Language Selection

சமர் - 10 : 03/04 -1994
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் சோசலிச தமிழீழத்தையே உருவாக்க வேண்டும் என்பது எனது கருத்து. நாம் சிங்கள மக்களுடன் இணைந்து வாழமுடியாது என்று தான் தமிழீழம் என்று முடிவெடுத்தோம். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை.

 

ஆனால் இனவெறியானது சிங்களமக்கள் மத்தியில் ஜ-தே-க, ஸ்ரீ-ல-சு-க ஜாதிக சிந்தன உறுமாய மற்றும் பிக்குகளால் சிங்களமக்கள் மத்தியில் பச்சைப்படியே இனவாதம் தூவப்பட்டு இனவாதம் கூர்மை அடைந்து முழுத் தமிழர்களையும் புலியாகவும் அவர்களுடைய பயங்கர எதிரியாகவும் நினைக்கிறார்கள்.

 

அத்துடன் அங்கு முற்போக்கு அணி உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் மறைந்து வருவதை அண்மைக்கால வரலாறுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அப்படி உருவானாலும் இன வாதவலைக்குள் அவை விழுந்து விடுகின்றன. உதாரணம் 33 ஆவது சரிநிகர் பத்திரிகையில் ராவய பத்திரிகையின் மாறுபட்ட நிலையை வெளிப்படுத்தினார்கள. ஜே-வீ-பி ஆரம்பம் கம்யூனிச அமைப்பு என்று கூறி பின்பு இனவாதத்தை காட்டிக் கொண்டதும் யாவரும் அறிவார்கள.

 

 காலப்போக்கில் முற்போக்கு என்று கூறும் சக்திகள் காலப்போக்கில் பேரினவாத நீரோட்டத்தில் கலந்து விடுவார்கள் உண்மை. இதன் பின்பு ஜக்கியம் என்று பேசுவதில் ஒன்றும் வந்து விடப் போவதில்லை. வெறும் கற்பனைக் கதையாகவே போய்விடும். அத்துடன் நாமும் இவர்களுடன் இணைந்து அழியும் அபாயம் உள்ளது. மேலும் சமர் பற்றிய கருத்தைக் கேட்டிருந்தீர்கள். வைத்த கருத்தின் மேல் உறுதியும் தளர்வின்றியும் சரியான முனையில் விமர்சனப் பாணியும் எம்மத்தியில் உள்ள தவறான விடையங்கள் களையப்பட வேண்டிய ஒன்று என்று போராடுவதில் தான் சமரை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

 

வரதன்

(சுவிஸ்)

 

தோழமையுடன் சமருக்கு

 

உங்களுக்கு மனிதம் பற்றிய விமர்சனம் உள்ளது போல் எனக்கு சரிநிகர் பற்றிய நிறைய விமர்சனம் உள்ளது(தூண்டில்) மனிதம் போல் சரிநிகர் திரிபுவாதிகள் இல்லை. ஒரு ஸ்திரமான நிலைப்பாடு இல்லை. வெறும் கதம்பமாலையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவர்களை இன்று நிராகரிக்க முடியாது.

 

நாங்களும் அப்பத்திரிகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. சோவியத்தின் வீழ்ச்சி என்பது (சமூக ஏகாதிபத்தியம் என்பது பரந்து பட்ட மக்களுக்குரியது) மக்கள் மத்தியில் சோசிலிச சமூக அமைப்பு மேல் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

 

இன்று லெனினையே புதைகுழிக்குள் அனுப்ப ஏகாதிபத்தியம் முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளது. வர்க்கபேத சமூகத்தின் கடந்து வந்த வரலாற்றில் ஆளும் வர்க்கம் புரட்சியாளர்களின் மாபெரும் தலைவர்களை கொலை செய்த பின் அவர்களை புனிதர்களாக்கி தமக்கு சாதகமாக்கி வந்துள்ளனர். (புதிய பாதை) ஆனால் லெனினை சமூக ஏகாதிபத்தியம் ஒரு திரையாக பயன்படுத்தினும் இன்று அவரது பூதவூடலைக் கண்டே பயந்து சாகின்றனர்.

 

அந்த அளவில் லெனின் மாபெரும் புரட்சியாளன் மாத்திரமல்ல, விரைவில் அவரது சிந்தனைகள் சுடர் விட்டெரியும் என்ற திடமான நம்பிக்கையுண்டு. ஆனாலும் இதற்கு சிலகாலம் எடுக்கும். எனவே தான் ஜக்கிய முன்னணியை மையமாக வைத்து நாங்கள் செயற்பட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய உப கண்டத்தில் வடக்கே காஸ்மீரிலும் தெற்கே இலங்கையிலும் காலூன்றலாம் என்பது எனது அபிப்பிராயம். இந்த நிலையில் எங்கிருந்து தொடங்குவது? எவ்வாறு செயல்படுவது? என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.


மாஸ்டர்

(இத்தாலி)

 

 

 

JA ACM Module

உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.

***

பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.

முதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

மேலும் படிக்க …ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

பாலியல் வல்லுறவுத் தலைநகரான டெல்லியில், துணை மருத்துவ மாணவி மீதான கும்பல் பாலியல் வல்லுறவுக் கொடூரத்தைத் தொடர்ந்து, உழைக்கும் மக்களும் பெண்களும் இளைஞர்களும் ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க வீதிகளில் திரண்டு போராடினார்கள். இப்போராட்டங்களாலும், பொதுக்கருத்தும் பொதுமக்களின் நிர்ப்பந்தங்களும் பெருகியதாலும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், டெல்லியில் பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் பெண்கள் இதுபற்றி புகார் கொடுக்க 181 என்ற தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க …பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !

மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம்.

மேலும் படிக்க …மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், நேபாள ஜனநாயகக் குடியரக்கான புதிய நகல் அரசியல் சட்டமியற்றும் பணி, தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவாகிய மே 27ஆம் தேதிக்குள் நிறைவுறாமல் போனது. அதனால், அச்சபை கலைக்கப்படுவதாகவும் புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும் என்றும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான பாபுராம் பட்டாராய் அறிவித்துள்ளார். நேபாள மக்கள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் கடந்த 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் நேபாள காங்கிர, போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய மாலெ கட்சி மற்றும் பிற கட்சிகள் நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதில், இச்சபையில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பெரிய கட்சியான மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து முரண்பட்டதால், அரசியல் சட்டத்தை இயற்றும் பணி கடந்த நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த சபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தும் நிலைக்கு நேபாளம் பின்னோக்கிச் சென்றுள்ளது.

மேலும் படிக்க …நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் பார்மாடெக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம். பல்வேறு சங்கங்களில் திரண்டு நீண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை  பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர்.

மேலும் படிக்க …குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !!

முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால், ‘முதலில் வருபவர்க்கு முதலில்’ என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள், தன்னிச்சையாகவும் நேர்மையற்ற முறையிலும் பொதுநலனுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்டிருப்பதால், அவற்றை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த உரிமங்களைக் காட்டித் தமது நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பல நூறு கோடி ரூபாய் ஆதாயமடைந்த எடிசாலட் டிபி, டெலினார், டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

மேலும் படிக்க …ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?