Language Selection

தமிழச்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

´ஜேக்கப் சிகால்´ கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர். லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு 26.10.1986-இல் பேட்டி எடுத்த போது ஒர் சங்கதியை சொன்னார்:

"எய்ட்ஸ் கிருமி மனிதனின் செய்கையால் உருவாக்கப்பட்டது. இதை மறுக்கவும், மறைக்கவும் அமெரிக்கா முயற்சி செய்கிறது" என்றும், எய்ட்ஸ் கிருமி குறித்த நீண்ட விளக்கத்தையும் அப்பேட்டியில் கூறி இருந்தார்.
அதற்கு பின் ´ஜேக்கப் சிகால்´ இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.
´ஜேக்கப் சிகால்´ பேட்டியை மக்களும் சாதாரணமாக நினைத்துவிட்டனர்.

´டெட் ஸ்டெரக்கர்´ என்னும் பெயருடைய அமெரிக்க நுண்ணுயிர் கிருமி ஆராய்ச்சியாளர் எய்ட்ஸ் கிருமியின் மூலம் [Origin] குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகள் குறித்து அவருக்குள் பல புதிர்களை உருவாக்கியது. அவைக் குறித்து சில இடங்களில் பேசியும் இருக்கிறார். அதற்கு பின் மிசோரியில் ´ஸ்பிரிங்க் ஃபில்ட்´ என்ற இடத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார்.

சில வாரங்கள் மட்டுமே ´டெட் ஸ்டெரக்கர்´ கொலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டதே தவீர, என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலைக்குறித்து ஏதோ உப்புசப்பற்ற விசாரணையை பேருக்கு நடத்தி ஓரங்கட்டிவிட்டது அரசு.

lllnosis senate உறுப்பினரான ´ஈவ்ப்´ [Huff] என்பவர், எயிட்ஸ் உருவாக்கப்பட்ட கிருமி என்று தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் வந்தது நேரம். எங்கேயோ ஓர் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் உயிர் போவதற்கு முன்பு கடும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட தடயங்கள் இருந்தன.

அப்போதும் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இருப்பினும் எயிட்ஸ் நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு மத்தியில் இக்கொலைகள் பயத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏதோ நம்மை வைத்து ஆட்டையை ஆரம்பித்திருக்கிறது அரசு என்பதை உணர்ந்து மௌனிகளாக இருந்தனர்.

பத்திரிகை பேட்டி என்றாலோ, எய்ட்ஸ் கிருமி குறித்த கேள்விகளை யாராவது எழுப்பினாலோ ´ஆளை விடுங்க சாமிகளா..´ என்று ஓட்டமெடுத்தனர். இப்படியே சில ஆண்டுகள் ஓடியநிலையில் தான் ஹீரோவாக வந்தார் டாக்டர் ´லியோநார்டு.´

1996-இல் ´Aide Ebola Nature, Accident or intentional´ என்ற புத்தகத்தில் ஆதாரங்களுடன் பல விளக்கங்களையும் எழுதி இருக்கிறார் லியோநார்டு.

"எய்ட்ஸ் கிருமிகளின் உருவாக்கம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களாலும், ஆப்பிரிக்க மக்களாளுமே உருவானது என்று அமெரிக்கா சொல்வது நூற்றுக்கு நூறு பொய்!" என்று அடித்துப் பேசுகிறார் லியோநார்டு.

1970-ஆம் ஆண்டிலேயே எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமெரிக்க அரசு முயற்சித்துள்ளது. இருப்பினும் 1984-ஆம் ஆண்டுகளில் அவை உண்மையான செய்தி என்று அதிகாரப்பூர்வமாக தெரிய ஆரம்பித்தது. எய்ட்ஸ் கிருமியை உருவாக்கத்தின் முக்கிய மூளையாக இருந்தவர் ´ஹென்றி கிஸ்சிங்கர்´ என்பவர் [முன்னால் Secretary of State] அமெரிக்க அரசு இத்திட்டத்திற்காக 1-மில்லியன் டாலர்களை அமெரிக்க இராணுவத்திற்கு கொடுத்திருக்கிறது. இத்திட்டத்திற்கு M.K. என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ´ஹென்றி கிஸ்சிங்கர்´க்கும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கும் உதவியாக M.David Manakar, K.Paul Kotin என இருவர் இருந்தனர். சி.அய்.ஏ [C.I.A] துணையுடன் இவர்கள் செயல்பட்டார்கள் என்றும் லியோநார்டு அந்நூலில் மிகத் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறார்.

பெருகி வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையை குறைப்பதும், உலகில் அமைதியைக் கெடுப்பதும், அதன் மூலம் வன்முறையை வளர்த்துவிடவும், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்துக்களுக்கு தாங்கள்
காப்புரிமை வைத்துக் கொண்டு ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்பதும்  இத்திட்டத்தின் முக்கிய பணியாக இருந்திருக்கிறது.

ஏகப்பட்ட பிராடுத்தனங்களுடன் உலக மக்களை ஆட்டிப்படைக்கவும், தங்களுடைய அதிகாரப்போதைகளில் எப்போதும் முதலிடம் தங்களுக்கே என்பதிலும் அமெரிக்கா எப்போதுமே மிகத் தெளிவாக செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் கவனமாகவே இயங்குகிறது.

அமெரிக்காவின் கடன் வழங்கும் திட்டத்தை வாங்க மறுத்தாலோ அல்லது அமெரிக்கா தங்கள் நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வருவதை தடுக்க முயற்சித்தாலோ கொலைக்களமாக்கி அதளப்பாதாளத்தில் தள்ளிவிடும் ரௌடித்தனத்தை செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு அணுகுண்டுக்களும், துப்பாகிகளும் மட்டும்தானா ஆயுதம்? இருக்கவே இருக்கிறது அறிவியல் வழியில் நச்சுக் கிருமிகள்.

ஒருமுறை அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் இயக்குனரான ´பசரல்லா´ சொல்கிறார்:

"அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை [Supergerm] உருவாக்குவதன் தேவை அமெரிக்க அரசுக்கு உள்ளது" என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் கிருமி எய்ட்ஸா? எய்ட்ஸ் கிருமி செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பிய போது...

ஏன் இருக்கக்கூடாதா? என்கிறார் ´பசரல்லா.´

அப்போதுதான் உலகம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. அதற்குள் ஆப்பிரிக்காவில் பல மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆப்பிரிக்காவில் கென்ய நாட்டைச் சேர்ந்த ´வங்காரி மத்தாய்´ கென்ய நாட்டுச் சுற்றுப்புறச் சூழலியலாளரும் 2004-இல் நோபல் பரிசு பெற்ற மதிப்புக்குரியவருமான வங்காரி மத்தாய் எய்ட்சை செயற்கையாக உருவாக்கும் ஹெச்.ஐ.வீ [HIV] வைரஸ் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை வளாகத்தில் [Fort Detrick] உருவாக்கப்பட்ட கிருமி என்று கூறியபோது உலமே அதிர்ந்தது.

கென்யாவில் ஏராளமான ´எயிட்ஸ்´ நோயாளிகள் இருக்கிறார்கள்.
2006-ஆம் வருட கணக்குப்படி உலகில் மொத்தம் ´38-மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள்´ இருக்கிறார்கள். இதில் முதல் இடத்தில் ஆப்பிரிக்காவும் [28.1- மில்லியன் மக்கள் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள்] மூன்றாம் இடத்தில் இந்தியாவும் [3.97-மில்லியன் மக்கள் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள்] இருக்கிறது.

இது எப்படி பரவியது?

இத்தனை மில்லியன் மக்கள் உலகத்தில் கொடுமையான மரணத்தை எதிர்கொள்ள இருக்கிறார்களே! இது எப்படி நடத்தப்பட்டது?

1969-இல் கலிபோர்னியாவின் ´டேவிட்´ என்னும் இடத்தில் சோதனைச் சாவடியில் குரங்குகளுக்கு ´எய்ட்ஸ் கிருமிகள்´ ஊசி மூலம் செலுத்தப்பட்டு ஆய்வு செய்திருக்கிறது அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம். எய்ட்ஸ் கிருமிகள் செலுத்தப்பட்ட குரங்கள் ஒரே வருடத்தில் இறந்திருக்கின்றன.

1970-இல் பூனைகளுக்கு ´எயிட்ஸ் கிருமி´ செலுத்தப்பட்டு அத்தனையும் இறந்தன.

1974-இல் சிம்பன்சி குரங்குகளுக்கு ´எயிட்ஸ் கிருமிகள்´ செலுத்தப்பட்டு அவைகளும் இறந்தன.

குரங்கு, பூனை, சிம்பனி குரங்கு என மிருகங்களுக்கு ´எயிட்ஸ் கிருமிகள்´ செலுத்தப்பட்டு சோதனை செய்த ´அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம்´ 1979-இல் ´பென்டகன்´ ஆய்வு மையத்தின் நுண்ணுயிர் ஆய்வாளரான டாக்டர் ´மேக் ஆர்தூர்´ ஆலோசனைப்படி சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட HIV [Human Immuno Deficiency Virus] அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தடுப்பூசி மூலம் பரப்பப்பட்டது. ´எய்ட்ஸ்´ உருவாக ஹெச்.ஐ.வீ [HIV]யும், அவை உருவான இடமான அமெரிக்காவின் ´மாண்டான்´ [Manhatten] பகுதி தான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்தது.

1982-க்கு பிறகே ´எய்ட்ஸ்´ ஆப்பிரிக்காவில் வந்தது. அது எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை 1987-இல் மே மாதம் 11-ஆம் தேதியில் வெளியான லண்டன் டைம்ஸ் விவரிக்கிறது:

"உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் பல மில்லியன் மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி ஆப்பிரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக ஆப்பிரிக்க மக்களிடம் எய்ட்ஸ் பரவியது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட உயிர்கள் அழித்தொழிப்பு கொடுமை."

இச்செய்தியைக் குறித்து அமெரிக்க அரசு என்ன சொல்கிறது?

இங்கிலாந்தில் 1950-களில் ´மான்செஸ்டர்´ பகுதியில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தது. 1969-இல் கருப்பின சிறுவன் ஒருவனுக்கு எயிட்ஸ் இருந்தது. அப்படி இருக்க எங்கள் மீது இங்கிலாந்து அபாண்டமாக குற்றம் சுமத்துகிறது....

´எயிட்ஸ்´ பரவியதற்கு காரணம் ஒரினச்சேர்க்கையாளர்களும், ஆப்பிரிக்க மக்களின் உடல் உறவு சேர்க்கையும் தான் என்கிறது. அதற்கும் ஒருபடி மேலே சென்று ஆப்பிரிக்க மக்களில் சில பழங்குடி மக்கள் மிருகங்களிடம் செக்ஸ் வைத்திருந்தனர். அதன் மூலமாக ஏற்பட்ட தொற்றுக் கிருமிகளே என்று ஒருபோடு போட்டது.

ஏதடா வம்பாக இருக்கிறதே! எங்கள் நாட்டில் இப்படியொரு சங்கதி நடக்கவே இல்லையே என்கிறது இங்கிலாந்து.

´எய்ட்ஸ்´ நோயால் இறந்த பலரை பரிசோதனை செய்த மருத்துவர் ´ஆலன் கேன்ட்வெல்´ என்பவர் ´எய்ட்ஸ்´ என்பது இயற்கையாக உருவான வியாதி இல்லை. ஓரினச் சேர்க்கையாளர்களையோ, கருப்பின மக்களையோ மட்டும் அழிக்க வந்த வியாதி இல்லை. மனிதர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆயுதங்களில் கொடுமையான ஆயுதம் தான் ´எய்ட்ஸ் கிருமி´ என்கிறார்.

மக்களை அழிக்கும் எண்ணத்துடனே அமெரிக்க அரசு உருவாக்கியது தான் ´எய்ட்ஸ்´ என்று அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர்களும், நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்களுமே தங்கள் நாட்டு அரசாங்கம் செய்த மிகப் பெரிய கொடுஞ்செயலை சர்வ அலட்சியமாய் ஒதுக்கி தள்ளி விட்டு, தன் ஏகாதிபத்ய பொய் மனித நேயத்துடன் திரிவதை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் எத்தனையெத்தனை மனிதர்களை ´எயிட்ஸ் கிருமிகள்´ காவு கொள்ள இருக்கிறதோ? அதையும் விட, எயிட்ஸ் கிருமி பற்றிய உண்மைச் சங்கதிகளைச் சொன்னால் கூட எய்ட்ஸ் கிருமி ஒழித்து கட்டிவிடுமா என்ன?

அப்படி நடந்தால் அது ´பவர்புல் கிருமி´தான்

தமிழச்சி
22.11.2009

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1673

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது