித் முரசின் “வர்க்காஸ்ரம” வெறி!

இடுபொருட்கள் விலை உயர்வு, கொள்முதல் விலைவீழ்ச்சி, உணவு தானிய தாராள இறக்குமதி முதலானவற்றால் இந்திய விவசாயிகள் போண்டியாகி, கந்துவட்டிக் கடன் சுமையில் சிக்கி ஓட்டாண்டிகளாகி வருகிறார்கள். மறுபுறம், விவசாயத்தைப் புறக்கணித்துவரும் ஆட்சியாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு வரிச் சலுகைகள்,மானியங்கள் என்ற பெயரில் நாளொன்றுக்குப் பலநூறு கோடிகள் வீதம் வாரியிறைக்கின்றனர்.

மேலும் படிக்க …மீளமுடியாத கடன் பிடியில் விவசாயிகள்...கொண்டாட்டத்தில் பெரும் முதலாளிகள் — வி.வி.மு.வின் கருத்தரங்கம்

வடசென்னை அனல் மின்நிலையம் (NCTPS), 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழுள்ள அரசுத்துறை நிறுவனம். நாளொன்றுக்கு 60,000 டன் நிலக்கரி கையாளப்படும் இந்த நிறுவனத்தில், கரியள்ளும் பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்த 261 தொழிலாளர்கள் இன்று வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம்

"நீங்கள் நடுநிலையாளர்களாக இருப்பதென்பது குற்றம்!'' — இந்திய அரசு விடுக்கும் எச்சரிக்கை! அது, தெற்கு சத்தீஸ்கரின் வெச்சபல் கிராமம். காட்டின் மடியிலிருந்த அந்தக் கிராமத்தில், அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் பொன்யாம் பந்துரு. இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்த துப்பாக்கிகளின் வேட்டுச்சத்தம் பந்துருவின் தூக்கத்தைக் கலைத்தது. ""ஐயோ! கொலைகாரர்கள் வந்துவிட்டார்கள்'' என்ற அலறல் எங்கும் எதிöராலித்தது.

மேலும் படிக்க …“நீங்கள் என்னை நக்சல்பாரி ஆக்கினீர்கள்!”

"இனியும் இது நீடிக்க முடியாது. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்'' என்று வானொளியில் தோன்றிய அமெரிக்காவின் தலைமைக் கொலை வெறியன் öரானால்டு ரீகன் முழங்கினான்.

மேலும் படிக்க …எது பயங்கரவாதம்?

போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நட்ட ஈடு வழங்கக் கோரியும், யூனியன் கார்பைடு முதலாளி வாரன் ஆண்டர்சனைக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கக் கோரியும் இன்று வரை போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், மன்மோகன் சிங் அரசு, அணு ஆலை விபத்துக்கள் தொடர்பாக ஒரு புதிய மசோதாவொன்றைத் தயாரித்து, அதனைச் சட்டமாக்கிவிட முயன்று வருகிறது.

மேலும் படிக்க …அணுசக்தி கடப்பாடு மசோதா: மலிவானதா மக்களின் உயிர்?

இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள புதிய ஜனநாயகம் இதழை வாழ்த்தியும், வாசகர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விளக்கியும் திருச்சி வாசகர் வட்டத் தோழர்கள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கடந்த 6.12.09 அன்று மாலை அரங்கக் கூட்டத்தைப் பேருற்சாகத்துடன் நடத்தினர். திருச்சி புத்தூர் நாலுரோடு சண்முகா திருமண அரங்கில், மாணவர்களும் மாணவிகளும் இணைந்து நடத்திய தப்பாட்டத்தோடு தொடங்கிய இக்கூட்டத்திற்கு ம.க.இ.க. மையக் கலைக்குழு தோழர் கோவன் தலைமை தாங்கினார்.

மேலும் படிக்க …25ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் - சிறப்பு வாசகர் வட்டக் கூட்டம்

புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல்அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் ""ஜுமெரா பாம்'' எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலி ஏற்றுமதி மையம் எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்து என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

மேலும் படிக்க …துபாய் நெருக்கடி: ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!

அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், ""ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு'' எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

மேலும் படிக்க …ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!

இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல; பொறுக்கி அரசியல்! இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் வசவுகள், பேசும் தலைவர்கள் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!

 

மேலும் படிக்க …பொறுக்கி அரசியல்

இந்தியாவில், சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர்களது அறியாயை எள்ளி நகையாடும் சம்பவம் ஒன்று அண்மையில் நடந்துள்ளது. விடுதிப் பணிப்பெண் ஜெசிகா லாலை சுட்டுக் கொன்ற வழக்கில் சிறையில் உள்ள மனு சர்மா, நன்னம்பிக்கை விடுப்பில் (பரோல்) வெளிவந்து ஆட்டம் போட்ட விவகாரம், சட்டத்தின் ஆட்சியைச் சந்தி சிரிக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க …ஏழைக்கு ஒரு நீதி; பணக்காரனுக்கு ஒரு நீதி. - இதுதான் சட்டத்தின் ஆட்சி!

வடக்கு கர்நாடகாவிலுள்ள பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இப்பிரச்சினையைக் கையிலெடுத்த இந்து மதவெறி அமைப்புகள், ""அனிதா, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் ஜிகாதி காதலர்களால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டிருக்கலாம்'' எனக் குற்றம் சுமத்தியதோடு, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், ""அனிதா தீவிரவாதிகளின் சதிக்குப் பலியாகிவிட்ட தாக'' ப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. குருபுரா மடாதிபதி ராஜசேகரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பல்வேறு இந்து மடங்களும் ஆதரவு தெரிவித்தன.

மேலும் படிக்க …"லவ் ஜிகாத்" ஆர்.எஸ்.எஸ். - இன் அவதூறுக்கு நீதின்றமே பக்கமேளம்!

மீண்டும் சீன எதிர்ப்பு தேசிய வெறி இந்திய ஆளும் வர்க்கங்களால் கிளறி விடப்படுகிறது. புத்த மதகுருவான தலாய் லாமா அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு "ஆன்மீகப் பயணம்' சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையும், அம்மாநிலத்தின் தவாங் மாவட்டப் பகுதியைத் தனது பாரம்பரிய பிரதேசம் என்று சீனா உரிமை கோருவதையும் வைத்து, இப்போது ஊடகங்கள் சீன எதிர்ப்பு தேசிய வெறியைக் கக்குகின்றன.

மேலும் படிக்க …இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?, சீனாவின் திபெத்தில் நடந்த இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சதிகள்

சாங்குயிங் என்ற நகரம், சீனாவின் மேற்கேயுள்ள சிச்சுவான் மாநிலத்தின் வளர்ந்துவரும் பெரு நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தைச் சேர்ந்த லீ குயாங் என்பவர், சீன "கம்யூனிஸ்ட்' கட்சியின் செல்வாக்குமிக்க அதிகாரி. அவர் ஒரு பெரும் தொழிலதிபர்; கோடீசுவரர்.

மேலும் படிக்க …மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்'!

சில ஆண்டுகளுக்கு முன், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியபோது, அவற்றின் நோக்கங்களாக, ""தொழிற்துறை வளர்ச்சி, ஏற்றுமதிப் பெருக்கம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு'' ஆகியவற்றை ஆட்சியாளர்கள் முன்வைத்தார்கள். சி.பொ.ம.வில் முதலீடு செய்யும் நிறுவனங்களால், நாட்டிற்குப் பெரிய அளவில் பலன்கள் ஏற்படும் எனச் சொல்லி, அந்நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு வரிச் சலுகைகளை வாரி வழங்கியது. வரிச்சலுகைகளால் கொழுத்த சி.பொ.ம.க்களால் தொழிற்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் நடந்துள்ளனவா எனப் பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அவை உற்பத்தி செய்த பொருட்களில் பெரும்பான்மை உள்நாட்டில்தான் விற்கப்பட்டுள்ளனவே தவிர, ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. வேலைவாய்ப்போ, அவர்கள் காட்டிய கணக்கை விட மிகவும் குறைந்த அளவில்தான் உருவாகியிருக்கிறது.

மேலும் படிக்க …சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!

கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கும், அவரது ஆட்சியின் அஸ்திவாரமாக இருந்துவரும் சுரங்க முதலாளிகளான ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே இரண்டு வார காலமாக நடந்து வந்த அதிகாரச் சண்டை, ""கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு நெருக்கமானவரும் அம்மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜேயைப் பதவியில் இருந்து அகற்றுவது; பெல்லாரி மாவட்டத்தில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்துவது; எடியூரப்பா, ஆட்சி தொடர்பாக எடுக்கும் எந்தவொரு முடிவையும் ரெட்டி சகோதரர்களைக் கலந்து ஆலோசித்து எடுப்பது'' என்ற பேரத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

மேலும் படிக்க …கர்நாடக அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள், ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்

""நெருக்கடியான தருணத்தில் மனித சமுதாயத்தின் மேன்மைக்காக அயரது பாடுபடுபவன்தான் உண்மையான வீரன்'' என்றார், செக். நாட்டு கம்யூனிசப் புரட்சியாளரான தியாகத் தோழர் ஜூலியஸ் பூசிக். இந்தியாவின் புரட்சிகரஜனநாயக சக்திகள், டாக்டர் பாலகோபால் என்ற வீரனை இழந்து துயரத்தில் தவிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் மனிதஉரிமைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ""மனித உரிமைப் போராளி'' முனைவர் பாலகோபால், கடந்த 8.10.09 அன்று கடுமையான நெஞ்சுவலியால் தனது 57ஆவது வயதில் காலமாகிவிட்டார்.

மேலும் படிக்க …முனைவர் பாலகோபால்: மனித உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன்!

தனியார்மய தாராளமயத் தாக்குதலை மேலும் மூர்க்கமாகத் தீவிரப்படுத்தக் கிளம்பிவிட்டனர் காங்கிரசு துரோகிகள். பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்துள்ள திமிரில், உழைக்கும் மக்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடவும் துணிந்துவிட்டனர்.

மேலும் படிக்க …விவசாயிகள் - மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்

தில்லைக் கோயிலை அரசு மேற்கொண்டதற்கும், சிற்றம்பலத்தில் தமிழ் பாடுவதற்கும் எதிராகத் தடையாணை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. மேற்கூறிய இரு கோரிக்கைகளையும் போராடி வென்றவர்கள் என்ற முறையில், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்துள்ளோம்.

மேலும் படிக்க …தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!

துரோகம்! பதவி சுகத்துக்காக நடந்துள்ள அப்பட்டமான துரோகம்! தமிழகத்தின் ஐந்து தென் மாவட்ட  மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையைக் காவு கொடுத்து விட்டார், “தமிழினத் தலைவர்’கருணாநிதி.

மேலும் படிக்க …முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!

தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க …சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் ‘பொற்கால’ ஆட்சியின் சாதனையாக “உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க …மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?

கிணற்றில் போடப்பட்டக் கல்லைப் போல் கிடந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவெங்கிலுமான தொலைபேசி சேவை 122 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தின்படி, 2008-இல் இந்த 122 மண்டலங்களும் முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் 9 தனியார் நிறுவனங்களுக்கு (அந்நிய முதலீடும் இதில் உண்டு) விற்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க …ஸ்பெக்ட்ரம் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

பு.ஜ. இதழின் 25ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, கடந்த கால பு.ஜ. இதழ்களில் வெளியான முக்கியமான, இன்றைய சமூக நிகழ்ச்சிப் போக்குக்கும் பொருந்தக் கூடிய சமூக அரசியல் பொருளாதார விமர்சனக் கட்டுரைகளை இவ்விதழ் தொடங்கி மீண்டும் வெளியிடுவது என முடிவெடுத்திருக்கிறோம். இக்கட்டுரைகள், பு.ஜ.வின் புதிய மற்றும் இளம் வாசகர்களுக்குக் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் குறித்த விவரங்களைத் தருவதாகவும்;

மேலும் படிக்க …இது இன்னும் நீடிக்கலாமா?

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களின் சொத்துக்களைத் தனது உயர்பதவியைப் பயன்படுத்தி அபகரிக்கும் நபரும் ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவராய் இருந்தால், "சமூக நீதி' பேசும் பிழைப்பு வாதிகள் யார் பக்கம் நிற்பார்கள் என்பது நீதிபதி பி.டி.தினகரன் விவகாரத்தில் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

மேலும் படிக்க …திராவிட - தமிழினக் கட்சிகளின் சமூகநீதி: ஊழலின் கவசமா?

தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது; இலவச ஆரம்பக் கல்வி அளிப்பது; போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட சில சில்லறை சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க முயன்றதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிரடி இராணுவப் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்ட ""அதிசயத்தை'' நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஹோண்டு ராஸ் நாட்டில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த அதிரடி இராணுவப் புரட்சி அப்படிபட்ட அதிசய நிகழ்வாகும்.

மேலும் படிக்க …ஹோண்டுராஸ் இராணுவப் புரட்சியும், அமெரிக்காவின் நப்பாசையும்!

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து, யாரை முதல்வராக்குவது என்ற நாய்ச்சண்டை அங்கே ஆரம்பித்தது. அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகள் சாவுச்செய்தி அறிவிக்கப்படும் முன்பே தொடங்கின. ராஜசேகர ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருப்பினும், காங்கிரசு மேலிடம் ஆந்திர காங்கிரசின் மூத்த தலைவரான ரோசய்யாவை தற்காலிக முதல்வராக்கியது.

மேலும் படிக்க …ஆந்திர முதல்வர் நாற்காலிச் சண்டை: திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் சவால்!

தாராளமயம் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசனை (அமெரிக்காவை) விஞ்சிய விசுவாசியாக இருக்கிறார். இதற்கு சமீபத்திய உதாரணமாக இந்திய அரசிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் (ஏசியன் Association of Southindian nations)இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைக் குறிப்பிடலாம்.

மேலும் படிக்க …இந்தியா – ஏசியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பேரிடி!

தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 16 அன்று கோவா மாநிலத்திலுள்ள முக்கியமான வர்த்தக நகரான மார்காவோவின் மையப் பகுதியில் இரு சக்கர வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்புக்குக் காரணமான சதிகாரர்கள் யார் என்பது இந்நேரம் தெரியாமல் போயிருந்தால், முசுலீம் தீவிரவாதிகளைக் குற்றஞ்சுமத்தி போலீசும்,தேசியப் பத்திரிகைகளும் "புலனாய்வு' நடத்தியிருப்பார்கள். கோவா சுற்றுலா மையம் என்பதால், இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பாகிஸ்தானின் சதி இது என மைய அரசும் சாமியாடியிருக்கும்.

மேலும் படிக்க …கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!

மே.வங்கத்தில் லால்கார் மக்களின் போராட்டத்தை போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (கஇஅகஅ) தலைமைதாங்கி வழிநடத்தி வருகிறது. இப்போராட்டக் கமிட்டியின் தலைவரான சத்ரதார் மஹடோ, லால்கார் பகுதியில் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் அரசுக்குத் தலைமறைவாகவும் இருந்துகொண்டு போராட்டத்தை வழிநடத்தி வந்தார்.

மேலும் படிக்க …போராளி சத்ரதார் மஹடோ கைது: அவதூறு! பொய்வழக்கு!

மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தின் ஜங்கல் மகால் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட அப்பாவி பழங்குடியினப் பெண்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மேதினிப்பூர் பகுதியிலுள்ள சங்கராயில் போலீசு நிலையத்தைத் தாக்கி, அதிந்திர நாத் தத்தா என்ற போலீசு அதிகாரியைக் கடந்த அக். 20 அன்று மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். பி.பி.சி. செய்தியாளர்களின் முயற்சியால் அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமிடையே பேரம் பேச்சு வார்த்தை நடந்து அக்.22ஆம் தேதியன்று போலீசு அதிகாரியான அதிந்திரநாத் தத்தா விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 14 பழங்குடியினப் பெண்கள் உள்ளிட்ட 23 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …போலீசு அதிகாரி கடத்தல் விவகாரம்: பயங்கரவாதிகள் யார்?

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் கடந்த அக்டோபர் 11ஆம் தேதியன்று நடைபெற்றபோது, மே.வங்கத்தில் பயங்கரவாத ""ஊபா'' () சட்டம் செயல்படுத்தப்படுவதைப் பற்றிய விவாதம் நடக்கும்; மே.வங்க அரசு மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் என்று "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் பெரிதும் எதிர்பார்த்தன. ஆனால், அக்கூட்டத்தில் இது பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை

.

மேலும் படிக்க …சி.பி.எம் ஏவியுள்ள பயங்கரவாதச் சட்டம்: சொல்லில் சோசலிசம்! செயலில் பாசிசம்!

நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் போர் ஏவிவிடப்பட்டுள்ளது. மறுகாலனியச் சூறையாடலைத் தீவிரப்படுத்தவும், சொந்த மண்ணிலிருந்து உழைக்கும் மக்களைப் பிய்த்தெறிந்து விரட்டியடிக்கவும், பாசிச அடக்குமுறையைக் கேள்விமுறையின்றி நாட்டின் மீது திணிக்கவும், மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி ஒரு கொடிய போர் காங்கிரசு கூட்டணி ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …நக்சல் வேட்டை….அரசு பயங்கரவாத உள்நாட்டுப் போர்!

கிணற்றில் போடப்பட்டக் கல்லைப் போல் கிடந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவெங்கிலுமான தொலைபேசி சேவை 122 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2001ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தின்படி, 2008 இல் இந்த 122 மண்டலங்களும் முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் 9 தனியார் நிறுவனங்களுக்கு (அந்நிய முதலீடும் இதில் உண்டு) விற்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க …அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல்: தி.மு.க – காங்கிரசின் கூட்டு களவாணித்தனம்!

ஈழப் போருக்குப் பின், முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் மக்களின் நிலைமையை அறியும்முகமாக ஐந்து நாட்கள் பயணமாக தமிழக எம்.பி.க்கள் கடந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்று வந்துள்ளனர். மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள், ஆடல்பாடல்கள் எனத் திருமண விழாவுக்கு வருபவர்களைப் போல, தமிழக தூதுக் குழுவினருக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்தது, சிங்கள அரசு. அவலத்தின் நடுவே இத்தகைய ஆடம்பர வரவேற்பு எதற்காக என்று கேட்டு, தமிழக எம்.பி.க்கள் அதனைத் தவிர்க்கவில்லை. மாறாக, புன்முறுவல் பூத்தபடியே சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந்தார்கள்.

மேலும் படிக்க …தமிழக எம்.பிக்களின் ஈழச்சுற்றுலா: துரோகிகளுக்கு புரியுமா மக்களின் அவலம்?

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது சுந்தரவாண்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த 59 பேருக்கு 2000ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவிற்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிலத்தைப் பிரித்துக் கொடுக்காமல், இம்மக்களை அலைக்கழித்து வந்தது, அதிகார வர்க்கக் கும்பல்!

 

மேலும் படிக்க …ஒன்பது ஆண்டுகால இழுத்தடிப்புக்கு முற்றுப்புள்ளி! அடிபணிந்தது அதிகார வர்க்கம்!!

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்þ அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம் ஆகிய இரண்டு சர்வதேச ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா நெருக்குதல் கொடுத்துவரும் இந்த நேரத்தில், 1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா நடத்திய ஐந்து விதமான அணுகுண்டு சோதனைகளுள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் ஹைட்ரஜன் குண்டு சோதனை முழுத்தோல்வியடைந்துவிட்ட ஒன்று என சங்கு ஊதியிருக்கிறார், அணுசக்தி அறிவியலாளார் கே.சந்தானம்.

மேலும் படிக்க …அணுகுண்டு சோதனைகள் புஸ்வாணமானதா?

கள்ளச் சாராயத்துக்கு எதிராகப் போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மைய (HRPC)த்தின்,  சேலம் மாவட்டப் பொருளாளர் அய்யனார் மீதுþ பொய் வழக்குப் பதிந்து கொலைவெறித் தாக்குதலை தொடுத்திருக்கிறதுþ வீராணம்போலீசு!

மேலும் படிக்க …கள்ளச்சாராயத்திற்குக் காவடி! அதை எதிர்த்தவருக்கு குண்டாந்தடி!! -வீராணம் போலீசின் திருவிளையாடல்கள் !!!

வயிற்று பிழைப்புக்காக சவூதி சென்றிருந்த சலீம், தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூர் திரும்பினார். வந்திறங்கிய மூன்று நாட்களில் அவர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ஆளானார். இதேநேரத்தில் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில், சலீம் குடும்பத்தினரும் உறவினர்களும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பித்தனர். இதை கேட்ட சலீமும் சற்றே நிலை குலைந்தார்.

மேலும் படிக்க …முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலைவிட கொடிய கிருமி!

"மாடு வளர்த்தவனுக்கு வயித்துல அடுப்பு! பாலு வாங்குறவனுக்கு வயித்திலே நெருப்பு! சந்தையிலே தனியார் பால் ஏகபோகம் இருக்கு! "ஆவின்' பாலை மலிவா மக்களுக்கு வழங்காம எதுக்குடா அரசாங்கம் கோட்டையிலேகெடக்கு?''

மேலும் படிக்க …“ஆவின் பாலை மலிவு விலையில் வழங்கு” -பால் விலை உயர்வுக்கெதிராக பெ.வி.மு.வின் ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜூலை மாதத்தில்,  தில்லிமாநகரின் கட்டிடம் ஒன்றில், சரியாகக் கட்டி முடிக்கப்படாத எட்டாம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கலவை இயந்திரம் ஒன்று கீழே விழுந்ததில்þ அதே கட்டிடத்தின் அடித்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த சுனில் என்ற தொழிலாளி, இயந்திரத்தின் அடியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க …காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: கூலித் தொழிலாளர்களைப் பலியிட்டுக் கொண்டாட்டமா?

புதிய ஜனநாயகம் செப்டம்பர் இதழில் விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாத  பொறுக்கி அரசியலை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியானதையொட்டிþ ஆத்திரமடைந்த சென்னை  குரோம்பேட்டையை அடுத்துள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் பிற தோழர்கள் மீது கடந்த 7.9.09 அன்று நள்ளிரவில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 

மேலும் படிக்க …விடுதலைச்சிறுத்தைகளின் ரவுடித்தனம்-கொலைவெறித் தாக்குதல்

மூடநம்பிக்கைக்கு எதிராகவும்þ சுயமரியாதைக்காகவும், மனிதகுல மேன்மைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட நாத்திகம் இராமசாமிþ தனது 77வது வயதில் 24.09.2009 அன்று சென்னையில் காலமாகிவிட்டார்.

மேலும் படிக்க …பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் நாத்திகம் இராமசாமி அவர்களுக்கு அஞ்சலி!

கடந்த பிப்ரவரி 2þ 2009 அன்று தில்லை நடராசர் கோயில் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத்து றையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் உயர்நீதி மன்றத் தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்துப் பார்ப்பனத் தீட்சிதர் கும்பல் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டு, கடந்த 16.9.09 அன்று "தில்லைக் கோயில் தீட்சிதர் சொத்தல்ல; மக்கள் சொத்து'' என்று சென்னை உயர்நீதி மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

மேலும் படிக்க …“தில்லை கோவில் மக்கள் சொத்து! தீட்சிதர் சொத்தல்ல!!” தீட்சிதர்-சு.சுவாமி கும்பலைக் கலங்கடித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.

-ஆசிரியர் குழு

 

மேலும் படிக்க …“ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் கோபாட் காந்தி, அண்மையில் தலைநகர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகப் பதுங்கியிருந்த அவரை உளவுத்துறை போலீசார் 21.9.09 அன்று கைது செய்ததாகவும், மிகக்கொடிய பயங்கரவாத இயக்கத்தின் மூளையாகச் செயல்பட்ட அவரைக் கைது செய்துள்ளதன் மூலம், இவ்வியக்கத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு விட்டதாகவும் பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன.

 

மேலும் படிக்க …கோபாட் காந்தி கைது: சட்டவிரோதமானது! மனித உரிமைகளுக்கு எதிரானது!

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஜூன் 15, 2004 அன்று அதிகாலையில், குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அருகேமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன், ஜாவேத் ஷேக் உள்ளிட்ட நான்கு முசுலீம்கள் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் அரசு அறிவித்தது.

மேலும் படிக்க …போலி மோதல் கொலைகள் அரசு பயங்கரவாதமே!

பாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர் கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம்  இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து
நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல!

மேலும் படிக்க …மாவட்ட ஆட்சியரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர் போராட்டம்!

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராய் @ஜ.ஜார்ஜ், தொழிலாளர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாண்டு போயுள்ளான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் "வன்முறை' , "பேராபத்து' என்று அலறுகிறது.

மேலும் படிக்க …பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: வன்முறையாளர்கள், பயங்கரவாதிக்கள் யார்?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாலைப் பொழுது அது. மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க …திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய ""நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, ""புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்

சென்னை-கிண்டி அருகே செயல்பட்டு வருகிறது, செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட இக்கல்லூரியில், சுமார் மூவாயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும் படிக்க …கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்கால இலக்கிய விமர்சனம் குறித்த அவரது கட்டுரைகள், ""விமர்சனங்கள்'' என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. தற்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவில் வசித்து வரும் தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சியலெனினியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார்.

மேலும் படிக்க …ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது

பாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர்கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம் – இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல!

மேலும் படிக்க …கலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்

பிர்லா மாளிகையில் தங்கிக் கொண்டு காந்தி எளிமையாகக் காட்சியளித்ததும்; ‘மகாத்மா’வை எளிமையானவராகக் காட்டுவதற்கு காங்கிரசுக்கு ஏற்பட்ட செலவு குறித்து காங்கிரசு கட்சித் தலைவர்களுள் ஒருவரான சரோஜினி நாயுடு அங்கலாய்த்துக் கொண்டதும் நாம் மறந்து போன பழைய வரலாறு. 

மேலும் படிக்க …காங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் "பொற்கால' ஆட்சியின் சாதனையாக ""உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ""நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை'' என்றும் ""சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது'' என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

மேலும் படிக்க …தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுக்குத் தெற்கேயுள்ள புறநகரான லலித்பூரின் தேவாலயத்தில் அன்று அமைதியாக வழிபாடு நடந்து கொண்டிருந்தது.

மேலும் படிக்க …நேபாளக்குண்டு வெடிப்பு : இந்துமதவெறி பயங்கரவாதிகளின் சதிகள்!

ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் புதிய தலைவராகவும், தேசங்கடந்த ஈழத்தை நிறுவியுள்ளதாகவும் அறிவித்துக்கொண்ட "கே.பி.'' என்று அறியப்படும் செல்வராசா குமரன் பத்மநாதன் இலங்கை சிங்கள பாசிச பயங்கரவாத அரசின் உளவுப் படையினரால் தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்டு,கொழும்பு வதை முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு, மிகத் தேர்ச்சி பெற்ற இராணுவப் புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …செல்வராசா பத்மநாதனின் கைது: சிங்கள பாசிச பயங்கரவாத அரசின் தாக்குதல் தொடர்கிறது!

அம்பானி சகோதரர்களிடையே மீண்டும் சொத்துத்தகராறு வெடித்து, உலகமே பார்க்க நடந்து வருகிறது. ஆனால்,அந்தச் சொத்தோ அவர்களுக்குச் சொந்தமானது கிடையாது என்பதுதான் இந்த இரண்டாம் கட்டத் தகராறில் சுவராசியமான விசயம். அந்தச் சொத்து — கிருஷ்ணா — கோதாவரி நதிப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு — இந்தியமக்களுக்குச் சொந்தமானது.

மேலும் படிக்க …உங்கள் ஓட்டு அம்பானிகள் ஆட்சி

அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச்சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபாய். எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபாய் கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க …இப்படியோர் இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

"மக்களைப் பிளக்கும் சாதியை, மாதரை வதைக்கும் தாலியை, சித்தத்தை அழிக்கும் சாத்திரத்தை, ரத்தத்தை உறிஞ்சும் சீதனத்தை மொத்தமாய் புதைப்போம்'' என்ற அறைகூவலோடு, ஓசூர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக தோழர் நாராயணமூர்த்தி தீபா ஆகியோரின் புரட்சிகர திருமணம் மற்றும் தோழர் சரோஜா சின்னசாமி தம்பதியினரின் தாலியறுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் 23.08.09 அன்று நடந்து கொண்டிருந்த நேரம்.

மேலும் படிக்க …அச்சுறுத்தல்களால் புரட்சிகரப் பண்பாட்டை வீழ்த்த முடியாது!

திருச்சி, புத்தூர் திரு.வி.க.நகர் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது சி.இ. மேல்நிலைப்பள்ளி. கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான சலுகையோடு அரசின் நிதியுதவி பெறும் இப்பள்ளியில், தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.

மேலும் படிக்க …அடக்குமுறை – வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பள்ளி மாணவர்கள்

விவசாயத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில், தமிழக அரசு கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழ்நாடு வேளாண்மை தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டத்தைச் சட்டசபையில் எவ்வித எதிர்ப்புமின்றி ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது.

மேலும் படிக்க …தமிழ்நாடு வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம்: யாருக்கு இலாபம்?

பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில் அமைந்துள்ள மான்ஸா, சங்க்ருர், பதிந்தா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 35 கிராமங்களில் "நிலம் கொடு! வேலை கொடு!''என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்கள் அடுத்தடுத்து அலைஅலையாக எழுந்து வருகின்றன.

மேலும் படிக்க …பஞ்சாப்: பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்டோரின் கலகம்!

ஆகஸ்ட் மாதம் தனித்தன்மை வாய்ந்தது என்பது உண்மைதான். கடந்த ஜூலை மட்டும் என்னவாம்? உலகிலேயே மிகமலிவான கார் நமக்கு கிடைத்தது, ஜூலை மாதத்தில்தான்.வரலாற்றிலே முன்னெப்போதும் இல்லாத விலைக்கு துவரம்பருப்பு உயர்ந்ததும் அதே ஜூலையில்தான்.

மேலும் படிக்க …நீதியின் வறட்சியும் பாயும் நிதியும்

ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தின் கந்தாரிமண்டல் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக ஓங்கி நிற்கிறது, அந்தப்புளியமரம். அக்கிராம மக்கள் அந்த மரத்தை வெறுக்கிறார்கள். பலர் அந்த மரத்தின் அருகில் செல்லவே அஞ்சுகிறார்கள்.

மேலும் படிக்க …வறட்சியின் பிடியில் விவசாயிகள்! கொண்டாட்டத்தில் முதலாளிகள்!!

ஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கைபிடிப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கட்சி என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில், இன்று கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைப் பரிசீலிக்கத் தொடங்கியதிலிருந்தே அக்கட்சிக்குள் கோஷ்டிச் சண்டைகளால் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …கோஷ்டிச் சண்டை முற்றுகிறது! பா.ஜ.க. கனவு நொறுங்குகிறது!

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசுகொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

 

மேலும் படிக்க …அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

கருணாநிதியெல்லாம் ஒரு தேர்ந்த பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் “பரிணாமம்” எல்லாம் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது.

மேலும் படிக்க …விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக  வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் படிக்க …ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டில் அமைந்துள்ள கல்லங்காட்டு வலசு என்ற பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 120க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பான்மையான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதும், இவர்களுக்கு மலம் கழிப்பதற்குப் பொதுக் கழிப்பிடம் கூட இல்லாததும் அவலத்தின் உச்சக்கட்டம்; பெண்களுக்கோ பெரும் திண்டாட்டம்.

மேலும் படிக்க …"நகராட்சி அலுவலகத்தை "பீ' காடாக்குவோம்!

கூரைக் கட்டிடம்கூட இல்லாமல் மரத்தடியில் இயங்கும் அரசு பள்ளிக்கூடங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் ஒரு பல்கலைக்கழகம், அதுவும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருவதை உங்களால் நம்ப முடியுமா?

மேலும் படிக்க …ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி மாவட்டம், ஆலம்பட்டினம் பஞ்சாயத்து யூனியனின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சரவணகுமார் என்ற இரண்டு வயது குழந்தை காய்ச்சலுடன் கீழ்தாடை இறுக்கமாகி அசைக்க முடியாமல், ஜன்னி நோய்க்கு ஆளான நிலையில் அனுமதிக்கப்பட்டான்.

மேலும் படிக்க …தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்கு தாரை வாய்ப்பு, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, வி.வி.மு.வின் ஆதரவாளர் இராசேந்திரன், கடந்த ஆண்டு 20.6.08 அன்று சி.பி.எம். குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது.

மேலும் படிக்க …"சமூக பாசிச சி.பி.எம். ஜ அடித்து விரட்டுவோம்!" வி.வி.மு சூளுரை!

இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது.

மேலும் படிக்க …கோயாபல்சை விஞ்சிய இந்து என்.ராம்.

இருபதாயிரம் மக்களுக்கும் மேற்பட்டோரைத் துடிதுடிக்கக் கொன்றொழித்து, ஈழப்போரை துயரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது, சிங்கள இனவெறி அரசு. இந்த இன அழிப்புப் போரின் பங்குதாரர்களாக இலங்கை அரசுடன் இந்தியாவும் சீனாவும் கைகோர்த்திருந்தன.

மேலும் படிக்க …ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்.

ஓய்வின்றிக் கட்டாய வேலை; சம்பளம் கிடையாது; சம்பளம் கேட்டால் சவுக்கடி; நோய்வாய்ப்பட்டாலும் விடுப்போ, மருத்துவமோ கிடையாது; இக்கொடுமையிலிருந்து தப்பியோட முயற்சித்தால்,

 

மேலும் படிக்க …தொடரும் கொத்தடிமைக் கொடூரம் அரசின் பாராமுகம்!

என்ன அருள் வந்து இறங்கியதோ தெரியவில்லை. திடீரெனத் "தமிழ்த் தேசியம்'' என்று கூச்சலிட்டுக் கொண்டு சாமியாடக் கிளம்பி விட்டது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி எனும் பெயரிலுள்ள மணியரசன் கும்பல்.

மேலும் படிக்க …மணியரசன் கும்பலின் தமிழ்த் தேசிய சிறப்பு மாநாடு, பித்தலாட்டத்தின் அவதாரம்!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்களை கடத்திச் சென்று கற்பழித்த கண்டோன்மென்ட் போலீசு; ஆட்டோ டிரைவர் செல்வத்தை விசாரணைக்கு அழைத்து சென்று "கொட்டடி கொலை' செய்து பிணத்தை வெளியில் வீசிய உறையூர் போலீசு;

மேலும் படிக்க …குற்றவாளியைப் பாதுகாத்த போலீசாருக்குத் தண்டளை கொடு!

ஒரிசா மாநிலத்தின் இரும்புக் கனிமங்களை வரைமுறையின்றிச் சூறையாடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவரும் "ஜிண்டால்'' எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம்,

மேலும் படிக்க …"ஜிண்டாலை விரட்டியடிப்போம்! சுற்றச்சூழலை பாதுகாப்போம்!" – ம.உ.பா.மை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

மேலும் படிக்க …வெடிவிபத்தல்ல, பச்சைப்படுகொலை

ஊழல் கறைபடியாத கட்சியாகக் காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, இப்போது "ஊழலுக்கு உடந்தையாக இரு! இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று தனது கட்சி யினரையே மிரட்டத் தொடங்கி விட்டது.

மேலும் படிக்க …கொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை, சி.பி.எம்மின் புதிய சித்தாந்தம்.

கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில்  ஒரு டன் எடையுள்ள இரும்புத் தகடு சரிந்து விழுந்து, ரகுபதி என்ற உதிரித் தொழிலாளி கோரமாகக் கொல்லப்பட்டார். எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி உதிரித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள்,

மேலும் படிக்க …தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்.

புதிய ஜனநாயகம் இதழின் சாத்தூர் நகர முகவராகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஊக்கமிகு முன்னணி ஊழியராகவும் செயல்பட்ட தோழர் கணேசன், கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று மாரடைப்பினால் தனது 46வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.

மேலும் படிக்க …தோழர் கணேசன் அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!

இந்த நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை உழவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைஎளிய மக்களுக்கு மரியாதை செய்திருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் தொடங்கி முதலாளித்துவ அறிஞர்கள் வரை அனைவரும் ஒரே குரலில் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க …பட்ஜெட் : விவசாயிகளுக்குச் சலுகையா? சமாதியா?

சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலை போர்க்கிரிமினலாக அறிவித்து தண்டனை வழங்கக்கோரியும்; சிங்கள இராணுவத்தின் வதை முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு மீள்குடியமர்த்தவும், உடனடியாக நிவாரணமறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோரியும்; ஈழப் பகுதியில் சிங்கள குடியேற்றத்தைத் தடுக்கக் கோரியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.,பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கடந்த இருமாதங்களாகத் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க …"ராஜபக்சேவை போர் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தி தண்டனை கொடு! ஈழத்தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தி மறுவாழ்வு கொடு!!"

 இத்தாலி நாட்டில் சமீபத்தில் நடந்த பெரும் எட்டு நாடுகள் (ஜி 8) மாநாட்டில், "அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்கப் போவதில்லை'' என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

மேலும் படிக்க …அணுசக்தி (123) ஒப்பந்தம்: பெயரளவிலான சுயசார்புக்கும் குழிபறித்தது அமெரிக்கா!

ஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே இதனைச் செய்துள்ளது என்பதுதான் இன்னமும் கொடுமை.

மேலும் படிக்க …கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி

காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.

மேலும் படிக்க …இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!

தமிழகத்தில் ஏறத்தாழ 3 லட்சத்து 90 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் இயங்கிவரும் நிலையில், 2011க்குள் மேலும் ஒரு லட்சம் சுயஉதவிக் குழுக்களைக் கட்டியமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, விவசாயிகளுக்கென 10,000 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார், நிதியமைச்சர் அன்பழகன்.

மேலும் படிக்க …மகளிர் சுய உதவிக் குழுக்கள் : பலனடைந்தது யார் பன்னாட்டு நிறுவனங்களா? அடித்தட்டுப் பெண்களா?

பசி, பட்டினி ஏதுமில்லாத செல்வச் செழிப்பு மிக்க நாடு என்றும், குடிசைகளே இல்லாத நாடு என்றும் அமெரிக்காவைச் சொல்வார்கள். இங்கிருக்கும் படித்த நடுத்தரவர்க்க இளைஞர் களைக் கேளுங்கள்; ""அந்த சொர்க்க பூமிக்கு வேலைக்குச் செல்வதுதான் தங்கள் வாழ்வின் லட்சியம்'' என்பார்கள்.

மேலும் படிக்க …அமெரிக்கா: மாயை கலைந்தது உண்மை சுடுகிறது

காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.

மேலும் படிக்க …இந்து வெறியர்களுக்கு குஜராத் ! இந்திய இராணுவத்துக்கு காஷ்மீர்!!

கேரளாவில் உள்ள மராத் எனும் சிறு கிராமத்தில் நடந்த மதக்கலவர படுகொலைகள் மீது ஜனவரி 15, 2009இல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுவாக, இந்து மதவெறி பாசிசக் கொடுமையிலிருந்து சிறுபான்மையினரைத் தாங்கள்தான் காப்பதாக சி.பி.எம். மற்றும் காங்கிரசு கட்சிகள் உருவாக்கி வந்த மாயையை, இந்த தீர்ப்பின் பின்னணி தகர்த்துள்ளது.

மேலும் படிக்க …சி.பி.எம்-காங்கிரசு இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்

டாடா, பிர்லாக்களின் வரிசையில் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழில் குடும்பங்களில் மஃபத்லால் குடும்பமும் ஒன்று. இக்குடும்பத்தின் மருமகளான ஷீதல் மபத்லால் கடந்த ஜூன் முதல் வாரத்தில் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க …கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?

இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் சமூகக் கொடுமையாக சாதி இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் தமிழ்நாடு மட்டும், சாதிய ஒடுக்கு முறைக்கெதிராகப் போராடிய முன்னோடி மாநிலம் என்றும், சுயமரியாதை இயக்க பூமி இது என்றும் சொல்வதில் நமக்கெல்லாம் பெருமை இருந்தாலும், இன்றைக்கு நடைமுறை என்னவாக இருக்கிறது?

 

மேலும் படிக்க …ஆலயத்துக்குள் மட்டுமா கருவறைக்குள்ளும் நுழைவோம்

தனியார் ஆற்றிவரும் ""கல்விச் சேவை'' வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத வகையில் நர்சரி பள்ளிகள் தொடங்கி தனியார் சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரி வரை கல்வி கட்டணங்களும், கட்டாய நன்கொடைகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன.

 

மேலும் படிக்க …கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா

ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது அகமதிநிஜாத் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து அங்கு நடந்து வரும் போராட்டங்கள், ஈரான் உள்நாட்டுப் போரில் விழுந்துவிடுமோ என்ற ஐயத்தை உலகெங்கும் தோற்றுவித்திருக்கிறது. அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் தோற்றுப் போய் விடுவார் என மேற்குலக நாடுகள் எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக, அவர் ஒரு கோடியே பத்து இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மிகப்பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.

மேலும் படிக்க …ஈரான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அலையும் அமெரிக்கா

‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம்,

மேலும் படிக்க …ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

காங்கிரசின் தேர்தல் வெற்றிக்குப் பின், “இளவரசர்” ராகுல் காந்திக்கு மகுடாபிஷேகம் பண்ணி வைக்கும் வேலையில் முதலாளித்துவப் பத்திரிகைகள் இறங்கியுள்ளன. ” அவர்தான் இந்தியாவின் ஒபாமா” என ராகுலைப் புகழ்ந்து தள்ளுகிறது, தெகல்கா வார இதழ்.

மேலும் படிக்க …கலாவதியின் துயரக்கதையும் ராகுல் காந்தியின் வக்கிரப் புத்தியும்

முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர்.

மேலும் படிக்க …ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து ஜ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக் கூத்து

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையான விசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி  வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

மேலும் படிக்க …புலித்தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்

லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப்பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க …லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!

வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கைவைக்க முயன்ற பத்மாசுரன் பற்றிய இந்து மதப் புராணக் கதையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பாகிஸ்தானின் இன்றைய நிலை அப்புராணக் கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.

மேலும் படிக்க …பாக். இராணுவம் – தாலிபான் மோதல்: நிழலா? நிஜமா?

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

மேலும் படிக்க …குஜராத் இனப்படுகொலை: பாதிக்கிணறு தாண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள்!

ஏப்ரல் 11 ஆம் தேதி தாய்லாந்தின் பாட்டயா எனும் சுற்றுலா விடுதி நகரில் “ஏசியான்” எனும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பிற்கும் இந்தியாவிற்கும் நடக்க இருந்த சந்திப்பு, போராட்டக்காரர்களின் கலவரத்தால் ஒத்திப் போடப்பட்டது.

மேலும் படிக்க …தாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்!

நாமக்கல் நகருக்கு அருகே இயங்கி வரும் வைகை எம்.பி.ஆர். அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட் என்ற ஆலையில் கடந்த 06.05.2009 அன்று இரவு நடந்த தீ விபத்து 17 தொழிலாளர்களின் உயிரைக் காவுவாங்கிவிட்டது.

மேலும் படிக்க …கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?

அண்டை நாடான நேபாளத்தில் இடைக்கால அரசின் பிரதமரான தோழர் பிரசண்டா கடந்த மே 4ஆம் தேதியன்று பதவி விலகியதையடுத்து, அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.

மேலும் படிக்க …நேபாள ஆட்சிக் கவிழ்ப்பு: இந்திய மேலாதிக்கச் சதி, ஓட்டுக்கட்சிகளின் துரோகம்!

சென்ற ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய முதலாளித்துவத்தின் நெருக்கடி என்று மறைக்கப்படும் முதலாளித்துவத்தின் அழிவுப் பாதை, தனது தடத்தை எல்லா நாடுகளிலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் மீது ஏற்றி வருகிறது.

மேலும் படிக்க …பற்றிப் பரவுகிறது வர்க்கப் போராட்டம்! அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்!!

ஜூலை 11, 1997 இந்த நாளை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களால் மறக்கவே முடியாது. இந்து மதவெறி பா.ஜ.க.சிவசேனா கூட்டணி மகாராஷ்டிர மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த காலமது.

மேலும் படிக்க …ரமாபாய் நகர் துப்பாக்கிச்சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை !

உலகத்தின் அனைத்து நாடுகளையும் பிடித்தாட்டும் பொருளாதாரத் தேக்கத்தினை உடைக்க ஏகாதிபத்திய நாடுகளும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட சில “வளர்ந்து’’வரும் நாடுகளும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் மாநாடு ஒன்றினை நடத்தின.

மேலும் படிக்க …பெரும் இருபது நாடுகள் (G 20) மாநாடு: அமெரிக்காவின் நயவஞ்சகம், இந்தியாவின் துரோகம்!

கடந்த நூற்றாண்டில், உலகை ஆட்டிப்படைத்த பெரியம்மை, பிளேக், போன்ற கொள்ளை நோய்கள், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவ்வப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள், உலகையே அச்சுறுத்தி வருகின்றன.

மேலும் படிக்க …பன்றிக் காய்ச்சல்: பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தோல்வியை சி.பி.எம். கட்சி சந்தித்துள்ளது. நாடு தழுவிய அளவில் மொத்தம் 16 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1967இல் சி.பி.எம் கட்சி முதன்முறையாக நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளைவிட இது குறைவு.

மேலும் படிக்க …சி.பி.எம்மின் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை !

பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு கூட்டணியும் தங்களுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்குமென்றோ அல்லது தோல்வி கிடைக்குமென்றோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க …நாடாளுமன்றமா? லயன்ஸ் கிளப்பா?

ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது.

மேலும் படிக்க …ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

மருத்துவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்திருப்பவருமான பினாயக் சென் 27.05.09 அன்று இரண்டாடண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையாகியிருக்கிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்காகப் போராடும்  மாவோயிஸ்ட்டு கட்சியினருக்கு உதவி செய்தார் என்ற பொய்குற்றச்சாட்டிற்காக இந்த இரண்டாண்டு சிறைவாசம்.

மேலும் படிக்க …பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!

ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால் தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க …ஈழப் போரும் இந்திய மேலாதிக்க நலன்களும்

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறது, பாரதீய ஜனதா கட்சி. தேர்தல் என்றாலே கருப்புப் பணத் திருவிழா என்பது ஊரறிந்த உண்மை. கட்சிக்குள் "சீட்'' வாங்குவதில் தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சியைப் பிடித்து, ஆட்சி கவிழ்ந்து விடாமல் காப்பது முடிய ஓட்டுக்கட்சி அரசியலில் கருப்புப் பணம் புகுந்து விளையாடுவது ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அப்படிபட்ட புழுத்து நாறும்

மேலும் படிக்க …கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் சவடால்: குரைக்கிற நாய் கடிக்காது!

"ஒரு ஆலமரம் விழும்போது பூமியில் அதன் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்''. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதும் டெல்லியிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில், பலர் காங்கிரசு குண்டர்களால் கொல்லப்பட்டது குறித்துக் கேட்டபோது ராஜீவ் காந்தி திமிராகக் கூறிய பதில் தான் இது.

மேலும் படிக்க …காங்கிரசு கயவாளிகளுக்குச் செருப்படி மட்டும் போதாது!

ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் பலமுனைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. அப்போர் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அல் காய்தா தலைவர் ஓசாமா பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை. அல் காய்தா, தாலிபான் ஆகிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகளை அமெரிக்காவால் முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்கானின் அண்டை நாடான பாகிஸ்தானையும் ஆட்டங்காணச் செய்துவிடும் அளவிற்கு அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

 

மேலும் படிக்க …அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் : வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?

ஆறுகளும் பசுமையான வயல்களும், மலைகளும் நீர்வீழ்ச்சியும், காடுகளும் விலங்குகளும் கொண்ட இயற்கை அழகு நிறைந்த ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் விவசாயிகளின் போராட்டங்களால் குலுங்கியது. "ஒருபிடி மண்ணைக்கூட அந்நியனுக்குத் தரமாட்டோம்!; தென்கொரிய டேவூ நிறுவனமே, நாட்டை விட்டு வெளியேறு!; நாட்டைத் தாரைவார்க்கும் சர்வாதிகார அதிபர் ஒழிக!'' என்ற முழக்கங்களுடன் அந்நாட்டு விவசாயிகள் அணிதிரண்டு போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

மேலும் படிக்க …பன்னாட்டு நிறுவனங்களின் நிலப்பறிப்பு ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் புதிய அபாயம்

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து

மேலும் படிக்க …ஈழப் "போர் நிறுத்தம்": காங்கிரசு - தி.மு.க.கம்பெனியின் கபட நாடகம்

உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு; அக்காட்டின் நடுவே திடீரென ''டும், டும்'' என முரசொலிக்க, எங்கும் எதிரொலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் வில்அம்பு, கோடரி, அரிவாள், தடிகளுடன் பழங்குடியின மக்கள் பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அணிதிரள்கிறார்கள். ''கொலைகாரர்கள் வந்துவிட்டார்களா?

மேலும் படிக்க …சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க. அழகிரி, "தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகிரி வந்திருக்கேன், எனக்கு ஓட்டுப் போடுவீங்களா?'' என்று அழகம்மா என்ற வாக்காளரிடம் @கட்க, அவரோ "நாங்க ஓட்டுப் போடுவோம் நீங்க எப்ப நோட்டைப் போடுவீங்க?'' என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். இந்தியத் தேர்தலில் பணநாயகம் பல்லிளிப்பதைக் காட்டும் ஒரு சோற்றுப் பதம் இது. 

மேலும் படிக்க …கோடீசுவர வேட்பாளர்கள் கோவணத் துணியோடு மக்கள்

சி.பி.எம். என்பது ஒரு கட்சியல்ல; அதுவொரு முதலாளித்துவக் கம்பெனி. கம்பெனி என்றால் அதற்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கும். ஆண்டுதோறும் சொத்து விவரங்களைத் தணிக்கை செய்து, வருமான வரி அலுவலகத்துக்குச் சட்டப்படி தாக்கல் செய்யும். சி.பி.எம். கம்பெனியும் இப்படி ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து வருகிறது. கடந்த 2006 மார்ச் 31ஆம் தேதி முடிய உள்ள நிதியாண்டில் சி.பி.எம். கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77.27 கோடிகளாகும்.

மேலும் படிக்க …குசேலன் குபேரனான கதை

தாழ்த்தப்பட்டோரை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் எனும் அரசியலை முன்வைத்து, "பார்ப்பனர்கள், வைசியர்கள், ராஜபுத்திரர்களை செருப்பால் அடிப்போம்'' என்ற புகழ்பெற்ற முழக்கத்தின் மூலம் தனது அடித்தளத்தை உ.பி.யில் உருவாக்கி இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. தற்பொழுது இம்மூன்று சக்திகளுடன் சமரசமாகியதன்

மேலும் படிக்க …மாயாவதியின் பார்ப்பன சேவை பல்லிளித்தது தலித்தியம்

''ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் போருக்கு சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கும் காங்கிரசுக்குத் துணை போகும் தி.மு.க.வுக்கும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரசு ஆட்சி அகற்றப்படுவதன் மூலமே ஈழத்தில் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.

மேலும் படிக்க …ஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்

பெரியார் திக இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகிறது. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு திகவிலிருந்து வெளியேறி தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இப்பொழுது அதே பார்ப்பனியத்துக்கு பாத சேவை செய்கிறது. இவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்த்துக் களத்தில் உறுதியுடன் போராடி

மேலும் படிக்க …பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீணர்கள்!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது.

மேலும் படிக்க …மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப்பித்து!

பிப்ரவரி 19 உயர்நீதி மன்றத் தாக்குலுக்கு எதிராக தமிழக வழக்குரைஞர்கள் ஒரு மாத காலமாக நடத்தி வந்த நீதிமன்றப் புறக்கணிப்பு இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க …போலீசின் நீதிமன்றத் தாக்குதல் பஞ்சு மிட்டாய் தீர்ப்பு

"யாருடைய உத்தரவின் பேரில் போலீசு படைகள் உயர்நீதி மன்றத்திற்குள் நுழைந்தன? எந்த அதிகாரியினுடைய உத்தரவின் பேரில் அன்று தடியடி நடத்தப்பட்டது?'' என்ற அடிப்படையான இரு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டு, போலீசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஒரு "திரைக்கதை'யை இடைக்கால அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.

மேலும் படிக்க …கருப்பு அங்கிக்குள் காக்கிச் சட்டை புத்தி

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று திருச்சியில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதலை முன்னணி, ""ஈழத்தில் தமிழ் இன அழிப்புப் போர் மற்றும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை எதிர்ப்போம்! இந்திய அரசின் இராணுவ ஆயுத உதவிகள், வர்த்தக, தூதரக உறவுகளைத் துண்டிக்கப் போராடுவோம்'' எனும் முழக்கத்துடன் உழைக்கும் பெண்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

மேலும் படிக்க …பெண்ணுரிமைக்கான பேராயுதம் !

திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க …இந்து மதம் கேட்ட நரபலி

"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்.....'' என்றொரு பழமொழி சொல்வார்களே, அதற்கு முற்றிலும் பொருத்தமானது பாரதீய ஜனதா கட்சி. அந்தக் கட்சி எவ்வளவுதான் தன்னை நவீனமாகக் காட்டிக் கொண்டாலும், அந்தக் கட்சியின் தலைவர்கள் எவ்வளவுதான் மேன்மக்களாக இருந்தாலும், அக்கட்சியாலும் அதன் தலைவர்களாலும் முஸ்லீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்காமல் அரசியல் வாழ்வில் ஒரு நொடிப்பொழுதைக்கூடக் கழிக்க முடியாது.

மேலும் படிக்க …வருண் காந்தியை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் கும்பலையே தடை செய்

மக்களின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் கூத்துக்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டிருக்கும் நேரமாகப் பார்த்து, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் முக்கியமான மாற்றத்தை மிகவும் கமுக்கமாக முடிவு செய்து அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தால்கூட, அதற்கு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் முட்டுக்கட்டை போட்டிருக்கமாட்டார்கள்.

மேலும் படிக்க …அந்திய முதலீட்டுக்கு அபாரச் சலுகை

இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்கும், கொலைவெறித் தாக்குதலுக்கும் பத்திரிகையாளர்கள் கூடத் தப்பவில்லை. அரசின் இனவெறியையும், பாசிச நடவடிக்கைகளையும் எதிர்த்து எழுதும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், கடத்திக் கொல்லப்படுவதும் அங்கு தொடர்கதையாகியுள்ளது.

மேலும் படிக்க …உண்மையை எழுதினால் உயிர் இருக்காது

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று துணை இராணுவப் படையினர் நடத்திய கலகமும், இராணுவ உயரதிகாரிகள் - அவர்களது குடும்பத்தாரோடு சேர்த்து கொல்லப்பட்டிருப்பதும் இந்திய துணைக் கண்டத்து நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க …வங்கதேசத் துணை இராணுவக் கலகமும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள பேரபாயமும்

கொளுத்தியெடுக்கும் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர். சாப்பாட்டுக்குக் கூடப் போதாத தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தாங்கள் அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப்படுவதை எதிர்த்தும் அவர்களது போராட்டம் தொடங்குகிறது.

மேலும் படிக்க …திரவியம் தேடிப் போனவர்களின் துயரக் கதை

இந்துவெறி பாசிச பயங்கரவாத மோடிக்கு புதிய ஆதரவாளர் கிடைத்திருக்கிறார். தொழில் வளர்ச்சியைச் சாதிக்க, மோடியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உபதேசித்திருக்கிறார். இவர் இந்துவெறி பா.ஜ.க.வைச் சேர்ந்தவரல்ல; மோடியின் தாராள சலுகைகளால் ஆதாயமடைந்த தரகுப் பெருமுதலாளியுமல்ல.

 

மேலும் படிக்க …சி.பி.எம்.க்குள் ஒளிந்திருக்கும் மோடியின் ரசிகர்கள்

பு.ஜ. வின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாத பெரியாரிய தமிழினவாதக் குழுக்கள் அவதூறுகனை அள்ளி வீசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சந்தர்ப்பவாத அரசியலை விமர்சித்து புதிய ஜனநாயகம் இதழ், ""காக்கை குயிலாகாது'' என்ற கட்டுரையைக் கடந்த ஜனவரி இதழில் வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க …பு.ஜ.மீதான பெரியார் தி.க.வின் விமர்சனம்: முரண்பாடுகளின் மூட்டை

ஜனவரி 26, 2009 அன்று மட்டும் ஏறத்தாழ 85,000 இந்தியத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் கருக்கப்பட்ட அதேநேரத்தில்தான், இந்திய அரசு தனது 60ஆவது ""குடியரசு'' தினத்தை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க …தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்கு திருவோடு

ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி பூங்காவிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் இவரைத் தொடர்புபடுத்தி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். 

மேலும் படிக்க …முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஐந்தாண்டுகளுக்கு முன் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும், இதற்காக இட ஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்படும் என்றும் தனது பொது வேலைத்திட்டத்தில் சொல்லியிருந்தது.  இப்போது அடுத்த தேர்தலும் நெருங்கி விட்டது.   தனியார் துறை இடஒதுக்கீட்டுக்காக  ஐ.மு.கூட்டணி அரசு சிறு துரும்பைக்கூட அசைக்காதது மட்டுமன்றி, ஏற்கெனவே சட்டப்பூர்வமாக இருந்துவந்த இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்டும் அயோக்கியத்தனத்தில் இறங்கி உள்ளது.

மேலும் படிக்க …எஸ்.சி.-எஸ்.டி.இட ஒதுக்கீட்டுக்குக் குழிபறிப்பு பார்ப்பன-பாசிஸ்டுகளின் கொல்லைப்புறச் சதிகள்

நடராஜர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டுள்ள இடைக்கால வெற்றியைக் கொண்டாடுவோம்.பிப்ரவரி 2, 2009  தமிழகத்தின் வரலாற்றில் இதுவொரு முக்கியமான நாள் என்றால், அது மிகையானதல்ல.  அன்றுதான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீர்ப்பு வெளியானது. 

மேலும் படிக்க …தில்லை நடராசரின் ஆலயம்:தீட்சிதர்களின் ஆதிக்கம் தகர்கிறது!

முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகளைப் போல சி.பி.எம் கட்சியும் ஊழலில் சிக்கிச் சீரழிந்து நிற்கிறது. கொள்கை  சித்தாந்தம் அனைத்தையும் கை கழுவிவிட்டு, தனியார்மயம்  தாராளமயத்துக்குக் காவடி தூக்கி, சிங்கூர்  நந்திகிராமத்தில் போராடும் மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய சி.பி.எம். கட்சி, இப்போது லாவலின் ஊழல் விவகாரத்தால் எஞ்சியிருந்த ஒட்டுக் கோவணத்தையும் இழந்து அம்மணமாகி நிற்கிறது.

மேலும் படிக்க …சி.பி.எம் -இன் உத்தமர் வேடம் கலைகிறது

தேர்தலைக் குறிவைத்து நிறைவேற்றப்பட்ட சமூகப் பாதுகாப்புச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக ஏழைகூலித் தொழிலாளர்கள் வேலை தேடி பெருநகரங்களை நோக்கி நகர்கின்றனர். மொழி, மாநில எல்லைகளை எல்லாம் கடந்து வாழ்க்கை அவர்களைப் பெயர்த்து எறிகின்றது.

மேலும் படிக்க …அமைப்புசாராத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புச் சட்டம்: கானல் நீர் தாகம் தீர்க்காது!

கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான்.  இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும் படிக்க …அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப்புலிதான்

அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி  இராமாயணம்.

மேலும் படிக்க …இந்துக்கலாச்சாரம்- ”பப்” கலாச்சாரம் இந்தியப் பெண்களைக் கவ்வும் இரட்டை அபாயம்

ஆளரவமற்ற காடு; பகலிலும் கூட இருள் சூழ்ந்த சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிராந்தியத்திலுள்ள அடர்ந்த காடு; பாறைகளில் தெறித்தோடும் நீரோடை, கிரீச்சிடும் பறவைகள், காற்றில் சருகுகள் எழுப்பும் சலசலப்பு; இவை தவிர வேறெந்த ஒலியுமற்ற அமைதியில் உறைந்த காடு. கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று பட்டப் பகலில் அக்காட்டில் அப்பாவி பழங்குடியினர் 18 பேர் சல்வாஜூடும் என்ற போலீசு குண்டர் படையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டின் பேரொலியால் பறவைகள் வானில் பறந்து கிரீச்சிட, அக்காடே அதிர்ந்து குலுங்கியது.

மேலும் படிக்க …சட்டிஸ்கர்: அப்பாவி பழங்குடியினரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை நக்சல்பாரிகளாகக் காட்டும் மோசடி தொடர்கிறது.

காஷ்மீர் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முன்வந்ததை தேசிய ஒருமைப்பாட்டின் வெற்றியாகக் காட்டுவது அரைவேக்காட்டுத்தனமானது. காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் இந்திய தேசியவாதிகளை ஆனந்தக் கூத்தாட வைத்துவிட்டது.  அமர்நாத் பனிலிங்கக் கோவிலுக்கு நிலம்

மேலும் படிக்க …காஷ்மீர் சட்டமன்ற தேர்தலும் இந்திய அரசின் பகற்கனவும்

இந்தியத் தரகு முதலாளிகளின் தளபதிகளாகக் கருதப்படும் ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மித்தல் (ஏர்டெல் நிறுவனத் தலைவர்) ஆகி யோரின் மனம் கவர்ந்த நாயகனாகிவிட்டார், திருவாளர் நரேந்திர மோடி. குஜராத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலாளிகளின் கூட்டம் மோடியைப் புகழ்ந்து தள்ளியதைக் கேட்டால், தமிழ்நாட்டில் அம்மாவையும், தளபதிகளையும் புகழ்ந்து "கட்அவுட்'' வைக்கும் தொண்டன்கூடக் கூசிப் போயிருப்பான்.

மேலும் படிக்க …மோடித்துவாவின் புதிய பங்காளிகள்

பிப்ரவரி 19 காக்கி உடை ரவுடிகளின் லத்திக் கம்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை இரத்தத்தில் முக்கி எடுத்தன. ஜனநாயகத்தின் மற்ற தூண்களெல்லாம் உளுத்து உதிர்ந்துவிட்ட நிலையில், நீதிமன்றம் என்ற ஒற்றைத்

மேலும் படிக்க …வழகுரைஞர்கள் மீதான தாக்குதல் : அம்பலமானது போலீசின் உண்மை முகம்! தி.மு.க.வின் பொய் முகம்!

ஈழத்தமிழ் மக்கள் மீது மிகக்கொடிய இன அழிப்புப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை எச்சரித்து வெளியேற்றிவிட்டு, ஊடகங்களுக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும்

மேலும் படிக்க …ஈழப்போர்: இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைக்கும் திராவிடக்கட்சிகளின் கபடத்தனம்.

 முன்பணமாக ஓரிரு ஆயிரம் ரூபாய்களை வாங்கிவிட்டு, அதற்கு வட்டியோடு சேர்த்து அசலை அடைக்க முடியாமல் பலகாலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் ஈரோடு  நாமக்கல் மாவட்டங்களின் தறிக்கூடங்களில் கொத்தடிமைகளாக உழன்று வருகின்றனர்.

மேலும் படிக்க …தறிப்பட்டறையா? கொத்தடிமைக் கூடாரமா?

 இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும்,

மேலும் படிக்க …ஸ்பெக்ட்ரம் ஊழல் : நெல்லுக்குப் பாய்ந்தது தெரிகிறது புல்லுக்குப் பாய்ந்தது…?

"அரியலூர்  பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல்முறையாக... தமிழர் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் நடனப் போட்டி...'' என சன் டி.வி ரேஞ்சுக்கு நம்மைச் சுண்டியிழுத்தது அந்த விளம்பரம்.

மேலும் படிக்க …குத்தாட்டமே டைஃபியின் 'கலாச்சாரப் புர்ர்ரட்ச்ச்சி"

 நாகை மாவட்டம் அருகேயுள்ள திருமருகல் அரசு மேநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் பா.திருமாவளவன். காலை 11 மணிக்குமேல்தான் பள்ளிக்கு வருவது; பள்ளியிலே தண்ணியடித்து விட்டுத் தனியறையில் தூங்குவது

மேலும் படிக்க …தலைமையாசிரியாரா? சமூக விரோத ரவுடியா?

 தர்மபுரி  கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி கிராமத்தில் டீக்கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென

மேலும் படிக்க …'தாழ்த்தப்பட்ட மககள் மீதான அடக்குமுறைகளை முறியடிப்போம்!" வாழ்வுரிமைக்காகப் போராடுவோம்! பு.அ.ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்களின் மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரையும், முற்றுகையையும் கிறிஸ்துமஸுக்குப் பிறகு இசுரேல் மீண்டும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே கையெழுத்தான "ஆஸ்லோ'' சமாதான ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காசா முனையைத்தான் இப்பொழுது இசுரேல் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

மேலும் படிக்க …யூத இனவெறி பயங்கரவாதப்பேயாட்டம்

உறை பனியை நெருங்கிவிட்ட நடுநடுங்க வைக்கும் கடுங்குளிர்; நூறு அடிக்கு முன்னே இருப்பது கூடத் தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டம்; வாகனங்கள், ரயில்கள், விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன; குடிநீர்க்

மேலும் படிக்க …உறைபனி உணர்த்தும் உண்மைகள்

 இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர்.  நகரங்களில்

மேலும் படிக்க …வறுமையின் கோரம் : பெற்ற மகனை விற்ற அன்னை

அமெரிக்காவில் நேற்று வரை மிகவும் புகழ்பெற்ற நிதி நிறுவனமாக இருந்து வந்த பெர்னார்ட் எல். மடோஃப் இன்வெஸ்மென்ட் செக்யூரிட்டீஸ் என்ற "பிளேடு கம்பெனி' இன்று குப்புறக் கவிழ்ந்துவிட்டது. நேற்று வரை அமெரிக்காவின் மிகச் சிறந்த நிதி முதலீட்டு நிபுணராகக் கொண்டாடப்பட்ட அந்நிறுவனத்தின் அதிபர்

மேலும் படிக்க …கந்தலானது அமெரிக்க மாயை!

சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள பொய்க்கணக்கு மோசடியில் மறைந் துள்ள உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றால், ராமலிங்க ராஜுவின் மகன்களை முதலாளிகளாகக் கொண்டு இயங்கிவரும் மேடாஸ் நிறுவனங்களைத் தோண்டித்

மேலும் படிக்க …தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது!

ஜனவரி 7, 2009 அன்று இந்தியாவை ஒரு பெரும் பூகம்பம் உலுக்கியதைப் போன்று சத்யம் நிறுவனத்தில் நடந்த மோசடிகள் அம்பலமாயின. சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, தனது நிறுவனத்தின் இயக்குநர்களுக்கும், இந்தியப் பங்குச் சந்தை

மேலும் படிக்க …சத்யம் மோசடி: தனியார்மயத்தின் மகிமை!

இடது, வலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் நீண்ட வரலாற்றில் தற்பெருமையடிக்கும் போக்கு ஒரு சில தலைவர்களிடம் அவ்வப்போது தலைகாட்டியிருப்பினும், அந்தப் போக்கில் புதிய எல்லைவரை சென்றிருக்கும் ஒருவர்தான் சி.பி.ஐ.கட்சியின் பொதுச் செயலாளர் தா.பாண்டியன்.

மேலும் படிக்க …சுயதம்பட்டம் + சாதிப்பற்று = தா.பாண்டியன்

 இரும்புத்தாது கனிம வளமிக்க சத்தீஸ்கர் மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களான கோண்டு பழங்குடியின மக்களை அம்மாநிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, எஃகு ஆலை நிறுவிச் சூறையாட டாடா, மித்தல், எஸ்ஸார்

மேலும் படிக்க …மனித உரிமை கமிசனா? போலீசு உரிமை கமிசனா?

நடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை "திருப்புமுனை ஏற்படுத்திய திருமங்கலம்'' என்று ஆளும் தி.மு.க.வினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களும் தேர்தல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள திருப்பு முனைத் தேர்தல் என்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் படிக்க …திருமங்கலம் இடைத்தேர்தல் : பிழைப்புவாதத்தின் விபரீதம்

மக்களின் பேராதரவுடன் ஆயுதப்போராட்டம் நடத்தி, மன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்த நேபாள மாவோயிஸ்ட் கட்சியை அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேற வைத்து, மீண்டும் ஆயுதப் போராட்ட பாதைக்குத் திருப்பித்

மேலும் படிக்க …பசுபதி நாதர் ஆலயப் பிரச்சினை : பாரம்பரியமா? பிராந்திய ஆதிக்கமா?

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள கல்லாக்கோட்டையில் அமைந்துவரும் "கால்ஸ்'' சாராய ஆலையை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வரும் போராட்டத்திற்கு

மேலும் படிக்க …சாராய அதிபரின் ஏவல்நாயாக போலீசு – நிதித்துறை!

இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் கடந்த நான்கு மாத காலமாக சிங்கள இனவெறி இராணுவம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான கொடிய போரைத் தீவிரமாக நடத்தி வருகிறது. பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில்

மேலும் படிக்க …இந்திய சிங்கள அரசுகளின் ஈழத் தமிழின அழிப்புப் போர்! தமிழகமே, விழித்தெழு! போராடு!!

 முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் "இடது முன்னணி' யின் முதல் அமைச்சரவையில் (1977–80) நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மித்ரா. மைய அரசில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர், "எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி'' போன்ற ஆங்கில

மேலும் படிக்க …சி.பி.எம்.அணிகளே, உங்கள் மனசாட்சியையும் பேச விடுங்கள்!

 கடந்த நவம்பர் இறுதியில் அடித்த புயலாலும், வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமாகப் பெய்த பெருமழையாலும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நீடாமங்கலம் தொடங்கி அதன் கீழ்பகுதிவரை

மேலும் படிக்க …துயரவெள்ளத்தின் மக்கள் : நிவாரணப் பணியில் புரட்சிகர அமைப்புகள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை வட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில், நிலத்தடி நீரைக் கொள்ளையிட்டு விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறித்துவரும் "கால்ஸ்'' சாராய ஆலைக்கு எதிராக, இப்பகுதிவாழ் விவசாயிகள்

மேலும் படிக்க …'கால்ஸ்" சாராய ஆலைக்கெதிராக…அடக்குமுறையை மீறி ஆர்த்தெழுந்த மக்கள் சக்தி

ஈழத்தமிழர்கள் மீதான அழித்தொழிப்புப் போர் உச்சமடைந்து வரும் சூழலில் பாசிச சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இப்படுகொலைகளுக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராகவும், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி தொடர் பிரச்சார இயக்கத்தை நடத்திவருகிறது.

மேலும் படிக்க …'ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசை முறியடிப்போம்!" புரட்சிகர அமைப்புகளின் தொடா பிரச்சாரம்.

சமூகநீதிக் காவலர் என்றும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர் என்றும் புகழப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கடந்த நவம்பர் 27ஆம் நாள் மறைந்துவிட்டார். காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு நடுவர் மையம்

மேலும் படிக்க …விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!

ஐரோப்பிய கண்டத்திலுள்ள கிரேக்க நாடு, இதுவரை கண்டிராத உழைக்கும் மக்களின் பேரெழுச்சியால் குலுங்குகிறது. தலைநகர் ஏதென்சில் போராட்டத் தீ பற்றி எரிகிறது. கடந்த டிசம்பர் 6ஆம் நாளில் தொடங்கிய இப்பேரெழுச்சி, இரு வாரங்களுக்குப் பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …கிரீஸ் : உலகமயமாக்கலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் கலகம்

"கார்ப்பரேட் கம்பெனிகள் கனிவுடனும் சமுதாய அக்கறையுடனும் அளிக்கும் தொகையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் பசியைப் போக்கத் திட்டங்கள் தீட்ட வேண்டும். சிறுகுறு விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கி இலாபம் ஈட்டும்

மேலும் படிக்க …எம்.எஸ்.சுவாமிநாதன் : வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா?

தில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து கொண்டிருந்தபொழுது பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் வி.கே.மல்கோத்ரா பற்றி, "மல்கோத்ராவைவிடத் தீவிரவாதம் மேல்'' என்ற நகைச்சுவைத் துணுக்கு அரசியல் வட்டாரத்திலும்

மேலும் படிக்க …வடமாநிலத் தேர்தல் முடிவுகள் : ஜனநாயகம் பணநாயகமானது

"மும்பய் தாக்குதலின்பொழுது உயிருடன் பிடிபட்ட முசுலீம் தீவிரவாதி முகமது அஜ்மலின் மீதான வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். அவருக்காக வக்கீல் ஆஜராகவில்லை என்றால், அது மனித உரிமை

மேலும் படிக்க …வழக்குரைஞர்கள் சங்கமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?

ஓசூர்சிப்காட் பகுதியில், பேடர்பள்ளி அருகே டி.வி.எஸ். நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ராஜ்சிரியா என்ற ஆலை உள்ளது. இவ்வாலையில் நீண்ட காலமாகப் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு கூட வேலை நிரந்தரமோ,

மேலும் படிக்க …இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம்!

 முந்தாஸர் அல் ஜெய்தி, ஈராக்கில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கொடுத்த செருப்படி உலகெங்கிலுமுள்ள புரட்சிகரஜனநாயக சக்திகளுக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளுக்கும் சொல்லொணா உற்சாகத்தைத் தந்துள்ளது.

மேலும் படிக்க …ஜார்ஜ் புஷ்ஷீக்குச் செருப்படி! ஊரெங்கும் கொண்டாட்டம்!

டிசம்பர் 14, 2008 நள்ளிரவு நேரத்தை ஈராக்கும், உலகமும் அவ்வளவு எளிதாக மறந்து விடாது. அன்றுதான், ஈராக் மக்களுக்கு "ஜனநாயகத்தை'' வழங்கியிருப்பதாகச் சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

மேலும் படிக்க …ஜார்ஜ் புஷ்ஷீக்குச் செருப்படி! அமெரிக்க ஆதிக்கத்தின் மேல் விழுந்த இடி!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (பு.ஜ.தொ.மு), வரும் ஜனவரி 25ஆம்தேதியன்று  சென்னை அம்பத்தூரில் ""முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு'' என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டு, மக்களிடையே முழுவீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

மேலும் படிக்க …மார்க்சிஸ்டுகளா? ரவுடியிஸ்டுகளா?

போயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,

மேலும் படிக்க …சி.பி.எம். – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி : 'பச்சையான" பிழைப்புவாதம்

"நாங்கள் தினந்தோறும் இறக்கிறோம்'' — மும்பய் தாஜ் விடுதியில் பதுங்கியிருந்த முசுலீம் தீவிரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தியா டி.வி., இம்ரான் பாபர் என்ற தீவிரவாதியிடம் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தியபொழுது, "நீ சுற்றி வளைக்கப்பட்டு விட்டாய்; சரணடையவில்லை என்றால் கண்டிப்பாக இறந்து விடுவாய்'' எனக் கூறியதற்கு நாங்கள் தினந்தோறும் இறப்பதாகப் பதில் அளித்தாராம்.

மேலும் படிக்க …மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு

 கடந்த நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை (UAPA ""ஊபா'') திருத்தி புதிய சட்டம் எனமிரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு

மேலும் படிக்க …சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் திருத்தம் : பொடாவின் மற அவதாரம்!

த.மு.எ.ச. மாநாடு : கோலிவுட்டை வளைக்க நடந்த கூத்து !

சென்னை கோடம்பாக்கம் பகுதி முழுவதும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில், “வேற்றுமையில் ஒற்றுமை; அதுவே நமது வலிமை”  என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. மைய அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்காக நடத்தும்

மேலும் படிக்க …‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி!

மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2006, செப்டம்பர் மாத இறுதியில் சாதி இந்துக்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.

மேலும் படிக்க …கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்

தில்லியில் கடந்த செப்டம்பர் 13 அன்று குண்டு வெடித்த ஆறாவது நாள் செப்டம்பர் 19 அன்று, அந்நகரின் தென்பகுதியில் உள்ள ஜாமியா நகரில், ''பாட்லா ஹவுஸ்'' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில், ''இரண்டு முசுலீம் தீவிரவாதிகள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்; இருவர் தப்பியோடிவிட்டதாகவும்; ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டிருப்பதாகவும்'' அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க …மோதல் கொலையா? கட்டுக்கதையா?

காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தலைமையிலான ஆறுபேர் கொண்ட கும்பல்,புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி, ''போல்ட்நட்'' தயாரிக்கும் ஆலைத் தொடங்கப் போவதாக அறிவித்தது. பின்னர் பாட்டில் தண்ணீர் தயாரிக்கப் போவதாகக் கூறிப் பஞ்சாயத்து அனுமதி பெற்றது. இப்போது ''கால்ஸ்'' என்ற

மேலும் படிக்க …விவசாயத்தை நாசமாக்கும் சாராய ஆலை

உலகை வெல்லத் துடிக்கும் ''பேரரசுகள்'' தங்கள் கொடி பறக்க இந்தப் பூமிப் பந்தில் இடம் போதாமல் நிலவிலும், செவ்வாயிலும் துண்டு போட்டு இடம் பிடித்து வருகின்றன. இந்த வரிசையில் தன்னையும் ஒரு வல்லரசாகச் சேர்த்துக் கொள்ள இந்திய அரசு துடிக்கின்றது.

மேலும் படிக்க …இந்தியாவின் நிலவுப் பயணம்: வல்லாதிக்கக் கனவுக்கு வரிபணம் சூறை!

 திருச்சி உறையூர் சோழராஜபுரம் பகுதி மக்கள்  பொதுப்பயன்பாட்டிற்காகப்  பயன்படுத்திவரும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான அரசு நிலத்தை, அதிகாரிகளின் ஒத்துழைப்போடு வளைத்துப் போட்டு, தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேநிலைப்பள்ளி என்ற பெயரில் புதிய "கடை' திறந்துள்ளான், முன்னாள் சாராய வியாபாரியும் இன்னாள் கல்வி வியாபாரியுமான தனலெட்சுமி சீனிவாசன்.

மேலும் படிக்க …''அரச நிலத்தை ஆக்கிரமித்த கல்வி வியபாரியைக் கைதுசெய்!"

 புதுச்சேரி மாநிலம் வடமங்கலம் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தமது தொழிலாளர்களின் குடும்பத்தினரை அழைத்து ஒருவேளை உணவும் பரிசுப் பொருளும் வழங்கும் "குடும்பத் தினவிழா(!)'வை  கடந்த 16.11.08 அன்று நடத்தியது.
 தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தி வருவது மட்டுமல்ல, தொழிற்சங்கம் அமைத்தக் "குற்றத்திற்காக'வே தொழிலாளிகள் பலரை பழிவாங்கி வருகிற நிறுவனத்திற்கு "குடும்ப விழா' நடத்த என்ன அருகதை இருக்கிறது?

மேலும் படிக்க …வர்க்க உணர்வை வளர்த்தெடுப்போம்! முதலாளிகளின் கருணையைப் புறக்கணிப்போம்!

''காஷ்மீர் எங்கள் நாடு. பாதியை இந்தியாவும், பாதியை பாகிஸ்தானும் பிடுங்கிக் கொண்டன. எங்களுக்குச் சுதந்திரம்தான் தேவை.''


— இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியபொழுது, ஒரு காஷ்மீர் முசுலீம் முதியவர் தன்னிடம் இப்படிக் கூறியதாக எழுத்தாளர் அருந்ததிராய், ''காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை'' என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க …இலங்கைக்கு ஈழம்! இந்தியாவுக்கு காசுமீர்!

தீண்டாமைக் கொடுமையைத் திமிரோடு  பறைசாற்றி வந்த உத்தப்புரம் சுவர் தகர்க்கப்பட்ட பின்னர்,  தாழ்த்தப்பட்டவர்கள்  ஆதிக்க சாதி வெறியர்களால்  தாக்கப்படுவது தமிழகத்தில்  தொடர் நிகழ்வாகியிருக்கிறது.   கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற இத்தகைய சம்பவங்களில் சில..

மேலும் படிக்க …ஆதிக்க சாதிவெறியர்கள் கொட்டம் : தமிழகத்தின் அவமானம்

ஈவிரக்கமற்ற படுகொலைகளால் ஈராக் நாட்டையும் ஆப்கனையும் குதறிக்கொண்டிருக்கும் அமெரிக்க நாசகார அரசுப் படையினரின் மத்தியில் இருந்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் தோன்ற ஆரம்பத்துள்ளன. சென்ற தலைமுறையில் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த முன்னாள் படைவீரர்களின் உந்துதலால் இவ்வாண்டு

மேலும் படிக்க …அமெரிக்க பயங்கரவாதம் : அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள்

 "எதைத் தின்றால் பித்துத் தெளியும்?'' இந்தக் கேள்விதான் இப்பொழுத் மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் குடைந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் வங்கியில் இருந்து 2,60,000 கோடி ரூபாய் சந்தையில் கொட்டி விட்டோம்; முதலாளிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியையும் இயன்றவரைக் குறைத்து விட்டோம். ஆனாலும், பங்குச் சந்தை சரிந்து கொண்டே போகிறதே எனத் திகைத்துப் போய் நிற்கிறார்கள், அவர்கள்.

மேலும் படிக்க …பொருளாதார நெருக்கடி : எரிகிற வீட்டிலும் பிடுங்கும் வக்கிரம்

 செப்டம்பர் 29, 2008 அன்று நடந்த மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாக்கூர், புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரமேஷ் உபாத்யாய், இராணுவப் பணியிலிருக்கும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித் மற்றும் தீவிர இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

மேலும் படிக்க …இந்து பயங்கரவாதமும் 'இந்து"க்களின் மௌனமும்

 ஈழப்போர் தீவிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில், ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தையும் அழித்தொழிக்கும் பயங்கரவாதப் போரை நடத்தி வருகிறது, சிங்கள பாசிச அரசு. சிங்கள அரசின் பாசிச இனவெறிக்கும், அந்த அரசு பயங்கரவாதப் போரைத் தீவிரப்படுத்தி வருவதற்கும் முக்கிய காரணம்,

மேலும் படிக்க …"ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைநிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்! இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளை வீழ்த்துவோம்!'' — புரட்சிகர அமைப்புகளின் பிரச்சார இயக்கம்

கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல், தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள சாதிதீண்டாமையின் கோரத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சட்டக் கல்லூரியில் சாதிவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பதிலடி கொடுத்துள்ளதன் வாயிலாக, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மேலும் படிக்க …சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மோதல் : ஆதிக்கசாதித் திமிருக்கு விழுந்த-பதிலடி!

 இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் இதுவரை கண்டிராத மிகக் கொடியதும் மிகப் பெரியதுமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே பீதியில் உறைந்து போயுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தொடங்கி, மும்பை நகரின் முக்கிய மையங்கள்,

மேலும் படிக்க …மும்பை தாக்குதல்: இந்துவெறிஅரசு பயங்கரவாதத்தின் எதிர்வினை!

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும்,

மேலும் படிக்க …கருப்பு ஓபாமாவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்?

பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்!

மேலும் படிக்க …போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி?

கடந்த 08-11-08 அன்று சென்னை சேத்துப்பட்டு பகுதிச் சுவர்களில் விநோதமாய்ப் படர்ந்திருந்தது ஒரு விதக் காளான். "இந்து மதவெறிக் கொலைகாரன்" அத்வானிக்கு 82-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்தான் அவை!

மேலும் படிக்க …இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி?

 மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த கயர்லாஞ்சியில் ஏழை தலித் பூட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு சாதி இந்துக்களால் கொடூரமாக வேட்டையாடப்பட்ட  கதையை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. 

 

மேலும் படிக்க …அம்பானியின் கனவைத் தகர்த்த விவசாயிகள் எமுச்சி!

 உழைக்கும் மக்களின் போராட்ட வரலாற்றில் ம.க.இ.க.வின் பெயரைப் பலமுறை பதிவு செய்திருக்கிறது, சென்னைசேத்துப்பட்டு. கடந்த 23.10.08 அன்று மீண்டும் ஒருமுறை கம்பீரமாகப் பதிவு செய்தது. "சேத்துப்பட்டு ஸ்கூல் ரோடு டாஸ்மாக் சாராயக் கடையை இழுத்து மூடு! குடிகாரர்களின் அலம்பல்கள்  அட்டாகசங்களிலிருந்து உழைக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு கொடு!'' என்ற முழக்கங்களுடன் பகுதிவாழ் மக்களை அணிதிரட்டி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்  மறியல் போராட்டத்தை நடத்தி முதற்கட்ட வெற்றியைச் சாதித்திருக்கிறது, ம.க.இ.க.

மேலும் படிக்க …குடியிருப்புப் பகுதியா? திறந்தவெளி மதுபான விடுதியா?

 குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில், சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து போனதை விசாரித்து வந்த நானாவதி கமிசன், இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் எந்தப் பொய்யைப் பிரச்சாரம் செய்து வருகிறார்களோ, அந்தப் பொய்யையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.

 

மேலும் படிக்க …நானாவதி கமிசன் அறிக்கை : குற்றப்பத்திரிகையே தீர்ப்பு! (கோத்தர முசுலீம்கள் மீது மோடி வாரியிறைத்த அவதூறுகளையே திர்ப்பாகத் தந்துள்ளது.)

 ஆப்கானை ஆக்கிரமித்துப் பயங்கரவாத அட்டூழியங்களை நாளும் அரங்கேற்றி வரும் அமெரிக்கக் காட்டுமிராண்டிகள், இப்போது பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டனர்.

மேலும் படிக்க …அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புப் போர் : ஒட்டகம் மூக்கை நுழைத்த கதை

 மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சித்ரா எனும் இளம்பெண் காச நோயினால் இறந்து விட்டார். அப்பெண்ணின் பிணத்தைப் பார்த்து அழுதிடக் கூட அவரைப் பெற்ற தந்தை வரவில்லை. உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் வரவில்லை.  அவர்கள் மட்டுமல்ல,  பிணத்தைப் புதைக்கக் கூட அங்கு ஆண்களே வர முடியவில்லை.

மேலும் படிக்க …உத்தப்புரம் : இதுதான் சூத்திர ஆட்சி!

 குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக, ஏற்கெனவே தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவுவது போதாதென்று, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்குக் கட்டுப்பாட்டு முறையைக் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க …மின்வெட்டு : பற்றாக்குறையா? மோசடியா?

 அரபிக் கடலின் மேற்கே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உச்சியிலுள்ள ஏடன் வளைகுடாவின் செங்கடலில் இதமாக அலைவீசிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 25ஆம் நாளன்று ஏடன் வளைகுடா வழியாக உக்ரேனிய நாட்டின் ""எம்.வி.ஃபைனா'' என்ற ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் செங்கடலில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென அதிநவீன ஆயுதங்களுடன் விசைப்படகுகளில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கப்பலை வழிமறித்து,

மேலும் படிக்க …சோமாலியா : ஏகாதிபத்தியங்களின் அட்டூழியம்! யுத்தபிரபுகளின் சூரத்தனம்!

"நல்ல காலம் முடிந்தது''  இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.

மேலும் படிக்க …மன்மோகன் சிங் : நவீன தருமன்

 "வளர்ச்சியடைந்த நாடுகள் நேர்மையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்...''


 "தற்போதைய சூழலில் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஐ.எம்.எஃப். ஆகியன சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம். வளரும் நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கியில் எடுபடும் அளவுக்கு சீரமைப்புகள் இருக்க வேண்டும்...''

மேலும் படிக்க …ஏகாதிபத்தியக் கொள்ளையும் சி.பி.ஐ.-இன் மொன்னைத்தனமும்

 ஓசூர் சிப்காட்ஐஐ தொழிற்பேட்டையிலுள்ள "வி.பி. மெடிகேர் லிமிடெட்'' எனும் நிறுவனம், மருத்துவ இரசாயனத் தொழிற்சாலையாகும். இது, சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு உள்ளிட்டு மூட்டுவலி மருந்து தயாரிப்பு  ஆராய்ச்சிக்கூடம் கொண்ட ஆலையாகும். இவ்வாலையில் 160 பேர் ஆராய்ச்சிக்கூட ஊழியர்கள்  கண்காணிப்பாளர்களாகவும், 75 பேர் தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாகவும், 130 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

மேலும் படிக்க …தொழிற்சங்கம் அமைத்தால் வேலை நீக்கம்!

 நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.

மேலும் படிக்க …ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் - அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்பட்டுள்ளது

 "இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.''
—   ஜார்ஜ்  டபிள்யூ. புஷ்.

மேலும் படிக்க …வீடும் போச்சு… வேலையும் போச்சு! அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை! - வீடு ஜப்தி வெய்யப்படுவதை எதிர்போரில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்É சிலர் போலீசால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள்

 மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் படிக்க …ஆர்.எஸ்.எஸ். இன் சைவப்புலி வேடம் கலைந்தது

 கரூர் தான்தோன்றிமலையில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் பாண்டியம்மாள், மாணவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திப் பழிவாங்கும் "ஆண்டையம்மாள்'' என்று பேர் பெற்றவர். மாணவர்களை வாடா, போடா என ஒருமையில் ஏசுவது, கிராமப்புற மாணவர்களின் உருவ தோற்றத்தைக் கூறி அவமானப்படுத்துவது, ரெக்கார்டு நோட்டில் கையெழுத்து வாங்கச் செல்லும் மாணவர்களை மணிக்கணக்கில் நிற்க வைத்து அலட்சியப்படுத்துவது முதலான வக்கிரக் குணங்களைக் கொண்ட அவர்,

மேலும் படிக்க …கொத்தடிமைத்தனத்தைத் தட்டிக் கேட்டால் பொய்வழக்கு! - கரூர் அரசு கலைக் கல்லுரி நிர்வாகத்தின் அடிவடித்தனங்களுக்கு எதிராக பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம்

 "ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்'', "கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?''  விண்ணதி ரும் முழக்கங்களை எழுப்பி, செங்கொடிகளையும், கண்டன முழக்கத் தட்டிகளையும் ஏந்தியபடி கடந்த 8.10.08 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையை மறித்து, நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கைதாயினர், ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள்.

மேலும் படிக்க …'ஈழத் தமிழினப் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!" நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் தமிழகம் தழுவிய போராட்டங்கள்.

 "கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

மேலும் படிக்க …ஈழம்: ஜெயாவின் "புலி'' பூச்சாண்டி! கருணாநிதியின் கோழைத்தனம்!

இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை (123 ஒப்பந்தம்) நிறைவேற்றுவதற்கான இறுதிக் கட்ட பேரங்கள் நடந்து வருகின்றன. சர்வதேச அணுசக்திக் கழகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இந்திய அணு உலைகளைக் கண்காணிப்பது தொடர்பான ஒப்பந்தமும்; யுரேனியம் உள்ளிட்ட அணு மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக, அணுமூலப் பொருட்கள் வழங்கும் நாடுகள் இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒப்பந்தமும் நிறைவேறியுள்ள நிலையில், 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் சடங்கு மட்டுமே எஞ்சியிருக்கிறது.

 

மேலும் படிக்க …இந்திய – அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் : துரோகத்தின் வெற்றி!

அடுத்த தேர்தலில் யாருடன் இலட்சியக் கூட்டணி கட்டுவது என்ற பெரும்பிரச்சினையை சி.பி.எம் கட்சி ஒருவழியாகத் தீர்த்துவிட்டது.  அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான என்.வரதராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாக "அப்பாயின்ட்மெண்ட்'' வாங்கி, இரவு 9 மணிவரை காத்திருந்து "புரட்சிக்கலைஞர்' விஜயகாந்தை சந்தித்துக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டார். விஜயகாந்தும் "முதலிலேயே சொல்லி இருந்தால் விருந்து வைத்திருப்பேனே' எனச் சொல்லி தோழர் மனதைக் குளிரவைத்ததோடு, தமிழ்நாட்டில் இருக்கும் இடதுசாரிகள் "அரசியலில் ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தூய உள்ளத்தோடு செயல்படுபவர்கள்' என்று இவர்களுக்குச் சான்றிதழும் கொடுத்து விட்டார்.

 

மேலும் படிக்க …இடதுகளான சி.பி.எம். மின் புரட்சித் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்துள்ள சுண்டகாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணவேணி என்ற இளம்பெண். கூலி விவசாயி நடராஜ் என்பவரின் மகளான இவர் ஓசூர் வட்டம் பாகலூரை அடுத்துள்ள பெலத்தூர் பிரிமியர் மில்லில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமையாக வேலையில் சேர்க்கப்பட்டார். தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கி, கிருஷ்ணவேணியை 3 மணிநேரம் கூடத் தூங்க விடாமல், அவசர வேலை என்று மிரட்டி ஆலை நிர்வாகம் அவரைக் கசக்கிப் பிழிந்துள்ளது.

 

மேலும் படிக்க …பிள்ளைக்கறி தின்னும் பிரிமியர் மில்!முதலாளியின் இலாபவெறிக்கு இளம்பெண் உயிர்ப்பலி!

உள்நாட்டுப் போரில் நிலைகுலைந்து, வறுமையும் பட்டினியும் பீடித்து, தீராத அவலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, காங்கோ. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள அந்நாட்டின் வடமேற்கே மாசிசி நகரிலுள்ள நிவாரண முகாம்களில் பஞ்சைப் பாராரிகளான கருப்பின மக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். வாகனங்கள் அணி வகுத்து சீறிக்கொண்டு வந்தன.

 

மேலும் படிக்க …இந்திய அமைதிப்படையா? காமவெறி பயங்கரவாதப் படையா?

தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்க்கும் அல்லது அத்துறையில் படித்து வரும் இந்திய இளைஞர்களின் கனவு, அமெரிக்காவுக்குப் போய் எப்படியாவது பச்சை அட்டை (எணூஞுஞுண இச்ணூஞீ) வாங்கி, அமெரிக்காவிலேயே "செட்டிலாகி'' விட வேண்டும் என்பதுதான். இயற்கையின் பிழையால், இந்திய நாட்டில் பிறக்க நேர்ந்து விட்ட அமெரிக்க மோகிகளின் மனசாட்சியை, இந்தக் கதை உலுக்க முடிந்தால், அது நமது "அதிருஷ்டம்'தான்!

 

மேலும் படிக்க …ஹியுலுநாக்கின் கொட்டடி மரணம் : அமெரிக்க மோகிகளுக்கு ஒரு பாடம்

தொழிலாளர்களின் உழைப்பால் திரண்ட 56 ஆண்டுகால சேமநலநிதி (பிராவிடண்ட் ஃபண்ட்)யான ரூ. 2.5 இலட்சம் கோடியை மட்டுமல்ல; அத்தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வையும் சேர்த்து  ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரு முதலாளிகளின் இலாபவெறிக்கு, இரையாக்கியிருக்கும் மன்மோகன்  சிதம்பரம் கும்பலின் உலக வங்கிக் கைக்கூலித்தனத்துக்கு எதிராக ""கொள்ளை போகிறது தொழிலாளர் உழைப்பு! அள்ளிக் கொடுப்பதோ காங்கிரசுக் கும்பல்! சுருட்டப் போவதோ பன்னாட்டுஇந்நாட்டுக் கம்பெனிகள்'' எனும் முழக்கத்தோடு தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து தொடர் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. நடத்தி வருகிறது.

 

சென்னையில், கிண்டி தொழிற்பேட்டை, அம்பாள் நகர் பேருந்து நிலையம், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் கடைவீதி, பல்லாவரம் என தொடர் தெருமுனைக் கூட்டங்களையும், ஓசூரில், கடந்த 12.09.08 அன்று மாலை 5.00 மணியளவில் மூக்கொண்டபள்ளி பகுதியில் திரளான மக்கள் பங்கேற்புடன், ம.க.இ.க. மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியோடு பொதுக் கூட்டத்தையும், திருச்சியில், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆ.ஓ.பா.ச., அத.வி.பா.ச மற்றும் பெ.வி.மு. ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, "பெல்' ஆலையின் பிரதான நுழைவாயில் முன்பும், அதனை ஒட்டி சிறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் தொடர் தெருமுனைக் கூட்டங்களையும் பு.ஜ.தொ.மு. நடத்தியது.

 

     உடுமலையில், இதே மறுகாலனியத் தாக்குதலின் மற்றுமொரு வெளிப்பாடான, விலையேற்றம், மின்வெட்டுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை உடுமலை தேவனூர் புதூர் மையப் பேருந்து நிலையம் எதிரில் 13.09.08 அன்று மாலை நடத்தியது.

 

     தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் எனும் மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் மாநிலமெங்கும் தொடர்பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

புதுச்சேரி மாநிலத்தின் வடமங்கலம் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம், புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னர் இந்துஸ்தான் யுனிலீவர் என்ற பெயர் மாற்றத்துடன் சோப்பு, பற்பசை, முகப்பவுடர் முதலான அன்றாடப் பயன்பாட்டுக்கான நுகர்பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து வருகிறது. 

 

நேர்மையே இதன் வாக்குறுதி என்று ஹமாம் சோப்பை விளம்பரப்படுத்தும் இந்நிறுவனம், இந்தியச் சட்டங்களை மயிரளவும் மதிக்காமல், தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடினால், "நேர்மையா? கிலோ என்ன விலை?' என்று கேட்டு அடக்குமுறையை ஏவி வருகிறது.

 

இந்நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வந்த போதிலும், அவர்களுக்குப் பணிநிரந்தர ஆணை கொடுக்கப்பட்டுள்ள போதிலும் தினக்கூலி தொழிலாளர்கள் (Daily Rated workman) என்ற பெயரிலேயே பணிபுரிகின்றனர். இப்பெயர் மோசடி மூலம் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மட்டுமல்லாது, மாதச் சம்பளத்திலும் மருத்துவ ஈட்டுறுதித் தொகை பிடித்தம் செய்வதிலும் சட்டவிரோதமாக பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது, நிர்வாகம். 

 

இவற்றைத் தட்டிக் கேட்கும் தொழிலாளர்களையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் பணியிடை நீக்கம் செய்வது, ஊதிய உயர்வை மறுப்பது, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு அடக்குமுறைகளை ஏவுவது என கேள்விமுறையின்றி கொட்டமடிக்கிறது.

 

குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து, இந்நிறுவனத்தில் கிளைச் சங்கத்தைக் கட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம்  ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் தொழிலாளர்களை அணிதிரட்டி அமைப்பாக்கினர். இதைக் கண்டு பீதியடைந்த நிர்வாகம், உணவகத்தில் கெட்டுப் போன உணவு வழங்கப்பட்டதைத் தட்டிக் கேட்ட முத்துகிருஷ்ணன் என்ற தொழிற்சங்க முன்னணியாளரைப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியது.

 

கொதித்தெழுந்த தொழிலாளர்கள், யுனிலீவரின் சட்டவிரோதப் பழிவாங்கலை எதிர்த்து கடந்த 15.9.2008 அன்று வடமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொழிலாளர் நிறைந்த இப்பகுதியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டு, பகுதிவாழ் உழைக்கும் மக்களின் உணர்வுபூர்வமான பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், பணபலமும் அதிகாரபலமும் அடியாள் பலமும் கொண்ட மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் சட்ட விரோத அடாவடித்தனத்தை, கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் நிச்சயம் முறியடிக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. யுனிலீவர் தொழிலாளர்கள் இதர ஆலைத் தொழிலாளர்களுடன் இணைந்து அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

—  இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன், 

புதுச்சேரி.

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல்  நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, "வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது.  ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான். 

மேலும் படிக்க …தி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. ஊடகங்களும் நீதிமன்றங்களை இப்படித்தான் பயபக்தியுடன் அணுகுகின்றன. யாராவது அப்படி தப்பித் தவறி பேசிவிட்டால் பிடித்தது சனி! உலகமறிந்த அருந்ததிராயையே ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைத்தார்களே!

 

மேலும் படிக்க …நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா?

இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தின் இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கதை.

 

மேலும் படிக்க …குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது!

"கேரளத்தைப் பார்! வங்கத்தைப் பார்! நிலச்சீர்திருத்தம் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது'' எனக் கிளிப்பிள்ளையைப் போல சி.பி.எம். கட்சி ஒவ்வொரு சந்துமுனையிலும் தனது கூட்டங்களில் பெருமை பொங்கப் பேசுவது வழக்கம். இதையெல்லாம் பார்த்து சி.பி.எம். ஆளும் மாநிலங்களில் நிலமற்றவர்களே கிடையாதோ என எண்ணுபவர்களும் உண்டு. ஆனால், சி.பி.எம். ஆளும் கேரளத்தில் நிலமற்ற மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டங்கள், இந்தப் போலிப் பெருமையை அம்மணமாக்கிவிட்டன.

 

மேலும் படிக்க …முதலாளிக்கு நிலம்! உழுபவனுக்கு குண்டாந்தடி! – சி.பி.எம்.இன் நிலச்சீர்திருத்தக் கொள்கை!

பன்னாட்டு ஏகபோக சிகரெட் நிறுவனமான ஐ.டி.சி.யின் துணை நிறுவனமான ஏ.டி.சி. எனப்படும் ஏசியன் டொபாக்கோ கம்பெனி, ஓசூரில் 273 தொழிலாளர்களைக் கொண்டு 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நாளொன்றுக்குக் கோடிக்கணக்கில் சிகரெட் உற்பத்தி செய்து, கோடிகோடியாய் இலாபத்தை அள்ளும் இந்நிறுவனம், கடந்த 20 மாதங்களுக்கும் மேலாகத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. இதனைத் தட்டிக் கேட்டத் தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேரைப் பணிநீக்கம் செய்து பழிவாங்கியது.

மேலும் படிக்க …"தொழிலாளர்களின் வயிற்றலடிக்கும் ஐ.டி.சி.ஏ.டி.சி. பொருட்களைப் புறக்கணிப்போம்!'' — பு.ஜ.தொ.மு.வின் ஆர்ப்பாட்டம்

ஒரிசா, பார்காரா மாவட்டத்திலுள்ள பாதம்பூரில் தொழுநோயாளிகளுக்கான சேவை மையம் மற்றும் ஒரு அனாதை இல்லத்தையும் பாதிரியார் எட்வர்டு சீகொய்ரா நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி அவரது மையத்தின் கதவு வேகமாகத் தட்டப்படுகிறது. யாரோ உதவி கேட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்த பாதிரியார் உடனே கதவைத் திறக்கிறார். வெளியே ஆயுதங்களுடன் இந்து மதவெறிக்கூச்சலோடு ஒரு கும்பல் உள்ளே நுழைகிறது.

மேலும் படிக்க …ஓரிசா : பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடு! இந்து மதவெறியின் சோதனைச்சாலை!!

சென்னை, தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதால்தான் தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை என்று தீயணைப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க …சென்னை : விற்பனைக்கு! இரண்டாவது மாஸ்டர் பிளானின் மகாதிமியங்கள்!

வறுமை காரணமாக தனது குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அத்துயரக் கதை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதத்தில் சேலம் அருகே வறுமை காரணமாக தான் பெற்று வளர்த்த மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ஒரு இளம்பெண். மூன்று குழந்தைகளும் மாண்டுபோக, அவர் மட்டும் காப்பற்றப்பட்டு வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறார்.

 

மேலும் படிக்க …கவர்ச்சித் திட்டங்கள் : வறுமையை ஒழிக்குமா?

காங்கிரசையும் பா.ஜ.க.வையும் புறக்கணித்து விட்டு, மதச்சார்பற்ற மூன்றாவது அணி கட்டப் போவதாக கூறி வருகிறார், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களின் பண்டிகைகள்  விழாக்களில் ஊக்கமாகப் பங்கேற்று, கூடிக் குலாவி வாழ்த்து தெரிவிப்பது  மத நல்லிணக்கத்தைப் பேணுவது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் கற்பித்துக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க …ஏ.ஐ.டி.யு.சி. வழங்கும் முற்போக்கு கொழுக்கட்டை!

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன? 

 

மேலும் படிக்க …அண்ணாதுரை : பிழைப்புவாதத்தின் பிதாமகன்

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ நிறுவனம். இந்திய மருத்துவத்தின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதையும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்குவதையும் இலட்சியமாகக் கொண்டு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனம். இந்த நிறுவனம்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தரும் டாலருக்காக பிஞ்சுக் குழந்தைகள் மீது, புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகளை நடத்தி, இதுவரை 49 குழந்தைகளைக் கொன்றுள்ளது.

 

மேலும் படிக்க …பிஞ்சென்றும் பாராது இலாபவெறி

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் சென்னை செல்வதற்காகக் காத்திருந்த இரு இளம்பெண்களை, இரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காமவெறி பிடித்த போலீசுக்காரன் சரவணன், விசாரணை என்ற பெயரில் தனது வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்முறையை ஏவியுள்ளான். இக்கொடுஞ்செயலை அறிந்து திருச்சி நகரமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

மேலும் படிக்க …"காமவெறி போலீசுக்காரனைத் தூக்கில் போடு!'' திருச்சியை அதிர வைத்த சுவரொட்டி பிரச்சாரம்

"கம்யூனிசம் தோற்றுவிட்டது; தனியார்மயம் தாராளமயம் உலகமயம்தான் ஒரே தீர்வு!'' என்று எக்காளமிட்ட முதலாளித்துவம், அனைத்துலக முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்காவிலேயே முதுகெலும்பு முறிந்து மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டு விட்டது. அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; கட்டுப்பாடற்ற ஊகவணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகள் இவற்றால் விபரீத விளைவுகள் நேரிடும் என்று தெரிந்தே "அப்படியெல்லாம் நடக்காது; எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்ற ஆணவத்தோடு செயல்பட்ட தனியார் ஏகபோக நிதிக் கழகங்கள், "சப் பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்கு தரப்படும் கடன்களால் ஆதாயமடைந்த பின்னர், நெருக்கடி தீவிரமாகி அடுத்தடுத்து திவாலாகி குப்புறவிழுந்து கிடக்கின்றன.

 

மேலும் படிக்க …உலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி!

கும்மிடிப்பூண்டியிலுள்ள எஸ்.ஆர்.எஃப். ஆலைத் தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக "எஸ்.ஆர்.எஃப். புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம்'' என்ற பெயரில் அணி திரண்னர்.

 

மேலும் படிக்க …சட்டத்தை மதிக்காத எஸ்.ஆர்.எஃப்.நிர்வாகத்திற்கு போலீசு பாதுகாப்பு! போராடிய தொழிலாளிகளுக்கு தடியடி, கைது!

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் உள்ள ஜெட்டா நகரில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் பங்கு கொண்ட மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உருப்படியான யோசனைகள் கூட வைக்கப்படவில்லை என்ற போதும், இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எண்ணெய் விலைக்குக் காரணமான உண்மையைப் போட்டு உடைத்தார்.

மேலும் படிக்க …பெட்ரோல்-டீசல் விலையேற்றம் : குளிர் காயம் அமெரிக்கா

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் தனது இரும்பு உருக்காலையை நிறுவிக் கொள்ள அனுமதி அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம். 55,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு உருக்காலையை அமைக்கத் திட்டமிட்டுள்ள போஸ்கோ, ஆலை அமைப்பது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஆலோசனைகளை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க …போஸ்கோ தீர்ப்பு : நீதிக்குத் தூக்கு!

கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசும் தனியார் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு ஒரு மாற்றுப் பாதையை காட்டுவதாகப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள், பாரம்பரிய உணவு மற்றும் தானிய உற்பத்தியில் உள்ள நிலங்களில் இம்மண்ணுக்கே அறிமுகம் இல்லாத புதிய பயிர்களையும் மற்றும் ஏற்றுமதிக்கான பயிர்களையும் விவசாயம் செய்ய வழிகாட்டுதல் கொடுக்கின்றன.

மேலும் படிக்க …மாற்றுப் பயிர்த் திட்டம் : விவசாயிகள் விட்டில் பூச்சிகளா?

"பெரியார் எழுதியவைகளும் பேசியவைகளும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் – சொத்துகளாகும்'' என்று பெரியாரின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் வீரமணி அண்மையில் அறிவிப்புச் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க …தி.க.வீரமணியின் இலாபவெறி

நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறிய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களை அறைகூவி, ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த 22.7.08 அன்று தமிழகமெங்கும் அணுசக்தி துரோக ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அதன் தொடர்ச்சியாக, "அடிமையாக்குகிறது அணுசக்தி ஒப்பந்தம்; கொல்லுகிறது விலைவாசி; நாறுகிறது நாடாளுமன்றம்; இனி நாட வேண்டியது நக்சல்பாரி பாதையே!'' எனும் முழக்கத்துடன் இவ்வமைப்புகள் தமிழகமெங்கும் வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

 

மேலும் படிக்க …"அணுசக்தி துரோக ஒப்பந்தம் : அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம்!"

கம்யூனிசப் புரட்சியாளரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் மத்தியக் கமிட்டி உறுப்பினருமான தோழர் அனுராதா காந்தி, கடந்த ஏப்ரல் 12ஆம் நாளன்று மலேரியா நோய் தாக்குதலால் மரணமடைந்து விட்டார். தலைமறைவு புரட்சிகர வாழ்க்கையின் காரணமாக, அவர் மறைந்துவிட்ட துயரச் செய்தி மிகத் தாமதமாகவே தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க …தோழர் அனுராதகாந்தி அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!

அண்மையில் ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தின் ஜட்செர்லா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 விவசாயிகள் சுயேச்சைகளாகக் களமிறங்கினர். அவர்கள் தேர்தலில் நின்றது சட்டசபைக்குச் செல்வதற்கு அல்ல. சிறப்புப்பொருளாதார மண்டலம் எனும் பேரால் தங்கள் நிலம் பறிக்கப்பட்டதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவே இத்தேர்தலில் நின்றனர். 8 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப் பிரித்து இதற்கு முந்தைய தேர்தலில் வென்ற தெலுங்கானா ராஷ்டிர சமிதியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளனர்.

மேலும் படிக்க …'அவர்களுக்கு நிலம் சொந்தமாய் இருந்தது!" ஆந்திராவில், சி.பொ.மண்டலத்தால் நிலத்தை விழந்துவிட்ட தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் போராட்ட வாழ்வு

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவர், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் மேற்படிப்புப் படித்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் 2001இல் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் முசுலிம்கள் நிம்மதியாய் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் குடும்பத்துடன் கராச்சி திரும்பினார்.

மேலும் படிக்க …அமெரிக்க பயங்கரவாதத்தின் இரத்த சாட்சி!

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பன்னாட்டு விமானநிலையத்தில், கடந்த ஜூன் 25 அன்று பரபரப்பான காலை நேரத்தில் பொதுமக்கள் செல்லும் பாதையில் கார் ஒன்று அனைத்துவிதமான பாதுகாப்புப் பரிசோதனைகளையும் முடித்து விட்டுச் செல்கிறது. அலுவலக வேலைகள் தொடங்க இன்னும் சற்று நேரமே இருக்கும் நிலையில், 8.40 மணிக்கு அமெரிக்க இராணுவ வண்டி ஒன்றில் இருந்து 9 வீரர்கள் அக்காரை நோக்கிச் சரமாரியாகச் சுடுகின்றனர். சிறிது நேரத்துக்கெல்லாம் அக்கார் தீப்பற்றி எரிந்து போகிறது.

மேலும் படிக்க …பிணக்காடாகிறது ஈராக் : அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொல்லபட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதையடுத்த சில தினங்களில், "ஆந்த்ராக்ஸ்'' என்ற நச்சுக் கிருமியின் உயிர் அணுக்கள் தடவப்பட்ட கடிதங்கள், சில அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களைக் குறி வைத்து அனுப்பப்பட்டன. மர்மமான முறையில் நடந்த புதிய வகையான இத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க …ஆந்திராக்ஸ் பீதி : அமெரிக்காவே குற்றவாளி!

கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதிலிருந்து கேரள மாநிலமெங்கும் கிறித்தவர்களும் முஸ்லீம்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அவர்களது போராட்டத்தை ஆதரித்தும், இடதுசாரி கூட்டணி ஆட்சியை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. காங்கிரசின் மாணவர் சங்கங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை தெருவிலே போட்டுக் கொளுத்தி வருவதோடு, பொதுச் சொத்துக்களையும் நாசப்படுத்துகின்றன.

மேலும் படிக்க …கேரளா : சனாதனிகள் - பாதிரிகள் - முசுலீம் மதவெறியாகளின் புனிதக் கூட்டு!

ஆகஸ்ட் 7ஆம் நாள் பின்னிரவு. ரஷ்யாவை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு பிராந்தியமான தெற்கு ஒசெட்டியாவின் மீது ஜார்ஜியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. பீரங்கித் தாக்குதலில் அச்சிறு மாநிலத்தின் தலைநகரான ஷின்வெலி தரைமட்டமாக நொறுங்கியது. காகசஸ் மலைப் பிராந்தியமெங்கும் குண்டுகளின் வெடியோசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க …தெற்கு ஒசெட்டியா : அமெரிக்க – ரஷ்ய வல்லரசுகளின் பகடைக்காய்

திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள் அடுத்தடுத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில் இவற்றின் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன. நவீன பாதாளச் சாக்கடைத் திட்டங்கள், சாலைகளை அகலப்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசு, நகர்ப்புற மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து மேம்படுத்துவதாக மக்களும் கருதுகின்றனர்.

மேலும் படிக்க …ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது

ஜூலை 25, 2008 அன்று பெங்களூருவின் எட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் குறைந்த வீரியம் கொண்ட குண்டுகள் வெடித்தன. அதில் ஏழுபேர் காயமடைய, ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய நரேந்திர மோடி "ஜெய்ப்பூரிலும், பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கலாம், ஆனால், குஜராத்தின் மண்ணில் பயங்கரவாதிகள் அடியெடுத்து வைக்க முடியாது'' என்று முழங்கினார். அன்று மாலையே அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் 21 தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நான்கு இடங்கள் மோடியின் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவை.

மேலும் படிக்க …அகமதாபாத் குண்டு வெடிப்புகள் : நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்த போர்

நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த காசுமீர் மக்களின் சுதந்திர வேட்கை மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. காசுமீர் பள்ளத்தாக்கில், ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்றுவரும் போராட்டங்களில்"சுதந்திர காசுமீர்'' என மக்கள் முழங்குகிறார்கள். ஆகஸ்டு 15 அன்று, காசுமீர் தலைநகர் சிறீநகரில் உள்ள லால் சௌக்கில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கொண்டே கீழே இறக்கி விட்டு, பாக். நாட்டின் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.

மேலும் படிக்க …காஷ்மீர் : இந்து தேசியத்தின் பரிதாபத் தோல்வி

காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடன் உறவு இல்லாதவர்களுடன்தான் கூட்டணி என்ற முடிவை தமிழகத்தின் இடது, வலது போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தாங்கள் நீடிக்கவில்லை என்று இக்கட்சிகள் உணர்த்தியுள்ளதோடு, ""காங்கிரசா, இடதுசாரிகளா? யாருடன் கூட்டணி என்பதை இனி முடிவெடுக்க வேண்டியது தி.மு.க.தான்'' என்றும் கூறிவிட்டன. பா.ஜ.க. பக்கம் அ.தி.மு.க. சாய்ந்துவிடாமல் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கும்விதமாக இக்கட்சிகள் இம்முடிவை அறிவித்துள்ளன.

மேலும் படிக்க …போலி கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணி: புதிய மொந்தையில் பழைய கள்ளு

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராகக் கருதப்படும் பெங்களூருவின் சிறப்பே அதன் ஏரிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்நகரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் அந்நிய தரகு முதலாளிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த நகரை மொய்க்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, இந்த ஏரிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்குச் சுருங்கி விட்டது.

மேலும் படிக்க …கேளிக்கைப் பூங்காக்களாகும் ஏரிகள் தனியார்மயத்தின் மகிமை

லலித் மேத்தா — 36 வயதான பொறியாளர்; சமூக சேவகர். விகாஸ் சாயோக் கேந்திரா (ஙகுஓ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர். கடந்த பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவரது தன்னார்வக் குழு, ஜார்கந்த் மாநிலத்தின் பாலமாவ் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (Nகீஉஎகு) நடக்கும் ஊழல்மோசடிகளைத் தடுக்க, உண்மை விவரங்களைச் சேகரித்தும் கள ஆய்வுகளை மேற்கொண்டும் அம்பலப்படுத்த முற்பட்டது. இதற்காக டெல்லி மற்றும் வடமாநிலங்களிலிருந்து வந்த இத்தன்னார்வக் குழு ஊழியர்களும் நண்பர்களும் பாலமாவ் மாவட்டத்தின் செயின்பூர், சத்திரப்பூர் வட்டங்களில் கடந்த மே 13ஆம் தேதியன்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். மறுநாள், மே 14ஆம் தேதியன்று இப்பகுதியிலுள்ள கந்தரா எனும் காட்டுப் பகுதியில் லலித்மேத்தா கோரமாகக் கொல்லப்பட்டுப் பிணமாகக் கிடந்தார்.

மேலும் படிக்க …'ஊழலை அம்பலப்படுத்தினால் உயிர் இருக்காது!" அதிகார கும்பல் விடக்கும் பகிரங்க எச்சரிக்கை!

"கொகேசியர்கள்", அமெரிக்கா, கனடாவில் வாழும் ஐரோப்பிய-வெள்ளை இனத்தவர்களை குறிக்க அந்தச் சொல்லை பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையில், மேற்கே கருங்கடலையும், கிழக்கே கஸ்பியன் கடலையும் கொன்ட பிரதேசமே "கொகேசியா" என்ற பொதுப்பெயரில் அழைக்கப் படுகின்றது. சரித்திர காலகட்டத்துக்கு முந்திய, ஐரோப்பா நோக்கிய ஆரியர்களின் குடிப்பரம்பல், கொகேசியாவில் இருந்தே ஆரம்பமாகியதாக நம்பப்படுகின்றது. ஆரியர்களின் பூர்வீக பூமி, இன்று பல்வேறு மொழிகளை பேசும் இனங்களாக பிரிந்து, ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.

மேலும் படிக்க …இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்

இந்த ஆண்டு மைய அரசின் பட்ஜெட்டில், ''குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கிக்கடனில் 71 ஆயிரம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். தள்ளுபடி நடைமுறைக்கு வரும் முன்பே பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தி ''விவசாயிகளுக்காக நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்'' என்றும் ''தவறான கணக்கை எழுதிய பள்ளிக்கூடச் சிறுவனின் சிலேட்டைத் துடைத்து விட்டு, புதுக்கணக்கை எழுத வைத்திருக்கிறோம்'' என்றும் சிதம்பரம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.

மேலும் படிக்க …விவசாயக் கடன் தள்ளுபடி : காகித கவர்ச்சித் திட்டம் : விவாசயக் கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கும் நிபந்தனைகள் நயவஞ்சகமானவை

காரிருள் சூழ்ந்தாற்போல எங்கும் புகை மூட்டம்; இந்தியத் தூதரகக் கட்டிடம் சுக்கலாக நொறுங்கியது; தாலிபான்களின் மனிதவெடிகுண்டுத் தாக்குதலால் காபூல் நகரமே அதிர்ந்தது. தெருவெங்கும் சதைக் கோளங்களாக மனித உடல்கள் சிதறிக் கிடந்தன். வாகனங்கள் அப்பளமாக நொறுங்கிச் சிதறின. இதுவரை கண்டிராத மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் என்று அலறியது இந்திய அரசு. அமெரிக்காவில் செப்.11., 2001இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று பத்திரிகைகள் வர்ணித்தன.

மேலும் படிக்க …ஆப்கான்: அஞ்சி நடுங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் பலிகடாவாகும் இந்தியர்கள்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''இந்த ஆண்டு முதல் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணம் ரூ.32,500இல் இருந்து ரூ. 62,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது'' என்று கடந்த ஜூன் 6ஆம் தேதி அறிவித்தார்.

மேலும் படிக்க …சட்டபூர்வமாகி வரும் கட்டணக் கொள்ளை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரசு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதில் யார் யாருக்கோ நெருக்கடிகள் இருந்தாலும், உண்மையான நெருக்கடி சி.பி.எம். கட்சிக்குள்தான் தற்போது மையம் கொண்டுள்ளது. அக்கட்சியின் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, நாடாளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தின் மூலம், அக்கட்சியில் நிலவும் கோஷ்டி சண்டையும் இப்போது சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க …அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம் நாறிப்போனது சி.பி.எம்.இன் கோஷ்டி சண்டை

இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா, ஐ.பி. உள்ளிட்ட அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் காவிமயமாகியிருப்பதை மீண்டுமொருமுறை அம்பலப்படுத்திக் காட்டி விட்டன. இக்குண்டு வெடிப்புகள் நடந்த மறுநிமிடமே, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இதொய்பா, வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத் அல்ஜமாத்இஇஸ்லாம், இந்திய முஜாஹிதீன் உள்ளிட்ட சில முசுலீம் தீவிரவாத அமைப்புகள் மீது பழி போடப்பட்டது. குண்டு வைத்த சதிகாரர்கள் என விளம்பரப்படுத்தப்பட்டு, ஓரிரு முசுலீம்களின் உருவப் படங்கள் வெளியிடப்பட்டன. இராசஸ்தான் மாநில போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 500 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க …ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள் : புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்களை அந்தமான், மலேயா போன்ற கண்காணாத தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள், அன்றைய காலனியாதிக்க வாதிகள். அவ்வீரர்களை தாய்நாட்டில் இருந்து நிரந்தரமாய்ப் பெயர வைப்பதன் மூலம் எதிர்ப்புணர்வைக் கருகச் செய்து விடலாம் என்று கணக்குப் போட்டனர். அன்று மட்டுமல்ல, இன்றும் ஆளும் வர்க்கங்கள் உலகெங்கிலும் இதே போன்ற பல ஒடுக்குமுறைகளைத்தான் ஏவி வருகின்றன.

மேலும் படிக்க …மிதக்கும் சிறைச்சாலைகள்: அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய முகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற உடனேயே மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் பலர் கைகுலுக்கிப் பாராட்டித் தள்ளினார்கள். ""டைம்ஸ் நவ்'' ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ""சிங் இஸ் கிங்'' என்ற தலைப்புப் பாடலை ஆரவாரத்துடன் ஒளிபரப்பியது. சூழ்நிலையின் தாக்கத்தால், தானே ஒரு மிகப்பெரும் தலைவர் என்ற மாயை கூட மன்மோகன் சிங்கிற்குத் தோன்றியிருக்கலாம். ஆனாலும் அனல் பறக்கும் விவாதம் நடந்த இந்த நாடாளுமன்றக் கூத்துக்களுக்குப் பின்னால், அதன் முக்கியமான சூத்திரதாரிகள் இருவர் புன்னகைத்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங்கிற்கும், ஏன் எதிர்க்கட்சிகளுக்கும் கூடத் தெரியும்.

மேலும் படிக்க …தரகு வேலையே தேசிய அரசியல் : அணுசக்தி ஒப்பந்ததின் பின்னே இந்தியத் தரகு முதலாளிகளின் நலனும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புட்டு வைத்துவிட்டார், அமர்சிங்.

கடலூரில், பெண்களுக்காக இயங்கும் ஒரே கல்லூரியாக, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி உள்ளது. தொன்மை வாய்ந்த இக்கல்லூரியில் தொடக்கத்தில் 400500 பேராக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, தற்போது 2000 பேராக உயர்ந்துள்ளது. இதற்கேற்ப இக்கல்லூரியில் அடிப்படை வசதி மற்றும் போதிய அளவுக்குப் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இல்லை. இதுபற்றி மாணவிகளும், ஆசிரியர்களும் கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட்டு, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவ்வப்போது போராடியும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் படிக்க …வென்றது மாணவர் போராட்டம்! வீழ்ந்தது கல்லூரி முதல்வர் கொட்டம்!

நேபாள அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக அந்நாட்டு நேபாளி காங்கிரசு, நேபாள ஐக்கியக் கம்யூனிச (மார்க்கியலெனினிய) கட்சி மற்றும் நேபாளத்தில் உள்ள தேசிய சிறுபான்மை இனமான மாதேசி மக்களதிகார அரங்கம் ஆகிய பிற்போக்கு, சமரச, இனவாதக் கட்சிகள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டு, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டன.

மேலும் படிக்க …நேபாளம்: எதிர்ப்புரட்சி துரோகிகளின் இடைக்கால வெற்றி!

மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போயிருந்தால், இந்தியாஅமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு (123 ஒப்பந்தம்) என்ன நேர்ந்திருக்கும்? அவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் கால தாமதம் ஏற்பட்டிருக்குமேயொழிய, அவ்வொப்பந்தம் காலாவதி ஆகிப் போயிருக்காது. ஏனென்றால், பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் காங்கிரசு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

மேலும் படிக்க …இந்திய அணு உலைகள் பாதுகாப்பு ஒப்பந்தம் தங்க முலாம் பூசிய விலங்கு! : சர்வதேச அணுசக்தி முகாமை, இந்திய அணுசக்தித் துறையை அமெரிக்காவிற்காகக் கண்காணிக்கும் போலீசாகச் செயல்படும்

காசுமீர் மாநிலத் தலைநகர் சிறீநகருக்குத் தென்கிழக்கே 111 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக, 39.88 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை, சிறீஅமர்நாத் ஆலய வாரியத்திற்குச் சில நிபந்தனைகளுடன் கடந்த மே மாத இறுதியில் கை மாற்றிக் கொடுத்தது, காங்கிரசுக் கூட்டணி அரசு.

மேலும் படிக்க …இந்துமத வெறியர்களின் சதித்தனம் மண்ணைக் கவ்வியது

 மதுரையை அடுத்த யானைமலைஒத்தக்கடையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த எவர்சில்வர் பாத்திர உற்பத்தித் தொழில், தாராளமயஉலகமயமாக்கலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில், தற்போது ஏறத்தாழ 2000 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். அவர்களும் உரிய கூலி கிடைக்காமல் பட்டினியில் பரிதவிக்கின்றனர்.

மேலும் படிக்க …பட்டினிச் சாவுக்குத் தள்ளப்படும் பாத்திரத் தொழிலாளர்கள்

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை ஒட்டியுள்ள ஜம்போ பேக் என்ற தனியார் ஆலையில் பணியாற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளையை இவ்வாலையில் தொடங்கியதிலிருந்து நிர்வாகத்தின் பல்வேறு அடக்குமுறைக்கும் பணிநீக்கத்துக்கும் ஆளாகி வருகின்றனர். தொழிலாளர் துறையிடமும் தொழிற்சாலை ஆய்வாளரிடமும் நிர்வாகத்தின் சட்டவிரோதச் செயல்களை தொழிற்சங்கத்தின் மூலம் புகாராகக் கொடுத்து விளக்கியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பல ஆலைகளிலும் இதேபோல முதலாளிகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது.

மேலும் படிக்க …அடக்குமுறைக்கு எதிராகப் தொழிலாளர் ஆhப்பாட்டம்

 புரட்சிகர இயக்கத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியில் ஊக்கமுடன் செயல்பட்டு பகுதிப் பொறுப்பாளராகத் தன்னை உயர்த்திக்கொண்ட தோழர் ராஜேந்திரன், சிறுநீரகக் கோளாறினால் சிகிச்சை பலனின்றி கடந்த 19.07.08 அன்று தனது 25வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.

மேலும் படிக்க …தோழர் ராஜேந்திரன் அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு, இதுவரை கண்டிராத வகையில் பெட்ரோல்டீசலின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. எரி எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே இந்த கிடுகிடு விலையேற்றத்துக்குக் காரணம். பகற்கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களை விரட்டியடிக்கவும், விலையேற்றத்துக்குக் காரணமான தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை வீழ்த்தவும் அறைகூவி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …''பெற்ரோல் - டீசல் விலையேற்றம் : கொள்ளையடிப்பவர்கள் யார்?"

பட்டுப் போன நச்சு மரமானாலும், அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சியில் கோஷ்டிச் சண்டைகளுக்கு அளவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவும், பிழைப்புவாதத்தில் மூழ்கடிக்கவும் சிறுபான்மையினர் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு என்று சாதிமத அடிப்படையில் கட்சிக்குள்ளேயே தனி அணிகளை உருவாக்கி ஓட்டுப் பொறுக்குகிறது, அக்கட்சி.

மேலும் படிக்க …கழிசடை காங்கிரசு வழியில் சி.பி.எம் கட்சி

முதலாளிய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் வாக்காளப் பெருமக்களின் ஞாபக மறதி. வரலாற்று அனுபவங்களைத் தொகுத்து நினைவில் வைத்துக் கொள்வதுதான் அதற்கு மிகப் பெரிய ஆபத்து. அதனால்தான் அப்படி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பெருங்கதையாடலுக்கு எதிராகப் ''பின் நவீனத்துவம்'' என்ற அரசியல் தத்துவத்தையே முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள். 1980களின் இறுதியில் ஒருநாள் கூடியிருந்த நாடாளுமன்றமே திகைத்துப் போகும் வகையில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராசு ஒரு காரியம் செய்தார். திடீரென்று ஒரு பெட்டியைத் திறந்து நான்கு கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கொட்டினார். எம்.ஜி.ஆர். சாவுக்குப் பிறகு பிளவுபட்டுப் போன அ.இ.அ.தி.மு.க.வின் ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதா அணிக்குத் தாவுவதற்காக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மூலமாக ஜெயலலிதா தனக்குக் கொடுத்த இலஞ்சமென்று புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.

மேலும் படிக்க …அமெரிக்க சேவையில் அனைத்து கட்சிக் கூட்டணி

 மறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக் காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக  ஒப்பந்த  பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக  பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள். 

மேலும் படிக்க …தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

 கடந்த ஜூன் 4ஆம் தேதி பள்ளி கல்வித் துறையின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இருப்பினும், கட்டடம் கட்ட, நாற்காலி வாங்க, புதிய ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க, துப்புரவுப் பணிக்காக, 11ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி குரூப் மாற்றித்தர  எனப் பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 2 ஆயிரம், 3 ஆயிரம் என்று ஏழை எளிய மாணவர்களிடம் கட்டாயக் கட்டணக் கொள்ளை தொடர்கின்றது. 

மேலும் படிக்க …கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக...

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும்; பல்வேறுவிதமான பொருளாதாரப் பின்னணி கொண்ட உழைக்கும் மக்களைத் தற்பொழுது அச்சுறுத்தி வரும் பிரச்சினை, விலைவாசி உயர்வு. நாட்டை அச்சுறுத்துவதாகச் சொல்லப்படும் முசுலீம் தீவிரவாதம், நக்சல் பயங்கரவாதம் போன்ற ""பூதங்களை''விட, விலைவாசி உயர்வைத்தான், பொதுமக்கள் அபாயகரமானதாகப் பார்க்கிறார்கள்.

 

மேலும் படிக்க …விலைவாசி உயர்வு: பட்டினிக்குள் தள்ளப்படும் தமிழகம்

 மைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழு, தனது பரிந்துரைகளை மைய அரசிடம் அளித்திருக்கிறது. அரசு ஊழியர் சங்கங்கள் ஊதியக் குழுவின் அறிக்கையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குச் சாதகமான, ஒருதலைப்பட்சமான அறிக்கை எனக் குற்றஞ்சுமத்தியுள்ளன. 

மேலும் படிக்க …ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் : ஊதிய உயர்வு விடுதலை தருமா?

 சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான். 

மேலும் படிக்க …சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்

 மக்கள் போராட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவுவதும், முன்னணியாளர்களைப் பழிவாங்குவதும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் வாடிக்கை. அதிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரிசா, சட்டிஸ்கர் மாநிலங்களே இதற்கு இரத்த சாட்சியங்களாக உள்ளன. உழைக்கும் மக்களின் போராட்ட நிர்பந்தத்தால், தற்காலிகமாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, போராடிய மக்களை எப்படியெல்லாம் பழிவாங்கி ஒடுக்குவார்கள், போராட்ட ஒற்றுமையை எப்படியெல்லாம் சீர்குலைப்பார்கள் என்பதற்கு தமிழகம் புதிய சாட்சியமாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில், மதுரை மாவட்டம் வலையங்குளம்  எலியார் பத்தி முதலான கிராமங்களில் போலீசும் அதிகார வர்க்கமும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலே இதை நிரூபித்துக் காட்டுகிறது.

மேலும் படிக்க …தமிழக போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சி

 மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள உத்தப்புரத்தில் கொடிக்கால் பிள்ளை எனும் சிறுபான்மை ஆதிக்க சாதியினர், ஊருக்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகக் கட்டி இருந்த சுவர், கடந்த 18 ஆண்டுகளாக ஆதிக்க சாதித் திமிரின் அடையாளமாய் இருந்து வந்தது. 

மேலும் படிக்க …உத்தப்புரம்: சாதிவெறியர்களுக்குச் சாமரம் வீசிய ஓட்டுக் கட்சிகள்

 ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.

மேலும் படிக்க …அறியப்படாத அமெரிக்கா

 கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு இந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரம் நாட்டின் பணவீக்கம் 11.05 சதவிகிதத்தை எட்டிவிட்டது. உணவு தானியம் உட்பட விவசாய விளைப்பொருட்கள், இடு பொருட்கள், இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென ஏறிக் கொண்டே போகின்றன.  இவ்வாறு பணப்புழக்கம் அதிகமாகி அதாவது, பொருட்களின் தேவைகேட்பு மிகமிக அதிகமாகி, அத்தேவைக்கேற்ப உற்பத்தியும், பொருட்களின் வரத்தும் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டு நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து விடவில்லை. அதாவது, இப்போது மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உணவு எண்ணெய், காய்கறிகள் மற்றும் சர்க்கரை, சிமெண்ட், கட்டுமான இரும்புக் கம்பிகள் போன்றவற்றின் உற்பத்தி குறைந்து, சந்தையில் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் ஏற்பட்டு அவற்றின் விலைவாசி தாறுமாறாக எகிறிப் போய் விடவில்லை.

மேலும் படிக்க …விலைவாசி உயர்வு : காங், பா.ஜ.க.வின் வில்லத்தனங்கள்

put_oct-2007.jpg

அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் அடியாளாகவும் அடிமையாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. நமது அணு மின்நிலையங்களையும் ÷தாரியத்தைப் பயன்படுத்தி சுயசார்பாக நம் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் அணு தொழில்நுட்பத்தையும் முடக்கவும் திருடவும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழிசெய்து கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க …"அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிவெறிவோம்! அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தைக் கிழத்தெறிவொம்!!" தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்

 அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு இதுவரை காணாத வகையில் பெட்ரோல்டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், இந்த விலையேற்றம் தவிர்க்கவியலாதது என்று கூறி நியாயப்படுத்துகிறது அரசு. தேவையைக் காட்டிலும் 10% உற்பத்தி குறைந்துள்ளது; இப்பற்றாக்குறையின் காரணமாகவே பெட்ரோல்டீசலின் விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது என்று கூறுவது கடைந்தெடுத்த பொய். எண்ணெய் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்.

மேலும் படிக்க …"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: கொள்ளையடிப்பவர்கள் யார்?"

 "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணமேடையில் வை'' என்பதைப் போல நடந்து கொள்கிறது, அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமையான மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசு. நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு ஜூன் மூன்றாம் வாரம் பணவீக்கம் பதினொரு சதவீதத்துக்கும் மேலே எகிறி விட்டது. இதனால் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், விவசாய இடுபொருட்கள் முதல் இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலிய எரிசக்திப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் நாளும் எகிறிக் கொண்டே போகிறது.

மேலும் படிக்க …அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?

sep_2007.jpg

இந்தியா அமெரிக்கா இடையே, அணுசக்தி கூட்டுறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக கையெழுத்தாகியுள்ள ""123 ஒப்பந்தம்'', காங்கிரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை; அந்த ""அடியாருக்கு அடியாராக''ப் போலி கம்யூனிஸ்டுகள் செயல்படுவதையும் நாறடித்து விட்டது.
மேலும் படிக்க …அணுசக்தி ஒப்பந்தம்: அம்மணமானது இந்திய தேசியம்!

 அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நடத்திவரும் ஈராக் போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் கருத்தை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா என்பவர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதும், அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது. 

மேலும் படிக்க …பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி!

 மனித குல விரோதி இட்லரையே விஞ்சும் வகையில், இரண்டாம் உலகப் போர் முடிந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த மிகக் கொடிய பயங்கரவாத மிருகம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம். முதலாளித்துவ வரலாற்றாளர்களால் மூடி மறைக்கப்பட்ட இந்த உண்மையை, தென்கொரியாவில் தோண்டத் தோண்ட வெளிவரும் படுகொலைக் குழிகளின் எலும்புக் கூடுகளே நிரூபித்துக் காட்டுகின்றன. 

மேலும் படிக்க …அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்

 அண்டை நாடான நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் தலைமையில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, புதிய இடைக்கால அரசை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான திசையில் அந்நாடு அமைதியான முறையில் பயணிப்பதாகத் தோன்றினாலும், அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.

மேலும் படிக்க …நேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்

 ஒரிசாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த தின்கியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம் பட்னா. இரும்பு உற்பத்தி நிறுவனங்களிலேயே உலகில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான போஸ்கோ, 48 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அங்கு ஓர் இரும்புத் தொழிற்சாலையையும், ஒரு துறைமுகத்தையும் கட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்குள்ள மிகவும் வளமான கடற்கரைப் பகுதி நிலங்களை ஆக்கிரமிக்க அந்த நிறுவனம் முயற்சித்து வருகிறது.


 தலைமுறை தலைமுறையாக பட்னாவில் வாழ்ந்து வரும் மக்கள்,  தங்களது சொந்த நிலத்தை விட்டே விரட்டியடித்து, தங்களது வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இந்தத் திட்டத்தை  எதிர்த்து, தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒரிசா மாநில அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, மையமாநில அரசுகளின் உதவியுடன் அப்பகுதியில் நிலங்களை அபகரிக்க போஸ்கோ நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாகப் பல தகிடுதத்தங்களைச் செய்த போதும், அக்கிராம மக்களின் உறுதியான போராட்டத்தின் காரணமாக, அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

மேலும் படிக்க …அரசின் முற்றுகை தூள்! தூள்!!

 சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், ஆவணப் படத் தயாரிப்பாளரும், குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுள் ஒருவருமான அஜய் தாச்சப்புள்ளி கங்காதரன் என்பவர், மே மாதம் 5ஆம் தேதி, சட்டீஸ்கர் மாநில சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது அரசுத் துரோகக் குற்றச்சாட்டும்; தடை செய்யப்பட்டுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு)  உடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்திய ஆளும் வர்க்கம் மனித உரிமைகளை மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதற்கு இந்தக் கைது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

மேலும் படிக்க …கருத்துரிமைக்குக் கல்லறை

பொதுவாக இடுகாடுகளில் எந்தவொரு கல்லறையுமே, புதைக்கப்பட்டவர்களின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதியுடன்தான் காணப்படும்; அல்லது அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பது யார் என்ற விவரமாவது உறவினர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஆயிரக்கணக்கான பிணங்கள் வெறுமனே எண்களை மட்டும் அடையாளமாகக் கொண்டு புதைக்கப்பட்டு வரும் கொடுமை காஷ்மீரில் நடந்து வருகிறது.


 காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ரெகிபோரா கிராமத்தின் இடுகாட்டில்தான் இவ்வாறு எண்கள் மட்டுமே கல்லறைகளின் அடையாளமாக உள்ளன. கல்லறைகளில் புதைக்கப்பட்டிருப்பது யார் யார் என்பது அந்தக் கிராமத்தில் இருப்பவர்களுக்கோ தெரியாது. "தியாகிகளின் கல்லறை' என்று அழைக்கப்படும் இந்த இடுகாட்டில் ஜூன் 26, 1995 அன்று நான்கு ""எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின்'' பிணங்களைப் போலீசார் புதைக்கக் கொண்டு வந்ததிலிருந்து இது நடைமுறையில் உள்ளது. இன்று வரை ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் "பாகிஸ்தான் பயங்கரவாதிகள்' என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டு,  இங்கு புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க …காசுமீர் : புதைக்கப்பட்ட உண்மைகள்

 ஒன்றின் கீழ் ஒன்றாக அல்லது ஒன்றின் மேல் ஒன்றாகப் பல படி வரிசை சாதிய அடுக்குகளை கொண்ட இந்திய சமூக அமைப்பில், ஒரு குறிப்பிட்ட சாதி சில சாதிகளுக்குக் கீழான சாதியாக இருந்தாலும், வேறு சில சாதிகளுக்கு மேலான சாதியாகவும் இருக்கிறது. அதாவது, பல சாதிகள் கீழ் சாதிகள் என்று வரையறுத்து வைக்கப்பட்டிருந்தபோதும், அவற்றிற்கு கீழாகப் பல சாதிகள் வைக்கப்பட்டிருப்பதால் அச்சாதிகள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் படிக்க …உள்ஒதுக்கீடு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்

 

நவம்பர் 7, 1917. இப்பூவுலகின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர்ந்த நாள். ஏகாதிபத்தியம் என்பது காகிதப்புலியே என நிரூபித்துக் காட்டி காலனிய நாட்டு மக்களின் மனங்களில் விடுதலைக் கனலை மூட்டிய நாள். ரஷ்யாவில் பாட்டாளிகளின் பஞ்சைப் பராரிகளின் முதல் சோசலிச அரசு உதித்த அந்த நவம்பர் புரட்சிக்கு இன்று 90ஆவது ஆண்டு நிறைவுநாள்.

மேலும் படிக்க …"கம்யூனிசமே வெல்லும்!'' புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளுரை

 ஆபாச சினிமாப் பாடல்கள் ஒலிபெருக்கிகளில் எங்கும் எதிரொலிக்க, அனைத்துலகப் பாட்டாளி வர்க்க போராட்ட நாளான மே நாளை, இன்னுமொரு கேளிக்கை நாளாக்கிப் போலி கம்யூனிஸ்டுகளும் ஓட்டுப் பொறுக்கிகளும் கூத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், ""பன்னாட்டுக் கம்பெனிகளையும் அம்பானி  டாடா  பிர்லாக்களையும் அடித்து வீழ்த்துவோம்! தனியார்மயம்  தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்த வேறு வழி இல்லை; இல்லவே இல்லை!'' என்ற முழக்கத்துடன் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மறுகாலனியாதிக்க எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக மே நாளைக் கடைபிடித்தன.

மேலும் படிக்க …""தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்துவோம்!''

 தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்துத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி வெளியிட்டு வரும் அறிக்கைகள், தமிழகத்தில் மாபெரும் தொழிற்புரட்சி நடந்து வருவதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவினுள் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் இருப்பதும்; கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில், தமிழகம் முன்னணியில் இருப்பதும் என்னவோ உண்மைதான். எனினும், இந்திய மாநிலங்களிலேயே, வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் வேலை செய்யும் திறன் படைத்தோரில் ஏறத்தாழ 10 சதவீதம் பேர் வேலை வாய்ப்பற்று இருப்பதாகவும்; தேசிய சராசரியைவிட இது அதிகம் என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

மேலும் படிக்க …சிறு தொழில்களின் மௌனச் சாவு

 இந்தியப் பெருமுதலாளிகள் கோடிகோடியாய்ச் செல்வத்தைக் குவித்து, உலகப் பெருமுதலாளிகளின் தர வரிசையில் முக்கிய இடத்தைப் பிடிக்குமளவுக்கு முன்னேறி விட்டார்கள்; ஆசியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவி அம்பானி சாதனை படைத்துள்ளார்; பிரிட்டனின் எஃகு ஆலையை டாடா கைப்பற்றி விட்டார்; இந்தியப் பெருமுதலாளிகளின் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் தனியார்மயம்  தாராளமயம்; அரசின் தலையீடுகள்  கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தால் தனியார் முதலாளிகள் தமது தொழில் திறமையால் பெருமளவு முன்னேறிச் சாதிக்க முடியும்; தொழிலும் வர்த்தகமும் விரிவடைந்து இந்திய நாடு வல்லரசாக ஒளிரும்  இப்படி முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளும் பத்திரிகைகளும் அரசின் தலையீடற்ற தனியார்மயத்தை வியந்து துதிபாடுகின்றன.

மேலும் படிக்க …இந்தியத் தரகு முதலாளிகள் : உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா?

 வாக்காளர்கள் ஓட்டுப் போடவிடாமல் அடித்து விரட்டப்பட்டு, குண்டர்கள் கள்ள ஓட்டுப் போட்டனர். வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, கொலைகள், இதுவரை கண்டிராத வன்முறைகள் — இவையெல்லாம் அண்மையில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின் போது நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள் அல்ல. நாடாளுன்ற  சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை கட்டிக் காக்கப் போராடி வருவதாகக் கூறிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி ஆளும் மே.வங்கத்தில், கடந்த மே மாதத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலின் போது நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள்தான் இவை. இந்த வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள், வலதுசாரி பிற்போக்கு காங்கிரசுபாரதிய ஜனதாதிரிணாமுல் காங்கிரசு கட்சியினர் அல்ல. மக்களுக்கான கட்சியாக மார்தட்டிக் கொள்ளும் "இடதுசாரி' சி.பி.எம். கட்சிக் குண்டர்கள்தான் மக்களுக்கு எதிராக இந்த வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க …மேற்கு வங்கப் பஞ்சாயத்துத் தேர்தல் : 'வன்முறையே வெல்லும!"; - "மார்க்கிஸ்டு"களின் தேர்தல் கொள்கை

 துள்ளித் திரியும் வயதில் பள்ளிக்குச் சென்றும், ஒத்த வயதினருடன் ஆடிப்பாடியும், கோலி, பம்பரம் விளையாடிக் கொண்டும் இருக்க வேண்டிய சிறுவர்கள் பலரின் இளமை, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, அரை சாண் வயிற்றுக்காகக் குப்பை பொறுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


 சென்னை மாநகர் ஒரு நாளைக்குக் கழித்துத் தள்ளும் 3500 டன் குப்பைகளைத் தாங்கிக் கொண்டு ஊருக்கு வடக்கே கொடுங்கையூரும், தெற்கே பெருங்குடியும் குப்பை மலைகளாய் உயர்ந்து கொண்டே செல்கின்றன. அன்றாடச் சாப்பாட்டுக்காக இந்தக் குப்பைக் குவியலைக் கிளறி, அதில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், உலோகத் துண்டுகளைப் பொறுக்கி வாழும் நிலையில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இருக்கின்றனர்.

மேலும் படிக்க …குப்பையாகிப் போன வாழ்க்கை : குப்பையைக் கிளறித் தினியைத் தேடும் கோழியைப் போல வாழும் சிறுவர்களின் அவலக் கதை.

 நக்சல்பாரி புரட்சிகர அமைப்பான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)ஐச் சேர்ந்த தோழர் நவீன், தமிழகப் போலீசாரால் கடந்த ஏப்ரல் 19 அன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்டார். ""ஏப்ரல் 19 அன்று, கொடைக்கானல் அருகேயுள்ள வடகவுஞ்சியில், அதிரடிப் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்; அப்பொழுது அந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஏழெட்டு பேர் கொண்ட நக்சலைட்டு குழுவினர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அதிரடிப் படையினர் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் திருப்பிச் சுட்டனர். ஒருமணி நேரம் நடந்த இம்மோதலில், நவீன் பிரசாத் கொல்லப்பட, மற்ற ஏழு நக்சலைட்டுகள் தப்பியோடி விட்டனர்'' என இக்கொலை பற்றி போலீசார் சொன்ன திரைக்கதையையே, கிளிப் பிள்ளை போல அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க …நவீன் பிரசாத் கொலை : தமிழகப் போலீசின் நரபலி

 இந்திய பாதுகாப்புத் துறை, கடந்த மே7ஆம் தேதியன்று அக்னி3 என்ற ஏவுகணையை விண்ணில் ஏவிப் பரிசோதனை நடத்திய முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, அக்னி3 ஏவுகணை அடுத்த ஆண்டிற்குள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியாவிடம் ஏற்கெனவே உள்ள அக்னி1 மற்றும் அக்னி2 ஏவுகணைகளைவிட, அக்னி3 ஏவுகணை அதிகத் தொலைவு ஏறத்தாழ 3,500 கி.மீ.சுற்றளவில் உள்ள இலக்குகளைச் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த மூன்று வகையான ஏவுகணைகளுமே அணுகுண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. முதலிரண்டு ஏவுகணைகளைக் கொண்டு பாகிஸ்தானின் உள்பகுதிகளைக் கூடத் தாக்க முடியுமென்றால், அக்னி3 ஏவுகணையோ சீனாவைக் குறி வைக்கிறது.

மேலும் படிக்க …அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா?

குற்றவாளியே நீதி வழங்கும் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும்? அந்தத் திருப்பணியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக நேர்த்தியாகச் செய்து வருகிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முசுலீம் படுகொலை கலவரத்தை விசாரிக்க, மோடி நானாவதி கமிசனை அமைத்தார். அப்படுகொலை நடந்து முடிந்து ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டபிறகும், அந்த கமிசன் விசாரணை என்ற பெயரில் மாவு அரைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அக்கமிசனைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான கே.ஜி. ஷா என்பவர் சமீபத்தில் இறந்து போய்விட்டார்.

மேலும் படிக்க …நீதி கொன்ற மோடி

 கடந்த மே மாத மத்தியில், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள ஓசூர் பகுதியில் நடந்துள்ள விஷச் சாராயச் சாவுகள் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 18.5.08 அன்று பின்னமங்கலம் கிராமத்தில் மட்டும் 9 பேர் மாண்டு போயுள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள பல கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் சாராயச் சாவுகள் அதிகரித்து மொத்தத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். கணவனை இழந்த மனைவி, பெற்றோரை இழந்த குழந்தைகள், மகனை இழந்த தாய் என இவ்வட்டாரம் மாளாத் துயரத்தில் விம்மிக் கொண்டிருக்கிறது. ஓசூரை அடுத்த கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் விஷச் சாராயத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 170ஐத் தாண்டி விட்டது.

மேலும் படிக்க …சாராயச் சாவுகள் : கொலைகாரர்கள் யார்?

கோடை வெய்யில் தமிழக மக்களை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, அதையும் விஞ்சும் வகையில் அனலைக் கக்கி தி.மு.க. அரசுக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்தி வருகிறார், பா.ம.க. நிறுவனர் இராமதாசு.


 விமான நிலைய விரிவாக்கம், துணை நகரங்கள் அமைப்பது, முல்லைப் பெரியாறு  காவிரி  பாலாறு விவகாரங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக நிறுவனங்களின் நுழைவு முதலானவற்றுக்கு எதிராக அவ்வப்போது அறிக்கை விடுத்து, முதல்வர் கருணாநிதியுடன் லாவணி நடத்திக் கொண்டிருந்த அவர், இப்போது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகவும் தமிழக அரசின் தொழிற்கொள்கைக்கு எதிராகவும் சீறுகிறார். கடந்த மே மாதத் தொடக்கத்திலிருந்து அடுத்தடுத்து அறிக்கைகள் விடுத்து, அடுத்த கட்டப் போரைத் தொடங்கி விட்டார்.

மேலும் படிக்க …தொழில் வளர்ச்சி : கருணாநிதியின் காரியவாதம் இராமதாசின் கவாச்சிவாதம்

 கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தல்களில் பாரதிய ஜனதா அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனாலும், பா.ஜ.க., காங்கிரசின் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிபெற்ற ஆறு உறுப்பினர்களின் ஆதரவோடு தென்மாநிலங்களில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்து விட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் பார்ப்பன இந்து மதவெறி, கன்னட இனவெறி, லிங்காயத் மற்றும் வொக்கலிகா ஆகிய ஆதிக்க சாதிவெறி அடிப்படையிலான வலுவான மத, இன மற்றும் சாதி அரசியல் அமைப்பை அக்கட்சி கட்டி வளர்த்திருப்பதுதான். இத்தகைய அரசியல் அமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற இந்து மதவெறி அமைப்புகளாகும்.

மேலும் படிக்க … கர்நாடகத் தேர்தல் முடிவு: குஜராத் பாணி "மோடி'த்துவாவுக்குக் கிடைத்த வெற்றி!

04_2008.jpg

""இப்படிக் கடன் தள்ளுபடி ஆவது, பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல; கடன் வாங்கியவர்களின் பொறுப்புணர்வு வளர்வதற்கும் உகந்தது அல்ல. இன்று கடன் வாங்கினால், நாளை அது தள்ளுபடி என்ற வழக்கம், ஊதாரித்தனத்தையும் நேர்மையின்மையையும் வளர்க்கும்; பொருளாதாரத்தையும் நசுக்கும்'' என துக்ளக் ""சோ'' எழுதுகிறார்.

மேலும் படிக்க …கொள்ளைக் கூட்டத்தின் ஒப்பாரி

03_2005.jpgஏழை எளிய மக்கள் என்ன, வேண்டாத கழிவுப் பொருட்களா? நகருக்கு வெளியே கொண்டு போய்க் குவிக்கிறது, அரசு!

 

சிங்காரச் சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு வாழும் உரிமை இல்லையா? இரண்டாண்டுகளில் 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 மைல்களுக்கு அப்பால் (துரைப்பாக்கத்தில்) குப்பையாகக் கொட்டியது, அரசு.

 

மேலும் படிக்க …அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு! இதோ ஒரு சாட்சியம்!

03_2005.jpgதிருச்சி நகரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயணச் சீட்டு பெயரளவில் வழங்கப்பட்டுள்ளதே தவிர, அதைப் பயன்படுத்தும் வகையில் பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பள்ளி நேரங்களில் வரும் பேருந்துகளெல்லாம் அளவுக்கு மீறிய பயணிகளோடு திணறிக் கொண்டு வருவதும், மாணவர்களை ஏற்றாமல் செல்வதும் தொடர்கிறது. இதனால் மாணவர்கள் ஜன்னல் கம்பியையும் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு படிகளில் தொங்கியபடியும் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். கிராமப்புற பேருந்துகளில் மாணவர்கள் மேற்கூரையில்தான் பயணம் செய்ய முடிகிறது. நெரிசலில் முட்டி மோதி உள்ளே ஏறும் மாணவர்களை சில ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடுவதும் தொடர்கிறது. சில

மேலும் படிக்க …"பாஸ்" உண்டு, "பஸ்" இல்லை! பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

03_2005.jpg'சைக்கிள் பாகங்களின் பெயர்கள் எல்லாம் தமிழா?" 'ஹாண்டில் பார், செயின், ரிம், டயர், டியூப்" என்பதெல்லாம் தமிழா? அது தமிழா? இது தமிழா? என்று எகிறுகிறார் ஜெயா. தமிழ் மொழியைத் துச்சமாக மதிக்கும் அவரின் திமிரைப் புதிதாக விளக்க வேண்டியதில்லை. ஆனால், இராமதாசின் தமிழ்ப் பற்றோ மலிவான நகைச்சுவை நாடகம் போல நடக்கிறது.

 

இப்போது தைலாபுரத்தில் (ராமதாசின் பண்ணை வீட்டில்) சுத்தத் தமிழ் வாசனைதான் வீசுகிறது. 'எனது வீட்டில் ராஜா என்று ஒரு பையன் இருக்கிறான். அவனை இப்போது 'ராசா" என்றுதான் அழைக்கிறேன். அதுபோல்

மேலும் படிக்க …அட்டைக்கத்திச் சண்டை

03_2005.jpgஅஅம்மா! ஆஆமாம்! இந்த இரண்டெழுத்து வார்த்தைகளுக்கு மேல் ஏன் தமிழ்? எதற்கு தமிழ்? என்று தனது "கான்வென்ட்' கொழுப்பைத் தமிழர்களிடம் காட்டுகிறார், பார்ப்பன பாசிச ஜெயலலிதா.

 

பா.ம.க. தலைவர் இராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவனும் சேர்ந்து, "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்' என்ற தங்கள் கூட்டமைப்பின் சார்பில், 'தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது. அப்படி ஆங்கிலப் பெயர் வைத்தால் போராட்டம் நடத்துவோம்" என்று 'தமிழ் மீட்புத் தொடர் போராட்டங்களுக்கு" பிறகு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டனர்.

மேலும் படிக்க …இராமதாசு- திருமாவளவன் வழங்கும் "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்" புத்தும் புது காப்பி

03_2005.jpgபொறுக்கி அரசியலுடன் கலந்த கிரிமினல் அரசியலானது, தமிழகத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடித்தனமாக வேர்விட்டுப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகில் ராஜகம்பீரம் என்ற ஊரில், ஊராட்சி மன்றத் தலைவரான சேக் முகமது அடித்துவரும் கொட்டமும் ரவுடித்தனங்களுமே இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன.

மேலும் படிக்க …திடீர்ப் பணக்கார அரசியல் ரவுகளின் பிடியில் ராஜகம்பீரம்

03_2005.jpgபயங்கரவாதத்தை அரசு பயங்கரவாதத்தால் ஒழித்துவிட முடியாது. ஈராக்கின் ஃபலூஜா மற்றும் பிற நகரங்களின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அப்பாவிக் குழந்தைகளைக் கொன்றொழித்த அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான், உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!" இப்படி வெளிப்படையாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலேயே இடியென முழங்குகிறார், வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவெஸ்.

மேலும் படிக்க …அமெரிக்கா ஏகாதிபத்தியம் காகிதப் புலிதான் : வெனிசுலா மக்களின் போராட்ட அனுபவங்கள் '

03_2005.jpgசுனாமி பேரலைகளால் தாக்கப்பட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், இன்று சொந்த நாட்டில் அகதிகளாகக் கைவிடப்பட்ட மீனவ மக்களின் துயரத்தைப் பிரதிபலிக்கின்றன. சுனாமி பேரழிவைத் தொடர்ந்து உடனடியாக நிவாரணப் பணிகளில் கடமையாற்றிய ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் நிரந்தர மறுவாழ்வுக்கான போராட்டப் பணிகளைத் தொடங்கினர். நிவாரணப் பணிகளில் அரசு காட்டி வரும் அலட்சியம், சோறு துணி கீற்றுக் கொட்டகையுடன் நிவாரணப் பணிகளை நிறுத்திக் கொண்ட வக்கிரம், கடலோர மக்களின் நிரந்தர மறுவாழ்வைப்

மேலும் படிக்க …போராடாமல் வாழ்வில்லை! - அறைகூவியது மாநாடு எதிரொலிக்கிறது போராட்டம்

03_2005.jpgஅண்டை நாடான நேபாளத்தில், கடந்த பிப்ரவரி முதல் நாளன்று, மன்னர் ஞானேந்திரா தனது அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், பெயரளவுக்கு நீடித்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையின் தலையைச் சீவி, உயிரைப் பறித்து சவக் குழிக்கு அனுப்பி விட்டார். ஏற்கெனவே, 2001இல் அவசர நிலையை அறிவித்தும் 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்தும் பிரதமர் தியோபா தலைமையிலான தற்காலிக பொறுப்பு அரசு தொடங்கி வைத்த சர்வாதிகார சதிராட்டத்தை இப்போது மன்னர் முழுவீச்சில் முழுமைப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கியும், செய்தி ஊடகங்களின் குரல் வளையை நசுக்கியும், மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்தும், காலவரையின்றி அவசரநிலையை அறிவித்தும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் கொக்கரிக்கிறார்.

மேலும் படிக்க …நேபாளத்திலஆட்சி கவிழ்ப்பு : சூழ்ச்சி- சதிகளில் மேலாதிக்கவாதிகள், புரட்சிப் போரில் மாவோயிஸ்டுகள்

03_2005.jpgநிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழனின் வீர விளையாட்டாகச் சித்தரித்து பல வண்ணத்தில் அட்டை; ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மலர்க்குழுவில் அங்கம் வகிக்க, தாமே தயாரித்த பொங்கல் சிறப்பிதழுக்கு தமக்குத்தாமே நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்ளும் சுயதம்பட்டம்; சுனாமியால் பல லட்சம் தமிழர்கள் வாழ்விழந்து வேதனையில் பரிதவிக்கும் போது, எவன் செத்தாலென்ன? என்று கோலம் போட்டு பானையை அடுப்பிலேற்றி பொங்கல் வைத்துக் கொண்டாடச் சொல்லும் காசி ஆனந்தனின் வக்கிர உணர்ச்சிக் கவிதை; தமிழ் தேசியப் புரட்சிக்கு வழிகாட்ட ஒரு குறிப்பிட்ட தத்துவமோ, சித்தாந்தமோ, ஒரே கொள்கைக்கான அமைப்போ சாத்தியமில்லை, பல தரப்பட்ட சித்தாந்தங்களும் பலதரப்பட்ட அமைப்புகளும் கொண்ட பன்மைத்துவமாகவே தமிழ் தேசியம் இருக்கும் என்று நவீன

மேலும் படிக்க …அது வேறு, இது வேறு... நீங்கள் யாரு?

03_2005.jpgவேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு ஆலைமூடல், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக நகர்ப்புற வர்க்கத்திடம் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக சந்தையின் அளவு விரிவடையவில்லை. இந்தப் பின்னணியில், நகர்ப்புறத்தில் புதிய நுகர்வோர்களை கவர்ந்திழுக்க முடியாமல் பன்னாட்டு நிறுவனங்கள் திணறுகின்றன. பழைய வாடிக்கையாளர்களையே மீண்டும் குறிவைத்து விற்பனைக்கான தாக்குதலைத் தொடுக்கின்றன. பல்வேறு விளம்பரங்கள் மேற்குறிப்பிட்ட விசயத்தை உறுதிப்படுத்துகிறது.

மேலும் படிக்க …வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்

03_2005.jpgஇந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பொழுது, நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பது போன்ற வடிவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. சனவரி 1, 2005க்குள் புதிய வடிவுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட வேண்டும் என்றும் உலக வர்த்தகக் கழகம் காலக்கெடு விதித்திருந்தது.

 

நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், விதைகள் ஆகியவற்றின் மீது வடிவுரிமை கோர முடியாது.

மேலும் படிக்க …வடிவுரிமைச் சட்டத் திருத்தம் இயற்கைச் செல்வங்களுக்கும் வந்த ஆபத்து

03_2005.jpgஆந்திர மாநில அரசாங்கத்துக்கும், இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்றோ, அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்றோ எந்தத் தரப்புக்கும் நம்பிக்கை இருந்ததில்லை.

 

இரு தரப்பும் சண்டை நிறுத்தம் அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அது ஒரு குறுகிய காலமே அமலில் இருந்தது. பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் நடக்கும்போதே சண்டை நிறுத்தத்தை மீறி, நக்சலைட்டுப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்வதில் போலீசும், இரகசியக் கொலைபடைக் குழுக்களும் இறங்கிவிட்டன. பதிலடி கொடுக்கும் முகமாக, இ.க.க. (மாவோயிஸ்ட்)களும் போலீசு உளவாளிகளையும், துரோகிகளையும் அழித்தொழிப்பதைத் தொடங்கிவிட்டனர்.

மேலும் படிக்க …நக்சல்பாரி புரட்சியாளர்கள் - ஆந்திர அரசாங்கம் சண்டை நிறுத்தம் - பேச்சு வார்த்தை கானல் நீர் தாகம் தீர்க்காது

03_2005.jpgசுனாமி பேரலை ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஏழை நாடுகளைத் தாக்கிய பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது பண்ணையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உலகையே உலுக்கிப் போட்ட இந்தத் துயரமான சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிறகும்கூட, புஷ் தனது ஓய்வை ரத்து செய்யவில்லை. மூன்று நாட்கள் கழித்துதான் இரங்கல் செய்தியொன்றை வாசித்துவிட்டு, ஒன்றரை கோடி அமெரிக்க டாலரை (ஏறத்தாழ 75 கோடி ரூபாய்) நிவாரண நிதியாகக் கொடுப்பதாக அறிவித்தார், புஷ்.

மேலும் படிக்க …சுனாமி துயரம் ஏகாதிபத்திய தந்திரம்

03_2005.jpgஆங்கில மாதக் கணக்குப்படி ஜனவரி, பிப்ரவரி, அதற்கு அப்புறம் மார்ச்(வரி). ஆங்கிலத்தில் மார்ச்சுவரி என்றால் பிணக்கிடங்கு என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்திலதான் புதுப்புது வரிகள் போடும் அரசு வரவு செலவு அறிக்கையும் வருகிறது. அதாவது "வாட்' வரி, சேவை வரி போன்ற வரிச்சுமையேற்றியே மக்களை போ (மார்ச்) பிணக்கிடங்குக்கு என்று தள்ளிவிடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.

 

மேலும் படிக்க …வரி விதிப்புகளில் நரித்தனங்கள்!

03_2005.jpgஅரசு அலுவலகத்தில் அலுவலக வேலை மட்டுமே பார்க்க வேண்டும்! சாமி படங்களை மாட்டிக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலக நேரத்தில் பூஜை, புனஸ்காரம் என்று புரோகிதர்கள் போல் திரியக்கூடாது" என்று ஒரு அரசு ஊழியர், தனது சக ஊழியர்களை வலியுறுத்துவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

 

'ஆமாம் தவறுதான்! அதுவும் மாபெரும் தவறு!" என்று அவ்வூழியரைச் சித்திரவதை செய்து, சிறை பிடித்தது அரசு எந்திரம்!

மேலும் படிக்க …அரசு அலுவலகமா? இந்துக் கோயிலா? நியாயத்தைக் கேட்ட ஊழியருக்குச் சித்திரவதை! சிறை தண்டனை! '

04_2005.jpgவிரக்தி வேதனை துயரம்; தற்கொலை! ஒருவரல்ல இருவரல்ல; 40க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து வாழ்விழந்து துயரம் தாளாமல் கடந்த ஈராண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த டிசம்பரில் திண்டிவனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் உடலெங்கும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு மாண்டு போனார். நான்கு குழந்தைகளுடன் அவரது குடும்பம் பரிதவிக்கிறது. ஆறுமுகம் குடும்பத்தைப் போலவே 10இ000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவலத்தில் உழல்கின்றன.

மேலும் படிக்க …இந்த அநீதிக்குப் பழிதீர்ப்பது எப்போது?

04_2005.jpg· மைய அரசின் புதிய வரிவிதிப்புகளின் பின்னே மறைந்துள்ள உண்மையான நோக்கங்களை தலையங்கக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. மறைந்த ஓவியர் உதயனின் தூரிகையில் உருவான அற்புதமான அட்டைப்படக் கேலிச் சித்திரம் அவரது நினைவை என்றென்றும் நமது மனங்களில் நிறுத்தும். தன்னார்வக் குழுக்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நோக்கங்கள் பற்றி தெளிவில்லாமல் இருந்த எனக்கு ""வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள்'' என்ற கட்டுரை பேருதவியாக அமைந்தது.
புரட்சிக் கவிநேசன் தேரெழுந்தூர்
மேலும் படிக்க …வாசகர் கடிதம்

04_2005.jpgகடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தின் மக்களுடைய போக்குவரத்துக்கு இதயமாக இருந்த மணிமுத்தாறு பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையின் வெள்ளப் பெருக்கில் சிதைந்து தன்னுடைய 125 ஆண்டுகாலச் சேவையை முடித்துக் கொண்டது. அது முதல் இந்நகர மக்கள் போக்குவரத்துக்குப் படும் அவதி சொல்லி மாளாது!

 

"அவசரத்திற்கு' என்று இரு சக்கர வாகனங்களில்கூடச் செல்ல முடியாத மரப்பாலம் ஒன்றைக் கட்டிய ஆளும் கும்பல் "செலவு 7 லட்சம் ரூபாய்'

மேலும் படிக்க …உயிர் குடிக்கும் தரைப்பாலம்: ஆளும் கும்பலைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்

04_2005.jpgஇந்தியாவின் காடுகளிலுள்ள சிங்கம் புலி நரி ராஜநாகம் முதலான விலங்கினங்கள் படிப்படியாக அழிந்து வருவதாக ""அவுட்லுக்'' என்ற ஆங்கில வார ஏடு அண்மையில் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. காடுகளிலுள்ள அரிய விலங்கினங்கள் மட்டுமல்ல; நாட்டிலுள்ள கால்நடைச் செல்வங்களும் படிப்படியாக அழிந்து வருவதோடு இனி இந்திய ஆடுமாடுகளை மிருகக்காட்சி சாலையில்தான் பார்க்க முடியும் என்ற பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க …கால்நடை வளர்ப்பில் தாராளமயம் : விவசாயிகளின் கழுத்துக்குச் சுருக்கு

04_2005.jpgஓட்டுக்கட்சி ரவுடிகளால் சாதி மத வெறியர்களால் ஆளும் வர்க்கக் கும்பலால் உழைக்கும் மக்கள் மீது அன்றாடம் நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் ஏவிவிடப்படுகின்றன. இவற்றுள் ஏதோ ஒன்றிரண்டு தாக்குதல்கள்தான் நாடெங்கிலும் அம்பலமாகி மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி அம்பலமான தாக்குதல்களில் கூட குற்வாளிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

மேலும் படிக்க …ஏழைகளுக்கு நீதி எட்டாக் கனி

04_2005.jpgபோலி கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம். தனது 18வது அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ளது. இதற்கு முன்னதாக அக்கட்சி செயல்படும் மாநிலங்களில் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறது. கேரள மாநில மாநாட்டில் வழக்கம் போலவே குழுச் சண்டைகள் பகிரங்கமான நாய்ச் சண்டையாகி சந்தி சிரித்தது. இக்குழுச் சண்டைகள் பதவிக்கான சண்டையாக மட்டுமின்றி கட்சி சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகாரச் சண்டையாகவும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

மேலும் படிக்க …சி.பி.எம்.பாட்டாளி வர்க்க கட்சியா? முதலாளித்துவ கம்பெனியா?

04_2005.jpgஆந்திர மாநில அரசாங்கத்துக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு (மாவோயிஸ்ட்) கட்சிக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சு வார்த்தை அதிகாரபூர்வ அறிவிப்பின்றி ஏறக்குறைய முறிந்து போய் விட்டது என்றே சொல்லலாம். போலீசு மீண்டும் பழைய முனைப்புடன் தேடுதல் மற்றும் போலி மோதல் கொலைகளை நடத்தி வருகிறது. இ.க.க. (மாவோயிஸ்ட்) தவிர வேறு பிற நக்சல்பாரிப் புரட்சியாளர்களும் வேட்டையாடப்படுகின்றனர். பதிலடி கொடுக்கும் முகமாக இ.க.க. (மாவோயிஸ்ட்) கொரில்லாக் குழுக்களும் எதிரிகள் என்று அடையாளம் காணும் நபர்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க …நக்சல்பாரி புரட்சியாளர்கள் - ஆந்திர அரசாங்கம் சண்டை நிறுத்தம் - பேச்சு வார்த்தை கானல் நீர் தாகம் தீர்க்காது

04_2005.jpg"விதி'ப்படி சொல்லி வைத்தது போல் இயங்குகிறது தமிழக சட்டமன்றம். பெரும் ரகளை; அதன் நடுவே வழக்கமான கவர்னர் உரை வழக்கமான "பட்ஜெட்' விவாதம் கடைசியில் "சட்டசபையில் ஜனநாயகம் இல்லை' என்ற எதிர்க்கட்சிகளின் வழக்கமான கூட்டு ஒப்பாரி!

 

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தமிழகத்து எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படியே தமிழகத்தின் இன்றைய நிலைமை இதுதான்:

மேலும் படிக்க …தமிழக சட்டமன்றம்: ஜெயாவின் அடாவடித்தனம் எதிர்க்கட்சிகளின் கையாலாகாத்தனம்

அனைத்துலக மகளிர் தினத்தை (மார்ச்8) ஒட்டி திருச்சியில் ம.க.இ.க. மகளிர் குழுவினர் மார்ச் 15ஆம் நாளன்று எழுச்சிமிகு அரங்கக் கூட்டத்தை நடத்தினர். ""உழைக்கும் வர்க்கப் பெண்களே ஒன்று சேருங்கள்'' என்ற முழக்கத்தின் கீழ் நடந்த இக்கூட்டத்தில் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான இப்போராட்ட நாளைக் கொச்சைப்படுத்தும் முதலாளித்துவ செய்தி ஊடகங்களையும் உழைக்கும் பெண்களின் போராட்டத்தை தனிப்பட்ட குடும்பத்தில் ஆணுக்கு எதிரான போராட்டமாகத் திசை திருப்பி வரும் பெண்ணியவாதிகள் மற்றும் தன்னார்வக்

மேலும் படிக்க …""உழைக்கும் வர்க்கப் பெண்களே ஒன்று சேருங்கள்!''

04_2005.jpgவாய் பேசாத ஊமைப்பிள்ளை திருவாய் மலர்ந்து ""எப்பம்மா தாலியறுப்பே?'' என்று தன் தாயிடம் கேட்டதாம். தென் மாவட்ட வழக்குரைஞர்கள் போராடிப் "பெற்ற' சனியனான மதுரை உயர்நீதி மன்றம் தனது முதல் சாதனையாக மக்களின் கூரைக்குக் கொள்ளி வைத்துவிட்டது.

 

மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் கிழக்கு தெற்கு தெருக்களிலுள்ள கடை வியாபாரிகள் அதே தெருவில் வணிகம் செய்யும் தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கோரி மாநகராட்சிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் தரைக்கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டதுடன் மதுரை நகரெங்குமுள்ள "ஆக்கிரமிப்புகளை' அகற்றுமாறும் மாநகராட்சிக்கு உத்திரவிட்டது மதுரை உயர்நீதி மன்றம்.

மேலும் படிக்க …ஏழைகள் மீதான போர்! நீதிமன்ற அக்கிரமம்!

04_2005.jpgபா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ப.சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். பொருளாதார நிபுணர்கள் இந்த பட்ஜெட்டுக்கு 10க்கு 8 மதிப்பெண் கொடுக்கலாம் என்கிறார்கள்.

 

""1997க்குப் பின்வந்துள்ள நல்லதொரு எதார்த்தமான பட்ஜெட் இது'' எனத் தரகு முதலாளிகள் வருணிக்கிறார்கள். இவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளும் பட்ஜெட்டைப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

மேலும் படிக்க …நரியைப் பரியாக்கும் மார்க்சிஸ்டுகள்

04_2005.jpgபிப்ரவரி புதிய ஜனநாயகம் இதழில் அல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணுவுக்கு சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் புள்ளியும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் கும்பலால் இழைக்கப்பட்ட அநீதியை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை வெளிவந்தது. இதைத் தொடர்ந்து அல்லிவயல் பிரச்சினையில் வி.வி.மு.வின் உறுதியான போராட்டத்தைக் கண்டு உத்வேகமடைந்த பல்வேறு சக்தியினர் குணசேகரன் கும்பலின் அடுக்கடுக்கான தில்லுமுல்லு மோசடிகளை ஆதாரபூர்வமாக அளித்த வண்ணமுள்ளனர். குறிப்பாக வலதுகளின் கோட்டையாகச் சித்தரிக்கப்படும் மறவமங்கலத்தில் குணசேகரன் கும்பலின் சவால்கள் அச்சுறுத்தல்களை மீறி எழுச்சியுடன்

மேலும் படிக்க …சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளம் : அகிலாண்டபுரத்தை அமுக்கிய புராணம்

04_2005.jpg"மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ ஃ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்'' என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக ஃ சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

 

""மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது' என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.

மேலும் படிக்க …பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்

04_2005.jpgதமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சிந்தனைப் போக்கை (பார்ப்பன பாசிஸ்டுகளின் சிந்தனைப் போக்கை என்றும் கருதலாம்) மிகவும் தெளிவாகக் கடந்த மாதம் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். ""நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது காவல்துறை. வலிமையான நாடாக இந்தியா இருக்க வேண்டும்; அதில் வளமிக்க மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்ற லட்சியம் ஈடேற வேண்டுமென்றால் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்க வேண்டும். எந்த வளர்ச்சிக்கும் முதல் தேவையாக இருப்பது அமைதியான சூழ்நிலைதான். அத்தகைய அமைதிச் சூழ்நிலையை உருவாக்குவதிலும் அதனைக் கட்டிக் காப்பதிலும் காவல்துறையின் பணி இன்றியமையாதது. இதன் அடிப்படையில்தான் காவல்துறையை நவீனப்படுத்தவும் காவல்பணியை மேம்படுத்தவும் காவலர்கள் நலன்பேணவும் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகள் ஆகியவற்றை நான் அறிவித்தேன்.''

மேலும் படிக்க …போலீசு விசுவாசத்துக்கு ஏலம்! மு.க – ஜெயா போட்டா போட்டி

04_2005.jpg"எம் பேரு கண்ணன். எங்கப்பா செருப்பு தைக்கிறவரு. சீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி காலனியிலதான் எங்க வீடு இருக்கு. எங்கூடப் பொறந்தவங்க ஆறு பேரு. வீட்டுல ரொம்ப கஷ்டம். அதனால, ராஜஸ்தானுல கோட்டாங்கிற டவுனுல குமான்புரா தெருவுல இருக்குற சீவில்லிபுத்தூர்காரர் வெள்ளைச்சாமியோட கடலமிட்டாய் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். என்னோட எங்க காலனியில இருக்குற முனியாண்டியும் வீரய்யாவும் வேலைக்கு வந்தாங்க.

மேலும் படிக்க …சக்கிலியனாப் பொறந்தா பீ திங்கணுமா?

05_2005.jpgமகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்குத் திடீரென இளைஞர்கள் பற்றிய அக்கறை பொத்துக் கொண்டு பொங்கி வழியத் தொடங்கியிருக்கிறது. மும்பய் மாநகராட்சி எல்லை தவிர, அம்மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கி வரும் இரவு நேர நடன விடுதிகளைத் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ள அம்மாநில அரசு, ""இந்த விடுதிகள் இளைஞர்களின் மனதைக் கெடுப்பதோடு, நமது பண்பாட்டுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது'' என இத்தடைக்குக் காரணங்களை அடுக்கியிருக்கிறது.

மேலும் படிக்க …"எங்களை விபச்சாரத்திற்குத் தள்ளாதே!" : "இரவு விபச்சாரத்திற்குத் தள்ளாதே!" இரவு விடுதிகளில் நடனமாடும் பெண்களின் வேதனைக் குரல்

05_2005.jpgபோலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு, வரியில்லா பட்ஜெட் என்ற மாய்மாலத்தோடு ப.சிதம்பரம் கொண்டு வந்துள்ள பட்ஜெட்டானது நாட்டை மீண்டும் காலனியாக்கும் சதியே என்பதை விளக்கி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் வீச்சாக பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. இது முற்போக்கு பட்ஜெட் அல்ல் மக்களுக்கு வெட்டப்பட்டுள்ள மரணக்குழி என்பதை விளக்கும் ""சிதம்பர இரகசியம்'' என்ற பிரசுரம் ஏறத்தாழ 25,000 பிரதிகள் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்புடன் விற்பனை செய்யப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் முழக்கத் தட்டிகள், துண்டுப் பிரசுரங்களுடன் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க …சிதம்பர இரகசியம்! : முற்போக்கு பட்ஜெட் அல்ல் மக்களுக்கு வெட்டப்பட்டுள்ள மரணக்குழி!

05_2005.jpg"நீதிமன்ற அக்கிரமம்; ஏழைகள் மீதான போர்'' என்ற கட்டுரையானது, மண்ணின் மைந்தர்களை நகர்ப்புறங்களிலிருந்து பிடுங்கியெறிந்து நகருக்கு வெளியே துரத்தும் கொடுஞ்செயலை உணர்வோடு எடுத்துரைத்தது. ஏகாதிபத்தியங்களின் மேட்டுக்குடியினரின் அடியாளாக ஆட்சியாளர்கள் செயல்படுவதை உண்மை விவரங்களிலிருந்து கூறி, போராட அறைகூவுவதாக அமைந்துள்ளது.
இந்துமதி, திருச்சி.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

05_2005.jpg"பொதிகை கலா மன்றம் நடத்தும் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் கங்கை அமரன் இன்னிசைத் திருவிழா மார்ச் 13 அன்று திருநெல்வேலி சாப்டர் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது; நன்கொடை ரூ. 1000, ரூ. 500, ரூ. 200, ரூ. 100'' என்ற விளம்பரம் திருநெல்வேலி நகர், முழுவதும் தட்டி போர்டுகளிலும் சுவரொட்டிகளிலும் நிரம்பியிருந்தது. இதைப் பார்த்த எனக்கு, "பொதிகை கலா மன்றம் என்ற பெயரை இதுவரையில் நெல்லையில் கேள்விபட்டதே இல்லையே! இந்த அமைப்பை யார் தோற்றுவித்தார்கள்? கோயில் திருவிழாக்களிலும் திருமணம் போன்ற இதர நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்படும்போது,

மேலும் படிக்க …கில்லாடி வசூல் ராஜாக்கள்

05_2005.jpgமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த இந்திய ஆட்சியாளர்கள், இன்று, ""இந்தியா பாகிஸ்தான் இடையே உருவாகிவரும் சமாதான முயற்சிகளில் இருந்து யாரும் பின்னோக்கிப் போக முடியாது'' என வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டுள்ளனர்.

 

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியைப் பார்க்க 8,000 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கியதில் ஆரம்பித்த இந்த நல்லிணக்க முயற்சிகள், ""இந்தியா வசமுள்ள ஜம்முகாசுமீர் தலைநகர்

மேலும் படிக்க …இந்தியா-பாகிஸ்தான்: சமாதானமும் ஆயுதப் போட்டியும் இந்த முரண்நிலையின் பொருள் என்ன?

05_2005.jpg"சி.பி.எம். கட்சியின் 18வது அனைத்திந்திய மாநாடானது, கட்சி வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது'' என்று பெருமையுடன் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி. உண்மைதான்! பித்தலாட்டத்திலும் சந்தர்ப்பவாதத்திலும் புதிய எல்லைகளைத் தொட்டு, சி.பி.எம். கட்சியானது இம்மாநாட்டின் மூலம் தனி முத்திரையைப் பதித்து விட்டது. ""ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, உலகமயமாக்க சூழலில், உலகமயமாக்கத்துடன் இசைந்து செயல்படுவதற்கான பொருத்தமான வழிமுறைகளை வகுத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே பாராட்டுமளவுக்கு சி.பி.எம். கட்சி மாநாடு தனி முத்திரையைப் பதித்து விட்டது.

மேலும் படிக்க …சி.பி.எம்.இன் 18-வது அகில இந்திய மாநாடு : தாராளமயத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு

05_2005.jpg"ஏப்ரல் 14 முதல் தமிழகமெங்கும் மும்பை எக்ஸ்பிரஸ்'' திரையிடப்படும் என்ற விளம்பரத்தை ராமதாசின் முதுகில் மட்டும்தான் கமலஹாசன் ஒட்டவில்லை. தமிழகம் முழுக்க, எல்லா இடங்களிலும் விளம்பரங்கள் பளிச்சிட்டன.

 

அதற்கு முன்னரே, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கருணாநிதி குடும்ப நிறுவனங்கள் உள்பட வானொளி, வானொலி மற்றும் தினசரிகள், சந்தை ஏடுகள் அனைத்தும் சினிமா நடிகைகள், நடிகர்கள் பின்னால் ரசிகர்களாக ஓடின.

மேலும் படிக்க …மூன்றாவது மொழிப்போர்: சண்டை தொடங்கும் முன்பே சரணாகதி!

05_2005.jpgமீண்டும் வருகின்றது என்ரான் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை வெய்து கொள்ளும் நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் இருந்து என்ரானின் அந்தியக் கடனை அடைக்கத் துடிக்கம் காங்கிரசு ஆட்சி

 

""என்ரான்'' என்ற பெயரை இந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தாராளமயத்தால் இந்தியாவிற்குக் கிடைக்கப் போகும் நன்மைகளின் குறியீடாக, என்ரான் இந்திய மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், என்ரானின் கதையோ, ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்களே, அந்தப் பழமொழிக்கேற்ப அவலமாக முடிந்து போனது.

மேலும் படிக்க …இந்திய மக்களே, எச்சரிக்கை! : மீண்டும் வருகின்றது என்ரான்

05_2005.jpgஎஸ்.பி. பட்டடினத்தில் பொது நிலத்தை ஆக்கிரமிக்க சதி செய்யும் ஆர்.எஸ்.எல்.ஐ எதிர்த்து நிற்கும் புரட்சிகர அமைப்புகள் மீது மதக் கலவரத்தைத் துண்டியதாகப் பொய் வழக்கு.

 

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை நகரான தொண்டியை அடுத்து அமைந்துள்ள சிற்×ர்தான் எஸ்.பி.பட்டினம். தாழ்த்தப்பட்டோர், முசுலீம்கள், கிறித்தவர்கள், மேல்சாதி இந்துக்கள் எனப் பல்வேறு சமூக மக்களும் கலந்து வாழும் பகுதி அது.

மேலும் படிக்க …ஆர்.எஸ்.எல்.இன் ஆக்கிரமிப்புக்கு தமிழக போலீசு உடந்தை

05_2005.jpg"மெட்ரிக்குலேசன் பள்ளியை இழுத்து மூடு'' என்று போராட்டம் நடத்திய "கொள்கை ஏறுகள்' மெட்ரிகுலேசன் தொட்டியிலேயே கழுநீர் குடிக்கலாமா?'' என்ற கேள்விக்கு யோக்கியமாகப் பதில் சொல்ல முடியாததால், "அறிவார்ந்த' எதிர்க்கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறது, தமிழர் கண்ணோட்டம்.

 

""விநோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் நடத்திய ம.க.இ.க.வினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தோழர் பீட்டரை அதே மருத்துவமனையில் சேர்த்தது எப்படி?'' என்பது தமிழர் கண்ணோட்டத்தின் கேள்வி.

மேலும் படிக்க …தமிழர் கண்ணோட்டத்தின் ஒழுக்க நெறி : கள்ளச் சாராய வியாபாரியைக் காப்பாற்றவா?

05_2005.jpgஏகாதிபத்திய நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கும் சூறையாடலுக்கும் கதவை அகலத் திறந்துவிட்டுள்ள ஆட்சியாளர்கள், இதுவும் போதாதென்று கிராமப்புற நுண்கடன் திட்டங்கள் மூலம் கோடிகோடியாய்க் கொள்ளையடிக்க புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 1997இல் ஐ.நா மன்றத்தின் முன்னிலையில் நடந்த நுண்கடன் கருத்தரங்கில் 2005ஆம் ஆண்டை நுண்கடன் ஆண்டாக அறிவித்துக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஐ.நாவின் மேற்பார்வை மற்றும் நிதியுதவியோடு பல ஏழை நாடுகளில் தேசிய அளவில் பல கருத்தரங்குகளும் ஆய்வரங்குகளும் நடந்த வண்ணம் உள்ளன. பல ஏழை நாடுகளின் அரசுகள், பல்வேறு நுண்கடன் திட்டங்களை அறிவித்தும் நுண்கடனை ஊக்குவிப்பதாகவும் உறுதியளித்துள்ளன. இந்தியாவில், நிதியமைச்சர் சிதம்பரம்

மேலும் படிக்க …நுண்கடன் - நுண்தொழில் : ஏழைகளைக் கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதி!

05_2005.jpg"இந்த தமிழ்ப் புத்தாண்டில், 14 வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த "சந்திரமுகி' படமும் கமல் நடித்த "மும்பை எக்ஸ்பிரஸ்' படமும் நேரடியாகக் களத்தில் மோதுவதால்(?) ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த போட்டியில் விஜய் நடித்த "சச்சின்' படமும் கலந்து கொள்வதால் மும்முனைப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது'' என்று வானொலி, வானொளி மற்றும் சந்தை ஏடுகள் அடங்கிய செய்தி ஊடகக் கும்பல் தமிழ் சினிமா கழிசடைகளுக்குப் பரிவட்டம் கட்டும் வேலையில் மும்முரமாக இறங்கி விட்டன.

மேலும் படிக்க …தமிழ் சினிமா கதாநாயகர்கள் : தமிழனின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள்

05_2005.jpgமரணமடைந்த போப் இரண்டாவது ஜான்பால் மற்றும் அவரிடத்துக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போப் பதினாறாம் பெணடிக்ட் ஆகிய இருவரின் துதிபாடும் வேலையில் உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ ஏகாதிபத்திய செய்தி ஊடகங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

 

உண்மையில் இவர்கள் இருவருமே கத்தோலிக்கத் திருச்சபையில் சின்னஞ்சிறிய சீர்திருத்தத்தைக் கூடக் கடுமையாக எதிர்த்த மத அடிப்படைவாத, பழங்கோட்பாட்டுவாதிகள், மதவெறியர்கள், எதிர்ப் புரட்சியாளர்கள்,

மேலும் படிக்க …போப் ஜான் பால் -2 : ஆசி வழங்கிய கரங்களில் இரத்தக் கறை

05_2005.jpgபோலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நடந்துவரும் காங்கிரசு கூட்டணி ஆட்சி, அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலை பார்த்துவரும் தொழிலாளர்களுக்கு மே தினப் பரிசாக, தொழிலாளர் ஓய்வூதிய வைப்பு நிதியைத் தனியார்மயமாக்கும் சட்டத்தைத் தரப் போகிறது. உலக வங்கி பத்தாண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியம் பற்றித் தயாரித்து அளித்த அறிக்கையின் ""ஜெராக்ஸ்'' காப்பிதான் இப்புதிய ஓய்வூதியச் சட்டம்.

மேலும் படிக்க …நாட்டை மறுகாலனியாக்குவதில் காங்கிரசின் நாலுகால் பாய்ச்சல்

05_2005.jpgஇன்னுமொரு சாட்சியம்! சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் சிங்காரத் தோப்பைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார்.ஒரு நவீன எந்திரப் படகுடன் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்த இவர் சிங்காரத் தோப்பு மீனவர் பஞ்சாயத்தின் செயலராகவும் இருந்து வந்துள்ளார். சுனாமி பேரழிவினால் இவரது படகு உடைந்து நாசமாகி வாழ்விழந்து நின்றார். அரசு நிவாரணத்தின் மூலம் படகைச் செப்பனிட்டு கடனை அடைத்து, மீண்டும் வாழ்ந்து முன்னேற முடியும் என்ற அவரது நம்பிக்கையில் இடியாய் இறங்கியது அரசின் அற்ப நிவாரண உதவி.

மேலும் படிக்க …அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு!

05_2005.jpgஉழைக்கும் மக்களின் வாழ்வைச் சீரழித்து நாசமாக்கும் லாட்டரி சூதாட்டத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளதைத் தொடர்ந்து, லாட்டரி முதலாளிகளான கருப்புப் பணபேர்வழிகள், லாட்டரிச் சீட்டு விற்பதையே தொழிலாகக் கொண்டோரைத் திரட்டி உண்ணாவிரதம் இருப்பது, ""அம்மா''வுக்கு வேண்டுகோள் விடுத்து நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரம் செய்வது என்று பலவழிகளிலும் முயற்சித்து, மீண்டும் இழந்த சொர்க்கத்தைக் கைப்பற்றத் துடிக்கின்றனர். ""அம்மா'' அசைந்து கொடுக்காததாலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதாலும் எதிர்க்கட்சிகளிடம் பேரம் நடத்தி தமது சுரண்டல் முயற்சிக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.

மேலும் படிக்க …லாட்டரி சூதாட்டத்துக்கு முட்டுக் கொடுக்கும் சி.பி.எம்.

06_2005.jpg"விடுதலை'', ""ஜனநாயகம்'' என்பதற்கு அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் அகராதியில் உள்ள பொருள் என்ன என்பதை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு நிரூபித்துக் காட்டிவிட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கொடூரத்தையும் ஈராக்கிய மக்களின் வாழ்க்கை எப்படி உருக்குலைந்து கிடக்கிறது என்பதையும், பாக்தாத் நகரைச் சேர்ந்த பொறியாளர் காஸ்வான் அல் முக்தார், அமெரிக்க அதிபர் புஷ்ஷûக்கு எழுதியுள்ள இப்பகிரங்கக் கடிதம் படம் பிடித்துக் காட்டுகிறது. குமுறிக் கொண்டிருக்கும் ஈராக்கிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இக்கடிதம் ""மூன்றாம் உலக மறுமலர்ச்சி'' என்ற ஆங்கில இதழில் வெளிவந்தது. அக்கடிதத்தைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளோம். — ஆசிரியர் குழு.

 

மேலும் படிக்க …அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் : அல்லற்படும் ஈராக்கிய மக்கள் - ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்

06_2005.jpgகரண்ட் பில் கட்டாத சாமானிய மக்களின் வீடுகளில் ப்யூஸைப் பிடுங்கும் ஆட்சியாளர்கள், மக்கள் வரிப்பணத்திலிருந்து என்ரானின் 5,250 கோடி ரூபாய் கடனை அடைக்கக் கிளம்பியுள்ள நிலையில், இம்மக்கள் விரோதிகளை எதைக் கொண்டு அடிப்பது? இவர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிசத் துரோகிகளை எதைக் கொண்டு அடிப்பது?
பிரியதர்ஷிணி, சென்னை.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

06_2005.jpg"போலீசு துறையைக் கலைத்திடு!'' இப்படியொரு முழக்கம் கொண்ட பதாகையை (ஆச்ணணழூணூ) ஏப்ரல் மாத இறுதியில் மும்பய் நகரில் காண முடிந்தது. இது, ஏதாவதொரு புரட்சிகர அமைப்பின் வேலையாயிருக்கும் என நீங்கள் நினைத்தால், அது தவறு. மும்பய் நகர மக்கள்தான், தாங்களே இந்தப் புரட்சிகரமான முழக்கத்தை வடிவமைத்து, பேனர்களில் எழுதி, மும்பய் நகரின் பல இடங்களில் கட்டியிருந்தார்கள். ஏப்ரல் 21 அன்று மும்பயில் நடந்த சம்பவம்தான், போலீசுக்கு எதிரான போராட்டத்தில் இப்படியொரு புரட்சிகரமான தீர்வைத் தன்னெழுச்சியாக முன்வைக்கும் நிலைக்கு மும்பய் நகர மக்களைத் தள்ளியது.

மேலும் படிக்க …நாய் வாலை நிமிர்த்த முடியாது : கிரிமினல் போலீசைத் திருத்த முடியாது

06_2005.jpg"பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்தால், என்ன ஆகும்?'' எனப் படித்த மேதாவிகளிடம் கேட்டுப் பாருங்கள். ""அரசின் கையில் இருந்ததைவிட, அந்த நிறுவனங்கள் நல்ல இலாபத்தில் நடக்கத் தொடங்கிவிடும்; நிர்வாகம் ஒழுங்காக நடக்கும்'' என்ற ஒரே பதில்தான் நமது செவிட்டில் வந்து விழும்.

மேலும் படிக்க …தனியார்மயமான பொதுத்துறை நிறுவனங்களின் அவலம்

06_2005.jpg"ஆன்மீகச் செம்மல், அன்னதானப் பிரபு, இந்தியாவின் விடிவெள்ளி, வாழும் அம்பேத்கார், உலகப்புகழ் ஸ்ரீமான் மு.ஆதிகேசவன், பி.ஏ.பி.எல் தேசிய தலைவர், அகில இந்திய டாக்டர் அம்பேத்கார் எஸ்.சி., எல்.டி., நலக்கூட்டமைப்பு'' இப்படியெல்லாம் சுவரொட்டிகளில் தனக்குத்தானே விளம்பரம் செய்து கொண்ட திருவாளர் ஆதிகேசவன் இப்போது அரைடஜனுக்கும் மேற்பட்ட செக்மோசடிகள் மற்றும் கொலை முயற்சி போன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் தமிழக போலீசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க …ஆதிகேசவன் கைது : திடீர் வள்ளலின் கிரிமினல் பின்னணி

06_2005.jpg"நாட்டை மீண்டும் காலனியாக்காதே! மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே!'', ""மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவின் கொலைவெறி, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை முறியடிப்போம்!'', ""இந்திய அரசே! நேபாளத்தின் பிற்போக்கு மன்னராட்சிக்கு ஆயுதம் வழங்காதே! நேபாளத்தில் புதிய ஜனநாயக அரசமைக்கப் போராடும் கம்யூனிசப் போராளிகளை வேட்டையாடும் அமெரிக்காவின் சதிக்குத் துணை போகாதே!'' என முழக்கமிட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும்

மேலும் படிக்க …நாட்டை மீண்டும் காலனியாக்காதே! மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே! : புரட்சிகர அமைப்புகளின் மே தின போராட்ட அறைகூவல்

06_2005.jpgகும்மிடிப்பூண்டி மற்றும் காஞ்சிபுரம் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. பெற்ற அமோக வெற்றி, அக்கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது!

 

இவ்விரு தொகுதிகளிலும் முன்னெப்போதையும்விட அதிகமான அளவு ஓட்டுப்பதிவு நடந்துள்ளதோடு, அ.தி.மு.க. பெரும் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க …காஞ்சிபுரம் - கும்மிடிப்பு இடைத்தேர்தல்கள் : பணநாயகத்தின் வெற்றி!

06_2005.jpg"குழந்தைத் திருமணம் பிற்போக்குத்தனமான மூடப்பழக்கம்; அது, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைக் காவு கொடுப்பதற்கு ஒப்பானது சட்டப்படி தவறானது'' எனக் கிராம மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததற்காக, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சகுந்தலா வர்மா என்ற பெண் அதிகாரி மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொலை செய்துவிடும் முடிவோடு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், அவரின் இரு கைகளும் துண்டாகித் தனியாக விழுந்துவிட்டன. அவரது கூந்தல் அறுக்கப்பட்டு, அவர் கோரப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க …நாம் வாழ்வது கணனி யுகத்திலா கற்காலத்திலா?

06_2005.jpg இசுலாமிய மகளிர் அமைப்புகள், முசுலீம் தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கோரும் சில அறிவுஜீவிகள் ஆகியோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததற்கு இணங்க, அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், ""நிக்காஹ்நாமா'' என்றழைக்கப்படும் திருமண ஒப்பந்தமொன்றைப் புதிதாகத் தயாரித்து, கடந்த மே 1 அன்று வெளியிட்டு இருக்கிறது. திருமணத்தை நடத்தி வைக்கவும்; மணவிலக்கு உள்ளிட்டு கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் இப்புதிய திருமண ஒப்பந்தத்தையே மாதிரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி, அவ்வாரியம் முசுலீம் மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்டவாரியத்தின் மாதிரி திருமண ஒபபந்தம்: புதிய மொத்தை பழை பள்ளு

06_2005.jpgமே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம் ""டாடா பிர்லா கூட்டாளி; பாட்டாளிக்குப் பகையாளி'' என்று முன்னொரு காலத்தில் முழங்கிய சி.பி.எம். கட்சி இப்போது, ""டாடாவும் பிர்லாவும் எங்கள் பங்காளி; பாட்டாளிகளே பகையாளி'' என்று முழக்கமிடத் தயாராகிவிட்டது. தொழிலாளர் போராட்டங்களுக்குத் தடைவிதித்துவிட்டு, அன்னிய நேரடி முதலீடுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இப்போலி கம்யூனிஸ்டுகள், மாவீரன் பகத்சிங், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தரகுப் பெருமுதலாளி டாடாவையும் சேர்த்து மாபெரும் நாட்டுப் பற்றாளனாகச் சித்தரித்து புகழாரம் சூட்டுகிறார்கள். கொள்ளைக்கார மோசடி தரகுப் பெருமுதலாளி முகேஷ் அம்பானிக்கு

மேலும் படிக்க …"நாங்கள் எங்கள் கொள்கையிலிருந்து தலைகீழாக மாறிவிட்டோம்!''

06_2005.jpgநிலத்தடி நீர் வளமிக்க கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா, பிளாச்சிமடா கிராமத்தின் நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் சூறையாடி யதோடு, விளைநிலங்களையும் தனது கழிவு நீரால் நாசமாக்கியிருக்கிறது கொக்கோ கோலா ஆலை. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நீரை உறிஞ்சக் கூடாதென்று கேரள உயர்நீதி மன்றத்தின் நீதிபதி பாலகிருஷ்ணன் நாயர் டிசம்பர் 13, 2003 அன்று விதித்திருந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்த கொக்கோ கோலா நிறுவனம், கடந்த ஏப்ரல் 7ம் தேதியன்று தனக்குச் சாதகமான தீர்ப்பை வாங்கி விட்டது.

மேலும் படிக்க …இந்திய நீதிமன்றங்கள் : பன்னாட்டு முதலாளிகளின் கைப்பாவை

06_2005.jpgநாட்டை மீண்டும் காலனியாக்குவதில் போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது, காங்கிரசு கூட்டணி ஆட்சி. காப்புரிமைச் சட்டத் திருத்தம், மதிப்புக் கூட்டு வரி விதிப்பு, ஜவுளி பின்னலாடை ஏற்றுமதிக்கு இருந்து வந்த ""கோட்டா'' முறை ரத்து, புதிய ஓய்வூதியச் சட்டம், புதிய விதைச் சட்டம், புதிய சந்தைச் சட்டம் என உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி இந்தியப் பொருளாதாரத்தை இந்த ஆண்டிற்குள் முற்றிலுமாக மாற்றியமைக்கும் வேகத்தோடு அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

மேலும் படிக்க …பா.ஜ.க. வழியில் காங்கிரசு ஆட்சி : இதுதான் ஓராண்டு "சாதனை'!

06_2005.jpgமதுரை மாவட்டம், உசிலை வட்டத்திலுள்ள ரிசர்வ் தொகுதியான கீரிப்பட்டியில் 1996 முதல் 19 முறை பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டும், அந்த பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் ஒரு தலித் அமர முடியவில்லை. பாப்பாபட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நின்ற நரசிங்கம் என்ற தலித் வேட்பாளர் மர்மமான முறையில் இறந்துள்ளார். நாட்டார்மங்கலம் தொகுதியில் யாரும் வேட்பு மனுக் கூடத் தாக்கல் செய்யவில்லை.

மேலும் படிக்க …பாப்பாபட்டி - கீரிப்பட்டி : "வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!" - புரட்சிகர அமைப்புகளின் போராட்ட அறைகூவல்

07_2005.jpg- கண்டன ஆர்ப்பாட்டம் நவரத்தினரங்கள் என்றழைக்கப்படும் இந்தியாவின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனத்தின் (""பெல்'') அரசுப் பங்குகளில் 10 சதவீதத்தைத் தனியாருக்கு விற்றுவிட அண்மையில் காங்கிரசு கூட்டணி அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று திருச்சி ""பெல்'' ஆலை வாயிலருகே பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தின. பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச் செயலாளர் தோழர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் காளியப்பன் (ம.க.இ.க.) சிறப்பரையாற்றினார்.

மேலும் படிக்க …""பொதுத்துறையை அழிக்காதே! ""பெல்'' நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்காதே!''

07_2005.jpgபோலீசு துறையைக் கலைக்கக் கோரும் மும்பை மக்களின் போராட்டம் மிகச் சரியானது. சென்னையில் வழிப்பறி கும்பலாக, கொள்ளைக் கூட்டமாக, பிளாச்சிமடா கோக் ஆலையின் காவல் நாயாக உள்ள போலீசு துறையைக் கலைத்து, மக்கள் தமது அதிகாரத்தை ஏந்திச் சுழற்றும் மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தளபதி சண்முகம், சென்னை.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

07_2005.jpgமதுரையில் இயங்கிவரும் ""மக்கள் கண்காணிப்பகம்'' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம், சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் தலித் மக்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறப்படுகின்ற தன்னார்வக் குழுக்கள் ஆகியவை இணைந்து, ""சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரம், தமிழ்நாடு'' என்ற ஒரு கூட்டமைப்பை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …மக்கள் கண்காணிப்பகம் : அமெரிக்க சாத்தானின் கள்ளக் குழந்தை

07_2005.jpgதிருச்சி அருகே அமைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனமான டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில் 16 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின்போது பலியானார்கள். மேலும், அதே இடத்தில் 18 கூலித் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 28.5.05 அன்று மதியம் 12.50 மணிக்கு இக்குரூரம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.

மேலும் படிக்க …டால்மியா சிமெண்ட் ஆவையில் தொழிலாளர்கள் பலி விபத்தாகத் திரிக்கப்பட்ட படுகொலைகள்

07_2005.jpgபா.ஜ.க. அரசின் கொலை வெறியாட்டம் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்டு 5 பேரைக் கொன்று வெறியாட்டம் போட்டுள்ளது, பா.ஜ.க.வின் இராஜஸ்தான் மாநில அரசு. பா.ஜ.க.வின் 18 மாத கால ஆட்சியில், இது இரண்டாவது முறையாக விவசாயிகள் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு. ஏற்கெனவே, கடந்த ஆண்டு அக்டோபரில் இதேபோல தண்ணீருக்காகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 5 பேரைக் கொன்றொழித்தது, கொலைகார பா.ஜ.க. அரசு.

மேலும் படிக்க …இராஜஸ்தான்: குடிக்கத் தண்ணீர் கேட்டால் ஒடுக்கி உயிரைப் பறிக்கிறார்கள்

07_2005.jpg பொலிவியாவில் அண்மையில் நடந்த மக்கள் பேரெழுச்சியும் அதைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அமெரிக்காவுக்குத் தப்பியோடியிருப்பதும் தென்னமெரிக்கக் கண்டத்தையே உலுக்குகிறது. அக்கண்டத்து நாடுகளின் பலதரப்பட்ட மக்கள் விரோத ஆட்சியாளர்கள் பொலிவிய பாணியில் இங்கேயும் மக்கள் போராட்டங்கள் வெடித்துவிடுமோ என்று பீதியில் நடுநடுங்குகிறார்கள். ஏனென்றால், கடந்த ஈராண்டுகளில் இரண்டு முறை பொலிவிய நாட்டின் அதிபர்கள், மக்கள் போராட்டங்களால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொலிவியாவில் நடக்கும் போராட்டங்கள், அந்நாட்டிற்கே உரித்தான உள்நாட்டு

மேலும் படிக்க …பஞ்சைப் பராரிகளின் பேரெச்சி - ஏகாதிபத்திய வாயிலில் இடிமுழக்கம்

07_2005.jpg ஏகாதிபத்திய நிறுவனங்கள் எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அடிமை புத்தி கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் என்பதற்கு இன்னொரு சான்று தண்ணீர் தனியார்மயம். உலக வர்த்தகக் கழகத்தில் ""காட்ஸ்'' ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே, அதன் விதிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். கேரள உயர்நீதி மன்றம் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு இதை உறுதி செய்கிறது.

மேலும் படிக்க …திருப்பூரைக் கைப்பற்றிய மண்ணீர் கொள்ளையர்கள்

07_2005.jpg பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால், மோர் கொடுத்து உபசரிக்கும் பண்பாட்டைக் கொண்டது நமது தமிழகம். ஆனால், இப்பொழுதோ, தாகத்துக்குத் தண்ணீர் கேட்கும் முன்பாக, பாக்கெட் தண்ணீர் வாங்கும் அளவிற்கு சட்டைப் பையில் காசு இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டிய பண்பாடு நம் மீது திணிக்கப்படுகிறது.

  

1985ஆம் ஆண்டு வாக்கில் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 750 ஆக இருந்ததாகவும், 1995இல் இந்த எண்ணிக்கை

மேலும் படிக்க …உலக வங்கி சர்வதேச நாணய நிதியம்

07_2005.jpgதலித்திய சீரழிவின் புதிய பரிமாணங்கள் ஆடுகள் ஒன்றுசேர்ந்து ஓநாய்களுக்கு விழா நடத்தி கூட்டணி கட்டியதுண்டா? தாழ்த்தப்பட்டோர் ஒன்றுதிரண்டு பார்ப்பனர்களுக்கு விழா நடத்தியதுண்டா? அதிசயம்; ஆனால் உண்மை. உ.பி. மாநில வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத புதுமை. "சரித்திரம்' படைத்துக் கொண்டிருக்கிறார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான செல்வி மாயாவதி!

மேலும் படிக்க …பார்ப்பன சேவையுடன் பிழைப்புவாதம்

07_2005.jpg திருப்பூர் என்றதும் நமக்கெல்லாம் சட்டென்று நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும் பனியன் ஏற்றுமதித் தொழில்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 15 கோடி ரூபாயாக இருந்த திருப்பூர் நகரின் பனியன் ஏற்றுமதி, 2004இல் 6,000 கோடி ரூபாயாக, பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்திய அரசிற்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தருவதாகவும்; திருப்பூரைச் சேர்ந்த 4,500 முதலாளிகளுக்குப் பொன் முட்டை இடும் வாத்தாகவும் பனியன் ஏற்றுமதித் தொழில் அமைந்திருக்கிறது. அகில உலகமுமே அறிந்திருக்கும் திருப்பூர் நகரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி, ஏறத்தாழ 50,000 விவசாயிகளின் வாழ்க்கையை உருத்தெரியாமல் அழித்து வருவது உங்களுக்குத் தெரியுமா?

மேலும் படிக்க …ஏற்றுமதி கொள்கைக்காக திருப்பூர் முதலாளிகளின் பயங்கரவாதம்

07_2005.jpg நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஜி.எச்.சி.எல். ஆலையின் நச்சுக் கழிவால், ""40 கி.மீ. வட்டச் சுற்றுக்குள் உள்ள பகுதிகள் பாலைவனமாய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்'' என்று அவ்வாலையினால் ஏற்பட்ட கேடுகளை பட்டியலிட்டு எச்சரித்ததோடு உடனடியாக, ஜி.எச்.சி.எல். நச்சு ஆலையின் ""மின் இணைப்பைத் துண்டிக்கவும்'', ""ஆலையின் உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும்'' வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆணை நிறைவேற்றி, அதை அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடனடியாக அமல்படுத்தக் கோரியது.

மேலும் படிக்க …நச்சு ஆலைக்கு எதிராக தொடரும் விவசாயிகளின் போராட்டம்

07_2005.jpg சமூகம் கல்வி, அரசியல்பொருளாதாரம் ஆகிய பலவகைகளிலும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள், தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களை நடத்தவேண்டிய களம் தேர்தல்களோ, நாடாளுமன்றம் சட்டமன்றங்களோ, நீதிமன்றங்களோ அல்ல. அவற்றுக்கு வெளியே எழுச்சிக் களங்களை உருவாக்க வேண்டும். இந்த உண்மையை தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வு ரத்தை செல்லாது என்று தீர்ப்புக் கூறியதன் மூலம் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பொதுவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் ஆகிய விவகாரங்கள் தொழிற்

மேலும் படிக்க …நுழைவுத்தேர்வு : என்ன செய்கிறார்கள் எதிரிகளும் துரோகிகளும்?

07_2005.jpgதிருச்சி, சிறீரங்கம் வட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம், உத்தமர் சீலி. கடந்த 18.5.05 தேதியன்று இரவு 9 மணி அளவில் திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து, கல்லணைக்குப் போகும் தனியார் பேருந்தில் உத்தமர் சீலி கிராமத்தைச் சேர்ந்த முத்தரையர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலரும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் வந்தனர். இந்த இளைஞர்கள் அவர்களுடைய "அரிசன தெரு பஸ் ஸ்டாப்'பில் இறங்கத் தயாரான போது, முத்தரையர் சாதியினர் வேண்டுமென்றே படியில் நின்று கொண்டு வழியை மறித்தனர். அப்போது தாழ்த்தப்பட்ட இளைஞர் கையிலிருந்த "பிளம்பர்' தொழில் செய்யும் கருவி முத்தரையர் மீது உரசியது. "பள்ளப்பயலுக்கு என்னடா இவ்வளவு திமிரு' என்று

மேலும் படிக்க …உத்தமர்சீலி தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல்: முத்தரையர் சாதிவெறியர்கள் போலீசு கள்ளக் கூட்டு

08_2005.jpgஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை பேயிடமிருந்து தப்பித்துப் பிசாசிடம் மாட்டிக் கொண்ட கதையாகிவிட்டது. கடந்த ஐந்தே மாதங்களில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் மட்டும் 29 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய் விட்டனர். அம்மாநிலத்தில் கடந்த ஒரே ஆண்டில் நடந்துள்ள விவசாயிகளின் தற்கொலைச் சாவு 400ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும், இவர்களுள் பெரும்பாலோர் விவசாயிகளே கிடையாது என முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலுகிறது, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி.

மேலும் படிக்க …விவசாயம் அழிகின்றது இந்தியா ''ஒளிர்கிறது"

08_2005.jpgஇந்திய அரசின் தேசிய நீர் கொள்கை, பொதுத்துறை தனியார்துறை கூட்டு என்ற பெயரில், தண்ணீரைத் தனியார்மயப்படுத்துவதை நியாயப்படுத்துகிறது. இக்கொள்கையின்படி, தில்லி முதல் திருப்பூர் வரை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவது பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இது மட்டுமின்றி, ஆறுகளும், அணைகளும் கூடத் தனியார்மயமாக்கப்படுகின்றன.
மேலும் படிக்க …இப்பொழுது விற்பனையில்....

08_2005.jpgஏகாதிபத்திய வல்லரசுகளால் நசுக்கப்பட்டு, மூலவளங்கள் சூறையாடப்பட்டு வரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. கூடவே, ஏழை நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களும் வலுப்பெற்று வருவதற்கு பொலிவியா நல்ல உதாரணம். பொலிவிய மக்களின் அரசியல் விழிப்புணர்வும் போர்க்குணமும் என்றும் போற்றத்தக்கது. மனித உரிமை என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களுக்குக் கைக்கூலி வேலை செய்யும் மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை முகத்தைத் திரைகிழித்துக் காட்டியது சிறப்பு.

நிர்மலா, திருச்சி.
மேலும் படிக்க …வாசகர் கடிதம்

08_2005.jpgஅரசு விடுமுறை நாட்களில்கூட தொழிலாளிக்கு விடுப்பு கிடையாது; முன்அனுமதியுடன்கூட தொழிலாளி விடுப்பு எடுக்க முடியாது.

 

சம்பள உயர்வு கிடையாது; பஞ்சப்படியும் கிடையாது.

 

தொழிலாளர்கள் சங்கம் கட்ட முயற்சித்தால், தற்காலிகப் பணி நீக்கம்; வெளிமாநிலக் கிளைகளுக்கு மாற்றம்.

 

போராடிய தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு.

மேலும் படிக்க …சிறீராம் ஃபைபர்ஸ்: கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகக் கொதித்தெழும் தொழிலாளர்கள்

08_2005.jpg இன்னுமொரு சதி! கரும்பு விவசாயம் பருத்தி விவசாயம் குத்தகை விவசாயம் பற்றி அறிந்திருக்கிறோம். ஒப்பந்த விவசாயம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா நடப்பாண்டில் முதல் லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ஒப்பந்த விவசாயம் விரைந்து முன்னேறும் என்று பொருளாதார சூரப்புலிகள் மதிப்பீடு செய்கின்றனர். அதென்ன ஒப்பந்த விவசாயம்?

மேலும் படிக்க …ஒப்பந்த விவசாயம் - விவசாயிகளைப் போண்டியாக்க

08_2005.jpgபுதிய ஜனநாயகம் ஜூலை 2005 இதழில், ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் காசு வாங்கி பிழைப்பு நடத்தும் ""மக்கள் கண்காணிப்பகம்'' என்ற தன்னார்வ நிறுவனத்தை அம்பலப்படுத்தி வெளியிடப்பட்ட கட்டுரை, அந்த அமைப்பின் ஊழியர்கள், விசுவாசிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

 

மக்கள் கண்காணிப்பகத்தின் தலைமையில் இயங்கும் ""சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரம்'' எனும் அமைப்பு ஜூலை 9

மேலும் படிக்க …ஆதாரம் கேட்டவர்களின் அரிதாரம் கலைந்தது

08_2005.jpg"நாலு எழுத்துப் படிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வேலை திணிக்கப்படுகிறது.''

 

""சாமி கும்பிடுவதற்காகக் கோவிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞர், மேல்சாதி வெறியர்களால் அடித்தே கொல்லப்படுகிறார்.''

 

""இரட்டை குவளை முறையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட சிறுவன் சிறைக்குள் தள்ளப்படுகிறான்.''

மேலும் படிக்க …தமிழகம் : ஆதிக்க சாதி வெறியர்களின் சொர்க்க பூமி

08_2005.jpgஉ.பி. மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்தினுள் அமைந்துள்ள ராமர் கோவிலின் மீது கடந்த ஜூலை மாதம் ஆம் தேதி நடந்த தாக்குதலின் பொழுது ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்கள் தவிர சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் சாமி கும்பிட வந்த பெண் ஒருவரும் இத்தாக்குதலின்பொழுது இறந்து போய்விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் என அழைக்கப்படும் அந்தக் கூடாரத்திற்கு சேதம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லையென்றாலும் முசுலீம் தீவிரவாதத்தை எதிர்த்துக் கூச்சல் போடும் அனைவரையும் இத்தாக்குதல் உலுக்கிப் போட்டிருக்கும்.

மேலும் படிக்க …அயோத்தி ராமர் கோவில் தாக்குதல் வினை விதைத்தால் தினை அறுக்க முடியுமா?

08_2005.jpgகையில் நயாபைசா இல்லாமல் புலம் பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழிதூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். "அகதி' என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883இலேயே இறந்து விட்டவர்.

மேலும் படிக்க …காரல் மார்க்ஸ் : இன்றைய காலத்திற்கேயுரிய வழிகாட்டி

08_2005.jpgகருப்புப் பணம் மீதி ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் இலவசமாக வேட்டி, சேலை வழங்குவது போல, தமிழக மக்களுக்கு தன்னுடைய தமிழ் சினிமா வசனங்களை எல்லாம் இலவசமாக மேடையில் வாரி இறைக்கிறார், ""கருப்பு எம்.ஜி.ஆர்.'', ""புரட்சிக்கலைஞர்'' விஜயகாந்த்.

 

""தமிழர்களுக்கு உதவும் அனைத்து நற்குணங்களுடன் விஜயகாந்தைப் படைத்த பிரம்மன் திருஷ்டி படாமல் இருக்கவே அவரைக் கருப்பாக படைத்து விட்டான். ஏற்கெனவே இருந்தவர் சிவப்பு எம்.ஜி.ஆர்.; இவர் கருப்பு எம்.ஜி.ஆர்.'' என்று விஜயகாந்தின் சினிமா வளர்ப்புப் பிராணிகள் குரைத்துக் கொண்டே சுற்றி ஓடிவர, கருப்பு எம்.ஜி.ஆர். மக்களுக்கு தரிசனம் தருகிறார்.

மேலும் படிக்க …விஜயகாந்தின் அரசியல் : கவர்ச்சி பாதி காவி பாதி

08_2005.jpgவழக்குரைஞர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களின் அமலாக்கத்தை மைய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இல் காங்கிரசு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டத் திருத்தங்களில் பெரும்பகுதி போலீசு கமிசனால் சிபாரிசு செய்யப்பட்டவை என்கிறார்கள் போராடும் வழக்குரைஞர்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசு கமிசனுக்கு எந்த விதத்திலும் சளைக்காத சட்டக்கமிசனும் இலேயே இந்தத் திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை அங்கீகரித்திருக்கிறது.

மேலும் படிக்க …குற்றவியல் சட்டதிருத்தங்கள் " போலிசே நீதிபதி!"

08_2005.jpgமன்மோகன் சிங் அமெரிக்காவிற்குக் கிளம்பிச் செல்லும் முன்பாக இந்தியா விற்பனைக்கு அல்ல ஈரானில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டத்தை மூன்றாவது நபர் தீர்மானிக்க முடியாது நாட்டுப்பற்றைப் பற்றி காங்கிரசுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை என்றெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளோடு அறிக்கை போர் நடத்தினார். ஆனால் இந்த வசனமெல்லாம் வெற்றுச் சவடால்கள் என்பது மன்மோகன் சிங் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடனேயே அம்பலமானது.

மேலும் படிக்க …மன்மோகன் சிங்கின் காலனிய விசுவாசம்

08_2005.jpgபுதிய அத்தியாயம் பிரதமர் மன்மோகன் சிங், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இராணுவ ஒப்பந்தமொன்று கையெழுத்தானது; அவர் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, அணு சக்தி ஒத்துழைப்பு குறித்த மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட, தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இவ்விரு ஒப்பந்தங்களை வரலாற்றுத் திருப்பம் என்றும்; குறிப்பாக, அணுசக்தி குறித்த ஒப்பந்தம் இந்தியாவை வல்லரசாக்க உதவும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஆதரவாளர்கள் உற்சாகம் பீறிடக் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் படிக்க …அமெரிக்க-இந்திய இராணுவ-அணுசக்தி ஒப்பந்தங்கள்: அமெரிக்க அடிமைத்தனத்தில்

08_2005.jpgகுர்கானில் ஹோண்டா நிறுவனத் தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்தியுள்ள தாக்குதலுக்கு விவரணை தேவையில்லை. இராக் மக்கள் மீது அமெரிக்க இராணுவமும் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் இராணுவமும் நடத்திவரும் தாக்குதல்களில் வெளிப்படும் கொலைவெறியை இந்தத் தாக்குதலிலும் நாம் காண்கிறோம். தடிக் கம்பிற்குப் பதிலாக போலீசின் கையில் துப்பாக்கிகள் மட்டும் இருந்திருக்குமானால், இரண்டாவது ஜாலியன்வாலா பாக்கை அந்த மண் இந்தியாவிற்கு வழங்கியிருக்கும்.

மேலும் படிக்க …குர்கான்: மறுகாலனியாக்கத்தின் ஜாலியன்வாலா பாக்?

08_2005.jpgதமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான். இவர்கள் தங்களின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அரசிடம் போராடிப் பெற்ற சலுகைதான் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) ஆகும். அரசு அளிக்கும் இந்த உதவித் தொகை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்டால்தான், அவர்களால் தமது கல்விச் செலவுகளை ஈடுசெய்ய முடியும். ஆனால், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சென்ற (200405) ஆண்டிற்கான உதவித் தொகை இந்த ஆண்டு ஜூலை வரை வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க …மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் போராடிய பு.மா.இ.மு. சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் கார்த்திகேயனைத் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

09_2005.jpgகுர்கானில் ஹோண்டா தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்தியுள்ள கொலைவெறியாட்டத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை ஆதரித்தும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராட தொழிலாளி வர்க்கத்துக்கு அறைகூவல் விடுத்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

மேலும் படிக்க …குர்கான்: தொழிலாளர்கள் மீது போலீசின் கொலைவெறியாட்டம் - பு.ஜ.தொ.முவின் கண்டன ஆர்ப்பாட்டம்

09_2005.jpg கோவை மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, பஞ்சாலைத் தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம். இந்நகராட்சியின் ஆணையாளரான திரு.கே.ஆர். செல்வராசு அவர்கள் இலஞ்ச, ஊழல், அதிகார முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற நகராட்சியாக, இதை மாற்றிய "பெருமை'க்குரியவர் என்றால் மிகையல்ல.

 

நகராட்சி ஊழியர்கள், தனது வீட்டின் எல்லா வேலைகளையும் செய்வதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள்! நகராட்சி வாகனங்கள், தனது குழந்தைகள் பள்ளி சென்று வரவும் தனது மனைவிஉறவினர்கள் கோயில் குளங்களுக்குச் சென்று வருவதற்காக மட்டுமே வாங்கப்பட்டவை! வீட்டு வரியா?

மேலும் படிக்க …ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் உடுமலை நகராட்சி

09_2005.jpg"நக்சல்பாரி'' என்ற வார்த்தையைக் கூட தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் உச்சரிக்கக் கூடாது என்று உத்தரவு போட்டு வரும் போலீசுத்துறைக்குப் பெரும் சவாலாக அமைந்தது, புரட்சிகர அமைப்புகளின் சுவரெழுத்துக்கள். ""தண்ணீரைத் தனியார்மயமாக்காதே! தண்ணீரை வியாபாரமாக்காதே! தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்! நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம்!'' என்று

மேலும் படிக்க …நெருப்பைப் பொட்டலம் கட்ட முயற்சிக்கும் போலீசு

09_2005.jpg"தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்துடன் தண்ணீரைத் தனியார்மயமாக்கும் மறுகாலனியாதிக்கக் கொள்கையை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் பிரச்சார இயக்கத்தைத் தடுக்க, நெல்லை மாவட்ட போலீசுத்துறை கீழ்த்தரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி, தெருமுனைக் கூட்டங்கள், தட்டுவண்டிப் பிரச்சாரம் முதலானவற்றும் அனுமதி மறுத்து அடாவடித்தனம் செய்து வருகிறது, நெல்லை போலீசு.

மேலும் படிக்க …"கோக்'கின் அடியாள்படையாக தமிழக போலீசு

09_2005.jpgநெல்லை கங்கை கொண்டானில் கொக்கோ கோலா ஆலை நிறுவப்படவுள்ளதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து செப்.12ஆம் தேதியன்று மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளன. இப்போராட்டத்தை விளக்கி தமிழகமெங்கும் இவ்வமைப்புகள் கடந்த இரு மாதங்களாக வீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

மேலும் படிக்க …தண்ணீரைத் தனியார்மயமாக்காதே! தண்ணீரை வியாபாரமாக்காதே! ஏகாதிபத்திய குறியீடு "கோக்'கிற்கு எதிராக தமிழகம் தழுவிய வீச்சான இயக்கம்

09_2005.jpg "மக்கள் கண்காணிப்பகம்' என்ற ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனத்தை அம்பலப்படுத்தி பு.ஜ. இதழில் ஆதாரத்தை வெளியிடும் போதே, ""இதற்கும் சேர்த்து அப்பாவி ஊழியர்களைச் சித்திரவதை செய்யும் முன், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா என்பது பற்றி சிந்தியுங்கள், ஹென்றி டிபேன்'' என்று முடித்திருந்தோம். நாம் சொன்னது போலவே, ஊழியர்களிடம் விசாரணைகளும் பழிவாங்கல்களும் தொடங்கி விட்டன. பு.ஜ. எழுதியவை பொய் என்றால், ஒரு ஆதாரத்தை வெளியிட்டதுமே அரண்டு போயிருப்பது எதற்காக?

மேலும் படிக்க …மக்கள் கண்காணிப்பகத்தின் மகாத்மியம் : உருக்கு நீதி; ஊழியருக்கு அநீதி!

09_2005.jpgபோபால் நகரில் நடந்த விஷ வாயுப் படுகொலை போல, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகையில் உள்ள விஸ்கோஸ் ஆலையினால் அப்பகுதியே சுடுகாடாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த ஆகஸ்டு 15ம் தேதி இரவு, விஸ்கோஸ் ஆலையிலுள்ள பேரபாயம் விளைவிக்கக் கூடிய கார்பன்டைசல்பைடு அமிலத் தொட்டிகளின் அருகில், திறந்தவெளியில் கொட்டிக் கிடந்த கந்தகக்

மேலும் படிக்க …சிறுமுகை நகரம் : இன்னுமொரு போபால்? சௌத் இந்தியா விஸ்கோஸ் ஆலையில் கேட்பாரின்றிக் கிடக்கும் உயிர்கொல்லி இரசாயனப் பொருட்கள் - கோவை மாவட்ட மக்களின் உயிருக்கே உலை வைக்கின்றன்

09_2005.jpg  "என்னைப் போன்றவர்கள் அமெரிக்காவின் சார்பாக உலகெங்கும் பல ஆண்டுகள் நச்சுக் காற்றை விதைத்தோம்.... அவை இன்று ஒன்றுதிரண்டு புயலாய் வீசுகின்றன....'', என்கிறார் ஜான் பெர்கின்ஸ். "செப்டம்பர் 11' நிகழ்வானது, உலக வர்த்தகக் கட்டிடங்களை மட்டுமல்ல் ஜான்பெர்கின்ஸ் போன்றோரின் துரோகங்களையும் குத்திக் கிழித்துவிட்டது; பலரது "கோமா' உறக்கங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டது.

மேலும் படிக்க …''கம்பெனி" நாயகமே அமெரிக்காவின் ஜனநாயகம் : அமெரிக்க அரசின் ஒரு முன்னாள் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

09_2005.jpgதண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வீறுகொண்டு ஏழத் தொடங்கிவிட்டன

நாடு முழுவதும் ஏன், உலகெங்கும் தண்ணீர் தனியார்மயமாவதையும் வியாபாரமாவதையும் எதிர்த்து போராட்டங்கள் பெருகி வருகின்றன. உயிருக்கே ஆதாரமான தண்ணீரைத் தனது கொள்ளை லாப வெறிக்காக சரக்காக்கிற "ஷைலக்'குகளான பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை ஒழித்துக் கட்டாத வரை இப்போராட்டங்கள் ஓயப் போவதுமில்லை.

மேலும் படிக்க …தண்ணீர் யாருக்குச் சொந்தம்? மக்களுக்கா உலக வங்கிக்கா?

09_2005.jpg"எங்கள் பகுதியில் பு.ஜ. இதழைப் பிரச்சாரம் செய்து நாங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது, ஒரு பாமர விவசாயி, பு.ஜ. இதழின் அட்டைப்படத்தைப் பார்த்து பக்தியோடு கும்பிட்டு, இந்த அனுமார் சாமி புத்தகத்தை எனக்கும் கொடுங்கள் என்று கேட்டார். இது சாமி இல்லை; கொத்தடிமை ஆசாமி என்று நாங்கள் அவரிடம் விவரமாக விளக்கிக் கொண்டிருந்ததைக் கேட்டு, அங்கு 1020 பேர் கூடிவிட, அதுவே ஒரு தெருமுனைக் கூட்டம் போல அமைந்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய உதவியது. அமெரிக்க அடிமை "அணு' மன்மோகன் சிங்கை அம்பலப்படுத்திய அட்டைப்படம் வெகுசிறப்பு.
இராணி, போச்சம்பள்ளி.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

09_2005.jpgஒரிசா மாநிலம் தாது வளமும் கனிம வளமும் நிறைந்த பூமி. நாட்டின் மூலவளத்தில் இரும்புத்தாது 32.9 சதவீகிதம், பாக்சைட் 49.95மூ, செறிவான குரோமியம் 98.4சதவீகிதம், நிலக்கரி 24.8 சதவீகிதம ; சுண்ணாம்புக் கல் 28 சதவீகிதம், அலுமினியத் தாது 52 சதவீகிதம் என தாது வளமும் கனிம வளமும் செறிந்த பூமி. இம்மூலவளங்களைத் தனியார் முதலாளிகள் சூறையாடுவதற்காகவே, அம்மாநில அரசு இதுநாள்வரையில் தனது மூலவளத்தை முறைப்படுத்தும் கொள்கையோ சுரங்கத் தொழில் கொள்கையோ வகுக்கவில்லை. இம்மூலவளங்களைச் சூறையாடும்

மேலும் படிக்க …வாழ்வைப் பறித்து முன்னேற்றமா?

09_2005.jpgஇதர மாநிலங்களின் முதல்வர்கள் ஏதேனும் ஒரு தொழிற்துறையை அந்நிய நிறுவனங்களின் கொள்ளைக்காக தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள் என்றால், ஒரிசா மாநிலத்தையே தென்கொரிய நிறுவனமான ""போஸ்கோ'' வுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து புதிய "சாதனை' படைத்துள்ளார், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக். கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போகாங் ஸ்டீல் கம்பெனி எனப்படும் ""போஸ்கோ'' (கழுகுஇழு) நிறுவனத்துடன் ஒரிசா மாநில அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் கனிம வளமும் தாதுவளமும் நிறைந்த ஒரிசா மாநிலம் கேள்விமுறையின்றிச் சூறையாடப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முழுமையடைந்து விட்டன.

மேலும் படிக்க …போஸ்கோ ஒப்பந்தம்: தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட ஒரிசா மாநிலம்

10_2005.jpgஉலக வர்த்தகக் கழகத்தின் கட்டளையின்படி, சிறுநடுத்தர வியாபாரிகள் மீது மதிப்புக் கூடுதல் வரி என்ற தாக்குதலைத் தொடுத்துள்ள மைய அரசு, இப்பொழுது, சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கத் திட்டம் போட்டு வருகிறது. ""சூப்பர் மார்க்கெட்'' கடைகளைத் திறந்து நடத்தி வரும் டாடா போன்ற தரகு முதலாளிகள், இதற்கான அனுமதியை உடனே அளிக்குமாறு அரசை நிர்பந்தித்து வருகிறார்கள். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்டு உலகின் 12 நாடுகளில் 4,806 ""சூப்பர் மார்க்கெட்''

மேலும் படிக்க …சில்லறை வியாபாரத்தில் அந்திய முதலீடு ; சிறு வியாபாரிகளை ஒழிக்கும் சிலந்தி வலை

09_2005.jpgசென்னையில் இருந்து கோவைக்குச் செல்லும் சேரன் விரைவுத் தொடர் வண்டியில், கடந்த ஜூலை மாதம் ஒரு இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் பத்திரிகைகள் அனைத்தும் பரபரப்போடு வெளியிட்டன. அதேசமயம், அந்த இளைஞர் ஓடும் ரயிலில் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணத்தை எவ்விதப் பரபரப்பும் இன்றி, அடக்கியே வெளியிட்டன.

மேலும் படிக்க …தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாச் சட்டம் : புண்ணுக்கப் புனுகு தடவும் : காங்கிரசின் மோசடி

09_2005.jpgநாட்டிலுள்ள கல்வித்துறைப் பெருமுதலாளிகளுக்கு இந்த ஆண்டு "சுதந்திர தின'ப் பரிசொன்றை உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிறது. அவர்கள் தமது பகற்கொள்ளையை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கு கட்டற்ற சட்டபூர்வ உரிமம் வழங்கும் தீர்ப்பு மூலம் அவ்வாறு செய்துள்ளது. சிறுபான்மைப் பிரிவு மற்றும் சிறுபான்மைப் பிரிவுக்கானவை அல்லாத, அரசு உதவி பெறாத எந்தவொரு தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனமானாலும் அரசுக்கான இடஒதுக்கீடு மற்றும் சமூக ரீதியிலான (தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள், பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கான) இட ஒதுக்கீடுகளை இரத்து செய்து விட்டது. அரசின் கொள்கைப்படியான இடஒதுக்கீடு முறையைத் "திணிப்பது' அவற்றின் உரிமையிலும் தன்னாட்சியிலும் கடுமையான ஆக்கிரமிப்புச் செய்வதாகும் என்று பாய்ந்திருக்கிறது, உச்சநீதிமன்றம்.

மேலும் படிக்க …கல்விக் கொள்ளையர்களுடன் கைகோர்த்த உச்சநீதி மன்றம்

09_2005.jpg'எனக்கு அந்த உண்மை தெரியவேண்டும்; ஈராக் மீது ஏன் இந்தப் போர்?" என்று தனது அன்பு மகனைப் பறிகொடுத்த வேதனையில் கேட்கிறார் அந்த அமெரிக்கத் தாய். துயரத்தை நெஞ்சிலே சுமந்து கொண்டு, பயங்கரவாத அதிபர் புஷ்சுக்கு எதிராகத் தன்னந்தனியாக அவர் நடத்திய உறுதியான போராட்டம், அமெரிக்க மக்களின் மனசாட்சியை உலுக்கி, போர் எதிர்ப்புப் போராட்டத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் வகாவில்லி நகரைச் சேர்ந்த அந்தத் தாயின் பெயர் சின்டி ஷீஹன்.

மேலும் படிக்க …அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்!

11_2005.jpg செப்டம்பர் 12ஆம் நாள்! மறுகாலனியாக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான சான்றான அமெரிக்க கோக்கிற்கு எதிராகவும் கடந்த மூன்று மாதங்களாக புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் மேற்கொண்ட பிரச்சார இயக்கத்தின் இறுதிக் கட்டமாக நெல்லையில் அமைந்த பேரணியும் மறியல் போராட்டமும், இம்மூன்று மாத இயக்கத்தின் வீச்சிற்கும் வீரியத்திற்கும் மிகப் பொருத்தமாக அமைந்தனவென்றால் மிகையல்ல.

மேலும் படிக்க …தண்ணீரை வியாபாரமாக்காதே! தண்ணீரைத் தனியார்மயமாக்காதே! நெல்லையைக் குலுக்கிய 'கோக்" எதிர்ப்புப் போராட்டம்

10_2005.jpgதாமிரவருணி ஓடும் திருநெல்வேலி நகரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கயத்தாறில் (ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட ஊர்) 10 அல்லது 15 நாளைக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. தாமிரவருணியை நம்பியிருக்கும் சீவலப்பேரி குடிநீர் திட்டத்தால் பயன் அடையும் சிவகாசி, அருப்புக்கோட்டை நகரங்களில் 15 நாளைக்கு ஒருமுறை குழாயில் தண்ணீர் வந்தாலே அதிர்ஷ்டம்தான்.

மேலும் படிக்க …தண்ணீரை மட்டுமல்ல: உயிரையும் உறிஞ்சும் 'கோக்"!

10_2005.jpg'நான் 2001இல் நைஜீரியா நாட்டில் வேலை செய்து வந்தபொழுது, குழாயில் வரும் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தேன். என்னுடன் வேலை செய்து வந்த அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி, இதைக் கண்டு பதறிப் போய், இந்தத் தண்ணீரெல்லாம் வாயிலேயே படக்கூடாது என எனக்கு அறிவுரை செய்தார். ஒரு ஏழை நாட்டைச் சேர்ந்த சாதாரண தொழிலாளி இப்படிச் சொல்லியது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படிப்பட்ட மாற்றங்கள் நம்மைச் சுற்றி நடந்து வருவதைப் பற்றி நாம் விழிப்புணர்வு கொள்ளாமல் இருக்கிறோம்" எனப் புதிய தாராளவாதக் கொள்கை நமது கலாச்சாரத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களைத் தனது உரையெங்கும் ஆழமாக விவரித்தார், தோழர் ஆனந்த் தெல்தும்ப்டெ.

மேலும் படிக்க …'மனித சிந்தனையை நஞ்சாக்கும் 'கோக்" கலாச்சாரம்!" - தோழர் ஆனந்த் தெல்தும்ப்டெ, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, மும்பை.

10_2005.jpg'தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான ஒரிசாவின் போராட்ட அனுபவத்தை, நான், தமிழகத்திலும், இந்தியாவெங்கிலுமே காண்கிறேன்" எனக் குறிப்பிட்ட ராஜேந்திர சாரங்கி, உலக வங்கியின் கட்டளைப்படி நீர் ஆதாரங்களைத் தனியார்மயமாக்கும் முதல் கட்டமாக, ஒரிசாவில் 'பாணி (தண்ணீர்) பஞ்சாயத்துக்கள்" கட்டப்பட்ட வரலாற்றையும், தண்ணீரைத் தனியார்மயமாக்க தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு விவரித்தார்.

மேலும் படிக்க …'தண்ணீர் தனியார்மயம் என்பது ஏழைகளின் வாழ்வுரிமையைப் பறிப்பதாகும்!" - ராஜேந்திர சாரங்கி, அமைப்பாளர், லோக் பாக்யா, புவனேசுவர், ஒரிசா.

10_2005.jpgமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோக் நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்த சி.எஸ்.மணி, 'கோக், கங்கைகொண்டானுக்கு வருவது வெளியே தெரிந்தவுடனேயே, பல்வேறு அமைப்பினரும், அறிஞர்களும் எங்கள் பகுதிக்கு வந்து, இதனால் ஏற்படும் கேடுகளைச் சொன்னபோது, அதை நாங்கள் நம்பவில்லை. அதேசமயம், எங்கள் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் என 40 பேர் சேர்ந்து

மேலும் படிக்க …'எங்கள் பகுதி பாலைவனமாகி விடக் கூடாது என்பதற்காகப் போராடுகிறோம்" - திரு. சி.எஸ்.மணி, மானூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், கங்கை கொண்டான்

10_2005.jpg'குடிப்பதற்கு குடிநீர் இல்லை; பாசனத்திற்கு நீர் இல்லை; காவிரி நீர் இல்லை; முல்லைப் பெரியாறு தண்ணீர் நமக்கு இல்லை இப்படி, தமிழகம் இருக்கும் நிலையில், ஆற்றுநீரை அந்நியர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாமா?" என்று கேள்வி எழுப்பிய த.வெள்ளையன்,

 

'தமிழகமெங்கும் ம.க.இ.க.வின் சுவரெழுத்துக்களைப் பார்த்தேன். எந்தவொரு அரசியல் கட்சியாவது மக்கள் பிரச்சினைகளுக்காகச் சுவரெழுத்து எழுதியதுண்டா? மாறாக, தலைவர்களின் பிறந்தநாளுக்குத் தான் எழுதுகிறார்கள்" என ஓட்டுக்கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதை விவரித்தார்.

மேலும் படிக்க …'தண்ணீர் கொள்ளைக்குக் காரணம், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம்!" - த. வெள்ளையன், தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

10_2005.jpg 'ஆந்திர மாநிலத்தில் கோக்கையும், பெப்சியையும் பயிருக்குப் பூச்சி மருந்தாக அடிக்கிறார்கள். பூச்சியைக் கொல்லும் பெப்சியை ஃ கோக்கை நம்மைக் குடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்" என இந்திய கோக் பானங்களின் தரத்தை அம்பலப்படுத்திய வழக்குரைஞர் திருமலைராசன், 'இந்தியச் சட்டங்களை மிக மென்மையாக மாற்ற வேண்டும் எனப் பன்னாட்டு நிறுவனங்கள் கோருகின்றன. இதற்கு ஏற்ப உரிமையியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். இதற்கு அடுத்து, இலவச சட்டப் பணிக் குழுவை, பேரம் பேசித் தீர்த்து வைக்கும் அமைப்பாக மாற்ற முயற்சி செய்தார்கள். இதற்கு எதிராக, அகில இந்திய வழக்குரைஞர் சங்கம் வழக்கு தொடுத்தது."

மேலும் படிக்க …'கோக் அடிவருடி அதிகாரிகளை அம்பலப்படுத்த வேண்டும்" - வழக்குரைஞர் ப.திருமலைராசன், பொதுச்செயலர், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கீழமை நீதிமன்றங்களின் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டமைப்பு.

10_2005.jpg'மக்கள் கண்காணிப்பகம்: அமெரிக்க சாத்தானின் கள்ளக் குழந்தை" என்ற தலைப்பில் ஜூலை 2005 புதிய ஜனநாயகம் இதழில் அம்பலப்படுத்தும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதற்கு மறுப்புரை எழுதி அனுப்பியிருக்கும் மக்கள் கண்காணிப்பகம் அதைச் சுற்றுக்கு விட்டிருப்பதாக அறிகிறோம்.

 

மிகவும் புத்திசாலித்தனமாக எழுதுவதாகக் கருதிக் கொண்டு மக்கள் கண்காணிப்பகம் அளித்துள்ள மறுப்புரை, உண்மையில், அதன் ஏவலர்களால் இடப்பட்டிருக்கும் பணியாகிய அடுத்துக் கெடுக்கும் நயவஞ்சக நரித்தனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க …கூலிக்கு மாரடிப்பதுதான் தன்னார்வத் தொண்டா?

10_2005.jpg'கங்கை கொண்டானில் கோக் ஆலையை அனுமதிக்கக் கூடாது என்று கோரி, 1,000 வழக்குரைஞர்கள் கையெழுத்துப் போட்ட மனு ஒன்றை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்திருக்கிறோம். ஆனால், மனு கொடுப்பதால் மக்கள் பிரச்சினை தீர்ந்துவிடாது; சட்டத்தின் மூலமும் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. மக்கள் பிரச்சினைகளை மக்களின் போராட்டங்கள் மூலமே தீர்க்க முடியும்" எனக் குறிப்பிட்ட அவர், இதனைத் தனது பொது வாழ்க்கை அனுபவத்தில் இருந்தும், வழக்குரைஞர் தொழில் அனுபவத்தில் இருந்தும் உணர்ந்து கொண்டதாகக் கூறினார்.

மேலும் படிக்க …'இது மக்களாட்சியல்ல் பன்னாட்டு நிறுவனங்களின் அடிவருடி ஆட்சி" - வழக்குரைஞர் தங்கசாமி, நெல்லை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்

10_2005.jpg'இந்திய நீதிமன்றங்களின் வர்க்கச் சார்பு" குறித்து உரையாற்றிய வழக்குரைஞர் லஜபதிராய், இதற்கு ஆதாரமாக, 1970இல் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர் ஈ.எம்.எஸ்., ஒரு நீதிமன்றத் தீர்ப்பை, வர்க்கச் சார்பு கொண்டது என விமர்சித்ததற்காகத் தண்டிக்கப்பட்டது தொடங்கி, இன்றுவரை உள்ள பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டினார்.

 

'நர்மதை நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி நர்மதை பாதுகாப்பு இயக்கம் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், நர்மதை நதி பழங்குடி

மேலும் படிக்க …'நீதிமன்றம் பொதுவானது என்பது மாயை!" - திரு. தி. லஜபதிராய், வழக்குரைஞர், மதுரை உயர்நீதி மன்றம், மதுரை.

10_2005.jpg 'தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்!" என்ற முழக்கத்தின் அடிப்படையில், கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் இயக்கத்தை, கோக்கிற்கு எதிரான இயக்கமாக மட்டும் சுருக்கிப் பார்க்கக் கூடாது; தண்ணீரை இலாபம் தரும் பண்டமாக மாற்றும், நீர் ஆதாரங்களைத் தனியார் ஃ பன்னாட்டு முதலாளிகளின் தனிச்சொத்தாக ஒப்படைக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களின் ஓர் அங்கமாக இதனைக் காண வேண்டும்'' எனத் தனது தலைமை உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்ட தோழர் மருதையன், 'போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு, தாமிரவருணி கோக்கிற்கு விற்கப்படுவதை எதிர்த்துப் போராடும் பல்வேறு அமைப்புகளுக்கும், நமக்கும் உள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியிருக்கிறது. அவர்கள் இதனைத் தவறான பொருளாதாரக் கொள்கையாகப் பார்க்கிறார்கள். நாம் இதனை மறுகாலனியாதிக்கத்தின் அங்கம் எனக் குறிப்பிட்டு எதிர்த்துப் போராடுகிறோம்" என விளக்கினார்.

மேலும் படிக்க …'தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் அங்கம்; அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது அவமானம்!" - தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க.

10_2005.jpgமறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான 'கோக்"கிற்கு எதிராகவும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் கடந்த மூன்று மாதங்களாக நடத்திவந்த பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக,

மேலும் படிக்க …திருநெல்வேலி கருத்தரங்கம் : கோக் நுழைகிறது தாமிரவருணி எரிகிறது

10_2005.jpg'இது நாலுவழிச்சாலை மட்டுமல்ல. பொருளாதார முன்னேற்றத்துக்கான நல்வழிச்சாலை" என்று கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று நாங்குநேரி கிருஷ்ணன் புதூரில் நடந்த நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. காசியையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் (எண்:7) கோவில்பட்டியிலிருந்து நெல்லை வழியாக பணகுடி வரையிலான 123 கி.மீ. நீள இருவழிச் சாலையானது ரூ. 630 கோடியே 42 லட்சம் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான விழாவில் கலந்து கொண்டு அடிக்கல்லைத் திறந்து வைத்த கருணாநிதி, இது நல்வழிச்சாலைக்கான கால்கோள் விழா என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க …அடிப்படைக் கட்டமைப்பு துறையின் 'வளர்ச்சி" : ட்டுண்ணித்தனத்தின் பதிய பரிமாணம்

10_2005.jpg'நாங்கள் எங்கள் கொள்கையைத் தலைகீழாக 180 டிகிரிக்கு மாற்றிக் கொண்டு விட்டோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, இப்போது இன்னும் ஒருபடி முன்னேறி உலகமயத்துக்கு வெளிப்படையாகவே பக்கமேளம் வாசிக்கக் கிளம்பிவிட்டார்.

 

தமிழகத்தைத் தொழில்மயமாக்க ஹ_ண்டாய் கார் தொழிற்சாலையைக் கொண்டு வந்தேன்; நோக்கியா செல்போன் ஆலையைக் கொண்டு வந்தேன் என்றெல்லாம் கருணாநிதியும் ஜெயலலிதாவும்

மேலும் படிக்க …ஏகாதிபத்திய சேவையில் போட்டா போட்டி: சிவப்புத் தரகர்களாக சி.பி.எம்.

10_2005.jpgபொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பதைத் தங்களது பிறப்புரிமையாக கருதிக் கொண்டு கொட்டமடிக்கும் அ.தி.மு.க. பொறுக்கி கும்பல், கழிப்பறையைக்கூட விட்டு வைப்பதில்லை. சிவகிரி ஊராட்சியில் பெண்களுக்கென புதிதாக ஒரு கழிப்பறை கட்டப்பட்டது. இது அ.தி.மு.க. சார்பான மகளிர் சுய உதவிக் குழுவுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை எடுத்த அக்குழு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகையைவிட கூடுதலாக வசூலித்தது. இதனை எதிர்த்துக் கேட்ட பெண்களைக் கேவலமாகத் திட்டுவது, கழிப்பறையை இழுத்துப் பூட்டி விடுவது என அராஜக ஆட்டம் போட்டது.

மேலும் படிக்க …பு.மா.இ.மு. தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! அ.தி.மு.க. ரவுடிகள் போலீசு கூட்டுச்சதி!

10_2005.jpgசிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் "டெலிபோன் கேபிள்' புதைப்பதற்கு அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அந்நகரின் மேல்கரை பிரதான சாலையை பொக்லைன் இயந்திரம் கொண்டு இரண்டாகப் பிளந்தது. மீண்டும் தார்ச்சாலை அமைக்காமல், அதில் அவசரமாக மண்ணை மூடிவிட்டு ஓடிவிட்டது.

மேலும் படிக்க …அதிகாரிகளை மண்டியிட வைத்த மக்கள் போராட்டம்!

10_2005.jpgகடந்த ஆகஸ்டு 29 அன்று கடுமையான ஐந்தாம் ரக, தீவிரச் சூறாவளி புயல் கத்ரீனா தென்கிழக்கு லூசியானா நியூ ஆர்லீன்ஸ், தெற்கு மிஸிஸிபி ஆகிய இரண்டு அமெரிக்க மாகாணப் பகுதிகளை மோதித் தாக்கியது. கடந்த ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவு இயற்கைச் சீற்றம் கடுமையாக இருந்திருக்கிறது.

 

புயலின்போது கடலின் அலைகள் இருபது அடி உயரம் எழும்பி ஆர்ப்பரித்தது; கரையோரம் பழமையில் எழுப்பப்பட்ட அரண்கள் தவிடு பொடியாக்கப்பட்டன் நியூ ஆர்லீன்சின் எண்ணெய்க் கிணறுகள் ஸ்தம்பித்தன் இரண்டு அணு உலைகள் முடங்கின. ஊருக்குள் பாய்ந்த கடலலை வீடுகளை மூழ்கடித்தது; நகரத்தை நாலாபுறமும் சூறையாடியது.

மேலும் படிக்க …அமெரிக்க மாயைக் கலைத்த கத்ரீன்

10_2005.jpgமன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது அறிவித்தார்: 'இந்தியாவை விற்பதற்காக வந்திருக்கிறேன்!" அப்போது யாரும் அந்தச் சொற்களை நேரடிப் பொருளில் எடுத்துக் கொள்ளவில்லை. பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியைத்தான் அப்படிச் சொல்கிறார் என்றே பலரும் நம்பினார்கள். ஈரானுடனான இந்தியாவின் இயற்கை எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்த்தபோது, அதே மன்மோகன் சிங் தனது போலி கம்யூனிஸ்டு கூட்டாளிகளுக்கு வாக்குறுதி கொடுத்துச் சொன்னார், 'இந்தியா விற்பனைக்கு

மேலும் படிக்க …அமெரிக்க சேவையில் இந்தியாவின் துரோகம்

10_2005.jpgஅரியானா மாநிலத்தில் ஜாட் சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பு பகுதியில் புகுந்து பகற் கொள்ளையில் ஈடுபட்டதோடு, அப்பகுதியையே கொளுத்திச் சாம்பல் மேடாக்கியது.

 

அரியானா மாநிலத்தின் பாணிபட் மாவட்டத்தில் உள்ள நகரம், கோஹனா. அந்நகரத்தின் நெரிசல் மிகுந்த வர்த்தகப் பகுதியில் உள்ளது தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வால்மீகி மற்றும் ஆர்யா என்ற இரு குடியிருப்புப் பகுதிகள். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி மதியம் பட்டப்பகலில் 1500க்கும் மேற்பட்ட ஜாட் சாதிவெறிக் கும்பல் ஒவ்வொரு வீடாகச் சென்று கொள்ளையடித்தது. முடிவில், குடியிருப்புகளின் மீது பெட்ரோல் டின்களை வீசி மொத்தமாகக் கொளுத்தியது.

மேலும் படிக்க …''ஜாட்" சாதிவெறி பெரு நெருப்பில் கருகும் தலித் மக்களின் வாழ்வு

11_2005.jpgநாலுவழிச் சாலை மக்களுக்கான நல்வழிச் சாலை அல்ல. இச்சாலைகளை உபயோகிக்க கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக உள்ள நடுத்தர வர்க்கம், இந்த உலகமயமாக்கம் தன்னையும் தகர்த்துக் கீழே தள்ளும் என்பதை உணரும்போது மட்டுமே, இப்பொருளாதார வளர்ச்சி யாருக்கானது என்பதைப் புரிந்து கொள்ளும். அல்லாதவரை ""நாடு, மக்கள்'' எனக் குறிப்பிடும்போது தம்மை மட்டுமே முன்னிறுத்தும் இந்த வகையினர், கட்டுரை உணர்த்தும் பொருளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, முழுமையான உள்விவரங்களுடன் கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஜீவா, சென்னை.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

11_2005.jpgகூலித் தொழிலாளர்களை ஒரு சங்கமாகத் திரட்டுவதென்பது மிகவும் இடர்ப்பாடுகள் நிறைந்த பணி. அப்படியே சங்கமாகத் திரண்டாலும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் சீரழிவுப் போக்குகளிலிருந்து மீட்டு அரசியல் ரீதியாகவும் அமைப்புக் கட்டுப்பாட்டுடனும் சங்கத்தைக் கட்டி வளர்ப்பதென்பது மிகவும் கடினமான பணி. இத்தகைய பெருஞ்சுமையைத் தோள்களில் தாங்கி, சென்னை ஆலந்தூர் அரிசி மண்டிசுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமாக கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க …நம்பிக்கையான தொடக்கம்!

11_2005.jpgநாடு முழுவதும் ரேசன் கடைகளை நம்பி வாழும் ஏழை மக்கள் புழுத்த அரிசிக்கும் மண்ணெண்ணெய்க்கும் அடிதடியில் சாலை மறியலில் இறங்கித்தான் தமது ஒதுக்கீட்டைப் பெற வேண்டிய அவலம் தொடர்கிறது. கிராமப்புறங்களில் உள்ள ரேசன் கடைகள் பகுதி நேரமாக இயங்குவதோடு, ஒரு விற்பனையாளருக்கு 5,6 ஊர்களில் உள்ள கடைகளுக்குப் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஊர்களில் ரேசன் கடைகள் மூடிக் கிடப்பதும் திடீரென திறக்கப்படுவதும், இதனால் பெரும்பான்மையானோருக்கு அரிசியும்

மேலும் படிக்க …""உலக வங்கி உத்தரவுக்கு அடிபணிந்து ரேசன் கடைகளை இழுத்து மூடாதே!''

11_2005.jpg"கராத்தே'' தியாகராஜன் சென்னை மாநகர மேயர் பொறுப்பில் இருக்கும் துணை மேயர். ஏறக்குறைய ஒருமாத காலம் தலைமறைவாக இருக்கிறார். திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை, தில்லி என்று ஓடிக் கொண்டிருக்கிறார். செய்தியாளர்களிடம் அன்றாடம் தொலைபேசியில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் தனக்கு வேலை எதுவும் இல்லாததால் கிளம்பி வந்து விட்டதாகக் கூறுகிறார்.

மேலும் படிக்க …ஜெயா - கராத்தே விவகாரம்: மர்ம ஆட்சியின் கூத்து!

11_2005.jpgதுரத்தி வரும் கூட்டத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக் கொள்ளும் முயற்சியாக திருடன் கடைப்பிடிக்கும் பிரபலமான தந்திரம், ""திருடன், திருடன்! அதோ திருடன்! ஓடறான், விடாதீங்க, பிடிங்க, பிடிங்க!'' என்று கூச்சல் போட்டுக் கொண்டே ஓடுவானாம்.

 

அதைப் போன்று, த.தே.பொ.க. என்ற பெயரில் உள்ள மணியரசன் கும்பல் தானே ஒரு பார்ப்பனப் பாதந்தாங்கியாக இருந்து கொண்டு, ம.க.இ.க. முதலிய புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளைப் பார்த்து ""மறைமுகப் பார்ப்பனியம்'' என்று கூச்சல் போடுகிறது. அக்கும்பலோடு சேர்ந்து அதன் பங்காளிகளும் கூட்டு ஒப்பாரி வைக்கின்றனர்.

மேலும் படிக்க …பாரதீயம், சாதியம், இனவாதம், திரிபுவாதம் த.தே.பொ.க.வின் கலக்கல் தயாரிப்பு

11_2005.jpgநகரத்தை அழகுபடுத்துவதாக கூறிக் கொண்டு, உலக வங்கியிடம் வாங்கிய கடனுக்காக ""போக்குவரத்து நெருக்கடி'' என்ற பொய்க் காரணத்தைக் காட்டி, பண்டிகைக் காலத்திலும் தரைக் கடைகள் போடத் தடை விதித்துள்ளது, திருச்சி மாநகராட்சி. என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் பகுதியில் பல தலைமுறைகளாக தரைக்கடை போட்டு வியாபாரம் செய்து வந்த சிறுவியாபாரிகள் போலீசாராலும் மாநகராட்சியாலும் தடுத்து விரட்டப்பட்டதை எதிர்த்தும், மீண்டும் தரைக்கடைகள் போட அனுமதி கோரியும் கடந்த ஐந்தாண்டுகளாக தரைக்கடை வியாபாரிகள் போராடி வருகின்றனர். தற்போது பண்டிகைக் கால சூழலிலும் கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …""தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வுரிமையைப் பறிக்காதே!''

11_2005.jpgஇந்தியாவின் அணுசக்தி கொள்கையை, இனி அமெரிக்காதான் தீர்மானிக்கப் போகிறது என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. இது போனால் கூட, மற்ற கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமையும், சுதந்திரமும் இந்திய அரசிற்கு இருக்கிறா என்றால், இந்தியாவில் ஓடும் சாக்கடைகளைச் சுத்தப்படுத்துவதைக் கூட நாங்கள்தான் தீர்மானிப்போம் என்கிறது உலக வங்கி. இந்திய அரசு, தனது குடிமக்களுக்குக் குடிநீர் வழங்குவது; கழிவுநீர் அகற்றுவது போன்ற சுகாதாரப் பணிகளைச் செய்வதை எதிர்காலத்தில் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்; என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்

மேலும் படிக்க …குடிநீர் பிரச்சினை குறித்த உலக வங்கியின் அறிக்கை: ஓநாயின் கவலை

11_2005.jpgநோக்கியா, ஹ_ண்டாய், ஃபோர்டு முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க உடனடியாக நிலம் ஒதுக்கிக் கொடுத்து, பல்வேறு சலுகைகளையும் செய்து தரும் தமிழக அரசு, கடந்த 23 ஆண்டுகளாக வீட்டுமனை கோரிப் போராடும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

மேலும் படிக்க …பன்னாட்டுக் கம்பெனிக்கு வெண்ணெய் தாழ்த்தப்பட்டோருக்கு சுண்ணாம்பு

11_2005.jpgஜூலை 25ஆம் தேதி ஹோண்டா தொழிலாளர்கள் மீது போலீசு நடத்திய வெறித்தாக்குதலை நாடே கண்டது. இந்தப் போலீசு அராஜகத்தின் எதிர்வினையாக போலீசைத் திருப்பித் தாக்கிய தொழிலாளி வர்க்கத்தின் கோபத்தை, வீரமதி என்ற பெண்ணின் வீரத்தை, இக்காட்சிகளைக் கண்ட தொழிலாளி வர்க்கம் நாடெங்கும் நடத்திய ஆர்ப்பாட்டங்களைக் கண்டோம். இந்தப் பரபரப்பு அத்தோடு அவிந்து அடங்கிவிட்டது.

மேலும் படிக்க …தனியார்மயத்தின் தாக்குதலும் தொழிற்சங்கவாதத்தின் தோல்வியும் : ஹோண்டா தொழிலாளர் போராட்டப் படிப்பினை

11_2005.jpgறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகள் உலகெங்கிலும் பரவலாகக் காணப்பட்டாலும், இந்த மூன்றும் மற்ற நாடுகளைவிட, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மிகவும் வறியஏழை நாடுகளை ஒரு சாபக்கெடு போல பிடித்தாட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எத்தியோப்பியர் பத்தாண்டுகளுக்கு முன்பு சோமாலியர் இப்பொழுது நைஜர், பர்கினோ ஃபாஸோ, மாலி, மொரிதானியா ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பட்டினிச் சாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க …ஏழை நாடுகளின் அந்நியக் கடன் தள்ளுபடி: மறுகாலனியாதிக்கத்தின் "மனித முகம்'

11_2005.jpg"பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் பேகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்'' எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொல்லி வெளியான கருத்துகள், ""கற்பு'' மற்றும் பாலியல் ஒழுக்கம் தொடர்பாக வாத பிரதிவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது.

மேலும் படிக்க …குஷ்பு- தங்கர்பச்சான் விவகாரம் :பெண்ணியவாதிகளும் பழமைவாதிகளும்

11_2005.jpgமிழகத்தின் தலைநகரைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவது என்ற திட்டத்தின் கீழ், இரண்டாண்டுகளில், குடிசைப் பகுதிகளைக் காலி செய்து 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 மைல்களுக்கு அப்பால் உள்ள துரைப்பாக்கத்தில் குப்பையாகக் கொட்டியது, தமிழக அரசு. அவர்களோடு, சுனாமியால் பாதிக்கப்பட்டவை என்ற பெயரில் கடற்கரைக் குடிசைகளை இடித்துவிட்டு, ஒரே நாளில் 2,000 குடும்பங்களையும் அங்கு கொண்டு குவித்தனர்.
மேலும் படிக்க …எங்கெங்கும் போலீசு அதிகாரம் ஆதிக்கம்!

11_2005.jpg

"வீரன் போராடுகிறான்; கோழை சரணடைகிறான்; துரோகி காட்டிக் கொடுக்கிறான்'' என்று நறுக்குத் தெறித்தாற்போல் கூறினார், செக். நாட்டு கம்யூனிச புரட்சியாளரான தியாகத் தோழர் ஜூலியஸ் ஃபூசிக்.

 

காட்டிக் கொடுக்கும் துரோகிகள் கருங்காலிகள் ஏராளமானோரை வரலாறு கண்டிருக்கிறது; அவர்களது துரோகத்தனம் அம்பலமாகும்போது குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தும் இருக்கிறது. ஆனால், துரோகி என்று அம்பலமான பின்னரும் ஒருவர் "தோழர்' என்று அவரது கட்சியினரால் சித்தரிக்கப்படுகிறார். அவர்தான் மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

மேலும் படிக்க …புத்ததேவ் பட்டாச்சார்யா:போராடும் தொழிலாளர்களின் முதுகில் குத்தும் "தோழர்"

12_2005.jpgஅமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் தினந்தோறும் நடத்திவரும் பச்சைப் படுகொலைகளும் அதை மூடிமறைக்க ஜார்ஜ் புஷ் கும்பல் அவிழ்த்துவிடும் புளுகுணிப் பிரச்சாரமும் இட்லரையும், கோயபல்சையும்கூட வெட்கப்பட வைத்துவிடும்.

கடந்த அக்டோர் 16ஆம் தேதி, ஈராக்கின் ரமாடி நகரில் அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலொன்றை நடத்தியது. ""இத்தாக்குதலில் 75 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அந்த ஊரைச் சேர்ந்த மக்களுக்குச் சிறுகாயம் கூட ஏற்படவில்லை'' என்றும் அமெரிக்கா தனது எடுபிடி பத்திரிகைகள் மூலம் பிரச்சாரம் செய்தது.

மேலும் படிக்க …அமெரிக்காவின் போர் குற்றங்கள: அன்று வியட்நாம் இன்று ஈராக்

12_2005.jpgகடந்த நவம்பர் 34 தேதிகளில் தென்னமெரிக்காவிலுள்ள அர்ஜெண்டினா நாட்டின் மார்டெல் பிளாடா நகரில் அமெரிக்க சுதந்திர வர்த்த பகுதிகள் எனும் ஒப்பந்தத்தை இறுதியாக்குவதற்கான உச்சி மாநாடு நடைபெற்றது. வடதென் அமெரிக்க கண்டத்து 34 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் புஷ்ஷûம் வருகை தந்தார். வடதென் அமெரிக்காவின் நாடுகளின் பொருளாதார சுயாதிபத்திய உரிமைகளை நீக்கி விட்டு, வடக்கே கனடாவிலிருந்து தெற்கே சிலி வரை சுதந்திரமாக வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்து கொள்வது என்ற பெயரில் அமெரிக்க மேலாதிக்கவாதிகள் தென்னமெரிக்க நாடுகளை ஒட்டச் சுரண்டும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் புதிய ஏற்பாடுதான் இது.

மேலும் படிக்க …தென் அமெரிக்காவை உலுக்கிய புஷ் எதிர்ப்புப் போராட்டம்

12_2005.jpgவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்ட வி.வி.மு. தோழர் கதிர்வேலனின் மகள் கனல் அவர்களுக்கும் கோவையைச் சேர்ந்த குமார் ப்ராங்க்ளின் அவர்களுக்கும் 6.11.05 அன்று சங்கராபுரத்தில் புரட்சிகர மணவிழா நடைபெற்றது. இதர ஓட்டுக் கட்சிகள், ""அண்ணன் அவர்களின் இல்லத் திருமண விழாவுக்கு வருகை தரும் தளபதியே வருக!'' என்று சுவரொட்டி விளம்பரம் செய்து வரும் வேளையில், ""அறிவும் நாகரிகமும்மிக்க மக்கள் வெட்கித் தலைகுனியும் சாதி, மதம், சடங்குகள், வரதட்சிணை மற்றும் பெண்ணடிமைச் சின்னமான தாலி ஆகிய அனைத்தையும் ஒழித்துவிட்டு நடக்கும் இப்புரட்சிகர மணவிழாவுக்கு உழைக்கும் மக்களே, அணிதிரண்டு வருக! புதிய சமுதாயம்
மேலும் படிக்க …புரட்சிகரப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்த மணவிழா

12_2005.jpgகேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் சிங்கோலி கிராமத்தைச் சேர்ந்த இராமன்குட்டி மணியப்பன், ஆப்கானிலுள்ள தாலிபான் தீவிரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும்பாலான மக்களிடையே அனுதாபத்தையும், கேரள மாநிலம் முழுவதும் துக்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது.

மேலும் படிக்க …ராமன் மணியப்பன் கொலை: பலிகிடாவாக்கியது இந்தியா அரசே!

12_2005.jpgநடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுணா என்ற போலி புரட்சி சிங்கள இனவாத கட்சியுடனும் ஜாதிகா ஹெல உருமயா என்ற பௌத்தமத குருமார்களின் பேரினவாதபாசிசக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர அணியின் பிரதிநிதியாகிய மகிந்தா ராஜபக்சே மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையை நீண்டகாலமாக ஆண்டுவரும் பண்டாரநாயகே குடும்பத்துடன் சேர்ந்து இலங்கை சுதந்திர கட்சியை நிறுவிய சிங்கள இனவெறி அரசியல் தலைவர் ராஜபக்சேயின் வாரிசுதான் இந்த மகிந்தா ராஜபக்சே. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, நீண்டகாலமாக ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வந்த சிங்களபாசிச வெறியர்களான ஜெயவர்த்தனே பிரேமதாசாவைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு வந்து பிரதம மந்திரியாக பதவி வகித்தவர்.

மேலும் படிக்க …இலங்கை அதிபர் தேர்தல்: சிங்கள இனவெறிக்கு மீண்டும் வெற்றி!

12_2005.jpgபிரான்சு நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் அமைந்துள்ள ஈஃபிள் கோபுரம்; கேன்ஸ் நகரில் நடைபெறும் ஆடம்பரமான சர்வதேச திரைப்பட விழா இவை போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களைத் தவிர, பிரான்சு நாட்டைப் பற்றி வேறெதுவும் நம்முள் பலருக்குத் தெரியாது. ஆனால், அந்நாட்டைச் சேர்ந்த கருப்பின இளைஞர்கள் சமீபத்தில் ""குடியரசு''க்கு எதிராக நடத்திய தெருப் போராட்டங்கள், ""நகர்ப்புறச் சேரிகளும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும், ஏழ்மையும், வெள்ளை இன வெறியும் நிறைந்ததுதான் பிரான்சு; முதலாளித்துவவாதிகள் கொண்டாடுவது போல, அந்நாடு சமத்துவம் நிறைந்த சமூகம் அல்ல'' என்பதைப் பச்சையாக உலகத்தின் முன் தோலுரித்துக் காட்டிவிட்டது.

மேலும் படிக்க …பற்றியெரியும் பாரீஸ் நகரம்: நிறவெறி பாசிச அரசியலும் கருப்பின இளைஞர்களின் கலகமும்

12_2005.jpgகிருஷ்ணிகிரி மாவட்டத்திலுள்ள சந்தை நகரமான சூளகிரியில் ""போக்குவரத்துக்கு இடையூறு'' என்ற பெயரில் கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சூளகிரி மற்றும் சுற்று வட்டார உழைக்கும் மக்களுடன் பின்னிப் பிணைந்திருந்த சிறு வியாபாரிகள் இப்போது வாழ்வை இழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …சூளகிரியில் சிறுகடைகள் இடிப்பு! தாராளமயத்தின் இன்னுமொரு தாக்குதல்!

12_2005.jpgபுதிய ஜனநாயகம் இதழில், ""மக்கள் கண்காணிப்பக''த்தை அம்பலப்படுத்தி வெளிவந்த கட்டுரையின் விளைவாகப் பழிவாங்கப்பட்டு, அந்நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பலரில், ஹென்றி டிபேனின் ஓட்டுநர் திரு. மோகன்குமாரும் ஒருவர். அவரது ஓட்டுநர் உரிமத்தையும் பாக்கி சம்பளத்தையும் தரமறுத்து, "மனித உரிமைப் போராளி' ஹென்றி டிபேன் அடாவடித்தனம் செய்து வருவதையும் புதிய ஜனநாயகம் செய்தியாக வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க …ஊருக்கு நீதி! ஊழியருக்கு அநீதி!

12_2005.jpgவரப்போகும் சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து பாசிச ஜெயா அரசு கணக்கற்ற கவர்ச்சித் திட்டங்களை அன்றாடம் அறிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இத்திட்டங்கள் எவையும் இதுவரை கிராமப்புறங்களைச் சென்றடைந்ததே கிடையாது. கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்த திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக அதிகாரிகளும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், ஊராட்சி மன்றப் பிரதிநிதிகளும் கணக்கு காட்டி ஏப்பம் விட்டதுதான் மிச்சம்.

மேலும் படிக்க …காகிதத்தில் மின்னும் நலத்திட்டங்கள்!: அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வி.வி.மு.வின் முற்றுகை போராட்டம்

12_2005.jpg"நான் ஒரு சாமானியன் என்பதால்தான், என் மீது இப்படிப் பழிபோடுகிறார்கள். இதையே மேட்டுக்குடியினர் செய்யும்போது என்ன செய்தார்கள்? மேட்டுக்குடிக்கு ஒரு நீதி, சாமானியனுக்கு ஒரு நீதியா?'' இப்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி வசனம் பேசுவதைத் தமிழக மக்கள் பலமுறை கேட்டிருக்கிறார்கள்.

 

""நான் ஒரு பெண் என்பதாலேயே என்மீது வீண் பழியும் பொய்யான குற்றச்சாட்டுக்களும் சுமத்தி, அரசியலில் இருந்தே என்னை ஒழித்துக் கட்டுவதற்கு தீய சக்திகள் சதி செய்கின்றன'' இப்படி அ.தி.மு.க.வின் ஏகபோகத் தலைவி ஜெயலலிதா ஒப்பாரி வைப்பதையும் தமிழக மக்கள் பலமுறை பார்த்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க …தொல்.திருமாவளவன்: ஒரு தலித் என்பதாலா?

12_2005.jpgபாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்டு நன்கு அமைப்பாக்கப்பட்டு இயங்கும் சட்டபூர்வ ரௌடிகளின் பாசறைதான் போலீசு துறை என்பதைத் தலையங்கம் விரிவாக விளக்கியது. எந்தக் கோரிக்கைக்காக மக்கள் போராடினாலும் ""சட்டம் ஒழுங்கு'' என்ற காரணத்தைக் காட்டி அடக்கி ஒடுக்கும் போலீசு துறையையே கலைக்க வேண்டும் என உழைக்கும் மக்கள் இனி போராட வேண்டும்.

ச. மதியழகன், ஊற்றங்கரை.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

12_2005.jpg"ஐயோ! பயங்கரவாதம்! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது!'' என்று முதல் பக்கச் செய்தியுடன் "தேசிய' பத்திரிகைகள் தலையங்கம் தீட்டி அலறின. ""இராணுவத்தைக் கொண்டு காடுகளில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளோம்; பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளோம்'' என்று கிளிப்பிள்ளை போல் அறிக்கை விடுகிறார்கள் போலீசு அதிகாரிகள். பீதி ஒருபுறம்; அற்பமாகக் கருதப்பட்டவர்கள் இப்படித் திடீர் தாக்குதல் நடத்தி முகத்தில் கரிபூசி விட்டார்களே என்ற அவமானமும் கவலையும் மறுபுறம். அண்மையில் பீகாரின் ஜெகன்னாபாத் சிறைச்சாலை ""மாவோயிஸ்டுகள்'' எனப்படும் நக்சல்பாரி புரட்சியாளர்களால் தகர்க்கப்பட்டதைக் கண்டு செய்வதறியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள்.

மேலும் படிக்க …பீகார் சிறை தகர்ப்பு: நக்சல்பாரிகளின் புரட்சிகர வீரசாகசம்

12_2005.jpgதேசிய மாதிரி கள ஆய்வு நிறுவனம் 6,638 கிராமங்களில், 51,770 விவசாயக் குடும்பங்களிடம், அவர்களின் வருமானம்; அத்தியாவசியத் தேவைகளுக்கு அக்குடும்பங்கள் மாதந்தோறும் செய்யும் செலவு; அவர்களுக்குள்ள கடன் ஆகியவற்றைப் பற்றி 2003ஆம் ஆண்டு கள ஆய்வொன்றை நடத்தியது. அதில், ஒரிசா, ஜார்கண்டு, சட்டீஸ்கர், பீகார், ம.பி. ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்கள், தங்களின் மாதாந்திர அத்தியாவசிய தேவைகளுக்கு 225ஃ ரூபாய் கூடச் செலவழிக்க முடியாமல் வாழ்வது தெரிய வந்தது.

மேலும் படிக்க …விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை

12_2005.jpgதிருச்சியில் தொன்மை வாய்ந்த செயிண்ட் ஜோசப் கல்லூரி தனது கல்விச் சேவையால் ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. இன்று, அக்கல்லூரியில் நடக்கும் ஊழல் கொள்ளையும் மோசடியும் அடாவடித்தனங்களும் மெதுவாகக் கசியத் தொடங்கி நகரெங்கும் நாறி வருகிறது.

 

இக்கல்லூரியில் வரலாறு, ஆங்கிலம், வேதியல் துறைகளுக்கான ஆய்வுக் கூடங்களைக் கட்டுவதற்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் பல்கலைக் கழக மானியக் குழு கொடுத்துள்ளது. இதில் ஆங்கிலத் துறைக்கு மட்டும் மொழிப் பயிற்சிக் கூடத்தைக் கட்டி,

மேலும் படிக்க …பாதிரிகளின் பகற் கொள்ளை! ஊழலின் உறைவிடமாக திருச்சி-ஜோசப் கல்லூரி

12_2005.jpg"தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் அடிப்படையில் மறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான ""கோக்''கிற்கு எதிராகவும் தமிழகமெங்கும் ம.க.இ.க.; வி.வி.மு.; பு.மா.இ.மு.; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் வீச்சான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, கடந்த செப்.12ஆம் தேதியன்று நெல்லையில் மிகப்பெரிய பேரணி ஆர்ப்பாட்டத்தையும், "கோக்' ஆலை அமைந்துள்ள நெல்லை கங்கை கொண்டானில் மறியல் போராட்டத்தையும் நடத்தின.

மேலும் படிக்க …தாமிரவருணியை உறிஞ்ச வரும் : அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!

12_2005.jpgசென்ற ஆண்டு சுனாமி. இந்த ஆண்டு பெருமழை வெள்ளம். இயற்கைப் பேரிடர் இழப்புகளுக்கு இருக்கின்ற வாழ்வும் இலக்காகி, உழைக்கும் மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படும் கொடுமை நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவுகளாக மாறி துயர வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தண்ணீருக்காக ஏங்கித் தவித்த தமிழகம் தண்ணீரிலேயே மூழ்கி அழிகிறது.

மேலும் படிக்க …துயர வெள்ளத்தில் தமிழகம் தேவை: மறுவாழ்வு; அற்ப நிவாரணமல்ல!

12_2005.jpg"இந்திய வான்வெளி. அமெரிக்காவின் விற்பனைக்கு அல்ல! அமெரிக்காவின் இராணுவத் தளமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! கொலைகார அமெரிக்க போர் விமானப் படையுடன் நடத்தும் கூட்டுப் பயிற்சியை நிறுத்து!'' கைகளிலே செங்கொடியும் கருப்புக் கொடியும் ஏந்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த நவம்பர் 7ஆம் நாளன்று மே.வங்கத்தின் மித்னாபூர் மாவட்டத்திலுள்ள களைகுண்டா விமானப் படைத்தளம் அருகே விண்ணதிர முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல், வடக்கே சிலிகுரி அருகிலுள்ள பக்டோக்ரா விமானப் படைத்தளம் அருகேயும், கொல்கத்தாவின் டம்டம் விமானத்தளம் அருகிலும் இந்திய அமெரிக்க போர் விமான கூட்டுப் பயற்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

மேலும் படிக்க …அமெரிக்க எதிர்ப்பு: சி;.பி.எம். - என் பித்தலாட்டம்

01_2006.jpgதனியார்மயம் தாராளமயத்தின் மூலம் இந்திய விவசாயமும், சிறுதொழிற்துறையும், வங்கி, காப்பீடு, கல்வி போன்ற சேவைத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவது, தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, இந்தியா போன்ற ஏழை நாடுகள் அனைத்திலும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த மாற்றங்கள்தான் திணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ஏழை நாடுகளின் இம்மூன்று துறைகளையும் ஒரே அடியில், முற்றிலுமாகத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, ஏகாதிபத்திய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்தின் மூலம் முயன்று வருகின்றன.

மேலும் படிக்க …உலக வர்த்தகக் கழக(W.T.O)த்தின் ஹாங்காங் ஒப்பந்தம் : மறுகாலனியாதிக்கத்தின் பிடி இறுகுகிறது

01_2006.jpgசாதிய ஆதிக்கத்தைத் தகர்ப்பதே தமது லட்சியம் என்று புறப்பட்ட திருமா, இன்று ஆதிக்கசாதி பிழைப்புவாத அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வலம் வருவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான துரோகமும் அரசியல் பித்தலாட்டமும் பிழைப்புவாதமுமாகும்.

ச. மதியழகன், ஊற்றங்கரை.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

01_2006.jpgவீரப்பனைத் தேடுவது என்ற பெயரால் மலைவாழ் மக்களின் மீது அதிரடிப்படை ஏவிவிட்ட சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் சதாசிவம் கமிசனால் உறுதி செய்யப்பட்டுள்ளன

 

சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை வேட்டையாடுவதற்காக, தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படைகள், சத்தியமங்கலம், தாளவாடி, கொள்ளேகால் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் மீது நடத்திய மனித

மேலும் படிக்க …இங்கேயும் ஒரு அபுகிரைப்

01_2006.jpgபெங்களூர் நகரில், பிரதிபா மூர்த்தி என்ற ""கால் சென்டர்'' நிறுவன பெண் ஊழியர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதை, அனுதாபம், கண்ணீர் அஞ்சலி என்ற வழக்கமான சடங்குகளுக்குள் முடித்துவிடத் துடிக்கிறார்கள், அத்தொழில் ஜாம்பவான்கள். இந்தச் சம்பவத்தை அதற்கு மேல் நீட்டித்துக் கொண்டே போனால், இந்த நவீனத் தொழிலில் வேலை பார்க்கும் ஊழியர்களின் பரிதாபகரமான நிலை வெட்ட வெளிச்சமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள், ""கால் சென்டர்'' தொழில் அதிபர்கள்.

மேலும் படிக்க …பெங்களூர் "கால் வென்டர்" பெண் ஊழியர் கொலை:அந்தியச் செலாவணி வருமானத்தின் பலிகிடாக்கள்!

01_2006.jpgகடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளத்தால் இருக்கின்ற வாழ்வும் சிக்கலாகி உழைக்கும் மக்கள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகயை இயற்கைப் பேரிடர் பேரழிவு மக்களைத் தாக்கும் போது, நிவாரணம் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது ஒரு அரசியல் இயக்கத்தின் கடமை மட்டுமல்ல் ஒவ்வொரு மனிதனின் தார்மீகப் பொறுப்பாகவும் இருக்கிறது.

மேலும் படிக்க …வெள்ளப் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் நிவாரணப் பணிகள், போராட்டப் பணிகள்

01_2006.jpg"சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற 42 பேர் பலியான சம்பவம், விபத்து அல்ல, படுகொலை! இதற்குக் காரணமான குற்றவாளிகளான போலீசுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்; அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்'' ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தும் நிவாரணம் பெறவந்த மக்களைப் பலியிட்ட அரசின் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் 22.12.05 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க …"கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்!" மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) கண்டன ஆர்ப்பாட்டங்கள்

01_2006.jpgதெருக்கள்தோறும் சடலங்கள், திரும்பிய பக்கமெல்லாம் அழுகுரல்கள், கதறித் துடிக்கும் உறவுகள் என்று டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னை எம்.ஜி.ஆர். நகர் எங்கும் துயரமும் சோகமும் கவ்வியது. நிவாரணம் வாங்கச் சென்ற 42 பேர் நெரிசலில் சிக்கி மாண்டு போன செய்தியை அறிந்து தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போனது. கட்டிடத் தொழிலாளிகள், ஓட்டல் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள்... என கொல்லப்பட்டோ

மேலும் படிக்க …சென்னை வெள்ள நிவாரணப் படுகொலை!கொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்போம்!

01_2006.jpg"ஜெகந்நாபாத் சிறைச்சாலையின் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி நடத்திய அடாவடித்தனமான, துடுக்குத்தனமான தாக்குதலானது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக் குறைபாடுகள் குறித்த பல பாரிய கேள்விகளை எழுப்புகின்றது. தேர்தல் ஆணையத்தின் கட்டளையின்படி சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக பாதுகாப்புப் படைகள் ஈடுபடுமாறு திருப்பி விட்டிருந்தது கூட, இந்தச் "சிறைத் தகர்ப்பு நடவடிக்கை'க்கு

மேலும் படிக்க …சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!

01_2006.jpgபெருமழை வெள்ளத்தால் துயரத்தில் தத்தளிக்கிறது தமிழகம். தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் அழிந்து, விவசாயிகள் மீளாக் கடனில் மூழ்கியிருக்கிறார்கள். சென்னை நகரில் வெள்ளம் மக்களுடைய உடைமைகளைப் பறித்தது என்றால், ஜெ. அரசின் வெள்ள நிவாரணம் ஏழை மக்களின் உயிரைப் பறித்திருக்கிறது.

மேலும் படிக்க …தமிழ் மக்கள் இசைவிழா இவ்வாண்டு (2006) இரத்து செய்யப்படுவது குறித்த அறிவிப்பு!

01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

மேலும் படிக்க …நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்

01_2006.jpgசென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறப் போனவர்களில் 42 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உற்றார்உறவினர் கதறி எழும் ஓலத்தை விட ஓங்கி ஒலிப்பது, அந்தக் கொடுமையை தூர நின்று வேடிக்கை பார்த்து, ""ச்ச்சு''க் கொட்டும் நடுத்தர, மேட்டுக்குடி அறிவாளிகளின் வேறு வகையான, வழக்கமான ஒப்பாரிதான்:

மேலும் படிக்க …வெள்ள நிவாரணம் : "அரசியல் பண்ணுவது" தவறா?

01_2006.jpgதுயரத்தை துடைப்பதற்கான நிவாரணமே துயரத்தை உருவாக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது, ஜெயலலிதா அரசு. டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 உயிர்களைக் காவு வாங்கியுள்ள சம்பவம் ஒரு விபத்தல்ல. படுகொலை!

 

வதந்தி, விஷமிகள் பரப்பிய புரளி, நெரிசல், மக்களின் பணத்தாசை, ஒழுங்கீனம், எதிர்பாராத விபத்து என்ற வார்த்தைகளால் மறைக்கப்படும் படுகொலை.

மேலும் படிக்க …வெள்ள நிவராணப் படுகொலைகள்:கொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கப் போராடுவதே உண்மையான அஞ்சலி

02_2006.jpgஜனவரி இதழின் அட்டைப்பட விளம்பரமே அரசியல் ஆர்வலர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் வகையில் அருமையாக வெளிவந்துள்ளது. இப்""புத்தாண்டு சிறப்புத் தள்ளுபடி'' விளம்பரத்தையும் அட்டைப்படக் கட்டுரையையும் விளக்கிப் பிரச்சாரம் செய்தபோது பேருந்துகளில் பு.ஜ. இதழ் பரபரப்பாக விற்பனையாகியது. ஜெகந்நாபாத் சிறைத் தகர்ப்பு பற்றிய சி.பி.எம். தலைவர் யெச்சூரியின் துரோகத்தனத்தையும் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டிய ""சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!'' எனும் கட்டுரை சிறப்பு.

வாசகர்கள், திருப்பூர்.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

02_2006.jpgசில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை ஜனவரி 25ஆம் தேதியன்று காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளது. மதுபானம், பெட்ரோலிய கட்டுமானம், தானியக் கிட்டங்கிகள், பருத்திரப்பர் வணிகம், வைரம் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள், தொழில்துறைக்கான வெடி மருந்துகள், விமான நிலையங்கள், மின்சாரத்தை வாங்கி விற்கும் வணிகம் போன்றவற்றில் இனி 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதாகவும் இந்த அறிவிப்பு கூறுகிறது. பன்னாட்டு

மேலும் படிக்க …சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம்:பேரழிவுக்கு ஒரு முன்னோட்டம்

மறுகாலனியத் தாக்குதல் மூர்க்கமாக அரங்கேறி வருகிறது. அரசுத்துறைகளைத் தாரை வார்ப்பதற்கு கூறப்பட்ட பொய்க் காரணங்கள் கூட இல்லாமல், இப்போது லாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களான விமான நிலைய ஆணையகத்தின் கீழுள்ள தில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இக்கொடுமைக்கெதிராகப் போராடும் விமானநிலைய ஊழியர்கள் மீது மும்பை போலீசு காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது. விமான நிலையங்கள் விமானப்படையைக் கொண்டு

மேலும் படிக்க …விமான நிலைய ஊழியர் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகளின் துரோகம்

02_2006.jpgகடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று, தமது நிலங்களில் டாடா உருக்கு ஆலைக்கான சுற்றுச்சுவர் கட்டப்படுவதை எதிர்த்து திரண்டமைக்காக, ஒரிசா மாநிலத்தின் ஜஜ்பூர் மாவட்டத்திலுள்ள கலிங்கா நகர் பகுதியின் பழங்குடியினர் 13 வயது சிறுவனும், மூன்று பெண்களும் உட்பட 12 பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ""இரண்டாவது ஜாலியன் வாலாபாக்'' எனத்தக்க வகையில், போராடிய மக்களை அரசு நிர்வாகமும், டாடா நிறுவனமும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளன. கொலைவெறியாட்டத்தின் உச்ச கட்டமாய், காயம்பட்ட ஆறு பேரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, அவர்களுடைய கரங்களை வெட்டிப் பிணங்களாக திருப்பி அளித்திருக்கிறது, போலீசு.

மேலும் படிக்க …ஒரிசா:மறுகாலனியாதிக்கத்தின் கோரம் பழங்குடி மக்களின் யுத்தம்

02_2006.jpg"கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனால், அங்கே ஏழு கொடுமை எதிரிலே வந்ததாம்!'' என்று ஒரு சொலவடை உண்டு. அந்தக் கதையாக, கடன் சுமையால் தத்தளிக்கும் விவசாயிகள் வேறுவழியின்றி ஒப்பந்த விவசாயம் செய்தால், அங்கேயும் வஞ்சிக்கப்பட்டு போண்டியாக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க …ஒப்பந்த விவசாய மோசடி: பங்சாப் தரும் படிப்பினை

02_2006.jpgமக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போட வேண்டும் என்று மக்களுக்கு உபதேசிக்கும் ஆளும் கும்பல், எகாதிபத்திய நாடுகளின் கழிவுகளை அமெரிக்க டாலருக்காக இறக்குமதி செய்து, இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக்குகின்றது

 

மேலும் படிக்க …ஏழை நாடுகளின் சுற்றுப்புறச் சூழலை அழிப்பது யார்?

02_2006.jpgஅக்டோபர் நவம்பர் மாதங்களில் பெய்த பேய் மழை புயலால், தமிழகமே வெள்ளக் காடாக மாறித் தத்தளித்தது. தமிழகத்திற்கு முன்பாக, ஒரே ஒருநாள் கொட்டித் தீர்த்த அடைமழையால், மும்பய் மாநகரமே மூழ்கிப் போனது. இந்த மழை வெள்ளம் பங்களாவாசிகளைக் கூட விட்டு வைக்காததால், அப்பெருமக்கள் அனைவரும் நாட்டின் அடிக்கட்டுமான வசதி பற்றி அங்கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் படிக்க …நகர்ப்புற புத்தாக்கத் திட்டம்: ஏழைகளை விரட்டியடிக்கும் ஏகாதிபத்திய சதி!

02_2006.jpgதஞ்சை திருவையாற்றில் கடந்த 19.1.06 அன்று நடந்த தியாகராசர் ஆராதனை விழா நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்கச் சென்ற ""தினமணி'' நாளேட்டின் புகைப்படக்காரர் கதிரவனை, திருவையாறு போலீசு ஆய்வாளர் முருகவேல் மற்றும் சில போலீசாரும், திருவாரூரிலிருந்து வந்த சீருடையணியாதப் போலீசு முருகதாசும் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். புகைப்படக்காரர் கதிரவன் செய்த மிகப் பெரிய "குற்றம்' என்னவென்றால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மனைவியையும் அம்மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மனைவியையும் ஆராதனை நிகழ்ச்சியைப் பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு நின்று படம் எடுத்ததுதான்.

மேலும் படிக்க …கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! போலீசுக்குத் தெரியுமா மனித உரிமை!

02_2006.jpg1980 இல் பாரதிய ஜனசங்கத்தின் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. மும்பையில் நடந்த வெள்ளிவிழா மாநாட்டில் உரையாற்றிய அத்வானி, ""கடந்த 25 ஆண்டுகால அனுபவம் மகிழ்ச்சியாகவும், கட்சி உறுப்பினர் அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலும் இருந்தது. ஆனால் கடந்த 25 வாரங்களில் இலஞ்சம், ஊழல், உட்கட்சி பிரச்சினைகள், மற்றும் தேர்தல் பின்னடைவுகளால் இப்போது துயர்மிகு

மேலும் படிக்க …வெள்ளிவிழா ஆண்டில் ப.ஜ.க: ஒழுக்கக்கேடே ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் ஒழுக்கம்!

02_2006.jpgகொக்கோ கோலா நிறுவனத்தின் ஆணவத்திற்கு முதலடி விழுந்திருக்கிறது. ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் ""கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. 9 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6,500 வாக்காளர்களைக் கொண்டது இந்தக் கிராமசபை. எமது செப்.12 மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, அக்.2 காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெரும்பான்மை மக்கள் கோக் ஆலையை எதிர்த்ததால், தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அன்று கிராமசபை, மாவட்ட நிர்வாகத்தால்

மேலும் படிக்க …கொலைகார "கோக்"கின் பணபலம் - அதிகாரத் திமிருக்கு விழுந்த அடி

02_2006.jpg"தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கங்கை கொண்டானில் நாங்கள் நடத்திய போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. இயற்கை வளமான தண்ணீரை, உயிரின் ஆதாரமான தண்ணீரை விற்பனைச் சரக்காகவும் பன்னாட்டு முதலாளிகளின் தனியுடைமையாகவும் மாற்றும் மறுகாலனியாக்கக் கொள்கையின் கொடிய முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வியக்கத்தின் குறியிலக்காக, கோக் என்னும் அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னத்தைத் தெரிவு செய்தோம்.

மேலும் படிக்க …தாமிரவருணி எங்கள் ஆறு! அமெரிக்க "கோக்"கே வெளியேறு!

02_2006.jpgகுப்புறத் தள்ளிய குதிரை, குழியையும் பறித்த கதையாக, தனியார்மய தாராளமயத்தால் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ள காங்கிரசு ஆட்சியாளர்கள், இப்போது ரேஷனுக்காக ஒதுக்கப்படும் உணவு மானியத்தையும் குறைத்து நாட்டைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளிவிட்டுள்ளார்கள். கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம், ரேஷனுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தை மேலும் குறைத்து பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரூ.4524 கோடியை ஏழைகளிடமிருந்து வழிப்பறி செய்யக் கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க …உலக வங்கி உத்தரவு! உணவு மாணியம் குறைப்பு! பரவும் பட்டினிச் சாவுகள்

02_2006.jpgசூடு, சொரணை ஏதுமில்லாத அமெரிக்க அடிமைத்தனத்திற்கு இலக்கணம் படைத்து வருகிறது காங்கிரசு அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை வெகு விசுவாசமாகவும் வெறித்தனமாகவும் மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தி வருவதனால் மட்டும் நாம் இவ்வாறு கூறவில்லை. இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் அப்பட்டமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் சென்ற மாதத்தில் மட்டும்

மேலும் படிக்க …அடிமை + அடியாள் ஸ்ரீ வல்லரசு!

02_2006.jpg"கொலைகார கோக்கைக் குடிக்காதே!'' இது கேரளத்தின் பிளாச்சிமடாவிலும் தமிழகத்தின் நெல்லையிலும் எதிரொலிக்கும் போராட்டக் குரல் அல்ல. ""கோக்''கின் தாயகமான அமெரிக்காவிலிருந்து இந்தப் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மாணவர்களால் தொடங்கப்பட்ட ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தின் விளைவாக, இப்போது 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …"கொலைகாரக் "கோக்"கைக்; குடிக்காதே!"அமெரிக்க மாணவர்களின் "கோக்" புறக்கணிப்பு இயக்கம்

03_2006.jpgடேவிட் இர்விங் பிரிட்டனைச் சேர்ந்த நாஜி வரலாற்றாசிரியர். 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்பார்த்து ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நீதிமன்றத்தின் முன் இவர் நின்று கொண்டிருக்கிறார். ""இலட்சக்கணக்கான யூதர்களை பெருங்களப்பலிக்கு (ஏணிடூணிஞிச்தண்வ) ஆளாக்கியதாக இட்லர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. உண்மையில் யூதர்களின் முன்னேற்றத்திற்குத்தான் இட்லர் உதவியிருக்கிறார்'' என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார் இர்விங். நாஜிகளின் போர்

மேலும் படிக்க …இட்லருக்கு ஒரு நீதி! புஷ்ஷீக்கு ஒரு நீதியா?

03_2006.jpgகோபாலன்; திருப்பூரைச் சேர்ந்த புற்றுநோயாளி; திருவனந்தபுரத்திலுள்ள வட்டார புற்றுநோய் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், ஒரு புதிய மருந்து வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாகக் கூறி மருத்துவர்கள் அம்மருந்தை அவருக்குச் செலுத்தினர்.

மேலும் படிக்க …மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

03_2006.jpgஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பை பங்குச் சந்தை புள்ளிகள் 10,000ஐத் தாண்டி புதிய உயரத்துக்கு முன்னேறியது. அது மேலும் உயர்ந்து மேலே போய்க் கொண்டிருக்கிறது. ""பாய்ச்சல்; இதுவரை கண்டிராத வகையில் முரட்டுக் காளையின் மாபெரும் பாய்ச்சல்; பிப்ரவரி 6ஆம் தேதி, மும்பை பங்குச் சந்தையின் அதிருஷ்டநாள்!'' என்று பெரு முதலாளிகளும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் தரகர்களும் செய்தி ஊடகங்களும் குதூகலத்துடன் கொண்டாடினர். கோலாகலம், விருந்துகள், வாழ்த்துச் செய்திகள், பொருளாதார

மேலும் படிக்க …நாடு அழிகிறது பங்குச் சந்தை வளர்கிறது

03_2006.jpgமும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், ஒரு பண்ணை வீடு உள்ளிட்ட ரூ. 45 கோடி மதிப்புடைய சொத்துக்கள்; விஷால் டிராவல்ஸ் என்ற பெயரில் சொகுசுப் பேருந்துகள்; மனைவி பெயரில் சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு; துபாயில் நடன விடுதி கொண்ட நட்சத்திர ஓட்டலின் பங்குதாரர்; மனைவி பெயரில் கோடிகளைப் பரிமாற்றம் செய்யும் சீட்டுக் கம்பெனி; 4 வங்கிக் கணக்குகள் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 கோடிக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுக்கும் பைனான்சியர்....

மேலும் படிக்க …தயாநாயக்: போலீசு பயங்கரவாதியின் மறுபக்கம்

03_2006.jpgமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நெல்லைகங்கைகொண்டான் கொக்கோ கோலா ஆலைக்கு, இயங்குவதற்கான உரிமத்தை மானூர் ஊராட்சி ஒன்றியம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியன்று வழங்கியுள்ளது. இந்தத் துரோகம் எப்படி நிறைவேறியது என்பதை, மறுநாள் (11.2.06) வெளியான நாளிதழ்களின் செய்திகளிலிருந்தே தொகுத்துத் தருகிறோம்.

மேலும் படிக்க …கொலைகார "கோக்"குடன் சர்வகட்சி கூட்டணி

03_2006.jpgபாயகரமான ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரெஞ்சு இராணுவக் கப்பல், இந்தியாவில் உடைக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சமீபத்தில் போராடின. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம், ""இது குறித்து யாரும் எந்தக் கருத்தும் கூறக் கூடாது'' என உத்தரவு போட்டது. நமது நாட்டில் கருத்துரிமை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.

மேலும் படிக்க …மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்

03_2006.jpg

திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகள் அமெரிக்க டாலரைச் சம்பாதிப்பதற்காக நொய்யல் ஆற்றையே சாக்கடையாக மாற்றி, நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயத்தை அழித்ததை நாம் அறிவோம். நொய்யல் ஆற்றைப் போலவே, பவானி நதியும் துணி ஆலை அதிபர்கள், காகித ஆலை முதலாளிகளின் இலாபத்திற்காகச் சூறையாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க …நீரின்றி அமையுமா உலகு? பவானி நதியை நாசமாக்கும் கிரிமினல் முதலாளிகளைக் கைது செய்!

03_2006.jpgநார்வே தூதரின் ஏற்பாட்டின்படி, சுவிஸ் நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தைகள் கடந்த பிப்ரவரி இறுதியில் நடந்துள்ளது. மூன்று ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றி முடங்கிக் கிடந்த நிலையில் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

மேலும் படிக்க …அமைதிப் பேச்சுவார்த்தை: முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்ட விடுதலைப்புலிகள்

03_2006.jpg

விருத்தாசலம் அருகில் உள்ள ஆலிச்சிக்குடி, க.இளமங்கலம் கிராமங்களின் விவசாயிகளுக்கு ஊருக்குத் தெற்கே, கருங்குழி காட்டோடைக்குத் தென்புறம் சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயிகள் இந்த நிலங்களில் நெல்லும் கரும்பும் பயிரிட்டிருந்தனர்.

மேலும் படிக்க …ஓட்டப்பர் உதையப்பா ஆகிவிட்டால்... வனத்துறை அதிகாரிகளைப் பணியவைத்த விவசாயிகளின் போராட்டம்

03_2006.jpg

கோக்கின் தலைமையிடமான அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் கோக்கிற்கு கொடுத்த அடியும், நெல்லையில் கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் கோக்கின் அதிகாரத் திமிருக்கு விழுந்த செருப்படியும் அமெரிக்க எதிர்ப்புணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சுகின்றன. விவசாயிகளை மேலும் போண்டியாக்கி நடுத்தெருவுக்குத் தள்ளும் ஒப்பந்த விவசாயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையின் கோரத்தை பஞ்சாபின் படிப்பினை எடுப்பாக உணர்த்துகிறது.

புரட்சித்தூயன், தருமபுரி.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

03_2006.jpg

காங்கிரசு அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொள்வார்களா? ""மன்மோகனுக்கு மார்க்சிஸ்டுகள் குடைச்சல்'', ""சிதம்பரத்துக்கு நமைச்சல்'', ""நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புவார்கள் இடதுசாரிகள்'' என்பன போன்ற தலைப்புச் செய்திகளைப் படித்தால், அப்படி ஏதோ நடக்கப் போவதைப் போன்ற பிரமை ஏற்படத்தான் செய்கிறது. பிரமைகளை விடுத்து நாம் உண்மைகளைப் பரிசீலிப்போம்.

மேலும் படிக்க …"மார்க்சிஸ்டு"களைக் கவிழ்த்த மன்மோகன் சிங்

03_2006.jpg

வமானம்! தமிழகம் மிகப்பெரும் அவமானத்தைச் சுமந்து நிற்கிறது. தனது""பணப்புழக்க'' ஆட்சியில், போராடிய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களையும் மிருகத்தனமாக ஒடுக்கி வந்த பாசிச ஜெயா, தேர்தல் நெருங்கிவிட்டதும் இப்போது சலுகைகளை வாரியிறைக்கிறார். கடன்சுமை தாளமுடியாமல் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, ""வைப்பாட்டி வைத்திருந்த விசயம் வெளியே தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக''
மேலும் படிக்க …தமிழக தேர்தல்:பதவியைப் பிடிக்க லாவணி!ஏகாதிபத்திய சேவையில் ஓரணி!

03_2006.jpg

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, இந்தியப் பொருளாதாரமும் எல்லா உற்பத்தி மற்றும் விநியோகத் துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கி வருவதை நாமறிவோம். இந்தப் பொருளாதார அடிமைத்தனத்தை விஞ்சும் அளவில் அரசியல் மற்றும் இராணுவ அடிமைத்தனத்திற்கான சங்கிலிகள் நம்மீது பூட்டப்படுகின்றன. தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில், பாரதிய ஜனதாவைப் போலன்றி தன்னை ஒரு அமெரிக்க எதிர்ப்பாளனாக சித்தரித்துக் கொண்டது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

மேலும் படிக்க …மானங்கெட்ட சிங்கின் துரோகம் அணுசக்தி என்ற பெயரால் அரசியல் இராணுவ அடிமைத்தனம்

03_2006.jpg

இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்கப் போவதாகவும் முன்னேற்றப் போவதாகவும் கூறிக் கொண்டு உலக மேலாதிக்கப் பயங்கரவாதியும் அமெரிக்க அதிபருமான புஷ் நம் நட்டிற்கு வருவதும், இந்தப் போர்க் கிரிமினலுக்கு தேசத்துரோக காங்கிரசு கூட்டணி அரசு தடபுடலான வரவேற்பு அளிப்பதும் நம் அனைவருக்கும் நேர்ந்துள்ள தேசிய அவமானம்.

மேலும் படிக்க …கொலைகாரன், கொள்ளைக்காரன், உலகமேலாதிக்கப் போர்வெறியன் ஜார்ஜ் புஷ்ஷைத் துரத்தியடிப்போம்!

03_2006.jpg

"அவர்கள் என் அங்கங்களைத்தான் சிதைத்து விட்டார்கள்; என் குரல் இன்னும் என்னிடம் உள்ளது; நான் இன்னமும் பாடுவேன்!''

 

போராட்டம் என்றாலே ஒதுங்கிப் போய்விடும் சமரச மனோபாவம் ஊட்டி வளர்க்கப்படும் இந்தக் காலத்தில், எப்படிபட்ட நிலையிலும் துவண்டு போய்விடாமல் நீதிக்காகப் போராடுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் மனிதர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். அப்படிபட்ட அபூர்வ மனிதர்தான், பாந்த் சிங்.

மேலும் படிக்க …தீண்டாமை எதிர்ப்பைச் சுவாசிக்கும் மாவீரன்!

04_2006.gif

ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதி, சாதிமத அடையாளங்களை முற்றாக விலக்கிய மதச்சார்பின்மை, சோசலிசத்தின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும்  என தியாகத் தோழர் பகத்சிங் தோற்றுவித்த புரட்சிகர கம்யூனிச பாரம்பரியத்தை என்றென்றும் கட்டிக் காப்போம்; ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடி நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது இன்னுயிரை ஈந்த அளப்பரிய தியாகம்,

மேலும் படிக்க …ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தியாகத் தோழர் பகத்சிங் கின் 75 - வது நினைவு நாள்!

04_2006.gif

அனைத்துலக மகளிர் தினத்தன்று (மார்ச் 8), அதன் உண்மையான நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி எனும் புதிய அமைப்பு உதயமானது. தோழர் இந்துமதி தலைமையில் நடந்த இவ்வமைப்பின் தொடக்க விழாவில், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் சிறப்புரையாற்றி வர்க்கப் போராட்டத்தில் முன்னணியாகத் திகழ வாழ்த்தினார். வேலூர், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக அமைப்பு ரீதியாகப் பெண்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கி, வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் தேர்வைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் பெண்கள் விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதியேற்றனர். திரளாக வந்திருந்த உழைக்கும் வர்க்கப் பெண்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்த இத்தொடக்கவிழா, பெண்கள் அமைப்பு ரீதியாகத் திரள வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. பாதை விரிந்து கிடக்க, புரட்சிப் பயணத்தில் பெண்கள் விடுதலை முன்னணி தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.

மேலும் படிக்க …நம்பிக்கையான தொடக்கம்!

04_2006.gif

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தூக்கு மேடையேறிய தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் எந்தக் காலனியாதிக்கத்தை முறியடிக்கவும் அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டவும் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தார்களோ, அந்தக் காலனியாதிக்கம் இன்றும் புதிய வடிவில் தொடர்கிறது. அன்றைய காலனியாதிக்கத்தைவிட தற்போதைய மறுகாலனியாதிக்கம்; கொடூரமானது. தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் என்ற பெயரில் வந்துள்ள ஏகாதிபத்தியக் கொள்ளையையும் மறுகாலனியாதிக்கத்தையும் வீழ்த்தவும் விடுதலைப் போருக்கு அணிதிரளவும் அறைகூவி மாவீரன் பகத்சிங்கின் 75வது நினைவுநாளில் (மார்ச் 23) கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்களை எரிக்கும் போராட்டத்தை ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் அறிவித்தன.

மேலும் படிக்க …கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் எரிப்புப் போராட்டம்: மறுகாலனியாதிக்க எதிர்ப்பு தீ பரவட்டும்!

04_2006.gif

ஜார்ஜ் புஷ் கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்து சென்றபொழுது, எந்தவொரு அமெரிக்க அதிபரும் சந்தித்திராத எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

            நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி, புஷ் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்லும் வரை, புஷ் எதிர்ப்பு இயக்கத்தைத் தமிழகத்தின் பல்வேறு, கிராமப்புறங்களிலும் நடத்தின. ""உலக மேலாதிக்கப் போர் வெறியன் புஷ்ஷே திரும்பிப் போ! சர்வதேச பயங்கரவாதி  போர் குற்றவாளி புஷ்ஷைத் தூக்கில் போடுவோம்'' என்ற முழக்கங்களை முன் வைத்து சுவரொட்டிகள், பிரசுரங்கள், விளம்பரத் தட்டிகள், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பேருந்துப் பிரச்சாரம் எனப் பல்வேறு வடிவங்களில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க …'போர்க் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷே, திரும்பிப் போ!" : -தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

04_2006.gif

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் அமைந்துள்ள "லேணா திருமண மண்டபம்' நகரில் மிகப்பெரும் ஆடம்பரமான  வசதி படைத்தவர்கள் நாடும் திருமண மண்டபமாகும். அந்த மண்டபம் அமைந்துள்ள மதுரை சாலையில் 16.3.06 அன்று காலை 11 மணியளவில் சென்று கொண்டிருக்கையில் ""வைகை மணி இல்லத் திருமண விழா'' என்று பல வண்ணங்களில் ராட்சத வரவேற்பு போர்டுகள் திருமண மண்டபத்தின் முகப்பு வாயிலில் நிறுவப்பட்டிருந்தன. அனைத்து வரவேற்பு போர்டுகளை விட நல்ல சிவப்பு நிறத்தில் அரிவாள் சுத்தியலை வெள்ளை நிறத்தில் கம்பீரமாய் போட்டு' மேலாளர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களே!''.... இன்னும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை எல்லாம் பொறித்து அனைவரையும் வருக! வருக! என "கம்பீரமாக' வரவேற்றது சி.பி.எம். கட்சியின் விளம்பர போர்டு!

மேலும் படிக்க …அடி முதல் நுனி வரை அழுகி நாறும் சி.பி.எம்:

04_2006.gif

"ஹெச் 5 என் 1 (5N1); கொடூரமான பறவைக் காய்ச்சல் நச்சுக் கிருமி இறக்கை கட்டி பரவுகிறது. நீர்ப்பறவைகள் தங்களின் குளிர்காலப் புகலிடமான இந்தியாவின நீர்தேக்கங்களில் வந்திறங்க ஆரம்பித்து விட்டன. அடுத்த 10 வாரங்களில் சீனாவிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தெற்கு ஆசியாவை நோக்கி இடம் பெயரும். இந்த அழகான பறவை கூட்டத்தின் ஊடாகவே அவற்றின் உடலில் 61 மனித உயிர்களை காவு கொண்ட ஹெச் 5 என் 1 நச்சுக் கிருமிகளும்
மேலும் படிக்க …பறவைக் காய்ச்சல்: சந்தைப் பொருளாதாரத்தின் கோர விளைவு ஆதாயம் தேடும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள்

04_2006.gif

இந்த ஆண்டிற்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கையை, ""உண்மையான இந்தியாவிற்கான பட்ஜெட்'' எனக் குறிப்பிட்டுள்ளார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். தாராளமயத்தை மிகத் தீவிரமாக ஆதரித்து எழுதிவரும் ""இந்தியாடுடே'' வார இதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், ""நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் மேல்தட்டு நடுத்தர வர்க்கம் மட்டும் இந்தியா அல்ல... இந்த பட்ஜெட் விவசாயிகளின் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறது'' எனக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க …பட்ஜெட்: தனியார்மயத்திற்கு கவர்ச்சி முகமூடி

04_2006.gif

நாங்கள் பு.ஜ. இதழை பேருந்துகளில் விற்பனை செய்து கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த இரு வெளிநாட்டு மாணவர்கள், ஆர்வத்தோடு எங்களிடம் விளக்கம் கேட்டனர். பு.ஜ. இதழின் அட்டைப் படத்தைக் காட்டி பயங்கரவாத புஷ் இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து செய்தி வெளியாகியிருப்பதையும், அபுகிரைப் சிறைக் கொடுமைகளைப் பற்றியும் அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கினோம். , தாங்களும் அமெரிக்காவில் இப்பயங்கரவாதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டு, எங்கள் பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்தனர். பு.ஜ. விற்பனை மூலம் புஷ் எதிர்ப்பாளர்களைச் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி, எங்களுக்குப் பேருற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

04_2006.gif

"ஜார்ஜ் புஷ்ஷை அமெரிக்காவின் மகாராஜாவாகவே கருதி உபசரித்தது இந்தியா'' என்று புஷ்ஷின் இந்திய வருகையைப் பற்றி எழுதியது ""நியூயார்க் டைம்ஸ்'' நாளேடு. புஷ் மகாராஜா என்றால் குறுநில மன்னன் அல்லது பாளையக்காரன் யார்? அது மன்மோகன் சிங்தான் என்பதை விளக்கத் தேவையில்லை. முன்னாள் உலக வங்கி அதிகாரியான மன்மோகன் சிங், தன்னுடைய எசமானிடம் கூனிக் குறுகிக் குழைந்து கும்பிடு போட்டுப் பல்லிளித்த காட்சியை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. சும்மா ஒரு தோரணைக்காகக் கூட "தான் ஒரு நாட்டின் பிரதமர்' என்பதைக் காட்டிக் கொள்ளாமல்,

மேலும் படிக்க …இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்: அடிமைக்கு எதற்கு அணு ஆயுதம்?

04_2006.gif

 கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டு பத்திரிகைகள்  தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிக்கும் "தீவிரவாதி'களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைப் போல, அடையாளம் தெரியாதபடி தமது முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு, போராடும் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேட்டியளிப்பதைக் கண்டு தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

மேலும் படிக்க …நிகரில்லா பல்கலைக் கிரிமினல் கழகங்கள் -தொடரும் மாணவர் போராட்டம்!

04_2006.gif

"துரோகி விஜயன் ஒழிக! காட்டிக் கொடுக்கும் நவீன "யூதாஸ்' விஜயன் ஒழிக! "பூர்ஷ்வா' விஜயன் ஒழிக!''  என்று முழங்கிக் கொண்டே பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் கடந்த மார்ச் மூன்றாவது வாரத்தில் கேரள மாநிலத்தில் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பின. கேரள மாநில சி.பி.எம். செயலாளரான பினாரயி விஜயனின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.

மேலும் படிக்க …கேரளா:நாற்காலி பிடிக்குமுன்னே நாய்ச்சண்டை

04_2006.gif

அண்மையில் எனது சொந்த கிராமத்துக்குச் சென்ற போது, ""டவுன்ல பொன்னி அரிசியப் பொங்கித் திங்கிற உங்களுக்கு தங்கமணி, சீரகச்சம்பா, குதிரவாலி, கிச்சடி சம்பா அரிசியெல்லாம் தெரியுமா தம்பி?'' என்று கேட்டார் எங்கள் கிராமத்து முதிய விவசாயி.

மேலும் படிக்க …நிரந்தர பசுமைப் புரட்சி: வந்தது பேராபத்து!

04_2006.gif

ஓட்டுக் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும், செய்தி ஊடகங்கள் வதந்திக் காற்றால்  விசிறி விடுவதாலும் தமிழக மக்களுக்கு மண்டைக் காய்ச்சல் ஏற்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வதானால், கடந்த ஆண்டு மத்தியிலேயே வாக்காளர் பட்டியல் திருத்த வேலையின் போதே தேர்தல் பரபரப்புகள் தொடங்கி விட்டன. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான கடைசி நாளன்று இலட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கத்தை கத்தையாக கொடுக்கப்பட்டன.

மேலும் படிக்க …தேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்

04_2006.gif

இதை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?

 

            ""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'', ""எங்கள் சிறுநீரகம் விற்பனைக்குத் தயார்!''  என மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் பல கிராமங்களில் அறிவிப்புப் பதாகையுடன் விவசாயிகள் தமது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் புதுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமது உடல் உறுப்புகளையும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் பகிரங்கமாக விற்பனை செய்யத் துணிந்து விட்ட விவசாயிகளின் இச்செயல், வழக்கம் போலவே செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இப்போது மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க …''விவசாயிகளின் சிறுநீரகங்கள் விற்பனைக்கு!" தாராளமயத்தின் கோரம்

05_2006.jpg

தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கத்தை வீச்சாக நடத்தி வருகின்றன. துண்டுப் பிரசுரம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டம்கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும், தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார இயக்கத்தையொட்டி வெளியிடப்பட்ட ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!''

மேலும் படிக்க …தேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை உரிமையா? தேசவிரோதக் கொடுஞ்செயலா?

05_2006.jpg

மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் வழியே ஓடும் நர்மதை மற்றும் அதன் கிளை ஆறுகளில் 30 பெரிய, 135 நடுத்தர மற்றும் 3000 சிறு அணைக்கட்டுகள் கட்டி, ம.பி., குஜராத், மகாராஷ்டிரா, இராசஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் பாசன  குடிநீர் வசதிகள் உருவாக்கித் தரும் திட்டம் 1980களில் தீட்டப்பட்டது. இத்திட்டத்தில் சர்தார் சரோவர் மற்றும் நர்மதா சாகர் என்ற இரு அணைகள்தான் முக்கியமானவை.

மேலும் படிக்க …ஒரு நதியின் கண்ணீர் : நர்மதைச் சமவெளியைப் பாதுகாக்க பழங்குடியின மக்கள் நடத்திவரும் போராட்டம், சட்டபூர்வ – அமைதிவழிப் போராட்டங்களின் சாத்தியப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது.

05_2006.jpg

மும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், ஒரு பண்ணை வீடு உள்ளிட்ட ரூ. 45 கோடி மதிப்புடைய சொத்துக்கள்; விஷால் டிராவல்ஸ் என்ற பெயரில் சொகுசுப் பேருந்துகள்; மனைவி பெயரில் சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு; துபாயில் நடன விடுதி கொண்ட நட்சத்திர ஓட்டலின் பங்குதாரர்; மனைவி பெயரில் கோடிகளைப் பரிமாற்றம் செய்யும் சீட்டுக் கம்பெனி; 4 வங்கிக் கணக்குகள் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 கோடிக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுக்கும் பைனான்சியர்....

மேலும் படிக்க …தயாநாயக்: போலீசு பயங்கரவாதியின் மறுபக்கம்

05_2006.jpg

"கல்லூரிக் கல்வியும் ஆங்கிலம் பேசும் ஆற்றலும் கொஞ்சம் கணினி அறிவும் இருந்தால் கால் சென்டர்களில் ஆயிரமாயிரமாய் சம்பாதிக்கலாம்; வேலை செய்து கொண்டே படித்து மேலும் மேலும் முன்னேறலாம்; அமெரிக்க வாழ்க்கையை இங்கேயே வாழலாம்; அதிருஷ்டமிருந்தால் அமெரிக்காவுக்கே போய்விடலாம்'' என்று பத்திரிகைகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. ""கால் சென்டர்கள்தான் நவீன இந்தியாவின் கோயில்கள்'' என்று மொத்தப்

மேலும் படிக்க … கால்-சென்டர்கள் கொத்தடிமைத்தனம் ஒழிவது எப்போது?

05_2006.jpg

அபாயகரமான ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரெஞ்சு இராணுவக் கப்பல், இந்தியாவில் உடைக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சமீபத்தில் போராடின. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம், ""இது குறித்து யாரும் எந்தக் கருத்தும் கூறக் கூடாது'' என உத்தரவு போட்டது. நமது நாட்டில் கருத்துரிமை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.

மேலும் படிக்க …மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்

05_2006.jpg

"தெருப் போராட்டங்களின் ஆட்சி நடைபெறுகிறது; அதிபர் சிராக்கே, பதவியை விட்டு விலகு!'', ""அதிபர் சிராக்கே, தெருப் போராட்டங்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதே!'' கடந்த மூன்று மாதங்களாக இப்படிபட்ட போராட்ட முழக்கங்கள் பிரான்சு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்து, பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆளுங் கும்பலின் வயிற்றைக் கலக்கி வந்தன.

மேலும் படிக்க …பிரான்சை உலுக்கிய மாணவர் போராட்டம் தனியார்மயத் தாக்குதலை ஒன்றுபட்டுப் போராடி விழ்த்த முடியும் என நிரூபித்துள்ளனர், பிரெஞ்சு பல்கலைக்கழக் மாணவர்கள்

05_2006.jpg

மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு சோர்வில்லாமல் பணியாற்றிய தோழர் மயிலாடுதுறை ஸ்டாலின், கடந்த 20.2.06 அன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறினால் மரணமடைந்தார். சாதிமதச் சடங்குகளின்றி நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தோழர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த9.4.06 ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் தோழர் ஸ்டாலினது படத்திறப்பும் சிவப்பஞ்சலிக் கூட்டமும் தஞ்சை ம.க.இ.க. தோழர்களால் நடத்தப் பெற்றன. ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, தோழர் ஸ்டாலினது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். மயிலாடுதுறை பெரியார் பகுத்தறிவு மையத் தலைவர் தோழர் நாக.இரகுபதி, கவிஞர் தோழர் துரை.சண்முகம், சீர்காழி வட்ட வி.வி.மு. தோழர் அம்பிகாபதி, தமிழர் உரிமை இயக்கத் தலைவர் திரு.முரளி, இரயில்வே அலுவலர் திரு.கிருட்டிணன் ஆகியோர் தோழர் ஸ்டாலின் அவர்களின் உயரிய பண்புகளை நினைவு கூர்ந்தனர்.

மேலும் படிக்க … மரணத்திற்குப் பின்னும் வாழ்வு தோழர் ஸ்டாலினுக்கு சிவப்பஞ்சலி!

05_2006.jpg

வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சிக்கு வந்தபின் வஞ்சிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடிவதில்லை. தமது விருப்பத்தையும் விதியையும் நிறைவேற்றாத ஓட்டுக்கட்சிகளையும் ஆட்சியாளர்களையும் அடுத்தடுத்த போராட்டங்களில் மக்கள் தூக்கியெறிகிறார்கள். மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்தாத பழைய வகைப்பட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் மக்களின் நம்பிக்கையை இழந்து செல்லாக் காசாகி விட்டன.

மேலும் படிக்க …தென்னமெரிக்க நாடுகளில் புதிய ஆட்சிகள்: இடதுசாரி அலையா? கானல் நீரா?

05_2006.jpg

ஜனநாயகத்தின் பெயரால் ஓட்டுப் பொறுக்கிகள் எழுப்பும் இரைச்சலில் ஒரு ஜனநாயகப் படுகொலை குறித்த தீர்ப்பு சத்தமில்லாமல் புதைக்கப்பட்டிருக்கிறது. "மேலவளவுப் படுகொலை' என்று அறியப்படும் தலித்துகள் மீதான வன்கொடுமைப் படுகொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கள்ளர் சாதிவெறியர்கள் 17 பேரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து, அவர்களுடைய தண்டனையை உறுதி செய்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்.

மேலும் படிக்க …மேலவளவு: எதிரிகளுடன் திருமா கூட்டு

05_2006.jpg

அழுகி நாற்றமெடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் என்ற சொற்றொடரின் முழுமையான பொருளை ஒரு இலக்கியம் போல உய்த்துணர்வதற்கு யாரேனும் விரும்பினால், அவர்கள் உடனே தமிழகத்திற்கு வரவேண்டும்.

            ""தோற்பது நானாக இருந்தாலும் வெல்வது பொறுக்கி அரசியலாக இருக்க வேண்டும். வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது சீரழிவாக இருக்க வேண்டும்'' என்ற கொள்கையுடன் ஓட்டுப் பொறுக்கி அரசியலை அடியாழம் காணமுடியாத அதல பாதாளத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார், புரட்சித்தலைவி.

மேலும் படிக்க …பொறுக்கி – கவர்ச்சி அரசியலில் மயங்கிக் கிடக்கும் தமிழகம் : கலாச்சார சீரழிவு குறித்த ஒழுக்கவாத அங்கலாய்ப்பல்ல இது; அரசியல் சீரழிவின் நோய்க்குறிகளை அடையாளம் காணும் முயற்சி.

05_2006.jpg

 "வெற்றி! மகத்தான வெற்றி! நேற்றுவரை மன்னரின் தயவில் மக்கள்; இன்று எங்கள் தயவில்தான் மன்னர்!'' என்று எக்காளமிட்டு நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலுள்ள நாராயணன்ஹிதி அரண்மனை வாயிலருகே தர்பார் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்ட வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினர். ""இனி இந்த அரண்மனை மன்னரது சொர்க்கபுரி அல்ல;

மேலும் படிக்க …நேபாளத்தில் மக்கள் யுத்தம் : ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாத சமரசம்

05_2006.jpg

"தாமிரவருணி எங்கள் ஆறு! அமெரிக்க "கோக்'கே வெளியேறு! தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!''  என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கங்கைகொண்டானில் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் இணைந்து நடத்திய போராட்டம், ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது.

மேலும் படிக்க …கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு உதயம் பாதை நெடியதானாலும் பயணம் தொடர்கிறது!

05_2006.jpg

எப்படியாவது ஓட்டு வாங்கி, தேர்தல்களில் வெற்றி பெற்று பதவியைப் பிடிக்க வேண்டும்; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அரசியல் கட்சிக்காரர்கள். வாக்காளர்களின் கால்களைப் பிடித்தும் கெஞ்சுவார்கள்  அப்படியும் செய்திருக்கிறார்கள்! ஆனால், ஒன்றை மட்டும் செய்யவே மாட்டார்கள்!

மேலும் படிக்க …இலவச கவர்ச்சித் திட்டங்கள்: தமிழன் கையேந்தியாவதா?

05_2006.jpg

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்று ஒரு குரல், உறுதியான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒன்றில்லாவிட்டால், மற்றொரு கட்சிக்கோ, அணிக்கோ ஓட்டுப் போடுவதற்குப் பதில் ஒட்டு மொத்தமாகத் தேர்தல்களையே புறக்கணிக்கக் கோருகிறது. ஏன் இப்படி வித்தியாசமான குரல், தனித்த குரல்? அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை இழந்து, ஆத்திரம் பொங்கி, வெறும் விரக்தியால்? அரசியல் கட்சிகளும் அரசும் கூறுவதைப் போல வேலையற்றவர்களின் வெறும் தீவிரவாத முழக்கமா? இல்லை, ஓட்டுக் கேட்டு வரும் அரசியல் கட்சிக்காரர்களைப் போல, ஏதாவது ஆதாயம் தேட முன்வைக்கப்படும் முழக்கமா?  ""தவறாமல் ஓட்டுப் போடுங்கள்'' என்று அரசு பிரச்சாரம் செய்வதிலாவது ஒரு உள்நோக்கம் இருக்கிறது. ஒருமுறை ஓட்டுப் போட்டு விட்டால், உங்கள் சம்மதத்தோடுதான் இந்த அரசு செயல்படுகிறது என்று எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளலாம். ""எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்'' என்று அரசியல் கட்சிகள் கேட்பதிலாவது அவற்றுக்கு ஆதாயம் இருக்கிறது.

மேலும் படிக்க …'ஓட்டுப் போடாதே புரட்சி செய்!" - ஏன் இந்த முழக்கம்?

05_2006.jpg

மக்களுக்காகப் போராடும் ஒரே கட்சி, உழைக்கும் மக்களின் கட்சி என்றெல்லாம் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு, ""அரசியல சாக்கடை சாக்கடைன்னு சொல்லிகிட்டு இருந்தா, அப்புறம் யார்தான் அத அள்றது? நாமதான் தோழர்களே தூர் வாரணும்! எனவே கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களிக்க வாருங்கள்!'' என்று ""ஆனந்த விகடன்'' இதழில் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் படிக்க …'தேர்தல் என்றாலே இதெல்லாம் சகஜம்பா!..." பொறுக்கி அரசியலில் சி.பி.எம். இன் புதிய பரிணாமங்கள்

06_2006.jpg

""இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போரில் தமிழகமும் குதிக்கிறது; 25.5.06 அன்று சென்னை  வாலாஜா சாலை அருகே ஆர்ப்பாட்டம்; சமத்துவத்துக்காகக் குரல் கொடுக்க அணிதிரளுங்கள்'' என்று இரு நாட்களுக்கு முன்னதாகவே பார்ப்பனமேல்சாதி வெறிக் கும்பல், இணையதளம் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் செல்ஃபோன்களுக்கு குறுந்தகவல் அனுப்பியும் மேட்டுக்குடியினரை நூதனமுறையில் பிரச்சாரம் செய்து அணிதிரட்டியது. பெரியார் பிறந்த மண்ணில்

மேலும் படிக்க …பார்ப்பனத் திமிருக்கு எதிராக கலகத்தில் இறங்கிய புரட்சிகர அமைப்புகள்

06_2006.jpg

இந்திய நாட்டைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, மே 22ஆம் தேதி வழக்கம் போலவே விடிந்து, வழக்கம் போலவே முடிந்துபோன சாதாரண நாள். ஆனால், பங்குச் சந்தை தரகர்களோ அந்த நாளை, ""கருப்பு திங்கட்கிழமை'' என அழைக்கிறார்கள். அன்றுதான், வீங்கிப் போய்க் கொண்டே இருந்த மும்பய் பங்குச் சந்தை, 1,100 புள்ளிகள் சரிந்து விழுந்தது. பங்குச் சந்தை சூதாட்டத்தின் தலைநகராக விளங்கும் அகமதாபாத்தில் திவாலான பங்குச் சந்தை வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத்

மேலும் படிக்க …பங்குச் சந்தை வீழ்ச்சி தேசியத் துயரமா?

06_2006.jpg

மைய அரசின் உதவி பெறும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), இந்திய மேலாண்மைக் கழகம் (ஐ.ஐ.எம்), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மையம் (எ.ஐ.ஐ.எம்.எஸ்), ஜிப்மர் முதலான உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவிருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் அண்மையில்

மேலும் படிக்க …""இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பன மேல்சாதி வெறியை முறியடிப்போம்!'' — தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

06_2006.jpg

மே நாள்  அரசியல் ஆர்ப்பாட்ட நாள் என்பதை மறைத்து, கோலாகலத் திருவிழாவாக ஆண்டுதோறும் ஓட்டுப் பொறுக்கிகள் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு தேர்தல் திருவிழா காரணமாக அந்த மே நாள் கொண்டாட்டத்தைக் கூட புறக்கணித்து விட்டனர். இந்நிலையில் ""தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பாசிச கருப்புச் சட்டங்களை முறியடிப்போம்! தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்துவோம்! உலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க மேல்நிலை வல்லரசைத் தகர்த்தெறிவோம்!'' என்ற

மேலும் படிக்க …""மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!'' புரட்சிகர அமைப்புகளின் மே நாள் அறைகூவல்!

06_2006.jpg

ஓட்டுப் பொறுக்கிகளின் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சிசெய்!'' என்ற முழக்கத்துடன் தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக கடந்த ஏப்ரல்  மே மாதங்களில் நடத்தின. ஓட்டுப் போடுவதும் ஓட்டுப் போடாமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால், தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்வதையே ஏதோ சட்டவிரோத  தேசவிரோத பயங்கரவாதச் செயலாகச் சித்தரித்து, போலீசு பல பகுதிகளில் தடைவிதித்ததோடு, முன்னணியாளர்கள் மீது பொய்வழக்கு சோடித்து கைது செய்து சிறையில் அடைத்தது.

மேலும் படிக்க …தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரம் : புரட்சிப் பாதையில் பீடுநடை

06_2006.jpg

இந்தியாவின் அறிவிக்கப்படாத காலனியாக உள்ள காசுமீரில் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ள விபச்சார பூகம்பம், "தேசபக்தி'யின் பெயரால் நடக்கும் காமவெறி பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டிவிட்டது.

 

            கடந்த மார்ச் மாத மத்தியில் சிறீநகரின் கர்ஃபாலி மொஹல்லா பகுதியைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி யாஸ்மீனாவின் நீலப்பட சி.டி. இப்பகுதியில் புழங்குவதாகக் கூறி,

மேலும் படிக்க …தேசப் பாதுகாப்பின் பெயரால் காமவெறி பயங்கரவாதம்

06_2006.jpg

ஆளரவமற்ற அடர்ந்த காடு. இருபுறமும் புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அம்மண்ணின் மைந்தரான மர்விந்தாவும் அவரது குடும்பமும் தமது கிராமத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தனர். தமது வீட்டையும் தோட்டத்தையும் பார்த்து விட்டு மாலைக்குள் திரும்பிவிட வேண்டுமென்ற அவசரத்தில் அவர்கள் வேகமாக நடந்தனர். இருளிபலாம் கிராமத்தை அடைந்த போது துக்கம் அவர்களது தொண்டையை அடைத்தது. அங்கே எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தமது குடிசையைக் கண்டதும் ""ஓ''வெனக் கதறி அழுதனர்.

மேலும் படிக்க … நக்சலைட்டு தேடுதல் வேட்டை : அரசே உருவாக்கிய உள்நாட்டுப் போர்!

06_2006.jpg

எந்தச் சாதியில் பிறந்தவராக இருப்பினும் தகுதியான நபர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகராக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற விருப்பதாக தி.மு.க. அமைச்சரவை அறிவித்துள்ளது. 1972இல் இதே சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தபோது, சங்கர மடம் மற்றும் ஆதீனங்கள் ஒன்றிணைந்து இதற்கெதிரான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் பெற்றன. ஆகம விதிகளின் அடிப்படையில் அமைந்த கோயில்களில் பார்ப்பனரல்லாத யாரும் அர்ச்சகராக முடியாது என்ற இந்தத் தீண்டாமைக் கோட்பாட்டை "இந்து மத உரிமை' என்ற பெயரில் அங்கீகரித்தது அன்றயை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு.

மேலும் படிக்க …அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் : பாதிக் கிணறு தாண்டும் தி.மு.க. அரசு

06_2006.jpg

மதம் மற்றும் மொழிச் சிறுபான்மை தகுதி கொண்ட தனியார் கல்லூரிகள் தவிர்த்து, பிற சுயநிதிக் கல்லூரிகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்திருத்தமொன்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில்

மேலும் படிக்க …பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!

06_2006.jpg

கடந்த 25 ஆண்டுகளாகப் புரட்சிகர இயக்கத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் ஊக்கமுடன் செயல்பட்டு வந்த கோவை  கணபதியைச் சேர்ந்த தோழர் நா.இராமமூர்த்தி, கடந்த 9.5.06 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 47வது வயதில் மரணமடைந்து விட்டார்.

மேலும் படிக்க …தோழர் இராமமூர்த்தி அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!

06_2006.jpg

வடநாட்டில் இப்போது கோதுமை அறுவடைக் காலம். விவசாயிகள் அறுவடைத் திருவிழாக்களைக் கொண்டாடும் நேரம். அத்திருவிழாக்களைத் தொடர்ந்து, பல விவசாயக் குடும்பங்களில் இளைஞர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும் காலம். ஆனால், ஆயிரமாயிரம் கனவுகளோடு அறுவடையை முடித்த விவசாயிகளின் நெஞ்சில் இடியென இறங்கியுள்ளது விலை வீழ்ச்சியும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையும்.

மேலும் படிக்க …கோதுமை இறக்குமதி : மறுகாலனியாதிக்கத்திற்கு உணவும் ஒரு ஆயுதம்

06_2006.jpg

அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவியும், தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அக்கட்சி கருதும் அம்மா(!) ஆட்சி அதிகாரத்தை இழந்த 15 நாட்களில் 75க்கும் மேலான அக்கட்சித் தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டோ, மாரடைப்பாலோ மரணமடைந்துள்ளார்கள்.

மேலும் படிக்க …ஜெயா எழுதும் 'கட்டை மொய்"!

06_2006.jpg

அந்நிய ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் மறுகாலனியாதிக்கமே நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளைத் தீர்மானிப்பது என்றாகி விட்டது. அதன் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில் நாடாளுமன்ற  சட்டமன்ற ஜனநாயகமும் தேர்தல்களும், தனிநபர்வாதமாகவும் கலாச்சாரச் சீரழிவாகவும் மாறி வருவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, தமிழக அரசியல்.

மேலும் படிக்க …இலவச – கவர்ச்சி அரசியலின் விபரீதம்

06_2006.jpg

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பதவியேற்றவுடனேயே, தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 6,866 கோடி ரூபாய் பெறுமான கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இக்கடன் தள்ளுபடியைத் தனது தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. குறிப்பிட்டவுடனேயே, பல பொருளாதார வல்லுநர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க

மேலும் படிக்க …''வங்கிக் கடனைக் கட்டாத முதலாளிகள் சூழ்நிலைக் கைதிகள்!" -உச்சநீதி மன்றத்தின் அழுகுனித் தீர்ப்பு

06_2006.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வரையறுத்து, தடைசெய்யப்படும் அமைப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. அதோடு, சிறீலங்காவில் அமைதி முயற்சிகளை ஆதரித்து நிதியளிக்கும் அனைத்து நாடுகளின் கூட்டுத் தலைமை  அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நார்வே ஆகிய நான்கு நாடுகள் அடங்கியது 

மேலும் படிக்க …மிரட்டும் வல்லரசுகள் நெருக்கடியில் புலிகள்

06_2006.jpg

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட முகாசபரூர் என்ற கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்ததால் வாந்திபேதி

மேலும் படிக்க …தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரை விட காகித வாக்குச் சீட்டு பெரிதா?வன்னிய சாதிவெறியர்களைக் காக்கும் 'ஜனநாயகம்"

07_2006.jpg

டந்த 58 ஆண்டுகளாக தமது சொந்த மண்ணை இழந்து கொடுந்துயரங்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்கள் இன்று பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். உண்ண உணவில்லை; குழந்தைகளுக்குப் பால் இல்லை; மருத்துவமனைகளில் மருந்து இல்லை; ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை; தாங்கள் உழுது

மேலும் படிக்க …அமெரிக்க - இஸ்ரேலிய பயங்கரவாதம் : பட்டினியில் பரிதவிக்கும் பாலஸ்தீகனம்

07_2006.jpg

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள பூதலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாரனேரி என்கிற கிராமத்தில் சுப்ரமணியன் என்ற சாதிவெறி பிடித்த மிருகம், தனது மகனையே கொன்று எரித்துள்ளது. இந்த மிருகம் ஆதிக்க சாதிகாரன் என்றோ, பெரும்பணக்காரன் அல்லது பண்ணையார் என்றோ கருதிவிட வேண்டாம். 20 ஆண்டுகளாக சி.பி.எம். கட்சியில் "தீவிரமாக' செயல்பட்டு வருபவர். தாழ்த்தப்பட்ட சாதியான

மேலும் படிக்க …பெற்ற மகனை கொன்று எரித்த கொடூரம்! : சி.பி.எம்.காரனின் சாதிவெறியாட்டம்!!

07_2006.jpg

தமிழகமெங்கும் எல்லா அரசுப் பள்ளிகளிலும் நன்கொடை என்ற பெயரில் பெற்றோர்ஆசிரியர் கழகம், கட்டாய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இச்சட்ட விரோதப் பகற்கொள்ளைக்கு எதிராக தருமபுரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம், தட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சான பிரச்சாரத்தை நடத்தி வந்தது.

மேலும் படிக்க …அரசுப் பள்ளிகளில் கட்டாய நன்கொடை கொள்ளை! புரட்சிகர அமைப்புகளில் பிரச்சாரம் - போராட்டம்

07_2006.jpgஉழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுவது, பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் மறியல் நடத்துவது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது இப்படி இதுநாள் வரை அரசியல் சாசனத்தில் இருந்துவந்த சட்டபூர்வ ஜனநாயக உரிமைகளை அடுத்தடுத்து நீதிமன்றம் சட்டவிரோதனமானதாக அறிவித்து வருகிறது. இத்தீர்ப்புகள் ஒருபுறமிருக்க, இந்தியக் குற்றவியல் சட்டத் தொகுப்பையே ""பொடா''விற்கு இணையாகத் திருத்தி எழுதும் முயற்சியில் மைய அரசு

மேலும் படிக்க …மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்

07_2006.jpg

மாங்கல்ய திட்டம்; இது ஆட்சியாளர்கள் அறிவித்துள்ள புதியதொரு திருமண உதவித் திட்டம் அல்ல; நகைக்கடைக்காரர்கள் விளம்பரப்படுத்தியுள்ள புதியதொரு நகை சேமிப்புத் திட்டமும் அல்ல. மோசடி சீட்டுக் கம்பெனிக்காரர்கள் ""வாழ்க வளமுடன்'' என்ற பெயரில் தொழில் நடத்துவதைப் போல, இளஞ் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்ட பஞ்சாலைநூற்பாலை முதலாளிகள் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர்தான் மாங்கல்ய திட்டம்.

மேலும் படிக்க …தீவிரமாகி வரும் மறுகாலனியாதிக்கம் : கொத்தடிமைக் கூடாராமாகும் தமிழகம்

07_2006.jpg

மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து மூலிகைகளில் குளித்துவரும் பவானி ஆறு இன்று சாக்கடைக் கழிவாக மாறிவிட்டது. திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகளால் நொய்யல் ஆறு நாசமாக்கப்பட்டதைப் போலவே, பவானி ஆறும் துணி ஆலை காகித ஆலை முதலாளிகளால் நச்சுக் கழிவுச் சாக்கடையாக மாறியுள்ளது.

மேலும் படிக்க …'பவானி ஆறை நஞ்சாக்காதே!"-விவசாயிகளின் விழிப்புணர்வு பிரச்சார நடைப்பயணம்

07_2006.jpg

பெட்ரோல் டீசல் விலையேற்றத்தின் மூலம் மக்கள் மீது மிகப்பெரும் பொருளாதாரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள காங்கிரசு கூட்டணி அரசை எதிர்த்து, 17.6.06 அன்று மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு. பொருளாளர் தோழர்

மேலும் படிக்க …'மக்களையே எரிக்கிறது பெட்ரோல் - டீசல் விலை உயர்வு"-கண்டன ஆர்ப்பாட்டம்

07_2006.jpg

சட்டசபைத் தேர்தல்கள் முடியும்வரை காத்திருந்துவிட்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதன் மூலம், மக்களின் முதுகில் குத்தும் நம்பிக்கை துரோகிகள்தான் காங்கிரசு கும்பல் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கோதுமை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கும்பொழுது, எரிகிற நெருப்பில்

மேலும் படிக்க …பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: அரசே நடத்தும் பகற்கொள்ளை

07_2006.jpg

போதை மருந்தை வாங்கி உட்கொண்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ராகுல் மகாஜனின் கதையை, முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ""செண்டிமென்ட்'' கலந்து கொடுத்தன. அந்த 31 வயது இளைஞனின் தந்தை பிரமோத் மகாஜன், தனது சொந்த தம்பியாலேயே சுடப்பட்டு இறந்து போன சோகம் மறைவதற்குள்ளாகவே, மகாஜன் குடும்பத்தைத் தாக்கிய இரண்டாவது பேரிடியாக, இந்த விவகாரத்தை முதலாளித்துவ பத்திரிகைகளும், ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளும் சித்தரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க …இந்து மதவெறியின் பரிணாமம்: அன்று சோமபானம்! இன்று கோகெய்ன்!

07_2006.jpg

மாற்று இயக்கத்தினர் மீது இட்டுக்கட்டி அவதூறும் பொய்யும் புனைச் சுருட்டும் பரப்புவதாலேயே மட்டும் எந்தவொரு இயக்கமும் வளர்ந்துவிட முடியுமா? அப்படித்தான் நம்புகிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், இடஒதுக்கீடாகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், இந்தத் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை ""அப்படியே'' ஏற்காதவர்களை எதிரிகளோடு இணைவைத்து முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள். குறிப்பாக, புதிய ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தினரிடம் மட்டும் இந்தச் சிறப்பு அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க …இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு-இனவாதிகளின் அவதூறும் எமது நிலையும் வக்காலத்து தான் சமூகநீதியா?

07_2006.jpg

குஜராத்தில் 2002இல் நடந்த பார்ப்பன பயங்கரவாத வெறியாட்டத்தின் போது, கீதாபென் என்ற இந்துப் பெண் பார்ப்பன பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டார். ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான் அவர் செய்த "குற்றம்'! இன்றும் அதேபோல் ஒரு காதல் விவகாரம்; அதே வெறியாட்டம். ஆனால், இந்து வெறியர்களின் இடத்தில் முசுலீம் மதவெறியர்கள். கீதாபென்னின்

மேலும் படிக்க …தமிழகத்தில் தாலிபான்கள்

07_2006.jpg

"இந்தியா ஒரு பொருளாதார மேல்நிலை வல்லரசாக உருவாகி வருகிறது'' என்ற செய்தி, ஊடகங்களில் நிரம்பி வழிகின்றது. குலுக்கித் திறக்கப்பட்ட ""பீர்'' பாட்டிலைப் போல இந்தியப் பொருளாதாரத்தின் ""வளர்ச்சி'' குறித்த மகிழ்ச்சியில் பத்திரிகைகள் புள்ளி விவரங்களால் பொங்கி வழிகின்றன.

மேலும் படிக்க …'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்

07_2006.jpg

நாட்டை மீண்டும் காலனியாக்குவதில் போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது, ஐக்கிய முற்போக்கு ஏலக் கம்பெனி. சில்லறை வியாபாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்குத் தாராள அனுமதி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தம் விருப்பம் போல் சட்டங்கள் விதிகளை வகுத்துக் கொண்டு "கும்பினியாட்சி' நடத்தத் தாராள அனுமதி,

மேலும் படிக்க …மறுகாலனியாதிக்கத் தாக்குதல்: ஏலக் கம்பெனியும் துரோகக் கம்பெனியும்

07_2006.jpg

ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹதிதா என்ற சிறு நகரம், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடும் சன்னி பிரிவு முசுலீம் போராளிகளின் செல்வாக்கு நிறைந்த பிராந்தியம். இதன் காரணமாகவே ஹதிதா, அமெரிக்க இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அதிகாலை நேரத்தில் இந்நகரைச் சேர்ந்த 23 ஈராக்கியர்கள் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இறந்து போனார்கள். அகால மரணமடைந்த இந்த 23 பேரில், மூன்று குழந்தைகள், ஏழு பெண்கள், மற்றும் நடக்கவே முடியாத முதியவர் ஒருவரும் அடங்குவார்கள்.

மேலும் படிக்க …வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா! : அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்

கொல்கத்தா நகரைச் சேர்ந்த மின்சார ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக இருந்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 லாரிகளில் ஒரு கும்பல் வந்திறங்கியது. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கøக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. இரத்தம் சொட்டச் சொட்ட அவர்கள் சிதறி ஓடியும், அவர்களைத் துரத்திக் கொலைவெறியுடன் தாக்கியது.

மேலும் படிக்க …சி.ஐ.டி.யு. : தொழிற்சங்கமா? குண்டர் படையா?

இந்து மதவெறியர்கள் எங்கெல்லாம் காலூன்றத் திட்டமிடுகிறார்களோ அங்குள்ள சிறுபான்மையினரை வம்புக்கிழுத்துத் தகராறை உருவாக்குவதற்காகப் பல உத்திகளைக் கையாளுகின்றனர். உள்ளூர் மசூதியில் வம்படியாகக் காவிக்கொடி ஏற்றுவது, பாகிஸ்தான் கொடியை பள்ளிவாசலில் ஏற்றி உள்ளனர் என்று வதந்தியைப் பரப்புவது, பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் வெற்றி பெறும்போது இங்குள்ள முசுலீம்கள் வெடி வெடிக்கிறார்கள் என்று புரளி கிளப்புவது இப்படிப் பல உத்திகளைக் கையாண்டு மக்களை மதரீதியில் பிளந்து கலவரத்தின் மூலம் வேரூன்றுவது என்பதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க …பசுவின் புனிதம் : ஒட்டுப் பொறுக்கும் தந்திரம்

கடந்த மார்ச் மாதத்தில், உலகத்தின் கூரை என்றழைக்கப்படும் திபெத்தில் சீன ஆட்சியாளர்களுக்கு எதிராக வெடித்த கலவரம், இதுவரை கண்டிராத மூர்க்கத்தனத்துடன் நடந்துள்ளது. இக்கலவரத்தை ஒடுக்க சீன இராணுவம், போராடிய திபெத் மக்களையும் புத்த மத குருமார்களையும் மிருகத்தனமாகத் தாக்கியது என்றும் மீண்டும் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவுவதாகவும் செய்திகள் வருகின்றன. சீன இராணுவம் நடத்திய தாக்குதலிலும் துப்பாக்கிச் சூட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க …திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா?

ஐரோப்பா கண்டத்தின் பால்கன் பிராந்தியத்திலுள்ள சின்னஞ்சிறு நாடான செர்பியாவிலிருந்து, அதன் தெற்கு மாநிலமான கொசாவோ கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் வரவேற்று, கொசாவோ நாட்டை அங்கீகரித்துள்ளன. அதேநேரத்தில் ரஷ்யாவும் செர்பியாவும் கொசாவோவின் தனிநாடு பிரகடனத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அத்தனி நாட்டை அங்கீகரிக்க மறுத்துள்ளன. இதேபோல, சிங்கள இனவெறி பிடித்த இலங்கை பாசிச

மேலும் படிக்க …கொசாவோ : தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா?

வரலாறு காணாத அளவுக்கு விவசாய உற்பத்தியில் பின்னடைவு; மிரள வைக்கும் அளவுக்கு உணவு உற்பத்தியில் தேக்கம்; புவிசூடேற்றத்தின் விளைவாக நிச்சயமற்ற பருவகாலங்கள்; விவசாயத்தையே விட்டு விரட்டப்படும் விவசாயிகள். இதன் ஊடாகவே விவசாயத்திற்கு மானிய வெட்டு; இடு பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு; மண் வளம் இழப்பு; நீர் பற்றாக்குறை என்று தொடர்தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது ஒட்டு மொத்த விவசாயம்.

மேலும் படிக்க …தமிழக விவசாயத் துறை : பன்னாட்டு நிறுவனங்களில் தரகன்!

நீதிபதி: எனது மேசையின் மீதுள்ள ஆவணங்கள், ""இவர் முக்தர் அல்ல'' எனத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆகையால், இவரின் உண்மையான பெயர் என்ன?


போலீசு அதிகாரி: அஃப்டாப் ஆலம் அன்சாரி என்பது இவரின் உண்மையான பெயர்.
நீதிபதி: நீங்கள் தவறான நபரைக் கைது செய்துள்ளீர்கள் என்பதுதான் இதன் பொருள். இந்தக் கொடூரமான தவறு எப்படி நடந்தது?

மேலும் படிக்க …தீவிரவாத ஒழிப்பும் போலீசின் அத்துமீறல்களும்

கோவா என்றாலே கடற்கரை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கொண்டாட்டங்கள் என்றுதான் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது. இந்த முதலாளித்துவச் சித்தரிப்புக்கு மாறாக, இனிமேல் கோவா என்றால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடித்த மாநிலம் என்றுதான் நாம் அடையாளம் காண வேண்டும்.

மேலும் படிக்க …மக்கள் சக்தி எழுந்தது! சிறப்புப் பொருளாதார மண்டலம் வீழ்ந்தது!

தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியதைத் தொடர்ந்து சில "விரும்பத்தகாத' துணை விளைவுகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தீட்சிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மார்ச் 2 போராட்டத்தின் வெற்றிக்குப் பின் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையேறிப் பாடிவிட்டு இறங்கும்போது, அங்கே கூடியிருக்கும் பல பக்தர்கள் அவரை வணங்கி அவரிடமிருந்து திருநீறும் வாங்குகிறார்கள்.

மேலும் படிக்க …தில்லைப் போராட்டம் : 'தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பவாதம்

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த விலைவாசி உயர்வு, இப்பொழுது எரிமலையைப் போல வெடித்திருக்கிறது. அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்கள் தொடங்கி, இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அனைத்து ஏழை நாடுகளும் இவ்விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க …விலைவாசி உயர்வு : தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!

பல ஆண்டுகளாகவே சீமைச் சாராய விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வரும் தமிழகம், ""இப்பொழுது'' போதைப் பொருள் புழக்கத்திலும், விற்பனையிலும் சாதனை படைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத் தலைநகர் சென்னை, பிற ஆசிய நாடுகளுக்குப் போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க …தனியார்மயம்… தாராளமயம்… உலகமயம்…, … போதைமயம்!

நேபாளத்தில் 10.2.2008 அன்று நடைபெற்ற அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் 10 வழக்குரைஞர்கள் சர்வதேசப் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். நேபாள நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 856 பார்வையாளர்கள், நேபாளத்தில் தேர்தல் நடைபெற்ற எல்லாத் தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். சர்வதேசப் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்தத் தேர்தல் அமைதியாகவும், முறைகேடுகள் இன்றியும் நடைபெற்றது என்று 856 சர்வதேசப் பார்வையாளர்களும் ஒருமனதாக அறிவித்தனர்.

மேலும் படிக்க …நோபளம் : இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!

நேபாள நாட்டில் முன்னேறி வரும் புதிய ஜனநாயகப் புரட்சியின் முதற்கட்டமாக அந்நாட்டின் மன்னராட்சியை வேறோடு பிடுங்கி எறிவதில் இறுதி வெற்றியை நேபாளக் கம்யூனிச (மாவோயிச)க் கட்சி நெருங்கியிருக்கிறது. இது போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திர வெற்றியைக் குறிக்கிறது. நேபாளப் புரட்சியின் வெற்றி அந்நாடு மட்டிலான முக்கியத்துவம் கொண்டதாக மட்டும் இருக்காது. உலக அளவிலான வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அதுமட்டுமல்ல; சித்தாந்த ரீதியிலான முக்கியத்துவம் உடையதாகவும் அமையும்.

மேலும் படிக்க …நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி!

08_2006.jpg

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க. அரசு சட்டம் இயற்றியுள்ள போதிலும், கண்டதேவியில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குத் தேர்வடம் பிடிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு, அவர்களது வழிபாட்டு உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று நடந்த தேரோட்டம், தேவர் சாதிவெறியர்களின் அதிகாரத் திமிரை நிலை நாட்டும் திருவிழாவாக புதிய பரிமாணத்தை இவ்வாண்டில் எட்டியுள்ளது.

மேலும் படிக்க …கோல் போடாமலேயே வென்றது அடிடாஸ்

08_2006.jpg

ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சொல்லும் பொருளாதார வளர்ச்சியானது, நாட்டின் மிக அற்பமான முதலாளித்துவப் பிரிவினரின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது என்பதை ""வல்லரசாகும் இந்தியா'' கட்டுரை செறிவாக விளக்கியுள்ளது. எனினும், உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தரம் அதலபாதாளத்திற்கு வீழ்ந்துள்ளதைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் தொகுத்தளித்து எழுதப்படாததால் இக்கட்டுரை முழுமையைத் தரவில்லை.

ஜீவா, சென்னை.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

08_2006.jpg

பெண்கள் விடுதலை முன்னணி ஆவேசம் தனியார்மயமும் தாராளமயமும் பரப்பும் ஏகாதிபத்திய நுகர்வு வெறியானது, பெண்களையும் நுகர்பொருளாகப் பார்க்கும் வக்கிர வெறியாக மாறி, நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் ஆபாச வக்கிரவெறியாட்டங்களும் தீவிரமாகிவிட்டன. தமிழகத்தில் உள்ள பல கணினி ப்ரவுசிங் மையங்கள் நீலப்பட அரங்குகளாகிவிட்டன.

மேலும் படிக்க …நுகர்வுவெறி தோற்றுவிக்கும் வக்கிரம்

08_2006.jpg

ஆண்டிப்பட்டி வட்டார மக்களைத் துன்புறுத்தி வந்த பால்சாமி என்ற கிரிமினலின் கொலையோடு தொடர்புபடுத்தி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தோழர் செல்வராசு உள்ளிட்ட வி.வி.மு. தோழர்கள் பத்து பேரை 3.7.06 அன்று மதுரை உயர்நீதி மன்றம் விடுதலை செய்திருக்கிறது. சாட்சியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை வழக்குரைஞர்கள் நிரூபித்த போதிலும், அதனைக் கணக்கில் கொள்ளாமல் 27.2.03

மேலும் படிக்க …ஆண்டிப்பட்டி கொலை வழக்கு: வி.வி.மு.தோழர்கள் விடுதலை! பொய்சாட்சிகளுக்கு என்ன தண்டனை?

08_2006.jpg

கடலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் செயற்பட்டு வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (ஏகீகஇ), ""மனித உரிமை காப்போம்! மக்கள் விடுதலைக்கு அணிவகுப்போம்!'' என்ற முழக்கத்துடன் தனது கோவை மாவட்டக் கிளை தொடக்க விழாவை கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று நடத்தியது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். ராஜு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மனித

மேலும் படிக்க …மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோவை கிளை தொடக்கவிழா : நம்பிக்கையின் ஒளிக்கீற்று!

08_2006.jpg

சிக்குன்குன்யா மனிதனை முடமாக்கிவிடும் கொடிய நோய். ""ஏடீஸ் அஜெப்டி'' எனப்படும் கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் நோய், கடந்த நான்கு மாதங்களாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோரைத் தாக்கி படுக்கையில் வீழ்த்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்நோய் பரவி, சத்திரப்பட்டி வட்டாரத்தில் மட்டும் 19 பேரின் உயிரைக்

மேலும் படிக்க …சிக்குன்குன்யா நோய் தாக்குதல்: மக்கள் விரோத அரசை ஒழித்தால்தான் கொசுவும் ஓழியும்!

08_2006.jpg

தூத்துக்குடி மாவட்டம், கே.வேலாயுதபுரம் கிராமத்தின் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் மீது ஒரு உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள். அந்த ஊரில் தலித் மக்களின் எண்ணிக்கை 200. சாதி இந்துக்களின் மக்கள் தொகையோ 2000.

மேலும் படிக்க …சாதி ஆட்சிக்கு உட்பட்ட சட்டத்தின் ஆட்சி

08_2006.jpg

தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சிவபக்தன் நந்தன் வாழ்ந்த தமிழகத்திற்கும், தற்போதைய தமிழகத்துக்கும் எத்தனையோ வேறுபாடுகள். மாற்றங்கள் இருந்தாலும், தில்லைவாழ் தீட்சிதர் பரம்பரை மட்டும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மாறியதாகத் தெரியவில்லை. ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் நடராசர் கோவிலைத் தங்கள் பூணூலில் சுருட்டி வைத்திருக்கும் தீட்சிதர்களின் சாதிவெறியை எதிர்த்து,

மேலும் படிக்க …திருச்சிற்றம்பல மேடையேற தமிழும் தீக்குளிக்க வேண்டுமோ?

08_2006.jpg

குர்கான்'' இந்தப் பெயரைத் தன்மானமிக்க தொழிலாளர்களால் ஒருக்காலும் மறந்துவிட முடியாது. இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களுக்கு ""ஹோண்டா'' நிறுவனத் தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலும்; அதை எதிர்த்து அத்தொழிலாளர்கள் நடத்திய வீரச்சமரும்தான் நினைவுக்கு வரும். ஹோண்டா தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஏதோ விதிவிலக்காக நடந்துவிட்ட போலீசின் அத்துமீறல் அல்ல.

மேலும் படிக்க …'குர்கான்" தாக்குதல் கற்பிக்கும் பாடம் என்ன?""

08_2006.jpg

நிலப்பிரபுத்துவ எதிர்ப்புஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதுதான் நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியம்; என்றாலும், நேபாள மக்கள் ஜனநாயகப் புரட்சி தற்போது ஒரு புதிய இடைக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது

மேலும் படிக்க …நேபாளப் புரட்சி : புதிய வரலாறு படைக்கும் மாவோயிஸ்டுகள் - கொச்சைப்படுத்தும் போலி கம்யூனிஸ்டுகள்

08_2006.jpg

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள விதர்பா பகுதிக்கு, கடந்த ஜூன் மாத இறுதியில் வந்து போன பிரதமர் மன்மோகன் சிங், ""அப்பகுதி விவசாயிகள் கடனில் மூழ்கி நொடித்துப் போயிருப்பதையும்; அப்பகுதி பருத்தி விவசாயம் நாசமாகி வருவதையும்'' ஒப்புக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ""பொருளாதாரப் புலி'' மன்மோகன் சிங், தன் கண்களால் பார்த்து இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு, ஏறத்தாழ 650 பருத்தி விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

மேலும் படிக்க …பிரதமரின் விதர்பா பயணம்: விவசாயிகளை ஏய்க்கும் இன்னுமொரு மோசடிநாடகம்

08_2006.jpg

மும்பை ஜூலை 11, மாலை 6.24 மணி தொடங்கி 6.31 மணி வரை ஏழு நிமிடங்களில் ஏழு தொடர் வண்டிகளில் நடந்த ஏழு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் 200 முதல் வகுப்பு பயணிகளைப் பலிகொண்டு, 800 பேர்களைப் படுகாயமுறச் செய்த கோரங்களைச் செய்தி ஊடகங்கள் நிறையவே விவரமாகச் சித்தரித்துவிட்டன.

மேலும் படிக்க …மும்பை தாக்குதல்: மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகுமா?

08_2006.jpg

இந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் "இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் உண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது.

மேலும் படிக்க …இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!

9_2006.jpg

ஏகாதிபத்தியத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்க சோசலிசமே ஒரே தீர்வு என்ற சிந்தனைக்கு மக்கள் சென்றுவிடக்கூடாது என்று தடுப்பதற்காகவும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள கைக்கூலி அமைப்புதான் உலக சமூக மன்றம் (ஙிகுஊ). ஃபோர்டு பவுண்டேசன், ராக்பெல்லர் புவுண்டேசன் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகள்,

மேலும் படிக்க …எச்சில் காசில் ஏகாதிபத்திய எதிர்ப்பு!

9_2006.jpg

கரூர் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களை மலத்தில் மொய்க்கும் ஈக்களைப் போல் கந்துவட்டிக் கொள்ளைக் கும்பல் மொய்த்து உறிஞ்சும் கொடுமை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏறக்குறைய எல்லாத் துப்புரவு தொழிலாளர்களுமே இந்தக் கும்பலிடம் சிக்கியுள்ளனர். அத்தகைய கும்பல்களில் ஒன்றுதான் கரூர்

மேலும் படிக்க …கந்துவட்டிக் கொள்ளையர்களின் பிடியில் கரூர் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள்

9_2006.jpg

சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையின் எதிரே அமைந்துள்ள திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடுவதை தில்லைவாழ் தீட்சிதர்கள், சாதிவெறி கொண்டு தடுத்து வருவதையும்; அப்பார்ப்பனக் கும்பலின் விருப்பத்துக்கு ஏற்ப சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம், சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல

மேலும் படிக்க …திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் - திருவாசகம் பாடத் தடை - மனுநீதித் தீர்ப்பு

9_2006.jpg

ஏழை நாடுகளின் விவசாயத்திலும், தொழில்துறையிலும் தனியார்மயம் தாராளமயத்தை எவ்விதத் தடையுமின்றி, இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்காக உலக வர்த்தகக் கழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. ""தோஹா வளர்ச்சித் திட்டம்'' என்று அழைக்கப்படும் இப்பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டும் பொருட்டு கடந்த ஜூலை மாதம்

மேலும் படிக்க …வளர்ச்சியின் பெயரால் மறுகாலனியாதிக்கம்

9_2006.jpg

திருச்சியில் கணினி மையங்களில் கல்லூரி மாணவிகளை ஆபாசப் படமெடுத்த காமவெறியன் லியாகத் அலியைத் தூக்கிலிடக் கோரி கடந்த ஜூன் மாதத்தில் பெண்கள் விடுதலை முன்னணி சுவரொட்டி பிரச்சார இயக்கத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 25ஆம் தேதி லியாகத் அலி சார்பில் அவனை பிணையில் விடக் கோரி நீதிமன்றத்தில் மனு

மேலும் படிக்க …"காமவெறியன் லியாகத் அலியை தூக்கில் போடு!' — பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

9_2006.jpg

இயற்கை வளமும் இலக்கியச் செழுமையும் கொண்ட, கனவுகளின் தேசமாகச் சித்தரிக்கப்பட்ட லெபனான் இன்று நொறுங்கிக் கிடக்கிறது. ""முறிந்த சிறகுகள்'' வழங்கிய உலகப் புகழ் பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரானின் லெபனான், இப்போது மீண்டும் சிறகுகள் முறிக்கப்பட்டு துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 13ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலிய பயங்கரவாதிகள் லெபனான் மீது தொடுத்த

மேலும் படிக்க …லெபனான் : அமெரிக்கா-இஸ்ரேலிய பயங்கரவாதம் போருக்குப் பின்னே மேலாதிக்கம்

9_2006.jpg

 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளைக்காரன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசிகளான காங்கிரசிடமும் முஸ்லிம் லீகிடமும் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். அந்தப் போலி சுதந்திரத்துக்கு வயது 60.

மேலும் படிக்க …போலி சுதந்திரத்தைத் திரை கிழிப்போம்! மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்! -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்முழக்க ஆர்ப்பாட்டங்கள்

9_2006.jpg

ரேஹான் அகமது ஷேக், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் (என்.ஆர்.ஐ.). அவர், தனது மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தார். அவர் மும்பய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய மறுநிமிடமே, மைய அரசின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாலும்; மகாராஷ்டிர போலீசு அதிகாரிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டு, மும்பய் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்

மேலும் படிக்க …அரசு பயங்கரசாதம் - மத பயங்கரவாதத்தால் பிளவுபடும் மும்பாய்

9_2006.jpg

"பொதுவில் சொன்னால், குற்றவாளிகளில் பலர் சூழ்நிலைக்குப் பலியானவர்கள்தாம்'' இப்படிச் சொன்னவர் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையான இரண்டு பெண்களுக்கான மறுவாழ்வு ஆணைகளை வழங்கிய அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும் படிக்க …குற்றக் கும்பல்களின் பிடியில் திணறும் இந்தியா

9_2006.jpg

"எங்கள் குளிர்பானம்தான் நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பனது'' என்று தன்னிலை விளக்கமளிக்கும் விளம்பரங்களைப் பக்கம் பக்கமாக முன்னணி செய்தி ஏடுகளில் வெளியிடுகின்றன கோக்பெப்சி குளிர்பானக் கம்பெனிகள். ஒவ்வொரு நாளும் விளம்பரத்துக்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்து சந்தை ஆதிக்கத்தைப் பிடித்து வைத்திருக்கும் அக்கம்பெனிகள், அது மணல்கோட்டையைப் போல சரிந்து விழுவதைத் தடுக்க இப்படி விளம்பரம் செய்கின்றன.

மேலும் படிக்க …கருணாநிதி – அன்புமணி – புத்ததேவ் 'கோக்"கின் புதிய அடியாட்கள்

9_2006.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை சிங்கள இனவெறி பாசிச அரசுக்கும் இடையிலான போர் நிறுத்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நான்காண்டுகளுக்குப் பிறகு எவ்வித சடங்கும் முன்னறிவிப்பும் இல்லாமல் முடிவுக்கு வந்துவிட்டது. எந்தத் தரப்பும் கிரமமாகப் பிரகடனம் செய்யாத உக்கிரமான போர் ஈழத்தில் நான்காவது

மேலும் படிக்க …ஈழப் போர் : நீடிக்கும் இழுபறி!

9_2006.jpg

டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ நிறுவனம், அமெரிக்க கோக்பெப்சி முதலான குளிர்பானங்களில் அளவுக்கதிகமாக நஞ்சு கலந்துள்ளதை ஆதாரங்களோடு மீண்டும் நிரூபித்துள்ளதையடுத்து, நாடெங்கும் கோக்பெப்சி எதிர்ப்புணர்வும் போராட்டங்களும் பெருகத் தொடங்கியுள்ளன. கேரள மாநில அரசு கோக் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதித்துள்ளது. குஜராத், கர்நாடக அரசுகள் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

மேலும் படிக்க …'நாட்டைக் காக்க கோக்கை விரட்டு" நாடெங்கும் பரவும் கோக் எதிர்ப்புப் போராட்டங்கள்

10_2006.jpg

""ஐயோ, பயங்கரவாதம்!'' தமிழகமே தீவி ரவாத பயங்கரவாதிகளின் பாசறையாக மாறிவிட்டதைப் போலவும் தமிழகத்துக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளதைப் போலவும் கடந்த இரு மாதங்களாக போலீசும் பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் தொடர்ந்து பீதியூட்டி வருகின்றன. ஆகஸ்ட் 15ஆம் நாளன்று

மேலும் படிக்க …"ஐயோ, பயங்கரவாதம்!''

10_2006.jpg

கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு, கடந்த செப். 3ஆம் நாளன்று நெல்லையில் கோக் எதிர்ப்பு கருத்தரங்கை நடத்தியது.


""உயிரை உறிஞ்சும் கோக்பெப்சியைப் புறக்கணிப்போம்! தாமிரவருணியை உறிஞ்சும் கோக் ஆலையை விரட்டியடிப்போம்!'' என்ற தலைப்பில் நெல்லை எம்.எச். பிளாசாவில் நடந்த இக்கருத்தரங்கிற்கு கோக் எதிர்ப்புப்

மேலும் படிக்க …'தாமிரவருணி உங்கள் ஆறு! அமெரிக்கக் கோக்கே வெளியேறு!" கொலைகார 'கோக்"கைக் எதிர்த்துத் தொடரும் போராட்டம்!

10_2006.jpg

மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில் கடன்சுமை தாளாமல் பருத்தி விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து கொண்டு வரும் கொடுமை தொடரும் அதேவேளையில், அண்மைக்காலமாக ஆந்திராவிலும் இதேபோல கடன்சுமை தாளாமல் விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு

மேலும் படிக்க …சுய உதவிக் குழுக்கள் : விவசாயிகளை வேட்டையாடும் புதிய கத்துவட்டிக் கும்பல்

10_2006.jpg

போலீசு அதிகாரி பிரேம்குமாரின் அட்டூழியங்களை எதிர்த்து, 25 ஆண்டு காலமாகச் சட்டரீதியாக போராடி வரும் நல்லகாமனின் கதை நிரூரித்துக் காட்டும் உண்மை.

ங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரும், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருமான பிரேம்குமார்

மேலும் படிக்க …போலீசு : சட்டத்திற்கும் மேலான கிரிமினல்கள்

10_2006.jpg

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளையொட்டி, சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கடந்த 12.9.06 அன்று திருச்சியில் அய்க்கஃப் அரங்கில் ஒரு கருத்தரங்கை நடத்தியது.

மேலும் படிக்க …மேடைக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு! கூட்டணிக்கு தன்னார்வக் குழுக்கள்!

10_2006.jpg

அண்மைக் காலமாக உணவு தானியங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய மக்களின் கழுத்தை நெறித்து வருகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 வரை உயர்ந்துள்ளன. ரூ. 2830 ஆக இருந்த உளுத்தம் பருப்பின் விலை இன்று ரூ. 5055 ஆக உயர்ந்து விட்டது. இதர பருப்பு வகைகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.

மேலும் படிக்க …இணையதள வர்த்தகம் : விலைவாசியை உயர்த்தும் ஊக வணிகச் சூதாட்டம்

10_2006.jpg

மகாராஷ்ரா மாநிலத்திலுள்ள மாலேகான் நகரில், செப்டம்பர் 8 அன்று அடுத்தடுத்து நடந்த நான்கு குண்டு வெடிப்புகளில் 31 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகை முடியும் நேரத்தில், குறிப்பாக, முசுலீம்கள்

மேலும் படிக்க …மாலேகான் குண்டு வெடிப்பு : நிவாரணம் கிடைக்கலாம், நீதி கிடைக்குமா?

10_2006.jpg

*விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, சில அறிவாளிகள் கருதிவரும் வேளையில், இந்த மூன்றாவது அரசியல் கழிசடையை அம்பலப்படுத்திக் காட்டியது சிறப்பு. "கோக்' ஆக்கிரமிப்பாளருக்கு விசுவாச சேவை செய்யும் நவீன எட்டப்பர்களான அன்புமணி புத்ததேவ் கருணாநிதி

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

10_2006.jpg

தோழர் பகத்சிங்கின் நூறாம் ஆண்டு பிறந்த தினம் செப்.28, 2006 அன்று தொடங்குகிறது. அவரது நூற்றாண்டு பிறந்ததினத்தை, காங்கிரசு, பா.ஜ.க. முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைத்து வண்ண ஓட்டுக் கட்சிகளும், "கோலாகலமாக'க் கொண்டாடுவார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுகூர்ந்து எட்டப்பன்

மேலும் படிக்க …செப்.28 2006 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தியாகத் தோழர் பகத்சிங் - கின் நூற்றாண்டு பிறந்ததினம்

10_2006.jpg

சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.

மேலும் படிக்க …வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!

10_2006.jpg

* தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆணையம்.
* மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆணையம்.
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடுவர் மன்றங்கள்.
* வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிறப்பு நீதிமன்றங்கள்.
* குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்.
* வேலை உத்திரவாத அடிப்படை உரிமைச் சட்டம்.
* குழந்தைகள் உழைப்புத் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை 1986 சட்டம் 2006ஆம் ஆண்டு தடை ஆணையம்.
* தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் பிற்பட்டோர் இடஒதுக்கீடு.
* தாழ்த்தப்பட்டோர் பழங்குடி மக்கள், மகளிர், சிறுபான்மையினர் நல ஆணையங்கள்.
* பழங்குடி மக்கள் வன உரிமைச் சட்டம்.

""அடேயப்பா'' — எத்தனை சமூக நீதி உரிமைகள் சட்டங்கள், சமூகநலத் திட்டங்கள்!

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள்இ நடுவர்மன்றங்கள், திட்டங்கள் … அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

10_2006.jpg

இந்தியாவின் நுழைவாயில் என சித்தரிக்கப்படும் வர்த்தகப் பெருநகரான மும்பையின் தென்பகுதியில், 12,000 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மாண்டமான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க மைய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக நவி மும்பை, ராய்காட் பகுதிகளில் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக,

மேலும் படிக்க …ஆக்கிரமிப்புக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

10_2006.jpg

ரலாறு படைக்கிறார் மே.வங்க போலி கம்யூனிச முதல்வர் புத்ததேவ் பாட்டாச்சார்யா. மே.வங்கத்தில் 22,500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி வரும் வரலாறு, வரலாறு கண்டிராத வகையில் மே.வங்கத்தின் அடிக்கட்டுமானத் துறையை மேம்படுத்த இந்தோனேஷிய சலீம் குழுமத்துடன் ரூ. 40,000 கோடி மதிப்பீட்டுக்கான ஒப்பந்தம் போட்டுள்ள வரலாறு,
மேலும் படிக்க …மேற்கு வங்கத்தைப் பாருங்கள்! துரோகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

10_2006.jpg

ஓசூருக்கு அருகிலுள்ள சானமாவு, பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளி, அஞ்செட்டிப்பள்ளி ஆகிய நான்கு ஊராட்சிகளில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட பகுதியில் 3600 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படவுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பே முந்தைய அ.தி.மு.க. அரசு இதற்கான

மேலும் படிக்க …விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு! தமிழனின் வாழ்வுரிமை பறிப்பு!

10_2006.jpg

"வாங்கண்ணா, வாங்க! அதிருஷ்டம் உங்களை அழைக்கிறது!'' இது, சிறிது காலத்திற்கு முன்பு தடைசெய்யப்படும்வரை எங்கெங்கும் ஒலித்த லாட்டரி சீட்டு வியாபாரிகளின் குரல் அல்ல. மைய அரசின் வர்த்தகத் துறை அமைச்சரான கமல் நாத், லாட்டரி சீட்டு வியாபாரிகளையே விஞ்சும் வகையில் இப்படி அறைகூவி அழைக்கிறார். உழைக்கும் மக்களாகிய நம்மை அவர் அழைக்கவில்லை.

மேலும் படிக்க …வருகிறது சிறப்புப் பொருளாதார மண்டலம் (SENs) இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு!

10_2006.jpg

தேர்தல் முடிவுகளைக் கேட்ட மறுவினாடியே, தமது வாக்குறுதிகளை மறந்து விடுவதையும், மழுப்புவதையும் ஓட்டுக் கட்சிகளிடம் இதுவரை கண்டுவந்த அரசியல் நோக்கர்கள், இப்போது தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள், பேச்சுக்களைக் கண்டு மயக்கங் கொள்கிறார்கள். கருணாநிதி இப்போது நெஞ்சுயர்த்திச் சொல்கிறார், ""தேர்தல் அறிக்கையில் 177 வாக்குறுதிகள் தரப்பட்டன. அவற்றில் 62 வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில்

மேலும் படிக்க …தி.மு.க. அரசின் இலவசத்திட்டங்கள் : நீதி மர்மம் என்ன?

10_2006.jpg

காசுமீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா நகருக்கு அருகில் இருக்கும் சாஹல்பதி கிராமத்தைச் சேர்ந்த குலாம் மொஹைதீன் என்பவரும், ருபினா என்ற 14 வயது சிறுமியும் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி அதிகாலையில், ""ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்'' என்ற துணை இராணுவப்படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று அதிகாலையில் விறகு பொறுக்குவதற்காகக் காட்டுக்குள் சென்றதுதான் அவர்கள் செய்த ""குற்றம்''; அதற்குத்தான் இந்த மரண தண்டனை!

மேலும் படிக்க …காசுமீர் : அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்கள்!

11_2006.jpg

அக்டோபர் இதழ் படித்தேன். அப்பப்பா! எவ்வளவு அருமையான விஷயங்கள். என்னுடைய நண்பர்களிடம் சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அட்டைப்படக் கட்டுரையையும் இன்றைய அரசியல் நிலைமையையும் பற்றி விளக்கி அவர்களிடம் 7 பிரதிகளை விற்பனை செய்தேன். புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்த மனநிறைவு எனக்கு ஏற்பட்டது. உழைக்கும் மக்களுக்கு அவசியமான உண்மைச் செய்திகளைத் தொடர்ந்து அளித்துவரும் பு.ஜ.வுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
எஸ்.சிவா, உசிலம்பட்டி.

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய கட்டுரையும் விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியும் மறுகாலனிய சுருக்கு இறுகி வருவதை உணர்த்துகிறது. நெருங்கிவிட்ட பேரபாயத்தை விளக்கிய அட்டைப்படக் கட்டுரை சிறப்பு.
ஜீவா, ஜெயங்கொண்டம்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றியும், இணையதள வர்த்தக சூதாட்டம் பற்றியும் வெளியான பு.ஜ. கட்டுரைகள் விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பிரச்சாரத்துக்குப் பெரிதும் உதவின. விவசாயிகளை அணிதிரட்டிப் போராடாமல், மறுகாலனியாக்கத்தை வீழ்த்த முடியாது என்பதை பு.ஜ. இதழ் எடுப்பாக உணர்த்தியுள்ளது.
வி.வி.மு., உசிலை வட்டம்.

நாங்கள் குடியிருக்கும் பகுதியில், 30 பேர் கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிகள் லஞ்சம் கொடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போடச் செய்தன. நுண்கடன் எனும் கந்துவட்டியால் அடிமையாகிப் போகும் இக்குழுக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையையும் இழந்து நிற்கிறார்கள். பு.ஜ.வில் வெளியான கட்டுரை தன்னார்வக் குழுக்களின் சதியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இராணி, ஓசூர்.

சுய உதவிக் குழுக்களின் மூலம் நடக்கும் கந்துவட்டிக் கொள்ளையை பு.ஜ. மூலம் அறிந்த வாசகர்கள், இப்படித்தான் தங்கள் பகுதியில் நடக்கிறது என்று தங்கள் அனுபவத்தை விளக்கினார்கள். ஒரு புதிய வாசகர், ""வீடு வீடாக வந்து நீங்கள் பு.ஜ. இதழை விற்பனை செய்தபோது வேண்டாம் என்று அலட்சியப்படுத்தினேன்; பின்னர், தற்செயலாக இதழைப் படித்தபோது நான் மிகப் பெரிய தவறு செய்து விட்டதை உணர முடிந்தது'' என்று மனந்திறந்து குறிப்பிட்டார். ஓசூர் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான ஆக்கிரமிப்புகள் நடந்துவரும் வேளையில், இதையொட்டி பு.ஜ.வில் வெளிவந்துள்ள கட்டுரை பிரச்சாரத்துக்கு உதவியாக அமைந்துள்ளது.
வாசகர் வட்டம், ஓசூர்.

மறுகாலனிய பயங்கரவாதத்தைத் தீவிரமாக்கும் நோக்கில், அரசு பயங்கரவாதத்தை நிரந்தரமாக்கும் ஏற்பாடுதான் ஆளும் கும்பலின், ""ஐயா! பயங்கரவாதம்'' என்ற பீதியூட்டும் ஒப்பாரி என்பதைத் தோலுரித்துக் காட்டியது சிறப்பு. புதிய பொருளாதாரக் கொள்கையால் தலைப்பாகைக்கு ஆபத்து என்றால், சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் தலைக்கே ஆபத்து என்பதை அட்டைப்படக் கட்டுரை மூலம் உணர முடிகிறது. பார்ப்பன பாசிசமும் ஏகாதிபத்திய øக்கூலித்தனமும்தான் இந்துவெறி எட்டப்பர்களின் தேசபக்தி என்பதற்கு வந்தேமாதரம் பஜனையே சான்று கூறப் போதுமானது.
இரா. மணிகண்டன், சூசுவாடி.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அபாயத்தை விளக்கும் வகையில் அட்டைப்படம் எடுப்பாக அமைந்துள்ளது. அட்டைப்படக் கட்டுரையை, நாட்டையும் மக்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலம் எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாக விளக்கும் வகையில் தொடர் கட்டுரையாக எழுதியிருக்கலாம். வந்தேமாதரம் பாடலின் வரலாற்றையும் எட்டப்பர்களின் தேசபக்த பஜனையையும் அம்பலப்படுத்திய கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. 14.10.06 அன்று நடந்த வாசகர் வட்டக் கூட்டத்தில், வழக்குரைஞர் இராமலிங்கம் அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி சிறப்புரையாற்றினார். இந்தச் சட்டம் இன்னுமொரு காகிதச் சட்டம்தான் என்பதையும், தகவல் தருவதும் மறுப்பதும் சம்பந்தப்பட்ட துறையின் விருப்பப்படிதான் இருக்கும் என்பதையும், இதற்கெதிராக எந்த நீதிமன்றத்திலும் முறையிட முடியாது என்பதையும் வாசகர்களுக்கு உணர்த்துவதாக அவரது விளக்கவுரை அமைந்தது.
வாசகர் வட்டம், தஞ்சை.

 

வந்தே மாதரம் பாடலின் பின்னே மறைந்துள்ள இந்துவெறியையும் கைக்கூலித்தனத்தையும் திரைகிழித்துக் காட்டியது, இளந்தலைமுறையினருக்குப் பெரிதும் பயனளிப்பதாக அமைந்தது. தன்னார்வக் குழுக்களின் கந்துவட்டிக் கொள்ளை பற்றி இதுவரை யாரும் வெளிக்கொணராத உண்மைகளை பு.ஜ. மட்டுமே காட்டியுள்ளது.
வாசகர்வட்டம், திருச்சி.

 

 

11_2006.jpg

இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு என்று கூறிக் கொள்வதற்கான ஆதõரமாகத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டப்படுவது, ""இந்த நாட்டுக் குடிமக்களின் எழுத்துரிமையும் பேச்சுரிமையும் அரசியல் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எழுத்துரிமையும் பேச்சுரிமையும் அடிப்படை உரிமைகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.''

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள் அமைப்பின் இரகசியமும் தகவல் அறியும் உரிமையும்

11_2006.jpg

ஏறத்தாழ 4 இலட்சம் பேர் பொறுக்கித் தின்ன போட்டி போட்ட உள்ளாட்சித் தேர்தலையும், அதிகாரமில்லாத உள்ளாட்சி அமைப்புகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும், அதிகாரத்தில் மக்கள் பங்கேற்பதாகக் காட்டி ஏய்க்கும் மோசடிகளையும் அம்பலப்படுத்தி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ""பொறுக்கித் தின்ன

மேலும் படிக்க …"பொறுக்கித் தின்ன போட்டிபோடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்கள் சர்வாதிகார மன்றங்களை நிறுவப் போராடுவோம்!'' "— புரட்சிகர அமைப்புகளின் அரசியல் பிரச்சாரம்

11_2006.jpg

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த செய்திகள் அனைத்திலும் அடிக்கட்டுமானத் துறை என்ற வார்த்தை அடிக்கடி தென்படுவதைக் காணலாம். ""அடிக்கட்டுமானத்துறை வளர்ச்சி அடையாமல், இந்தியப் பொருளாதாரம் துரித வளர்ச்சி காண்பது சாத்தியம் அல்ல'' என நாடாளுமன்றத்திலேயே நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க …அடிக்கட்டுமானத்துறையில் தனியார்மயம்: பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்க ஒரு குறுக்குவழி

11_2006.jpg

தியாகத் தோழர் பகத்சிங்கின் நூற்றாண்டு பிறந்தநாளில் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!

கால் நூற்றாண்டு காலமே வாழ்ந்த ஒரு இளைஞனின் நினைவு, நூறாண்டுகளுக்குப் பின்னரும் நாட்டு மக்களால் போற்றப்படுகிறது என்றால் அந்தப் புரட்சியாளர்தான் பகத்சிங்! ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கின் நூறாம் ஆண்டு பிறந்த

மேலும் படிக்க …ஓங்கட்டும் பகத்சிங்கின் புகழ்! ஓழியட்டும் மறுகாலனியாதிக்கம்!

11_2006.jpg

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதில் ஊழலும், மோசடிகளும் புழுத்து நாறுவதை தலைமைக் கணக்கு அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்திக் காட்டி விட்டது.

மேலும் படிக்க …தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான்!

11_2006.jpg

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, விவசாய கூட்டுறவுக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவு போட்டார் முதல்வர் கருணாநிதி. ஆனால், அது இன்னுமொரு வாய்ப்பந்தல் என்று அம்பலமாகிவிட்டது.

மேலும் படிக்க …விவசாயக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி: சலுகையா? மோசடியா?

11_2006.jpg

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் முடிவுப்படி, சென்னை பெரம்பூர் வியாபாரிகள் நல சங்கத்தில் கடந்த 6.10.06 அன்று கோக்பெப்சி எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தின் முன்பாக, அன்று மாலை 6 மணியளவில் திரண்ட வணிகர்கள், ""கோக் பெப்சியை

மேலும் படிக்க …'கோக்-பெப்சியை விரட்டியடிப்போம்!" -தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உறுதி

11_2006.jpg

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து மணிப்பூர் மாநில மக்கள் நடத்தி வரும் போராட்டம், இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டி வருகிறது.

மேலும் படிக்க …மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்

11_2006.jpg

திருச்சியிலுள்ள பி.எஸ்.என்.எல். (BSNL) முதன்மைப் பொதுமேலாளர் (PGM) அலுவலக வளாகத்தின் டிடேக்ஸ் (D-Tax) கட்டிடத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த 5 ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 25.8.06 முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தை விசாரித்தபோது, அதே கட்டிடத்தில் இருக்கும்

மேலும் படிக்க …அதிகாரிகளின் பகற்கொள்ளைக்கு ஒப்பந்த ஊழியர்கள் பலிகடா

11_2006.jpg

தீவிரவாதம், தேசப் பாதுகாப்பு என்ற தேசபக்தி பஜனை, இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை மூடி மறைக்கும் திரையாகப் பயன்படுகிறது.

 

""கார்கில் போரையொட்டி இஸ்ரேல் நாட்டிடமிருந்து பாரக் ஏவுகணை வாங்கியதில் முறைகேடுகளும், ஊழலும் நடந்திருப்பதாக''க் குற்றஞ் சுமத்தியுள்ள மையப் புலனாய்வுத்

மேலும் படிக்க …சந்தி சிரிக்கும் ஆயுத பேர ஊழல்கள்

11_2006.jpg

""முதலில் நான் ஒரு பிராமணன்; ஒரு இந்து. பிறகுதான் கம்யூனிஸ்ட்'' இப்படி பகிரங்கமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், மே.வங்க "இடது முன்னணி' அரசின் போக்குவரத்து விளையாட்டுத்துறை அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி. இவர் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். நீண்ட காலமாகக் கட்சிப் பணியாற்றிவரும் அனுபவமிக்க தோழர் என்று சி.பி.எம். கட்சியினரால் குறிப்பிடப்படும் முக்கிய புள்ளி.

மேலும் படிக்க …பார்ப்பன பக்தியுடன் மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகளின் இழிந்தநிலை

11_2006.jpg

நடந்து முடிந்த சென்னை மாநகராட்சிக்கான தேர்தல்க ளில் தி.மு.க.வும் அதன் முக்கியக் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும் பா.ம.க.வும் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் நடத்தியதாக, ஜனநாயகப் பாதுகாவலர்களாக வேடம் போடும் பார்ப்பனபாசிச ஜெயலலிதா ஆதரவு சக்திகள் ஓலமிடுகின்றன

மேலும் படிக்க …கிரிமினல் மயமானது உள்ளாட்சித் தேர்தல்

11_2006.jpg

அக்டோபர் 9ஆம் நாள், ஹவதேரி என்ற இடத்தில் வடகொரியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. அச்செயல் கிழக்கு ஆசியாவின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பேராபத்தானது என்றும் கடும் கண்டனத்துக்குரிய இரகசியமான அணு ஆயுதப் பரவல் என்றும் முதன்முதலாகக் குரலெழுப்பிய நாடு இந்தியாதான். அதைத் தொடர்ந்து வடகொரியாவின் அண்டை

மேலும் படிக்க …அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!

11_2006.jpg

ஓசூர் அருகே பாகலூர் ஊராட்சியைச் சேர்ந்த பௌத்தூரிலுள்ள ஏசியன் பேரிங் லிமிடெட் என்ற ஆலை கடந்த 10 மாதங்களாகச் சட்டவிரோதமாகக் கதவடைப்பு செய்யப்பட்டு, அங்கு வேலை செய்து வந்த 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க …'ஆலையை மூடி வயிற்றிலடிக்காதே!"

12_2006.jpg

கடந்த 21.10.06 அன்று அதிகாலை கூடலூரைச் சேர்ந்த வி.வி.மு. தோழர் திருப்பதிராயர், திடீர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்.

 

தன்னுடைய கல்லூரிக் காலத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்று ஊக்கமுடன் செயல்பட்ட தோழர் திருப்பதிராயர், திராவிட கழகத்தின்

மேலும் படிக்க …வழக்குரைஞர் தோழர் திருப்பதிராயர் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

12_2006.jpg

இந்தியாவின் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அடுக்கடுக்கான பல சமூக நீதிச் சலுகைகளும், சமூக நலத் திட்டங்களும், மக்கள் உரிமைச் சட்டங்களும் கொண்டு வந்து நிறைவேற்றுவதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் எதனால் கொண்டு

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

12_2006.jpg

கோவை மாவட்டம் உடுமலை வட்டத்திலுள்ள புக்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் "சிக் குன் குனியா'' நோய் தாக்கி பலர் வேதனைப்பட்டு வருகின்றனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிப் பிரதிநிதிகளிடம்

மேலும் படிக்க …சிக் குன் குனியா: பு.ஜ.தொ.மு.வின் நிவாரணப் பணி – அரசியல் பணி

12_2006.jpg

பன்னாட்டு ஏகபோக மீன்பிடி முதலாளிகளுக்கு நமது கடல்வளங்களைத் தாரை வார்க்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைப்படி, சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியிலிருந்து மீனவர்கள் விரட்டப்பட்டார்கள்; இப்போது

மேலும் படிக்க …அதிகாரிகளின் அடாவடித்தனம்! மீனவர் வாழ்வுரிமை பறிப்பு!

12_2006.jpg

பேரழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது உலகம். வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உருகத் தொடங்கி, கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. கடலுக்குள் விழும் பனியாறுகளின் பருமம் தொடர்ந்து அதிகரித்து, கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவின் தென்மேற்கே

மேலும் படிக்க …புவி வெப்ப நிலை உயர்வு: ஏகாதிபத்திய இலாபவெறியின் கொடூரம்! பேரழிவின் விளிம்பில் பூவுலகம்!

12_2006.jpg

ஈராக்கில், நீதி விசாரணை நாடகமாடி சதாமுக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து விழுப்புரம்கடலூர் மாவட்ட வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., அமைப்புகள் இணைந்து 16.11.06 அன்று விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ""சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக்

மேலும் படிக்க …'சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத புஷ்ஷீக்கு என்ன தண்டனை?" -கண்டன ஆர்ப்பாட்டம்

12_2006.jpg

விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்து, நாட்டை மீண்டும் காலனியாக்க வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடிக்க ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …வருகிறது சிறப்புப் பொருளாதார மண்டலம்! இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு! -கருத்தரங்கம், விளக்கக் கூட்டம்

12_2006.jpg

மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்; ஒழிக்கவே கூடாது என்ற எதிரும் புதிருமான கருத்து மோதல்களை அப்சலின் வழக்கு, மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்துவிட்டது. அப்சல் மீதான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்படாததாலும்; இதுவொரு அரசியல்

மேலும் படிக்க …கருணையினால் அல்ல…

12_2006.jpg

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வரில், கீலானி, அஃப்ஸான் குரு ஆகிய இருவரின் விடுதலையை உறுதி செய்தும்; ஷெளகத் ஹூசைன் குருவிற்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தும்; முகம்மது அப்சலுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செய்தும்

மேலும் படிக்க …நாடாளுமன்றத் தாக்குதல் கருப்பு அங்கிகளுக்குள் ஒளிந்துள்ள காவிப்படை

12_2006.jpg

வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு தனது வட்டாரத்து மக்களையே அஞ்சி நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் ரவுடிகள், ஒவ்வொரு நொடியும் தனது உயிருக்கு யாராலும் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பர். அதைப் போல்தான், இன்றைக்கு உலகமெல்லாம் தனது மேலாதிக்கத்திற்கு அடி பணிய

மேலும் படிக்க …திரவ வெடிகுண்டு பீதி : அமெரிக்க – பிரிட்டிஷ் கோயபல்சுகளின் கூத்து

12_2006.jpg

· அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களைப் பற்றி பத்து பக்கங்களுக்கு ஒரு விரிவான கட்டுரை எழுதுவதைவிட, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த அட்டைப்படக் கேலிச் சித்திரம் எடுப்பாக அமைந்துள்ளது.
சங்கரலிங்கம், நாமக்கல்.

 

· பார்ப்பன பக்தியுடன் ஏகாதிபத்திய சேவை செய்யும் சி.பி.எம். கட்சியினரை அம்பலப்படுத்திக் காட்டியது அருமை. இனி வரும் காலங்களில் சி.பி.எம். கட்சியினர் பக்தியோடு கோவில்களுக்குக் காவடி தூக்கிப் புரட்சி செய்யக் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இராணி, மாத்தூர்.

 

· மணிப்பூர் வீராங்கனை ஷர்மிளாவின் போர்க்குணமும் போராட்ட உறுதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தகைய உயர்ந்த பண்புகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
பகத், பென்னாகரம்.

 

· சுபாஷ் சக்ரவர்த்தி அடுத்த கட்டமாக தமிழ்நாடு பார்ப்பன சுஜாதா, மதனுடன் சேர்ந்து வேதத்திலும், உபநிடதத்திலும் மார்க்சிய கருத்துக்கள் உள்ளதாக உபதேசிப்பார். இதற்கு பிமன்போஸ் ஜால்ரா போடலாம். பூணூல் கம்யூனிஸ்டுகள் சந்தியாவந்தனம் செய்து இந்து தர்மத்தோடு புரட்சி செய்யலாம். பார்ப்பன கம்யூனிஸ்டுகள் எதையும் செய்வார்கள்; யார் கண்டது?
ம. கிருஃச்ணமூர்த்தி, புதுக்கோட்டை.

 

· ஜார்கண்டு மாநிலத்தில் 50 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட துயரச் செய்தியை, தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கண்ணீர் விடும் அற்பத்தனத்துடன் ஒப்பிட்டு வர்க்க உணர்வோடு எழுதியிருப்பது சிறப்பு.
ஜீவா, செயங்கொண்டம்.

 

· தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான் என்பதை அரசின் கணக்கு தணிக்கை அறிக்கையிலிருந்து நிரூபித்துக் காட்டியது அருமையாக உள்ளது. இப்போது அடிக்கட்டுமானத் துறையிலும் தனியார்மயம் புகுத்தப்பட்டு, சூறையாடல் நடப்பதை எளிமையாக விளக்கியிருப்பது பெரிதும் பயனளித்தது.
அ.ப., கொத்தமங்கலம்

 

· பு.ஜ. இதழின் அட்டைப்படத்தைப் பார்த்த பல வாசகர்கள் ஆச்சரியத்தோடு இதழை வாங்கிப் பாராட்டினார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் பார்ப்பன பக்தியை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், உண்மையான கம்யூனிச இயக்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக கட்டுரை அமைந்திருந்தது. விவசாயக் கடன் தள்ளுபடியின் பின்னுள்ள மோசடிகளைப் பற்றித் தமிழகம் தழுவிய விவரங்களைத் தொகுத்து எழுதினால் பெரிதும் பயனளிக்கும்.
வாசகர் வட்டம், தஞ்சை.

 

· மன்மோகன் சிங்கின் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை அட்டைப்படக் கேலிச்சித்திரம் எடுப்பாக உணர்த்தியது. தேசப் பாதுகாப்புக்காகவே இந்திய இராணுவம் உள்ளதாக இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, ""சந்தி சிரிக்கும் ஆயுத பேர ஊழல்'' எனும் கட்டுரை நல்ல சவுக்கடி. தனியார்மயத்தின் பகற்கொள்ளையையும், சட்டமும் நீதியும் இக்கொள்ளையை அங்கீகரிப்பதையும், தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து விளக்கிய கட்டுரை எளிமையாக உணர்த்தியது. வாசகர் வட்டக் கூட்டத்தின் இறுதியில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இன்னுமொரு காகிதச் சட்டம்தான் என்பதை விளக்கி, வழக்குரைஞர் தோழர் இராமலிங்கம் ஆற்றிய சிறப்புரை, வாசகர்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தது.
வாசகர்வட்டம், திருச்சி.

 

· இம்மாத இதழின் அட்டைப்படம் வாசகர்களிடையே விவாதத்தைத் தூண்டி, மன்மோகன் சிங் விசுவாசமான அமெரிக்க அடிமைதான் என்பதை வாசகர்களே விளக் குவதாக அமைந்தது.
வாசகர் வட்டம், ஓசூர்.

12_2006.jpg

கொலைகார "கோக்'கிற்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வும் போராட்டங்களும் தொடரும் சூழலில், கோக்கின் சரிந்துவிட்ட சந்தையை முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த நடிகை ராதிகா கிளம்பியிருக்கிறார். ""கோக்கில் எந்த நச்சுத் தன்மையும் இல்லை; கோக்கில் என்ன மிக்ஸ் பண்ணுகிறார்கள் என்பதிலிருந்து எல்லா

மேலும் படிக்க …கோக்கின் புதியகைக்கூலி நடிகை ராதிகாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

12_2006.jpg

தமது சொந்த நிலத்தைப் பறிக்க முயன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடிய தாழ்த்தப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த கோர முடிவு இது.

மேலும் படிக்க …கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை : சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!

12_2006.jpg

எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக, சட்டவிரோதமாக 10 மணி 12 மணி நேர கட்டாய உழைப்பு; வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சாதனங்கள் எதுவும் தரப்பட மாட்டாது; தொழிற்சாலை சட்டங்கள் பின்பற்றப்பட மாட்டாது.

மேலும் படிக்க …நெல்காஸ்ட் : கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகக் கொதித்தெழுந்த தொழிலாளார்கள்

12_2006.jpg

அவர்கள் அனைவரும் சாலைப் பணியாளர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சொந்த மண்ணையும், வீடுவாசலையும் விட்டு பிழைப்புத் தேடி மராட்டியத்தின் மும்பைப் பெருநகருக்கு விரட்டப்பட்டவர்கள். மும்பை நகரின் செல்வச் சீமான்களின் சொகுசுக் கார்கள் வழுக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகள் அமைப்பதுதான் அவர்களின்

மேலும் படிக்க …தாராளமயம் பெற்றெடுத்த நாகரிக பொறுக்கிகளால் விளையும் விபரீதங்கள்

12_2006.jpg

காவிரி ஆற்று நீர் சிக்கலைப் போல முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் நிறைய வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லை. உண்மை விவரங்களே தமிழகத்தின் நியாய உரிமைகளையும் கேரள அரசின் அடாவடித்தனங்களையும் நிலைநாட்டுவதாக உள்ளன. இன்றைய கேரள மாநிலத்தின் ஒரு பகுதியான திருவி தாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான

மேலும் படிக்க …முல்லைப் பெரியாறு: சிக்கலும் தீர்வும்

12_2006.jpg

இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் உள்ளிட்ட அதிஉயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பார்ப்பனமேல் சாதிவெறியர்களின் கூடாரமாக இருப்பதை, இடஒதுக்கீடுக்கு எதிராக அக்கல்லூரிகளில் நடத்த

மேலும் படிக்க …ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏ.ஐ.ஐ.எம்.எஸ். உயர்கல்வி நிறுவனங்களா? பார்ப்பன அக்கரகாரமா?

jan_07.jpg

ஒவ்வொரு "இந்து'க் கோயிலுமே, சாதிப் பாகுபாடுகள் நிலவுவதைப் பறை சாற்றும் மையங்களாகத் தான் இருந்து வருகின்றன. ஒரிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டத்திலுள்ள கேரேதகடா கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம், இந்த உண்மையை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

மேலும் படிக்க …தீண்டாமை பார்ப்பன இந்துக் கோயில்கள் மையங்கள்!

jan_07.jpg

· முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சுயநிர்ணய உரிமையே அரசை உலுக்கும் சரியான ஆயுதம், சரியான தீர்வு என்ற தலையங்கம் விரிந்த அரசியல் பார்வையை அளித்தது. சாதிய வெறியாட்டத்தின் இன்னுமொரு கொடிய இரத்த சாட்சியமாக உள்ள கயர்லாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை அதிர்ச்சியளிப்பதோடு, இந்த அவமானத்தைத் துடைத்தெறியப் போராட வேண்டும் என்ற உணர்வூட்டுகிறது. சாதியவர்க்கதேசிய இன முரண்பாடுகளும் மோதல்களும் நிலவும் சமுதாயத்தில் யார் யாருக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதிலிருந்தும், புரட்சிகர அரசியல் நடவடிக்கையின் நியாயத்தை முதலாளித்துவ மனிதாபிமானம் எப்படி பின்னுக்குத் தள்ளும் என்பதையும் ஒப்பிட்டு விளக்கிய அப்சல் குரு பற்றிய கட்டுரை சிறப்பு.
இரா. மணிகண்டன், சூசுவாடி.

 

· மையமாநில அரசுகளும், உச்சநீதி மன்றமும், ஓட்டுக் கட்சிகளும் காவிரி முதல் முல்லைப் பெரியாறு வரை துரோகமிழைத்து வருவதையும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தையும் உணர்த்திய தலையங்கம் சிறப்பாக அமைந்துள்ளது. தனியார்மயமும் தாராளமயமும் நாட்டைச் சூறையாடுவதோடு, நாகரீகப் பொறுக்கிகளையும் உருவாக்கி எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை அட்டைப்படக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. பூவுலகையே தமது இலாபவெறிக்காக நஞ்சாக்கி நாசமாக்கி விட்ட ஏகாதிபத்தியவாதிகளின் கொடுஞ்செயலை அறியும்போது அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்குகிறது. வாசகர் வட்டக் கூட்டத்தின் இறுதியில், ""காந்தியின் இந்துத்துவ கோரமுகம்'' என்ற தலைப்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். ""தேசப் பிதா'' என்று சித்தரிக்கப்படும் காந்தி, எவ்வாறு பார்ப்பனஇந்துவெறிக்குப் பல்லக்குத் தூக்கினார் என்பதை விரிவான சான்றாதாரங்களுடன் விளக்கிக் காட்டிய அவரது உரை, வாசகர்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தது.
வாசகர் வட்டம், திருச்சி.

· விறகு அடுப்பு பயன்படுத்துவதால் புகை பெருகி சுற்றுச்சூழல் நாசமாவதாக ஏகாதிபத்தியவாதிகள் பீதியூட்டி வரும் நிலையில், உண்மையில் சுற்றுச்சூழலை நாசமாக்குவது யார் என்பதை அம்பலப்படுத்திக் காட்டிய கட்டுரை, அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் அருமையாக அமைந்துள்ளது.
ஜீவா, ஜெயங்கொண்டம்.

· கயர்லாஞ்சி கொடூரத்தை தமிழக பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்துவிட்ட நிலையில், சாதிவெறி பயங்கரத்தை பு.ஜ. கண்முன்னே காட்டியுள்ளது. இச்சாதிவெறி பயங்கரவாதிகளுக்கு வாக்குரிமை, சொத்துரிமை, இட ஒதுக்கீடு சலுகை உள்ளிட்ட அனைத்தையும் பறிப்பதுதான் சரியான தீர்வாகும்.
முகிலன், திருச்சி.

· கூட்டு மனசாட்சியைத் திருப்திப்படுத்த அப்சல்குருவுக்கு மரண தண்டனை விதித்துள்ள இந்திய நீதித்துறை காவிப் படையாக உள்ளதை விரிவாக விளக்கியும், போலி கம்யூனிஸ்டுகளின் பொருள் பொதிந்த மவுனத்தைத் திரைகிழித்தும், வர்க்கக் கண்ணோட்டமற்ற மனிதாபிமான பசப்பல்களை எள்ளி நகையாடியும் வெளியாகியுள்ள கட்டுரை டிசம்பர் இதழுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
சம்புகன், சிவகங்கை.

 

· கோக்கின் கைக்கூலி நடிகை ராதிகாவுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம், புரட்சிகர அமைப்புகளின் போர்க்குணத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது. தாராளமயம் பெற்றெடுத்த நாகரீகப் பொறுக்கிகளால் சாமானிய மக்களுக்கு விளையும் பேரபாயத்தை வர்க்க அரசியல் கண்ணோட்டத்தோடு விளக்கிய அட்டைப்படக் கட்டுரை, எனது சிந்தனையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.
முரளி, இராசபாளையம்.

jan_07.jpg

ஒரு பெண் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள் என்பதற்காகவே அவளுக்கு எதிராக வன்முறைகிரிமினல் குற்றம் ஏவிவிடப்படுகிறது. பெண் அவள் கருவிலிருக்கும்போதே படுகொலை செய்யப்படுகிறாள். பெண் ஒரு உயிரற்ற பொருளைப் போல விற்கப்படுகிறாள். பெண் ஒரு

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

jan_07.jpg

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை ஆக்கிரமித்து, விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடித்துவிட்டு, இந்தியர்களோ இந்தியச் சட்டங்களோ நுழைய முடியாதபடி தனி சமஸ்தானங்களாக

மேலும் படிக்க …""நாட்டைச் சூறையாட வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடிப்போம்!'' — புரட்சிகர அமைப்புகளின் அரங்கக் கூட்டங்கள்

jan_07.jpg

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாகவும், இந்த விலைக் குறைப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த நவம்பரில் அறிவித்தார். நாட்டை மீண்டும் காலனியாக்கி மக்களை மரணக்

மேலும் படிக்க …மருந்து விலை கட்டுப்பாடு சட்டம் : கொள்ளைக்காரனின் வள்ளல் வேடம்

jan_07.jpg

சில்லறை வியாபாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைந்திருப்பது; அமெரிக்காவின் சில்லறை வியாபார நிறுவனமான வால்மார்ட்டும், இந்தியாவின் பாரதி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவெடுத்திருப்பது; இங்கிலாந்தின் டெஸ்கோ மற்றும் கேரிஃபோர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து சில்லறை வியாபாரத்தில் இறங்கப் பேச்சு வார்த்தைகள்

மேலும் படிக்க …அழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்

jan_07.jpg

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கை கையெழுத்தான நாளில் இருந்தே, அதனை அடிமைச் சாசனம் என அம்பலப்படுத்தி, நாம் எழுதி வருகிறோம். அதேசமயம், அமெரிக்க அடிவருடிகள் அனைவரும், ""அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை

மேலும் படிக்க …இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது

jan_07.jpg

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் மொரப்பூர், நல்லம்பள்ளி ஒன்றியங்களைச் சேர்ந்த பருத்தி விவசாயிகளின் எதிர்கால வாழ்வே இன்று இருண்டு போய்க் கிடக்கிறது. இப்பகுதியில் ஏறத்தாழ 4,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருத்திச் செடிகள் பூவும் பூக்காமல், காயும் காய்க்காமல் மலடாகி நிற்பதால், ஏறத்தாழ 20 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நட்டமேற்பட்டுள்ளது.

மேலும் படிக்க …பருத்தி விவசாயிகள் - பரிசோதனைச்சாலை எலிகளா?

jan_07.jpg

மார்க்சியம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்; ""டாடா மார்க்சியம்'' பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 

அதென்ன டாடா மார்க்சியம்? மார்க்சியத்துக்கு ""டாடா'' காட்டிவிட்டு, செங்கொடி பிடித்துக் கொண்டே தரகுப் பெருமுதலாளி டாடாவுக்கு விசுவாசமாகச் சேவை செய்வதற்குப் பெயர்தான் ""டாடா

மேலும் படிக்க …டாட்டா-பிர்லா கூட்டாளி! பாட்டாளிக்குப் பகையாளி!!

jan_07.jpgமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நியாய உரிமைகளை மறுத்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வரும் கேரள மாநில அரசைக் கண்டித்தும், உச்சநீதி மன்ற தீர்ப்பைச் செயல்படுத்தக் கோரியும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 14.12.06 அன்று எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

மேலும் படிக்க …""இன்னுமொரு துரோகத்தை அனுமதியோம்!'' — கண்டன ஆர்ப்பாட்டம்

jan_07.jpg

முற்றும் துறந்த துறவி வேடத்தில் ஹார்லிக்ஸ் ஷியாமளா, ஸ்ரீரங்கம் உஷா என்று பல பெண்களுடன் உல்லாச சல்லாபம் புரிந்து கொண்டு, பக்தர்களுக்கு ஆசீர்வாதமும், பல கருப்புப்பண முதலைகளின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிக் கொண்டிருந்த மோசடிப் பேர்வழிதான் காஞ்சி சங்கராச்சாரி. சங்கர மடத்தின் முன்னாள் விசுவாசியான சங்கரராமன் எனும் பார்ப்பனர்,

மேலும் படிக்க …'மார்க்சிஸ்டுகள்" : பார்ப்பன பாதந்தாங்கிகள்!

jan_07.jpg

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சிறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். ""டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித்திருநாள்!'' என்று

மேலும் படிக்க …பெரியார் சிலை உடைப்பு: மண்டைச் சுரப்பை உலகு தொழும்! மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!!

jan_07.jpg

"தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதும் முன் வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெள்ளத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு

மேலும் படிக்க …ஈழம் : தொடரும் சிங்கள இனவெறி பாசிசம்! அனாதைகளாகும் தமிழ் மக்கள்!

jan_07.jpg

கை நிறைய சம்பளம்; வேலை செய்து கொண்டே மேலும் படித்து முன்னேறலாம்; அதிருஷ்டமிருந்தால் அமெரிக்காவுக்கே போய்விடலாம் என்று பத்திரிகைகளால் பிரமையூட்டப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், கொத்தடிமைகளை விடக் கேவலமான நிலையில்

மேலும் படிக்க …தகவல் தொழில்நுட்பத் துறையில் சி.ஐ.டி.யு.வின் மன்றம் ஜாடிக்கேத்த மூடி

02_2007_pj.jpg

தை மாட்டுப் பொங்கல் திருநாளில் மாடுகளுக்குப் பொங்கல் வைத்து, மாலையில் மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவதும் குலவையிடுவதும் தமிழக விவசாயப் பெருமக்களின் பண்பாடாக உள்ளது. உசிலம்பட்டி வி.வி.மு. தோழர்கள், இம்மாட்டுப் பொங்கல் விழாவை மறுகாலனியாக்கத்திற்கெதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரமாக மாற்றி மாடுகளின் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க …மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நடத்திய ஊர்வலம்

02_2007_pj.jpg

நடுத்தர வர்க்கத்தினர், எப்போதுமே மற்ற வர்க்கத்தினரை விட அறிவாளிகளாகத் தங்களை எண்ணி சுயதிருப்தியில் மிதக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அற்பவாதிகள். அவர்கள் அறிவோ மிகவும் மேலோட்டமானதுதான்; ஆழமானதல்ல. சமீபத்தில் வெளியான சில வழக்குமன்றத் தீர்ப்புகளைக் கண்டதும்,

மேலும் படிக்க …அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!

02_2007_pj.jpg

அமெரிக்கா என்றால் நாகரிகம்; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்களின் பித்தைக் கூடத் தெளிய வைக்கும் வகையில், சதாமின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சதாம் அவமானப்படுத்தப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு, அமெரிக்காவின் வன்மமும், திமிரும்

மேலும் படிக்க …சதாம் படுகொலை! அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்

02_2007_pj.jpg

புதிய வேலைவாய்ப்பு; இது, நீங்கள் இதுவரை அறிந்திராத புத்தம்புதிய வேலைவாய்ப்பு. இது ஒரு புதிய உற்பத்தித் துறை. இங்கு பணியாற்ற உயர்கல்வியோ பயிற்சியோ அவசியமில்லை. இளம் பெண்கள் ஓராண்டு காலத்தில் ரூ. 50,000 முதல் ரூ. 2 இலட்சம் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க …தாய்மையை விலை பேசும் உலகமயம்

02_2007_pj.jpg

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மங்களூர் நகரிலும்; அதன் புறநகர்ப் பகுதிகளிலும்; அந்நகரையொட்டி அமைந்துள்ள உல்லால், கோனாஜே ஆகிய ஊர்களிலும் கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் கூட, அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தது.

மேலும் படிக்க …போலீசு: ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு

02_2007_pj.jpg

சென்னை போலீசு துறை ஆரம்பிக்கப்பட்டு 150ஆவது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி ஜனவரி 5ஆம் நாளன்று சென்னையில் கோலாகலமான விழாவைத் தமிழக அரசு கொண்டாடியது. அரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் வந்திருந்து சிறப்பித்து, போலீசாரை ஒன்பது உறுதிமொழிகள் ஏற்க வைத்தார். சாகச நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் போலீசுக்கு பதக்கங்கள், புது

மேலும் படிக்க …சென்னை மாநகர போலீசு ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்

02_2007_pj.jpg

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்க்கை அவலமான நிலையில் இருப்பதை, சென்னை பகுதி மீனவர்களிடம் நடந்துள்ள சிறுநீரகத் திருட்டு அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. பட்டினியில் இருந்தும், கடனில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே, தங்களின் சிறுநீரகங்களை விற்று விட்டதாக மீனவப் பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க …சிறுநீரகத்திருட்டு அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு!

02_2007_pj.jpg

அமெரிக்க மேலாதிக்கத் திமிரின் உச்சகட்டமாக, ஈராக்கின் "முன்னாள்' அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்ட கொடுஞ்செயலை எதிர்த்து ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஜனவரி 12 தேதிகளில் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

மேலும் படிக்க …சதாம் படுகொலை! ஏகாதிபத்திய கொலைக் குற்றவாளிகளான புஷ்பிளேர் கும்பலுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

02_2007_pj.jpg

மழை பொய்த்துப் போகும் காலங்களில்தான் காவிரியில் நீர்கேட்டு கர்நாடகாவிடம் கையேந்தும் நிலைமை உள்ளது என்றால், நல்ல மழை பெய்தும் கூட, தமிழகமே கட்டிப் பராமரித்து வரும் முல்லைப் பெரியாறு அணையில் அதன் கொள்ளளவு நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் உரிமையைக் கூட அடாவடியாக

மேலும் படிக்க …முல்லைப் பெரியாறு: தீர்வு என்ன?

02_2007_pj.jpg

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமைச் சாசனத்தையும் அதன் கொடிய விளைவுகள் பற்றியும் உழைக்கும் மக்களுக்கு உணர்த்திய பு.ஜ.வுக்கு எனது நன்றிகள்.
விவேகானந்தன், சென்னை.

மேலும் படிக்க …வாசகர் கடிதம்

02_2007_pj.jpg

விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்துச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வரும் மே.வங்க "இடதுசாரி' அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், 6 விவசாயிகள் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இதை மூடிமறைத்து மம்தா கட்சியினரின் வன்முறை நக்சல்பாரிகளின் வெறியாட்டம் என்று கோயபல்சை

மேலும் படிக்க …மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்! பாசிச "மார்க்சிஸ்டு'களைத் தோலுரிப்போம்! — நந்திகிராமப் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

02_2007_pj.jpg

நாயோடு படுத்தவன் உண்ணியோடுதானே எழுந்திருக்க முடியும்? தரகுப் பெருமுதலாளிகளோடும் அந்நிய ஏகபோக நிறுவனங்களோடும் கூடிக் குலாவினால் இரத்தக் கறையோடுதானே தரிசனம் தரமுடியும்? ஆம்! கொலைகாரர்களாகக் காட்சி தருகிறார்கள், மே.வங்கத்தை ஆளும் "மார்க்சிஸ்டு'கள். உழைக்கும் மக்களின் அரசு என்று மார்தட்டிக் கொண்ட மே.வங்க "இடதுசாரி' அரசு இன்று இரத்தக் கவிச்சி வீசும் கொலைகார அரசாக நாடெங்கும் நாறுகிறது.

மேலும் படிக்க …சி.பி.எம்: துரோகிகளா? எதிரிகளா?

02_2007_pj.jpg

கடந்த ஜனவரி 58 ஆகிய நான்கு நாட்களில் எழுபதிற்கும் மேற்பட்டவர்களை அசோம் ஐக்கிய விடுதலை முன்னணியினர் (உல்ஃபா) கொன்றிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பீகாரிலிருந்து பிழைப்புக்காக அசாமுக்குப் போய் அசாமிய மற்றும் அங்குள்ள வங்காளி ""பாபு''க்களுக்குச் சேவைசெய்யும்

மேலும் படிக்க …அசாம்-உல்ஃபா : திசைதவறிய தேசிய விடுதலைப் போர்

02_2007_pj.jpg

பொதுமக்களுக்கு வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் அரசாங்கம் உரிய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது, இந்தியா போன்ற ஏழை நாடுகளின் மீது உலக வங்கி திணிக்கும் நிபந்தனைகளுள் ஒன்று. இக்கட்டளைக்குக் கீழ்படிந்துதான், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து என அரசால் வழங்கப்பட்டுவரும் அனைத்து விதமான சேவைகளின் கட்டணங்களும் மெல்ல

மேலும் படிக்க …உலக வங்கி உத்தரவு : தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்

mars_2007.jpg

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம், தான் தயாரித்து விற்பனை செய்துவரும் ""க்ளீவெக்'' என்ற இரத்தப் புற்று நோய்க்கான மருந்திற்கு, இந்தியாவில், தனக்குக் காப்புரிமை வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நோவார்டிஸுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால், மாதம்

மேலும் படிக்க …புதிய காப்புரிமைச் சட்டம்: நோயாளிகளின் கழுத்துக்குச் சுருக்கு!

mars_2007.jpg

பட்டியலின பழங்குடி மக்கள் என்றாலே அவர்களைப் பற்றி நாட்டின் பெரும்பாலானவர்கள், படித்த நகர்ப்புற அறிவாளிகள் கூட ஒரு தவறான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பம், கல்வி பண்பாடு, சமூகப் பொருளாதாரம், நாகரிகம் ஆகியவற்றால் தாங்கள்

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

mars_2007.jpg

பெங்களூரில், கடந்த டிசம்பரில் 8 வயது சிறுமி வெறி பிடித்த தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட செய்தி மனிதாபிமானம் உள்ள எவரையும் கலங்கச் செய்து விடும். காட்டில் வாழும் சிங்கம், புலி போன்ற கொடூர விலங்குகள் கூட்டாகச் சேர்ந்து மான்களை வேட்டையாடுவது போல, இந்தச் சிறுமியை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன. பெயிண்டராக வேலை

மேலும் படிக்க …தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?

mars_2007.jpg

சென்னைக்கு ஆந்திரமாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் கால்வாயைப் பலப்படுத்த 200 கோடி ரூபாயை வழங்கிய மர்மச் சாமியார் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா சென்னையில் இவ்வாண்டு ஜனவரியில் நடந்துள்ளது. இதை முன்னிட்டு சென்னை வந்த சாய்பாபா கோபாலபுரம் சென்று "பகுத்தறிவு'ப் பாரம்பரியத்தில் வந்த கருணாநிதியைச் சந்தித்தார்.

மேலும் படிக்க …மு.க-சாய்பாபா சந்திப்பு கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்

mars_2007.jpg

"இந்தியா உண்மையில் ஒளிர்கிறது; உறங்கிக் கிடந்த இந்தியா என்ற புலி கம்பீரமாக எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கி விட்டது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும் கௌரவமும் மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது. வெள்ளைக்கார காலனியாதிக்கக் கம்பெனிகளிடம் அடிமைப்பட்டிருந்த இந்திய நாடு, அந்த அடிமைத்தளைகளை விலக்கி, வெள்ளைக்கார நிறுவனத்தையே விலைக்கு வாங்கி பதிலடி கொடுத்துள்ளது!''

மேலும் படிக்க …டாடா-கோரஸ் இணைவு : உலகமயத்தின் கீழ் தரகு முதலாளிகளின் புதிய பரிமாணம்

mars_2007.jpg

16 ஆண்டு காலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஒருமனதான இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது. காவிரியில் ஆண்டுக்கு 74,000 கோடி கன அடி நீர் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை (நூற்றுக்கு) 50 சதவீதம் நம்பலாம் என்ற அடிப்படையில், கர்நாடகத்திற்கு 27,000 கோடி கன அடி நீரும்; தமிழகத்திற்கு 41,900 கோடி கன அடி நீரும்; கேரளாவிற்கு 3,000 கோடி கன அடி நீரும்; புதுச்சேரிக்கு 700 கோடி

மேலும் படிக்க …காவரி நடுவர்மன்றத் தீர்ப்பு : பத்தில் ஒன்பது பழுதில்லை

mars_2007.jpg

மறுகாலனிய, பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் முழக்கமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தி வரும் தமிழ் மக்கள் இசைவிழாவுக்கு இது 14வது ஆண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுனாமி மற்றும் வெள்ளப் பேரழிவையொட்டி மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் காரணமாக தமிழ் மக்கள் இசைவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இவ்வாண்டு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இசைவிழா பிப்ரவரி 24ஆம் தேதி மிகச் சிறப்பாக நடந்தேறியது.

மேலும் படிக்க …காலனியாதிக்க எதிர்ப்பு மரபு! மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு!!" தமிழ் மக்கள் இசைவிழா : விடுதலைப் போரின் வீரமுழக்கம்

mars_2007.jpg

தலைமைக்குத் தனது விசுவாசத்தைக் காட்டி, அரசியல் பதவி ஆதாயம் அடைவதற்கான வேறொரு வகை பிழைப்புவாதம்தான், இந்த மனிதத் தன்மையற்ற, கொடூரமான கொலைவெறிக்கு அடிப்படையாய் இருந்தது.

மேலும் படிக்க …தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு: குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க

mars_2007.jpg

"ஜம்முகாசுமீர் போலீசு சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையும், மத்திய ரிசர்வ் போலீசு படையும் இணைந்து பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனைச் சுட்டுக் கொன்றதோடு, அத்தீவிரவாதியிடமிருந்து ஆயுதமொன்றையும் கைப்பற்றினர்'' இப்படியொரு முதல் தகவல் அறிக்கை டிச.9, 2006 அன்று, ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள கந்தேர்பால் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கையே, மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்தது.

மேலும் படிக்க …காஷ்மீர்: இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!

mars_2007.jpg

"நேற்று வரை நாங்கள் விவசாயிகள்; இன்று எங்கள் நிலம் பறிக்கப்பட்டுச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு விட்டோம். நிலம்தான் எங்கள் தாய்! எங்கள் தாயைப் பறித்து, எங்களை அனாதைகளாக்கிப் பட்டினியில் தள்ளி விட்டுள்ளார்கள்'' என்று குமுறுகிறார், பல்தேவ் சிங் என்ற விவசாயி. இவர் பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயி.

மேலும் படிக்க …பஞ்சாப்:பறிபோகும் விளைநிலங்கள் பரிதவிக்கும் விவசாயிகள்

puja_apri_07.jpg

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று திருச்சியில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதலை முன்னணி, இப்போராட்ட நாளில் மறுகாலனிய அடிமைத்தனத்தை வீழ்த்த உறுதியேற்று, கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க மண்டபத்தில் அரங்கக் கூட்டத்தை

மேலும் படிக்க …'நாட்டின் விடுதலையும் மகளிர் விடுதலையும் பிரிக்க முடியாதவை!"

puja_apri_07.jpg

1980ஆம் ஆண்டு காடுகள் (பாதுகாப்பு) சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி 1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாதவர்கள் எல்லாம் ""ஆக்கிரமிப்பாளர்கள்'' என்று அறிவிக்கப்பட்டார்கள்.

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

puja_apri_07.jpg

1993ஆம் ஆண்டு நடந்த மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் 123 பேரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்திருக்கிறது, ""தடா'' சிறப்பு நீதிமன்றம். இவர்களுக்கான தண்டனை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க …கோவை குண்டு வெடிப்பு : தீர்ப்புக்கு முன்பே தண்டனை

puja_apri_07.jpg

பேட்டை ரவுடிகளும் கிரிமினல் பேர்வழிகளும் சமூக விரோத கொலை பாதகச் செயல்கள் பலவற்றில் ஈடுபட்டுக் கொண்டே, தம்மைச் சுற்றியுள்ள ஏழைகளின் திருமணம், காதுகுத்தல், கோயில் திருவிழாக்கள் முதலானவற்றில் முக்கியப் பிரமுகராகக் கலந்து கொண்டு

மேலும் படிக்க …கொலைகார ""கோக்''கின் தருமதுரை வேடம்

puja_apri_07.jpg

கோவை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரிக்கால் நிறுவனம், கார், இரு சக்கர வாகனங்களுக்குத் தேவையான மீட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 6 தொழிற்கிளைகள், இந்தோனேஷியாவிலும், ஈரானிலும் தலா ஒரு தொழிற்கிளை என வளர்ந்துள்ள பிரிக்கால்

மேலும் படிக்க …பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் : பாதிக் கிணறு தாண்டினால் போதுமா?

puja_apri_07.jpg

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இருந்து நாட்டுப்புறக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து, பொதுநூலகத் துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை உதவியுடன் தமிழ் மையம் எனும் தன்னார்வ நிறுவனம், ""சங்கமம்'' எனும் பெயரில் பிப்.20ஆம் தேதி தொடங்கி பிப்.26 முடிய, 6 நாட்களில் 400 நிகழ்ச்சிகளை, சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தியது.

மேலும் படிக்க …சென்னை சங்கமம் : தி.மு.க.கம்பெனியின் புதிய வியாபாரம்

puja_apri_07.jpg

பங்குச் சந்தையும், அந்நிய மூலதனமும், மொத்த தேசிய உற்பத்தியும் ஒருபுறம் வளர்ந்து கொண்டே செல்லும்பொழுது, இன்னொருபுறமோ வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் மக்களைப் பிடித்தாட்டுகிறது. ""வளர்ச்சி இருந்தால்

மேலும் படிக்க …பணவீக்கம் - விலைவாசி உயர்வு : தனியார்மயத்தின் கோரவிளைவுகள்

puja_apri_07.jpg

மறுகாலனியாதிக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் வாழ்விழந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதும், தொழிலாளர்கள் வேலையிழந்து கொத்தடிமைகளாக உழல்வதும், வறுமையும் பட்டினியும் பெருகுவதும் தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், இந்தியாவில் பணக்காரர்களும் பெருகிக் கொண்டே போகிறார்கள். உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியப் பெருமுதலாளிகளும் இடம் பெற்றுள்ளதாகப் பூரித்துப் போகின்றனர் ஆட்சியாளர்கள்.

மேலும் படிக்க …ஆடம்பரத் திருமணங்கள் : பெருக்கெடுத்து ஓடும் பணக்கொழுப்பு

puja_apri_07.jpg

பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டசபைத் தேர்தல்களில் வாங்கிய அடி, காங்கிரசு கட்சியை விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. அதனால், சாமான்ய மக்களின் நலனை மனதில் கொண்டு, 2007/08 ஆண்டுக்கான மைய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கூறி வருகிறது.

மேலும் படிக்க …பட்ஜெட் : ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுகின்றன

puja_apri_07.jpg

தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகிறது விலைவாசி. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவுதான் இந்த விலைவாசி உயர்வு என்ற உண்மையைத் திட்டமிட்டே மறைப்பதில் எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. விலைவாசி உயர்வு காய்ச்சலென்றால், அதைத் தோற்றுவிக்கும் டைபாய்டு கிருமி மறுகாலனியாக்கம். கிருமியைப் பாதுகாத்துக் கொண்டே, காய்ச்சலை மட்டும் கட்டுப்படுத்தி விடலாம் என்று பித்தலாட்டம் செய்கின்றன ஓட்டுக் கட்சிகள்.

மேலும் படிக்க …மக்களைக் கொல்லும் விலைவாசி உயர்வு! மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவு! புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்

puja_apri_07.jpg

கிரிமினல் போர்ஜரி வேலைகள், திருட்டு, இலஞ்ச ஊழல் ஆகியவற்றின் மூலமாகவே குறுகிய காலத்தில் உலகப் பணக்காரனாகி விட்ட அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனம், சென்னையில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் திறந்திருக்கிறது. சென்னை நகர மூலை முடுக்குகளிலெல்லாம் தனது அங்காடிகளை விரிவுபடுத்தவும் இருக்கிறது.

மேலும் படிக்க …சில்லறை வணிகம் : மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா

puja_apri_07.jpg

உழைக்கும் மக்களின் கட்சி என்று புளுகிக் கொண்டு மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று மே.வங்கத்தின் நந்திகிராமத்தில் போலீசும்சி.பி.எம்.மும் இணைந்து நடத்திய பாசிசக் கொலைவெறியாட்டம் இந்த உண்மைகளை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.

மேலும் படிக்க …நக்சல்பாரி… நந்திக்கிராமம்… சி.பி.எம்.கட்சியின் கொலைவெறி

puja_apri_07.jpg

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே கற்றுக்குட்டி நாடுகளாக மதிப்பிடப்பட்ட வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளிடம் படுதோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டதும், கூடவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின்

மேலும் படிக்க …கிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல, ஒழிக்கப்பட வேண்டிய சூதாட்டம்-சமூகக்கேடு!

puja_apri_07.jpg

பல இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் விவசாயிகள் தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில், சென்னையில் பல்லாயிரம் கோடி முதலீட்டில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் தொடங்கியுள்ளதோடு, நகரின் மூலை முடுக்கெல்லாம்

மேலும் படிக்க …"சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!''— புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்

may_2007.jpg

உ.பி. மாநிலம் வாரணாசி மாவட்டத்திலுள்ள பேல்வா கிராமத்தைச் சேர்ந்த இலட்சுமிணாவிடம் அடமானம் வைப்பதற்குத் தனது திருமணப் புடவையைத் தவிர, மதிப்புமிக்க பொருட்கள் வேறெதுவும் இல்லை. அந்தச் சேலையை யாராவது அடமானம் எடுத்துக் கொண்டு நூறு ரூபாய் கொடுத்தால், சாகக் கிடக்கும் தனது மகள்

மேலும் படிக்க …உத்திரப்பிரதேசம்: தேர்தல் புழுதியில் மறைக்கப்படும் பட்டினிச் சாவுகள்

may_2007.jpg

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனப்படும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராக தொடர்ந்து உறுதியாகப் போராடிவரும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், சிறு வணிகத்தை விழுங்க வந்துள்ள ரிலையன்ஸ் வால்மார்ட்டுக்கு எதிராக ""சிறு வணிகம், சிறு தொழில்கள் உயர்த்திப் பிடி! சூறையாடும்

மேலும் படிக்க …ரிலையன்ஸ் ஃபிரஷ் முற்றுகை -போராட்ட இயக்கம் தொடங்கியது

may_2007.jpg

அரசியல், சமுதாயப் புரட்சியின்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் சமூகப் பொருளாதார முன்னேற்றமும் சமத்துவமும் அடையவே முடியாது. மத்தியமாநில அரசுகள் கொண்டு வந்திருக்கும் பல்வேறு சட்டதிட்டங்கள், இடஒதுக்கீடு போன்ற

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

may_2007.jpg

அடங்க மறு; அத்து மீறு!'' இது சுவரெங்கும் விடுதலை சிறுத்தைகள் எழுதி வைக்கும் முழக்கம். இதை வாசித்துவிட்டுப் பொங்கி எழும் தலித் இளைஞர்கள் அத்துமீறினால் அவர்களுக்கு ஆதரவுக் குரல் தராமல், அந்த இளைஞர்களையே ஆதிக்க சாதியிடம் ""அடங்கிப் போ'' என எந்தத் தலைவராவது வற்புறுத்துவாரானால்,

மேலும் படிக்க …அடங்கிப் போ, ஒத்துஊது!" -புதிய தலித்திய முழக்கம்!

may_2007.jpg

மே.வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்களும் போலீசும் இணைந்து நடத்திய கொலைவெறியாட்டத்தை மூடி மறைத்து, கூசாமல் அவதூறு பொய் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது சி.பி.எம். கட்சி.

மேலும் படிக்க …நந்திகிராமப் படுகொலைகள்: சி.பி.எம்.இன் பயங்கரவாதத்துக்குஎதிரான ஆர்ப்பாட்டம் - பிரச்சார இயக்கம்

may_2007.jpg

புதிய ஜனநாயகம் இதழின் வாசகர்களுக்கு மட்டுமல்ல, ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் போன்ற முதலாளித்துவப் பத்திரிகைளின் வாசகர்களுக்கும் ""நல்லகாமனின் கதை'' நினைவிருக்கக் கூடும். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான நல்லகாமன், தமிழக ஆயுதப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பைரவ் சிங்கின் வீட்டை, ரூ. 5,000 கொடுத்து ஒத்திக்கு எடுத்தார்.

மேலும் படிக்க …தீர்ப்பு : பாம்பும் சாகாமல்… தடியும் நோகாமல்..

may_2007.jpg

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களையடுத்து, 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது, மைய அரசு. இதன் மூலம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு எதிரானவையல்ல எனக் காட்டிக்

மேலும் படிக்க …சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம் :சர்வகட்சி பித்ததலாட்டம்

may_2007.jpg

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி முத்துவீரகண்டயன்பட்டி கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! இக்கிராமத்துக்கு கடந்த ஆண்டுசெப்டம்பர் 24ஆம் தேதியன்று வந்த அரசுத் தலைவர் அப்துல்கலாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அக்குடிநீரில் ஒரு குவளை பருகி கிராம மக்களுடன்

மேலும் படிக்க …பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை

may_2007.jpg

நக்சல்பாரி — அது இமயமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் பெயர். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்திலுள்ளது அந்தக் கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல்

மேலும் படிக்க …நக்சல்பாரி பேரெழுச்சியின் 40-ஆம் ஆண்டு : மறையாது மடியாது நக்சல்பாரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!

may_2007.jpg

தமிழகத்து "மார்க்சிஸ்டு'கள் ரிலையன்ஸ் ஃபிரெஷ்ஷûக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, "மார்க்சிஸ்டு' கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சமர் போரா, ""விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கொடுப்போம் என்றும்; நுகர்வோருக்குத் தரமான பொருட்களை விற்பனை செய்வோம் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம்

மேலும் படிக்க …சிவப்புச் சாயம் வெளுக்கிறது!

may_2007.jpg

நண்பனைப் போல அரிதாரம் பூசிக் கொண்டு திரியும் துரோகிகளின் உண்மை முகம் நெருக்கடிகள் முற்றும்பொழுதுதான் அம்பலத்துக்கு வரும். மளிகை மற்றும் காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஃபிரெஷ், பிக் பஜார் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், கடைச் சிப்பந்திகளும்

மேலும் படிக்க …திருமாவளவன் - ரவிக்குமார் ரிலையன்ஸின் புதிய பாதந்தாங்கிகள்

may_2007.jpg

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் சோராபுதீன் ஷேக் என்பவர், போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவர் லஷ்ஹர்இதொய்பா அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதி என்றும், இவர் குஜராத் முதல்வர் மோடியையும், விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர்களையும் கொல்ல வந்த பயங்கரவாதி என்றும் போலீசார் அறிவித்தனர்.

மேலும் படிக்க …நரேந்திர மோடி: 'தேசிய" நாயகனா? அரசு பயங்கரவாத கொலைகாரனா?

may_2007.jpg

விளை நிலங்களைப் பறித்து, பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கத் துடித்த மே.வங்க போலி கம்யூனிச அரசுக்கு எதிராக, நந்திகிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் இடியோசை ஓயும் முன்பே, அதன் எதிரொலி போல புதுச்சேரி மாநிலத்தில் துறைமுக விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து நிற்கும் தேங்காய்திட்டு கிராம மக்களின் போராட்டம் தொடர்கிறது.

மேலும் படிக்க …தேங்காய் திட்டு: அரசின் நிலப்பறி புதுவை மக்களின் போர்க்கோலம்

may_2007.jpg

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு இங்குள்ள அமெரிக்க அடிமைகளும் அமெரிக்க மோகிகளும் அப்படியே துடிதுடித்துப் போய்விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு

மேலும் படிக்க …அன்னிய மோகத்திற்கு தரப்படும் விலை!

may_2007.jpg

"நட்டத்தில் விழுந்து கிடந்த இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார் லாலு'', ""தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பட்ஜெட் போட்டுள்ளார் ஏழைப்பங்காளர் லாலு'' என்றெல்லாம் பார்ப்பன இந்தியா டுடே முதல்

மேலும் படிக்க …லாலுவின் நிர்வாகத் "திறமை': கொல்லைப்புற வழியில் தனியார்மயம் கட்டணக் கொள்ளை

june_2007.jpg

"சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் நுழைவதால், சிறு வியாபாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது'' என ஆளும் கும்பலும், அவர்களது எடுபிடிகளும் நடத்தி வரும் பிரச்சாரத்திற்கு, சிறுவணிகர்கள் ஏமாந்து போய்விடவில்லை.

மேலும் படிக்க …ரிலையன்ஸ் ஃபிரெஷ் எதிர்ப்பு : வாழ்வுரிமைக்கான போராட்டம்

june_2007.jpg

மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப்

மேலும் படிக்க …மீண்டும் படரும் காவி இருள்

june_2007.jpg

தாழ்த்தப்பட்டபழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்படும் 15 வகையான சாதியசமூகக் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் நுட்பமாகவும் அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்து தொகுத்து, வன்கொடுமைகள் என்று வரையறுத்து அவற்றுக்குரிய தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்.

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

june_2007.jpg

தொழில் நகரமான ஓசூரின் அருகிலுள்ள கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரே ஆச்சரியம். ஓசூர் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கசக்கிப் பிழிந்து, தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதில் முன்னணியில் நிற்கும் டி.வி.எஸ். நிறுவனம், இக்கிராமத்தின் பெண்களுக்கு

மேலும் படிக்க …பெருந்தொழில் நிறுவனங்களின் 'சமூகப் பொறுப்புணர்வு" ஓநாய்களின் திடீர் கரிசனை

june_2007.jpg  குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர

மேலும் படிக்க …குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!

june_2007.jpg

சிதம்பரம் நடராசர் கோயிலில் அருட்பா பாடச் சென்ற வள்ளலாரை இழிவுபடுத்தி, பார்ப்பனர் அல்லாத யாரும் "அருட்பா' பாட இயலாது என்று விரட்டியடித்தது தீட்சிதர் கும்பல். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தமது கையாளாகக் கொண்டு "மருட்பா' எழுதி வெளியிட்டு, வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தது. வடலூரில்

மேலும் படிக்க …வென்றது வள்ளலார் நெறி! வீழ்ந்தது பார்ப்பனச் சதி!

june_2007.jpg

தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகவும் வடலூரில் வள்ளலார் வழிபாட்டு முறையைப் பார்ப்பனமயமாக்கிய சதிக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருக்கின்றன. தில்லைக் கோயில் கருவறையின் எதிரில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தேவாரம்திருவாசகம் பாடலாம் என்று

மேலும் படிக்க …தில்லை போராட்டம் : வெற்றியை நோக்கி ஒரு படி!

june_2007.jpg

ஓய்வு பெற்ற இராணுவ சுபேதார் திரு. நல்லகாமன் அவர்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும் மேலும் 3 போலீசு அதிகாரிகளுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து 3.4.07 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது குறித்த செய்தி சென்ற பு.ஜ. இதழில் வெளியாகியிருந்தது.

மேலும் படிக்க …பிரேம்குமார் பதவி நீக்கம் : இது தண்டனை அல்ல!

june_2007.jpg

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், இந்துவெறி பார்ப்பன கும்பல் ""ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!'' என ஓலமிட ஆரம்பித்துள்ளது.

மேலும் படிக்க …சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்! அரசியல் வாவணிக்கு இராமன் பாலம்!

june_2007.jpg

உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 402 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவியான மாயாவதி, உ.பி.யில் 4வது முறையாக முதல்வராகியுள்ளார்.

மேலும் படிக்க …உ.பி.: தலித் ஆட்சியா? பார்ப்பன மீட்சியா?

june_2007.jpg

கருணாநிதியின் சாணக்கிய அரசியல், பரமபத விளையாட்டில் நடப்பதைப் போல வெற்றியின் இறுதிப் படிக்கட்டில் தடுக்கி விழுந்து, சரிந்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளைச் சரிக்கட்டி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்தி, இரத்தத்தின் இரத்தமான தனது மகன் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக முடிசூட்டுவதற்கான எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டதாகப் பெருமூச்சுவிட்டு,

மேலும் படிக்க …கிரிமினல் மயமானது தி.மு.க. வாரிசு அரசியல்

june_2007.jpg

விவசாயத்தில் ஏற்பட்ட கடனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தடுக்க முன் வராத அரசு, வங்கிக் கடனைக் கட்டத் தவறியதற்காக விவசாயிகளைக் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது.

 

கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தில் மட்டும், கடந்த நான்கே மாதங்களில் 25 கரும்பு விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை

மேலும் படிக்க …வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்

july_2007.jpg

தில்லி நகரத்தின் அழகையும், சுற்றுப்புறச் சூழலையும் மெருகூட்டும் பொருட்டு, இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்ற திட்டத்தின்படி, அந்நகரின் வர்த்தக மையமான சாந்தினி சௌக் பகுதியில் ரிக்ஷா மற்றும் தள்ளுவண்டிகள் இயக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நகரின் தெருவோரச் சிற்றுண்டி

மேலும் படிக்க …நகரத்தின் 'அழகு" ஏழைகளுக்குப் பேரழிவு!

july_2007.jpg

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் டார்ஜலிங் தேயிலை, அலாதியான மணத்தாலும் சுவையாலும் உலகப்புகழ் பெற்றது. மே.வங்கத்தின் வடக்கே டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பிகார் மாவட்டங்களில் உள்ள இச்சிறப்பு மிக்க தேயிலைத் தோட்டங்களிலிருந்து வீசும் காற்றில் இப்போது தேயிலை மணம் வீசுவதில்லை. பிணவாடை வீசிக்கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …மே.வங்கத்தில் பட்டினிச் சாவுகள் ஈயத்தைப் பார்த்து இளிக்கும் 'மார்க்சிஸ்டு" ஆட்சி!

july_2007.jpg

காட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க …மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள்: ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!

july_2007.jpg

தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடி இனத்தைச் சேராத ஒருவராலோ அல்லது ஒரு சிலராலோ இம்மக்கள் வசிக்கும் ஓர் இடத்திலோ அவர்கள் வந்துபோகும் இடங்களிலோ, வன்கொடுமைகள் இழைக்கப்படும் என்ற தகவலோ, அச்சுறுத்தலோ ஒரு அரசு நிர்வாக அமலாளர் மற்றும் போலீசு துணைக் கண்காணிப்பாளருக்குக் கிடைக்கும்போது,

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

july_2007.jpg

"நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள்... இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. நிலவுவதை யார் ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தீவிரவாதிகளாக அழைக்கப்படுவார்கள். இசுலாமிய தீவிரவாதிகள் இசுலாமியராக இருந்தாக வேண்டும். எனவே, நம் அனைவரையும் குறிக்க அது போதாது. அவர்களுக்கு பெரிய வலை தேவைப்படுகிறது. எனவே, தெளிவின்றி வரையறுப்பதும், வரையறுக்காமலே விடுவதும் ஒரு சரியான உத்திதான்.

மேலும் படிக்க …சத்தீஸ்கர்: 'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்!" அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை

july_2007.jpg

திருவண்ணாமலை மாவட்டம் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பாக, தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்து நின்ற கரும்புகளைத் தன் கையாலேயே தீ வைத்துக் கொளுத்தி விட்டார். ""இன்னும் சில ஏக்கர்ல கரும்பு மிச்சமிருக்கு; அதையும் கொளுத்திட்டு, எல்லாம் வீணாப் போயிடுச்சுன்னு மனதைத் தேத்திக்க வேண்டியதுதான்'' என விரக்தியோடு சொல்கிறார், அவர்.

மேலும் படிக்க …கரும்பு கசக்கிறது : அரசாலும், தனியார் ஆலைகளாலும் பந்தாடப்படும் கரும்பு விவசாயிகளின் அவலக் கதை

july_2007.jpg

உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு எனக் கூறப்படும் இந்தியாவை, உணவுப் பொருளுக்குக் கையேந்தும் நாடாக மாற்றும் சதி மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது. உணவுப் பொருள் இறக்குமதி; அரசாங்கம் நேரடியாக உணவுப் பொருளைக் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, அந்தப் பொறுப்பைத் தனியாரிடம்

மேலும் படிக்க …கோதுமை இறக்குமதி மறுகாலனியாதிக்கப் பொறி

july_2007.jpg

பழங்குடியினப் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோரி, ராசஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் நடத்திய போராட்டம், நயவஞ்சகமாக ஒடுக்கப்பட்டுவிட்டதோடு, ஓட்டுக்கட்சிகளின் சமூகநீதிக் கொள்கையின் ஓட்டாண்டிதனத்தையும் அப்போராட்டம் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

மேலும் படிக்க …குஜ்ஜார் போராட்டமும் 'சமூக நீதி"யின் வரம்பும்

july_2007.jpg

தில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரில் உள்ள சிற்றம்பல மேடையில், பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி வழிபடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, ஜோதிமணி ஆகியோர் தடை விதித்திருக்கின்றனர். இந்தத் தீர்ப்பு, கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க …தமிழுக்கு எதிராகப் பார்ப்பன – "சூத்திர"க் கூட்டணி

july_2007.jpg

ஆங்கிலேயக் காலனிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் நிறுவிய எத்தனையோ அடிமைச் சின்னங்களில் ஒன்றுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கிலாந்து நாட்டின் அரசி / அரசனைப் போன்ற ஒரு அலங்காரப் பதவிதான் இந்தியாவின் அரசுத் தலைவர். மத்திய, மாநில அரசு நிர்வாகங்களெல்லாம் முறையே அரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநரின் பெயரால்தான் நடைபெறுகின்றன;

மேலும் படிக்க …'குடியரசு"த் தலைவர்... பெண்ணுரிமையின் வெற்றியா?

july_2007.jpg

குஜராத் மாநிலத்தைப் பற்றிக் கேட்டவுடனே, அங்கு நடைபெறும் இந்து மதவெறிப் பாசிச ஆட்சியும், அங்கு சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பீதியுடன் அன்றாடம் வாழ்வதும் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ""துக்ளக்''இல் இருந்து ""இந்தியா டுடே'' போன்ற பத்திரிக்கைகள் வரை, ""குஜராத் முதல்வர் மோடி அம்மாநிலத்தை அதிநவீனமாக்கி, சந்திரபாபு நாயுடுவை விடவும் முனைப்போடு அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினிமயமாக்கி, அந்நிய முதலீட்டைப் பெறுவதில் முன்னோடி மாநிலமாக்கி இருக்கிறார்'

மேலும் படிக்க …குஜராத் விவசாயிகள் தற்கொலை: இதுதான் இந்துராஷ்டிரம்!

04_2008.jpgதில்லைப் போராட்ட வெற்றியானது ஒரு துவக்கப்புள்ளிதான், சமஸ்கருத வழபாட்டை அகற்றல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சராதல் - என நீண்டதொரு போராட்டத்தை தமிழினம் நடத்த வேண்டியுள்ளது.


மார்ச் 2ஆம் நாள். தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பனர்கள் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது. தில்லைச் சமரில் தமிழ் வென்றது. இது ஒரு வரலாற்றுச் சாதனை!

மேலும் படிக்க …தில்லைச் சமரில் வென்றது தமிழ்

04_2008.jpg

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் 77ஆவது நினைவு நாளில், அவர்களின் சோசலிசப் புரட்சிக் கனவை, உழைக்கும் மக்களின் விடுதலை எனும் இலட்சியத்தைச் சாதிக்க உறுதியேற்று, இம்மாவீரர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23ஆம் தேதியன்று சென்னைசேத்துப்பட்டு சமூகநலக் கூடத்தில் பு.மா.இ.மு. அரங்கக் கூட்டத்தை நடத்தியது.

மேலும் படிக்க …"ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத் சிங் சுகதேவ் ராஜகுரு நினைவை நெஞ்சிலேந்துவோம்!'' புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியின் உறுதியேற்பு

04_2008.jpgபட்டினிக் கொடுமையால் தன்னையும் கடவுளையும் நொந்து கொண்டு, இறைவன் தமக்குக் ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?'' என்று பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பாடல் ஒன்றில் தமிழ்ப் புலவர் ஒருவர் கேட்டிருந்தார். அப்புலவரின் வேதனைமிக்க இந்த வரிகள் இன்று ஹெய்தி நாட்டில் யதார்த்த உண்மையாகியுள்ளது.

மேலும் படிக்க …பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்

04_2008.jpg இந்தியாவில் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

 

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை

மேலும் படிக்க …பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து

04_2008.jpgமகாரஷஹ்டிர அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்குவதை மறுக்கின்றது


மும்பய்க் கலவரம் நடந்து முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கலவரத்தை விசாரித்த சிறீகிருஷ்ணா கமிசன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டுப் பலரைக் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியிருக்கிறது.

மேலும் படிக்க …மும்பய்க் கலவர வழக்குகள் : காங்கிரசு கட்டிய கல்லறை

04_2008.jpgஇந்திய நாடு மரபணுமாற்ற தொழில்நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச்சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது.


கத்தரிக்காய்; தமிழக மக்களின் உணவில் முக்கிய இடம்பெறும் காய். குண்டு கத்தரி. நீள கத்தரி, நாம கத்தரி, வெள்ளை கத்தரி என்று அதில் பல ரகமுண்டு. இப்போது புதிய ரகமாக பி.டி.கத்தரிக்காய் வரப்போகிறது. அதென்ன பி.டி.கத்தரிக்காய்?

மேலும் படிக்க …மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் : நஞ்சாக்கப்படும் உணவு

04_2008.jpgமோடி ராஜ்ஜியத்தில் 'இந்த"ப் பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை குஜராத்தில் நடந்துவரும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிரூபிக்கின்றன.


இந்துவெறி பாசிச பயங்கரவாதி மோடியின் ராமராஜ்ஜிய பேயாட்சிக்கு பாசிச ""துக்ளக்'' சோ விழா எடுத்துப் பாராட்டுகிறார் என்றால், அக்ரஹாரப் பத்திரிகையான ""கல்கி''யோ, தொடர்ச்சியாக மோடி சிறப்பிதழ் வெளியிட்டுத் துதிபாடுகிறது.

மேலும் படிக்க …குஜராத் : இந்து பயங்கரவாத்தின் இன்னொரு முகம்

04_2008.jpgஏகாதிபத்தியத்தின் கீழ் எதுவுமே புனிதமானதல்ல : எல்லாமே பணம் பண்ணும் சரக்குதான் என்பதையே ஏலம் விடப்பட்ட கிபிக்கெட் போட்டி எடுத்துக்காட்டுகிறது.

 

ஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை ""சில்க்'' சுமிதா கடித்த எச்சில் ஆப்பிளை ரசிகர் ஒருவர் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் விளையாட்டிலும் அண்மையில் இதுபோன்றதொரு ஏலம் நடந்திருக்கிறது. ஏலம் எடுக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தின்று போட்ட எச்சில் இலைகளையல்ல.

மேலும் படிக்க …கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…

04_2008.jpgவிவசாயிகள் விடுதலை முன்னணியின் பட்டுக்கோட்டை வட்டாரச் செயற்குழு உறுப்பினரான அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தோழர் கோவண்ணா என்கிற கோவிந்தராஜ் கடந்த 15.3.08 அன்று நடந்த எதிர்பாராத விபத்தில் மரணமடைந்து விட்டார்.

மேலும் படிக்க …தோழர் கோவண்ணா அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!

04_2008.jpg

இந்தியாபாக். இடையேயான உறவு சாண் ஏறினால் முழம் வழுக்கும் வழுக்குப்பாறை போன்றது. உப்புப் பெறாத விசயத்தைக்கூட ஊதிப் பெருக்கி, முட்டல்மோதல் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்துவதில் இரு நாட்டு ஆளும் கும்பலும் கை தேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ""செண்டிமென்டை''த் தூண்டிவிடக் கூடிய பிரச்சினை கிடைத்தால், சும்மா விட்டு விடுவார்களா?

மேலும் படிக்க …சரப்ஜித் சிங்குக்கு ஒரு நீதி, அப்சல் குருவுக்கு வேறொரு நீதியா?

04_2008.jpgபார்ப்பன இந்து மதத்தைப் போலவே, இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

மேலும் படிக்க …வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம் : தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை

04_2008.jpg

உலகமயத்தால் நாசமாக்கப்பட்ட விவசாயம், வங்கி கடன் தள்ளுபடி என்ற கசர்ச்சியால் சீர்பட்டு விடாது.


அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதால், 200809ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கையும், தமிழக அரசின் வரவுசெலவு அறிக்கையும் விவசாயிகளைக் கவரும் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க …விவசாயக் கடன் தள்ளுபடி: புண்ணுக்குப் புனுகு

04_2008.jpg

திருச்சி, மதுரை, கடலூர், கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மனித உரிமை பாதுகாப்பு மையம் (ஏகீகஇ) தனது சிவகங்கை மாவட்டக் கிளை தொடக்கவிழாவை கடந்த மார்ச் 2ஆம் தேதியன்று செந்திலாண்டவர் திருமண மண்டபத்தில் நடத்தியது.

மேலும் படிக்க …மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சிவகங்கை கிளை தொடக்க விழா: நம்பிக்கையின் ஒளிக்கீற்று!

04_2008.jpgநாட்டின் உச்சநீதி மன்றமும், உயர்நீதி மன்றமும் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்புக்கும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் நிறுவனங்களாக இல்லை. ஏழைஎளிய மக்கள், சிறுபான்மை மக்களின் விவகாரங்கள் என்றால், காட்டெருமைகளாக மாறி முட்டி மோதிக் குத்திக் கிழிக்கின்றன. அதிகாரபலமிக்க மேட்டுக்குடியினர் விவகாரங்கள் என்றால்,

மேலும் படிக்க …உச்சநீதி மன்றத்தின் பச்சையான பாசிசம்

04_2008.jpg

திரிபுரா மாநிலத்தில் ஆறாவது முறையாகப் போலி மார்க்சிஸ்டுக் கட்சி தலைமையிலான போலி இடதுசாரிக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதை வரலாற்று முக்கியத்துவமென்று அக்கட்சியின் இந்தியத் தலைமையகமான புதுதில்லி ஏ.கே.ஜி.பவனில் கொண்டாடிக் கொண்டிருந்தது, மத்தியக் கமிட்டி. அப்போது அங்கு அதைவிட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஒன்று நடந்தது.

மேலும் படிக்க …சி.பி.எம். மீது ஆர்.எஸ்.எஸ். தாக்குதல்: பழங்கதை பதிலடியாகாது!

aug_2007.jpg

தனது மகன் சுரேஷின் பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்ட முடியாமல் போனதால், பெரம்பலூர் மாவட்டம் வளவெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனது மகனின் படிப்புச் செலவிற்காக ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வரையில் வெளியே கடன் வாங்கிவிட்ட பன்னீர் செல்வம், இந்த ஆண்டிற்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு அரசு வங்கிகள்

மேலும் படிக்க …ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்

aug_2007.jpgகொள்வதற்குப் பல சமூகக் காரணங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், காசுமீரிலோ இவற்றையெல்லாம்விட, இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளால் விசாரணை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்கள் அவமானப்படுத்தப்படுவதுதான் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ""எல்லை கடந்த மருத்துவர்கள் சங்கம்'' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு எடுத்த ஓர் ஆய்வில், ""இந்த அவமானப்படுத்துதல் தங்களின் மன அமைதியைக் குலைத்து விடுவதாக'' காசுமீர் மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க …காசுமீர் :'தேச பக்தி"யால் மறைக்கப்படும் சமூக அவலங்கள்

aug_2007.jpg

உடலெங்கும் காயங்கள்; சீழ்பிடித்து புரையோடிவிட்ட தீப்புண்கள், அழுக்கடைந்து கிழிந்து தொங்கும் ஆடைகள், துயரத்தை நெஞ்சிலே தாங்கி உருக்குலைந்து நிற்கும் தொழிலாளர்கள்... சீனாவின் செங்கற்சூளைகள்நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ள இக்கொத்தடிமைகளைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

மேலும் படிக்க …'வளர்ச்சி"யின் சீனா அவலத்தில் தொழிலாளர்கள்

aug_2007.jpg

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள சிகரல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த 90 தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர், வசிக்க வீடின்றி ஓடைகளின் கரையோரங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த நிலையில், 1980ஆம் ஆண்டு இம்மக்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டப்படி, சின்னப்பொண்ணு என்பவரது நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி, உரிய தொகையையும் அளித்துள்ளது.

மேலும் படிக்க …""தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுரிமை பறிப்பு! போராடிப் பெற்ற உயர்நீதி மன்ற உத்தரவைச் செயல்படுத்து!''

aug_2007.jpg

மரங்களை எளிதில் வெட்டி வீழ்த்த உதவும் கருவியான கோடரியின் காம்பும் மரத்தால்தான் ஆனது என்பது எத்தனை பெரிய சோகம்! தனது சொந்த இனத்தையே எதிரியிடம் காட்டிக் கொடுக்கும் நபர்களையும் கோடரிக்காம்பு என்றுதான் அழைக்கிறார்கள். அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், நமக்குக் கோடரிக் காம்பைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.

மேலும் படிக்க …பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனா? சாதி வெறியர்களின் குலதெய்வத்துக்கு வக்காலத்து வாங்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சீரழிவு

aug_2007.jpg

தேசாபிமானி. கேரள சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு. இடதுவலது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு, அது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டில் தேசாபிமானி நாளேட்டுக்காக கம்யூனிஸ்டுகள் நிதி திரட்டியபோது, கோழிக்கோடு மாவட்டம் சொம்பாலா கிராமத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரும் எழுதப் படிக்கத் தெரியாத

மேலும் படிக்க …சிங்கூர்: சி.பி.எம் - இன் கிரிமினல் அரசியல்

aug_2007.jpg

தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் இம்மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்படும் வன்கொடுமைச் சம்பவங்களில் மிகமிக முக்கியமானவற்றையும் வகைமாதிரிகளையும் பின்வருமாறு தொகுக்க முடியும்.

மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்… அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்

aug_2007.jpg

பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போர், மேலும் ஒரு பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) ஓர் அங்கமான ஃபதா இயக்கத்திற்கும், முசுலீம் அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த பதவி அதிகாரச் சண்டை, உள்நாட்டுப் போராக மாறக் கூடிய சூழல் உருவாகி இருப்பதுதான் இப்பின்னடைவுக்கான காரணம்.

மேலும் படிக்க …பாலஸ்தீனப் பிளவும் அமெரிக்கச் சதியும்

aug_2007.jpg

ஈராண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து, தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை எதிர்த்து நெல்லையில் நடத்திய மறியல் போராட்டத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தைப் பகுதியில் சுவரெழுத்து விளம்பரம் செய்த வி.வி.மு.வைச் சேர்ந்த 4 தோழர்கள் தருமபுரிஅதியமான் கோட்டை போலீசாரால் 24.6.05 அன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க …நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியுமா? புரட்சிகர அமைப்புகளைப் பொய் வழக்கால் ஒடுக்க முடியுமா?

aug_2007.jpg

கல்லூரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் இரத்து, தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு இரத்து, ""ஷிப்டு'' முறை கல்லூரி, இலவச பஸ் பாஸ் என அடுக்கடுக்கான அறிவிப்புகளை தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளதோடு, உயர்கல்வி அமைச்சர் சுயநிதிக் கல்லூரிகளுக்கு எதிராக வீர வசனமும் பேசி வருகிறார்.

மேலும் படிக்க …"வெற்று கவர்ச்சிகர அறிவிப்புகளை நிராகரிப்போம்! கல்வி தனியார்மயமாவதைத் தடுக்கப் போராடுவோம்!''

aug_2007.jpg

நாடு மீண்டும் காலனியாக்கப்படும் நிலையில், அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க அணு ஆயுதப் போர்க்கப்பலான நிமிட்ஸ், கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னைத் துறைமுகத்துக்கு வந்ததை எதிர்த்தும், இக்கப்பலை இந்திய கடற்பகுதியில் உலாவ அனுமதிக்கும் துரோக ஆட்சியாளர்களை எதிர்த்தும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

மேலும் படிக்க …அமெரிக்க அணு ஆயுத போர்க்கப்பல் ""நிமிட்ஸ்''ஐ விரட்டியடிப்போம்!

aug_2007.jpg

ஓட்டுக்கட்சி அரசியல் தலைவர்களும் மாயத் தோற்றங்களைக் காட்டி மக்களை ஏய்க்கிறார்கள். சினிமாக்காரர்களும் இதே வேலையைத்தான் செய்கிறார்கள். இரண்டு வகையினரும் கள்ளப் பணத்தை கருப்புப் பணத்தைக் குவிப்பதற்குத்தான் இதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க …அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு!

aug_2007.jpg

ஆட்டோ திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருச்சி உறையூர் ஆட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர், போலீசாரால் சித்திரவதை செய்து அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரத்தைக் கண்டு திருச்சி நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

மேலும் படிக்க …திருச்சி போலீசின் கொட்டடிக் கொலை! புகார் கொடுத்தவர் மீதே பொய் வழக்கு!

aug_2007.jpg

கடந்த ஜூன் 25ம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்ச்செல்வன் என்ற இந்த 3 பேரிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகிறது.

மேலும் படிக்க …நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?

aug_2007.jpg

"எந்தவிதத் தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.'' (தினமணி, 26.6.07)

மேலும் படிக்க …சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நீர்க்குமிழி பெருத்தால்..

sep_2007.jpg

வேலூர் நகரின் மத்திய பேருந்து நிலையம் ""எக்ஸ்னோரா'' என்ற தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் ஒப்படைத்தால் நிர்வாகம், பராமரிப்பு, சேவை என அனைத்துமே மேம்பட்டு சிறப்படையும் என்று கருதும் மேதாவிகள் இப்பேருந்து நிலையத்துக்கு வந்தால், மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள்.

மேலும் படிக்க …ஒரு கிலோ அரிசியும் இரண்டு ரூபாய்; சிறுநீர் கழிக்கவும் இரண்டு ரூபாய்!

sep_2007.jpg

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் மறுகாலனியக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளர்கள், இதற்கு சீனாவை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள். சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சீனாவின் ஷென்சென் இன்று ஆலைகள், அலுவலகங்கள், அடுக்குமாடிக் கட்டிடங்கள் வர்த்தக நிறுவனங்கள் என பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றதற்கு அங்கு நிறுவப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம்தான் காரணம்

மேலும் படிக்க …சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: சீழ் பிடித்து நாறும் இரணங்கள்

sep_2007.jpg

ஏழே கால் ஆண்டுகளுக்கு சென்னையின் குப்பையை அள்ளுவதற்காக மு.க. ஸ்டாலினால் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமான ஓனிக்ஸின் ஒப்பந்த காலம் ஆகஸ்ட் 2007இல் முடிவடைகின்றது. அதன் பின்னர் குப்பை அள்ள, நீல் மெட்டல் புராடக்ட்ஸ் எனும் கொலம்பிய குப்பை அள்ளும் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் தனக்கே ஒப்பந்தம் கிடைக்கும் என்ற ஓனிக்ஸின் கனவு தகர்ந்து போனதால்,

மேலும் படிக்க …குப்பை அள்ளுவதிலும் மோசடி தனியார்மயத்தின் மகிமை

sep_2007.jpg

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிமக்களுக்கு எதிரான சமீபகால வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, அவை தன்மையிலும் செய்யும் முறையிலும் பெருமளவு மாற்றமடைந்து வருகின்றன என்று தெரிகிறது. பொருளாதாரதொழில் முன்னேற்றத்துக்கு ஏற்ப சாதிய உணர்வும் வெறியும் மங்கி வருவதற்குப் பதிலாக, சமூகத்தில் சாதிய முரண்பாடுகள் முன்பைவிட மிக வேகமாக வளர்ந்து வருவதையே காண முடிகிறது. இப்போது சாதிய அட்டூழியங்கள் சாதியுணர்வின் ஒன்றுதிரண்ட, கொடூர வெளிப்பாடாகியிருக்கின்றன.
மேலும் படிக்க …சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

sep_2007.jpg

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள அகரம் என்கிற குலதீபமங்கலம் கிராமத்திலுள்ளது தர்மராஜா திரௌபதையம்மன் கோவில். அரசுக்குச் சொந்தமான இப்பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்களைத் தடுத்து தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர், வன்னியர் உடையார் சாதிவெறியர்கள்.
மேலும் படிக்க …""நாய் நுழையும் கோவிலுக்குள் நாங்கள் நுழையக்கூடாதா?'' — தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வி.வி.மு. ஆர்ப்பாட்டம்

sep_2007.jpg

உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு மாயாவதி ஆட்சியைப் பிடித்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தலித் ஒருவர் ஆளுவதனாலேயே தலித் மக்கள் வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போயுள்ளதோடு, தலித் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற பார்ப்பன சாதி வெறியர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே துணைபோகும் கொடுமையும் அங்கு நடந்தேறியுள்ளது.

மேலும் படிக்க …உ.பி.: தலித்திய ஆட்சி பார்ப்பனிய நீதி

sep_2007.jpg

ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலம், பைரமங்கலம், குண்டுமாரனப்பள்ளி, ஒன்னல்வாடி, அஞ்செட்டிப் பள்ளி, சனமாவு, அக்கொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களின் விளைநிலங்களைப் பறித்து 3640 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் ஜி.எம்.ஆர். குழுமம் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இம்மண்டலத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
மேலும் படிக்க …சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு எதிராக ஓசூர் விவசாயிகளின் போராட்டம்!

sep_2007.jpg

"கல்லூரி நிர்வாகம் "பறக்கும் படை' என்ற பெயரில் ஒரு குண்டர் படையை வைத்திருக்கிறது. போராடும் மாணவர்களை "டார்க் ரூம்' எனப்படும் கொட்டடியில் அடைத்து வைத்து ஆபாச வசவுகளுடன் காட்டுமிராண்டித்தனமாக அக்குண்டர்கள் அடிப்பார்கள்'' என்று கடந்த 2006ஆம் ஆண்டில் ஜேப்பியாரின் சத்யபாமா நிகர்நிலைப்பல்கலைகழக மாணவர்கள் முகத்தைக் கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்ததையும்,

மேலும் படிக்க …'காற்றுப் புகமுடியாத இடத்திலும் கம்யூனிஸ்டுகள் நுழைவார்கள்" தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் உதயம்

sep_2007.jpg

தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 கோடி ரூபாயில் டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் டாடா நிறுவனம் 2007, ஜூன் 28ஆம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே 2002ஆம் ஆண்டிலேயே அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேலும் படிக்க …டாடாவின் டைட்டானியம் ஆலை: மண்ணைப் பறித்து முன்னேற்றமா?

sep_2007.jpg

"அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு'' என்ற தலைப்பில் ""புதிய ஜனநாயகம்'' ஆகஸ்டு இதழில் அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ""பாரபட்சமின்றி'' அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வரும் ""புதிய ஜனநாயகம்'', பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இராமதாசின் சந்தர்ப்பவாத, மோசடி அரசியலை உரிய நேரத்தில் உரிய வகையில் அம்பலப்படுத்தியிருப்பதாகப் பலரும் வரவேற்றுள்ளனர்.
மேலும் படிக்க …ஒரு பச்சோந்தியும் சில 'கூஜா"க்களும் உருட்டல் - மிரட்டலால் உண்மையை மறைக்க முடியுமா?

sep_2007.jpg

"ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''

 

— மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது.

மேலும் படிக்க …கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

sep_2007.jpg

சில்லறை வணிகத்தில் நுழைந்து நாடெங்கும் நாலு கோடிக்கும் மேலான உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. முதலான ஆளும் வர்க்கக் கட்சிகள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ரிலையன்சுக்கு எதிராக வீரவசனம் பேசிக் கொண்டே, ரிலையன்சு கடைகளுக்குக் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா நடத்துபவர்களைத் துரோகிகள் என்பதா, அல்லது மக்களின் எதிரிகள் என்பதா?

இவர்கள் வேறு யாருமல்ல, ரிலையன்சுக்கு எதிராக வீரதீரமாக வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சியினர்தான் கடந்த ஜூலை மாதத்தில், கேரளத்தில் இந்த அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.

 

கொச்சி நகரத் துணைமேயரும், சி.பி.எம். கட்சியின் எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி உறுப்பினருமான சி.கே. மணிசங்கர், லெமக்காரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் பிரஷ் காய்கறிக் கடையைத் தொடங்கி வைத்து, தமது கட்சியின் துரோகத்தனத்தை அம்மாநிலமெங்கும் பறைசாற்றியுள்ளார். துணை மேயரே இந்த வேகத்தில் செல்லும்போது சி.பி.எம். கட்சியின் கொச்சி எம்.எல்.ஏ. சும்மாயிருப்பாரா? மாநிலக் கமிட்டி உறுப்பினரும் கொச்சியின் எம்.எல்.ஏ.வுமான தினேஷ் மணி, தேவாரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டைத் திறந்து வைத்து அசத்தியுள்ளார்.

 

சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக சி.பி.எம். கட்சி வீரவசனம் பேசி வரும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி அரசு, ரிலையன்சை அனுமதிப்பது ஏன்? அதிலும் சி.பி.எம். பிரமுகர்களே கடையைத் திறந்து வைக்கிறார்கள் என்றால், சி.பி.எம். கட்சி ரிலையன்சை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று கேட்டு கேரள மாநிலமெங்கும் மக்கள் காறி உமிழத் தொடங்கியதும் சி.பி.எம். கட்சித் தலைமை பீதியடைந்தது. தனது துரோகத்தனத்தை மறைக்க, இப்பிரமுகர்களிடம் ரிலையன்ஸ் கடை திறப்பு பற்றி விளக்கம் கோரும் நாடகமாடியது.

 

இதைத் தொடர்ந்து இப்பிரமுகர்கள் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டனர். தங்களது நெருங்கிய நண்பர்களின் வற்புறுத்தலால் ரிலையன்ஸ் கடைகளைத் திறந்து வைத்ததாக விளக்கம் அளித்தனர்.

 

இப்"பாட்டாளி' வர்க்கப் பிரமுகர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் முதலாளித்துவவாதிகள்தான் என்பதையும், நாளை இந்த "நண்பர்கள்' வற்புறுத்தினால் உழைக்கும் மக்களுக்கு எதிராக எதையும் செய்யத் துணியும் துரோகிகள்தான் இப்பிரமுகர்கள் என்பதையும், இவர்களது தன்னிலை விளக்கமே நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் இப்பிரமுகர்கள்மீது கட்சித் தலைமை பாரதூரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு எடுத்த நடவடிக்கையிலும் இரட்டை அளவுகோல்களைப் பின்பற்றியுள்ளது.

 

எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி மணிசங்கரின் விளக்கத்தைப் பரிசீலித்து, அவருக்கு "எச்சரிக்கை' விடுப்பதாக அறிவித்தது. இம்மாவட்டக் கமிட்டி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது.

 

மறுபுறம், தினேஷ்மணியின் விளக்கத்தை மாநிலக் கமிட்டி பரிசீலித்து, அவரை மன்னிப்பதாக அறிவித்துள்ளது. மாநிலக் கமிட்டியோ, மாநிலச் செயலாளர் பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது. அச்சுதானந்தன் கோஷ்டியிலிருந்து விலகி விஜயன் கோஷ்டிக்கு தினேஷ் மணி வந்துள்ளதால், அவருக்குச் சாதகமாக இந்த "நடவடிக்கையை' மாநிலக் கமிட்டி எடுத்துள்ளது.

 

ஒரே வகையிலான துரோகத்துக்கு, மாவட்டக் கமிட்டியில் எச்சரிக்கை; மாநிலக் கமிட்டியில் மன்னிப்பு என இரட்டை அளவுகோல்களுடன் சி.பி.எம். கட்சி எடுத்துள்ள இந்நடவடிக்கைகளைப் பார்த்து கேரள மக்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். கட்சியின் கொள்கைபடி தாங்கள் செயல்படுவதாகவும், ஆனால் விஜயன் கோஷ்டி சமரசப் பாதையில் செல்வதாகவும் புலம்பும் அச்சு கோஷ்டி, இந்த இரட்டை அளவுகோல் விவகாரத்தை வைத்து உட்கட்சித் தேர்தலில் ஆதாயமடைய முயற்சிக்கிறது. துரோகிகளுக்கிடையே கோஷ்டிச் சண்டை புழுத்து நாறும் அதேநேரத்தில், ரிலையன்ஸ் நிறுவனமோ புதிய பேரங்காடிகளைத் திறந்து, சில்லறை வியாபாரிகளின் வாழ்வைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது.


· அழகு

sep_2007.jpg

ஆகஸ்ட்15: போலி சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஆட்சியாளர்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அதிகார மாற்றம்தான் என்பதை விளக்கியும், அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நாட்டை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் துரோகத்தனத்தைத் திரைகிழித்தும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராட உழைக்கும் மக்களை அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.
மேலும் படிக்க …""போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்! நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்போம்!''

sep_2007.jpg

மிகவும் அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறை என்று காட்டிக் கொண்டு இந்தியப் போலி கம்யூனிஸ்டுகள் பின்பற்றி வரும் நடைமுறை, எப்போதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராகவும் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும்தான் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுப்பது என்ற பெயரில் காங்கிரசின் சிறுபான்மை ஆட்சியை உண்மையில் நிபந்தனையற்ற முறையில் போலி கம்யூனிஸ்டுகள் ஆதரித்து வருகின்றனர்.எனவேதான் ஆரம்பம் முதலே போலி கம்யூனிஸ்டுகளுக்கு உடன்பாடே இல்லாத பல்வேறு விசயங்களுக்கும்

மேலும் படிக்க …சி.பி.எம்.இன் இரட்டை நாக்கு

sep_2007.jpgநாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா? அதற்கு அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? அதற்கும் அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அன்னிய நேரடி முதலீடு.

மேலும் படிக்க …அன்னிய முதலீடுகள்: பகற்கொள்ளையின் மறுபெயர்

put_oct-2007.jpg

மே.வங்கத்தில் ஏகபோக ""பெண்டலூன்'' சூப்பர் மார்க்கெட்டுகளைத் தொடங்கி வைத்து "புரட்சி' செய்து வரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், இப்போது ""ரிலையன்ஸ் பிரஷ்'' காய்கறி அங்காடிகள் மற்றும் ரிலையன்ஸ் பேரங்காடிகளைத் தொடங்க கதவை அகலத் திறந்து விட்டுள்ளனர். கொல்கத்தா நகரின் 76 ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ""பார்க் சர்க்கஸ்'' காய்கறி அங்காடியை ரிலையன்சுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்குக் கையளித்துள்ளனர். இதுதவிர ""பஜார்கள்'' என்று குறிப்பிடப்படும் நகரின் பல்வேறு அங்காடிகளையும் ரிலையன்சுக்குத் தாரை வார்த்துள்ளனர்.
மேலும் படிக்க …ரிலையன்ஸ் எதிர்ப்புஒட்டுக் கட்சிகளின் முகத்திரை கிழிந்தது!

put_oct-2007.jpg

கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.100க்கு மேல் அதிகரித்து, தற்போது ஒரு மூட்டை ரூ. 300 வரை விற்கப்படுகிறது. இதனால் கடன் வாங்கி வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தினரும் ஒப்பந்தக்காரர்களும் கட்டுமான வேலைகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வேலை கிடைப்பதே பெரும்பாடாகிவிட்ட நிலையில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ ஒன்னேமுக்கால் கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வேலையை, தற்போதைய சிமெண்ட் விலையேற்றம் வேகமாகப் பறித்து வருகிறது.

மேலும் படிக்க …சிமெண்ட் விலை உயர்வு! தனியார்மய தாராளமயக் கொள்ளையின் விளைவு!

put_oct-2007.jpg

திருவாரூர் மாவட்டத்திலுள்ள தில்லைவிளாகம் ஏழாண்டுகளுக்கு முன்புவரை பொன் விளையும் பூமியாக இருந்தது. ஆனால் இன்றோ, அது இறால் பண்ணைகளுக்கும் உப்பளங்களுக்கும் இரையாகி, பாரம்பரிய விவசாயமும் மீன்பிடித் தொழிலும் நாசமாக்கப்பட்டு, அப்பகுதிவாழ் மக்கள் வாழ்விழந்து நிற்கிறார்கள். இப்பகுதியை ஒட்டியுள்ள அலையாத்திக் காடுகளின் அரணால், சுனாமியால்கூட இந்தத் தில்லைவிளாகத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லை காத்தானாகப் பாதுகாத்து வந்த அக்காடுகளும் இன்று இறால்பண்ணை உப்பளங்களால் அழிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க …தில்லை விளாகம் முன்னுதாரணமான கிராமம் முன்னுதாரணமான மக்கள்

put_oct-2007.jpg"நம் இலக்கு எப்பவுமே உயர்வாக இருக்கவேண்டுமென நினைப்பவன். எங்கள் சமத்துவக் கொள்கைகளை எடுத்துச் சென்று மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லமுடியும். சாதிக்கவும் முடியும். இப்பவும் சொல்கிறேன். 2011ம் வருடம் என்னை தமிழக முதல்வராகப் பார்ப்பீர்கள்.'' (19.9.07, குமுதம்) இப்படிப் பச்சையான சுயநலத்தைக் கக்கியிருப்பது ""அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி''யைத் தொடங்கியிருக்கும் சினிமாக் கழிசடை சரத்குமார்.

மேலும் படிக்க …'நாட்டாமை" யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை

put_oct-2007.jpg கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ""தனியார்மயத்தை அனுமதியோம்; அரசுத்துறையைப் பாதுகாப்போம்!'' என்று சவடால் அடித்து அடையாள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது கேரளத்தில் இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனத்தை முடக்கி, வெளிப்படையாகவே தனியார்மயத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கக் கிளம்பிவிட்டது.

மேலும் படிக்க …தேரிக்காட்டில் ஒரு முகம் கேரளத்தில் வேறு முகம் -சி.பி.எம். - இன் சதிராட்டம்

put_oct-2007.jpg

அமெரிக்காவில், அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் மூலம் வீடு வாங்கக் கடன் கொடுப்பதை, துணைக் கடன் என அழைக்கிறார்கள். வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் பத்தாத அமெரிக்கர்களைக் கூட விட்டுவிடாமல், இந்தக் கடன் வலைக்குள் பிடித்துப் போடுவதை, அமெரிக்க வங்கிகளும், ""ஹெட்ஜ் ஃபண்டுகள்'' என அழைக்கப்படும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

மேலும் படிக்க …விவசாயிகள் தற்கொலை : கந்துவட்டிக் கடன்தான் நிவாரணமா?

put_oct-2007.jpg

குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் ""எஸ்6'' பெட்டி எரிந்து போனதையும்; அத் தீ விபத்தில் 58 பேர் இறந்து போனதையும், ""உள்ளூர் முசுலீம் மதவெறியர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்''; ""ராம பக்தர்களைக் கொல்ல பாக். உதவியுடன் நடத்தப்பட்ட சதி'' என இந்து மதவெறிக் கும்பல் ஊதிப் பெருக்கியது. ஆனால், இச்சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், குஜராத் முசுலீம்கள்

மேலும் படிக்க …கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை

put_oct-2007.jpg

நான்காவது ஈழப்போர் நாளும் கடுமையாகி வருகிறது. மோதிக் கொள்ளும் இரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகளாகட்டும், சிங்களப் பாசிச பேரினவாத அரசாகட்டும் இரண்டு தரப்புமே உரிமை பாராட்டிக் கொள்வதைப் போல எத்தரப்புக்கும் முழு சாதகமாகப் போரின் போக்கு இல்லை என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க …ஈழப்போர் : சிங்களப் பேரினவாதத்தின் பல முனைத் தோல்வி

put_oct-2007.jpg மாதச் சம்பளமாக ஏறத்தாழ ரூ. 18,000 வாங்கும் ஒரு போலீசு இன்ஸ்பெக்டர், பல இடங்களில் பலகோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்களைக் கட்டியெழுப்ப முடியுமா? ஏன் முடியாது என்று தன்னையே உதாரணமாகக் காட்டும் சேலம் பள்ளப்பட்டி போலீசு இன்ஸ்பெக்டர் இலட்சுமணனின் மகாத்மியங்களைக் கேட்டால் தமிழக மக்கள் அதிசயித்துப் போவார்கள்.

மேலும் படிக்க …'கட்டப்பஞ்சாயத்து வசூல் ரௌடி போலீசு இன்ஸ்பெக்டர் இலட்சுணனை பதவி நீக்கம் வெய்!"

put_oct-2007.jpg

பாரதிய ஜனதாவின் அலுவலகத்தை தி.மு.க. தொண்டர்கள் நொறுக்குவதையும், கொடிமரத்தைப் பிடுங்கி எறிவதையும், தமிழகமெங்கும் வேதாந்தியின் உருவப்பொம்மைகளும் அத்வானியின் உருவப்பொம்மைகளும் எரிக்கப்படுவதையும் தொலைக்காட்சியில் பார்த்த வட இந்திய மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை மூடிக்கொண்டு கம்பக்கதவின் பின்னே பேயறைந்தாற்போல நின்று கொண்டிருந்த பா.ஜ.க தலைவர்களைப் பார்த்த அவர்களது வட இந்தியத் தலைவர்கள் எப்படிப் புழுங்கியிருப்பார்கள்? முகத்தில் பார்ப்பனக் கொழுப்பையும் திமிரையும் தவிர,

மேலும் படிக்க …இராமன் பாலம் : ந்துவெறியர்களின் பொய்கள் - சதிகள்!

put_oct-2007.jpg

"இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? ""அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொரு முறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

மேலும் படிக்க …வர்ணாசிரம கிரிமினல் இராமன்! ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!

put_oct-2007.jpg

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியாக அழுத்திக் கொண்டிருக்கிறது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். துப்பாக்கியின் குதிரை அழுத்தப்படுவதற்கான தருணம் குறித்த திகிலை காங்கிரசு"மார்க்சிஸ்டு' கூட்டுக் கமிட்டி பராமரித்துக் கொண்டிருக்கிறது. ""இடி.. இடி..'' என்ற கூச்சலுடன் 15 ஆண்டுகளுக்கு முன் அரசியல் அரங்கை ஆக்கிரமித்த பார்ப்பன மதவெறியின் திரிசூலம், இன்று ""இடிக்காதே.. இடிக்காதே'' என்ற கூச்சலுடன் மக்களின் இதயத்தைக் குறிபார்க்கிறது. இன்று திடீரெனக் கிளம்பியிருக்கும் இராமர் சேது விவகாரம், அரசியல் களத்தில் நிற்கும் காங்கிரசு, "மார்க்சிஸ்டு'கள், பா.ஜனதா ஆகிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கைகொடுக்கிறது.

மேலும் படிக்க …இருதலைக் கொள்ளி இடையில் மக்கள்!

PJ_11_2007.jpg

சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழுந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தரமேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப் பாத்திரங்களையும் பளிங்குத் தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும் கொத்தனார்கள்சித்தாள்கள், மண்டல வாரியாக குப்பை அகற்றுபவர்கள், அடைத்து நாறும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள் — என லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இயக்கம் இல்லை என்றால் சென்னை மாநகரமே இல்லை எனலாம்.

மேலும் படிக்க …சென்னை நகர விரிவாக்கத் திட்டம் : உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி

PJ_11_2007.jpg

"சமூக நீதி'யின் தாயகம் எனச் சித்தரிக்கப்படும் தமிழகத்தில், சமூக அநீதிகளும் தாழ்த்தப்பட்டோர் மீது மிகக் குரூரமான வன்கொடுமைத் தாக்குதல்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு திண்ணியத்தில் இராமசாமி, முருகேசன் எனும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் வாயில் ஆதிக்க சாதி வெறியர்கள் மலத்தைத் திணித்தனர். அதே ஆண்டில், திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியில் சங்கன் என்ற தாழ்த்தப்பட்டவரை நடுவீதியில் அடித்து உதைத்த ஆதிக்க

மேலும் படிக்க …தாழ்த்தப்பட்ட இளைஞர் வாயில் மலம் திணிப்பு! ·தேவர் சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு! இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

PJ_11_2007.jpg

"அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!'' இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ்.


நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்க மேலாதிக்கவாதிகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த விழைகிறார்.

மேலும் படிக்க …வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதரரக் கொள்கை: சோசலிசமா? முதலாளித்துவ சிர்திருத்தமா?

PJ_11_2007.jpg

பாகிஸ்தானில் அக்டோபர் 6 அன்று நடைபெற்ற அதிபர் ""தேர்தலில்'', முஷாரப் ""வெற்றி'' பெற்றுவிட்டாலும், அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதி மன்றம் தடை விதித்திருக்கிறது.


நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை 1999ஆம் ஆண்டு கவிழ்த்துவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத் தளபதி பெர்வேஸ் முஷாரப்,

மேலும் படிக்க …முஷாரப் எதிர்ப்பு: முனை மழுங்கிய போராட்டம்

PJ_11_2007.jpg

நேபாளத்தில் மன்னராட்சியை நீக்கிவிட்டு, ஐந்து மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திலிருந்து கடந்த மாதம் மத்தியில் நேபாள கம்யூனிஸ்டு (மாவோயிஸ்டு) கட்சி விலகி விட்டது. இதன்மூலம் நேபாளத்தில் ஜனநாயக முறையில் ஒரு குடியரசை நிறுவுவதற்காக அமைதிவழி முன்னெடுப்புகளை அக்கட்சி சீர்குலைத்துவிட்டதாக நேபாளத்திலும் இந்தியாவிலும் உள்ள பிற்போக்காளர்கள், போலி கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள்.

மேலும் படிக்க …நேபளாம்: சதிகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின அரசியல்; உத்தி

PJ_11_2007.jpg

நீதிபதிகளை மிரட்டுவதையும், விலைக்கு வாங்குவதையும் வடிக்கையாகக் கொண்ட ஜெயா, நீதிமன்ற அவமதிப்பு பற்றிப் பேசுவது வேஎக்கையானது.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி, தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும் அக்.1 அன்று தமிழகம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. இந்த உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்படாத, ""பந்த்'' ஆக நடந்து முடிந்தது.

மேலும் படிக்க …பார்ப்பன ஜெயாவின் 'நீதி வாதம்"!

PJ_11_2007.jpg

இறந்து போன மிருகத்தைக் கூட கைகால்களைக் கட்டி தெருவிலே இழுத்துச் செல்ல எந்தவொரு மனிதனுக்கும் மனம் ஒப்பாது. ஆனால் மிருகத்தை அல்ல, மனிதனை; நம்மைப் போல நினைவும் கனவும் கொண்ட உயிருள்ள மனிதனை இப்படி கைகால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது பீகார் போலீசு.

மேலும் படிக்க …பீகார்: பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி!

PJ_11_2007.jpg

ஊழல் ரேசன் கடை முகவர்களுக்குச் சரமாரியாக அடி, உதை; அவர்களின் வீடுகள்கடைகளுக்குத் தீ வைப்பு என உழைக்கும் மக்களின் உணவுக் கலகம் மே.வங்கத்தின் பல மாவட்டங்களில் பற்றிப் படர்வதைக் கண்டு, அம்மாநிலத்தை ஆளும் போலி கம்யூனிச அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

மேலும் படிக்க …மே.வங்கம்: போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் உணவுக் கலகம்

PJ_11_2007.jpg

"நீதிபதிகளின் கைகளில் உள்ள ""நீதிமன்ற அவமதிப்பு'' என்ற குண்டாந்தடி, உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகளை அரசாங்கத்தாலும் கூடக் கேள்வி கேட்க முடியாத, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, சட்டத்திற்கும் மேலான சர்வாதிகாரிகளாக மாற்றிவிட்டது. இந்த நீதித்துறை சர்வாதிகாரத்திற்கு, தில்லியில் இருந்து வெளியாகும் ""மிட் டே'' (Mid day) என்ற நாளிதழின் ஊழியர்கள் சமீபத்தில் பலியிடப்பட்டனர். தில்லி உயர்நீதி மன்றத்தால் ""மிட் டே'' தண்டிக்கப்பட்டதற்குக் காரணம், அப்பத்திரிக்கை ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யோகேஷ் குமார் சபர்வால் (ஒய்.கே.சபர்வால்) பற்றிய சில உண்மைகளைத் துணிந்து அம்பலப்படுத்தியதுதான்.


தில்லி நகரின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்த இலட்சக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்களை இழுத்து மூடுமாறு தில்லி மாநில அரசுக்கு கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம்தான் இத்தீர்ப்பை அளித்தது. பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தக் கடைகள், ஒரேயொரு உத்தரவினால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டு, இழுத்து மூடப்பட்டன.


சிறு வியாபாரத்தில் நுழையும் சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும்; அடுக்குமாடி வணிக வளாகங்களைக் கட்டிவரும் ரியல்எஸ்டேட் அதிபர்களுக்கும் சாதகமாக எழுதப்பட்டதுதான் இந்தத் தீர்ப்பு என்று அப்பொழுது விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனம் முற்றிலும் உண்மை என இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது. குறிப்பாக உச்சநீதி மன்ற, தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒய்.கே.சபர்வால், ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தனது பிள்ளைகளின் வியாபார வளர்ச்சிக்காகவே, இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. தந்தை மகனுக்கு ஆற்றிய இந்த "உதவியை'த் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியதற்காகவே ""மிட் டே'' பத்திரிகை, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தால் தண்டிக்கப்பட்டுள்ளது.


···


· தில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்த சிறு வர்த்தக நிறுவனங்களை மூடுவது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தபொழுது, அவ்வழக்கைத் தானே நடத்துவதாகக் கோரிப் பெற்றார், நீதிபதி ஒய்.கே. சபர்வால். நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரணைக்காகக் கோரிப் பெறும் உரிமை உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தவிர, பிற நீதிபதிகளுக்குக் கிடையாது. எனினும், அப்பொழுது உச்சநீதி மன்ற நீதிபதியாக மட்டுமே இருந்த ஒய்.கே. சபர்வால், தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டதை உச்சநீதி மன்றமும் அனுமதித்திருக்கிறது.


· ஒய்.கே. சபர்வால் அவ்வழக்கை ஏற்றுக் கொண்ட அதே தருணத்தில், அவரின் பிள்ளைகள் சேதன், நிதின் என்ற இருவரும், ""பிஸினஸ் பார்க் டவுன் பிளானர்ஸ்'' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டனர்.


· சேதனும், நிதினும் இணைந்து நடத்தி வந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் அலுவலகங்கள் நீதிபதி ஒய்.கே.சபர்வாலுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க வீட்டின் முகவரியில் இருந்தே இயங்கி வந்தன. இது, சட்டவிரோதமானது, முறைகேடானது எனத் தெரிந்திருந்தும், நீதிபதி ஒய்.கே. சபர்வால் இதனை அனுமதித்தார். அவரின் பிள்ளைகள் பிஸினஸ் பார்க் டவுன் பிளானர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகுதான், வேறு வழியின்றித் தங்கள் நிறுவனங்களின் அலுவலகங்களை வேறு முகவரிக்கு மாற்றிக் கொண்டனர்.


· தெற்கு தில்லியில் உள்ள சாகேத் பகுதியில் இயங்கிவந்த ""சட்டவிரோத'' வணிக வளாகங்களை மூடச் சொல்லி உச்சநீதி மன்றம் உத்தரவு போட்ட அதே வேளையில், ஒய்.கே. சபர்வால் பிள்ளைகளின் வியாபாரக் கூட்டாளியான ""ஹர்பவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்'' நிறுவனத்தின் அதிபர் புருஷோத்தம் பகேரியா, சாகேத்ஐ ஒட்டிய பகுதியில், ""ஸ்கொயர் 1 மால்'' என்ற பெயரில் பிரம்மாண்டமான வணிக வளாகத்தைக் கட்டப் போவதாக அறிவித்தார். நீதிபதி ஒய்.கே.சபர்வால் பங்கு பெற்ற அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், சாகேத் பகுதியில் இருந்து துரத்தப்பட்ட ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள், பகேரியாவிடம் போய் கடை ஒதுக்கித் தரும்படி கேட்கும்படியான சூழல் உருவானது.


· தில்லிக்கு அருகில் உள்ள உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா பகுதியில், ஆலைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த மனைகள், சபர்வாலின் பிள்ளைகளுக்கு சந்தை மதிப்பைவிடக் குறைவாக, அப்போதைய உ.பி. முதல்வர் முலயம்சிங் யாதவ் அரசால் விற்கப்பட்டன. இதற்குக் கைமாறாக, முலயம்சிங் யாதவின் கைத்தடி அமர்சிங்கின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த ஒய்.கே. சபர்வால், ஒட்டுக் கேட்கப்பட்ட பேச்சு விவரங்களை வெளியிடுவதற்குத் தடை விதித்தார்.


· நீதிபதி ஒய்.கே. சபர்வாலின் பிள்ளைகள், மகாராணி பாக் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை 15.46 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கினர். இவ்வளவு பெரிய தொகையை, சபர்வாலின் பிள்ளைகள் எப்படி ஈட்டினர் என்பது மர்மமாக உள்ளது.


· சேதனும் நிதினும் தாங்கள் நடத்திவரும் ""பவன் இம்பெக்ஸ்'' என்ற நிறுவனத்திற்கு, பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியிடமிருந்து 28 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இக்கடனைப் பெறுவதற்கு ஈடாகக் காட்டப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும் போலியானவை.


இவை அனைத்தும் ""மிட் டே'' நாளிதழ், நீதிபதி ஒய்.கே.சபர்வால் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள். இக்குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களையும் வீட்டுப் பத்திரம், பங்குதாரர் பற்றிய விபரங்கள், வங்கி ஆவணங்கள், வருமான வரி தாக்கீதுகள் உள்ளிட்டவை அந்நாளிதழ் வெளியிட்டுள்ளது ஓய்வு பெற்ற நீதிபதிகள், புகழ் பெற்ற வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ""நீதித்துறையின் பொறுப்புணர்வுக்கான கமிட்டி'' என்ற சமூக அமைப்பு, இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து அவற்றில் ஆதாரம் இருப்பதாக உறுதிப்படுத்தியது. நீதிபதி ஒய்.கே.சபர்வால் இக்குற்றச் சாட்டுக்களை மறுத்து, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.


குற்றவாளிக் கூண்டில் நிற்பவரோ இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி. சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் சாதாரணமானவையும் அல்ல; ஆதாரமற்றவையும் அல்ல. இப்படிப்பட்ட நிலையில், நீதியை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள நீதிமன்றங்கள், குற்றச்சாட்டுகள் பற்றி பாரபட்சமற்ற விசாரணையை நடத்த உத்தரவிட்டிருந்தால், அது நியாயமானதாக இருந்திருக்கும். அதற்கு மாறாக, தில்லி உயர்நீதி மன்றமோ, ""மிட் டே'' நாளிதழ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது.


""மிட் டே'' நாளிதழ் இவ்வழக்கு விசாரணையின் போது, ""ஓய்வு பெற்றுவிட்ட நீதிபதிக்கு எதிராகவே குற்றம் சுமத்தியிருப்பதாகவும்; அவை அனைத்தும் உண்மையானவை'' என்றும் கூறி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றது. ஆனால், தில்லி உயர்நீதி மன்றமோ, ""என்னத்த உண்மை?'' என அதிகாரத் திமிரோடு எதிர் கேள்வி கேட்டு, அந்த உண்மைகளுக்குள் நுழைய மறுத்துவிட்டது.


""தில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கிவந்த கடைகளை மூடுவது தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம்தான் விசாரித்தது. நீதிபதி ஒய்.கே. சபர்வால் மீது குற்றஞ்சுமத்துவது மூலம், மற்ற இரு நீதிபதிகள் மீதும் களங்கம் கற்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றம், தனது நீதிபதிகளுள் ஒருவரின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக நடந்து கொண்டிருப்பதாக மிட் டே பத்திரிக்கை சித்தரிக்கிறது'' எனத் தானே ஒரு குற்றச்சாட்டை அந்நாளிதழின் மீது சுமத்தி, அதனை உச்சநீதி மன்றத்தின் மாண்பை அவமதிப்பதாக ஊதிப் பெருக்கியது. இந்தப் புனையப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்நாளிதழின் வெளியீட்டாளர், ஆசிரியர், கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர், கேலிச் சித்திர ஓவியர் ஆகிய நால்வருக்கும் நான்கு மாத சிறை தண்டனை விதித்தது.


இயற்கை நீதிக்கும், நியாயத்திற்கும் முரணாக அளிக்கப்பட்ட இத்தீர்ப்பை எதிர்த்து, வழக்குரைஞர்களும், பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் இறங்கவே, உச்சநீதி மன்றம் கொடுக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் அடிப்படையில், தில்லி உயர்நீதி மன்றம் தண்டிக்கப்பட்ட நால்வருக்கும் பிணை வழங்கியிருக்கிறது.


உச்சநீதி மன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அதனை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், ""மிட் டே'' வழக்கிலோ, தில்லி உயர்நீதி மன்றம் தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டுள்ளது. மேலும், நீதிபதி சபர்வால் பங்கு பெற்ற அமர்வு மன்றம் அளித்த தீர்ப்பும் சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்தும்; தில்லி கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்ட தீர்ப்பைத் திரும்பப் பெற்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும்; இதற்கு மாறாக, உச்சநீதி மன்றத் தீர்ப்போ, புண்ணுக்குப் புணுகு தடவி, தன்னை நியாயவானைப் போலக் காட்டிக் கொண்டிருக்கிறது.


···


"சுதந்திர' இந்தியா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து சுவீகரித்துக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களில் நீதிமன்ற அவமதிப்புச் சட்டமும் ஒன்று. ஒரு நீதிபதி ஊழல், பாலியல் பலாத்காரம் போன்ற கிரிமினல் குற்றங்களைச் செய்ததற்கான அசைக்க முடியாத ஆதாரம் இருந்தால் கூட, நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளாது; குற்றம் சுமத்தியவரைத் தண்டிக்கும் வண்ணம்தான் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.


மைய அரசு, கடந்த ஆண்டில் இந்த நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் திருத்தமொன்றைக் கொண்டு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வோர், நீதிபதிக்கு எதிராகத் தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்பதைத் தக்க ஆதாரங்களோடு எடுத்துக் கூறி, தண்டனையில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியினை இத்திருத்தம் கொண்டு வந்தது. எனினும், ""மிட் டே'' நாளிதழ் வழக்கில், ""என்னத்த உண்மை!'' என்ற கேள்வியின் மூலம், அத்திருத்தத்தை மலம் துடைக்கும் காகிதமாக மாற்றி விட்டது, தில்லி உயர்நீதி மன்றம்.


மேல்முறையீட்டிற்காக உயர்நீதி மன்றத்திற்கோ, உச்சநீதி மன்றத்திற்கோ வரும் வழக்குகளில் பெரும்பாலானவை, ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மன்றங்களால்தான் விசாரிக்கப்படுகின்றன. அமர்வு மன்றங்களில் பங்கு பெறும் ஒரு நீதிபதி மீது குற்றம் சுமத்தினாலே, அது மற்ற நீதிபதிகள் மீதும் சுமத்தப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என்கிறது தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பு. இதன்படி பார்த்தால், எல்லா அமர்வு மன்றங்களுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக ஆக்கப்பட்டு விடுகின்றன.


""நீதிபதிகளுள் 20 சதவீதம் பேர் ஊழல் கறை படிந்தவர்கள்'' என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி பரூச்சா கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, ""அமர்வு மன்றங்களில் பங்கு கொள்ளும் நீதிபதிகளில், யார் அந்த 20 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள்? யார் ஊழல் கறை படியாத 80 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள்?'' என்ற கேள்வியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.


ஜனநாயகத்தின் மற்ற தூண்கள் அதிகார வர்க்கம், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகைகள் மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என அடிக்கடி சாமியாடும் நீதிபதிகள், தங்களுக்கு இந்த அளவுகோல் பொருந்தாது என்கிறார்கள்.


""உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது; அதை நீதிபதிகள்தான் முடிவு செய்வார்கள்''


""உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகள் தங்களின் சொத்துக் கணக்கை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியமில்லை. உச்சநீதி மன்ற நீதிபதியிடம் காட்டினால் போதும்.''


""வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் செயல்பாடு பற்றி விமர்சிக்கக் கூடாது; நீதிபதிகள் மீது ஊழல் புகார் சொல்லக் கூடாது; இதை மீறினால், ஓராண்டு காலத்திற்குத் தொழில் செய்யத் தடை விதிப்போம்'' என்றெல்லாம் பல்வேறு ""ஃபத்வா''க்களைப் போட்டுக் கொண்டு, தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்.
தங்களது பிறப்புச் சான்றிதழில் ஃபோர்ஜரி செய்து அம்பலமான உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த்; மற்றும் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சிவப்பா;


டான்சி வழக்கில் இருந்து ஜெயாவை விடுதலை செய்ததற்குப் பரிசாக சிங்கப்பூருக்கு உல்லாச சுற்றுலா சென்று வந்த நீதிபதி தங்கராசு; கர்நாடகாவில் பொதுமக்கள் முன்னாலேயே குடித்துவிட்டு, பெண்களுடன் காமக்களியாட்டம் போட்ட கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்.எஸ்.வீரபத்ரையா, வீ.கோபால கவுடா, சந்திரசேகரய்யா போன்ற கிரிமினல் நீதிபதிகள் கம்பி எண்ணாமல் போனதற்குக் காரணமே, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உள்ளிட்ட இந்த ஃபத்வாக்கள்தான்!


···


நீதிபதிகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், கிரிமினல் குற்றங்களைவிட அவர்கள் ""தீர்ப்புகள்'' என்ற பெயரில் பொதுமக்களின் மீது சட்டபூர்வ பாசிசத்தைத் திணிப்பதும்; பன்னாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு ஆதரவாக நடந்து கொள்வதும்; இந்துமதவெறி மேல்சாதி வெறியைக் கக்குவதும் தான் மிகவும் அபாயகரமானதாக மாறி வருகிறது.


சிறுவணிக நிறுவனங்களை இழுத்து மூடச் சொன்ன சபர்வாலின் தீர்ப்புக்குப் பின்னே புத்திரபாசம் இருந்தது என்றால், ஊழல் கறைபடியாத மற்ற இரண்டு நீதிபதிகள், சபர்வாலின் தீர்ப்புக்கு ஒத்துப் பாடியதற்கு என்ன பாசம் காரணமாக இருந்தது?


உச்சநீதி மன்றத்தைச் சேர்ந்த அரிஜித் பயாஸத், எஸ்.ஹெச்.கபாடியா என்ற இரு நீதிபதிகள் மற்றொரு வழக்கில் இந்தப் பாசத்தைப் பச்சையாகவே உடைத்துச் சொல்லியுள்ளனர். தில்லியின் வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட பல அடுக்கு வணிக வளாகத்தை இடிக்கச் சொல்லி போடப்பட்ட வழக்கில், இந்த இரண்டு நீதிபதிகளும், ""கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்பது உண்மையானாலும், கோடிக்கணக்கான ரூபாய் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது; எனவே, கட்டிடத்தை இடித்துத் தள்ளுவதை கிளிப் பிள்ளை போலத் தீர்வாகச் சொல்ல முடியாது;''


""சிறு நிறுவனங்கள், சாதாரண தனி நபர்கள் வேண்டுமானால், உரிமம் பெறுவதற்கு சட்டத்தை மீறுவார்கள். ஆனால், வசந்த் குஞ்ச் பகுதியில் காலி மனை வாங்கியிருக்கும் நிறுவனங்களோ, பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள்; அவை, உரிமம் பெறுவதற்காகச் சட்டவிதிகளை மீறியிருப்பார்களோ, குறுக்கு வழியில் போயிருப்பார்களோ என்ற கேள்விக்கே இடமில்லை'' என ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர்.


தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தபொழுது, ""வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை'' எனத் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்த வழக்கில், ""அவர்கள் வேலை செய்யாத நாட்களுக்கும் சம்பளம் தர வேண்டும்'' என மேல்சாதிப் பாசத்தோடு உத்தரவிட்டது.


கேரளாவின் பிளாச்சிமடா பகுதியில் இயங்கி வந்த கோக் நிறுவனம், அப்பகுதியில் நிலத்தடி நீரை எடுக்கத் தடை விதிக்கப்பட்ட பொழுது, ""கோக்கிற்குத் தடை விதிக்கப்பட்டால், மற்ற குடிமக்களுக்கும் தடை விதிக்க வேண்டியிருக்கும்'' எனத் தீர்ப்பளித்தது கேரள உயர்நீதி மன்றம்.


""ராமன் அரசியல் சாசனத்தின் அங்கம்'', ""இந்துமதம் இந்தியாவின் வாழ்க்கை முறை'' எனத் தீர்ப்பெழுதிய நீதிமன்றங்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் என்ன சம்பந்தம் இருந்துவிட முடியும்? பொது சிவில் சட்டம் தொடங்கி முசுலீம் தீவிரவாதம் வரை இவைபற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இன் கருத்து எதுவோ, அதுவே மாண்புமிகு நீதிபதிகளின் தீர்ப்பாகவும் இருக்கிறது.


ஊழலுக்குக் கூடத் தண்டிக்க முடியாத நீதிபதிகளை, இம்மக்கள் விரோதத் தீர்ப்புகளுக்காகத் தண்டித்து விடவா முடியும்? நாட்டை மறுகாலனியாக்குவதிலும், சட்டபூர்வமான பாசிசத்தை நாட்டின் மீது திணிப்பதிலும் நாடாளுமன்றமும், நீதிமன்றங்களும் ஜாடிக்கேத்த மூடியாகத்தான் செயல்படுகின்றன.


இந்திய அரசியல் சாசனத்துக்கே விரோதமான தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றி நடைமுறைப்படுத்திய பொழுது, அச்சட்டங்களைச் சட்டபூர்வமானவை என உச்சநீதி மன்றம் அங்கீகரித்தது. ""தனியார்மயம் தாராளமயம் அரசின் கொள்கை; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என நழுவிக் கொள்கிறார்கள் நீதிபதிகள். அரசியல் அரங்கில் தீர்க்கப்பட வேண்டிய ராமர் கோவில் பிரச்சினையை ஓட்டுக் கட்சிகள் நீதிமன்றத்திற்குத் தள்ளிவிட்டதை ஏற்றுக் கொண்டு, அதில் கட்டைப் பஞ்சாயத்து செய்து வருகிறது, நீதிமன்றம். இதற்கு கைமாறாகத்தான், நாடாளுமன்றம் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை ரத்து செய்ய மறுக்கிறது.


போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ சக்திகள் அனைவரும் 197080 களில் உச்சநீதி மன்றம் பல முற்போக்கான தீர்ப்புகளைச் சொன்னதைப் போன்ற காலம் திரும்பி வராதா என ஏங்குகிறார்கள். நீதிபதிகளின் நியமனம், அவர்களின் நடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்கத் தேசிய கமிசன் ஒன்றை உருவாக்கி விட்டால், நீதிபதிகள்நீதிமன்றங்களின் மக்கள் விரோதத் தன்மை மறைந்துவிடும் என ஆருடம் சொல்கிறார்கள்.
நீதிமன்றங்கள் 1970களில் "முற்போக்கான' தீர்ப்புகளை வெளியிட்ட சமயத்தில்தான், பாசிச இந்திரா கொண்டுவந்த அவசர நிலையை அங்கீகரித்துத் தீர்ப்புச் சொன்னது உச்சநீதி மன்றம். ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் போலி மோதல்களிலும், போலீசு நிலையக் கொட்டடிகளிலும் கொல்லப்பட்டதை மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள் நீதிபதிகள். அந்த "முற்போக்கான' தீர்ப்புகள், மக்களின் போராட்டங்களை நிறுவனமயமாக்கும் ஆளும் வர்க்கத்தின் தந்திரம் தவிர வேறில்லை.


ஜெயாவுக்கு எதிரான டான்சி நில பேர ஊழல் வழக்கிலும்; ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.பி.க்களுக்கு நரசிம்ம ராவ் இலஞ்சம் கொடுத்த வழக்கிலும், ஊழலுக்கும், இலஞ்சத்திற்கும் புது கொள்கை விளக்கம் கொடுத்து, அக்கிரிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவர்கள்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள். முதலாளித்துவ வர்க்க வெறி, மேல்சாதித் திமிர் இரண்டும் கலந்து உருவான சட்டபூர்வ ஆதிக்க சக்திகள்தான் நீதிபதிகள். இப்படிபட்டவர்களின் நடத்தையைக் கண்காணிக்க தேசிய கமிசன் அமைக்கப்படுரமானால், அக்கமிசன் நீதிபதிகளின் முன் சோளக்காட்டுப் பொம்மையாகத்தான் இருக்குமே ஒழிய, சிம்ம சொப்பனமாக இருக்காது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மட்டுமல்ல, மக்கள் விரோத நீதிமன்றங்களையே கலைக்கக் கோரி மக்களை அணிதிரட்டுவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்!


· செல்வம்

PJ_11_2007.jpg

இந்துவெறியர்களின் தேசிய நாயகன் ராமனை இழிவுபடுத்திப் பேசியதற்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கொல்ல உத்தரவிட்ட தலைவெட்டி வேதாந்தியின் பார்ப்பனத் திமிரை எதிர்த்தும், ராமன் பாலத்தை வைத்து தமிழகத்தை குஜராத்தாக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்யக் கோரியும் தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 27.9.07 அன்று தாங்கள் செயல்படும் பகுதிகளில் விரிவான பிரச்சாரத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கிரிமினல் வேதாந்தியின் உருவப் பொம்மையைத் தூக்கிலிட்டும்,

மேலும் படிக்க …""பார்ப்பன கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு! பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்!'' தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

PJ_11_2007.jpg

அடுத்து வரும் தேர்தல்களில் ""இந்துக்களின் ஆசியும் ஆதரவும் பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்'' என்று இந்துவெறி பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் விளம்பரம் செய்து ஓட்டுப் பொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொலைகார காஞ்சி மட சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்கு ""அரசு விருந்தினர்'' என்ற சிறப்புத் தகுதியளித்து கடந்த டிசம்பரில் வரவேற்று உபசரித்து, பார்ப்பன கும்பலுக்கு விசுவாசமாகச் செயல்பட்ட கேரள "மார்க்சிஸ்டு' முதல்வர் அச்சுதானந்தன், இப்போது பார்ப்பன முறைப்படி விஜயதசமி சடங்குகளைச் செய்து அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க …"மார்க்சிஸ்டு'களின் பார்ப்பன சேவை

PJ_11_2007.jpg

இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற பொதுக் கருத்து அடிப்படையிலேயே ஆதாரமற்றது.

 

1990களில் இசுலாமியத் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பல குண்டுவெடிப்பு வழக்குகளில் அடுத்தடுத்து தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க …குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. பயங்கரவாதிகள்

PJ_11_2007.jpg

"எங்களால் நம்பவே முடியவில்லை. பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான உங்கள் கூட்டத்துக்கு, எந்தக் கட்சிக்கும் திரளாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளார்களே! இது பொதுக்கூட்டம் அல்ல; மிகப் பெரிய மாநாடு. நீங்கள்தான் பெரியாரின் உண்மையான வாரிசுகள்!'' கூட்டம் முடிந்து விடைபெற்றுக் கொள்ளும்போது நா தழுதழுக்க இப்படிப் பலர் கூறிய கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.

மேலும் படிக்க …'ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு! தமிழ்கத்தை குஜராத்தாக்க அனுமதியோம்!"

PJ_2007 _12.jpg

இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு அரசியலின் பின்னே, மியான்மரின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் சதி உள்ளது.

 

பாகிஸ்தானில் நடக்கும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வரும் அமெரிக்கா, மியான்மரில் (பர்மா) நடக்கும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் பொருளாதாரத் தடையுத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. சோசலிச நாடு எனக் கூறிக் கொள்ளும்

மேலும் படிக்க …மியான்மர்: வட்டமிடும் வல்லூறுகள்

PJ_2007 _12.jpg

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் ஈராக்கில் இறக்கிவிடப்பட்டுள்ள தனியார் கூலிப்படைகள், ஈராக்கிய மக்களைக் கொலை செய்வதைப் பொழுதுபோக்காகக் கருதுகின்றன.

 

விர்ரென்று ஒலிப்பானை ஒலித்தவாறு ஒரு வாகனம் மக்கள் நெருக்கம் மிகுந்த அந்த வீதியினுள் நுழைகிறது. அது, ஈராக்கினை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படையினருக்கும்,

மேலும் படிக்க …ஈராக்: மலிவானதோ மக்களின் உயிர்?

PJ_2007 _12.jpg

பத்திரிக்கைகள் முதல் ப.சிதம்பரம் வரை நமது பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதத்தைத் தொடப் போகிறது எனச் சொல்கிறார்கள். பங்குச் சந்தைக் குறியீட்டெண் 20 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. இந்திய தொழில் நிறுவனமான டாட்டா, அயல்நாட்டு நிறுவனமான கோரஸ்ஸை விலைக்கு வாங்கி விட்டது. அம்பானி உலகிலேயே பெரிய பணக்காரராகி விட்டார். இந்தியாவில் ரூ.4 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டு விட்டது.

மேலும் படிக்க …உழைத்தவர் மெலிந்தனர் வலுத்தவர் கொழுத்தனர்

PJ_2007 _12.jpg

புவி வெப்பம் உயர்வதைத் தடுப்பதற்காக உயிரிஎரிபொருளைப் பயன்படுத்துவது என்ற ஏகாதிபத்தியத் திட்டம் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.

 

அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள மெக்சிகோ நாட்டு மக்களின் அன்றாட உணவான மக்காச் சோளம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அசாதாரணமான அளவிற்கு உயர்ந்ததையடுத்து,

மேலும் படிக்க …அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைக்குப் பட்டினிச் சாவு

PJ_2007 _12.jpg

நாங்கள் பேருந்துகளில் அரசியல் பிரச்சாரத்துடன் பு.ஜ. இதழை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ஒரு வாசகர் இதழை வாங்கிக் கொண்டு ரூ.5/ கொடுத்தார். விலை உயர்ந்துள்ளதை அவரிடம் நாங்கள் தெரிவித்த போது, பு.ஜ.வுக்கு என்ன விலை கொடுத்தாலும் தகும் என்று கூறி ரூ.7/ செலுத்தி இதழை ஆர்வத்தோடு படிக்கத் தொடங்கினார். விலையேற்றத்தால் இதழ் விற்பனை பாதிக்கப்படக்கூடும் என்று நாங்கள் கருதினோம். ஆனால், எந்தச் சிரமமுமின்றி விறுவிறுப்பாக இதழ் விற்பனையாகியுள்ளது. இது, பு.ஜ. இதழின் அரசியல் செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.
மேலும் படிக்க …வாசகர் கடிதம்

PJ_2007 _12.jpg ஓசூர்சிப்காட் 1 பகுதியில் உள்ள அசோக் லேலண்டு தொழிற்சாலை 1980 முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 2332 பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1100 பேரும் வேலை செய்து வருகின்றனர். 200607 நிதியாண்டில் ரூ.441 கோடி இலாபம் ஈட்டிய இந்திறுவனம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ.23,000 போனஸ் வழங்கியது. ஆலை நிர்வாகத்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு போனசைக் கொடுக்காமல் முழுப்பணத்தையும் ஏப்பம் விட்டுள்ளனர்.

மேலும் படிக்க …ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கெதிராக ஆர்ப்பாட்டம்

PJ_2007 _12.jpg

டாலர் மதிப்புச் சரிவினால் இந்தியாவில் 80 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியை எட்டப் போகிறது என மன்மோகன் சிங் கும்பல் ஒருபுறம் ஆரவாரம் செய்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி என்ற கத்தி அவர்களை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

மேலும் படிக்க …டாலர் மதிப்புச் சரிவு: இந்தியா இடிதாங்கியா?

PJ_2007 _12.jpg

அசாம் மாநிலத்தில் 1998 தொடங்கி 2001 வரையிலான நான்கு ஆண்டுகளில், பொதுமக்களில் பலர், அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் இரவோடு இரவாகச் சுட்டுக் கொல்லப்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. அப்பொழுது ஆட்சியில் இருந்த அசாம் கன பரிசத் அரசு இப்படுகொலைகள் பற்றி மேலோட்டமான போலீசு விசாரணையை நடத்தி, கொலைக்கான காரணத்தையும், கொலையாளிகளையும் கண்டுபிடிக்க மறுத்து வந்தது.

மேலும் படிக்க …அசாம் : பயங்கரவாத எதிர்ப்பின் கோர முகம்

PJ_2007 _12.jpg

இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல
குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
என்ற பொதுக் கருத்து அடிப்படையிலேயே ஆதாரமற்றது.

 

நாட்டின் எந்த மூலையிலும் ஏதாவது ஒரு பயங்கரவாதக் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தாலும், ஒன்று இசுலாமிய பயங்கரவாதிகள் செயல் என்று முத்திரை குத்தப்படுகிறது.

மேலும் படிக்க …குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

PJ_2007 _12.jpg

உலகத் தமிழர் பேரமைப்பு எனும் "தமிழர்' அமைப்பு, கடந்த அக்டோபர் 28ஆம் தேதியன்று தமிழர் தொழில் வணிகச் சிறப்பு மாநாட்டை திருப்பூரில் நடத்தியது. இந்தப் பேரமைப்பின் தலைவரான ""மாவீரன்'' பழ.நெடுமாறன் இம்மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார்.

மேலும் படிக்க …'ஆர்.எஸ்.எஸ்.காரனும் தமிழன்தான்!" ''மாவீரன்" நெடுமாறன் பரப்பும் புது சித்தாந்தம்

PJ_2007 _12.jpg

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரான பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலை உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அதிகாலையில் கிளிநொச்சி பகுதியில் சிங்கள இனவெறி இராணுவ விமானங்களின் குண்டுவீச்சுத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் மற்றும் 5 புலிகள் இயக்கப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …தமிழ்ச்செல்வன் படுகொலையும் பாசிச ஜெயா-காங்கிரசின் வக்கிரமும்

PJ_2007 _12.jpg

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பதினைந்து ஆண்டுகள் கழித்து நிவாரணம் கிடைத்திருக்கிறது.

 

சந்தன மரக் கடத்தலைத் தடுப்பது, வீரப்பனைப் பிடிப்பது என்ற பெயரில் தமிழக போலீசு நடத்தியுள்ள எத்தனையோ அட்டூழியங்களில், அரசு பயங்கரவாதத் தாக்குதல்களில் வாச்சாத்தி சம்பவமும் ஒன்று.

மேலும் படிக்க …வாச்சாந்தி : நிவாரணம்தான் நீதியா?

PJ_2007 _12.jpg

உழைக்கும் மக்களின் அரசு என்று மார்தட்டிக் கொண்ட மே.வங்க "இடதுசாரி' அரசு இன்று இரத்தக் கவிச்சி வீசும் பாசிச கொலைகார அரசாக நாடெங்கும் நாறிப் போயுள்ளது.

 

நந்திகிராமத்தில் மீண்டும் சி.பி.எம். கட்சியின் பாசிச கொலைவெறியாட்டம். 6க்கும் மேற்பட்டோர் படுகொலை. நூற்றுக்கணக்கானோர் படுகாயம். 5,000க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் நந்திகிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சொந்த

மேலும் படிக்க …நந்திக்கிராமம் : சி.பி.எம். கட்சியின் பாசிச வெறியாட்டம்

PJ_2007 _12.jpg அ திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச் செல்வமும், செங்கல்பட்டு நகர அ.தி.மு.க. செயலாளர் குமார் மற்றும் 2 பேரும் கடந்த மாதம் கூலிப்படையினரால் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து,""தமிழ்நாட்டு அரசியலில் கூலிப் படைகளும், ஆயுத வன்முறைக் கலாச்சாரமும் சமீப காலங்களில் பெருகிப் போய்விட்டன; அவை ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டும்'' என்று ஓட்டுக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் அச்சமும்,

மேலும் படிக்க …அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் கூலிப்படைகளின் ஆதிக்கம்

PJ_2008_1.jpg

திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்ற இளம் பெண், அமெரிக்காவில் வரதட்சிணைக் கொடுமையால் வதைபட்டு, குற்றுயிராகத் திரும்பிய நிகழ்ச்சி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

திருச்சியைச் சேர்ந்த ஜெனிதாவின் பெற்றோர், திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான கிறிஸ்டி டேனியல் என்ற அமெரிக்காவில் வேலை செய்யும் கணினிப் பொறியாளருக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் ஜெனிதாவை

மேலும் படிக்க …மனைவியைக் கொல்லத் துணியும் வரதட்சிணைக் கொடூரம்!

PJ_2008_1.jpg

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்குப் பிணை வழங்க, விடுமுறை என்றும் பாராமல் ஞாயிறு அன்று நீதிமன்றம் கூடியது; சேதுக் கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி தி.மு.க அரசு அறிவித்த ""பந்த்''ஐத் தடை செய்யவும், நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடியது.

மேலும் படிக்க …இந்தியக் 'குடியரசின்" இன ஒதுக்கல்

PJ_2008_1.jpg

"ஈரான் ஒரு ரவுடி நாடு அந்நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் இரகசியமாக ஈடுபட்டு வருகிறது; மூன்றாம் உலகப் போர் உருவாகுமானால், அதற்கு ஈரான்தான் காரணமாக இருக்க முடியும்'' இவையெல்லாம், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரான் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள். இதனைக் காரணமாகச் சொல்லியே, ஈரான் மீது ஒரு அதிரடி ஆக்கிரமிப்புத் தாக்குதலை நடத்துவதற்கும் அமெரிக்கா திட்டமிட்டு வந்தது.

மேலும் படிக்க …ஜார்ஜ் புஷ் : 21-ஆம் நூற்றாண்டின் கோயபல்சு

PJ_2008_1.jpg

"இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ஓடும் ""நீரா'' எனும் ஆறைத்தான் இப்படிக் கூவிக்கூவி விற்கிறது அம்மாநில அரசு. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக முதலில் ""நீரா'' ஆற்றின் தண்ணீரை விற்க அம்மாநில அரசு கிளம்பியது; பிறகு, ஆற்றுப் படுகைகளோடு நீரை விற்கப் புறப்பட்டது; இப்போது ஆறு மற்றும் அதனால் பயன்பெறும் பாசனப் பகுதிகள் அனைத்தையும் சேர்த்து விற்கத் தயாராகி விட்டது.

மேலும் படிக்க …இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து

PJ_2008_1.jpg

இன உணர்வுத் திருவிழா ஒன்றை சென்னையில் நடத்தப் போவதாக கி.வீரமணியின் திராவிடர் கழகம் அறிவித்தவுடனே, பரவாயில்லையே; தொய்வாகிக் கிடந்த பெரியாரின் தொண்டர்கள் பார்ப்பன மதவெறிக்கு எதிராகக் கிளம்பி எழப்போகிறார்கள் போலும்! அதைப் பார்க்காமல் விட்டுவிட்டால் நாளைய வரலாறு நம்மைப் பழித்துவிடுமே எனும் அச்சத்தில்"இன உணர்வைத் தட்டி எழுப்பும்' டிசம்பர் 2ஆம் தேதியன்று பெரியார் திடலுக்குள் எட்டிப் பார்த்தோம்.

மேலும் படிக்க …தி.க. கம்பெனியின் 'நாட்டாமை"க்குப் பவள விழா பெரியார் கொள்கைக்கு மூடு விழா

PJ_2008_1.jpg

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், மலைச்சாமி. தாழ்த்தப்பட்டவரான இம்முதியவர் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று இரவு 7.30 மணியளவில் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் செல்லும் பி.எல்.எஸ். எனும் தனியார் பேருந்தில் பெரியகோட்டை செல்வதற்காக ஏறி அமர்ந்துள்ளார். அதே பேருந்தில் எறும்புக்குடியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியான பாண்டி என்பவரும் அவரது தம்பி ஜெயராமனும் கூட்ட நெரிசல் காரணமாக நின்று கொண்டு பயணித்தனர். இவர்கள் சேர்வை சாதியைச் சேர்ந்தவர்கள். கந்துவட்டி கட்டப் பஞ்சாயத்து நடத்திவரும் சாதி வெறியர்கள்.

மேலும் படிக்க …சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு

PJ_2008_1.jpg

மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களைக் கறந்து கல்வி வியாபாரம் நடத்தும் ஜேப்பியார், எஸ்.ஆர்.எம். மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் முதலாளி பச்சைமுத்து, ஓம்சக்தி டிராவல்ஸ் முதலாளி சரவணன் ஆகியோரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் இவர்களது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் வாகன ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தி வரும் இம்முதலாளிகள்,

மேலும் படிக்க …போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள்

PJ_2008_1.jpgஆந்திரப் பிரதேச மாநிலத்தில், விசாகப்பட்டினம் நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில், கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாகப்பள்ளி, கோண்ட் பழங்குடியினர் வசித்து வரும் மலைக் கிராமம். நேற்றுவரை வெளியுலகம் அறிந்திராத சாதாரண கிராமமாக இருந்த வாகப்பள்ளி, இன்று ஆந்திரப் போலீசாரின் ரவுடித்தனத்தையும், பொறுக்கித்தனத்தையும் எதிர்த்து நிற்கும் போராட்ட மையமாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க …பழங்குடி இனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை தமிழகத்துக்குச் சிறப்பு அதிரடிப்படை ஆந்திராவுக்கு வேட்டை நாய்ப்படை

PJ_2008_1.jpg

தஞ்சாவூரில், மருத்துவக் கல்லூரி சாலையிலிருந்து மானோஜிப்பட்டி, ஈஸ்வரி நகருக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகிக் கிடக்கின்றன. அடித்தள உழைக்கும் மக்கள் வாழும் இப்பகுதியிலிருந்து வேலைக்குச் செல்வோர், வியாபாரத்துக்குச் செல்வோர்,

மேலும் படிக்க …அதிகார வர்க்கத்தைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்

PJ_2008_1.jpg

விசாரணைக்காக கோவையிலிருந்து தஞ்சைக்கு அழைத்து வரப்பட்ட அகிலாண்டேஸ்வரி என்ற பெண், போலீசு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனின் பாலியல் பலாத்காரம் சித்திரவதையால் கொல்லப்பட்டு, ஓட்டல் அறையில் பிணமாகத் தூக்கில் தொங்கிய சம்பவம், கடந்த நவம்பர் மாதத்தில் தஞ்சை நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் படிக்க …மக்களின் போராட்டமே அரசு பயங்கரவாதிகளைத் தண்டிக்கும்

PJ_2008_1.jpg "பகலில் ஆலைகளை இயக்காமல் இரவில் இயக்குங்கள்; வாரத்துக்கு ஒருமுறை எந்திர இயக்கத்தை நிறுத்தி வையுங்கள்.'' இவையெல்லாம், கடுமையான மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நெசவாலை முதலாளிகளிடம் தமிழக மின்துறை அமைச்சர் வைத்துள்ள வேண்டுகோள்கள். உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய 1960களில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ""வாரத்துக்கு ஒருநாள் பட்டினி கிடப்பீர்'' என்று நாட்டு மக்களுக்குச் செய்த உபதேசத்துக்குச் சற்றும் குறையாத பொறுப்பற்ற யோசனைகளே இவை.

மேலும் படிக்க …மின்வெட்டு – டாலர் மதிப்பு சரிவு தமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள்

PJ_2008_1.jpg

கோதுமைக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ என உயர்த்தி நிர்ணயித்திருக்கும் மைய அரசு, நெல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது. 199495 ஆண்டு வரை, நெல்லுக்கும் கோதுமைக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்தது கிடையாது. அதன்பிறகு, அவற்றின் ஆதரவு விலைகளை நிர்ணயிப்பதில் வேறுபாடு காட்டப்படுவது தொடங்கி, இன்று இந்த விலை வேறுபாடு ரூ. 255/ ஆக அதிகரித்து விட்டது.

மேலும் படிக்க …நெல்லுக்கு ஆதாரவிலை பிச்சையல்ல, உரிமை!

PJ_2008_1.jpg

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

மேலும் படிக்க …சுயநலத்தின் இரண்டு முனைகள்

PJ_2008_1.jpg

டயர் உற்பத்தியில் கடந்த 43 ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இயங்கி வந்த, சென்னையிலுள்ள எம்.ஆர்.எஃப் கம்பெனி கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதலாக சட்டவிரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும் மேலும் 5 கிளைகளின் உருவாக்கத்திற்கும் அயராது பாடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோ இன்று வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …ஆலை மூடலுக்கு எதிராகஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம்

PJ_2008_1.jpg கொலைகள், நாளும் தொடரும் படுகொலைகள். ஒருவரல்ல, இருவரல்ல; ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது, ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அல்ல. நாடெங்கும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும்போது நச்சுவாயு தாக்கி, மூச்சுத் திணறி மாண்டு போகும் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கைதான் இது.

மேலும் படிக்க …நன்றி கெட்ட சமூகமே! நீ மூகஞ்சுழிக்கும் மலக்குழிக்குள் மூழ்கிச் சாகும் இவர்களும் மனிதர்களே!

PJ_2008_1.jpg

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. மற்றும் பிற இந்துத்துவ பாசிச சக்திகள், இந்து மதவெறியனும் காட்டுமிராண்டியுமான நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டன. குஜராத்தைக் கவ்விய பாசிச இருள் தன் பிடியை மேலும் இறுக்கியிருக்கிறது. 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதன் பிறகு நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய முசுலீம்கள் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை பாசிச வக்கிரங்களோடும்

மேலும் படிக்க …குஜராத் மோடியின் வெற்றி: இந்துவெறி பயங்கரவாதப் பிடி இறுகுகிறது

PJ_2008_02.jpg

சந்தன மரக் கடத்தல் வீரப்பனைத் தேடுவது என்ற பெயரில், கர்நாடகா தமிழ்நாடு கூட்டு அதிரடிப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்க சதாசிவம் கமிசன் அமைக்கப்பட்டு, அக்கமிசன் அளித்தத் தீர்ப்பின்படி தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு 2.8 கோடி ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டதோடு, இப்பிரச்சினைக்கு மங்களம் பாடிவிட்டது, ஆளுங் கும்பல். பொதுமக்களும்கூட, இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கப்பட்டு விட்டதாகவே எண்ணிக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க …அம்பலம் ஏறாத ஏழைகளின் சாட்சியம்

PJ_2008_02.jpg

தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான சாவேஸ் முன்வைக்கும் சோசலிசத் திட்டங்களுக்கு ஏற்ப அந்நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தியமைப்பதா, கூடாதா என்பதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. ஏறத்தாழ 90 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வெனிசுலாவில், இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் 45% பேர் வாக்களிக்கவில்லை. எஞ்சிய 55% வாக்காளர்களில் 28% பேர் சாவேசின் திட்டங்களுக்கு எதிராகவும், 27% பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

மேலும் படிக்க …வெனிசுலா : சாவேஸ் இன் தோல்வி உணர்த்தும் உண்மைகள்

PJ_2008_02.jpg

இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, சக்வாரா கிராமம். இங்கு வசித்து வரும் 700 குடும்பங்களில், 70 குடும்பத்தினர் ""பைரவா'' என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்திலுள்ள பொதுக்குளம், அரசின் உதவியோடும், மக்களின் பங்களிப்போடும் தாழ்த்தப்பட்டவர்கள் கொடுத்த நன்கொடை, அவர்களின் உடல் உழைப்பையும் பயன்படுத்திதான் கட்டப்பட்டது.

மேலும் படிக்க …தண்ணீர் : இயற்கையின் கொடையா? மேல்சாதியினரின் தனிச் சொத்தா?

PJ_2008_02.jpg

அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரு தனிவகை சாதி (caste) என்றார் லெனின். ஒட்டுமொத்த சிவில் சமுதாயத்துக்கும் (நாட்டின் மக்கள் அனைவருக்கும்) பகையான எதிரி சாதி இதுவே ஆகும் என்றார் லெனின்.

மேலும் படிக்க …ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். அதிகாரிகள்

PJ_2008_02.jpg

குஜராத் தேர்தலில் பார்ப்பன பாசிச மோடியின் வெற்றியை குறித்து பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் எழுதிய ஒரு கட்டுரையில், ""குஜராத் இனிமேலும் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்'' எனக் குறிப்பிட்டார். "இனிமேல்' என்பது 2002லேயே துவங்கி விட்டது. மேற்கு இந்தியாவில் நிலைபெற்றுள்ள அப்பாசிச சித்தாந்தத்தின் இன்னொரு சோதனைச்சாலை கிழக்கு இந்தியாவில், ஒரிசாவில் "வளர்ந்து' வருகிறது.

மேலும் படிக்க …ஒரிசா: இந்து மதவெறி பயங்கரவாதத்தின் இரண்டாவது பரிசோதனைச் சாலை

PJ_2008_02.jpg

2007ஆம் ஆண்டுக்கான மனிதவள மேம்பாடு குறித்த தர வரிசைப்பட்டியலை, ஐ.நா. அமைப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. மனிதவள மேம்பாடு தரவரிசை என்பது, ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களின் நீண்ட, ஆரோக்கியமான வாழ்விற்கும்; முதியோர் கல்வி மற்றும் ஆரம்ப இடைநிலைக் கல்விக்கும்; மக்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பீட்டின்படி, 177 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில், இந்தியா 128 ஆவது இடத்தைத்தான் பிடித்திருக்கிறது.

மேலும் படிக்க …ஒய்யாரப் கொண்டையில் தாழம் பூவாம் உள்ளே இருப்பது ஈறும் பேனாம்!

PJ_2008_02.jpg

மூன்றாம் முறையாக பாகிஸ்தானின் பிரதமராகி விட வேண்டும் என்ற பேநசீர் புட்டோவின் பேராசை, டிச.27, 2007 அன்று மாலை சூரியன் மறையும் நேரத்தில், நடுவீதியில் நிரந்தரமாக முடிந்து போனது. அவர் துப்பாக்கி ரவைக்குப் பலியானாரா அல்லது மனித வெடிகுண்டுக்கு இரையானாரா என்பது இன்றும் "மர்மமாக' இருந்து வருகிறது. எனினும், பேநசீர் புட்டோ அல்காய்தாவோடு தொடர்புடைய இசுலாமிய

மேலும் படிக்க …பேநசீர் புட்டோ : ஜனநாயகத் தேவதையா? அமெரிக்க அடிவருடியா?

PJ_2008_02.jpgஇரத்தக் கவிச்சு வீசும் இந்துவெறி கொலைகாரர்களின் வாக்குமூலங்கள் வழியாக, 2002இல் நடந்த குஜராத் இனப்படுகொலையை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது, ""டெகல்கா'' ஆங்கில வார இதழின் நவம்பர் மாத சிறப்பு வெளியீடு. ஒரு கிரிமினல் குற்ற விசாரணைக்குத் தேவைப்படும் துல்லியத்துடன் இந்துவெறி பயங்கரவாதிகளின் வாக்குமூலங்களை உயிரைப் பணயம் வைத்துப் பதிவு செய்திருக்கிறார், ""டெகல்கா''வின் சிறப்புச் செய்தியாளர் அசிஷ்கேதான்.

மேலும் படிக்க …'குஜராத் : திட்டமிட்ட இனப்படுகொலை"

PJ_2008_02.jpg

தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு ஓர் அவசரச் சட்டம் இயற்றி, அதனைக் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டது. அச்சட்டம்தான், ""தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடைச் சட்டம்''. இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள ஏரிக்கரைகளிலோ, குளத்தின் அருகிலோ மானாவரிப் பயிர் செய்தால் இச்சட்டத்தின்படி 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.

மேலும் படிக்க …வறட்சி மக்களுக்கு! தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு!

PJ_2008_02.jpg

தீட்சிதப் பார்ப்பனக் கும்பலின் திரைமறைவுத் தில்லுமுல்லுகள், நீதிமன்றத் தடையாணைகள் ஆகிய அனைத்தையும் மீறி முன்னேறிக் கொண்டிருக்கிறது சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கும் போராட்டம். ""சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம்'' என்ற இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசிடம் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். ஆணை கிடைத்த மறுகணமே பாடத் தயாராகக் காத்து நிற்கிறார் முதியவர் ஆறுமுகசாமி. நீதிமன்றத்தில் மீண்டும் தடையாணை வாங்கத் தயாராக இருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

மேலும் படிக்க …தில்லைக் கோவில் தமிழை அரங்கேற்றுவோம்! தீட்சிதர்களை வெளியேற்றுவோம்!

PJ_2008_02.jpg

மலேசியாவில் கடந்த இரு மாதங்களாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது உரிமைகளுக்காக நடத்திவரும் போராட்டம், மலேசியாவில் நிலவும் இனப் பாகுபாட்டையும் அடக்குமுறையையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட்டது.

மேலும் படிக்க …மலேசியா : தமிழர்களின் உரிமைப் போராட்டம்

PJ_2008_02.jpg ஜல்லிக்கட்டிற்கு அண்மையில் உச்சநீதி மன்றம் தடை விதித்ததும் தமிழர்கள் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதாகவும் பொது மக்கள் ஆத்திரமடைந்து கருப்புப் பொங்கலாக அறிவித்துப் பொங்கல் விழாக்களைப் புறக்கணித்து விட்டதாகவும் செய்தி ஊடகங்கள் பரபரப்பூட்டின. முரட்டுத்தனமான இந்த விளையாட்டில், மனிதர்கள் மாண்டு போகும் கவலையைவிட, காளை மாடுகள் மீது கரிசனம் கொண்டு,

மேலும் படிக்க …ஜல்லிக்கட்டு:தமிழர்களின் பாரம்பரியமா? ஆதிக்கசாதி அடையாளமா?

PJ_2008_02.jpg

தமிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எம். அணியினர் இனிமேல் இருமுடி கட்டிக் கொண்டு ""சாமியே சரணம் அய்யப்பா'' என கோசமிட்டபடியே சபரிமலை ஏறலாம். செய்வினை, பில்லிசூனியம் வைப்பதற்கென்றும் குறி சொல்வதற்கென்றும் தனிப்பிரிவை கட்சியே இனி அமைக்கலாம். எல்லாவற்றிற்கும் ""கேரளத்தைப் பார்'' என நமக்கு வழிகாட்டும் இவர்களது கேரள சி.பி.எம். கட்சி காட்டும் பாதை அப்படித்தான் உள்ளது.

மேலும் படிக்க …காவிமயமாகும் சி.பி.எம்.

PJ_2008_02.jpg

குஜராத் முசுலீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பய்க் குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலை விட, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிஸ்டுகள் வக்கிரமான கிரிமினல் பேர்வழிகள்; பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணியும் பயங்கரவாதிகள் என்பதையும்; மோடி அரசிற்கும், இப்படுகொலைகளுக்கும் நேரடித் தொடர்புண்டு என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இன்னொருபுறம்,

மேலும் படிக்க …இதுவன்றோ வீரம்!

PJ_2008_02.jpg

அடுத்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு மூன்றாண்டுகளுக்கும் மேலாக அவகாசம் இருக்கிறது. என்றாலும் இப்போதே ஓட்டுக்கட்சி அரசியலில் செயற்கையாகச் சூடேற்றி மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. கூட்டணி அரசியல் குட்டை சகிக்க முடியாதவாறு நாற்றமெடுக்கும் அளவுக்குக் குழப்பி விடப்படுகிறது. அதைக் குழப்பிவிட்டு ஆதாயம் அடைவதற்கான முயற்சியில், கடந்த தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்த ஓட்டுக் கட்சிகளும்,

மேலும் படிக்க …ஆட்சியாளர்களை முடிவு செய்வது சந்தர்ப்பவாத சேர்க்கைகளே!

PJ_2008_03 .jpg

கடந்த சனவரி மாத இறுதியில் இந்தியாவில் நடந்த பங்குச் சந்தை வீழ்ச்சியை, ""பொருளாதார சுனாமி'' என்றே கூறலாம். இப்பங்குச் சந்தை வீழ்ச்சி ஒரே சமயத்தில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளிலும்; இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்று விட்டது.

மேலும் படிக்க …இந்திய பங்குச் சந்தையைக் கவிழ்த்தது அமெரிக்கா

PJ_2008_03 .jpg

கடந்த இருபது ஆண்டுகளாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் கட்டளைக்கு இணங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப நம் நாட்டு விவசாய கொள்கையை ஆளும் வர்க்கங்கள் திருத்தி அமைத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகர்ப்புறத்திற்கு விரட்டியடிக்கப்பட்டனர்; பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். மறுபுறம், என்றுமில்லாத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு ஏழை மக்கள் பட்டினிச் சாவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …முன்பேர வர்த்தகம்: இன்னுமொரு சூதாட்டம்

PJ_2008_03 .jpg

போலி மார்க்சிஸ்ட் கட்சி தனது கடைசி ஒட்டுத் துணியையும் அவிழ்த்து வீசிவிட்டு நிர்வாணமாய் நிற்கிறது. இதுவரை அக்கட்சி நடத்திவந்த மிக மோசமான சந்தர்ப்பவாத அரசியல் ஆட்டத்தில், ""மதச்சார்பின்மை என்ற ஒரே ஒட்டுத் துணி''யால் மானத்தைக் காத்துக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க …சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்தது

PJ_2008_03 .jpg

 

ஒரிசா மாநிலத்திலுள்ள காசிபுர் வட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜ் மோகந்தி. இவர், கடந்த ஜூலை 14, 2007 அன்று காசிபுருக்குச் சென்று கொண்டிருந்தபொழுது, போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்டு பல்வேறு கிரிமினல் குற்றங்கள், ஒரிசா போலீசாரால் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க …ஒரிசா : பன்னாட்டு முதலாளிகளின்

PJ_2008_03 .jpg

எந்தவொரு அடக்குமுறையும் மக்கள் சக்தியின் முன் நிற்க முடியாது என்ற வரலாற்று உண்மை, மீண்டும் பாலஸ்தீனத்தில் நிரூபணமாகி இருக்கிறது. குண்டு வீச்சாலும், ராக்கெட் தாக்குதல்களாலும் வெல்ல முடியாத பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க இசுரேல் அமெரிக்கா கூட்டணி திட்டம் போட்டது. பாலஸ்தீன மக்கள், இப்படுகொலைத் திட்டத்தை எளிதாக, ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் முறியடித்து, ஏகாதிபத்தியக் கும்பலை அதிர வைத்துவிட்டனர்.

மேலும் படிக்க …விடுதலைப் போரில் புதிய உத்தி

PJ_2008_03 .jpgபுரட்சி பேசும் சி.பி.எம். கட்சியானது, முதலாளித்துவக் கட்சியாகச் சீரழிந்துவிட்ட பிறகு, அதனிடம் காலிப் பெருங்காய டப்பாவாக இருந்த பாட்டாளி வர்க்கப் பண்பாடும் இப்போது இல்லாதொழிந்து விட்டது.

 

கோவையில் நடைபெறவுள்ள சி.பி.எம். கட்சியின் அனைத்திந்திய மாநாட்டுக்கு முன்னதாக, அக்கட்சி செயல்பட்டு வரும் மாநிலங்களில் மாநில மாநாடுகள் நடந்து வருகின்றன.

மேலும் படிக்க …போதையில் நடந்த மாநாடு : மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சி

PJ_2008_03 .jpg

ஒரு லட்ச ரூபாய்க்கு ""நானோ'' கார் எனும் குட்டிக்காரை சந்தைக்கு கொண்டுவந்து, தரகு பெருமுதலாளி டாடா, கார் புரட்சி செய்யப்போகிறாராம். இவர் செய்யப்போகும் புரட்சிகூட இரண்டாவது புரட்சிதானாம். முதல் புரட்சியை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ""மாருதி'' நடத்தி விட்டதாம். இம்மாபெரும் உண்மைகளை ""இந்தியா டுடே'' நமக்கு உணர்த்தியிருக்கிறது.

மேலும் படிக்க …நானோ கார் : மலிவு விலையின் பின்னே மறைந்து கிடக்கும் உண்மைகள்

PJ_2008_03 .jpg அந்நியச் செலாவணி எனும் எச்சில் காசுக்காக இந்தியப் பெண்களின் மானத்தை விற்கலாம்; வாடகைத் தாயாக மாறித் தாய்மையை விலை பேசலாம்; நாட்டின் இறையாண்மையை அமெரிக்க அணுசக்திக்காக விற்கலாம்; நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உயர்கல்வி கற்று, உலக மேலாதிக்க அமெரிக்காவின் ""நாசா''வுக்கு ஏவுகணைகள் தயாரிக்கக் கட்டளை நிரல்கள் (கம்ப்யூட்டர் புரோகிராம்) எழுதலாம் இப்படியெல்லாம் புதிய நீதிநெறிகள் உருவாக்கப்பட்டுள்ள மறுகாலனியக் கட்டமைவுக்குள்,

மேலும் படிக்க …சிறுநீரகக் கொள்ளை :வெட்கங்கெட்ட இந்திய அரசு

PJ_2008_03 .jpg"ரெட்டை டம்ளர் முறைங்கிறது, காலங்காலமாக இருக்குறதுதான். அதையெல்லாம் மாத்த முடியாது. சம்பிரதாயங்களை மாத்த விடமாட்டோம்''

 

— இப்படியொரு சாதி ஆதிக்கத் திமிர் பிடித்த பேச்சு, சமூக நீதியின் தாயகமாகச் சித்தரிக்கப்படும் தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …சாலரப்பட்டி :சமூக நீதியா? சாதி வெறியர்களின் நீதியா?

PJ_2008_03 .jpg

ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டிடத்துக்குத் தாமே தீ வைத்துக் கொளுத்திவிட்டு, அப்பழியை கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தியது, ஆரிய இனவெறிப் பிடித்த பாசிச இட்லர் கும்பல். அது பழைய வரலாறு அல்ல; அந்த வரலாறு இன்னமும் தொடர்கிறது. பாசிச இட்லரின் வாரிசுகள் இந்து முன்னணி என்ற பெயரில் அதே உத்தியுடன் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திவிட்டு, பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள். இட்லர் நடத்திய பயங்கரவாதச் சதி உலகெங்கும் அம்பலமானதைப் போல, இப்போது இந்து முன்னணி நடத்திய பயங்கரவாதச் சதியும் தென்காசி வெடிகுண்டு விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க …தென்காசி குண்டு வெடிப்பு:இந்து முன்னணியின் கிரிமினல் முகம்

PJ_2008_03 .jpgவரலாற்று சிறப்புமிக்க இந்த பொதுக்கூட்டத்தின் தோழமைக்குரிய தலைவர் அவர்களே, தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்கள் அமைப்புகளின் தலைவர்களே, இங்கே வீரஞ்செறிந்த முறையிலே திரண்டிருக்கிற தமிழக மக்களே, தமிழகத்தின் வரலாற்று புகழ்மிக்க போராடுகிற மக்களுக்கு முதற்கண் என்னுடைய சிவப்பு வணக்கத்தை, வாழ்த்துக்களை உரித்தாக்க விரும்புகிறேன்.

மேலும் படிக்க …நேபாளம் : தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்

PJ_2008_03 .jpg

பார்ப்பன ஜெயாவின் 'பஜாரி" அரசியல் பதவி-அதிகாரத்தை அடைவதற்காகப் பச்சைப்பொய்யைக் கூடத் துணிந்து சொல்லும ஜாலக்காரிதான் ஜெயா.

 

ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு விநாடியைக் கூட பார்ப்பன பாசிச பயங்கரவாதியான ஜெயலலிதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஆவேசம் அகங்காரத்தோடு பொங்கி விடுகிறார். சென்னை மக்கள் மொழியில் சொல்வதானால் ""பஜாரி'' அரசியல்வாதியாக அவதாரமெடுத்து விடுகிறார்.

மேலும் படிக்க …அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை:

PJ_2008_03 .jpg இந்தியாவில் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி; பீகார் மாநில உழைக்கும் மக்கள், நேற்றுவரை இந்தியக் குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால் இன்று...? டாக்சி ஓட்டுநர்களாகவும் நடைபாதை வியாபாரிகளாகவும் தள்ளுவண்டிக்காரர்களாகவும் கட்டுமானத் தொழிலாளர்களாகவும் உள்ள வடஇந்திய சாமானிய மக்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்படுகிறார்கள். அவர்களது பிழைப்புக்கான சாதனங்களும் அற்ப உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன.

மேலும் படிக்க …ராஜ்தாக்கரேயின் இனவெறி மும்பையைக் கவ்விய பயங்கரம்!